நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்!





அன்னையிடத்தில் ஒருவர் திருவுருமாற்றம் [Transformation] பற்றி அறிய விரும்பினார். ஸ்ரீ அரவிந்த அன்னை அவருக்குச் சொன்னார்: "அது மிகவும் சுலபம். நீ இப்போது அப்படி இருக்கிறாயோ அதற்கு நேர் எதிரிடையாக ஆவது தான்." அன்னையின் பதில் கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? கொஞ்சம் ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.

"If you look at yourself carefully, you will see that one always carries in oneself the opposite of the virtue one has to realise (I use "virtue" in its widest and highest sense). You have a special aim, a special mission, a special realisation which is your very own, each one individually, and you carry in yourself all the obstacles necessary to make your realisation perfect. Always you will see that within you the shadow and the light are equal: you have an ability, you have also the negation of this ability. But if you discover a very black hole, a thick shadow, be sure there is somewhere in you a great light. It is up to you to know how to use the one to realise the other.

This is a fact very little spoken about, but one of capital importance. And if you observe carefully you will see that it is always thus with everyone. This leads us to statements which are paradoxical but absolutely true; for instance, that the greatest thief can be the most honest man (this is not to encourage you to steal, of course!) and the greatest liar can be the most truthful person. So, do not despair if you find in yourself the greatest weakness, for perhaps it is the sign of the greatest divine strength.

Do not say, "I am like that, I can't be otherwise." It is not true. You are "like that" because, precisely, you ought to be the opposite. And all your difficulties are there just so that you may learn to transform them into the truth they are hiding.

Once you have understood this, many worries come to an end and you are very happy, very happy. If one finds one has very black holes, one says, "This shows I can rise very high", if the abyss is very deep, "I can climb very high."


- The Mother
Col. Works Vol. 4: pp 117

திருமங்கை மன்னனின் கதை நமக்குத் தெரியும். வீரத்தினால் சோழ மன்னனின் அபிமானத்திற்குப் பாத்திரமாகி, திருமங்கை என்ற குறுநிலத்திற்கு மன்னனாக முடிசூடியவன், ஒரு பெண்ணின் கண்ணழகுக்குத் தோற்றுப் போனான். திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண் விதித்த ஒரே ஒரு நிபந்தனை, தினசரி ஆயிரம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ததீயாராதனை கைங்கர்யம் செய்ய வேண்டும். அவ்வளவுதானே என்று ஒப்புக் கொண்டாயிற்று.

அப்புறம் என்ன, தினசரி ஆயிரம் வைஷ்ணவர்களைத் தேடி, அவர்களை அமுது செய்ய அழைப்பதே முழுநேரத் தொழிலானது. அவர்களை உபசரிக்க தேவைப் படும் பொருளைத் தேடுவது, உபதொழிலானது. வழிப்பறி செய்கிற ஆளாக மாற நேர்ந்தது. இப்படி வழிப்பறி செய்வதும், திருமாலடியார்களைத் தேடி உபசரிப்பதும் குறைவற நடந்த பொழுது, இவனிடம் தன்னைப் பறிகொடுப்பதற்காகவே, பெருமாள் அழகியமணவாளனாகத் தன் பிராட்டியுடன் புது மாப்பிள்ளைக் கோலத்தில் வந்தானாம். வந்தவன் அழகன், கலியன் என்று அழைக்கப் பட்ட திருமங்கை மன்னனுக்கு அதைப் பற்றி கவலை இல்லை, இருக்கும் பொருளை எல்லாம் கொடு என்று வாள் முனையில் மிரட்ட, பயந்தவன்போல் பெருமாளும் தன்ஆபரணங்களை எல்லாம் கழட்டிக் கொடுத்தானாம்.

கையிலிருந்த தங்கக் கங்கணத்தைக் கழட்ட வரவில்லை என்று மறுகி நிற்க கலியன் தானே கழட்டுகிறேன் என்று முனைய, முடியவில்லை. "என்ன மந்திரம் போட்டாயடா, சொல்" என்று வாள் முனையில் மிரட்டக் கலியனுக்குப் பயந்தவன் போலே, பெருமாள், இங்கே வா காதோடு ரகசியமாகச் சொல்கிறேன் என்று, எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தானாம்.

வீரனாக இருந்து மன்னனாகி, மங்கை சொல் காப்பதற்குக் கள்வன் ஆனான். களவு செய்தவனிடம் கடவுளே வந்தான் தன்னையே கொடுத்தான் என்பதும், கள்வன் இங்கே மாறிப் போனான்; திருட்டுக் கொடுத்தவனிடமே தன்னை இழந்து நின்றான் என்பது வெகு ஸ்வாரஸ்யமான விஷயம்.

இங்கே நன்மை, தீமை, பாவம் புண்ணியம், சாது முரடு என்பதெல்லாம் விஷயமே இல்லை. ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்குத் தகுந்த மாதிரியே, சுகம் துக்கம், விரக்தி, இப்படிப் பலதரப்பட்ட அனுபவங்கள் தரப் பட்டிருக்கின்றன, என்பதைத் தான், திருமங்கை ஆழ்வாரது கதையும், ஸ்ரீ அரவிந்த அன்னை அமுத மொழிகளும் சொல்லும் ஒரே விஷயம்!

குற்றம் செய்வது எனக்கியல்பே அதைக்
குணமாய்க் கொள்வது உனக்கியல்பே

என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். குணம், குறை என்று பேதப் படுவது கீழ்நிலையில் தான். புண்ணிய-பாவங்கள், சுவர்க்கம்-நரகம், தண்டனை-பரிசு என்ற முறையில் இறைவன் நம்மை மதிப்பிடுவதில்லை. இங்கே பாவத்தின் சம்பளம் மரணம் என்று தவறுதலாகக் கருதப் படுவதும் இல்லை.

ஒவ்வொருவருக்கும், அவரவர் தன்மைக்கேற்ப, அனுபவங்கள், சூழ்நிலைகளை இறைவன் உருவாக்கித் தருகிறான். இங்கே நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தடையும், கஷ்டமும், துயரமும், அவற்றை நாம் எதிர்கொள்வதில், அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையைக் கண்டுகொள்வதற்காக, திருவுரு மாற்றம் பெறுவதற்காகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.

"நான் இப்படி இருக்கிறேனே" என்றோ "என்னால் வேறுவிதமாக இருக்க முடியாதென்றோ" சொல்லாதே. அப்படி நினைப்பதில் உண்மையில்லை. நீ இப்போதிருக்கும் நிலைமை, நீ அதற்கு நேரெதிரான நிலைக்கு வர வேண்டும் என்பதற்காகவே. நீ எதிர் கொள்ளும் கஷ்டங்கள் எல்லாம் கூட, அவை மறைத்து வைத்திருக்கும் உண்மையைக் கண்டறிந்து, மாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத தான் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை!

திருமங்கை ஆழ்வார் பெற்ற அந்தத் திருவுரு மாற்றம் எப்படிப் பட்டது என்பதை அவரது வாய் மொழியிலேயே அனுபவிப்போம்!

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
நாராயணாவென்னும்நாமம்.

-பெரிய திருமொழி

1 comment:

  1. இறைவனின் பார்வையில் மனிதன் மனதில் இருக்கும் சிந்தனை எந்த அளவிற்கு தன்னலமற்றது என்பது ஒன்றே முக்கியமானது.

    //..that the greatest thief can be the most honest man //

    அன்னையின் அமுத வாக்கை வெளிப்படுத்தும் விதமாக திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றை குறிப்பிட்டிருப்பது வெகு பொருத்தம். நன்றி

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!