மண்டேன்னா ஒண்ணு! வேறென்ன அரசியல்தான்!

திராவிட அரசியல்  பழையநெனப்புடா பேராண்டி என்று பேசியே கடந்தகாலத்துக்கே போய் விடலாமென்று பார்க்கிறதோ? திமுக பொருளாளர் துரைமுருகன் கருணாநிதியின் கைராசி பற்றி இப்படிப் பேசியிருக்கிறார்!


2004 இல் கருணாநிதி ஐக்கிய முன்னணிக் கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்த ராசியோ என்னவோ, அவசரமாக UPA எம்பிக்கள் ஆதரவுக் கடிதத்தை ஜனாதிபதி மாளிகைக்கு எடுத்துக் கொண்டு ஓடியதும், அம்மணி தியாகசிகரமாகி ஒதுங்கிக்கொள்ள   டம்மிப்பீஸ் மன்மோகன்சிங் பிரதமரானதும் வரலாறு! அதே ராசிதான் இப்போதும் தொடரப் போகிறதோ? 

இசுடாலின் எப்படிப் பேசினார் என்பதையும் கொஞ்சம் கவனியுங்கள்!
   
மம்தா பானெர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், ஏன் டெலிவிஷன் காமெரா என்றால் ஓடோடிவரும் கேசரிவாலு உட்பட வடக்கே உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எவருமே சொல்லாத  நிலையில் இசுடாலின் மட்டும் முந்திக்கொண்டு ராவுல்பாபா தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டிய அவசரம், அவசியம் எங்கிருந்து வந்தது? #விசிக வின் திருமாவளவன் அறிக்கை வழியாக வழிமொழிந்த செய்தி இங்கே  

ஒருவார காலத்துக்கு முன்புதான் சந்திரபாபு நாயுடு கூட்டிய  கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் பற்றிய முடிவை, தேர்தலுக்குப்பின் கூடி தீர்மானிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.இசுடாலினுக்குத் தெரியாதா?

இப்படி பல ‘டும் டும்’ -கள் தான் ஸ்டாலினின் அவசர அறிவிப்புக்கான காரணமோ என்று ஐயப்படுகிறார் காவிரிமைந்தன். கூட்டத்தைச் சேர்க்கக் காட்டிய சாமர்த்தியத்தை கூட்டணி அமைப்பதிலும்  சீட் பங்கீட்டிலும் காட்டுவார்களா?

Citing sources, an NDTV report stated that TDP’s Chandrababu Naidu who was present when Stalin made his speech, was among the parties that that were not on board with Stalin’s suggestion. The others include Akhilesh Yadav’s Samajwadi Party, Mamata Banerjee,ய Banerjee’s Trinamool Congress, Farooq Abdullah's National Conference, Lalu Yadav's Rashtriya Janata Dal and the CPI(M). என்று பலகட்சிகளும் இசுடாலின் முழங்கி சிலமணிநேரத்திலேயே தங்களுடைய அதிருப்தியைப் பதிவு செய்திருக்கின்றன.
      
கருணாநிதி எட்டிப்பிடித்ததை எல்லாம் இசுடாலினும் எட்டிப்பிடிப்பார் என்று எதிர்பார்ப்பதே அதிகம் தானோ? 
 *******
மத்தியப்பிரதேசத்தின் 18வது முதல்வராக இன்று பதவியேற்றிருக்கிறார் #கமல்நாத்  யார் இவர்?


1984 #சீக்கியர்கள்படுகொலை காங்கிரஸ் குற்றவாளி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து டில்லி உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்திருக்கிறது. கீழ்க்கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து இந்தத் தீர்ப்பு இன்று காலை அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதேபோல #சீக்கியர்கள்படுகொலை யில் சம்பந்தப்பட்ட காங்கிரசின் ம.பி முதலமைச்சர் #கமல்நாத் தண்டிக்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!