கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்!


ஹரி மோகனுக்கு, நினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும், கோபமும் ஒருசேர எழுந்தன. பின்னே, ஏழை என்ன தான் செய்ய முடியும்? ஒரு ஒட்டு வீட்டில், கிழிந்த பாய், தலையணையில், அமர்ந்து பொருமிக் கொண்டிருந்தான்.

"என்ன நியாயம் இது? நினைவு தெரிந்த நாள் முதல் ஒருவருக்கும் நான் தீங்கு செய்ததில்லை. பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டவனும் இல்லை. பரம சாதுவாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்-ஆனாலும், கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்களையே அந்த கிருஷ்ணன் கொடுத்துக் கொண்டிருக்கிறான், கேட்டால், இது உன்னுடைய கர்ம வினை, முன் ஜென்மத்தில் நீ செய்த பாவங்களைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ கர்மவினை, புண்ணியம் பாவம் என்று சொல்வது எல்லாம், வெறும் பித்தலாட்டம் என்று தான் படுகிறது. அந்த விஷமக் காரக் கண்ணன், தன் மேல் எவரும் பழி சொல்லாமல் இருப்பதற்காகத் தான் கீதையில் இப்படி ஒரு பொய்யைச் சொல்லி வைத்திருக்கிறான்."

தூரத்தில் தெரிந்த கிருஷ்ணன் கோவிலை ஒரு முறை வெறித்துப் பார்த்து விட்டு மறுபடி தனக்குத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தான்:

"அவன் சொல்கிறபடி, முந்தைய பிறவியில் நான் பெரும் பாவங்களைச் செய்திருந்தால், என்னுடைய இன்றைய இழிநிலை அதனால் தான் என்றால், இப்போதும் கூட அந்தத் தீவினைகளின் நிழல், நினைவுகள் என் நெஞ்சில் எழுந்து கொண்டு தான் இருக்கும். அவ்வளவு பெரிய பாவச் சுமை, ஒரு பிறவியோடு போயிருக்காது, மனம் கூட இந்த அளவு களங்கமற்றதாக இருந்திருக்காது...கர்ம வினை, பாவம், புண்ணியம் என்பதெல்லாமே சுத்தப் பொய்."

ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தையே எடுத்துக் கொள்ளலாமே..அவனுக்கு இன்றைக்கு இருக்கிற செல்வம், அந்தஸ்து, ஆள்பலம், செல்வாக்கு இதையெல்லாம் பார்த்தால், முந்தின பிறவியில் அவன் பெரிய ஞானியாகக் கூட இருந்திருக்க வேண்டும்.இப்போது அவனிடத்தில் அப்படி நல்ல விஷயங்கள் இருந்ததற்கான அடையாளம் எதுவுமே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவனைவிட சுயநலக்காரனும், கிராதகனும் எவனுமே இல்லை."

"இந்த கர்மவினை, புண்ணியம் , பாவம் இதெல்லாம் இல்லவே இல்லை. அந்தப் பொல்லாத பயல் கிருஷ்ணனின் பசப்பு வேலை மட்டுமே. என்னை மாதிரி ஒன்றும் அறியாத அப்பாவிகளை மயக்க மட்டுமே ஏற்பட்டது."

"அடேய், பொல்லாத விஷமக்காரப் பயலே! கிருஷ்ணா! நீ பெரிய எத்தன். என் பக்கத்தில் வராத வரைக்கும் நீ பிழைத்தாய். நீ மட்டும் என் கையில் அகப்பட்டால், என்ன செய்வேன் தெரியுமா? உன்னைக் கட்டி வைத்து, என் ஆத்திரம் தீறகிற வரை உதைப்பேன். நீ எப்படிப்பட்ட பொய்யன் என்பதை இந்த ஊரே தெரிந்து கொள்கிற வரை உதைப்பேன், உன்னை விட மாட்டேன்."

"நீ மட்டும் என் கிட்ட வந்து பார்....உன்னை என்ன செய்கிறேன் என்று....."

இப்படி ஹரி மோகன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கே ஒரு ஒளிவட்டம் தோன்றியது.கருப்புத்தான், ஆனால் எவ்வளவு வசீகரம்! மயிற்பீலி அணிந்த ஒரு சிறுவன் ஹரி மோகன் அருகே நின்றான். இடையில் அவனது புல்லாங்குழல், கால்களை ஒய்யாரமாக வளைத்து நின்ற படியே, "இதோ வந்து விட்டேன்" என்றான்.

ஏனோ,ஹரி மோகனுக்குத் தன்னுடைய நினைப்பின் மீதே வெட்கம் ..இந்த அழகான குழந்தையையா கட்டிப் போட்டு உதைக்க வேண்டும் என்று எண்ணினோம்...தன் மோசமான நினைப்பின் மேல் எழுந்த பச்சாதாபம் ஒருபுறம், இந்த சிறுவன் முன்னால் காட்டிக் கொள்வதா என்கிற வெட்கம் ஒருபுறம்..சிறுவனிடம், "இங்கு எதற்காக வந்தாய்?" என்றான்.

"எதற்காகவா? நீ என்னைக் கூப்பிடவில்லை? என் கிட்ட வந்து பார் என்று நீ தானே கூப்பிட்டாய்..அதுதான் வந்து விட்டேன், நீ ஆசைப் பட்டபடி, கட்டி வைத்து உதைப்பாயோ, உதைத்தபிறகு கட்டிப் போடுவாயோ, செய்துகொள்."

கொஞ்சம் கூட தயக்கமில்லாமல், சிரித்துக் கொண்டே சிறுவன் சொன்ன வார்த்தையில் ஹரி மோகன் மயங்கி நின்றான். 'என்ன காரியம் செய்து விட்டேன், இந்த மோகனச் சிறுவனை அள்ளி அணைத்துக் கொஞ்ச வேண்டும் என்கிற நினைப்பில்லாமல், கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று நினைத்தேனே, எவ்வளவு பெரிய தப்பைச் செய்ய இருந்தேன்' அடிமனது அரற்ற, ஹரி மோகன் தலை கவிழ்ந்து நின்றான்.

"இங்கே பார் ஹரி மோகன், நான் தான் ஏற்கெனெவே வாக்குக் கொடுத்திருக்கிறேனே..'யே யதா மாம் ப்ரபத்யந்தே..எவரெவர் எந்த முறையில் என்னை அணுக முயல்கிறார்களோ அதே முறையில் நான் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவேன்' அதுதான், கோபமேலீட்டால், என்னை அடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாய்.... உன் ஆசைப்படியே நானும் உன்னிடம் அடிபட வந்திருக்கிறேன்......ஆரம்பிக்க வேண்டியது தானே?"

"குட்டிப்பையா! எனக்கு ஒன்றுமே புரியவில்லை"

இதோ பார் ஹரி மோகன்! எதற்காகத் தலை குனிந்து நிற்கிறாய்? என்னைக் கண்டு பயப்படாதவர்களை எனக்குப் பிடிக்கும். என் மேல் தோழமை கொண்டு, என்னைத் திட்டவும் அடிக்கவும் என்னோடு விளையாடவும் வருகிறவர்களை ரொம்பப் பிடிக்கும்.இந்த உலகத்தை எதற்காகப் படைத்தேன் என்று நினைக்கிறாய்? ஒரு விளையாட்டிற்காகத்தான். என்னோடு விளையாடத் தயாராக இருக்கும் தோழர்களையே நான் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் பார், அப்படிப்பட்ட தோழர்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை."

"எல்லோருக்கும் கோபம் வந்தால் அதை என்னிடத்தில் தான் கொட்டுகிறார்கள். அவர்கள் வேண்டுவதைஎல்லாம் நான் உடனே அவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். செல்வம் வேண்டும், பதவி வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் இப்படி என்னிடத்தில் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சில பேருக்கு, உடனே மோட்சம் வேண்டும் இப்படி அவரவர்கள் வேண்டியதைக் கொடுக்கும் இயந்திரமாகவே என்னை நினைக்கிறார்கள். எனக்காகவே என்னை வேண்டுவார் ஒருவரும் இல்லை. எதையும் எதிர்பாராமல் என்னிடத்தில் அன்பு செலுத்துவார் எவரேனும் உண்டா என்று தேடிக் கொண்டே இருக்கிறேன்....சரி, அது கிடக்கட்டும், உனக்கும் எதோ என்னிடத்தில் வேண்டியிருக்கிறதல்லவா? கோபத்தில் என்னைக் கட்டி வைத்து அடிக்க ஆசைப் பட்டாய். இதோ நான் வந்து விட்டேன்."

ஹரிமோகன் கொஞ்ச நேரம் தயங்கிப் பிறகு சொன்னான்:" கிருஷ்ணா, மிகவும் அழகாகப் பேசுகிறாய். ஆனாலும், உன்னுடைய நடவடிக்கைகள் எதுவுமே எனக்குப் புரியவே இல்லை."

உனக்குப் புரியும்படி சொல்கிறேன், கேட்பாயா?"

"நீயே சிறுவன், முளைத்து மூன்று இலை கூட விடாத சின்னப்பயல் எதை எனக்குப் புரிய வைக்கப் போகிறாய்? என்ன கற்றுக் கொடுக்கப் போகிறாய்?"

"என்னால் என்ன முடிகிறதென்று பொறுத்திருந்து தான் பாரேன், ?" வசீகரிக்கும் புன்னகையுடன் அந்த சிறுவன் ஹரிமோகனுடைய உச்சந்தலையை லேசாகத் தொட்டான்.

ஹரி மோகனுடைய உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. மூலாதாரத்தில் உறங்கிக் கிடந்த குண்டலினி ஐந்து தலை வெள்ளை நாகம் படமெடுத்து உயர்வது போல, மூண்டெழு கனலாக உச்சிக்கு உயர்ந்தது. தேகமே நான் என்ற நிலை விடுத்துத் தன் இயல்பான சூக்கும சரீரத்தில் இருப்பதைக் கண்டான். பக்கத்திலேயே, கண்ணனும் இருந்தான். இருவரும், ஒரு பெரிய மாளிகைக்குள் இருப்பதை ஹரிமோகன் அறிந்தான்.

என்ன இது, இது ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தின் வீடு அல்லவா?

ஒரு கவலையும் இல்லாமல் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகத் தான் நினைத்த அதே செல்வரங்கம், கிழடு தட்டி, விசனத்தோடு, கண்களில் நீர் வழிய வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த போது, ஆட்சி அதிகாரத்தோடு எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்த அதே செல்வரங்கம் தானா இது? ஏன், ஒரு கோழிக் குஞ்சைப்போல நடுங்கிக் கொண்டிருக்கிறான்?

இந்த நிலையிலும் ஹரிமோகனுடைய பயம் போகவில்லை. யாராவது வந்து பிடித்துக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நையப் புடைத்து விடுவார்களோ?

"கிருஷ்ணா, என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறாயா? செல்வரங்கத்தின் செல்வாக்கு உனக்குத் தெரியாதா? அவனுடைய வேலைக்காரர்கள் நம்மைப் பிடித்து நன்றாக உதைக்கப் போகிறார்கள் பார். நம்மைத் திருடர்கள் என்று சொல்லப் போகிறார்கள்."

சிறுவன் கலகலவென்று சிரித்தான்," சொல்லிவிட்டுப் போகட்டுமே. திருட்டுப் பட்டம் எனக்குப் புதிதா என்ன? அட, நீயேன் இப்படி நடுங்குகிறாய்? காவல்காரர்கள் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது நீ செல்வரங்கத்தின் மனத்திற்குள் என்ன ஓடுகிறது, ஏன் அவன் இப்படி இருக்கிறான் என்பதைப் பார்."

"அது எப்படி இன்னொருவர் மனதிற்குள்....." ஹரிமோகன் சந்தேகத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னாலேயே கிருஷ்ணன் விடையைச் சொல்லி விட்டான். "உனக்கு செல்வரங்கத்தின் செல்வாக்கு, ஆள்பலம் இவைதானே தெரியும், கொஞ்சம் என்னுடையதையும் பாரேன்."

செல்வரங்கத்தின் மனதை ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போல, உள்ளிருக்கும் அனைத்தையும் பார்க்க முடிவதை ஹரி மோகன் உணர்ந்தான். செல்வரங்கத்தின் மனதில், பலவிதமான ஆசைகள், கோபங்கள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். எவ்வளவு பணம் இருந்த போதிலும் போதாது, போதாது என்று கூக்குரலிடும் பேராசை அவனை ஆட்டிப் படைப்பதையும், அவன் பணத்திலேயே குறியாக இருக்கும் உறவு, நட்பு சுற்றத்தாரையும், அவர்களால் கிலேசத்துடனும், ஆங்காரத்துடனும் செல்வரங்கம் தளர்ந்து போய் இருப்பதையும், அவனது ஆசை மகள் நடத்தை தவறி, ஊர்ப்பழிக்கு அஞ்சி அவளை வீட்டை விட்டு விரட்டி விட்டு, அந்த சோகத்திலேயே அழுதுகுமுறிக் கொண்டிருந்த செல்வரங்கத்தப் பார்த்த பொது, ஹரிமோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தவறுகளை உணரவோ, அதற்கு வருத்தப் படவோ அவன் தயாராக இல்லை. நான் நான் என்ற மமதை, அவனை இறைவனை அழைப்பதைத் தடுத்துக் கொண்டிருந்தது. இடை இடையே, யம தூதர்கள், செல்வரங்கத்தை வந்து வந்து மிரட்டி விட்டுப் போவதையும், இத்தனைக்குப் பின்னாலும், உயிர் மேல் ஆசையால், செல்வரங்கம் ஒரு கோழிக் குஞ்சு துடிப்பதைப் போல பயத்தில் துடிப்பதையும் பார்த்தான்.

"கண்ணா, இவன் ரொம்ப சந்தோஷமாக, கவலையே இல்லாமல் இருக்கிறான் என்றல்லவா எண்ணி இருந்தேன்? என்ன ஆயிற்று இவனுக்கு?"

கண்ணன் சொன்னான், "என்னவோ செல்வரங்கத்துடைய செல்வாக்கு, ஆள் பலத்தைப் பற்றிப் பேசினாயே, இப்பொழுது என்ன சொல்கிறாய்? இவனுக்கு இருப்பதை விட செல்வாக்கும், பலமும் எனக்கிருப்பதை மறந்து விட்டாயா? நானும் ராஜாவாக, நீதிபதியாக, தண்டிக்கும் காவலனாக இருக்க முடியும். இந்த விளையாட்டு உனக்குப் புரிகிறதா?"

ஹரிமோகன் உரத்துக் கூவினான்," அடக் கடவுளே, இது எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் கொடூரமாக அல்லவோ இது இருக்கிறது, இதை ஒரு விளையாட்டு என்று லேசாக உன்னால் எப்படிச் சொல்ல முடிகிறது?"

ஷ்யாமசுந்தரன் உல்லாசமாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்: "எனக்கு எல்லாவிதமான விளையாட்டும் பிடிக்கும். அடிக்கவும் பிடிக்கும், அடிபடவும் பிடிக்கும். உன்னைப் போல, செல்வரங்கத்தைப் போல எல்லோருமே, எதையும் மேலோட்டமாகவே பார்க்கப் பழகி இருக்கிறீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மையான தன்மையில் பார்க்கத் தெரிவதே இல்லை. எதனுள்ளும் இருக்கும் உண்மையை அறியக் கூடிய நுட்பமான பார்வை இல்லை. அதனால் தான், நீ ஒருவன் தான் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி இருப்பது போலவும், செல்வரங்கம் போன்றவர்கள் கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல், சந்தோஷமாக இருப்பதாகவும் தோன்றுகிறது. ஆண்டவன் கல்நெஞ்சுக்காரன், இரக்கமே இல்லாமல், உயிர்களை இப்படி வதைத்துக் கொண்டிருக்கிறான் என்று கோபப் பட்டு, என்னை அடிப்பதற்காகவே இங்கு அழைத்திருக்கிறாய் இல்லையா?"

"இதோ பார் ஹரி மோகன், நீ கஷ்டப் படுவதாகவும், செல்வரங்கம் சந்தோஷமாக இருப்பதாகவும் நினைத்தாய் அல்லவா? இப்போது செல்வரங்கம் மனதில் எத்தனை வேதனையை தேக்கி வைத்திருக்கிறான் என்பதையும் பார்த்தாய் அல்லவா? உண்மையில், ஆனந்தம், சந்தோஷம் என்பது மனதின் ஒரு நிலைதான். அதே மாதிரித் தான் வேதனை, துயரம் எல்லாம். மனதின் உரு மாற்றங்கள் தான் இந்த மகிழ்ச்சியும், வருத்தமும்.

உண்மை என்னவென்றால், ஒன்றுமே இல்லாத ஒருவன், துர்வினையே முதலாகக் கொண்ட ஒருவன் கூட, இடைஞ்சல்கள், ஆபத்துகள் மத்தியில், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

உன்னையே எடுத்துக் கொள், வரட்டுத் தனமான நல்வினைகளைச் சேர்ப்பதிலேயே நாட்களைச் செலவழித்து, கஷ்டங்களை நினைத்து வருத்தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாய். உன்னை மாதிரியே செல்வரங்கமும், வரட்டுத் தீவினைகளையே செய்து, மகிழ்ச்சியற்றிருப்பதையும் பார். அதனால் தான் நல்வினைகளால் நிலையற்ற கணப்பொழுதில் மறையும் சுகமும், தீவினைகளால் நிலையற்ற எளிதில் மறையும் துக்கமும், இன்னும் சில நல்வினகளால் நிலையற்ற துக்கமும், தீவினைகளால் நிலையற்ற சுகமும் கூட மாறி மாறி வருகின்றன. இப்படிப் பட்ட போராட்டத்தினால், நிலையான, உண்மையான ஆனந்தம் என்பதே கிடையாது, கிடைக்காது.

ஆனந்தமயமான இருப்பு என்னிடத்தில் இருக்கிறது. என்னிடம் வந்து, என் மேல் காதலால் உருகிக் கசிந்து, என்னைத் தேடி, என்னிடம் அன்பு கொண்டு நெருக்கி, என்னை வாட்டவும் துணியும் ஒருவனே என்னிடமிருந்து எல்லையற்ற மகிழ்ச்சியையும் பலவந்தமாகப் பறித்துக் கொள்கிறான். நானும் அவனிடத்தில் சந்தோஷமாகத் தோற்றுப் போகவும் தயாராக இருக்கிறேன்.

ஹரிமோகனுக்குத் தன்னிடத்தில் இருக்கும் குறை இன்னதென்று இன்னமும் புரியவில்லை. ஆனாலும், ஆர்வத்தோடு கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்க ஆவலாகக் காத்திருந்தான்.

பதிவு கொஞ்சம் நீ....ண்டு விட்டது, நாமும் கண்ணன் பெயரைச் சொல்லிக் கொண்டே கொஞ்சம் காத்திருப்போமா?


கண்ணன் வந்தான்-மாயக் கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கணடதும் கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!

நெடுநாட்களுக்கு முன்னால், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடான All India Magazine இல் வெளியான ஒரு வங்க மொழிக் கதை. ஆசிரியர் பெயர் தெரியாது. இதன் தமிழ்ப் பதிப்பு 'அகில இந்திய இதழ்' என்ற பெயரில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2002 இதழில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளிவந்ததன் தழுவல்.

ஸ்ரீ அன்னையின் தரிசன நாள் செய்தி


ஸ்ரீ அரவிந்த அன்னையின் 131 வது அவதார தினம் பெப்ருவரி 21
ஸ்ரீ அன்னையின் தரிசன நாள் செய்தி இதோ:

"Live always as if you were under
the very eye of the Supreme and of
the Divine Mother. Do nothing, try to
think and feel nothing that would be
unworthy of the Divine Presence."

--Sri Aurobindo


உனது சித்தத்தின் படியே நடந்து
உனக்குப் பிரியமான குழந்தையாகத்
தகுதியை அருள்வாய்.
ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
உன்னுடைய ஒளியினால் நிறைவிப்பாய்.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி, சத்யமயி பரமே!

காலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பேப்பர்!


"வைகறை" விடியலுக்கு ஒரு அதியற்புதமான தமிழ்ச் சொல்.
காலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பேப்பர் என்று தொடங்கும் சராசரி பொழுதைச் சொல்வது அல்ல இது.

உஷத்காலம் என்று சொல்லப் படுகிற இந்த "வைகறை" பொழுது, வேத மரபில் ஒரு நுண்ணிய பொருளை உணர்த்துவது- ஆன்ம விழிப்பைச் சுட்டுவது- அறிவு நிலையின் விழிப்பைச் சுட்டுவது.

"வைகறை" என்கிற பெயரிலேயே ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தின் வெளியீடாகத் தமிழில் ஒரு காலாண்டிதழ வெளிவந்துகொண்டிருக்கிறது.அச்சு அமைப்பு, உள்ளீடுகள், மொழிபெயர்ப்பில் காணப் படும் கரடுமுரடுகள் என்று பல குறைகளுடன் இருந்ததால், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், சிறிது காலம் வாங்கிப் படித்ததோடு சரி. அப்புறம் இந்த இதழை மறந்தே போய் விட்டேன். தற்செயலாக, கூகிள் ஆண்டவர்உபயத்தில் மேலே படத்தில் காண்கிற வலைப் பக்கத்தைக் கண்டேன். வலைத்தளம் இன்னமும் வடிவமைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற அறிவிவிப்பு அடியில் செய்தியாக ஓடிக் கொண்டே இருக்கிறது. வேறு பல மொழிகளில் காட்டிய ஆர்வத்தை, தமிழில் ஆசிரம நிர்வாகிகளோ, ஸ்ரீ அரவிந்த யோகத்தைப் பயிலும் தமிழறிந்த அன்பர்களோ காட்டவில்லை என்ற மனக் குறை எனக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்த புதிதில், குள்ளச்சாமியோடு பழகிய அனுபவங்கள் [பாரதியின் கவிதைகளில், குள்ளச்சாமியைப் பற்றிப் படிக்கலாம்], பாரதியோடு ரிக் வேத ஆராய்ச்சி செய்தது இப்படிப் பல விஷயங்கள், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இருந்த போது, ஒவ்வொரு நாளும் ஒரு பாமாலையைத் தொடுத்து, ஸ்ரீ அன்னையிடத்தில் சமர்ப்பித்தது, இப்படிப் பல தேடல்கள் இன்னமும் இவனுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருளால், இவனது தேடல்களுக்கு உதவியாக இந்த வலைத்தளம் வளர வேண்டும் என்பது வெறும் ஆசை மட்டும் அல்ல, ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பிக்கப் படும் இன்றைய பிரார்த்தனையும் கூட.

இனி "வைகறை"யைப் பற்றி - The Symbol Dawn in Savitri....

ஸ்ரீ அரவிந்தர் இயற்றிய நெடும்தவத்தின் பலனாக விளைந்தது "சாவித்திரி" எனும் அற்புதக் காவியம். மகாபாரதத்தில் ஒரு துணைக் கதையாக வரும் சத்தியவான் - சாவித்திரி கதையையே அதன் உள்ளார்ந்த பொருளில், தன்னுடைய யோகத்தில் கண்டதை விவரிக்கும் பெரும் காப்பியமாக ஏறத்தாழ 24000 வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுதினார். யோக சாதனையில் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டு, அதற்கேற்ப சாவித்ரியையும் பலமுறை திருத்தி அமைத்திருக்கிறார். ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் கூட இவ்வளவு பெரிய கவிதையை வடித்ததில்லை. மொழி ஆங்கிலம் என்றாலும், இந்திய தத்துவ மரபின் படியே ஸ்ரீ அரவிந்தரின் "சாவித்திரி" பெரும் காப்பியம் அவர் கண்ட உண்மைகளை, ஒரு புதிய தொடக்கத்தின்வருகையை, மனிதன் தன்னுடைய விலங்கிற்கும் கடவுளுக்கும் இடைப்பட்டதான நிலையிலிருந்து இன்னொரு படி முன்னேறி, ஸ்ருஷ்டியின் அடுத்த கட்ட வளர்ச்சியை அறிவிக்கும் கட்டியமாக இருக்கிறது.

"உரை மனம் கடந்த ஒரு பெரு வளி- அதன் மேல்

அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதி"

என்று திருவருட் பிரகாச வள்ளலார் அறிவித்தபடி, வாக்கு, மனம் கடந்த நிலையில் அதிமானச புருஷன் வருகைக்குத் தயார் செய்யும் பணியில் ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே த்யாகம் செய்தார். அதிமானசப் பொன்னொளி இந்த பூமியில் இறங்கினாலும் கூட, அதைத் தாங்குவதற்குத் தகுந்த பாத்திரம் இல்லை. தேடிவந்த பெரும் அருளை உணர்வார் இல்லை என்ற நிலையில், ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே அது இறங்கிச் செயல் படுவதற்காகத் தந்தார். வேறு எந்த மனிதரும் தயாராக இல்லாத நிலையில், ஸ்ரீ அரவிந்த அன்னை, தன்னுடைய உடலையே ஒரு பரிசோதனைக் களமாக்கி இயற்றிய பெரும் தவம் Agenda வில் 6000 பக்கங்களில் ஓரளவுக்கு விவரிக்கப் பட்டிருக்கிறது.

"நூறு இளைஞர்களைத் தாருங்கள். ஒரு புதிய பாரதத்தை உருவாக்கித் தருகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர்.

தன்னலமில்லாத, முழுமையாக இறைவனுடைய சித்தத்திற்கே தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் 12 பேர் போதும், புதிய தொடக்கத்தைச் சாதித்து விடலாம் என்று ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் உறுதியாக இருந்த போதிலும், பழக்கங்களின் அடிமையாகவே இருக்கத் தவிக்கும் இந்த உலகம், திருவுரு மாற்றத்திற்குத் தயாராகாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், இந்த உலகம், படைப்புக்கள் அனைத்தும் ஒரு திருவுருமாற்றத்திர்காகத் தயாராகிக் கொண்டு தான் இருக்கிறது. ஆர்வத்தோடு பங்கேற்கிறவர்கள் சிலரே ஆயினும், இறையருள், எதிர்மறைப் போக்குகளையே தனது கருவிகளாகக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நம்மை அறியாமலேயே, ஒரு மிகப் பெரிய மாற்றத்திற்கு நாம் தயார் செய்யப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

சாவித்ரி மகா காவியத்தைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்னார்:

“Savitri, this prophetic vision of the world's history, including the announcement of the earth's future.

The importance of Savitri is immense. Its subject is universal. Its revelation is prophetic. The time spent in its atmosphere is not wasted.”


இங்கே "வைகறை" ஒரு புதிய விடியல் என்று உருவகப்படுத்துவது வெறும் கவிதைச் சுவைக்காக இல்லை. ஒரு புதிய உலகத்தின் பிறப்பைச் சொல்ல வந்த செய்தி. வேதங்கள் எப்படி சில குறியீடுகளை, உருவகங்களைக் கொண்டிருந்தனவோ, அதே மாதிரி 23,813 வரிகளில், கவனச் சிதறல் இல்லாமல் இருந்தால், தான் கண்ட அதே அனுபவங்களையும், உண்மையையும் படிப்பவருக்கும் கொடுக்கும் மந்திர சித்தியுடன் கூடினதாய் ஸ்ரீ அரவிந்தர் நமக்கு அருளியிருக்கிறார் என்கிறார் ஸ்ரீ அன்னை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னை வணங்குகிறேன். உன்னைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ அரவிந்தர் அருளமுதமான "சாவித்ரி"யைப் புரிந்து கொள்கிற உணர்வின் விழிப்புநிலையை வரமாக அருள்வாய். ஒவ்வொரு தருணத்திலும், உன்னிடத்திலிருந்து கிடைக்கிற அருளை நன்றியோடு நினைவிற்கொள்ளும் மனப்பாங்கினை வரமாக அருள்வாய்.ஒவ்வொரு செயலிலும், விளைவிலும் உனது அருளே வெளிப்படுகிறது, வழி நடத்துகிறது, என்பதை மறந்து விடாமல், உனது கருணைக்குத் தகுதியானவனாக வரம் தருவாய்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

பொய்மையிலிருந்து, உண்மைக்கு வழிநடத்துவாய், தாயே!

இருட்டிலிருந்து, வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் தாயே!

அகம், புறம் இரண்டிலும் நிறைந்துகிடக்கும் பகையிலிருந்து என்னை மீட்பாய் தாயே!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

இது கடவுள் வரும் நேரம்!


"அறியாமையும், இருளும் கூடின தொடக்கத்தில், பூரணமான நம்பிக்கையே தெய்வீக சக்தியின் நேரடி வடிவமாக, அறியாமையையும் இருளையும் எதிர்த்து வெல்லும் துணையாக நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்ன உரையாடலின் ஒரு பகுதியை ஏற்கெனெவே எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?…என்ற பதிவில் பார்த்திருக்கிறோம்.

மாற்றத்திற்குப் பயந்து, நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்று பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடும் பலவீனம், முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதையும் முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். இதை ஒப்புக் கொண்ட பிறகும் கூட, பழக்கங்களின் பிடியிலிருந்து விடுபடுவது எவ்வளவு கடினமானது என்பதை நம்முடைய சொந்த அனுபவங்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும், செக்கு மாடு திரும்பத் திரும்ப ஒரே வளையத்திற்குள் சுற்றிச் சுற்றி வருவதைப் போல நாமும் பழக்கங்களின் அடிமையாகவே இருப்பத உணர வேண்டுமானால், உணர்வு விழிப்பு நிலையில் இன்னும் கொஞ்சம் கஷ்டப் பட்டு முன்னேற வேண்டும்.

Emptying the cup என்பதாக ஜென் கதைகளில் படிக்கும் போது, வடிவேலு மாதிரி 'அட, ஆமா இல்லே' என்று நம்மைப் பற்றிய ஞானம் கிடைத்து விட்டதாகத் தோன்றும்.

ஆனால் அது அவ்வளவு எளியது இல்லை.

பழைய பழக்கங்களில் [சங்காத்தங்களில் ] இருந்து விடுபட புதியதாக ஒன்று வேண்டும். அதிலிருந்து விடுபட்டால் ஆசையில் இருந்து விடுபட முடியும். ஆசையிலிருந்து விடுபட்டால், சமநிலை அல்லது சம நோக்கு ஏற்படும். அது ஏற்பட்டால், அதுவே இந்த ஜீவனின் உண்மையான விடுதலை ....ஆஹா,இப்பவே கண்ணைக் கட்டுதே என்று வடிவேலு மாதிரி சொல்லத் தோன்றினால், கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மேலே படிக்கலாம்.

சென்ற பதிவில் ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தை தான் புரிந்து கொண்டதாகக் கருதும் இரு எதிர்மாறான போக்குகளை பார்த்தோம். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை இருவரும் வழிநடத்திய பூரண யோகம், அதை எட்டுவதற்கான பரிசோதனைக் கூடமாகவே 1926 இல் ஆசிரமம் உருவானதைப் பற்றியும், திரு. மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய No Imposition என்ற தலைப்பிலான கட்டுரையையும் பார்த்தோமல்லவா? அதில் முத்தாய்ப்பாக திரு மாதவ் பண்டிட் சொல்கிற இந்த வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு மேலே பார்ப்போம்.

“For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”


பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்கிறார்களே அது இது தான். இந்த உண்மையைப் புரிந்து கொள்வது தான்.

இறைநிலை நம்முடைய போக்கில் ஒருபோதும் தலையிடுவது இல்லை. ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் நேர் எதிரான பாதைகள் பிரிவதை, அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை இறையருள் நமக்கு வழங்கியிருக்கிறது. தேர்ந்தெடுத்தது எதுவோ அதற்குரிய வகையில் அடுத்தடுத்த அனுபவங்கள், படிப்பினைகள் என்று நம்மை, நமக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. விளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையை, அதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.

Yahoo! Groups இல் In Search of The Mother என்ற மடலாடற் குழுவைப் பற்றி முன்னமேயே குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு நண்பர், அவருக்குக் கிடைத்த ஒரு மின்னஞ்சலை வைத்து ஸ்ரீ அன்னையின் பெயரால் நடத்தப் படும் த்யான மையங்களைப் பற்றி சற்று அதிர்ச்சியோடு எழுதியிருந்தார்.

“After going thru the blog, I was disgusted with the mere thought of
these centers trying to extract money from innocent people in the name
of Mother. It is like a commercial bazaar of give & take of
commodities in the name of spirituality.


இதைப் படித்த பிறகு, அந்த வலைப் பதிவையும் பார்த்தேன்

இது ஒன்றும் புதியது அல்ல.
ஆன்மிகம் பேசினால் காசு கிடைக்கும் என்கிற நிலையில், ஆன்மீகத்தைக் கூறு கட்டி விற்பனை செய்யும் ஆசாமிகள் நிறையவே இங்கு உண்டு.
இங்கே மற்றும் இங்கே

சொடுக்கிப் பாருங்கள், என்னவெல்லாம் சொல்கிறார்கள் ?!

எல்லாக் காலங்களிலும், இது மாதிரி போலிகள், இரண்டும் கெட்டான்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். சூரிய உதயம் ஆவதற்கு முன்னால், இருளும் இல்லாமல் ஒளியுமில்லாமல் ஒரு இரண்டும் கெட்டான்தனமான "கருக்கல்" என்று சொல்கிற நிலை இருப்பது போல, இந்த மாதிரி
"ஆர்வக் கோளாறுகள் " இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த மேற்கு மாம்பலம் த்யான மையங்கள் இதே மடலாடற்குழுவில் ஏற்கெனெவே செய்தி எண் 1138, 2153,2155 மற்றும் பல தொடர் செய்திகளில் விளம்பரப் படுத்தப் பட்டது தான். படிப்பினை: இனிமேலாவது இது போன்ற செய்திகள் சரிபார்க்கப் பட்ட பிறகே வெளியிடப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

திரு கர்மயோகி அவர்கள் 1980 களில் அமுதசுரபி மாத இதழில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ
அன்னையைப் பற்றி எழுத ஆரம்பித்த பிறகு, தமிழ்நாட்டில் பல இடங்களிலும் ஸ்ரீ அன்னை த்யான மையங்கள் என்று ஏற்படுத்தி, கூட்டு தியானம், மலர் வழிபாடு, ஸ்ரீ அரவிந்தர் அன்னை எழுதிய நூல்களைப் படிப்பது என்பது பரவலாகியது உண்மை.

இது fast food காலம், எதுவானாலும் தொடர் முயற்சியோ, பொறுமையோ இல்லாமல், இந்த மாதிரி த்யான மையங்களுக்குப் போனாலே ஒரு அற்புதம் நிகழ்ந்து விடும் என்கிற மாதிரி ஒரு மாயையும் இந்த மாதிரி த்யான மையங்களில் ஏற்படுத்தப் பட்டதும்,. ஆசிரமத்தின் அங்கீகாரம் எங்களுக்குத் தேவை இல்லை என்று வெளிப்படையாகவே இங்கே சில பிரபலங்களால் [?] சொல்லப் பட்டதும் நான் நேரடியாகவே பார்த்த அனுபவம்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.sincere11 என்கிற பெயரில் நிறைய குற்றச் சாட்டுக்களைச் சொல்லுகிற இந்த வலைப் பதிவரிடத்தில் sincerity முழுமையாக இருப்பதாகவும் தெரியவில்லை. இந்தப் பெயரில் blogger இல் இரண்டு வலைப் பதிவுகள் வைத்திருக்கிறார். ஒன்றில் எந்த வலைப்பதிவும் இல்லை. ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மையங்கள் என்ற தலைப்பில் ஒரே ஒரு பதிவு மட்டும் இருக்கிறது. ஒரு மொட்டைக் கடிதத்திற்கும் இந்த வலைப் பதிவிற்கும் அதிக வித்தியாசம் இல்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னை ஒரு இடத்தில் தன்னுடையஆசீர்வாதம் மிக ஆபத்தானது என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். அது இறைவனது காரியத்தை நடத்துவதற்காகவே, முழு வலிமையோடும் சக்தியோடும் தரப்படுகிறது, வெற்றி தோல்வி என்கிற அளவீடுகள் இல்லாத, ஒரு உள்ளார்ந்த முன்னேற்றத்திற்காகத் தரப்படுவது, எப்படியாகிலும் நன்மையையே அளிக்க வல்லது என்று சொல்கிறார்:

"My blessings are very dangerous. They cannot be for this one or for that one or against this person or against that thing. It is for ....or, well, I will put it in a mystic way:

It is for the Will of the Lord to be done, with full force and power. So it is not necessary that there should always be a success. There might be a failure also, if such is the Will of the Lord. And the Will is for the progress, I mean the inner progress. So whatever will happen will be for the best."


-The Mother,


21 January, 1960

முதலில் சொன்னது போல, ஒரு தரப்பு, தத்துவ விசாரம் செய்து நான் சொல்வது தான் சரி நீ சொல்வது தப்பு என்று அடித்துக் கொண்டிருக்கிற அதே நேரம், மோடி மஸ்தான் தாயத்து மாதிரி, இந்த தாயத்து என் 'குர்நாதர்' கொடுத்த தாயத்து..வாங்கிக் கையிலே கட்டு, நீ நெனச்சதெல்லாம் நடக்கும் தொட்டதெல்லாம் பலிக்கும் என்கிற ரீதியில் இன்னொரு தரப்பும் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது. தொழிற்சங்கம், இடதுசாரித்தனம், நாத்திகம் என்று இருந்தவனை ஒருகட்டத்தில் அதை விட்டு வெளிவரச்செய்தபோது முதலில் ஈர்த்தது இந்த மாதிரிக் கூவி கூவி அருளை வியாபாரம் செய்தவர்கள் தான். "நாங்கதேன் ஒரிஜினல் கம்முனிஸ்டு மத்ததெல்லாம் டூப்பு" இப்படி அடித்துக் கொள்கிறவர்கள் மத்தியில் கொஞ்ச நாள் வாழ்ந்ததாலோ என்னவோ, இந்த மாதிரி தாயத்து விற்கிறவர்களை அடையாளம் கண்டு கொள்வது ஒன்றும் கடினமாக இல்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னை மிகத் தெளிவாகவே சொல்கிறார்:

"முன்னெப்போதும் அறிந்திராத ஒரு விசேஷமான, உன்னதமான தருணத்தில் இருக்கிறோம். ஒரு புதிய உலகத்தின் பிறப்பைக் காணும் தருணத்தில் இருக்கிறோம். அதன் இருப்பை உணருகிறவர்கள் வெகு சிலரே ஆயினும், அது இருக்கிறது. அதை நோக்கிச் செல்வதற்கான பாதையை நாம் கண்டாக வேண்டும், ஏனெனில் இது வரை அதில் எவரும் போனதில்லை, கண்டதில்லை.பாதையை கண்டு பிடிப்பது ஒரு உன்னதமான சாகசம். உங்களில் சாகசத்தை விரும்புகிறவர்கள் இருக்கக் கூடும். அவர்களை நான் அழைக்கிறேன் "ஒரு மாபெரும் சாகசத்திற்கு உங்களை வரவேற்கிறேன்."

The Great Adventure

"We are in a very special situation, extremely special, without precedent.

We are now witnessing the birth of a new world; it is very young, very weak--not in the essence but in its outer manifestation-not yet recognised, not even felt, denied by the majority. But it is here. It is here, making an effort to grow, absoluetely sure of the result. But the road to it is completely new road which has never before been traced out-nobody has gone there, nobody has done that! It is a beginning, a universal beginning. So it is an absolutely unexpected and unpredictable adventure.

There are people who love adventure. It is these I call, and I tell them this: "I invite you to the great adventure."

It is not a question of repeating spiritually what others have done before us, for our adventure begins beyond that. It is a question of a new creation, entirely new, with all the unforeseen events, the risks, the hazards it entails-a real adventure, whose goal is certain victory, but theroad to which is unknown and must be traced out step by step in the unexplored. Something that has never been in this present universe and that will never be again in the same way. If that interests you...well, let us embark. What will happen to you tomorrow-I have no idea.

One must put aside all that has been foreseen, all that has been devised, all that has been constructed, and then...set off walking into the unknown. and-come what may! There."

The Mother,

10, July 1957

CWM Vol. 9 pp 150-151

இது கடவுள் வரும் தருணம். விழிப்பாக இரு என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை

கேள்விகள்-பதில்கள் என்ற தலைப்பில் 1957 ஆம் வருடம் ஸ்ரீ அரவிந்த அன்னை உரையாடல்களின் தொகுப்பில் ஒரு சிறு பகுதியை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோமா?
ஸ்ரீ அரவிந்த அன்னையின் அழைப்பை, அதன் உண்மையான பொருளில் உணர்ந்து கொள்ள ஸ்ரீ அன்னையே, உனது அருளையே வேண்டி நிற்கிறேன்:

That was Her way and that is also the Divine's way!



Peter Heehs என்பவர் எழுதிய ஒரு புத்தகம் "The Lives of Sri Aurobindo" ஆசிரமவாசிகள், ஆரோவில் வாசிகள். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையை ஏற்றுக் கொண்ட அடியவர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

Peter Heehs இந்தப் புத்தகத்தில் ஸ்ரீ அரவிந்தரைக் கொச்சைப் படுத்திவிட்டார், ஆசிரம நிர்வாகிகள் பொறுப்பற்ற முறையில் இந்த விஷயத்தை கையாண்டிருக்கிறார்கள் என்று ஒரு தரப்பு கொதித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் வரையிலும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப் பட்டிருக்கிறது. இந்தியாவில் இந்த நூலைத் தடை செய்ய வேண்டும், நூலாசிரியரை ஆசிரமத்திலிருந்து வெளியேற்ற வேண்டும், என்று தீவீரமாக இவர்கள் இருக்கும் அதே நேரம்,

இன்னொரு தரப்போ நூலாசிரியர் எந்த தவறும் செய்யவில்லை, அவரது கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும், இது கிழக்கும் மேற்கும் கலாசார ரீதியாகப் பிரித்துப் பார்ப்பதினால் வந்த கோளாறு என்று சூடான விவாதங்கள் நடத்திக் கொண்டே இருக்கின்றன.

Peter Heehs எழுதியதில் பெரிதாகக் குற்றம் காண்பதற்கு ஒன்றும் இல்லை என்று வாதிடும் இவர்கள், முந்தின தரப்பின் மேல் பல குற்றச் சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். குறிப்பாக,ஒரு புதிய மதம் உருவாக்கப் படுகிறதா, ஸ்ரீ அரவிந்தரின் தெய்வீகத் தன்மை திணிக்கப் படுகிறதா, சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படுகிறதா, ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம் பக்தியின் எல்லைக்குள் குறுக்கப் படுகிறதா, என்றெல்லாம் நூலாசிரியர் கூடக் கற்பனை செய்யாத கேள்விகளை எல்லாம் வாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வளர்ந்து கொண்டே போகும் இந்த அக்கப் போரைப் பற்றி, வாத-பிரதி வாதங்களைப் பற்றிக் கருத்துச் சொல்கிற அளவுக்கு எனக்கு தத்துவ விசார அனுபவமோ, தவமோ இல்லை. ஆனால், எந்தவொரு இயக்கத்திலும் ஏற்படுகிற ஒவ்வொரு முரண்பாடும், வளர்ச்சியின் படிக்கட்டுக்களே என்பதைப் புரிந்துகொள்கிற அளவு அறிவு இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த ஆசிரம வரலாற்றில் இது போல முன்னொரு தடவையும் நடந்திருக்கிறது. சத்ப்ரேம் என்கிற அடியவர், பல வருடங்களில் ஸ்ரீ அன்னையுடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பாக, 13 பாகங்களில் சுமார் 6000 பக்கங்களில் "The Mother's Agenda " என்ற புத்தகமாக வெளியிட முனைந்த போது, ஆசிரமத்தில் இருந்த சிலரால் அது தடுக்கப் படும் என்று கருதிய சத்ப்ரேம் தன்னுடைய குறிப்புக்களையும், ஒலி நாடாக்களையும் ரகசியமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று வெளியிட்டபோது, இதே மாதிரி விவாதங்கள் கிளம்பின. ஸ்ரீ அன்னை மகா சமாதி அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னாலேயே, சத்ப்ரேம் ஸ்ரீ அன்னையை சந்திப்பது தடுக்கப் பட்டது.

ஆனால், ஸ்ரீ அரவிந்த அன்னை, எத்தகைய ஆத்ம சாதனையை மேற்கொண்டார், அதில் எத்தனை கஷ்டங்களை எதிர்கொண்டார், அதிமானசத் தன்மை வெளிப்பட ஸ்ரீ அன்னை தன்னுடைய உடலையே ஒரு பரிசோதனைக் களமாக்கி, ஒவ்வொரு செல்லும் எப்படித் திருவுரு மாற்றத்திற்குத்தயாராகும்படி செய்தார் என்பதை ஒவ்வொரு கட்டமாக விவரிக்கும் முக்கியமான ஆவணமாக இன்று அது கொண்டாடப் படுகிறது. சத்ப்ரேமை ஒரு அசுரன், அவரை ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றுங்கள் என்று ஸ்ரீ அன்னை சொன்னதாக, அந்தக் கால கட்டத்தில் ஆதாரமில்லாத தகவல்களும் உண்டு.

ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்று இன்று பரவலாக அறியப் பட்டிருக்கும் அமைப்பு, உண்மையில் மனித குலத்தை, ஸ்ரீ அரவிந்தர் கண்ட பூரண யோக சாதனை வழியாக சத்திய ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பரிசோதனைக் கூடமாகவே ஸ்ரீ அரவிந்த அன்னையால் உருவாக்கப் பட்டது. ஆசிரமத்தைத் தன்னுடைய சரீரமாகவே பாவித்து ஸ்ரீ அன்னை சொன்னதும் உண்டு. பரந்த இந்த பூமியில், நிலவும் ஒவ்வொரு குணமும் சூழலும் ஆசிரமத்தில் பரிசோதனைக்காகவும், திருவுரு மாற்றத்திற்காகவும் பிரதிநிதித்துவப்படுகிற சூக்ஷ்மத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பலநேரங்களில் சொன்னதுண்டு.

ஸ்ரீ அரவிந்த அன்னையின் பிறந்த நாள் வருவதையொட்டி எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு விடை சொல்வது போல, திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய Commentaries on The Mother's Ministry என்கிற நூலில் No imposition என்கிற இந்தப் பகுதி இருந்ததை, திரு மாதவ் பண்டிட் அவர்களுடைய வார்த்தைகளிலேயே பார்ப்போமா:

No Imposition

“The Mother once told this writer that she could effect the desired changes in the Ashram collectivity in a trice but she did not wish to do so. She preferred to wait for the change to come about spontaneously, from within.

That was her way and that is also the Divine's way.

Changes imposed from above or outside are not natural. They do not last. When the
pressure is relaxed, things tend to swing back to their original rhythm. It is only when the necessity of a change is realised within oneself and the will is exerted accordingly that the change is accepted in the whole of the being and integrated with the general nature. Only so can the change cease to be artificial and superficial and become natural.

Besides it is a law of this manifestation to let everything evolve in full freedom.
Freedom is the law of growth. Even though all has issued from the Divine and is essentially maintained by the Divine, each is given full freedom to follow its own choice of direction and pace. The Oversoul never takes possession of the soul, it oversees, presides over its evolution but does not interfere with its liberty. It is the soul below that has to make the effort to come closer to the Oversoul, aspire for its union with the higher counterpart. The latter patiently waits for it to be ready and want to unite with it. Only so can the union be joyous culmination of a movement that proceeds spontaneously from the embodied soul. The initiative and the onus of the operation lies with the lower term.

So too with the world. The universe has indeed emanated the Being of the Supreme Lord. It has been released into manifestation with a purpose; to manifest the Divine Will. The details of the working out of the process, however, are left to the Soul in Becoming. And this Soul is multiple. There may be, and are, deviations from the main Intention, deformations in the process consequent on this departure from the central Truth. But the Divine does not interfere.

The Divine allows full scope for the consequences of such aberrations to be worked out; it waits for the movement—collective and individual—to correct itself and put itself in time with the higher Will. The Divine does not participate. The universe has to take steps to orientate its directs towards the Divine, feel the need to be restored to its Parent Divine, to be possessed by the Divine, before the Divine Lord responds by taking possession of it. The movement on the part of the universe or the individual has to be conscious, willed effort to become one with the Divine Lord.

In all this operation the Divine's help is of course there to be drawn upon; but it is not imposed. That would be contrary to the Law of manifestation. For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”


Excerpted from and acknowledge with thanks and gratitude:

“Commentaries on The Mother's Ministry” Part II by Sri M P Pandit, published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!



www.searchforlight.org வலைத்தளத்தில் இன்றைய சிந்தனைக்கு என்கிற தலைப்பில் ஸ்ரீ அரவிந்தர் அருளமுதமான சாவித்ரியில் இருந்து இந்த வரிகளை படித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நான்கே வரிகளில் பரிணாம வளர்ச்சியை ஸ்ரீ அரவிந்தர் சுருங்கக் கூறி விளங்க வைத்திருப்பதை, திரு மாதவ் பண்டிட் போல வெகு சிலரால் தான் நம்மைப் போன்றவர்களுக்கு, மிக எளிமையான வார்த்தைகளிலேயே புரிய வைக்க முடியும். நீண்ட நாட்களுக்கு முன்னால் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்குச் சென்றிருந்த போது வாங்கிய புத்தகம் Commentaries on The Mother's Ministry. இரண்டு பகுதிகளாக வெளியான இந்த புத்தகத்தை. இப்போது மறுபடி படித்துக் கொண்டிருக்கையில் திரு மாதவ் பண்டிட் அவர்களுடைய எழுத்தாளுமை என்னைக் கொள்ளை கொண்டது.

இந்தத் தருணத்தில் அவருக்கு வழிகாட்டியாகவும், ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் அவரைக் கொண்டு சேர்த்தவருமாகிய கபாலி சாஸ்திரியார் சொன்னதாகப் படித்தது நினைவிற்கு வருகிறது.

அருட்பெரும் ஜோதி என்று திருவருட்ப்ரகாச வள்ளலாராலும், அதிமானச ஒளி [Supramental Light] என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப் பட்ட, உன்னதமான இந்த ஒளியைப் பெறத் தகுதியான முதல் இருபத்தைந்து பேர்களுக்குள் திரு மாதவ் பண்டிட் அவர்களும் ஒருவர் என்று ஸ்ரீ அன்னை தெரிவித்ததைக் கபாலி சாஸ்திரியார் மிகப் பெருமிதத்தோடு சொல்வாராம்.

"மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" என்றார் திருநாவுக்கரசர். அதைப் போல நமக்கு ஏற்படுகிற மயக்கங்களும் தேவை தான் என்ற தலைப்பில் திரு மாதவ் பண்டிட் அவர்கள் சுவையாக ஒரு நுட்பத்தைச் சொல்கிறார்.

ஓரடி முன்னால், ஈரடி பின்னால் என்ற பதிவில் ஏற்கெனெவே தொட்ட விஷயம் தான். அதில் இப்படி எழுதியிருந்தேன்: "ஒரு சிறு குழந்தையைப் போல, தட்டுத் தடுமாறி, குளறி, தடுக்கி விழுந்து, இப்படியாக trial and error ரீதியில் ஒவ்வொரு அனுபவமாக, அதன் படிப்பினையாக, பிறகு வேறொரு அனுபவம் அதன் மேல் படிப்பினை என்ற தொடர் சுழற்சியிலே, மனிதன் உண்மையை நோக்கி முன்னேறுகிறான்."

உண்மையைத் தேடுகிற முயற்சியில் இவனைப் போல முதலடி எடுத்து வைப்பவருக்கு, திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய இந்தப் பகுதி துணையாக இருக்கும்:

Illusions Are Necessary

“We have to enter Knowledge, says the Upanishad, through Ignorance. Ignorance is incomplete Knowledge and it is through this lower knowledge that we grow into the higher.

That is the nature of the evolutionary process in which we are involved. The knowledge that we are given is in proportion to the state of our consciousness. Knowledge grows out of experience and Mother Nature always grades the experience offered to us according to the capacity of our being.

The Mother remarks that in the longer-range perspective we find that every experience is just what is needed at the moment in order to push us to the next step in our growth. What we learn from it is exactly what we need to know at that stage. A few steps later that knowledge may prove to be imperfect, even faulty; but at the time we have it, it plays a useful part in our life. And despite its proving to be mistaken at a subsequent point of time, we do realise that it was a fruitful error.

We grow through errors, we learn from mistakes we profit by illusions. From this point of view the Mother says, illusions are necessary. They are an inevitable part of the mechanism of Nature to ensure our gradual growth. When we look back on our lives, we do realise the truth of this observation.

None can leap straight into the plenary orb of knowledge.

When we keep this law of growth in mind we become less intolerant, more understanding of the viewpoints of others. To each one his understanding is right. In his stage of evolutionary growth, he sees things from an angle that is appropriate to his locus. There is a purpose in his experiencing things as he does. We shall do well to respect this freedom, recognise his need for that freedom to pass through various stages of the development of knowledge. It will not do to tell him he is wrong and force on him a frame of knowledge without the necessary consent of experience. We have to wait till he completes the round of experiences that give him his knowledge and he outgrows it.

After all, one knows only what one is ready for. At the time we have a particular knowledge we are convinced that it is absolute. Otherwise we cannot function upon its basis. Tomorrow we may gain an added experience which may alter our knowledge. The previous one may prove to have been illusive. And yet that illusion has paved the way to the next knowledge which in turn may be convicted, still later, of being an error.

Thus do we move from one illusion to another, from one one partial truth to a fuller one. Till we arrive at the ultimate Truth all knowledge is relative, but each knowledge is necessary as long as it is relevant.”

excerpted from and acknowledged with thanks: “Commentaries on The Mother's Ministry II by Sri M P Pandit, published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

ஒவ்வொன்றும் ஒரு காரணத்தோடு தான் நடக்கிறது. காரணத்தின் அடிப்படையிலேயே காரியங்கள் நடப்பதை நாம் அறிந்திருப்பதில்லை, அவ்வளவு தான். இதைத் தான் அபிராமி பட்டர் "நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை" என்று சொல்கிறார். காளிப் பாட்டில் பாரதியோ, "யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை" என்று பரவசப்படுகிறார்.

இவனது வாழ்விலும், என்ன நடக்கிறது என்பதை அனுமானிக்கும் முன்னமேயே பலப்பல நிகழ்வுகள் கடந்து போயின. ஏன், எதற்கு என்ற கேள்விகள் இப்போது இல்லை. நடந்த ஒவ்வொரு சம்பவமும், இவனைப் பக்குவப் படுத்தவும், அடுத்த நிலைக்குத் தயார் செய்யவும் உதவின என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னைச் சரண் அடைகிறேன்.

"Keep sheltered in my arms- they will protect you against everything

Open to my help it will never fail you."

என்று உறுதியளித்திருக்கிறாய்.

அந்த உறுதி இவனுக்கும் சேர்த்துத் தான் என்கிற நம்பிக்கையோடு உன்னைச் சரண் அடைகிறேன்.

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்யமயி பரமே!

"அன்னை என்னும் அற்புதப் பேரொளி"




"அன்னை என்னும் அற்புதப் பேரொளி"

இந்தத் தலைப்பில் திருமதி விஜயா சங்கர நாராயணன் எழுதிய நூலை, வெகு நாட்களுக்கு முன் வாசித்த நினைவும், பரவசமும் இந்தப் பதிவை எழுதும் போது முன் வந்து நிற்கிறது.

அம்மா, அம்மா என்று அரற்றுவதைத் தவிர ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னைப் பற்றி, என்ன எழுதிப் புரிந்து கொள்ளவோ, புரிய வைக்கவோ முடியும்? அறியாமையின் உச்ச கட்டமாக, ஆசிரம சாதகர் ஒருவரிடம் அவருக்கேற்பட்ட அனுபவங்களைப் பற்றிக் குழந்தைத்தனமாகக் கேட்ட போது, "எவ்வளவோ இருக்கிறது, அதில் எதைச் சொல்வது?" என்ற கேள்வியே பதிலாக வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஸ்ரீ அரவிந்த அன்னையை ஏற்றுக்கொள்கிறேன் என்று மேலோட்டமாகவே நாம் சொன்னாலும், "ஒரு கணமாவது நான் ஒருவரைப் பார்த்திருந்தாலும் போதும், அவருடைய வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று ஸ்ரீ அன்னை சொல்லும் சத்திய வாக்கு அங்கே செயல் படுவதை, என்னுடைய அனுபவமாகவே இப்போது பார்க்கிறேன்.

"Remember and Offer" இது தன்னுடைய அடியவர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் ஒரு எளிய முயற்சி. எதுவானாலும், நினைவிற்கொண்டு வந்து, ஆத்ம சமர்ப்பணமாகச் செய்து வரத் தடைகள் நீங்குவதும், காரிய்ம் கை கூடுவதும் இறையருளால் நடத்தப்படும் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

புதுவையிலிருந்து வெகு தொலைவில் இருந்த போதிலும், ஆசிரம வாழ்க்கையின் ஒரு அங்கமாக உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட்ட வெகு சிலருள் ஒருவனாக இல்லாதிருக்கும் போதிலும், ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தை பற்றி முழுமையாக அறிந்தவனாக, அனுஷ்டிப்பவனாக இல்லாத நிலையிலும் கூட, இவனது சில அனுபவங்கள், உன்னை என்னுடைய அன்னையாகவே அறிந்து கொள்ளவும், அம்மா, என்னையும் உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக ஏற்றுக் கொள்வாய் என்று உன்னிடத்தில் உரிமையோடு விண்ணப்பித்துக் கொள்ளவும் தூண்டின. ஏற்றுக்கொள்வாய், ஒருபோதும் கைவிட மாட்டாய் என்கிற நம்பிக்கை உன் வாக்கினாலேயே இவனுள் விதைக்கப் பட்டிருப்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

1965-1966 களில் அறியாச் சிறுவனாக, உன்னுடைய உரையாடல்கள் தொகுப்பு ஒன்றில் உன்னுடைய புகைப்படத்தைப் பார்த்தவுடன், என்னைப் பெற்ற தாயாகவே தோன்ற, 'அட இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே' என்று திரும்பத் திரும்ப அதே அனுபவத்தைப் பல முறை அனுபவித்ததுண்டு. அளியன், அன்னை நீ தான், இவனைப் பெற்ற தாயின் சாயலில் இவனுக்குக் காட்சி கொடுத்திருக்கிறாய் என்பது புரிந்து கொள்ளவே வெகு நாட்களாயிற்று.


இடையில், தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திகனாகத் திரிந்த காலம் ஒன்று இருந்தது. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்ட காலமாகச் சொல்வது போல இவனது வாழ்விலும் அது ஒரு இருண்ட காலம்.

1986- 1987 களில் அமுதசுரபி மாத இதழில் திரு. கர்மயோகி அவர்கள் எழுதி வந்த கட்டுரைகள், உலகாயத விளையாட்டில், அன்னையை மறந்து போனவனை மீண்டும் அன்னையிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக உதவின. Mothers Service Society என்ற அமைப்பின் கீழ் தமிழகமெங்கும் ஸ்ரீ அரவிந்த அன்னை தியான மையங்களை ஏற்படுத்தவும், ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடி தியானம் செய்வதும், மலர் வழிபாடு செய்வதும் 1980 களின் இறுதியில் பரவலாக நடந்து வந்தன.ஆர்ப்பாட்டம், ஊர்வலம், முரண்பாடுகள் என்றே கிடந்த இவன், அதற்கு நேர் எதிர் மாறான அனுபவத்தைப் பெறுவதற்காக, இந்த மாதிரி கூட்டங்களில் பங்கேற்றதும் நடந்தது.

குடும்பம் ஒரு இடத்தில், பணியில் இருந்தது மற்றோரிடத்தில் என்றிருந்த காலம்.

டாக்டர் சுந்தர வடிவேல் இவனது மகனுக்கு வைத்தியர் என்கிற முறையில் அறிமுகமாகி, நண்பரான காலம். ஸ்ரீ அரவிந்தர் அன்னையிடத்தில் ஈடுபாடு கொண்ட இவரால் தான் ஸ்ரீ அன்னையிடம் இவன் மறுபடி தஞ்சம் அடைய வேண்டும் என்கிற வேட்கையும், ஈர்ப்பும் ஏற்பட்டது. விடுமுறையில் ஊருக்கு வருகிற நாட்களில் கணிசமான நேரம் டாக்டருடன் ஆன்மீகத்தைப் பற்றி விவாதிக்கும் பழக்கமும், இதே போல் ஈடுபாடு உடைய வேறு பலருடைய தொடர்பும் உண்டானது. சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்பதற்கொப்ப, பழைய வரட்டுப் பிடிமானங்களில் இருந்து விடுபட இவை உதவின. அந்த அளவோடு ஒதுங்கியும் போயின.

நம் உடலில் பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் உண்டாகிக் கொண்டே இருப்பது போல, "பழையன கழிதல், அதன் பின் புதியன புகுதல்" என்பதற்கொப்ப ஒவ்வொரு அனுபவமும், அதற்கு முந்தைய அனுபவங்களின் எச்சங்களைத் துடைத்துவிட்டுப் புதிதாய்ப் பிறந்தது.

"வாய்ப்பு என்பது மிகப் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் தருணம். அதனால் ஒருபோதும் வாய்ப்பைத் தவற விட்டு விடாதே" என்கிறார் ஸ்ரீ அன்னை. எவ்வளவு வாய்ப்புக்களைத் தவற விட்டிருக்கிறேன் என்பது இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது.

உள்ளது உள்ளபடி சமர்ப்பணத்துடன் சொன்னால், எளிய வார்த்தைகளுக்குள்ளும் பேருபதேசம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய Commentaries in the Mother's Ministry என்ற நூலில் இருந்து இந்தப் பகுதியை பார்ப்போமா?


Incalculable Divine

“There are quite a number of stories about the Divine's help arriving at the very moment man gives up his egoistic struggle. There is, for instance, the case of a man who was falling down from the top of a high tree. He cried out to God to save him and God did respond. The falling man landed on a branch of the tree and he exclaimed to himself: “Ah, now I will take care of myself”. That very moment the branch started cracking and our friend got alarmed and called out, “God, I did not mean it!”

The point in this and similar stories is that as long as man depends upon his own strength—which is in fact so puny—or on that of other human sources, the Divine does not enter into the picture. Man is allowed to struggle and realise the limitations of human effort. The inner soul-strength comes to the fore when the external being, in its moment of truth, realises its utter failure to meet the challenges that face it and appeal to the Divine, whether within or above. In a slightly different context, Sri Aurobindo puts it graphically in SAVITRI how in moments of crisis man is forced to look to the Divine:


An hour comes when fail all Nature's means,

Forced out from the protecting Ignorance

And flung back on his naked primal need,

He at length must cast from his surface soul...


When our strength fails, when our human resources fail, when we sincerely call for the Divine's help, the Divine never fails. Only we must have the eye to perceive the Hand of God which may be cloaked in appearance that may be misleading at first sight. The help may not come in the form in which we expect. It may even come in the form of happenings that go counter to our expectations. The ways of the Divine Saviour are mysterious, as complex as the causes of our difficulties. The most unlikely elements play a helpful role. At times even enemies are moved to fraternise with us. We are baffled. We try to find explanations and at times attribute ulterior motives to the benefactors. But the fact remains that individuals are moved to act helpfully, circumstances are shaped favourably—all because the Divine has willed to save.

We may not always understand the manner in which the Will operates. It is not immediately necessary either, to know it. It is enough if we have the faith that the Divine response is certain and when we are helped out, to own gratitude to the Divine. There is often a tendency to attribute the favourable turn to our strength of intelligence and will or to external human agencies. It is well to remember at such moments that men and events are only instrumentations of the Divine Will to protect and save.”
*

அம்மா! எவ்வளவு தான் தவறுகள் இழைத்திருந்த போதிலும், அகங்காரச் செருக்கோடு நான் நான் என்று இல்லாததை எல்லாம் கற்பிதம் பண்ணிக் கொண்டு திரிந்த போதிலும்,

"நான்" என்பது அகங்காரத்தின் கூப்பாடு அல்ல; உனக்குள்ளே இருக்கிற தெய்வீகமே, உள்ளொளியே உண்மையான நான் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறாய்.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

உனது திருவடிகளையே அடைக்கலமாகப் பற்றிக் கொள்வது முழுமையாகிற வரம் அருள்வாய். கரணங்கள், மனம், ஜீவன் இவை அனைத்தையும் முழுமையாக உன்னிடத்தில் சமர்ப்பிப்பதற்குத் தகுதியும், சக்தியும் அருள்வாய்.

ஒவ்வொரு தருணத்திலும் நீ எனக்களித்திருக்கிற அருளை மறவாமல், நன்றியோடு ஏற்றுக் கொள்கிற பக்குவத்தை அருள்வாய் தாயே!

*quoted text thankfully excerpted from and acknowledged”

“Commentaries on The Mother's Ministry” by Shri M P Pandit, Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?…


பெப்ருவரி பிறந்தவுடனேயே, இனம் புரியாத ஒரு பரபரபப்பும், எதிர்பார்ப்பும் தொடங்கி விடுகிறது.

சிறுவயதில் தீபாவளி எப்பொழுது வரும் என்று பட்டாசு வெடிக்கும் கனவுகளோடு காத்திருப்பதைப் போல, பிறந்த நாள் எப்பொழுது வரும், புது ஆடைகள், பரிசுகள் வாழ்த்துக்கள் என்கிற கனவுகளோடு காத்திருப்பதைப் போல, ஸ்ரீ அரவிந்த அன்னை அவதரித்த பெப்ருவரி மாதம் பிறந்தவுடனேயே, ஸ்ரீஅன்னையின் பிறந்த நாளுக்காக, ஸ்ரீ அன்னையின் ஆசீர்வாதச் செய்திக்காக காத்திருப்பது, இப்போதெல்லாம் ஒரு தவமாகி விட்டது.

கொடுப்பினை உள்ளவர்கள் புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்று, வரிசையில் காத்திருந்து, கூட்டுத் தியானத்திலும், பின்னர் ஸ்ரீ அன்னையின் அறைக்குச் சென்று மானசீகமாக, ஸ்ரீ அன்னையிடம் வாழ்த்துச் செய்தியைப் பிரசாதமாகப் பெறும் பேற்றினைப் பெறுகிறார்கள்.

புதுவை செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள தியான மையத்திற்கோ, தங்கள் இல்லத்திலோ, ஸ்ரீ அரவிந்த அன்னையை அவருடைய உருவப் படத்தை வைத்து வணங்கி, அதே அருளை, சந்தோஷத்தை அடைகிறார்கள்.

நாம் மதித்து, வணங்கும் பெரியோர்களை, மகான்களை, அவர்களை மலர் தூவி வணங்குவதோடு மட்டும்,நம்முடைய பொறுப்பும் கடமையும் முடிந்து விடுவதில்லை.அவர்களுக்குச் செய்கிற உண்மையான மரியாதை, வழிபாடு என்பது, அவர்கள் எந்த செய்தியைச் சொல்வதற்காக இந்த பூமிக்கு வந்தார்களோ, அதன்படி நடந்து காட்டுவதில் தான் இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் மேற்கொண்ட முயற்சியினால், மாதவத்தால், ஐம்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், அருட்பெரும் ஜோதியாக, அதிமானசப் பொன்னொளி இந்த மண்ணில் இறங்கியதும் இதே பெப்ருவரி மாதத்தில் தான்.

அவர்கள் தங்களுடைய தவநிலையில் கண்ட, ஸ்ருஷ்டியில் மனிதனுக்கு அடுத்த பரிணாமத் தோற்றம் முழுமையாக வெளிப்பட, உண்மையோடு ஒருங்கிணைந்து அன்னையின் குழந்தைகளாகத் தங்களைக் கருதும் ஒவ்வொருவரும் செயலில் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.

எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?
ஸ்ரீ அரவிந்தர் "அன்னை" என்ற தலைப்பில், ஒரு சாதகருக்கு எழுதிய கடிதங்களில், மூன்றாவது கடிதத்தில் இதைப் பற்றி விளக்குகிறார்.

“To sit down in inert passivity and say, "If I am to have faith I shall have it, the Divine will give it to me", is an attitude of laziness, of unconsciousness and almost of bad-will.

For the inner flame to burn, one must feed it; one must watch over the fire, throw into it the fuel of all the errors one wants to get rid of, all that delays the progress, all that darkens the path.

If one doesn't feed the fire, it smoulders under the ashes of one's unconsciousness and inertia, and then, not years but lives, centuries will pass before one reaches the goal.

One must watch over one's faith as one watches over the birth of something infinitely precious, and protect it very carefully from everything that can impair it.

In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer.

The Mother

Collected Works Vol.9 pp352

நமக்குள்ளே இருக்கிற உள்ளொளியைக் காண வேண்டும் என்கிற வேட்கைத் தீ அணைந்து விடாமல், ஆர்வத்தால் கொழுந்து விட்டெரியச் செய்ய வேண்டும்,"எல்லாம் தானாகவே நடக்கும்" என்கிற சோம்பேறித்தனமான மனோபாவத்தை விட்டொழித்து,

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!

முதலாழ்வார்களில் முதல்வராகக் கொண்டாடப் படும் பொய்கை ஆழ்வார் சொல்கிற இந்தப் பாசுரம் வழியை அழகாகச் சொல்கிறது.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

அதையொட்டி விளைந்த, முதலாழ்வார்களில் இரண்டாமவர், பூதத்தாழ்வார் சொல்லும் இந்தத் தமிழ்ப் பாசுரம் அடுத்த அடியைச் சொல்கிறது.

முதல் பாசுரம் புற ஒழுக்கத்தால் தூய்மை பேண, தெய்வீகம் தானே இறங்கி வர வழி கிடைக்கும் என்பதைச் சொல்கிறது. இரண்டாம் பாசுரமோ, அக ஒழுக்கத்தால், தெய்வீக அன்பு மலர்ந்து நெய் விளக்கேற்றி ஞானச் சுடரைப் பரந்தாமனுக்கு ஏற்றுகிறது.

அறியாமையும், இருளும் கூடின தொடக்கத்தில், பூரணமான நம்பிக்கையே தெய்வீக சக்தியின் நேரடி வடிவமாக, அறியாமையையும் இருளையும் எதிர்த்து வெல்லும் துணையாக நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

உனது ஒளியினால் அனைத்தையும் நிறைவு செய்வாய். உனது ஒளியின் கீழ வர முரண்டு பிடிக்கும், பழக்கங்களின் அடிமையாகவே இருக்க முயலும் பகுதிகளையும், நீ அறிய சமர்ப்பிக்கிறேன்.

நான் செய்கிறேன், எனது விருப்பப்படி, என்கிற கீழ்நிலையிலிருந்து விடுபட வரம் அருள்வாய்.

எனது விருப்பப்படியல்ல, உனது சித்தத்தின்படியே எல்லாம் நடந்தேறட்டும்

என்பது உள்ளார்ந்த பிரார்த்தனையாக இருக்க வரம் அருள்வாய்.

ஒளியை நோக்கி உயருகிற திருவுரு மாற்றத்திற்குத் தகுதி உள்ளவனாகச் செய்வாய் தாயே! எல்லா நிலைகளிலும், உனது பிரியத்திற்குத் தகுதியானவனாக, உனது குழந்தையாக இருக்கும் பேற்றினை வரமாக அருள்வாய்..

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி,சத்யமயி பரமே!

தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்கள் என்றும் !



தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா!
நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே.

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் அருளிய இந்தப் பாசுரம் மனித இயல்பிலுள்ள பலவீனங்களை நோயாகப் பட்டியலிட்டு திருவேங்கடவா, உன்னைக் காணும் ஆசையினால் வந்தேன், நாயேனையும் ஆட்கொண்டருளுவாய் என்று இறைவனைப் பற்றிக்கொள்ளும் பாங்குடன் மிக அழகாகச் சொல்கிறது.

சத்ப்ரேம் என்கிற அடியவருடன் ஸ்ரீ அரவிந்த அன்னை நிகழ்த்திய உரையாடல்களில் 1961 ஆம் வருடம் பெப்ரவரி ஏழாம் தேதியிட்ட பதிவில் இந்த விஷயத்தை ஸ்ரீ அரவிந்த அன்னை விளக்கமாகக் குறிப்பிடுகிறார். என்ன செய்ய வேண்டும் என்று ஸ்ரீ அன்னையிடம் ஆலோசனை கேட்டு கடிதம் எழுதியிருந்த அடியவர் ஒருவருக்கு மறுமொழியாகச் சொன்னதைப் படிக்கச் சொல்வதிலிருந்து இந்த உரையாடல் தொடங்குகிறது.

"என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறாய்.

அதை விட எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்; எனென்றால் வாழ்க்கையில் சூழ்நிலைகளும், செயல்களும் அவ்வளவு முக்கியமானது அல்ல. அவற்றை நாம் எந்த மனப் பாங்கோடு நாம் எதிர்கொள்கிறோம் என்பதே முக்கியம்.

இதிலிருந்து தான் தொடங்குகிறது.....

மனித சுபாவத்தில், உடலைப் பெரிதாகக் கருதும் போது, நோவு சாத்திக் கொள்ளும். இதயத்தில், உணர்வுகளைக் கூர்ந்து நோக்கும் போது மகிழ்ச்சியற்ற தன்மை தோற்றும்.மனதைக் கவனிக்கும் போது குழப்பம் தான் மிஞ்சும்.

இதிலிருந்து மீள்வதற்கு இரண்டு வழிகள் தானுள்ளன.

ஒன்று மிகக் கடுமையானது. தொடர்ச்சியாகக் கடுந்தவம் செய்வது, இது மிக வலிமை உள்ள, ஏற்கெனெவே இந்தப் பாதைக்கென்று விதிக்கப்பட்ட வெகு சிலரால் தான் முடியும்..

இன்னொன்று, தன்னைப் பற்றியே சிந்திப்பதிலிருந்து விடுபடுவதற்கு அல்லது மாற்றாக வேறொன்றைத் தேடிக் கொள்வது. இந்த வகையில் ஏராளமானவை இருந்தாலும், அதிகம் பேர் தேர்ந்தெடுப்பது திருமணம் தான்; எனென்றால் அது தான் மிக எளிதாகக் கிடைக்கிற மாற்று. யாரோ ஒருவரை நேசிப்பது, பிள்ளை, குட்டிகளை நேசிப்பது,என்பது உன்னை மும்முரமாக இருக்கச் செய்வதற்கும், உன்னை மறந்து போவதற்கும் ஒரு சாதனமாக இருக்கிறது. ஆனால் இந்த வழி மிக அரிதாகவே வெற்றியடைகிறது ஏனென்றால் அன்பு என்பது மிகச் சாதாரணமாகக் காணக் கிடைப்பதில்லை.”

இந்த உரையாடலை முழுவதும் படிக்க

இந்த அன்பு, நேசம், காதல் என்றெல்லாம் சொல்லப் படுவது தான் என்ன?

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:

"At first, one loves, when one is loved.

Next, one loves spontaneously, but one wants to be loved in return!

Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!

And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!”


1966 ஏப்ரல் 15 ஆம் தேதியன்று ஸ்ரீ அன்னை அருளியது.

இந்த அன்பு என்பது என்ன, எங்கிருந்து தொடங்குகிறது?

“Not for the sake of the husband does the husband become dear, O Maitreyi; the husband becomes dear for the sake of the Self. It is not because of the wife that she is held dear; it is for the sake of the Self. The son is held dear, not for the sake of the son, but for the sake of the Self. Wealth is dear, cattle are dear, not because of the cattle or wealth, but because of the Self. Spiritual power, military power, are held dear not for their own sakes, but for the sake of the Self. The other worlds are held dear not for their sakes but for the sake of the Self. The gods too are held dear not because they are gods, but because of the Self. The Vedas are dear, all created things are dear, not because of themselves, but because of the Self. Whatever else there be that is held to be dear is so because of the Self. It is this Self that has to be seen, heard about, thought of, meditated upon. The Self being seen, heard of, thought about, meditated upon, all else will be known, O Maitreyi”.

இதைப் பற்றி ஸ்ரீ நளினி காந்த குப்தா ஒரு உபநிஷத் கதையைச் சொல்லி விளக்கி இருப்பதை விரிவாக இங்கே படிக்கலாம்

கடமையைச் செய்! பலன்களை என்னிடம் விட்டு விடு!




வாழ்க்கையில் எவ்வளவோ புதிர்களையும், சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தப் புதிர்கள், சிக்கல்களை மிக எளிதாகக்தீர்த்து விட முடியும் என்பதை அறியாமலேயே, செக்கு மாடுகள் மாதிரி, புதிர்களின் பின்னாலேயே நம்மில் பெரும்பாலானோர் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்திருப்பதில்லை.

ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் மின்னிதழ் Next Future இதன் 2006 டிசம்பர் இதழில் வெளியாகி இருந்த இந்த சிறுகதை எவ்வளவு பெரிய உண்மைகளை நமக்குச் சொல்கிறது -கொஞ்சம் கதையைப் பார்ப்போமா?
Push for life!

A man was sleeping at night in his cabin when suddenly his room filled with light, and God appeared.
The Lord told the man he had work for him to do, and showed him a large rock in front of his cabin. The Lord explained that the man was to push against the rock with all his might. So, this the man did, day after day.
For many years he toiled from sun up to sun down, his shoulders set squarely against the cold, massive surface of the unmoving rock, pushing with all of his might. Each night the man returned to his cabin sore and worn out, feeling that his whole day had been spent in vain.
Since the man was showing discouragement, the Adversary (Satan) decided to enter the picture by placing thoughts into the weary mind:
"You have been pushing against that rock for a long time, and it hasn't moved."
Thus, he gave the man the impression that the task was impossible and that he was a failure.
These thoughts discouraged and disheartened the man.
Satan said,
"Why kill yourself over this? Just put in your time, giving just the minimum effort; and that will be good enough.
That's what the weary man planned to do, but decided to make it a matter of prayer and to take his troubled thoughts to the Lord.
"Lord," he said, "I have laboured long and hard in your service, putting all my strength to do that which you have asked.
Yet, after all this time, I have not even budged that rock by half a millimeter.What is wrong? Why am I failing?"
The Lord responded compassionately,
"My friend, when I asked you to serve Me and you accepted, I told you that your task was to push against the rock with all of your strength, which you have done."
"Never once did I mention to you that I expected you to move it.
Your task was to push. And now you come to Me with your strength spent, thinking that you have failed.
But, is that really so?"
Through opposition you have grown much, and your abilities now surpass that which you used to have.
Now I, my friend, will move the rock."

At times, when we hear a word from God, we tend to use our own intellect to decipher what He wants, when usually what God wants is just a simple obedience and faith in Him.
By all means, exercise the faith that moves mountains, but know that it is still God who moves mountains.


இங்கே படிக்கலாம்

என் விருப்பப்படி அல்ல, உனது சித்தத்தின் படியே எல்லாம் நடந்தேறட்டும் என்று நம் ஒவ்வொரு அசைவிலும், அணுவிலும் பூரண நம்பிக்கையோடு பிரார்த்தனை எழுமேயானால் நம்முடைய பாரத்தை இறைவனே முழுமையாக ஏற்றுக் கொள்கிறான்.
மிலாரெபா போல, பூர்வ கர்ம வினைகளை முழுமையாகக் கழித்து விட முடியும். புதிய அனுபவத்திற்கு, திருவுரு மாற்றத்திற்குத் தயாராகவும் முடியும்.
"கடமையைச் செய்! பலன்களை என்னிடம் விட்டு விடு!"
கீதையில் கண்ணன் அருளுவதும் இதைத்தானே!

கீழே விழுவது எழுவதற்காகவே!


"என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்"
மிகுந்த பணிவோடு வேண்டிய அந்த இளைஞனைப் பார்த்து விட்டு குரு சொன்னார்.
"அங்கே எதிரே செங்குத்தான குன்று தெரிகிறதல்லவா? அதன் மேல் கருங்கல்லிலான ஒரு வீட்டைக் கட்டி விட்டு வா."
அந்த இளைஞன் ஏன், எதற்கு என்று கேட்கவில்லை. குருவைத் தேடி வந்தோம், குரு சொல்லி விட்டார். காரணங்களைத் தேடுவது என் வேலை இல்லை. காரியத்தைநிறை வேற்றுவ்து தான் என் வேலை, என்ற மனப் பாங்குடன், செங்குத்தான அந்தக் குன்றின் மேல் ஏறினான். கல்லிலான ஒரு வீட்டைக் கட்டி முடித்தான். குருவிடம் திரும்பி வந்து பணிவோடு சொன்ன வேலையை முடித்து விட்டதாகச் சொன்னான்.
குரு குன்றின் மேல் கட்டப் பட்டிருந்த வீட்டைப் பார்த்தார், அந்த இளைஞனிடம் சொன்னார்,"அதை இடித்து விடு. புதிதாக ஒரு வீட்டைக் கட்டி விட்டு வா."
அந்த இளைஞனும், மறுபடி குன்றிலேறி, வீட்டை இடித்து விட்டுப் புதிதாகக் கட்டி முடித்து விட்டு, குருவிடம் வந்து சொல்ல, அவர் மறுபடி வீட்டை இடித்து விட்டு, புதிதாகக் கட்டச் சொல்ல, இப்படி பதினோரு முறை நடந்து முடிந்தது.
"மிலாரெபா, உன்னை சீடனாக ஏற்றுக் கொள்கிறேன்."என்றார் குரு மார்பா.
குரு மார்பாவும், அவரது சீடரான மிலாரெபாவும்.புத்த மதக் கோட்பாடுகளை பரப்பிய இரு பெரும் ஞானச் சுடர்கள்.
பின்னொரு நாளில் குரு மார்பாவிடம், மிலாரெபாவை ஏன் அத்தனை முறை சோதித்தீர்கள் என்றொருவர் கேட்டதற்கு குரு சொன்னாராம்:
"அவனது பழைய கர்மாக்கள் அவ்வளவு உறுதியாக இருந்தன; அதனால் அத்தனை தடவை முயற்சி செய்ய வேண்டி இருந்தது. கொஞ்சம் கூட சந்தேகப் படாமல், உறுதியான விச்வாசத்தோடு நடந்துகொண்ட படியால் தான் பதினோரு தடவையோடு முடிந்தது, இல்லையென்றால் இன்னும் அதிக முயற்சி தேவைப் பட்டிருக்கும்."

"Always circumstasnces come to reveal the hidden weaknesses that have to be overcome"
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையும், நமக்குள்ளிருக்கும் பலவீனத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்பதை அறிவிப்பதற்காகவே என்று ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகளை, பலமுறை படித்திருந்தாலும் அதன் உண்மையான பொருள் உறைப்பதற்கு இவ்வளவு காலம் ஆயிற்று.

Commentaries on the Mother's Ministries என்கிற நூலில் திரு M P பண்டிட் அவர்கள் இந்த கதையை சொல்லி, ஒரு அற்புதமான உண்மையை விளக்குகிறார். ஆன்மீக வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்குப் பல முனைகளிலிருந்தும் கஷ்டங்கள் வரும். நாம் பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருப்பதைப் போல இந்த கஷ்டங்கள் எல்லாம் இறைவன் நம் மீது திணிக்கிற சோதனைகள் அல்ல.

தவழுகிற பருவத்திலிருக்கும் ஒரு குழந்தையை போல, கீழே விழுவதும், முட்டிக் கொள்வதும் கூட எழுந்து நிற்பதற்கான பயிற்சியே; இதை யாராவது தண்டனையாக அல்லது சோதனையாக நினைப்பார்களா? அதைப் போலவே, நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையும், சம்பவமும் நம்மிடமிருக்கும் பலவீனத்தைக் களைந்து, அடுத்த கட்டத்திற்கு உயரச் செய்கிற ஒன்று தான். மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயரத் தேவையான படிநிலைகள் தான் என்பதை ஸ்ரீ பண்டிட்ஜி மிக அழகாக விளக்கி இருப்பதைப் படித்து வந்த போது தான்,வாழ்க்கையை, நாம் ஒவ்வொருவரும் எந்த அளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிய வந்தது.
திரு பண்டிட் அவர்களின் வார்த்தைகளிலேயே பார்ப்போமா?

"Each circumstance, each happening, pinpoints some defect to be made up, some neglected corner to be attended to. Most of the difficulties come up from one's nature; outer factors serve only to draw out elements in oneself which are potentially dangerous unless rectified in time. Apparently they are due to the failings of others. But in truth, they are only occasions for exposing the chinks in one’s armour.

The first reaction that usually comes up in such conditions is to blame those around, to have even grievance against the Guru. The Guru has either not cared to prevent the difficult situation or has imposed it as a test. The moment the seeker allows such a false thought to enter the mind; the doors are opened for more mischief by the hostiles. Every single event, every action lends itself to be seen in this false light and things pile up creating a gulf between him and the consciousness of the Guru. He begins to nurse a hurt feeling which steadily develops into alienation—inner and outer. The culmination arrives when he is precipitated into a revolt against everything, against the Guru, against the Divine. The hostiles have a field day.

Invariably these revolts are suicidal. They do not really affect any one except oneself. One betrays oneself, one’s soul, one’s destiny. All that has been built or being built is opened to destruction. Indeed even then one has a feeling of self justification in not wanting to keep anything received from the Guru or the Divine represented by the Guru. There is anger, there is accusation, there is bravado. All these, however, are steps towards self destruction which are not seen at the moment for what they are, because they are self chosen.

It is cowardice, says the Mother, to thus flee from oneself, one’s high aim. It is a defeat for the soul that has come for a lofty purpose. A soldier of God must stand up with courage and face the situation boldly with faith in the never failing help of the Divine and with a readiness to recognize the offender in one’s own nature. None who has done so is known to have failed. Those who have revolted with short sight have invariably regretted their defiant error some time or other during their life time.

But it is usually a missed bus.

Acknowledging with gratitude, Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry. Material excerpted from "Commentaries on the Mother's Ministry"
by Shri M P Pandit.