வலைப்பதிவர்களுக்கோர் நற்செய்தி!உங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது!




"பல்பு வாங்குறது" அல்லது அடுத்தவங்களை "பல்பு ஆக்குகிறது" !


அடுத்தவர்களைப் பியூஸ் போன பல்பாக மாற்றுகிறவல்லமை படைத்த பிரபல, பிரபலமாகத் துடிக்கிற, ஏழரை, ஏழே முக்கால் லட்சம் ஹிட்சை எட்டின, எட்டப் பார்க்கிற, எம்பிப்பார்க்கிற அத்தனை தமிழ் வலைப் பதிவர்களுக்கும் ஒரு நற்செய்தி! உங்கள் திறமைக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது! தயார்தானே!



உங்களால் ஒரு சிறந்த பல்பை உருவாக்க முடியுமானால், உங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது! ரீல் அல்ல! நிஜம் தான்! என்ன, அடுத்தவரை பியூஸ் போன பல்பாக மாற்றவேண்டாம், ஒரு நல்ல பல்பை உருவாக்கத் தெரிந்தாலே போதும்!


பல்ப்! பல்பா இருக்கறது அல்லது பல்பு வாங்கறது!


வலைப்பதிவர்கள் சர்வ சாதாரணமாகக் கையாளும் சொல் தான் இது!


இதுக்கு மேலும் பல்பு புராணம் வேண்டுமானால், மொழி திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்! தலைக்கு மேலே ஒரு பல்ப் பிரகாசமாக எரிந்து,டணார், டணார் மணிச்சத்தமும் கேட்டதானால் நீங்கள் தான் சிறந்த பல்ப்! அப்படி பல்பு எரியும் போது மணிச்சத்தம் கேட்டால் போதும், தலையில் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!


இங்கே சொல்லப்போகும் பல்பு அது அல்ல! மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் ஒதுங்கி, அல்லது நடேசன் பூங்காவில் ஏதோ பைனான்ஸ் கம்பனியில் பணத்தைத் தொலைத்து விட்டு மாதாமாதம் கூட்டம் நடத்தி ஒப்பாரி வைக்கிற சடங்காக நடத்துகிற மாதிரி பதிவர் சந்திப்பு, கூட்டம் எல்லாம் வேண்டாம்! பதிவுல அடிச்சுக்குவாங்களாம்! நேர்ல, பதிவர் சந்திப்புல மட்டும் 'கட்டிப்புடி, கட்டிப் புடிடான்னு' கட்டிக்குவாங்களாம்! ஓசிச் சுண்டல், போண்டா, காபி தேத்தண்ணீர் எதுவும் வேண்டாம்!


ஒரு ஐடியா! ஒரே ஒரு ஒரிஜினல் ஐடியா! இது இருந்தால் போதும்!

அப்படி என்ன தான் இருக்கணுமாம்? டங்க்ஸ்டன் இழைகளை வெற்றிடத்தில் சூடாக்கி ஒளி கொடுக்கிற, அறுபது வாட்ஸ் மின்சாரத்தைச் செலவழித்து ஒரு குண்டு பல்பு கொடுக்கும் அதே வெளிச்சத்தை வெறும் பத்தே வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே செலவழித்துக் கொடுக்க வேண்டும். குண்டு பல்புடைய சராசரி ஆயுள் ஆயிரம் மணி நேரம் மட்டுமே என்றால், இந்தப் புதிய பல்பு 25000 மணி நேரத்துக்குக் குறையாமல், எரிய வேண்டுமாம். மின்சிக்கனம் 83 சத வீதம் இருக்குமாம்! .


எங்கேயிருந்து இதெல்லாம் ஆரம்பிச்சதுன்னு பாக்கறீங்களா?


உலகத்துலேயே மிகவும் ஊதாரித்தனமான நாடுன்னு பொருளாதார அடிப்படையில் பேர்வாங்கின அமெரிக்காவுல தான்! ஜனாதிபதி தேர்தல்ல தோத்துப் போன பிறகு அதுக்கு முன்னாடி துணை ஜனாதிபதியா இருந்த அல் கோரேவுக்குப் பொழுது போகணுமில்லையா? உலகத் தட்ப வெட்ப நிலையில அபாயகரமா மாறிக்கிட்டிருக்கிற சூழ்நிலையை பத்தி பாடம் நடத்த ஆரம்பிச்சாச்சு! ஓசோன்படலத்துல ஓட்டை விழுந்ததில் ஆகட்டும், பனிமலைகள் உருகி வெப்பம் கூடி வருவதற்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு அதிகமா வெளிவரச் செஞ்சதிலும் சரி, அமெரிக்கத் தொழிற்சாலைகளுக்கு முதலிடம் உண்டு.


அதே மாதிரி, அதைச் சரி செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பதிலும், அமெரிக்காவே முன்னால் நிற்கிறது என்பதையும் மறந்து விட முடியாது.

அமெரிக்க எரிசக்தித் துறை, ஒரு சின்னக் கணக்கைச் சொல்கிறது. அடுத்த வருஷத்து மதிப்பீடுகளின் படி, அமெரிக்காவில் தொண்ணுற்றேழு கோடியே பத்து லட்சம் அறுபது வாட்ஸ் குண்டு பல்புகள், புழக்கத்தில் இருக்குமாம். ஒருநாளைக்கு இரண்டு மணி நேரம், வருஷத்துக்குக் குறைந்தது எழுநூறு மணி நேரம் எரிந்தால், இப்படி ஒரு அடிப்படையை வைத்துக் கொண்டு, அறுபது வாட்ஸ் குண்டு பல்புக்குப் பதிலாக, மாற்று, அறுபது வாட்ஸ் என்பது பத்து வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும், ஐம்பத்தாறு லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை எரித்தால் எழும் சூடு, கார்பன் வெளிப்பாடு குறைய வேண்டுமாம்!அப்படி ஒரு சிக்கனமான பல்பை கண்டு பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு, இரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே திட்டமிட்டு, போன வருடம்எல் ப்ரைஸ் [லைட்டிங் ப்ரைஸ்] என்ற பெயரில், அப்படிப் பட்ட சிக்கனமான பல்பை உருவாக்குபவர்களுக்குப் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு, அதோடு மட்டுமல்ல, அமெரிக்க அரசே பெருமளவில் வாங்கிக் கொள்ளுவதற்கான வாய்ப்பு, அது போக சந்தையில் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தருகிற கதவாக இந்த ஒருகோடி அமெரிக்க டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப் பட்டிருக்கிறது.


இது போக, உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் மனதில் வைத்துக் கொண்டு 75 சதவீதம் அமெரிக்காவிலேயே தயாராக வேண்டுமாம்!


இது குறித்த தகவல்களை அறிவதற்கு இங்கே! பல்ப் எரிந்து மணியும் அடிக்க இன்னமும் விவரம் வேண்டும் என்றால் இங்கிருந்தே பி டி எப் கோப்புக்களாகவும் பெற முடியும்.

இப்போதைக்கு பிலிப்ஸ் நிறுவனம் தான் தனது முதல் தயாரிப்பு விவர அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது.கிட்டத் தட்ட இரண்டாயிரம் வடிவமைப்புக்களைச் சோதனைக்காகவும் பிலிப்ஸ் நிறுவனம், அமெரிக்க எரிசக்தித் துறையிடம் அளித்திருக்கிறது! இப்போது சந்தையில் கிடைக்கும் தயாரிப்புக்களை விட மிகச் சிறந்த வடிவமைப்பு என்று பிலிப்ஸ் நிறுவனம் சொல்கிறது.


இதில் மிகவும் சுவாரசியமான விவரம் என்னவென்றால், இந்த அறுபது வாட்ஸ் குண்டு பல்பு தான் அமெரிக்காவில் உபயோகத்தில் ஐம்பத்து சதவிகிதமும், வருடத்திற்கு நாற்பத்திரண்டரைக் கோடி எண்ணிக்கையில் விற்பனையாவதுமாக இருப்பது தான்.ஆரம்பத்தில், நம்மூர் மாதிரியே , அங்கேயும் தகுதி, தர நிர்ணய நெறிமுறைகள் எதுவும் வரையறுக்கப் படாமல் தான் இருந்ததாம். குண்டு பல்பை விடக் கொஞ்சம் தேவலை என்ற ரீதியில் வந்த இருபத்தைந்து வடிவமைப்புக்களை அமெரிக்க எரிசக்தித் துறை நிராகரித்திருக்கிறது. நெறிமுறைகளைக் கொஞ்சம் கடுமையாக்கியிருக்கிறது.


ட்யூப் லைட், அதையே சுருக்கி, கையடக்கமான ஒளிர் விளக்குகள்( சி எப் எல்) என்ற பெயரில், தயாரித்து அதி மின்சிக்கனம் என்று தம்பட்டம் அடித்ததில், சீக்கிரமே நுகர்வோரிடமிருந்து குறைகள், அதிருப்தியாய் வெடிக்க ஆரம்பித்தது. குண்டு பல்பை விட அதிக வெளிச்சம், கொஞ்சம் மின்சிக்கனம் என்ற அளவில் இருந்தாலும், சுற்றுச் சூழலுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய பாதரசம் இந்த வகை விளக்குகளில் இருப்பதும் கவலையை அதிகரிக்கச் செய்தது.


அடுத்து என்ன என்ற தேடல் மும்முரமாகி சாலிட் ஸ்டேட் லைட்டிங் தான் சரியாக இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இது குறித்து விவரம் அறிய இங்கே. எரிசக்தி விரயமாகாமல் இருக்க வேண்டுமானால், சாலிட் ஸ்டேட் முறையில் தான் விளக்குகள் வடிவமைக்கப் படவேண்டும் என்று கடுமையான தர நிர்ணயம் செய்துகொண்டு, முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.


ரென்செலேர் பாலிடெக்னிக் இன்ஸ்டிட்யூட் , நியூ யார்க் நகரில், லைட்டிங் ரிசர்ச் சென்டெர் என்ற ஆய்வுக்கூடத்தில் தொடர்ந்து பூமியின் பசுமையைக் காக்கும் பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. திரு நடராஜா நரேந்திரன் [பெயரே தமிழர் என்று சொல்கிறது!] இந்த ஒளி ஆய்வுக்கூடத்தின் இயக்குனராக இருக்கிறார்.


பிலிப்ஸ் வடிவமைத்திருக்கும் எல்ஈடி (LED) விளக்குகளின் வடிவமைப்பு, எரிசக்திச் சிக்கனத்தில் நிச்சயமாக ஒரு புலிப் பாய்ச்சல் தான்." என்கிறார் திரு நடராஜா நரேந்திரன். இந்த ஆராய்ச்சிக்காக, அமெரிக்க அரசு பதினெட்டு லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியிருக்கிறது.


எல்லாம் சரி. அது அமெரிக்காவில்! இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு மூலையில் இருந்து கொண்டு இதைப்பற்றியெல்லாம் விலாவாரியாக எழுதிக் கொண்டிருப்பானேன்?


புதிதாக மின் உற்பத்தி நிறுவனங்களைத் தொடங்கத்தான் வக்கில்லை!



எரிசக்தி சிக்கனத்தை இந்த மாதிரி வழிகளிலாவது ஊக்குவிக்கக் கூடாதா என்ற ஆதங்கத்தில் தான்



விதியே! விதியே! தமிழச் சாதியை என் செய நினைத்தாய்?


நமக்கு நாமே திட்டத்தில் இந்த விருதைத் தனக்கும், அந்த விருதை அவருக்கும் வழங்கிக் கொண்டு, அரசியலில் நுழைந்து குடைச்சல் தராமல் இருக்கும் ஒரே காரணத்திற்காகவே சிறந்த நடிகர் விருதை இவருக்கும் அவருக்கும் வழங்கும் சாமர்த்தியத்தில், ஏதோ ஒரு சிறு அளவாவது, மின் சிக்கனத்தை ஊக்குவிப்பதில் காட்டக் கூடாதா?


உன்னைப்போல் ஒருவன் ரேஞ்சிலோ, ஒரு புதன் கிழமை ரேஞ்சிலோ எந்தப் பாமரனும் வந்து உங்களைக் கேட்க மாட்டான் என்ற தைரியம் தானே?!


அப்புறம் என்னத்துக்குத் தமிழ் வலைப்பதிவுலகம் இந்த ஒண்ணுக்கும் ஆகாத உன்னைப் போல் ஒருவனுக்காக இப்படிப் பத்திக்கிட்டு எரிஞ்சுது?


போதும் இங்கு மாந்தர் - வாழும் பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!



நவராத்ரியின் உச்சம், இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்று பலப்பல  பேர்களில்,பலவித முறைகளில் செய்யும் தொழிலே தெய்வமெனக் கொண்டாடும் நாள் இன்று. ஒன்பது இரவுகளை துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரை வணங்கி அகமும் புறமும் தூய்மையும், ஆன்மநேய ஒருமையும் வேண்டிப் பெறுகிற நாட்களாக, நவராத்ரி இருக்கிறது.

அறியாமையை, அகந்தையை, இது அது எனப் பிரித்துப் பார்க்கும் பேதத்தை விட்டொழித்த தருணமே விஜய தசமி! உண்மையான வெற்றித் திருநாள்!

வெற்றி என்பது, நமக்குள் இருக்கும் மிருகத்தன்மையை வெற்றி கொள்வதே!

பாரதி கவிதைகளில் ஒன்றியே எனது நவராத்ரி அனுபவங்கள் எளிதாக ஆகியிருக்கிறது.

அறியாமையோடு கூடிய அகங்கார இருளை அழித்துப் புதியதோர் பிறப்பும் வளர்ச்சியும் காண, அன்னை இங்கே மகா காளியாக, துர்கையாக வழிபடப் படுகிறாள். வெளியே இருக்கும் இருட்டை அகற்றுவதற்கு, நமக்குள்ளே இருக்கும் அழுக்கு, இருட்டு நீங்கியாக வேண்டும். இந்தியத் தத்துவ மரபு சொல்லும் மிக உன்னதமான ஆன்மீக தரிசனம் இது.

விடுதலை என்பது எவரோ கொடுத்துப் பெறுவது அல்ல. மீட்பரும் ரட்சிப்பவனுமாக எங்கோ  வெளியே தேடினால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

"அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளழிப்பாள்  
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள்
ஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்
இ·தெலா மவள்புரியும் மாயை - அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து
எற்றுவாரிந் நானெனும் பொய்ப்  பேயை. "


காளியாக, துர்கையாக, கோர வடிவினளாக அவளை வழிபடுவது ஒரு உருவகம் மட்டுமே! உள்ளார்ந்து வழிபடும்போது அங்கே மாகாளி எத்தனை கருணைத்திறம்  உடையவள்  என்பது இடரெல்லாம் நீங்கி ஒளி பொருந்திய பாதையை கண்ட பிறகு தான் விளங்கும்!


"வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை! "


என்று பாரதி அவள் அருட் திறத்தில், தன்னை மறந்து கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையாகி நின்ற தருணம் இவனுக்கும் இங்கு வாய்த்திட  வேண்டும் அம்மா!

"யாது மாகி நின்றாய்  - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!
ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.

எந்த நாளும் நின்மேல் - தாயே! இசைகள் பாடி வாழ்வேன்;
கந்தனைப்ப யந்தாய் - தாயே! கருணை வெள்ளமானாய்
மந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில்
சிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே!

கர்ம யோகமென்றே - உலகில் - காக்கு மென்னும் வேதம்,
தர்ம நீதி சிறிதும் - இங்கே - தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம் - நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும்.

என்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும்,
குன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும் - நீயெந் - நாளு மீதல் வேண்டும்,
ஒன்றை விட்டு மற்றோர் - உழலும் நெஞ்சம் வேண்டா.

வான கத்தி னொளியைக் - கண்டே - மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன்,
ஞான மொத்த தம்மா! - உவமை நானு ரைக்கொ  ணாதாம்.
வான கத்தி னொளியின் - அழகை வாழ்த்து மாறி யாதோ?

ஞாயி றென்ற கோளம் - தருமோர் - நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா! - அழகாம் - மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் - அங்கே - நெஞ்சி ளக்க மெய்தும்.

காளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும்,
வேளை யொத்த விறலும் - பாரில் -வேந்த  ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே! "


மொழி பல அறிந்தவன் இல்லை. சாத்திரம் கற்றவனில்லை. ஸ்தோத்திரம் செய்யவோர் புலமையும் இங்கு இல்லை.குருவெனக் கொள்வதற்கும், உட்பொருள், நுண்பொருள் விரிவாக அறியத் தருவாரும் இல்லை. அம்மா!  நீயே என்தாய் .என்பதல்லால் உரைக்கவொரு வார்த்தை இல்லை! பொய்களைத் தேடி நின்ற சிறுமையை மாற்றவல்ல மந்திரம் எல்லாம் அம்மாவெனஅழைப்பது ஒன்றே தான்! 




அம்மா என அழைக்கும் சவலையைக் காத்திட வேணும் நீயே!


ஜய ஜய துர்கா! ஜய ஜய துர்கா! ஜய! ஜய! பவானி!


இன்று துர்காஷ்டமி! இருளைக் கிழித்து, தீமையை அழித்து அன்னை துர்க்கை அருள் புரியும் நாள். ஜய ஜய துர்கா! ஜய ஜய பவாநீ! என்றே மகா சக்தியை வணங்கிடுவோம்!



 



 
HYMN TO DURGA
  by Sri Aurobindo


Mother Durga!

Rider on the lion, giver of all strength, Mother, beloved of Shiva! We, born from thy parts of Power, we the youth of India, are seated here in thy temple. Listen, O Mother, descend upon earth, make thyself manifest in this land of India.


Mother Durga! 

From age to age, in life after life, we come down into the human body, do thy work and return to the Home of Delight. Now too we are born, dedicated to thy work. Listen, O Mother, descend upon earth, come to our help. 

Mother Durga! 

Rider on the lion, trident in hand, thy body of beauty armour-clad, Mother, giver of victory. India awaits thee, eager to see the gracious form of thine. Listen, O Mother, descend upon earth, make thyself manifest in this land of India.


Mother Durga! 

Giver of force and love and knowledge, terrible art thou in thy own self of might, Mother beautiful and fierce. In the battle of life, in India's battle, we are warriors commissioned by thee; Mother, give to our heart and mind a titan's strength, a titan's energy, to our soul and intelligence a god's character and knowledge.

Mother Durga! 

India, world's noblest race, lay whelmed in darkness. Mother, thou risest on the eastern horizon, the dawn comes with the glow of thy divine limbs scattering the darkness. Spread thy light, Mother, destroy the darkness.

Mother Durga! 

We are thy children, through thy grace, by thy influence may we become fit for the great work, for the great Ideal. Mother, destroy our smallness, our selfishness, our fear.


Mother Durga! 

Thou art Kali, naked, garlanded with human heads, sword in hand, thou slayest the Asura. Goddess, do thou slay with thy pitiless cry the enemies who dwell within us, may none remain alive there, not one. May we become pure and spotless, this is our prayer. O Mother, make thyself manifest.

Mother Durga! 

India lies now in selfishness and fearfulness and littleness. Make us great, make our efforts great, our hearts vast, make us true to our resolve. May we no longer desire the small, void of energy, given to laziness, stricken with fear.

Mother Durga! 

Extend wide the power of Yoga. We are thy Aryan children, develop in us again the lost teaching, character, strength of intelligence, faith and devotion, force of austerity, power of chastity and true knowledge, bestow all that upon the world. To help mankind, appear, O Mother of the world, dispel all ills.

Mother Durga! 

Slay the enemy within, then root out all obstacles outside. May the noble heroic mighty Indian race, supreme in love and unity, truth and strength, arts and letters, force and knowledge ever dwell in its holy woodlands, its fertile fields under its sky-scraping hills, along the banks of its pure-streaming rivers. This is our prayer at the feet of the Mother. Make thyself manifest. 

Mother Durga! 

Enter our bodies in thy Yogic strength. We shall become thy instruments, thy sword slaying all evil, thy lamp dispelling all ignorance. Fulfil this yearning of thy young children, O Mother. Be the master and drive the instrument, wield thy sword and slay the evil, hold up the lamp and spread the light of knowledge. Make thyself manifest.

Mother Durga! 

When we possess thee, we shall no longer cast thee away; we shall bind thee to us with the tie of love and devotion. Come, Mother, manifest in our mind and life and body.

Come, Revealer of the hero-path. 

We shall no longer cast thee away. May our entire life become a ceaseless worship of the Mother, all our acts a continuous service to the Mother, full of love, full of energy. This is our prayer, O Mother, descend upon earth, make thyself manifest in this land of India.

(in Bengali: "Durga stotra"

Translated from Bengali by Nolini Kanta Gupta)

வாடிக்கை மறந்ததும் ஏனோ?-- போடா ஜாட்டான்!


Customer Care ..Must be nurtured from beginning to end!


பதிவுலகம் என்றாலே ஒரே அக்கப்போர் தான் என்று ஒரேயடியாக நிராகரித்துவிடவும் முடியாதபடி, அவ்வப்போது சில அக்கப்போர்கள் (என்ன லேபில் தான் கொஞ்சம் வித்தியாசமாக வைத்திருப்பார்கள்!) மிகவும் சுவாரசியமாகவே இருப்பதை மறுக்க முடியாது! அப்பப்ப ரத்தத்தைச் சுண்ட வைக்கும் அக்கபோர்களாகவும் இருந்து கொண்டே, சுண்டியிழுக்கும் அக்கப்போர்கள்!

வலைபதியறதே அக்கப்போர்தானே, இதுல என்ன புதுசு கண்ணா புதுசுன்னு ரீல் ஓட்டப்போறேன்னு கேக்கறீங்களா? அதுவும் நியாயம் தான்!


இன்னைக்கு டோண்டு ராகவன் சார் பதிவில் ஒரு சுவாரசியமான விஷயத்தைத் தொட்டுப் பேசியிருக்கிறார். வாடிக்கையாளர் குறைகளும், வாடிக்கையாளர் சேவையும் பத்தினது.சுருக்கமா, பிரச்சினை இது தான்.

To make people
Fit, Healthy &Confident!

குட்நைட் கொசுவத்திச் சுருள் வாங்கியிருக்கார். சுருளைப் பிரித்து, தகர ஸ்டாண்டுல வைக்கப் போற நேரம், அதற்கான ஓட்டை சரியில்லைங்கிறதால, காயில் அத்தனையும் உடைஞ்சு போச்சு. காயில் தயாரிக்கற விதம், டிசைன் தப்புன்றதால, ஒரு நல்ல ப்ராடக்ட் வாங்கியும் பிரயோஜனமில்லாமபோச்சுன்னு  உடனே வாடிக்கையாளர் சேவைக்கு மின்னஞ்சல் தட்டிவிட்டாராம். என்னிக்கு? போன இருபத்து மூணாம்  தேதி அன்னைக்கு.
என்ன நடந்ததுன்னு அவர் சொல்றதைக் கேட்போமா?


//மேலே குறிப்பிட்டுள்ள அந்த மின்னஞ்சலில் எனது முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் தந்திருந்தேன். அடுத்த நாளே, அதாவது நேற்று (24.09.2009) எனக்கு மும்பையிலிருந்து காலை 11 மணிக்கு போன் வந்தது. கஸ்டமர் கேர் அதிகாரி ஒருவர்தான் ஃபோன் செய்தார். ஃபோனிலும் அவரிடம் நான் நடந்ததைக் கூற, அவர் அந்த batch-ன் சரியான எண் அட்டைப் பெட்டியின் மூடியின் உட்புறம் இருக்கும், அதைத் தரவியலுமா எனக் கேட்க, தனியாக எடுத்து வைத்திருந்த அப்பெட்டியின் உள்மூடியிலிருந்து அந்த எண்ணையும் பார்த்துக் கூறினேன்.

அவர் என்ன சொன்னார்  என்றால், அப்படியே அந்த பொருத்தும் ஓட்டை உடைந்தாலும் அதே ஸ்டேண்டில் வேறு விதமாக பொருத்தலாம் என்றும், ஸ்டேண்டில் அதற்கான ஓட்டை இருக்கிறது என்றும் கூற, உடனே முயற்சித்துப் பார்த்து விட்டு அந்த ஓட்டை போதுமான அளவுக்கு இல்லை எனக் கண்டறிந்து அவரிடம் கூறினேன். அதையும் பார்ப்பதாக உறுதி கூறினார். காயிலில் இன்னும் சில இடங்களில் ஓட்டை வைக்கும் சாத்தியக் கூறையும் விவாதித்தோம் கடைசியாக எனது முகவரிக்கு இரண்டு பேக்கெட்டுகள் இலவசமாக அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.

இம்மாதிரி புகார் செய்யும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவற்றை இங்கு பார்ப்போம்.//

பதிவு ஒழுங்கா எழுதறோமோ இல்லையோ, பின்னூட்டம் போடலேன்னா எப்படி? அதுவும் எங்க வால்பையன் களத்துல இறங்கி ஆடும்போது, குறைந்த பட்சம் ஆதரவா உரக்கக் கூவிக்கிற கடமையைச் செய்யலேன்னா, என்ன ஆகறது? (அக்கப்போர்) கடமை எப்படி நிறைவேறினதுங்கறத்தைக் கொஞ்சம் பாக்கலாமா!


வால்பையன் said...


    ஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா!?
    September 25, 2009 11:17 AM


shirdi.saidasan@gmail.com said...

    //Blogger வால்பையன் said..ஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா!?//

    புகார் தெரிவித்ததற்கு எனக்கு கூட ஒரு பெரிய பாக்கெட் பிரிட்டானியா பிஸ்கெட் வந்தது.
    September 25, 2009 12:59 PM

கிருஷ்ணமூர்த்தி said...

    வால்பையன் கேட்டது:
    /ஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா!?/


    அமெரிக்க பாணி வாடிக்கையாளர் சேவையைக் காப்பியடிப்பதில், இப்படி சில நல்ல விஷயங்களும் நடப்பது உண்டு வால்ஸ்!

    புண்பட்ட வாடிக்கையாளரை இப்படி சலுகைகளுடன் தடவிக் கொடுத்துப் புண்ணை ஆற்றுகிறார்களாம்!

    இது நிறையத் தனியார் நிறுவனங்களில் நடைமுறையில் இருப்பது தான்!

    டோண்டு சார்! முக்கியமான ஒண்ணு சொல்லவே இல்லையே! ரெண்டு பாக்கெட் காயில் பிரீன்னதும் ரெண்டுபங்கு கொசுத்தொல்லையும் வந்திருக்கணுமே:-))
    September 25, 2009 1:32 PM

வால்பையன் said...

    //புகார் தெரிவித்ததற்கு எனக்கு கூட ஒரு பெரிய பாக்கெட் பிரிட்டானியா பிஸ்கெட் வந்தது. //

    ”காண்டம்”(condom) உடைந்து போனதற்கு கம்ப்ளையண்ட் கொடுத்தால் அதற்கு என்ன தருவார்கள்!?
    September 25, 2009 1:42 PM

கிருஷ்ணமூர்த்தி said...

    அப்புறம் கொஞ்சம் யோசிச்சுப்பாத்தா, இது அமெரிக்காவுல இருந்து கூட இறக்குமதி ஆனதில்லே! நம்மூரில இத சூப்பராப் பண்ணிட்டிருக்காங்க!


    ரோடு சரியில்ல, தண்ணி வரல, விலை கூடிப்போச்சு, பஸ் சரியில்ல, கூடக் காசு கேக்கறான், ரேஷன் கார்ட் தரலை, ரேஷன்ல அலையவுடறான், இப்படி ஏகப்பட்ட கம்ப்ளைண்டோட, மவனே தேர்தல் வரட்டும், பாத்துக்கறோம்னு கறுவிக்கிட்டிருக்கும் வாக்காளப் பெரு மக்கள், தேர்தல் நேரம் வந்தவுடனேயே அள்ளிவிடற இலவசங்கள், வாக்குறுதிகள் இதெல்லாம் பாத்து அப்படியே மயங்கி மறுபடியும் எவன்கிட்ட ஏமாந்தமோ அதே அரசியல் வியாதிக்கே ஓட்டுக் குத்தறதில்லை! அதே மாதிரித்தான்!
   ரெண்டு காயில் ப்ரீ கொடுத்த கம்பனி தயாரிப்புத் தான இன்னமும் வாங்கறீங்க டோண்டு சார்?


******

ஒரு பொருளை விற்பனை செய்வதில், சேவை அளிப்பதில், எதோ ஒரு விதத்தில் வாடிக்கையாளர்களுக்கு மனக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்! சந்தையில் போட்டி நிறைய இருக்கும் தருணங்களில், அரசுப்போக்குவரத்துக் கழகங்கள்  போல, 'நீ என்ன வேணுமானாலும் நெனைச்சுக்கோ, நான் அதுக்கெல்லாம்  அசர மாட்டேன்' என்றோ, நக்கீரனார் மாதிரி  'உமது பாட்டில் பிழை இருக்கிறது' என்று சொல்லும் போது "போடா ஜாட்டான்" என்றோ ஓரம் கட்டிவிட்டுப்போய் விட முடியாது.


திருவிளையாடல் தருமி மாதிரி, "எவ்வளவு பிழை இருக்கிறதோ, அதற்குத் தகுந்தாற்போல் பரிசைக் குறைத்துக் கொடுங்கள்" என்றும் கெஞ்ச முடியாது!


இரண்டு நிலைக்கும் நடுவில் ஒரு நிலை எடுக்கிறார்கள். உங்கள் புகாரைக் காது கொடுத்துக் கேட்கிறார்களாம்!


"நீங்கள் எவ்வளவு முக்கியமான வாடிக்கையாளர்! உங்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்!" இப்படிச் சொல்லும் போதே, குறை கண்ட நக்கீரன், குளிர்ந்து போய் அகம் மகிழ, "இந்தக் குறையை எங்கள் கவனத்திற்குக் கொண்டு  வந்ததற்காக, ஒரு சின்ன அடையாள பரிசு" என்று 'அல்வா' கொடுக்கும் போது நக்கீரனாவது நெற்றிக் கண்ணாவது!


குறை சொன்ன நக்கீரனும், பிழையோடு வந்த தருமியும் இருவருமே ஜெயிக்கும் தருணம் அது!


கிண்டலுக்காக இப்படிச் சொன்னாலும், வாடிக்கையாளர் மனதில் ஏற்படும் அதிருப்தியை உடனடியாகச் சமாளிக்கத் தவறும் எந்த ஒரு நிறுவனமும் இன்றைய போட்டிக் களத்தில் காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை!


சேத் கோடின் நான் விரும்பிப்படிக்கும் வலைப்பதிவர்களில் ஒருவர். சந்தைப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான ஒரு விஷயமாக, இந்த விஷயத்தைத் தொட்டுச் சொல்கிறார்.


Does it really matter if you're right?


Given the choice between acknowledging that your customer is upset or proving to her that she is wrong, which will you choose?


You can be right or you can have empathy.


You can't do both.


It's not the nature of capitalism to need to teach people a lesson, it's the nature of being a human, we just blame it on capitalism. In fact, smart marketers understand that the word 'right' in "The customer is always right" doesn't mean that they'd win in court or a debate. It means, "If you want the customer to remain a customer, you need to permit him to believe he's right."


If someone thinks they're unhappy, then you know what? They are.


Trying say this to yourself: I have no problem acknowledging that you're unhappy, upset or even angry. Next time, I'd prefer to organize our interaction so you don't end up feeling that way, and I probably could have done it this time, too. You have my attention and my empathy and I value you. Thanks for being here.


If you can't be happy with that, then sure, go ahead and fire the customer, cause they're going to leave anyway.

இங்கே நிறைய நிறுவனங்களில், காந்தியின் வாடிக்கையாளரைப் பற்றிய வார்த்தைகளை சட்டம்போட்டு மாட்டி வைத்திருப்பார்கள். "வாடிக்கையாளர் தான் இங்கே மிகவும் முக்கியமான நபர்!"

வாடிக்கையாளரோடு உரசல் ஏற்படும் தருணங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அப்படிப்பட்ட தருணங்களில், வாடிக்கையாளர் சொல்வது உண்மையா, தவறா என்பது முக்கியமில்லை. அவர் சொல்வது  சரி  அல்லது தவறு என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் கூட இல்லைஇங்கே வாடிக்கையாளர் என்ற இடத்தில், சக மனிதர்கள், வலைப்பதிவர்கள், குடும்பம், நட்பு, உறவு, இப்படி எதைவேண்டுமானாலும் நிரப்பிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உரசல்கள் நேரிடும்போது, எதிராளி என்னதான் சொல்ல வருகிறார் என்பதைக் காதுகொடுத்துக் கேட்கும் ஒரு  நல்ல விஷயம்!

முடிந்தால், ஏதோ ஒரு காரணத்தினால்  உங்களை கோபமும், வருத்தமும் அடையச்  செய்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்கிறேன். உங்களுடைய வார்த்தைகளை, நீங்கள் என்னோடு இருப்பதை மதிக்கிறேன். உங்களுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்கிறேன்."   என்று நட்புக்கலந்த வார்த்தைகள் வருமேயானால்........!


ஒரு சின்ன விஷயம் கூட, மாற்றி யோசிப்பதில் தான், எத்தனை வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது!

வாழ்க்கைப்பயணத்தில், இந்த ஒரு சின்ன விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கு, நான் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம் என்பதை இப்போது திரும்பிப் பார்க்கும் போது புரிகிறது.



ஒரு புதன் கிழமை! உ போ ஒ இல்லை!


இவரு பிரெஞ்சுக்காரராம்! தாடி வளர்க்கிறது கஷ்டமாய் இருந்திருக்கும் போல! மீசையிலேயே தோட்டம் வளர்த்திருக்கிறார்.

இவரு இத்தாலிக்காரரு! மீசையோட தாடியும் சேத்துப் பாத்தி கட்டி வளத்திருக்காரு!
முகம் தெரியுதுன்றதால, இவருக்கு ஒண்ணுமே கிடைக்கலையாம்!

இது என்ன கொடுமை சரவணான்றீங்களா? கொடுமையெல்லாம் கெடையாது! நாலு நாளைக்கு முன்னாலஜெர்மனியில்  பிராங்க்பர்ட் நகரத்துக்குப் பக்கத்துல தாடி, மீசை வளர்க்கறதுல கில்லாடிங்களுக்கான உலக அளவிலான போட்டி ஒண்ணு நடந்துச்சாம்.

ஒலக  மகா மீசை அழகன், தாடி அழகன் யார்னு தெரிஞ்சுக்கப் போட்டி நடந்ததாம். மீசை, தாடியை  முறுக்கிக்கிட்டுச் சும்மா  நூத்து அறுபது பேர் கலந்துகிட்டாங்களாம். அதுல இருந்து ரெண்டு, அதிகமில்லை ஜென்டில்மென், ரெண்டே சாம்பிள் தான்!

மீசைக்கு மட்டும்னு ஒண்ணு! மீசை தாடியோட ஒண்ணுன்னு! சரி நம்ம ஊர் மீசை,தாடி எதுவும் போச்சான்னு தெரியல!

ஏனாம்?

உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு விமரிசனம் கிறுக்கி எழுதித் தள்ளுற பதிவுலகக் கடமையிலே கண்ணாயிருந்துட்டாங்கன்னு, நடேசன் பூங்காப் பக்கம் திரியற பட்சி வந்து சொல்லிச்சு.

நாமும் பதிவுலகத்துல, குப்பை கொட்ட வந்திருக்கிற படியால, கடமைய வுட்ற முடியுமா?அதுக்காக, உ போ ஒவுக்கெல்லாம், உலகத் தர ரேஞ்சுக்கா   விமரிசனம் எழுத முடியும்?

அதனால,ரீமேக்  படத்துக்கு ஒரு ரெடிமேட் விமரிசனம், அதான், ஏற்கெனெவே யாரோ கொஞ்சம் நல்லாவே எளுதின  விமரிசனம், அத்தைப் போட்டு, நம்மோட பதிவுலகக் கடமையைக் கும்மியடித்துச் செஞ்சிடுவோம்!


from அம்மாஞ்சி by அம்பி 
திஸ்கி ஒண்ணு! --ஒரு புதன்கிழமைன்னு சரியாப் புரிஞ்சுக்கணும்.
விவகாரமா "ஏ " தரமான புதன் கிழமையான்னெல்லாம் கேட்டுறாதீங்க! வேறொண்ணுமில்லை ....பதில் தெரியாது!  இப்ப விமரிசனத்தைப் பாக்கலாமா?


"சில படங்கள் தான் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது நம் நினைவை விட்டு அகலாமல் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லை, நான் குருவி வகையறாக்களை பற்றி இங்கு பேசவில்லை. அந்த வகையில் வெட்னெஸ் டே குறிப்பிடதகுந்த படம். என் பதிவுக்கு தவறாமல் வரும் நிவி அக்கா சிபாரிசு செய்திருந்ததாலும், பல ஊடகங்களில் பாரட்டபெற்றதால் ஒரு வித எதிர்பார்ப்போடு இந்த படத்தை அணுகினேன்.

நயந்தாராவின் அபரிதமான நடிப்பால் தான் தமிழில் கஜினி கன்னாபின்னாவென ஓடியதாக்கும்! என்று அள்ளிவிட்டு என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் வெட்னெஸ் டே டிவிடியை பண்டமாற்றம் செய்து விட்டேன்.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்து விட்டு ஒற்றை பையுடன் தனி கிளைடர் விமானத்தில் ஜெய்பூர் அரண்மனை முன் வந்திறங்கி, உச்சா போக கூட ரீட் அண்ட் டெய்லர் சூட் மட்டும் அணிந்து காக்ரா சோளி, சராரா, பாந்தினி சில்க்ஸ் புடவைக்கு கை இல்லாத ரவிக்கையுடன், கார்னியர் லிப்ஸ்டிக் மின்ன "ஓ ஷப்பா, ஹை குடியே" என ஐநூறு பில்ஸ்பெர்ரி சக்கிப்ரேஷ் மைதாமாவு பெண்களுடன் ஆட்டம் போட்டு அதில் வரும் அடுத்தவன் பெண்டாட்டியை டாவடித்து, பின் அவள் தங்கச்சிக்கு தாலி கட்ட குதிரையேறி, முந்தின காதலிக்கு கண்ணீருடன் அல்விதா சொல்லும் ஷாரூக், சல்மான்களுக்கு மட்டுமே கதை பண்ணுவோம் நாங்கள் என்ற அடிப்படை நியூட்டன் விதிகளை தவிடுபொடி ஆக்கி விட்டார் இந்த படத்தின் டைரக்டர் நீரஜ் பாண்டே.

இந்தியாவின் நிர்வாக உள்கட்டமைப்பு, முக்ய முடிவுகள் எடுக்கும் திறன், தீவிரவாத தடுப்பு மற்றும் நீதி விசாரணை, தண்டனைகளின் தாக்கம் இவற்றை கொஞ்சம் கூட தயவுதாட்சண்யமின்றி உள்ளது உள்ளபடி காட்சிகளாக்கிய இயக்குனரின் தைரியத்தை எண்ணி நான் பிரமித்து நிற்கிறேன்.


ஒரு இந்தி படத்தில் ஸ்கர்ட் அணிந்த நாயகி கிடையாது, டைட் பனியனும், ரேபான் கிளாஸ் அணிந்த நாயகனும் இல்லை, ஏ.கே 56 ரக துப்பாக்கி, சாட்டிலைட் போன் வசதி கொண்ட வில்லனும் இல்லை.


பின்ன என்ன தான்யா இருக்கு இந்த படத்துல?


கதை இருக்கு, திரைக்கதை இருக்கு, உண்மைகளை டமால்னு போட்டுடைக்கும் தைரியம் மட்டும் இருக்கு.

ஒரு சாமான்யன் மனதில் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படி இருக்கும்? அதை அவன் எப்படி எதிர்கொள்வான்? என்பதை இதைவிட சிறப்பாக யாரும் காட்டமுடியாது. வசனங்கள் பல இடங்களில் பச்ச மிளகாய் ரகம்.
ஒரு மைக், வோடோபோன் நாய்குட்டி போல பின் தொடரும் கேமிராமேன் சகிதம் இன்று இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ற பெயரில் பேட்டி எடுக்கும் அரை டிக்கெட்டு ஜர்னலிஸ்ட்டுகளை செமையா கலாசி இருக்கிறார் இயக்குனர். ஆனாலும் மும்பை குண்டுவெடிப்பில் இந்த அரை டிக்கட்டுகளின் அட்டகாசத்தை நாடு நன்கு அறியும்.

Spoofing என்று சொல்லபடும் பகடி பண்ணுதல் எப்படி? என்பதை இந்த படத்தை பார்த்து உதவி இயக்குனர்கள் கற்று கொள்ளலாம்.

ஒரு வளர்ந்து வரும் ஹீரோ தமக்கு வரும் கொலை மிரட்டலுக்கு பயந்து போலிஸ் கமிஷனரிடன் உதவி கேட்கும் போது தான் ஒரு மைனாரிட்டி, எனவே தனக்கு பாதுகாப்பு வேணும்! என சொல்லும் காட்சி தூள்.

ஒரு வலுவான, துரிதமான திரைகதை எப்படி இருக்க வேண்டும்? எனபதற்க்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு. படத்தில் நஸ்ரூதீன் ஷாவும், அனுபம் கேரும் மிக இயல்பாக நடித்து உள்ளனர். "ஏய்ய்ய், நான் பாக்கத் தான் சுள்ளான், சூடானா சூரியன்" என கத்தும் நம்மூர் பஞ்ச் பரமசிவன்கள் அவசியம் இந்த இருவரின் நடிப்பையும் பார்க்க வேணும்.

எனக்கிருக்கும் ஒரே கவலையெல்லாம் எக்காரணம் கொண்டும் இந்த படத்தின் தமிழ் உரிமையை நம்மூர் ரீமேக் ராஜாக்களான காப்பி-பேஸ்ட் ரவியோ, விஜய்யோ வாங்கி விட கூடாது. :)

மொத்தத்தில் 'ஏ வெட்னெஸ் டே' இந்தியாவின் மெத்தன போக்குக்கு ஒரு சவுக்கடி."

அம்பி எழுதின விமரிசனத்தைத் தேடியெடுத்துப் படிச்சப்புறம்  தான் தோணிச்சு!அப்படியே ரீமேக் ராஜா பட்டியலோடு சொதப்பல் ராஜா கமலையும் சேர்த்துக் கொண்டிருக்கக் கூடாதா?

ஆவநாழி, நளதமயந்தி தயாரிச்சப்பல்லாம், அதுல தான் நடிக்காம, சத்யராஜையும், மாதவனையும் நடிக்க வச்சதனாலதான்  படத்தையே பாக்க முடிஞ்சது! கமலுக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை வந்ததுன்னு தான் தெரியல!

கேபிள் காரர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுன்னு சொல்றார். இன்னொருத்தர், சென்னையில மட்டும் தான் கொஞ்சம் ஓடுது, இன்னமும் மத்த இடங்களில் பிக் அப் ஆகலேங்கிறார்.

பதிவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை?

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்து, பதிவுலக யுத்தத்தின் அடுத்த சீசன் களை கட்ட ஆரம்பித்தாகி விட்டது!

நல்லா  அடிச்சுக்குங்க  ராசா!  நல்லா இருங்க! வேறென்னத்தைச் சொல்றது?

உன்னைப் போல் ஒருவன் - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு

 உண்மைத்தமிழன் சரவணன் சார்! பதிவுலகக் கடமையைச் செஞ்சாச்சு!குறிச்சு வச்சுக்கங்க!

நான் பேச நினைப்பதெல்லாம்........!


வால்பையனோட படம்! கருத்து தளத்துல இருந்து சுட்டது!

தேடுபொறிகள், வாசகர்களைக் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுவந்து உங்களுடைய பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டுமானால்,


காமம், காதல், கடவுள், நாத்திகம், பெரியார்,நம்புகிறவன் முட்டாள், கவிதை, கவுஜை, எதிர் கவுஜ, கானா பாட்டு, ஈழம், பொழுதுபோக்கு நாத்திகம், நமீதா, நயன்தாரா, பிரபுதேவா, ரஜினிகாந்த்,குஷ்பூ, சீமான், போலி டோண்டு, பிரபலப் பதிவர், நடேசன் பூங்கா, பதிவர் வட்டம்,மொக்கை, மொட்டைமாடி, மொட்டை மாடிக் கூட்டம், கிழக்கு, இம்சை, பா.ராகவன், சாரு நிவேதிதா, ஜெய மோகன், லக்கிலூக்,செக்ஸ் சாமியார், புதுசு கண்ணா புதுசு, குச்சிக்காரி..........................



மேலே குறிப்பிட்ட வார்த்தைகளில் எது ஒன்றை எடுத்துக் கொண்டு பதிவு எழுதினாலும், ஹிட்ஸ் குவிவது நிச்சயம்!நீங்கள் எழுதியதற்காக இல்லை! அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளாதீர்கள்! பின்னூட்டத்தில் கும்முவதற்காகவே, இங்கே என்னை மாதிரி நிறையப்பேர் இருக்கிறோம்! ஒரு எல்லைக்கு மேல் படிப்பவர்கள் ரத்தக் கொதிப்பு அளவு எகிறுவதும் சர்வ நிச்சயம்!


இந்த வார்த்தைகள் பட்டியலில் இன்னும் ஒன்றைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்!

வால்பையன்!


நம்ம வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போன ஞாயிற்றுக்கிழமை சென்னைக்குப் போய்விட்டு வந்தார். யுத்தம் சரணம் கச்சாமி, சுகம் ப்ரம்மாஸ்மி இப்படி என்னவோ அந்த நேரத்தில் தோன்றுகிற வார்த்தைகளை வைத்துக் கொண்டே, பதிவுகள், புத்தகங்கள் எழுதிக் குவிக்கிற பா.ராகவன் கூட இவருடைய வம்புத்தனமான பின்னூட்டங்களைப் பார்த்துக் கொஞ்ச அதிகமாகவே மிரண்டு போனார் போல இருக்கிறது!

பால் வடியும் முகத்தோட படத்துல பச்சப்புள்ள மாதிரி இருக்கற இவரா வால்ஸ்?
நம்ப முடியலையே என்று நினைப்பவர்களுக்காக, மேலே ஆரம்பத்தில் கருத்து தளத்தில் இருந்து சுட்ட படம்.  

சிறுகதை எழுதுவது எப்படி என்பதை, அதைப் பத்திரிகைகளில் படித்துப்பார்க்கிற உதவி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் இருந்துபேசிவிட்டு வந்த அனுபவத்தைத் தன் பதிவில் எழுதும் போது, வம்புப்பின்னூட்டங்களில் மிரண்டு போய், இவரிடம் தான் எவ்வளவு விஷயம் இருக்கிறது அன்று ஆச்சரியப்பட்டுப்போய் [அல்லது அரண்டுபோய்?] எழுதி இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!


சரி, வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போய் வந்தார், ஏதோ ஒரு சிறுகதை அல்லது வெறும் கதையாவது எழுவார் என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் வெறும் பச்சைப்புள்ளை, ரத்தம் கொப்பளிக்கிற யுத்த பூமியாக இருக்கும் சூடான தமிழ் வலைப்பதிவுகள் பக்கம் வந்தறியாதவர் என்றும், அப்படியே அபீட்டாயிக்கறது தான் நல்லதுன்னும் அர்த்தம்!


அதையும் மீறி வந்தவர்கள் என்றால், என்னை மாதிரி வால்பையன் ரசிகர் மன்றம், அல்லது வால்பையன் நற்பணி இயக்கத்து ஆளாகத் தான் இருக்க வேண்டும்! அட, மெய்யாலுமேங்க!

நற்பணி மன்றத்துக்காரங்க எல்லாரும் கூடி, சீக்கிரமே ஒரு நற்பணி ஆரம்பிக்கப் போறோங்க!




ஐம்பத்தைந்தே வரி, எட்டுப்பத்தியாகப் பிரித்து, நடுவில் சும்மா உள உளாக்காட்டிக்கு இரண்டு படம். தலைப்பு வைப்பதிலும் திறமையான தில்லாலங்கடி வேலையைக் காட்டி இருக்கிறார்! சென்ற பதினாறாம் தேதி போட்ட பதிவு. எப்பவும் போல, பட்டாசுச் சரத்தைக் கொளுத்திப் போட்டுவிட்டு, ஓரத்தில நின்னு வேடிக்கை பார்க்கிற வால்பையன், ஒன்னு ரெண்டு பின்னூட்டங்களில் கொஞ்சம் வீராவேசமாகப் பதில் எழுதியிருக்கிறார்.


பார்பனீயத்தின் புதிய தில்லாலங்கடி ! இது தான் தலைப்பு. இது வரைக்கும் நானூற்றுச் சொச்சம் பின்னூட்டங்கள்! ஏற்கெனெவே வால்பையனுடைய ஒரு பதிவில் டம்பி மேவீ ஏதோ பின்னூட்டமிடப்போக, ஈஸ்வரி ஆத்தா 'போடா லூசு' என்று அருள் வாக்குச் சொன்னதில், மனிதர் ரொம்பவுமே எச்சரிக்கையாக, "என் கருத்தை சொல்லி மீண்டும் ஒரு முறை "போடா லூசு" என்று பட்டம் வாங்க நான் தயாராக இல்லை........" என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.


அவர் பதிவு போட்டார். பின்னூட்டக் கும்மிகள் குவிந்தன, சரி இங்கே என்ன சொல்ல வருகிறாய் என்று தானேகேட்கிறீர்கள்?


இங்கே தான், எந்த ஒரு விஷயத்துக்கும் நேரெதிரான இரட்டைத் தன்மை இருக்கிறது என்று, இந்தப்பக்கங்களின் அடிநாதமாக இருக்கும் கருத்தை, மறுபடி உண்மையென நிரூபிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.


"கடளையே நம்பளையாமாம், வேதத்தை என்னாத்துக்கு நம்புறோம்!,

ஏன் எல்லா கடவுளுக்கு ரூல்ஸ் & ரெகுலேஷன் இருக்கு?

அது இல்லாம இருந்தா அது கடவுள் இல்லையா?

என்ன கொடும சார் இது!? “



பின்னூட்டத்திலும் வந்து நம்ம வால்ஸ் கொளுத்திப்போட்ட சரவெடி இது!


கொஞ்சம் கூட அசராமல், அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் வார்த்தைகளை உருவி எடுத்து. பின்னூட்டச் சரவெடிகளாக வால்பையன்வெடிப்பதைப் பார்த்து நம்ம ஜெய் ஹிந்துபுரத்துக்காரர் பீர், தனியாகவே ஒரு பதிவு போட்டார் "யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?" ரொம்பப் பொறுமையாக, இஸ்லாம் மார்கத்தை வால்பையனுக்கு எப்படியாவது புரியும்படி சொல்லியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதினமாதிரி இருந்தது. ஜெய்ஹிந்துபுரத்துக்காரருக்குச் சொன்னேன்:


'வாலுக்கு'பிரத்யேகமான பதிவு என்றாலும், சில விஷயங்கள் பொதுவாகச் சொல்லவேண்டித்தான் இருக்கிறது!


யானைக்கு மதம் பிடிக்கும்! ரொம்ப சரி, அதை விட மனிதனுக்கு 'மதம்' பிடித்துப்போய் விடும் நிலை இருக்கிறதே, அது அதைவிட மோசமானது!


அதைக் கண்டிக்கிறோம் என்று உண்மையிலேயே சீர்திருத்தங்களில் ஆர்வம் இருந்த சில பேர் வந்தார்கள்!அப்புறம் அது நிறையப் பேருக்குப் பொழுதுபோக்காகி விட்டது!


இங்கே பலரும் பேசுகிற நாத்திகம், பொழுதுபோக்கும் நாத்திகம் தான்!அவர்களுக்கு, விடைகளில், ஏன் எப்படி எதனால் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளும் பொறுமையும் இல்லை!


அதனால், யானைக்கு மதம் பிடிக்கும்! அப்புறம் வாலுக்கு என்ன பிடிக்கும் என்றால், 'லொள்ளு' தான்! அதுதான் சரியான விடையாகவும் இருக்கும்:-)).


ஒரு படத்தில் வடிவேலு, உளறிக் கொட்டி விட்டு,"அப்ப நானாத்தான் உளறி மாட்டிக்கிட்டனா?" என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொள்வது போல, பொழுதுபோக்கு நாத்திகம் பேசுகிறவர்களுக்கு, 'அவல்' எங்கிருந்து கிடைக்கிறதாம்?


மதங்களை உயர்த்திப் பிடிக்கிறேனென்று தாங்கிப்பிடிப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் வார்த்தையில் இருந்தே தான் கிடைக்கிறது!


ஆமாம், எனக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!



"The defenders of the truth are often worse than the enemies of the truth."



இந்தப்பதிவிலும் பின்னூட்டங்கள் ஒரு சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலு, விவாதம் முடிந்த பாடில்லை, யாரும் புதிதாக எதையும் தெரிந்துகொண்டதாகவும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபோதும் முடிவுக்கு வருவது இல்லை.


சீசன் ஒண்ணு, சீசன் ரெண்டு, சீசன் மூணுன்னு வளந்துகிட்டேபோகும்!


இது ஒருபக்கம் நடந்துட்டேயிருக்கும் அதே சமயம், இன்னொரு பக்கத்துல, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்துல கொஞ்சம் சுவாரசியமான விவாதம், ஏற்கெனெவே ரெண்டு மூணு வாட்டி சொல்லியிருக்கேன், "எது பக்தி" இந்தக் கேள்விக்கு விடைதேடும் விதமாக, ஒரு இழையில் விவாதம் நடந்துட்டிருக்கு!



அங்கே எல்லாமே சைவம் தான்! ரத்தம் சிந்துற, குடிக்குற வேலையெல்லாம் கெடையாது!


ரெகா என்கிற திரு கார்த்திகேசு, ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளர், போனமாசம் கலைமகள் மாத இதழில் கூட இவரோட நேர்காணல் வந்திருக்கு, அப்புறம் மோகனத் தமிழ் பேசும் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ரெண்டுபேரும் இழையில்  விவாதத்தை இப்படி நடத்துகிறார்கள்-வால்பையன் ரவுசு கட்டுற நாத்திகத்துலேயோ, நம்ம பீர், அவரோட நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறதுலேயோ காண முடியாத ஒரு விஷயம், கிட்டத்தட்ட, இதுதான் விஷயம்னு பிடிபடற அளவுக்கு இங்கே நடக்குது! படிச்சுப் பாருங்க!


"அரங்கனாரே!


நானும் ரவுசு (இதன் மூலம் செங்கிருதமா?) பிடித்தவன்தான்!தெரிந்த விஷயம்தானே!


பக்தி பற்றிப் பேசும் உங்கள் திறந்த மனப்பன்மை எனக்குப் பிடிக்கிறது. பக்தி என்பதை விரல் சுட்டிச் சொல்லிவிட முடியாது என்பது போல்தான் தொனிக்கிறீர்கள். அதுதான் யதார்த்தம் எனப்படுகிறது.


ஆனால் இப்படியே பேசிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில்,இப்ப்டியெல்லாம் பேசுவதில் பிரயோஜனமில்லை. "பகவத்கீதையில் கண்ணன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான்"


அல்லது "ஆழ்வார்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள்" என்று சிவப்பு நாடா கட்டி இந்தக் கோப்பை மூடிவிடுவீர்கள் என்றஅச்சம் எனக்கு இருக்கிறது.


ஏற்கனவே நமது ஆன்மீகப் பாரம்பரியத்துக்குள் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது; வேறு இடத்தில் தேடுவானேன் என வாய் அடைக்கப் பட்டிருக்கிறேன்.


எனினும் இந்த விசாரணைப் பாட்டை, அதில் காணுகின்ற தத்துவ நுணுக்கங்கள், மேற்கோள்கள், மனம், மூளை (அந்தர், பஹிர்-உள்ளே, வெளியே) பற்றிய அலசல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கின்றன. நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு. ஆகவேதான் விடாமல் படிக்கிறேன்.


நான் பயணி.பயணத்தின் இறுதி அடைவு பற்றி எனக்கு அவ்வளவாக அக்கறையில்லை (நம்பிக்கையும் இல்லை). ஆனால் உங்களோடு பயணம் செய்வது சுகானுபவம்,. அறிவைக் கிளறும் அனுபவமும் கூட.


என்னுடைய இரண்டு தம்பிடி ரவுசு இதோடு முடிகிறது.


ரெ.கா.


"வாருங்கள் திரு ரெ கா! இந்த அச்சமே உங்களுக்குத் தேவையில்லை.ஏனெனில் நான் எழுதுவது ஓர் இலக்கிய உத்தி என்ற முறையில் இல்லை. அதுவுமின்றி என்றுமே வெறும் நம்பிக்கையின் கட்சியை எள்ளளவும் மதிக்காதவன் நான்.


இனியும் மதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் எனக்குப் படவில்லை. எனக்கு உள்ளூற மயக்கம் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்துலகத்தில். பக்தி என்பதும், கடவுள் என்பதும் மிக ஆழமான கருத்து,அனுபவ உலகம் என்பது விடாமல் தோன்றிக் கொண்டிருக்கும் ஐயம்.



பக்தி என்பது எப்படிப் பெரும் அறிவுக்கான உழைப்பை உள்வாங்கத் தக்கதாய் இருக்கிறது எனப்படுகிறதோ அதைப்போலவேதான் அறிவின் பாற்பட்ட மூட நம்பிக்கைகளும் அறிவு போன்ற தோற்றம் கொண்டு சென்றவை வேஷம் கலைகின்றன.


எது எப்பொழுது நடக்கிறது என்பதுதான் நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.


மற்றபடி எப்படி முடிப்பது, அல்லது எங்கு கொண்டுபோவது, அல்லது முடிவு என்று ஒன்று இயலுமா, அல்லது இப்படி விசாரத்திலேயே இருப்பதுதான் என்தலைவிதியா? எதுவும் எனக்குப் புரிபடவில்லை. 'அறிதொறும் அறியாமை கண்டு, அற்று, ஆல்!' என்ற அர்த்தம் மட்டும் நன்கு புரிகிறது.



வர வர எழுத்தைக்கண்டே பயமாய் இருக்கிறது. மிகவும் தெரிந்துதான் ஒன்றை எழுதுகிறோம். ஜாக்கிரதையாக நன்கு கவனித்துத்தான் ஒரு கருத்தைக் கூறுகிறோம். ஆனால் எழுதி முடித்து அச்சாகி வந்து ஓர் உலா போனபின்பு அதே விஷயத்தில் புதிதாக ஒரு கதவு திறக்கிறது.


அப்பொழுது எழுதியது தவறா? இல்லை, பின் இந்தக் கதவு தெரியாமல் அதை எப்படி எழுதியது முழுமையாகும்? பின் தெரிந்து எழுதாமல், தெரியாமலேயே எழுதித் தொலைத்தோமா?



ஒரு நிலையில் நாம்தான் எழுதுகிறோமா அல்லது அவைதான் நம்மை வைத்து எழுதிக் கொள்கின்றனவா? இந்தப் புதிர் நிலத்தில் கால் வைத்தபடிதான் நான்
எதையுமே சிந்திக்கவோ எழுதவோ வேண்டியிருக்கிறது.


இதைவிட சுத்த அறியாமை நிலை சுகமாக இருந்தது."



--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


இருக்கிறது என்று சொல்பவரும், ஒரு எல்லைக்கு உட்படுத்தித் தான் சொல்ல வருகிறார்.

இல்லை என்று மறுப்பவரும் அந்த எல்லையை மறுப்பதில் மட்டுமே தனிக்கவனம் செலுத்துகிறார். ஆக, கடவுள் உண்டா, இல்லையா என்ற கேள்வி இங்கே ஒருவருக்கு ஒருவர் செய்துகொள்ளும் வரையறைகளை நிராகரிப்பது, மாற்றியமைப்பது என்ற அளவில் மட்டுமே நடந்து கொண்டிருப்பது தெளிவாகப் புலனாகிறது, இல்லையா?


விஷயம் என்னதென்று விளங்கிக்கொள்ளாமலேயே விவாதம் மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறோம்!


அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது!



இது சித்தர்கள் ஞான மரபு. இதே மாதிரி, இன்னொருத்தரும் கிட்டத்தட்ட இதே மாதிரி உருவகத்தில் சொன்னது நினைவு வருகிறதா?



But do not think that the drop alone becomes the ocean.


The ocean, too, becomes the drop.

சிறுதுளி மட்டுமே கடலாக ஆகிவிடும் என்றெண்ணாதே!
பெருங்கடலும் சிறுதுளியாய் ஆவதைப் பார்!



-ரூமி