Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

வால் பையன் என்கிற பதிவர் அருண் ராஜ்!

இந்தப் பக்கங்களில் வால் பையன் என்று கொஞ்சம் தேடினீர்களானால் ஏகப்பட்ட பதிவுகள், அவரைத் தொட்டு அல்லது அவருடைய பதிவுகளுக்கு பதில் சொல்கிற மாதிரியானவை அல்லது அவருடைய சரவெடி மாதிரி அடுத்தடுத்த பின்னூட்டங்கள் என்றிருந்த  பழைய நாட்களின்   நினைவுகள் இருக்கும். அந்தநாட்களில் மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்த போது வால் பையனைச் சந்திப்பதற்காகவே ஒரு கூட்டத்துக்குப் போனேன் என்று சொல்வதில்  இந்த இளைஞன் எப்படியோ என்னுடைய அபிமானத்துக்கு உரியவராக மாறிப்போன அதிசயம் இருக்கிறது. இத்தனைக்கும் அவருடைய வாழ்க்கைமுறை, அனுபவம், கருத்துக்கள் இப்படி எல்லாவற்றிலும் என்னிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால், தமிழ்ப் பதிவுலகத்தின் செல்லப் பிள்ளையாகவும் இருந்தவர்!


நேற்றிரவு காலமானார் என்பதை முகநூலில் இன்று காலை பார்த்தபோது என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படி ஒரு தவிப்பு! பதிவர் உண்மைத் தமிழன் முகநூலில் இப்படி உருகி அஞ்சலிப்பதிவு எழுதி இருக்கிறார்.

ன்புத் தம்பி.. வால் பையன் என்னும் வாலு..
இந்தப் பூலோகத்தில் சூரியனுக்கு கீழே இருக்கும் அனைத்தும் விமர்சனத்துக்குட்பட்டதுதான் என்று சொல்லி அத்தனை சப்ஜெக்ட்டுகளையும் பேசுவான்.
நாத்திகம், ஆத்திகத்தில் இருந்து கேலக்ஸிவரையிலும் தம்பி தொடாத விஷயமே கிடையாது. அனைத்தும் மேம்போக்காக இல்லை.. முழுவதும் படித்துவிட்டுத்தான் எடுத்து இயம்பியிருக்கிறான்.
நான் வலைத்தளம் புகுந்த சமயத்தில் அசுரனின் வலைப்பூ பக்கத்தில் நாத்திகம், ஆத்திகம், திராவிடம், ஈழம் பற்றி விலாவாரியாக கமெண்ட்டுகள் மூலம் பரிமாறிக் கொண்ட விஷயமெல்லாம் இன்றைக்கு எத்தனை நூலகங்களுக்கு படையெடுத்து புத்தகங்களைத் தேடியெடுத்து படித்தால்கூட கிடைக்காது. அப்படியொரு அறிவுத் தேடலைக் கொடுத்தது..
அத்தனையையும் பேசிவிட்டு தன்னுடைய உடல் நலனில் அக்கறையில்லாமல் வழக்கம்போல மது என்னும் அரக்கனின் துணை கொண்டு போதையுலகத்தில் வாழ்ந்த தம்பி..
அந்தச் சனியனையும் விட்ட தருணத்தில் குடும்பப் பிரச்சினை தலை தூக்கி தம்பியை முடக்கிப் போட.. அதையும் எதிர் நீச்சல் அடித்து எழுந்து வந்து "அண்ணே வந்துட்டண்ணே,,," என்ற குரலைக் கேட்டபோது மனதுக்கு அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுத்தது.
அவனது குழந்தைகள் பற்றி தினமும் அவன் போடும் அப்டேட்டுகள் அவனது சந்தோஷ வாழ்க்கையைச் சொல்லிக் கொண்டேயிருந்தது. அதுவும் பொறுக்கவில்லை அவன் நம்பிய இயற்கைக்கு..
இரண்டு நாட்களுக்கு முன்பாக "மீண்டும் பேச்சு வந்துவிட்டது.. இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக வந்துவிடும்" என்றவனை இன்றைக்கு மாரடைப்பு என்ற எமன் வந்து அழைத்துச் சென்றுவிட்டானாம்..
இதற்குத்தான் அதிசயமாக இன்று காலை சீக்கிரமாக எழ வேண்டிய கட்டாயமா எனக்கு.. முகநூலைத் திறந்தவுடன் முதல் செய்தியே இந்தக் கொடுமைதான்..!
"இறந்தவர்களெல்லாம் பாக்கியவான்கள்" என்று பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்கும்போது மனம் கேட்க மறுக்கிறது. அவனது பிள்ளைகளை நினைக்கும்போது இயற்கையை ஏசத்தான் நினைக்கிறது மனம்.
தமிழ் வலையுலகம் மிகச் சிறப்பான ஒரு வலைப் பதிவரை இன்று இழந்திருக்கிறது. நாத்திக உலகம் மிகச் சிறப்பான ஒரு பரப்புரையாளரை இழந்துவிட்டது.. அறிவுத் தேடலில் ஒரு விரிவான விரிவுரையாளரை என் போன்ற மக்குகளும் இழந்துவிட்டோம்.
போய் வாடா தம்பி.. மீண்டும் உன் வீட்டில் நீயே வந்து பிறப்பாய்.. இப்போதைக்கு இளைப்பாறு..!
#ArunRaj #VaalPaiyan #Vaalu

என் செல்லப்பிள்ளையாகவும்  இருந்த இந்த இளைஞனுக்கு என்ன சொல்லி வழியனுப்புவது?
...................................... 
      

தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!



தீபாவளிக் கொண்டாட்டங்களின் பரபரப்பு நம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டிருக்கும் இந்த இனிமையான தருணத்தில், இதயம் நிறைந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.



தீபாவளி என்றாலே பட்டாசுச் சத்தம், புதுத்துணி, இனிப்புப் பலகாரங்களோடு, நண்பர்கள், சுற்றம் உறவுகள் என்று அனைவரோடும் பகிர்ந்துகொள்கிற தருணமாக இருப்பது, இந்த நாளை விசேஷமான பண்டிகையாகக் கொண்டாடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பண்டிகைக்கான காரணங்கள் பலவிதமாக சொல்லப் பட்டபோதிலும், முக்கியமான உள்ளடக்கம் தீமையை, இருளை அழிக்கும் ஒளியைக் கொண்டாடுவதே!


அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம்! சாந்தி, சாந்தி, சாந்தி:

பொய்மையிலிருந்து சத்தியத்திற்கு அழைத்துச் செல்வாய்
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய்
மரணத்தில் இருந்து மரணமற்ற தன்மைக்கு இட்டுச் செல்வாய்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

இப்படி  திரிகரண சுத்தி, திரிதேகத்திலும் அமைதியும் சாந்தமும் நிலவ வேண்டிப் பிரார்த்தனை செய்வதே தீபங்களின் வரிசை என்று பொருள்படும் தீபாவளிப் பண்டிகையின்  முக்கியமான உட்கிடக்கையாக இருக்கிறது. ஸ்வாமி சிவானந்தரின் வார்த்தைகளில் தீபாவளிப் பண்டிகையை பற்றிக் கொஞ்சம் கேட்போம்.

"DEEPAVALI or Diwali means "a row of lights". It falls on the last two days of the dark half of Kartik (October-November). For some it is a three-day festival. It commences with the Dhan-Teras, on the 13th day of the dark half of Kartik, followed the next day by the Narak Chaudas, the 14th day, and by Deepavali proper on the 15th day.

There are various alleged origins attributed to this festival. Some hold that they celebrate the marriage of Lakshmi with Lord Vishnu. In Bengal the festival is dedicated to the worship of Kali. It also commemorates that blessed day on which the triumphant Lord Rama returned to Ayodhya after defeating Ravana. On this day also Sri Krishna killed the demon Narakasura.

In South India people take an oil bath in the morning and wear new clothes. They partake of sweetmeats. They light fireworks which are regarded as the effigies of Narakasura who was killed on this day. They greet one another, asking, "Have you had your Ganges bath?" which actually refers to the oil bath that morning as it is regarded as purifying as a bath in the holy Ganges.

Everyone forgets and forgives the wrongs done by others. There is an air of freedom, festivity and friendliness everywhere. This festival brings about unity. It instils charity in the hearts of people. Everyone buys new clothes for the family. Employers, too, purchase new clothes for their employees.


Waking up during the Brahmamuhurta (at 4a.m.) is a great blessing from the standpoint of health, ethical discipline, efficiency in work and spiritual advancement. It is on Deepavali that everyone wakes up early in the morning. The sages who instituted this custom must have cherished the hope that their descendents would realise its benefits and make it a regular habit in their lives.




In a happy mood of great rejoicing village folk move about freely, mixing with one another without any reserve, all enmity being forgotten. People embrace one another with love. Deepavali is a great unifying force. Those with keen inner spiritual ears will clearly hear the voice of the sages, "O Children of God! unite, and love all". The vibrations produced by the greetings of love which fill the atmosphere are powerful enough to bring about a change of heart in every man and woman in the world. Alas! That heart has considerably hardened, and only a continuous celebration of Deepavali in our homes can rekindle in us the urgent need of turning away from the ruinous path of hatred.

On this day Hindu merchants in North India open their new account books and pray for success and prosperity during the coming year. The homes are cleaned and decorated by day and illuminated by night with earthern oil-lamps. The best and finest illuminations are to be seen in Bombay and Amritsar. The famous Golden Temple at Amritsar is lit in the evening with thousands of lamps placed all over the steps of the big tank. Vaishnavites celebrate the Govardhan Puja and feed the poor on a large scale.


O Ram! The light of lights, the self-luminous inner light of the Self is ever shining steadily in the chamber of your heart. Sit quietly. Close your eyes. Withdraw the senses. Fix the mind on this supreme light and enjoy the real Deepavali, by attaining illumination of the soul.

He who Himself sees all but whom no one beholds, who illumines the intellect, the sun, the moon and the stars and the whole universe but whom they cannot illumine, He indeed is Brahman, He is the inner Self. Celebrate the real Deepavali by living in Brahman, and enjoy the eternal bliss of the soul.

The sun does not shine there, nor do the moon and the stars, nor do lightnings shine and much less fire. All the lights of the world cannot be compared even to a ray of the inner light of the Self. Merge yourself in this light of lights and enjoy the supreme Deepavali.


Many Deepavali festivals have come and gone. Yet the hearts of the vast majority are as dark as the night of the new moon. The house is lit with lamps, but the heart is full of the darkness of ignorance. O man! wake up from the slumber of ignorance. Realise the constant and eternal light of the Soul which neither rises nor sets, through meditation and deep enquiry.

May you all attain full inner illumination! May the supreme light of lights enlighten your understanding! May you all attain the inexhaustible spiritual wealth of the Self! May you all prosper gloriously on the material as well as spiritual planes!"

-சுவாமி சிவானந்தா
ஹிந்து விரதங்களும் பண்டிகைகளும் என்ற நூலில் இருந்து

இந்த தீபாவளித் திருநாள், நம்முடைய புலன்களில், கரணங்களில், மனதில் இருக்கும் இருட்டை அகற்றும் ஒளியாக வந்து நிறையட்டும். தீமையை வெல்லும் நாளாகக் கொண்டாடப் படும்  இந்தப் பண்டிகை, எது நல்லது, எது தீயது என்பதை அறிந்து தீயதை விளக்கும் விவேகத்தை நமக்கு அளிக்கட்டும்.



இனிய வாழ்த்துக்களுடன்!
தீபாவளி கொண்டாடுவதற்குப் பல கதைகள் சொல்லப் பட்டாலும், இந்தப் பண்டிகை சமணம் வழங்கிய ஒரு கொடையாகவும்  ஒரு மாற்றுப்பார்வை இருக்கிறது. தமிழ் சமணம் என்ற வலைப்பதிவில் காணலாம்.

*2009 இல் இங்கே எழுதியதுதான்  மீள்பதிவாக. 

மீண்டும் சந்திப்போம். 

மண்டேன்னா ஒண்ணு! #என்னத்தச்சொல்ல

ஒரே நேரத்தில் மூன்று வலைப்பதிவுகளில் எழுதி வருவது கூடப் பிரமாதமான விஷயமில்லை! ஆனால் எங்கே எப்படி என்ன எழுதினாலும் நாங்கள் எங்களுடைய சாய்ஸ், preference என்னவோ அதன்படிதான் வருவோம், பார்ப்போம்,என்றிருப்பது நண்பர்களுடைய உரிமைதான்! மறுக்கவில்லை! திரட்டிகள் என்றொரு necessary evil தமிழ் வலைப்பதிவுகளுக்கு சமீபகாலமாக இல்லாமல் போன பிறகு, அந்த வெறுமை மிகத்தீவிரமாகி இருப்பது நன்றாகவே புரிகிறது. முன்னொரு காலத்தில் எங்கள் திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள் என்று பத்துக்கும் மேற்பட்ட திரட்டிகளில் இருந்து அழைப்பு வந்த காலமும் இருந்தது. இப்போதோ இருந்த ஒரே ஒரு திரட்டியும் கோமாவில்! 


இத்தனைக்கும் இவை வெறும் book marks செயலிகள்தான்! நாமாக ஒரு reading list தயார் செய்து கொள்ள அல்லது எந்த நபர் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக என்றே  ஒரு பட்டியல் தயார் செய்து கொள்ள அதிக நேரமும் பொறுமையும் தேவைப்படுவதில் இதோ அதை நன் எளிமைப்படுத்துகிறேன் என்று அறிமுகமான திரட்டிகளுக்குள்ளும் அரசியல், விளம்பரங்கள் இன்னபிற விஷயங்களே முன்னிலைப்படுத்தப் பட்ட தமிழ்ச் சூழலில் எதுவுமே நிலைத்து நிற்காமல் போனது வருத்தம் தரும் விஷயம்தான்! ஆனாலும் தொடர்ந்து பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிற எவருமே ஏன்  அதைக் களைய முயற்சிக்கவில்லை  என்பதும்  கூட இன்னொரு வருத்தம் என்பதோடு முடிந்துவிடுகிற கேள்விதானா?

   
இதே பக்கங்களில் வால் நீளமாக இருப்பது நல்லது என்று ஒரு பதிவையும் எழுதியது இப்போது நினைவுக்கு வருகிறது. உங்களுடைய நல்ல நண்பர்கள், உண்மையாகவே பின்தொடர்கிறவர்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ அவ்வளவு நல்லது, நீங்களும் ஒரு influencer தான் என்ற சிம்பிளான விஷயத்தைச் சொல்ல முற்பட்ட பதிவு அது. 

வரப்புயர நீர்  உயரும்னு தானே நாமெல்லாம் படிச்சிருக்கோம்! கெவின் கெல்லி கொஞ்சம் வித்தியாசமா, வால் நீள, தலை நிமிரும்னு சொல்லியிருக்காரு! படத்தைப் பாருங்க!வாலைத் தேடவேண்டாம்!

இது இன்றைக்கு ஒரு திங்கட்கிழமைச் சிந்தனையாக! என்னத்த சொல்ல என்று கடந்து போய்விடுவீர்களா என்ன? !! 


நிஜந்தன்! முன்பு பொதிகையில் செய்தி வாசிப்பவராகப் பார்த்திருக்கிறேன். இப்போது MTamil என்கிற யூட்யூப் சேனலில்! இது அவருடைய சொந்த சேனலா அல்லது அதன் முக்கியப் பொறுப்பு எதிலும் .  இருக்கிறாரா என்பதெல்லாம் தேவை இல்லாத விஷயம். இந்த 11 நிமிட வீடியோவில் சரியான home work இல்லாத தமிழ் ஊடகங்களுக்கே உரித்தான அரைகுறைப் புரிதலுடன் பேசுவது இதிலும் இருக்கிறது. சென்ற ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் வூஹான் நகரில் சீன அதிபரை சந்தித்துப் பேசியது போல இந்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்  சென்னை மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடக்கவிருக்கிறது என்பது ஏன் என்கிற அபத்தமான தலைப்புடன் கொஞ்சம் தடுமாறித் தடுமாறிப் பேசுகிறார். செய்தியின்  பின்னணி, ராஜீய உறவுகளின் சிக்கல்கள் சவால்கள் இப்படி     அடிப்படையான விஷயம் என்ன என்றே தெரியாமல் பேசுவது நிஜந்தன் மட்டும் தானா? சீனா எழுபது! என்று  இங்கே தொடர்ந்து எழுபதிவுகளில்    இந்திய சீன உறவுகளில் உள்ள சிக்கல்களை புரிந்துகொள்ள உதவியாக எழுதிவருவதில், நிஜந்தன் சொல்வதில் என்னென்ன தகவல் பிழைகள், தவறான கற்பிதங்கள் என்று பார்த்துவிடலாமா? முதலில் இது ஏன் சென்னையில் நடக்கிறது? இங்கே #தமிழேண்டா கோஷ்டிகள் நினைப்பதுபோல தமிழ்நாட்டு வாக்குகளைக் குறிவைத்து நடக்கும் நிகழ்ச்சியல்ல! அடுத்தது, மோடி சென்ற ஆண்டு சீனாவுக்குப் போன வூஹான், சுமார் 3500 வருடப் பழமையான நகரம், மக்கள் சீனக் குடியரசாக அறிவிக்கப் படுவதற்கு முந்தைய காலத்தில் சீனாவின் மூன்று தலை நகரங்களில் ஒன்றாக இருந்ததும் கூட! இன்றைய சீனா பழைய வரலாற்றுக் கற்பிதங்களில் நம்பிக்கை உள்ள நாடல்ல! அடுத்தது  சீனா ஒரு சோஷலிச நாடு, ஏதோ கொஞ்சம் தளர்த்திக் கொண்டிருக்கிறார்கள்  என்பது மிக மிகத்தவறான அனுமானம். ஆனால் பொன்மாலை பொழுது 
பதிவர் நண்பர் மாணிக்கம் இப்படி ஒரு சான்றிதழ் வழங்கி இருப்பார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை!😟😞 

இன்று எங்கும் பெருகிவிட்ட ஒரு தலை பட்சமான, நேர்மையற்ற முறையில் பரப்பப்படும் செய்திகளை கண்டு சலித்திருக்கும் போது திரு. நிஜந்தன் அவர்களின் செய்தி தொகுப்பும், செய்திகளை வழுங்கும் முறையும் சிறப்பாக உள்ளது. அப்படியே கொண்டு செல்வது நேர்மையான ஒரு தமிழ் செய்தி ஊடகம் என்று என்று பெயர் எடுக்க ஏதுவாகும்.   

அக்கம் பக்கம்! என்ன சேதி!       தளத்துக்கு உங்களையும் நண்பர் மாணிக்கத்தையும் அன்புடன் வரவேற்கிறேன்! சில தெரியாத விஷயங்களையும் தெரிந்து கொள்ள இங்கே இதுவரை 30 பதிவுகள் வெளியாகிவிட்டன.

மீண்டும் சந்திப்போம்.     

பதிவுகள் ஆயிரம்! கொஞ்சம் திரும்பிப்பார்க்கிறேன்!

இது இந்தப்பக்கங்களில் ஆயிரமாவது பதிவு. அதைவிட 2019 இல் மட்டும் இதையும் சேர்த்தால் 315வது பதிவு என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் விவரங்கள் புரியும். என்னுடைய பிளாக்கர் பக்கத்தில் இன்னொரு விவரமும் இருக்கிறது blogger since 2005. ஆனால் இந்தப்பக்கங்களில் எழுத ஆரம்பித்தது 2008 இலிருந்துதான் என்ற மாதிரி விவரம் கிடைக்கும். உண்மையைச் சொல்லப் போனால் இந்த blog எனக்குப் பரிச்சயமானது 2003-04 வாக்கில் என்றாலும் என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்பதே புரியாமல் இருந்த நாட்கள் அவை. அந்த விஷயமே தெரியாதென்றால் எழுதியதை யார்வந்து படிப்பார்கள் என்பது மட்டும் எப்படிப் புரிந்திருக்கும்? திரும்பிப் பார்க்கையில் மிகவும் வேடிக்கை, கேலியாகத்தான் இப்போது எனக்கே இருக்கிறது!  

  
ஆக blogspot புரிபடாமல் இருந்தநாட்களில், Yahoo!360 எளிமையான சாய்சாக  இருந்ததில் ஆச்சரியமே இல்லை. யாஹூ மெயிலும் யாஹூ!360 உம் தான் ஆரம்பநாட்களில் என்னை எழுத வைத்தவை. ஏகப்பட்ட கூகிள் மெயில் கணக்கு தொடங்கி, பாஸ்வோர்ட் மறந்துபோனதால் அதை வைத்து பரீட்சார்த்தமாகத்  தொடங்கிய முயற்சிகள் காணாமலும் போயின. 2004 ஆம் ஆண்டில் புதிதாகத்  தொடங்கிய கூகிள் கணக்கு தான் இன்றளவும் தொடர்கிறது.  அப்போது கூட என் பிரதான சாய்ஸ்  யாஹூ  மெயிலும் 2005 இன் கடைசியில் யாஹூ!360 உம்தான் இருந்தது! 


2004 ஆம் ஆண்டு மத்தியில், என்னுடைய பணிச் சூழலில் ஏகப்பட்ட சிக்கல்கள், விரோதங்கள் என்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நேரத்தில், அமைதியாகப் பிரார்த்தனையிலேயே, எனது கவனத்தை ஒருமுகப்படுத்த முயன்று கொண்டிருந்த நேரம் அது. என்னுடைய கவலைகளைத் தம்பட்டம் அடித்து, சுய பச்சாதாபத்திலோ, அனுதாபம் தேடுவதிலோ எழுதவில்லை. ஊருக்கு உபதேசம் செய்கிற கருவியாகவும் கருதவில்லை. அப்போது மட்டுமில்லை, இப்போதும் கூட எவருக்கும் உபதேசம் செய்கிற பாணியில் எதையுமே எழுத முற்படவில்லை. அப்படி ஒரு எண்ணமுமில்லை!

யாஹூ!360 இல தொடங்கிய வலைப் பதிவுகள், என்னை நானே ஒரு சாட்சியாக இருந்து பார்க்கத் தொடங்கிய ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு. ஒவ்வொரு நாளும், ஏதோ ஒரு பிரார்த்தனையைக் கையில் எடுத்துக் கொண்டு யோசிக்கையில், எங்கே தவறு நடந்திருக்கிறது என்பது புத்திக்கு உறைக்க ஆரம்பித்ததையும், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்ற கேள்விக்கு விடை தேடி எனக்குள்ளேயே ஆராய்ந்து கொண்டிருந்த தேடலையும், வெளிப்படுத்துகிற சிறு குறிப்புக்களாகவே அவை இருந்தன. 

ஒரு அழகானசுகமான கனவு கலைகிறது

360.yahoo.com தளம் கலைந்துவிடலாம்.கனவின் நினைவுகள்இன்னமும் இருக்கிறதே! என்று ஜூலை 2009 இல் இங்கே எழுதிய பதிவு  மனக்கண் முன்னே வந்து நிழலாடுகிறது.

யாஹூ!360 இல் என்னுடைய சொந்தக் கருத்தாக எதையும் எழுதவில்லை.  பிரார்த்தனைகள் எல்லாம் ஸ்ரீ அரவிந்தர் அன்னை பற்றி ஆங்கிலத்தில் இருந்து எடுத்துப் போட்டது தான்! ஆனால் அங்கே இருந்த நண்பர்களுடைய பகிர்வுகளில் ஆங்கிலத்தில் கருத்துரை எழுதுவதுண்டு தமிழில் எழுத  ஆரம்பித்தது இங்கேதான் google indic பரிச்சயமான பிறகுதான்! இங்கேயும் பிரார்த்தனைகளாக மட்டுமே ஆரம்பித்தது, என்னை ஒரு அருள்வாக்கு சொல்கிறவன் ரேஞ்சுக்கு கொண்டுபோய் விட்டதில் அதை மாற்ற இதர விஷயங்களையும் எழுத வேண்டியதானது ஒரு தற்செயலான சுவாரசியம்!  

திரட்டிகள் என்று இங்கே க்ளிக் செய்துபார்த்தால் 2009 ஆகஸ்ட் மாதம் பதிவர் வால்பையனுக்கு  சிறந்த சரவெடிப்பதிவர் பட்டம் கொடுத்துக் கலாய்த்து எழுதியது முதல் ஒரு ஆறு பதிவுகள், லேடஸ்ட்டாக தமிழ்மணம் fatal error என்று பதிவுகள் திரட்டப்படாமல் இருப்பது வரையிலான ஒரு வெரைட்டி கிடைக்கும்.

பீர்பால் கதைகள் என்று  தேடிப்பார்த்தால் ஒரு பத்துப் பதினோரு கதைகள் 2009 வாக்கிலேயே ஆரம்பித்து விட்டாலும், இப்போதும் கூடத்  தேடிப்பிடித்து வாசிக்கிற நண்பர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்! ஒரு புதன் கிழமைக் கலாய்த்தலாக பதிவர் வால் பையனை சதாய்த்ததும் அவரது எதிர்வினையும் அதற்குப் பதிலும் 
  1. பரிணாமத்தை நான் டார்வினடமிருந்து ஆரம்பிக்கவில்லை! என் புரிதலிருந்து ஆரம்பித்திருக்கேன்! கோர்வையற்று செல்வதால் பிராண்டுவது போல் தான் தோன்றும்! எனது புரிதலில் தவறு இருந்தால் தயை கூர்ந்து சுட்டிகாட்டும் படி கேட்டு கொள்கிறேன்!

    டார்வின் புத்தகங்களையும் ஏனைய பிர புத்தகங்களையும் படித்து விளக்க முடியாமல் புத்தகங்களை நம்பும் மதவாதிகளை போல் அல்லாமல் நானக புரிந்து அதன் சாத்தியகூறுகளை ஆராய்ந்து பின் பதிவிடுவது விளக்குவதற்கும் ஏதுவாக இருக்கும் என கருதுகிறேன்!

    எனக்கு தேவை உணவு, அதை பிராண்டியோ, கிழித்தோ, உடைத்தோ அடைய வேண்டியது என் ஆர்வத்திற்கு கட்டாயம் போட வேண்டிய தீனி!, என்ன செய்ய இப்படி மூடனாக பிறந்து விட்டேன்! ஆனால் பாருங்களேன் அக்பரை கூட மூடன் என்று தான் நீங்கள் சொல்கிறீர்கள்!
    ReplyDelete
  2. வால்ஸ்!

    என்னுடைய பார்வையில் நீங்கள் இன்னமும் பரிணாமத்தைப் பற்றிப் பேசவே ஆரம்பிக்கவில்லை! டார்வினைத் தொட்டுத் தான் பரிணாமத்தை விளக்க முடியும் என்றும் நான் சொல்லவில்லை. சம்பந்தமே இல்லாத விஷயங்களை வைத்துப் பரிணாமக் கொள்கையைப் பற்றி எப்படிப் புரிந்து கொண்டீர்கள், எப்படிப் பதிவில் கொண்டுய் செல்கிறீர்கள் என்பதை நிறையப் பெசியிருக்கிறோமே, நினைவிருக்கிறதா?

    அறிவியல் கோட்பாடுகளைத் தமிழில் சொல்ல முயற்சியை ஆரம்பித்திருப்பது வரவேற்கத் தக்கதுதான் என்பதில் எனக்கு எந்தவிதமான கருத்துவேறுபாடும் கிடையாது. அதே நேரம், எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு வெகுதூரம் விலகிப் போய்விடுகிற விடலைத்தனம் நீங்கி நல்ல முதிர்ச்சியோடு பதிவுகளை எழுத வேண்டும் என்ற ஆசையையும் பல முறை தெரிவித்த பிறகும், நான் சொல்ல நினைக்காத அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்!

    அக்பரையும் மூடன் என்று தான் சொல்வதாக....!

    பீர்பால் கதைகளை, நடப்பு நிலவரங்களோடு பொருத்திக் கொஞ்சம் நையாண்டியோடு எழுதப் பட்ட பதிவுகளை, சரித்திரத்தைப் பிரேத பரிசோதனை செய்யும் பதிவுகளாக ஏன் நினைக்கிறீர்கள்? சரித்திரத்தை அதன் right perspective இல் பார்க்கப் பழகினவன் நான்.
ச்சும்மா ச்சும்மா அரசியல் பேசியே அறுக்கிறாயே என்று குறைப்பட்டுக் கொள்கிறவர்களுக்கு, நானும் வெரைட்டியாக எழுதிப் பார்த்தவன்தான் என்பதை இப்போது சொல்லாமல் வேறெப்போது சொல்வதாம்? பதிவின் கீழே குறியீட்டுச் சொற்களில் தேடிப்பார்த்தால், கவிதைகள், புத்தகங்கள், திரைப்படங்கள் என்று அரசியலைத் தாண்டியும் நிறைய எழுத வாய்ப்பு இருந்தது தெரிய வரும். 

இத்தனை பதிவுகள் எழுதியிருந்தாலும் என் மனத்துக்கு மிக நெருக்கமாக, ஆத்மார்த்தமாக எழுதிய பதிவென்றால் அது ஒரு வங்க நாடோடிக் கதையை வைத்து டாக்டர் மீரா ஷர்மா ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி வெளியிடும் All India Magazine மாத இதழில் 2002 ஆம் ஆண்டில் எழுதியிருந்ததை, அப்படியே நேரடி மொழிபெயர்ப்பு என்றில்லாமல் என்னுடைய மனோ பாவம், அனுபவத்துக்குத் தகுந்தமாதிரி எழுதிய கதை தான்! இரண்டு பகுதிகளாக வந்தது.

முதற்பகுதி :  கண்ணன் வந்தான்! ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!


இத்தனை நாட்களாக என்னோடு இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு நன்றி சொல்கிற தருணமாக இவைகளைத் திரும்பிப்பார்க்கிறேன்! நன்றி! வணக்கம்!

மீண்டும் சந்திப்போம்.
    

இட்லி வடை பொங்கல்! #36 அரசியல் நிலவரம்!

சிறிதுநாட்களாக அடுத்தவீடு ஆந்திரா, கர்நாடகா என்று எட்டிப் பார்த்து அரசியலைக் கவனித்துக் கொண்டிருந்ததில் தமிழக அரசியல் களத்தை அடியோடு மறந்துவிட்டேனா என்று நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் வந்திருக்கக் கூடும். மறந்து போகவில்லை, தமிழக அரசியல் ஏனிப்படி திராவிடங்களால் செக்குமாடுகள் மாதிரி ஒரேமாதிரியான ஊடகப் பொய்களிலேயே சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருக்கிறது என்ற வெறுப்பில் கொஞ்சம் கவனத்தை அடுத்த வீட்டுப் பக்கம்  திருப்பியிருந்தேன். அவ்வளவுதான்!



இங்கே நடக்கும் செக்குமாட்டுத்தனங்களைப் பற்றி என்ன எழுதுவது என்றிருந்தவனை, காவேரி நியூஸ் சேனலில் இந்த விவாத வீடியோ கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்ததென்றால் பொய்யில்லை. இந்த நேர்காணலை எடுத்த மதன் ஏற்கெனெவே சுபவீ செட்டியாரை தடுமாற வைத்ததை இந்தப்பக்கங்களிலேயே பகிர்ந்திருக்கிறேன். இன்று  H ராஜாவை கேள்விகள் கேட்கிறார். எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச்  சொல்லுங்களேன்!  வீடியோ 39 நிமிடம்.


அரசியல்வாதிகள் எல்லோரையும் பொய்யர்கள் ரகத்தில் சேர்த்துவிடலாம் தான்!  ஆனால் டொனால்ட் ட்ரம்ப் பொய்யர்களின் உச்சத்திலும் உச்சம் என்பதை இந்த 17 நிமிட செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். இம்ரான் கானுடன் பேசும் போது, நரேந்திர மோடி தன்னிடம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் படி கேட்டார் என்று சொன்னதை வைத்து இங்கே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வாலாக்கள் செய்த  ரகளை இருக்கிறதே, முட்டாள்தனத்தின் உச்சமென்பதா, ட்ரம்ப்புக்கு போட்டியாகப் பொய்யர்களின் உச்சம் என்பதா? டொனால்ட் ட்ரம்ப் சொன்னது பொய்தான்! ஆனால் அவரது பொய்களுக்குப் பின்னால் ஒரு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை முற்றிலுமாக விலக்கிக்கொள்வேன் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதி அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தாலிபான் தீரவாதிகளைக் கட்டுப் படுத்த பாகிஸ்தானிய ராணுவம் ஒன்றால்தான் முடியும் (?) என்கிற நிலையில் இம்ரான் கானுடன் பாகிஸ்தான் ராணுவத்தளபதியும் சேர்ந்தே அமெரிக்கா போனார்கள். IMF இடமிருந்து 6 பில்லியன் டாலர் குறுகியகாலக்கடன் என்ற carrot காட்டியது ஒருபுறம், F 16  விமானங்கள் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடுகளில்  பாகிஸ்தானிய ராணுவத்துக்கு relief என்று பலவிஷயங்கள் இருக்கின்றன. ஆக ட்ரம்ப் கிறுக்கன்தான், ஆனால் காரியக் கிறுக்கன்! ஆனால், நீண்டகாலம் ஆட்சியில் இருந்த நம்மூர் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களுக்கு என்ன வந்தது? ஏற்கெனெவே ட்ரம்ப் தனது உள்ளூர் அரசியலுக்காக ஒவ்வொரு நாட்டுடனும் உறவுகளைச் சிக்கலாக்கிக் கொண்டு வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் பிரச்சினையை உள்ளூர் அரசியலுக்குப் பயன்படுத்த முயன்றதே தவிர, தேசம் பெரிது என்ற நினைப்பு இருந்த மாதிரி வெளிப்படவில்லை.

இந்த விவகாரத்தையும் பாகிஸ்தானிய பொருளாதாரம்  அதல பாதாளத்தில் விழுந்துகிடப்பதில் IMF அளிக்கவிருக்கிற 6 பில்லியன் டாலர் குறுக்கியகாலக் கடனுடைய பக்கவிளைவுகள் பற்றியும்  அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்தில் விரிவாக எழுத நினைத்திருந்தேன்.பொதுவெளியில் ஒரு கருத்துப் பரிமாற்றத்துக்காகத்தான் பதிவுகள் எழுதுகிறோம். ஆனால் சரியான கவனிப்பையோ பார்வைகளையோ பெறுவதில் திரட்டிகளையே இன்னமும் நம்பியிருக்க வேண்டிய அவலம் தான் தமிழ் இணையச் சூழலில் தொடர்கிறது. தமிழ்மணம் திரட்டியில் அந்த வலைப்பூவை பதிவுசெய்து  ஆறு மாதங்களாகியும் திரட்டக்  கொடுக்க முடியவில்லை  என்று பார்த்தால்  இரண்டு நாட்களாக இந்தப்பக்கமும், சுவாசிக்கப்போறேங்க தளப் பதிவுகளையும் இணைப்பதற்கு முயன்றால் fatal error என்ற செய்தியோடு, பதிவை  இணைக்க முடியவில்லை.

நானே எழுதி நானே படிப்பதற்காகவா வலைப்பூ? இணையம்? வேறு திரட்டிகள், மாற்றுவழிகள் இருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.
         

அக்கப்போர்களால் ஆனது அரசியலா? நம்முடைய மனமா?

தர மொழிகளில் எப்படியோ, இங்கே தமிழ் இணையச் சூழலில் வெட்டி அக்கப்போர்கள், உள்ளூர் அரசியல்,  சினிமா செய்திகள்,  தமிழேண்டா பிரதாபங்கள் தாண்டி இன்னமும் நாம் வளரவே இல்லையோ என்ற எண்ணமும் ஏக்கமும் உங்களுக்கும் வருகிறதா? வந்தால் நீங்களும் என் இனமே! புதிய கல்விக் கொள்கை 2019 பற்றி நண்பர் விழியன் (எ) உமாநாத் செல்வன் பேசியதை ஒருதொகுப்பாக இங்கே  சொல்லியிருந்த பதிவு, அதற்குண்டான சரியான கவனிப்பைப் பெறவில்லை. அதையே நடிகர் சூர்யா ஆவேசம், கோபம் என்று தலைப்பு வைத்து அதற்கு H ராஜா முதலானவர்கள்  எதிர்வினை அதன் மீதான trolls, meemes என்று பதிவை மாற்றி எழுதியிருந்தால், ஏகப்பட்ட பார்வைகள் அதற்குக் கிடைத்திருக்கும் என்பது, இன்னமும் டீக்கடைகள், சலூன்களில் தினத்தந்தி படித்து உலகத்தைத் தெரிந்து கொள்கிற பழைய காலத்தை விட்டு நாம் வெளியே வரவே இல்லையோ என்கிற எண்ணம் அவ்வப்போது வந்துபோகிறது.

எது பொருளோ அதைப் பேசுவோம் என என்றைக்கு முன்வரப் போகிறோம்?
  

காங்கிரசின் காஸ்ட்லியான வக்கீல் அபிஷேக் மனு சிங்வி  இன்றைக்கு அக்கப்போர் செய்திகளின் உச்சகட்டமாக ராகுல் காண்டி ராஜினாமாவும் பின்விளைவுகளும் இருப்பதைப் பற்றி, கரண் தாப்பருடன் பேசுகிறார், காங்கிரசின் இன்னொரு காசுக்கார வக்கீல் கபில் சிபல், அவருடைய மனைவி சேர்ந்து நடத்தும் இந்த திரங்கா டிவி, காங்கிரசிடமிருந்து வரும்படி தேத்த முடியாததாலோ என்னவோ, விரைவிலேயே கடையை சாத்தவிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த விவாதம் (50 நிமிடங்கள்) கொஞ்சம் சுவாரசியமான வாக்குமூலங்களுடன் வருவதை நேரமிருந்தால் பாருங்கள்! .கர்நாடக குழப்பங்கள் பற்றி சபாநாயகருடைய வக்கீலாகவும் இருக்கிற அபிஷேக் மனு சிங்வி, காங்கிரசுடைய gameplan இன்னதுதான் என்பதை கோடிகாட்டிவிட்டுப் போவது இன்னொரு சுவாரசியம்.  காங்கிரஸ் வக்கீல்களுடைய ஜம்பம் எப்படிப் பட்டது என்பதை பர்க்கா தத் சொல்வதோடு சேர்த்துப் பாருங்களேன்!
         
  • Am told & wife wanted to use Modi as excuse to sack staff saying Modi didnt let channel run. But to be absolutely blunt. GOI has done nothing. Husband and wife have not faced staff, went on holiday to london, while shutting shop, prompting me to call him Mallya

    -க்கான பதிலில்
    For fighting for rights of staff, I have been threatened with defamation and ordered to "withdraw my emails" comparing to Mallya. I have refused. I support the staff of and will help them fight this legally, with a criminal case and complain
    77
    959
    2.3ஆ
    Lastly, it would be easy for me to be silent. owes a lot of us senior staff salary for a year and has refused to pay it. We will fight that legally. But what is more critical is 200 employees whose lives depend on this. Hope protects this staff
    177
    919
    2.1ஆ
    There has been more than ocassion when has embarrassed himself. But a man who earns in the crores, duping and cheating journalists with a 2 year guarantee & then sacking them without the decency to even meet them, and then refusing to pay their dues- truly revolting
    160
    902
    2.2ஆ


    ஸ்லாமிய பேங்கிங் நடத்துகிற மாதிரி, Islamic Monetary Advisory (IMA) என்ற பெயரில் பெங்களூரில்  ஹலால் செய்யப்பட்ட  மோசடியில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆயிரக் கணக்கான கோடிகளில் சேமிப்பை  இழந்த விவகாரத்தை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படும் காங்கிரசின் முன்னாள் அமைச்சர் இந்நாள் சமஉ ரோஷன் பெய்க் நேற்று நள்ளிரவு பெங்களூரு விமான நிலையத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டிருக்கிறார். எங்கு பார்த்தாலும் பிஜேபி மயமாகத் தெரிவதில் அரண்டுபோயிருக்கும் HD குமாரசாமி இந்த விஷயத்திலும் பிஜேபியைக் குறை சொல்லியிருக்கிறார். 


    இந்த 11 நிமிட செய்தியின் முதற்பகுதி ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் குமாரசாமிக்கும் கர்நாடக பிஜேபிக்கும் வார்த்தைப்போர் தொடங்கியிருப்பதைப் பேசுகிறது. டொனால்ட் ட்ரம்ப் மாதிரியே நம்மூர் அரசியல் வாதிகளும் ட்வீட்டரிலேயே அக்கப்போரை நடத்தத் தொடங்கி விட்டார்கள் என்பது நல்லவிஷயமா? அல்லவா?  

    க்கப்போர்களிலேயே நம்முடைய கவனத்தைத் தொலைத்து விடப்போகிறோமா என்ன?  

    மீண்டும் சந்திப்போம்.