Consent to be......nothing!

நம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக!

▼

எமெர்ஜென்சி நாட்களிலும் அதற்குப் பின்னாலும் ஹீரோ! ஜார்ஜ் பெர்னாண்டஸ்!



இன்றைய செய்திகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு, தலைப்புச் செய்திகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. அரசியல்வாதியோ, சினிமா நடிகனோ அல்லது இங்கே பதிவுகள் எழுதிக் கொண்டு இருக்கிற நாமோ சும்மா இராமல் கையைக் காலை ஆட்டிக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையானால், இறந்தவர்கள் போல மறந்துபோனவர்கள் பட்டியலில் சேர்ந்து விட வேண்டியிருக்கும் என்பது எவ்வளவு கசப்பான உண்மை என்பதை ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணச் செய்தி முன்னால் வந்து உறுத்துகிறது.

ஜெர்ரி டு கார்கில் ஹீரோ ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் - போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு தலைவன்! என்று தினமணி நாளிதழ் ஒரு சிறப்புக் கட்டுரையை புகழ் அஞ்சலியாக வெளியிட்டிருக்கிறது.


Narendra Modi‏Verified account @narendramodi
During his long years in public life, George Sahab never deviated from his political ideology. He resisted the Emergency tooth and nail. His simplicity and humility were noteworthy. My thoughts are with his family, friends and lakhs of people grieving. May his soul rest in peace.
8:08 PM - 28 Jan 2019

Narendra Modi‏Verified account @narendramodi

When we think of Mr. George Fernandes, we remember most notably the fiery trade union leader who fought for justice, the leader who could humble the mightiest of politicians at the hustings, a visionary Railway Minister and a great Defence Minister who made India safe and strong.
8:07 PM - 28 Jan 2019

 

Mohit singh‏ @mohitsinghj
#GeorgeFernandes . One of the best Defence Ministers India had.When bureaucrats were delaying procurement of equipment for jawans in Siachen,he transferred them to Siachen for a week. When they returned to Delhi,they signed the files.
8:01 PM - 28 Jan 2019

Mohit singh‏ @mohitsinghj

Rest In Peace #GeorgeFernandes 🙏 This man had guts to remove Sonia Gandhi ‘s Photo from a conference hall and said only slaves will put her pic with great people of India .. Watch his full video


0:29
52 views
8:22 PM - 28 Jan 2019 டிவிட்டரில் வீடியோவைப்! பாருங்கள் 
இந்த நான்கு ட்வீட்டுகளே ஜார்ஜ் பெர்னாண்டஸ் யார்,  எப்படிப்பட்ட ஆளுமை என்பதைச் சொல்லிவிடும்! இங்கே இன்றைய தலைப்புச் செய்தியாக! என்றைக்கும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஹீரோவாக இருப்பவர்! 1974 இல்  அகில இந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை முறியடிக்க, மதம்பிடித்த யானையாக இந்திரா, ஜார்ஜ் பெர்னாண்டசைக் கைது செய்ய நாடு முழுவதும் சல்லடைபோட்டுத் தேடியபோதும், தலைமறைவாக இருந்தேவேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது ஒரு சின்ன சாம்பிள்தான்!        





Emergency-era 'rebel leader' George Fernandes passes away at 88
Moneycontrol.com
2 hours ago


George Fernandes: Anti-Emergency crusader and a champion of the labourers
The Indian Express
2 hours ago


George Fernandes, the poster boy of anti-Emergency, dies at 88
The Indian Express
3 hours ago
More for emergency and george fernandes

Web results


at January 29, 2019
Share

10 comments:

  1. ஜீவிJanuary 29, 2019 at 4:02 PM

    இப்போ மோடி எதிர்ப்பு மாதிரி அப்போ எமர்ஜென்ஸி எதிர்ப்பு.

    இந்த தேசத்தின் மாற்றத்திற்கும் உயர்வுக்குமான எல்லா காலகட்டங்களிலும் இப்படியான திசை திருப்பல்கள் தாம் நடந்து கொண்டிருக்கின்றன.

    ஜார்ஜ்ஜி அவர் அமைத்துக் கொண்ட வாழ்க்கையில் எளிமையாகவும் தீரத்துடன்
    ஹீரோவாகவும் இருந்தார் என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. May his soul rest in peace.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண மூர்த்தி SJanuary 29, 2019 at 4:41 PM

      அதிரடியாக மோடியை எதிர்ப்பதும் இந்திராவை எதிர்த்ததும் ஒன்றுதான் என்கிறமாதிரி சொல்கிறீர்களோ ஜீவி சார்?

      பீஹார் இயக்கம் என்று தினமணி ஆசிரியர் AN சிவராமன் 47 நாட்கள் தொடர்ந்து ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையேற்று நடத்திய எமெர்ஜென்சிக்கு முந்தைய நிகழ்வை மொழிபெயர்த்துக் கட்டுரைகளாக வெளியிட்டதை வாசித்திருக்கிறீர்களா? இப்போது புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வுநூலகத்தில் மட்டும் கிடைக்கிற தினமணி வெளியீடு.

      1965 இ ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பள்ளி மாணவனாக, அலங்கார அடுக்குமொழிகளில் புரியாதபடி மூக்கால் பேசுகிற திராவிடப் பேச்சாளர்களால் ஈர்க்கப்பட்டு அவர்களுடைய அரசியல் எப்படிப்பட்டது என்பதை கல்லூரி நாட்களில், அதற்கப்புறம் எமெர்ஜென்சி நாட்களில், அரசியலை அலசுகிற விதத்தைக் கற்றுக்கொண்டவன் நான். எமெர்ஜென்சிக்கு முன்னாலேயே இந்திராவுக்கு மதம் பிடித்து விட்டது.

      நரேந்திர மோடி இன்னமும் அந்தக் கட்டத்துக்கு நகரவில்லை என்பது என்னுடைய கருத்து.

      Delete
      Replies
        Reply
    2. Reply
  2. ஸ்ரீராம்.January 30, 2019 at 6:13 AM

    // நரேந்திர மோடி இன்னமும் அந்தக் கட்டத்துக்கு நகரவில்லை //

    அருகில் இருக்கிறார் என்கிறீர்களா? அதாவது அந்தப் பாதையில் இருக்கிறார் என்கிறீர்களா?

    ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் போன்ற தலைவர்களை மக்கள் போதிய அளவில் நினைவில் வைத்துக்கொள்வதில்லை!

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண மூர்த்தி SJanuary 30, 2019 at 11:37 AM

      ஸ்ரீராம்! ஜார்ஜ் பெர்னாண்டசை இங்கே நினைவுபடுத்திக் கொண்டது எமெர்ஜென்சி நாட்களில் என்னுடைய பழைய நினைவுகளையும் கொஞ்சம் மீட்டெடுப்பதற்காகத்தான்!

      மோடி இன்னமும் அந்தக்கட்டத்துக்கு நகரவில்லை என்றுசொன்னதே, இந்திராவுக்கு மதம்பிடித்த மாதிரி அதற்கு அருகிலோ அந்தப்பாதையிலோ இல்லை என்று சொல்லத்தான்!

      Delete
      Replies
        Reply
    2. Reply
  3. ஜீவிJanuary 31, 2019 at 3:36 PM

    எமெர்ஜென்சி நாட்களின் நினைவுகள் -- என்பது அந்த நாட்களில் வாழ்ந்த நம் இருவருக்கும் ஒரே மாதிரியாகத் தானே இருக்க வேண்டும்? ஏன் அப்படி இல்லை?..

    அரசியல் தெளிவின்மை என்ற காரணம் நிச்சயம் இல்லை. அப்போ?..

    எமெர்ஜென்சிக்கு இட்டுச் சென்ற அரசியல் நிகழ்வுகள் என்று ஒன்று இருக்கிறது.

    எமெர்ஜென்சி காலத்தில் எளிய சாதாரண மக்கள் அடைந்த நன்மைகள் என்று இன்னொன்று இருக்கிறது. அன்று துவங்கிய நல்ல சில திட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருந்து எளிய மக்களின் நலனுக்காக வாழ்கின்றன என்ற மற்றொரு உண்மையும் இருக்கிறது.

    இழப்பதற்கு எதுவுமில்லாத மக்களுக்கு இழப்பு என்று எதுவுமே இல்லை என்கிற உண்மை தகிக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண மூர்த்தி SJanuary 31, 2019 at 4:31 PM

      எந்த ஒரு இருவரும் ஒரேவானவில்லைப் பார்ப்பதில்லை என்று அறிவியல் சொல்கிற மாதிரித்தான் ஜீவி சார்!

      எமெர்ஜென்சியில் பாசிட்டிவ் விஷயமே இல்லையா? அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு நேரத்துக்கு வந்தார்கள்! ஜாக்டோ ஜியோ மாதிரி சண்டித்தனம் செய்கிற மாதிரியான வேலை நிறுத்தங்கள் அறவே இல்லை. ரத்தன் டாட்டா வேலைநிறுத்தங்களால் பட்ட அவஸ்தை இல்லாமல் போயிற்று இத்தியாதி இத்தியாதி

      ஆனால் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்கள் அப்படிப் பெருமைப்பட்டுக்கொள்ள விட்டுவிடவில்லையே!
      துர்க்மான் கேட்டில் சஞ்சய் காந்தி நடத்திய அட்டூழியம், கட்டாயக் கருத்தடை இன்னபிற சாகசங்களைச் சேர்த்துக் கொள்ளலாமா?

      இங்கே மதுரையில் ஆர்வி சாமிநாதன் என்றொரு மத்திய MoS! யாராவது அவர் காதில் இந்திராவை இப்படிப் பேசிவிட்டார்கள் இரு போட்டுக் கொடுத்தால் போதும்! உடனே துண்டுச்சீட்டு மதுரைக்கு கலெக்டருக்குப் போகும்! தீப்பொறி ஆறுமுகம் போல ஆபாசப் பேச்சாளர்கள் மிசாவில் உள்ளே போனதெல்லாம் அப்படி துண்டுச்சீட்டு உத்தரவில்தான்! இது ஒரு சாம்பிள்.

      அந்தநாட்களில் கிடைத்த அரசு வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடிக் கொண்டிருந்த நேரம். என்னுடைய பொழுதெல்லாம் தினமணி அலுவலகத்திலோ UNI செய்தி நிறுவனத்திலோதான்! பத்திரிகைகளில் செய்திகளை எப்படியெல்லாம் சென்சார் செய்தார்கள் என்பதை தினமணி உதவி ஆசிரியர் ஒருவர் எனக்குக் காட்டியிருக்கிறார்.

      என்னுடைய கருத்து,, நானே பார்த்து படித்து யோசித்து உருவாக்கிக் கொள்வதாக அந்தநாளைய அனுபவம் கற்றுக்கொடுத்ததில் உருவானது உங்களுடைய அனுபவம் பார்வை அந்த நாட்களில் எப்படி என்பதை நீங்கள் சொன்னால்தான் தெரியும்.

      Delete
      Replies
        Reply
    2. Reply
  4. ஜீவிJanuary 31, 2019 at 9:07 PM

    எங்கிருந்து ஆரம்பிக்கலாம், சார்?.

    350 பாராளுமன்ற தொகுதிகளில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவர் -- அலகாபாத் கோர்ட் தீர்ப்பு - ஆட்சியமைக்கக் கூடாது -- அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலிலேயே போட்டியிடக் கூடாது -- யஷ்பால் கபூர் -- தேர்தல் பணிகளுக்கு முகவராக பொறுப்பு ஏற்றுக் கொள்வதற்கு முன்பே தன் அரசுப் பணியை ராஜினாமா செய்தவர் --எங்கிருந்து ஆரம்பிக்கலாம் சார்?

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண மூர்த்தி SJanuary 31, 2019 at 9:52 PM

      எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பியுங்களேன் ஜீவி சார்! ஆனால், அதற்காக தேர்தல் ரிசல்டையும் நீதிமன்றத்தீர்ப்பையும் ஒருசேரக் குழப்பிக்கொள்ள வேண்டுமா? தேர்தல் விதிகளை மீறியதால், தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றது நீதிமன்றம்.

      தனக்கு வந்த சொந்த நெருக்கடியை என்னமோ தேசத்துக்கே நெருக்கடி வந்துவிட்டதாக எமெர்ஜென்சியை அறிவித்து அடுத்தடுத்து அரங்கேற்றிய கோரங்களை எப்படி நியாயப் படுத்துவீர்கள்? அர்த்தமில்லாத கரீபி ஹடோ கோஷங்கள், 42வது அரசியல் சாசனத்திருத்தம், செக்குலர் சோஷலிஸ்ட் என்ற வார்த்தைகளை pereamble இல் சேர்த்த மோசடி, இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.

      ஆனால் நானே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் ஒருகை ஓசை என்றாகிவிடும்!

      Delete
      Replies
        Reply
    2. Reply
  5. ஜீவிFebruary 1, 2019 at 7:00 AM

    ஓ.கோ! அவருக்கு வந்த சொந்த நெருக்கடி என்று அதைக் கடந்து விட்டால், அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?.. இனி எதிர்காலத்திலும் அப்படியே எல்லாவற்றையும் கடக்கக் கற்றுக் கொண்டால் அதுவே மனம், அறிவு எல்லாவற்றிற்கும் போஷாக்கு தரும் ஒரு பயிற்சியுமாகும். நன்றி, சார்.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண மூர்த்தி SFebruary 1, 2019 at 11:48 AM

      அது என்னுடைய கருத்து ஜீவி சார்!

      எமெர்ஜென்சி அல்லது இந்திரா legacy பற்றி உங்களுடைய கருத்துக்களைத் தொகுத்துச் சொன்னால் அதை இங்கே இந்தப்பக்கங்களில் Guest Post ஆக வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

      Delete
      Replies
        Reply
    2. Reply
Add comment
Load more...

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

‹
›
Home
View web version

என்னைத் தெரியுமா? இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்!

My photo
கிருஷ்ண மூர்த்தி S
வங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக!
View my complete profile
Powered by Blogger.