மதுரை மீனாக்ஷிக்கு இன்று பட்டாபிஷேகம்!



மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்றைய விசேஷம் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்! மதுரை அரசாளும்  மீனாக்ஷியாக இன்றைக்கு முடிசூட்டிக் கொள்கிறவள் நாளை திக்விஜயமாக ஒவ்வொரு உலகமாக வெற்றி கண்டு வருகையி ல் சோமசுந்தரனிடம்  சண்டையிட முடியாமல் அவனையே மணவாளனாகக் கைத்தலம் பற்றுகிற கோலாகலம் நாளை மறுநாள்!

முன்பெல்லாம் சித்திரைத்திருநாள்  என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல் நலம் கொஞ்சம் மக்கர் செய்ய ஆரம்பித்த பிறகு இயலாமலேயே போனது . கேபிள் டிவி,செய்தித்தாட்களில் பார்த்தே பழைய நினைவுகளைக் கொஞ்சம் அசைபோட்டு அவளை வணங்குவது ஒன்றுதான் இப்போதைக்குக் கொடுப்பினை!  
  
மலையத்துவசன் என்று ஒரு பாண்டிய ராஜா!

நீண்ட நாட்களாகப் பிள்ளை இல்லைதவமிருந்துஅப்புறம் ஒரு பெண் பிள்ளை பிறந்தது..பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்களோடு பிறந்த பெண்பிள்ளையைப் பார்த்துஐயோ,இப்படி இருக்கிறதே என்று பாண்டியன் கலங்கினானாம்இந்தப் பெண்பிள்ளை வளர்ந்து பெரியவளானால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கவலை வாட்ட ஆரம்பித்ததுஅசரீரியாக, "வருந்தாதேஅவளுக்குத் திருமண நேரம் வரும்போதுஅவளைத் தேடி மணாளன் வருவான்அவனைப் பார்த்ததுமேமூன்றாவதாக இருக்கும் ஸ்தனம் மறைந்துவிடும்!" என்று ஆறுதல் சொல்லியுமே கூடமன்னனுக்குத் துயரம் தாங்கவில்லைஅந்தக் கவலையுடனேயே மரணமடைந்தான்.

கண் ஊஞ்சல் ஆட்டினாள் காஞ்சனமாலை என்று தாலாட்டுப் பாட்டெல்லாம் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை
 மீனாக்ஷி பெரிய ராவடியாகவே இருந்தாள் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இப்படித் தாலாட்டுப் பாடியே, அவளை ராவடியாக்கி விட்டார்களோ?! 

ஒவ்வொருத்தரிடமாகப் போய்
என்னுடன் சண்டைக்கு வருகிறாயா என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சண்டை செய்வதற்காகவே திக்விஜயம் செய்ய  ஆரம்பித்தாள். பூலோகம், மேலோகம் என்று இவளது ராவடியை கண்டு அத்தனை பேருமே அரண்டு போய்த் தோல்வியை ஒப்புக் கொண்டார்களாம்!தனி ஆவர்த்தனமாகவே போய்க் கொண்டிருந்த போது, இவளை விடப் பெரிய ராவடியாகஅந்தப் பரமேஸ்வரனே சோம சுந்தரனாக மதுரைக்கு வந்தானாம்! அப்படி  வந்தவனைக் கண்டவுடன், ராவடி, சண்டை போடுவதை எல்லாம் மறந்து மீனாக்ஷி  வெட்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாளாம்!மூன்றாவது ஸ்தனமும், ஏற்கெனெவே அசரீரி சொல்லியிருந்ததைப் போல, மறைந்தது.

மூன்றாவது ஸ்தனம் மறைந்ததைக் கண்டு
காஞ்சனமாலை மாப்பிள்ளை ஒருத்தன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று தெரிந்துகொண்டுமுப்பத்து முக்கோடி தேவர்களோடு சேர்ந்து பெண்ணுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தாள்


மதுரையில் மீனாட்சிக்குக் கல்யாணம்! 

ஊரெல்லாம் கொண்டாட்டம்!


கல்யாணமும் ஆகிசாப்பாட்டுப் பந்தியெல்லாம் முடிந்தபிறகுசமைத்ததெல்லாம் நிறைய மீந்து போனது! முப்பத்து முக்கோடி தேவர்களும் சாப்பிட்டும் மீந்துபோனால் எப்படி! சமைத்து வைத்த உணவெல்லாம் மீந்து போய்விட்டதுஉம்முடைய உறவினர்கள் எண்ணிக்கை அவ்வளவுதானா என்று கொஞ்சம் நக்கலாகக்  கேட்கிறாள் மதுரைக்கு அரசி, முத்து மீனாக்ஷி! 

அதுவரை அடக்க ஒடுக்கமாக இருந்த மாப்பிள்ளை சோமசுந்தரன்தன்னுடைய ராவடியை ஆரம்பித்தானாம்

இரு! ஒரே ஒரு குட்டிப் பூதத்தை அனுப்புகிறேன்
அவன் சாப்பிட்ட பிறகு மிச்சம் மீதி ஏதாவது இருந்தால்அப்புறம் மற்றவர்களைக் கூப்பிடுவதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு குண்டோதரன் என்ற ஒரு பூதத்தை அனுப்பி வைத்தானாம் 


குண்டோதரனும் சமைத்து வைத்திருந்த அத்தனை உணவையும் சாப்பிட்டுபசிஇன்னும் வேண்டும்பசி, இன்னும் வேண்டும் என்று அரிசிகாய்கறி இப்படி சமைப்பதற்கு வைத்திருந்த அத்தனையையும் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து மீனாட்சியே பயந்து போனாளாம்போதும் போதுமென்று வீட்டுக்காரனிடம் கெஞ்சுகிறாள் மீனாக்ஷி!

ராவடி மன்னனான சுந்தரேசப் பெருமானும் குண்டோதரனின் பசி அடக்கித் தாகத்தை உண்டு பண்ணினானாம்தண்ணீர்தண்ணீர் என்று அலைந்த குண்டோதரனிடம் இதோ வை கை என்று சொல்ல, வைகை நதி உண்டாயிற்றாம்! இது திருவிளையாடல்  புராணத்தில் வருகிற கதை!



வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்று மகிழ்ந்து கொள்கிறது திரு விளையாடற் புராணம்! வை கை என்று சொன்னதினாலோ என்னவோ கை நனைக்கிற அளவுக்குக் கூடவைகையில்பெரும்பாலான தருணங்களில் தண்ணீர் இருப்பதில்லை! சிறு கூடற்பட்டியில் பிறந்த எங்கள் கவிஞன் கண்ணதாசன் ஒரு திரைப் படப் பாடலில் சொன்னபடி,

மலைமேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயுமுன்னே வந்த வெள்ளம் போனது ராசா!


இப்படி, அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும், வைகையின் கதை மட்டுமல்ல, பாண்டிய நாட்டின் கதையே அப்படித்தான் இருக்கிறது!
அம்மையும் அப்பனுமே ராவடி பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி? 
அடிப்பொடிகளோடு அட்டகாசம் பண்ணஅடுத்து ஒரு 'னா வர வேண்டாமா!

ராவடி பண்ணிய  மீனாட்சியும், ராவடி மன்னன் சுந்தரேசனுமே  
அ' றங்காவலர் குழு செய்வது தான் சரி என்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்! மதுரைக்கு அரசி மீனாக்ஷி என்பதெல்லாம் முப்பதாண்டுகளுக்கு முந்தைய பழைய நம்பிக்கை!  என்னை மாதிரிப் பழைய நினைவுகளைக் கொஞ்சம் சுமந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே,  இன்னமும் அப்படி நம்பிக் கொண்டிருக்கிறோம்!




பண்டிகை என்ற மட்டுக்கு சித்திரைத் திருவிழாவின் போது  மீனாக்ஷி கையிலும் ஆவணி மாதத்தில் சோமசுந்தரர் கையிலும் மதுரையின் ஆட்சி இருப்பதாக ஒரு கற்பனை மட்டும் பண்ணிக் கொண்டு, செங்கோல் கொடுக்கிற படலம் ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது!
 
ஆகமதுரை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மூணு 
அப்புறம் ராவடிஒரு ராவடியை அடக்கஅதற்குக் கொஞ்சம் அதிகமான ராவடி என்று அராத்தாகராவடியாக இப்படித் தொடர்ந்து இருப்பதே மதுரையின் கதையாக, புராணமாக இருக்கிறது!

தடி எடுத்தவனெல்லாம்  தண்டல்காரனா என்று கேட்கிற மாதிரி  ராவடி செய்யத் தெரிந்தவனை எல்லாம் பாண்டியனாக ஆக்கிப் பார்ப்பதே மதுரைக்கு உள்ள தனிச் சிறுமை! கலக்டராக இருந்த ஒரு ஆங்கிலேயன், மீனாட்சிக்கு ஆபரணம் செய்து போட்டானாம்! அவனையும் பீட்டர் பாண்டியன் என்பார்கள்! பெரிய மருது, சின்ன மருது என்று இரு சகோதரர்கள்! அவர்களையும் பாண்டியன் என்பார்கள்! பிற்கால பாண்டிய வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் பாண்டியன் என்று எவர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்!

திருநெல்வேலி தாண்டி தெற்கே, பாண்டியன் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுப் பாருங்கள்!

மதுரைக்கு அரசி நீயல்லவோ என்று அவளிடத்தில் கேட்க ஆசைதான்! 

அவள் என்றைக்கடா வாயைத் திறந்து பேசினாள் என்ற  வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!

ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவின் மீள்பதிவுதான்! இன்றைய  நிலவரங்களோடு கொஞ்சம் திருத்தங்களுடன் 

கண்ணன் வந்தான்! கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!


தேடலின் முந்தையபகுதி இங்கே 

இந்தச் சின்னப் பையன் என்ன என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போகிறானே,இத்தனை வயதாகியும் எனக்கு இதெல்லாம் ஒன்று கூடப் புரியவில்லையே என்று எண்ணிக் கொண்டே ஹரி மோகனுக்குக் கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.கண்ணனையே ஆர்வம் ததும்பியவனாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இதைப் புரிந்துகொள் ஹரி மோகன்எந்த ஒரு செயலையும் மேலோட்டமாகவே பார்த்தால் அதன் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாதுநல்ல செயல்கள்நல்ல பழக்கங்கள் என்று செய்து வந்திருக்கிறாய்அதனால் புண்ணியம் கிட்டும் என்கிற நம்பிக்கை-ஆனால்அதை ஒரு வரட்டுத்தன்மையோடு கூடிய பழக்கமாகவே செய்து வந்ததால்,உண்மையை விலக்கி விட்டு வெறும் சடங்கு என்ற அளவோடு நிறுத்திக் கொள்வதால் வரும் பின் விளைவு இது.உயிரில்லாத சடங்கு என்ன தரும்உனக்கு மகிழ்ச்சி இல்லைஉன்னுடைய செயல்களினால் விளையும் உணர்ச்சிகளின் சக்தியைத் தடுக்க உன்னால் முடியவில்லைஉன்னுடைய இந்த சிறிய அகங்காரத்தைக் கூட உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லை."

"அதே மாதிரி இந்த செல்வரங்கமும் கூட எந்த தீய செய்கைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று செய்தானோ,அவைகளாலும் சந்தோஷமடையவில்லைமாறாகபழக்கங்களின் அடிமையாகவே இருப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல்இந்த வாழ்க்கையிலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்"

"இது தான் நல்வினைதீவினை என்கிற இருவிதமான தளைகள்அறியாமையோடு கூடிய எண்ணப் பதிவுகளே இப்படிப் பந்த பாசம் ஆகிய விலங்குகளாக ஒருவனைக் கட்டிப் போட்டு வைக்கிறதுவேதனைப் பட வைக்கிறது.ஆனால் இதுவும் வேண்டியதேசெல்வரங்கத்தைப் பார்இந்த பயங்கரமான வேதனை தான்எது உண்மையான உறவுஎது நிலையானதுஉண்மையானது என்பதைத் தேடச் சொல்லிக் கொடுக்கும்இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் ஒரு நேரம் வரும் போது சொல்லிக் கொடுக்கும்."

ஹரிமோகன் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்: "கண்ணாநீ அழகாகத்தான் பேசுகிறாய்கேட்கும் போது நன்றாகத்தான் இருக்கிறதுஆனாலும்உன்னை நிஜமாக நம்ப முடியவில்லைசுகமும் துக்கமும்மனதின் ஒருவிதமான நிலைதான் என்கிறாய்இருக்கலாம்ஆனால் வெளிச் சூழ்நிலைகள் தானே அதற்குக் காரணமாய் இருக்கிறதுபட்டினியோடு இருப்பவன் மனது எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்நோயாலும்வலியாலும் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவனால் எப்படிஅதை மறந்துஉன்னைத்தான் நினைக்க முடியுமா? "

"முடியும் ஹரிமோகன்முடியும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உனக்குக் காட்டுவதற்காகத்தானே இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்இங்கே பார்என்றான் கண்ணன்.ஹரிமோகனுடைய கண் முன்னால் காட்சி மாறியதுசெல்வரங்கத்தின் வீட்டில் அவன் இப்போது இல்லைஒரு அடர்ந்த கானகத்தில் ஒரு யோகி ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதைப் பார்த்தான்அவருடைய காலடியில்ஒரு பெரிய புலி அமைதியாகக் காவலுக்கிருப்பதைப் போலகாத்திருப்பதையும் பார்த்தவுடன்ஹரிமோகனுடைய உடல் நடுங்க ஆரம்பித்ததுபுலியைப் பார்த்தவுடன்யோகியைப் பற்றியோபின்னணியில் தெரிந்த அழக்கான மலைச் சிகரம்,சுகமான தென்றல் வீசும் இனிய சூழல் எதுவும் ஹரிமோகனுக்குப் புலப்படவில்லைதிரும்பி ஓடி விடலாம் என்று திமிறியவனைகண்ணன் சிரித்துக் கொண்டே யோகியின் அருகாமையில் இழுத்துச் சென்றான்.

சின்னக் கண்ணனுக்கு இத்தனை பலமா?

சிறுவனின் பலத்தை வியந்து கொண்டேஅவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்த ஹரிமோகனுக்கு சிலீரென்று ஒரு புதிய அனுபவம்..அந்த யோகியின் மனம் ஒரு புத்தகம் போலத் தன் முன் விரிவதைக் கண்டான்எங்கு பார்த்தாலும் கிருஷ்ணாகோவிந்தாஹே மாதவா என்று நாம ஜபமாகவே இருக்கக் கண்டான்ஒரு பரபரப்புமில்லாமல்அன்புமயமான சூழலில் கண்ணனையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனுபவம்,தனக்குள்ளும் ஊடுருவுவதைக் கண்டான்இத்தனைக்கும்அந்த யோகி பல நாட்களாகப் பட்டினி கிடப்பதாகத் தெரிந்ததுஉடல் வெளுத்துச் சோர்வாகத் தென்பட்டாலும்யோகியின் மனதில் எந்த அலுப்பும் குறையும் இல்லாமல் இருப்பதையும் கண்டான்.

"கிருஷ்ணாஇது என்னஇவர் சாப்பிட்டு பலநாட்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறதேஇவருக்கு யார் உணவளிப்பார்கள்இவரோ அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப் படுவதாகவும் தெரியவில்லையே?"

"ஏன்நானில்லையாபொறுப்பை என்னிடம் விட்டு விட்டான்அதுதான் கவலையில்லாமல் இருக்கிறான்."

"நன்றாயிருக்கிறது நீ பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் விதம்புலிகள்மிருகங்கள் நடமாடும் காட்டில் குடிக்கத் தண்ணீரோபசிக்கு உணவோ இல்லாமல் இங்கே ஒருவன் தவித்துக் கொண்டிருக்கிறான்நீயோ சர்வ சாதாரணமாக அந்தப் பொறுப்பு என்னுடையது என்று சொல்கிறாய்..ஆனாலும் ஒன்றுமே செய்யாமலிருக்கிறாய்கிருஷ்ணாநீ மிகவும் கொடியவன்."

ஹரிமோகன் உணர்ச்சி மேலிடப் பேசுவதைக் குறுஞ்சிரிப்புடன் கேட்ட கிருஷ்ணன், "ஹரிமோகன்இப்போது ஒரு வேடிக்கையைப் பார்க்கிறாயா?" என்றான்அவன் பதில் சொல்வதற்கு முன்னமேயோகியின் காலடியில் சாதுவாக அமர்ந்திருந்த புலி திடீரென்று எழுந்து தன்னுடைய வாலைச் சுழற்றியதில்பக்கத்தில் இருந்த எறும்புப் புற்று உடைந்துஆயிரக்கணக்கில் எறும்புகள்யோகியின் உடல் மீது பரவினபுற்று உடைக்கப் பட்டதில் கிளர்ச்சியடைந்து,அவை யோகியைப் பல இடங்களிலும் கடிக்க ஆரம்பித்தன.

திடீரென்று ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஹரிமோகன் அதிர்ச்சியடைந்தான்ஆனால் அந்த யோகியோ,எறும்புகள் கடிப்பதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல்நிஷ்டையில் இருந்தார். "ப்ரியமானவனேநண்பாஎன்று அவர் காதில் விழும் படி அந்த சிறுவன்மென்மையாக அழைத்தான்அந்தக் குரல்பிருந்தாவனத்தில் கோபிகைகளிடம்ராதையிடம் அன்பொழுகப் பேசுவது போலவே யோகியின் மனம் முழுதும் எதிரொலிப்பதை ஹரிமோகன் ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தான்நிஷ்டை களைந்துயோகி தன்னுணர்வு பெற்ற போதும் கூட,எறும்புகள் கடிப்பதைப் பற்றியோசுரீர் சுரீரென்று வலி உடலில் பரவுவதைப் பற்றியோ கவலைப்படாமல் இப்படி நினைப்பதை ஹரிமோகன் கண்டான்.

"இது என்ன புதிய அனுபவமாக இருக்கிறதேஎன்னுடைய கிருஷ்ணன் ப்ரியமானவனே என்றழைப்பதைக் கேட்டேன்.எறும்பு கடித்தால் இப்படிக் கூட ஆனந்தமயமான அனுபவம் கிடைக்குமா என்ன!" யோகியின் நினைவு பரவசமாகிஉடல் ஆனந்த மிகுதியால் துள்ளஉடல் மேல் ஊர்ந்துகொண்டிருந்த எறும்புகள் தூரப் போய் விழுந்தன.
சில வினாடிகளில்அங்கே ஒரு எறும்பு கூட இல்லையோகியோஏற்கெனெவே பட்ட ஒவ்வொரு கடியும்ஆனந்த பரவசத்தை ஏற்படுத்தக் கை கொட்டி ஆடுவதையும் சிரிப்பதையும் ஹரிமோகன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கிருஷ்ணாஎன்ன மந்திரம் போட்டாய்இது என்ன மாயம்?"

ச்யாமசுந்தரனான ஸ்ரீ கிருஷ்ணன் கை கொட்டி சிரித்துக் கொண்டேசொன்னான், "ஆமாம்இது மாயம் தான்.என்னைவிடப் பெரிய மாயக் காரனோமந்திரவாதியோ எவருமில்லை.நானே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே மந்திரவாதி.இது சொன்னால் உனக்குப் புரியாதுஇது பரம ரகசியம்பார்த்தாயல்லவாஇந்த யோகியை எறும்புகள் கடித்த வேதனையை உடல் முழுவதும் அனுபவித்த நிலையில் கூடஎவ்வளவு சந்தோஷமாக இருந்தார்ஏதேதோ சொன்னாயேபசிதாகம்களைப்பு என்றுஅதையெல்லாம் அவர் கொஞ்சம் கூட சட்டை பண்ணவில்லை என்பதையும் நன்றாகப் பார்த்தாயாஇன்னமும் கவனித்துப் பார்என்ன நடக்கிறதென்று."

யோகி மறுபடியும் நிஷ்டையில் அமர்ந்து விட்டார்அவரது உடல்பசி தாகத்தினால் வாடியிருந்தாலும்அவரை அது ஒரு விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை ஹரிமோகன் கண்டான்.

"நண்பாபிரியமானவனேஇதோ நான் வந்து விட்டேன்." இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஹரிமோகன் தனது பக்கத்தில் அந்த மாயக்காரச் சிறுவன் இருக்கிறானா என்று பார்த்துக் கொண்டான்.சிறுவன் அவனருகிலேயே இருப்பதைக் கண்டான்அவனைப்போலவேஅதே மோகனக் கண்ணன் எதிரே கையில் பெரிய தட்டுகுவளையுடன் வருவதைப் பார்த்தான்யோகியும் கண் விழித்துப் பார்த்துமுகமலர்ச்சியுடன் அவனை வரவேற்பதைக் கண்டான்.

"உன்னை ரொம்ப நேரம் பட்டினி போட்டு விட்டேனாஉனக்கு என மேல் கோபம் ஒன்றும் இல்லையே?'

"உன் மேல் கோபமாஎதற்குநீ வரும் போதுஉன்னுடைய தரிசனமே எனக்கு உணவுமற்ற நேரங்களில்உன்னை நினைத்துக் கொண்டிருப்பதே தாகம் தீர்க்கும் சாதனம்பசி தாகம் தீர்க்க நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை?"

"உனக்காக சில விசேஷமான பலகாரங்களைக் கொண்டு வர எண்ணினேன்அதனால் தான் நேரமாகி விட்டதுஇங்கே வந்து பார்என்னென்ன கொண்டு வந்திருக்கிறேனென்று?"

"கண்ணாவாஇருவரும் சேர்ந்தே உண்போம்."

மாயக் கண்ணனும்யோகியும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர்பரிகாசமாய்ப் பல கதைகள் பேசினர்.ஹரிமோகன் இந்தக் கட்சியை மிகுந்த ஆச்சச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்உணவு உண்டு முடித்தவுடன்,அந்த சிறுவன்மறைந்து விட்டான்தன் பக்கத்திலிருந்தவனிடம் ஏதோ கேட்க வாயெடுத்த ஹரிமோகன்பக்கத்தில் சிறுவன் இல்லாததையும்கானகம்மலையோகிபுலி எல்லாம் மறைந்து தான் மட்டும் வேறோர் இடத்தில்,வேறோர் காலத்தில் இருப்பதையும் கண்டான்.

ஹரிமோகனுக்கு வியப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆயிற்றுஏனென்றால்அவன் தன்னுடைய வாழ்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான்அவன்அவனது மனைவி,பிள்ளைகள்உறவினர்கள் நண்பர்களோடு இருந்ததைக் கண்டான்ஒரு இயந்திர கதியில்அவன் சாத்திரங்களில் சொன்னபடிபூஜை புனஸ்காரங்களைச் செய்து கொண்டிருந்தான்

தான தர்மங்கள்பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியதுஉறவினர்களுக்குநண்பர்களுக்குச் செய்ய வேண்டியது இப்படி எதிலும் குறைவில்லைஆனால்அதில் உண்மையான அன்பு இல்லாதிருப்பதையும்செய்யப் பட்டவை எல்லாமே ஒரு சடங்குசம்ப்ரதாயத்திகாகத்தான் என்பதைப் பார்த்தபோது தன்னைப் பார்த்தே அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததுமிகவும் உயர்வான ஆன்மிகம் என்று நினைத்திருந்ததுவெறும் இயந்திரத்தனமான சடங்குகளாகக் குறுகிப் போனதையும்உண்மையிலிருந்து விலகி வெகு தூரத்தில் இருந்ததையும் பார்த்த போது ஹரிமோகனுக்கு துக்கம் மேலிட்டதுஅந்த இடத்தை விட்டு விலகி இருந்தால் தேவலை என்று தோன்றியதுஉடல் மட்டும் கீழே விழஅவன் வேறு இடங்களில் அலைவதைப் பார்த்தான்.

மிகவும் தாகமெடுப்பது போலத் தோன்றியதுதண்ணீரைத்தேடி வெகுதூரம் அலைந்த பிறகும் தண்ணீர் கிடைத்தபாடில்லைதண்ணீரை குடிப்பது போலதாகமெடுக்கும் போதெல்லாம் புழுதியையே உண்டுவந்ததைப் பார்த்தான்தாகம் தீர்வதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே போனதையும் பார்த்தான்எங்கு பார்த்தாலும்ஒரே புழுதிபுழுதிமயம்அடஆண்டவனே குடிக்கத் தண்ணீர் கூடத் தர மாட்டாயா?

அலுப்போடுஅவன் நகரத்தின் வேறொருஇடத்தில் இருப்பதைப் பார்த்தான்ஒரே வாழ்த்துமயமாக அந்த இடம் காட்சி அளித்ததுஅடஅங்கே கம்பீரமாக அமர்ந்திருப்பது யார்செல்வரங்கம்செல்வரங்கமே தான்அவனைச் சுற்றி ஒரு கூட்டமே காத்திருந்ததுஒவ்வொருவருக்கும்கை நிறையப் பணம் அளிப்பதையும்அவர்கள் அவனை மனதார வாழ்த்திச் செல்வதையும் பார்த்த ஹரிமோகனுக்கு ஒரே வியப்புசெல்வரங்கம் எப்போதிலிருந்து கொடை வள்ளல் ஆனான்ஹரிமோகன் வாய் விட்டுஉரக்கச் சிரித்தான்அடக் கடவுளே!

பார்த்துக் கொண்டே இருக்கும் போதேசெல்வரங்கம் மனதில் இருந்த அத்தனையும் ஹரிமோகனுக்குத் தெரிந்தன.புகழுக்காகநான்கு பேர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காககாசினாலே நிறையக் காரியம் கை கூடும் என்பதற்காகவே செல்வரங்கம் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதும்அவன் மனதில் பேராசையும்,வஞ்சகமும் மண்டிக் கிடப்பதையும் ஹரிமோகன் பார்த்தான்ஒவ்வொன்றும் அவனுள்ளே பேயாட்டம் ஆடிஇன்னும் கொடுஎங்களுக்கு திருப்தி இல்லைஎங்களைத் திருப்தி செய் என்று தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதையும் பார்த்தான்பார்த்துக் கொண்டே இருக்கும் போது காட்சி மாறுவதை ஹரி மோகன் உணர்ந்தான்.

வெவ்வேறு நம்பிக்கைகள்அதன் பின்னே செல்லும் மனிதக் கூட்டங்கள்அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தமாதிரி உருவாக்கி வைத்திருந்த நீதி நெறிகள்தண்டனை முறைகள்ஸ்வர்க்கம்நரகம் இப்படிப் பலவிதமாய்ச் சொல்லப் படுவதையும் ஹரி மோகன் பார்த்தான்யார் யாரோஅவனை இந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றதையும்,ஆனால் இந்த இடங்களைப் பற்றி முடிவாக எதுவும் சொல்லாமல் விட்டதையும் பார்த்துக் கொண்டே வந்த ஹரிமோகன் பழையபடி தன்னுடைய ஒட்டு வீட்டில்அதே அழுக்குப்பாய்தலையணையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தான்அப்போதுஇதுவெல்லாம் உண்மையில்லையாவெறும் கனவு தானாஇந்த சந்தேகம் பெரிய கேள்வியாக எழ, "சியாமசுந்தராநான் பார்த்ததெல்லாம் நிஜமா?" என்றான்.

ஷ்யாமசுந்தரன் கருணையோடு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னான்,"இப்பொழுதே இரவு அதிக நேரம் ஆகிவிட்டது.இதற்கு மேலும் இங்கே என்னை நிறுத்திக் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தாயானால்அங்கே என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கோள் மூட்டிஎன் அன்னையிடம் தண்டனை வாங்கிக் கொடுக்க ஒரு பெரிய பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறதுஅனுபவங்களில் தெளிவு தானாகத் தான் வர வேண்டும்.இருந்தாலும்சில உண்மைகளைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்கேட்டுக் கொள்.

நீ பார்த்த ஸ்வர்க்கம்நரகம் எல்லாம் கனவுலகைச் சேர்ந்தவைஒரு அனுபவத்திற்கும் அடுத்ததற்கும்இடையில் ஒரு சின்ன இடைவேளைகுட்டித்தூக்கம் அல்லது கனவு மாதிரி.அதைத்தான் ஒரு மனிதன் இறந்தவுடன் ஸ்வர்கத்திற்கோஅல்லது நரகத்திற்கோ சென்று தன்னுடைய கடந்த ஜன்மத்தின் பலன்களை அனுபவிக்கிறான் என்று சொல்கிறார்கள்உனையே எடுத்துக் கொள்உன்னுடைய முற்பிறவியில் சில அறநெறி உயர்வுகளைப் பெற்றிருந்தாய்ஆனால்உன்னுடைய இதயத்தில் அன்புக்கு இடமில்லாமல் போயிற்றுநீ கடவுளையோ,மனிதனையோநேசிக்கவில்லைஅதனால் தான்அந்தப் பிறவி முடிந்ததும்ஒரு இடைவேளை-அதில் உன் மனத்தின் உந்துதல்கள்அதன் விளைவுகளுக்கேற்றவாறு வசித்து வந்தாய்அதுவும் உனக்குப் பிடிக்கவில்லை-எனென்றால் உனது பிராணமய உணர்வு பொறுமையற்றுப் போயிற்று.அடிநாதமான அன்பு எனும் நீருக்காகத் தவித்தாய்புழுதிபடர்ந்த ஒரு நரகத்தில் வசிக்கப் போனாய்.
அதற்கப்புறம்உன்னுடைய புண்ணியங்களை அனுபவித்து முடிந்ததும் மறுபடி பிறந்தாய்அதிலும் கூடஒரு வரட்டுத்தனமான ஆசாரக் கோட்பாடுகளையும்கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்கிற சில தர்மங்களையும் செய்ததைத் தவிரஉதவி கேட்டு வந்த எவருக்கும் உள்ளன்போடு எதுவும் செய்யாமல் போனதன் காரணமாகத்தான்,இந்தப் பிறவியில்உனக்கு இவ்வளவு தேவைகள்மனக்குறைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.இத்தனைக்குப் பிறகும்வழக்கமான புண்ணியங்களை தேடும் செயல்களையே தொடர்ந்து செய்ய விழைவாய் எனில்உன்னுடைய புண்ணிய பாவங்களாகிற இருபெரும் தளைகள்முன்னமே சொன்னேனேஅந்தக் கனவுலக அனுபவத்தால் இன்னமும் வேரோடு அற்றுப் போகவில்லை இன்னும் மீதமிருக்கிறதுமறுபடி மறுபடி கனவுக்கும் நிஜத்திற்கும் இடையில் அவஸ்தைப் பட்டேயாக வேண்டும்இந்த உலக வாழ்க்கையிலேயேகனவுலகில் அல்லஉன்னுடைய ஆசைகள்ஆர்வத்தின் பலனாலேயே அவை மறைய வேண்டும்.

செல்வரங்கத்தின் கதையைப் பார்முந்தைய பிறவியில் பெரும் கொடையாளியாக இருந்ததால்,ஏராளமானவர்களுடைய இதயபூர்வமான ஆசியினால்கோடிகளுக்கு அதிபதியாய்ப் பிறந்திருக்கிறான்ஆனாலும்,அவனது மனம் இன்னும் பண் படுத்தப் படவில்லைபூர்த்தி செய்யப் படாத கொடிய இயல்புகளைத் திருப்தி செய்யவே,கொடிய எண்ணங்களும்கொடிய செயல்களுடனும் பிறந்திருக்கிறான்மண்ணைக் கொத்திபக்குவப் படுத்துவது போலஇங்கே கொடுமையாகத் தெரிவது கூடப் பக்குவப் படுத்துகிற சாதனம் தான்மண் பக்குவமாய் இருந்தால் தான்விதை முளைக்கும்.அன்பாகிற தண்ணீர் விட்டு கவனமாகப் பார்த்துக் கொண்டால் தான்செடி வளரும்பூ பூக்கும்.

இப்போது கர்மவினையின் சட்டங்கள் கொஞ்சமாவது புரிகிறதா?

கர்மவினை என்பது-பரிசுகளோதண்டனையோ அல்ல.

அவரை விதைத்தால் அவரை தான் விளையும்துவரை விதைத்தால் துவரை தான் விளையும்இந்த இயற்கை விதி புரிகிறதல்லவா-அதைப் போலத்தான்நல்ல செயல்களில் இருந்து நன்மை-கொடிய செயல்களில் இருந்து கொடுமை.அது தான் புண்ணியம்-பாவம்இந்த எளிய ஏற்பாடு எதற்காக என்றால்மனமும் இதயமும் சுத்தமாவதற்கும்கொடிய மிருகத்தன்மை அழிவதற்காகவும் இருக்கிறது. பொய்மையிலிருந்து தான் உண்மையைக் கண்டாக வேண்டும்..இருட்டில் இருப்பவன்தான் வெளிச்சத்தைத் தேடியாக வேண்டும்.. பார்த்தாயா ஹரிமோகன்எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் இந்த பூமிஎனது படைப்பில் ஒரு சிறு பகுதிதான்ஆனாலும் நீங்கள் எல்லோரும் ஒரு உன்னதமான உண்மையைக் கண்டறிவதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறீர்கள்நன்மை-தீமைபுண்ணிய-பாவம்இப்படி எதிர்மறையான இரட்டைத்தன்மைகளின் பிடியிலிருந்து விடுபடும் போதுதான் கர்மவினை- -அதன் விளைவுகளில் இருந்தும் விடுபட முடியும்.

நீயும் கூட இந்த விடுதலையை நோக்கித்தான் உன்னை அறியாமலேயே நகர்ந்து கொண்டிருக்கிறாய்இந்த முயற்சியில்உனக்கு உறுதுணையாக தெய்வீகம் துணையிருக்கும்இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் தான்நீ என் தோழனாக ஆக முடியும்விளையாட்டிலிருந்து விலகிக் கொள்கிறேன்எனக்கு விடுதலை இப்பொழுதே கொடு என்றெல்லாம் கேட்கக் கூடாது.

என்னசம்மதமா?”

ஹரிமோகன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்அவனுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்ததுஎப்படிச் சொல்வதுஎன்ன சொல்வது என்கிற யோசனையில் கொஞ்ச நேரம் இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணன்,அவனுடைய இனம்புரியாத யோசனையிலிருந்து எழுப்பினான்: "என்ன ஹரிமோகன்ஏதாவது புரிந்ததா?"

"புரியாமல் என்னகிருஷ்ணாநீ ஏதேதோ பேசி என்னை நன்றாக மயக்கி விட்டாய்இப்போது எனக்குஉன்னை மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும், என்னிடத்திலும் அன்பிருக்கிறது, அது உனக்காகத்தான் அதை உனக்குக் காண்பிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொரு ஆசை இல்லை." இப்படிச் சொல்லிக் கொண்டே வந்தவன்,திடீரென்று ஒரு யோசனை கிளம்ப, "அடப் பொல்லாத பயலேமறுபடியும் நீ என்னை ஏமாற்றி விட்டாய்.என்னென்னவெல்லாமோ சொன்னாயேதீயதை ஏன் படைத்தாய் என்பதற்கு ஒரு காரணமும் சொல்லாமல் விட்டு விட்டாயே?" இப்படிக் கேட்டுக் கொண்டே சிறுவனின் கரங்களை கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.

சிறுவனோ வெகுலாவகமாகத் தன் கைகளை விடுவித்துக் கொண்டுசற்றே எட்டி நின்று கொண்டான்ஒரு கள்ளச் சிரிப்புடன், "பார்த்தாயாகொஞ்சம் இறங்கி வந்து உனக்குப் புரிய வைக்க வந்தால்ஒரே மணி நேரத்தில் அத்தனை ரகசியங்களையும் தெரிந்து கொண்டு விடலாம் என்று பார்க்கிறாயே! "

"அப்படி இல்லை கிருஷ்ணா......" ஹரிமோகன் சிறுவனை நோக்கி நகர்ந்து வந்தான்.
சிறுவனது முகத்தில் பொய்க்கோபம்அதையும் மீறிய சிரிப்புடன் சொன்னான்:
நகர்ந்து போ ஹரி மோகன்உன்னை எனக்குத் தெரியாதாகொஞ்ச நேரம் முன்பு வரைஇந்தப் பயல் மட்டும் என் கையில் கிடைக்கட்டும்கட்டி வைத்து உதைக்கிறேன் என்று கருவிக் கொண்டிருந்தவன் தானே நீஉனக்கே அது மறந்து போய் விட்டதா என்னஅதற்கு பயந்து கொண்டுதானேநான் உன்னிடத்திலிருந்து ஒரு நாலடி தள்ளியே நின்று கொண்டிருந்தேன்?"

ஹரிமோகன் இருட்டில் கைகளைத் துழாவியபடிதேடி வந்துகொண்டிருந்தான்சிறுவனோ இன்னமும் தள்ளியே நின்று கொண்டு சொன்னான்:" இல்லை இல்லைஇந்த திருப்திவிளையாட்டெல்லாம்உனக்கு அடுத்த பிறவியில் தான்."

இப்படிச்சொல்லிக் கொண்டேநீண்ட இருட்டில் சிறுவன் ஓடி மறைந்து விட்டான்.
ஹரிமோகனுக்கு நடந்ததெல்லாம் கனவாநிஜமா என்ற சந்தேகம் எழத் தனக்குத் தானே பேசிக் கொள்ளலானான்.

"அந்த வசீகரமான முகம்புன்சிரிப்புஇது எதுவுமே கனவில்லைநிஜம் தான் என்று தோன்றியதுசின்னப் பையனாக இருந்தாலும்என்ன அழகாகச் சொன்னான்தன் முந்தின பிறவிஸ்வர்க்கம்-நரகம் இரட்டையைப் பார்த்தது இது எல்லாம் வெறும் கனவாக இருக்கவே முடியாது.

என்னுடைய ஷ்யாமசுந்தரன் என்னைத் தேடி வந்தான்என்னுடன் பேசினான்.ஐயோநான் தான் அவனிடத்தில் மரியாதை இல்லாமல் பேசினேன்...அவனைக் கட்டி வைக்கப் போகிறேன் என்றேன்அடிப்பேன் என்றேன்அவனைப் பொய்யன்பித்தலாட்டக்காரன் என்றெல்லாம் ஏசினேன்அது தெரிந்தும் என் பிரபு என்னைத் தேடி வந்தான்,என்னோடு சமமாகப் பேசினான்சிரித்தான்பொய்க்கோபம் காட்டினான்கேள்விகளைக் கேட்டு முடிப்பதற்குள்ளேயே,என் பிரபு என் கேள்வியிலேயே பதிலாக வந்து விட்டான்கிருஷ்ணாகிருஷ்ணா!"

ஹரிமோகனுடைய மொத்தமும் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டுக் கொண்டிருந்தது

கோவிந்தாஎன் பிரபோஉன்னை மறுபடி காண்பது எப்போது?"

ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் மாத இதழான அகில இந்திய இதழில், [ஏப்ரல் 2002] ஒரு கனவு என்ற தலைப்பில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளியான ஒரு வங்க மொழிக் கதையைத் தழுவியது. ஆசிரியர் விவரம் தெரியவில்லை. எப்போதோ படித்தது..மறுபடி கிடைத்தது, இதில் வரும் ஹரிமோகன் நான் தானோ என்ற சந்தேகம் கூட வந்தது. நானாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமே கதையை வாசித்து முடித்தபின் வந்தது. இது 2009 இல் எழுதியதன் மீள்பதிவுதான் நான் ஏன் பிறந்தேன் என்ற தேடலில் மறுவாசிப்புக்காக  

*****

கண்ணன் வந்தான்! ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!



ஹரி மோகனுக்குநினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும்கோபமும் ஒருசேர எழுந்தனபின்னே,ஏழை என்ன தான் செய்ய முடியும்ஒரு ஒட்டு வீட்டில்கிழிந்த பாய்தலையணையில்அமர்ந்து பொருமிக் கொண்டிருந்தான்.

"என்ன நியாயம் இதுநினைவு தெரிந்த நாள் முதல் ஒருவருக்கும் நான் தீங்கு செய்ததில்லைபிறர் பொருளுக்கு ஆசைப் பட்டவனும் இல்லைபரம சாதுவாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்-ஆனாலும்கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்களையே அந்த கிருஷ்ணன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்கேட்டால்இது உன்னுடைய கர்ம வினைமுன் ஜென்மத்தில் நீ செய்த பாவங்களைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்று சொல்கிறார்கள்.எனக்கென்னவோ கர்மவினைபுண்ணியம் பாவம் என்று சொல்வது எல்லாம்வெறும் பித்தலாட்டம் என்று தான் படுகிறதுஅந்த விஷமக் காரக் கண்ணன்தன் மேல் எவரும் பழி சொல்லாமல் இருப்பதற்காகத் தான் கீதையில் இப்படி ஒரு பொய்யைச் சொல்லி வைத்திருக்கிறான்."

தூரத்தில் தெரிந்த கிருஷ்ணன் கோவிலை ஒரு முறை வெறித்துப் பார்த்து விட்டு மறுபடி தனக்குத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தான்:

"அவன் சொல்கிறபடிமுந்தைய பிறவியில் நான் பெரும் பாவங்களைச் செய்திருந்தால்என்னுடைய இன்றைய இழிநிலை அதனால் தான் என்றால்இப்போதும் கூட அந்தத் தீவினைகளின் நிழல்நினைவுகள் என் நெஞ்சில் எழுந்து கொண்டு தான் இருக்கும்அவ்வளவு பெரிய பாவச் சுமைஒரு பிறவியோடு போயிருக்காதுமனம் கூட இந்த அளவு களங்கமற்றதாக இருந்திருக்காது...கர்ம வினைபாவம்புண்ணியம் என்பதெல்லாமே சுத்தப் பொய்."

ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தையே எடுத்துக் கொள்ளலாமே..அவனுக்கு இன்றைக்கு இருக்கிற செல்வம்,அந்தஸ்துஆள்பலம்செல்வாக்கு இதையெல்லாம் பார்த்தால்முந்தின பிறவியில் அவன் பெரிய ஞானியாகக் கூட இருந்திருக்க வேண்டும்.இப்போது அவனிடத்தில் அப்படி நல்ல விஷயங்கள் இருந்ததற்கான அடையாளம் எதுவுமே இல்லைஉண்மையைச் சொல்லப் போனால் அவனைவிட சுயநலக்காரனும்கிராதகனும் எவனுமே இல்லை."

"இந்த கர்மவினைபுண்ணியம் பாவம் இதெல்லாம் இல்லவே இல்லைஅந்தப் பொல்லாத பயல் கிருஷ்ணனின் பசப்பு வேலை மட்டுமேஎன்னை மாதிரி ஒன்றும் அறியாத அப்பாவிகளை மயக்க மட்டுமே ஏற்பட்டது."

"அடேய்பொல்லாத விஷமக்காரப் பயலேகிருஷ்ணாநீ பெரிய எத்தன்என் பக்கத்தில் வராத வரைக்கும் நீ பிழைத்தாய்நீ மட்டும் என் கையில் அகப்பட்டால்என்ன செய்வேன் தெரியுமாஉன்னைக் கட்டி வைத்துஎன் ஆத்திரம் தீறகிற வரை உதைப்பேன்நீ எப்படிப்பட்ட பொய்யன் என்பதை இந்த ஊரே தெரிந்து கொள்கிற வரை உதைப்பேன்உன்னை விட மாட்டேன்."

"நீ மட்டும் என் கிட்ட வந்து பார்....உன்னை என்ன செய்கிறேன் என்று....."

இப்படி ஹரி மோகன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்த சமயத்தில்அங்கே ஒரு ஒளிவட்டம் தோன்றியது.கருப்புத்தான்ஆனால் எவ்வளவு வசீகரம்மயிற்பீலி அணிந்த ஒரு சிறுவன் ஹரி மோகன் அருகே நின்றான்இடையில் அவனது புல்லாங்குழல்கால்களை ஒய்யாரமாக வளைத்து நின்ற படியே"இதோ வந்து விட்டேன்என்றான்.

ஏனோ,ஹரி மோகனுக்குத் தன்னுடைய நினைப்பின் மீதே வெட்கம் ..இந்த அழகான குழந்தையையா கட்டிப் போட்டு உதைக்க வேண்டும் என்று எண்ணினோம்...தன் மோசமான நினைப்பின் மேல் எழுந்த பச்சாதாபம் ஒருபுறம்இந்த சிறுவன் முன்னால் காட்டிக் கொள்வதா என்கிற வெட்கம் ஒருபுறம்..சிறுவனிடம், "இங்கு எதற்காக வந்தாய்?"என்றான்.

"எதற்காகவாநீ என்னைக் கூப்பிடவில்லைஎன் கிட்ட வந்து பார் என்று நீ தானே கூப்பிட்டாய்..அதுதான் வந்து விட்டேன்நீ ஆசைப் பட்டபடிகட்டி வைத்து உதைப்பாயோஉதைத்தபிறகு கட்டிப் போடுவாயோசெய்துகொள்."

கொஞ்சம் கூட தயக்கமில்லாமல்சிரித்துக் கொண்டே சிறுவன் சொன்ன வார்த்தையில் ஹரி மோகன் மயங்கி நின்றான். 'என்ன காரியம் செய்து விட்டேன்இந்த மோகனச் சிறுவனை அள்ளி அணைத்துக் கொஞ்ச வேண்டும் என்கிற நினைப்பில்லாமல்கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று நினைத்தேனேஎவ்வளவு பெரிய தப்பைச் செய்ய இருந்தேன்அடிமனது அரற்றஹரி மோகன் தலை கவிழ்ந்து நின்றான்.

"இங்கே பார் ஹரி மோகன்நான் தான் ஏற்கெனெவே வாக்குக் கொடுத்திருக்கிறேனே ..'யே யதா மாம் ப்ரபத்யந்தே..எவரெவர் எந்த முறையில் என்னை அணுக முயல்கிறார்களோ அதே முறையில் நான் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவேன்அதுதான்கோபமேலீட்டால்என்னை அடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாய்....உன் ஆசைப்படியே நானும் உன்னிடம் அடிபட வந்திருக்கிறேன்......ஆரம்பிக்க வேண்டியது தானே?"

"குட்டிப்பையாஎனக்கு ஒன்றுமே புரியவில்லை"

இதோ பார் ஹரி மோகன்எதற்காகத் தலை குனிந்து நிற்கிறாய்என்னைக் கண்டு பயப்படாதவர்களை எனக்குப் பிடிக்கும்என் மேல் தோழமை கொண்டுஎன்னைத் திட்டவும் அடிக்கவும் என்னோடு விளையாடவும் வருகிறவர்களை ரொம்பப் பிடிக்கும்.இந்த உலகத்தை எதற்காகப் படைத்தேன் என்று நினைக்கிறாய்ஒரு விளையாட்டிற்காகத்தான்என்னோடு விளையாடத் தயாராக இருக்கும் தோழர்களையே நான் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன்ஆனால் பார்அப்படிப்பட்ட தோழர்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை."

"எல்லோருக்கும் கோபம் வந்தால் அதை என்னிடத்தில் தான் கொட்டுகிறார்கள்அவர்கள் வேண்டுவதைஎல்லாம் நான் உடனே அவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும்செல்வம் வேண்டும்பதவி வேண்டும்நீண்ட ஆயுள் வேண்டும் இப்படி என்னிடத்தில் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்சில பேருக்குஉடனே மோட்சம் வேண்டும் இப்படி அவரவர்கள் வேண்டியதைக் கொடுக்கும் இயந்திரமாகவே என்னை நினைக்கிறார்கள்எனக்காகவே என்னை வேண்டுவார் ஒருவரும் இல்லைஎதையும் எதிர்பாராமல் என்னிடத்தில் அன்பு செலுத்துவார் எவரேனும் உண்டா என்று தேடிக் கொண்டே இருக்கிறேன்....சரிஅது கிடக்கட்டும்உனக்கும் எதோ என்னிடத்தில் வேண்டியிருக்கிறதல்லவாகோபத்தில் என்னைக் கட்டி வைத்து அடிக்க ஆசைப் பட்டாய்இதோ நான் வந்து விட்டேன்."

ஹரிமோகன் கொஞ்ச நேரம் தயங்கிப் பிறகு சொன்னான்:" கிருஷ்ணாமிகவும் அழகாகப் பேசுகிறாய்ஆனாலும்,உன்னுடைய நடவடிக்கைகள் எதுவுமே எனக்குப் புரியவே இல்லை."

உனக்குப் புரியும்படி சொல்கிறேன்கேட்பாயா?"

"நீயே சிறுவன்முளைத்து மூன்று இலை கூட விடாத சின்னப்பயல் எதை எனக்குப் புரிய வைக்கப் போகிறாய்என்ன கற்றுக் கொடுக்கப் போகிறாய்?"

"என்னால் என்ன முடிகிறதென்று பொறுத்திருந்து தான் பாரேன், ?" வசீகரிக்கும் புன்னகையுடன் அந்த சிறுவன் ஹரிமோகனுடைய உச்சந்தலையை லேசாகத் தொட்டான்.

ஹரி மோகனுடைய உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்ததுமூலாதாரத்தில் உறங்கிக் கிடந்த குண்டலினி ஐந்து தலை வெள்ளை நாகம் படமெடுத்து உயர்வது போலமூண்டெழு கனலாக உச்சிக்கு உயர்ந்தது.தேகமே நான் என்ற நிலை விடுத்துத் தன் இயல்பான சூக்கும சரீரத்தில் இருப்பதைக் கண்டான்பக்கத்திலேயே,கண்ணனும் இருந்தான்இருவரும்ஒரு பெரிய மாளிகைக்குள் இருப்பதை ஹரிமோகன் அறிந்தான்.

என்ன இதுஇது ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தின் வீடு அல்லவா?
ஒரு கவலையும் இல்லாமல் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகத் தான் நினைத்த அதே செல்வரங்கம்கிழடு தட்டி,விசனத்தோடுகண்களில் நீர் வழிய வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த போதுஆட்சி அதிகாரத்தோடு எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்த அதே செல்வரங்கம் தானா இதுஏன்ஒரு கோழிக் குஞ்சைப்போல நடுங்கிக் கொண்டிருக்கிறான்?

இந்த நிலையிலும் ஹரிமோகனுடைய பயம் போகவில்லையாராவது வந்து பிடித்துக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நையப் புடைத்து விடுவார்களோ?

"கிருஷ்ணாஎன்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறாயாசெல்வரங்கத்தின் செல்வாக்கு உனக்குத் தெரியாதாஅவனுடைய வேலைக்காரர்கள் நம்மைப் பிடித்து நன்றாக உதைக்கப் போகிறார்கள் பார்நம்மைத் திருடர்கள் என்று சொல்லப் போகிறார்கள்."

சிறுவன் கலகலவென்று சிரித்தான்," சொல்லிவிட்டுப் போகட்டுமேதிருட்டுப் பட்டம் எனக்குப் புதிதா என்னஅட,நீயேன் இப்படி நடுங்குகிறாய்காவல்காரர்கள் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன்இப்போது நீ செல்வரங்கத்தின் மனத்திற்குள் என்ன ஓடுகிறதுஏன் அவன் இப்படி இருக்கிறான் என்பதைப் பார்."

"அது எப்படி இன்னொருவர் மனதிற்குள்....." ஹரிமோகன் சந்தேகத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னாலேயே கிருஷ்ணன் விடையைச் சொல்லி விட்டான். "உனக்கு செல்வரங்கத்தின் செல்வாக்குஆள்பலம் இவைதானே தெரியும்கொஞ்சம் என்னுடையதையும் பாரேன்."

செல்வரங்கத்தின் மனதை ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போலஉள்ளிருக்கும் அனைத்தையும் பார்க்க முடிவதை ஹரி மோகன் உணர்ந்தான்செல்வரங்கத்தின் மனதில்பலவிதமான ஆசைகள்கோபங்கள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான்எவ்வளவு பணம் இருந்த போதிலும் போதாதுபோதாது என்று கூக்குரலிடும் பேராசை அவனை ஆட்டிப் படைப்பதையும்அவன் பணத்திலேயே குறியாக இருக்கும் உறவுநட்பு சுற்றத்தாரையும்,அவர்களால் கிலேசத்துடனும்ஆங்காரத்துடனும் செல்வரங்கம் தளர்ந்து போய் இருப்பதையும்அவனது ஆசை மகள் நடத்தை தவறிஊர்ப்பழிக்கு அஞ்சி அவளை வீட்டை விட்டு விரட்டி விட்டுஅந்த சோகத்திலேயே அழுதுகுமுறிக் கொண்டிருந்த செல்வரங்கத்தைப்  பார்த்த போது ஹரிமோகனுக்கு ஆச்சரியமாக இருந்ததுதவறுகளை உணரவோ,அதற்கு வருத்தப் படவோ அவன் தயாராக இல்லைநான் நான் என்ற மமதைஅவனை இறைவனை அழைப்பதைத் தடுத்துக் கொண்டிருந்ததுஇடை இடையேயம தூதர்கள்செல்வரங்கத்தை வந்து வந்து மிரட்டி விட்டுப் போவதையும்இத்தனைக்குப் பின்னாலும்உயிர் மேல் ஆசையால்செல்வரங்கம் ஒரு கோழிக் குஞ்சு துடிப்பதைப் போல பயத்தில் துடிப்பதையும் பார்த்தான்.

"கண்ணாஇவன் ரொம்ப சந்தோஷமாககவலையே இல்லாமல் இருக்கிறான் என்றல்லவா எண்ணி இருந்தேன்?என்ன ஆயிற்று இவனுக்கு?"

கண்ணன் சொன்னான், "என்னவோ செல்வரங்கத்துடைய செல்வாக்குஆள் பலத்தைப் பற்றிப் பேசினாயே,இப்பொழுது என்ன சொல்கிறாய்இவனுக்கு இருப்பதை விட செல்வாக்கும்பலமும் எனக்கிருப்பதை மறந்து விட்டாயாநானும் ராஜாவாகநீதிபதியாகதண்டிக்கும் காவலனாக இருக்க முடியும்இந்த விளையாட்டு உனக்குப் புரிகிறதா?"

ஹரிமோகன் உரத்துக் கூவினான்," அடக் கடவுளேஇது எனக்குப் பிடிக்கவில்லைமிகவும் கொடூரமாக அல்லவோ இது இருக்கிறதுஇதை ஒரு விளையாட்டு என்று லேசாக உன்னால் எப்படிச் சொல்ல முடிகிறது?"

ஷ்யாமசுந்தரன் உல்லாசமாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்: "எனக்கு எல்லாவிதமான விளையாட்டும் பிடிக்கும்.அடிக்கவும் பிடிக்கும்அடிபடவும் பிடிக்கும்உன்னைப் போலசெல்வரங்கத்தைப் போல எல்லோருமேஎதையும் மேலோட்டமாகவே பார்க்கப் பழகி இருக்கிறீர்கள்எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மையான தன்மையில் பார்க்கத் தெரிவதே இல்லைஎதனுள்ளும் இருக்கும் உண்மையை அறியக் கூடிய நுட்பமான பார்வை இல்லை.அதனால் தான்நீ ஒருவன் தான் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி இருப்பது போலவும்செல்வரங்கம் போன்றவர்கள் கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல்சந்தோஷமாக இருப்பதாகவும் தோன்றுகிறதுஆண்டவன் கல்நெஞ்சுக்காரன்இரக்கமே இல்லாமல்உயிர்களை இப்படி வதைத்துக் கொண்டிருக்கிறான் என்று கோபப் பட்டு,என்னை அடிப்பதற்காகவே இங்கு அழைத்திருக்கிறாய் இல்லையா?"

"இதோ பார் ஹரி மோகன்நீ கஷ்டப் படுவதாகவும்செல்வரங்கம் சந்தோஷமாக இருப்பதாகவும் நினைத்தாய் அல்லவாஇப்போது செல்வரங்கம் மனதில் எத்தனை வேதனையை தேக்கி வைத்திருக்கிறான் என்பதையும் பார்த்தாய் அல்லவாஉண்மையில்ஆனந்தம்சந்தோஷம் என்பது மனதின் ஒரு நிலைதான்அதே மாதிரித் தான் வேதனைதுயரம் எல்லாம்மனதின் உரு மாற்றங்கள் தான் இந்த மகிழ்ச்சியும்வருத்தமும்உண்மை என்னவென்றால்ஒன்றுமே இல்லாத ஒருவன்துர்வினையே முதலாகக் கொண்ட ஒருவன் கூட,இடைஞ்சல்கள்ஆபத்துகள் மத்தியில்நிம்மதியாகவும்மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

உன்னையே எடுத்துக் கொள்வரட்டுத் தனமான நல்வினைகளைச் சேர்ப்பதிலேயே நாட்களைச் செலவழித்து,கஷ்டங்களை நினைத்து வருத்தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாய்உன்னை மாதிரியே செல்வரங்கமும்,வரட்டுத் தீவினைகளையே செய்துமகிழ்ச்சியற்றிருப்பதையும் பார்அதனால் தான் நல்வினைகளால் நிலையற்ற கணப்பொழுதில் மறையும் சுகமும்தீவினைகளால் நிலையற்ற எளிதில் மறையும் துக்கமும்இன்னும் சில நல்வினகளால் நிலையற்ற துக்கமும்தீவினைகளால் நிலையற்ற சுகமும் கூட மாறி மாறி வருகின்றனஇப்படிப் பட்ட போராட்டத்தினால்நிலையானஉண்மையான ஆனந்தம் என்பதே கிடையாதுகிடைக்காது.

ஆனந்தமயமான இருப்பு என்னிடத்தில் இருக்கிறதுஎன்னிடம் வந்துஎன் மேல் காதலால் உருகிக் கசிந்துஎன்னைத் தேடிஎன்னிடம் அன்பு கொண்டு நெருக்கிஎன்னை வாட்டவும் துணியும் ஒருவனே என்னிடமிருந்து எல்லையற்ற மகிழ்ச்சியையும் பலவந்தமாகப் பறித்துக் கொள்கிறான். நானும் அவனிடத்தில் சந்தோஷமாகத் தோற்றுப் போகவும் தயாராக இருக்கிறேன்.

ஹரிமோகனுக்குத் தன்னிடத்தில் இருக்கும் குறை இன்னதென்று இன்னமும் புரியவில்லைஆனாலும்ஆர்வத்தோடு கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்க ஆவலாகக் காத்திருந்தான்.

பதிவு கொஞ்சம் நீ....ண்டு விட்டது, நாமும் கண்ணன் பெயரைச் சொல்லிக் கொண்டே கொஞ்சம் காத்திருப்போமா?


கண்ணன் வந்தான்-மாயக் கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கணடதும் கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!

நெடுநாட்களுக்கு முன்னால்புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடான All India Magazine இல் வெளியான ஒரு வங்க மொழிக் கதை.ஆசிரியர் பெயர் தெரியாதுஇதன் தமிழ்ப் பதிப்பு 'அகில இந்திய இதழ்என்ற பெயரில் வெளியாகிக் கொண்டிருக்கிறதுஏப்ரல் 2002 இதழில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளிவந்ததன் தழுவல்.மீள்பதிவு நான் ஏன் பிறந்தேன் என்ற முந்தைய பதிவு தூண்டிய தேடலில் ஹரிமோகனனுடன் நானும் சேர்ந்து தேடிய பகுதி இனி வரும்!