இப்போது நமக்குத் தேவை, ஒரு நல்ல தலைமை! நேர்மையும் தெளிவான பார்வையும்!




இந்திய வரைபடத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், சுற்றிலும் இந்தியாவைத் தங்கள் எதிரியாகவே கருதும் நாடுகளால் சூழப் பட்டிருப்பதைக் காண முடியும்

பாகிஸ்தான்வங்காள தேசம்பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர்ஆப்கானிஸ்தான்,மியான்மார் என்று தற்போது அழைக்கப் படும் பர்மாஇலங்கை,நேபாளம்இந்த நாடுகள் அனைத்துமே தோற்றுப் போன அரசு அமைப்புக்கள்அல்லது ரவுடி அரசு அமைப்புக்களாக (Rogue States) இருப்பதைப் பார்க்க முடியும்

இயல்பாகவே இந்தியாவோடு விரோதம் பாராட்டி வரும் இந்த நாடுகளில்திட்டமிட்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான சதிகளைபாகிஸ்தானும்,சீனாவும் தூண்டிவிட்டுக் கொண்டு இருப்பதைசெய்தித் தாட்களை வழக்கமாகப் படிக்கும் ஒரு சிறுவன் கூட சொல்லிவிட முடியும்.

ஆனால், ஒரு சிறுவனுக்குத் தெரிகிற அளவு கூட நமது அரசியல் வாதிகளுக்கு இவை புரிவதில்லை. அவர்களுக்குத் தங்கள் சொந்தக் கல்லாவைப் பெருக்கிக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. 

அதிகாரிகளுக்கோ, அமைச்சர்களுக்குக் காசுபார்த்துக் கொடுக்கும் சாக்கில், தங்களுடைய பைகளையும் நிரப்பிக் கொள்ளவே நேரம் போதவில்லை. இந்தியக் குடிமகனுக்கோ, எதை எடுத்தாலும் அரசு அல்லது ஒரு தலைவன் தான் வந்து செய்ய வேண்டும்! தானே தனக்காகச் செய்து கொள்கிற சாமர்த்தியம் இன்னமும் வராத நிலையில் தான் சராசரி இந்தியக் குடிமகன் இருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது.

அற்பப்புழு மீதுள்ள ஆசையால் தூண்டிலில் சிக்கிக் கொள்கிற மீன் மாதிரி, இலவசங்களைக் காட்டி ஏமாற்றுகிற தலைவர்களை இந்தியக் குடிமகன்கள் நம்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அந்த மோசடிக் காரர்களை யாரோ ஒரு ஹீரோ அல்லது வேறொரு தலைவர் வந்து தான் தட்டிக் கேட்கவேண்டும், தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற மாதிரி, பொழுது தவறாமல் மானாட, மயிலாட, சினிமாக் காரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு மிச்சமிருப்பதையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

அறுபது வருடங்களுக்கு முன்னால்விடுதலை பெற்ற இந்த நாடுகள்பிரதேச ஆதிக்கப் போட்டியில் எவ்வளவு மோசமான எதிரிகளாக மாறிப் போயின என்பதையும்ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது தான்எவ்வளவு ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம் என்பது புரியும்

பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தை விட வேண்டிய நிர்பந்தம் வந்தபோதுஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு குட்டையைக் குழப்ப முடியுமோ அந்த அளவுக்குக் குழப்பி விட்டுஇருக்கிறவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று குள்ளநரித் தனமாக வெளியேறியது என்பதையும்

இரண்டு உலகப் போர்கள்,அதன் பின்னால்ஆங்கிலேயர்களுடைய மவுசு காலிப் பெருங்காய டப்பா என்ற அளவுக்கே சுருங்கிப்போன நிலையில்புதிய வில்லனாக அமெரிக்கா சர்வ தேச நிகழ்வு ஒவ்வொன்றிலும் நாட்டாமை செய்ய ஆரம்பித்ததையும் சேர்த்துப் பார்க்கத் தெரிந்தால்நம்முடைய நாடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிற சவால்களைப் புரிந்து கொள்ள முடியும்.

எதிரிகள் என்று சொல்லும் போதுவெளியே இருக்கும் எதிரிகள்நமக்குள்ளேயே இருந்து கொண்டு அற்பத்தனமான காரணங்களுக்காக தேசத்தைத் துண்டாட நினைக்கும் எதிரிகள் என்று பிரித்துப் பார்க்க வேண்டும்

இங்கே எழும் கலகக் குரல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வெளி எதிரியின் தூண்டுதல்பங்கு,பயிற்சிபண உதவி இப்படி நிறைய இருக்கிறது 

ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம்பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுச் சொல்கிற முகமாகத் தான்சீனப் பெருமிதம் வயது அறுபது என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதினேன்.

மகாத்மா காந்தியைஇங்கே ஒருவர் தீவீரமாக வெறுத்தாலும் சரிஆதரித்தாலும் சரி, காந்திஜி தவிர்க்க முடியாத ஆளுமையாக இந்த தேசத்தின் சமீப கால வரலாறோடு பின்னிப் பிணைந்திருக்கிறார்

காந்தியின் ஆளுமையின் மீது சவாரி செய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால் நேருஅடிப்படையில் நல்ல எண்ணம் உள்ளவராக இருந்தபோதிலும்ஜனநாயகத்தை மதித்து நடந்த போதிலும்அவருடைய சில பலவீனங்கள்தேசத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தின.இன்னமும் சேதங்கள் தொடர்கின்றன.
இது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை

நேருவிடம் இருந்த தனிநபர் ஆளுமைபிறரது எண்ணங்களை வெளிப் படையாகச் சொல்ல முடியாத சூழ்நிலையைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளும்,ஆட்சியிலும் ஏற்படுத்தியதுகாந்திஜியின் மீது இருந்த அபிமானத்தால் நேருவோடு முரண் பட்டவர்கள், காந்திஜி மனம் புண் பட்டுவிடக் கூடாதே என்று ஒதுங்கிப் போன தருணங்கள்சுதந்திர இந்தியாவின் வரலாற்றில்,மாறாத வடுக்களாக இன்றைக்கும் இருக்கின்றன. 

நல்லதை நினைத்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள்சம்சா அடித்தேஆளுபவரைஅதிகார மையத்தில் இருப்பவரைச் சுற்றியே கும்மியடிக்கும் பேர்வழிகள் காங்கிரசுக்குள் அதிகமாகப் புகுந்து கொண்டார்கள் 

காங்கிரஸ் கட்சியின் வரலாறேஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்!

1937 களில் இந்தப் போக்கிற்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவே முன்னணியில் இருந்து நடத்தியதும், இங்கே நிறையப் பேருக்குத் தெரியாத தியாக வரலாறு! 

காங்கிரசில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரேசுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள்அப்படிப்பட்ட சிலருமே,கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல்வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள்

காங்கிரசின் பழைய வரலாறு, முரண்பாடுகளின் மொத்த உருவம். அத்தனை கோளாறுகளையும் மீறி, காந்தி என்றொரு ஆளுமை, ஜனங்கள் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த விந்தை தான், காங்கிரசை இன்றைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியாகச் சொல்லிப் பெருமிதப் பட்டுக் கொள்ள முடிகிறது. ஆனால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வழிநடத்தும் தலைவர்கள் கிடைத்தார்களா என்று பார்த்தால், காந்தியை மறந்த காங்கிரஸ் ஜீரோவாகி நிற்கிறது.

நேருவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்துஇன்று வரை தீர்வு காணப் படாமல்பெரும் அச்சுறுத்தலாகக் கூட மாறிக் கொண்டு வரும் பிரச்சினைகள்இன்றைய ஆட்சியாளர்களுடைய திறமைக் குறைவுஅலட்சியத்தால் தேசத்திற்கு ஏற்படக் கூடிய சேதம் இவைகளைத் தொட்டும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்ற அக்டோபரில் மூன்று பதிவுகளுமே ஒரு அச்சாரமாக ஆரம்பித்தன.


காந்தி பிறந்த அதே நாளில் தான்முப்பத்தைந்து வருடம் கழித்து 1904 ஆம் வருடம்  அக்டோபர் இரண்டாம் தேதிலால் பஹதூர் சாஸ்திரியும் பிறந்தார்நேருவின் மறைவுக்குப் பின்னால்அடுத்த பிரதமராகப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்பதவியில் இருந்த காலம் சிறிதே என்றாலும் கூடநேருவின் காலத்தில் இருந்த தரித்திர இமேஜை உடைத்துஇந்தியா அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாத ஒரு நாடுவருங்காலத்தில் வலிமையான நாடாக வளரக்கூடிய நாடு என்பதைச் செயலில் காட்டிய மிக உயர்ந்த மனிதர்

ஜெய் ஜவான்ஜெய் கிசான்! என்ற கோஷம் அவருக்குப் பின் கொஞ்ச காலம் வரை நினைவு இருந்தது

நல்லவர்களைத் தான் நாம் சீக்கிரம் மறந்து விடுவோமே!

நேருவைப்போல மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லைஏழ்மையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் சாஸ்திரிஅரசியலில் கூடநேருவுக்குக் கிட்டத்தட்டமுடிசூடா இளவரசர் அந்தஸ்தை காந்தி வழங்கியிருந்ததுபோலசாஸ்திரிக்கு எவரும் காட்பாதர் ஆக இருந்ததில்லைஆனாலும்நேர்மையான செயல்பாடுகள்திறமை மதிக்கப்பட்ட காலம் அது என்பதனால்விடுதலைப்போராட்டத்தில் மிகவும் கவனிக்கப் பட்ட தலைவராக வளர்வதில் லால் பஹதூர் சாஸ்திரிக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.

இன்றைய நவீன இந்தியாவின் சிற்பியாக நேருவை மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துகிறதே தவிர,லால் பஹதூர் சாஸ்திரி மாதிரித் திறமையான நபர்களின் பங்களிப்பைஅவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றியிருக்கும் பணிகளை வாய் விட்டுக் கூட நாலு வார்த்தை சொல்வதில்லை.




ஆகஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறதுகுறைந்த நேரத்திற்குள்ளாகவேஇந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராகதிட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது

நேருவின் மறைவுக்குப் பின்னால்லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை!

குள்ளமான மனிதர் தான்இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்ததுபுதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார்லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.

1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோதுமேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாகஅமெரிக்க டைம் பத்திரிக்கைஅக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:

”It used to be you could feed the word 'India' into the machine and it would spit out 'Maharajahs, snakes, too many babies, too many cows, spindly-legged Hindus.' Now it's apparent to everybody that India is going to emerge as an Asian power in its own right."

ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்ட டன் அட்டையைத் துப்புவது போல,இந்தியா என்று சொன்ன டனேயேமகாராஜாக்கள்பாம்பாட்டிகள்எக்கச் சக்கமாகக் குழந்தைகள்ஏகப்பட்ட பசுமாடுகள்தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகப் போகிறது என்பது எல்லோருக்குமே இப்போது புரிகிறது.

காந்தியைப் பற்றிஅவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூடஇந்தியா என்றால் பாம்பாட்டிகள்சாமியார்கள்மகாராஜாக்கள்,பிச்சைக்காரர்கள்கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம்நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.

போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்புஅதில் சமாதானத் தூதுவராகக் காட்டிக் கொள்ள நேரு செய்த அசட்டுத்தனம் அப்புறம்,1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள்  (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது.) நேருவின் பலவீனங்களை வைத்தே அப்படி எடைபோட்டார்கள் என்றும் சொல்லலாம். 

அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும்இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ்  ஜார்னல் கட்டுரை ஒன்று!



கோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றிய கண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.

உள்ளது உள்ளபடிஅறிந்துகொள்வதற்கான ஒரு படிக்கட்டு மட்டுமேசாஸ்திரி எனும் அற்புதமான மனிதரை இன்னமும் அறிந்துகொள்ள வேண்டும் !

தொடர்ந்து பேசுவோம்!

**சென்ற வருடம் அக்டோபரில் எழுதியதன் மீள்பதிவு இது. சென்ற பதிவில் தினமணி தலையங்கத்தைத் தொட்டு எழுதிய பதிவில் திரு சக்ரபாணி எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்வதற்காக என்று அல்ல. மிகச் சமீப காலத்திய வரலாற்றையே எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் அல்லது எதுவுமே தெரியாமல் இருக்கிறோம் என்பதற்காக, கொஞ்சம் தேவையான திருத்தங்களுடன்!





எல்லா பொறுப்பும் இறைவனுக்கே......!



தினமணி தலையங்கம் முன்வைக்கும் சில கேள்விகள்!!


'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' என்கிற பழமொழி கச்சிதமாகப் பொருந்துவது பாகிஸ்தானுக்கா இல்லை அமெரிக்காவுக்கா என்று சர்வதேச அளவில் ஒரு பட்டி மன்றமே நடத்தி விவாதித்தாலும்கூட முடிவுகாண முடியாது.

அமெரிக்கா ஒருபுறம் மும்பைத் தாக்குதலிலும், தீவிரவாதிகள் ஊடுருவுவதிலும் பாகிஸ்தானுக்குப் பங்கு இருப்பதாகவும், குற்றவாளிகளை பாகிஸ்தான் அடையாளம் கண்டு கண்டித்தே தீர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இன்னொருபுறத்தில், தனது ஆப்கானிஸ்தான், ராணுவ நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் துணையை நாடுகிறது. அதனால் நட்புப் பாராட்டுகிறது.

பாகிஸ்தானும் சரி, அமெரிக்காவின் நட்பு நாடாக ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளில் முழுமையான ஈடுபாட்டுடன் உதவுவதாகக் கூறிக் கொள்கிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. தலிபான்களுக்கும், தீவிரவாத அமைப்பான அல்-காய்தாவுக்கும் மறைமுகமாக எல்லாவித உதவிகளையும் செய்து வருகிறது.

அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைகிறதோ இல்லையோ, பாகிஸ்தானின் இரட்டை வேடத்தைக் கலைத்துவிட்டிருக்கிறது "விக்கி லீக்ஸ்' இணையதளம் அம்பலப்படுத்தி இருக்கும் ஆவணங்கள். அமெரிக்க சரித்திரத்தில், ஏன் உலக சரித்திரத்தில் என்றுகூட வர்ணிக்கலாம், வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய ராணுவ ரகசியக் குறிப்புகள் அமெரிக்காவின் பலவீனங்களையும், பாகிஸ்தானின் சதிகளையும் அம்பலப்படுத்தி இருக்கின்றன.  


சுமார் 90,000 வெவ்வேறு செய்திக் குறிப்புகளும், ரகசியச் செய்திப் பரிமாற்றங்களும், புலனாய்வுத் துறையின் அவ்வப்போதைய தகவல்களும், ராணுவச் செயல்பாடுகள் பற்றிய ரகசியங்களும் இந்த ஆவணங்களில் காணப்படுகின்றன.

நேட்டோ அமைப்பின் சர்வதேசப் படைகள், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன. அமெரிக்காவின் தலைமையில் நடைபெறும் இந்தத் தீவிரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக எல்லாவித உதவிகளையும் அளிக்க முன்வந்திருப்பதுடன், ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் நேட்டோ படைகள் வந்து இறங்கவும், தளவாடங்களை எடுத்துச் செல்லவும் உதவவும் செய்கிறது.

அமெரிக்காவின் கூட்டாளியாகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ள பாகிஸ்தான் தனது ஒற்றர்களை ரகசிய இடங்களில் தலிபான் தீவிர வாதிகளைச் சந்திக்க அனுமதிப்பது, அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகளை எதிர்கொள்ளத் தீவிரவாத அமைப்புகளைத் தயார் செய்வது, தாக்குதல் நடத்தவும் சதித் திட்டங்களைத் தீட்டுவது என்று மறைமுகமாகச் செயல்படுவது இணையதளத்தின் மூலம் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்க அதிகாரிகள் எந்தவிதத் தீவிரவாதத் தாக்குதல்களுடனும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு இருக்கும் நேரடியான தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிந்ததில்லை. ஆனால், 2008 ஜூலை மாதம், அமெரிக்கப் புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ.வின் துணைத் தலைவர் ஸ்டீபன். ஆர். கேப்ஸ், காபூலிலுள்ள இந்தியத் தூதரகத்தின் மீது நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.யின் நேரடி உதவி இருந்ததை ஆதாரங்களுடன் பாகிஸ்தானிய அதிகாரிகளுக்குக் காட்டி அவர்களது கருத்தைக் கேட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

சர்வதேசத் தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர் என்று அமெரிக்காவால் இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்குப் பரிந்துரைக்கப் பட்டிருப்பவர் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஹமீத் கல் என்பவர். 1987 முதல் 1989 வரை, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வுடன் கரம்கோத்து ஆப்கானிஸ்தானியத் தீவிரவாத அமைப்புகளான அல்-காய்தா மற்றும் தலிபான்களுக்கு சோவியத் படைகளுக்கு எதிராகப் போராடப் பணமும் தளவாடங்களும் அமெரிக்கா தந்து உதவிய காலகட்டத்தில் ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக இருந்தவர்தான் இந்த லெப். ஜெனரல் கல்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் லெப். ஜெனரல் கல் இப்போதும் செயல்பட்டு வருவதை வெளியாகி இருக்கும் இணையதளத் தகவல்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. தான் இப்போது ஓய்வு பெற்று நிம்மதியாக வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் கல் இப்போதும்  தனது ஐ.எஸ்.ஐ. சகாக்களுடன் தொடர்பில் இருப்பதும், ராணுவத் தலைமையிடத்தில் கலந்தாலோசனைக்கு அழைக்கப்படுவதும், பாகிஸ்தானிய ராணுவத்துக்கும், அதிகாரிகளுக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புக்குப் பாலமாகச் செயலாற்றுவதும் இப்போது உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.

ஜெனரல் கல்லுக்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த மனிதராகப் பாகிஸ்தானிய உளவு நிறுவனத்தின் தலைமைப் பதவியை வகித்தவர் ஜெனரல் பர்வீஸ் கயானி. இவர்தான் இப்போதைய பாகிஸ்தானிய ராணுவத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர். முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வீஸ் முஷாரபுக்கு நெருக்கமான இவருக்கு சமீபத்தில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 


ஜெனரல் கயானி ஐ.எஸ்.ஐ. தலைவராக இருந்த 2004 முதல் 2007 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்ததுதான் இப்போது வெளியாகி இருக்கும் ரகசியக் குறிப்புகள். தனது ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பக்கபலமாக நம்பிக் கொண்டிருக்கும் ஜெனரல் பர்வீஸ் கயானி தீவிரவாதிகளுக்கு உதவிய தகவல்கள் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறதே, அமெரிக்கா இப்போது என்ன செய்யப் போகிறது?

பாகிஸ்தானின் நயவஞ்சகமும், நாடகங்களும் அம்பலமாகி இருக்கின்றன. மும்பைத் தாக்குதலிலும், இந்தியாவில் நடந்த வேறு பல தீவிரவாதத் தாக்குதல்களிலும் தொடர்புடைய தீவிரவாதிகள்மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள ஏதாவது நொண்டிச் சாக்கை ஏற்படுத்திக் கொள்ளும் பாகிஸ்தான் வருந்துவதாகவும் தெரியவில்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை. அமெரிக்காவும் "நாயர் பிடித்த புலிவால்' கதையாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவும் வழியில்லாமல், அதனால் பாகிஸ்தானைத் தட்டிக் கேட்கவோ, தட்டி வைக்கவோ துணிவில்லாமல் தவிக்கும் நிலை!

இந்தியாவின் நிலைமைதான் அதைவிடப் பரிதாபம்! தகுந்த ஆதாரங்கள் கிடைத்தும், நியாயம் கேட்கும் தைரியமும், தெம்பும் நமக்கு இல்லை. 


பாகிஸ்தானைச் சகித்துக் கொள்ளவும் முடியாது. பகைத்துக் கொள்ளவும் கூடாது என்கிற தர்ம சங்கடம்.

இந்தியா அமெரிக்காவை நம்புகிறது, பாகிஸ்தானின் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு. அமெரிக்கா பாகிஸ்தானை நம்புகிறது, ஆப்கானிஸ்தானில் தான் நடத்தும் தீவிரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்துக்கு உதவுவதற்கு. பாகிஸ்தான் தீவிர வாதிகளை நம்புகிறது தன்னை நிறுத்திக் கொள்ள. இந்த இடியாப்பச் சிக்கலை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது இணைய தளம் வெளிக்கொணர்ந்திருக்கும் ரகசியக் குறிப்புகள்.

உலகை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
எல்லா பொறுப்பும் இறைவனுக்கே!

தினமணி நாளிதழில் வெளியாகியிருக்கும் இந்தத் தலையங்கத்தைப் படித்த பிறகு, நாட்டு நலனில் அக்கறை உள்ள எவரும் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.

ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் நம்பர் இரண்டு-காங்கிரசோடு, கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிற கட்சிகளும் சேர்ந்து எதற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் ஒரு கோமாளித்தனமான கொள்கையைக் கடைப்பிடித்துக் கொண்டு இருப்பதை, ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் உறுதிபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

பாகிஸ்தானுடன் உருப்படியான பேச்சுவார்த்தை நடத்துகிற சூழ்நிலையோ, பேச்சுவார்த்தையை அர்த்தமுள்ளதாக நடத்த சாமர்த்தியமோ இல்லாத நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள். அவமானப்படுத்தப் பட்டுத் திரும்புகிறார்கள்.

முதுகெலும்பு இல்லாத, தொடை நடுங்கிகளைக் கொண்ட ஒரு அரசியல் கட்சி காங்கிரஸ் என்பது இந்த அறுபத்துமூன்றாண்டுகளில்- இடையில் மிகச் சிறிய காலமே ஆட்சி செய்தாலும், ஆண்மையுடன் ஆண்ட சாஸ்திரி ஆட்சிக்காலம் நீங்கலாக,ஒவ்வொரு நாளுமே நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனையது உயர்வு


ஒரு சமுதாயமாகவோ, இனமாகவோ, தேசமாகவோ உயர்ந்து நிற்க வேண்டுமென்றால், அதற்கு அடிப்படையாக என்ன வேண்டும் என்பதைச் சொல்கிற குறள் இது. காங்கிரஸ் கட்சியை, அதன் கூட்டணிக் கட்சிகளை மட்டுமே குறை சொல்லிப் பயனில்லை. இந்தக் கையாலாகதவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கிறோமே, நாம் எப்படிப்பட்ட கையால் ஆகாதவர்களாக இருக்க வேண்டும்!

"எல்லாப் பொறுப்பு
ம் இறைவனுக்கே" தானா,,,,,,,,,,,,,,?!
 

நமக்கு ஒன்றுமே இல்லையா?

கொஞ்சம் யோசித்துத் தான் பதில் சொல்லுங்களேன்!




வெள்ளிக்கிழமைக் கேள்விகள்..! பீர்பால் கதைகள் 9,10


பீர்பால் கதை ஒன்றைச் சொல்லி நாளாகி விட்டதே, என்ன கதையைச் சொல்லலாம்  என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தான், அக்பரும், பீர்பாலாக மாறுவதற்கு முன்னால் மகேஷ் தாஸ் என்ற சூடிகையான இளைஞனாக இருந்தவனுக்குமிடையிலான  அறிமுகம் எப்படி ஆரம்பித்தது என்பதைச் சொல்லாமலேயே இதுவரை எட்டுக் கதைகளைச் சொல்லியிருக்கிறோமே என்ற நினைப்பு வந்தது.

Flashback முறைதான் நமக்கு மிகவும் பழகிப்போன ஒன்றாயிற்றே!  அதனால் அக்பர் பீர்பால் முதல் சந்திப்பைக் கொஞ்சம் பின்னோக்கிச் சொல்லலாம் என்று நினைத்த போதுதான், இதே கதை பல்வேறு தருணங்களில் பல்வேறு வடிவங்களில் சொல்லப் பட்டிருப்பதையும் கவனித்தேன்!

ரு சமயம் அக்பர் தனது படைவீரர்களுடன் வேட்டையாடப் போனார். போன சமயத்தில், கூடவந்தவர்கள் பலர் வழியைத் தவற விட்டு விட்டார்கள். அக்பரும் ஒன்றிரண்டு வீரர்களும் கொஞ்ச தூரம் பயணம் செய்து பாதைகள் மூன்றாகப் பிரிவதைப் பார்த்தார்கள். அதில் எந்தப்பாதை தான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டிய பாதை என்பது புரியாமல், அங்கே வழியில் கண்ட ஒரு இளைஞனை நிறுத்தி எந்தப்பாதை தில்லிக்குப் போகிறது என்று விசாரித்தார் அக்பர்.

"பாதைகள் எதுவும் டில்லிக்குப் போகாது! அவை அங்கேயே தான் இருக்கும்!" என்றான் அந்த இளைஞன். அக்பருக்கு அவன் தன்னைக் கேலி செய்கிறானா என்ற சந்தேகம் வந்தது, ஆனால் அதை எப்படி வெளிப்படையாகக் கேட்பது? கண்களில் குறும்பு மின்ன, அந்த வாலிபன் மேலும் சொன்னான்."பாதைகள் தான் டில்லிக்குப் போகாது என்று சொன்னேன்! ஆனால் நீங்கள் அதில் பயணம் செய்தால் டில்லிக்குப் போய்ச் சேரலாம்!"

ப்படிச் சொன்னவுடன், அக்பருக்கு உச்சி குளிர்ந்து விட்டது! 

ந்த நாட்களில் கூந்தல் க
றுப்பு, குங்குமம் சிவப்பு என்று ஒரு எம்ஜியார் படப் பாடல் ஒன்று உண்டு அதைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்த ரசிகக் கண்மணிகள் தலைவர்  என்னமா உண்மையை  உடைச்சுச் சொல்கிறார் என்று வியந்த மாதிரி, அக்பரும் குளிர்ந்து போனாராம்! ஆமாம்! பாதை எப்படி டில்லிக்குப் போகும்? நாம் தான் அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற உண்மை பாதுஷாவுக்கும்  உறைத்துப் புளகாங்கிதம் அடைந்ததில், அந்த வாலிபனின் புத்தி சாதுர்யத்தை மெச்சி, அரண்மனைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தாராம்!

ப்புறம் என்ன! மகேஷ் தாஸ், அக்பரின் அரசவையில், பாதுஷாவுக்குப்  பிரியமான சேக்காளியாக பீர் பால் என்ற கௌரவப் பட்டத்தோடு மாறினார்  என்பது தெரிந்தது தானே!

ந்தக்கதையை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில்  வேறு வடிவத்தில் பார்த்திருக்கிறோம்! இந்தக் கதையில் பீர்பால், அந்தக் கதையில் ஒரு துறவி! எப்படியானாலும்,. பீர்பாலோ அல்லது துறவியோ அரசனிடம் இந்த மாதிரிக் கேள்வி கேட்க முடியுமா, தலை தப்புமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.


ந்த ஒரு கேள்விக்கும், இரண்டு நேரெதிர் கோணங்களில் இருந்து பதிலைப் பெற முடியும் என்பதை மட்டுமே கதையில் இருந்து பெற வேண்டிய கருத்தே தவிர, ஆஹா! நல்ல கதை என்றோ, கதை சொல்லியே நம்மை பல நூற்றாண்டுகளாக முட்டாளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கொதிக்கவோ வேண்டாம் என்பது தான் முதலும், முக்கியமானதுமான பாடம்!

தைகள், ஒரு உருவகம், ஒரு உதாரணம் அவ்வளவுதான்!

ண்மைக்குக் கொஞ்சம் இப்போதிருப்பதைவிட இன்னம் அருகாமையில் கொண்டு சேர்ப்பதற்கு உதவியே தவிர, கதையே முழுமையானதும், உண்மையானதும் அல்ல! அப்படி எடுத்துக் கொள்ளும் போது தான் கற்பிக்கப்படாத விபரீதமான அர்த்தங்கள், அனர்த்தங்கள் என்று தொடர்கின்றன.

ப்படி அதற்கு முந்தைய பதிவில் சொன்னதற்கு வந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து அவைகளுக்குப் பதிலாக

/நாத்திகர்கள் கடவுளை வெறுப்பவர்கள் அல்ல, மறுப்பவர்கள்/ *

டைமுறை நாத்திகம் என்பது, எது உண்மை அல்லது பொய் எனத் தேட முற்படுவதே இல்லை. நம்புகிறவனுடைய நம்பிக்கையை கேள்விக்குரியதாக ஆக்கி விடை சொல்ல முற்படுவது அதன் வேலையாகவும் இருந்ததில்லை. வெறும் கேலி, ஏச்சு, விதண்டாவாதம், வெறுப்பை உமிழ்வது, பிணக்குகளை வளர்ப்பதுமே அதன் பணியாக இருக்கிறது.

ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி இறக்குமதி செய்யப் படும் நாத்திகர்களும், உள்ளூர் நாத்திகர்களும் இந்த ஒரு விஷயத்தில் ஒன்று படுகிறார்கள்.

சார்வாகம், சாங்கியம், என்று இறை மறுப்பை முன்னிலைப்படுத்தும் தத்துவ மரபுகளுமே இந்தியத் தத்துவ தரிசனத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. சமணம் பேசும் அறநெறிகள் இந்த வகையில் வருபவையே. சடங்குகளையும், புரோகிதனையும் மறுத்து, அறிவொன்றே தெய்வம் எனக் காண்பித்தவை.

/இது தான் ஆத்திக நாத்திகத்திற்கு நான் கொடுக்கும் சிறிய விளக்கம்/

ரணியனின் கதையிலேயே அது இருக்கிறது. நாராயணன் இல்லை, அவன் பெயரை எவருமே சொல்லக் கூடாது என்கிறான். நாராயணனை மறுக்கிறான். ஆனால், அவனுக்கு, நாராயணன் இருப்பது தெரியும், தன்னுடைய உடன்பிறந்தவனைக் கொன்றான் என்ற ஒரே காரணம், பகையாக, வெறுப்பாக, மறுப்பாகவும் வெளிப்படுகிறது.

த்திக நாத்திகமே வேறு.உதாரணத்திற்கு, இங்கே வலைப்பக்கங்களில் ஒரு பெண்மணி,மிகவும் கற்றவராக, எல்லாம் தெரிந்தவராகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார். கோபிகா கீதம் என்று ஒன்று உண்டு. பக்தியின் உச்ச நிலையை, பரம்பொருளிடம், நாங்கள் மிகச் சிறியவர்கள், எங்களிடம் உன்னுடைய பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டாம் என்று உருகுகிறார்கள். பிரேம பாவம் என்பதன் உச்சம் அது. ஆனால் இந்தப் பெண்மணியோ  சர்வ சாதாரணமாக, அதைப் படித்தால், காணாமல் போன பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கை என அதைப் பற்றி எழுதுகிறார். ராம நாமமே துதி செய் என்று எழுதி விட்டு, பெரியவா சொன்னதுனால நாங்க ஏத்துக்கறோம், என்ற ரீதியில் தொடர்ந்து எழுவதைப் பார்க்கும் போது, ஒரு பக்கம் சிரிப்பாக வருகிறது. இவர்களுக்குப் புரிந்தது அவ்வளவுதான்! கிளிப்பிள்ளைகள் போல இருப்பதே தத்துவத்தைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள் பாருங்கள், இது தான் ஆத்திக நாத்திகம். இவர்களை விட, நேரடியாகவே, கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்.

/கடவுள் இருக்கிறது என்று நம்ப வைப்பது தான் ஆத்திகரின் வேலையா ?/

நிச்சயமாக இல்லை.நம்பிக்கையைச் சிதைப்பது, மதம் மாற்றுவது, இதை உண்மையான ஆத்திகன் செய்வதில்லை. அவசியமும் இல்லை.

ங்கே ஒரு கருத்துப் பரிமாற்றம் மட்டுமே நிகழ்வதாக நான் கருதுகிறேன். என் நிலையை நீங்கள் ஏற்றுக் கொண்டு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, நப்பாசை எதுவுமே இல்லை.உங்களுடைய கருத்தை நீங்கள் முன்வைக்கிற அதே விதத்தில், அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், அது சரிதானா, எனக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பரிமாறிக் கொள்வதைத் தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. "

ன்று சொல்லியிருந்த பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிற வாய்ப்பும் கிடைத்தது.(சிவப்பு எழுத்தில் அடைப்புக்குள் இருப்பதெல்லாம் ஒரு பதிவர் எழுப்பியிருந்த கேள்விகள்) பிழைப்புக்காக நடத்துகிற தொழில்முறை நாத்திகம் தவிர, பொழுது போக்கு நாத்திகமாக இங்கே பலர் பதிவுகளில் பேசிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது.


oooOooo

பீர்பால் அக்பருக்கு அறிமுகமான கதை கொஞ்சம் சுமாராகத் தான் இருக்கிறதென்று வாசகர்கள் கோபப்படுவதற்கு முன்னாலேயே, சமாதானமும் சாந்தியும் நிலவுவதற்காக வழக்கம் போல இன்னொரு பீர்பால் கதை! போனசாக, ஒன்றுக்கு ஒன்று ஃப்ரீ என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

பாதுஷா, பீர்பாலுக்குத் தான் எப்போதும் ஆதரவு தருகிறார்! பாதுஷாவுடைய ஆதர
வு இல்லாவிட்டால், இந்த பீர் பாலை விட நாங்கள் பெரிய புத்திக் கொழுந்துகள் என்பதைக் காட்ட முடியுமாக்கும் என்று பாதுஷா காதில் விழுகிற மாதிரியே, அரசவையில் இருந்த நிறையப் பேர் பொருமிக் கொண்டிருந்தார்கள்.

க்பருக்கும் அப்படித்தான் தோன்றியது! இந்த பீர்பால் ரொம்பவும் தான் துள்ளுகிறான்! பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள்! எப்போது கனிவாக இருப்பார்கள், எப்போது கடித்துக் குதறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பீர் பாலை சிக்க வைப்பது, மற்றவர்கள் முன்னால் முட்டாளாக்கிக் காட்டுவது  என்று பாதுஷா முடிவு செய்துவிட்டு, ஒரு சோதனை வைத்தார்.

ல்லாம் ஒரு செட் அப் தான்! இப்படி ஆளைக் கவிழ்க்கிற கலையில் பாதுஷாக்களுக்கு இருக்கிற தேர்ச்சி, வேறு உருப்படியான விஷயங்களில் இருந்ததில்லை என்பது சரித்திரம். சரித்திரம் என்ற உடனேயே கற்பனை,
புனைவு ,கனவு இவைகளும் வந்து விட வேண்டும் இல்லையா?

ரசவையில் பாதுஷா பம்பீரமாக சபையை இப்படியும் அப்படியுமாகப் பார்க்கிறார்.அல்லது கம்பீரமாகப் பார்ப்பது போல நினைத்துக் கொண்டார்.

"எனக்குப் பிரியமானவர்களே! இன்று அதிகாலை நான் ஒரு கனவு கண்டேன்! எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன்!" என்று சொல்லி விட்டு சபையை அப்படியும் இப்படியும், இப்படியும் அப்படியுமாக மறுபடி பார்த்தார். 


சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! புரிந்து என்ன ஆகப் போகிறது! சபைக்குப் போவதே சம்பாதிப்பதற்குத்தானே!

"இன்று மாலை நீங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போக வேண்டும். அங்கே நீங்கள் என் மீது பிரியத்துடனும், உண்மையாகவும் இருந்தால்  உங்களுக்கு ஒரு கோழி முட்டை கிடைக்கும். அதை இங்கே கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். என் மீது விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்." என்று சொன்னார் அக்பர்.

கோழி முட்டைக்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்! பாதுஷாக்கள் கேள்வி கேட்பவர்களை எப்போதுமே விரும்புவதில்லை.

பையில் இருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போனார்கள். குதித்தார்கள். ஆளுக்கு ஒரு கோழி முட்டையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்தார்கள். கோழி முட்டை கிடைத்ததோடு, கொஞ்சம் காசும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தோடு அரண்மனைக்குப் போனார்கள்.

பீர்பாலும், தலைவிதியே என்று குளத்தில் குதித்தார். குளத்தில் குதித்தால், உண்மையாக இருப்பவருக்குக் கோழிமுட்டை கிடைக்கும் என்று அக்பர் சொன்னபோதே இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவருக்கு கோழி முட்டை கிடைக்கவில்லை. அதனால் என்ன, எப்போதும் கைகொடுக்கிற புத்தி சாமர்த்தியம் இருக்கிறதே, அது போதாதா! இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சேவல் கொக்கரிக்கிற மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டேஅரசவைக்குப் போனார்!

க்பருக்குக் கொஞ்சம் ஆச்சரியம்! முட்டை கிடைக்கவில்லை என்றதும், பீர்பால் சோர்ந்த முகத்துடன், அப்போதாவது கொஞ்சம் பணிவோடு சபைக்கு வருவான் என்று நினைத்தால், சேவல் கொக்கரிக்கிற மாதிரிக் கொக்கரித்துக் கொண்டல்லவா வருகிறான்! என்ன ஆயிற்று இவனுக்கு?

"பீர்பால்! சேவல் மாதிரிக் குரல் எழுப்புவதை நிறுத்து!"

"அப்படியே ஆகட்டும் ஹூசூர்!" என்று பணிவுடன் சொன்னார் பீர்பால்!

"எங்கே உன் கைகளில் முட்டையை காணோம்?" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர்தானே! இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் காலில் விழுந்து கெஞ்சப் போகிறான் என்ற நினைப்பே பாதுஷாவுக்கு பாரசீகத்து மதுவைக் குடித்த போதை மாதிரி சுகமாக இருந்தது.

"நான் சேவல் ஹூசூர்! என்னிடம் எப்படி முட்டை இருக்கும்?"

"முட்டையைப் பற்றிக் கேட்டால் நீ சேவலை பற்றி எதற்குச் சொல்கிறாய்?" பாதுஷாவிற்குக் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. பீர்பாலை ஜெயிக்கவே முடியாதோ?

"ஹூசூர்! இங்கே இருப்பவர்கள் அனைவருமே பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் தான்! ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா? அதற்கு சேவல் துணை வேண்டாமா? நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும்?" என்றார் பீர்பால்.

ங்களை பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் என்று பீர்பால் சொன்னதிலேயே குளிர்ந்து போன சபையோர்கள், தாங்கள் பெட்டைகளாக்கப் பட்டதைக் கூட மறந்து வாரே வா என்று கரகோஷம் எழுப்பினார்கள்.

பாதுஷாவுக்கு வேறு வழி இருக்கவில்லை!

கெஞ்சினால் மிஞ்சுவன், மிஞ்சினால் கெஞ்சுவன் என்று பிற்காலத்தில் குடிலன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு இரண்டும் கெட்ட தன்மையை மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தில் பெ. சுந்தரம் பிள்ளை என்பவர் எழுதி வைக்கப் போகிறார்   என்பது அன்றைக்கு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

ன்னுடைய தோல்வியை மறைத்துக் கொண்டு பீர்பாலைப் புகழ்ந்து பரிசுகள் கொடுத்து அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டார் டில்லிப் பாதுஷா!

வேறென்ன செய்ய முடியும்!

 


 

தேவை! மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, மாற்றுச் சிந்தனையும் கூட....!


மாற்று மருத்துவம் என்று  சென்ற பதிவில் ஒரு சிந்தனைக்காகப் பேச ஆரம்பித்தபோது--

முதலில், நோயின் தன்மையைச் சரியாகக் கண்டறிகிற மருத்துவரின் தொழில் ஞானம். இது அலோபதி மட்டுமல்ல, எல்லா மருத்துவ முறைக்கும் பொருந்தும். டயக்னைஸ் செய்ய வேண்டிய மருத்துவர், ஸ்கேன், பரிசோதனை முடிவுகளை மட்டுமே வைத்து மருந்துகளை பரிந்துரை செய்கிற அவலம் இங்கிருக்கிறதா இல்லையா?

அடுத்து, பரிந்துரைக்கும் மருந்து என்னென்ன விரும்பத்தகாத பக்க விளைவுகளைக் கொண்டு வரும் என்பதிலும் தேர்ச்சி, அதற்குத் தகுந்த மாதிரி மருந்தின் அளவு உட்கொள்ளவேண்டிய காலம் இவைகளைப் பற்றியும் மருத்துவர்களில் எத்தனை பேருக்குத் தேர்ச்சி இருக்கிறது? கொசு அடிக்க பீரங்கியைப் பயன்படுத்துகிற மாதிரி, ஓவர்டோஸ் பரிந்துரைக்காத மருத்துவர்கள் எத்தனை பேர்?

எல்லாவற்றுக்கும் மேலாக மருந்தின் விலை! கலப்படம், போலி, காலாவதியாகிப்போன மருந்தா  இல்லையா என்பது, இப்படி நிறையக், கேள்விகளுக்கு அலோபதி மருத்துவம் இந்தியச் சூழ்நிலைகளில் என்ன சொல்கிறது?

இதே கேள்விகளுக்கு மாற்று மருத்துவம் என்ன சொல்கிறது?

கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!


இப்படிக் கேள்வியை முன்வைத்து, ஒரு கருத்துப் பரிமாற்றத்தை வேண்டியிருந்தேன். மாற்று அல்லது மாற்றம் என்றாலே இங்கே நிறையப்பேருக்கு அலெர்ஜியாக இருக்கிறது. செந்தில்பாலன் என்ற வாசகர் வந்து ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறார்.


"மாற்று மருத்துவ முறைகளில் எளிதில் போலிகள் கலந்து விட வாய்ப்பு உண்டு. அவர்கள் தரும் மருந்துகளில் உள்ள கன உலோகங்களால் (heavy metals) கொடுமையான வியாதிகள் வரலாம். மருத்துவரை தேர்வு செய்வதில் எச்சரிக்கை தேவை நண்பர்களே!!!! "


எச்சரிக்கைக்கு நன்றி. ஆனால் இந்த எச்சரிக்கையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதையும் கொஞ்சம் பார்த்து விடலாம்! அவருடைய எச்சரிக்கை, மாற்று மருத்துவத்தை மட்டும்  முழுமையாக நிராகரிப்பதாக இருக்கிறது. மருத்துவரை தேர்வு செய்வதில் எச்சரிக்கை தேவை என்று சொல்கிறவர், அலோபதி மருத்துவத்தையும் உள்ளிட்டு என்று சொல்லியிருந்தால் கொஞ்சம் அர்த்தம் இருந்திருக்கும்.


கடந்த ஒன்றரை வருடங்களாகப் பன்றிக் காய்ச்சல் என்ற விஷக் காய்ச்சல் இதுவரை இந்தியாவில் ஆயிரத்து எழுநூறுக்கும் ஏற்பட்டவர்களைப் பலி கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட புள்ளி விவரம் சொல்கிறது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு காய்ச்சலே எவருக்கும் இல்லை என்று சுகாதாரச் செயலாளர் அறிக்கை விட்டார். ஆனாலும்,ஆய்வு செய்வதற்காகத் திருநெல்வேலிப்பக்கம் நேரடி விசிட் போனதாகக் கூட போன வருடம் செய்திகள் வந்தன. பத்திரிகைகளில் அரசு, முழுப்பக்க விளம்பரங்களைக் கூட வெளியிட்டதாக நினைவு! இப்போது கேரளாவிலும், மஹாராஷ்ட்ராவிலும் பன்றிக் காய்ச்சல் மறுபடி பரவிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.


மத்திய அரசு, மாநில அரசு, பொது மக்களுடைய சுகாதாரத்தில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொண்டன என்பதை இந்தப் பக்கங்களில் போலி மருந்து என்ற சொல்லை வைத்துத் தேடிப்பாருங்கள்! கொஞ்சம் கூடுதல் விவரம் கிடைக்கும்.


இப்போது திரு செந்தில்பாலன் முன்வைத்திருக்கும் ஒரு சந்தகத்திற்கு விடை சொல்கிற மாதிரி, அலோபதி மருத்துவத்தில் மட்டும் என்ன வாழ்கிறது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு செய்தியைப் பார்ப்போமா?



ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா?

"உலகை உலுக்கும் (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித் க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது.

பொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.

ஜெர்மனி அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்து ஆய்வு அமைப்பில் பணியாற்றும் டாக்டர் லுத்விக் இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பி, அதனை மருத்துவர்கள் பயன்படுத்தவேண்டாம், இதில் பிரச்சாரம்தான் அதிகமுள்ளது, பிரச்சாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் விஞ்ஞான சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாதது என்று அதிர்ச்சியூட்டியுள்ளார்.

நேச்சுரல் நியூஸ் இணையத் தள ஆசிரியர் மைக் ஆடம்ஸ் இது குறித்து 10 கேள்விகளை தன் இணையத் தளத்தில் எழுப்பி அதற்கு விமர்சன ரீதியான விடைகளையும் அளித்துள்ளார்.

அவர் அந்த கேள்விகளுக்கு முன் குறிப்பிடுகையில், எந்த ஒரு தடுப்பு மருந்தும், அதன் வினைத்திறன் பற்றிய கட்டுக்கதைகளுடன்தான் வெளிவருகிறது. அதாவது எந்த ஒரு தடுப்பு மருந்தும் சிறப்பாகவே செயல்படும், அதன் வினைத்திறன் பற்றி ஒருவரும் கேள்வி எழுப்பக்கூடாது, அப்படி கேள்வி எழுப்பினால் அந்த விஞ்ஞானியை விஞ்ஞான சமூகம் ஒதுக்கிவிடும் அல்லது அவரை பொதுச் சுகாதாரத்திற்கு எதிரி என்று முத்திரை குத்தும் என்று சாடியுள்ளார்.

அதாவது மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் எப்போதும் விடை தர மறுக்கும் ஒரு 10 கேள்விகளை அவர் எழுப்புகிறார்:

1.
ஃப்ளூவால் பாதிக்கப்படாத ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மீது நடத்தப்படும் 'ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள் எங்கே? அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செயல்திறன் மிக்கவை என்ற ஆய்வுகள் எங்கே?

விடை: இல்லை.

2.
ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான "விஞ்ஞான" ஆய்வுகள் எங்கே?

விடை: குழு அளவில் செய்யும் பரிசோதனை முறை, அதாவது 'கோஹார்ட் ஸ்டடீஸ்' தவிர வேறு இல்லை. இந்தஆய்வுகளை நம்ப முடியாது. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான நேர்மையான எந்த ஒரு சாட்சியமும் இல்லை.

3.
ஃப்ளூ தடுப்பு மருந்தில் சேர்க்கப்படும் துணைப்பொருளான திமிரோசால் மனித உடலுக்கு ஏற்றதுதானா? ஏனெனில் மெதில் மெர்குரி என்று அழைக்கப்படும் இது பாதரசமாகும். பாதரசம் என்பது தீவிரமான நச்சு கனரக உலோகம் என்று கூறப்படும்போது, அதன் பாதுகாப்பு நம்பகத் தன்மையுடையதா?

விடை: இது பாதுகாப்பானது அல்ல. மேலும் தளர்வுறச் செய்யும் நரம்பு நோய்கள் ஏன் தோன்றுகின்றன என்பதையும் இது விளக்குகிறது.

4.
தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட பின்பு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நாளடைவில் நரம்புத் தளர்ச்சியும், மூளை வீக்கமும், வலிப்பும், சில வேளைகளில் மரணமும் ஏற்படுவதாக ஏன் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன?

விடை: ஏனெனில் தடுப்பூசி மருந்துகள் அபாயகரமானவை. தடுப்பு மருந்து தொழில் துறையினர் தொடர்ந்து இது போன்று எழும் மருத்துவ எச்சரிக்கைகளை கண்டு கொள்வதில்லை. தற்செயல் விளைவு என்று இந்த அறிக்கைகள் கூறினாலும், ஏன் தற்செயல்?

5.
ஃப்ளூவை திறம்பட தடுக்கும், காலங்காலமாக இருந்து வரும் வைட்டமின் 'டி' ஏன் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுவதில்லை? வைட்டமின் "டி" அனைத்து தடுப்பு மருந்துகளை விடவும் உடலில் இயல்பான எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகிறது.

விடை: ஏனெனில் வைட்டமின் டி-யிற்கு காப்புரிமை கிடையாது. அதனை ஒரு மருந்தாக விற்கமுடியாது. ஏனெனில் நாமே அதனை நமக்கு உருவாக்கிக் கொள்ளலாம். வைட்டமின் டி தேவையா அதற்கு மருத்துவரின் உதவி கூட தேவையில்லை. சூரிய ஒளியில் ஏகப்பட்ட வைட்டமின் டி உள்ளது.

6.
ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டால்தான் மனிதர்கள் உயிர் வாழ முடியுமெனில், பூமியில் மனித குல வரலாற்றில் எப்படி ஃப்ளூ காய்ச்சலை மீறி வாழ்ந்து வந்துள்ளனர்?

விடை: வைட்டமின் டி உள்ளவரை மனித மரபணு சமிக்ஞை ஏற்கனவே வெளியிலிருந்து வரும் சக்திகளை எதிர்த்துப் போராடுமாறு அமைந்துள்ளது.

7.
ஃப்ளூ தடுப்பு மருந்து கொடுத்தால் ஃப்ளூ தாக்காது என்று கூறப்படுகிறது. இது உண்மையெனில், தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களையே ஃப்ளூ வைரஸ் ஏன் தாக்குகிறது?

விடை: சக்தி வாய்ந்த ஃப்ளூ வைரஸ்களுக்கு தடுப்பு மருந்துகள் பயன் படுவதில்லை. அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் யாருக்கு அது தேவைல்லையோ அவர்கள் உடலில் மட்டுமே வேலை செய்கிறது.

8. 2004
ஆம் ஆண்டு ஃப்ளூ தடுப்பு மருந்துகள் தேவைக்கும் குறைவாக கிடைத்தபோதும், தடுப்பு மருந்து போடப்படும் நபர்களின் எண்ணிக்கை 40% குறைந்த போதும் ஏன் ஃப்ளூ வைரஸ்களால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை?

விடை: சாவு விகிதங்களில் மாற்றமில்லை. தடுப்பு மருந்தை ஒருவருக்கும் கொடுக்காவிட்டாலும் சாவு எண்ணிக்கையில் மாற்றமில்லை. ஏனெனில் ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்வதில்லை.

9.
குளிர் காலங்களில் ஃப்ளூவினால் மரணமடைவோர் விகிதம் 10%ஆக இருக்கும் போது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் சாவு விகிதத்தை 50%ஆக குறைக்கிறது என்ற பிரச்சாரம் ஏன்?

விடை: ஏனெனில் 50 சதவீதம் மரண விகிதத்தை குறைக்கிறது என்பது ஒரு விற்பனை உத்தி மட்டுமே. என் அறையில் 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 50 ஆரோக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் சாக்லேட் கொடுக்கிறோம் என்று வையுங்கள், 50% மக்களுக்கு சாக்லேட் ஆரோக்கியமானது என்று நாம் கூற முடியுமா? இதே தர்க்கம்தான் ஃப்ளூ தடுப்பு மருந்தினால் மரண விகிதம் 50% குறைகிறது என்ற பிரச்சாரத்திலும் உள்ளது.

10.
ஃப்ளூ தடுப்பு மருந்துகள் அபாரமாக வேலை செய்கிறது என்றால் ஏன் மருத்துவ அதிகாரிகள் அதனை முறையான வெளிப்படையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கின்றனர்? அதாவது பிளாசிபோ ஆய்வுக்கு ஏன் உட்படுத்துவதில்லை?

விடை: அவர்கள் பிளாசிபோ ஆய்வு அற ரீதியானது அல்ல என்று கூறினாலும், அதைவிட அறக்கேடானது பக்க விளைவுகளை கடுமையாக ஏற்படுத்தும் தடுப்பு மருந்துகளை உலகம் முழுதும் கோடிக்கணக்கான பேருக்கு கொடுப்பது.

இது போன்ற பதில் கூற முடியாத கேள்விகளை மைக் ஆடம்ஸ் எழுப்ப காரணம் என்ன? என்பதைப் பார்ப்போம்.

தற்போது உலகை உலுக்கி வரும் ஸ்வைன் ஃப்ளூவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளும் அங்கீகரித்து, பல்வேறு கட்டங்களில் அனைவரும் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்படும் 'பேன்டம்ரிக்ஸ்' என்ற கிளாக்சோ நிறுவன மருந்தில் துணை மருந்தாக சேர்க்கப்பட்டுள்ளது 'ஸ்க்வாலீன்' என்ற மருந்தாகும்.

அமெரிக்காவை உலுக்கிய ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பு மருந்திலும் இதே ஸ்க்வாலீன் உள்ளது. முதல் வளைகுடாப்போரின் போது இந்த தடுப்பு மருந்து அமெரிக்க ராணுவத்தினருக்கு போடப்பட்டது. கல்ஃப் வார் சின்ட்ரோம் (Gulf War Syndrome) என்று அழைக்கப்படும் நோய் 6,97,000 அமெரிக்க ராணுவத்தினரில் 25% பேரை தாக்கியது. இந்த தடுப்பு மருந்தால் விளைந்த விளைவுதான் இந்த நோய்.

பேராசிரியர் ஆர்.எஃப். கேரி என்பவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், ஸ்க்வாலினுக்கும் கல்ஃப் வார் சின்ட்ரோமுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். இதனால் 2004ஆம் ஆண்டு ஃபெடரல் நீதிமன்றம் இதனை ராணுவத்தினருக்கு பயன்படுத்த தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது
.
ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தின் அபாயம் என்ன? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள டாக்டர் ஆண்டர்ஸ் ப்ரூன் லார்சென் என்பவர் பேன்டெம்ரிக்சில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்க்வாலீன் என்ற இந்த துணை மருந்துப் பொருள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு வளைகுடாப்போருக்கு முன்பும் பின்பும் போடப்பட்ட ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி மருந்தில் ஸ்க்வாலீனின் அளவு 100 கோடி மைக்ரோகிராம் நீர் அளவில் 34.2 மைக்ரோ கிராம் என்று இருந்தது
.

ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தான பேன்டெம்ரிக்சில் 0.5 மில்லிக்கு 10.68 மில்லி கிராம் ஸ்க்வாலீன் சேர்க்கப்பட்டுள்ளது. இது கல்ஃப் வார் சின்ட்ரோம் என்ற நோயை உருவாக்கிய ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தில் உள்ள ஸ்க்வாலீன் அளவைக்காட்டிலும் 10 லட்சம் மடங்கு அதிகம் என்று கூறுகிறார்
.

இந்த துணை மருந்து பொருள் அதாவது தடுப்பு மருந்திற்கு உடலின் வினையாற்றும் திறனை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுவதாகக் கூறும் இந்த ஸ்க்வாலீன், பல்வேறு நரம்பு மண்டல நோய்களையும், உடலின் நோய் தடுப்புச் சக்தி தனது திசுக்களையும், உறுப்புகளையுமே தாக்கும் லூபஸ் என்ற நோயையும், முடக்கு வாதத்தையும் உருவாக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வந்துள்ளன.

14 கினியா பன்றிகளிடத்தில் ஸ்க்வாலீனை கொடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் ஒரு பன்றிதான் உயிரோடு இருந்தது. இதே ஆய்வை மீண்டும் செய்து பார்த்தபோதும் முடிவுகளில் மாற்றம் எதுவும் இல்லை.

அப்படி என்ன இந்த ஸ்க்வாலீன் என்று பார்த்தால் அது ஒரு வகை எண்ணெய் அவ்வளவே. ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தை தயாரித்த தி சிரான் என்ற இந்த நிறுவனம் எம்.எஃப்- 59 என்ற துணை மருந்துப் பொருளை தயாரிக்கிறது. இதில் ஸ்க்வாலீனும், கிளைக்கோ புரோட்டீன் - 120, அதாவது ஜி.பி.- 120 என்ற துணைப்பொருளும் அடங்கும்.

தற்போது புழக்கத்தில் உள்ள வாக்சைன்களில் - அதாவது தடுப்பூசிகளில் - இந்த எம்.எஃப்.- 59 உள்ளது. டெடனஸ், டிஃப்தீரியா தடுப்பூசியிலும் இது உள்ளது. இதன் மோசமான பக்க விளைவுகள் பற்றி காலங்காலமாக ஆய்வாளர்கள் எழுதி வருகின்றனர்.

கிளைக்கோ புரோட்டீனை மூளையில் உள்ள மைக்ரோக்ளியா செல்கள் உள் வாங்கும் போது தீவிரமான அழற்சியை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கிளைக்கோ புரோட்டீனின் ஒரு பகுதிதான் ஹெச்..வி. வைரஸிலிருந்து தனியாக பிரிக்கப்படுகிறது. இதனால்தான் எய்ட்ஸ் நோயாளிகள் பலருக்கு மனச்சிதைவு (Dementia) நோய் ஏற்படுகிறது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட சில மாதங்களில் தெரிய வருவதல்ல. இதன் நோய்க்கூறுகள் வெளிப்பட, அதாவது வெளிப் படையாக தெரிய சில ஆண்டுகளும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
.

சில ஆண்டுகளுக்கு முன் பிரபலப்படுத்தப்பட்ட ஹெபடைடிஸ் - பி நோய் தடுப்பு மருந்திலும் நாம் முன்பு குறிப்பிட்ட திமெரசால் என்ற துணை மருந்துப் பொருள் சேர்க்கப்படுகிறது.

ஃப்ளூ காய்ச்சல், அது எந்த வகையானாலும் சரி, எச்1 என்1 ஆக இருந்தாலும் சரி, அதற்கான தடுப்பூசி மருந்துகளில், அதாவது வாக்சைன்களில் அலுமினியம், திமெரசால் அல்லது ஸ்க்வாலீன் என்ற மேற்கூறிய அபாய விளைவுகளை ஏற்படுத்தும் துணைப்பொருள் சேர்க்கப்படுகிறது
.

இந்த ஒவ்வொரு துணை மருந்து பொருளும், நரம்புச் சிதைவு அல்லது நரம்பு தளர்வு நோயையும், வளர்ச்சிக் குறைபாடுகளும், தண்டு வட அழற்சியும் (Spinal Chord Inflammation), பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் கண் நோயும், இன்னும் பிற நோய்களும் உருவாவதாக ஆய்வுகள் வந்த வண்ணம்தான் உள்ளன.

இந்த மோசமான விளைவுகள் பிரச்சாரம் மூலம் ஒன்றுமில்லாமல் அடிக்கப்படுகின்றன. எந்த ஒரு நாட்டிற்கும் தடுப்பு மருந்து கொள்கைதான் முக்கியமாகப்படுகிறதே தவிர அதன் மோசமான பின் விளைவுகள் முக்கியமாகப் படுவதில்லை.

பேன்டெம்ரிக்ஸ் என்ற கிளாக்சோ ஸ்மித்க்ளைன் நிறுவனத்தின் ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து ஜெர்மன் பத்திரிக்கையான் டை ஸ்ப்லீகல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

டாக்டர் லுத்விக் என்ற ஜெர்மன் மருத்துவ அதிகாரி இந்த மருந்தின் மீது கடுமையான விமர்சனங்களை தொடுத்துள்ளார்.

வாக்சைன்கள் மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும்தான் ஆதாயமானது, ஏனெனில் மேலும் நோயாளிகளை அது உருவாக்குகிறது என்று எங்கோ படித்ததன் அர்த்தம் இப்போது நமக்கு புரிகிறது.

ஆனால் ஃப்ளூ வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள எளிய வழி உள்ளது. அதாவது வைட்டமின் டி- 3 தான் அது என்று ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. நல்ல உணவு, தேர்ந்தெடுக்கப்பட்ட நோய் தடுப்பு மருந்துகள் அல்லது உணவு முறை போன்ற வாழ்க்கை முறையே ஃப்ளூ வைரஸிலிருந்து நம்மை காக்கும்.

வைட்டமின் - டி என்ற நோய்த்தடுப்பு சக்தி

நேச்சுரல் நியூஸ் இணையத் தளத்தில் மைக் ஆடம்ஸ் சென்ற வருடம் அக்டோபர் 13ஆம் தேதி எழுதிய கட்டுரைக்கு '6 கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி கூறுகிறது வைட்டமின் டி உங்களை ஸ்வைன் ஃப்ளூவிலிருந்து காக்கிறது என்று' என்று தலைப்பே இட்டுள்ளார்
!

இந்தக் கட்டுரையை மைக் ஆடம்ஸ் எழுதுவதற்கு 2 மாதங்கள் முன்னதாக ஆரிஜன் ஸ்டேட் பல்கலை கழக ஆய்வு ஒன்று வைட்டமின் டி-யின் நோய் தடுப்பு அரிய குணங்களை கண்டு பிடித்துள்ளனர்.

அதாவது 6 கோடி ஆண்டுகளான பரிணாம வளர்ச்சியில் இன்றும் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்களில் இந்த வைட்டமின் டி இயல்பாகவே உள்ளது. ஆனால் வைட்டமின் டி அளவை நாம் கச்சிதமாக பராமரிக்க வேண்டும். சூரிய ஒளியிலும், சில உணவுகளிலும் இந்த சத்து நிறைய உள்ளது.

வைட்டமின் டி வேலை செய்யும் விதம் நம் உடலின் இயல்பான தற்காப்பு சக்தி எந்த ஒரு புற நோய் சக்திகளுக்கும் எதிராக அளவுக்கு அதிகமான வேலையைச் செய்வதில்லை. மாறாக உள்ளிருக்கும் தடுப்பு சக்தியை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வைக்கிறது. அதிகமாக எதிர்வினை ற்றினால்தான் அழற்சி என்ற 'இன்ஃப்ளமேஷன்' ஏற்படுகிறது.

எனவே வைட்டமின் டி - குறைபாடு இருப்பவர்களுக்கு எளிதில் குளிர் காலத்தில் அல்லது மழைக் காலத்தில் சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படுகிறது. துவக்க நோய்க்கிருமியை தடுப்பதோடு, அதிகமாக எதிர் வினையாற்றி அதனால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதிலிருந்தும் தடுக்கிறது. 1918ஆம் ஆண்டு பரவிய ஃப்ளூ நோயில் இறந்தவர்கள் இந்த அதிகப்படியான எதிர்வினையால் ஏற்பட்ட பேக்டீரியல் நிமோனியா என்ற நுரையீரல் அழற்சி நோயாலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் வைட்டமின் டி சத்தை தக்கவைத்துக் கொள்ளும் உணவு முறை, அல்லது மருந்துகள் என்ன என்பதை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நல்லது." 

இந்த செய்தியைப் படித்துப்பார்த்தால்,செந்தில் பாலன் பயமுறுத்துகிற கன ரக உலோகங்கள் மட்டுமில்லை, பாதரசம் மாதிரிக் கொடுமையான நஞ்சும், அலுமினியம் மாதிரி லேசான உலோகங்களுமே தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிற செய்தியும் இருக்கிறது. பக்க விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நமக்குத் தேவைப் படுவது மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, சரியான மாற்றுச் சிந்தனையும் கூடத்தான்!

இல்லையா?!
இந்தக் கட்டுரை சென்ற வருடம் அக்டோபரில் வெளியானது.  வெப்துனியா தளத்துக்கு நன்றி

உங்கள் கருத்துக்களையும்,கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!