Showing posts with label தொடரும் பதிவு. Show all posts
Showing posts with label தொடரும் பதிவு. Show all posts

பதினாறு வயதினிலே!


டீன் ஏஜ் என்று சொல்லும் பதின்மூன்றிற்கும் பத்தொன்பதற்கும் இடைப்பட்ட வயசு! இது நிஜமாகவே ஒரு ரெண்டும் கெட்டான் பருவம், இந்தப் பருவத்தில் என்னென்ன நடந்தது, எதை நீங்கள் பகிர்ந்துகொள்வீர்கள் என்கிற மாதிரி ஒரு சங்கிலிப் பதிவில் கோர்த்து விடுகிற ஆட்டம் இங்கே இணையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்டையில்  தான் கலந்து கொண்ட அதே வேகத்தில், பதிவர் கோவி கண்ணன் என்னையும் கோர்த்து விட்டு அழைப்பு விடுத்திருக்கிறார்.  
ன்னையின் பிறந்தநாள் தியானம், தோழர் வரதராஜனைப் பற்றி வந்து கொண்டே இருந்த சிந்தனைகளுக்கிடையிலுமே கூட, அவர் என்னையும் ஆட்டைக்கு வந்து கலந்து கொள்ளும்படி எழுதியிருந்ததை நினைவில் வைத்துக் கொண்டுதான் இருந்தேன்.
றியாத வயசு! எதையும் புரிந்துகொள்ளாத மனசு!

னால், எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவேண்டும், புரிந்துகொண்டுவிட வேண்டுமென்கிற தவிப்பு ஒன்று தான் இந்த பதின்மம் என்று தமிழ்ப்படுத்திச் சொல்கிற இந்தப் பருவத்தின் பொதுவான அம்சம். ரெண்டும் கெட்டான் தனம் தான் அதன் அழகு, அவலம், அசிங்கம் எல்லாமே! இப்படியும் இல்லாமல், அப்படியும் அல்லாமல் போன ஒரு பிராயத்தைப் பற்றி, இப்போது நினைத்துப் பார்த்து என்ன சொல்வது? எதைச் சொல்வது? அல்லது எதைச் சொல்லாமல் விடுவது? அதனால் யாருக்கு என்ன பயன்?
தின்ம வயதுகளில் எனக்குப் புத்தகங்களே எல்லாமாகவும் இருந்தன! விளையாட்டுக்களில் அவ்வளவு ஆர்வமிருந்ததில்லை. லியோ தோல்ஸ்தாய் மாதிரியான ஒரு நல்ல எழுத்தாளன், தன்னுடைய இளமைப் பிராயத்தை மட்டும் அல்லாமல், தன்னைச் சுற்றி இயங்கும் உலகத்தில் உள்ளவர்களுடைய இளமைப் பிராயத்தையுமே சேர்த்த ஒரு அனுபவமாக "இளமைப் பிராயத்திலே" (On Childhood) புதினத்தைத் திரும்பத் திரும்பப் படித்த , அதில் கதாநாயகனோடு ஏதோ ஒரு விதத்தில் ஈர்க்கப் பட்டதைச் சொல்லவா?

தாத்தாவும் பேரனும்-இது இன்னொரு உலகத்தில் இருந்து வந்த ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எனக்குப் படிக்கக் கிடைத்த புதினம். அமெரிக்க எழுத்து. முழுக்க முழுக்க, கதாநாயகன் தன் பாட்டனுடன் பல வகையான வேட்டைக்குப்போய் வரும் அனுபவங்களை ஆர்வத்தோடு சொல்கிற மாதிரியான கதை. வேட்டை, வேட்டையாடி உணவைச் சமைத்துச் சாப்பிடும் அனுபவம் என்று எனக்கு சம்பந்தமே இல்லாத ஒன்றைக் கதைக் களமாகச் சொல்லியிருந்ததையும், ஆர்வத்தோடு படித்த அந்தத் தருணத்தைச் சொல்லவா?

முடிவெட்டிக் கொள்வதற்காக மட்டும் சலூனுக்குப் போவது, அங்கே கடைக்காரர் மிகப் பிரயாசைப்பட்டு பைண்ட் செய்து வைத்திருந்த கன்னித்தீவு கதைகளைப் படிப்பதற்காக, அடிக்கடி போகிற இடமாகவும் ஆக்கிவைத்தது. கன்னித் தீவைப் படித்துக் கொண்டிருந்த சுவாரசியத்தில், அவர் அப்படியே, அண்ணா, திமுக, பெரியார் என்று பேசிப் பேசி, திராவிட இயக்கங்களின் அறிமுகம் கொஞ்சம் அதிகமாகவே ஆகிப்போனதாக, ஹிந்தி ஒழிக என்று கனவில் கூடத் தார் பூசிக் கொண்டு என்  பதின்ம வயது  தார் நிரம்பிய டின்னும், தென்னை மட்டைக் குச்சியுமாக ஆரம்பித்ததைச் சொல்லவா?

தின்மூன்று வயதில், எட்டாம் வகுப்பு! பொதுத் தேர்தலில், திமுகவிற்காக வாக்குக் கேட்டு ஓட்டுச் சாவடியில் பிரச்சாரம், கட்சி, அல்லது எவரது தூண்டுதலும் இல்லாமலேயே! ஆக, பதின்மவயதைப் புத்தகங்களும், அதற்கு அப்புறம் அரசியல் ஈடுபாடுமே பெரும்பகுதி ஆக்கிரமித்திருந்த காலம்!அதைச் சொல்லவா?
யில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுப்பது, பாம்புகள், பல்லிகள்  நடுவில் பாளையங்கோட்டை,  அது கூட வேண்டாம்! பக்கத்தில் உள்ள வாடிப்பட்டிக்குக் கூடப் போக முடியாமல் போனதால், மிகப் பெரிய அரசியல்வாதியாகவோ, அல்லது அப்படிப் பட்ட பெரிய அரசியல் வாதிக்குச் சரியான போட்டியாகவோ வர முடியவில்லை, அதனால் என்ன! ஒன்றும் குறைந்துபோய் விடவில்லை என்பதைச் சொல்லவா?.

தினைந்து, பதினாறு தாண்டினால் எல்லாப் பசங்களுக்கும் வருகிற வியாதி எனக்கும் வந்தது.ஒருதலைக் காதல்! ஒருதலையாகவே போய்க் கொண்டிருந்ததால், ஏதோ ஒரு இடத்தில் அது தானாகவே காணாமல் போனது கூட எனக்கு அப்போது தெரியவில்லை. அந்தத் தெரியாத் தனத்தைச் சொல்லவா?
மிழ் சினிமாப் படங்கள், வேறு எதைச் சொல்லிக் கொடுத்தனவோ இல்லையோ, இந்த மாதிரி அறியாத வயசுப் பசங்களின் மனதில், காதல் என்றால் என்ன என்பதைத் தப்புத் தப்பாகவே சொல்லிக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் நிஜம்!
புதிய பறவையில் சிவாஜி கடைசி சீனில் பேசுகிற வசனம்..காதலே நீ வாழ்க! பெண்மையே நீ வாழ்க! அன்றைக்குப் பார்க்கும்போது, உணர்ச்சிகரமாக இருந்தது, இப்போது திரும்பிப் பார்க்கும்போது மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது!

ஆக, டீன் ஏஜ் அல்லது பதின்மம் என்று குறிப்பிட்டுச் சொல்லும் இந்த ஏழு வருடங்கள், என்னைப் பொறுத்தவரை வேகமாகக் கடந்துபோன ஒரு நிழல் மாதிரித் தான் இப்போது தோன்றுகிறது. இந்தப் பருவத்தில், நல்ல நண்பர்கள், பெற்றோருடைய அரவணைப்பு, நல்ல புத்தக வாசிப்பு என்று இருந்ததைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லத் தான் வேண்டும். இந்தப் பருவத்தில், வேறு விஷயங்களில் கவனத்தைச் சிதற விடாமல் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய திறமை இருக்கும் இளைஞன் வாழ்க்கையில் காலூன்றிக் கொள்கிறான். கவனத்தை வேறு எங்கெங்கோ சிதறவிடுகிறவன், நிறையக் கசப்பான அனுபவங்களை எதிர்கொள்கிறான் என்பதைத் தவிர, என்னுடைய டீன் ஏஜ் பற்றிய மிகப் பிரமாதமான பிரமிப்பு அல்லது அபிப்பிராயம் எதுவுமில்லை  என்பது மட்டுமே உண்மை. கருவிலே திருவுடையான் என்று சொல்கிற அளவுக்கு, டீன் ஏஜ் சம்பவங்களை வைத்து, இன்றைக்குப் பெரிய ஆளாக இருக்கும் நான் அன்றைக்கே அதற்கான அஸ்திவாரத்தைப் போட்டு வைத்து விட்டேன் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு ஒன்றுமே இருந்ததில்லை.
புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கம், அண்ணன்மார்களிடமிருந்து மிகச் சிறு பருவத்தில் இருந்தே தொற்றிக் கொண்டது. அண்ணன்மார்கள் புத்தகத்தைப் படிப்பதில் தற்சமயம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், எனக்கோ குறைந்தது, இரண்டு, மூன்று செய்தித் தாட்கள், அப்புறம் என்ன தலைப்பில் இருந்தாலும் சரி, தினசரி முன்னூறு நானூறு பக்கங்களுக்குக் குறையாமல் படிக்கும் பழக்கம், இன்னமும் நீடிக்கிறது.
டுத்து, சிறுவயதில் தொற்றிக் கொண்ட அரசியல் ஈடுபாடு, நேரடி அரசியலில் இன்றைக்கு இல்லை என்றாலுமே கூட, இன்னமும் இருக்கத் தான் செய்கிறது. நாம் விட்டாலும், பாழாய்ப்போன அரசியல் நம்மைச் சும்மா இருக்க விடுவதில்லையே! இந்த வரிகளை  எழுதிக் கொண்டிருக்கிற தருணத்தில் கூட, பட்ஜெட் அறிவிப்புக்கள், அதன் பின்னால் உள்ள ஒட்டு அரசியல் பற்றிய சிந்தனை ஓடிக் கொண்டுதான் இருக்கிறது!
னக்கு ஒரு ஆச்சரியம்!


ன்ன எதிர்பார்த்து, கோவி கண்ணன் என்னை இந்த ஆட்டத்திற்கு அழைத்தார் ? என்னை  மாதிரி சுவாரசியமே இல்லாத டீன் ஏஜை  கடந்துவந்தவர்களும் கொஞ்சம் பேர் இருக்கிறோமே!

னால், இந்த டீன் ஏஜ் பருவத்தில் என் ஆர்வத்தைத் தூண்டிய, ஆதர்சமாக வளர்ந்த, நம்பிக்கையை விதைத்த, என்னுடைய திறமையில் எனக்கே நம்பிக்கையில்லாமல் துவண்டுபோய்க் கிடந்த தருணங்களில் என்னை எழுந்து நின்று போராடக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று நிறைய சுவாரசியமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களால் தான் இன்றைக்கு, ஒரு ஆளாகவும் நிற்கிறேன்! 




 

வால் நீளமாக இருப்பது நல்லது!



சேத் கோடின் எழுதியிருக்கும் இன்றைய பதிவைப் படித்துவிட்டு யோசித்துப் பார்க்கும் போது , இதுவரை புதுவருடத் தீர்மானங்களைப் பற்றிப் பேசிய விஷயங்களுக்கு, ஒரு சுவாரசியமான திருப்பம் தெரிகிறது.  கொஞ்சம் உறுதியோடு செயல்படுத்த முடிந்தால், ஒரு திருப்புமுனையையே எதில்வேண்டுமானாலும்  ஏற்படுத்திவிட  முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று பளிச்சிடுகிறது!

கெவின் கெல்லி என்பவருடைய இந்தப் பதிவு, தன்னுடைய சிந்தனையைப் புரட்டிப் போட்டு விட்டது என்று சேத் கோடின் ஆரம்பிக்கிறார்.

ஆயிரம் நண்பர்ளை, உங்களைப் பின்தொடர்பவர்கள், உங்களுக்காக எது  வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவர்களாக உங்களால் பெற முடிந்தால், என்னென்னவோ சாதிக்க முடியும்!

அப்படி என்றால் என்ன அர்த்தம்?

இந்த ஆயிரம் என்னென்னவெல்லாம் சாதிக்கும்?

உங்களை உண்மையாகவே பின்தொடரும் இந்த ஆயிரம் பேர், நீங்கள் எது சொன்னாலும் காதுகொடுத்துக் கேட்பார்கள், நீங்கள் என்ன கனவுகளை விற்க முயற்சித்தாலும் தயங்காமல் வாங்கிக் கொள்வார்கள். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான் என்று பாட்டுப் பாடாமலேயே உங்கள் பின்னால் வரத் தயாராக இருப்பார்கள்.

ஆக எந்த ஒரு பெரிய சாதனை, முயற்சி, வெற்றி என்று சொல்லப்படுவதற்குப் பின்னால், இந்த மாதிரி ஆயிரம் உண்மையான பின்தொடர்ந்துவரும் நண்பர்களைச் சம்பாதிப்பதில் தான் ஆரம்பமாகிறது. ஆயிரம் என்பது ஒரு எண்ணிக்கை. இப்படிப்பட்டவர்களை உங்களோடு இணைத்துக் கொள்வதில் இருந்துதான், அவர்கள் நீங்கள் காட்டும் பாதையை ஏற்றுக்கொள்வதும், உங்களோடு கூட வருவதுமான வெற்றிப் பயணம் ஆரம்பிக்கிறது.

கெவின் கெல்லி தன்னுடைய பதிவில் இப்படி ஆரம்பிக்கிறார்:

"வால் நீண்டு கொண்டே போவது இரண்டு  விதமான தரப்பை ரொம்பவுமே மகிழ்ச்சியடையச் செய்யும். அதிர்ஷ்டக்காரர்களான சந்தையைக் கைப்பற்றுகிறவர்கள், சந்தையில் வாங்குகிறவர்கள் இப்படி இரண்டு தரப்பையுமே!"


வரப்புயர நீர்  உயரும்னு தானே நாமெல்லாம் படிச்சிருக்கோம்! கெவின் கெல்லி கொஞ்சம் வித்தியாசமா, வால் நீள, தலை நிமிரும்னு சொல்லியிருக்காரு! படத்தைப் பாருங்க!வாலைத் தேடவேண்டாம்!

இங்கே கெவின் கெல்லி சொல்வது தலை-வால் என்ற இரண்டு அம்சத்தைப் பற்றி! வேறு எதனோடும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!

இப்படி ஆயிரம் உண்மையான நண்பர்களைச் சம்பாதிப்பது, முடியக் கூடிய ஒரு விஷயம் தான்! ஒரு நாளைக்கு ஒன்று என்று ஆரம்பித்தால் கூட உங்களால், மூன்று வருடங்களுக்குள் இந்த இலக்கை எட்டி விட முடியும்.

அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுகிற விதத்தில் உங்களுடைய தயாரிப்பு இருக்க வேண்டும்! இங்கே உதாரணத்துக்கு வலைப்பதிவுகளையே எடுத்துக் கொள்வோமே, அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வழியைக் காட்ட உங்களால் முடியும் என்றோ, அவர்களுக்கு பயன் படுகிறவிதத்தில் உங்களுடைய பதிவுகளை அவர்களை அடையாளம் கண்டு கொள்கிற மாதிரியோ ஆரம்பித்து, அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ளவும் உங்களால் முடியுமானால், ஆயிரம் பேர் மட்டுமல்ல இன்னும் அதிகமாகவே உங்களைப் பின்தொடரத் தயாராக இருப்பவர்களாக மாற்ற முடியும்!

இப்படி உண்மையான நண்பர்கள் கிடைப்பது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். இந்த மாதிரி நண்பர்களை சந்தோஷப்படுத்துவதே கூட ஒரு சந்தோஷகரமான அனுபவமாகவும், வாழ்க்கைக்கு உயிரூட்டுவதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு செங்கல்லாகத் தான் அடுக்குமாடிக் கட்டடம் எழும்புகிறது. உண்மையான நண்பர்களைப் பெறுவதுமே கூட ஒவ்வொன்றாகத் தான் தொடங்குகிறது. சின்னச்சின்னத் துளிகளாகப் பொழியும் மழை, பெரு வெள்ளமாக மாறுகிறது!   பசுமை தழைக்க வழிசெய்கிறது! உயிர்கள் நிறைவு பெறுவதும், திருப்தியடைவதும் இப்படித்தான் ஆரம்பமாகிறது!

புது வருடத் தீர்மானங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்பது, உங்களுடைய உடனடித் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப் படும்போது தான், எதைத் தீர்மானிப்பது, எப்படிச் சாதிப்பது என்ற குழப்பம், ஏதோ ஒன்றுக்காக இன்னொன்றைத் தியாகம் செய்ய வேண்டிய சூழல் என்றெல்லாம்வருகிறது.

உண்மையான அணுக்கமான நண்பர்களை, ஒருவருக்கொருவர் உதவியாக, ஆதூரமாக, ஆதரவான வார்த்தைகளின் வழியாகவே பதிவுகளில் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்கிறபோது, ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பை வளர்த்துக் கொண்டு, வசவுகள், காயம்பட்ட மனங்கள் என்று இருக்க வேண்டிய அவசியம் தான் என்ன? வாதங்கள் பிடிவாதங்களாக இறுகிப்போய் விடாமல், இளக்கம் வேண்டும்! இணையம்இதயங்கள் இணைவதற்காகவே! 

நல்ல எண்ணங்களை விதைத்தல், வெறும் கோஷமாகவோ உபதேசமாகவோ நின்று விடாமல், தமிழ்வலைப்பதிவுகளில் வளர வேண்டும் என்பது வெறும் ஆசையாக மட்டும் இருந்தால் போதுமா? வார்த்தைகளில் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே போதுமா?

செயல்படுத்தும் வாய்ப்பும், பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது! நம்மிடமிருந்தே  இந்த ஆயிரத்தில் ஒன்று ஆரம்பிக்கிறது!

சேத் கோடின் அதைத் தான் ஆயிரம் என்ன செய்யும் என்பதாகச்  சொல்கிறார்! முதலில் ஆயிரத்தைச் சம்பாதிக்க ஆரம்பிப்போம்!



சரியாப் பத்த வைக்கக் கூடத் தெரியலையே, பரட்டை! புது வருடத் தீர்மானங்க‌ள் பத்து!





சரியாப் பத்த வைக்கக் கூடத்  தெரியலையே, பரட்டை! புது வருடத் தீர்மானங்க‌ள் பத்து!


முதல்  மூணும் பாத்தாச்சு  இல்லையா! இப்ப மிச்சமிருப்பது என்னன்னு பாக்கலாம்!


புதுவருடத் தீர்மானம் நம்பர் நான்கு!


இனிமேல் தமிழில் வலைப்பதிவர் யாரையும் வாலைத் தொட்டு, தலையைத் தொட்டு எழுதுவதில்லை! இங்கே கற்றுக் கொள்ள வருபவர்களைவிட, க‌ற்றுக்கொடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பதும், நானும் அதில் சேர்ந்து ஒரு எண்ணிக்கையைக் கூட்டுவானேன் என்பது  மட்டுமே காரணம்.அல்ல.  


இணையம் என்பது மனிதர்களை, மனங்களை இணைக்கிற கருவியாக இருக்கும்போது, கற்றுக்கொள்ள உதவும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பை, அருவருப்பை வளர்க்கிற போக்குகளுக்குத் துணையாக ஆகிவிடக் கூடாது என்பதாலும் தான்!






நல்லதை நானும் கேட்பேன், என்னுடைய நண்பர்களும் கேட்பார்கள், இந்த நாடுமே கேட்கும் என்ற நிலையை உருவாக்கக் கூடிய நல்ல எண்ணங்களாக, நல்ல செயல்களாக ஆரம்பித்து வைப்பது நம்மிடம் இருந்தே தொடங்குகிறது!





புதுவருடத்தீர்மானம் நம்பர் ஐந்து !

சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வு! ஏற்கெனெவே ஒரு பதிவில் சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்கக் கூடிய பாலித்தீன் பைகளைத் தவிர்ப்பது, நமக்குத் தெரிந்த நண்பர்களிடமும் எடுத்துச் சொல்வது, தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பொம்மைகளையும் தவிர்ப்பது, அக்கம் பக்கத்தில் குப்பையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் தீ வைத்துக் கொளுத்துவதைத் தவிர்ப்பதும் முடிந்தவரை தடுப்பதும் பற்றிப்  பேசியிருக்கிறோம்.

அதே மாதிரிக் கொசுத் தொல்லை
! இங்கே அரசும் அரசியல்வாதிகளும் வெறுமே பேசிக்கொண்டு மட்டுமே இருப்பார்கள். அரசு மருத்துவ மனைகளில் சிக்குன்குனியா, மலேரியா என்று விதவிதமாய்ப் பரவிக் கொண்டிருந்தபோது அரசு அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருந்தது. அரசு மருத்துவர்கள் எப்போதும் போலப் பொறுப்பில்லாமலேயே நடந்து கொண்டார்கள். தேவையான மருந்துகள் இல்லை.

சுற்றுப்புறத்தை வியாதிகளைப் பரப்பும் கிடங்காக மாற்றிவிடாமல் இருப்பதில் விழிப்புணர்வைக் கொஞ்சமாவது ஏற்படுத்த முனைவது
. நமக்கு நாமே என்பது வெற்றுவார்த்தை தான்  என்ற அனுபவமிருப்பதால், தன்கையே தனக்குதவி என்பதை உணர்ந்து செயல் படுவது.

புதுவருடத் தீர்மானம் நம்பர் ஆறு!





ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று தீர்மானங்களை, இந்த ஆறோடு  முடித்துக் கொள்ள முடிந்தாலே  நல்லது தான்! நீளம் குறையும்! ஆனாக்க, பத்து இல்லைன்னாப் பத்தாதாமேன்னு தலைப்பே புது வருடத் தீர்மானங்கள் பத்து என்று என்றிருக்கும்போது, இன்னும் கொஞ்சம் சொல்லத் தானேவேண்டியிருக்கிறது!

இந்தத் தொடரும் பதிவைத் தொடங்கிய போதே
, சென்ற டிசம்பர் மாதம், ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடாக மாதம் தோறும் வெளிவரும் மின் இதழ் 





அதன் தலையங்கத்தைத் தொட்டுத் தான் ஆரம்பித்திருந்தேன்!

As the year draws to a close, we at Next Future wonder at what our personal achievements have been. Our main objective is to share some powerful thoughts with our readers. We constantly aspire that the views expressed in the magazine may inspire and motivate others to move closer and closer towards the light. And it is almost an ardent prayer on our part to use the magazine as a platform through which we can offer our best and highest, not just to those who share the moment with us, but to the One who is the source of all our effort and our inspiration.”



இப்படி அந்தத் தலையங்கத்தை எழுதிய குழு, இது வரை என்ன செய்திருக்கிறோம், இன்னும் செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பற்றிய சுய அலசலாக, விமரிசனமாக எழுதியிருந்ததைப் படித்தபோது, அதே மாதிரி சிந்தனையோட்டம் எனக்குள்ளும் ஓட ஆரம்பித்தது.


What I am doing here? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்? சிந்தனையின் மையப்புள்ளியாக இந்த ஒரு கேள்வி தான் இருக்கிறது.
7. ஒரு வங்கியில், வியாபாரத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஐந்தொகை எனப்படும் லாப நஷ்டக்கணக்கைப் பார்ப்பது போலவே, வாழ்க்கையின் சில தருணங்களில் நாம் யார், இங்கு எதற்காகப் பிறந்தோம், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாகவே கேட்டுக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது

8. வாழ்க்கையில் எதுவுமே நஷ்டக்கணக்காகவோ, மீள முடியாத திவால் நிலையாகவோ இருந்துவிடுவதில்லை, ஒவ்வொரு அனுபவமுமே, அது மிகக் கசப்பானதாக இருந்த போதிலுமே கூட, அடுத்தபடிக்கு உயர்த்தும் உன்னதமான தருணமாகவும் அனுபவமாகவும் இருக்க முடியும்

9. இதை வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கும் போதேஇதன் அனுபவங்களையும் ஒரு கட்டத்தில் அலசிப்பார்த்தாக வேண்டியிருக்கிறது

10. ஒன்றோ இரண்டோ, அல்லது பத்தோ, உண்மையான சாரம் என்னுடைய தீர்மானங்களில் மட்டும் இல்லை, வெறும்  எண்ணிக்கையில் மட்டும் இல்லைஒவ்வொரு அனுபவத்திலும் நான் என்ன கற்றுக்கொண்டு வருகிறேன் என்பதே ஒரே மையக் கருத்து

இதை வைத்து மட்டுமே என்னுடைய தீர்மானங்களும், தொடர்ந்து வரும் செயல்களும், விளைவுகளும் இருக்கும்! அதில் இருந்து அடுத்து வேறொன்றில் மையம் கொண்டு இதே தேடல்தொடரும்!



என்னவோ எதிர்பார்த்து, எப்படியோ முடித்திருப்பதில் ஒன்றிரண்டு நண்பர்களுக்குக் கொஞ்சம் சுவாரசியமே இல்லாமல் போய்விட்டதாகத் தோன்றலாம். கொஞ்சம் சொந்த அனுபவங்களைக் கவனிக்கப் பழகுங்கள்! வாழ்க்கை மிக அற்புதமானது 

முடிவே இல்லாததுபோல ஒரு பக்கம்,என்ன என்று கேட்பதற்குள் முடிந்து போய்விடுகிற இன்னொரு பக்கம் ஆக இரண்டு நிலைகளுக்கும் இடையில், அனுபவங்களே கடந்துபோகிற பாலங்களாக, கூடவே வருகிற துணையாக, சகபயணிகளை நேசிக்கும் இயல்பாக, நம்முடைய மனப்பக்குவத்திற்கு ஏற்றபடிமாறிமாறி வந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்!

'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

கவிஞர் கண்ணதாசனுடைய இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது, அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே நன்றாகப் புரியும்!



கீதை மீது திடீர்க் காதல்!



மூன்று நாட்களுக்கு முன்னால் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் மேலாண்மைப் பாடத்தில் பகவத் கீதையைச் சேர்க்கலாமா என்ற விவாத இழையைப் பார்த்தேன். ஏற்கெனெவே மேலாண்மைத் துறை நிபுணர்கள் பலரும் கீதை சொல்லும் கருத்துக்கள், வெறும் புராணக் கதை, மத நம்பிக்கை என்பதற்கும் மேலாக வாழ்வியல் உண்மைகளைப் பிரதிபலிக்கும் சிந்தனையாகவும், சிக்கல்களில் இருந்து விடுபட உதவும் பாடங்களாகவும் இருப்பதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்பதால் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலுமே, கீதை சொல்லும் படிப்பினைகளை வைத்து, மேலாண்மையைச் சொல்லிக் கொடுப்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது என்பது முன்பே தெரிந்த விஷயமாக இருந்ததால், அதைப்பற்றி அப்போது அதிகமாக  யோசிக்கவில்லை. தவிர அந்த விவாத இழையுமே கூட, தினமலரில் வந்த ஒரு செய்தியை வைத்து ஆரம்பித்து, "மதம் சார்ந்த புத்தகங்களிலிருக்கும் கருத்துக்களை பாடத்தில் சேர்த்தால் பிரச்சனைகள் வருமே ?" என்று திரு காமேஷ் என்பவர் கவலைப் பட்டிருக்கிறார்.


கீதை சொல்லும் மிக முக்கியமான கருத்து, அதன் பதினெட்டாம் அத்தியாயத்தில் அறுபத்தாறாவது ஸ்லோகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது!
மா சுச:  கவலைப் படாதே! நம்மூரு செக்குலரிசம் என்ன என்னவெல்லாம் செய்யும் என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டு அப்போதைக்குப் பேசாமல் இருந்து விட்டேன். இன்றைக்கு, சேலத்தில் இருந்து நண்பர் என். இளங்கோ ஒரு ஃபார்வர்ட்  மெயிலில் வந்த தகவலை எனக்கும் அனுப்பியிருந்தார். சில நாட்களாகவே, Guest Post என்று சில நண்பர்களை, குறிப்பிட்ட விஷயத்தைத் தொட்டுச் சொல்லும் பதிவுகளாக எழுதச் சொன்னால் என்ன என்ற யோசனை இருந்து கொண்டே இருந்த நேரத்தில், மிகப் பொருத்தமான ஒரு விஷயம், அந்த ஃபார்வர்ட்  மெயிலில் இருந்ததால் முதல் Guest Post தயார்!

நல்லதை நானும் கேட்பேன், என்னுடைய நண்பர்களும் கேட்பார்கள், இந்த நாடுமே கேட்கும் என்ற நிலையை உருவாக்கக் கூடிய நல்ல எண்ணங்களாக, நல்ல செயல்களாக ஆரம்பித்து வைப்பது நம்மிடம் இருந்தே தொடங்குகிறது!

கீதையை காதலிக்கும் அமெரிக்கா

வணிக மேலாண்மையில் மிகப்பிரபலமான ஆசிய புத்தகமாக சன் ட்சூவின் "ஆர்ட் ஆப் வார்"  இருந்து வந்தது."ஆர்ட் ஆப் வார்" தொன்மையான நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பகவத் கீதை ஆர்ட் ஆப் வாரின் இடத்தை பிடிக்கப் போகிறது
என பிஸினஸ் வீக் பத்திரிக்கை தெரிவிக்கிறது.


அமெரிக்க கம்பனிகள் கீதையின் மேல் காதல் கொள்ள துவங்கியிருப்பதாக தெரிவிக்கும் பிஸினஸ் வீக் அதை பற்றி ஒரு சிறப்பு கட்டுரை எழுதியுள்ளது. கீதையில் உள்ள நிர்வாக மற்றும் சுயமுன்னேற்ற கோட்பாடுகள் அமெரிக்க கம்பனிகளை பெரிதும் கவர்வதாக பிஸினஸ் வீக்  குறிப்பிட்டுள்ளது.

ஸ்வாமி பார்த்தசாரதி எனும் வேதாந்த உபன்யாசகர் உலகின் மிகப்புகழ் பெற்ற பிஸினஸ் பல்கலைக்கழகமான வார்ட்டனில் கீதையை பயன்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என மாணவர்களுக்கு வகுப்பெடுத்தாராம். அமெரிக்காவின் நிதி மற்றும் முதலீட்டு வணிகர்கள் (வென்சர் காபிடலிஸ்ட்ஸ்) நிரந்தரமாக மன அழுத்தத்தில் சிக்கியிருப்பவர்கள்.

அவர்களுக்கு ரை, நியூயார்க்கில் ஸ்வாமி பார்த்தசாரதி நடத்திய வகுப்பில் பொருளை தேடி உள்மன அமைதியை தொலைப்பதை பற்றி கீதை சொல்லியிருப்பதை குறிப்பிட்டு பேசினார் என்கிறது பிஸினஸ் வீக்.
லீமன் பிரதர்ஸ் எனும் கம்பனியில் பார்த்தசாரதியிடம் ஒரு இன்வஸ்ட்மண்ட் பாங்கர் தனது சகபணியாளர்கள் உருவாக்கும் அவஸ்தையை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதற்கு பார்த்தசாரதி "அவர்களை உன் மனதிலிருந்து அகற்றிவிடு" "உன் வாழ்வை நீ தான் உருவாக்குகிறாய்" என்று பதில் சொன்னதை குறிப்பிட்டு சிலாகிக்கிறது பிஸினஸ் வீக்.

ஸ்வாமி பார்த்தசாரதியின் உரைகள் ஒரு சாம்பிள் தான் என்கிறது பிஸினஸ் வீக். அமெரிக்க கம்பனிகள் இந்திய தத்துவத்திலும் நூல்களாலும் கவரப்படுகின்றன என்கிறது பிஸினஸ் வீக். அமெரிக்க கம்பனிகள் இந்திய தத்துவத்தை தழுவுகின்றன (American firms embrace Indian philosophy) என்றே சொல்லி சிலாகிக்கிறது பிஸினஸ் வீக்.

பகவத் கீதை என்றில்லை, பல இந்திய தொன்மையான நூல்கள் அமெரிக்க கார்ப்பரேட்களாலும் கன்சல்டன்ட்களாலும் பயன்படுத்தப்படுகின்றனவாம். அமெரிக்காவின் மிகப் பிரபலமான பிஸினஸ் பல்கலைகழகங்கள் மாணவர்களுக்கு "தன்னை அறிதல்" மற்றும் "உள்மன அமைதி" ஆகிய இந்திய தத்துவங்களை போதித்து மானேஜர்களுக்கு தலைமை தாங்கும் பண்புகளை கற்பிக்கின்றன என்கிறது பிஸினஸ் வீக்.

இந்திய நூல்கள் போதாது என்று இந்தியர்கள் புகழ் பெற்ற மானேஜ்மன்ட் குருக்களாகவும் புகழ் பெறுகின்றனராம். சி.கே பிரஹலாத், ராம்சரண், விஜய் கோவிந்தராஜன் போன்ற கன்சல்டன்ட்கள் உலகின் புகழ் பெற்ர பிஸினஸ் குருக்களாக இருக்கின்றனர் என்கிறது பிஸினஸ் வீக்.

"
கெல்லாக், வார்ட்டன், ஹார்வர்ட், டார்மவுத் ஆகிய புகழ் பெற்ற ஐவி லீக் பிஸினஸ் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் இந்திய கலாச்சாரத்தையும், அதன் சிறப்பியல்புகளையும் அறிந்து கொள்கின்றனர்" என கெல்லாக் பிஸினஸ் ஸ்கூலின் டீனான தீபக் ஜெயின் தெரிவிக்கிறார்.

வணிகம் என்பது லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது எனும் இந்திய கொள்கை வெகுவாக வரவேற்பு பெறுவதாக சொல்கிறது பிஸினஸ் வீக். வணிகம் சமூக நலனை தான் முக்கியமாக கருதவேண்டும் எனும் இந்திய கலாச்சார கோட்பாடு வணிக நிர்வாக உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும் என்றும் பிஸினஸ் வீக் கணிக்கிறது.

கீதை வழி நிர்வாகத்தை "இன்க்ளூசிவ் கேபிடலிசம்(Inclusive capitalism)" என்கிறார் சி.கே பிரஹலாத். சமூகநலனையும், லாபத்தையும் கம்பனிகள் ஒருங்கே உருவாக்க வேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படை.

கீதை வழி நிர்வாகத்தை "கர்மா கேபிடலிஸம்" என்றே அழைக்கிறது பிஸினஸ் வீக். என்ரான், டெக்னாலஜி பப்பிள் என வெறுத்து போயிருக்கும் அமெரிக்கர்கள் கீதையை மனதார காதலிக்கின்றனராம்.. அமெரிக்காவின் தற்போதைய புகழ் பெற்ற கிழக்கின் மானேஜ்மெண்ட் நூல் கீதைதான் என சொல்லுகிறது பிஸினஸ் வீக்.. ஸ்ப்ரிண்ட் நெக்ஸ்டெல் கார்ப்பரேஷனின் மானேஜர் ஒருவர் எழுதிய "Bhagavad Gita on Effective Leadership"
 என்ற நூல் விற்பனையில் சக்கைபோடு போட்டதாம்.

ஜெனெரல் எலக்ட்ரிக்கின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி எம்மெல்டுக்கு பயிற்சி அளிக்கும் ராம்சரண்  "கடமையை, சுயநலத்தை விட பெரிதாக வலியுறுத்தும் கீதை கார்ப்பர்ரெட் நிர்வாகத்துக்கு அளப்பரிய பொருத்தம் வாய்ந்தது" என்கிறார்.

இந்திய தத்துவமரபு அமெரிக்க கம்பனிகளுக்குக்கு மிகப் பொருத்தமானது என புகழாரம் சூட்டுகிறது பிஸினஸ் வீக். சந்தையியல் துறைக்கும் கீதை பொருத்தமானது, சிறப்பு வாய்ந்தது என சொல்கிறது பிஸினஸ் வீக்.

"எவன் என்னை பிறப்பற்றவன் என்றும் அநாதியானவன் என்றும் உலகங்களுக்கெல்லாம் தலைவன் என்றும் அறிகிறானோ அவனே தன்னை அறிந்தவன். என்னை நன்றாக அறிந்த மனிதனே தன்னை நன்றாக அறிந்தவனாகிறான்.அவனே மனச்சாந்தி அடைகிறான்"

- கீதையில் கண்ணன்.

எப்போது ஆரம்பித்தது என்ற விவரம் இல்லை! இந்த ஃபார்வர்ட் இணையத்தில் மெயில் சுற்றிக் கொண்டுவந்து இந்த  நேரம் பார்த்து என்னிடம் வந்துசேர்ந்திருக்கிறது. இதை சங்கிலியாக .ஆரம்பித்துவைத்தவர் திரு குமார ராஜா! அபு தாபியில் ஒரு பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

Mr.Kumara Raja.
Senior Sustainability Engineer,
Masdar Development Project 1,

ETA M&E Division,
Abu Dhabi.
Mobile:+971-50-2218843 என்ற விவரம் மட்டும் கிடைக்கிறது. பிசினெஸ் வீக் பத்திரிகையின் முதல் லிங்க் மூன்று வருடத்துக்கு முந்தைய செய்தி. இரண்டாவது ஒரு வருடத்துக்கு முந்தையது. லெமன் பிரதர்ஸ் சரிவைச் சந்திக்க ஆரம்பித்தபோது., வரிசையாக அமெரிக்க வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள் கவிழ ஆரம்பித்த தருணத்தைஒட்டியது.

 நிகிதா மீரா!
இதை எனக்கு ஃபார்வர்ட் செய்த நண்பர் திரு இளங்கோ, சேலத்தில் ஒரு பொறியியல்  கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு  எனது நன்றி!
மகள் நிகிதா மீரா மற்றும் வீட்டில் அனைவரும் நலம் தானே இளங்கோ!
******
போன பதிவில் புது வருடத் தீர்மானங்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன்! பத்த வச்சுட்டியே பரட்டை என்று ஒரு தொடர் சங்கிலி இடுகைக்கு என்னை விதூஷ் என்கிற வித்யா அழைத்திருக்கிறார்! பத்துப் புதுவருடத் தீர்மானங்கள் பற்றி எழுத வேண்டுமாம்! பரட்டைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு, பத்தவைப்பது எப்படி என்பது கூட மறந்து போய்..... {வெண்குழல் வேந்தராக இருந்த காலம் ஒன்று உண்டு! மூன்றரை வருடத்திற்கு முன்னால், பைபாஸ் சர்ஜரி பண்ணிக் கொள்ள நேரிட்ட போது,  சிகரெட்டைப் பத்தவைக்கிற, ஊதுகிற பழக்கமும் போயே போயிந்தி!)

விதூஷுக்கு  ரெசொல்யூஷன் என்றால் என்ன தெரியாதாம்! இந்தப் படங்களைக் கொஞ்சம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்! எதுவுமே தெரியாதென்றால், சரியான விடை கடைசியில் இருக்கிறது! 



அதே மாதிரி எனக்கும், பரட்டை, பத்தவைப்பது ரெண்டுமே தெரியாது!
இந்த சங்கிலித் தொடர் ஆட்டம் எத்தனை மாதங்கள் நீடிக்கும், இன்னும் எத்தனை பேரைப் பீடிக்கும்  என்று ஒருத்தர் அங்கே கிலியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்! அந்த மாதிரி பயந்த சுபாவம் உள்ள, மென்மையான மக்களுடைய நலம் கருதி, இந்தத் தொடர் ஆட்டத்தையும், தொடர் கதை மாதிரி, அடுத்து வரும் ஒவ்வொரு பதிவிலும், இரண்டு அல்லது மூன்று தீர்மானங்களாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதலாம் என்று ஒரு ஆறுதலான செய்தியைச் சொல்லி விட்டு............


புது வருடத் தீர்மானம் நம்பர் ஒன்று!

பிறக்கிற புது வருஷத்திலாவது, இப்படி எழுதிக் குவிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற யோசனையைக் கூட, புத்தாண்டுத் தீர்மானமாக அறிவித்துவிடலாமா என்று தோன்றுகிறது!

எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு தடுமாற வேண்டாம்! நேத்தைக்கு எழுதினது தான் இது!

புது வருடத் தீர்மானம் நம்பர் ரெண்டு!

எத்தனையோ புத்தகங்கள், செய்திகளைப் படிக்கிறோம்! ஆனால், தமிழில் படித்ததைப் பற்றி, தங்களுடைய விமரிசனமாக, கருத்துக்களாக எழுதும் பதிவுகள் மிஞ்சிப் போனால் ஒரு ஏழு அல்லது எட்டு இருக்குமா? இந்தப் பக்கங்களில், பெரும்பாலானவை, படித்ததில்  என்னைத் தொட்ட விஷயங்களைப் பற்றிக் கொஞ்சம் மேலோட்டமாகச் சொல்லிக் கொண்டு போனாலும், படித்த புத்தகங்களில் ஒவ்வொன்றாக ஒரு முழுமையான விமரிசனமாக அல்லது எனக்குள் ஏற்படுத்திய தாக்கமாக, வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும். இந்தப்பக்கங்களில் எனக்குள் இருக்கும் வாசகனும் வெளிப்பட வேண்டும்இல்லையா! 

புது வருடத் தீர்மானம் நம்பர் மூன்று!

வருகிற புது வருடத்திலாவது, இப்படித் தொடரும், சங்கிலிப் பதிவுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது! இந்த வருடத்தில் இது மூன்றாவது சங்கிலித் தொடர்! முதலில் கோவி கண்ணன் அழைத்தார்! அப்புறம் வால் பையன்! இப்போது விதூஷ்! என்னால் முடிந்த நல்ல காரியம், எவரையும் குறிப்பிட்டு, தொடர் ஆட்டத்திற்கு  வாருங்கள் என்று வம்பில் சிக்க வைப்பது இல்லை!

ஏன் இந்த மாதிரி ஆட்டத்தில் அப்புறம் சிக்கிக் கொண்டேன் என்கிறீர்களா?  




பத்து இல்லைன்னா பத்தாதாமே!




என்ன இது? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!


இப்படி வடிவேலு டயலாக்ல எதுனாச்சும் எடுத்துவுடாதவங்கல்லாம் பதிவுலகத்தில் பிரபலம் ஆகவே முடியாதாமே, நெசந்தான் போல இருக்கு!


இன்னைக்குக் காலையில தான் பரிசல்காரன் பதிவுல, இப்படி ஒரு பின்னூட்டம் எழுதினேன்:"பத்து இல்லைன்னா பத்தாதுன்னு ஏதோ டூத்பேஸ்ட் விளம்பரத்துல வர சின்னப்பையன் மாதிரி, எங்க பாத்தாலும் பத்து'மயமாகிடப்போகுது! "


ஊழ்வினைவந்து உறுத்தூட்டும்னு சிலப்பதிகாரத்துல இளங்கோ அடிகள் அனுபவிச்சுத் தான் சொல்லியிருக்கார்னு இப்பத்தான் தெரிஞ்சது.



தீராத பக்கங்களில் பிடித்ததும் பிடிக்காததும் ஏழு என்று , மாதவராஜ் அவரை ஒரு சங்கிலிப் பதிவில் கோர்த்து விட்டதற்கு உடன்பட்டு எழுதிய பிடித்தவர், மிகவும் பிடித்தவர் என்று பதிவில், என்னையும் கோர்த்துவிட்டிருக்கிறார்!


ரொம்பவும் முன்னெச்சரிக்கையாக, "இப்ப நான் எனது நண்பர்களை இதில் சிக்க வைக்க வேண்டும், தலைப்பை மாற்றி விட்டதால் சிரமம் இல்லாமல் எழுதுவார்கள் என நம்புகிறேன்" என்றும் சொல்லிவிட்டு


4.கிருஷ்ணமூர்த்தி ஐயா(அவரே தான்) என்று இட ஒதுக்கீடும் செய்திருக்கிறார்!


பிடிச்சது, ரொம்பப் பிடிச்சது, பிடிக்காதது, சுத்தமாகவே பிடிக்கதுன்றதெல்லாம் என்னங்க? மாறிக் கொண்டே இருக்கும் அளவுகள், அபிப்பிராயங்கள் தானே! சிறுவயதில் பிடித்த விஷயங்கள், மீசை அரும்பும் பருவத்தில் மாறிப்போகும். தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நினைத்துக் கொளும்போதோ, அதுவரை பிடித்ததெல்லாம் பிடிக்காமல் மாறிவிடக் கூடும், இல்லையா?


எனக்குப் பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்ற கேள்வியே அடிப்படையில் தவறு என்ற நிலையை அனுபவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், அது எந்த அளவுக்கு சரியாக இருக்கும், சாத்தியமானதாக இருக்கும், மாற்றத்திற்கு நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம் என்ற அம்சங்களே தீர்மானிக்கின்றன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.


பத்து இல்லைன்னா பத்தாதாமே!


வாங்க, அது என்னென்னன்னுதான் கொஞ்சம் ஒரு கை என்ன ரெண்டு கைவிரலையும் நீட்டி எண்ணிப் பாத்துடலாம்!


1.அரசியலில் ---


எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனாவை அடுத்து ஆனா, கானாவை அடுத்துக் கானா என்று அடுக்குமொழி, எதுகை மோனை, அதையும் மூக்கினால் கரகரத்த குரலில் புரியாதபடி பேசுகிற தனித்தமிழ்வாணர்கள், செய்தித்தாளைப் புரட்டினால் கன்னித்தீவு கார்டூன் கதையைப் படிக்காமல் எப்படி இருக்க முடியாதோ, அந்த மாதிரித் தவிர்க்க முடியாதவர்களாகிப் போனார்கள்! அத்தனை உணர்ச்சி வெள்ளம்! முதிர்ச்சி இல்லாத இளம்பருவத்தில் பிடித்த அவஸ்தைகள் அவை!


எந்த வெள்ளமாக இருந்தால் தான் என்ன? வடிந்துதானே ஆக வேண்டும்?


வெள்ளிமூக்கு முளைத்தபிறகு, இது குதிரையல்ல, கழுதைதான் என்று தெரிந்து கொள்கிற நேரம் அவர்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறிய இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே வந்தபோது பிடிக்காமல் போனதும் இயற்கைதானே!


ஒரு நல்ல மாற்றாக உருவாகும் என்று நம்பி இணைந்த இடது சாரி இயக்கங்களுமே கூட, இந்த நச்சுச் சூழலில் நீர்த்துப் போனதையும் ஒரு ஓரத்தில் முனகலாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.


2.எழுத்தாளர்களில்---


என்னிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம், இது தான் என்று எல்லைகட்டிக் கொண்டு படிக்காமல், என் கைக்குக் கிடைக்கிற அத்தனை தலைப்புக்களிலும், எழுத்துக்களையும் படிப்பது ஒன்றுதான்! இருக்கிற ஒரே ஒரு நல்ல விஷயத்தையும், இப்படி சமயம் கிடைக்கும்போது தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி?


தமிழில் ஒவ்வொரு எழுத்தாளருமே, அவரவர்க்குக் கிடைத்த தளங்களில் முடிந்த வரை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்று ஒருவர் ஆங்கிலத்தில் துப்பறியும் சாகசங்கள் மாதிரித் தமிழிலும், தமிழர்கள் படித்து உய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த நாட்களில், லோகலைஸ் பண்ணி, உல்டா அடித்துக் கதைகள் எழுதியிருக்கிறார். லோகல் லைப்ரரியில் அவருடைய புத்தகங்களையுமே, கிடைத்தவரை படித்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா?


கல்கி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஆர்வி, பிவிஆர், பி எஸ் ராமையா, என்று என்னுடைய விருப்பப் பட்டியலில் அனேகமாக அத்தனை எழுத்தாளர்களுமே இருக்கிறார்கள்! சுஜாதாவை விட்டு விட முடியுமா? பாலகுமாரன், சீக்கிரமே அலுத்துப்போனார் என்றாலும் பட்டியலில் இருப்பவர் தான்!


பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட என்னை அதிகமாக மிரட்டிய ஒரே எழுத்தாளர் ராபின் குக் தான். நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் இதைப் படியுங்கள் சார் என்று சிபாரிசு செய்த புத்தகம், தி ஃபீவர், இப்போது நினைத்தால் கூட சுரம் வந்து விடும்! அயன் ராண்ட் முதல், லியோன் யூரிஸ், இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை சகித்துக் கொள்ள முடிந்தவனை வெறுப்பேற்றுகிற புத்தகம் அது!


3.கவிதைகள், கவிஞர்கள்--


1980 ஆம் வருடங்களில் எங்களுக்குப் புதுவிதமான பைத்தியம் ஒன்று பிடித்திருந்தது. புதுக்கவிதை! மு.மேத்தா, வைரமுத்து, மீரா, இன்னும் நிறையப்பேர், புதிது புதிதாக புதிய வடிவங்களில் கவிதையாக கருத்தை எழுதிக்கொண்டிருந்தார்கள்! கணையாழி மாதிரி சிற்றிதழ்களுக்கு வாசகனாக்கி  வைத்த வேகம் கொண்ட மோகம் அது!தவமிருந்து படித்த பொற்காலங்கள் அவை! புதுக்கவிதைகளின் தோற்றமும் வரலாறும் என்று வல்லிக்கண்ணன் எழுதிய புத்தகத்தை எத்தனை முறை படித்து, நாங்களும் எப்படிப் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தோம் என்று இப்போது வர்ணிப்பது கொஞ்சம் ஓவர்!


ஒரு வாக்கியத்தில் இருக்கும் எட்டு அல்லது பத்து சொற்களை ஐந்து அல்லது ஏழு வரிகளில் உடைத்துப் போடுவதுதான் கவிதை என்றாகிப்போன பிறகு, இன்னமும் பிடித்திருக்கிறது என்று சொன்னால், பிடித்திருப்பது கவிதை அல்ல-பைத்தியம்!


4.பிடித்த நடிகர், நடிகை--


என்னிடம் இருக்கும் இன்னொரு நல்ல பழக்கம்,ஒரு திரைப்படம் பிடித்திருக்கிறது என்று தோன்றினால், அதை இரண்டாவது, மூன்றாவது தடவை பார்ப்பது மட்டும் தான்! சினிமா நடிகன், நடிகைக்கு எல்லாம் இதயத்திலோ, தெரு ஓரத்திலோ கோவில் கட்டுகிற அளவுக்குப் போய் விடுவதில்லை. அப்படிப்பட்ட முற்றிப்போன கேஸ்களைப் பக்கத்திலேயே அண்ட விடுவதில்லை.


தொழில் மட்டுமே நடிப்பு, நிஜ வாழ்க்கையிலும் அல்ல என்றிருப்பவர்களைப் பிடிக்கும்.. அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?!


5.செய்தித்தாட்கள், வார இதழ்கள்--


ஹிந்து, இன்றைக்கு என் பார்வையில் நம்பகத்தன்மை மிகவுமே குறைந்து போனாலும், பழக்கமாகி விட்ட படியால், சிறுவயதில் இருந்தே தொடர்ந்து படித்து வரும் நாளிதழ். தினமணியும், இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழ்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த காலம் இருந்தது. இப்போது இல்லை.எகனாமிக் டைம்ஸ், தொழில் ரீதியாகப் படிக்க ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் நாளிதழ்.


அபத்தக் களஞ்சியம் ஆனாலும் சிறு வயதில் இருந்தே வீடுகளில் தவறாமல் வாசிக்கப்படும் பத்திரிகையான குமுதம் ஒருகாலத்தில் நான் விரும்பிப்படித்த பத்திரிகையாக இருந்தது, படிப்பதை நிறுத்திப் பல வருடங்கள் ஆகி விட்டன. அதே மாதிரி, ஆனந்த விகடன், கல்கி ஜூவி, என்று ஏராளமான இதழ்கள், இப்போது எதுவுமே என்னுடைய வாசிக்கும் பட்டியலில் இல்லை. நிம்மதியாக இருக்கிறது!


6.இசையமைப்பாளர்


இளைய ராஜா தான்! ரஹ்மான், ஹாரிஸ் என்று எவரெவரோ வந்தாலும் ராஜா ராஜா தான்! அவருக்கு முன்னால் ஜி.ராமநாதனைப் பிடிக்கும், எம் எஸ் விஸ்வநாதனைப் பிடிக்கும், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார் வேதா அவரையும் பிடிக்கும் !


7.திரைப்படப்பாடகர், பாடகி--


டி எம் எஸ் சுசீலா, பி பி ஸ்ரீநிவாஸ், ஜானகி, சந்திரபாபு, அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன், முஹம்மத் ரஃபி, கிஷோர் குமார், முகேஷ் என்று அன்றும் இன்றுமாக இன்னும் நீளமான பட்டியல் இருக்கிறது. எஸ் பி பாலசுப்ரமணியம் இவர்களில் தனித்து உயரமான இடத்தில் இருக்கிறார்!


8.தலைவர்கள்---


சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக மகாத்மா காந்தி இருந்தார். வல்லபாய் படேல், லால் பஹதூர் சாஸ்திரி என்று உறுதியோடு செயல்படத் தெரிந்த தலைவர்கள் ஒரு பக்கம், இருபத்துநான்கு காரட் தங்கம் என்று இவர்களைச் சொல்ல முடிந்தால், இருபத்திரண்டு, இருபது, பதினெட்டு, பதினான்கு எனக் கொஞ்சம் கம்மியான தங்கங்களாக வேறு பலரும் இருந்தார்கள்.


இப்போதோ காக்கைப் பொன்னே எவ்வளவு பீற்றிக் கொள்கிறது!?


9.வலைக்குழுமங்கள்--


கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வலைக் குழுமங்களில் நான் இருந்திருக்கிறேன். வலைக் குழுமங்களில் ஒரு நல்ல கருத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரு வலைக் குழுமம் மின்தமிழ். தமிழ் மரபு அறக்கட்டளையின் அங்கமாக வெளிவரும் இந்தக் குழுமத்தைப் பற்றி என்னுடைய பல பதிவுகளில் தொட்டுப் பேசியிருக்கிறேன்,


ஒரு தனி வலைப்பதிவராக, நம்மால் ஒரு எல்லைக்குட்பட்டுத் தான் செயல்பட முடியும், அதுவே ஒரு குழுவாக என்றால், நிஜமாகவே பல நல்ல விஷயங்களை நடத்திக் காட்ட முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மின்தமிழ் வலைக்குழுமம் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் இரண்டு வலைக் குழுமங்கள், இடது பக்கம் கூகிள் க்ரூப்ஸ் என்று இருக்கும் பகுதியிலேயே தொடர்புக்கான சுட்டி இருக்கிறது.




10..பதிவர்கள், பதிவுகள்--


தமிழில் கிட்டத்தட்ட நூறுக்கும் மேலான பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் கொஞ்சம் கம்மி தான், முப்பது! இது தவிர சில வலைக் குழுமங்கள், வலைத்தளங்கள் என்று ஒரு பரந்த வாசிப்பு இருக்கும் ஒரு வாசகனாக மட்டுமே என்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.


இதில் பிடித்த, அல்லது பிடிக்காதவை என்பது சொல்லப்படும் உள்ளடக்கத்தை வைத்து மட்டுமே வைத்து முடிவு செய்கிறேன். முனைவர் நா.கண்ணன் சொல்வது போல இங்கே நீங்களும் நானும் உரையாடிக் கொண்டிருப்பது ஒரு மின் வெளியில், மின்னெழுத்துக்களால் ஆன ஒரு உண்மைபோலத் தோன்றும் ஒரு மாயக் கண்ணாடி முன்னால் என்பதை நினைவு வைத்துக் கொண்டோமேயானால், இங்கே வெளிப்படுவது நம்முடைய சொந்த மன விகாரங்கள் தான் என்பது தெரியும்.


இதையும் கடந்து போக வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.


வால்பையன் திரு அருண் அழைப்புக்கு இது என்னுடைய பதில்! ஆர்வத்தோடு விவாதக்களங்களில் பங்கு கொள்ளும் துடிப்பான இளைஞருக்கு நான் செய்ய வேண்டிய மரியாதை!


வேறு எவரையும் சங்கிலியில் பிணைப்பதற்கு எனக்குத் தோன்றவில்லை!






அ முதல் அஃகு வரை!


நான்கைந்து நாட்களுக்கு முன்னால் தான் இந்த எ பி சி டி தொடர் விளையாட்டை, ஒரு பதிவில் பார்த்தேன்! மல்டிலெவல் மார்கெடிங் மாதிரி, இந்தத் தொடர், ஸ்டார்ஜன் பதிவிலிருந்து, கோவி கண்ணனுக்குத் தொற்றி, என் வரை பரந்திருக்கிறது! லண்டனில் இருந்து திரு வெ.ராதாகிருஷ்ணன் சங்கிலியில் எல்லாம் இருக்கும் வரை என்ற தெம்போடு முந்திக்கொண்டிருக்கிறார்! யாஹூ!360 நாட்களில், இந்தமாதிரித் தொடர்கிற அல்லது ம்யூசிகல் சேர் விளையாட்டில் என்னை அழைத்தபோது, தயங்கித் தயங்கியே எழுதின ஞாபகம் இப்போது வருகிறது!

இப்போதும் கூடத் தயங்கியபடியே தான் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். அதனால் தான், ஒரு நாள் தள்ளி, இந்தப் பதிவு வெளி வருகிறது.

கோவி கண்ணன் சொன்ன மாதிரி, அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற யோசனை, குழப்பமெல்லாம் இல்லை. எழுத, பேச வேண்டுமானால், ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன! தவிர, அடிப்படையில் நான் ஒரு வாசகன். என்ன எழுதப்படுகின்றன என்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து வருவதை மட்டுமே முக்கியமாகக் கொண்டிருப்பதால், என்ன எழுதலாம், அதையும் எப்போது எழுதலாம் என்ற எண்ணங்களே எனக்கு முக்கியமாகப்படுவதில்லை!


தவிர, இப்போது எழுதுவது, இந்த நேரத்து மன நிலையை ஒட்டி மட்டுமே இருக்கும், அதிலும், சொல்லாமல் விட்டதில் தான் அறிந்துகொள்வதற்கான தடையங்கலுமே இருக்கும் என்பதால், இதை வைத்து மட்டுமே என்னை என்றில்லை, எதையுமே முடிவு செய்து விட முடியாது என்றும் தோன்றுகிறது!
இன்னொரு வகையில், திரு கோவி.கண்ணன் சொன்ன மாதிரி, "நாலு பேருக்கு நம்மைப் பற்றித் தெரியணும்னா தொடர்பதிவு தப்பே இல்லை !" அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!இங்கே எதுவுமே .தப்பு இல்லை! தப்புவதும் இல்லை!!



1. A – A for Apple ன்னு சொல்வேன்னு தானே நெனச்சீங்க? உங்க ஆசைக்கு ஆப்பிள்னும், என் ஆசைக்கு Aravindhar என்று கூட வைத்துக் கொள்ளலாமே! All life is Yoga இது அரவிந்தருடைய அருமையான அமுதமொழி!

2. B – Best friend? : ஒருத்தன் தானே தான் தனக்கு முதல் நண்பனாகவும், முழு எதிரியாகவும் இருக்கிறான்!.அந்த வகையில், என்னையே பிரதிபலித்து,நிறையப்பேரில் பார்க்கிற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆக, எல்லோருமே!

3. C – dictionary.com இல்  C என்று மட்டும் கொடுத்துத் தேடிப்பாருங்கள்! குறைந்தது பதினைந்து பிரயோகங்கள் வரும்! சி எனும் போது குறைந்தது பத்து நாவலாசிரியர்கள், அவர்கள் எழுதிய புத்தகங்கள் நினைவுக்கு வருகிறது.



4. D – Distinction தனித்துத் தெரிகிற திறமையும் நினைவு வரும்! Dooms Day என்று பயமுறுத்துகிறவர்களைப் பார்த்துச் சிரிப்பும் வரும்!


5. E அய்யே! இந்த வயசுல போயி ஈன்னு இளிச்சா நல்லாவா இருக்கும்? தவிர, எனக்கு ஈ புடிக்காது!


6. F – favorites...... ஹ்ம்ம்... நிறைய இருக்கே! பூக்களைப் பிடிக்கும்! புத்தகங்களைப் பிடிக்கும்! குழந்தைகளைப் பிடிக்கும்! நல்ல தமிழ் பிடிக்கும்! சொல்லிக்கொண்டே போனால் நிறைய வருஷமும் பிடிக்கும்!


7. G – G ன்னதும் Guns of Navarone, Gregory Peck ன்னு நிறைய ஞாபகம் வரும்! கோவிந்தா என்று நாமம் சொல்லும்  நினைவும் வரும்!



8. H – Hometown? - சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கம், பிறந்ததோ செட்டிநாடு, சொந்தமாகிப்போனது,ஒண்ட வந்தது, அடைக்கலம் தந்தது மருதேய்ய்ய்ய்ய்! என்ன கொஞ்சம் அழுக்கா, வேர்வைக் கசகசப்பா, எங்க திரும்பினாலும் ஜனங்க கூட்டம் கூட்டமா, பேச்சுல கொஞ்சம் அராத்தா...பேசிப் பழகினதுக்கு அப்புறம் ரொம்பப் பாசக்காரப்பயலுவளா,அப்புடி, இப்புடி, எப்புடிப் பாத்தாலும், மருதை, மருதைதான்! மருதையச் சுத்தின களுத கூட மருதயை விட்டுப் போகாதுன்னு, அதுனாலதான் சொன்னாங்களோ!


9. I – Indulgence-- ஆசை, ஆவலாதிஎல்லாம் காலாவதியாகிப் போச்சு! ஆசை அறுமின்! ஆசை அறுமின்! ஈசரோடாயினும் ஆசை அறுமின்! இது தான் இப்ப ஓடிட்டிருக்கும் ஒரே indulgence!


10. J ஜெ'ன்னா, தி.ஜானகிராமன்! அதுக்கப்புறம்,ஜெ'ன்னா ஜெய காந்தன்! ஜெகசிற்பியனை மறக்கலாகுமோ? ஜெ' வரிசை கொஞ்சம் பெரிசு! வாசிப்பு அனுபவத்தை மிக இயல்பான தவமாக ஆக்கிக் கொடுத்தவர்கள் இவர்கள்! அவ்வப்போது, ஜெயமோகனும் கொஞ்சம் ஈர்க்கிறார்!


இன்னொருத்தரை இதிலும் சேத்துக்கலாம், அடுத்த எழுத்துக்கும் சேத்துக்கலாம்! ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி!


11. K – Kids & their names? ஒரே பையன்தான்! சரியான வால்பையன்! வாசுதேவன்!


12. L – Life is incomplete without? - Life, Love எல்'லுன்னு ஆரம்பிக்கும்போதே , ஒண்ணு இல்லாம, மத்தது கிடையாதுன்றதும் தெரியணும்! தெரிஞ்சுக்கறது தான் வாழ்க்கையோட உண்மையான தேடலே! தெரிஞ்சப்புறம், இதுவேற அதுவேறன்றதே இல்லாம ஆயிடணும்!



13. M – Marriage date? ஒரு படத்துல நாகேஷ் "ம்ம்ம்ம்மாட்டிக்கினான்!"ன்னு ம்ம்ல கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொல்வாரே, நினைவுக்கு வருகிறதா? நான் ம்ம்ம்ம்மாட்டிக்கினு அடுத்த மாசம் இருபத்தோராம் தேதியோட இருபத்தோரு வருஷம் நிறையுது!


14. N – No Entry! இது நோ என்ட்ரின்னும், வாத்தியார் மாதிரி,'நான் சொல்றதைத் தான் கேக்கோணும்! கேள்வி ஏதும் கேக்கக் கூடாது'ன்னு சொல்லும் போது, பீச்சே மூர்னு 'இங்க திரும்பி வராதே'ன்னு சொல்லும்போது கேள்வி நிறையக் கேக்கத் தோணும்! இந்த மனோபாவத்தை, ஆசிரியப் பணியாற்றும் சில பதிவர்களிடம் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்! என்னிடம் இந்த சுபாவம், மறந்தும் ஒட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதில் கவனமாகவும் இருக்கிறேன்!


15. O – Oranges or Apples? இதுல எதுக்கு ஓர வஞ்சனை! ஸ்டார்ஜன் சொன்ன மாதிரியே, இதுல ஆறு!(ஆரஞ்சி!) அதுல அஞ்சு!(ஆப்பிள்)ன்னு சொல்லிட்ட்ப்போச்சு! இங்க, இந்திய தேர்தல் முறைகளில் இருக்கும் குறைகளைக் கண்டு கொதித்துப் போன போது, இரண்டு மூன்று வருடங்களாகத் தேர்தல் வருகிற நேரத்தில் மட்டும், ஒரு ஓவோ, இரண்டு ஓவோ இல்லை 49(O) அப்படீன்னு ஒரு சத்தம் கேட்கும்! ரெகுலர் தேர்தல்னா ஐநூறா, ஆயிரமா, இல்லே திருமங்கலம் மாதிரி இவங்க நாலாயிரம்னா அவங்க மூவாயிரம், இடைத்தேர்தல்னா ஜாலிதான்னு ஜனங்க, மானாட மயிலாடற ரேஞ்சுக்குப் போன வளர்ச்சியைக் கண்ட பிறகு 
49 O' ன்னாலே  எனக்குக் கொஞ்சம் அலெர்ஜி!


16. P – Phobias/Fears? இது இல்லாத உயிரினம் எது? நேரடியாகத் தெரியாவிட்டாலும், இந்த ஒரு அச்சமே, உயிரினங்களின் வளர்ச்சிக்கும், அழிவுக்கும் காரணமாக இருப்பதை மறுக்க முடியுமா? இன்றைக்கு ஹிந்து நாளேட்டில், முதல் பக்கச் செய்தி! காசாப் பகுதியில் இஸ்ரேலி ராணுவம் திட்டமிட்டே,சிவிலியன்களைப் படுகொலை செய்தது என்று ஒரு விசாரணை அறிக்கை வெளிவந்திருக்கிறது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல்! அது நேற்று! இன்றைக்கு ஒன்றுக்குப் பத்து, நூறு, ஆயிரம், லட்சம்! எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?


17. Q – Quote for today? : “All life is Yoga” - Sri Aurobindo. வாழ்க்கை முழுவதுமே யோகம்! யோகம் என்பது, உலகத்தைத் துறப்பது அல்ல, உலகத்து நடப்புகளில் இருந்து விலகி இருப்பதும் அல்ல.இந்த நேரத்தின் அவசியம்,விழிப்புணர்வில் ஏற்படும் மாற்றமே! ஸ்ரீ அரவிந்தரை வணங்கி,அவருடைய அமுதமொழிகளை உள்வாங்கி, ஒளிபொருந்திய பாதையில் பயணிக்கவே இவன் செய்யும் பிரார்த்தனையும்!


18. R – Reason to smile? : இடுக்கண் வருங்கால் நகுகன்னு சொல்லிட்டுப்போயிட்டாங்களே! அதுக்காகவாவது..:-))


19. S – Season?   இங்கே டீவீக்காரங்க அடிக்கிற கூத்து, சீசன் ஒன, சீசன் டூ, சீசன் த்ரீன்னு போயிகிட்டே இருக்கறதால, சீசன்ற வார்த்தையைக் கேட்டதுமே அலெர்ஜியாத்தான் இருக்கு!

அட, நீங்க பருவகாலத்தைச் சொன்னீங்களா? வசந்தகாலம் தான்!


20. T – Tag 4 People? நாலெல்லாம் கம்மி! அப்ப...நாப்பது, நானூறு, நாலாயிரம்? அதுவும் கூடக் கம்மியாத்தான் தோணுது! அதனால, படிக்க வர்ற எல்லோரையுமே! இஷ்டமிருந்தாக் கோத்துக்கலாம்!

இல்லேன்னா, ஒரு பின்னூட்டத்தில் சொல்லிட்டு அபீட்டாயிக்கலாம்! பெப்சி உங்க சாய்ஸ் மாதிரி, இந்தக் கோத்துக்கற சங்கிலியும் உங்க சாய்ஸ் தான்!


21. U – Unknown fact about me? அதெப்படி தெரியாத ஒண்ணை...? சொல்லிட்டாத் தெரிஞ்சதாப்போயிடுமே! அப்புறம் அதை எப்படித் தெரியாத ஒரு உண்மைன்னு பீலா வுடறது:-))

எனக்கே கூடத் தெரியாமத் தான் இருக்கு! அதனால, ஒரு ஒப்பந்தம் செஞ்சுக்கலாம்! என்னைப்பத்தித் தெரியாத உண்மை ஏதாவது உங்களுக்குத் தெரிய வந்தா, நீங்களே சொல்லிடுங்க! எனக்குத் தெரிய வந்தா, நானே சொல்லிடறேன்! காட் ப்ராமிஸ்! போதுமா!

22. V – V for Vendetta! படம் புடிக்கும்! மத்தபடி, வென்டெட்டா, வெண்டைக்காய் எதுவுமே புடிக்காது!


23. W – Worst habit? ஒண்ணு, ரெண்டு இல்ல,நிறைய இருக்கு! ஹாபிட்ஸ், பழக்கங்களுடைய அடிமையாகவே நாம் இருந்துவிடாமல், நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது. பழக்கங்களின் பிடியில் இருந்து விடுபடும்போது, மனிதன் இப்போதிருக்கும் நிலையைத் தாண்டி அடுத்த நிலைக்கு உயர முடியும். இந்த டாபிக், என்னுடைய பதிவுகளின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது.


24. X – X கிராஸ் ரோட்னு சொல்வோமே, அது மாதிரி!வெறும் கிராஸ், சிலுவை இல்லை! வாழ்க்கையின் பல தருணங்களில், எதிரும் புதிருமான விஷயங்கள் சந்தித்துக் கொள்வதை, அதன் பின் எழும் ஒரு புதிய வீச்சு, வேகத்தை அனுபவித்திருக்கிறேன்!


25. Y – இந்த எழுத்தைக் கொஞ்சம் கவனித்துப்பார்த்திருக்கிறீர்களா? இல்லையானால், WHY?

ஒரு பாதை, ஒருகட்டத்தில் இரண்டு எதிரெதிர் திசைகளில் பிரிவதைச் சொல்வது போல இல்லை? ஏதோ ஒரு பாதையில், பயணிக்க மட்டும் நமக்கு சுதந்திரம் இருக்கிறது. அந்தப்பாதை எப்படி இருக்கும், எங்கே அழைத்துச் செல்லும் என்பது, வாழ்க்கைப் பயணத்தில் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது. நாம் செல்லுகிற பாதையில், என்னென்ன அனுபவங்கள் காத்திருக்கும் என்றும் தெரியாது. ஆனால், பயணம் செய்கிறவன், அந்த அனுபவங்களை, அனுபவித்துத் தானாக வேண்டும். கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!

26. Z – Zombie or Zombi..? நிறைய நேரம் கணினி முன்னாலேயே பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பதால், என்னை ஒரு Computer Zombie என்று நினைத்தால், அது தவறு ஏதுமில்லை! ஆனால், நான் மூளை களைத்துப் போன சோம்பேறி மட்டும் இல்லை!




அன்புக்குரியவர்கள்: ......அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள் அத்தனைபேரும் தான்!

ஆசைக்குரியவர்: ...நிறையப்பேர்! சின்னச் சின்ன ஆசைகளில் இருந்து, பேராசைகளாக நிறையப்பேரை இந்த வகையில் என்னால் சொல்ல முடியுமே! ரவா முறுகல் தோசை..? நம்ம ஊட்டுல அதெல்லாம் தெரியாது!அதுனால தான் கோவி கண்ணன் சொன்ன மாதிரிச் சொல்ல முடியவில்லை:-))

இலவசமாய் கிடைப்பது: .....வேறென்ன, உபதேசம் தான்! ஒருத்தருக்குச் சக்கரை வியாதி இருக்கிறது என்று நாக்குத் தவறிக்கூடச் சொல்லிவிடக் கூடாதே? எத்தனை இலவச உபதேசங்கள், மருத்துவ டிப்ஸ்,கிடைக்கும் தெரியுமா?!வைத்தியருக்கே அத்தனை மருந்து, வைத்தியம் தெரிந்திருக்காது!

ஈதலில் சிறந்தது: .....இந்த ஈதல், இசைபட வாழ்தல் இதை பற்றி எல்லாம் நானும் நண்பர் டாக்டர் சுந்தர வடிவேலுவுடன், கொஞ்சம் வள்ளலார் ஈடுபாடு கொண்ட அன்பர்களோடு நிறைய விவாதித்துக் களைத்துப்போயிருக்கிறேன். ஈயென்று இரங்கும், உண்மையிலேயே தேவையும் தாகமும் இருப்பவனுக்கு எதுவும் ஈயப்படுவதில்லை. புளித்த ஏப்பக்காரனும், பொய் முகம் காட்டுகிறவனுமே இங்கே ஈ'க்களை விரட்டிவிட்டுத் தாங்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு முன்னாள் மறைந்த திரு (டணால்) தங்கவேலு, அன்னதானம் செய்து, "வாங்கிக்கட்டிக் கொண்ட" கதையை குமுதம் வார இதழில் நொந்துபோய்ச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. நான் கடவுள் படத்தில், விளிம்புநிலை மாந்தராக வரும் ஒரு கதாபாத்திரம் பேசுகிற வசனம் இது:"புண்ணியம் தேடுறாங்களாம்!"

இதைப்பற்றின பார்வைகளே கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது.


உலகத்தில் பயப்படுவது: ....எங்க வீட்டு வால்பையனுக்குத்தான்!


ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ஒலகம் புரிஞ்சுகிட்டேன்! கண்மணி என் கண்மணி! இதுக்குத் தனியா வேற விவரிச்சுச் சொல்லணுமாக்கும்!

எப்போதும் உடனிருப்பது: நம்ம சத்யராஜ் கணக்கா, 'லொள்ளு"! அப்புறம்,ஸ்பெக்ஸ்..கண்ணாடி! போட்டிருக்கிறது கூட நினைவில்லாமல் குளிக்கவும் போயிருக்கிறேன்! அந்த அளவுக்கு கூடவே பழகிவிட்டது!


ஏன் இந்த பதிவு: ....அதானே? ஏன்? ஏனிந்தக் கொலைவெறி?

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!


ஒரு ரகசியம்: ........சொல்லிட்டா அது ரகசியமா இருக்காதேன்னு தான்!!


ஓசையில் பிடித்தது: ஒருகை ஓசை!......மௌனம்!

ஔவை மொழி ஒன்று: ஔவியம் பேசேல்!


()ஃறிணையில் பிடித்தது: புத்தகங்கள்! அவை அஃறிணை அல்ல! உங்களையும் என்னையும் விட உயிருள்ளவை! உயிரூட்டக் கூடியவை!


இவ்வளவு தூரம் வந்தீங்க, ஒண்ணும் சொல்லாமலே  போனா எப்படி?