இது கடவுள் வரும் நேரம்.......!




நான்கு வாரமாகப் பதிவெழுத, நிறைய விஷயங்கள் இருந்தபோதிலும் ஒரு மாதிரியான அயர்ச்சி, சோர்வினால் பதிவைப் புதுப்பிப்பதில் ஒருவிதமான சோம்பேறித்தனமே மிஞ்சியிருந்தது. புது நண்பர்கள் இந்தப்பக்கங்களுக்கு வந்து போனார்களோ இல்லையோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து சில நண்பர்கள் பழைய பதிவுகளைத் தேடித் படித்து விட்டுப் போனதைப் பார்க்கும்போது, கொஞ்சம் சந்தோஷமும்,நன்றி உணர்வும் எழுகின்றன.

நன்றி நண்பர்களே!

பிப்ரவரி 21! ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள்!

பிப்ரவரி 29! அருட்பெரும் ஜோதி, (அதிமானச ஒளியாக) பூமியில் இறங்கிய தங்கமயமான நாளாக இந்த மாதத்தில் எஞ்சியிருக்கும் பன்னிரண்டு நாட்களில், ஆசிரமத்தில் தரிசன நாட்களாகவும், முயன்று தேடுவோருக்கு அருளை வாரி வழங்கும் அற்புதமான நாட்களாகவும் வருகின்றன. பிப்ரவரி பிறந்தாலே, ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக் கொண்டவர்களுக்கு திருநாள்தான்! அன்னையின் பிறந்தநாளுக்காக, அவளுடைய தரிசனத்திற்குக் காத்திருப்பதே ஒரு தனி அனுபவமாக உணரப்படுகிற ஒரு அற்புதமான அனுபவம் தான்!





Remember and Offer! எப்படிப் பட்ட பிரச்சினையானாலும், உள்ளது உள்ளபடி ஸ்ரீ அன்னையிடம், ஸ்ரீ அரவிந்தரிடம் ஆத்ம சமர்ப்பணமாகச் செய்ய முற்படும்போது, 
 
எனக்குள் ஏதோ ஒன்று பழக்கத்தின் அடிமையாகவோ அல்லது, சமர்ப்பணம் முழுமையடைய விடாமலோ தடுத்துக் கொண்டிருப்பதை கடந்த சில வாரங்களாகவே கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எழும் குழப்பங்களையும், சோர்வையும் ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னிடம் சமர்ப்பிப்பதைத் தவிர வேறென்ன  செய்ய முடியும்? 
 
இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது ஸ்ரீ அரவிந்தரின் இந்த அமுத மொழி, நம்பிக்கையளிப்பதாக இருப்பதையும், திருவருள் துணை ருப்பதையும் மீண்டும் மீண்டும் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பாக இருப்பதையும் பார்த்தேன். 

"Imperfect capacity and effect in the work that is meant for thee is better than an artificial competency and a borrowed perfection."

Sri Aurobindo 
 
Thoughts and Aphorisms


ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய

என்று இருகரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறென்ன செய்து  விட முடியும்?


ஸ்ரீ அரவிந்தர் திருவடிகளைச் சரண் அடைகிறேன்!
ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருவடிகளைச்  சரண் அடைகிறேன்!


தொடர்புடைய இன்னொரு பதிவு 


அன்னையைக் கண்டு கொண்ட அந்தத் தருணத்தில்....!

4 comments:

  1. //புது நண்பர்கள் இந்தப்பக்கங்களுக்கு வந்து போனார்களோ இல்லையோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து சில நண்பர்கள் பழைய பதிவுகளைத் தேடித் படித்து விட்டுப் போனதைப் பார்க்கும் பொழுது..//

    என்றைக்கும் மனத்தில் நிற்பவர் நீங்கள். உங்கள் '(சு)வாசிக்கப் போறேங்க' பதிவுகள்' நிச்சயம் உருப்படியான விஷயங்களை விவாதித்த நிறைவு
    என்றைக்கும் உண்டு.

    ReplyDelete
  2. வாருங்கள் ஜீவி சார்!

    எழுதுவது, விவாதிப்பது இடையில் வேறு தளங்களில் பயணிக்க ஆரம்பித்ததும், பெர்சனலாக ஒரு சிவில் வழக்கில் அலுப்பூட்டக் கூடிய விதத்தில் இறங்கியதும் இடையில் தொய்வு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது. சுவாசிக்கப்போறேங்க தளத்தில் உங்களைத் தவிர ஒன்றிரண்டு நண்பர்களே விவாதிக்க வந்து, அதுவும் குறைந்து போனது கடந்த எட்டு மாதங்களில் அந்தத்தளத்தில் புது இடுகைகள் எதுவுமில்லாமலேயே இருக்கிறது.

    இது நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கையோடு,ஒரு உத்வேகத்தோடு எழுதுகிற நாள் விரைவிலேயே வரும் என்ற நம்பிக்கை, வணக்கங்களுடன்!

    ReplyDelete
  3. அன்னையின் அருளால் பிரச்னைகள் தீரட்டும். தொடர்ந்து பதிவுகள் பகிரும் பலருக்கும் ஒரு அலுப்பு நடுவில் வருவது சகஜம். அது போல நீங்களும் இடைவெளி விட்டிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.

    ReplyDelete
  4. அர்த்தமில்லாத விவாதங்கள், விஷயங்களை எழுதிக் கொண்டிருப்பதில் ஒரு அலுப்பும் சலிப்பும் வருவது இயற்கைதான் ஸ்ரீராம்! இடைவெளி அதனால் இல்லை! கொஞ்சம் மன வேதனை தருகிற சில விஷயங்களை அனுபவித்தாக வேண்டியிருந்தது, அதைக் கடந்து போகிற பக்குவத்தை எப்படி அடைவது என்பதில் தெளிவில்லாமல் இருந்ததும் ஒரு காரணம்.

    எனக்கு வழி புலப்படாத தருணங்களில் ஸ்ரீ அன்னையைச் சரண் புகுந்து, அவளிடத்தில் என்னுடைய கவலைகளை ஒப்படைத்து விடுவதும் வழக்கம் தான்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!