இன்னும் கொஞ்சம் சிரிக்க! கூடவே கொதிக்க....!

அதென்னமோ தெரியலீங்க! 

கொஞ்சம் விவகாரமான பதிவு இருந்தாத் தான் மொத்தமா வந்து படிப்போம்னுட்டு எல்லா வாசகப் பெருமக்களும் கங்கணம் கட்டித் திரியற மாதிரித் தான், ஒரு அம்மணி குடிச்சுட்டு ப்ளாட்டாக் கிடந்தபோது, ஒரு நாய் வந்து நம்ம உலக மகா டாக்டர் மாதிரி ரசிச்சு நிதானமா பிரெஞ்சு கிஸ் அடிச்ச பதிவைத் தான் ரொம்பப் பேரு, ரொம்ப நேரம் வந்து பாத்த மாதிரித் தகவல் சொல்லுதுங்க!

முத்தம்னாலே ஒவ்வொருவருக்கும் கற்பனை சும்மாப் பிச்சுக் கிட்டுப் போகுமில்லையா!

இங்க பாருங்க!


சாங் சியாங் சிங் என்ற சீனக் கலைஞர் பீங்கானில் வடிவமைத்த காப்பி-தேநீர் முத்தம்!

காப்பியும் டீயும் கலந்தாக் கண்றாவியா இல்ல இருக்கும் என்று சொல்பவர்களுக்கு- உங்களுக்கு ரசனையே இல்லை! அம்புட்டுத்தேன்!!

முத்தம் கொடுக்கிறதே ஒரு அறிவியல் கூறாம்! அதுக்கு ஒரு காலரி வேறு! உங்க கிட்டே சுவாரசியமான படம், அல்லது கலைப் படைப்பு இருந்தா அனுப்புங்கன்னு கேக்கறாங்க!

******

அம்மிணிங்க இருக்கட்டும், நம்ம  அய்யாக்கமாருங்க என்ன செய்வாங்கன்னு எல்லோருக்குமே தெரியும்! 

டாஸ்மாக் வாசலில் இருந்து வீடு வந்து சேர்ற வரை என்னென்ன அலப்பறை எல்லாம் செய்வாங்கன்னு தெரியும்! 

தத்துவம் வரும், கவிதை வரும், மூக்கில் குத்தும் விழும்! அனுதாபப் பதிவுகள் வரும்! இது இது இதைத்தானே எதிர்பார்த்துக் காத்துக் கிட்டே இருந்தேன்னுட்டு சும்மாப் பின்னூட்டங்கள் பிச்சுக் கிட்டுக்கிளம்பும்! 

கொஞ்சம் ஜீரோ டிகிரிக்குப் போனாக்க, என் நாய்க்குத் தச்சி மம்மு ஒத்துக்காதே, என்கிட்டே காசு எட்டுப் பைசாத் தானே இருக்குன்னெல்லாம் அலம்பும். 

ஆனாக்க இந்த அய்யா மாதிரி, ஒருத்தருமே செஞ்சிருக்க முடியாதுங்கோ!

கீழே உள்ள சுட்டியில் பார்க்கலாம்! கோப்புப் கொஞ்சம் பெரிது!

கையில பீர் பாட்டில் இருந்தாக்கப் பன்னி மேல கூட சவாரி செய்யலாம்னு இதைப் பாத்தப்புறம் தானே தெரிஞ்சது!
பீருக்கே இந்தப்பாடுன்னா ரெண்டு ஷாட் டகீலாவுக்கு....?

******

ஐ பாட் மார்க்கெட்டுக்கு இன்னமும் வரவில்லை! அதற்குள், அது இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என்று ஏகப்பட்ட பதிவுகள், எதிர்ப்புக்கள்! தங்களுடைய தயாரிப்பை  வெறுப்பவர்களாலேயே  அதிகம் விளம்பரப் படுத்தப் படுகிற ஒரே நிறுவனம் ஆப்பிளாகத் தான் இருக்கும்! 

டிசைன் ஆப்பிளின் தனி ஸ்பெஷாலிடி என்றால், இந்த எதிர்ப்பு விளம்பரங்கள் ஆப்பிளின் கூடுதல்பலம்!  


3 comments:

  1. நடத்துங்க .. நாராயண நாராயண.

    ReplyDelete
  2. கௌதமன் சார்!

    டொயோடா, மேலாண்மை என்று பதிவு எழுதினால் வரமாட்டேங்கறீங்க. கரெக்டா இந்த மாதிரி சில்மிஷத்துக்கேல்லாம் ஆஜராயிட்டு, நாராயணனைக் கூப்பிட்டு என்ன பண்ணறது?!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!