மண்டேன்னா ஒண்ணு! கொஞ்சம் கவிதை நிறைய யோசனை!

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 
எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை 


கண்ணதாசன் மாதிரி ஊக்கமாய்ச்சொல்ல வார்த்தைகள் இல்லைதான்! ஆனாலும் உணர்வுகள் பீறிட்டெழும்போது அழுகையும் வரும், கொஞ்சம்  கவிதையும் வரும். அப்படி வந்த ஒரு தருணத்தையும் இங்கே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்.

வலிகளை மறக்கக் கவிதையில் வடித்து எழுதிப்பார்த்ததும் ஒரு காலம்
வலிகளைக் கூட்டின கவிதை வரிகளை மறந்துமிருந்தது ஒரு காலம்!
எனக்கு மட்டுமே இப்படி ஏன் என ஏங்கித் தவித்ததும் ஒரு காலம்
தனக்கு மட்டுமே தாயின் பரிவு முழுதாய் வேண்டின சவலைப் பிள்ளையாய்
அழுதால் உன்னைப்பெறலாமே என யாரோ சொன்னதை நம்பினபோதில்
அழுதுபுரண்டு கதறின நேரம் அவள் வரவில்லைஒரு பதில் தரவில்லை!


சவலையழுததுதிவலையளவும் வினையணுகாமல் காத்திடவேண்டும்!
கேட்டது எல்லாம் தந்திட வேண்டும்என்னைத் தனியன் ஆக்கிவிடாமல்
கூடவே இருந்தென்னைப் பார்த்திட வேண்டும்கேட்டதனைத்தும் அதிகம் தான்!
விடையாய்க் கிடைத்ததோ பொருள் பொதிந்தவோர் மௌனம்தான்!
பாராமுகமாய் இருந்தாள் எனப்பெரும் கோபமும் வந்தது வீம்பு வளர்ந்தது.
தாயேநீ இல்லைநீ வெறும் பொய் தான்அழுகை வெடித்தது ஆத்திரம் வந்தது!


இப்படியெல்லாம் வார்த்தைகளில் ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்ததனால் மட்டுமே விடை கிடைத்து விடுமா? பதில் கிடைத்துக் கொண்டே தான் இருந்தது.ஆனால், அதைப் புரிந்துகொள்கிற பக்குவமும் நேரமும் தான் வாய்க்கவில்லை. 

ராஜாங்கம் தான் அப்படிக் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுக்  கேட்டது என்று நினைக்கிறேன்!

"நீங்க ரெண்டு பெரும் உண்மையிலேயே பகையாளிங்களா, இல்லே பங்காளிங்களா? இப்படி அடிச்சுக்கறீங்க, ஆனா உங்களைப் பத்தி யாராவது தப்பாப் பேசினா அவரு அவங்களோட மல்லுக் கட்ட ஆரம்பிச்சிடறாரு!"

எனக்கே அந்த சந்தேகம் அவ்வப்போது வரும்! நாங்கள் இருவரும் நண்பர்களா? அல்லது சண்டைக்காரர்களா? அவனிடமே ஒருதரம் கேட்டபோது சிலிர்த்துக் கொண்டே சொன்னான், "நாயே! இன்னும் இது கூடத் தெரியலை! நீ சண்டைக்கரானாக இருக்கவும் லாயக்கில்லை! சிநேகிதக்காரனாகவும் இருக்க லாயக்கில்லை!" 

உடனே அங்கே வார்த்தைகளில் அக்கப்போர் ஆரம்பித்து விடும்! 

இன்றைக்கு அவன் பிறந்தநாள். ஆனால் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல முடியாது பதிமூன்று வருடங்களுக்கு முன்னமே அவன் இறந்துவிட்டான். சாகிற வயது இல்லைதான்! ஆனால் தானே தேடிக்கொள்ளும் ஆசைகள், கோபதாபங்கள், ஏமாற்றங்கள் அதிலெழும் குரோதங்கள் என்று ஏதோ ஒரு வடிவத்தில் நாமே இடம் கொடுத்துவிடும் மரணத்தை யார்தான் தடுத்துவிட முடியும்?    


நான் யார்? இந்தக் கேள்விக்கு ஷ்ரத்தாலு ரானடே  மிக அழகாக பதில் சொல்கிறார். ரமண மகரிஷியின் நான் யார் விசாரம் மிகக் கடினமானது. ஆனால் அந்தக் கேள்விக்கு விடைதேடுவதில் தான் வாழ்க்கையின் சாரமே .அடங்கியிருக்கிறது.

 

ராபர்ட்  ஃப்ராஸ்ட்  ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய  Mending Wall  என்றொரு கவிதை!   ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்!

"மீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன"  என்று சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்  என்று தான் விரும்புகிறேன்."

விஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில்  ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள் சொல்கிறார்கள். நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும் இதுவாகத் தான் இருக்கும்! 



ப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும் கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதைஇன்னமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான்  இருக்கிறது!

 
Something there is that doesn't love a wall, 
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

ன்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!  


Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'

விஞருடைய  வாதம் எல்லாம் இது தான்! 
 
தோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது! கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,'Good fences make good neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது.
ற்கெனெவே இந்தக் கவிதையை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!இரண்டு எதிரெதிரான  மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பேசியிருக்கிறோம்!

அதைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில் தொக்கி நிற்கிறது.
 அதுதான் முக்கியம்!

   

2 comments:

  1. தத்துவம் எல்லாம் நல்லா தான் இருக்கு!!!

    மலர்

    ReplyDelete
    Replies
    1. தத்துவம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். உங்கள் சொந்த அனுபவம் என்ன சொல்கிறது என்பதைக் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!