இப்போது நமக்குத் தேவை, ஒரு நல்ல தலைமை! நேர்மையும் தெளிவான பார்வையும்!




இந்திய வரைபடத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், சுற்றிலும் இந்தியாவைத் தங்கள் எதிரியாகவே கருதும் நாடுகளால் சூழப் பட்டிருப்பதைக் காண முடியும்

பாகிஸ்தான்வங்காள தேசம்பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர்ஆப்கானிஸ்தான்,மியான்மார் என்று தற்போது அழைக்கப் படும் பர்மாஇலங்கை,நேபாளம்இந்த நாடுகள் அனைத்துமே தோற்றுப் போன அரசு அமைப்புக்கள்அல்லது ரவுடி அரசு அமைப்புக்களாக (Rogue States) இருப்பதைப் பார்க்க முடியும்

இயல்பாகவே இந்தியாவோடு விரோதம் பாராட்டி வரும் இந்த நாடுகளில்திட்டமிட்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான சதிகளைபாகிஸ்தானும்,சீனாவும் தூண்டிவிட்டுக் கொண்டு இருப்பதைசெய்தித் தாட்களை வழக்கமாகப் படிக்கும் ஒரு சிறுவன் கூட சொல்லிவிட முடியும்.

ஆனால், ஒரு சிறுவனுக்குத் தெரிகிற அளவு கூட நமது அரசியல் வாதிகளுக்கு இவை புரிவதில்லை. அவர்களுக்குத் தங்கள் சொந்தக் கல்லாவைப் பெருக்கிக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. 

அதிகாரிகளுக்கோ, அமைச்சர்களுக்குக் காசுபார்த்துக் கொடுக்கும் சாக்கில், தங்களுடைய பைகளையும் நிரப்பிக் கொள்ளவே நேரம் போதவில்லை. இந்தியக் குடிமகனுக்கோ, எதை எடுத்தாலும் அரசு அல்லது ஒரு தலைவன் தான் வந்து செய்ய வேண்டும்! தானே தனக்காகச் செய்து கொள்கிற சாமர்த்தியம் இன்னமும் வராத நிலையில் தான் சராசரி இந்தியக் குடிமகன் இருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது.

அற்பப்புழு மீதுள்ள ஆசையால் தூண்டிலில் சிக்கிக் கொள்கிற மீன் மாதிரி, இலவசங்களைக் காட்டி ஏமாற்றுகிற தலைவர்களை இந்தியக் குடிமகன்கள் நம்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அந்த மோசடிக் காரர்களை யாரோ ஒரு ஹீரோ அல்லது வேறொரு தலைவர் வந்து தான் தட்டிக் கேட்கவேண்டும், தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற மாதிரி, பொழுது தவறாமல் மானாட, மயிலாட, சினிமாக் காரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு மிச்சமிருப்பதையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

அறுபது வருடங்களுக்கு முன்னால்விடுதலை பெற்ற இந்த நாடுகள்பிரதேச ஆதிக்கப் போட்டியில் எவ்வளவு மோசமான எதிரிகளாக மாறிப் போயின என்பதையும்ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது தான்எவ்வளவு ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம் என்பது புரியும்

பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தை விட வேண்டிய நிர்பந்தம் வந்தபோதுஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு குட்டையைக் குழப்ப முடியுமோ அந்த அளவுக்குக் குழப்பி விட்டுஇருக்கிறவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று குள்ளநரித் தனமாக வெளியேறியது என்பதையும்

இரண்டு உலகப் போர்கள்,அதன் பின்னால்ஆங்கிலேயர்களுடைய மவுசு காலிப் பெருங்காய டப்பா என்ற அளவுக்கே சுருங்கிப்போன நிலையில்புதிய வில்லனாக அமெரிக்கா சர்வ தேச நிகழ்வு ஒவ்வொன்றிலும் நாட்டாமை செய்ய ஆரம்பித்ததையும் சேர்த்துப் பார்க்கத் தெரிந்தால்நம்முடைய நாடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிற சவால்களைப் புரிந்து கொள்ள முடியும்.

எதிரிகள் என்று சொல்லும் போதுவெளியே இருக்கும் எதிரிகள்நமக்குள்ளேயே இருந்து கொண்டு அற்பத்தனமான காரணங்களுக்காக தேசத்தைத் துண்டாட நினைக்கும் எதிரிகள் என்று பிரித்துப் பார்க்க வேண்டும்

இங்கே எழும் கலகக் குரல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வெளி எதிரியின் தூண்டுதல்பங்கு,பயிற்சிபண உதவி இப்படி நிறைய இருக்கிறது 

ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம்பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுச் சொல்கிற முகமாகத் தான்சீனப் பெருமிதம் வயது அறுபது என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதினேன்.

மகாத்மா காந்தியைஇங்கே ஒருவர் தீவீரமாக வெறுத்தாலும் சரிஆதரித்தாலும் சரி, காந்திஜி தவிர்க்க முடியாத ஆளுமையாக இந்த தேசத்தின் சமீப கால வரலாறோடு பின்னிப் பிணைந்திருக்கிறார்

காந்தியின் ஆளுமையின் மீது சவாரி செய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால் நேருஅடிப்படையில் நல்ல எண்ணம் உள்ளவராக இருந்தபோதிலும்ஜனநாயகத்தை மதித்து நடந்த போதிலும்அவருடைய சில பலவீனங்கள்தேசத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தின.இன்னமும் சேதங்கள் தொடர்கின்றன.
இது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை

நேருவிடம் இருந்த தனிநபர் ஆளுமைபிறரது எண்ணங்களை வெளிப் படையாகச் சொல்ல முடியாத சூழ்நிலையைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளும்,ஆட்சியிலும் ஏற்படுத்தியதுகாந்திஜியின் மீது இருந்த அபிமானத்தால் நேருவோடு முரண் பட்டவர்கள், காந்திஜி மனம் புண் பட்டுவிடக் கூடாதே என்று ஒதுங்கிப் போன தருணங்கள்சுதந்திர இந்தியாவின் வரலாற்றில்,மாறாத வடுக்களாக இன்றைக்கும் இருக்கின்றன. 

நல்லதை நினைத்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள்சம்சா அடித்தேஆளுபவரைஅதிகார மையத்தில் இருப்பவரைச் சுற்றியே கும்மியடிக்கும் பேர்வழிகள் காங்கிரசுக்குள் அதிகமாகப் புகுந்து கொண்டார்கள் 

காங்கிரஸ் கட்சியின் வரலாறேஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்!

1937 களில் இந்தப் போக்கிற்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவே முன்னணியில் இருந்து நடத்தியதும், இங்கே நிறையப் பேருக்குத் தெரியாத தியாக வரலாறு! 

காங்கிரசில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரேசுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள்அப்படிப்பட்ட சிலருமே,கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல்வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள்

காங்கிரசின் பழைய வரலாறு, முரண்பாடுகளின் மொத்த உருவம். அத்தனை கோளாறுகளையும் மீறி, காந்தி என்றொரு ஆளுமை, ஜனங்கள் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த விந்தை தான், காங்கிரசை இன்றைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியாகச் சொல்லிப் பெருமிதப் பட்டுக் கொள்ள முடிகிறது. ஆனால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வழிநடத்தும் தலைவர்கள் கிடைத்தார்களா என்று பார்த்தால், காந்தியை மறந்த காங்கிரஸ் ஜீரோவாகி நிற்கிறது.

நேருவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்துஇன்று வரை தீர்வு காணப் படாமல்பெரும் அச்சுறுத்தலாகக் கூட மாறிக் கொண்டு வரும் பிரச்சினைகள்இன்றைய ஆட்சியாளர்களுடைய திறமைக் குறைவுஅலட்சியத்தால் தேசத்திற்கு ஏற்படக் கூடிய சேதம் இவைகளைத் தொட்டும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்ற அக்டோபரில் மூன்று பதிவுகளுமே ஒரு அச்சாரமாக ஆரம்பித்தன.


காந்தி பிறந்த அதே நாளில் தான்முப்பத்தைந்து வருடம் கழித்து 1904 ஆம் வருடம்  அக்டோபர் இரண்டாம் தேதிலால் பஹதூர் சாஸ்திரியும் பிறந்தார்நேருவின் மறைவுக்குப் பின்னால்அடுத்த பிரதமராகப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்பதவியில் இருந்த காலம் சிறிதே என்றாலும் கூடநேருவின் காலத்தில் இருந்த தரித்திர இமேஜை உடைத்துஇந்தியா அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாத ஒரு நாடுவருங்காலத்தில் வலிமையான நாடாக வளரக்கூடிய நாடு என்பதைச் செயலில் காட்டிய மிக உயர்ந்த மனிதர்

ஜெய் ஜவான்ஜெய் கிசான்! என்ற கோஷம் அவருக்குப் பின் கொஞ்ச காலம் வரை நினைவு இருந்தது

நல்லவர்களைத் தான் நாம் சீக்கிரம் மறந்து விடுவோமே!

நேருவைப்போல மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லைஏழ்மையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் சாஸ்திரிஅரசியலில் கூடநேருவுக்குக் கிட்டத்தட்டமுடிசூடா இளவரசர் அந்தஸ்தை காந்தி வழங்கியிருந்ததுபோலசாஸ்திரிக்கு எவரும் காட்பாதர் ஆக இருந்ததில்லைஆனாலும்நேர்மையான செயல்பாடுகள்திறமை மதிக்கப்பட்ட காலம் அது என்பதனால்விடுதலைப்போராட்டத்தில் மிகவும் கவனிக்கப் பட்ட தலைவராக வளர்வதில் லால் பஹதூர் சாஸ்திரிக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.

இன்றைய நவீன இந்தியாவின் சிற்பியாக நேருவை மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துகிறதே தவிர,லால் பஹதூர் சாஸ்திரி மாதிரித் திறமையான நபர்களின் பங்களிப்பைஅவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றியிருக்கும் பணிகளை வாய் விட்டுக் கூட நாலு வார்த்தை சொல்வதில்லை.




ஆகஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறதுகுறைந்த நேரத்திற்குள்ளாகவேஇந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராகதிட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது

நேருவின் மறைவுக்குப் பின்னால்லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை!

குள்ளமான மனிதர் தான்இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்ததுபுதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார்லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.

1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோதுமேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாகஅமெரிக்க டைம் பத்திரிக்கைஅக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:

”It used to be you could feed the word 'India' into the machine and it would spit out 'Maharajahs, snakes, too many babies, too many cows, spindly-legged Hindus.' Now it's apparent to everybody that India is going to emerge as an Asian power in its own right."

ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்ட டன் அட்டையைத் துப்புவது போல,இந்தியா என்று சொன்ன டனேயேமகாராஜாக்கள்பாம்பாட்டிகள்எக்கச் சக்கமாகக் குழந்தைகள்ஏகப்பட்ட பசுமாடுகள்தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகப் போகிறது என்பது எல்லோருக்குமே இப்போது புரிகிறது.

காந்தியைப் பற்றிஅவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூடஇந்தியா என்றால் பாம்பாட்டிகள்சாமியார்கள்மகாராஜாக்கள்,பிச்சைக்காரர்கள்கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம்நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.

போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்புஅதில் சமாதானத் தூதுவராகக் காட்டிக் கொள்ள நேரு செய்த அசட்டுத்தனம் அப்புறம்,1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள்  (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது.) நேருவின் பலவீனங்களை வைத்தே அப்படி எடைபோட்டார்கள் என்றும் சொல்லலாம். 

அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும்இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ்  ஜார்னல் கட்டுரை ஒன்று!



கோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றிய கண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.

உள்ளது உள்ளபடிஅறிந்துகொள்வதற்கான ஒரு படிக்கட்டு மட்டுமேசாஸ்திரி எனும் அற்புதமான மனிதரை இன்னமும் அறிந்துகொள்ள வேண்டும் !

தொடர்ந்து பேசுவோம்!

**சென்ற வருடம் அக்டோபரில் எழுதியதன் மீள்பதிவு இது. சென்ற பதிவில் தினமணி தலையங்கத்தைத் தொட்டு எழுதிய பதிவில் திரு சக்ரபாணி எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்வதற்காக என்று அல்ல. மிகச் சமீப காலத்திய வரலாற்றையே எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் அல்லது எதுவுமே தெரியாமல் இருக்கிறோம் என்பதற்காக, கொஞ்சம் தேவையான திருத்தங்களுடன்!





10 comments:

  1. // இந்தியக் குடிமகனுக்கோ, எதை எடுத்தாலும் அரசு அல்லது ஒரு தலைவன் தான் வந்து செய்ய வேண்டும்! தானே தனக்காகச் செய்து கொள்கிற சாமர்த்தியம் இன்னமும் வராத நிலையில் தான் சராசரி இந்தியக் குடிமகன் இருக்கிறான்//
    உண்மை தான் தோழர் !

    // இங்கே எழும் கலகக் குரல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வெளி எதிரியின் தூண்டுதல், பங்கு,பயிற்சி, பண உதவி இப்படி நிறைய இருக்கிறது. //
    label ல் காஷ்மீர் என்று தேடிப்பார்த்தேன் ,ஒன்றும் காண முடியவில்லை ;தனி பதிவொன்று போடுங்களேன் காஷ்மீர் குறித்து ;காஷ்மீர் குறித்தான உங்கள் கருத்துக்களை அறிய ஆர்வமாயிருக்கிறேன்.

    //குள்ளமான மனிதர் தான். இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்தது //
    ஆன்மீகவாதியான ஓஷோ அவர்கள் சாஸ்த்ரி அவர்கள் குறித்து மிக எதிர்மறையாக ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.நீங்களும் அவ்வாறு ஓஷோ கூறியதை படித்திருக்கிறீர்களா? அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?ஆன்மீகவாதியான ஓஷோ ஏன் அவ்வாறு கூற வேண்டும் ?

    ம்ம்ம்....தொடருங்கள் தோழர் ...

    ReplyDelete
  2. ஓஷோ நிறையப்பேரைப் பற்றி எதிர்மறையாக, நைசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறமாதிரித் தன்னுடைய கருத்துக்களைத் தெளித்திருக்கிறார். அமெரிக்க, ஐரோப்பியச் சீடர்களைக் குறிவைத்து, அவர்களுக்கு ஏற்ற மாதிரிப் பேச வேண்டியது அவசியமாக இருந்தது என்ற வகையில் ஓஷோ அப்படிச் சொல்லியிருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    எங்கே, என்ன சொன்னார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமானால் பார்த்துவிட்டு அப்புறம் அதைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது தான் முறையாக இருக்கும்.

    இங்கே இந்தப்பதிவிற்குப் பின்புலமாக, சுமார் எண்ணூறு தொள்ளாயிரம் பக்கங்களில் குறிப்புக்களை சேகரித்து வைத்திருக்கிறேன். அதிரில் அமெரிக்க இதழான டைம் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையும் அடக்கம், அதில் இருந்து ஒரு சிறு பகுதியைக் கூட எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

    சாஸ்திரி பிரதமராக இருந்தபோது இங்கே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவீரமாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. பக்தவத்சலம் முதலமைச்சர். ரேஷன் கடைகளில் காத்துக் கிடப்பதற்கே தமிழ்நாட்டில், ஒரு ஷிப்ட், எட்டுமணிநேரம் அல்லது அதற்கு மேலும் காத்துக் கிடக்க வேண்டியிருந்த நிலை, பிரச்சினையை எவ்வளவு மோசமாக பக்தவத்சலம் தலைமையிலான அரசு கையாண்டது, அதை இங்கே எப்படித் தங்களுக்குச் சாதகமாக வெற்று உரை வீச்சாளர்களாக மட்டுமே இருந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை பகுத்தறிவு நிறுவனங்கள் நடத்தும் பழைய பத்திரிக்கை இதழ்த் தொகுப்புக்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாமே. உணவுப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, வாரம் ஒரு நாள் உபவாசம் இருக்க சாஸ்திரி விடுத்த வேண்டுகோள், இங்கே எவ்வளவு மோசமாகத் திரிக்கப்பட்டது என்பதும் அங்கேயே தெரிந்து விடும்.

    ஆன்மீகவாதியான ஓஷோ என்ன சொன்னார் என்ற விசாரம் எதற்கு? அந்த மனிதரால், இந்திய அரசியலில் ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்த முடிந்திருக்காது.

    ReplyDelete
  3. இந்தப்பதிவின் மையக் கருத்து, இந்த நேரத்தில் இந்த தேசத்துக்குத் தேவைப்படுகிற தலைமைப் பண்பு பற்றியது. பாரதம் என்ற ஒரு மகத்தான தேசத்திற்குத் தலைமை தாங்கத் தகுதியற்றுப் போன ஒரு கட்சி, தலைவர்களைப் பற்றியது.pathiplans@sify.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து, ttplan என்ற பெயரில் இந்தப்பதிவின் உள்ளடக்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது.

    பதிவிற்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைத் தொட்டு, இந்தத் தளத்தை அவருடைய சொந்த காழ்ப்புணர்வை விளம்பரம் செய்து கொள்கிறமாதிரி பின்னூட்டம் இருந்ததால், நிராகரிக்கப்படுகிறது.

    ReplyDelete
  4. We need to measure everything based on outcome/output.

    Comparing with our resources(man, material, land, technology Pakistan is/was nowhere near to us. Still we won the war in the battlefield after so many body counts. That is really shameful. Even though we won the war in the battleground we lost in the diplomacy battle.

    Bottomline: There is/was no planning, competency

    ReplyDelete
  5. திரு.சக்ரபாணி!
    யுத்தத்தில் ஜெயிக்க நவீன ஆயுதங்கள், கூட்டாளிகள் இருந்தால்மட்டுமே போதாது என்பதை 1965 இந்திய-பாக் யுத்தம் நிரூபித்தது. காஷ்மீரை முழுமையாகக் காப்பாற்றி விடும் நோக்கத்துடன் பாகிஸ்தான் சம்ப் பகுதியில் டாங்குகளைக் குவித்து முன்னேறியது. அமெரிக்காவிடமிருந்து நவீன சாபர் ரக விமானங்கள், பாட்டன் டாங்குகள் அது எல்லாம் போக சீனாவும் யுத்தத்தில் குதிப்பதாக வந்த மிரட்டல் வேறு.

    இந்திய ராணுவத்திடம் நவீன ஆயுதங்கள் எதுவும் இல்லை. சர்வதேச ஆதரவும் பெரிதாக இல்லை. ஆனால், சீனப்போரின் பொது சொதப்பிய நேருவைப் போல அல்லாமல், தெளிவான உத்தரவைப் பிறப்பித்து சாஸ்திரி ராணுவத்திற்குப் பக்க பலமாக இருந்தார். விட்டில் பூச்சியை போல இருந்த Gnat ரக விமானங்களைக் கொண்டு, பெரிய மதயானையைப் போல இருந்த அமெரிக்க சாபர் ஜெட் விமானங்களைக் கொளுத்திப் போட்டது இந்திய விமானப்படை என்றால், அரேபிய ஹீரோவாக வர்ணிக்கப்பட்ட ஜெனெரல் பேட்டன் வடிவமைத்த அமெரிக்க பேட்டன் டாங்குகளை, அதன் பலவீனம் என்ன என்பதை நுட்பமாகக் கண்டு, முள்ளு முனை நொறுங்காமல் பேட்டன் டாங்குகளைக் கைப்பற்றியது இந்திய ராணுவம்! கப்பற்படையும் கூட, இந்த யுத்தத்தில் மிகச் சிறந்த பங்கை ஆற்றியது.

    ஆனால், அரசியல் தலைமைப் பொறுப்பில் இருந்த சாஸ்திரியிடம், முடிவெடுக்கும் துணிச்சல் இருந்தது. நேருவிடமோ, அதற்குப் பிறகு வந்தவர்களிடமோ காண முடியாத political will சாஸ்திரியிடம் இருந்ததைச் சொல்வதற்காகத் தான் இந்தப் பதிவே.

    ReplyDelete
  6. //அந்த மனிதரால், இந்திய அரசியலில் ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்த முடிந்திருக்காது.//
    நாமும் தான் பேசுகிறோம் ... நமது பதிவுகள் துரும்பை அல்ல மலைகளை தான் நகர்த்துகின்றன ...அரவிந்தரின் வார்த்தைகள் ஒட்டு மொத்த பால் வீதியையே ... சும்மா தமாஸ் ..நோ டென்ஷன் சகா ...

    அப்புறம் தோழர் ...
    காஷ்மீர் பற்றியும் பிறிதொரு தருணத்தில் தனிப்பதிவு போடுங்கள் ...
    மீண்டும் சந்திப்போம்,வருகிறேன்.

    ReplyDelete
  7. சீனாவிட‌ம் ப‌ரிதாப‌மாக‌த் தோற்று, அந்த‌க் க‌வ‌லையிலேயே
    நேரு உட‌ல் ந‌லிந்து இற‌ந்த‌பின், பொருளாதார‌ம் பின்ன‌டைந்துந்திருந்த‌
    கால‌த்தில்,(வியாழன் இர‌வு ப‌ட்டினி) பாக்கிஸ்தான் வாலை நீட்டிய‌து.
    சோர்விலா சாஸ்திரி,ப‌கை வென்று இந்திய‌தாயின் சுய‌மான‌ம் காத்தா‌ர்.
    ந‌ம‌க்கு குடுப்பினை இல்லை. டாஷ்க‌ண்டில் திடீர் ம‌ர‌ணம் (ம‌ருத்துவ‌ர் அருகில் இல்லை காம‌ர‌ஜ‌ருக்கும் அப்ப‌டியே)
    நேரு இந்திர‌காண்டி கும்ப‌ல் ம‌றுப‌டியும் வ‌ந்து (காம‌ராஜரின் பெரும் த‌வ‌று)சாஸ்திரியை
    ம‌றைத்து விட்ட‌து. பொற்கால‌ம் நினைவில் வ‌ந்தால், ம‌க்க‌ள், நட‌க்கும் காட்டாச்சியை
    எதிர்ப்பார்க‌ளே!! ம‌க்க‌ள் ம‌ற‌தியில் ம‌ந்திரிக‌ள் ராஜாங்க‌ம் ந‌ட‌க்கிற‌து.

    ReplyDelete
  8. வெளிநாட்டு போர்க‌ளை விட‌ உள்நாட்டு போருக்கு தான் இந்தியா அதிக‌ம் ப‌ண‌ம் செல‌விடுவ‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருகின்ற‌தே

    ReplyDelete
  9. வெளிநாட்டு போர்க‌ளை விட‌ உள்நாட்டு போருக்கு தான் இந்தியா அதிக‌ம் ப‌ண‌ம் செல‌விடுவ‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருகின்ற‌தே

    ReplyDelete
  10. உள்நாட்டுக் குழப்பங்களுக்கு ஊழல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமானால், நீங்கள் சொல்வது போல செலவு அதிகமாகத் தான் இருக்கும்!!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!