Showing posts with label கட்டற்ற சுதந்திரம். Show all posts
Showing posts with label கட்டற்ற சுதந்திரம். Show all posts

ஒரு புதன்கிழமை! ஆனால் அந்தப் புதன்கிழமை அல்ல!

ஒரு புதன்கிழமை! 
The scene of the stabbing attack in Tel Aviv, January 21, 2015.
இஸ்ரேல் டெல்அவிவ் நகரத்தில்  இன்று ஒரு 23 வயது பாலஸ்தீனிய இளைஞன் நடத்திய கொலைவெறித்தாக்குதலில் 12 பேர் குத்தப்பட்டனர். ஹமாஸ் இயக்கம் இந்த இளைஞனுடைய கிறுக்குத்தனத்தை வீரச் செயலாகப் பாராட்டியிருக்கிறது மேலும் செய்திகள் இங்கே 

இது இங்கே வீடியோ செய்திகளாக  
 

Peaceful Co existence அமைதியாக ஒருவரை ஒருவர் அங்கீகரித்து வாழும் பக்குவம் வருகிற வரை பாலஸ்தீனியர்களுக்கும் சரி வெறுப்பில் எரியும் வஹாபியர்களுக்கும் சரி விடிவுகாலம் இல்லை என்பது ஏனோ இங்கே பலருக்குப் புரிய மாட்டேன் என்கிறது.
******

கொலைவெறி பிடித்தலையும் மனிதர்களையே பேசிக்கொண்டிருந்தால் எப்படி?

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில்அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்கள் அன்புடன் ‘பிரியாணி பாபா’ என்றழைக்கின்றனர். இவரது குருவான காதர் பாபா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறதுஇவரது சிஷ்யரான பிரியாணி பாபா, குருவின் நினைவாக தினந்தோறும் அவரது தர்காவின் அருகே ஏழை பக்தர்களுக்கு பாசுமதி அரிசி, கோழி, ஆடு இறைச்சிகளால், நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இவரது பக்தர்கள் வழங்கும் நன்கொடையிலிருந்து ஏழைகளுக்கு பிரியாணி வழங்கப் படுகிறது என்று உயிர்க்கருணையுடன் சேவை செய்து வரும் ஒரு மகத்தான மனிதரைப் பற்றிய செய்தி இங்கே 

****** 

ஒரு புதன்கிழமை என்று தேடினால் இப்போதும் கூட 2008 இல் வெளியான A Wednesday திரைப்படம் தான் முன்னுக்கு வந்து நிற்கிறது. உன்னைப்போல்  ஒருவன் என்று தமிழில் கமல்ஹாசன் ரீமேக் செய்த போது ஏகத்துக்கும் சர்ச்சைகள் ரகளைகள் இணையத்தில் நடந்த பழைய கதை இப்போதும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது போல!


இப்படி ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை சிங்கைப்பதிவர் பிரபு இணையத்தில் பகிர்ந்து
கொண்டிருப்பதை இன்று புதன்கிழமை கண்ணில் பட்டது. கமல்ஹாசன் மீதான பழையபாசம் இன்னும் விட்டுப்போகவில்லை தொட்டுத் தொடருகிறது என்பதைப் புலப்படுத்துவதாக.

அது போக நடப்பு நிலவரத்தில் என்னமோ  பெருமாள் முருகன் என்கிற ஒற்றைப்புள்ளியில் தான் தமிழ்நாடே கூடிக் கொந்தளிக்கிற மாதிரி ஊடகங்களில் வருகிற செய்திகள், குறிப்பாக இன்று வந்திருக்கும் இந்தச்செய்தி Tamil Nadu Rallies in Support of Novelist
புதன்கிழமை காமெடியாக!

போதுமா? :-))))

சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #3 மாதொரு பாகன்! சிவப்புச்சேலை! எம்ஜியார்!

 குளிருக்கு இதமாக #மிளகுப்பொங்கல் முதலாவதாக 

பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் புத்தகம் குறித்தான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.தி ஹிந்து நாளிதழ்  முதற்கொண்டு   இணையத்தில் சவுண்டு விடுகிற இணையப்போராளிகள் வரை இன்னும் இந்தவிஷயத்தைப் பெரிய சர்ச்சையாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அனல் தெறிக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ரிசல்ட் என்னவோ பூஜ்யம் என்பது தெரிதிருந்தாலுமே கூட, இந்தப் புத்தகத்தை வைத்துக்கொஞ்சம் அரசியல், பிஜேபிக்கு எதிராகவும், ஜெயலலிதா முதல்வராகத் தொடர்ந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்றும் ஆர்டிஓ விசாரணை வெறும் கட்டைப்பஞ்சாயத்தாக  நடந்து பெருமாள் முருகனை சும்மாமிரட்டி எழுதுவதிலிருந்தே விரட்டிஅடித்திருப்பதாகவும்  தொடர்ந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

தி ஹிந்து நாளிதழ் கூட கருத்து சுதந்திரத்துக்காக நேற்றைய இலக்கிய  விழாவில் தனி அமர்வே நடத்தியிருப்பது இந்த விவகாரத்தின் உச்சபட்சக் காமெடி 
நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் பதினான்காம் நாள் திருவிழாவின் போது அந்தப் பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சாதிப் பெண்களில் குழந்தை இல்லாதவர்கள் விழாவுக்கு வந்து அங்கே தென்படும் ஆண்களில் தனக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுத்து அவரோடு உடல் உறவு கொண்டு கருத்தரிப்பார்கள்; அதுவே அங்கே பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பழக்கம் என்று எழுதியிருக்கிறார்.  கதையின் கருவே அதுதான்.  கதை முழுக்கவே அதுதான்.  காளி, பொன்னா இருவரும்  ஜோடி.  திருச்செங்கோடு பக்கத்தில் உள்ள கிராமம்.  பொன்னாவுக்குக் குழந்தை இல்லை.  ஊர் அவளைக் கேலி பேசுகிறது.  நாவலின் 190 பக்கத்தில் 180 பக்கம் அந்தக் கேலி தான் தமிழ் சினிமா பாணியில் விவரிக்கப்படுகிறது.  சுகன்யாவை நினைத்துக் கொள்க.  கடைசி பத்து பக்கத்தில் பொன்னாவை அவளுடைய தாயும், மாமியாரும் பதினான்காம் நாள் திருவிழாவில் யாரோ ஒருத்தனுக்குக் கூட்டிக் கொடுக்கிறார்கள்.  நான் சொல்லவில்லை சாமி.  பெ. முருகனின் கதாநாயகன் காளிதான் அப்படிச் சொல்லி விட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான்.  சுபம்.  
இப்படி ஒரு கயவாளித்தனமான கற்பனையை பெ. முருகன் பிற சாதிகளை வைத்து எழுத முடியு0ா000ி0000த்துப் பெண்களை வைத்து  இப்படி எழுத முடியுமா?  அப்படியிருக்க ஒரு சாதி பற்றி மட்டும் இவர் எப்படி எழுதலாம்?  கவுண்டர் சாதியில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது என்பதற்கு என்னய்யா ஆதாரம் என்று கேட்டால் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கதை அளக்கிறார் முருகன்
 என்று இங்கே எழுத்தாளர் சாரு நிவேதா  சொல்லியிருப்பதும் ஜெயமோகன் அதை ஆமோதித்து மாதொருபாகன் ஒரு வகையான ‘அமெச்சூர்’ எழுத்து. எவ்வகையிலும் இலக்கியத்தகுதி கொண்டது அல்ல. அது எழுதப்பட்டதிலும் தமிழின் முக்கியமான பெரும்படைப்புகள் இருக்க அது சுடச்சுட மொழியாக்கம் செய்யப்பட்டதிலும் உலகம் முழுக்க கொண்டு ோகப்பட்டு தமிழிலக்கியமும் வாழ்க்கையும் இதுதான் என்று காட்டப்பட்டதிலும் உள்ள தந்திரங்கள் எரிச்சலூட்டுவதுதான். என்று இங்கே சொல்லியிருப்பதும் சரியான பார்வைதான்! ஆனால் தனக்கு சௌகரியப் படாத தருணங்களில் பதிவையே நீக்கி விடுவது ஜெயமோகன் வழக்கம் என்பதைப்புரிந்து கொண்ட வாசகர் ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டிருக்கிறார். 

ஒரு சாதாரண மனுஷியாக ஒரு பெண் தன்பெயரைச் சொல்லாமல்முகநூலில் சொல்லியிருக்கும் இந்தக் கருத்து, கருத்து சுதந்திரம் அது இது எதுவென்று ஏதும் புரியாமல் பொங்கிக்கொண்டிருப்பவர்கள் செவிளில் அறைகிற மாதிரி அந்தப்பக்கத்து மக்களுடைய ஆதங்கம் வேதனை கோபம் கொந்தளிப்புக்கான நியாயத்தைச் சொல்கிறது.


பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டிருப்பவர்களுடைய உண்மையான நோக்கம் எழுத்தாளனை, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பது அல்ல என்பது தெளிவாகிக் கொண்டிருக்கிறது. பெருமாள் முருகனைப் பாதுகாப்பது என்று முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருப்பது கூட உண்மையில் அவரையோ, அவரது எழுத்தையோ பாதுபாப்பதாக இல்லை என்பதுதான் இப்போதைய காரசாரமான மிளகுப்பொங்கல் 
********
சிவப்புச்சேலை!மிரளும் காங்கிரஸ் என்று இந்தப்பக்கங்களில் நான்காண்டுகளுக்கு முன்னால்  எழுதியிருந்தேன்! நினைவிருக்கிறதா? 


படிப்பின்வாசனையே  நேரு குடும்பத்தில் மோதிலால் நேருவுக்குப் பின் எவருக்கும் அதிகமாக இருந்ததில்லை.குறிப்பாக இந்திராவின் வாரிசுகளுக்கும் படிப்பு வாசனைக்கும் கொஞ்சம் கூட ராசியே இருந்ததில்லை. ஆட்சியில்  இருந்தபோது ராஜாகாது கழுதைக்காது ரகசியமாகப் பாதுகாக்கப் பட்டதும்  ஆட்சியை இழந்தபோது அந்தரங்கங்கள் புத்தகங்களாக வெளிவந்து போட்டுத்தாக்குவதுமாக அப்படி ஒரு ராசி. ஜேவியர் மோரோ என்ற  எழுத்தாளர் எழுதிய புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் பார்த்துக் கொள்ளப் பட்ட  கதை லிங்கில் இருக்கிறது. இப்போது அதற்கென்ன என்கிறீர்களா? தடையைத்தகர்த்து இப்போது இந்தப்புத்தகம் இந்தியாவிலும் வெளியிடப்படுகிறது.அவுட்லுக் வார இதழில் வந்த புத்தக ஆசிரியரின் பேட்டி இங்கே!  பதிப்பகத்தின் சார்பில் ட்விட்டர் அறிவிப்பு இங்கே!!


.
புத்தகம் வந்து என்னத்தையோ புரட்டிப்போடப்போகிறது என்று எதிர்பார்க்க வேண்டாம், அந்தோனியோ மைனோ  மாதிரியே புத்தகமும் சாதாரணம் தான்! அது வெளிப்பட்டுவிடக் கூடாதே தியாகசிகரம் பில்டப்  கலைந்து விடக் கூடாதேஎன்று அந்த நாட்களில் மிரண்டார்கள், அவ்வளவுதான்! இப்போது மிரட்டுவதற்கு வேறு விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றனவாம்!

********
ஜனவரி 17! மக்கள்திலகம் எம்ஜியார் பிறந்த தினம். வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் கடவுளாகவே கொண்டாடப்படுகிற அளவுக்கு இவரிடம் அப்படி என்னதான் இருந்தது? நடிகர் சிவகுமார் கொஞ்சம் சொல்கிறார். பழசுதான், ஆனாலும் இன்றைக்கும் இந்த மூன்றெழுத்து கருணாநிதியை திமுகவை மிரட்டிக் கொண்டிருக்கிறது கொஞ்சம் கேட்போமா?


மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒருமாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று போற்றிப்புகழ வேண்டும்

****** 





=====

ஜின்னாவுக்கு வந்த வாழ்வு! மவுசு!


இன்றைக்கு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில், சுதீந்த்ர குல்கர்னி என்பவர், ஜஸ்வந்த் சிங் பி ஜெ பி கட்சியில் இருந்து நீக்கப் பட்டிருப்பது, கட்சியை வெகு நாட்களுக்கு பிடித்து ஆட்டப் போகிறது என்ற ரீதியில் [கவிஞர் தாமரை மாதிரி சாபம்?!] எழுதியிருப்பதைப் படித்தேன்.

கதை சொல்வார்களே, வைத்தியனிடம் போய் ஒருத்தன், எனக்கு அது செய்கிறது இது செய்கிறது என்று சொன்னானாம். வைத்தியனும் நாடி பிடித்துப் பார்த்து விட்டு, ஒரு கஷாயத்தைக் கொடுத்தானாம். பத்தியம் என்ன என்று கேட்டதற்கு, வேறொன்றுமில்லை, மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது, அது மட்டும்தான் என்றானாம்.

மருந்து சாப்பிட ஆரம்பிக்கும் போதே, எதை நினைக்கக் கூடாது என்று வைத்தியன் சொன்னானோ, அதுவே தான் வந்து முன்னால், பின்னால், அங்கே இங்கே, என்று எங்குபார்த்தாலும் தெரிந்ததாம். வைத்தியனிடம் ஓடிப்போய், மருந்து சாப்பிட நினைக்கும் போதெல்லாம், எனக்கு முன்னால் குரங்கு வந்து ஆட ஆரம்பித்து விடுகிறது, அப்புறம் எப்படி நான் மருந்து சாப்பிடுவது, எப்போது வியாதி குணமாவது என்று அழாத குறையாகக் கேட்டானாம். வைத்தியன் சிரித்துக்கொண்டே சொன்னானாம், "உனக்கு வியாதி உடம்பில் இல்லை, மனதில் தான் இருக்கிறது, மனதை ஒழுங்காக வைத்துக் கொண்டாலே குரங்கு ஓடிப் போய் விடும்"

பி ஜெ பி கட்சியின் நிலைமை கூட அப்படித்தான், குரங்குப்பத்தியம் இருந்தவன் கதை மாதிரி இன்று அல்ல, ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. அவர்களுக்குப் பாடம் சொல்லிகொடுத்த ஆர் எஸ் எஸ் வாத்திமார்களுக்கே அந்தக் கோளாறு இருப்பதால், அவர்களைப் பொறுத்த வரை இந்திய வரலாறு, பாபர், அக்பர் ,ஔரஙக ஸீப், மாலிக் காபுர், அவர்களோடேயே நின்று போய் விடுகிறது. இன்னமும் என்றோ படையெடுத்து வந்த முசல்மான் தான் பகைவனாகத் தெரிகிறான்!

அதற்கப்புறம் உள்ளே நுழைந்த வெள்ளையர்கள் சத்தமே இல்லாமல் இந்ததேசத்தைக் கூறுபோட்டுக் கொன்டிருந்ததை, அதன் மிச்ச சொச்சம் இன்னமும் தொடர்ந்து கொன்டிருப்பதை ஆர் எஸ் எஸ், அதனுடைய கண்ண‌சைவிலேயே ஆட்டுவிக்கப் படும் கட்சியும் இன்னமும் புரிந்து கொள்ள‌வில்லை. இதை ஏற்கெனெவே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.



முசல்மான்கள் இல்லையென்றால் பிரச்சினையும் இல்லை என்று ஆர் எஸ் எஸ் காரர்கள் நினைப்பது மாதிரியே இந்துத்வா இல்லையென்றால் பிரச்சினையே இல்லை என்று மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஆகி விட்டது!

ஒரு நம்பிக்கையுள்ள ஹிந்துவாக இருப்பது வேறு! ஆர் எஸ் எஸ் பேசுகிற இந்துத்வா வேறு என்பது கூடப் புரியாமல், மதச்சார்பின்மை என்றால் ஹிந்துக்களை மட்டம் தட்டுவது, சிறுபான்மையினர் நலம் பேணுவது என்றால் பெரும்பான்மையினரைப் புற‌க்கணிப்பது, முற்போக்குச் சிந்தனை என்றால், வரலாற்றைத் திரித்துப் பேசுவது இப்படி எதிர் மறையான சிந்தனைகளையே வளர்க்கும் ஒரு சமூகம் எப்படி இருக்கும்?

ஜஸ்வந்த் சிங் எழுதியிருக்கும் புத்தகம் குஜராத் மாநிலத்தில் தடை செய்யப் பட்டிருக்கிற‌து. குஜராத்மாநிலத்தில் பிற‌ந்த வல்லபாய் படேல் புகழுக்குக் களங்கம் க‌ற்பிப்பது போல இரூக்கிறதாம்!

காங்கிரஸ் கட்சி பேச்சு சுதந்திரம் இதனால் தடைப் பட்டது போல‌ நீலிக் க‌ண்ணீர் வடித்திருக்கிறது! ஏதோ அவர்கள் கட்சியில் பேச்சு சுதந்திரம் இருப்பது போல, காமெடி செய்திருக்கிறார்கள்! சிறுபான்மையினர் மனம் புண்படுமே என்று இவர்களாகவே ஊகம்செய்து, சில புத்தகஙகளைத் தடை செய்த முட்டாள்தனம் சௌகரியமாக இப்போது மறந்து போய் விட்டது!

பி ஜெ பி கட்சியில், சிந்தன் பைடக் என்று, தேர்தலில் ஏன் தோற்றோம் என்று ஆராயப் போனவர்கள் கார‌ணங்களைக் க‌ண்டுபிடித்து விட்டார்கள்! மோடி, ஜெட்லி, வருண் காந்தி இவர்கள் மூவரும் பொறுப்பற்ற முறையில் பேசினது தானாம்! அங்கே, நடவடிக்கை இல்லை, இன்னமும் எவரும் படித்தே பார்க்காத புத்தகத்தை எழுதியதற்காக, கட்சியிலிருந்து நீக்கம்! ரொம்ப வினோதமான கட்சிகள்தான்!

குஜராத் மாநில காங்கிரஸ் தலைமை, தடை செய்ததை எதிர்ப்பதா, ஆதரிப்பதா என்று சுயமாக முடிவு செய்ய முடியாமலும், மேலிடத்தில் இருந்து சிக்னல் வராததால் என்ன செய்வது என்பதிலும் குழம்பிப்போயிருக்கிறது. ஜின்னாவுக்கு வந்த இந்த திடீர் மவுசு,வாழ்வில், இணையத்தில் சாரு-ஜெமோ சண்டையைப் பற்றிப் பதிவு போட்டால் ஹிட்ஸ் கூடும் என்று செண்டிமெண்ட் இருப்பது போல, ஜின்னாவைப் பற்றி 1961 இல எழுதிய கட்டுரையைத் தூசு தட்டி, ஹிந்து நாளிதழ் நேற்றைக்கு வெளியிட்டிருக்கிறது.. சரிந்துவரும் சர்குலேஷனை ஜின்னாவைப் பற்றி எழுதினாலாவது தூக்கி நிறுத்த முடியுமா என்று பார்ப்பது போல இருக்கிறது.

அதே நேரம்,கர்நாடக மாநிலத்தில் இந்தப் புத்தகத்தைத் தடை செய்யும் எண்ணம் இல்லை என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். பாரதீய ஜனதாக் கட்சி, சிறிது காலம் ஆட்சியில் இருந்ததில் காங்கிரசைப் போலவே, இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் முடிவு சொல்கிற கலையைக் கற்றுக் கொண்டிருப்பது இதில் இருந்து நன்றாகப் புலனாகிறது. இதைக் கூடப் பொறுக்க முடியாத ஹிந்து நாளிதழ், சசி தரூர் பத்து வருடங்களுக்கு முன்னால் நேரு குடும்பத்தை விமரிசித்து எழுதிய் புத்தகத்தை, காங்கிரஸ் எவ்வளவு பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டிருக்கிறது, அவருக்கு மந்திரி பதவியும் கொடுத்திருக்கிறது என்பதைப் பெருமையோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறது!

எல்லாம், ஈயத்தைப் பார்த்து பித்தளை இளிக்கிற‌ கதைதான்!

தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள், எமெர்ஜென்சி காலத்தை ஒட்டி, கணக்கன் என்ற‌ புனைபெயரில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி, ஜனநாயக முறையில் வெவ்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப் படும் தேர்தல் முறைகள், அதில் உள்ள‌ சாதக,பாதக‌ங்களைப் பற்றி, தொடர் கட்டுரைகளாக எழுதிவந்தது, பின்னால் தினமணி கதிர்வெளீயீடாகப் புத்தக வடிவிலும் வந்தது, இன்றைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாகவும், அவசியமாகவும் இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

வெஸ்ட்மின்ஸ்டெர் மெதட் எனப்படும் பிரிடிஷ் பாராளுமன்ற தேர்தல்அமைப்பில் இருக்கும் மிகப் பெரிய குறையே, ஜெயித்தவன் தோற்றவனுடையதையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறான் என்பதுதான்.

இந்த முறையை மாற்றி, கட்சிகள் தனித் தனியாக வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எண்ணிக்கையை முடிவு செய்வது என்று வந்தாலொழிய, தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு வயது உச்சவரம்பு, அறுபது அல்லது அறுபத்தைந்து தான் அதிகபட்சம் என்று வைத்துக் கொள்ளலாமே, ஒரே நபர் இரண்டு தடவைக்குமேல், மந்திரியாகவோ, அதற்கு உயர்ந்த பதவியிலோ இருக்க முடியாது என்று மாற்றிப் பார்த்தாலே, அரசியல் வியாதிகளை முழுவதுமாகத் தடுக்க முடியாது தான், தொற்றுநோயாகப் பெருகுவதையாவது தவிர்க்க முடியும்!

கல்லறைக்குள் போவது வரை இந்திய அரசியல்வாதிகள் ஒய்வு பெறுவதில்லைதான்!

அவர்களாக ஒதுங்கவில்லைஎன்றால்,கட்டாய ஒய்வு கொடுத்துப் பார்க்கிற ஒரு முயற்சியைச் செய்து தான் பார்ப்போமே!

என்ன சொல்கிறீர்கள்!

சும்மா வந்ததில்லை இந்த சுதந்திரம்!


இங்கே இணையத்தில் நிறையப்பேர் சுதந்திரத்தைப் பற்றி அவர்களுடைய பார்வையில் பட்டதை எழுதியிருக்கிறார்கள்! அவர்களுக்காக ஒரு படக் கதை!

சுதந்திரம் என்பது தோட்டம் தான்! பூச்செடி வைத்துப் பூக்கள் மலர்வதோ.
களர்நிலமாக்கி ஒன்றுக்கும் உதவாமல் செய்வதோ உன்கையில் தான் இருக்கிறது!
தோழர் கே. வரதராஜனுக்குத் தயிர் வடை மீது கொள்ளைப் பிரியம்! அதே மாதிரி, அடிக்கடி பிரியமாகச் சொல்வது, ஒரு ஆங்கிலப் பழமொழியை:, "நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டில் ஏறிச் சென்றே நரகத்துக்கும் போகலாம்!"

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணங்களை நினைத்துப் பார்க்கிறபோது தோழர் வரதராஜன் சொல்கிற இந்த ஆங்கிலப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. முந்தைய பதிவில், சும்மா வந்ததில்லை இந்த சுதந்திரம் என்ற தலைப்புக் கொடுத்தபோதே, சுமைகளோடு வந்தது தான் இந்த சுதந்திரம் என்ற அர்த்தமும் தொக்கி நின்றதை உங்களில் பலர் சரியாகக் கவனித்திருக்கக் கூடும்!

ஜஸ்வந்த் சிங், பி ஜெ பி கட்சியில் முக்கிய தலைவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இவருக்கும் வசுந்தரா ராஜேக்கும் நடந்த நீயா நானா போட்டியில், ஆடுகள் மோதிக் கொண்ட போது நரி சௌகரியமாக வழிகிற ரத்தத்தைக் குடித்த கதையாக காங்கிரஸ் சத்தமே இல்லாமல் ராஜஸ்தானில் ஆட்சியைக் கைப் பற்றி விட்டது நினைவிருக்கலாம்.சொந்த மாநிலத்தில் போட்டியிட்டால், எதிர் கோஷ்டி உள்வேலை செய்து கவிழ்த்துவிடும் என்பதால், மனிதர் நாடாளுமன்றத் தேர்தலில் டார்ஜிலிங் தொகுதியில் நின்று ஜெயித்திருக்கிறார், ஏதோ ஞானோதயம் வர அறுநூறு பக்கங்களில் ஒரு புத்தகமும் எழுதி வெளியிட்டிருக்கிறார். பாகிஸ்தானின் சிற்பியாகக் கருதப்படும் முகமது அலி ஜின்னாவின் கதையை எழுதியிருக்கிறார் .புத்தகத்தின் மையக் கருத்தாக, ஜின்னாவை ஒரு வில்லனாகவே சித்தரித்த வரலாற்றுத் தவறைப் பற்றி பேசியிருக்கிறார்.

இப்போது சொல்ல வருகிற முக்கியமான விஷயம், கண்மூடித்தனமாக இருப்பவர்கள் கூட சமயத்தில் உண்மையைத் தொட்டுப் பேசி விடுகிறார்கள் என்பது தான்! என்னதான், தனிநபர் ஆளுமை, அதிகாரம், கவர்ச்சியின் கீழ் உண்மைகளைப் போட்டு மறைத்து வைத்தாலும், அத்தனை தடைகளையும் மீறி, உண்மை ஒருநாள் வெளிப்பட்டு விடுகிறது என்பது தான். ஆசிய ஜோதி என்றும், சாச்சா நேரு என்றும்,அழைக்கப் பட்ட ஒரு ஒரு தனிநபரின் சொந்த பலவீனங்கள், பிடிவாதங்களால், இந்த தேசம் இன்றைக்கும் பல இடியாப்பச் சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சிக்கல்களைத் தீர்க்கத் தெரியாதவர்களையே மறுபடி மறுபடி தேர்ந்தெடுத்து, பிரச்சினைகளை மேலும் பெரிதாக்கி அவதிப பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஊழல் செய்வதில் இருந்து, பாராளுமன்ற ஜனநாயகம் வரை எல்லாவற்றிலுமே பிரிடிஷ்காரனைக் காப்பி அடித்துக் கொண்டிருக்கிற ஒரு தேசம், அவனிடத்தில் இருக்கும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களையும் சேர்த்துக் காப்பி யடிக்கத் தெரியாமல் இருப்பது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

உதாரணமாக, இரண்டாம் உலகப் போர் மூண்ட சமயம், கோமாளி மாதிரி இருந்தாலும், கொஞ்சம் செயல் படவும் தெரிந்த ஒருத்தரை, வின்ஸ்டன் சர்ச்சிலைப் பிரதம மந்திரியாக்கினார்கள். போர் முடிந்தது, சர்ச்சிலுக்கு இன்னுமொருதரம் பிரதமராக ஆசை இருந்தது. பிரிடிஷ்காரனுக்குத் தெளிவும் இருந்தது, இந்த மாதிரிக் கோமாளியை ஆட்சியில் நீடிக்க விட்டால் நாடு தாங்காது என்று, தோற்கடித்து வீட்டுக்கு மரியாதையோடு அனுப்பி வைத்தார்கள். அது ஏன் நமக்கு இன்னமும் தெரியவில்லை?


Jinnah -- India, Partition, Independence


பேட்டியில் புத்தகத்தைப் பற்றிப் பேசும்போது ஜஸ்வந்த் சிங் சொன்னது இது:

Karan Thapar: How seriously has India misunderstood Jinnah?

Jaswant Singh: I think we misunderstood because we needed to create a demon.

Karan Thapar: We needed a demon and he was the convenient scapegoat?

போதிமரம் இல்லாமலேயே, நம்மூர் அரசியல் வாதிகளுக்கு, அவ்வப்போது ஞானோதயம் வந்து விடுகிறது. அந்த நேரங்களில், மறந்துபோன, அல்லது மறக்கடிக்கப் பட்ட உண்மைகளையும்பேசிவிடுகிறார்கள்!

இந்தப் புத்தகத்தை, உள்ளூர்க் கடைகளுக்கு வந்து சேர்வதற்கு முன்னாலேயே, பரபரப்புச் செய்தியாக்கும் வழக்கமான மார்க்கெட்டிங் தவிர, ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து சிஎன் என் - பி என் லைவ் தொலைக் காட்சியில் கரன் தபார் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பேட்டி அளித்திருப்பதன் தொகுப்பை நேற்று மாலை தான் படித்தேன். இன்று காலையில், நேற்று புத்தக வெளியீட்டின்போது ஏழு பேர் கொண்ட குழு புத்தகத்தை அறிமுகப் படுத்தி அல்லது விமரிசனம் செய்ததைப் பற்றியும், வழக்கம் போல ஆர் எஸ் எஸ், ஜஸ்வந்த் சிங்குடைய கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்ன செய்தியையும் படித்தேன்.

பூனை இளைத்தால், எலி வந்து எங்கேயோ தட்டிஆட்டைக்கு வர்றியான்னு கேக்குமாம். அதே மாதிரி, தொடர்ந்து இரண்டு முறை தோற்றால், ஏற்கெனெவே தோற்று நொந்தவனை இன்னும் நூலாக்கும் வேலை எப்போதுமே நடக்கும். பி ஜெ பியிலும் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஜஸ்வந்த் சிங் ஒருபக்கம் புத்தகம் எழுதி, அதைப் பரபரப்புச் செய்தியாக்கிவிட்டு, கமுக்கமாகி விட்டாரென்று செய்திகள் வரும் வேளையில், வசுந்தரா ராஜேவும் அத்வானி வீட்டு வாசல் முன்னால் தனக்கிருக்கும் ஆதரவை நிரூபித்து விட்டு, கட்சியின் முடிவை மீறுகிற எண்ணமே இல்லை என்று பவ்யமாகச் சொல்லி, ராஜ்நாத் சிங்கின் மூக்கை உடைத்திருக்கிறார்.

இதைச் சொல்லும் வேளையில், பி ஜெ பி அரசியல் உள்விவகாரங்களிலோ, நடப்பு அரசியலைப் பற்றி விவாதிக்கவோ,முற்படவில்லை. வால்பையன் மாதிரி, நிறையப்பேர், இங்கே வரலாறு என்பதே கட்டுக் கதை, நம்முடைய வரலாற்றையே என்றைக்கோ எவனோ எழுதி வைத்திருப்பதில் இருந்து தான் தெரிந்துகொள்ள முடிகிறது என்றெல்லாம்சொல்லிவிட்டு, அவ்வளவுதான் என்று போய்விடுகிறார்களே, அவர்களுக்காக, ரொம்ப இல்லை ஜென்டில்மேன், சும்மா ஒரு எழுபது வருடங்களுக்குள் நடந்ததையே நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே, அப்புறம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே 'வாலொடு' முன்தோன்றிய மூத்த குடி மக்களுடைய வரலாற்றை எப்படிப் புரிந்து கொள்வது -வெறுமனே கேட்டுவிட்டுப் போவதற்காக மட்டும் அல்ல, கொஞ்சம் யோசிப்பதற்காகவும் கூட!

இணையத்துப்பக்கம் வர்றதே, நமீதாவின் சைசு என்ன, நயன்தாரா லேட்டஸ்டா இப்ப யாரோடு சுத்தறாங்க, பிரபுதேவாவோட ஊட்டுக்காரம்மா எப்படி அன்பான மிரட்டல் விட்டிருக்காங்க இதெல்லாம் தெரிஞ்சுக்கத்தான்!
பெருசு நீ வேற சரித்திரம் வரலாறுன்னு டரியலாக்கினே.....ன்னு கோபப் படறவங்க இங்கேயே அபீட்டாயிக்கலாம்.

இதுவரை ஆகாமையா இருக்கப் போறீங்கன்னு முனகறதுக்கு எனக்கு இன்னமும் ஒரு முரளி மனோகர் கிடைக்கவில்லை! அதனால நேரடியாவே விஷயத்துக்கு வந்துடுவோம்!

/பிரிட்டிஷ் சாம்ராஜியத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று எந்த நேரத்தில் சொல்ல ஆரம்பித்தார்களோ, அப்போதே அஸ்தமனமும் ஆரம்பமாகிவிட்டது. சந்தையைப் பிடிப்பதில் வியாபாரிகளுக்குள்ளே நடந்த சண்டையில் [உலகப் போர்களில்], நரிகளைப் போல, பிரித்து ஆளுவதையே தங்களுடைய மூலதனமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, தோற்றுப் பின்வாங்க வேண்டி வந்தது. ஆண்டுவந்த பகுதிகளுக்குச் சுதந்திரம் வழங்க வேண்டிய நிர்பந்தமும் வந்தது.

கடந்தகாலத்தில் நடந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கொஞ்சம் முயற்சி, வாசித்தல் இதெல்லாம் தேவையா என்றிருப்பவர்களுக்காக, இங்கே சுருக்கமாக./

இப்படிப் போனபதிவில் பார்த்தோம், இல்லையா?

ஒன்றை நினைவில் வைத்துக் கொண்டு மேலே படியுங்கள். மொகலாயர்கள் படையெடுத்துக் கோவில்களை மட்டும் தான் இடித்தார்கள். சொத்துக்களைக் கொள்ளையடித்தார்கள். படைஎடுப்பவர்கள் எல்லோருமே செய்வது தான் அது. கிட்டத் தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக, மொகலாயர்கள், இந்த நாட்டில் கணிசமான பகுதியை மட்டுமே ஆண்டுவந்த போதிலும், இந்த நாட்டில் மிக பெரிய கலாச்சாரச் சீரழிவையோ, ஒட்டுமொத்தமான வரலாற்று அழிவையோ அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக, காலப் போக்கில் சமரசமான வழியையும் தேடியதும் நடந்தது. ஆங்காங்கே,சிறு மோதல்களும் நடந்துகொண்டுதான் இருந்தன. ஆனாலும், பிரதேசங்களாகவும், குறுநில மன்னர்களாகவும், ஜாகீர்தாரர்களாகவும், பழமொழி பேசுபவர்களாகவும் இருந்த பாரதம், உணர்வில் ஒன்றாகவே இருந்தது. இந்த மண்ணில் பிறந்தவர்கள் அனைவருடைய உயிர்த் துடிப்பாகவும் இருந்தது.

வசதி படைத்தவன் தர மாட்டான்-அவனை
வயிறு பசித்தவன் விட மாட்டான்
இப்படிப் பாட வேண்டிய அவசியம் இல்லாமலேயே, இருப்பதை ஊரோடும் உறவோடும் பகிர்ந்துண்ணும் பழக்கம் பாரம்பரியமாகவே இருந்தது.

போர்த்துக்கீசியக் கடலோடிகளாகச் சில காட்டுமிராண்டிகள் இந்த மண்ணில் கிறித்தவத்தோடு ஊடுருவினார்கள். அப்புறம் டச்சு, பிரிட்டிஷ் என்று வியாபாரம் செய்கிற போர்வையில் ஒரு கூட்டம் நுழைந்தது. இப்படி நுழைந்தவர்களில், குள்ள நரி போலத் தந்திரமாக, இங்கேயிருந்த ஆடுகளை முட்டி மோதவிட்டு, சுகமாக ரத்தம் குடித்துக் கொண்டிருந்த வித்தை ஆங்கிலேயனுக்கு சாத்தியப் பட்டது.

அடிமையானோம்.

குள்ள நரி போல, தந்திரமாக இங்கிருப்பவர்களை பிரித்து வைக்கவும், இரண்டு பக்கமும் தோழன் போல நடித்து, இரண்டுபக்கத்தையும் ஏமாற்றி அடிமைப் படுத்தவும், கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்த ஆங்கிலேயனுக்குத் தெரிந்திருந்தது என்றால், மிக அற்பமான காரணங்களுக்காகக் கூட எதிரியிடம் விலை போக இங்கே சில புல்லுருவிகளும் இருந்தது, மறைக்க முடியாத விஷயம். துரைமார்களுக்கும், துரைசாணிமார்களுக்கும் இடுப்பு வேட்டியை அவிழ்த்துப் போட்டு நடைபாதை விரிப்பாக்கி, சுகம் கண்டு கொண்டிருந்த வெட்கம் கேட்டவர்களும் இங்கே இருந்தார்கள்.

ஒருபக்கம் பைபிளும், இன்னொருபக்க சாதீய முரண்பாடுகளும், குள்ளநரிக்குச் சாதகமாக இருந்த அதே நேரத்தில், பாபர், அவுரங்கசீப் என்று செத்துப்போன, முடிந்துபோன எதிரிகளோடேயே சண்டைபோடுவதாக நினைத்துக் கொண்டு,சொந்தச் சகோதரர்களாக வாழவேண்டிய மக்களிடையே பிளவையும், பிரிவையும் உண்டாக்க ஒரு கும்பல்உள்ளூரிலேயே தயாராகிக் கொண்டிருந்தது.அந்தப்பக்கமும் நாம் மைனாரிடி, நமக்குப் பாதுகாப்பு இல்லை, நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற மாதிரி ஆசாமிகள் உருவாகி விஷமங்களைச் செய்துகொண்டிருந்ததும் நடந்தது.

குள்ள நரிக்குக் கொண்டாட்டம் தான் இல்லையா? அதுதான் நடந்தது.

தொடர்ந்து பேசுவதற்கு முன், ஸ்ரீ அரவிந்தர் வழங்கிய,சுதந்திர தினத்தை ஒட்டித் திருச்சி வானொலியில் ஒலிபரப்பப் பட்டசெய்தியின் இந்தப் பகுதியை, மறுபடி படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:

"But the old communal division into Hindus and Muslims seems now to have hardened into a permanent political division of the country. It is to be hoped that this settled fact will not be accepted as settled for ever or as anything more than a temporary expedient. For if it lasts, India may be seriously weakened, even crippled: civil strife may remain always possible, possible even a new invasion and foreign conquest. India’s internal development and prosperity may be impeded, her position among the nations weakened, her destiny impaired or even frustrated. This must not be; the partition must go.

Let us hope that that may come about naturally, by an increasing recognition of the necessity not only of peace and concord but of common action, by the practice of common action and the creation of means for that purpose."


ஸ்ரீ அரவிந்தர் உரையிலிருந்து, முழுவதும் படிக்க, போன பதிவில் காணக் கிடைக்கும்.