திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போனவன்....!

கென்னெடி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற விழாவில்.. ஜாக்கி கென்னெடியுடன் பேசிக்கொண்டிருக்கும், கவிஞர் ஃபிராஸ்ட்

திருவிழாக்
கூட்டத்தில் வேடிக்கை பார்க்கிற ஆர்வத்தில், பராக்குப் பார்த்துக் கொண்டு திருவிழாவையே மறந்து போய் விடுவது போலத் தான் என்நிலைமையும் ஆகிப் போனது. திருவிழாக் கூட்டத்தில் பலதும் கலந்திருக்கும், அவைகளில் கவனம் வைத்தால் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன பிள்ளை மாதிரித் தான் ஆகிப் போக வேண்டிவரும் என்பது தெரிந்தும், இந்த மாதத்தில் பெரும் பகுதிப்பதிவுகள், பராக்குப் பார்க்கிற பதிவுகளாகவே ஆனது.

இந்த மாதம் முதல் பதிவே "கேள்வி பிறந்தது அன்று" என்று புள்ளிராஜா வங்கியைத் தொட்டு, புள்ளிவிவரம் பற்றிப் பேசியதாலோ என்னவோ, புள்ளி விவரம் சொல்வதென்ன என்பதைப் பராக்குப் பார்க்கிற புத்தி வந்து ஒட்டிக் கொண்டது!

அப்புறம் என்ன, சர்க்கஸ் கோமாளி இரண்டு கைகளாலும் வரிசையாகப் பந்துகளைக் கீழே விழாமல் போட்டு விளையாடும் விளையாட்டு மாதிரி ஆகிப் போனதை, தொடர்ந்து இந்தப் பக்கங்களுக்கு வருகிற ஒன்றிரண்டு நண்பர்கள் அறிவார்கள்.

இப்போதைக்கு இது போதும்னு, தெளிவு வந்தப்பறமும், முட்டிக்கிறதுக்கு எதுக்காக போதி மரத்தைத் தேடணும்?

அப்புறம் என்ன, ட்ராக் மாறிப் போனதைச் சரி செய்ய வேண்டியது தானே?

தெய்வம் என்றால் அது தெய்வம் என்ற இரண்டாவது பதிவிலேயே ஒரு கருத்து, அதன் தாக்கங்கள், அப்புறம் விளைவு இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்ததை, இப்போது எனக்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"இது அனைத்துமே புரிந்து கொள்ளாமையினால் முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கும் பிரச்சனைகள். இதை களைவதற்கே 'முழுமைநோக்கு'. தருக்கத்தின் தேவையும் இதற்கே. வகைப்படுத்துதலும் இதற்கே. இன்று பொருளியலில் இருந்து கலைஇலக்கியம் வரை இருக்கும் மனக்காழ்ப்புக்களுக்கு புரிந்துகொள்ளாமையே முக்கிய காரணம்."

இதை எழுதியது அரவிந்த் (என்கிற பராகா) திரு அருள்செல்வன் கந்தசுவாமியுடைய பதிவில் எழுதியிருந்த பின்னூட்டத்தின் ஒரு பகுதி.
ரிச்சர்ட் டாகின்சைப் பற்றி அவர் எழுதிய புத்தகத்தைப் பற்றி ஒரு விமரிசனப் பார்வையை எழுதிக் கொண்டிருந்த தொடரில், மேற்கோளாகக் காண்பித்து, 'அங்கே ஒரு செழுமையான விவாதம் நடந்திருக்கிறது, இப்படித் தொடர்ந்து சிந்திக்கும் போதுதான் Thesis->Anti-thesis-->Synthesis என்பதாக, பாலின் சாரமாக வெண்ணெயை கடைந்தெடுக்கிற மாதிரி, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள முடியும்' என்பதையும் அந்தப் பதிவைச் சுட்டி எழுதியிருந்தேன்.

பாடங்களில் படித்தது தான், இல்லையென்றால் யார் வந்து கம்பனையும் ஷெல்லியையும், கீட்ஸ், ஃபிராஸ்ட், ஷேக்ஸ்பியர் போன்ற ஆங்கிலக் கவிஞர்களைத் தேடிப் படித்திருக்கப் போகிறார்கள்? அப்படி படித்த ஒரு ஆங்கிலக் கவிதை, ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் ஃபார்வர்ட் மெயிலில் நிறைய ரவுண்டுவரும், இப்போதும் வந்துகொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை, ராபெர்ட் லீ ஃபிராஸ்ட் 1916 இல் எழுதிய கவிதையை R Y தேஷ் பாண்டே அவர்களின் வலைப் பக்கங்களில், இன்றைக்கு மறுபடி படித்தேன்.

Two roads diverged in a yellow wood,

And sorry I could not travel both

And be one traveler, long I stood

And looked down one as far as I could

To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,

And having perhaps the better claim,

Because it was grassy and wanted wear;

Though as for that the passing there

Had worn them really about the same,

And both that morning equally lay

In leaves no step had trodden black.

Oh, I kept the first for another day!

Yet knowing how way leads on to way,

I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh

Somewhere ages and ages hence:

Two roads diverged in a wood, and I—

I took the one less traveled by,

And that has made all the difference.

ராபர்ட் லீ பிராஸ்ட், 1916

http://www.youtube.com/watch?v=SnWU29o2xwA&NR=1

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்துபோனவன்....! நல்லவேளை, திருவிழாஇன்னமும் முடிந்துவிடவில்லை!


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!