மானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு! தளபதீக்கு........?

ரைமிங் இருந்தாப் போதாதே! டைமிங் கொஞ்சம் சரியா இல்லையே!
"எனது மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்த வீட்டை எடுத்துள்ளார். அந்த வீட்டில் எனது மகளும், மருமகனும் குடியிருக்கிறார்கள். இதுதவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் உண்மை. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு மிரட்டியோ, அச்சுறுத்தியோ காவல்துறையை பயன்படுத்தி தவறான புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்கள். எப்.ஐ.ஆர். பதிவு செய்தால் கைது செய்ய வேண்டாமா? ஆனால் இதுவரை கைது செய்யவில்லை. என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்பதற்காகத்தான் வந்தேன். அதை கேட்டதும் கூடுதல் டி.ஜி.பி.யால் பதில் சொல்ல முடியவில்லை""

என்னதான் கூட்டத்தோடு இருப்பதால் இப்படி தைரியமாகப் பதில் சொல்வது போல இருந்தாலும் "தளபதீ" ஸ்டாலினுக்குக் கவலைகள் நிறையவே உள்ளூர இருக்கத்தான் செய்கிறதென்பது வெளிப்படை யாகவே தெரிந்தது.மதுரையில் ஆட்டம் போட்ட அஞ்சா நெஞ்சை வெறும் கோழிக் குஞ்சாக ஒரே அமுக்காக அமுக்கி வைத்திருப்பது போலத் தானும் ஆகிவிடுவோமோ, இத்தனை காலமாக அரசியலில் இருந்தும் தந்தைக்கு அப்புறம் அரசியலில் வாரிசாக ஆக முடியாமலேயே போய்விடுமோ என்று ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பது என்னமோ உண்மை.

மானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு! தளபதீக்கு........?
பக்கத்து வீடு... பாய்ந்த வழக்கு!

நில மோசடி வழக்குகளில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பலர் ஜாமீனில்  வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ஒரு அபகரிப்புப் புகார் கிளம்பி இருக்கவே, டென்ஷனில் துடிக்கிறது தி.மு.க.
 கடந்த 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு  ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 65 வயதான சேஷாத்திரி குமார் என்பவர் வந்து ஒரு புகார் கொடுத்தார்.


ந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இதுதான்.''ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள எங்களது குடும்ப இடத்தில் எனது பங்குக்குக் கிடைத்த இரண்டரை கிரவுண்டில் நான் வீடு கட்டி வசித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 8-ஏ, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார்பேட்டை என்ற முகவரியில் உள்ள அந்த வீட்டை தேவி பழனிச்சாமி என்பவருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்று பேசி மாத வாடகைக்கு விட்டேன். இது தவிர மீதி உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் இடத்தை மு.க.ஸ்டாலின் வாங்கி இருந்தார். அந்த இடத்தில் வீடு கட்டி ஸ்டாலின் குடிவந்ததில் இருந்து, எனது வீட்டையும் வாங்கி தனது வீட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். 

அதற்காக என் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை மிரட்டி, காலி செய்ய வைத்தனர். சுப்பா ரெட்டி, ராஜாசங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து, ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு, 5.5 கோடி ரூபாய்க்கு என் வீட்டை நான் விற்றதாக, பத்திரப் பதிவு செய்து கொண்டனர். அந்தத் தொகையை டி.டி-யாகக் கொடுத்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு என் வீட்டுக்கு வந்த ஸ்ரீனிவாசன், ஒரு கோடியே 15 லட்சம் பணம் கொடுத்தார். அந்தப் பணமும் கணக்கில் வராத பணம் என்றும், இதை வெளியில் சொன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் மூலமாக வருமான வரி சோதனை நடத்துவோம் என்றும் மிரட்டினார். அதோடு, எட்டு லட்சம் ரூபாயை தனக்கான கமிஷன் என்றும், அவரே எடுத்துக் கொண்டார். இப்போது அந்த வீடு, மாத வாடகை 20,000 ரூபாய் என்று ஸ்டாலின் மகன் உதயநிதி பெயருக்கு ஒப்பந்தம் செய்யப்​பட்டு, அதில் ஸ்டாலின் மகள் செந்தாமரை குடி இருக்கிறார்.


து தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சிலரிடம் பேசினேன். அந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டதும், என் வீட்டுக்கு வருமான வரி அதிகாரிகளை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் என்​னிடம் வாக்குமூலம் எழுதி வாங்கி உள்ளனர். என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், என் வீட்டுக்கு வந்து கறுப்புப் பணத்தை வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிச் சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பா ரெட்டி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்''  என்று விளக்கி இருக்கிறார் சேஷாத்திரி குமார். 

ந்தப் புகார் குறித்து, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா? என்று விசாரிக்க உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையானஅதிகாரி ஒருவருக்கு தோட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததாம். புகார் கொடுத்து இருந்த சேஷாத்திரி குமாரை தனது அலுவலத்துக்கு வரவழைத்த அந்த உளவு அதிகாரி, குமாரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரித்து இருக்கிறார். அவர் வைத்து இருந்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்து இருக்கிறார். அதன்பிறகுதான்,  1-ம் தேதி காலையில் புகார்தாரர் குமாரை விசாரணைக்கு அழைத்து இருக்கிறது, 

சென்னை மத்தியக் குற்றப் பிரிவு. அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை குமாரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். இதனால், எந்த நேரத்திலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு பல முறை, குமார் கொடுத்து இருந்த ஆவணங்களை ஆராய்ந்தனர். அதன் பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இப்படிப்போகிறது, இன்றைய ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரை!

இந்த நில அபகரிப்பு விஷயமாக ஸ்டாலின் மீது நடவடிக்கை வரலாம் என்று தகவல்கள் ஏற்கெனெவே வெளிவந்ததுதான்! என்ன, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது மட்டும் தான் தாமதம்.அம்மா போலீஸ் இதை எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
அரசு இயந்திரத்தின் ஒரு கணிசமான பகுதி அம்மாவின் கட்டுப் பாட்டில் இல்லை என்பதை தா.கிருஷ்ணன் கொலைவழக்கிலேயே பார்க்க முடிந்தது. அதே போல, அ' னாவின் ஆட்கள் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் உள்ளே போன வேகத்திலேயே வெளியே வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஸ்டாலின் ஏடிஜிபி ராஜேந்திரனிடம் வீராவேசமாக வசனம் பேசிவிட்டு வந்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லைதான்!
தளபதீ கவலைப்பட இதை விட வேறு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன! 

தயாநிதி மாறன் திறந்தவாய் மூடாமல் அப்படி என்னத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்?



கட் அவுட், தாரை தப்பட்டை, வரவேற்பு  எல்லாம் போட்டியில் நானும் இருக்கிறேன் என்று சொல்வதற்காகத்தான்!
இன்னிக்கு, இந்த நிமிடத்தில் மட்டும் மகளே நான் உன்னோடு! என்னால முடிஞ்சது அவ்வளவுதான்!

2 comments:

  1. நேத்தி தான் பூலோகத்துக்கு வந்தேன் (என்ன கருமாந்திர கஞ்சாவோ?!) ! என்ன ஆச்சு இந்த கேஸ் ? ஸ்டாலின் இன்னிக்கி அஸெம்பிளியிலே பேசினது பரோல்ல வந்தா ?

    ஈஸ்வரா! சீக்கிரம் இந்த குடும்பத்த கூண்டுல ஏத்து. சகிக்கல எதுவும்!

    ReplyDelete
  2. கூடவே கூண்டில் அடைக்கப்பட வேண்டியவர்கள் கூட்டணி தர்மத்தோடு ஆட்சி செய்தால், இப்படித்தான் தள்ளிக் கொண்டே போகும்!

    காலம் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி உள்ளது என்பதால்,நம்மால் முடியாததைக் காலம் தான் தீர்க்க வேண்டும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!