tag:blogger.com,1999:blog-48430410896504742912024-03-14T18:03:38.392+05:30Consent to be......nothing!நம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger1361125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-25473712521800342902021-07-10T16:24:00.000+05:302021-07-10T16:24:35.790+05:30இட்லி வடை பொங்கல்! #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும்! <p>இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறது.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiptEB5I_-Zo7xdpn56xiPIxoF1teygl57ibcb9Nwb_KYI1HAJ2ZwYJMLcv8qjyTXizqwo-U-wSYLcdz9hQ2wIVbYGgsZuM5EuI7kXElohP7XvaZlzeQWZy9ADdLHxal17wJRgOeP9XmBc/s810/kongunadu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="551" data-original-width="810" height="436" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiptEB5I_-Zo7xdpn56xiPIxoF1teygl57ibcb9Nwb_KYI1HAJ2ZwYJMLcv8qjyTXizqwo-U-wSYLcdz9hQ2wIVbYGgsZuM5EuI7kXElohP7XvaZlzeQWZy9ADdLHxal17wJRgOeP9XmBc/w640-h436/kongunadu.png" width="640" /></a></div><br />தமிழ்நாட்டை நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் ஜெய் ஹிந்த் சர்ச்சைப்புகழ் ஈஸ்வரன் கூட மாநிலத்தை மூன்றாகப் பிரிப்பது நல்லதுதான் என்று முன்பு பேசிய வீடியோ உலா வந்துகொண்டிருக்கிறது. 2015 ஆகஸ்ட் 17 தேதியிட்ட தினமலர் நாளிதழில் ஈஸ்வரன் அப்படிப் பேசிய செய்தி வெளியாகி இருக்கிறது. <p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/KrKZBMbikE0" width="320" youtube-src-id="KrKZBMbikE0"></iframe></div><br /><p>இந்த 21 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த விஷயத்தை விரிவாக விளக்கியிருக்கிறார். என்னமோ ஸ்டாலின் அரசுக்கு விளையாட்டு காட்டத்தான் மத்திய அரசு தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்குகிறது என்பதெல்லாம் அதீத அலட்டல்.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7iQv3rbH-xuElnw-zXAt5v06QT61q8dLx8AZNiojd2ej3qiRNBZ9FT2TA_QJ3F7ApUuCSkrid2XYq-mqN5IGCjlJDBL_V3TACsDUadYi6OAM4eN5PNXNYYUMqvoe1FTE3pyb0Hbc1RfA/s2048/kongu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1031" data-original-width="2048" height="322" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7iQv3rbH-xuElnw-zXAt5v06QT61q8dLx8AZNiojd2ej3qiRNBZ9FT2TA_QJ3F7ApUuCSkrid2XYq-mqN5IGCjlJDBL_V3TACsDUadYi6OAM4eN5PNXNYYUMqvoe1FTE3pyb0Hbc1RfA/w640-h322/kongu.jpg" width="640" /></a></div><br />ஊப்பீஸ் எதற்காகக் கதறுகிறார்கள் என்பது எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அரசியல் விமரிசகர் <b><a href="https://www.facebook.com/sriram.seshadri.90/posts/4468212549889598" target="_blank">ஸ்ரீராம் சேஷாத்ரி முகநூலில் இப்படி எழுதுகிறார்:</a></b><p></p><p><span style="color: #800180;">திரு. முருகன் பதவி ஏற்கும்போது, அவர் biodata வில் கொங்குநாடு என்று இருந்தது. இன்று தினமலர் நாளிதழில் கொங்குநாடு பற்றிய headline வந்துள்ளது. பலர் என்னிடம் உங்கள் அபிப்ராயம் என்ன, இது நடக்குமா, அப்படி நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கேட்டனர். என் புரிதலை பகிர்கிறேன்.</span></p><p><span style="color: #800180;">முதலில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது என்பது பல காலமாக எழும் கோரிக்கை, அதுவும் பாட்டாளி மக்கள் கட்சி வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கை வெறும் அரசியல் கோரிக்கை மட்டுமே. எப்படியாவது ஒரு மாநிலம் தங்கள் ஆட்சியின் கீழ் வராதா என்ற எண்ணம் மட்டுமே.</span></p><p><span style="color: #800180;">தென் தமிழ்நாடு, பொருளாதார ரீதியில் கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு வளரவில்லை, முக்கியமாக தொழில்சாலைகள், உள்கட்டுக்குமானம் போன்றவை கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு தென் தமிழ்நாட்டில் இல்லை. திருச்சிக்கு தெற்கே கோவில்பட்டி, சிவகாசி போன்ற இடங்களில் இருந்த பட்டாசு மற்றும் பிரிண்டிங் தொழில் நசிந்து பல வருடங்கள் ஆகிறது, அதனை விரிவாக்க முயற்சி எந்த அரசாங்கமும் எடுக்கவில்லை. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொழில்சாலைகளும் ஒன்று மூடப்பட்டன (sterlite ஒரு உதாரணம்) அல்லது புது தொழில்சாலை அல்லது சரக்கு துறைமுகம் வருவதை கிறிஸ்துவ மிஷனரிகள் தடுத்து வருகின்றன. </span></p><p><span style="color: #800180;">இப்படி இருக்கையில், திமுக இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாகும் முயற்சியில் ஒன்றிய அரசு, ஜெய் ஹிந்து போன்ற சட்டசபை நிகழ்வுகளில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசி வருகின்றன.</span></p><p><span style="color: #800180;">பாஜக அவர்களுக்கு வலுவான கொங்கு மண்டலத்தை மேலும் ஸ்திரப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக, முருகன் அவர்களை மத்திய மந்திரியாகி, அண்ணாமலை அவர்களை தமிழ்நாடு பாஜகவின் தலைவராக்கி, மேலும் வானதி ஸ்ரீனிவாசன் அவர்களை முக்கியப்படுத்தி வருகிறது.இப்போது கொங்குநாடு என்ற முழக்கம் அரசியலாக இருந்தாலும், இந்த விதையை விதைப்பது கண்டிப்பாக பல விளைவுகளை ஏற்படுத்தும்</span></p><p><span style="color: #800180;">1. தமிழ்நாட்டில் நிர்வாகம் தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்படும், இப்படி ஒரு பகுதி அதுவும் 40% மேல் வருவாய் கொடுக்கும் பகுதி பிரிந்தால், தமிழ்நாடு, முன்னேற தென் தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்து முனையவேண்டிய கட்டாயம் ஏற்படும்.</span></p><p><span style="color: #800180;">2. அரசியல் ரீதியாக கொங்கு மண்டலத்தில் திமுக வலுவாக இல்லாததனால், அங்கு அதிமுக பாஜக நேரடியாக அரசியல் செல்வாக்கு உள்ள கட்சியாக மாறும்</span></p><p><span style="color: #800180;">3. பிற மாவட்டங்கள் உள்ள தமிழ்நாட்டில், திமுக அதிமுக மட்டுமே வலுவான நிலை ஏற்படும்.</span></p><p><span style="color: #800180;">4. நிர்வாக ரீதியாக, சிறிய மாநிலங்கள் என்ற அடிப்படையில் சுலபமாக இருக்கும்</span></p><p><span style="color: #800180;">இந்த பிரிவு அரசியல் சட்டம் சார்ந்து, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் சாத்தியமா என்றால் சாத்தியமே. ஆனால் உடனே நிகழுமா என்றால் மத்திய அரசாங்கம் முனைதால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற முடியும்.</span></p><p><span style="color: #800180;">இப்போது நமக்கு தெரியவேண்டிய ஒன்று, பாஜக இதனை திமுகவின் ஒன்றிய அரசின் கோஷத்துக்கு எதிர்வினையாக எடுத்துள்ளதா அல்லது நிஜமாகவே முயல்கிறதா என்பதுதான்.ஆனால் திமுக மத்திய அரசை சிறுமை படுத்துவதாக எண்ணி, ஒன்றிய அரசு என்று கிளப்பிவிட்டு, இந்த மாநில சீரமைப்புக்கு வழி வகுத்து விட்டதா என்றும் யோசிக்கவைத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே திமுகவினர் ஒன்றிய அரசு என்பதை சொல்ல முயலவில்லை கவனிக்கத்தக்கது </span></p><p>ஒரு தெளிவான புரிதல் என்றே எனக்குப்படுகிறது. எது எப்படியானாலும், திமுகவின் வாய்ச்சவடாலில் கூட ஒரு நல்லது நடக்கப்போகிறது என்பதில் மகிழ்ச்சி.</p><p>மீண்டும் சந்திப்போம்.</p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-45281002911873905492021-07-09T19:44:00.003+05:302021-07-09T20:47:29.623+05:30அண்ணாமலை! இளைய பாரதத்தினாய் வா வா வா! <p>1960களிலிருந்தே தமிழகம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலக ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விடமுடியுமா என்ன? அதன் விளைவு, காங்கிரஸ் கட்சியே கூட தேசிய அந்தஸ்தையும் தேசியப்பார்வையும் இழந்து சில மாநிலக்கட்சிகளின் தயவில் இறுதிமூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. பார்த்தீனியம் களைச்செடி மாதிரி வளர்ந்திருக்கிற திராவிட இயக்கங்களுக்கு ஒரு நல்ல மாற்றாக வளரவேண்டிய பொறுப்பும், வாய்ப்பும் பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே இருக்கிறது. இதுநாள் வரை ஏதோ ஒரு திராவிடக் கட்சியுடன் இணக்கமாகப் போகிற ஒன்றை மட்டுமே செய்துவந்த பிஜேபியின் மாநில நிர்வாகிகள் திராவிடப்புரட்டை எதிர்த்து அரசியல் செய்வதில் எந்த விதமான அக்கறையையும் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். இந்த நிலையில் பிஜேபியின் தமிழ் மாநிலத்தலைவராக K அண்ணாமலை ex IPS நேற்று கட்சித்தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/8FBB3HSxiiM" width="320" youtube-src-id="8FBB3HSxiiM"></iframe></div><br />வீடியோ 39 வினாடிகள். அண்ணாமலை ஒரு துடிப்பான இளைஞர். தேசியப் பார்வை கொண்ட ஆளுமை. ஆனால் இங்கே தமிழக பிஜேபியைத் தட்டி எழுப்புவது, திராவிடப் பாசம் மிகுந்தவர்களைக் களையெடுப்பது கடினமான சவாலாக இருக்கும். அண்ணாமலையை சமாளிப்பது இப்போது ஆளும் திமுகவுக்குமே பெரும் சவாலாக இருப்பார், எப்படி? கரூர் பேருந்து நிலையம் அருகே பிஜேபியினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்ததில் கடுப்பான மாவட்ட ஆட்சியர் அனைவரையும் கைது செய்யும்படி உத்தரவு போட்டுப்போய்விட் டார். செந்தில் பாலாஜிக்கு ஒருநியாயம் பிஜேபிக்கு ஒரு நியாயமா என்று பிஜேபியினர் கேள்விக்குப்பதில் சொல்லவும் முடியாமல் கைது செய்யவும் முடியாமல் போலீசார் தடுமாறியதில் வெளிப்பட்டது. <b><a href="https://tamil.samayam.com/latest-news/karur/bjp-partymen-in-karur-creates-traffic-jam-while-celebrates-on-annamalai-appointed-as-party-state-leader/articleshow/84261787.cms" target="_blank">அண்ணாமலை தலைவரான முதல் நாளே கலெக்டர், போலீசை பகைத்துக் கொண்ட பாஜகவினர்!</a> </b>என்ற செய்தியின் பின்னால் அண்ணாமலையின் தலைமைமீது மிகவும் அதீத நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் மற்றும் கட்சிக் காரர்கள் இருக்கிறார்கள் என்பதும் இருக்கிறது. (கரூரில் பிஜேபியினர் கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.) <p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/ndE6sE4XA3Q" width="320" youtube-src-id="ndE6sE4XA3Q"></iframe></div><br />வீடியோ 41 நிமிடம். கோலாகல ஸ்ரீனிவாஸ் கொஞ்சம் விரிவாக அண்ணாமலை பிஜேபியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி, விடையைத் தேடவும் முயற்சித்து இருக்கிறார். <b>திமுக</b> சிலவருடங்களாகவே <b>பிஜேபியை எதிர்த்து அரசியல் </b>என்பதில் தெளிவாகச் செயல்பட்டு வருகிறது. அதேமாதிரி <b>பிஜேபியும் தனது அரசியல் எதிரி திமுகதான்</b> என்று ஒரு உறுதியான நிலை எடுக்குமா?<p></p><p>அண்ணாமலைக்கு முன்னால் இருக்கும் ஆகப்பெரிய சவால் இது தான்! சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள இறைவன் துணையிருப்பானாக. அண்ணாமலைக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளுடன்! </p><p>மீண்டும் சந்திப்போம்.</p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-19349748231571129382021-07-06T21:43:00.000+05:302021-07-06T21:43:36.803+05:30சும்மா இருத்தலே சுகம்! சீனக்கம்யூனிஸ்டுகளை பயமுறுத்தும் Lying Flat இளைய தலைமுறை! <p>இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் <b><a href="https://www.hindustantimes.com/world-news/lying-flat-gains-traction-in-china-as-youngsters-defy-norms-beijing-not-happy-101625542898189.html" target="_blank">அமித் சதுர்வேதி எழுதியிருக்கிற செய்தித்துணுக்கு </a></b>ஒருமாதப் பழசுதான் என்றாலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாட்டத் தம்பட்டம், பெருமிதத்தை ப்பூவென்று ஊதித்தள்ளுகிற மாதிரியே இருப்பதால் இங்கே சுருக்கமாக. இந்த 8 நிமிட வீடியோவைப் பார்த்து விடுங்கள். </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/uWl7njLlXLU" width="320" youtube-src-id="uWl7njLlXLU"></iframe></div><br />கடந்த ஏப்ரலில் ஒரு தொழிற்சாலையில் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு <b>சும்மா இருத்தலே சுகம்</b> என்று blog எழுதி ஆரம்பித்து வைத்தது 31 வயதே ஆன லுவா ஹுவாஜோங் என்கிற இளைஞன். விரைவிலேயே சீன அரசின் மீது, தங்களுடைய எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்களை அணிதிரளச் செய்கிற வாசகமாக<b> </b><span style="background-color: white; font-family: pt_serifregular, serif; font-weight: bold;"><span style="color: red;">tangping</span></span><span style="background-color: white; color: #424242; font-family: pt_serifregular, serif;"><b> Lying Flat </b>ஆகிப்போனது. சீன அரசு உஷாராகி இந்த வார்த்தைகளுடன் கூடிய பகிர்வுகளை, ஆதரவுக்குழுக்களை இணையத்தில் இருந்து நீக்கிவிட்டது.</span><p></p><p><span style="background-color: white; color: #424242; font-family: pt_serifregular, serif;">ஆனாலும் புதிய அடிமைகள் கிடைப்பது வருகிற காலங்களில் குதிரைக்கொம்பாகலாம் என்கிற அச்சம் சீன அரசுக்குப் புதிய தலைவலியாக உருவெடுத்து வருகிறதோ?</span></p><p><span style="background-color: white; color: #424242; font-family: pt_serifregular, serif;">மீண்டும் சந்திப்போம். <b> </b></span><b> </b> </p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40039352046687895282021-07-05T19:53:00.000+05:302021-07-05T19:53:21.217+05:30மண்டேன்னா ஒண்ணு! விவஸ்தையே இல்லாத இடம் #அரசியல் <p>பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மனசாட்சியோ விவஸ்தையோ இருப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். சற்றுமுன் பேசியதைக்கூட அப்படியே மாற்றிப்பேசுவதும் கூடத் தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு ரொம்பவுமே கைவந்த கலைதான்! அதற்காக இப்படியா? பிஜேபியின் தேவேந்திர ஃபட்னவிசும் சிவசேனாவின் சஞ்சய் ரவத்தும் சந்தித்துக் கொண்ட போது <b>கண்கள் பனித்தன</b> வசனம் மறுபடி உயிர் பெற்றதாம்! <b>இதயம் இனித்ததா</b> என்பது இன்னமும் தெரியாத நிலையில் சிவசேனா எங்கள் எதிரி அல்ல; நண்பர்கள்தான் என்று தேவேந்திர ஃபட்னவிஸ் சொல்லி இருப்பதை வைத்து கூட்டணிக்கணக்குகள் மாறுகிறதா என்று <b><a href="https://www.hindutamil.in/news/india/689643-shiv-sena-was-never-our-enemy-devendra-fadnavis-2.html" target="_blank">இந்து தமிழ்திசை கூட செய்தி கதைக்கிறது.</a></b></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbMgRVqzMjyNRcNQ9F-1vWRcSMk5kyeNQQ086JsRU51tpY8RihhAkp2TalDDz3SWRyavLpP0wgRSQvIuEdFFdzJdohtzHmL3EHNWd3vimlF7CakBRkJAQyZRLJV3wcSSQLLKkZJ2Zwf94/s1080/anbumani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbMgRVqzMjyNRcNQ9F-1vWRcSMk5kyeNQQ086JsRU51tpY8RihhAkp2TalDDz3SWRyavLpP0wgRSQvIuEdFFdzJdohtzHmL3EHNWd3vimlF7CakBRkJAQyZRLJV3wcSSQLLKkZJ2Zwf94/w640-h640/anbumani.jpg" width="640" /></a></div><br /><p>அன்புமணி ராமதாசுடைய இந்தக்கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று இந்தப்படத்தைப் போட்டு பிபிசி தளம் கேள்வி கேட்டிருக்கிறது.லாபம் இல்லாத எந்தவொரு அசைவு , முடிவும் எடுக்காதவர்கள் அவர்கள் என்று தெரிந்ததனால் <b>பாமக</b>வை, அதன் தலைவர்களை அறிந்த எவருமே இதுபோல சிறுபிள்ளைத் தனமான கேள்வியெல்லாம் கேட்கமாட்டார்கள். </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2IMY3E7sbH18DwtIYSAFDPg9ZfH1dhJz1d8zqnPyElWWPsMVlkYj-yRhO4wtlbvhvL1bErq1Reo1krbUzLMHVePgIRf7kEPMlRK8QgccNoCYQMgGyBH1RbqzG_eBDn9-7m0U2eNlC4JU/s485/budget+tn.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="363" data-original-width="485" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2IMY3E7sbH18DwtIYSAFDPg9ZfH1dhJz1d8zqnPyElWWPsMVlkYj-yRhO4wtlbvhvL1bErq1Reo1krbUzLMHVePgIRf7kEPMlRK8QgccNoCYQMgGyBH1RbqzG_eBDn9-7m0U2eNlC4JU/w640-h480/budget+tn.png" width="640" /></a></div><br /><p>ஸ்டேன்லி ராஜன் எதிர்பார்ப்பதை எல்லாம் எங்கூரு நிதியமைச்சர் செய்துவிடுவாரா என்ன? நிதிநிலை அறிக்கை தயாரிப்பதைவிட அவரை விமரிசித்த நபர்களைக் காவல்துறையினரை விட்டுக் கைது செய்வதில் தான் அதிகம் முனைப்பு காட்டுகிறார் என்று செய்திகள் வருகின்றன. தரமற்ற விமரிசனம் என்றால் அதற்குத்தீர்வு காண சட்டபூர்வமாக நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால் பழைய ஜமீன்தார்கள் மாதிரியே செயல்பட மந்திரி விரும்புகிற மாதிரி இருக்கிறது என்பது பெரும் சோகம். மதுரைக்கு வந்த சோதனையும் கூட!</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbhpmJH3KGqpeWH1PnCYQ5GEzt4XnPm4fnVlNjPMHqcR_tktbk-JhhWQ-4fkUstiRcC0KJRvRVTDUl00cNryHRsJ7x353a2m6h-qLT9MZHODoNnkTsZ53dDYbKFPzGtnS0Pk9Kd3_fsKo/s1072/krishnasamy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="1072" height="478" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbhpmJH3KGqpeWH1PnCYQ5GEzt4XnPm4fnVlNjPMHqcR_tktbk-JhhWQ-4fkUstiRcC0KJRvRVTDUl00cNryHRsJ7x353a2m6h-qLT9MZHODoNnkTsZ53dDYbKFPzGtnS0Pk9Kd3_fsKo/w640-h478/krishnasamy.jpg" width="640" /></a></div> <br /><p>பதிவின் தலைப்பில் சொன்னமாதிரி எல்லா அரசியல் வாதிகளும் விவஸ்தை இல்லாதவர்கள் இல்லை. ஒரு சில அரசியல்வாதிகள் மிகத்தெளிவான பார்வையுடன் தங்கள் கருத்துக்களை முன்னுக்குப்பின் முரண் இன்றி வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒருவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.</p><p><b><span style="color: #800180;">2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம் ::திரைப்படத் துறையினரைத் திருத்தும் சட்டமாகவே இருக்கும் !</span></b></p><p><span style="color: #800180;">திரைப்படப் படைப்பாளிகளே ! திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை !! சாதி, மத பேதத்தை உண்டாக்காத; தேசப்பற்றை வளர்க்கும் படங்கள் வெளிவர 2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம் உந்துதலாக இருக்கும்!!</span></p><p><span style="color: #800180;">நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டுவரப்படவுள்ள 1952-ம் ஆண்டு திரைப்படத்துறைத் திருத்தச்சட்டத்திற்கு சிலர் தேவையில்லாமல் தங்களுடைய எதிர்க் கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவே கருதுகிறேன். 'கலை கலைக்காக' என்பதும், கலை சார்ந்த விஷயங்களில் அரசு தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதும் பலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால்,அரசு கட்டுப்பாடுகள் இருக்காது அல்லது இருக்கக்கூடாது என்பது எதார்த்தமாகுமா?</span></p><p><b><span style="color: #800180;">ஒரு தெளிவான அரசியல் சாசன கட்டமைப்பு உள்ள எந்த ஒரு தேசத்திலும் சட்டங்களும், விதிகளும் இல்லாமல் அரசு செயல்பட இயலுமா? ஒரு தேசத்தின் எல்லைக்குள் வாழும் அறிவுஜீவிகள் அவர்களின் அடிப்படை உரிமைகள் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பதைத் தெரிந்திருக்க வேண்டாமா? </span></b></p><p><b><span style="color: #800180;">உரிமை பற்றி மட்டும் பேசுகிறவர்கள், கடமை மற்றும் பொறுப்புகள் குறித்துப் பேச மறுப்பது ஏன்?</span></b></p><p><span style="color: #800180;">ஒவ்வொரு தனி மனிதனும் அல்லது சமூக குழுக்களும் தங்களது கடமைகளையும், பொறுப்புகளையும் தாங்களாகவே உணர்ந்து செயலாற்றக் கூடிய ஒரு காலகட்டம் உருவாகும் பட்சத்தில் திருட்டு இருக்காது; திருட்டைப் பிடிக்க போலீசும் தேவைப்படாது. கொலை; கொள்ளை இருக்காது, சாதிய; மத வன்மங்கள் இருக்காது. சுரண்டுவோர்; சுரண்டப்படுவோர் என்ற பேதமைகள் இருக்காது. அப்போது சட்டங்களும் தேவைப்படாது; சட்டங்களை அமலாக்கக் கோடிக் கணக்கில் செலவழித்து அரசின் நிர்வாகத் துறையையும் உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது. அக்கால கட்டங்களில் "அரசு என்ற நிறுவனம் உதிர்ந்துபோகும்" என்று பொதுவுடைமை தளகர்த்தர்களான காரல் மார்க்ஸும், ஏங்கல்ஸும் தங்களது கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இதுவே "இராம ராஜ்ஜியம்" என்று கூறுகிறோம். இப்போது என்ன அப்படிப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார பேதமற்ற சமூகத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? </span></p><p><span style="color: #800180;">கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து, நூற்றுக்கணக்கான கலைஞர்களும்; தொழிற்நுட்ப பிரிவினரும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அல்லும் பகலும் அயராது உழைத்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை, சிலர் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, ஒரு சில மணித்துளிகளில் நவீன விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த திரைப்படத்தையும் பதிவுசெய்து அத்திரைப்படங்கள் திரையில் திரையிடப்படுவதற்கு முன்பாகவே இணையத்திலும், திருட்டு 'வி சி டி'க்களாகவும் வெளியிட்டு அத்திரைப்படக் குழுவினரின் அனைத்து முயற்சிகளையும், உழைப்பையும், பொருளாதாரத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்களே, இதைத்தடுக்க ஒரு வலுவான திரைத்துறை திருத்தச் சட்டம் கொண்டு வருகின்ற போது, அதை ஏன் திரைப்படத்துறையினர் எதிர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.?</span></p><p><span style="color: #800180;">இன்றைய நவ நாகரீக கால கட்டங்களில் திரைப் படங்களால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து போய்விடக் கூடாது என்பதற்காக எந்தெந்த திரைப்படங்களை எந்தெந்த வயதினர் பார்க்க வேண்டும் என வரையறை செய்யப்படுவதைக் கண்டு ஏன் திரைப்படத்துறையினர் அஞ்ச வேண்டும்? 'பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கருத்துகள் பரப்பப்பட்டு விடக்கூடாது' என்ற பொறுப்புணர்வு திரைப்படத் துறையினருக்கு ஏன் வர மறுக்கிறது?</span></p><p><span style="color: #800180;">இப்போது, தணிக்கை சான்றிதழை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரே ஒருமுறை சான்றிதழ் பெற்றாலே போதுமானது என திருத்தம் கொண்டு வருவதில் இவர்களுக்கு என்ன சங்கடம்? மத்திய திரைப்பட சான்றிதழ் ஆணையத்தால் (Central Board Of Film Certification) தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பு, ஒரு திரைப்படத்திற்கு பல்வேறு முகாம்களிலிருந்து ஆட்சேபனை எழும் பட்சத்தில், மறு தணிக்கைக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற 2021 திரைப்படத்துறை திருத்தச் சரத்தை எதிர்த்து "கலை சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடுவது படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்தைச் சிதைத்துவிடும்" என்று எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள். 1952-ம் ஆண்டு திரைப்படத்துறை சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் அச்சட்டத்தின்படியே தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வெளிவந்துள்ளன.</span></p><p><span style="color: #800180;">தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட எல்லா படங்களுக்கும் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் கடந்த காலங்களில் தான் Censor Board மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அண்மை காலத்தில் Censor Board என்பதை Central Board Of Film Certification என்று பல படிகள் குறைத்து சான்றிதழ் வழங்கும் ஆணையமாக மாற்றப் பட்ட பின்னரே, பொறுப்பற்ற முறையில் புற்றீசல் போல பல திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன.</span></p><p><span style="color: #800180;">ஒரு திரைப்படத்திற்கு Censor Board அல்லது Central Board Of Film Certification அனுமதி அளித்த பிறகு அரசால் கூட தலையிட முடியாத சூழல் இருக்கின்ற காரணத்தினால் தான் ஆட்சேபனைக்குரிய திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்னால் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தேறுகின்றன. தவறான திரைப்படங்களால் பாதிக்கப்படுவோருக்கு இன்று வரையிலும் நீதிமன்றம் செல்வது மட்டுமே தீர்வாக இருக்கிறது. </span></p><p><span style="color: #800180;"><b>'சண்டியர்' படப்பெயர் மாற்றத்திற்கு நாம் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது; 'கொம்பன்' பட வன்முறை காட்சிகளை நீக்க நீதிமன்ற போராட்டம் நடத்தினோம். அண்மைக்காலமாக திரைப்படங்களால் இந்தியா முழுமைக்கும் சமூகத்தில் பல்வேறு சட்ட-ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகின்றன</b>. எனவே,அதை எதிர் கொள்ளவே இப்பொழுது மறு தணிக்கைக்கு உத்தரவிடும் அதிகாரத்தைச் சட்டமாக்கத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.இது போன்ற ஒரு மறுதணிக்கை செய்ய சட்டத்தில் இடமிருக்க வேண்டும் என்பதைத்தான் 'புதிய தமிழகம் கட்சி' தொடர்ந்து வலியுறுத்தி வருகிற<b>து. நாம் மட்டுமல்ல; திரைப்படப் பெயர், கதை, வசனங்கள், காட்சிகளால் பாதிக்கப்பட்டு நீதிமன்றமே தீர்வு என்று இருந்த பலரும் இந்த மறுதணிக்கை சட்டம் திரைப்படத் துறையினரை திருத்துவதற்கான ஒரு திருத்தச் சட்டமாகவே நிச்சயம் வரவேற்பார்கள்.</b></span></p><p><span style="color: #800180;"><b>கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்போம்; அதைத் தணிக்கைக்கு உட்படுத்த மாட்டோம் என்று கூற முடியுமா? </b> Censor Board-க்கு கட்டுப்பட்டுத் தானே திரைத்துறை தனது 75 ஆண்டுகால பயணத்தைக் கடந்து வந்துள்ளது. திரைப்படத் துறையினர் கூறுவதைப்போல கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த திருத்தச் சட்டமும் இப்போது கொண்டு வரப்படவில்லை. மத்திய திரைப்பட தணிக்கை துறை ஒரு திரைப்படத்திற்குச் சான்றிதழ் வழங்கிய பின்னர் இந்த நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒற்றுமை, பொது அமைதி ஆகியன கருதி மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும் என்பது இப்போது புதிதாகச் சேர்க்கப்பட உள்ள சட்டத்திருத்தம். இதைக் கண்டு ஏன் திரைத்துறையினர் பயப்பட வேண்டும்.? </span></p><p><span style="color: #800180;">"மடியில் கனம் இருந்தால்தானே, வழியில் பயப்பட வேண்டும்" என்பதற்கிணங்க நேர்மை, தூய்மை அடிப்படையிலான திரைப்பட தயாரிப்பாளர்கள் இச்சட்டம் குறித்து அஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே?</span></p><p><span style="color: #800180;">'பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை' இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாக இருப்பினும் - ‘With Reasonable Restrictions’ அதாவது தேவையான கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே. அதேபோல, 'There Is No Such thing as Absolute Freedom for Cinema and OTT Platform'.</span></p><p><span style="color: #800180;">1952-ம் ஆண்டு திரைப்படத்துறை சட்ட விதிகளின்படி இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியதாகவும், நமது நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவு, பொது அமைதி மற்றும் தனிப்பட்ட அல்லது சமூக அல்லது நாட்டின் மதிப்பிற்கு பங்கம் விளைவிக்கக் கூடியதாகவும், குற்றச் செயல்களைத் தூண்டக் கூடியதாகவும் உள்ள திரைப்படங்கள் பொதுவெளியில் வெளியிடத் தகுதியற்றவை என நிராகரிக்கச் சட்டம் ஏற்கனவே 70 ஆண்டுகளாக அமலில் தான் இருக்கிறது என்பதை படைப்பாளிகள் என்பவர்கள் ஏன் படித்து புரிந்து கொள்ளவில்லை? என்பதே கேள்வி. </span></p><p><span style="color: #800180;">ஆங்கிலேயர் காலத்திலேயே தெருக்கூத்து நடத்துவதற்கும், கிராமங்களில் நாடகங்கள் நடத்துவதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதே நடைமுறையும், சட்டமும் ஆகும். தெருக்கூத்து நாடகமாகி, ஊமை படங்களாகி, பின்பு கருப்பு-வெள்ளை பேசும் படங்களாகி, தற்போது பலவண்ண டிஜிட்டல் திரைப்படங்களாகவும் நவீன வடிவம் பெற்று விட்டன.திரைப்படங்கள் மகிழ்ச்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் எடுக்கப்பட்ட வரையில் எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை.ஆனால், அந்தத் துறை தன்னுடைய சுய ஒழுக்கம், கட்டுப்பாடுகளிலிருந்து வெகு தூரம் விலகி, மக்களிடத்தில் ஒற்றுமையை உண்டாக்குவதற்குப் பதிலாக சாதி, மத, இன, மொழி ரீதியான வேற்றுமைகளையும்; அமைதியை உண்டாக்குவதற்குப் பதிலாக அருவாள், வன்முறைக் கலாச்சாரத்தையும்; நாட்டின் பண்பாடு, கலாச்சார உணர்வுகளைப் பேணி காப்பதற்குப் பதிலாக பாலிய உணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையிலும் முழுக்க முழுக்க எப்பொழுது திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டதோ, அதன் பின்புதான் சமூகத்தின் கோபத்திற்கு ஆளாகி நாடெங்கும் திரைப்படங்களுக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு போராடும் சூழல்கள் ஏற்பட்டன.</span></p><p><span style="color: #800180;">ஒரே மண்ணில் வாழும் மக்களிடத்தில் ஒரு பகுதியினரை உயர்ந்தவராகவும்; மற்றொருவரை தாழ்ந்தவராகவும், ஒரு குழுவைப் பெருமை உடையவராகவும், இன்னொரு குழுவை பெருமை குறைவானவராகவும், ஒரு குழுவை வீரம் செறிந்தவராகவும், ஆளத் தகுதியானவராகவும், 'ஆண்ட பரம்பரை' என்றும் திரைப்படங்கள் கொடுத்த முத்திரை பல்வேறு சமூகங்களுக்கிடையே பிணக்குகளை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தது. இதனால் ஏறக்குறைய 30 ஆண்டுக்காலத்திற்கு மேலாகத் தமிழகம் கலவர பூமியாகவே இருந்ததை எவரும் மறந்து விட முடியாது.</span></p><p><span style="color: #800180;">திரைப்படங்கள் மூலம் ஜனநாயகம்; சமத்துவம்; சகோதரத்துவ உணர்வுகள், தேசப்பற்றுகள் வளர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அதற்கு நேர்மாறாக இந்தியத் தேசத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குகளைப் போற்றி வளர்க்கக் கூடியதாகவும், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றிற்குப் புத்தம் புதிய உத்திகளை கற்றுக் கொடுப்பதற்கான தளங்களாகவும் அண்மைக்கால திரைப்படங்கள் மாறிவிட்டன. தனி மனித பிம்பங்களைக் கட்டியமைத்து அதை அரசியலுக்குப் பயன்படுத்துவது, குறுகிய காலத்தில் கோடிகளைக் குவிப்பது, குறிப்பிட்ட சில சாதி, மதங்களைப் போற்றுவது என்பது மட்டுமே திரைத்துறையில் பெரும்பாலானோரின் குறுகிய சிந்தனைகளாக மாறி உள்ளன.மேலும்,தமிழகத்தில் நிலவக்கூடிய பல்வேறு விதமான அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்களுக்கும் திரைப்படங்களே முதற்காரணமாக விளங்குகின்றன.</span></p><p><span style="color: #800180;">.ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த போதே இந்தியாவில் சட்டரீதியாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், 'அரிச்சந்திரா' என்ற திரைப்படத்தில் ”நான் ஆதியிலும் ……….. அல்ல, சாதியிலும் ……….. அல்ல, நீதியிலும் ……….. அல்லவே – நானே பாதியில் …………. ஆனேனே” என்று ஒரு சாதியைக் குறிப்பிட்டு டைட்டில் சாங் போடப்பட்டது.'அலிபாபாவும் 40 திருடர்களும்' என்ற திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அப்படங்களில் அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட போது சமூகங்கள் விழிப்பு பெறவில்லை.</span></p><p><span style="color: #800180;"> திரைக்கதைகளின் நீரோட்டத்தாலும், அதில் நடித்த பெரும் திரை ஆளுமைகளாலும் அவைகள் பெரிதாகவும் வெளியே தெரியவில்லை. அந்த திரைப்படங்கள் எல்லாம் வெளிவந்த காலகட்டத்தில் நாம் பிறக்கவே இல்லை. ஆனால், அக்காலகட்டங்களில் தான் தமிழகத்தின் மேடைகளில் பெரிய அளவிற்கு 'சாதி ஒழிப்பு' பிரச்சாரங்கள் நடைபெற்ற போதும், திரைப்படங்கள் மூலமாக அதிக அளவில் சாதி தீ வளர்க்கப்பட்டதை சாதி மறுப்பாளர்கள் ஏன் எதிர்க்கவில்லை என தெரியவில்லை.</span></p><p><b><span style="color: #800180;">ஆனால்,1990களுக்குப் பிறகு, திரைப்படங்களின் பெயர்களிலும், பாடல்களிலும், வசனங்களிலும், காட்சிகளிலும் சாதிய அம்சங்கள் வலிந்து புகுத்தப்பட்டன. "போற்றி பாடடி பெண்ணே, …………. காலடி மண்ணே" - "எசமான் காலடி மண்ணெடுத்து"– " திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா" போன்ற பாடல்கள் தமிழகமெங்கும் தமிழ் சாதிகளுக்குள் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று ஒருவருக்கொருவர் முட்டி மோதி இரத்தம் சிந்தும் நிலைக்குத் தள்ளியது.'மதயானை கூட்டம்' என்ற திரைப்படம் சாதி மாறி திருமணம் செய்த எண்ணற்ற இளைஞர்களையும், பெண்களையும் கௌரவக் கொலை செய்யக் காரணமாக அமைந்தது.'பாய்ஸ்' என்ற ஒரு திரைப்படத்தில் இளைஞர்கள் இடையே அபரிவிதமான பாலியல் உணர்வுகளைத் துண்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.நமது எதிர்ப்பிற்கு பின் சில காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டது. </span></b></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU1yQIxJ2ZgiF9wMk7orvCCVQAwqoIkJlvmMM0jZ02IFj7DxO0Hhm1zH9ILplK4wtcDHFwR8jagRwmFf1IiQiN12v7tQUMlWKR0mvCnD0_JgE8KWFhGVm66PtZxp4qfxbcvP9o8V3mFNU/s943/boyss.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="color: #800180;"><img border="0" data-original-height="943" data-original-width="871" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU1yQIxJ2ZgiF9wMk7orvCCVQAwqoIkJlvmMM0jZ02IFj7DxO0Hhm1zH9ILplK4wtcDHFwR8jagRwmFf1IiQiN12v7tQUMlWKR0mvCnD0_JgE8KWFhGVm66PtZxp4qfxbcvP9o8V3mFNU/w592-h640/boyss.jpg" width="592" /></span></a></div><span style="color: #800180;"><br /></span><p><span style="color: #800180;"><b>'சண்டியர்' என்று பெயரிடப்பட்ட படம் அரிவாள் கலாச்சாரத்திற்கும், கலவரங்களுக்கும் வித்திடும் என்பதால் நாம் கொடுத்த எதிர்ப்பின் காரணமாக அத்திரைப்பட பெயர் மாற்றப்பட்டது.நாம் நீதிமன்றம் வரை சென்றதால் 'கொம்பன்' திரைப்படத்தில் 72 வன்முறை காட்சிகள் நீக்கப்பட்டன. 'பாகுபலி' என்ற திரைப்படத்திலிருந்து நீதிமன்றம் மூலம் ஒரு சாதிய வார்த்தை நீக்கப்பட்டது. 'மண்டேலா' திரைப்படத்தில் ஒரு காட்சியை நீக்க ஒரு குறிப்பிட்ட பிரிவினர் போராடி வருகிறார்கள்</b>. 'தசாவதாரம்' படம் ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினரின் எதிர்ப்பை சந்தித்தது. 'மருதநாயகம்' இன்னும் வெளியே வரவில்லை. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வரலாற்றுத் திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க அனுமதிக்கப் படவில்லை. இந்திய அளவில் 'பத்மாவதி' என்ற திரைப்படம் பல எதிர்ப்புகளுக்குப் பிறகு 'பத்மாவத்' என்று பெயர் மாற்றி வெளியிடப்பட்டது. </span></p><p><span style="color: #800180;">நடிகை சர்மிளா தாகூர் விளிம்பு நிலை மக்களைத் தவறாகச் சித்தரித்ததால் இந்தியப் பட்டியலின துறையால் அழைத்து விசாரிக்கப்பட்டார். புகழேந்தி தங்கராஜின் 'காற்றுக்கென்ன வேலி' படம் நீதிமன்றம் சென்ற பிறகே வெளியானது. 'பரியேறும் பெருமாள் – அசுரன்' போன்ற திரைப்படங்களில் 'ஆண்ட பரம்பரை' என்ற சொல் சிலரின் எதிர்ப்புக்குப் பின் நீக்கப்பட்டது. 'தெய்வத்திரு மகன்' என்ற திரைப்படம் 'தெய்வத்திரு மகள்' ஆனது.'ஃபேமிலி மேன் 2' என்ற இணையத்தொடர் ஈழப்போராளிகளை இழிவு படுத்துவதாகவும்; கொச்சைப்படுத்துவதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது போன்று மக்கள் சென்சார்களை சந்தித்த படங்கள் இன்னும் எவ்வளவோ உண்டு.</span></p><p><span style="color: #800180;">சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சிறிதும் கணக்கிலே கொள்ளாமல் நாங்கள் பெரிய முதலீடு போட்டு விட்டோம் அதைப் பன்மடங்கு ஆக்குவதற்கு நாங்கள் எப்படிப்பட்ட திரைப்படத்தை வேண்டுமானாலும் எடுப்போம் என படைப்பாளிகள் மனம் போன போக்கில் செயல்படக்கூடாது என்பதற்கு மேற்குறிப்பிட்ட ஒரு சில நிகழ்வுகளே சாட்சிகள். ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது என்பது எளிதான காரியம் அல்ல எனவே,அந்த திரைப்படம் தயாரிக்கும் போதே அது ஏற்படுத்தும் தீய விளைவுகளைப் பற்றி கவனத்தில் கொண்டு கதைகள், காட்சிகள், வசனங்கள், பாடல்கள் இடம் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பு ஆகும்.</span></p><p><span style="color: #800180;">எனவே,சாதி, மத, பாலியல்; வன்முறைகள், தேசிய நீரோட்டத்திற்கு எதிரான சிந்தனைகளைத் தூண்டும் திரைப்படங்களை மறு தணிக்கை என்ற சட்டத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஒரு படம் திரைக்கு வந்த பிறகு அதைத் தடுப்பது கடினம்.இப்போது உள்ள சட்டத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதால்,ஒரு திரைப்படத்தை மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிடக் கூடிய இந்த அதிகார சட்டத் திருத்தம் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமானதாகும்.</span></p><p><span style="color: #800180;">.தரமான திரைப்படங்களை எடுக்கவும், அது குழந்தைகளைப் பாதிக்காத; ஆபாசம் இல்லாத; அருவருப்பில்லாத; கலாச்சார சீரழிவையும், சாதி, மத பேதத்தையும் உண்டாக்காத; தேசப்பற்றை வளர்க்கும் படங்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் வெளிவர இந்த 2021 திரைத்துறை திருத்தச் சட்டம் உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம்,திரைப்படத் துறையினரைத் திருத்தும் சட்டமாகவே இருக்கும் !</span></p><p><span style="color: #800180;">திரைப்படப் படைப்பாளிகளே! திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை! </span></p><p><b><span style="color: #800180;">டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,நிறுவனர் & தலைவர்,புதிய தமிழகம் கட்சி.05.07.2021</span></b></p><p>மீண்டும் சந்திப்போம். </p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-58459854100263147032021-07-04T13:09:00.003+05:302021-07-04T13:09:50.298+05:30சண்டேன்னா மூணு! #அரசியல் #தேர்தல்வானிலை #என்னமோநடக்குது <p>அரசியல் ஏன் எனக்கு எப்போதுமே பிடித்தமானதாக இருக்கிறதென்றால், எதிர்பாராதது எதுவோ அதையே எதிர்பார்ப்பது அரசியலில் மட்டுமே சாத்தியம்! இதனால் தானோ என்னவோ நம்மூர் அரசியலில் சின்னச்சின்ன மாற்றங்கள் தெரிந்தால் கூட குய்யோமுய்யோவென சோனியா காங்கிரஸ் கூவுவதும், என்னமோ நடக்கப் போகிறதென்று மற்றவர்கள் திகிலுடன் காத்திருப்பதும் தொடர் கதையாகிக் கொண்டு வருகிறது. வெள்ளியன்று அன்றுஉத்தராகண்ட் மாநிலமுதல்வர் தீரத் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, <b><a href="https://timesofindia.indiatimes.com/india/spotlight-on-mamata-banerjee-after-tirath-rawat-resigns-as-uttarakhand-cm/articleshow/84088485.cms" target="_blank">மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியைக் குறிவைக்கத் தான்</a></b> என சோனியா காங்கிரஸ் அலற ஆரம்பித்துவிட்டது. கொரோனா காலம் என்பதால் இடைத்தேர்தல் சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்வதற்கு முன்பாகவே தீரத் ராவத் காரணம் சொல்லி ராஜினாமா செய்திருப்பதுதான்! தீரத் ராவத் கடந்த மார்ச்சில்தான் உத்தராகண்ட் முதல்வராகப் பொறுப்பேற்றார். சட்ட சபை உறுப்பினராக இல்லாத அவர் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடந்து அதில் ஜெயித்தாக வேண்டும். தற்சமயம் MLA வாக இல்லாத மம்தா பானெர்ஜியும் கூட அதே மாதிரி 6 மாதங்களுக்குள் தேர்தல் நடந்து வெற்றி பெற்றாகவேண்டும் என்கிற ஒப்பீடு சரிதான்! காங்கிரஸ் கட்சி இதில் அலறுவதுதான் வேடிக்கை! விநோதமும் கூட!</p><p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/dZbEz-DGaIM" width="320" youtube-src-id="dZbEz-DGaIM"></iframe></div><p><br /></p>சோனியா காங்கிரஸ் அதிகம் கவலைப்படவேண்டிய பஞ்சாப் மாநில கட்சி விவகாரத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என்பது இன்னொரு அரசியல் வினோதம். சோனியா & கோ தயவில்லாமல் 2017 இல் பஞ்சாப் தேர்தலில் ஜெயித்துக் காட்டியவர் அமரீந்தர் சிங் என்பது ராகுல் காண்டி வகையறாவுக்கு உறுத்தலாக இருப்பதில், உட்கட்சிப்பூசல் காரணமாக வருகிற 2022 தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை என்று சோனியாவும் மக்களும் நினைக்கிற மாதிரித் தெரிகிறது, இந்த லட்சணத்தில் 44 ஆண்டுகளாகக் கைவிட்டுப் போன மேற்குவங்கம் குறித்து கூக்குரல் எழுப்புவது, காங்கிரசால் மட்டுமே நடத்திக்காட்ட முடிகிற அரசியல் தமாஷா!<p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdq5ehRMkcxO2q3A_IHPcaKadVIi-DCe6wHPrUdmRZR87NcaDr-L8meA3y3rZXHdcgp0DjHA0TPTidb2iQPNgvLgO9Z2tQ0ZhT2DAD_IuMrbWuv9acloo3FfwH-2FYQDE3UbVutss1no0/s1200/IE+comi+kapoor.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="667" data-original-width="1200" height="356" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdq5ehRMkcxO2q3A_IHPcaKadVIi-DCe6wHPrUdmRZR87NcaDr-L8meA3y3rZXHdcgp0DjHA0TPTidb2iQPNgvLgO9Z2tQ0ZhT2DAD_IuMrbWuv9acloo3FfwH-2FYQDE3UbVutss1no0/w640-h356/IE+comi+kapoor.jpg" width="640" /></a></div><br />இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் கூமி கபூர் எழுதி வரும் அரசியல் கிசுகிசு பத்தியில் ஷரத் பவார் பற்றி ஒரு சுவாரசியமான ஊகத்தைச் சொல்கிறார். பிரசாந்த் கிஷோருடன் பவார் தனியாகச் சந்தித்தது 2022 இல் சட்டசபைத்தேர்தல்களை அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக ஷரத் பவார் நிற்பது பற்றித்தான் என்கிறார். 80வயதான ஷரத் பவாருக்கு அதில் ஆசை இருந்தாலும் நடக்குமா என்பது உத்தரப்பிரதேசத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது என்று சொல்வதே, பகல்கனவு என்பதையும் சேர்த்துச் சொல்வதாக இருக்கிறதோ? (சமீபத்தைய உள்ளாட்சித் தேர்தல்களில் பிஜேபி மொத்தமுள்ள 75 இடங்களில் பிஜேபி 67 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது) கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாகத்தில் ஷரத் பவாருக்கு இதுவரை இருந்த ஆதிக்கம், சமீபத்தில் நடந்த தேர்தலில் பிஜேபியால் உடைக்கப்பட்டிருப்பதும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறவெல்லாம் வேண்டாம், சில திருத்தங்கள் செய்தால் போதும் என்று பவார் பல்டி அடித்திருப்பதும் தேசிய அளவில் மாற்றம் வருகிறதோ இல்லையோ, மகாராஷ்டிரா அரசியலில் ஏதோ மாற்றம் வருவதற்கான அறிகுறி என்றுதான் தோன்றுகிறது.<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6AHqtXSHoCuUlea6EwQTQcPw167zM349HxXPpGFkkRkygbPcfX7LALXZAZJPfl_cH1g8E4fIuz4_9axE9Ve_r4ecjLa9yNxq3tI9sWaCXnsfCXOqRFYmvu0nU4dGv6LXnPLAOkMvcm5E/s945/che+uday.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="630" data-original-width="945" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6AHqtXSHoCuUlea6EwQTQcPw167zM349HxXPpGFkkRkygbPcfX7LALXZAZJPfl_cH1g8E4fIuz4_9axE9Ve_r4ecjLa9yNxq3tI9sWaCXnsfCXOqRFYmvu0nU4dGv6LXnPLAOkMvcm5E/w640-h426/che+uday.jpg" width="640" /></a></div><br /><p>இளவரசருக்குத் துதிபாடுவது திமுகவினருக்கு சரியாகத் தோன்றலாம்! ஆனால் இப்படி அதீதமான ஆர்வக் கோளாறுகள் பெரும் சேதத்தைத்தான் ஏற்படுத்தும் என்பது அனுபவம். என்னுடைய வருத்தமெல்லாம் இப்படி மதுரையின் பெயரைக் கெடுக்கிறமாதிரியே புற்றீசல் மாதிரிக் கிளம்பி வருகிறார்களே என்பது மட்டும்தான்! போஸ்டர் அடித்தே போஸ்டைப்பிடிப்பது ஒச்சுபாலு காலத்திலிருந்தே மதுரை திமுகவைப்பிடித்திருக்கும் பெருவியாதி.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmTbdQVVP2zQli99LgTg2Iia0YMQ5vROV_NIi_bhhZ8kSAce777x7F8Ks-UyibgS0crehMKF7Lctesrfty7hvQer87PWu8AGSH99z3Err5hYq6HNXx9AIX-TYtihUW9cvA9n_JMKqzfR4/s706/debate.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="493" data-original-width="706" height="446" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmTbdQVVP2zQli99LgTg2Iia0YMQ5vROV_NIi_bhhZ8kSAce777x7F8Ks-UyibgS0crehMKF7Lctesrfty7hvQer87PWu8AGSH99z3Err5hYq6HNXx9AIX-TYtihUW9cvA9n_JMKqzfR4/w640-h446/debate.png" width="640" /></a></div><br /> <b><a href="https://youtu.be/SFnQa5LOHVY" target="_blank">கவனித்துப்பார்த்த ஒரு விவாதம்</a></b><p></p><p>மீண்டும் சந்திப்போம். </p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-65035951427278638842021-07-01T19:34:00.000+05:302021-07-01T19:34:32.995+05:30சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் செய்திகள்! கொஞ்சம் விமரிசனம்! <p>ஆரூடம் சொல்வதற்கும் அரசியல் விமரிசனத்திற்கும் என்னசம்பந்தம்? இரண்டுமே புருடா தான் என்பதைத் தாண்டி வேறென்ன இருக்க முடியுமாம், சொல்லுங்கள்! டெல்லி R ராஜகோபாலன் என்றொரு பத்திரிகையாளர், தன்னுடைய ஊகங்கள் கற்பனைகளையே பரபரப்புச் செய்தியாக்கி வருகிறமாதிரி இருப்பதில் என் மனதில் எழுந்த கேள்வியும் நானே பதிலும் நானே! என்பதாக இன்றைய அரசியலைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2bXQXDzqoO5mlTZqeDnn-Cj3GQrC5lbP7VBGmPNGAIoVZgOzcSRBOslbeT6QMSyv5FZzQ_kzAAvl_rj35nz2YVzjO3ZXrvKzw9Oq9pq351TXYz7XETn1OcBEUC9TWtiwwu8-w_cnRv4Q/s1080/ondriyam+bbc.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2bXQXDzqoO5mlTZqeDnn-Cj3GQrC5lbP7VBGmPNGAIoVZgOzcSRBOslbeT6QMSyv5FZzQ_kzAAvl_rj35nz2YVzjO3ZXrvKzw9Oq9pq351TXYz7XETn1OcBEUC9TWtiwwu8-w_cnRv4Q/w640-h640/ondriyam+bbc.jpg" width="640" /></a></div><br /><p>பிபிசி தமிழுக்கு ரொம்பக் கவலை! இந்தக் கழிசடை ஊடகத்துக்கு என்ன பதில் சொல்லலாம்? சொல்லுங்கள்! </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/_vX-DR0p8EE" width="320" youtube-src-id="_vX-DR0p8EE"></iframe></div><br />தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அந்த நாட்களில் டாக்டர் தமிழிசை முழங்கிக் கொண்டிருந்தது மகஇக மாதிரியான நக்சலைட் குறுங்குழுப் பாடகர் கூட கேலி செய்கிற மாதிரி இருந்தது, அப்புறம் என்ன ஆயிற்று? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வாய் திறக்குமுன் இதைக் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்.<p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheNnXfCiXSCF7pk-p0BtATyvHschGYAvmvEBcYT37ZQDHrOmDrxEW4v4BBfz0AfppF6BoK6y42qLJ3QoPnt_rH9QAfFGhEM0K4c_yMRfTXh-FFIdR9d4Zl3ZcoH6emyMTKQt54qZBjM_0/s1080/vanathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheNnXfCiXSCF7pk-p0BtATyvHschGYAvmvEBcYT37ZQDHrOmDrxEW4v4BBfz0AfppF6BoK6y42qLJ3QoPnt_rH9QAfFGhEM0K4c_yMRfTXh-FFIdR9d4Zl3ZcoH6emyMTKQt54qZBjM_0/w640-h640/vanathi.jpg" width="640" /></a></div><br />இப்படி அடித்துச் சொல்லத் தெரிந்தவருக்கு சட்ட சபையில் கொங்கு Iceவரன் ஜெய் ஹிந்த் சர்ச்சையைக் கிளப்பிய போது எதுவுமே சொல்லத் தோன்றவில்லை என்பது என்னவகையிலான பரிதாபம்? சொல்லுங்கள்!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA2p33HeGFtwujNLWoaC5SElr8DjH4ZeoA06Ikq-E2Dc2ZePeZF_WGgHBCTW-unm1cGCTM1HhonIf_H2pR01dqH7Zm6ug3mtl99dT9xS19tRJv98SZEXTEuNCbJFCXyIWS1B9v4vRMJDM/s436/kalam+kattam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="404" data-original-width="436" height="594" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA2p33HeGFtwujNLWoaC5SElr8DjH4ZeoA06Ikq-E2Dc2ZePeZF_WGgHBCTW-unm1cGCTM1HhonIf_H2pR01dqH7Zm6ug3mtl99dT9xS19tRJv98SZEXTEuNCbJFCXyIWS1B9v4vRMJDM/w640-h594/kalam+kattam.png" width="640" /></a></div><br /><p>ஊராட்சி ஒன்றிய அரசின் கணக்கப்புள்ள பேசுவதை இன்று மாலை சிறிதுநேரம் கேட்க நேரிட்டதில் மேலே ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன் சொல்கிற காலகட்டம் எல்லாம் போய் #கஷ்டம் #காலம் ஆகிவிட்டதாகவே தோன்றுவது எனக்குமட்டும் தானா? சொல்லுங்கள்!</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikOqmGSCok8cVYKMVlkihnLu-IhNTs6VTWvTAf7A3VHz9UMRm7gUTR2sulOhHUxJYsd0lu0rXArwPX9tsGt9ai71oO6m8CroU5IocjQVp4GUSYqKsfZ5ntCS7qocPkRPhAo0YA48FwmKo/s1440/surendra.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="742" data-original-width="1440" height="330" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikOqmGSCok8cVYKMVlkihnLu-IhNTs6VTWvTAf7A3VHz9UMRm7gUTR2sulOhHUxJYsd0lu0rXArwPX9tsGt9ai71oO6m8CroU5IocjQVp4GUSYqKsfZ5ntCS7qocPkRPhAo0YA48FwmKo/w640-h330/surendra.jpg" width="640" /></a></div><br />மவுன்ட்ரோடு மாவோ நாளிதழில் சுரேந்திரா வரைந்த இன்றைய கார்டூன். ரொம்ப சாமர்த்தியம்தான்! இவர் போன்றவர்களுக்காகவே <span style="background-color: white; color: #212121; font-family: Quicksand, Helvetica, Arial, sans-serif; letter-spacing: -0.04em;">After the Galwan clash last year, India has turned the Indo-Tibetan border into a fortress with 200,000 troops and warships to flank them என்று <b><a href="https://tfiglobalnews.com/2021/07/01/after-the-galwan-clash-last-year-india-has-turned-the-indo-tibetan-border-into-a-fortress-with-200000-troops-and-warships-to-flank-them/?fbclid=IwAR2WKtp5ZnpmYj6mdC5q7ntUVlfK3SNxDTbn6Ja8YFpz0VWx4DMg8aXTcj0" target="_blank">இந்தப்பக்கத்தில் விரிவாகவே செய்தி</a></b> சொல்கிறார்கள். சுரேந்திரா திருந்த என்ன செய்யலாம்? சொல்லுங்கள்! </span><p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_YHcPxZ0GtYaQjvqT1GgbJDmQGoS2uwsDg8w6u63SI5fGFlH33LE0m8TC2MDZ796YGoFw3zsITzofGVyj-D1nRNZA_BI2lfXOtRyVRLGt5bHFX6XHFZF0t1ey1d9MI2T055cb_2N2bSE/s1200/doctors+day.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="1200" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_YHcPxZ0GtYaQjvqT1GgbJDmQGoS2uwsDg8w6u63SI5fGFlH33LE0m8TC2MDZ796YGoFw3zsITzofGVyj-D1nRNZA_BI2lfXOtRyVRLGt5bHFX6XHFZF0t1ey1d9MI2T055cb_2N2bSE/w640-h426/doctors+day.jpg" width="640" /></a></div><br /><span style="background-color: white; color: #212121; font-family: Quicksand, Helvetica, Arial, sans-serif; letter-spacing: -0.04em;">2006 மே மாதம் இருமுறை அடுத்தடுத்து மாரடைப்பு வந்து பைபாஸ் சர்ஜரி செய்துகொள்ள வேண்டிய சூழல். எங்கே சிகிட்சை எடுத்துக் கொள்ளலாம் என்பதில் நிறையக் குழப்பமும் தயக்கமும் இருந்தது. அன்றைக்கு மதுரை அப்போல்லோ மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக இருந்த </span><span style="background-color: white; color: #212121; font-family: Quicksand, Helvetica, Arial, sans-serif; letter-spacing: -0.88px;">Dr.</span><span style="background-color: white; color: #212121; font-family: Quicksand, Helvetica, Arial, sans-serif; letter-spacing: -0.04em;">. செல்வகுமார் மிகப்பொறுமையாக என்னுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். அறுவை சிகிச்சையை Dr. ஸ்ரீதர் சிறப்பாகச் செய்தார். 2006 ஜூலையில்தான் பைபாஸ் சர்ஜரி நடந்தது. 2007 ஜூலையில் தான் நான் முதன்முதலாக மருத்துவர் தின வாழ்த்துக்களை மின்னஞ்சலில் அனுப்பினேன் என்பது கொசுறுக் செய்திதான். மருத்துவர், செவிலியர்களுடைய அருமை மிகவும் நெருக்கடியான நேரங்களில்தான் நமக்கே உறைக்கிறது. மருத்துவர் தினத்தில் எனக்கு சிகிட்சை அளித்த மருத்துவர், செவிலியர் என்றில்லாமல் ஒட்டுமொத்த மருத்துவர், செவிலியர், இதர பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்.தெரிவித்துக் கொள்கிறேன்.</span><p></p><p><span style="background-color: white; color: #212121; font-family: Quicksand, Helvetica, Arial, sans-serif; letter-spacing: -0.04em;">மீண்டும் சந்திப்போம். </span></p><p> </p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-28375313219866174692021-06-30T20:17:00.000+05:302021-06-30T20:17:05.803+05:30#தலைமைப்பண்பு ஊடகங்களில் வாசகர் கடிதம்! P V நரசிம்மராவ்!<p>பள்ளி மாணவனாக செய்தித்தாட்களை வாசிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்தே செய்திகளோடு தலையங்கம், ஆசிரியருக்கு வாசகர் கடிதம் பகுதிகளை ஒரு எழுத்து விடாமல் படிக்கிற பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது. இன்றும் செய்திகளுக்கு வாசகர்கள் எழுதும் பின்னூட்டம் ஒன்று விடாமல் வாசிப்பதுண்டு தான்! இவையில்லாமல் செய்தியை முழுதாய் வாசித்த திருப்தி கிடைப்பதில்லை என்பது என்னுடைய அனுபவம்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4vXZiqAXuqvdMlQne2XRwxEkwUmSh9Kgs6eUgVKzCF5-hbp60QxgkAg4xMxgTc4uo6r_LXMV0S1VN9JYXqU6P28Y-xePJK25Q6zYU_CrH3iTIyCO0dOr2ntHC0iS7WKpz5z51ZISNpzQ/s1080/krishnasamy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4vXZiqAXuqvdMlQne2XRwxEkwUmSh9Kgs6eUgVKzCF5-hbp60QxgkAg4xMxgTc4uo6r_LXMV0S1VN9JYXqU6P28Y-xePJK25Q6zYU_CrH3iTIyCO0dOr2ntHC0iS7WKpz5z51ZISNpzQ/w640-h640/krishnasamy.jpg" width="640" /></a></div><br /><p><b>தினமலர் நாளிதழுக்கு ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:</b> <span style="color: #2b00fe;">தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, 57 ஆண்டுகளாய் செய்யாததை, அவரது மகனான முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்றாக்கி புளகாங்கிதம் அடைந்துள்ளார்! என்ன தான் அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி 'சப்பைக்கட்டு' கட்டினாலும், அதில் தி.மு.க.,வினரின் தீராத பிரிவினை மோகம் அப்பட்டமாய் தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான், சுதந்திரத்திற்கு துாண்டு கோலாய் இருந்த 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை மட்டம் தட்டும் முயற்சி. சட்டசபையிலேயே, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவரை அப்படி பேச செய்து, முதல்வர் ஸ்டாலின் ரசித்துள்ளார்.</span></p><p><span style="color: #2b00fe;">கடந்த நுாற்றாண்டில் நடந்த போர், பிரிவினை ஆகியவற்றால், உலகம் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள், நம் கண் எதிரே உள்ளன. பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வெளிவர முடியாமல் திணறுகிறது. வங்கதேசத்தில் பழமைவாதிகளின் சேட்டைகளை ஒடுக்க முடியவில்லை. சீனாவின் பிடியில் சிக்கி, ஜனநாயகத்தை தொலைத்து விட்டது, நேபாளம். இலங்கை பற்றி சொல்லவே வேண்டாம்.</span></p><p><span style="color: #2b00fe;">பிரிவினை தேடும் எந்த நாடும் முன்னேறியதில்லை. அங்கு சர்வாதிகாரமும், பயங்கரவாதமும் தான் இருக்கும். நம் மாநிலங்களிடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதை தீர்ப்பதற்கே, மத்திய அரசுக்கு நேரம் போதவில்லை. இதனிடையே, <b>ஜல்லிக்கட்டு, இடஒதுக்கீடு, நெடுஞ்சாலை அமைத்தல், 'நீட்' என, அனைத்து விஷயத்திலும் தமிழகம், தேசிய நீரோட்டத்திலிருந்து விலகியே நிற்கிறது.</b> இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பயங்கரவாதம், மாநில சுயாட்சி, மத வெறுப்பு, பிரிவினை எண்ணம் முதலியவற்றை ஊக்குவிக்காமல் இருப்பதே, தமிழகத்திற்கு நல்லது.</span>என முடித்திருக்கிறார் </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjBaI9sdqGUCtw0SZsWEFu6ROx7iD8DANmwXJZLcpJr-B4zCrXPiLIbtPfGGAHLiBXywPHz-JlSK596AdwM6x8-mRGYqJbkT1pOfeaRWieeuE5NikOW1a1AQv3oRoXU4px2pgjiUtl-14/s701/PVN.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="701" data-original-width="438" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjBaI9sdqGUCtw0SZsWEFu6ROx7iD8DANmwXJZLcpJr-B4zCrXPiLIbtPfGGAHLiBXywPHz-JlSK596AdwM6x8-mRGYqJbkT1pOfeaRWieeuE5NikOW1a1AQv3oRoXU4px2pgjiUtl-14/w400-h640/PVN.jpg" width="400" /></a></div><br />முன்னாள் பிரதமர் P V நரசிம்மராவ் பிறந்த நூற்றாண்டு இது. இந்தியப்பிரதமர்களில் தகுதிக்கும் மீறி மிகவும் வியந்தோதப்பட்டவர் நேரு என்றால் தகுதிகள் நிறைய இருந்தும் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டவர் நரசிம்ம ராவ் என்பது சுதந்திர இந்தியாவின் சீரழிந்த அரசியலின் சாபக்கேடுதான் இல்லையா?<p></p><p><span style="color: #2b00fe;">தொங்கு நாடாளுமன்றம், ராஜீவ் காந்தி படுகொலை, பாதாளத்தில் கிடந்த பொருளாதாரம் போன்ற சிக்கல்களுக்கிடையில் பிரதமரானவர் பி.வி.நரசிம்ம ராவ். ஆயினும் அவர் பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானது, கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்தரும் வகையில் முறையே 73-வது, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்ததாகும். <b>நரசிம்ம ராவ் பிரதமரானபோது கிராம வளர்ச்சித் துறையின் கேபினட் அமைச்சர் பொறுப்பையும் அவர் வகித்தார். அவருக்கு முன்னரும் பின்னரும் பிரதமர் ஒருவர் கிராம வளர்ச்சித் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்ததில்லை</b>.</span></p><p><span style="color: #2b00fe;">விடுதலை பெற்ற இந்தியாவினுடைய அரசமைப்பின் அடித்தளமாக, தன்னாட்சி பெற்ற வலுவான கிராமப் பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட வேண்டும் என காந்தி வலியுறுத்திவந்தார். அரசமைப்பு நிர்ணய சபையில் இது குறித்த ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க முடியாததால், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிய இடம் இல்லாமலே போயிற்று. ராஜீவ் காந்தி கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார். மக்களவையில் நிறைவேறிய மசோதாவானது மாநிலங்களவையில் தோல்வியுற்றது. <b>நரசிம்ம ராவ் பிரதமரானவுடன்</b> கிராம வளர்ச்சித் துறையின் அதிகாரிகளை அழைத்து, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசமைப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஒன்றைத் தயாரிக்கும்படி பணித்தார். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். மேலும், மாநிலச் சட்டமன்றங்களில் பெரும்பான்மையான சட்டமன்றங்கள் இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்துத் தீர்மானங்களை இயற்ற வேண்டும். நரசிம்ம ராவின் சிறுபான்மை அரசால் இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது. அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஒன்றே இதைச் செய்து முடிக்கும் ஒரே வழி என்பதில் பிரதமர் தெளிவாக இருந்தார் </span>என்று ஆரம்பிக்கும் இந்தக்கட்டுரையை <b><a href="https://www.hindutamil.in/news/opinion/columns/687065-narasimha-rao-1.html" target="_blank">இந்து தமிழ்திசை தளத்தில்</a></b> முழுமையாக வாசித்துப் பாருங்களேன்! <span style="color: #2b00fe;">தமிழ்நாட்டைச் சார்ந்த திமுக - அதிமுக பிரதிநிதிகள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்கள் தருவதைத் தாங்கள் வரவேற்றபோதும் <b>வலுவான மாவட்டப் பஞ்சாயத்துகளை உருவாக்குவதைக் கொள்கைரீதியாக எதிர்ப்பதாக</b>க் கூறினார்கள்</span> என்பது போகிறபோக்கில் சொல்லப் பட்டது தானா? </p><p>தலைமைப்பண்புக்கு உதாரணமாக நரசிம்ம ராவ் என்கிற ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிற விதமாக இந்தக் கட்டுரையை எழுதிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.ரகுபதி அவர்களுக்கு நன்றியுடன்! பிரசுரம் செய்த இந்து குழுமத்துக்கும் நன்றி. </p><p>மீண்டும் சந்திப்போம். </p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-2790396685871798642021-06-29T16:58:00.040+05:302021-06-29T17:15:11.751+05:30நீட் தேர்வு ரத்து என்கிற அரசியல்! உயர் நீதிமன்றம் வைத்த கொட்டு! <p><span face="Noto Sans Tamil, Noto Sans, Roboto, sans-serif" style="color: #2e2e2e;">தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதில் நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனவும் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் </span><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;">வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல .</span><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;">நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</span></p><p><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;">நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. </span><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;">மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையைப் புறந்தள்ளும் வகையில், தமிழக அரசு குழு அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.</span></p><p><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;">ஆனால், <b>நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர்</b>. <b>மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர்.</b> அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர் என்பது இன்றைய செய்தி. விடியல் அரசுக்கு நீதிமன்றம் வைத்திருக்கிற முதல் குட்டும் கூட. </span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"> <iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/rzepw7eV1nM" width="320" youtube-src-id="rzepw7eV1nM"></iframe></div><br /><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;">சென்னை உயர்நீதமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ‘ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்ட போதும் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் எதன் அடிப்படையில் இந்த குழுவை ஏற்றார் என கேள்வி எழுப்பினார். 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக ஏ.கே.ராஜன் தலைமையிரான குழு கூறுகிறது. ஒரே கணிணியில் இருந்தும் 1000-த்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் எனவும் உதயநிதி ஸ்டாலின் மனு கொடுப்பதை போல் படம் எடுத்து அதை செய்தியாக வெளியிடுகிறார்கள். உண்மையில் </span><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="box-sizing: border-box; color: #2e2e2e; font-weight: 700;"><a href="https://tamil.news18.com/news/tamil-nadu/high-court-question-regarding-neet-exam-ak-rajan-team-issue-to-tamil-nadu-government-skd-491939.html" style="box-sizing: border-box; color: #e33128; text-decoration-line: none;">இது தி.மு.க குழுவா?</a></span><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;"> அல்லது நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். </span><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;">தொடர்ந்து பேசிய அவர், ‘தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்காக நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் நீட் தேர்வை ஏற்கும் நிலையில் தமிழகம் மட்டும் ரத்து செய்திட முடியாது என குறிபிட்ட கரு.நாகராஜன் இனியும் ஏழை மாணவர்வளின் மருத்துவக் கனவில் விளையாடக் கூடாது எனவும் நீட் தேர்வுக்கு பிறகு 405 ஏழை மாணவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நீட் தேர்வில் சமூக நீதி காக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். <b><a href="https://youtu.be/wE5bu3hlezo" target="_blank">அமைச்சர் மாசு இதற்கு பதிலளித்து பேசிய வீடியோ</a> </b>17 நிமிடம் </span><p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFUhRyX9kYsXsMqJ-TGSYDr6Ch3fbodQnyZldiTA9jYdn3FIGb0QzzPiq3XB0cb6dRGyyXe0GueQwaqzk9Y9UKbRkhOMPB_0Vj9m7w-JyFXbiwQjmGapcAoz9A8MLFZEzL-yuDdIxnNlw/s484/jeyakumar.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="341" data-original-width="484" height="450" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFUhRyX9kYsXsMqJ-TGSYDr6Ch3fbodQnyZldiTA9jYdn3FIGb0QzzPiq3XB0cb6dRGyyXe0GueQwaqzk9Y9UKbRkhOMPB_0Vj9m7w-JyFXbiwQjmGapcAoz9A8MLFZEzL-yuDdIxnNlw/w640-h450/jeyakumar.png" width="640" /></a></div><br /><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;">இந்தமாதிரி கமிஷன்கள் நியமிக்கப்படுவது ஏன், எதற்கு என்பதெல்லாம் அரசியல் LKG க்களுக்குமே தெரிந்த விஷயம். நண்பர் ஜெயகுமார் ஸ்ரீனிவாசன் கமிஷனின் அடிமடியிலேயே கைவைக்கச் சொல்வது </span><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;">முழுதாக</span><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;"> ஏற்றுக் கொள்கிற மாதிரி இருக்கிறது. </span><div><span style="color: #2e2e2e;"><br /></span><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEganDrsOH1TnadolguRVRu7lc4HiOMb0DexEiRzU4PUfIzeJMS9ru68KlMwbcedQgC0glCDPodfzGltxnsJNmqFZyw8RHs8rVs_QCHkeVgmS-WDuhn20U7QpiFnA5CqMqdV2uBan8MzXo4/s487/one+ration.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="281" data-original-width="487" height="370" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEganDrsOH1TnadolguRVRu7lc4HiOMb0DexEiRzU4PUfIzeJMS9ru68KlMwbcedQgC0glCDPodfzGltxnsJNmqFZyw8RHs8rVs_QCHkeVgmS-WDuhn20U7QpiFnA5CqMqdV2uBan8MzXo4/w640-h370/one+ration.png" width="640" /></a></div><div><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;"><br /></span></div><div><span face=""Noto Sans Tamil", "Noto Sans", Roboto, sans-serif" style="color: #2e2e2e;">நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மீண்டும் சந்திப்போம். </span><p></p></div></div></div><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-90115355733737188352021-06-26T19:02:00.002+05:302021-06-26T19:17:55.945+05:30இட்லி வடை பொங்கல்! #84 #பிரிவினைஅரசியல் #ஊழல்அரசியல் #பரஸ்பரசொறிதல் <p>கடந்த வியாழக்கிழமை டில்லியில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் செய்து வரும் கட்சித்தலைவர்களைச் சந்தித்துப் பேசியதில், உள்ளே நடந்த மூன்று மணிநேர விவாதத்தில் என்ன நடந்தது? ஃபரூக் அப்துல்லா, மகன் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி இவர்களெல்லாம் மாநில முதல்வர்களாக இருந்தவர்கள். உண்மையைச் சொல்லப் போனால் <b>காஷ்மீர் பிரச்சினை</b> என மிகைப்படுத்தப் பட்ட ஒன்றை ஊதிப்பெரிதாக்கியவர்கள் இவர்கள்தான்! மக்களுக்காகப் பேசாமல், சுயநலங்களுக்காக ஆட்சியும் அதிகாரமும் வேறு எவர் கைக்கும் போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் என்பதை வெளியே வந்து ஊடகங்களிடம் வீராவேசமாகப் பேட்டி அளித்து வெளிப்படுத்தியவர்கள். </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/LqFGao1Kz-k" width="320" youtube-src-id="LqFGao1Kz-k"></iframe></div><p></p><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px;"><p></p><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px;"><p style="text-align: center;"><span style="color: red;">வீடியோ 12 நிமிடம்</span> </p></blockquote><p></p></blockquote><p>ஃபரூக் அப்துல்லா ஊர் போய்ச்சேர்ந்ததும் பொது வாக்கெடுப்பு, நேரு முதல் நரசிம்மராவ் வரை பிரதமராக இருந்தவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று கிளிப்பிள்ளை மோடுக்குப் போய்விட்டார். மகன் ஒமர் அப்துல்லாவோ <span style="color: red; font-family: verdana;"> “It took the <a href="https://indianexpress.com/about/bjp/" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: 0px 0px; background-repeat: initial; background-size: initial; box-sizing: border-box; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; vertical-align: baseline;">BJP</a> 70 years to fulfill its political agenda for (Article) 370. Our struggle has just started. We don’t want to fool people by telling them we will get 370 back in these talks. It will be foolish to expect 370 will be back — there has been no indication it will be restored by the current government.” </span><span style="font-family: verdana;">என்று <b><a href="https://indianexpress.com/article/india/omar-abdullah-national-conference-article-370-jammu-and-kashmir-narendra-modi-7376251/" target="_blank">இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டி </a></b>கொடுக்கிறார் என்றால் எங்களிஷ்டத்துக்கு விடாவிட்டால் பிரிவினை பேசவும், துணைபோகவும் தயங்கமாட்டோம் என்கிற தொனி அப்பா மகன் இருவருடைய பேச்சிலும் இருக்கிறது. இங்கே தமிழகத்தில் கூட 1920 நீதிக்கட்சி அரசாண்ட கதையின் நீட்சியாக அறிவித்துக் கொண்டது, ஒன்றிய சர்ச்சை முதல் ஜெய்ஹிந்த் இடம் பெறாததற்கு பாராட்டுரை என்று J & K அரசியல் வாதிகளுடைய சாயல் நிறையவே தெரிகிறதோ?</span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvlYWNqSnwjF_l_MMeEEBrbN9-cBYUuOwocXgCACXy3BOUx8GAZASQij3OKtiq-tkFOzBfnZw24NrREUwtNxlMheVDTT6qTDb7I1LXgVzLkdEgbERbufoSJVgBWJagDf_EsgFOWcudKHY/s720/KK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="699" data-original-width="720" height="622" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvlYWNqSnwjF_l_MMeEEBrbN9-cBYUuOwocXgCACXy3BOUx8GAZASQij3OKtiq-tkFOzBfnZw24NrREUwtNxlMheVDTT6qTDb7I1LXgVzLkdEgbERbufoSJVgBWJagDf_EsgFOWcudKHY/w640-h622/KK.jpg" width="640" /></a></div><br /><span style="font-family: verdana;"><b>புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமியின் கேள்வியில் நியாயமான சந்தேகம் எழுகிறது. ஆளுநருக்கு இது தொடர்பாகக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். </b></span><p></p><p><span style="font-family: verdana;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: verdana;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqDIhJ1NYf6tSe4U-Tw8pjRiCiAZUFcfijbUgRmDEVi6EhlOVlJHQvyIQRF_LRF7e4AfnLol7k046JJbs0RNRrR2OMpmtwkPHPRwn5mA57nSK9Q5XFATybIw0P6ArDxvkpqFfsTglbEko/s880/RG+oundation.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="880" height="524" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqDIhJ1NYf6tSe4U-Tw8pjRiCiAZUFcfijbUgRmDEVi6EhlOVlJHQvyIQRF_LRF7e4AfnLol7k046JJbs0RNRrR2OMpmtwkPHPRwn5mA57nSK9Q5XFATybIw0P6ArDxvkpqFfsTglbEko/w640-h524/RG+oundation.jpg" width="640" /></a></span></div><span style="font-family: verdana;"><br /><b>சோனியா காந்தி வகையறா ஊழலின் மொத்த உருவம்</b> என்பதை 2004-2014 வரை <b>ஐமுகூ</b>ட்டணி மன்மோகன் சிங் அரசு நிரூபித்தது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்று சோனியா ஆரம்பித்தற்கு மன்மோகன் சிங் அரசு 100 கோடி நிதி கொடுத்தது. அரசுநிதி பெறுகிற நிறுவனங்கள் எதுவானாலும் சில நிபந்தனைகளும், அரசின் தணிக்கையும் (audit) உண்டு. ஆனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அரசின் நிபந்தனைகள் தணிக்கை எதற்கும் உடன்படவில்லை. அதுவும்போக வருகிறவன் போகிறவனிடமெல்லாம் நிதி நன்கொடையாக வாங்கி குவித்ததில் சீனர்களின் சார்பு நிறுவனமும் உண்டு. ஜாகிர் நாயக் மாதிரி மலேசியா ஓடிப்போன இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவுப் பிரசாரகரும் உண்டு. ஜாகிர் நாயக் எதற்காக இந்த அறக்கட்டளைக்கு 50 லட்சம் நன்கொடை? அதுவும் சும்மாக் கொடுத்தாராமா? </span><p></p><p><span style="font-family: verdana;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: verdana;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyOFZT5qd5UlPKtSO9sAte9UhpSAFhi7l6bscpeCQvHhBqoFAg94Nj30PL-0FFjjMeZ_1qYkmqVGLH3iHAwdopxJwPHSgz3ZiIAuH_6iFKpJOY1gQji7RQaikMNRgVscA9sZUMOgBgpjY/s960/manish+tiari.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="718" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyOFZT5qd5UlPKtSO9sAte9UhpSAFhi7l6bscpeCQvHhBqoFAg94Nj30PL-0FFjjMeZ_1qYkmqVGLH3iHAwdopxJwPHSgz3ZiIAuH_6iFKpJOY1gQji7RQaikMNRgVscA9sZUMOgBgpjY/s16000/manish+tiari.jpg" /></a></span></div><span style="font-family: verdana;"><br />தகவல் ஒளிபரப்புத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த மனீஷ் திவாரிக்கு, சிறுபான்மையினர் விவகார அமைச்சர் 2013 இல் எழுதிய சிபாரிசுக்கடிதத்தின் இரு பாராக்களும் விஷயம் இன்னதென்று பல்லிளித்துச் சொல்கிறதே! </span><p></p><p><span style="font-family: verdana;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: verdana;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj83u4iKW7JZo081rDvE5To7H0XqIF8T7fKQl8g6DTTvKbbR0A9FhlmT3M3hNigNqt1x9TvWZAUEhTlhCS1o7V_wl7RgrLGBpodDQZBRLn03RCEcAg7fC1bguka-LBq3DRUObapCIM3fII/s494/kuzhali.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="428" data-original-width="494" height="554" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj83u4iKW7JZo081rDvE5To7H0XqIF8T7fKQl8g6DTTvKbbR0A9FhlmT3M3hNigNqt1x9TvWZAUEhTlhCS1o7V_wl7RgrLGBpodDQZBRLn03RCEcAg7fC1bguka-LBq3DRUObapCIM3fII/w640-h554/kuzhali.png" width="640" /></a></span></div><span style="font-family: verdana;"><br /><b>நம்மூரில் அப்படி கடிதம் மூலம் எதுவும் சொல்லக் கூட வேண்டியதே இல்லை! நம்புங்கள்! இது திமுக ஆட்சி! </b></span><p></p><p><span style="font-family: verdana;"><b></b></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: verdana;"><b><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinT6H493zaq_dlEvgR7bBqYBP4zrDkQ5G1ur3HZNufWlSiCc6AV7TCPkGJAL-QN4BitM0DzOk_VfY7vBhCxMze6dzFoxrbshUFBN7n7MRWrDfmLBzltTR_lD5LUKhQDPqHh4EfUsOq0C0/s1080/nakkeeran+esaran.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="834" data-original-width="1080" height="494" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinT6H493zaq_dlEvgR7bBqYBP4zrDkQ5G1ur3HZNufWlSiCc6AV7TCPkGJAL-QN4BitM0DzOk_VfY7vBhCxMze6dzFoxrbshUFBN7n7MRWrDfmLBzltTR_lD5LUKhQDPqHh4EfUsOq0C0/w640-h494/nakkeeran+esaran.jpg" width="640" /></a></b></span></div><span style="font-family: verdana;"><b><br />இது 2009 இல் நக்கீரன் இதழில் வெளியான கொங்கு ஈ</b></span><b style="font-family: verdana;">ஸ்</b><span style="font-family: verdana;"><b>வரன் வாழ்க்கை வரலாறு. பெருமாள் முருகன் நாவலை விட அந்தநாட்களிலேயே பரபரப்பான செய்தியாகத் தான் இருந்திருக்கும் போல! நக்கீரனே 2பக்கச் செய்தி போட்டிருக்கிறதென்றால்! படத்தைப் பெரிதாக்கிப் படித்துப் பாருங்கள். </b></span><p></p><p><span style="font-family: verdana;">கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடி, மார்க்சிஸ்டுகளுக்கு ரூ. 10 கோடி, </span><span style="font-family: verdana;"><b>கொங்கு ஈ</b></span><b style="font-family: verdana;">ஸ்</b><span style="font-family: verdana;"><b>வரன் </b>கட்சிக்கு <b>ரூ. 15 கோடி</b> நன்கொடை அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டப்பட்ட கதை நினைவிருக்கிறதா? பரஸ்பர சொறிதல்கள், முன்களப் பணியாளர்களுக்கு நீண்டகாலமாகவே கிடைத்து வருகிறது என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல?</span></p><p><span style="font-family: verdana;">மீண்டும் சந்திப்போம். </span><span style="font-family: verdana;"> <b> </b> </span></p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-44609642369384609082021-06-25T20:40:00.002+05:302021-06-25T20:51:05.915+05:30இந்திராவின் 1975 நெருக்கடி நிலை! ஆர்.எஸ்.எஸ். நடத்திய போராட்டங்கள்! <p><span style="background-color: white; font-family: "Noto sans tamil"; text-align: justify;"><b>திரு.ரத்தன் ஷாரதாவின் “ஆர்.எஸ்.எஸ் 360” என்கிற நூலில் இருந்து தொகுக்கப்பட்ட பகுதிகள்</b></span></p><p><span style="background-color: white; font-family: "Noto sans tamil"; text-align: justify;">சுதந்திர இந்திய வரலாற்று நிகழ்வுகளில் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி இந்திரா காந்தியால் திணிக்கப்பட்ட அவசர கால நெருக்கடி சட்டம் அரசியலில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்துக் கொண்ட உண்மையான இலட்சியப்பணிகள் எது என்பதை உலகுக்கு வரையறுத்துக் காட்டிய நிகழ்வு இது. காங்கிரசுக்கு எதிரான கட்சிகளையும், சிறையில் அடைக்கப்பட்ட வேறுபட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும் அவர்கள் ஒரே அரசியல் மேடைக்கு வரவும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது இந்த சந்தர்ப்பந்தான்.</span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtmE4C1wcJYDZeJP9JWRXj1poGVBYsZk8BwaDRQ9trbYDkKyEiMcxhpMiqKWRStu18iW6Gvt8zh9MLYstAZ4XmwvqvjhsEx0SkOo4zjnrhs0P6LFgATghMB5eEz6ooLPpX2VRD6bW2JLA/s600/ig+emergency.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="315" data-original-width="600" height="336" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtmE4C1wcJYDZeJP9JWRXj1poGVBYsZk8BwaDRQ9trbYDkKyEiMcxhpMiqKWRStu18iW6Gvt8zh9MLYstAZ4XmwvqvjhsEx0SkOo4zjnrhs0P6LFgATghMB5eEz6ooLPpX2VRD6bW2JLA/w640-h336/ig+emergency.jpg" width="640" /></a></div><span style="background-color: white; font-family: "Noto sans tamil"; text-align: justify;">இதன் விளைவு அவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளை மறந்து ஜனநாயக மாண்பை காக்கும் விதத்தில் ஜனதா என்கிற கட்சி பிறந்தது. ஆர்.எஸ்.எஸ் இந்திய வரலாற்றில் தன்னை மேலும் அடையாளப்படுத்திக் கொள்ள இந்த நெருக்கடிகால சம்பவங்கள் உதவின என்றும் கூறலாம். ஜனநாயகத்தின் மதிப்புகளை, மாண்பை மீட்டெடுத்து அதன் மூலம் இந்த சமுதாயத்துக்கு அரிய சேவை செய்வதற்கான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பங்களிப்பை இந்த நாடும், உலகமும் கண்டது இப்போது தான்.1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் பெட்டிகள் எரிப்பு கலவரம், அதே காலகட்டத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் ஆகியவை குறித்து இப்போதைய இளம் தலைமுறைக்கு தெரியாது. இந்த நிலையில் மேற்கண்ட சம்பவங்களுக்கு முந்தைய இந்திரா அறிவித்த நெருக்கடிகால அடக்குமுறைகள் குறித்து இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவை எல்லாம் வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களாக உள்ள நிலையில், உண்மையில் நவீன இந்திய வரலாற்றில் இவை மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளாகும். நம் தேசம், தேசத்தை காத்த ஆர்.எஸ்.எஸ் சந்தித்த இந்த முக்கியமான கால கட்டத்திலிருந்து இந்த கட்டுரையை தொடங்குவது உகந்ததாக இருக்கும்.</span><p></p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">அன்றைய காலக்கட்டத்தில் பொது வாழ்க்கையில் தூய்மையை வலியுறுத்திய ஜே.பி என அனைவராலும் அறியப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் சம்பூர்ண கிரந்தி எனப்படும் இயக்கம் அரசியல் நடைமுறைகளில் இருந்த அழுக்குகளை அகற்றி ஒட்டுமொத்த மாற்றத்தைக் கொண்டு வர வலியுறுத்தியது. அந்த இயக்கத்தின் கொள்கைகள் அன்றைய இளைஞர்களிடையே அரசியல் மீது ஒரு தீவிரத்தை ஏற்படுத்தியது. ஏராளமான இளைஞர்கள் ஜே.பி-யின் சிந்தனைகளால் கவரப்பட்டு, ஜனநாயகத்தை மீட்க போராடி பல தியாகங்களை செய்திருந்தாலும், அந்த போராட்டங்களின் விளைவு லாலு பிரசாத் யாதவ் போன்ற அரசியல்வாதிகள் ஜாதீய அரசியல் செய்து சுய நலன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்து விட்டது. இதன் மூலம் ஜே.பி-யின் கொள்கைகள் மற்றும் இலட்சியங்கள் சிதைவுக்குள்ளாகின.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">தேவர்கள் இணைந்து திருப்பாற்கடலை கடைந்து அமுதம் திரட்ட முற்பட்டபோது விஷத்தையும் கண்டு அதை தூக்கி எறிந்து போட்ட கதை இந்து புராணங்களில் கூறப்படுகிறது. அந்த கதை இங்கு எந்த அளவுக்கு உண்மையாகி விட்டது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">இப்போது எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதற்கு முந்தைய கால கட்டமான 1971-ஆம் ஆண்டுக்கு செல்லலாம். அப்போது நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியா வென்றதுடன் பங்களாதேஷ் என்கிற நாட்டையும் உருவாக்கியதன் பேரில் இந்திராவும் அவரது ஆதரவாளர்களும் வெற்றிப் புளகாங்கிதத்தில் மிதந்து கொண்டிருந்த கால கட்டம் அது. நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அராஜக மனோபாவத்தை அவர்களுக்குத் தந்தது. இந்திராவின் நிழலில் இருந்தபடி எல்லை தாண்டிய அதிகாரத்தை அவரது ஆதரவாளர்கள் ருசி பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">அப்போதைய காங்கிரஸ் தலைவர் கந்த பரூவா இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றால் இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்தார். இந்தியா முழுவதும் இது ஒரு மந்திரம் போல காங்கிரசாராலும், அரசு இயந்திரங்களாலும் கூட நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்பட்டது. இந்த அராஜகம் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளை அடக்க முற்பட்டது, அதிகார வர்க்கத்தினரிடம் அதிக அதிகாரங்கள் குவிந்ததால் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாயின.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">இதை எதிர்த்து படிப்படியாக நாடு முழுவதும் இந்திரா காந்திக்கு எதிராக போராட்டங்கள் துளிர் விட ஆரம்பித்தன. முதலில் குஜராத்தில் நவநிர்மாண் அந்தோலன் என்கிற இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் அந்த மாநிலத்தில் ஊழல் ஆட்சி செய்து கொண்டிருந்த சிமன்பாய் படேலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி துணை நின்றதுடன், ஜன சங்கமும், மற்ற எதிர் கட்சியினரும் ஆதரித்தனர். மாணவர்களின் இந்த தொடர் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவி மக்களின் செல்வாக்கைப் பெற்றதுடன் அந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. பாபுபாய் படேல் தலைமையில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தது. மாணவர்களின் எழுச்சி மிக்க இந்த போராட்டம் பீகார் மாநிலத்திலும் பரவியது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிந்தனைகள் அவருடைய பேச்சுக்கள் மாணவர்களையும், சிந்தனையாளர்களையும் கிளர்ந்தெழச் செய்தன. லோக்ஜன் கார்ஷ் சமிதி எனப்படும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, நானாஜி தேஷ்முக் அதன் பொதுச் செயலாளராக இருந்து வழிகாட்டினார். அரசியல் மற்றும் அரசியல் அல்லாத சேவை அமைப்புகள், மாணவர்கள் என ஏராளமானோர் இந்த அமைப்பில் சேர்ந்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் ஜன சங்கத்துடன் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இரு தரப்பும் போராட்டக்களத்தில் இணைந்து தீயாக வேலை செய்தனர். இவர்களின் போராட்டத்தால் மக்கள் நாடெங்கும் ஈர்க்கப்பட்டதால் காங்கிரசாரும், இந்திராவும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அலகாபாத் கோர்ட் நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா இடைத்தேர்தலில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு இந்திய அரசியலில் மாபெரும் அரசியல் விளைவுகள் ஏற்பட வழி வழிவகுத்தது.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">இந்த நிலையில், அரசியல் சூழ்நிலைகள் தனக்கு பாதுகாப்பாக இல்லை என உணர்ந்த இந்திரா காந்தி எதிர்கட்சிகளை அடக்கவும், அவர்களின் நடவடிக்கைகளை நசுக்கவும் முற்பட்டார். உள் நாட்டு பாதுகாப்பை மேற்கொள்வதாகக் கூறி 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவு நெருக்கடி நிலையை அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பை சுட்டிக் காட்டி நெருக்கடி நிலையை அறிவித்தது இந்தியாவில் அதுதான் முதன் முறை. கடுமையான இந்த சட்டம் மிசா என்ற பெயரில் எதிர்கட்சிகளையும், எதிர்ப்போரையும் எந்தவித விசாரணையும் இல்லாமல் 2 ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள வழிவகுத்தது. நாட்டின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டார்கள், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இரண்டாம் முறையாக தடை செய்யப்பட்டது. ஆனந்த் மார்க் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற இயக்கங்களும் எந்த வித காரணங்களும் கூறப்படாமல் தடை செய்யப்பட்டன. </p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">ஜனநாயகத்தை மீட்பதற்கான மாபெரும் யுத்தத்தில் அன்று ஆர்.எஸ்.எஸ் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பேரில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆவர். கொடுமையான மிசா சட்டத்தில் நாடு முழுவதும் 30,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மிகவும் கொடுமையான மகாராஷ்டிரா பயங்கரவாத கட்டுப்பாட்டு சட்டத்தின்( IMCOCAI) கீழ் மட்டும் கிட்டத்தட்ட 25,௦௦௦ ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சிறையில் வைக்கப்பட்டு கொடுமையான முறையில் நடத்தப்பட்டனர். பல்வேறு சோஷியலிச கட்சி தலைவர்களும் தொண்டர்களைக் காட்டிலும் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 18 மாதங்கள் வரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட 6 மாதங்கள் வரை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நேரத்தில் நாக்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி லலித் அளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. அடிப்படை உரிமைகளுக்காக போராட்டம் நடத்தியவர்களை மிசா சட்டத்தால் கைது செய்யக் கூடாது என அளித்த அவரது தீர்ப்பால் பலர் ஒரு மாத சிறை வாசத்துடன் வெளியே வந்தனர். இந்த தைரியமான தீர்ப்பை வழங்கிய நீதிபதி லலித் அவர்களின் பெயர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதுடன், அவருக்கு பதவி உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திராவுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வகையில் அவருக்கு ஆதரவாக ஒரு நீதிபதிகள் குழுவும் செயல்பட்டது. இந்த விஷயத்தில் இந்திராவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதவிகரமாக இருந்தது.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">இதே கம்யூனிஸ்டுகள்தான் 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போதும் இரு வேடங்கள் போட்டு நடித்தனர். இந்தியாவை 16 இறையாண்மை உள்ள தேசங்களாக பிரிக்க வேண்டும் எனவும் கேபினட் கமிஷனிடம் மனு அளித்தனர். 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் மீது நடைபெற்ற சீன தாக்குதல் சரியானது தான் எனவும் வாதிட்டனர். கம்யூனிஸ்டுகளில் இருக்கும் சீன ஆதரவு பிரிவினர் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போக்குவரத்து போராட்டத்தையும் உருவாக்கி மறைமுகமாக அப்போராட்டத்துக்கு ஆதரவு தந்தனர். அப்போது மறைந்த கம்யூனிஸ்டு தலைவர் ஜோதி பாசு கூட சில காலம் சிறையில் வைக்கப்பட்டார். சீனாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து இந்தியாவின் நலனுக்கு எதிராக நடந்துக் கொண்ட இந்த பிரிவினர்தான் பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தனர்.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">இந்திய உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் இந்திரா காந்தியும் காங்கிரஸ்காரர்களும் அவிழ்த்து விட்ட வன்முறைகள், எதிர்கட்சிகள் மீது அடக்குமுறை ஆகியவற்றைப் பற்றி மக்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் தொடர்புடைய இயக்கங்கள் மற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், இயக்கங்களுடன் சேர்ந்து ஜனநாயகத்தை மீட்க மேற்கண்ட போராட்டங்களை நடத்தியது. உண்மையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் போராட்டங்களில் பங்கேற்றதும் இல்லாமல் பின்னணியில் இருந்து கொண்டு நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தியது. மிக உயர்ந்த பாதுகாப்புக்கிடையிலும் பொது நிகழ்ச்சிகளில் கூட இந்த சத்தியாகிரக போராட்டங்கள் நடைபெற்றன. இந்த எதிர்ப்பு போராட்டங்களை பன்னாட்டு ஊடகங்கள் அப்போது வெளியிட்டன.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">சிறையில் அடைக்கப்பட்டிருந்த கற்றவர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தாங்கள் பாதிக்கப்பட்டதை பல வகையில் எழுதிக் கொடுத்து வெளி உலகுக்கு தெரியப்படுத்தினர். இந்திய நவீன வரலாற்று ஜாம்பவான்களான ராமச்சந்திர குஹா இந்த வகையில்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்களிப்பு குறித்து பல தகவல்களை சேகரித்து வெளியிட்டார்.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">மற்றபடி குற்றப் புலனாய்வு துறையினர் யாரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் மீது எந்த குறைகளையும் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட போராட்டத்தை தவிர வேறு எந்த தப்பையும் செய்ததாக அவர்களின் ஆவணங்களில் எந்த குறிப்புகளும் கிடையாது.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">மும்பையை பொறுத்தவரை போலீஸ் அதிகாரிகள் இந்த அவசர நிலையில் சற்று நாகரீகமாகவே நடந்து கொண்டுள்ளனர். அதே சமயம், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்த பஞ்சாப், கர்நாடகா, மத்திய பிரதேஷ் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் போலீசார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த போராட்டக்காரர்களுக்கு சிறையில் தொந்தரவு கொடுத்தனர். அந்த டார்ச்சர் அமெரிக்க ராணுவத்தால் குவான்டன்மோ முகாமில் வைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டது போல அப்போது வர்ணிக்கப்பட்டது. ஒரு ஆட்சியாளர்களிடம் எல்லை மீறிய அதிகாரங்கள் இருந்தால் அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதற்கு பெண் போராட்டக்காரர்களையும் சேர்த்து அவர்களுக்கு அரசு கொடுத்த டார்ச்சர்களில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். பல இடங்களில் போராட்டக்காரர்கள் மோசமான குற்றவாளிகள் இல்லை என்பது தெரிந்தும் அவர்களை குழுவினராக நிற்க வைத்து நிர்வாணமாக்குவது, அவர்களை அந்த நிலையிலேயே நீண்ட நாள் வைத்திருத்தல், சிகரட்டால் சுடுவது, பலர் முன்னிலையில் போலீசார் இயற்கைக்கு மாறாக ஓரினசேர்க்கை உறவு கொள்ள வைப்பது, கைதிகள் ஒருவர் வாயில் ஒருவர் சிறுநீர் கழிக்க செய்வது, கூர்மையான ராடுகளால் அழுத்துவது, தண்ணீர் கொடுக்காமல் பல நாட்களுக்கு தவிக்க விடுவது, பின்பக்கம் கைகளை கட்டி வைத்து சில மணி நேரங்களுக்கு ஏரோப்ளேன் தண்டனை என்ற பெயரில் தொங்க விடுவது, நகங்களை பிடுங்குவது போன்ற மிக கொடூரமான டார்ச்சர்கள் மிசா சட்டத்தை எதிர்த்து சிறைக்கு சென்ற போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பல பேர் இதை பதிவு செய்து வைத்திருந்து ஜனதா கட்சி ஆட்சியின் போது இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஷா கமிஷனிடம் இவற்றை தெரிவித்தனர்.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">ஆனால் இதனிடையே 1980-ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஷா கமிஷனின் அறிக்கைகளை அழித்து விட்டது. ஆனால் இந்த அறிக்கையின் நகல் காப்பி அமேசான் வலைதளம் மூலம் கிடைத்தது. இதை அப்போதைய திராவிட முன்னேற்ற கழக தலைவர்களில் ஒருவராக இருந்து, பின் நாளில் ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றிய இரா.செழியன் எடிட் செய்திருந்தார். ஆனால் இப்போது அது தீர்ந்து விட்டது , கிடைக்கவில்லை. கமிஷனால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சய் காந்தி நிறைய இடையூறுகளை கொடுத்தார். தற்போதைய மாணவர்கள், இளைஞர்கள் அவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வன்முறைக்காரர்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்லும் பொய்யை உடைக்க முடியும்.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் துயரங்களை பற்றி குறிப்பிடாமல் இது முழுமை அடையாது. தேசத்துக்கு எதிராக அவரும் அவரது சகோதரர் லாரன்சும் வெடிகுண்டுகள் வைத்து பயங்கரவாதம் செய்ததாக “பரோடா சதி வழக்கு” என்ற வழக்கு போடப்பட்டு அவர்களை சிறையில் வைத்து கொடுமைப் படுத்தினார்கள். இந்த வழக்கு அப்போது பிரபலமாக பேசப்பட்டது. சிறையில் லாரன்சுக்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பல துன்பங்கள், கொடுமைகள் செய்யப்பட்டன. ஜெயிலில் இருந்து ஒரு நோயாளியாக வெளியே வந்த அவர் கடைசி வரை நோயாளியாகவே வாழ்ந்து, 2005-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். ஆனால் இடையில் 1977-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு இருவர் மீதும் போடப்பட்டிருந்த வழக்குகளை வாபஸ் பெற்றது. இந்த வழக்கில் தொழில் அதிபர் வீரேன் ஷாவின் பெயரும் சேர்க்கப்பட்டு பல கொடுமைகளை அனுபவித்தார். </p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">இந்திரா அமல்படுத்திய அந்த நெருக்கடி காலக்கட்டத்தில் பத்திரிகைகள் அரசுக்கு அடி பணிந்து சென்ற போதிலும், கோயங்கா, வர்கீஸ் போன்ற துணிச்சல்மிக்க பத்திரிக்கையாளர்கள் அரசை எதிர்த்து தைரியமாக எழுதினார்கள். அப்போது பத்திரிகைகள் அனைத்தும் அரசால் தணிக்கை செய்யப்பட்டப் பிறகே வெளியிட அனுமதிக்கப்பட்டன. சென்சார் கமிட்டியால் அனுமதிக்கப்பட்ட பிறகே செய்தித்தாள்களில் செய்திகள் அச்சிட அனுமதிக்கப்பட்டன. அச்சிடுவதற்கான காகிதங்களுக்கு அரசிடம் கெஞ்சி பிச்சை வாங்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டது. அந்த மிக மோசமான சூழ்நிலையை பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிடுகையில் “வளைந்து கொடு என கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் பத்திரிகைகள் கீழே விழுந்து ஊர்ந்து செல்லும் நிலை இருந்தது” என்றார். அப்போது கோயங்கா தனது பத்திரிக்கையில் தலையங்கப் பகுதியில் எதையும் எழுதாமல் வெற்றிடமாக விட்டு விடுவார். இது தெரிந்த அரசு தலையங்கப்பகுதியை வெற்றிடமாக விடக்கூடாது என அச்சுறுத்தி ஆணை பிறப்பித்தது. ஆனால் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து அரசுக்கு பணியாமலே அவசரகாலம் முழுவதும் செயல்பட்டது. அரசு ஏற்படுத்திய அத்தனை தடைகளையும் சமாளித்து நின்றதால் கோயங்காவின் மீது பல வழக்குகளை தொடுத்து பல தொல்லைகளை அளித்தனர். அப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஜனநாயக படுகொலைகள் என்கிற தலைப்பில் வெளி வந்த செய்தி மிகவும் பிரபலமாக இருந்தது. இதை அடுத்து, செய்திகள் மிகவும் கண்காணிக்கப்பட்டதால் செய்திகள் ரகசிய கூட்டங்கள், வதந்திகள், தொலைபேசிகள் மூலம் மட்டுமே வெளியே சென்றன. இந்த நிலையில் தொலைபேசிகள் வேவு பார்க்கப்பட்டன, ஒட்டுக்கேட்கப்பட்டன. அப்போது, போராட்டக்காரர்கள் சிறிய துண்டுச்சீட்டுக்களில் செய்திகளை அச்சடித்து அரசின் அடக்குமுறைகளை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்களிடம் ரகசியமாக விநியோகித்தனர். அந்த சமயங்களில் அரசுக்கு ஜால்ரா அடித்த பத்திரிகைகள் சிலவும் உண்டு. அதில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய கட்டுரைகள். அந்த கட்டுரைகள் இந்திராவின், அவர் மகன் சஞ்சய் காந்தியின் நடவடிக்கைகளை பாராட்டியது. மேலும் எமர்ஜென்சியால் நாட்டில் பல வளர்ச்சிக்கான மாற்றங்கள் ஏற்பட்டதாக புகழ்ந்து தள்ளினார்.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">சஞ்சய் காந்தியை மிகச்சிறந்த நவீன முன்னோடியாக புகழ்ந்து தள்ளினார். அவர் வைத்திருந்த டின் பாக்ஸ் காரை வைத்து அவர் ஒரு சிறந்த மெக்கானிக்கல் எஞ்சினியர் எனவும் புகழ்ந்து தள்ளினார். இவ்வாறு அவர் இந்திரா குடும்பத்துக்கும், எமர்ஜென்சி நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருந்ததால் அவருக்கு அதிக பரிசுகள், விருதுகள் கிடைத்தன. பதவிகள் தரப்பட்டன. அந்த கால கட்டத்தில் காங்கிரசுக்கு அனுகூலமாக இருந்த பத்திரிகைகள் நல்ல சன்மானங்களை பெற்றன.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">அந்த காலக்கட்டத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட பல பத்திரிக்கைகள் குறிப்பாக பிரபல பெண் எழுத்தாளர் போரிபந்தர் ஆகியோர் அவசர சட்டத்தால் வேலை செய்யும் கலாச்சாரம் அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றத்துடன் மாறியதாகவும், நாட்டு மக்கள் இடையே இது சிறந்த ஒழுக்கமான தலைமுறையை உருவாக்குகிறது என புகழ்வதாகவும் மக்கள் இந்திரா சர்வ வல்லமை உள்ள பெண்மணி என புகழ்வதாகவும் கூறி சரமாரியாக புகழ் கட்டுரைகளை எழுதி தள்ளினார். இந்தப் பிரச்சாரங்கள் இரஷ்யாவில் சர்வாதிகார அரசுகளுக்கு ஆதரவாக செய்யப்படுவது போல இருந்தன. அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் இந்தப் பத்திரிகைகள் அதைப் புகழ்ந்து போராட்டக்கரர்களுக்கு எதிரான பதிலடியை தந்தன. ஆனால் இந்திரா கொண்டு வந்த அனைத்து சட்டங்களும் மக்களின் உரிமையை நசுக்குவதற்காகவே கொண்டு வரப்பட்டன</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">ஒரு வழியாக 1977-ஆம் ஆண்டு எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது. நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசியல் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறைக் கூடங்கள் நிரம்பி வழிந்தன. நாடு முழுவதும் நடைபெற்ற சத்யாகிரகப் போராட்டங்கள் மக்களை உசுப்பி விட்டன. இதனால் இந்திராவுக்கு அழுத்தங்கள் அதிகரித்தன. FISI இயக்கத்தினர் இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தியதன் மூலம் பல நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தத்தை தந்தன. இந்த நிலையில் தேர்தல் நெருங்கியது. தேர்தலை சந்திக்க வேண்டி இந்திரா தனது கெடுபிடிகளை குறைத்தார். அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம் என்கிற போதையை ஏற்றி இந்திராவை உசுப்பேற்றினர். அப்போது கூட இந்திரா என்றால் இந்தியா… இந்திய என்றால் இந்திரா என்ற கோஷத்தை அவர்கள் விடவில்லை. ஆனால் அவர்கள் படிக்காத பாடத்தை இந்திய மக்கள் தேர்தலில் வாக்களித்து அவர்களை தோற்கடித்து படிக்க வைத்தனர். தங்கள் வலிமையையும், ஜனநாயகத்தின் வலிமையையும் தங்கள் வாக்குரிமை மூலம் நிரூபித்துக் காட்டினர். </p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">ஆரம்பத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த சூழ்நிலையில் மக்கள் ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து வெளிப்படையாக ஆதரிக்க பயந்தனர். என்றாலும், தேர்தல் வாக்குச்சாவடி பணிகள் திட்டமிடப்பட்டன. மூத்த தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படாத நிலையில் ஒரு சாதாரண அரசியல் அறிவைக் கொண்டு தேர்தல் பணிகளில் களம் இறங்கினர்.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">காங்கிரசை தோற்கடித்து ஜனதா கட்சி ஆட்சி அமைத்து அந்த ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த போது ஜனதா கட்சிக்குள் இருந்த சோஷலிச குழுவினர் மிகவும் மோசமான அரசியலை முன்னெடுத்தனர். வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஜனதா கட்சிக்குள் ஏற்கனவே இணைந்திருந்த முன்னாள் ஜன சங்க தலைவர்கள் இரட்டை உறுப்பினர் கொள்கையை கடைபிடிப்பதாகக் கூறி கட்சியை உடைக்கும் விதத்தில் தகராறு செய்தனர். ஆனால் இந்த விசுவாசம் அவர்களுக்கு ஜனதா கட்சியை தோற்றுவிக்கும் போதே இருந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவர்கள் ஜனநாயகத்தை மீட்க ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து போற்றிப் புகழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் குறித்து கடந்த பல ஆண்டுகளாக கொண்டிருந்த தவறான புரிதல் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்ததற்கும் சான்றுகள் உள்ளன. அவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்க தலைவர்களுடன் நெருங்கிப் பழகுகிய போதுதான் தங்கள் கண்கள் திறக்கப்பட்டதாக அவர்களே ஒப்புக்கொண்டிருப்பதற்கும் சான்றுகளும் உள்ளன. இதில் ஒரு உண்மை என்னவென்றால் ஜன சங்கமும், கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே அமைப்பு ரீதியான கட்சிகளாக இருந்தன. மற்ற கட்சிகள் அவ்வாறு இல்லாததால் ஜனதா கட்சியின் அதிகாரத்தை அவர்கள் தங்கள் இஷ்டம்போல வளைக்க ஆரம்பித்தனர். இடைத்தேர்தல் வந்தால் அப்போது நம்முடைய தனிப்பட்ட செல்வாக்கை அதிகாரத்தில் இருக்கும் போதே வெளிக் காட்ட வேண்டும். அதன்பிறகு கட்சியை தாங்களே கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கமும் அவர்களுக்கு இருந்தது. இதற்காக ஜன சங்கத்துக்கு முந்தைய உறுப்பினர்களாக இருந்த குறிப்பிட்ட அளவிலான எம்.பி-க்கள் சிலரையும் அவர்கள் குறிப்பெடுத்து வைத்திருந்தனர். இது போன்ற முதுகில் குத்தும் வேலைகளை திரை மறைவில் இருந்து செய்து கொண்டிருந்த அவர்கள் கடைசியில் ஜனதா கட்சியை உடைத்தே விட்டார்கள். இதனால் ஆட்சி கவிழ்ந்தது, இந்திரா காந்தியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி திரும்பி பிரதமராக வரும் நிலை ஏற்பட்டது.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">இந்த கசப்பான அரசியல் சம்பவங்களை அடுத்து, ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அரசியலில் ஒழுக்க பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த புதியதோர் சகாப்தத்தை உருவாக்கும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்பட்டது. அதன் விளைவாக தனது அமைப்பின் செயல்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் அகில பாரதிய வித்யாதி பரிஷத், விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதீய மஸ்தூர் சங் உட்பட பல துணை அமைப்புகளை ஏற்படுத்தியது. மேலும் பல புதிய இடங்களில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கி சங்கப் பணிகளை விரிவு படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் மூடப்பட்ட அந்த காலக் கட்டத்தில் தொண்டர்கள் சமூகப் பணிகள் புரிவதற்காக பல திட்டங்களை தீட்டுவதற்கான அழுத்தங்களை தந்ததும் அந்த சூழ்நிலைதான். மேலும் ஜனநாயக கட்டமைப்புகள் உயிருடன் செயல்பட விரும்புவோருக்கு ஆர்.எஸ்.எஸ் தான் யார் என்பதை மெய்ப்பித்துக் காட்டியது. </p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர்களும், அதன் தொடர்புடைய அமைப்பின் சேவகர்களும் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளான இந்த காலக் கட்டத்தில் சங்கத்தின் சகிப்புத்தன்மை புதிய அளவுகளை எட்டியது. அதன்பிறகு பரவலான, வேகமான ஒரு வளர்ச்சியை அடைந்தது.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">புதிய சேவகர்களுக்கு இது நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1948-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட போது அமைப்பின் முன்னோடிகள் கண்ட அனுபவங்களை எமெர்ஜென்சி இரண்டாம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுத்தது. ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களை அடுத்து இரகசிய பணிகள் செய்தல், சிறை வைக்கப்பட்ட இடத்தில் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து சத்யாகிரக போராட்ட முறையில் எதிர்ப்பு தெரிவித்தல் ஆகியவை சங்கத்தின் இளைய தலைமுறையினருக்கு பயிற்சிக் களங்களாக அமைந்தன. அவற்றை ஒருவருக்கொருவர் கற்றுக் கொண்ட அதே சமயம் சங்கத்தின் குடையாய் வெளியே விரிந்து நின்ற பலரிடம் இருந்தும் பலவித அனுபவங்களை கற்றுக் கொண்டனர். அரசியல் சிந்தனைகள் மற்றும் தேர்தல் அரசியலில் நல்ல விழிப்புணர்வை பெற மற்றவர்களின் கருத்துக்களையும், குறிப்பாக மற்ற அரசியல் கட்சிகளின் மதிப்புடைய கருத்துக்களைப் பெறவும் அப்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. முன்னதாக நம் எதிர்ப்பாளர்கள் நம்மை வேடிக்கையாக பார்த்தனர், ஆனால் எமர்ஜென்சிக்குப் பிறகு அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அரசியல் சமூக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் மரியாதைக்குரிய இயக்கமாக பார்க்கப்பட்டது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பல திருப்புமுனைகளை ஏற்படுத்தித் தந்தது.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">ஜனநாயகத்தை மீட்டதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் போராட்டங்கள் குறித்து தெரியப்படுத்தும் ஆவணமாக தமிழில் பல நூல்கள் இல்லை.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;">அரசியல் என்பது கறை படிந்த, பழி வாங்கும் போக்கு கொண்டதாக மாறி இருந்த அந்த நாட்களில் அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ பாலாசாகேப் தியோராஸ் 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியினரை சரியான முறையில் வழிகாட்டி உற்சாகப்படுத்தினார் என்பது இன்றளவும் நம் நினைவில் நிற்கிறது. இந்திரா காந்தி உள்ளிட்ட அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அவர் ஆலோசனை வழங்கியிருந்தார். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுவான குணமாகும். ஏனெனில் இது நாட்டின் அனைத்துச் சுற்று வளர்ச்சியிலும், யாருக்கு எதிராகவும் எந்த விரோதமும் இன்றி அனைவர் நல்வாழ்க்கைக்கும் பயனளிக்கும் வழிகாட்டியாக உள்ளது.</p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;"><b>பின்குறிப்பு – <span style="color: #800180;">இந்த கட்டுரை திரு.ரத்தன் ஷாரதாவின் “ஆர்.எஸ்.எஸ் 360” என்கிற நூலில் இருந்து தொகுப்பட்ட பகுதிகள். </span></b></p><p style="background-color: white; box-sizing: border-box; font-family: "Noto sans tamil"; margin: 0px 0px 10px; text-align: justify;"><b><a href="https://suryah.in/rss-role-in-emergency/" target="_blank">S G சூர்யாவின் தளத்தில் இருந்து நன்றியுடன்</a> எடுக்கப்பட்டது </b>எமெர்ஜென்சி காலத்தைப்பற்றி இந்தப் பக்கங்களில் சில பதிவுகள் உண்டு. ஆனால் RSS இந்த இரண்டாவது விடுதலைப்போரில் எப்படிப்பட்ட பங்கு வகித்தது என்பதை எமெர்ஜென்சி நாட்களில் மெல்ல மெல்ல இடதுசாரியாக மாறிக்கொண்டிருந்த எனக்கு முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பிருந்ததில்லை. </p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-2633539308480604302021-06-24T20:57:00.000+05:302021-06-24T20:57:41.232+05:30ஒருநாள் கூத்துக்கு மீசை ::: சரத் பவார்! (ஃபரூக்) அப்துல்லாக்கள்! <p>மேற்கு வங்கம், தமிழ்நாடு இரு மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாடிக்கையாளரை ஜெயிக்க வைத்த மிதப்போ என்னவோ, பிரசாந்த் கிஷோர் அகில இந்திய அளவில் தன்புகழைப் பரப்ப முனைந்திருக்கிறார் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப்போய்விடலாம் தான்!ஆனால் அவருடைய திட்டத்தில் காங்கிரசை ஓரம்கட்டி விட்டு சரத்பவாரை வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்றை நேற்றுமுன்தினம் ஏற்பாடு நடந்திருக்கிறது. காங்கிரசை விட்டுவிட்டு கலந்துகொள்ள விரும்பாமல் திமுக மற்றும் ஒன்றிரண்டு கட்சிகள் தவிர்த்துவிட்டன என்பதிலேயே பிரசாந்த் கிஷோர் முயற்சி தொடங்கும் முன்னமே தோற்றுவிட்டது.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/UOwym-UpuwA" width="320" youtube-src-id="UOwym-UpuwA"></iframe></div><p>இந்திய அரசியலில் முன்றாவது, 4வது அணி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என ஆரம்பிக்கிற சேகர் குப்தா மெதுவாக 20% ஓட்டை வைத்திருக்கும் காங்கிரசை ஒதுக்கிவிட்டு மூன்றாவது அணியை நினைத்துக் கூடப்பார்க்க முடியாது என்று தன்னுடைய காங்கிரஸ் விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்ட மாதிரியே இந்த 23 நிமிட வீடியோ இருக்கிறது. செவ்வாய்க் கிழமையன்று டில்லியில் உள்ள சரத் பவார் வீட்டில் நடந்த கூட்டத்தில் பவார் வந்ததே தெரியாத அளவுக்குக் கொஞ்ச நேரம் இருந்தமாதிரி போட்டோ செஷனில் தலை காட்டிவிட்டு தன்னுடைய கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழுக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப் போய்விட்டார் என்கிறது செய்தி. <b><a href="https://timesofindia.indiatimes.com/india/sharad-pawar-makes-blink-miss-appearance-at-oppn-meeting/articleshow/83769785.cms" target="_blank">TOI நையாண்டி இங்கே.</a></b></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/1sAphPYIywQ" width="320" youtube-src-id="1sAphPYIywQ"></iframe></div><br /><p>ஜூன் 11,21,23 என்று இரண்டுவாரங்களுக்குள் சரத் பவாரைத் தேடிவந்து பிரசாந்த் கிஷோர் மூன்றுமுறை சந்தித்தார் என்பதில் என்ன உள்குத்து இருக்கும் என்று ஊடகங்கள் தலையைப்பிய்த்துக் கொண்டிருக்கின்றன. அதற்காகவே சந்தித்தார்களோ என்னவோ?</p><p>சரத் பவாருக்கு 80 வயதாகிவிட்டது. மகாராஷ்டிராவில் ஒரு சில ஏரியாக்களில் மட்டுமே செல்வாக்குள்ளவர் என்றாலும் கட்சிபேதமில்லாமால் சர்வ கட்சிகளுடனும் சுமுகமான உறவை மெயின்டைன் பண்ணுகிறார் என்பதாலேயே பவாரை பிரதமர் முகமாக 2024 இல் காட்ட முடியுமா? அல்லது பவார் கைகாட்டுகிற ஒருவர், மம்தா பானெர்ஜி என்றேகூட வைத்துக் கொள்வோம், பிரதமராகி விட முடியுமா? சரத் பவாருக்குத் தன்மகள் சுப்ரியா சுலேவை மகாராஷ்டிர முதல்வராக்கிப் பார்க்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கும் இது சரியான தருணமல்ல. அப்புறம் எதற்காக பவாரை முன்னிறுத்தி இப்படி ஒரு களேபரம்? !! </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQedyr3tUPkyNS3bBBXJBBB2Zcl6PrsmRgkgyjgiSHR-6Kl7IkJ9eROhvaHIezTRCf4wGp93Gz6oFPmPNm-aGhhfzz2WHxVP2Em7lFLM0RlmuisHxTLRZJfOC95m0ZqtN2k9MPSvDOK5I/s1104/screenshot-www.thehindu.com-2021.06.24-19_51_24.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="504" data-original-width="1104" height="292" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQedyr3tUPkyNS3bBBXJBBB2Zcl6PrsmRgkgyjgiSHR-6Kl7IkJ9eROhvaHIezTRCf4wGp93Gz6oFPmPNm-aGhhfzz2WHxVP2Em7lFLM0RlmuisHxTLRZJfOC95m0ZqtN2k9MPSvDOK5I/w640-h292/screenshot-www.thehindu.com-2021.06.24-19_51_24.png" width="640" /></a></div><br />இருவருடங்களுக்கு முன் ஆர்டிகிள் 370 நீக்கப் பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் அரசியல்கட்சித் தலைவர்கள் பிரதமருடைய அழைப்பையேற்று டில்லியில் இன்று சந்தித்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் முதல்வர்களாக இருந்த நான்குபேர் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, (NC) மெஹபூபா முஃப்தி (PDP), குலாம் நபி ஆசாத் (Cong) உடன் ஜம்முகாஷ்மீரிலுள்ள உதிரிக்கட்சித்தலைகள் சிலரும் கலந்துகொண்ட கூட்டத்தில் என்ன பேசப் பட்டதாம்? NDTV செய்திகளின் படி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை உரியநேரத்தில் தர உறுதியளித்தார் பிரதமர் என்று சொன்ன கையோடு இந்த சந்திப்பின் முக்கிய அஜெண்டாவாக தொகுதி மறுவரையறை செய்வதற்காக ஒத்துழைப்பைக் கோரியதுதான் இருந்தது என்றும் சொல்கிறார்கள். தேர்தல்கள் நடத்தும் முன் தொகுதிகளின் எல்லை, எண்ணிக்கையை மறுவரையறை செய்ய அரசின் உத்தேசத்தை விவாதிக்கத்தான் இந்தக்கூட்டமே. பெரும்பாலானோர் ஆதரவு இருந்ததாகச் சொன்ன கையோடு,ஒமர் அப்துல்லா அநேகமாக எல்லாத்தலைவர்களுமே இந்த மறுவரையறை விஷயத்தில் அதிருப்தியோடு இருந்ததாக சொன்னாரென்று ஒரு பிட்டையும் சேர்த்துப் போடுவது NDTV இஷ்டைல்.<span style="color: red;"> </span><p></p><p><span style="color: red;"><span style="font-family: verdana;"><span style="background-color: white;">Omar Abdullah told reporters that "almost all leaders" were unhappy with delimitation only in Jammu and Kashmir. "In other states, delimitation will be taken up in 2026, why has been Jammu and Kashmir been singled out? We told the PM delimitation is not needed," he said, adding that "trust has broken between the Centre and Kashmir".</span> </span> </span>என்பதன் பின்னால் இருக்கிற அப்துல்லாக்களின் வஞ்சகம் என்ன என்று நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறதா? நினைவு படுத்திக் கொள்ளவில்லை என்றால் அப்துல்லாக்கள் கேட்பது நியாயமாகத்தானே இருக்கிறது என்றுதான் தோன்றும். </p><p>1980களின் மத்தியில் ஃபரூக் அப்துல்லா முதல்வராக இருந்த சமயத்தில் கொண்டுவந்த சட்டத்திருத்தங்களின் படி ஜம்மு காஷ்மீரில் வாக்களிக்கும் உரிமை அங்கே நீண்ட காலமாக வசித்துவந்த பஞ்சாபிகளுக்கும், லடாக் பகுதி மக்களுக்கும் மறுக்கப்பட்ட வஞ்சகம் <span style="font-family: verdana;">delimitation</span> இப்போது கொண்டுவரப்பட்டால் வெட்டவெளிச்சமாகி விடும் என்பதில் அப்துல்லாக்கள் கவலை, அச்சம், புரிந்து கொள்ளக்கூடியதே! காஷ்மீரின் ஆதிக்குடிகளான பண்டிட்டுகளை அச்சுறுத்தி மாநிலத்தைவிட்டே ஒழித்த கதை என்று இன்னமும் பலவிஷயங்கள் இருக்கின்றன </p><p>அப்துல்லாக்கள். முஃப்திக்கள் சூறையாடுகிற இடமாக பாகிஸ்தானிகளுக்கு இடம்கொடுக்கிற மாநிலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு இதுநாள்வரை இருந்தது போதாதா? </p><p>மீண்டும் சந்திப்போம். </p><p></p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-15583274112708774492021-06-22T21:14:00.001+05:302021-06-22T21:14:56.905+05:30#தமிழகஅரசியல் இடைவெளி இல்லாத நான்-ஸ்டாப் காமெடி! <p style="text-align: justify;"><span style="color: #3a3a3a; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"><span style="background-color: white;">அது எந்தக்கழகமாக இருந்தாலும் சரி </span></span>கழக ஆட்சியில் காமெடிக்குப் பஞ்சமிருந்ததே இல்லை! அரசியல் தெரியாத ஆசாமிகள்தான் இதுபோலக்காமெடிகளைக் கொடுமை என்றும் கிறுக்குத்தனங்கள் என்றும் பேத்துவார்கள்! இன்றைய காமெடிகளைக் கொஞ்சம் போலப் பார்த்துவிடலாமா? மொத்தமாகப் பார்த்தால் நெஞ்சு தாங்காது என்பது வேறுவிஷயம்! </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg106gqJ41FK36nkw-WvExVQSQlskAxPtUIdHQZVCBjQP_xdssZpO3SLBEGMXygFEu6iEL-xF1vjhzq4GH4YoA84SNc3g74hmwoNguMMbFBdfUhpU53075YtFNoxcphj9ixu-VuOht38Dc/s491/haran+prasanna.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="393" data-original-width="491" height="512" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg106gqJ41FK36nkw-WvExVQSQlskAxPtUIdHQZVCBjQP_xdssZpO3SLBEGMXygFEu6iEL-xF1vjhzq4GH4YoA84SNc3g74hmwoNguMMbFBdfUhpU53075YtFNoxcphj9ixu-VuOht38Dc/w640-h512/haran+prasanna.png" width="640" /></a></div><br /><p style="text-align: justify;">ஹரன் பிரசன்னா போட்டிருந்த விளக்கப்படம் கீழே </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNZD4oTOtp5Xdtot6Lb3GOqvxpwDnhi7EFGYvNcKPO9RiNu1WM6gffTLyUozLnqlSfVxcLN72E61U8brX-cwNtIbV_o-MvQbRu5tJpCp3MNf_uwdK0-Dzp6s29GHZh2wALFMvByBZygFw/s960/indraiya+top+coedy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNZD4oTOtp5Xdtot6Lb3GOqvxpwDnhi7EFGYvNcKPO9RiNu1WM6gffTLyUozLnqlSfVxcLN72E61U8brX-cwNtIbV_o-MvQbRu5tJpCp3MNf_uwdK0-Dzp6s29GHZh2wALFMvByBZygFw/w640-h640/indraiya+top+coedy.jpg" width="640" /></a></div><br /><div style="background-color: white; color: #1c1e21; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif;"><div class="pybr56ya dati1w0a hv4rvrfc n851cfcs btwxx1t3 j83agx80 ll8tlv6m" style="align-items: flex-start; display: flex; flex-direction: row; font-family: inherit; margin-bottom: 12px; padding-left: 16px; padding-right: 16px; padding-top: 12px;"><div class="buofh1pr" style="flex-grow: 1; font-family: inherit;"><div class="j83agx80 cbu4d94t ew0dbk1b irj2b8pg" style="display: flex; flex-direction: column; font-family: inherit; margin-bottom: -5px; margin-top: -5px;"><div class="qzhwtbm6 knvmm38d" style="font-family: inherit; margin-bottom: 5px; margin-top: 5px;"><span class="d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql lr9zc1uh a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh m9osqain hzawbc8m" dir="auto" style="color: var(--secondary-text); display: block; font-family: inherit; line-height: 1.3333; max-width: 100%; min-width: 0px; overflow-wrap: break-word; word-break: break-word;"><h2 class="gmql0nx0 l94mrbxd p1ri9a11 lzcic4wl aahdfvyu hzawbc8m" dir="auto" id="jsc_c_92" style="color: inherit; font-family: inherit; font-weight: inherit; margin: 4px 0px 0px; outline: none; padding: 0px;"><span class="nc684nl6" style="display: inline; font-family: inherit;"><a class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl oo9gr5id gpro0wi8 lrazzd5p" href="https://www.facebook.com/Stanley-Rajan-101414721232325/?__cft__[0]=AZVcAREFSEFQjIHWArxM7jsm3vytBrkFK-jqMy4djBsZSldplaZ1nVoPYeVMtmbrNEm7Z5ueh0rEwiX3fNPFmLSSrgH-9WWBojbFb-_opdR-mVboVxvTVihxgjmsarVVbkyFqSZPtmQWmhsGlrMoBY8R&__tn__=-UC%2CP-R" role="link" style="-webkit-tap-highlight-color: transparent; background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; font-weight: 600; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; text-decoration-line: none; touch-action: manipulation;" tabindex="0"><span style="font-family: inherit;"><span style="font-size: small;">Stanley Rajan</span></span></a><span style="font-size: small;"> </span></span><a class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl gmql0nx0 gpro0wi8 b1v8xokw" href="https://www.facebook.com/Stanley-Rajan-101414721232325#" role="link" style="-webkit-tap-highlight-color: transparent; background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; font-weight: inherit; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; text-decoration-line: none; touch-action: manipulation;" tabindex="0"><span style="font-family: inherit;"><span aria-labelledby="jsc_c_9a" class="j1lvzwm4 stjgntxs ni8dbmo4 q9uorilb gpro0wi8" style="display: inline-block; font-family: inherit; overflow: hidden; vertical-align: top;"><span class="b6zbclly myohyog2 l9j0dhe7 aenfhxwr l94mrbxd ihxqhq3m nc684nl6 t5a262vz sdhka5h4" style="cursor: inherit; display: inline; font-family: inherit; font-weight: 600; line-height: inherit; position: relative; text-decoration: inherit; vertical-align: inherit;"><span class="b6zbclly myohyog2 l9j0dhe7 aenfhxwr l94mrbxd ihxqhq3m nc684nl6 t5a262vz sdhka5h4" style="cursor: inherit; display: inline; font-family: inherit; line-height: inherit; position: relative; text-decoration: inherit; vertical-align: inherit;"><span style="font-size: small;">3ம.</span></span></span></span></span></a></h2></span></div><div class="qzhwtbm6 knvmm38d" style="font-family: inherit; margin-bottom: 5px; margin-top: 5px;"><span class="d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql lr9zc1uh a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d9wwppkn fe6kdd0r mau55g9w c8b282yb mdeji52x e9vueds3 j5wam9gi knj5qynh m9osqain hzawbc8m" dir="auto" style="color: var(--secondary-text); display: block; font-family: inherit; line-height: 1.2308; max-width: 100%; min-width: 0px; overflow-wrap: break-word; word-break: break-word;"><span id="jsc_c_93" style="font-family: inherit;"><span class="jpp8pzdo" style="font-family: inherit;"><span style="font-family: inherit;"><span class="rfua0xdk pmk7jnqg stjgntxs ni8dbmo4 ay7djpcl q45zohi1" style="clip: rect(0px, 0px, 0px, 0px); font-family: inherit; height: 1px; overflow: hidden; position: absolute; width: 1px;"> </span><span aria-hidden="true" style="font-family: inherit;"> · </span></span></span><span class="g0qnabr5" style="font-family: inherit; white-space: nowrap;"><span class="tojvnm2t a6sixzi8 abs2jz4q a8s20v7p t1p8iaqh k5wvi7nf q3lfd5jv pk4s997a bipmatt0 cebpdrjk qowsmv63 owwhemhu dp1hu0rb dhp61c6y iyyx5f41" style="align-items: inherit; align-self: inherit; display: inherit; flex-direction: inherit; flex: inherit; font-family: inherit; height: inherit; max-height: inherit; max-width: inherit; min-height: inherit; min-width: inherit; place-content: inherit; width: inherit;"><span class="ormqv51v l9j0dhe7" style="font-family: inherit; position: relative; top: -2px;"><i aria-label="பொது உடன் பகிர்ந்தது" class="hu5pjgll m6k467ps" data-visualcompletion="css-img" role="img" style="background-image: url("https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/yA/r/6Lsm8XksXsM.png"); background-position: 0px -811px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; filter: var(--filter-secondary-icon); height: 12px; vertical-align: -0.25em; width: 12px;"></i></span></span></span></span></span></div></div></div><div class="nqmvxvec j83agx80 jnigpg78 cxgpxx05 dflh9lhu sj5x9vvc scb9dxdr odw8uiq3" style="align-self: flex-start; display: flex; font-family: inherit; font-size: 12px; height: 20px; padding: 8px; width: 20px;"><div aria-expanded="false" aria-haspopup="menu" aria-label="Actions for this post" class="oajrlxb2 gs1a9yip g5ia77u1 mtkw9kbi tlpljxtp qensuy8j ppp5ayq2 goun2846 ccm00jje s44p3ltw mk2mc5f4 rt8b4zig n8ej3o3l agehan2d sk4xxmp2 rq0escxv nhd2j8a9 pq6dq46d mg4g778l btwxx1t3 pfnyh3mw p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x tgvbjcpo hpfvmrgz jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso l9j0dhe7 i1ao9s8h esuyzwwr f1sip0of du4w35lb lzcic4wl abiwlrkh p8dawk7l dwo3fsh8 pzggbiyp pkj7ub1o bqnlxs5p kkg9azqs c24pa1uk ln9iyx3p fe6kdd0r ar1oviwq l10q8mi9 sq40qgkc s8quxz6p pdjglbur" role="button" style="-webkit-tap-highlight-color: transparent; align-items: stretch; appearance: none; background-color: transparent; border-bottom-color: var(--always-dark-overlay); border-left-color: var(--always-dark-overlay); border-right-color: var(--always-dark-overlay); border-style: solid; border-top-color: var(--always-dark-overlay); border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline-flex; flex-basis: auto; flex-direction: row; flex-shrink: 0; font-family: inherit; list-style: none; margin: 0px; min-height: 0px; min-width: 0px; outline: none; padding: 0px; position: relative; text-align: inherit; touch-action: manipulation; user-select: none; vertical-align: bottom; z-index: 0;" tabindex="0"><i class="hu5pjgll m6k467ps" data-visualcompletion="css-img" style="background-image: url("https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/yl/r/1KHVDkwRbsL.png"); background-position: -42px -307px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; filter: var(--filter-secondary-icon); height: 20px; vertical-align: -0.25em; width: 20px;"></i><div class="s45kfl79 emlxlaya bkmhp75w spb7xbtv i09qtzwb n7fi1qx3 b5wmifdl hzruof5a pmk7jnqg j9ispegn kr520xx4 c5ndavph art1omkt ot9fgl3s" data-visualcompletion="ignore" style="border-radius: 50%; font-family: inherit; inset: -8px; opacity: 0; pointer-events: none; position: absolute; transition-duration: var(--fds-duration-extra-extra-short-out); transition-property: opacity; transition-timing-function: var(--fds-animation-fade-out);"></div></div></div></div></div><div style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif;"><div class="" dir="auto" style="font-family: inherit;"><div class="ecm0bbzt hv4rvrfc ihqw7lf3 dati1w0a" data-ad-comet-preview="message" data-ad-preview="message" id="jsc_c_94" style="font-family: inherit; padding: 4px 16px 16px;"><div class="j83agx80 cbu4d94t ew0dbk1b irj2b8pg" style="display: flex; flex-direction: column; font-family: inherit; margin-bottom: -5px; margin-top: -5px;"><div class="qzhwtbm6 knvmm38d" style="font-family: inherit; margin-bottom: 5px; margin-top: 5px;"><span class="d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql lr9zc1uh a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id hzawbc8m" dir="auto" style="display: block; font-family: inherit; line-height: 1.3333; max-width: 100%; min-width: 0px; overflow-wrap: break-word; word-break: break-word;"><div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;"><b>அடேய் ஒரு பயலையும் நம்பாத..</b></span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;"><b>இங்க காக்கா, குருவி, அணிலுன்னு உன்ன பார்க்க வச்சிட்டு அந்த பக்கம் வண்டி வண்டியா எத கடத்துறானுகளோ யார் கண்டா?</b></span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;"><b>அணில பார்த்துட்டு கடல் மாட்டு வண்டிய விட்டுராதீங்கடா....</b></span></div></div></span></div></div></div></div></div><p style="text-align: justify;">இப்படி <b>உஷாரையா உஷாரு</b> என்று எச்சரிக்கை செய்து இருப்பதை எத்தனைபேர் கவனித்தார்களோ தெரியாது!</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTfQWnkeDe4Z8EWQsboVmN2U5vKUM5HHeuMWTG84NewoB4AZ3hqaDNqnoHt3YIe4vbvr_J0s4rMom3pb-vhBbpnG-dnvPUMYLBsxp5k2Zc0P1h9h8kClSciYQZuJCkgtfLltkm63s-nWw/s959/4+men+army.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="959" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTfQWnkeDe4Z8EWQsboVmN2U5vKUM5HHeuMWTG84NewoB4AZ3hqaDNqnoHt3YIe4vbvr_J0s4rMom3pb-vhBbpnG-dnvPUMYLBsxp5k2Zc0P1h9h8kClSciYQZuJCkgtfLltkm63s-nWw/w480-h640/4+men+army.jpg" width="480" /></a></div><br /><p style="text-align: justify;"><b>அடுத்த வல்லுநர் குழுவுக்கு ஆலோசனை ரெடி! </b></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOhWXguPQ7OFSbOGqBx2OFygpkJdLtS9nODZzPO_3uMMmS-LHnWekM2bF59MZow_f_DXYKs3Bi5i_uDieTvDwYW-6cQU04ECVRYBVNaWnOUg15R5yaA4e_UurL_vTH9BZ9Gvm8vRUDwwg/s479/manmohan.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="381" data-original-width="479" height="510" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOhWXguPQ7OFSbOGqBx2OFygpkJdLtS9nODZzPO_3uMMmS-LHnWekM2bF59MZow_f_DXYKs3Bi5i_uDieTvDwYW-6cQU04ECVRYBVNaWnOUg15R5yaA4e_UurL_vTH9BZ9Gvm8vRUDwwg/w640-h510/manmohan.png" width="640" /></a></div><br /> <p></p><p style="text-align: justify;"><b>அட! அப்பிராணி மன்மோகன்சிங்கை நினைக்கக்கூட இங்கே ஆளிருக்கிறதா ? எனக்கு மயக்கமே வந்துவிட்டது! </b></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju-Sf0lkNeb5scFLtDDphNvtlQsZj72Nu3kqRCiPoZnCgntYpEjZmNPCNiwCbNwhcG6UySp_MdVLpm7eS5hx5a9nwfOepQOcVHVpLDaZZAVLYgw9nroBeSekFrKnFpjEZ0FdX_kfFVIkk/s719/arm+laws.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="719" height="312" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju-Sf0lkNeb5scFLtDDphNvtlQsZj72Nu3kqRCiPoZnCgntYpEjZmNPCNiwCbNwhcG6UySp_MdVLpm7eS5hx5a9nwfOepQOcVHVpLDaZZAVLYgw9nroBeSekFrKnFpjEZ0FdX_kfFVIkk/w640-h312/arm+laws.jpg" width="640" /></a></div><br /><b>இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் ஆளுநர் நமது வாழ்த்துக்குரியவரே! union government என்பதைத் தமிழில் ஒன்றிய அரசு என்று போட்டிருப்பது அவருக்குத்தெரியுமோ தெரியாதோ?</b><p></p><p style="text-align: justify;"><b></b></p><div class="separator" style="clear: both; text-align: center;"><b><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhixQjLfsTXYx3Elq-SEHQDoYYb5ENX-UD8FfcBP0vk69sEkyJ9yTMEWpoYw-Ch_AArCcyn_XzG-yKpQhZpFGUYsBOHJuXc7HGKPrNpISVG7MsWmZyOW6QnKB6hR1MtYWNJOcYQlFTXFm4/s2048/oil+bonds.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1736" data-original-width="2048" height="542" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhixQjLfsTXYx3Elq-SEHQDoYYb5ENX-UD8FfcBP0vk69sEkyJ9yTMEWpoYw-Ch_AArCcyn_XzG-yKpQhZpFGUYsBOHJuXc7HGKPrNpISVG7MsWmZyOW6QnKB6hR1MtYWNJOcYQlFTXFm4/w640-h542/oil+bonds.jpg" width="640" /></a></b></div><b><br />பானாசீனா, ரகுராம் ராஜன் செய்த வேலை! 1.30 லட்சம் கோடிரூபாய் மதிப்புக்கு எண்ணெய்க் கடன் பத்திரங்களை 2021. 2023. 2024, 2025,2026 நிதியாண்டில் திருப்பிச்செலுத்த வேண்டியிருப்பதும் பெட்ரோல் டீசல் விலையில் சுமையாக இருக்கிறது. </b><p></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQCwpBQLQzxelS2v54FmlXMHwe57lTsdssdFtHqNvHoc7ETyLfn_JvHkpAnv8705_7_tTL0lohZk42owWDy4mmiAaVef1Qn0SInzMg_tUZeWjZxaxymfluSG2BNJDcB0PPP7b65W6sEX8/s1242/krishnasamy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="948" data-original-width="1242" height="488" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQCwpBQLQzxelS2v54FmlXMHwe57lTsdssdFtHqNvHoc7ETyLfn_JvHkpAnv8705_7_tTL0lohZk42owWDy4mmiAaVef1Qn0SInzMg_tUZeWjZxaxymfluSG2BNJDcB0PPP7b65W6sEX8/w640-h488/krishnasamy.jpg" width="640" /></a></div><br /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: start; white-space: pre-wrap;">கரோனா மூன்றாவது அலையின் தாக்குதலை எப்படி தடுப்பது? மற்றும் சமாளிப்பது என்பது குறித்தும், அதற்குண்டான பல ஆயத்த பணிகளை மாநில அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய நேரமிது. எனவே இரண்டாவது அலைக்கான ஊரடங்கே இன்னும் முழுமையாகத் தளர்வு செய்யப்படாத நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. </span><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: left; white-space: pre-wrap;">உடனடியாக தமிழக அரசு மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.என்று ஒரு அறிக்கையில் சொல்லி இருக்கிறார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி. <b><a href="https://www.facebook.com/DrKrishnasamy/posts/1977693159065333" target="_blank">முழு அறிக்கையையும் இங்கே வாசிக்கலாம். </a></b></span><p></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: left; white-space: pre-wrap;">என்னதான் காமெடி என்று ஆரம்பித்தாலும் சீரியசாகத்தான் பதிவை முடிக்க வேண்டியிருப்பது தமிழக அரசியல் களத்தின் ட்ராஜெடி.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: left; white-space: pre-wrap;">மீண்டும் சந்திப்போம்.</span></p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-21945880384722377602021-06-21T19:36:00.000+05:302021-06-21T19:36:34.481+05:30மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் TN ஆளுநர் உரையும் அதன் எதிரொலிகளும்! <p><b>உலக அரசியல் வரலாற்றிலேயே முதன்முதலாக</b> என்று ஆரம்பித்தால் அபஸ்வரமாகி விடுமென்று பயந்தோ என்னவோ இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக <b>ஒரு புரட்சிகரமான அறிவிப்பை</b> தி.மு. கழக அரசு இன்று ஆளுநர் உரையில் செய்துள்ளது.“வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்” என்று 1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் 4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர்.என <b><a href="https://www.hindutamil.in/news/tamilnadu/684605-economic-advisory-committee-for-the-cm-5-member-committee-including-nobel-prize-winning-expert-former-reserve-bank-governor-governor-s-speech-2.html" target="_blank">இந்து தமிழ்திசை செய்தி </a></b>சொல்கிறது.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx1pkEwhaEb18HzWjOqigo9dOK65B-ZbYoI1MZx3mgW-17kNTKmYkmASsS7ZnIJq7ndmeY36rwzCouPtmu3720jzkTYKfF6FQSiWsj5X3TtjNmDrCypkw91TbIsryUHUPN-5FMwFj6o3s/s597/indu.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="597" height="482" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx1pkEwhaEb18HzWjOqigo9dOK65B-ZbYoI1MZx3mgW-17kNTKmYkmASsS7ZnIJq7ndmeY36rwzCouPtmu3720jzkTYKfF6FQSiWsj5X3TtjNmDrCypkw91TbIsryUHUPN-5FMwFj6o3s/w640-h482/indu.jpg" width="640" /></a></div><br />இவர்கள் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள். இந்த முயற்சி அரசியல் வரலாற்றில் முதல் முயற்சி என்பதாகப் பார்க்கப்படுகிறதோ இல்லையோ, சட்டசபையின் முதல்கூட்டத்தை ஆளுநர் உரையுடன் தொடங்குவது என்கிற மரபையும் சன் டிவி விளம்பரக்கூவல் ரேஞ்சுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். Union Government (ஒன்றிய அரசு) என்று ஆளுநரைத் தனது உரையில் சொல்லவைத்து அற்பத்திருப்தி அடைந்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதற்கு எதிர்வினைகள் நிறையவே எதிரொலித்து வருவது சிறப்பு மகிழ்ச்சி.<p></p><p><span style="color: #800180;"><b>ஒரு விஷயத்தை</b> பற்றி யாரும் பேசுவதில்லை.ஆம், ரகுராஜன் உள்ளிட்ட அந்த ஆறு முகங்கள் சாதாரணம் அல்ல, அவற்றின் ஒரு நிமிட வருமானமே பல்லாயிரம் டாலர்களை தாண்டும். சும்மா வந்து அவர்கள் ஆலோசனை சொல்வார்கள் என்பது பிரையன் லாரா கொட்டாம்பட்டிக்கு தெருவோர கிரிக்கெட் ஆட வருவார் என்பதற்கு சமம். ஆம், மிகபெரிய சம்பளம் அவர்களுக்கு செல்லும் இந்த 6 பேரின் சம்பளம் என்பது தமிழக அரசின் மிகபெரிய செலவு</span></p><p><span style="color: #800180;">அவர்களுக்கு சம்பள விவரம் என்ன? செலவு என்ன என ஆளும் கட்சியும் சொல்லவில்லை எதிர்கட்சியும் கேட்கவில்லை. சரி, இவர்கள் 6 பேருக்கு அவசியம் என்றால் எதற்கு தமிழக நிதியமைச்சர்? எதற்கு அவருக்கு பொறுப்பு வெட்டி சம்பளம்? அவர் என்ன திறமை இல்லாதவரா? திறமை வாய்ந்தவர் எனில் ஏன் 6 பேர் கொண்ட முட்டு, அதுவும் பிரமாண்டமான முட்டு?</span></p><p><span style="color: #800180;">நிதி அமைச்சர் தன்மானம் உள்ளவர் எனில் ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும் இது அவரின் சுயமரியாதைக்கான பெரும் சவால். மானமிருந்தால் அவர் ராஜினாமா செய்யட்டும் இல்லை ஹிஹிஹ்ஹி என பல்லிளித்தால் நீடிக்கட்டும்.</span></p><p><span style="color: #800180;">சரி பொருளாதாரத்தில் ஆளில்லை என பன்னாட்டு பெருமூளைகளை அழைக்கும் அரசு, நாளை தமிழக உளவுதுறையினை பலபடுத்த ரிட்டையர்டு இஸ்ரேல் மொசாட் ஆசாமிகளை அழைக்குமா? காவல் துறையினை வலுபடுத்த சர்வதேச போலீஸ் நிபுணர்களை அழைப்பார்களா? ஒவ்வொரு துறைக்கும் ஆங்கிலேயனும் அந்நியனும் எனில் இவர்களுக்கு என்னதான் வேலை? ஏன் வெட்டியாக பதவி?</span></p><p><span style="color: #800180;">எதிர்கட்சி அதிமுக கோமாவில் சிக்கிவிட்டது இனி அது 5 வருடம் கழித்துத்தான் எழும். தேசிய கட்சியான பாஜக இதை கேட்கலாம், 6 பேர் நியமன சம்பளம், அந்நிய நாட்டவருக்கு ஏன் தமிழக வேலை வாய்ப்பு என கேட்கலாம்.கேட்பார்கள் என எதிர்பார்ப்போம். ஆக என்ன தெரிகின்றது? </span></p><p><span style="color: #800180;">தமிழகத்தில் குறிப்பாக திமுகவில் ஒருவரும் திறமையானவர் இல்லை என்பதால் அமெரிக்காவிலும் லண்டனிலும் இருந்து மூளைகளை வாங்கியுள்ளார்கள் திமுக சுல்தான்கள்.இதற்கு தமிழக மக்களின் வரிபணம் வெட்டியாக செலவழிக்கபட வேண்டும்.இதற்கு ஏன் ஸ்டாலின் முதலமைச்சர், தியாகராஜன் நிதியமைச்சர்? நேரடியாக ரகுராம் ராஜனிடமே மாநிலத்தை ஒப்படைத்து விடலாம்</span> என்று முகநூலில் சரமாரியாக <b><a href="https://www.facebook.com/Stanley-Rajan-101414721232325" target="_blank">கேள்வி எழுப்புகிறார் ஸ்டேன்லி ராஜன்</a></b>. அத்துடன் விட்டாரா?</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXDW3riVmr3uZ-_d3r8zmqCXyNj-ZLssGv_FwOsrqdUGiDttz1BqFQdCvPgvPAILq3jsp2jr89N6EiZgFnegVxM7Wmd1x75KvVsS3Vtntt5bC0R9Pso2FIyvAyqOyPYyfiMOuoGvWGzqc/s675/kd+bros.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="456" data-original-width="675" height="432" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXDW3riVmr3uZ-_d3r8zmqCXyNj-ZLssGv_FwOsrqdUGiDttz1BqFQdCvPgvPAILq3jsp2jr89N6EiZgFnegVxM7Wmd1x75KvVsS3Vtntt5bC0R9Pso2FIyvAyqOyPYyfiMOuoGvWGzqc/w640-h432/kd+bros.png" width="640" /></a></div><br /><p><b><a href="https://www.facebook.com/permalink.php?story_fbid=554199929287133&id=101414721232325">சகோதரர்கள் பேசிக்கொள்வதாக இங்கே</a></b> ஒரு பகடி </p><p><span style="color: #800180;">"அங்க பாத்தியாண்ணே, ஒரு காலத்துல திமுகவுல பொருளாதாரம்னா நம்ம அப்பாவத்தான் கூப்பிடுவாக, டெல்லில அப்பா அமைச்சரால்லாம் இருந்தாக. அப்பாவுக்கு அப்புறம் நம்மளத்தானண்ணே சேர்த்திருக்கணும், என்ன விடுண்ணே வெறும் கேசட்டு கடைய இப்போ அம்பானி அளவுக்கு ஆக்கின உன் மூளைய விட இங்க யாருண்ணே வேணும், வேற எதுக்குண்ணே உனையெல்லாம் விலக்கி வச்சி இப்படி பண்றாங்க"</span></p><p><span style="color: #800180;">"தம்பி, அமெரிக்க மூளை எல்லா இடத்திலும் ஜெயிக்குமா? ஆப்கன் ஆப்ரிக்கான்னு அவனுக தலைய பிச்சிட்டு போறமாதிரி இங்கயும் ஓடபோறானுக பாரு... விமான பெட்ரோலை எவனாவது மண்ணெண்ணெய் ஜெனரெட்டர்க்கு பாவிப்பானா? முடியுமா? அவுக அதத்தான் பண்ணிட்டு இருக்காக "</span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYy1p3UriJcp1L8zPGQmeHP1UAIWrvxiKHmS0b4nCsNGq1cJvOjOKXqTRUWewEvxkQIsc_YbvgiLGVJkeDb0oF1etHYvURW8PbGWiHkD6mt8CcQERoxq6ZGOBCgxLuquREFO4HNlOKV6s/s525/jranjan.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="525" data-original-width="497" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYy1p3UriJcp1L8zPGQmeHP1UAIWrvxiKHmS0b4nCsNGq1cJvOjOKXqTRUWewEvxkQIsc_YbvgiLGVJkeDb0oF1etHYvURW8PbGWiHkD6mt8CcQERoxq6ZGOBCgxLuquREFO4HNlOKV6s/s16000/jranjan.png" /></a></div><br /><b>பொருளாதாரப்புளி ஜெயரஞ்சனுக்கு இதிலே என்ன வேலையாம்? </b><p></p><p>ஆளுநர் உரை, பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்! திமுக தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவோம் என்று தேதி போட்டுச் சொன்னார்களா என்று நிதியமைச்சர் கேட்டார் அல்லவா! அதற்கு ஸ்டேன்லி ராஜன் பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்! </p><p> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFmlEBtl54As960mXelOefmcfdHLJPMbhrwboWYv4PjDRpBcq-LGGkiFooFEKg95b98Ti_EGzkw6kUEYswUlz-y5FsxXoViNfOIkUeFFu8mGy1ftpXgjulPlF2av0thTLfr9weNhrI8sE/s499/stanley.png" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="464" data-original-width="499" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFmlEBtl54As960mXelOefmcfdHLJPMbhrwboWYv4PjDRpBcq-LGGkiFooFEKg95b98Ti_EGzkw6kUEYswUlz-y5FsxXoViNfOIkUeFFu8mGy1ftpXgjulPlF2av0thTLfr9weNhrI8sE/s16000/stanley.png" /></a></p><br />கார்டூனிஸ்ட் அமரன் இதே விஷயத்தை இன்னமும் தெளிவாகப் படம் போட்டே சொல்லியிருக்கிறார்.<p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5g38brmeCnqyodmb03pYb3Au3WKAeehgorlcGM1X3LS_hYU2UMzuXeXtGRYGTTqwN6fMLkRHE39HKewRQaxQWoamyKje1SDd-rrdopubBJOEsjcSNkq19uU3wfOx8de1gf2Iz2IV6sd8/s1079/amaran.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="809" data-original-width="1079" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5g38brmeCnqyodmb03pYb3Au3WKAeehgorlcGM1X3LS_hYU2UMzuXeXtGRYGTTqwN6fMLkRHE39HKewRQaxQWoamyKje1SDd-rrdopubBJOEsjcSNkq19uU3wfOx8de1gf2Iz2IV6sd8/w640-h480/amaran.jpg" width="640" /></a></div><br />திமுக ஆட்சிக்குவந்த நாட்களிலிருந்தே கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றியதே இல்லை என்பதை இதைவிடத்தெளிவாக சொல்லிவிட முடியுமா? <p></p><div>அமைச்சர் தியாகராஜன் கொஞ்சம் திமிருடனேயே கொடுத்த பேட்டியின் வீடியோ நேற்றைய பதிவில் இருந்ததே, எத்தனை பேர் முழுதாகப்பார்த்தீர்கள்? ஸ்ரீராம்! உங்களுக்கும் தான் இந்தக்கேள்வி! <b>இன்றைய தினமலரில் </b> <b><a href="https://www.dinamalar.com/news_detail.asp?id=2788516" target="_blank">நிஜத்தைப் பேசாமல் காற்றில் வாள் வீசும் தியாகராஜன்! </a></b>என்று நிதியமைச்சருடைய முழக்கத்தில் இருந்த தவறான விஷயங்களை பட்டியலிட்டு பதிலும் சொல்லி இருக்கிறார்கள். </div><div><br /></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhug2iX_Fly6KCYxzWK37P0iyob9YIYpaKlUqNjVmvgoA0mFGuDGqWu_gkJ-WByHwdhLnur6CjoC4vjvUw8ppk2lziC04X6jhbSL9bZ7m5XilYuinZtFT5FEtN7p3iBjjFh31vyyAD1I_M/s960/petrol+chenai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="960" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhug2iX_Fly6KCYxzWK37P0iyob9YIYpaKlUqNjVmvgoA0mFGuDGqWu_gkJ-WByHwdhLnur6CjoC4vjvUw8ppk2lziC04X6jhbSL9bZ7m5XilYuinZtFT5FEtN7p3iBjjFh31vyyAD1I_M/w640-h360/petrol+chenai.jpg" width="640" /></a></div><br /><br /></div><div>மாநில அரசு விதிக்கும் VAT ரூ. 34.03 இலிருந்து ஒரு ஐந்து ரூபாய் குறைத்துக்கொள்ள முடியாதா? இதற்கு நேரடி பதில் சொல்ல முடியாத அமைச்சர் பிரதமர் என்னவோ வரிப்பணத்தில் தனக்காக சொந்தவீடு கட்டுகிற மாதிரி மழுப்பினார். இப்படி அவதூறாகப் பேசி தடைகோரிய ஒருவருக்கு நீதிமன்றம் மனுவைத்தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்சரூபாய் அபராதம் விதித்ததே! அந்த விஷயத்தை அமைச்சருக்கு நினைவு படுத்தாமல், அதன்மீது தமிழக பிஜேபி வழக்குத் தொடருமா என்ற கேள்வியை எழுப்பும் அப்பாவி இணையவாசி மீது பரிதாபப்படுவதைத் தவிர நம்மால் என்ன செய்துவிடமுடியும்?</div><div><br /></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIcgkzaExCPkcF8ezzcVuBubJmgmFdgAZhcmM4honWQOwxgHT-pmPEsJwZ3yBSxObK-TNANtOzAY6sIukQ-efyVwCmkLi4nosGjCb05XCW_N67DRtfFE7tVpFrBFrsAa05DLgpFSwzdh0/s1079/amran+0+out+of+100.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="809" data-original-width="1079" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIcgkzaExCPkcF8ezzcVuBubJmgmFdgAZhcmM4honWQOwxgHT-pmPEsJwZ3yBSxObK-TNANtOzAY6sIukQ-efyVwCmkLi4nosGjCb05XCW_N67DRtfFE7tVpFrBFrsAa05DLgpFSwzdh0/w640-h480/amran+0+out+of+100.jpg" width="640" /></a></div><br />ஆட்சிக்கு வந்தே வெறும் 46 நாட்கள் தானே ஆகிறது! அதற்குள் மார்க் போடுவதா என்று கேட்கிறீர்களா? வந்தது போனதையெல்லாம் சிக்சர்களாக சாதனைப் பட்டியலில் திமுகவினர் சேர்த்துக்கொண்டே போவதில் கார்டூனிஸ்ட் அமரன் கொடுத்திருக்கிற பூஜ்யம் மார்க் சரிதான் என்று படுகிறது.</div><div><br /></div><div>மீண்டும் சந்திப்போம். </div><p><br /></p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-51248296487871359102021-06-20T21:30:00.000+05:302021-06-20T21:30:15.388+05:30சண்டேன்னா மூணு! #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும்! #தோல்வியின்பிம்பம் <p>முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ஆரம்பித்துவிட்டார்! புரியாமல் பேசினாரா அல்லது திமுக பாரம்பரியப்படி பொய்மேல் பொய்யாக அடுக்கினாரா என்கிற குழப்பம் இந்த 43 நிமிட வீடியோ பார்க்கிற எவருக்கும் வரும்.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/5R953J0Teac" width="320" youtube-src-id="5R953J0Teac"></iframe></div><br />இந்தப் பேட்டி வேறுபல சேனல்களிலும் வந்திருக்கலாம் ரெட்பிக்ஸைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பக்கா மோடி எதிர்ப்பு ஆசாமிகளை நம்பிப் பிழைக்கிற சேனல் என்பது மட்டுமே அல்ல. வேறெந்த சேனலிலும் இது முழுமையாக கிடைக்கவில்லை. அமைச்சரின் ட்வீட்டரில்/ சொந்த யூட்யூப் சேனலில் தான் முழுதாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். <p></p><p><b><a href="https://www.facebook.com/kuzhalipuru/posts/10225079711890105" target="_blank">குழலி புருஷோத்தமன் முகநூலில் நச்சென்று</a></b> கேள்வி எழுப்பியிருக்கிறார் </p><p><span style="color: #800180;"><b>இந்த கம்பி கட்டுற கதையெல்லாம் வேண்டாம் அமைச்சரே. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது போல பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைக்கவும். </b></span></p><p><span style="color: #800180;"><b>நீங்கள் சொல்லும் சிக்கல்கள் அதிமுக ஆட்சியில் இருந்த போதும் இருந்தது, ஆனால் அதை சொல்லி தான் அவர்கள் அடிமை அவர்களால் முடியாததை நாங்கள் செய்கிறோம் என சொல்லி வாக்கு வாங்கி வென்று இப்போது மத்திய அரசின் மீது பழி போடும் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லக்கூடாது. </b></span></p><p><span style="color: #800180;"><b>நீட் தேர்வு நீக்க முடியாது, டீசல், பெட்ரோல் விலையை குறைக்க முடியாது எனில் தெரிந்தே பொய் சொல்லி உள்ளீர்கள், பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது ஏன்? கிஷோர் கே சாமியை கைது செய்யவா பொய் சொல்லி ஆட்சியை பிடித்தீர்கள்?!</b></span></p><div>தேர்தல் வாக்குறுதிகள் <b>சும்மா லுலுலாயிக்கு</b>ச் சொல்லப் படுவது, நிறைவேற்றுவதற்காக இல்லை என்பது <b>பாமக </b>ஆதரவாளரான புருஷோத்தமனுக்கும் தெரியும். ஓட்டுப் போட்ட பாமர ஜனங்களுக்குத் தெரியுமா? இந்தப்பேட்டியில் <b>தேதி போட்டாங்களா</b> என்று அமைச்சர் சூடாகிக் கேட்ட வசனம் ட்வீட்டரில். செம காமெடியாகிப்போனதைத் தவிர வேறொன்றும் சாதித்தமாதிரித் தெரியவில்லை. அமைச்சர்கள் காமெடி சென்ஸ் உள்ளவர்களாக இருக்கலாம் தவறில்லை! முழுக் காமெடியனாகவே மாறிவிடக்கூடாது இல்லையா! நாடு தாங்குமா? . </div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjzoO9i4pexJPiC6QqYVxQQzf7p80U1YC7zKXILRzTdsuaEbAk5A2bY4WxdqINCCvMtSYzZbsxGU6bNQyb0V1h2a9wTaa5sc1ONgjX-hBJVYn9zw7XqrSam0wmfjhB0mwlbhGkTIL3K-0/s960/samas.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="680" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjzoO9i4pexJPiC6QqYVxQQzf7p80U1YC7zKXILRzTdsuaEbAk5A2bY4WxdqINCCvMtSYzZbsxGU6bNQyb0V1h2a9wTaa5sc1ONgjX-hBJVYn9zw7XqrSam0wmfjhB0mwlbhGkTIL3K-0/s16000/samas.jpg" /></a></div><br /><div>இந்து தமிழ்திசையை விட்டு வெளியேறிய எழுத்தாளர் சமஸ், <b>ஊடகர்</b> ஆகிவிட்டாராம்! சின்ன ஊடகர் பெரிய ஊடகரைப்பற்றி நாளை பேசுகிறா!ராம் . இனி சென்னை அண்ணா நகர் கேகே நகர் அசோக் நகரில் எல்லாம்......!! </div><p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8JdrwWRD7hJ4HXUx7q7Xh3jH-jqAgxbFtXUr-KsupO0PQLon2PwBXd5T0VQ5gVNjDskgzxhw0lE7FCoWZhrZSo4LVxXTOuiVTwJETlI7z_auF91COyL1EKOFvEBGkeOWd5m0nl2tkWEE/s1080/jegame+thanthiram.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1049" data-original-width="1080" height="622" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8JdrwWRD7hJ4HXUx7q7Xh3jH-jqAgxbFtXUr-KsupO0PQLon2PwBXd5T0VQ5gVNjDskgzxhw0lE7FCoWZhrZSo4LVxXTOuiVTwJETlI7z_auF91COyL1EKOFvEBGkeOWd5m0nl2tkWEE/w640-h622/jegame+thanthiram.jpg" width="640" /></a></div><br />ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் ஈழத்தமிழர் இயக்கத் தலைவராக வரும் சிவதாஸ் கதாபாத்திரம் கார்ல் மார்க்ஸ் புத்தகம் ஒன்றைப்படிக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கிறது. நம்மூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் புரட்சியாளர்களுக்கு திடீரென ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டதாம்! <b><a href="https://www.facebook.com/abhinav.surya24/posts/4534809853235768" target="_blank"><span style="-webkit-tap-highlight-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; font-size: inherit; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; touch-action: manipulation;">Abhinav Surya</span> என்பவர் முகநூலில் </a></b>இப்படிப்பொங்கி இருக்கிறார்.<p></p><p><b><span style="color: #800180;">#ஜகமேதந்திரம் உங்க "போராளி" businessக்கு "மார்க்ஸ்" முதலீடா?</span></b></p><p><span style="color: #800180;">போர் நடக்கும் இடங்களுக்கு ஆயுதங்களை விற்று, அதிலிருந்து வரும் காசைக் கொண்டு, போரால் பாதிக்கப்பட்டவர்களை அகதிகளாக அங்கீகரிக்க "போர்" ஒன்றை நடத்துகிறார்களா? இவர்கள் தான் "இயக்கம்" ஆ? என்ன லாஜிக் இது? இது தான் "புரட்சி"யா?</span></p><p><span style="color: #800180;">ஏகாதிபத்தியம், சுரண்டல், போர்கள், அகதிகள், நெருக்கடி, இனவாதம்.. இவற்றுக்கிடையேயான இணைப்பு வரை மட்டும் "புரட்சிகர" வசனங்கள் எழுத கற்றுக்கொண்ட கார்த்திக் சுப்புராஜ், இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் "ஆயுத உற்பத்தி & விற்பனை" பொருளாதாரத்திற்கும் இடையே உள்ள இணைப்பைப் பற்றி கற்றுக்கொள்ள மறந்து விட்டாரா?</span></p><p><span style="color: #800180;">"ஆயுத உற்பத்தி" நிறுவனங்கள் போர்கள் நீடிப்பதன் மூலம் லாபம் அடைவதை மறந்து விட்டாரா? அப்படி என்றால் இந்த so-called "இயக்கம்" கூட இந்த ஏகாதிபத்திய அயுத விற்பனை சுழற்சியில் ஒரு இணைப்பு தானே? புரட்சியின் பாதையிலே நமக்கு ஆயுதங்கள் தேவையாக இருக்கலாம். ஆனால் அதை இந்த "gang"கள் "விற்பனை" செய்து தான் நாம் பெற வேண்டுமா?</span></p><p><span style="color: #800180;">கொஞ்ச நாள் முன்னாடி தான் "புலிகளின் போதை பொருள் கடத்தவில்லை" என சமூக ஊடகங்கள் அனைத்திலும் வாதிட்டு விட்டு, இன்று "புலிகள் ஆயுதம் கடத்தினார்கள்" என்று "பெருமையுடன்" காட்டும் திரைப்படத்தை பாராட்டிக் கொண்டு இருப்பது என்ன லாஜிக்?<b> "ஆயுதம் கடத்தி விற்று அந்த காசை வைத்து இனவெறிக்கு எதிராக போராடுங்கள்" என்பது தான் மார்க்சியம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடமா?</b></span></p><p>அதிலும் அந்தக்கடைசி வரி என்னை அப்படியே பிடித்து உலுக்கிவிட்டது. மார்க்சீயத்தையும் மறந்து சகாவு EMS எழுதிக்குவித்த தத்துவ விளக்கங்களையும் துறந்து, <b><span style="color: red;">மக்கள் ஜனநாயகப்புரட்சி</span></b>க்கான செயல்திட்டத்தையும் மறந்து அங்கே சோனியா காங்கிரசுக்கும் இங்கே திமுகவுக்கும் பக்கவாத்தியம் வாசிப்பதையே வாழ்நாள் பயனாகக்கருதிச் செயல்படுகிறவர்களுக்கு இங்கே வந்திருப்பது ரோஷமா என்பது புரியாமல் திகைத்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். 😰😖 </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf8ssXD8XhV9SiLDtbYqCg6nJQJ7td-fb-qWySgGJVWJZT3AVLgR2gJo2zyKF1hZxDgbPpyjmt_n01FgQwg5dpzEjjQODJLyHND2KEjJ0ICDKy8ws_At7Dj0ZwS4e1EO8r2fZyJcIAsS8/s1200/raga.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="1200" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf8ssXD8XhV9SiLDtbYqCg6nJQJ7td-fb-qWySgGJVWJZT3AVLgR2gJo2zyKF1hZxDgbPpyjmt_n01FgQwg5dpzEjjQODJLyHND2KEjJ0ICDKy8ws_At7Dj0ZwS4e1EO8r2fZyJcIAsS8/w640-h320/raga.jpg" width="640" /></a></div><br />ராகுல் காண்டிக்கு நேற்று 51வது பிறந்தநாளாம்! <b><a href="https://www.facebook.com/venugopalan.rengan/posts/2163586060445156" target="_blank">பதிவர் சேட்டைக்காரன் முகநூலில் </a></b>இதுகுறித்து வெளியான இரு ஆங்கிலக்கட்டுரைகளைத் துவைத்தெடுத்து இருக்கிறார். சுட்டி கொடுப்பது வாசிப்பதற்காகவே என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமா? <b><a href="https://thewire.in/politics/why-is-it-unjust-to-hold-rahul-gandhi-responsible-for-congresss-plight" target="_blank">TheWire தளத்தில் நளின் வர்மா</a></b> எழுதியிருப்பது கொஞ்சம் வித்தியாசமாக! அதாவது காங்கிரஸ் கெட்டுக்குட்டிச் சுவரானதுக்கு ராகுலைக் குறை சொல்லக்கூடாதாம்! ஏனென்றால் காங்கிரஸ் 1980 களிலும் 1990 களிலும் சீரழியத் தொடங்கிவிட்டது. அதற்கு ராகுல் காண்டியைக் குற்றம் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும் என்பது அவருடைய வாதம். சிலநாட்களுக்கு முன்னால்<b><a href="https://www.ndtv.com/opinion/opinion-rahul-gandhi-win-elections-in-real-life-not-on-twitter-2463314?pfrom=home-ndtv_topstories" target="_blank"> NDTV தளத்தில் அசுதோஷ் குப்தா</a></b> எழுதிய கட்டுரைக்கு லிங்க் கொடுத்து ஜூன் 14 அன்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் அசுதோஷ் கொஞ்சம் கூடததயக்கமே இல்லாமல் ராகுல் காண்டி ஒன்று தலைமைப்பொறுப்பை ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் நந்திமாதிரிக் குறுக்கே நிற்காமல் வழிவிட்டு விலக வேண்டும் என்பதைத் தலைப்பிலேயே தெளிவாகச் சொல்லி ஆரம்பித்ததுதான் சரியான பார்வையாக இருக்கமுடியும் என்று எனக்குப் படுகிறது.<div><br /></div><div><span style="font-family: arial;"><span style="background-color: white; font-weight: bold;"><span style="color: #2b00fe;">The problem with Rahul Gandhi is that he thinks he is giving Modi a spirited fight on each and every issue, and that the Congress, sooner rather than later, will be the default choice. He forgets that India has changed, the default setting has been replaced by a new political algorithm. Capturing the mind space of the voter is not a weekend game but is 24x7 live streaming. </span><span style="color: red;">Dynasts like Jitin Prasada and Scindia are happier in their cozy comfort. The surround sound of their hangers-on satisfies their false egos. Ideological commitment for them is more like candy floss, the flavour of which can be changed with the changing times and winning elections is like earning a blue tick from Twitter.</span></span><b style="color: red;"> </b>இப்படி<b style="color: red;"> </b>சிவப்புநிறத்தில் வேறு இரண்டு வாரிசுகள் பெயர் இருந்தாலும் சொல்வது நூற்றுக்குநூறு பொருந்துவது ராகுலுக்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால் <b>ராகுல் காண்டி</b> எனும் தோல்வியின் பிம்பத்தையும் சரியாக மதிப்பிட முடியும் என்றுதான் எனக்குப் படுகிறது. இதுபற்றி உங்களுடைய கருத்தென்ன என்பதை பின்னூட்டங்களில் பகி.ரலாமே </span></div><div><span style="font-family: arial;"><br /></span></div><div><span style="font-family: arial;">மீண்டும் சந்திப்போம் </span> </div><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-52856245687178826692021-06-19T20:37:00.000+05:302021-06-19T20:37:19.768+05:30ஜெகமே தந்திரம்! குப்பைகளோடு கைகோர்க்கும் திரைப்பட அரசியல்! <p><span style="background-color: white; color: #0f1419; font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif; white-space: pre-wrap;">எல்லா (யெஸ், 100%) விமர்சனங்களும் படம் மரண மொக்கை என்று உறுதிபடக்கூறியிருப்பதால், அப்படி என்னதான் மொக்கை என்ற எண்ணத்துடனே ஜகமே தந்திரம் படத்தைப் பார்க்கப் போகிறேன் இப்படிப் <b><a href="https://twitter.com/consenttobe/status/1405882508021882881" target="_blank">பெனாத்தல் சுரேஷ் நேற்றைக்கு ட்வீட் </a></b>செய்ததைப் பார்த்த பிறகுதான் ஜெகமே தந்திரம் படத்தைப் பார்க்கும் எண்ணம் எனக்கும் வந்தது. </span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD-INgDJw5qUAKPCu5-BkGGoKI7NafC6G1nsRHL1aLRdbEKCZzqq-4eroJ98QcFi_2TMgsHSRjg6NQj_oDpbPxy38o2wIZD87GtX7wHYcqv07Vp442pg8gkaY3thV_KGuR7CI2WINHaxw/s800/dhanush.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD-INgDJw5qUAKPCu5-BkGGoKI7NafC6G1nsRHL1aLRdbEKCZzqq-4eroJ98QcFi_2TMgsHSRjg6NQj_oDpbPxy38o2wIZD87GtX7wHYcqv07Vp442pg8gkaY3thV_KGuR7CI2WINHaxw/w640-h360/dhanush.jpg" width="640" /></a></div><br /><span style="background-color: white; color: #0f1419; font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif; white-space: pre-wrap;">விடலைத்தனமான பொறுக்கி வேடத்துக்கு தனுஷை விடப் பொருத்தமான நடிகனைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதும் படத்துக்குத் தேவைக்கு மேலேயே தனுஷ் இட்டுநிரப்பிவிடுவார் என டைரக்டர் நினைப்பும் சேர்ந்த விநோதக் கலவையாக உருவாகியிருக்கிற படம் </span><span style="background-color: white; color: #0f1419; font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif; white-space: pre-wrap;">ஜெகமே தந்திரம். </span><p></p><p><span style="color: #0f1419; font-family: -apple-system, BlinkMacSystemFont, Segoe UI, Roboto, Helvetica, Arial, sans-serif;"><span style="white-space: pre-wrap;"><br /></span></span><span style="background-color: white; color: #0f1419; font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif; white-space: pre-wrap;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwPCNUsoZIuF3OnAz_fxcePLdes1fjgcCjkvnxoL0QCKBX8yb5j5v0bcp3s99wVIxBGpy89Asbcy-iGpY2ZzMHjslC0E92_131dXGWoC2-CkTyONBhv89hNcTdHtV9xBXrVkey-nEAOlc/s489/k+subbaraj.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="305" data-original-width="489" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwPCNUsoZIuF3OnAz_fxcePLdes1fjgcCjkvnxoL0QCKBX8yb5j5v0bcp3s99wVIxBGpy89Asbcy-iGpY2ZzMHjslC0E92_131dXGWoC2-CkTyONBhv89hNcTdHtV9xBXrVkey-nEAOlc/w640-h400/k+subbaraj.png" width="640" /></a></div>இது நம்ம சேட்டைக்காரன் பதிவர்! <p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE_l9-64Mt9-DhvWLhvXeNoKUzzCiU_PzXArD5zdzH2pYkdXR49VK6pk-5uWWC4en4vaCKclFddJduV9CyXl_A_8SxvB2wYrCP84uhkrS-9zUhgJmvQCKr5FWCjBUk2MCNKFcZc6kFwKg/s720/mokkai.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="208" data-original-width="720" height="184" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE_l9-64Mt9-DhvWLhvXeNoKUzzCiU_PzXArD5zdzH2pYkdXR49VK6pk-5uWWC4en4vaCKclFddJduV9CyXl_A_8SxvB2wYrCP84uhkrS-9zUhgJmvQCKr5FWCjBUk2MCNKFcZc6kFwKg/w640-h184/mokkai.png" width="640" /></a></div><p>பூசணிக்காய் சைசில் இருப்பவரை பொரி உருண்டை எனக் குறைத்து மதிப்பிட்ட ஒன்றைத்தவிர கருத்தில் முழுக்க உடன்பட வேண்டியதாகி இருக்கிறது. பேட்டரி வாங்கினதுக்காக இங்கே ஒருத்தர் ரொம்ப நாளாக ஜெயில்ல இருக்கார் என்று ஒருவசனம்! பேரறிவாளனை ஆதரிக்கிறார்களாம்! உள்ளூர்ல விலைபோகுமா? </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiESLMPlhM5Jo9Z8UfjZ4kYZNVVUsOd_s8uRiQu582A6haMHcNNM92LiRfvULDs5G2zwxbwFZrwe0amDUi59uR4R3aBo5LNDuQ5gVyodgNRK4VRUpG8KInpLSfcv61lLhb_U6-_cFS4s7k/s708/k+subba.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="370" data-original-width="708" height="334" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiESLMPlhM5Jo9Z8UfjZ4kYZNVVUsOd_s8uRiQu582A6haMHcNNM92LiRfvULDs5G2zwxbwFZrwe0amDUi59uR4R3aBo5LNDuQ5gVyodgNRK4VRUpG8KInpLSfcv61lLhb_U6-_cFS4s7k/w640-h334/k+subba.png" width="640" /></a></div><p><br /></p>ஈழத்தமிழர் மீது நம்மூர் திரைத்துறைப் புள்ளிகளுக்குத் திடீர்ப்பாசம் அக்கறை பிறப்பது புதிதல்லதான்! ஆனால் கார்த்திக் சுப்பாராஜுக்கு வந்திருப்பது அக்கறைதானா? படத்தில் சொதப்பியிருப்பது வேறுவிதமாக நினைக்க வைக்கிறது. ஈழத்தமிழருக்கு இந்தியத்தமிழர்கள் செய்தது துரோகம் இ.தமிழர் செய்த துரோகத்துக்குப் பரிகாரம் இன்னொரு துரோகத்தை ரிவர்சில் செய்வது என்று காதில் பூ சுற்றியிருக்கிறார் கா. சுபபராஜ்.<p></p><p>புரியவில்லையா? <b><a href="https://www.bbc.com/tamil/arts-and-culture-57529912" target="_blank">பிபிசி தமிழ் விமரிசனத்தை</a></b>ப் பார்த்து விடுங்கள்! இலங்கைத்தமிழரோ இந்தியத் தமிழரோ, தமிழர் என்றாலே கேணைகள்தானே என்ற நினைப்பில் ஈழத்து அரசியலும் பிரச்சினையும் தெரியாமல் ரீல் ரீலாகச் சுற்றியிருக்கிறார் கார்த்திக் சுபபராஜ்.</p><p>கா. சுபபராஜ் மாதிரியானவர்கள் படமெடுப்பது காசு பார்ப்பதற்காகத்தானே தவிர சமூக அக்கறையில் அல்ல என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான்! இவர்போன்ற ஆசாமிகள் சிறிது காலத்துக்கு முன்புவரை பள்ளிக் கூடங்கள், விவசாயிகள் என்று கலர்கலராக லேபிள் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஈழத்தமிழருக்கு ஆதரவு என்கிற லேபிளில் வியாபாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழன் என்றவுடனேயே உச்சி மிகக் குளிர்ந்து ஏமாறத்தயாராகிவிடும் இனமல்லவா!</p><p>கொள்ளைக்காசு கொடுத்து Netflix இந்தப்படத்தை வாங்கி இருப்பதில் தயாரிப்பாளர்களோடு கதை பண்ணியவருக்கும் ஏகப்பட்ட ஆதாயம். விமரிசனங்கள் மிகவும் நெகடிவாக வந்துகொண்டிருப்பதால் தனுஷ் அவற்றைத் தவிர்ப்பதாக தினமலர் செய்தி சொல்கிறது.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxU0vUmxf0uJ1Haw2CKsyo1_2crq50rN26nYUD7xvsKTxzqk46bRJZXHqekhvXedeGiEn_ws7oTSyKbYL8lRJu_AEmX-EmOKCywJc_k91KPDYYQN0lia2Sic_0u10ZDBdaInsi2CQ844s/s494/jegame.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="431" data-original-width="494" height="558" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxU0vUmxf0uJ1Haw2CKsyo1_2crq50rN26nYUD7xvsKTxzqk46bRJZXHqekhvXedeGiEn_ws7oTSyKbYL8lRJu_AEmX-EmOKCywJc_k91KPDYYQN0lia2Sic_0u10ZDBdaInsi2CQ844s/w640-h558/jegame.png" width="640" /></a></div><br /> <p></p><p><span style="background-color: white; color: #0f1419; font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif; white-space: pre-wrap;">முந்தைய பதிவை இதுவரை பார்க்காமல் இருந்தால் இப்போதாவது வாசிக்கலாமே!</span></p><p><span style="background-color: white; color: #0f1419; font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif; white-space: pre-wrap;">மீண்டும் சந்திப்போம். </span></p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-42817855674150676792021-06-18T20:46:00.001+05:302021-06-18T20:46:39.908+05:30ஏழு பேர் விடுதலை :: சாத்தியமா? நிஜமாகவே அவசியமா? <p><b>நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின்</b> <b><a href="https://tamil.news18.com/news/tamil-nadu/former-minister-sellur-raju-hope-mkstalin-delhi-visit-skd-483783.html" target="_blank">வெற்றியுடன் திரும்புவார் என்று</a></b> நம்புகிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கையோடு சொன்னாரா? அல்லது நக்கலாகவா? அது எப்படி இருந்தாலும், ஆகிற கதை மட்டும் இல்லை என்பது இங்கே அரசியல் பழகாதவருக்கும் கூடத் தெரியும். </p><p>இலங்கைத்தமிழர் பிரச்சினையின் மீது ஆரம்ப காலத்தில் எல்லோரையும் போலவே எனக்கும் அனுதாபம் இருந்தது. நாளடைவில் விடுதலைப்புலிகள் மீது மிகைப்படுத்தப் பட்ட பிம்பங்கள் கலைந்து போனது, ராஜீவ் காண்டி படு கொலை செய்யப்பட்ட அந்தத் தருணம், ஈழத்தமிழர் மீதிருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் ஆதரவு உணர்ச்சியை அறவே அற்றுப் போகச் செய்தது. ஆனாலும் பொதுவெளியில் என் கருத்தாக எதையும் எழுதியதில்லை. காரணம் ஏற்கெனெவே நொந்து போயிருக்கிற ஈழத்தமிழர்கள் மனம் நொந்துவிடக்கூடாதே என்பது மட்டும்தான்! நான் அறிந்த ஈழத்தமிழர்கள் பலர் தொட்டாற்சுருங்கிகளாக இருந்ததும் ஒருகாரணம். </p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/S5vrbAS_zyw" width="320" youtube-src-id="S5vrbAS_zyw"></iframe></div><div><br /></div><div><br /></div><b><a href="https://www.deccanchronicle.com/nation/current-affairs/110316/killing-rajiv-gandhi-was-the-biggest-mistake-admits-ltte-leader.html?fbclid=IwAR0Mr7mkwfQbaNSqiMZgyqC7x-Ftur50Q7fqpQNFpfM92PhDWlHnpAhmIR8" target="_blank">இந்த ஒப்புதல் வாக்குமூலம்</a></b> எழுத்து வடிவில் KP யின் ஒப்புதல் எல்லாம் ரொம்பப்பின்னாடி. <br /><p><b><a href="https://www.facebook.com/RadhakrishnanKS1956/posts/1558239834346377" target="_blank">ஸ்டேன்லி ராஜன் இன்று முகநூலில் </a></b>பகிர்ந்திருக்கிற இந்தப்பதிவு நிறையவே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது:</p><p><span style="color: #800180;">ராஜிவ் கொலைவழக்கினை விசாரித்தவர்களுக்கும் அந்த குற்றபத்திரிகையினை முழுக்க தெரியும்</span></p><p><span style="color: #800180;">பேரறிவாளன் மேல் உள்ள குற்றசாட்டு பேட்டரி வாங்கி கொடுத்தான் என்பது, அதுவும் ரிமோட் கண்ட்ரோலில் மாட்டபடும் சிறிய பேட்டரி வாங்கி கொடுத்தான், அதற்கா தூக்கு என்பது தமிழ்நாட்டில் பலபேரின் நம்பிக்கை.பேரறிவாளன் மேல் ஏகபட்ட குற்றசாட்டுக்கள் உண்டு, யாழ்பாணம் சென்றது , குண்டுவெடிப்பில் கொல்லபட்ட ஹரிபாபுவோடு அவனுக்கு இருந்த தொடர்பு, ஹரிபாபு வீட்டில் கண்டெடுக்கபட்ட ஆதாரப்படி அவன் யாழ்பாணம் செல்ல திட்டமிட்ட விஷயம் என நிறைய உண்டு</span></p><p><span style="color: #800180;">ஆம் 1990ல் தன் 16ம் வயதிலே யாழ்பாணம் சென்று பல பயிற்சிகளை பெற்று திரும்பியவன் அவன், அவனோடு அந்த ஹரிபாபு என்பவனும் நெருக்கமான புலி ஆதரவாளனாக இருந்தான். ஹரிபாபுதான் ராஜிவ் கொலையினை படம் எடுத்து சிக்கி செத்தான், இவன் முதலாளிதான் ஸ்டூடியோ அதிபர் சுபா சந்தரம், அவரும் புலி அபிமானி. பேரறிவாளன் சிவராசனுக்கு கவசாகி பைக் வாங்கி கொடுத்தது முதல் நிறைய உதவினான், பேட்டரி என அவன் வாங்கியது பேட்டரி செல் அல்ல, காருக்கான பேட்டரி வகை.</span></p><p><span style="color: #800180;">ஆம் , சிவராசன் இயக்கிய வயர்லெஸ் கருவிக்கு தேவையான சக்திவாய்ந்த பேட்டரி. அதை வாங்கி கொடுத்தது ஆதாரமாக சிக்கியது, இன்னும் நிறைய உண்டு.ராஜிவ் கொலை நுணுக்கமாக திட்டமிடபட்டது, சிக்கினால் ஏகப் பட்டோரை இழுத்துவிடும் மர்ம தந்திரம் அது. அப்படித்தான் மரகதம் சந்திரசேகர் வரை சிக்கவைக்கபட்டனர். ஆனால் இந்திய புலனாய்வு துறை எதை வெட்ட வேண்டுமோ அதை வெட்டினார்கள், எதை விடக் கூடாதோ அதை சரியாக பிடித்தார்கள்.</span></p><p><span style="color: #800180;">மாற்றுவெடிகுண்டாக வந்த ஆதிரையே விடுவிக்கபட்டபொழுது பேரறிவாளன் ஏன் விடுவிக்கபடவில்லை என்றால் விஷயம் அவனின் பிடிவாதம்.இன்றுவரை புலிகளுடனான தன் தொடர்பை அவன் ஒப்புக் கொள்ளவில்லை, அவன் செய்த புலி ஒத்துழைப்பை எங்குமே ஏற்கவில்லை. விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது, அவனிடம் பெரும் பிடிவாதமும் இன்னும் பிடிக்கும் வீண் அடமும் உண்டு. சரி அவன்மேல் குற்றம் இல்லை என்றால் புலிகளால் வஞ்சகமாக ஏமாற்றப் பட்டேன் என் ஒருவார்த்தை சொன்னானா?</span></p><p><span style="color: #800180;">இல்லை, அவன் சொல்லவில்லை சரி, அவன் தாயான அற்புத நடிகையான அற்புதம்மாளாவது சொன்னாளா?</span></p><p><span style="color: #800180;">இல்லை. பின் எங்கிருந்து விடுவார்கள்?</span></p><p><span style="color: #800180;">இதில் சிலர் உடனே சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி என பொங்கலாம். ராஜிவ் கொலைக்கு பின் காங்கிரஸ் இந்நாட்டை 20 வருடம் ஆண்டது, என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? சரி, சு.சாமி சந்திராசாமியினை விசாரித்து உள்ளே போடவேண்டுமென்றால் வை.கோப்பால்சாமியினை என்ன செய்யவேண்டும்?</span></p><p><span style="color: #800180;">"திமுக ஆட்சியும் அவர்கள் ஒத்துழைப்பும் இருந்திராவிட்டால் ராஜிவ் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை" என சொன்ன ஜெயின் கமிஷன் அறிக்கைபடி என்ன செய்யலாம்? ராஜிவ் கொலைக் கைதிகள் 7 பேரில் 3 பேரே இந்தியர்கள் நால்வர் இலங்கையர்கள், நாடுவிட்டு நாடு கொல்லவந்தவர்களை விடுவி என்பது முட்டாள் தனமானது. மீதி மூவரில் நளினி கடைசி வரை முழு உண்மையினை சொல்லவில்லை, காதலனை காப்பாற்ற சில உண்மைகளை சொன்னாளே தவிர இன்னும் முழு அப்ரூவர் ஆகவில்லை. குறைந்த பட்சம் தான் செய்தது தவறு என்று கூட சொன்னதில்லை</span></p><p><span style="color: #800180;">இந்த பேரறிவாளன் சாதாரண நபர் அல்ல, 16 வயதிலே இலங்கை சென்றவன், இந்திய ராணுவத்துக்கு எதிராக சாத்தானின் படைகள் எனும் புத்தக தயாரிப்பில் முழுக்க உதவியன். ராஜிவ்கொலையில் பிடிபடாவிட்டால் அவன் இலங்கைக்கு தப்பியிருக்கும் அபாயமும் உண்டு.</span></p><p><span style="color: #800180;">பேரறிவாளன் இன்னும் உண்மையினை ஒப்புக் கொள்ளாதவன், இவ்வளவு நடந்தபின்னும் அவன் மேலான புலிதொடர்பு ஆழமாக நிரூபிக்கபட்டபின்பும் இன்னும் தான் அப்பாவி என சொல்லி கொள்ளும் ஒரு குற்றவாளி. முதலில் அவன் தன் தவறை ஒப்புக் கொள்ளட்டும், 16 வயதில் மகனை தறுதலையாக்கி தேசவிரோதியாக்கிய அந்த அற்புதம்மாளும் தன் தவறை ஒப்புகொள்ளட்டும். அதன்பின் அடுத்த காட்சியினை பார்க்கலாம்</span></p><p>மேலே பகிர்வின் சுட்டியில் பின்னூட்டங்கள் இன்னும் அதிகத் தகவல்களைக் கொட்டுகின்றன. நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதும், எழுவர் விடுதலையும் ஆகிற கதை போலத் தெரியவில்லை என்றாலும், என்னமோ உடனே சாதித்துக் காட்டப்போகிறமாதிரி என்னமாய் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!! </p><p>மீண்டும் சந்திப்போம் .</p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-54274023952410806022021-06-16T22:12:00.003+05:302021-06-16T22:14:06.694+05:30ஒரு புதன்கிழமை! செய்திகளின் அரசியல் கொஞ்சம் சுருக்கமாக! <p>முதலில் இந்தியர்களாக நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள வைக்கும் ஒரு செய்தியைப் பார்த்து விடுவோம்! <b>சீனாவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்தியர்கள்</b></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1QL5yk3FzfoTa1gsHce2714jJuPu6pQk0jWDZRaMVyM16iZ4DSYbk-UkUVGP9G36TTNi6ZWeVr7sWfcHd4oJaD9Ex1QY1qxOtMiezPm-4hLLcw7V1I4lm4WiP4QF4cUo4Tbm1mxWuPME/s1000/china+boycott.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="667" data-original-width="1000" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1QL5yk3FzfoTa1gsHce2714jJuPu6pQk0jWDZRaMVyM16iZ4DSYbk-UkUVGP9G36TTNi6ZWeVr7sWfcHd4oJaD9Ex1QY1qxOtMiezPm-4hLLcw7V1I4lm4WiP4QF4cUo4Tbm1mxWuPME/w640-h426/china+boycott.jpg" width="640" /></a></div><br /><p>கடந்த 12 மாதங்களில் 43% இந்தியர்கள், சீனப் பொருட்களை புறக்கணித்துள்ளனர்! லடாக்கில் (Ladakh) உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) இந்திய மற்றும் சீன படையினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு தொடங்கியது. அந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பல சாமானிய மக்கள், சீன தயாரிப்புகளை புறக்கணிக்கத் தொடங்கினர் (<b>Ban China Products</b>).அதே சமயத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியர்கள், தற்சார்பு பொருளாதாரத்தை (<b><span style="color: #2b00fe;">Atmanirbhar Bharat</span></b>) நோக்கிய பயணத்தை, ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசு பல திட்டங்களை வகுத்தது. கூடுதலாக உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது.</p><p>இதனால் கடந்த 12 மாதங்களில், 43% இந்தியர்கள் சீன பொருட்களை (Made in China) புறக்கணித்துள்ளனர். கிட்டத்தட்ட 60% பேர் சீனாவில் தயாரித்த பொருட்களை தொடர்ந்து வாங்குகின்றனர் ஆனால், அவர்கள் கூட இந்த காலகட்டத்தில் 1-4 பொருட்களே வாங்கியுள்ளனர்.</p><p>இன்னும் சொல்லப்போனால், நுகர்வோரின் விழிப்புணர்வு (consumer awareness) இந்த ஓராண்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது! #GalwanValleyClashes #china #madeinchina என்கிறது - சாணக்யா செய்திக்குழு -</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqDxkSsCNJ8qw5ys8yRGnc1QFVHXx_9ocDldgvkzfBALDJwwa3hiJLjcVubMDNjoeCU8-vhRo3A488ln5I20kh03e5WfCxA7E_N0m7Mc4GT0lz2Lq-beuFNCnbyPEhUWjOo5VVwvVCSq0/s1440/maruthu.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="809" data-original-width="1440" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqDxkSsCNJ8qw5ys8yRGnc1QFVHXx_9ocDldgvkzfBALDJwwa3hiJLjcVubMDNjoeCU8-vhRo3A488ln5I20kh03e5WfCxA7E_N0m7Mc4GT0lz2Lq-beuFNCnbyPEhUWjOo5VVwvVCSq0/w640-h360/maruthu.jpg" width="640" /></a></div><br /><div>மருது பாண்டியர்கள் என்றழையிக்கப்பட்ட மருது சகோதரர்கள் இன்றைக்கு 220 ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலை முழக்கம் செய்தநாள் ஜூன் 16 கவிஞர் கண்ணதாசன் சொந்தமாகத் தயாரித்த <b><a href="https://youtu.be/CIYkRF7ttfY" target="_blank">சிவகங்கைச் சீமை திரைப்படம்</a> </b>மருது பாண்டியர்கள் வரலாற்றைச் சொன்ன காவியம். நேரம் ஒதுக்கிப்பாருங்களேன்! </div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5hg1KmoLTgO_nQzpjEaHfR4CwDHHUprFmrAlijRztH0dwT4jlIEUlxJv1pQeo_7JZpkL9UoJ679Y9hC88n9HEHmRZP5d8tq3cDqgse_x8lZn7eC_kdZi8DJT4W60Ocs1lVEB0SsurqYM/s635/kerala.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="632" data-original-width="635" height="636" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5hg1KmoLTgO_nQzpjEaHfR4CwDHHUprFmrAlijRztH0dwT4jlIEUlxJv1pQeo_7JZpkL9UoJ679Y9hC88n9HEHmRZP5d8tq3cDqgse_x8lZn7eC_kdZi8DJT4W60Ocs1lVEB0SsurqYM/w640-h636/kerala.jpg" width="640" /></a></div><br /><div>டில்லியில் 962 கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை 13500 கோடி ரூபாய் வீண் ஆடம்பரச் செலவு என்று கூவிய இடதுசாரிகள், கேரளாவில் ரூ. 56443 கோடி செலவில் காசரகோடு - திருவனந்தபுரம் ரயில்பாதை அமைக்கும் திட்டத்தைப் பற்றி எதுவுமே சொல்லாமல் மௌனமாக இருப்பதேன்? யாராவது fevicol போட்டு ஒட்டி விட்டார்களா என்ன?</div><div><br /></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQdAWvoynXC6xQloAO_R46JjMRLIyS0G509QfLPgrU00LsBdrQMhwffVTE7y6I0AkqpITfZBeZ1M8TplU_JY6hyX72tmw6LtLhYHcI3-a4eToeKaCYnrUhYsLmXddmHupHmg_FSzsk9MY/s493/stanle.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="346" data-original-width="493" height="450" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQdAWvoynXC6xQloAO_R46JjMRLIyS0G509QfLPgrU00LsBdrQMhwffVTE7y6I0AkqpITfZBeZ1M8TplU_JY6hyX72tmw6LtLhYHcI3-a4eToeKaCYnrUhYsLmXddmHupHmg_FSzsk9MY/w640-h450/stanle.png" width="640" /></a></div><br />நாளை மாலை பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார் என்பதைக் குறித்து ஏகப்பட்ட அலப்பறைகள் கிளம்பியதில் ஸ்டேன்லி ராஜனுடைய நச்சென்ற பகிர்வு. சந்திப்பில் முக்கியமான விஷயம் முதல்வருடன் செல்கிறவர்கள் பட்டியலில் நிதியமைச்சர் இல்லை, ஆனால் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இருக்கிறார். டாட்.</div><div><br /></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtBxW921ncubSt9cf4_rTJgfRTIZHvyIVtakV0oMEVIBcX1Vq1SACkz9DnAGspDsBQZm8fPjc_JKIWmdB8AZiX_Gvio60pA6dOjbt6Afwt8iME4284OORa-lEcPmICxAm2-waOCLQ7xiE/s720/vikatan.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="509" data-original-width="720" height="452" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtBxW921ncubSt9cf4_rTJgfRTIZHvyIVtakV0oMEVIBcX1Vq1SACkz9DnAGspDsBQZm8fPjc_JKIWmdB8AZiX_Gvio60pA6dOjbt6Afwt8iME4284OORa-lEcPmICxAm2-waOCLQ7xiE/w640-h452/vikatan.jpg" width="640" /></a></div><br />வீசுவது கறித்துண்டு பொறை பிஸ்கட் எதுவானாலும் நேரத்துக்கு வரவில்லையென்றால் இப்படித்தான்! அதனால் விகடன் திருந்திவிட்டது என்றா சொல்லிவிட முடியும்? #முன்களப்பிணி </div><div><br /></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtUu86eLzvPLvFjdVNMOADV1BemFQk8j149DsNVyVtjm1hKJ2WTKu3S3_Xcz4ojIx0bfGzPvSZdSeykTbyHtM3SztAQx1OMdZULyZLXit4R-y67RE6jRbzhYGreK0OtM5TBTyo2yPTFbk/s1548/temple+mgmt.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1548" data-original-width="1152" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtUu86eLzvPLvFjdVNMOADV1BemFQk8j149DsNVyVtjm1hKJ2WTKu3S3_Xcz4ojIx0bfGzPvSZdSeykTbyHtM3SztAQx1OMdZULyZLXit4R-y67RE6jRbzhYGreK0OtM5TBTyo2yPTFbk/w476-h640/temple+mgmt.jpg" width="476" /></a></div><br /></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEMMa5vG3-qctbFLw86W6GLnyz_eNk50tLxS25MvH5vqqoYJ1fV4Io4j_OorvXT78m1o3zvs7z2qJOK4FaiwZZ_U6YC_gPG5gV6ZkisYFrjAhQbCEppOUKYCzKVBYMvtdmxIhCuyUiHCE/s1781/aagamam.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="517" data-original-width="1781" height="186" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEMMa5vG3-qctbFLw86W6GLnyz_eNk50tLxS25MvH5vqqoYJ1fV4Io4j_OorvXT78m1o3zvs7z2qJOK4FaiwZZ_U6YC_gPG5gV6ZkisYFrjAhQbCEppOUKYCzKVBYMvtdmxIhCuyUiHCE/w640-h186/aagamam.jpg" width="640" /></a></div><br /><div>கோவிலை நிர்வகிப்பதைக்குறித்து ஆகமங்களில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆகமங்கள் தான் கோவில் நிர்வாகத்துக்கான அத்தாரிட்டி! HR &CE அல்ல. </div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/FTU3Wkj6E30" width="320" youtube-src-id="FTU3Wkj6E30"></iframe></div><br /><div>அயோத்தி ராமஜென்மபூமி நிலம் வாங்கியதில் மோசடி என்று உத்தரப்பிரதேச அரசியலில் கிளப்பி விடப்பட்ட வேகத்திலேயே, கிளப்பியவர்கள் முகத்தில் கரிபூசிக் கொள்ளவேண்டி வந்தது. எப்படி என்பதை கோலாகல ஸ்ரீனிவாஸ் விவரிக்கிறார். வீடியோ 18 நிமிடம்.</div><div><br /></div><div>மீண்டும் சந்திப்போம். </div> </div><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-67603629809639754642021-06-14T20:52:00.000+05:302021-06-14T20:52:08.539+05:30மண்டேன்னா ஒண்ணு! சோனியா காங்கிரஸ்! ஓசி விளம்பரம்! திராவிட பாசக! <p>கடந்த வாரம் ஜிதின் ப்ரஸாதா என்கிற ஒற்றை ஆளுமை காங்கிரசில் இருந்து வெளியேறி பிஜேபியில் சேர்ந்த ஒரு விஷயத்தை வைத்து சிலநாட்களாக NDTV தளத்தில் வீர் சங்வி, ராமச்சந்திர குஹா, சல்மான் குர்ஷித் என வரிசை கட்டிவந்து கருத்துச் சொல்லிக்கொண்டிருப்பது கொஞ்சம் சுவாரசியமான அக்கப்போராகத்தான் இருக்கிறது. <b><a href="https://www.ndtv.com/opinion/opinion-scindia-now-prasada-so-bjp-welcomes-dynasts-after-all-2460061?pfrom=home-ndtv_opinion" target="_blank">வீர் சங்வி</a></b> சோனியா காங்கிரசின் இன்றைய நிலைமைக்குக் காரணமாக சில விஷயங்களைச் சொல்கிறார். சரித்திர எழுத்தாளர் <b><a href="https://www.ndtv.com/opinion/opinion-the-congress-partys-death-wish-by-ramachandra-guha-2461456" target="_blank">ராமசந்திர குஹா</a></b>, வழக்கம்போல செயலிழந்த வாரிசுகளே தலைமையில் நீடிப்பதுதான் காரணம் என்று அடுக்குகிறார். வக்கீலாகவும் முன்னாள் மத்திய அமைச்சருமான <b><a href="https://www.ndtv.com/opinion/opinion-in-response-to-ram-guhas-view-of-rahul-gandhi-by-salman-khurshid-2463413" target="_blank">சல்மான் குர்ஷித் </a></b>ராகுல் காண்டிக்கு வக்காலத்து வாங்கி ராமசந்திர குஹா சொன்னதைக் கண்டிக்கிறார்.ஆம் ஆத்மி கட்சியில் இருந்த ஜர்னலிஸ்ட் <b><a href="https://www.ndtv.com/opinion/opinion-rahul-gandhi-win-elections-in-real-life-not-on-twitter-2463314?pfrom=home-ndtv_topstories" target="_blank">அசுதோஷ் குப்தா</a></b> ஜ்யோதிராதித்ய சிந்தியா மாதிரியே ஜிதின் பிரசாதாவும் வெளியேறியது நல்லதுக்குத்தான் என்று ஆரம்பிக்கிறார். நான்கு விதமான கருத்துக்கும் சுட்டி அந்தந்தப்பெயர்களிலேயே இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் படித்து, இன்னும் அதிகமாகக் குழம்பலாம்! </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhP7_12b6v5nGuC8MU6cEyFITCp07REaz33BW5RZmpaUDl6r6E_rjbogc4rikoPt4Al7m6lXwL6uTyytJcI-SCxkc-VmVw4112yEj9zts9C5R8oqjwDJYIFxk0yPikpBogan2AjJszPNg/s1200/defeat+sonia.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="982" data-original-width="1200" height="524" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhP7_12b6v5nGuC8MU6cEyFITCp07REaz33BW5RZmpaUDl6r6E_rjbogc4rikoPt4Al7m6lXwL6uTyytJcI-SCxkc-VmVw4112yEj9zts9C5R8oqjwDJYIFxk0yPikpBogan2AjJszPNg/w640-h524/defeat+sonia.jpg" width="640" /></a></div><br />சதீஷ் ஆசார்யா மோடி வெறுப்பில் பைத்தியம் முற்றுவதற்கு முன்னால் வரைந்த கார்ட்டூன் இது. விஷயம் இன்னதுதான் என்பதை நச்சென்று சொல்லி விடுகிறதே!<div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaswbKG17oVB0GRonZipBptTuLkGsmFdrx1S-Go0LKkuAZOXH5MYrYFgCXJ80TWNy8bs3AoHN9MQLH914a1vgk_IZfxin6wqEx8fpNN-ygIefKmIB6vFfQFxlA2H4M5l5ErfWK-5kIxZs/s643/mdu+tasmac.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="556" data-original-width="643" height="554" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaswbKG17oVB0GRonZipBptTuLkGsmFdrx1S-Go0LKkuAZOXH5MYrYFgCXJ80TWNy8bs3AoHN9MQLH914a1vgk_IZfxin6wqEx8fpNN-ygIefKmIB6vFfQFxlA2H4M5l5ErfWK-5kIxZs/w640-h554/mdu+tasmac.png" width="640" /></a></div><div><br /></div>சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரை இனிமேல் டாஸ்மாக் வளர்த்த மதுரை என்றாகிவிடுமோ? <b><a href="https://dhinasari.com/latest-news/211103-dmk-party-man-done-pooja-in-front-of-tasmac-shop.html?fbclid=IwAR2mnlxJr_uYLFk3FEfK2FUSm6UbBnLp39l-2Cd4kz4LDtSmEciylHXYiOw" target="_blank">முழுச் செய்தியையும் வாசிக்க</a></b><br /><div><br /><div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiztDhtwgXQgKlYxTD6qCK0ssUULCdJswotGN5wVqgeVXRH-6Wz3HfPtoRkUePDpekSHDvrSO8JSoMmztOuMv8IULKNhuY1jjZmGXU_cuWbAz-o5AaPrjNDDcZesTs2cP9G6ph9q1hZMQA/s1079/pavendhar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="809" data-original-width="1079" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiztDhtwgXQgKlYxTD6qCK0ssUULCdJswotGN5wVqgeVXRH-6Wz3HfPtoRkUePDpekSHDvrSO8JSoMmztOuMv8IULKNhuY1jjZmGXU_cuWbAz-o5AaPrjNDDcZesTs2cP9G6ph9q1hZMQA/w640-h480/pavendhar.jpg" width="640" /></a></div><br /><div>இந்த கார்டூனுக்குத் தனியாக விளக்கவுரை எழுதத் தேவையே இல்லை. ஆனால் இன்று காலைநடந்த கைது விவகாரத்தில் தமிழக சேனல்கள் கொடுத்திருக்கும் கவரேஜ் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பைத் தாண்டி இருக்கும் என ஒரு தோராயமான மதிப்பீடு சொல்கிறது.</div><div><br /></div><div><b>#அய்யோகொல்றாங்களே </b>விளம்பரத்துக்குப் பின் இந்த நபருக்கு இந்த அளவு விளம்பரம் கொடுத்திருப்பதில் அரசு சாதித்தது என்ன? <b><a href="https://tamil.asianetnews.com/politics/youtuber-saatai-duraimurugan-arrested-kanimozhi-action-quo8kz" target="_blank">இந்த வேடிக்கையையும் பார்த்து விடுங்கள்!</a></b> </div><div> <br /><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtuHhhJDun2KnYHl2Dpi0zwDoyIZ5X24blFapZabDEhqRjJh7g5beN4Cq5LqhgAdTQvv9y2s73uQ5FGO8Nq4PP76mDwF809IFB_yFBCGA5HosKxZ8XJi9-RKAEQ7VVFhe046lgPRYHTDk/s488/tnbjp.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="488" data-original-width="487" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtuHhhJDun2KnYHl2Dpi0zwDoyIZ5X24blFapZabDEhqRjJh7g5beN4Cq5LqhgAdTQvv9y2s73uQ5FGO8Nq4PP76mDwF809IFB_yFBCGA5HosKxZ8XJi9-RKAEQ7VVFhe046lgPRYHTDk/w638-h640/tnbjp.png" width="638" /></a></div><br /><p>திராவிட பாசக என்று இங்கே தமிழக பிஜேபி நக்கல் செய்யப்படுவது எவ்வளவு சரியானது? எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்ப்பா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க: வடிவேலு காமெடி மாதிரியே இங்கே கட்சியை நடத்துகிறார்கள் என்ற ஆத்திரத்தில் பல பிஜேபி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குமுறுவதைப் பார்த்திருக்கிறேன்.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/MyQj6tlVLuU" width="320" youtube-src-id="MyQj6tlVLuU"></iframe></div><br />பிஜேபியின் கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு 128 நாட்கள் சிறையிலிருந்து, சமீபத்தில்தான் வந்திருக்கிறார். வீடியோ நேர்காணல் 42 நிமிடம். பொறுமையாகப் பார்க்க வேண்டிய ஒன்று.<p></p><p>மீண்டும் சந்திப்போம். </p></div></div></div><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-77796480988359502952021-06-13T13:28:00.001+05:302021-06-13T13:31:18.870+05:30சண்டேன்னா மூணு! சோனியா காங். அரசியல்! வைகோ! சந்தேக சாம்பிராணி! <p>சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை <b><a href="https://www.facebook.com/ramjiyahoo/posts/4397547463589858" target="_blank">முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ</a></b> வழியாக ஒரு சோறு பதம் பார்த்திருக்கக் கூடும். இந்த கிளப் ஹவுஸ் அரட்டை ஒன்றில் பாடகி <b>சின்மயியிடம் ஒரண்டை இழுத்த மருத்துவர்</b> மன்னாப்பு கேட்டு ட்வீட்டரில் மன்றாடிய கதை கூட நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் <span style="font-family: verdana;"><b>clubhouse</b></span> அரட்டைகளில் வேறு அபத்தங்கள், விபரீதங்கள் இருப்பதை சோனியா காங்கிரசின் டிக்கி சிங் என்கிற திக்விஜய் சிங் நிரூபித்திருக்கிறார். ராகுல் காண்டிக்கு அரசியல் சொல்லிக்கொடுத்தவர் இவர் என்பதை இந்தத் தருணத்தில் நினைவில் கொள்வது நல்லது </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/TApKM-zUPew" width="320" youtube-src-id="TApKM-zUPew"></iframe></div><br /><span style="color: #800180;">ஜிதின் பிரஸாதா பிஜேபியில் சேர்ந்ததும் காங்கிரஸையும் திக்குவாய் சிங்கையும் ஓவர் டைம் போட்டு செருப்பால் அடிப்பதுபோல் ட்வீட் போட்டிருக்கிறார். திக்குவாய் சிங் எப்பவுமே பாகிஸ்தானுக்கு ஆதரவா மட்டுமே பேசுவாரு. கொஞ்சம் விட்டா ஏன் பாகிஸ்தானை உடைத்தார் என்று இந்திரா காந்தியையே திட்டினாலும் திட்டுவார்னு எழுதி இருக்கிறார். அவர் எழுதாமல் சொல்ல வந்தது... இந்திரா காந்தியைப் பற்றி.. அப்படி பேசச் சொல்லி சோனியா காந்தி தூண்டிவிட்டு ரசித்தாலும் ரசிப்பார் என்பது. </span><div><span style="color: #800180;"> </span></div><div><span style="color: #800180;">மோதிஜி ஒண்ணும் சும்மா சொல்லவில்லை.. “காங்கிரஸ் முக்த் பாரத்” வேணும்னு. அப்ப மட்டும்தான் பாரதம் உருப்படும்..!</span> என்று டிக்கி சிங்கின் clubhouse உளறலை குறித்து <b><a href="https://www.facebook.com/prema.seetharaman/posts/4358066084254016" target="_blank">முகநூலில் எழுதியிருக்கிறார்</a> திருமதி பிரேமா. </b>இதோ ஜிதின் பிரசாதாவின் ட்வீட். </div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiglgBFUm6ik-aIv9lVkXH8xtKd6ioIRHAbjN44N1x8MtemTZZg6jOU_1AgozMmr6z_JD710C0vX3iiBYdU5QiYJuXxNIEn9Rdnw89QuWTs3ZcTKwsIoJ96f2gJGEdD8vqPdj8NniSnUtg/s960/itin.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="634" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiglgBFUm6ik-aIv9lVkXH8xtKd6ioIRHAbjN44N1x8MtemTZZg6jOU_1AgozMmr6z_JD710C0vX3iiBYdU5QiYJuXxNIEn9Rdnw89QuWTs3ZcTKwsIoJ96f2gJGEdD8vqPdj8NniSnUtg/w422-h640/itin.jpg" width="422" /></a></div><br /><div>தேசத்தை விட, மோடியை எதிர்ப்பதற்காக எவருடன் வேண்டுமானாலும் கூட்டு என்பதாக சோனியா காங். கிகளின் லட்சணம் கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆர்டிகிள் 370 காலாவதியாகி, அங்கே அதை மறந்து ஜனங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புகிற தருணத்தில் குழியில் புதைத்ததை மறுபடி தோண்டி எடுப்பானேன்? ஒப்பாரி வைப்பது ஏன்? தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஆர்டிகிள் 370 ஐத் திரும்பக் கொண்டுவருவோம் என்பதெல்லாம் என்னமாதிரியான அரசியல்? </div><div><br /></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSMJZvsuF6-Xl7htT_h4bI_bGQsZVXdUmSPpxQpENVZhX7bprexPvfdPO-o3moYD2285zoIX_6LCTdjbnhGmgLxiu82yxub-Agkt_QjVSAuPLi2ZsMHEuGArZkANgCciKllAySJaW2oMs/s544/vaiko.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="424" data-original-width="544" height="498" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSMJZvsuF6-Xl7htT_h4bI_bGQsZVXdUmSPpxQpENVZhX7bprexPvfdPO-o3moYD2285zoIX_6LCTdjbnhGmgLxiu82yxub-Agkt_QjVSAuPLi2ZsMHEuGArZkANgCciKllAySJaW2oMs/w640-h498/vaiko.png" width="640" /></a></div><br /> </div>வைகோ என்கிற மானஸ்தனை .........! இதற்காகவே கண்கலங்கும் வைகோவின் பழைய படம் ஒன்றை பார்சேல் செய்து பிரகாஷ் ராமசுவாமிக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்!<div><br /><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzpGP-Lt6AHA5rVeVOckKPlXLON25Ne2sSTeTlgHaTenw5QYxcdTBazl9dt8oHjmKVaTHZu94coh7-6d5aVdUinKrbyNYTZPN_5S4q0kTQRav34NwwR80g2xBOxDsqMZJKfpDFZ6UB1dA/s896/vigo.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="896" height="386" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzpGP-Lt6AHA5rVeVOckKPlXLON25Ne2sSTeTlgHaTenw5QYxcdTBazl9dt8oHjmKVaTHZu94coh7-6d5aVdUinKrbyNYTZPN_5S4q0kTQRav34NwwR80g2xBOxDsqMZJKfpDFZ6UB1dA/w640-h386/vigo.jpg" width="640" /></a></div><br />மப்பில் விஜயகாந்துடன் மல்லுக்கட்டி அதிலிருந்து தப்பிக்க திமுகவுக்குத் தேர்தல் பிரசாரம் செய்யப்போய் தன்னுடைய மார்க்கெட்டையே பறிகொடுத்த நடிகர் வடிவேலுவின் திரைக்காவியங்களில் ஒன்று இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. </div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrzISNCrUmLYr53BE12MXEhfX9kBdfo8JCeAJxrBtUrxPBiVjGoL7X8xV3l1pBoyYiRghicsYLLPXCEHwTLWczSEcqLn2h3ghI_3DpIbin318FxwBfx2bh-capoaZY2kHiMaTy6KRyPDQ/s1280/chanakya.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrzISNCrUmLYr53BE12MXEhfX9kBdfo8JCeAJxrBtUrxPBiVjGoL7X8xV3l1pBoyYiRghicsYLLPXCEHwTLWczSEcqLn2h3ghI_3DpIbin318FxwBfx2bh-capoaZY2kHiMaTy6KRyPDQ/w640-h360/chanakya.jpg" width="640" /></a></div><br /><div>வடிவேலுவே மறந்தாலும் நம்மூர் அரசியல் அவரை விடுவதாயில்லை என்பதற்கு சாணக்யா தளத்தில் இன்று வெளியாகி இருக்கும் ஒரு மீம். சந்தேகசாம்பிராணி யார் என்பதாவது புரிகிறதா? அது வடிவேலுவோ சாணக்யா தளமோ இல்லை, <b>நாம்தான்!</b> புரிந்துகொள்கிறோமா என்ன? !!</div><div><br /></div><div>அரசியலோடு கொஞ்சம் புத்தக அறிமுகம் ஒன்றையும் பார்த்து விடலாமா?</div><div> </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiANUNcMykNGGzNlVFXT_BS_CPKzwB2WdNsFmxYetqBvoDxTYCfOwoCS8PSFHOBHcfxOh13EohMuMkfzj0NuHYtpXil7iq1r4guGpM_jZyjxkNT2-Ko1Z2HzKL3YBla4tDNy9hyZorYjCM/s960/book+intro.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="735" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiANUNcMykNGGzNlVFXT_BS_CPKzwB2WdNsFmxYetqBvoDxTYCfOwoCS8PSFHOBHcfxOh13EohMuMkfzj0NuHYtpXil7iq1r4guGpM_jZyjxkNT2-Ko1Z2HzKL3YBla4tDNy9hyZorYjCM/w490-h640/book+intro.jpg" width="490" /></a></div><br /><div>நான் இப்போது மறுவாசிப்புக்காக எடுத்துக்கொண்டு இருக்கிற புத்தகம் லியோன் ஊரிஸ் என்ற எழுத்தாளர் 1958 இல் எழுதிய நாவல்<span style="font-family: verdana;"> Exodus இஸ்ரேல் என்றொரு நாடு 1948 இல் பிறந்த கதையைச் சொல்வது. முன்பே படித்ததுதான்! இப்போது மறுவாசிப்பாக. </span></div><div><span style="font-family: verdana;"><br /></span></div><div><span style="font-family: verdana;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAPibkEKfc5JZAb0bcz4dfsuleRbQ9PzCYIKmnolQ_2yG_USq8xOzh57yXgbNIGwNU1ote6e_ihXoSF61rzPH-TbWs3xpgIdmwtnSk8KF4G5l4qW-zsUHVp9DrfHkUtlaZpRc4ZjvoQI4/s475/exodus.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="475" data-original-width="304" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAPibkEKfc5JZAb0bcz4dfsuleRbQ9PzCYIKmnolQ_2yG_USq8xOzh57yXgbNIGwNU1ote6e_ihXoSF61rzPH-TbWs3xpgIdmwtnSk8KF4G5l4qW-zsUHVp9DrfHkUtlaZpRc4ZjvoQI4/w410-h640/exodus.jpg" width="410" /></a></div><br />எண்ணூற்றுச்சொச்சம் பக்கங்கள். ஒரே மூச்சில் படிக்க முயன்று நிறையத்தடவை தோற்கடித்த புத்தகமும் கூட.</span></div><div><span style="font-family: verdana;">இஸ்ரேல் என்றாலே இன்றைக்கும் ஒரு புரியாத புதிராக, விளங்கிக்கொள்ள முடியாத அதிசயமாகத்தான் பார்க்க முடிகிறது. மோகன் குருசாமி இந்தப்புத்தகத்தைப் பற்றி 2017 இல் எழுதிய <b><a href="https://scroll.in/article/843258/why-exodus-leon-uriss-epic-novel-of-israel-is-not-what-the-country-has-turned-out-to-be" target="_blank">எதிர்மறையான விமரிசனம் இங்கே.</a></b> </span></div><div><span style="font-family: verdana;"><br /></span></div><div><span style="font-family: verdana;">மீண்டும் சந்திப்போம். </span></div><div><p></p></div></div><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-13478714929422098712021-06-12T20:16:00.001+05:302021-06-12T20:20:42.337+05:30இட்லி வடை பொங்கல்! #83 கொம்பேறித்தாவும் குரங்கிடம் இருந்து பிறந்ததா அரசியல்? <p>இரண்டு மூன்று நாட்களாகவே செய்திகளில் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருந்த இரண்டு கட்சித்தாவல்கள் ஒருவழியாக நடந்தே விட்டன என்பதில் எந்தவிதமான அதிர்வலைகளையும் அரசியல்களத்தில் காண முடியவில்லை. முகுல் ராய் 2017 இல் திரிணாமுல் காங்கிரசிலிருந்து பிஜேபிக்குத் தாவியவர், மறுபடியும் மம்தா பானெர்ஜியிடமே சேர்ந்து விட்டார். சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப்பிறகு மம்தாவின் வெறியாட்டம், பிஜேபிக்காரர்களுக்கு ரேஷன் இல்லை என ஆரம்பித்து மேற்குவங்கத்தில் மம்தாவை எதிர்ப்பவர்களுக்கு உயிர் வாழ உரிமையே இல்லை என்ற அளவுக்கு விபரீதமாகிக் கொண்டிருப்பதில் முகுல் ராய் துணிந்து நின்றிருந்தால் மட்டுமே ஆச்சரியம்!</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUblwDJ6uD9wF8D3XH5Ac5BRCxn7QzJqevux3A7NvNr-ffHm1WGn7zObH4vNhAEkmPHqynVnOqfEmuVKCvZx1BGtvhGiAOzNKZaM1TTPdOzCfNH_p3a6P9MMikO9wugaCysT473mGPvso/s1001/aya+ram+gaya+ram.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="850" data-original-width="1001" height="544" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUblwDJ6uD9wF8D3XH5Ac5BRCxn7QzJqevux3A7NvNr-ffHm1WGn7zObH4vNhAEkmPHqynVnOqfEmuVKCvZx1BGtvhGiAOzNKZaM1TTPdOzCfNH_p3a6P9MMikO9wugaCysT473mGPvso/w640-h544/aya+ram+gaya+ram.jpg" width="640" /></a></div><br />மஞ்சுள் வரைந்திருக்கிற இந்தக்கார்டூன் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் கட்சிதாவியவர்கள் மிகவும் பிரயாசைப்பட்டுத்தான் தாவினமாதிரி சித்தரிப்பு சரி தானா என்ற வலுவான சந்தேகம் எனக்கிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் சோனியா காங்கிரசிலிருந்து ஜிதின் ப்ரஸாதா வெளியேறி பிஜேபியில் ஐக்கியமாகி இருக்கிறார். கட்சிக்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் என்று சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 பேர்களில் இவரும் ஒருவர் என்பது கொஞ்சம் சுவாரசியமான தகவல். கார்டூனிஸ்ட் சுரேந்திரா ஹிந்து நாளிதழுக்காக வரைந்த இந்த கார்டூன் இன்னும் பொருத்தமாக.<p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXiKtaTVXiShkv-wZN3h6CsfR15pVcrM966JUViBkP_V8j1OrpeZLYrsnSWDw_afi69x0qrpQeFE_3-OycX-qldlqmHCQczOSSDeyEIMMBmhq4xFgTHKXgER2Nv6w1aZMdu1_vYy-AIhA/s886/surendra.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="491" data-original-width="886" height="354" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXiKtaTVXiShkv-wZN3h6CsfR15pVcrM966JUViBkP_V8j1OrpeZLYrsnSWDw_afi69x0qrpQeFE_3-OycX-qldlqmHCQczOSSDeyEIMMBmhq4xFgTHKXgER2Nv6w1aZMdu1_vYy-AIhA/w640-h354/surendra.jpg" width="640" /></a></div><br />சோனியா பின் நிற்கிற கூட்டம் அப்படியே கரைந்து நரேந்திர மோடி அமித் ஷா பின்னால் அணிசேர்வதாகக் காட்டியிருப்பது கள யதார்த்தம். நரேந்திர மோடியின் இமேஜ் உயர உயர இதர கட்சிகளிலிருந்து பிஜேபிக்கு மாறியவர்கள் ஏராளம், பிஜேபி தலைமையும் அதை ஊக்குவித்தது என்பதையும் மறுக்க முடியாது. இப்போது திரிணாமுலுக்கு முகுல் ராய் திரும்ப வந்ததனால் மம்தா பானெர்ஜி சாந்த சொரூபியாகிவிடப்போகிறாரா? எல்லோருக்கும் பொதுவான முதல்வராக இருந்துவிடத் தான் போகிறாரா? மோடிக்கு எதிராகத் தம்பட்டம் அடிக்க சிலநாள் இந்தச் செய்தி பயன்படுத்தப்படும் என்பதைத்தாண்டி வேறென்ன?<p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh96K7ij_ffv4ZgQFGbGWqQGRsokfcx3uGrY_QWldTr_YBNN3o0S7fhy6ap7j5kRxm9h6ZDhgPY2FvagKskOmcQ-76gSbgVKQLs99IgHRZTT76piKdAPu7UOKP521DYa1VQfXNjaCbfKZs/s722/Cpimarriage.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="722" data-original-width="468" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh96K7ij_ffv4ZgQFGbGWqQGRsokfcx3uGrY_QWldTr_YBNN3o0S7fhy6ap7j5kRxm9h6ZDhgPY2FvagKskOmcQ-76gSbgVKQLs99IgHRZTT76piKdAPu7UOKP521DYa1VQfXNjaCbfKZs/w414-h640/Cpimarriage.jpg" width="414" /></a></div><br />கம்யூனிஸ்ட் கட்சிகள் இங்கே எந்த அளவுக்குச் சீரழிந்து கிடக்கின்றன என்பதற்கு இந்தத்திருமண அழைப்பிதழே போதுமான சாட்சி. ஒருகாலத்தில் தங்களுடைய இலக்கு என்ன, இலக்கை அடைவதற்கான செயல்திட்டம் என்ன என்பதை தெளிவாக வரையறை செய்து வைத்திருந்த அரசியல் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை மட்டுமே சொல்வது உண்டு. இலக்கையும் செயல்திட்டத்தையும் முதலில் தொலைத்தது CPI வலது கம்யூனிஸ்ட் கட்சி. சோஷலிசத்துக்கும் மம்தா பானெர்ஜிக்கும் முடிச்சுப் போடுகிற வித்தை தெரிந்தவர்கள் அவர்கள் மட்டுமே. <p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXWwQw3raIx3NC_z5tc12-YzHV2lABnSPz5Yx_L6nwuTYeCG281LFryIV-7QR4dA3kbnsuk9WEUuraa3uM9XFFWf4ID_BcrZXmKcYHnJGZpDPCgxztVaRu6xF9lpgtVTwIGz8DCObxiJc/s926/VCK.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="646" data-original-width="926" height="446" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXWwQw3raIx3NC_z5tc12-YzHV2lABnSPz5Yx_L6nwuTYeCG281LFryIV-7QR4dA3kbnsuk9WEUuraa3uM9XFFWf4ID_BcrZXmKcYHnJGZpDPCgxztVaRu6xF9lpgtVTwIGz8DCObxiJc/w640-h446/VCK.jpg" width="640" /></a></div><br />தலித் உரிமைக்கான இயக்கமாகச் சொல்லிக்கொள்ளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முழுநேரத் தொழிலாக எதை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்? எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்! இந்த மாதிரி உருட்டல் மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டைகளை அடிக்கடி நடத்தி ஜனங்களுக்கு நினைவு படுத்துகிறார்களாம்! <p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWS8G1sMrrPxGqdhLkBDhsA0-tEirZrPJwspiNOWmaw6NtH3r38A0hnzDih56UL4Hh5RK9Z0kpO0zmAzCIMpVcW3PMrQkJudWthax0CLccFJK4w5q0GuFeouB-LOU5IKQivDFbc_Kbnzc/s1020/isutalin.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="948" data-original-width="1020" height="594" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWS8G1sMrrPxGqdhLkBDhsA0-tEirZrPJwspiNOWmaw6NtH3r38A0hnzDih56UL4Hh5RK9Z0kpO0zmAzCIMpVcW3PMrQkJudWthax0CLccFJK4w5q0GuFeouB-LOU5IKQivDFbc_Kbnzc/w640-h594/isutalin.jpg" width="640" /></a></div><br />எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊரடங்கு நேரத்தில் மதுக் கடைகள் எதற்கு? ஆளும் கட்சியாக வந்தால் டாஸ்மாக் கடைகள் திறப்பு என்பது #DravidianStock திராவிட அவலம் <div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE4C9gdmeX-5zG0pBM9LolmJDj4ytTjwKK7BD4VrCkhIPc7G8VhguUSfy5LiIKbMPr9YLaNUC_wRlOBLgvc7ZAlRwln4kukyxIkCyzabbHUQnY5xO7kWgdDP3wUQaI0chj-sb5zTEuKwc/s1080/nes+j.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1020" data-original-width="1080" height="604" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE4C9gdmeX-5zG0pBM9LolmJDj4ytTjwKK7BD4VrCkhIPc7G8VhguUSfy5LiIKbMPr9YLaNUC_wRlOBLgvc7ZAlRwln4kukyxIkCyzabbHUQnY5xO7kWgdDP3wUQaI0chj-sb5zTEuKwc/w640-h604/nes+j.jpg" width="640" /></a></div><br /><div><br /></div><div><b><a href="https://www.facebook.com/DrKrishnasamy/posts/1970316459803003" target="_blank">புதிய தமிழகம் கட்சி நிறுவனர் Dr P கிருஷ்ணசாமி </a></b>இன்றைக்கு இது விஷயமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRvAwxDADO5_hVwIDP2uImpLUA8fMPduAxrLF8QnJtBxy1TCi7NWdHrOI4miU5zHfevkpR70D4gbNrga9oEG8cM8JFfMfwMhmpVhjGVMw2SYhRdVOvZRS5cvsvwI05jwqQkchuGEStCNo/s1072/dr+krishnasami.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="1072" height="478" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRvAwxDADO5_hVwIDP2uImpLUA8fMPduAxrLF8QnJtBxy1TCi7NWdHrOI4miU5zHfevkpR70D4gbNrga9oEG8cM8JFfMfwMhmpVhjGVMw2SYhRdVOvZRS5cvsvwI05jwqQkchuGEStCNo/w640-h478/dr+krishnasami.jpg" width="640" /></a></div><br /><p><span style="background-color: white; font-family: inherit; white-space: pre-wrap;"><span style="color: #800180;"><b>டாஸ்மாக் கடைகளை மூடிட, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறுவது ஏன்?</b></span></span></p><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;">குடி குடிப்போரை மட்டுமல்ல, குடிப்போரின் வீட்டையும், நாட்டையும் கெடுக்க வல்லது. குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தால் பாதிக்கப்படுவது ஒன்று; உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என்பது மற்றொன்று. பெருந்தொற்று காலகட்டங்களில் குடிப்பழக்கம் அறவே நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் மது பல வழிகளிலும் கரோனாவை அதிகரிக்கக்கூடியது. மதுக்கடைகளில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதால் மதுபிரியர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;"><b>மது ஒவ்வொருவர் உடலிலும் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை வெகுவாக குறைப்பதால் கரோனா போன்ற பெரும் தொற்றுகள் குடிப்பழக்கத்திற்கு ஆளானோரிடம் எளிதாக தொற்றிக் கொள்வது மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பரவுகிறது. மேலும் ஆரம்பக்கட்ட கரோனா அறிகுறிகளைக் குடிப்பழக்கம் மறைத்து விடுகிறது. இதனால் மது பழக்கத்திற்கு ஆளானோர் சிகிச்சை அளித்தாலும் பலன் அளிக்காத நிலையிலேயே மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டு, பெரும்பாலானோர் உயிரிழப்புகளுக்கு ஆளாகின்றனர். டாஸ்மாக் கடைகள் மூலமாக கரோனா தொற்று வேகமாகப் பரவியுள்ளது என்பது கடந்த கால அனுபவங்களாகும்.</b></span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;">கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் கடைகள் முற்றாக மூடப்பட்டிருந்த நிலையில் கரோனாவின் தாக்கம் ஓரளவிற்குக் குறைந்து வருகிறது. ஆனால் மரணங்களின் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். <b>நேற்று (11.06.2021) தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் கிராமப்புற மற்றும் தேநீர் கடைகளையும்; தொழில், வணிக நிறுவனங்களையும் கூட திறக்க அனுமதி இல்லாத நிலையில் டாஸ்மாக் கடைகளை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதித்திருப்பது எவ்விதத்தில் நியாயம்.?</b></span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;">தேர்தலுக்கு முன் திமுகவால் கொடுக்கப்பட்ட மிக முக்கிய வாக்குறுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க மாட்டோம் என்பது ஒன்று. அது மட்டுமின்றி கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின் போது மது கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உட்பட திமுகவினர் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கொடுத்த வாக்குறுதியையும், இப்போது ஆட்சிக்கு வந்ததையும் மறந்துவிட்டு தாராளமாகக் குடிக்க ஏதுவாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது தமிழக மக்களுக்குத் தெரிந்தே தீங்கு செய்வது ஆகாதா? </span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;">ஏற்கனவே வருமானம் இல்லாததால், வாங்கிய சிறு சிறு கடன்களைக் கூட கட்ட முடியாமல், கந்துவட்டி கும்பல்களிடம் சிக்கி பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன. வரும் 14 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதிலும், மறுநாளான 15 ஆம் தேதி முதல் இரண்டாவது தவணையாக ரூ 2,000 கொடுப்பதிலும் உள்ள மர்மம் என்ன? தொடர்பு என்ன? கடந்த ஒரு மாதமாகத்தான் அடி தடி சண்டை சச்சரவுகள் இல்லாமல் பெண்கள் வீடுகளில் நிம்மதியாக இருக்கிறார்கள்; காவல்துறையும் நிம்மதியாக இருக்கிறது. தாய்மார்களின் நிம்மதியைக் காட்டிலும், கிராம மற்றும் நகர்புற தெருக்களில் நிலவும் அமைதியைக் காட்டிலும், மதுக்கடைகளால் வரும் லாபம் மட்டும் தான் முக்கியமா? தினமும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் கழக கண்மணிகளின் சாராய ஆலைகளின் லாபம் தான் உங்களுக்கு முக்கியமா?</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;">தடுப்பூசிகள் தான் கரோனாவை தடுக்கும் மாமருந்து என்ற அடிப்படையில் தமிழகத்தில் தடுப்பூசிக்கு எதிரான தயக்கம் மெல்ல மெல்ல நீங்கி, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கும், போட்டபின்னும் குடிக்க கூடாது என்ற மருத்துவரின் ஆலோசனைகளைக் குடிப்பழக்கத்துக்கு ஆளானோரிடம் எப்படி அமலாக்குவீர்கள்? எனவே, மதுக்கடைகளைத் திறப்பதில் பல்வேறு விதமான உடல், பொருளாதார ரீதியான பாதிப்புகள் மற்றும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காரணிகள் இருப்பதால் டாஸ்மாக் கடைகளை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;">மக்களின் உடல்நிலை, பொருளாதார நிலை, கரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் பற்றி கவலை கொள்ளாமல், திமுக கழக கண்மணிகளின் சாராய ஆலைகளின் பெரும் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் செயலை கண்டித்தும், அனைத்து டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட கோரியும் தமிழகமெங்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்படும், தேதி விரைவில் அறிவிக்கப்படும்.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;"><b>டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, </b></span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="color: #800180;">நிறுவனர் & தலைவர். <span style="font-family: inherit;">புதிய தமிழகம் கட்சி.</span></span><span style="color: #800180; font-family: inherit;">12.06.2021</span><span style="background-color: transparent; color: #800180;"> </span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: transparent; color: #800180;"><br /></span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: transparent;">ஓமந்தூரார் மருத்துவமனையை இடம் மாற்றுவதற்கு தன்னுடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து </span>பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் <span style="background-color: transparent; font-family: inherit;">ஒரு பகிர்வை முகநூலில் எழுதியிருக்கிறார். <a href="https://www.facebook.com/DrRamadoss/posts/1850880228409588" target="_blank"><b>இங்கே </b></a></span></div><div dir="auto" style="font-family: inherit;"><br /></div><div dir="auto" style="font-family: inherit;">மீண்டும் சந்திப்போம். </div></div></div></div><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-81403186556514947082021-06-08T17:53:00.000+05:302021-06-08T17:53:18.225+05:30நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்? <p>இன்றைய News 18 தளத்தில் அகிலேஷ் மிஷ்ரா எழுதி வெளியாகியிருக்கிற OPINION | <b><a href="OPINION | How PM Modi Defied Petty Oppn Politics to Turn Around India's Vaccine Policy">How PM Modi Defied Petty Oppn Politics</a> to Turn Around India's Vaccine Policy </b>என்கிற<b> </b>கருத்துரை பிரதமர் நரேந்திர மோடி எப்படி சில்லறை புத்தியுடன் அரசியல் செய்து வரும் எதிர்க் கட்சிகளையும் மீறி இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக் கொள்கையில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவந்து இருக்கிறார் என்பதை மிகத்தெளிவான சான்றுகளுடன் விவரித்திருக்கிறார். <span style="text-align: center;">நீலநிறத்தில் தெரியும் சுட்டியில் முழுக்கட்டுரையையும் முடிந்தால் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன். </span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"> <iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/4v6BYg1w7kw" width="320" youtube-src-id="4v6BYg1w7kw"></iframe></div><br />விவஸ்தைகெட்ட நம்மூர் பானாசீனா அவசரக் குடுக்கை போல எந்த மாநிலம் அப்படிக்கேட்டது என்று ட்வீட் செய்து வாங்கிக்கட்டிக்கொண்ட பிறகு I stand corrected என்று மழுப்பலாகத் தப்பித்துக் கொண்டிருக்கிறார்.<p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFHGj9qO9MiRx-B7bdEu_J_WoIn0z8eNXNMBxbpke2wbGWF43KK5fB3AoC9WuCMefJhXYQsAqg-dGwUsQjZxqEWTkeDWsWrOvBxLHWLgFmj9-atgsHER8LhCxGcGAGvCjaJR9uPrKDhBM/s870/PC.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="505" data-original-width="870" height="372" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFHGj9qO9MiRx-B7bdEu_J_WoIn0z8eNXNMBxbpke2wbGWF43KK5fB3AoC9WuCMefJhXYQsAqg-dGwUsQjZxqEWTkeDWsWrOvBxLHWLgFmj9-atgsHER8LhCxGcGAGvCjaJR9uPrKDhBM/w640-h372/PC.png" width="640" /></a></div><br /><p></p><div><div><span style="color: red;">Mamata Banerjee, twice elected (at that point of time) Chief Minister of West Bengal writes a letter to you on February 24, 2021, where among other things she says, “Government of West Bengal has decided to procure adequate number of vaccines for the members of public at large. We would request you to kindly take up the matter with appropriate authority so that State Government is able to purchase the vaccines.” Mamata Banerjee was so convinced of the righteousness of her stand that she reminds you of her request not once but several times. For example, on April 18, 2021, she again writes, “You may recall that I had written to you on February 24, 2021 to allow the state to purchase vaccination doses directly with state funds and launch a massive free vaccination campaign in the state covering the entire population.”</span></div><div><span style="color: red;"><br /></span></div><div><span style="color: red;">Meanwhile, the much-loved Delhi’s Chief Minister among the Khan Market gang, Arvind Kejriwal, addresses the press on March 18, 2021, and among other fantastical claims, says that “I want to appeal to the central government to decentralize the system, have less control over it, and allow the state governments to administer the vaccine on a war-footing”.</span></div><div><span style="color: red;"><br /></span></div><div><span style="color: red;">Not to be left behind, Rahul Gandhi, former President of Indian National Congress, and the son of the current president of the party and thus, by design, the most important leader of the party, writes a letter to you on April 8, 2021. In this letter, among other things, Rahul Gandhi says “our states have been bypassed right from vaccine procurement to registration.” He then goes on to demand from you that “give state governments a greater say in vaccine procurement and distribution.”</span><span style="color: #2b00fe;"> </span>இப்படியாக மம்தா பானெர்ஜி, அரவிந்த் கேசரிவாலு, ராகுல் காண்டி இவர்களைத் தொடர்ந்து வேறு சில மாநில முதல்வர்களும் பேசியதை நேற்றைய தினம் பிரதமர் அறிவிப்புக்குப் பிறகு, பிளேட்டை அப்படியே மாற்றிப்போட ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் சொன்னதைக் கேட்க பிரதமருக்கு நான்குமாதங்கள் ஆகியிருக்கிறது என்கிறார் மம்தா. </div><div><br /></div><div>தாங்கள் ஒன்றுக்குமே ஆகாதவர்கள் என்று உணர்ந்து கொண்ட மாநில முதல்வர்கள் என்ன செய்தார்களாம்? கருணாநிதி பாணியில் பிரதமருக்குக் கடிதம் எழுதித் தங்களுடைய ஏலாமையை வெளிப்படுத்தினார்கள் என்று தேதியாரியாகப் பட்டியலிடுகிறார் அகிலேஷ் மிஷ்ரா <span style="color: red;">Overall, by the end of May, chief ministers of Punjab (May 15), Kerala (May 24), Sikkim (May 30), Mizoram (May 31), Meghalaya (May 31), Andhra Pradesh (June 1), Arunachal Pradesh (June 1), Odisha (June 2), Tripura (June 2) and Maharashtra (June 2) specifically wrote to the Prime Minister requesting centralised procurement of vaccines.</span> அவர்கள் ஒரு பேரழிவுக்காலத்தில் பொறுப்பில்லாமல் அரசியல் செய்த மாதிரியே பிரதமரும் செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் ஒரு பொறுப்பான பிரதமராக நரேந்திர மோடி உயர்ந்து நின்றார். கொரோனா தடுப்பூசிக்காக மாநிலங்கள் ஒரு பைசா கூடச் செலவு செய்ய வேண்டாம், மத்திய அரசே 75% தடுப்பூசிச் செலவை ஏற்றுக்கொள்ளும். மீதம் 25% தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவ மனைகளே வாங்கி அடக்கவிலைக்கு மேல் சர்வீஸ் சார்ஜாக அதிகபட்சம் ரூ.150/ இற்கு மிகாமல் பயனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர். </div><div><br /></div><div>இதன் பின்னணியில் என்னென்ன இருக்கிறது என்பதையும் சேர்த்துப்பார்த்துவிடலாமா?</div><div><br /></div><div>பஞ்சாப் காங்கிரஸ் அரசுசெய்தது போல மத்திய அரசு இலவசமாகக் கொடுத்த தடுப்பூசிகளைத் தனியாருக்கு லாபம் வைத்து விற்கமுடியாது. ஆனாலும் இங்கே கரைவேட்டிகள் நடத்தும் அதிநவீன மருத்துவ மனைகள் ஆதாயம் பார்ப்பது மட்டுப்படுமா? கள்ளச்சந்தை, திமுகவே டோக்கன் கொடுப்பது நிற்குமா என்ற கேள்விகளுக்குத் தெளிவான விடைகள் தெரியவில்லை. </div><div><br /></div><div>Pfizer உள்ளிட்ட அமெரிக்க மருந்துக்கம்பெனிகள் இங்கே உடனடியாக நுழைந்து கொள்ளை லாபம் பார்ப்பதும் கூட மறைமுகமாகத் தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.</div><div> </div><div>கோவாக்சின் தவிர இன்னும் இரு தடுப்பூசிகள் முற்றிலும் இந்தியத் தயாரிப்பாக இறுதிக்கட்டப் பரிசோதனையில் இருக்கின்றன. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.</div><div><br /></div><div>இப்போது சொல்லுங்கள்! நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? நொள்ளை சொல்வதையே பிழைப்பாக வைத்திருக்கும் எதிர்க்கட்சிகளை என்ன செய்வீர்கள்?</div><div><br /></div><div>மீண்டும் சந்திப்போம்.</div></div><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59729354911758980222021-06-07T17:28:00.003+05:302021-06-07T17:30:54.407+05:30மண்டேன்னா ஒண்ணு! சில #அரசியல்சுவாரசியங்கள் <p>கலகக்கார பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கல் தம்பதியினருக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை கலிஃபோர்னியாவிலுள்ள சான்டா பார்பராவில் உள்ள மருத்துவமனையில் லிலிபெட் டயானா மவுன்ட்பேட்டன் வின்ட்ஸர் என்று பெயர் இடப்பட்ட குழந்தை பிறந்ததாக ஹாரி - மேகன் அறிவித்து இருக்கிறார்கள். .</p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/E9sr_VwF3aI" width="320" youtube-src-id="E9sr_VwF3aI"></iframe></div><br /><p>லிலிபெட் என்பது ராணி எலிசபெத் II இன் செல்லப் பெயர். எலிசபெத் என்ற பெயரை உச்சரிக்க முடியாத சிறுமியாக லிலிபெட் என்று சொன்னதையே செல்லப் பெயராக ராணியின் தந்தை வைத்ததாக அதற்கும் ஒரு கதை சொல்வார்கள். டயானா ஹாரியின் அம்மா அடுத்து வருகிற இரண்டும் கொள்ளுப்பாட்டன் கொள்ளுப் பாட்டியின் குடும்பப்பெயர். பிரிட்டிஷ் ஊடகங்களில் இப்போதே டிசைன் டிசைனாகக் கதைக்க ஆரம்பித்து விட்டார்கள்.<span style="font-family: verdana;"><span style="background-color: white; letter-spacing: -0.18px;">The Queen will be 'desperately unhappy' that Harry and Meghan have used her 'very private' and 'special' nickname Lilibet to name their second child after they were so 'rude' about her and the Royal Family, a royal expert claimed today <a href="https://www.dailymail.co.uk/news/article-9659413/Royal-experts-claim-Queen-unhappy-Harry-Meghan-naming-daughter-Lilibet.html" style="font-weight: bold;" target="_blank">என்கிறது Daily Mail </a><b> பிரிட்டிஷ் குடிமகன்களுக்கு அரசகுடும்பத்தைப் பற்றி எரிந்த கட்சி எரியாத கட்சியாக </b></span></span><span style="background-color: white; font-family: verdana; letter-spacing: -0.18px;"><b>லாவணி பாடுவதைத் தவிர வேறு வேலையே இருந்ததில்லை என்பதுதான் இதன் சுவாரசியம்!அரசியல்!</b></span></p><p><span style="font-family: verdana;"><span style="background-color: white; letter-spacing: -0.18px;"></span></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: verdana;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/wkZ7Dh2DfbI" width="320" youtube-src-id="wkZ7Dh2DfbI"></iframe></span></div><span style="font-family: verdana;"><br />சந்தோஷமே உன்னுடைய ரகசியம் என்ன? இந்தக் கேள்விக்கு </span><span style="font-family: verdana;">பதிலாக </span><span style="font-family: verdana;">அவரவருக்குத் தோன்றுவதைச் சொல்வார்கள். ஆனால் சந்தோஷத்தைத் தருபவை என்பதே உலகளாவிய வியாபாரமாக ஆகிவிட்டது. 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சந்தையாக ஆகிவிட்டது. இந்த 10 நிமிட வீடியோவைப் பாருங்கள்!சந்தோஷம் என்பதன் அளவுகோல் என்ன? உங்களுடைய கருத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்கே அரசியல் வாதிகள் நிரந்தரக் கோமாளிகளாக இருப்பதை நிறுத்திவிட்டு, பொறுப்போடு இருந்தாலே நிம்மதி, அதுவே சந்தோஷம்!</span><span style="font-family: verdana;">எப்படி என்கிறீர்களா? </span><div><div><span style="font-family: verdana;"><br /></span></div><div><span style="font-family: verdana;"><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/mNb0VA7J1Og" width="320" youtube-src-id="mNb0VA7J1Og"></iframe></div></span><div><span style="font-family: verdana;"><br /></span></div><div><span style="font-family: verdana;">இந்த ஒரு வீடியோவே அது நியாயமானது தான் என்பதைச் சொல்லும். 30 நாட்களிலேயே நிறையச் சாதித்துவிட்டார்களாம்! அப்படி என்ன சாதித்து விட்டார்களாம்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?</span></div><div><span style="font-family: verdana;"> </span></div><div><span style="font-family: verdana;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3NBLHMj7stXs2SFRswnubiF0j7vTkdbGAYYa0JM2sPSfx-go-lBdipi5iC8M8dqswXXnBbfDCjf6HZ6b0OriZegggF07PPR1U1qMnDSH860mRK3tP5PLHeElEhT8hdk5eit29ZRuuBio/s1028/kongu+vac.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="505" data-original-width="1028" height="314" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3NBLHMj7stXs2SFRswnubiF0j7vTkdbGAYYa0JM2sPSfx-go-lBdipi5iC8M8dqswXXnBbfDCjf6HZ6b0OriZegggF07PPR1U1qMnDSH860mRK3tP5PLHeElEhT8hdk5eit29ZRuuBio/w640-h314/kongu+vac.jpg" width="640" /></a></div><br /> இது ஒரு சோற்றுப்பதம். இதுவும் போதாதா? </span></div><div><span style="font-family: verdana;"><br /></span></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrdzlSPXwiP8_tkD0Fr8zVUG1MSL4aH6xds14aY4bqfy3lbycOvypCuhwqBSt8dQ3M4pPqfDVIQXLHhAptMlgtbsUcwg4e8XuGDbzpgMt5OIqbsBUJpuUlXANwsQZJvVuBQcSdhIfOmvg/s1079/neet+stunt.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="809" data-original-width="1079" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrdzlSPXwiP8_tkD0Fr8zVUG1MSL4aH6xds14aY4bqfy3lbycOvypCuhwqBSt8dQ3M4pPqfDVIQXLHhAptMlgtbsUcwg4e8XuGDbzpgMt5OIqbsBUJpuUlXANwsQZJvVuBQcSdhIfOmvg/w640-h480/neet+stunt.jpg" width="640" /></a></div><br /><span style="font-family: verdana;"><br /></span></div><div><span style="font-family: verdana;">நீட்டை உயர்மட்டக்குழு அமைத்துக் கைகழுவியாகி விட்டது. பெரம்பலூர் அனிதா சாந்தியடைவதாக! <div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfT8ot1BGFhnJOeAN39Y7OmVYUlR4-dAIkW3TCBGhT7y2ppmmWuxY7sa3Kuqi7PCFOQmrzrvrcgkG7jPn0g4LWXBkzAf-yvbNop0TSke_4_HgkLKCUKZtsty1uy82GdeRfsE4gBvwkd9k/s874/kovai+mail.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="874" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfT8ot1BGFhnJOeAN39Y7OmVYUlR4-dAIkW3TCBGhT7y2ppmmWuxY7sa3Kuqi7PCFOQmrzrvrcgkG7jPn0g4LWXBkzAf-yvbNop0TSke_4_HgkLKCUKZtsty1uy82GdeRfsE4gBvwkd9k/w528-h640/kovai+mail.jpg" width="528" /></a></div><br /></span><div><span style="font-family: verdana;">ஹிந்து என் ராமுக்கு வந்த சோதனை! 100/100 மார்க் கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?</span><p></p></div></div></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfLHwZjj_oXBZxChN3HqWl2_wNdV5ZvCeJ6YM8-EXX8KNlOfRE_mQucKMjQd1gmrh1Qb5JaYXjv2TJ60GTSLkYFSX8OO_9CNKapTR49bmlpQzompTAldZGRII-zgD9IZsJnWFZWoAiTc0/s907/kabsuram.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="907" data-original-width="653" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfLHwZjj_oXBZxChN3HqWl2_wNdV5ZvCeJ6YM8-EXX8KNlOfRE_mQucKMjQd1gmrh1Qb5JaYXjv2TJ60GTSLkYFSX8OO_9CNKapTR49bmlpQzompTAldZGRII-zgD9IZsJnWFZWoAiTc0/w460-h640/kabsuram.jpg" width="460" /></a></div><br /><span style="font-family: verdana;">ஏதோ ஆர்வக்கோளாறில் போட்டிருக்கிறார்கள் என்பது ஒருபக்கம்! <b>இவர்கள் மொத்தமுமே வியாதிகள்தான்</b> என்பது இன்னொரு பக்கமாக பயமுறுத்துகிறதே! </span></div></div><div><span style="font-family: verdana;"><br /></span></div><div><span style="font-family: verdana;">விதியே! விதியே! தமிழகத்தை என்செய நினைத்தாய்? </span></div><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-33680196614113547382021-06-04T20:38:00.000+05:302021-06-04T20:38:31.687+05:30 கொஞ்சம் கொசுறு செய்திகளில் #அரசியல்இன்று <p><span style="color: #2b00fe;"><b>ஊரடங்கில் சற்று தளர்வு கொடுக்கபடுமா? :</b> முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை</span> என்ன தளர்வோ தெரியாது, ஆனால் நிலமை கட்டுக்குள் வராமல் செய்யப் படும் ஊரடங்கு தளர்வு என்பது பின்னால் வரபோகும் மிகபெரிய கொரொனா அலைக்கும் அதனையொட்டி வரும் ஊரடங்குக்கான திறவுகோல் என்பது பல நாடுகளில் உணரப் பட்ட உண்மை என்று <b><a href="https://www.facebook.com/permalink.php?story_fbid=543459270361199&id=101414721232325" target="_blank">முகநூலில் ஸ்டேன்லி ராஜன்</a></b> அலுத்துக்கொண்ட மாதிரியே தமிழக அரசு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/m1iVQDeYnOk" width="320" youtube-src-id="m1iVQDeYnOk"></iframe></div><br /><p>மருத்துவ நிபுணர்கள் அரசியல் கட்சிகள் ஆலோசனைப் படி ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்தது. 14 வகையான மளிகைப் பொருட்களைக் குடும்ப அட்டைகள் வாயிலாகப் பொதுமக்களுக்கு அளிக்கும் முடிவுடன் ஊரடங்கை அதே கட்டுப் பாடுகளுடன் ஜூன் 7 வரை ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் என்கிறது <b><a href="https://www.hindutamil.in/news/tamilnadu/678370-full-curfew-extension-chief-minister-stalin-consult-meeting-today.html" target="_blank">இந்து தமிழ்திசை</a> </b>தந்தி செய்தியும் இந்து செய்தியும் கொஞ்சம் முரண்படுகிற மாதிரித் தெரிகிறதா? அவர்களைக் குறைசொல்லிப் பயனில்லை. அரசை நிர்வகிக்கிறவர்களே தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறுவதில் ஆலோசனை சொல்கிற அதிகாரிகளோ செய்திவெளியிடுகிற ஊடகங்களோ கூடவே சேர்ந்து ஊசலாடாமல் இருக்க முடியுமா? </p><p style="text-align: center;">*******</p><p>நேற்றைக்கு கோபாலபுரம் வீட்டில் மு க அழகிரி தனது தந்தை படத்துக்கு அஞ்சலி செலுத்தினார், தாயார் தயாளுவை நலம் விசாரித்தார் ஆசி பெற்றார் என்ற செய்திகள் ஒரு ஓரமாக வந்ததே தவிர அண்ணன் தம்பி இருவரும் சந்தித்துக் கொண்டதாக செய்தி எதுவும் வரவில்லை. ஆனாலும் மு க அழகிரி அசாத்தியப் பொறுமையோடு அமைதி காக்கிறார். எல்லாம் அவர் நேரம் என்பதற்குமேல் என்ன சொல்ல?</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUGqWxr2h48rU_-wV1ofTVPGeowV2Lzw4zhr3pbrj0ptqdbou6kewzA5iMUtIHDu2h-bWq7XP8jcmeZFvBdne_2T77NO73pYBok77puC62qhR33AIX7hASXlJSCqy8x8Qa6dloysEs0Q8/s748/alagiri.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="499" data-original-width="748" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUGqWxr2h48rU_-wV1ofTVPGeowV2Lzw4zhr3pbrj0ptqdbou6kewzA5iMUtIHDu2h-bWq7XP8jcmeZFvBdne_2T77NO73pYBok77puC62qhR33AIX7hASXlJSCqy8x8Qa6dloysEs0Q8/w640-h426/alagiri.jpg" width="640" /></a></div><p style="text-align: center;"><b><span style="color: #800180;">இப்படி பவனி வந்ததெல்லாம் அந்தக்காலம்! </span></b></p><p style="text-align: left;"><span>அழகிரி மகன் துரை தயாநிதிக்கு இரண்டாவது வரவாக மகன் பிறந்திருப்பதை ஒட்டி சென்னைக்கு வந்திருக்கும் சமயத்தில் குடும்பத்தினர் சந்தித்துக்கொள்ள இன்னமும் ஒரு வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். நம்பிக்கை தானே எல்லாம்.😌😢</span></p><p style="text-align: left;"><span>எல்லாச் செய்திகளுமே கொசுறு என்றால் செய்திக்கான முக்கியத்துவமே இல்லாமல் போய்விடும் என்பதாவ் சில பயனுள்ள தகவல்களுடன் கூடிய வீடியோ: </span></p><p style="text-align: left;"><span></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/dm5yQmyAzMc" width="320" youtube-src-id="dm5yQmyAzMc"></iframe></span></div><p style="text-align: left;"><span><span>சிலகாலமாகவே நான் தமிழக சேனல் விவாதங்களைப் பார்ப்பதில்லை. முன்கூட்டிய முடிவுகளுடன், ஒருபக்கச் சார்பாகவே </span>நிகழ்ச்சிகளை<span style="font-family: verdana;"><b> cook up </b>செய்கிறவர்களைக் கவனித்து ஒன்றுமே ஆகப்போவதில்லை. அதேநேரம் கொஞ்சம் விவஸ்தையோடு செய்திகளை அலசி அதன் மீது விமரிசனமாகச் செய்பவர்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விவாதங்கள் என்ற பெயரில் ஜனங்களை முட்டாளடிக்கிற வெட்டி அக்கப்போர்களை தவிர்ப்பது நம் மனநலத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது தான், இல்லையா?</span></span></p><p style="text-align: left;"><span><span style="font-family: verdana;">இந்த 39 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் ABP ஆனந்த பஜார் பத்ரிகா நிறுவனம் C Voter என்கிற கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நாடெங்கும் 543 மக்களவைத் தொகுதிகளிலும் (சில leading questions ரகத்திலானவை, </span><span style="font-family: verdana;">ஜனங்களிடமிருந்து என்னபதில் வர வேண்டுமென்பதற்காக கொக்கிபோட்டுக் கேட்கப்படுபவை)</span><span style="font-family: verdana;">மக்களுடைய அபிப்பிராயத்தில் நரேந்திர மோடி என்ன இடம் வகிக்கிறார் என்பதான கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறார்கள். ABP மோடி மீது அத்தனை நம்பிக்கை கொண்ட ஊடகமல்ல என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.</span></span></p><p style="text-align: left;"><span><span style="font-family: verdana;">ABP-</span><span style="font-family: verdana;">C Voter கருத்துக்கணிப்பில் தெரியவந்த விவரங்கள் என்னென்ன என்பதை கோலாகல ஸ்ரீநிவாஸ் எளிதாகப் புரிந்துகொள்கிற விதத்தில் விளக்குகிறார் என்பது கூடுதல் விசேஷம். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள் என்று வேண்டுகிறேன். </span><span style="font-family: verdana;"> </span></span></p><p style="text-align: left;"><span><span style="font-family: verdana;">மீண்டும் சந்திப்போம்.</span></span></p><p></p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-31673127624788563092021-06-02T22:36:00.000+05:302021-06-02T22:36:22.026+05:30மாறும் அரசியல்களம்! மாற மறுக்கும் அரசியல் கட்சிகள்! நாசகார சமூக ஊடகங்கள்! <p>அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏகப்பட்ட குழப்பங்களை, குளறுபடிகளை உருவாக்கிய BigTech நிறுவனங்கள், இங்கேயும் தங்களுடைய திருவிளையாடல்களை நடத்த ஆரம்பித்துவிட்டன என்பது கொஞ்சம் பழைய செய்தி தான்! ஆனால் இந்திய அரசு பூனைக்கு மணிகட்டுகிற வேலையை இப்போதுதான் செய்திருக்கிறது. கூகிள், முகநூல், ட்வீட்டர் முதலான சமூக ஊடகங்கள் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடந்தாகவேண்டும் என்ற நிலையை மத்திய அரசு திட்டவட்டமான முறையில் நடைமுறைக்குக் கொண்டுவந்து விட்டது.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/CcN3HAfdvJ0" width="320" youtube-src-id="CcN3HAfdvJ0"></iframe></div><br />இந்த 19 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ், என்ன திருத்தங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன என்பதை விரிவாகச் சொல்கிறார்.இதுநாள் வரை இந்த ஊடகங்கள் தாங்கள் வெறும் intermediary மட்டும்தான் என்ற சாக்கில் தப்பித்துவந்ததை, புதிய விதிகள் மாற்றி இருப்பதில், இந்த ஊடகங்கள் தங்கள் தளத்தில் வெளியான தகவல்களுக்குப் பொறுப்பேற்றாக வேண்டும். கிரிமினல் வழக்குகளையும் எதிர் கொண்டாக வேண்டும்.Google. முகநூல் நிறு,வனங்கள் ஒப்புக் கொண்ட நிலையில் வாட்சப் ட்வீட்டர் இரண்டு மட்டும் முரண்டு பிடித்துப் பார்த்தன. ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் மத்திய அரசு திருட்டுப்பூனைகளுக்கு மணி கட்டிவிட்டது. <p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirJKi6SJ2nLoQAmvfgB9IQA7OoB-auh_quJku2AeyBiIBP0AyhkERnQgg_OlfkSIJ5JDe0peK4UL4p7Blxfjcc3dGIKRoWeB5LbrSA61dOmt_OkfOeujpAC7GvzDMq5RvYlwTMRgzxTY0/s605/pondy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="340" data-original-width="605" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirJKi6SJ2nLoQAmvfgB9IQA7OoB-auh_quJku2AeyBiIBP0AyhkERnQgg_OlfkSIJ5JDe0peK4UL4p7Blxfjcc3dGIKRoWeB5LbrSA61dOmt_OkfOeujpAC7GvzDMq5RvYlwTMRgzxTY0/w640-h360/pondy.jpg" width="640" /></a></div><br />மே 2ஆம் தேதியே முடிவுகள் வெளியான 5 மாநில சட்ட சபைத்தேர்தல்களில் பாண்டிச்சேரியில் மட்டும் புதிய அமைச்சரவை பதவியேற்பதில் இழுபறி இருந்து வந்தது. ஒருவழியாக பிஜேபிக்கு சபாநாயகர் பதவி மற்றும் இரு அமைச்சர்கள் என்று என் ஆர் காங்கிரஸ் ஒப்புக் கொண்டதை அடுத்து <b><a href="https://www.hindutamil.in/news/tamilnadu/677761-pudhuchery-speaker-post-to-bjp.html" target="_blank">இழுபறி முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள்</a></b> சொல்கின்றன 140 இல் 99 இடங்களில் ஜெயித்த கேரள இடதுசாரிகளே மந்திரி சபையை முடிவுசெய்ய மூன்றுவாரங்களுக்குமேல் எடுத்துக் கொண்ட போது, என் ஆர் காங்கிரசோடு ஏற்படுத்திக் கொண்ட புதிய கூட்டணி கொஞ்சம் கூடுதலாக அவகாசம் எடுத்துக் கொண்டதில் என்ன குறை சொல்லமுடியும்? <p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbFCKEPGTWSxeNT6-fZmPVgWOSbuuGnH5OE-x506FabMxzMc6QEXhvuhK24nYkf08tLJo5W0UmCfTqIdwVoRhsL7D8WdQsBfJNW63eNrSAUVYmtNtb3HHpJLWtszsw5_bFK2UhAQi6KCY/s854/naina.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="854" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbFCKEPGTWSxeNT6-fZmPVgWOSbuuGnH5OE-x506FabMxzMc6QEXhvuhK24nYkf08tLJo5W0UmCfTqIdwVoRhsL7D8WdQsBfJNW63eNrSAUVYmtNtb3HHpJLWtszsw5_bFK2UhAQi6KCY/w540-h640/naina.jpg" width="540" /></a></div><br />பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும் என்பதெல்லாம் போயே போச்சு போல! இசுடாலினே நம்ப முடியாத அளவுக்குப் பொய்சொல்வதுதான் புதிய விடியலின் அடையாளமாகி வருகிறதே, தமிழகம் தாக்குப் பிடிக்குமா? <p></p><p>நாளை ஊழலோ ஊழல் என்று வாழ்ந்து மறைந்தவர் பிறந்தநாளாம்! சமாதியில் தயிர்வடை வைத்துப் படையல் வைக்கிறார்களா? எ வ வேலு பஜனை நிகழ்ச்சி இருக்குமா? வேறென்ன எல்லாம் அரங்கேறும்?</p><p>நாளையதினத்தை நினைத்தாலே கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கிறது.</p><p>மீண்டும் சந்திப்போம். </p><p> </p><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91697908958987017502021-06-01T21:49:00.003+05:302021-06-01T22:02:33.804+05:30#அரசியல்களம் பொறுப்பில்லாமல் உளறித்திரிவதற்கா அமைச்சர் பதவி? <p>இந்திய அரசியல்வாதிகளுக்கென்று தனித்தவொரு அடையாளம் உண்டு! எவ்வளவுக்கு எவ்வளவு கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாமல் உளறித்திரிகிறார்களோ அந்த அளவுக்கு அமைச்சராகவோ மம்தா பானெர்ஜி மாதிரி மாநில முதல்வராகவோ கூட ஆகிவிடமுடியும்! சட்டசபைத் தேர்தலில் முன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்தபிறகு மம்தா பானெர்ஜிக்கு மமதை தலைக்கேறி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித்தீர்த்துக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி - அமித் ஷா இருவரையும் எதிர்த்து வெல்லக் கூடிய ஒரே பெண்மணி <span face="Latha, TSCu_paranar, Arial, "Helvetica Neue", Helvetica, sans-serif" style="background-color: #f2f2f0;">#BengaliPrimeMinister </span>என்று இப்போதே துதிபாட ஆரம்பித்துவிட்டதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheEjrBFceFba3Ki003OV1dtNk_-0JdeN5_nEMF774wtn0DgJW8VGdTrNcI0j8Pr2SOg57Z-367P_LZ1s0w1m0sMw14Ulv8AKSsgkbkYLXPJlSGpwpXfcIlIRXx_YU0r41hSLNvp9Vqe7U/s748/mamta.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="420" data-original-width="748" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheEjrBFceFba3Ki003OV1dtNk_-0JdeN5_nEMF774wtn0DgJW8VGdTrNcI0j8Pr2SOg57Z-367P_LZ1s0w1m0sMw14Ulv8AKSsgkbkYLXPJlSGpwpXfcIlIRXx_YU0r41hSLNvp9Vqe7U/w640-h360/mamta.jpg" width="640" /></a></div>"மேற்கு வங்க அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்வதைப் போல, மத்திய அரசுப் பணியிலிருக்கும் மேற்கு வங்கப் பிரிவு அதிகாரிகளை, என்னாலும் மாநிலப் பணிகளுக்கு அழைத்துக் கொள்ள முடியும்" "எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநில முதல்வர்களையும், அனைத்து அதிகாரிகளையும் நான்.ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போரை நாம் ஒன்றாக நின்று சந்திப்போம்" இதெல்லாம் மம்தா பானெர்ஜியின் வீராவேசங்கள்! தனக்கு சௌகரியப் படாத போது எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை அலட்டிக்கொள்ளாதவர் இப்போது ஒன்றிணைவோம் வா என்று அழைக்கிறார். இதேபோல கேரள முதல்வர் பினரயி விஜயனும் கூட எதிர்க்கட்சி மாநில முதல்வர்களுக்கு ஒன்று சேர அழைத்துக் கடிதம் ஈழுதியிருக்கிறார். கொரோனா தடுப்பூசி கொள்முதல் செலவு மாநில அரசின் பொறுப்பானால் நிதிச்சுமை கூடுமே என்பது அவருடைய கவலை <span style="font-family: verdana;"><span style="background-color: white; word-spacing: 3px;">Kerala Chief Minister Pinarayi Vijayan, on Monday May 31, wrote to his counterparts in non-BJP states and asked them to put up a ‘united effort’ to ask the Union Government to procure COVID-19 vaccines needed by the states and distribute them free of cost. The letter has been sent to the Chief Ministers of eleven states — Tamil Nadu, Telangana, Andhra Pradesh, Odisha, West Bengal, Rajasthan, Chhattisgarh, Jharkhand, Delhi, Punjab and Maharashtra என்கிறது <b><a href="https://www.thenewsminute.com/article/kerala-cm-writes-11-non-bjp-cms-calls-united-effort-vaccine-procurement-149831" target="_blank">இந்தச் செய்தி.</a> </b>கேரள முதல்வருக்கு மம்தா பானெர்ஜிக்கு வந்த ஒற்றுமைக்கான தேவை மாதிரி வேறு ஒன்றில் கவலை லட்சத்தீவுகள்! கேரளாவுக்கு சம்பந்தமில்லாத அந்த யூனியன் பிரதேசத்தில் கடந்த டிசம்பரில் நிர்வாகியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரஃபுல் படேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கேரள சட்டசபையில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். </span></span><div><span style="font-family: verdana;"><span style="background-color: white; word-spacing: 3px;"><br /></span></span></div><div><span style="font-family: verdana;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht-0BVnWbA6RTn_ym5I58lTyvszi2W4z9xyFsoTMKz_xnYtwissSxpQ_TcPwqobq-MUN8ff5eOVZJSul4v87lEGmHQXb5dfyzlgsh9jKS7BVvb_HjUmI0dXagWHvn-JHk_C6GBK9nGdos/s2048/E2zlCLeVUAAJTs4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1251" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht-0BVnWbA6RTn_ym5I58lTyvszi2W4z9xyFsoTMKz_xnYtwissSxpQ_TcPwqobq-MUN8ff5eOVZJSul4v87lEGmHQXb5dfyzlgsh9jKS7BVvb_HjUmI0dXagWHvn-JHk_C6GBK9nGdos/w391-h640/E2zlCLeVUAAJTs4.jpg" width="391" /></a></div><br /></span></div><div><span style="font-family: verdana;"><span style="background-color: white; word-spacing: 3px;"><b>அங்கே என்னதான் பிரச்சினையாம்?</b></span></span><p></p><p><span style="font-family: verdana;"><b><span style="background-color: white; word-spacing: 3px;"></span></b></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: verdana;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/oL6_YHJRpig" width="320" youtube-src-id="oL6_YHJRpig"></iframe>. </span></div><span style="font-family: verdana;"><br />இந்த 42 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் மிக விரிவாகவே விளக்கியிருக்கிறார். </span><span style="background-color: white; font-family: verdana; text-align: center; word-spacing: 3px;">நேரம் ஒதுக்கி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாக இதைப் பரிந்துரை செய்கிறேன். கேரளாவுக்காவது கடத்தல், போதை மருந்து, மலையாள முஸ்லிம்கள் என்று பலவித சம்பந்தங்கள் உண்டு. </span><div><div style="text-align: center;"><span style="font-family: verdana;"><span style="word-spacing: 3px;"><br /></span></span></div><div><div style="text-align: center;"><span style="font-family: verdana;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQMv4OhnfeocupaoxyNPwVSKlgnBwG6AHF65pRDtfISzsFLJtA-n97Nep48mafI5navA9yzx35GQNpZUy2p6gpXI8zSS0vDd7k1U40t5DKkhAZPbGMDybCV8rF3JiTXapbtT46sMhVGuI/s842/samy.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="340" data-original-width="842" height="258" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQMv4OhnfeocupaoxyNPwVSKlgnBwG6AHF65pRDtfISzsFLJtA-n97Nep48mafI5navA9yzx35GQNpZUy2p6gpXI8zSS0vDd7k1U40t5DKkhAZPbGMDybCV8rF3JiTXapbtT46sMhVGuI/w640-h258/samy.png" width="640" /></a></div><br /></span></div><div><span style="background-color: white; font-family: verdana; text-align: center; word-spacing: 3px;">தமிழகத்துக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத லட்சத்தீவுகள் நிர்வாகியை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வர் இசுடாலின் அரசு முறைக் கடிதம் எழுதுவானேன்? பதிவின் தலைப்பிலேயே பதிலும் இருக்கிறது! </span><p></p><p><span style="background-color: white; font-family: verdana; text-align: center; word-spacing: 3px;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTfZfPZ6lIFmnExw47IHaetfsMkOxEbob9OT0iTsICG-42e67KbvOlaFaItOKpyrNkG1qHqMChpppEgCkXqAvHvw94RtOLtTtpMS8Xn3__B_e5Rgc98ocjS18WD0W1_MHVN-Gs5Ii4ZgA/s615/iruvachi.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="412" data-original-width="615" height="428" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTfZfPZ6lIFmnExw47IHaetfsMkOxEbob9OT0iTsICG-42e67KbvOlaFaItOKpyrNkG1qHqMChpppEgCkXqAvHvw94RtOLtTtpMS8Xn3__B_e5Rgc98ocjS18WD0W1_MHVN-Gs5Ii4ZgA/w640-h428/iruvachi.jpg" width="640" /></a></div><br />இரண்டு கைகளிலும் வாட்சா? அதுவும் ஸ்மார்ட் போன் கையில் இருக்கும் இந்தக்காலத்திலுமா? டபுள் வாட்ச் டக்ளஸ், இருவாச்சி என்றழைக்கப்படுபவர் யாரு எனக் கேள்வி கேட்கும் அப்பாவிகளுக்காக :::<p></p><p style="text-align: left;"><span style="color: #2b00fe; font-family: verdana;"><span style="word-spacing: 3px;">தேசிய நிதி கூட்டத்தில் (GST Council Meeting ) இது இந்திய ஒன்றியம், உங்கள் நன்கொடை எங்களுக்கு தேவை இல்லை என வீராவேசம் பேசியதை தவிர ஒன்றும் கிழிக்கவில்லை தமிழக நிதியமைச்சர். இவரின் சீற்றத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்தது என்றால் ஒன்றுமில்லை, சரி இவராவது உடனே தனி நாடு கேட்டாரா என்றால் இல்லை இந்தியாவோடும் இருக்கமாட்டோம் தனிநாடும் கேட்க மாட்டோம் என்பது என்ன வகை திராவிடமோ தெரியவில்லை</span></span></p><p style="text-align: left;"><span style="font-family: verdana; word-spacing: 3px;"><span style="color: #2b00fe;">அன்னார் தமிழகத்தில் உற்பத்தி அதிகம் அதனால் எங்களுக்கு அதிக பணம் என கேட்க, உன் உற்பத்தி இந்தியாவில் எங்கள் மாநிலத்தில் விற்பனையாகின்றது, வேண்டுமானால் உன் உற்பத்தியினை உன் மாநிலத்திலே வைத்து கொள் என மற்ற மாநிலங்கள் சீற அத்தோடு ஓடிவந்துவிட்டார் அமைச்சர்</span></span></p><p style="text-align: left;"><span style="color: #2b00fe; font-family: verdana;"><span style="word-spacing: 3px;">அரைகுறை அறிவோடும் அனுபவத்தோடும் மல்லுக்கு சென்றால் இப்படித்தான் ஆகும். மற்ற மாநிலங்களை விட இங்கு செலவுகள் அதிகம் திமுக தொடங்கி வைத்த அரசு சம்பளம் முதல் வெட்டி இலவசம் வரை செலவு மகா அதிகம், இதற்கெல்லாம் கூடுதல் நிதி என்பது எதிர்பார்க்க முடியா ஒன்று</span></span></p><p style="text-align: left;"><span style="font-family: verdana; word-spacing: 3px;"><span style="color: #2b00fe;">இந்நிலையில் இந்தியாவில் மம்தா தவிர எல்லோரும் நெருக்கடி கொடுக்க நிதியமைச்சர் திராவிட வீரத்தில் சீறிகொண்டே இருந்தார் என்ன சீறல் என்றால் அதேதான் தனிநாடு கோரமாட்டார் இந்தியாவோடும் இணையமாட்டார், இந்த திரிசங்கு சொர்க்கத்தின் பெயர் திராவிடம். எல்லோரும் தியாகராஜரை சர்க்கஸ் கோமாளி போல் சீண்டிகொண்டிருக்க வானதியும் ஏதோ சொல்ல போய் அவரை டிவிட்டரில் பிளாக் செய்துவிட்டார் நிதியமைச்சர். இனி என்னாகும்?</span></span></p><p style="text-align: left;"><span style="font-family: verdana;"><span style="word-spacing: 3px;"><span style="color: #2b00fe;">தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையின் பொழுது வானதி கடும் கேள்விகளை கேட்பார், அங்கு நிதியமைச்சரால் பிளாக் செய்யமுடியாது, ஆனால் வெளிநடப்பு செய்ய முடியும்! முதன் முதலாக ஆளும் கட்சி அமைச்சர் எதிர்கட்சிக்கு பதில் சொல்லாமல் வெளிநடப்பு செய்ய போகும் காட்சியினை அடுத்த சட்டமன்ற கூட்டம் காணப் போகின்றது</span> என்று நக்கலாக <b><span style="color: red;"><a href="https://www.facebook.com/permalink.php?story_fbid=541482943892165&id=101414721232325" target="_blank">முகநூலில் எழுதுகிறார் ஸ்டேன்லி ராஜன்</a> </span></b></span></span></p><p style="text-align: left;"><span style="font-family: verdana;"><span style="word-spacing: 3px;"><b>மீண்டும் சந்திப்போம். </b></span></span></p></div></div></div></div><div class="blogger-post-footer">ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப்பறி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!</div>கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com2