இட்லி வடை பொங்கல்! #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும்!

இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறது.


தமிழ்நாட்டை நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் ஜெய் ஹிந்த் சர்ச்சைப்புகழ் ஈஸ்வரன் கூட மாநிலத்தை மூன்றாகப் பிரிப்பது நல்லதுதான் என்று முன்பு பேசிய வீடியோ உலா வந்துகொண்டிருக்கிறது. 2015 ஆகஸ்ட் 17 தேதியிட்ட தினமலர் நாளிதழில் ஈஸ்வரன் அப்படிப் பேசிய  செய்தி வெளியாகி இருக்கிறது. 


இந்த 21 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த விஷயத்தை விரிவாக விளக்கியிருக்கிறார். என்னமோ ஸ்டாலின் அரசுக்கு விளையாட்டு காட்டத்தான் மத்திய அரசு தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்குகிறது என்பதெல்லாம் அதீத அலட்டல்.


ஊப்பீஸ் எதற்காகக் கதறுகிறார்கள் என்பது எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அரசியல் விமரிசகர் ஸ்ரீராம் சேஷாத்ரி  முகநூலில் இப்படி எழுதுகிறார்:

திரு. முருகன் பதவி ஏற்கும்போது, அவர் biodata வில் கொங்குநாடு என்று இருந்தது. இன்று தினமலர் நாளிதழில் கொங்குநாடு பற்றிய headline வந்துள்ளது. பலர் என்னிடம் உங்கள் அபிப்ராயம் என்ன, இது நடக்குமா, அப்படி நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கேட்டனர். என் புரிதலை பகிர்கிறேன்.

முதலில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது என்பது பல காலமாக எழும் கோரிக்கை, அதுவும் பாட்டாளி மக்கள் கட்சி வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கை வெறும் அரசியல் கோரிக்கை மட்டுமே. எப்படியாவது ஒரு மாநிலம் தங்கள் ஆட்சியின் கீழ் வராதா என்ற எண்ணம் மட்டுமே.

தென் தமிழ்நாடு, பொருளாதார ரீதியில் கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு வளரவில்லை, முக்கியமாக தொழில்சாலைகள், உள்கட்டுக்குமானம் போன்றவை கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு தென் தமிழ்நாட்டில் இல்லை. திருச்சிக்கு தெற்கே கோவில்பட்டி, சிவகாசி போன்ற இடங்களில் இருந்த பட்டாசு மற்றும் பிரிண்டிங் தொழில் நசிந்து பல வருடங்கள் ஆகிறது, அதனை விரிவாக்க முயற்சி எந்த அரசாங்கமும் எடுக்கவில்லை. தூத்துக்குடி, கன்னியாகுமரி  மாவட்டத்தில் இருந்து தொழில்சாலைகளும் ஒன்று மூடப்பட்டன (sterlite ஒரு உதாரணம்) அல்லது புது தொழில்சாலை அல்லது சரக்கு துறைமுகம் வருவதை கிறிஸ்துவ மிஷனரிகள் தடுத்து வருகின்றன. 

இப்படி இருக்கையில், திமுக இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாகும் முயற்சியில் ஒன்றிய அரசு, ஜெய் ஹிந்து போன்ற சட்டசபை நிகழ்வுகளில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசி வருகின்றன.

பாஜக அவர்களுக்கு வலுவான கொங்கு மண்டலத்தை மேலும்  ஸ்திரப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக, முருகன் அவர்களை மத்திய மந்திரியாகி, அண்ணாமலை அவர்களை தமிழ்நாடு பாஜகவின் தலைவராக்கி, மேலும் வானதி ஸ்ரீனிவாசன் அவர்களை முக்கியப்படுத்தி வருகிறது.இப்போது கொங்குநாடு என்ற முழக்கம் அரசியலாக இருந்தாலும், இந்த விதையை விதைப்பது கண்டிப்பாக பல விளைவுகளை ஏற்படுத்தும்

1. தமிழ்நாட்டில் நிர்வாகம் தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்படும், இப்படி ஒரு பகுதி அதுவும் 40% மேல் வருவாய் கொடுக்கும் பகுதி பிரிந்தால், தமிழ்நாடு, முன்னேற தென் தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்து முனையவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

2. அரசியல் ரீதியாக கொங்கு மண்டலத்தில் திமுக வலுவாக இல்லாததனால், அங்கு அதிமுக பாஜக நேரடியாக அரசியல் செல்வாக்கு உள்ள கட்சியாக மாறும்

3. பிற மாவட்டங்கள் உள்ள தமிழ்நாட்டில், திமுக அதிமுக மட்டுமே வலுவான நிலை ஏற்படும்.

4. நிர்வாக ரீதியாக, சிறிய மாநிலங்கள் என்ற அடிப்படையில் சுலபமாக இருக்கும்

இந்த பிரிவு அரசியல் சட்டம் சார்ந்து, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் சாத்தியமா என்றால் சாத்தியமே. ஆனால் உடனே நிகழுமா என்றால் மத்திய அரசாங்கம் முனைதால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற முடியும்.

இப்போது நமக்கு தெரியவேண்டிய ஒன்று, பாஜக இதனை திமுகவின் ஒன்றிய அரசின் கோஷத்துக்கு எதிர்வினையாக எடுத்துள்ளதா அல்லது நிஜமாகவே முயல்கிறதா என்பதுதான்.ஆனால் திமுக மத்திய அரசை சிறுமை படுத்துவதாக எண்ணி, ஒன்றிய அரசு என்று கிளப்பிவிட்டு, இந்த மாநில சீரமைப்புக்கு வழி வகுத்து விட்டதா என்றும் யோசிக்கவைத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே திமுகவினர் ஒன்றிய அரசு என்பதை சொல்ல முயலவில்லை கவனிக்கத்தக்கது 

ஒரு தெளிவான புரிதல் என்றே எனக்குப்படுகிறது. எது எப்படியானாலும், திமுகவின் வாய்ச்சவடாலில் கூட ஒரு நல்லது நடக்கப்போகிறது என்பதில் மகிழ்ச்சி.

மீண்டும் சந்திப்போம்.

12 comments:

  1. தமிழ்நாட்டைப் பிரிப்பதா? என்ன விபரீதம்?

    ReplyDelete
    Replies
    1. இதில் விபரீதம் என்ன இருக்கிறது ஸ்ரீராம்? நிர்வாக வசதிக்காக இப்படிப் பெரிய மாநிலங்களை பிரிப்பது சகஜம் தான்! ஆனால் தினமலர் செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியவில்லை, அதுவேறு விஷயம்.

      Delete
  2. மேலோட்டமாக பார்த்தால் மாநிலத்தை பிரிப்பது கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை மக்களிடையே அதிகரித்துவிடும். ஒருகாலத்தில் ஆந்திரமும் தமிழகமும் ஒரே மாநிலமாக இருந்தது என்றால் இப்போது நம்பவே முடியவில்லை. முதல் சிலவருடங்கள் நன்றாக இருப்பது போல தோன்றினாலும் (மத்யபிரதேசத்திலிருந்து பிரிந்த சத்திஸ்கர் , பீஹாரிலிருந்து பிரிந்த ஜார்கண்ட், ஆந்திராவிலிருந்து பிரிந்த தெலுங்கானா) நாளடைவில் பிரிவுகள் அதிகரித்துக்கொண்டே போகும். இது சரியா என்று தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. இன்றைக்கு தமிழகத்தில், 2500 கோடி ரூபாய் செலவழித்து சென்னையில் பூங்காக்கள் அமைப்போம் என்று அமைச்சர் சொல்கிறார். ஏன் நெல்லையிலும், தூத்துக்குடியிலும், தஞ்சை திருச்சியிலும் எந்தத் தொழிற்சாலைகளும் அல்லது மேம்பாடுகளும் செய்யப்படவில்லை? கூட்டுக் குடும்பமாக இருப்போம், மூத்த மகன் மட்டும் நன்றாக அனுபவிப்பான், மத்தவங்கள்லாம் வேலை மாத்திரம் செய்யுங்கள், அரசியல் செய்யுங்கள்..மற்றபடி எதையும் கேட்கக்கூடாது என்பதா நாட்டுக்கு நல்லது?

      Delete
    2. மாநிலங்களைப் பிரிப்பது ஜனங்களுக்குள் இடைவெளியை அதிகரித்துவிடும் என்பது கொஞ்சம் அதிகப்படியான அனுமானம் மட்டுமே, பந்து! 1956 இல் மொழிவாரி மாகாணங்களாகப் பிரித்தபோது சில முன்னெச்சரிக்கைகளும் இருந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் போனதன் கசப்பான விளைவுகள் இன்றும் இருக்கத் தான் செய்கின்றன. தெலங்கானா, அவசரம் அவசரமாக சோனியா பிறந்தநாளில் பிரிக்கப்பட்ட பானாசீனாவின் முட்டாள்தனம், காங்கிரஸ் கட்சி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் காணாமல் போகச்செய்ததை இந்தப்பக்கங்களிலேயே எழுதி இருக்கிறேன்.

      பிரிப்பது என்பதை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்பதிலேயே பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்கிற தெளிவும் வேண்டும்.

      Delete
    3. நெல்லைத்தமிழன் சார்! இந்தமுறை திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போவது தெரிந்தும் உங்களுடைய ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறீர்கள்! என்ன சொல்லட்டும்?

      Delete
  3. கொங்குநாடு தனியாகப் பிரிப்பது வரவேற்கத்தக்கது. இது தமிழக வளர்ச்சிக்கு மேலும் வித்திடும். இப்போது அரசு, கொங்குப் பகுதி வருவாய்களை சென்னை போன்ற பெருநகரங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறது. தென் தமிழகத்தில் எதையுமே வளர்ச்சித் திட்டங்களாக வர விடுவதில்லை.

    என்னைக் கேட்டால், கொங்குநாடு (கோவை நகரமாக), பாண்டிய நாடு (திருச்சியிலிருந்து கீழாக, மதுரை தலைநகராக), தமிழகம் (அல்லது வடநாடு) என்று மூன்றாக தமிழகத்தைப் பிரிப்பது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. சிறிய மாநிலங்களாகப்பிரிப்பதில் நிறைய அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் ஒரு நிதானமான அணுகுமுறையுடன் செய்யப்பட்டால் நல்லது. வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் செய்தால் சரியாக இருக்காது.

      ஒரு பாண்டியநாட்டானாக எனக்கும் தென்தமிழ் நாடு என்று மாநிலம் அமைந்தால் சந்தோஷமே! கூடவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மிஷனரிகளுடைய குடைச்சலும் சேர்ந்தே வருமே என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

      Delete
  4. // கூடவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மிஷனரிகளுடைய குடைச்சலும்..//

    ஓ!..

    கன்னி மேரி மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்ய முயற்சி செய்ததாக அப்போது செல்வார்கள்..

    நல்லவேளை - விவேகானந்தர் பாறை காப்பாற்றப்பட்டது!...

    ReplyDelete
    Replies
    1. 80ல், பள்ளி கல்லூரி பாதிரியார்கள் கன்னிமேரி மாவட்டம் என்றுதான் அழைப்பார்கள், அவர்களது internal meetings லயும், தமிழகத்தை 52கிறிஸ்துவ மாவட்டங்களாகத்தான் பிரித்து அதன்படி திட்டமிடுவார்கள்

      Delete
    2. கிறித்தவ அக்குறும்புகளைப் பற்றிப் பேசுவதானால் வால்யூம் வால்யூமாக எழுத வேண்டும் துரை செல்வராஜு சார்! விவேகானந்தர் பாறையில் ஒரு சிலுவையை நட்டுவைத்து உரிமை கொண்டாட முயற்சித்ததில் அன்றைய பக்தவத்சலம் ஆட்சி பொறுப்பாக நடந்துகொண்டு மீட்டது.

      திராவிடத்தின் விஷ வேர்கள் திருநெல்வேலி தூத்துக்குடி கன்யாகுமரி கிறித்தவ மிஷனரிப் பிடிமானம் கொண்டவை. பிரிவினையைத் தூண்ட இவர்களே பின்புலமாக இருந்து வருகிறார்கள்.

      நெல்லைத்தமிழன் சார்! இன்னும் நம் மாநிலத்து மக்கள் சுற்றி வரும் பகையை தெரிந்துகொள்ளாமலேயே இருக்கிறார்களே, என்ன செய்ய?

      Delete
  5. தமிழகம் துண்டாடப்படுவதால் அதிக பட்சம் என்ன நடக்கும்? புதிய தலைநகரை நிர்மாணம் செய்வதற்காக ஏக்கர் கணக்கில் விளை நிலங்கள் பிடுங்கப்படும். கோடிக்கணக்கில் மக்கள் பணம் செலவாகும். அதற்கு தனியாக தமிழ்த்தாய் வாழ்த்து போல கொங்கு தாய் வாழ்த்து, தனி லோகோ,மற்றபடி அதே ஊழல்தான் தொடரும். நினைச்சால் இப்பவே கண்ணை கட்டுது..உஸ்..!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!