Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

சண்டேன்னா மூணு! #வாழ்த்துவோம்! #கொரோனா #வரலாறு

கொரோனா வைரஸ் தொற்று களேபரங்களில் மனதை நெகிழச் செய்யும் சில நல்ல செய்திகளும் உண்டே! கொரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் கிட் தயாரிப்பதில் MyLabs என்ற இந்திய நிறுவனம் அரசின் பரிசோதனைக்குப் பிறகு அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது என்பதில் இதைத் தயாரிப்பதை ஆறே வாரங்களில் சாதித்த வைராலஜிஸ்ட் புனே நகரைச் சேர்ந்த மினால் டகவே போசலே என்கிற மராத்தியப் பெண்மணி! நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் 10 பேர் கொண்ட தனது குழுவுடன் டெஸ்ட் கிட் தயாரித்ததுடன் தீவீரப் பரிசோதனைக்குப்பிறகு அரசின் அனுமதி பெறுவதற்காக அனுப்பியபிறகே, மகப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்ந்து, ஒரு பெண் குழந்தையையும் ஈன்றெடுத்திருக்கிறார். தாயையும் சேயையும் மனம் கனிந்து வாழ்த்துவோம்!

  
We started the development process for Covid-19 six weeks ago on an emergency basis looking at the national crisis and need for an indigenous accurate solution for improved management. We have developed a unique formulation for test reagents that increases the catalytic activities of the enzymes, reducing the enzyme unit requirement, resulting in reduced cost”, said Minal, who has a decade long experience in the diagnostic field, and also worked on the swine flu disease at NIV, Pune, during the 2009 outbreak. On March 18 evening, within an hour of submitting the proposal for FDA approval, she got admitted to a hospital for a c-section and the very next day, Minal delivered her baby girl என்கிறது செய்தி. MyLabs தயாரிப்பைப் பற்றி ஒருவாரத்துக்கு முன்பே செய்தி வந்துவிட்டாலும், கண்டுபிடிப்பின் பின்னால் இருந்த மினால் பற்றிய செய்தி இப்போது தான் ஓரிரு நாட்களாக வந்து கொண்டிருக்கிறது.


ராகுல் காண்டி! முன்னெல்லாம் ட்வீட்டரில் மட்டும் தான் உளறிக்கொண்டிருந்தார். இப்போது கலீஞர், இசுடாலின் வழியில் கடிதமும் எழுத ஆரம்பித்து விட்டாராம்! #வாரிசுத்தொற்றுநோய்   காங்கிரசுக்கு சோதனைமேல் சோதனை கொடுத்துக் கொண்டே இருக்கிறது  என்பதில் சந்தேகம் யாருக்காவது இருக்கிறதா? உங்களுக்காகவே கீழே உள்ள செய்தி. 
   
”It is my choice," என்று சைனா வைரஸ் பாதிப்பை மறைத்து ஊர்சுற்றியதோடு நில்லாமல், மருத்துவ மனையில் ஏர்கண்டிஷன் வேலை செய்யவில்லை, டாக்டர் மூஞ்சி சரியில்லையென்றெல்லாம் கூப்பாடு போட்டவர் கனிகா கபூர்! தற்போது நான்காவது முறையாக சைனா வைரஸ் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. சிகிச்சை பலனளிக்கவில்லையோ என்று உறவினர்கள் கவலைப்படுகிறார்கள்.
இந்த நேரத்தில் இதைச் சொல்வது கொடூரம்தான்! இருந்தாலும் கொழுப்பெடுத்து ஊர்சுற்றுகிறவர்கள் பாலிவுட் பிரபலமாக இருந்தாலும் சரி, பல்லாவரம் குப்புசாமியாக இருந்தாலும் சரி, சைனா வைரஸ் பலிவாங்கியே தீரும்!
ஒழுங்கு மரியாதையா அரசாங்கம் சொல்றதைக் கேளுங்கடா! 21 நாள் உசிரோட இருந்தா அப்புறம் ஊர்சுத்துறதைப் பத்தி யோசிக்கலாம்.


TOI செய்தியை மேற்கோள் காட்டி கனிகா கபூர் பெயர் சொல்லி எழுதியிருந்தாலும் கடைசி இரண்டு லைனில் யாருக்குச் சொல்கிறார்? #புரிந்தவர்பிஸ்தா 
இங்கே ராமச்சந்திர குகா மட்டும்தான் வரலாறு எழுதுவாராமா? 
ஐரோப்பிய நாடுகளிலெ வத வத என முன்னாள் அரச குடும்பங்கள் உண்டு. எல்லாருமே இளவரசர் இளவரசி தான். சவூதியிலே கிட்டத்தட்ட முப்பதாயிரம் இளவரசர்கள் இருப்பது போல.
அப்படி ஒரு அரச குடும்பத்தின் இளவரசி தான் இப்போது மர்க்யா ஆனது. வயது 86. அவர் முன்னூறு வருடங்களுக்கு முன்பு ஆண்ட ஸ்பெயின் அரசரின் ஆண் வழிபேத்தி. அவருடைய தாத்தாவுக்கு தாத்தா இத்தாலியிலே ஒரு குட்டி கிராமத்துக்கு சிற்றரசர் போல இருந்தவர்.
ஐரோப்பிய அரச குடும்பங்கள் அவர்களுக்குள்ளே தான் மணம் முடித்துக்கொள்வார்கள் என்பதால் இருக்கும் ஏழெட்டு அரச குடும்பங்களும் மாமன் மச்சான் உறவு தான் இந்த இளவரசியின் சகோதர் நெதர்லாண்டு நாட்டு இளவரசியை மணமுடித்தார். இங்கிலாந்து அரசிக்கு ஸ்பெயின் நெதர்லாட்டு நாட்டு அரசர்கள் எல்லாம் தூரத்து மச்சினன்கள் முறை வரும்.
இறந்த இளவரசியின் விக்கி பீடியா பக்கம் https://en.wikipedia.org/…/Princess_Maria_Teresa_of_Bourbon…
இதிலே என்ன போர்பன் என பிஸ்கட் பேரு இருக்குன்னு சிலரும் அதென்னா விஸ்கி பேரா இருக்குன்னு பலரும் கேட்கலாம். பிரெஞ்சு அரச குடும்பத்தின் பெயர் அது. ஊரின் பெயரும் கூட.
எல்லா ஐரோப்பிய அரச குடும்பமும் சார்ல்மெலே எனும் ஆளிடம் இருந்து தான் தொடங்குகிறது. அதெப்படி என்றெல்லாம் கேட்ககூடாது. வெள்ளைத்தோல் வெள்ளைக்காரன் எழுதுவது தான் வர்லார். அதை அப்படியே அடிமை இந்துக்கள் படிச்சிக்கிடனும் இல்லாட்டி ஏ பார்ப்பானீய என பாயாசம் காய்ச்ச ஆரம்பிச்சுடுவாங்க.

வரலாறு புரிகிறதா? மீண்டும் சந்திப்போம்.

காங்கிரசும் வரலாறும்! Headless Chicken Syndrome!

இப்போது காங்கிரசுக்கு போதாதகாலம் என்றால் ராகுல் காண்டி ஒருவரே அதற்கு முழுமுதல் காரணம் என்ற அளவுக்கு நிலைமை அவ்வளவு கேவலமாகப் போய்க்கொண்டிருக்கிறது. 1998 முதல் 2013 வரை டில்லியை தொடர்ச்சியாக மூன்று முறை ஜெயித்த காலம் போய், இருந்தார்கள் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் தோல்வி என்பதையும் தாண்டி மூன்றே  மூன்று தொகுதிகளில் மட்டும் டெபாசிட் கிடைக்கிற அளவுக்குக் கீழேபோய்விட்டது. டில்லி காங்கிரசுக்குப் பொறுப்பாளராக இருந்த P C சாக்கோ, ஆம் ஆத்மி கட்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார்; எங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்று தேம்பியது சிலநாட்களுக்கு முன்புதான்!

  
மான்டெக் சிங் அலுவாலியா! IMF இல் பணியாற்றி வந்தவர், அதை ராஜினாமா செய்துவிட்டு  2004 இல் ஐமுகூ அரசின் அழைப்பை ஏற்று பிளானிங் கமிஷன் துணைத் தலைவராக இருந்தவர். அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இருநாட்களுக்கு முன் ஒரு அதிர்ச்சி தரும் தகவலைச் சொன்னார் 2013 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றை மிஞ்சுகிற மாதிரி ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட எம்பிக்களைப் பாதுகாப்பதாக அந்த அவசரச்சட்டம் இருந்தது. அன்றைக்கு எம்பியாகவும் காங்கிரசின் இளவரசராகவும் வலம்வந்துகொண்டிருந்த ராகுல் காண்டி அந்த அவசரச் சட்டத்தை முட்டாள்தனமானது, கிழித்தெறிந்து தூர எறிந்துவிடவேண்டியது என்று பேசியதை மேலே வீடியோவில் பார்த்தீர்கள் இல்லையா? செய்தியாகப் படிக்க இங்கே.  

மான்டெக் அலுவாலியா இப்போது சொல்கிற தகவல் இதுதான்: ராகுல் காண்டி இப்படி அரசை அவமதித்த பிறகு தான் பதவியில் நீடிக்க வேண்டுமா? ராஜினாமா செய்து விடலாமா என்று தன்னிடம் ஆலோசனை கேட்டதாக! ஆனால் இந்த விவகாரம் வெடித்தபோதே நாடாளுமன்றத்தில் பிஜேபியின் அருண் ஜெயிட்லி பிரதமர் இந்த அவமதிப்புக்கு ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னதைப்பற்றி மன்மோகன் சிங் அலட்டிக்கொண்ட மாதிரித் தெரியவில்லை! பழைய விவகாரம் தான்! காங்கிரசுக்கு இப்போது குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு பழைய சங்கதிகள் வரலாறு என்றாலே ஏகத்துக்கும் அலெர்ஜி என்பதை இந்தப்பக்கங்களில் பலமுறை பார்த்து வந்திருக்கிறோம்! ராகுல் காண்டிக்கும்  நேற்று நடந்த வரலாறு கூடத் தெரியாது என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருப்பது காங்கிரசின் நிகழ்கால சோகம், தலைவிதி!

ராகுல் காண்டிக்கு, அவர் ட்வீட்டிய செய்தியில் இருந்த முட்டாள்தனத்தை, பெண்களுக்கு அவமதிப்பைச் செய்து டில்லி உயர்நீதி மன்றத்தில் வாதிட்டதும் 2010 இல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் என்பதை பிஜேபியின் MP மீனாட்சி லேகி வந்துதான் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கிறது! ராணுவத்தில் பெண்களுக்கும் நிரந்தர கமிஷன் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததில், பெண் அதிகாரிகளுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் மீனாட்சி லேகி என்பது இந்தச் செய்தியின் கூடுதல் விசேஷம்! ராகுல் காண்டிக்கு என்னவிவரம் என்று தெரிந்துகொள்ளாமலேயே உளறுவதென்பது தொடர்கதையாக இருப்பது காங்கிரசின் சாபக்கேடு! அந்த ராஜா காது கழுதைக்காதுதான்! அதை ஒப்புக் கொள்கிற தைரியம், ஒதுக்கிவைக்கிற சாமர்த்தியம் காங்கிரஸ்காரர்களுக்கு இல்லை! காணாமலே போய் விடுவதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

    
சேகர் குப்தா, கழுத்து திருகப்பட்ட கோழிக்குஞ்சு சுற்றிச் சுற்றி தடுமாறுவது போல, காணாமல் போவதற்கு முன் காங்கிரஸ் கட்சியும் தடுமாறிக் கொண்டிருப்பது பற்றி இந்த 22 நிமிட வீடியோவில் கொஞ்சம் பேசுகிறார். காரணம் காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் வெடித்துவரும் மோதல்கள்! மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத்துக்கும் ஜ்யோதிராதித்ய சிந்தியாவுக்கும்  மஹாராஷ்டிராவில் மிலிந்த் தியோராவுக்கும் அஜய் மாக்கனுக்கும், ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் என ஒவ்வொரு மாநிலத்திலும் உரசல்கள் பெரிதாகிக் கொண்டே வருகின்றன. உட்கட்சிப் பிரச்சினையாக, அதாவது  உட்கட்சி ஜனநாயகத்தில் இயல்பாக எழுகிற கருத்துவித்தியாசங்களின் வெளிப்பாடு என்று இதைச் சொல்ல முடியுமா? அல்லது கட்சி, ஒரு உறுதியான தலைமையின் கீழ் ஒன்றுபட்டு நிற்பதற்கு பதிலாக, அப்படி ஒரு தலைமை இப்போது இல்லை என்பதால் உடைந்து உருக்குலைந்துபோவதன் அடையாளமா?

காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகம் என்பது இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயம்! அப்படியானால்? காங்கிரசும்  ஒரு கழுத்து திருகப்பட்ட கோழிதானா?  

மீண்டும் சந்திப்போம். 

வரலாறும் முக்கியமே! MM பிறந்தநாள்! The Magician!

ராதாரவி என்ன பேசினாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தம் கற்பித்துச் சர்ச்சையாக்கிவிடுவது இங்கே ஊடகங்களுக்குப் பிடித்தமான வேடிக்கை! அவர் சொல்வதன் பின்னணியில் வரலாற்றுப் பூர்வமான தேவை, ஆதாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ராதாரவி பேசியிருந்தாலும்  அகிலன் கல்கியில் தொடர்கதையாக எழுதிய வெற்றித் திருநகர் புதினத்தை, ஒருமுறை வாசித்துப் பார்த்திருந்தீர்களானால்,  கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமே! அகிலன் எழுதிய கதைகளிலேயே கொஞ்சம் தரவுகளோடு எழுதப்பட்ட கதை அது ஒன்றுதான்! (வேங்கையின் மைந்தன் சுத்தக் குப்பை!) என்று இங்கே எழுதி  இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை1 நாம் தமிழர் கட்சி ஆசாமிகள் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்கள்!
  
  
இங்கே இன்றைக்கிருக்கிற  மதுரை பழைய பாண்டியர்களுடைய காலத்து மதுரை அல்ல, நாயக்கர்கள் காலத்து மதுரையின் எச்சம் என்பது கூடத் தெரியாமல் பேசுகிறார் சாட்டை துரைமுருகன்!வரலாற்றைத் திரித்துப் பேசுவது தமிழ் தேசியம் என்பது தெரிந்ததுதானே! உதியஞ்சேரல் பரத காலத்தவனா என்றொரு சிறுநூலைப் பள்ளி நாட்களில் படித்துச் சிரித்ததுண்டு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுநூலாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த சப்ஜெக்ட் மீனாட்சி புத்தக  நிலைய வெளியீடாக வந்ததாக நினைவு. காசுக்காகக் கூவுகிற தமிழ்ப்புலவர்களில்   யாரோ ஒருத்தர் சேரமன்னன் ஒருவன் மகாபாரத யுத்தத்தில் இருபக்கத்துச் சேனைகளுக்கும் சோறு கொடுத்தான் என்று ஒரு பாடலை எழுதிவிட்டுப்போக அதை வைத்து ஒரு வெட்டி ஆராய்ச்சி செய்து தீசிஸ் சமர்ப்பித்து டாக்டர் பட்டமும் வாங்கிவிட்டார் நூலாசிரியர்  என்பது  கொசுறு செய்தி.  பாடல் எழுதியவரின்  சமகாலத்துப் புலவர்களாக அறியப் பட்டவர்களை வைத்து, அந்த சேரமன்னன் பெயரை வைத்து ஒப்பிட்டுப் பார்த்து பாரதப்போர் நடந்த காலத்துக்கும் அந்த மன்னனுக்கும் தொடர்பு கிடையாது, வேண்டுமானால் பாரதப் போரில் உயிர்நீத்த இருபக்கத்துக்கும் திதி வேண்டுமானால் கொடுத்து சோற்றுப்பிண்டம் வைத்திருக்கலாம் என்று முடிகிற இந்த ஆராய்ச்சி (?) நூலைப் பற்றிய நினைவு வருகிறது. , 


கூடவே,          தமிழர்களுக்கு வரலாற்றுப் பிரக்ஞையே கிடையாது என்று வேறொரு context இல் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் நிறுவி நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா சொன்னதும்  சேர்ந்து நினைவுக்கு வருகிறது!  
                                                            

அட! நம்ம மண்ணு மோகனருக்கு இன்னைக்குப் பொறந்த நாளாமே!  

Good News For People Who Love Bad News In a Twist, Netanyahu Wins a Chance to Keep His Job
மறுபடியும் மொதல்ல இருந்தா?  சமீபத்தைய இஸ்ரேல் தேர்தல்களில் பிரதமர் நேத்தன்யாஹூ எதிர்பார்த்தபடி அவருடைய லிகுட் கட்சிக்குப் போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் மீண்டும் ஆட்சியமைக்க நேத்தன்யாஹூவுக்கே அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது தற்போதைய செய்தி! But by Wednesday, in a surprise twist, Mr. Netanyahu — long called “the magician” for his political survival skills — was back on center stage. President Reuven Rivlin chose him to try to cobble together a coalition, opening the door to a continued shift to the right for Israel and offering a potential political lifeline to Mr. Netanyahu, who faces a looming indictment for corruption என்கிறது நியூயார்க் டைம்ஸ். லிகுட் கட்சியும் ஆதரவுக் கட்சிகளும் சேர்ந்து மொத்தமுள்ள 120 இடங்களில் 55 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஒரு working majority என்பதற்கு இன்னமும் 6 இடங்கள் வேண்டிய நிலையில் நேத்தன்யாஹூ தாக்குப் பிடிப்பாரா? கஷ்டம் தான் ஆனால் அவரால் முடியாதது இல்லை! இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரியான சூழ்நிலைகளை சமாளித்திருக்கிற மந்திரவாதி அவர் என்று ஒரு அரசியல் விஞ்ஞானி சொல்கிறாராம்!
 
Mr. Netanyahu’s chances of success are “not good but not impossible,” said Gadi Wolfsfeld, a political scientist at the Interdisciplinary Center Herzliya. “He’s pulled rabbits out of the hat before.”  
                                                                              
இன்றைக்கு செய்திகளின் ரவுண்டப் போதுமா?

மீண்டும் சந்திப்போம். 

 

ராமசந்திர குகா மாதிரி இபின் கால்தூனைத் தேட வேண்டாமே!

நேரு, மற்றும் வாரிசுகளுடைய திமிரையும்  முட்டாள்தனமான முடிவுகளையும் நினைவுபடுத்திக் கொள்கிற மாதிரி  வீடியோ ஒன்றை இன்று காலை பார்க்க நேர்ந்தது. பார்த்த விஷயம் IAS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகளை மாற்றுவதைப் பற்றி என்றாலும் தேவையே இல்லாமல் 32 வருடங்களுக்கு முன்னால் ராஜீவ் காண்டி காலத்தில் நடந்த ஒரு விஷயத்தோடு எந்த ஒரு சம்பந்தமுமில்லாமல் முடிச்சுப் போட்டுப் பேசியதால் கொஞ்சம் பழைய நிகழ்வுகளைத் தேடிப் படித்து நினைவு படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.


இந்த வீடியோவில் சேகர் குப்தா, சுபாஷ் கார்க் என்கிற IAS அதிகாரி நிதித்துறை செயலாளராக இருந்து, வேறொரு துறைக்கு மாற்றப்பட்ட அதிருப்தியில் வாலண்டரி ரிடையர்மண்ட்  கோரியிருக்கிற விஷயத்தோடு ,  1987 ஜனவரியில் ராஜீவ் காண்டி தன்னுடைய வெளியுறவுத்துறை செயலாளரைப் பொதுவெளியில் அவமானப் படுத்தியதில்  அவர் உடனடியாக ராஜினாமா செய்ததை முடிச்சுப் போட்டுப் பேசியதன் உள்நோக்கம் என்னவென்பது உங்களுக்காவது புரிகிறதா பாருங்கள்!


ஆயிலம் பஞ்சாபகேசன் வெங்கடேஸ்வரன்! 36 வருடங்கள் வெளியுறவுத்துறையில் அயல்நாடுகளில் தூதராகவும் பல்வேறு பொறுப்புக்களிலும் பதவிவகித்து வெளியுறவுத்துறை செயலாளராக ராஜீவ் காண்டி காலத்தில் பணியாற்றியவர். தன்னுடைய திறமை, நேர்மையால்  சக அதிகாரிகளாலும் ஊடகங்களாலும் மிகவும் மதிக்கப் பட்டவர். ND திவாரி மாதிரி கிழடுதட்டிப் போன, வெளியுறவு விவகாரங்கள் என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ்காரர் தான் அன்றைக்கு வெளியுறவு அமைச்சர்!   என்ன நடந்தது என்று கொஞ்சம் பார்க்கலாமா?

In December 1986, Venkateswaran had gone to Islamabad, and stated that as Chairman of SAARC, Prime Minister Rajiv Gandhi would visit different SAARC capitals including Islamabad. However, on January 21, 1987, Gandhi told a Pakistani journalist that he had no plans to visit Islamabad in near future. When the journalist referred to Venkateswaran’s earlier statement, Rajiv Gandhi said:

“You will be talking to a new foreign secretary soon.”

சர்வதேச நிருபர்கள் உள்ளிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த நிகழ்வில் AP வெங்கடேஸ்வரனும் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். ராஜீவ் காண்டி இப்படிப் பேசியதைக் கேட்டவுடன், உடனடியாகத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார். உடனடியாக IFS அதிகாரிகள் சங்கம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது ஒரு அதிசயம் என்றால் ஒரு திறமையான அதிகாரியை அவமானப்படுத்தியதை ஊடகங்கள் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்தது மிக அபூர்வமான விஷயமாக இருந்தது. முந்தின டிசம்பரில் வெங்கட் என்று நண்பர்களால் மரியாதையோடு அழைக்கப்பட்ட AP வெங்கடேஸ்வரன் இஸ்லாமாபாதில், சார்க் அமைப்பின் சேர்மன் என்ற முறையில் ராஜீவ் காண்டி இஸ்லாமாபாத் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைநகர்களுக்கு வருகைதருவார் என்று சொன்னது பிரதமருடன் கலந்துபேசாமல் இருந்திருக்க முடியாது. 

பாகிஸ்தான் போகப்போவதில்லை என்கிற தனது மனமாற்றத்தை வெளியுறவுத்துறைக்குத் தெரிவிக்காமல்  இருந்துவிட்டு நிருபர்கள் கூட்டத்தில் நீங்கள் புதிய வெளியுறவுச் செயலாளருடன் பேசுவீர்கள் என்று சொன்னது ராஜீவ் காண்டியின் அரைவேக்காட்டுத்தனம், திமிர் என்று மட்டுமே பார்க்க முடியுமா? பின்னணியில் ராஜீவ் காண்டியைச் சுற்றி இருந்த அதிகாரத்தரகர்கள், வெங்கடேஸ்வரனை மாற்றிவிட்டு அந்த இடத்துக்கு வரவிரும்பியவர்கள், தேவையில்லாமல் வெளியுறவுத்துறைக்குள் மூக்கை நுழைத்துக் கொண்டிருந்தவர்கள் என்றொரு பெரிய கும்பலே இருந்தது, என்பது இந்திரா, வாரிசுகள் ஆட்சி செய்த காலத்தைய  அவலங்கள்!.The truth behind the ouster is that Venkateswaran eventually became a tragic victim of the power-brokers around the prime minister. They took advantage of the fact that the foreign secretary would not sit back and accept the increasing sidelining of the foreign office (and the Policy Planning Committee headed by G. Parthasarathy) on foreign policy issues and tolerate interference by outsiders like Bhandari, Natwar Singh (then in the Ministry of Fertilisers) and officials in the Prime Minister's Secretariat என்று முடித்துவிடக் கூடிய விஷயமா? 

வேறொருவரைத்தான் ராஜீவ் காண்டி முதலில், வெங்கட்டை ஒதுக்கிவிட்டு வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்க முடிவெடுத்திருந்தார். வெங்கடேஸ்வரன் ராஜீவை நேரில் சந்தித்து, தான் கெஞ்சுவதற்காகவோ அந்தப் பதவிக்காகவோ ஏங்கி வரவில்லை, ஆனால் நடைமுறை என்னவென்பதை எடுத்துச் சொல்லவே வந்தேன் என்று தெரிவித்தபிறகு அடுத்த இரண்டு நாட்களில் வேண்டாவெறுப்பாக வெளியுறவுத்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டார் என்பது காங்கிரஸ் ஆட்சி இஷ்டைல் தெரிகிறதா? ஆனால் ராஜீவ் காண்டி ஆட்சிக் காலத்தில் வெளியுறவுகளில் ஏற்பட்ட சில முன்னேற்றங்களின் பின்னணியில் வெங்கடேஸ்வரனுடைய உழைப்பு இருந்தது என்பது எத்தனைபேருக்கு நினைவு இருக்குமென்று நினைக்கிறீர்கள்? 

இஸ்லாமாபாத்துக்குப் போவதா இல்லையா என்ற தடுமாற்றம் மட்டுமே ராஜீவ் காண்டியை இந்த முட்டாள்தனத்தைச் செய்ய வைக்கவில்லை. என்னென்ன காரணிகள் இருந்தன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இங்கே க்ளிக் செய்து படித்துப் பார்க்கலாம்  

நேரு, மற்றும் வாரிசுகளுக்குத் தாங்கள் ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதை இருந்ததே தவிர, சரியான நபர்களைத் துணைக் கொள்வதென்பது இருந்ததே கிடையாது. காங்கிரஸ் இன்றைக்கு இவ்வளவு கேவலமாகத் தோற்றுக்கொண்டே வருவதற்கான காரணங்கள், அவர்களுடைய மரபணுவிலேயே இருக்கின்றன. ராமச்சந்திர குகா மாதிரி  யாரோ ஒரு அரேபிய இபின் கால்தூனைத் தேடிப் பிடித்துக் காரணங்கள் தேடவே வேண்டாம்!

மீண்டும் சந்திப்போம்.
   
        

மானசீகக் கொ.பேரனுக்கு ஒரிஜினல் கொள்ளுப்பேரன் கடிதம்!

கமல்ஹாசனுக்கு காந்திஜியின் கொள்ளுப்பேரன் ஸ்ரீக்ருஷ்ண குல்கர்ணியின் கடிதம் என்று நண்பர் நெல்லைத்தமிழன் முந்தைய பதிவில் பின்னூட்டத்தில் வெளியிட்டிருக்கிறார்.நெல்லைத்தமிழனுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் இங்கே வரும் நண்பர்களுக்காக அதை வெளியிடுகிறேன்.

கமல் காசருக்கு தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்கிற வழக்கமில்லை என்பதும், அவர் இதுமாதிரித் தவறுகளை ஒருவித உள்நோக்கத்துடனேயே தொடர்ந்து செய்து வருகிறார் என்பதும் இங்கே பலருக்கும் தெரிந்த விஷயம்தான்!  அமைச்சர்  ஜெயக்குமார் நக்கலாகச் சொன்ன மாதிரி இசுடாலின் கணக்கு சார்வாளாகவும் கமல் காசர் வரலாறு சார்வாளாகவும் இருந்தால் எப்படியிருக்கும்?விளங்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

     
----------- An open letter to Kamal hasan from the great grandson of Gandhi ji, Shri Krishna Kulkarni. ----------- Nathuram Godse was an assassin – he was not a Hindu terrorist

An open letter

Dear Shri Kamal Haasan,

Namaskar.

Growing up, I was a fan of your acting and your films, “Ek Duje Ke Liye”, “Saagar”, and “Sadma” etc. Those were good years and you were still focussed on your main talent – acting. This focus was to our (your audiences) benefit. We enjoyed your superb performances. Thank you so much Sir.

In recent times you joined electoral politics and I got a glimpse of the real person you are. In your films, you were always the actor who impressed me with his value systems. But alas, these value systems were the demand of a scripted story. Real life is unfolding without a script…

Your utterances today, during your campaign speech at Aravakurichi in Karur district of Tamil Nadu, where you claimed to be (in spirit) the great grandson of Gandhiji were not surprising. Here you went on to say that Nathuram Godse was the first Hindu terrorist.

Before I share with you my own view, I do wish for you to know that unlike you, the man whose great grandson you claim to be in spirit, Gandhiji did have a relationship with the Rashtriya Swayamsevak Sangh – a fact that is less known, because it is inconvenient and so for the most part it is ignored:

1. The RSS always stood for Akhand Bhaarat, and so did Gandhiji – absolute congruence there.

2. Gandhiji was not involved in the decision to partition India. He had famously said – partition over my dead body. But after partition had been decided and was done – Gandhiji stood for his principle of “Satyagraha – insistence for the truth”. It was this fearless adherence to this principle that got him to insist that Rs. 55 crores be remitted by the Govt. of India to Govt. of Pakistan. 3. Gandhiji’s use of simple means such as the “charkha” and “non-violent civil disobedience” were admired by the RSS because these means increased public support for our freedom struggle. Dr K. B. Hedgewar, the founder of the RSS, was an active participant in the non-cooperation movement of 1921 and the civil disobedience movement of 1930. For his involvement, he served two rigorous prison sentences. Do you know this? 4. To understand Gandhiji, you have to understand the roots of his life. He was rooted in Sanatana Dharma and the Bhagawat Geeta. There is no ambiguity in this assertion. The proof of this can be found in Gandhiji’s insistence on “satyagraha or insistence for the truth”; “cow protection”; “abolition of untouchability; gram swaraj; swadeshi etc. His affinity for the eternal Hindu thought is there for all to read and see. 5. It was in 1934, when Gandhiji was in Wardha, that he attended a camp of the RSS. During this he was moved to learn that the camp included swayamsevaks from the Scheduled Castes and that there was complete absence of untouchability. 6. Many years later, after independence when Gandhiji was staying in what was then called Bhangi colony (sweepers colony), a RSS morning shakha used to be conducted opposite his place of stay. One day while addressing more than 500 swayamsevaks, he said the following – “I visited the RSS camp years ago at Wardha. At that time the founder Shri Hedgewar was alive. I was impressed by their rigorous discipline, the complete absence of untouchability and simplicity. Since then the Sangh has grown. I have always believed that any organization which is inspired by the ideal of service and self-sacrifice, is bound to grow in strength.” 7. From January 2015 to April 2016, I walked with my teacher Sri M, from Kanyakumari to Srinagar (zig-zag), almost 7500 km. During this long arduous padyatra, I was extremely fortunate to experience first-hand the silent, unadvertised but fundamental work that RSS and its pracharaks do across the villages and towns of Bhaarat. Just look at the work they are doing right now in Odhisha in the aftermath of the cyclone. 8. Commenting about the relationship between Gandhiji and the RSS without considering these facts is a disservice to the truth. 9. In my view, RSS is one of the few organisations who continues to do its main work “on the ground” and “among the people”. I have witnessed their work. And I can say that it is the committed, hardworking and humble RSS pracharak whose efforts go a long way in keeping Gandhiji’s ideals alive even in this day and age.

May I suggest that you please try to study the work of the RSS – live among them, move with them and then decide on what colour of bias you wish to have. A true great grandson of Gandhiji would have the courage to do so. Try it Sir. Do study their work before you talk about Gandhiji – which I guess you do, only when you need the votes.

Their work in the fields of rural development, afforestation, recharging our water bodies, organic farming, cow conservation and protection, social equality and harmony, imparting education in one’s own language and swadeshi economy and lifestyle are fundamental to our nation’s future.


Now coming to Nathuram Godse. He assassinated Gandhiji and so he can be and should be termed an assassin. A terrorist is never alone. A terrorist has a support network. A terrorist subscribes to an ideology, where they try by using force of death to eliminate every thought, every spirit, and every ideology that isn’t theirs. Nathuram Godse was a bitter man who could not silence Gandhiji’s spirit and so he silenced his body.

In calling Nathuram Godse the first Hindu terrorist, you have played to the gallery. I understand your dire need for votes; for media attention; for a controversy to bring national attention to you. I understand all that. But I wonder if you realize that today you sacrificed “TRUTH”. Your statement is proof to me that you have little or no comprehension of our “spiritual heritage” – Santana dharma – the life breath of Bhaarat mata. I have yet not met a Hindu, who has tried to eliminate by force of death, every thought, every spirit, and every ideology that isn’t Hindu. And I am not surprised that Congress (I) has agreed to your assertion 1000%. But this was expected from a group of people who have destroyed everything that Gandhiji stood for. They are a family of dynasts who have lived by entitlements of birth. They misuse their surname which happens to be Gandhi – they don’t belong to Gandhiji’s family. I hope you know that?

Today, I am an anguished fan – but thank you for showing us your true nature.

With my regards and pranams,

Yours very sincerely,

Shrikrishna Kulkarni
Bangalore, May 13th, 2019.



கமல் காசருக்குக் கடிதமெழுதினால்? காதில் ஏறுமா? தெரியாது. ஆனால், ஒரு பொய்யான சித்திரத்தை ஒருவித உள்நோக்கத்தோடு கமல் காசர் தொடர்ந்து பரப்பி வருகிறார் என்பதாவது நமக்குத் புரிய வேண்டுமே!

அதற்காகவே இந்தப்பதிவு.  

மண்டேன்னா ஒண்ணு!பதிவர்களின் அரசியல்!

சண்டேன்னா மூணு! வால்பையன்!வரலாறு!அரசியல்! நேற்றைக்கு இந்தத் தலைப்பில்தான் முதலில் எழுத உத்தேசித்திருந்தேன். மேலே மூன்று சொற்களிலும் மூன்று சுட்டிகள்! வரலாறு என்பதைக் க்ளிக் செய்தால் 2009 வாக்கிலேயே வால் பையனுக்கு நேருவின் குடும்ப வரலாறைக் கற்றுக் கொடுக்க முயற்சித்தது பயனில்லாமல் போன கதை நினைவுக்கு வரவே கைவிட்டேன்! கூகிள் பிளஸ்சில் சின்னதாக ஒரு சீண்டலுடன் மறு முயற்சி முடிந்து போனது!
 
வரலாறு என்றால் அலெர்ஜி! வால் பையனுக்கு மட்டும் தானா?
  
உண்மையை விவரிக்கப் போனால், பதிவர்களின் அரசியல் தான் அதில் வெளிப்படும் முதல் உண்மை!  அதற்குமேல் புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறோம் என்ற எண்ணம் வரவே லயோலா கல்லூரி செய்துவரும் திருப்பணி என்று நேற்றைய பகிர்வு நிகழ்கால நடப்பின் மீதானதாக மாறிப்போனது.

கிறிஸ்துவத்துக்குள் கம்யூனிசமும் அடக்கம் என்பது புதிய செய்தி. சபரிமலை பிரச்சனைக்கு புதிய அர்த்தம் தெரிகிறது.


கிறித்தவம் என்பதே ரோம சாம்ராஜ்யம் சரிய ஆரம்பித்த நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் மதம் என்பது வாட்டிகன் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்த்தாலேயே விளங்கி கொள்ளக் கூடியதுதான்! ஆரம்ப நாட்களில் பாதிரியார்கள் கால் வைத்த ஒவ்வொரு இடத்திலிருந்தும் முக்கியமான பண்பாட்டுக் கூறுகளை லத்தீனில் மொழிபெயர்த்தார்கள். பிறகு லத்தீனில் இருப்பதைக் காட்டியே இதெல்லாம் பைபிளில் ஏற்கெனெவே சொல்லப் பட்டிருப்பது தான் என்று இங்கே டூப்ளிகேட்டுகள் தங்களை காந்தி என்று சொல்லிக் கொள்வதை போல பிரசாரம் செய்தார்கள். இங்கே ராபர்ட் கால்ட்வெல் என்கிற பாதிரி திருநெல்வேலிக்கு வந்து திராவிட மொழிக்குடும்பம் கோட்பாட்டை ஆரம்பித்து வைத்ததும் அந்த நாட்களிலேயே சமுகநீதி காத்த பாதிரியாகக் கொண்டாடப் பட்ட கதையும் கூகிளிட்டுத் தெரிந்து கொள்ளக் கூடியதுதான்!

கிறிஸ்டியன் கம்யூனிசமுமே கூட அந்த மாதிரி கம்யூனிச ஆதிக்கம் வலுத்து வந்த பகுதிகளில் வாடிகன் ஆரம்பித்து வைத்த திருப்பணி! இங்கே பாதிரிகளை மதுரையில் உருவாக்குகிற தியாலஜிகல் கல்லூரி அதைச் செய்வதை நேரடியாகவே பார்த்த கதையைத்தான் பதிவில் கோடிட்டுக் காட்டினேன்!

வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் பதிவு இது! மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயரை வைக்கவேண்டுமென்கிற கோரிக்கை இங்கே நீண்ட நாட்களாகவே இருப்பதுதான்! இதற்குப் போட்டியாக இமானுவேல் சேகரன் பெயரைசூட்ட வேண்டுமென்ற கோரிக்கையும் உண்டு! இந்த சிலைவைத்தல், பெயர் சூட்டுதல் அல்லது மாற்றுதல் என்கிற சாங்கியம் எத்தனை அக்கப்போர்களைத் தூண்டக்கூடியது என்பது தெரிந்துதான் விமரிசனமாக எழுதினாரா?   
இந்த முறையற்ற கடன் வழங்கப்பட்டது 2012 இல்! வராக்கடனாக மாறி விஷயம் வெளியே தெரியவந்தது 2017 இல்! சந்தா கோச்சார் மீது CBI இன்று வழக்குப் பதிவு செய்திருக்கிறது. வீடியோகான் வேணுகோபால் தூத் மீதும் தான்!

இப்படி எழுதிய சூடு ஆறுவதற்குள்ளாகவே அருண் ஜெயிட்லி ஆட்டையை கலைக்கிற வேலைகளை ஆரம்பித்து விட்டாரோ? விகடன் தளம் கூட இப்படிப் பொங்குகிறது   கண்டனூர் ஜமீன் கம்பி எண்ணாமல் இன்னமும் வெளியில் பகுமானமாக அலைவதில் கூட அருண் ஜெயிட்லி பங்கு இருக்கிறதோ என்கிற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி உட்பட நிறைய பேருக்கு இருக்கிறது. மோடிக்கு எதிரிகள் வெளியே இருந்து வரவேண்டியதே இல்லை! அருண் ஜெயிட்லி, டாக்டர் யக்கோவ் தமிழிசை போல உள்ளேயே !

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி என்ற தம்பட்டத்தோடு எழுதிவரும் இடதுசாரி LIC ஊழியர் ராமன், நேற்றைக்கு கூட எங்கே எங்கே மோடி எங்கே என்று தெடிக் கொண்டிருந்தவர் அதற்குமேல் எழுத வேறு விஷயம் கிடைக்காமல் நாய்களுக்குப் பதிலாக . . . என்று எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பது பதிவர்களின் அரசியல் எப்படிப்பட்டது, பதிவுகளில் பேசுபொருள் வறட்சியாகிக் கொண்டிருக்கிறதோ என்கிற ரீதியில் இன்றைக்கு சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கிறது!

    
   

செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமே!

நண்பர் அசோக்குமார் தனது தினசரிக் கடமையாக கூகிள் பிளஸ்சில் நாட்காட்டி ஒன்றைப் பகிர்வதுபற்றி ஏற்கெனெவே இங்கே பேசியிருக்கிறோம்! இன்றைய நாட்காட்டி    இப்படி நினைவுபடுத்துகிறது: நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்  என்ற வாசகங்களுக்கு கீழே பொருத்தமாக  சிலரை நினைவு கூர்கிற மாதிரியும்!


நினைத்துப் பார்க்கிறோமா? இந்தக் கேள்வியை நானும் நீங்களும் கேட்டுக் கொண்டால் என்ன சொல்வோம்?

#வாஜ்பாய் #பிறந்தநாள்: நினைவிடத்தில் #மலர் தூவி #பிரதமர் #மோடி #மரியாதை!நவபாரதச் சிற்பி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி சிரத்தாஞ்சலி செய்தனர். முன்னதாக நேற்று வாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயமும் வெளிப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன.முன்னாள் பிரதமர் என்பதற்காகவோ இன்றைய ஆளும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்பதனால் மட்டுமல்ல! ஜனசங்கமாக ஒரு அரசியல் இயக்கத்தை நிறுவியதிலும், நாடே பெரிது என்று 1977 இல் அதை ஜனதா தளத்தில் இணைத்து இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை முறியடிப்பதில் பங்காற்றியதிலும், பழைய ஜனசங்கத்தினரில் பலரும் RSS இலும் உறுப்பினர்களாக இருக்கிறார்களே என்று கிளப்பிவிடப்பட்ட விஷமத்தனமான வெறுப்பரசியலில் நொந்து ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி புதிதாக பாரதீய ஜனதா கட்சியை நிறுவியதிலும் முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் அடல் பிஹாரி வாஜ்பாய் என்றென்றும் இந்திய வரலாற்றில் நினைவு கொள்ளத் தகுந்தவரே!
*******

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, ராஜாஜி, திராவிடங்களால் தேவைப்படும்போது மூதறிஞர் தேவைப்படாதபோது குல்லுக பட்டர் என்று ஏளனப்படுத்தப்பட்ட ராஜாஜியின் நாற்பத்தாறாவது நினைவு தினம் இன்று!

ராஜாஜியின் பேரனும் முன்னாள் மேற்கு வங்க  கவர்னருமான கோபாலக்ருஷ்ண காந்தி ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் இருந்து எடுத்திருக்கும் இந்தத் தலைப்பு ஒரு ஐம்பதாண்டு கால அரசியலைக் கொஞ்சம் பின்னோக்கித் திருப்பிப் பார்க்க வைத்தது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது தான் தமிழகத்தில் மதுவிலக்கு  செய்யப்பட்டு, சாராயக்கடைகள்  கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன  தன்னுடைய வயது, இருந்த பதவியின் கவுரவம் எதையும் பொருட்படுத்தாமல் கருணாநிதியின் வீட்டுக்கே சென்று மதுவிலக்கை ரத்து செய்யும் முடிவைக் கைவிடுமாறு வேண்டிக் கொண்டார்.


ராஜாஜியின் பல அரசியல் நிலைபாடுகள் எனக்கு  உடன்பாடாக இருந்ததில்லை என்றாலும் எத்தனை எதிர்ப்பு வந்தாலும், தன்னுடைய கருத்தை எடுத்துச் சொல்ல அஞ்சாத ஒரு மாமனிதர் என்ற வகையில் இன்றைக்கு அவரது நினைவு தினம் என்பதை இங்கே நினைவுபடுத்துவதற்காக...!


CR was pious, he was not pietist. He was religious, not religiose. He was traditional, not orthodox. He could rebel, but not dally with heterodoxy. He prized intelligence but did not pickle his brains in the vinegar of cleverness. He was accepting of what Time served him, not servile before its buffetings.

ராஜாஜி முதல்வராக இருந்த போது அவருடைய நண்பர் ஒருவர் தனது மாவட்ட ஆட்சித் தலைவர் லஞ்சம் வாங்குவதாகவும் அவரை வேறு இடத்திற்கு மாற்றும்படியும் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். அதற்கு ராஜாஜி, " அவரை மாற்றமுடியாது. ஏனென்றால் லஞ்சத்தையும் ஊழலையும் ஒரு ஜில்லாவிலிருந்து இன்னொரு ஜில்லாவுக்கு மாற்ற விரும்பவில்லை. வேண்டுமானால் அவரிடமுள்ள குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக எழுதி அனுப்புங்கள். அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறோம்!'' என்று பதில் எழுதினார்.  
******* 
#கிறித்தவம் திணித்த #ஆங்கிலேயரை... #ஆயுதமேந்தி எதிர்த்த #தமிழ் மண்ணின் வீரமங்கை... #வேலு #நாச்சியார்!
டிசம்பர் 25:- ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி – முத்தாத்தாள் தம்பதிக்கு பெண் வாரிசாக 1730ஆம் ஆண்டு சக்கந்தியில் பிறந்தவர்.

நினைவுக்கு வருகிறதா? சுட்டியில் பாருங்கள்!

*******


சார்லி சாப்ளின் பற்றித் தனியாக என்ன சொல்வது? இந்த சிறு படமே அந்த மகாகலைஞனை இன்னாரென்று சொல்லிவிடுமே!

*******  
இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன்.
பாகிஸ்தானில் நேற்றைக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் குற்றச்சாட்டுக்களில் தண்டிக்கப் பட்டதை இப்படிக் கொண்டாடுகிறார்கள்!

Real movie release in pakistan now.. Full jam packed house 😂🤣😜
6:06 AM - 24 Dec 2018