Showing posts with label M P பண்டிட். Show all posts
Showing posts with label M P பண்டிட். Show all posts

"அன்னை என்னும் அற்புதப் பேரொளி"


"அன்னை என்னும் அற்புதப் பேரொளி" இந்தத் தலைப்பில் திருமதி விஜயா சங்கர நாராயணன் எழுதிய நூலை, வெகு நாட்களுக்கு முன் வாசித்த நினைவும், பரவசமும் இந்தப் பதிவை எழுதும் போது முன் வந்து நிற்கிறது.

அம்மா, அம்மா என்று அரற்றுவதைத் தவிர ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னைப் பற்றி, என்ன எழுதிப் புரிந்து கொள்ளவோ, புரிய வைக்கவோ முடியும்? அறியாமையின் உச்ச கட்டமாக, ஆசிரம சாதகர் ஒருவரிடம் அவருக்கேற்பட்ட அனுபவங்களைப் பற்றிக் குழந்தைத்தனமாகக் கேட்ட போது, "எவ்வளவோ இருக்கிறது, அதில் எதைச் சொல்வது?" என்ற கேள்வியே பதிலாக வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


ஸ்ரீ அரவிந்த அன்னையை ஏற்றுக்கொள்கிறேன் என்று மேலோட்டமாகவே நாம் சொன்னாலும், "ஒரு கணமாவது நான் ஒருவரைப் பார்த்திருந்தாலும் போதும், அவருடைய வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று ஸ்ரீ அன்னை சொல்லும் சத்திய வாக்கு அங்கே செயல் படுவதை, என்னுடைய அனுபவமாகவே இப்போது பார்க்கிறேன்.

"Remember and Offer" இது தன்னுடைய அடியவர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் ஒரு எளிய முயற்சி. எதுவானாலும், நினைவிற்கொண்டு வந்து, ஆத்ம சமர்ப்பணமாகச் செய்து வரத் தடைகள் நீங்குவதும், காரிய்ம் கை கூடுவதும் இறையருளால் நடத்தப்படும் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


புதுவையிலிருந்து வெகு தொலைவில் இருந்த போதிலும், ஆசிரம வாழ்க்கையின் ஒரு அங்கமாக உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட்ட வெகு சிலருள் ஒருவனாக இல்லாதிருக்கும் போதிலும், ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தை பற்றி முழுமையாக அறிந்தவனாக, அனுஷ்டிப்பவனாக இல்லாத நிலையிலும் கூட, இவனது சில அனுபவங்கள், உன்னை என்னுடைய அன்னையாகவே அறிந்து கொள்ளவும், அம்மா, என்னையும் உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக ஏற்றுக் கொள்வாய் என்று உன்னிடத்தில் உரிமையோடு விண்ணப்பித்துக் கொள்ளவும் தூண்டின. ஏற்றுக்கொள்வாய், ஒருபோதும் கைவிட மாட்டாய் என்கிற நம்பிக்கை உன் வாக்கினாலேயே இவனுள் விதைக்கப் பட்டிருப்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

1965-1966 களில் அறியாச் சிறுவனாக, உன்னுடைய உரையாடல்கள் தொகுப்பு ஒன்றில் உன்னுடைய புகைப்படத்தைப் பார்த்தவுடன், என்னைப் பெற்ற தாயாகவே தோன்ற, 'அட இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே' என்று திரும்பத் திரும்ப அதே அனுபவத்தைப் பல முறை அனுபவித்ததுண்டு. அளியன், அன்னை நீ தான், இவனைப் பெற்ற தாயின் சாயலில் இவனுக்குக் காட்சி கொடுத்திருக்கிறாய் என்பது புரிந்து கொள்ளவே வெகு நாட்களாயிற்று.

இடையில், தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திகனாகத் திரிந்த காலம் ஒன்று இருந்தது. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்ட காலமாகச் சொல்வது போல இவனது வாழ்விலும் அது ஒரு இருண்ட காலம்.

1986- 1987 களில் அமுதசுரபி மாத இதழில் திரு. கர்மயோகி அவர்கள் எழுதி வந்த கட்டுரைகள், உலகாயத விளையாட்டில், அன்னையை மறந்து போனவனை மீண்டும் அன்னையிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக உதவின. Mothers Service Society என்ற அமைப்பின் கீழ் தமிழகமெங்கும் ஸ்ரீ அரவிந்த அன்னை தியான மையங்களை ஏற்படுத்தவும், ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடி தியானம் செய்வதும், மலர் வழிபாடு செய்வதும் 1980 களின் இறுதியில் பரவலாக நடந்து வந்தன.ஆர்ப்பாட்டம், ஊர்வலம், முரண்பாடுகள் என்றே கிடந்த இவன், அதற்கு நேர் எதிர் மாறான அனுபவத்தைப் பெறுவதற்காக, இந்த மாதிரி கூட்டங்களில் பங்கேற்றதும் நடந்தது.

குடும்பம் ஒரு இடத்தில், பணியில் இருந்தது மற்றோரிடத்தில் என்றிருந்த காலம்.

டாக்டர் சுந்தர வடிவேல் இவனது மகனுக்கு வைத்தியர் என்கிற முறையில் அறிமுகமாகி, நண்பரான காலம். ஸ்ரீ அரவிந்தர் அன்னையிடத்தில் ஈடுபாடு கொண்ட இவரால் தான் ஸ்ரீ அன்னையிடம் இவன் மறுபடி தஞ்சம் அடைய வேண்டும் என்கிற வேட்கையும், ஈர்ப்பும் ஏற்பட்டது. விடுமுறையில் ஊருக்கு வருகிற நாட்களில் கணிசமான நேரம் டாக்டருடன் ஆன்மீகத்தைப் பற்றி விவாதிக்கும் பழக்கமும், இதே போல் ஈடுபாடு உடைய வேறு பலருடைய தொடர்பும் உண்டானது. சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்பதற்கொப்ப, பழைய வரட்டுப் பிடிமானங்களில் இருந்து விடுபட இவை உதவின. அந்த அளவோடு ஒதுங்கியும் போயின.

நம் உடலில் பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் உண்டாகிக் கொண்டே இருப்பது போல, "பழையன கழிதல், அதன் பின் புதியன புகுதல்" என்பதற்கொப்ப ஒவ்வொரு அனுபவமும், அதற்கு முந்தைய அனுபவங்களின் எச்சங்களைத் துடைத்துவிட்டுப் புதிதாய்ப் பிறந்தது.

"வாய்ப்பு என்பது மிகப் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் தருணம். அதனால் ஒருபோதும் வாய்ப்பைத் தவற விட்டு விடாதே" என்கிறார் ஸ்ரீ அன்னை. எவ்வளவு வாய்ப்புக்களைத் தவற விட்டிருக்கிறேன் என்பது இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது.

உள்ளது உள்ளபடி சமர்ப்பணத்துடன் சொன்னால், எளிய வார்த்தைகளுக்குள்ளும் பேருபதேசம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய Commentaries in the Mother's Ministry என்ற நூலில் இருந்து இந்தப் பகுதியை பார்ப்போமா?

Incalculable Divine
“There are quite a number of stories about the Divine's help arriving at the very moment man gives up his egoistic struggle. There is, for instance, the case of a man who was falling down from the top of a high tree. He cried out to God to save him and God did respond. The falling man landed on a branch of the tree and he exclaimed to himself: “Ah, now I will take care of myself”. That very moment the branch started cracking and our friend got alarmed and called out, “God, I did not mean it!”

The point in this and similar stories is that as long as man depends upon his own strength—which is in fact so puny—or on that of other human sources, the Divine does not enter into the picture. Man is allowed to struggle and realise the limitations of human effort. The inner soul-strength comes to the fore when the external being, in its moment of truth, realises its utter failure to meet the challenges that face it and appeal to the Divine, whether within or above. In a slightly different context, Sri Aurobindo puts it graphically in SAVITRI how in moments of crisis man is forced to look to the Divine:


An hour comes when fail all Nature's means,

Forced out from the protecting Ignorance

And flung back on his naked primal need,

He at length must cast from his surface soul...


When our strength fails, when our human resources fail, when we sincerely call for the Divine's help, the Divine never fails. Only we must have the eye to perceive the Hand of God which may be cloaked in appearance that may be misleading at first sight. The help may not come in the form in which we expect. It may even come in the form of happenings that go counter to our expectations. The ways of the Divine Saviour are mysterious, as complex as the causes of our difficulties. The most unlikely elements play a helpful role. At times even enemies are moved to fraternise with us. We are baffled. We try to find explanations and at times attribute ulterior motives to the benefactors. But the fact remains that individuals are moved to act helpfully, circumstances are shaped favourably—all because the Divine has willed to save.

We may not always understand the manner in which the Will operates. It is not immediately necessary either, to know it. It is enough if we have the faith that the Divine response is certain and when we are helped out, to own gratitude to the Divine. There is often a tendency to attribute the favourable turn to our strength of intelligence and will or to external human agencies. It is well to remember at such moments that men and events are only instrumentations of the Divine Will to protect and save.”
*

அம்மா! எவ்வளவு தான் தவறுகள் இழைத்திருந்த போதிலும், அகங்காரச் செருக்கோடு நான் நான் என்று இல்லாததை எல்லாம் கற்பிதம் பண்ணிக் கொண்டு திரிந்த போதிலும்,

"நான்" என்பது அகங்காரத்தின் கூப்பாடு அல்ல; உனக்குள்ளே இருக்கிற தெய்வீகமே, உள்ளொளியே உண்மையான நான் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறாய்.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

உனது திருவடிகளையே அடைக்கலமாகப் பற்றிக் கொள்வது முழுமையாகிற வரம் அருள்வாய். கரணங்கள், மனம், ஜீவன் இவை அனைத்தையும் முழுமையாக உன்னிடத்தில் சமர்ப்பிப்பதற்குத் தகுதியும், சக்தியும் அருள்வாய்.

ஒவ்வொரு தருணத்திலும் நீ எனக்களித்திருக்கிற அருளை மறவாமல், நன்றியோடு ஏற்றுக் கொள்கிற பக்குவத்தை அருள்வாய் தாயே!

*quoted text thankfully excerpted from and acknowledged”

“Commentaries on The Mother's Ministry” by Shri M P Pandit, Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.


***2009 இல் எழுதியதன் மீள்பதிவு 

தோசை, மசால் தோசை!

இந்த உலகம், பிரபஞ்சம், இவைகளோடு நமக்கிருக்கும் தொடர்பு என்று தொடர்ந்து தத்துவ விசாரம் செய்து கொண்டிருப்பது ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவம்.ஆனால், வலைப்பதிவுகளில் விவாதிக்கப் படும் தத்துவத் தேடல் என்பதெல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டவையே! ஒரு முழுமையான தேடலோ, கருத்துப் பரிமாற்றமோ இங்கே சாத்தியமில்லை.

இருந்தாலும் கூட, ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய The God Delusion புத்தகமும், அதைக் கொஞ்சம் தமிழில் வலைப்பதிவாக இட்ட தருமி ஐயாவுக்குச் சொன்ன பதில்களும் என்று கடந்த சில பதிவுகளில் பார்த்துக் கொண்டு வருகிறோம்.

பகுத்தறிவு என்ற பெயரில் எடுத்து வைக்கப் படும் இத்தகைய வாதங்கள், உண்மையில் ஒரு ஆழ்ந்த வெறுப்பிலிருந்தே வருவதையும், பகுத்து அறியும் நோக்கம் இவற்றில் இல்லாதிருப்பதையும் தொட்டுப் பேசியிருக்கிறோம். இன்னமும், பேச வேண்டியிருக்கிறது!விக்கிபீடியாவில் தேடிப் பார்த்தீர்களேயானால், டாகின்ஸ் தன்னுடைய புத்தகத்தில் நான்கு விழிப்பூட்டும் செய்திகளைச் சொல்லியிருப்பதாக, இப்படிச் சொல்கிறது.

Dawkins writes that The God Delusion contains four "consciousness-raising" messages:

1. Atheists can be happy, balanced, moral, and intellectually fulfilled.

2. Natural selection and similar scientific theories are superior to a "God hypothesis"—the illusion of intelligent design—in explaining the living world and the cosmos.

3. Children should not be labelled by their parents' religion. Terms like "Catholic child" or "Muslim child" should make people cringe.

4. Atheists should be proud, not apologetic, because atheism is evidence of a healthy, independent mind

முந்தைய பதிவிலேயே, டாகின்ஸ் நாத்திகம் பேசுகிறவர்களுக்குத் தெம்பூட்டுவதற்காக மட்டுமே வாதம் செய்திருப்பதாக, அவருடைய வார்த்தைகளை மேற்கோள் காட்டியே சொல்லியிருந்தது, நினைவிருக்கிறதா?

கொஞ்சம் அலுப்பூட்டுகிற இந்த வாதப் பிரதிவாதங்களில் இருந்து ஒரு மாற்றத்திற்காக, வெளியே வந்து கொஞ்சம் சுத்தமான காற்று.......!

இந்தியத் தத்துவ மரபில் வேதாந்தம் என்பது என்ன, வேதாந்தத்தின் வழியாக அடையக் கூடிய இலக்கு என்ன என்பதை, சுவாமி விவேகானந்தர் தன்னுடைய அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை
இங்கே படிக்கலாம், சிறிது சிந்தித்தும் பார்க்கலாமே!

திரு மாதவ் பண்டிட் எழுதிய SIDELIGHTS ON THE MOTHER [ Published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry] என்ற புத்தகத்தை, மறுபடி இன்று எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். சின்னச் சின்ன விஷயங்கள் தான், ஸ்ரீ அரவிந்த அன்னையோடு, ஆசிரம அன்பர்களுக்குக் கிடைத்த சில மறக்க முடியாத அனுபவங்களை சொல்கிற புத்தகம் இது. இந்தப் புத்தகத்தில் இருந்து, ஓரிரு பக்கங்கள்!

தோசை, மசால் தோசை!


ஒரு ஆசிரமவாசிக்கு, அரவிந்தாச்ரமத்தில், சாதகர்கள் [பழகுபவர்கள்] என்றே குறிப்பிடுவார்கள், தோசை என்றால் கொள்ளைப் பிரியம், ஆசை. ஆசிரம வேலையாக வெளியே செல்லும் போதெல்லாம், தன்னுடைய உறவினர் வீட்டில் தோசையை விரும்பிக் கேட்டுச் சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர். ஒருநாள், தோசையை பற்றி நினைத்துக் கொண்டே இருந்தவரிடம், ஸ்ரீ அரவிந்த அன்னை கேட்டார்: "தோசை என்றால் என்ன?" அந்த சாதகர்,வெட்கம் பிடுங்கித் தின்ன, தோசை என்றால் என்ன, எப்படிச் செய்வது என்பதை ஸ்ரீ அன்னையிடம் விளக்கிச் சொன்னபிறகு, ஸ்ரீ அன்னை சொன்னாராம்: "தெருவில் நடந்து கொண்டு வரும் போதே தோசை, தோசை என்று உன் மனதில் நினைத்துக் கொண்டே வந்தது பெருங்குரலாக எனக்குக் கேட்டது, அதனால் தான் கேட்டேன்!"


"All Prayers are granted. Every call is answered"

Prosperity Room என்றழைக்கப்படும் அறையில் ஸ்ரீ அரவிந்த அன்னை, சில அன்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஸ்ரீ அன்னை தனக்குள் உறைந்து போன மாதிரி சிறிது நேரம் இருந்து விட்டு, பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பினார். என்னவென்று அன்பர்கள் வினவியபோது, பலர் கூடியிருந்து வழிபட்டுக் கொண்டிருந்த ஓரிடத்தை விவரித்து அங்கே தன்னை எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டிருந்ததை அறிந்து, அங்கே அவர்களுடைய வேண்டுதலுக்கு இணங்கச் சென்றதாகவும் சொன்னார்.

அந்தரங்க சுத்தியுடன் செய்யப் படுகிற எல்லாப் பிரார்த்தனைகளையும் இறையருள் நிறைவேற்றுகிறது. நம்முடைய ஒவ்வொரு அழைப்பையும் இறையருள் செவிமடுத்துக் கேட்கிறது, உரிய பதிலும் தருகிறது. நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதனுடைய வலிமை தெரியும்!

பிரச்சினைகள் சூழும்போது..!


1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்" ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்" அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.

இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.

என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.

“Supreme Lord, eternal Truth, let us obey Thee alone and live according to Truth.”

மலைப்பாதை, எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ?


கபாலி சாஸ்திரியார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்ததை, சித்திரைப் பிறப்பன்று ஒரு தனிப்பதிவாக வெளியிடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், சின்ன நாயனா ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்ததைப் பற்றி எழுத முனைந்த போதெல்லாம், திரு.சங்கரநாராயணன், கபாலி சாஸ்திரியார் நூற்றாண்டு விழா சிறப்புத் தொகுதியாக வெளிவந்த புத்தகத்தில் எழுதியிருந்தது முன் வந்து நிற்கும். திரு சங்கர நாராயணன் சொல்கிறார்:

ஒரு தரம் கபாலி சாஸ்திரியாரிடம் கேட்டேன், "உங்களை வணங்கும்போது, உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கிற அதே மாதிரி வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் மூவருடைய ஆசியும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா?!"

"ஆமாம், உனக்குக் கிடைக்கும்" என்று தனக்கே உரித்தான பாணியில் சாஸ்திரியார் பதிலிறுத்தார்.

இந்தப் பகுதியில் படித்த 'சின்ன நாயனா'வின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப என்னைச்சுற்றி வந்து கொண்டே இருந்தது. இந்தப் புண்ணிய புருஷர்கள், ஸ்தூல சரீரத்தில் இருந்த காலத்தில், நான் பிறக்கவில்லை. நேரடி தரிசனம் பெறுகிற வாய்ப்பும் எனக்கிருந்ததில்லை. எழுதியவர் எத்தனை பாகியம் செய்திருக்க வேணும் என்கிற நினைப்பிலேயே எழுத உத்தேசித்திருந்தது தள்ளிப் போனது. கபாலி சாஸ்திரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று மறுபடி அமரும் போது, சங்கரநாராயணன் வார்த்தைகளில் பொதிந்திருந்த திரிவேணி சங்கமத்தைக் கண்டேன்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், மூன்று ஆன்மீக வெள்ளப் பெருக்குகள், வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் என்று மூவருடைய தத்துவ தரிசனமும் ஒரே இடத்தில், கபாலி சாஸ்திரியாரிடத்தில் சங்கமித்ததைப் புரிந்து கொண்ட பிறகே, விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டுமென்று திருவுள்ளம் போலும்!

தந்தை விஸ்வேஸ்வர சாஸ்திரி, மகனுக்கு சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுக்கிறார். சாம வேத அத்யயனத்தையும் சொல்லி வைக்கிறார். ஸ்ரீ வித்யா உபாசனையில் ஈடுபடுத்துகிறார். இதெல்லாம் பூர்வாங்கமே. தொடர்ந்த மந்த்ர ஜப சாதனையில் தன்னுடைய குருவாக, வாசிஷ்ட கணபதியைக் கண்டு கொள்கிறார், கபாலி சாஸ்திரி. வேதம், உபநிஷத்துக்களின் நுட்பத்தை எல்லாம் கணபதி முனிவரிடமிருந்து கற்றுக்கொண்ட பிறகு, அவருக்கும் குருவான ஸ்ரீ ரமண மகரிஷியின், தரிசனமும் கையால் நெஞ்சத்தைத் தொட்டு, தகராகாசமாகிய இதயக் குகை இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஹஸ்த தீக்ஷையும் கிடைக்கிறது.

பகவான் ரமணரிடத்திலிருந்து கிடைத்த தத்துவ தரிசனமே, பின்னாளில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில் சரணடைந்து, திரிவேணி சங்கமமாக, அற்புத ஒளி வெள்ளமாக சாஸ்திரியாருடைய யோக சாதனை பரிணமிக்கிறது.

" ரமணரின் "நான் யார்" என்கிற விசார மார்கத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறது. ஆனாலும் கபாலி சாஸ்திரியாரின் தாகம் தீருவதாயில்லை. ரமண வழி முடிவானதாக அவருக்குத் தெரியவில்லை"

இப்படிச் சென்ற பதிவில், எழுதியிருந்தது, சரிதானா என்கிற விசாரமே இத்தனை நாள் மேலோங்கியிருந்தது. ரமணருடைய பாதையை, 'மலைப் பாதை' என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த மலைப்பாதை, எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ?

இப்படி ஒரு பாதை இருப்பது தெரிந்தாலும், எல்லோருக்கும் அதில் ஈடுபடும் மனமும், வாய்ப்பும் வாய்த்து விடாது என்பதே அனுபவத்தில் நாம் காணும் உண்மை அல்லவோ?

சின்ன நாயனா கபாலி சாஸ்திரியார் கண்டெடுத்த வைரம், திரு மாதவ் பண்டிட், ஸ்ரீ அரவிந்தருடனான முதல் சந்திப்பைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:

பாரதி அறிமுகத்துடன், மாலை ஆறுமணிக்கு ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க ஏற்பாடாகிறது. ஒரு எலுமிச்சம் பழத்தைக் கைகளிலேந்தி ஸ்ரீ அரவிந்தரை சந்திக்கிறார். இந்த சந்திப்பு, கற்றறிந்த இரு பண்டிதர்களுக்கிடையிலான மாதிரி வடமொழியில் உரையாட ஆரம்பமாகிறது. ஆங்கிலம் தெரியுமா என்று ஸ்ரீ அரவிந்தர் கேட்க, உரையாடல், பிறகு ஆங்கிலத்திலேயே தொடருகிறது.

இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள், அதன் விடுதலை சாத்தியத்தைப் பற்றி உரையாடல் திரும்புகிறது. "சாத்தியமென்ன, அது சர்வ நிச்சயம்" என்று உறுதிபடக் கூறுகிறார் ஸ்ரீ அரவிந்தர். இது நடந்தது 1917 இல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 1942 இல் 'வெள்ளையனே, வெளியேறு' என்று காந்தி இயக்கம் தொடங்கிய பிறகு தான், முழுமையான சுதந்திரத்திற்கான சுதந்திரப் போராட்டம் தொடங்கின மாதிரி ஒரு மாயை, இருக்கிறது. அதற்கும் முன்னாலேயே. வங்காளத்தில், ஸ்ரீ அரவிந்தர், நேதாஜி முதலானோர், முழு சுதந்திரத்திற்கான குரல் எழுப்பி இருப்பதை நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது.

அடுத்து, ஹிந்து முஸ்லிம் பிரச்சினை பற்றிக் கேள்வி திரும்புகிறது. ஒரு பரந்த மனத்தோடு கூடிய இந்துத்வமே தீர்வாக முடியும் என்று பதில் அளிக்கிறார் ஸ்ரீ அரவிந்தர். இன்றைக்கும் கூட, இந்த பதில் எவ்வளவு சரியாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். முஸ்லிம்கள் என்றாலே, பாபரின் நேரடித் தோன்றல்களாக, அன்றைய காட்டுமிராண்டித்தனத்தை இன்றும் கைக்கொண்டிருப்பவர்களாகச் சித்தரித்து, பேதங்களை, பிரிவினையை, சச்சரவை வளர்த்துக் கொண்டிருக்கும் போக்கு, என்ன தீர்வைத் தந்திருக்கிறது?

இப்படி ஸ்ரீ அரவிந்தருடனான முதல் சந்திப்பு, பரவலாக நாடு அன்று எதிர்கொண்டிருந்த விஷயங்களைத் தொட்டுப் பேசி முடிகிறது. இன்னொன்றின் தொடக்கமாக, இந்த சந்திப்பு அச்சாரம் போட்டு வைக்கிறது!


சற்று விரிவாகவே, பார்ப்போம்!



சம்பக்லால் எனும் அடியவரை ஸ்ரீ அரவிந்தர் மார்புறத் தழுவும் ஓவியம்

இது கடவுள் வரும் நேரம்!


"அறியாமையும், இருளும் கூடின தொடக்கத்தில், பூரணமான நம்பிக்கையே தெய்வீக சக்தியின் நேரடி வடிவமாக, அறியாமையையும் இருளையும் எதிர்த்து வெல்லும் துணையாக நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்ன உரையாடலின் ஒரு பகுதியை ஏற்கெனெவே எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?…என்ற பதிவில் பார்த்திருக்கிறோம்.

மாற்றத்திற்குப் பயந்து, நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்று பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடும் பலவீனம், முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதையும் முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். இதை ஒப்புக் கொண்ட பிறகும் கூட, பழக்கங்களின் பிடியிலிருந்து விடுபடுவது எவ்வளவு கடினமானது என்பதை நம்முடைய சொந்த அனுபவங்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும், செக்கு மாடு திரும்பத் திரும்ப ஒரே வளையத்திற்குள் சுற்றிச் சுற்றி வருவதைப் போல நாமும் பழக்கங்களின் அடிமையாகவே இருப்பத உணர வேண்டுமானால், உணர்வு விழிப்பு நிலையில் இன்னும் கொஞ்சம் கஷ்டப் பட்டு முன்னேற வேண்டும்.

Emptying the cup என்பதாக ஜென் கதைகளில் படிக்கும் போது, வடிவேலு மாதிரி 'அட, ஆமா இல்லே' என்று நம்மைப் பற்றிய ஞானம் கிடைத்து விட்டதாகத் தோன்றும்.

ஆனால் அது அவ்வளவு எளியது இல்லை.

பழைய பழக்கங்களில் [சங்காத்தங்களில் ] இருந்து விடுபட புதியதாக ஒன்று வேண்டும். அதிலிருந்து விடுபட்டால் ஆசையில் இருந்து விடுபட முடியும். ஆசையிலிருந்து விடுபட்டால், சமநிலை அல்லது சம நோக்கு ஏற்படும். அது ஏற்பட்டால், அதுவே இந்த ஜீவனின் உண்மையான விடுதலை ....ஆஹா,இப்பவே கண்ணைக் கட்டுதே என்று வடிவேலு மாதிரி சொல்லத் தோன்றினால், கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மேலே படிக்கலாம்.

சென்ற பதிவில் ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தை தான் புரிந்து கொண்டதாகக் கருதும் இரு எதிர்மாறான போக்குகளை பார்த்தோம். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை இருவரும் வழிநடத்திய பூரண யோகம், அதை எட்டுவதற்கான பரிசோதனைக் கூடமாகவே 1926 இல் ஆசிரமம் உருவானதைப் பற்றியும், திரு. மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய No Imposition என்ற தலைப்பிலான கட்டுரையையும் பார்த்தோமல்லவா? அதில் முத்தாய்ப்பாக திரு மாதவ் பண்டிட் சொல்கிற இந்த வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு மேலே பார்ப்போம்.

“For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”


பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்கிறார்களே அது இது தான். இந்த உண்மையைப் புரிந்து கொள்வது தான்.

இறைநிலை நம்முடைய போக்கில் ஒருபோதும் தலையிடுவது இல்லை. ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் நேர் எதிரான பாதைகள் பிரிவதை, அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை இறையருள் நமக்கு வழங்கியிருக்கிறது. தேர்ந்தெடுத்தது எதுவோ அதற்குரிய வகையில் அடுத்தடுத்த அனுபவங்கள், படிப்பினைகள் என்று நம்மை, நமக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. விளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையை, அதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.

Yahoo! Groups இல் In Search of The Mother என்ற மடலாடற் குழுவைப் பற்றி முன்னமேயே குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு நண்பர், அவருக்குக் கிடைத்த ஒரு மின்னஞ்சலை வைத்து ஸ்ரீ அன்னையின் பெயரால் நடத்தப் படும் த்யான மையங்களைப் பற்றி சற்று அதிர்ச்சியோடு எழுதியிருந்தார்.

“After going thru the blog, I was disgusted with the mere thought of
these centers trying to extract money from innocent people in the name
of Mother. It is like a commercial bazaar of give & take of
commodities in the name of spirituality.


இதைப் படித்த பிறகு, அந்த வலைப் பதிவையும் பார்த்தேன்

இது ஒன்றும் புதியது அல்ல.
ஆன்மிகம் பேசினால் காசு கிடைக்கும் என்கிற நிலையில், ஆன்மீகத்தைக் கூறு கட்டி விற்பனை செய்யும் ஆசாமிகள் நிறையவே இங்கு உண்டு.
இங்கே மற்றும் இங்கே

சொடுக்கிப் பாருங்கள், என்னவெல்லாம் சொல்கிறார்கள் ?!

எல்லாக் காலங்களிலும், இது மாதிரி போலிகள், இரண்டும் கெட்டான்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். சூரிய உதயம் ஆவதற்கு முன்னால், இருளும் இல்லாமல் ஒளியுமில்லாமல் ஒரு இரண்டும் கெட்டான்தனமான "கருக்கல்" என்று சொல்கிற நிலை இருப்பது போல, இந்த மாதிரி
"ஆர்வக் கோளாறுகள் " இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த மேற்கு மாம்பலம் த்யான மையங்கள் இதே மடலாடற்குழுவில் ஏற்கெனெவே செய்தி எண் 1138, 2153,2155 மற்றும் பல தொடர் செய்திகளில் விளம்பரப் படுத்தப் பட்டது தான். படிப்பினை: இனிமேலாவது இது போன்ற செய்திகள் சரிபார்க்கப் பட்ட பிறகே வெளியிடப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

திரு கர்மயோகி அவர்கள் 1980 களில் அமுதசுரபி மாத இதழில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ
அன்னையைப் பற்றி எழுத ஆரம்பித்த பிறகு, தமிழ்நாட்டில் பல இடங்களிலும் ஸ்ரீ அன்னை த்யான மையங்கள் என்று ஏற்படுத்தி, கூட்டு தியானம், மலர் வழிபாடு, ஸ்ரீ அரவிந்தர் அன்னை எழுதிய நூல்களைப் படிப்பது என்பது பரவலாகியது உண்மை.

இது fast food காலம், எதுவானாலும் தொடர் முயற்சியோ, பொறுமையோ இல்லாமல், இந்த மாதிரி த்யான மையங்களுக்குப் போனாலே ஒரு அற்புதம் நிகழ்ந்து விடும் என்கிற மாதிரி ஒரு மாயையும் இந்த மாதிரி த்யான மையங்களில் ஏற்படுத்தப் பட்டதும்,. ஆசிரமத்தின் அங்கீகாரம் எங்களுக்குத் தேவை இல்லை என்று வெளிப்படையாகவே இங்கே சில பிரபலங்களால் [?] சொல்லப் பட்டதும் நான் நேரடியாகவே பார்த்த அனுபவம்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.sincere11 என்கிற பெயரில் நிறைய குற்றச் சாட்டுக்களைச் சொல்லுகிற இந்த வலைப் பதிவரிடத்தில் sincerity முழுமையாக இருப்பதாகவும் தெரியவில்லை. இந்தப் பெயரில் blogger இல் இரண்டு வலைப் பதிவுகள் வைத்திருக்கிறார். ஒன்றில் எந்த வலைப்பதிவும் இல்லை. ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மையங்கள் என்ற தலைப்பில் ஒரே ஒரு பதிவு மட்டும் இருக்கிறது. ஒரு மொட்டைக் கடிதத்திற்கும் இந்த வலைப் பதிவிற்கும் அதிக வித்தியாசம் இல்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னை ஒரு இடத்தில் தன்னுடையஆசீர்வாதம் மிக ஆபத்தானது என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். அது இறைவனது காரியத்தை நடத்துவதற்காகவே, முழு வலிமையோடும் சக்தியோடும் தரப்படுகிறது, வெற்றி தோல்வி என்கிற அளவீடுகள் இல்லாத, ஒரு உள்ளார்ந்த முன்னேற்றத்திற்காகத் தரப்படுவது, எப்படியாகிலும் நன்மையையே அளிக்க வல்லது என்று சொல்கிறார்:

"My blessings are very dangerous. They cannot be for this one or for that one or against this person or against that thing. It is for ....or, well, I will put it in a mystic way:

It is for the Will of the Lord to be done, with full force and power. So it is not necessary that there should always be a success. There might be a failure also, if such is the Will of the Lord. And the Will is for the progress, I mean the inner progress. So whatever will happen will be for the best."


-The Mother,


21 January, 1960

முதலில் சொன்னது போல, ஒரு தரப்பு, தத்துவ விசாரம் செய்து நான் சொல்வது தான் சரி நீ சொல்வது தப்பு என்று அடித்துக் கொண்டிருக்கிற அதே நேரம், மோடி மஸ்தான் தாயத்து மாதிரி, இந்த தாயத்து என் 'குர்நாதர்' கொடுத்த தாயத்து..வாங்கிக் கையிலே கட்டு, நீ நெனச்சதெல்லாம் நடக்கும் தொட்டதெல்லாம் பலிக்கும் என்கிற ரீதியில் இன்னொரு தரப்பும் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது. தொழிற்சங்கம், இடதுசாரித்தனம், நாத்திகம் என்று இருந்தவனை ஒருகட்டத்தில் அதை விட்டு வெளிவரச்செய்தபோது முதலில் ஈர்த்தது இந்த மாதிரிக் கூவி கூவி அருளை வியாபாரம் செய்தவர்கள் தான். "நாங்கதேன் ஒரிஜினல் கம்முனிஸ்டு மத்ததெல்லாம் டூப்பு" இப்படி அடித்துக் கொள்கிறவர்கள் மத்தியில் கொஞ்ச நாள் வாழ்ந்ததாலோ என்னவோ, இந்த மாதிரி தாயத்து விற்கிறவர்களை அடையாளம் கண்டு கொள்வது ஒன்றும் கடினமாக இல்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னை மிகத் தெளிவாகவே சொல்கிறார்:

"முன்னெப்போதும் அறிந்திராத ஒரு விசேஷமான, உன்னதமான தருணத்தில் இருக்கிறோம். ஒரு புதிய உலகத்தின் பிறப்பைக் காணும் தருணத்தில் இருக்கிறோம். அதன் இருப்பை உணருகிறவர்கள் வெகு சிலரே ஆயினும், அது இருக்கிறது. அதை நோக்கிச் செல்வதற்கான பாதையை நாம் கண்டாக வேண்டும், ஏனெனில் இது வரை அதில் எவரும் போனதில்லை, கண்டதில்லை.பாதையை கண்டு பிடிப்பது ஒரு உன்னதமான சாகசம். உங்களில் சாகசத்தை விரும்புகிறவர்கள் இருக்கக் கூடும். அவர்களை நான் அழைக்கிறேன் "ஒரு மாபெரும் சாகசத்திற்கு உங்களை வரவேற்கிறேன்."

The Great Adventure

"We are in a very special situation, extremely special, without precedent.

We are now witnessing the birth of a new world; it is very young, very weak--not in the essence but in its outer manifestation-not yet recognised, not even felt, denied by the majority. But it is here. It is here, making an effort to grow, absoluetely sure of the result. But the road to it is completely new road which has never before been traced out-nobody has gone there, nobody has done that! It is a beginning, a universal beginning. So it is an absolutely unexpected and unpredictable adventure.

There are people who love adventure. It is these I call, and I tell them this: "I invite you to the great adventure."

It is not a question of repeating spiritually what others have done before us, for our adventure begins beyond that. It is a question of a new creation, entirely new, with all the unforeseen events, the risks, the hazards it entails-a real adventure, whose goal is certain victory, but theroad to which is unknown and must be traced out step by step in the unexplored. Something that has never been in this present universe and that will never be again in the same way. If that interests you...well, let us embark. What will happen to you tomorrow-I have no idea.

One must put aside all that has been foreseen, all that has been devised, all that has been constructed, and then...set off walking into the unknown. and-come what may! There."

The Mother,

10, July 1957

CWM Vol. 9 pp 150-151

இது கடவுள் வரும் தருணம். விழிப்பாக இரு என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை

கேள்விகள்-பதில்கள் என்ற தலைப்பில் 1957 ஆம் வருடம் ஸ்ரீ அரவிந்த அன்னை உரையாடல்களின் தொகுப்பில் ஒரு சிறு பகுதியை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோமா?
ஸ்ரீ அரவிந்த அன்னையின் அழைப்பை, அதன் உண்மையான பொருளில் உணர்ந்து கொள்ள ஸ்ரீ அன்னையே, உனது அருளையே வேண்டி நிற்கிறேன்:

That was Her way and that is also the Divine's way!



Peter Heehs என்பவர் எழுதிய ஒரு புத்தகம் "The Lives of Sri Aurobindo" ஆசிரமவாசிகள், ஆரோவில் வாசிகள். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையை ஏற்றுக் கொண்ட அடியவர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

Peter Heehs இந்தப் புத்தகத்தில் ஸ்ரீ அரவிந்தரைக் கொச்சைப் படுத்திவிட்டார், ஆசிரம நிர்வாகிகள் பொறுப்பற்ற முறையில் இந்த விஷயத்தை கையாண்டிருக்கிறார்கள் என்று ஒரு தரப்பு கொதித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் வரையிலும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப் பட்டிருக்கிறது. இந்தியாவில் இந்த நூலைத் தடை செய்ய வேண்டும், நூலாசிரியரை ஆசிரமத்திலிருந்து வெளியேற்ற வேண்டும், என்று தீவீரமாக இவர்கள் இருக்கும் அதே நேரம்,

இன்னொரு தரப்போ நூலாசிரியர் எந்த தவறும் செய்யவில்லை, அவரது கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும், இது கிழக்கும் மேற்கும் கலாசார ரீதியாகப் பிரித்துப் பார்ப்பதினால் வந்த கோளாறு என்று சூடான விவாதங்கள் நடத்திக் கொண்டே இருக்கின்றன.

Peter Heehs எழுதியதில் பெரிதாகக் குற்றம் காண்பதற்கு ஒன்றும் இல்லை என்று வாதிடும் இவர்கள், முந்தின தரப்பின் மேல் பல குற்றச் சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். குறிப்பாக,ஒரு புதிய மதம் உருவாக்கப் படுகிறதா, ஸ்ரீ அரவிந்தரின் தெய்வீகத் தன்மை திணிக்கப் படுகிறதா, சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படுகிறதா, ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம் பக்தியின் எல்லைக்குள் குறுக்கப் படுகிறதா, என்றெல்லாம் நூலாசிரியர் கூடக் கற்பனை செய்யாத கேள்விகளை எல்லாம் வாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வளர்ந்து கொண்டே போகும் இந்த அக்கப் போரைப் பற்றி, வாத-பிரதி வாதங்களைப் பற்றிக் கருத்துச் சொல்கிற அளவுக்கு எனக்கு தத்துவ விசார அனுபவமோ, தவமோ இல்லை. ஆனால், எந்தவொரு இயக்கத்திலும் ஏற்படுகிற ஒவ்வொரு முரண்பாடும், வளர்ச்சியின் படிக்கட்டுக்களே என்பதைப் புரிந்துகொள்கிற அளவு அறிவு இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த ஆசிரம வரலாற்றில் இது போல முன்னொரு தடவையும் நடந்திருக்கிறது. சத்ப்ரேம் என்கிற அடியவர், பல வருடங்களில் ஸ்ரீ அன்னையுடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பாக, 13 பாகங்களில் சுமார் 6000 பக்கங்களில் "The Mother's Agenda " என்ற புத்தகமாக வெளியிட முனைந்த போது, ஆசிரமத்தில் இருந்த சிலரால் அது தடுக்கப் படும் என்று கருதிய சத்ப்ரேம் தன்னுடைய குறிப்புக்களையும், ஒலி நாடாக்களையும் ரகசியமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று வெளியிட்டபோது, இதே மாதிரி விவாதங்கள் கிளம்பின. ஸ்ரீ அன்னை மகா சமாதி அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னாலேயே, சத்ப்ரேம் ஸ்ரீ அன்னையை சந்திப்பது தடுக்கப் பட்டது.

ஆனால், ஸ்ரீ அரவிந்த அன்னை, எத்தகைய ஆத்ம சாதனையை மேற்கொண்டார், அதில் எத்தனை கஷ்டங்களை எதிர்கொண்டார், அதிமானசத் தன்மை வெளிப்பட ஸ்ரீ அன்னை தன்னுடைய உடலையே ஒரு பரிசோதனைக் களமாக்கி, ஒவ்வொரு செல்லும் எப்படித் திருவுரு மாற்றத்திற்குத்தயாராகும்படி செய்தார் என்பதை ஒவ்வொரு கட்டமாக விவரிக்கும் முக்கியமான ஆவணமாக இன்று அது கொண்டாடப் படுகிறது. சத்ப்ரேமை ஒரு அசுரன், அவரை ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றுங்கள் என்று ஸ்ரீ அன்னை சொன்னதாக, அந்தக் கால கட்டத்தில் ஆதாரமில்லாத தகவல்களும் உண்டு.

ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்று இன்று பரவலாக அறியப் பட்டிருக்கும் அமைப்பு, உண்மையில் மனித குலத்தை, ஸ்ரீ அரவிந்தர் கண்ட பூரண யோக சாதனை வழியாக சத்திய ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பரிசோதனைக் கூடமாகவே ஸ்ரீ அரவிந்த அன்னையால் உருவாக்கப் பட்டது. ஆசிரமத்தைத் தன்னுடைய சரீரமாகவே பாவித்து ஸ்ரீ அன்னை சொன்னதும் உண்டு. பரந்த இந்த பூமியில், நிலவும் ஒவ்வொரு குணமும் சூழலும் ஆசிரமத்தில் பரிசோதனைக்காகவும், திருவுரு மாற்றத்திற்காகவும் பிரதிநிதித்துவப்படுகிற சூக்ஷ்மத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பலநேரங்களில் சொன்னதுண்டு.

ஸ்ரீ அரவிந்த அன்னையின் பிறந்த நாள் வருவதையொட்டி எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு விடை சொல்வது போல, திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய Commentaries on The Mother's Ministry என்கிற நூலில் No imposition என்கிற இந்தப் பகுதி இருந்ததை, திரு மாதவ் பண்டிட் அவர்களுடைய வார்த்தைகளிலேயே பார்ப்போமா:

No Imposition

“The Mother once told this writer that she could effect the desired changes in the Ashram collectivity in a trice but she did not wish to do so. She preferred to wait for the change to come about spontaneously, from within.

That was her way and that is also the Divine's way.

Changes imposed from above or outside are not natural. They do not last. When the
pressure is relaxed, things tend to swing back to their original rhythm. It is only when the necessity of a change is realised within oneself and the will is exerted accordingly that the change is accepted in the whole of the being and integrated with the general nature. Only so can the change cease to be artificial and superficial and become natural.

Besides it is a law of this manifestation to let everything evolve in full freedom.
Freedom is the law of growth. Even though all has issued from the Divine and is essentially maintained by the Divine, each is given full freedom to follow its own choice of direction and pace. The Oversoul never takes possession of the soul, it oversees, presides over its evolution but does not interfere with its liberty. It is the soul below that has to make the effort to come closer to the Oversoul, aspire for its union with the higher counterpart. The latter patiently waits for it to be ready and want to unite with it. Only so can the union be joyous culmination of a movement that proceeds spontaneously from the embodied soul. The initiative and the onus of the operation lies with the lower term.

So too with the world. The universe has indeed emanated the Being of the Supreme Lord. It has been released into manifestation with a purpose; to manifest the Divine Will. The details of the working out of the process, however, are left to the Soul in Becoming. And this Soul is multiple. There may be, and are, deviations from the main Intention, deformations in the process consequent on this departure from the central Truth. But the Divine does not interfere.

The Divine allows full scope for the consequences of such aberrations to be worked out; it waits for the movement—collective and individual—to correct itself and put itself in time with the higher Will. The Divine does not participate. The universe has to take steps to orientate its directs towards the Divine, feel the need to be restored to its Parent Divine, to be possessed by the Divine, before the Divine Lord responds by taking possession of it. The movement on the part of the universe or the individual has to be conscious, willed effort to become one with the Divine Lord.

In all this operation the Divine's help is of course there to be drawn upon; but it is not imposed. That would be contrary to the Law of manifestation. For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”


Excerpted from and acknowledge with thanks and gratitude:

“Commentaries on The Mother's Ministry” Part II by Sri M P Pandit, published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!



www.searchforlight.org வலைத்தளத்தில் இன்றைய சிந்தனைக்கு என்கிற தலைப்பில் ஸ்ரீ அரவிந்தர் அருளமுதமான சாவித்ரியில் இருந்து இந்த வரிகளை படித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நான்கே வரிகளில் பரிணாம வளர்ச்சியை ஸ்ரீ அரவிந்தர் சுருங்கக் கூறி விளங்க வைத்திருப்பதை, திரு மாதவ் பண்டிட் போல வெகு சிலரால் தான் நம்மைப் போன்றவர்களுக்கு, மிக எளிமையான வார்த்தைகளிலேயே புரிய வைக்க முடியும். நீண்ட நாட்களுக்கு முன்னால் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்குச் சென்றிருந்த போது வாங்கிய புத்தகம் Commentaries on The Mother's Ministry. இரண்டு பகுதிகளாக வெளியான இந்த புத்தகத்தை. இப்போது மறுபடி படித்துக் கொண்டிருக்கையில் திரு மாதவ் பண்டிட் அவர்களுடைய எழுத்தாளுமை என்னைக் கொள்ளை கொண்டது.

இந்தத் தருணத்தில் அவருக்கு வழிகாட்டியாகவும், ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் அவரைக் கொண்டு சேர்த்தவருமாகிய கபாலி சாஸ்திரியார் சொன்னதாகப் படித்தது நினைவிற்கு வருகிறது.

அருட்பெரும் ஜோதி என்று திருவருட்ப்ரகாச வள்ளலாராலும், அதிமானச ஒளி [Supramental Light] என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப் பட்ட, உன்னதமான இந்த ஒளியைப் பெறத் தகுதியான முதல் இருபத்தைந்து பேர்களுக்குள் திரு மாதவ் பண்டிட் அவர்களும் ஒருவர் என்று ஸ்ரீ அன்னை தெரிவித்ததைக் கபாலி சாஸ்திரியார் மிகப் பெருமிதத்தோடு சொல்வாராம்.

"மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" என்றார் திருநாவுக்கரசர். அதைப் போல நமக்கு ஏற்படுகிற மயக்கங்களும் தேவை தான் என்ற தலைப்பில் திரு மாதவ் பண்டிட் அவர்கள் சுவையாக ஒரு நுட்பத்தைச் சொல்கிறார்.

ஓரடி முன்னால், ஈரடி பின்னால் என்ற பதிவில் ஏற்கெனெவே தொட்ட விஷயம் தான். அதில் இப்படி எழுதியிருந்தேன்: "ஒரு சிறு குழந்தையைப் போல, தட்டுத் தடுமாறி, குளறி, தடுக்கி விழுந்து, இப்படியாக trial and error ரீதியில் ஒவ்வொரு அனுபவமாக, அதன் படிப்பினையாக, பிறகு வேறொரு அனுபவம் அதன் மேல் படிப்பினை என்ற தொடர் சுழற்சியிலே, மனிதன் உண்மையை நோக்கி முன்னேறுகிறான்."

உண்மையைத் தேடுகிற முயற்சியில் இவனைப் போல முதலடி எடுத்து வைப்பவருக்கு, திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய இந்தப் பகுதி துணையாக இருக்கும்:

Illusions Are Necessary

“We have to enter Knowledge, says the Upanishad, through Ignorance. Ignorance is incomplete Knowledge and it is through this lower knowledge that we grow into the higher.

That is the nature of the evolutionary process in which we are involved. The knowledge that we are given is in proportion to the state of our consciousness. Knowledge grows out of experience and Mother Nature always grades the experience offered to us according to the capacity of our being.

The Mother remarks that in the longer-range perspective we find that every experience is just what is needed at the moment in order to push us to the next step in our growth. What we learn from it is exactly what we need to know at that stage. A few steps later that knowledge may prove to be imperfect, even faulty; but at the time we have it, it plays a useful part in our life. And despite its proving to be mistaken at a subsequent point of time, we do realise that it was a fruitful error.

We grow through errors, we learn from mistakes we profit by illusions. From this point of view the Mother says, illusions are necessary. They are an inevitable part of the mechanism of Nature to ensure our gradual growth. When we look back on our lives, we do realise the truth of this observation.

None can leap straight into the plenary orb of knowledge.

When we keep this law of growth in mind we become less intolerant, more understanding of the viewpoints of others. To each one his understanding is right. In his stage of evolutionary growth, he sees things from an angle that is appropriate to his locus. There is a purpose in his experiencing things as he does. We shall do well to respect this freedom, recognise his need for that freedom to pass through various stages of the development of knowledge. It will not do to tell him he is wrong and force on him a frame of knowledge without the necessary consent of experience. We have to wait till he completes the round of experiences that give him his knowledge and he outgrows it.

After all, one knows only what one is ready for. At the time we have a particular knowledge we are convinced that it is absolute. Otherwise we cannot function upon its basis. Tomorrow we may gain an added experience which may alter our knowledge. The previous one may prove to have been illusive. And yet that illusion has paved the way to the next knowledge which in turn may be convicted, still later, of being an error.

Thus do we move from one illusion to another, from one one partial truth to a fuller one. Till we arrive at the ultimate Truth all knowledge is relative, but each knowledge is necessary as long as it is relevant.”

excerpted from and acknowledged with thanks: “Commentaries on The Mother's Ministry II by Sri M P Pandit, published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

ஒவ்வொன்றும் ஒரு காரணத்தோடு தான் நடக்கிறது. காரணத்தின் அடிப்படையிலேயே காரியங்கள் நடப்பதை நாம் அறிந்திருப்பதில்லை, அவ்வளவு தான். இதைத் தான் அபிராமி பட்டர் "நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை" என்று சொல்கிறார். காளிப் பாட்டில் பாரதியோ, "யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை" என்று பரவசப்படுகிறார்.

இவனது வாழ்விலும், என்ன நடக்கிறது என்பதை அனுமானிக்கும் முன்னமேயே பலப்பல நிகழ்வுகள் கடந்து போயின. ஏன், எதற்கு என்ற கேள்விகள் இப்போது இல்லை. நடந்த ஒவ்வொரு சம்பவமும், இவனைப் பக்குவப் படுத்தவும், அடுத்த நிலைக்குத் தயார் செய்யவும் உதவின என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னைச் சரண் அடைகிறேன்.

"Keep sheltered in my arms- they will protect you against everything

Open to my help it will never fail you."

என்று உறுதியளித்திருக்கிறாய்.

அந்த உறுதி இவனுக்கும் சேர்த்துத் தான் என்கிற நம்பிக்கையோடு உன்னைச் சரண் அடைகிறேன்.

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்யமயி பரமே!

"அன்னை என்னும் அற்புதப் பேரொளி"




"அன்னை என்னும் அற்புதப் பேரொளி"

இந்தத் தலைப்பில் திருமதி விஜயா சங்கர நாராயணன் எழுதிய நூலை, வெகு நாட்களுக்கு முன் வாசித்த நினைவும், பரவசமும் இந்தப் பதிவை எழுதும் போது முன் வந்து நிற்கிறது.

அம்மா, அம்மா என்று அரற்றுவதைத் தவிர ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னைப் பற்றி, என்ன எழுதிப் புரிந்து கொள்ளவோ, புரிய வைக்கவோ முடியும்? அறியாமையின் உச்ச கட்டமாக, ஆசிரம சாதகர் ஒருவரிடம் அவருக்கேற்பட்ட அனுபவங்களைப் பற்றிக் குழந்தைத்தனமாகக் கேட்ட போது, "எவ்வளவோ இருக்கிறது, அதில் எதைச் சொல்வது?" என்ற கேள்வியே பதிலாக வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஸ்ரீ அரவிந்த அன்னையை ஏற்றுக்கொள்கிறேன் என்று மேலோட்டமாகவே நாம் சொன்னாலும், "ஒரு கணமாவது நான் ஒருவரைப் பார்த்திருந்தாலும் போதும், அவருடைய வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று ஸ்ரீ அன்னை சொல்லும் சத்திய வாக்கு அங்கே செயல் படுவதை, என்னுடைய அனுபவமாகவே இப்போது பார்க்கிறேன்.

"Remember and Offer" இது தன்னுடைய அடியவர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் ஒரு எளிய முயற்சி. எதுவானாலும், நினைவிற்கொண்டு வந்து, ஆத்ம சமர்ப்பணமாகச் செய்து வரத் தடைகள் நீங்குவதும், காரிய்ம் கை கூடுவதும் இறையருளால் நடத்தப்படும் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

புதுவையிலிருந்து வெகு தொலைவில் இருந்த போதிலும், ஆசிரம வாழ்க்கையின் ஒரு அங்கமாக உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட்ட வெகு சிலருள் ஒருவனாக இல்லாதிருக்கும் போதிலும், ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தை பற்றி முழுமையாக அறிந்தவனாக, அனுஷ்டிப்பவனாக இல்லாத நிலையிலும் கூட, இவனது சில அனுபவங்கள், உன்னை என்னுடைய அன்னையாகவே அறிந்து கொள்ளவும், அம்மா, என்னையும் உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக ஏற்றுக் கொள்வாய் என்று உன்னிடத்தில் உரிமையோடு விண்ணப்பித்துக் கொள்ளவும் தூண்டின. ஏற்றுக்கொள்வாய், ஒருபோதும் கைவிட மாட்டாய் என்கிற நம்பிக்கை உன் வாக்கினாலேயே இவனுள் விதைக்கப் பட்டிருப்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

1965-1966 களில் அறியாச் சிறுவனாக, உன்னுடைய உரையாடல்கள் தொகுப்பு ஒன்றில் உன்னுடைய புகைப்படத்தைப் பார்த்தவுடன், என்னைப் பெற்ற தாயாகவே தோன்ற, 'அட இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே' என்று திரும்பத் திரும்ப அதே அனுபவத்தைப் பல முறை அனுபவித்ததுண்டு. அளியன், அன்னை நீ தான், இவனைப் பெற்ற தாயின் சாயலில் இவனுக்குக் காட்சி கொடுத்திருக்கிறாய் என்பது புரிந்து கொள்ளவே வெகு நாட்களாயிற்று.


இடையில், தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திகனாகத் திரிந்த காலம் ஒன்று இருந்தது. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்ட காலமாகச் சொல்வது போல இவனது வாழ்விலும் அது ஒரு இருண்ட காலம்.

1986- 1987 களில் அமுதசுரபி மாத இதழில் திரு. கர்மயோகி அவர்கள் எழுதி வந்த கட்டுரைகள், உலகாயத விளையாட்டில், அன்னையை மறந்து போனவனை மீண்டும் அன்னையிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக உதவின. Mothers Service Society என்ற அமைப்பின் கீழ் தமிழகமெங்கும் ஸ்ரீ அரவிந்த அன்னை தியான மையங்களை ஏற்படுத்தவும், ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடி தியானம் செய்வதும், மலர் வழிபாடு செய்வதும் 1980 களின் இறுதியில் பரவலாக நடந்து வந்தன.ஆர்ப்பாட்டம், ஊர்வலம், முரண்பாடுகள் என்றே கிடந்த இவன், அதற்கு நேர் எதிர் மாறான அனுபவத்தைப் பெறுவதற்காக, இந்த மாதிரி கூட்டங்களில் பங்கேற்றதும் நடந்தது.

குடும்பம் ஒரு இடத்தில், பணியில் இருந்தது மற்றோரிடத்தில் என்றிருந்த காலம்.

டாக்டர் சுந்தர வடிவேல் இவனது மகனுக்கு வைத்தியர் என்கிற முறையில் அறிமுகமாகி, நண்பரான காலம். ஸ்ரீ அரவிந்தர் அன்னையிடத்தில் ஈடுபாடு கொண்ட இவரால் தான் ஸ்ரீ அன்னையிடம் இவன் மறுபடி தஞ்சம் அடைய வேண்டும் என்கிற வேட்கையும், ஈர்ப்பும் ஏற்பட்டது. விடுமுறையில் ஊருக்கு வருகிற நாட்களில் கணிசமான நேரம் டாக்டருடன் ஆன்மீகத்தைப் பற்றி விவாதிக்கும் பழக்கமும், இதே போல் ஈடுபாடு உடைய வேறு பலருடைய தொடர்பும் உண்டானது. சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்பதற்கொப்ப, பழைய வரட்டுப் பிடிமானங்களில் இருந்து விடுபட இவை உதவின. அந்த அளவோடு ஒதுங்கியும் போயின.

நம் உடலில் பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் உண்டாகிக் கொண்டே இருப்பது போல, "பழையன கழிதல், அதன் பின் புதியன புகுதல்" என்பதற்கொப்ப ஒவ்வொரு அனுபவமும், அதற்கு முந்தைய அனுபவங்களின் எச்சங்களைத் துடைத்துவிட்டுப் புதிதாய்ப் பிறந்தது.

"வாய்ப்பு என்பது மிகப் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் தருணம். அதனால் ஒருபோதும் வாய்ப்பைத் தவற விட்டு விடாதே" என்கிறார் ஸ்ரீ அன்னை. எவ்வளவு வாய்ப்புக்களைத் தவற விட்டிருக்கிறேன் என்பது இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது.

உள்ளது உள்ளபடி சமர்ப்பணத்துடன் சொன்னால், எளிய வார்த்தைகளுக்குள்ளும் பேருபதேசம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய Commentaries in the Mother's Ministry என்ற நூலில் இருந்து இந்தப் பகுதியை பார்ப்போமா?


Incalculable Divine

“There are quite a number of stories about the Divine's help arriving at the very moment man gives up his egoistic struggle. There is, for instance, the case of a man who was falling down from the top of a high tree. He cried out to God to save him and God did respond. The falling man landed on a branch of the tree and he exclaimed to himself: “Ah, now I will take care of myself”. That very moment the branch started cracking and our friend got alarmed and called out, “God, I did not mean it!”

The point in this and similar stories is that as long as man depends upon his own strength—which is in fact so puny—or on that of other human sources, the Divine does not enter into the picture. Man is allowed to struggle and realise the limitations of human effort. The inner soul-strength comes to the fore when the external being, in its moment of truth, realises its utter failure to meet the challenges that face it and appeal to the Divine, whether within or above. In a slightly different context, Sri Aurobindo puts it graphically in SAVITRI how in moments of crisis man is forced to look to the Divine:


An hour comes when fail all Nature's means,

Forced out from the protecting Ignorance

And flung back on his naked primal need,

He at length must cast from his surface soul...


When our strength fails, when our human resources fail, when we sincerely call for the Divine's help, the Divine never fails. Only we must have the eye to perceive the Hand of God which may be cloaked in appearance that may be misleading at first sight. The help may not come in the form in which we expect. It may even come in the form of happenings that go counter to our expectations. The ways of the Divine Saviour are mysterious, as complex as the causes of our difficulties. The most unlikely elements play a helpful role. At times even enemies are moved to fraternise with us. We are baffled. We try to find explanations and at times attribute ulterior motives to the benefactors. But the fact remains that individuals are moved to act helpfully, circumstances are shaped favourably—all because the Divine has willed to save.

We may not always understand the manner in which the Will operates. It is not immediately necessary either, to know it. It is enough if we have the faith that the Divine response is certain and when we are helped out, to own gratitude to the Divine. There is often a tendency to attribute the favourable turn to our strength of intelligence and will or to external human agencies. It is well to remember at such moments that men and events are only instrumentations of the Divine Will to protect and save.”
*

அம்மா! எவ்வளவு தான் தவறுகள் இழைத்திருந்த போதிலும், அகங்காரச் செருக்கோடு நான் நான் என்று இல்லாததை எல்லாம் கற்பிதம் பண்ணிக் கொண்டு திரிந்த போதிலும்,

"நான்" என்பது அகங்காரத்தின் கூப்பாடு அல்ல; உனக்குள்ளே இருக்கிற தெய்வீகமே, உள்ளொளியே உண்மையான நான் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறாய்.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

உனது திருவடிகளையே அடைக்கலமாகப் பற்றிக் கொள்வது முழுமையாகிற வரம் அருள்வாய். கரணங்கள், மனம், ஜீவன் இவை அனைத்தையும் முழுமையாக உன்னிடத்தில் சமர்ப்பிப்பதற்குத் தகுதியும், சக்தியும் அருள்வாய்.

ஒவ்வொரு தருணத்திலும் நீ எனக்களித்திருக்கிற அருளை மறவாமல், நன்றியோடு ஏற்றுக் கொள்கிற பக்குவத்தை அருள்வாய் தாயே!

*quoted text thankfully excerpted from and acknowledged”

“Commentaries on The Mother's Ministry” by Shri M P Pandit, Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

கீழே விழுவது எழுவதற்காகவே!


"என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்"
மிகுந்த பணிவோடு வேண்டிய அந்த இளைஞனைப் பார்த்து விட்டு குரு சொன்னார்.
"அங்கே எதிரே செங்குத்தான குன்று தெரிகிறதல்லவா? அதன் மேல் கருங்கல்லிலான ஒரு வீட்டைக் கட்டி விட்டு வா."
அந்த இளைஞன் ஏன், எதற்கு என்று கேட்கவில்லை. குருவைத் தேடி வந்தோம், குரு சொல்லி விட்டார். காரணங்களைத் தேடுவது என் வேலை இல்லை. காரியத்தைநிறை வேற்றுவ்து தான் என் வேலை, என்ற மனப் பாங்குடன், செங்குத்தான அந்தக் குன்றின் மேல் ஏறினான். கல்லிலான ஒரு வீட்டைக் கட்டி முடித்தான். குருவிடம் திரும்பி வந்து பணிவோடு சொன்ன வேலையை முடித்து விட்டதாகச் சொன்னான்.
குரு குன்றின் மேல் கட்டப் பட்டிருந்த வீட்டைப் பார்த்தார், அந்த இளைஞனிடம் சொன்னார்,"அதை இடித்து விடு. புதிதாக ஒரு வீட்டைக் கட்டி விட்டு வா."
அந்த இளைஞனும், மறுபடி குன்றிலேறி, வீட்டை இடித்து விட்டுப் புதிதாகக் கட்டி முடித்து விட்டு, குருவிடம் வந்து சொல்ல, அவர் மறுபடி வீட்டை இடித்து விட்டு, புதிதாகக் கட்டச் சொல்ல, இப்படி பதினோரு முறை நடந்து முடிந்தது.
"மிலாரெபா, உன்னை சீடனாக ஏற்றுக் கொள்கிறேன்."என்றார் குரு மார்பா.
குரு மார்பாவும், அவரது சீடரான மிலாரெபாவும்.புத்த மதக் கோட்பாடுகளை பரப்பிய இரு பெரும் ஞானச் சுடர்கள்.
பின்னொரு நாளில் குரு மார்பாவிடம், மிலாரெபாவை ஏன் அத்தனை முறை சோதித்தீர்கள் என்றொருவர் கேட்டதற்கு குரு சொன்னாராம்:
"அவனது பழைய கர்மாக்கள் அவ்வளவு உறுதியாக இருந்தன; அதனால் அத்தனை தடவை முயற்சி செய்ய வேண்டி இருந்தது. கொஞ்சம் கூட சந்தேகப் படாமல், உறுதியான விச்வாசத்தோடு நடந்துகொண்ட படியால் தான் பதினோரு தடவையோடு முடிந்தது, இல்லையென்றால் இன்னும் அதிக முயற்சி தேவைப் பட்டிருக்கும்."

"Always circumstasnces come to reveal the hidden weaknesses that have to be overcome"
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையும், நமக்குள்ளிருக்கும் பலவீனத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்பதை அறிவிப்பதற்காகவே என்று ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகளை, பலமுறை படித்திருந்தாலும் அதன் உண்மையான பொருள் உறைப்பதற்கு இவ்வளவு காலம் ஆயிற்று.

Commentaries on the Mother's Ministries என்கிற நூலில் திரு M P பண்டிட் அவர்கள் இந்த கதையை சொல்லி, ஒரு அற்புதமான உண்மையை விளக்குகிறார். ஆன்மீக வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்குப் பல முனைகளிலிருந்தும் கஷ்டங்கள் வரும். நாம் பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருப்பதைப் போல இந்த கஷ்டங்கள் எல்லாம் இறைவன் நம் மீது திணிக்கிற சோதனைகள் அல்ல.

தவழுகிற பருவத்திலிருக்கும் ஒரு குழந்தையை போல, கீழே விழுவதும், முட்டிக் கொள்வதும் கூட எழுந்து நிற்பதற்கான பயிற்சியே; இதை யாராவது தண்டனையாக அல்லது சோதனையாக நினைப்பார்களா? அதைப் போலவே, நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையும், சம்பவமும் நம்மிடமிருக்கும் பலவீனத்தைக் களைந்து, அடுத்த கட்டத்திற்கு உயரச் செய்கிற ஒன்று தான். மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயரத் தேவையான படிநிலைகள் தான் என்பதை ஸ்ரீ பண்டிட்ஜி மிக அழகாக விளக்கி இருப்பதைப் படித்து வந்த போது தான்,வாழ்க்கையை, நாம் ஒவ்வொருவரும் எந்த அளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிய வந்தது.
திரு பண்டிட் அவர்களின் வார்த்தைகளிலேயே பார்ப்போமா?

"Each circumstance, each happening, pinpoints some defect to be made up, some neglected corner to be attended to. Most of the difficulties come up from one's nature; outer factors serve only to draw out elements in oneself which are potentially dangerous unless rectified in time. Apparently they are due to the failings of others. But in truth, they are only occasions for exposing the chinks in one’s armour.

The first reaction that usually comes up in such conditions is to blame those around, to have even grievance against the Guru. The Guru has either not cared to prevent the difficult situation or has imposed it as a test. The moment the seeker allows such a false thought to enter the mind; the doors are opened for more mischief by the hostiles. Every single event, every action lends itself to be seen in this false light and things pile up creating a gulf between him and the consciousness of the Guru. He begins to nurse a hurt feeling which steadily develops into alienation—inner and outer. The culmination arrives when he is precipitated into a revolt against everything, against the Guru, against the Divine. The hostiles have a field day.

Invariably these revolts are suicidal. They do not really affect any one except oneself. One betrays oneself, one’s soul, one’s destiny. All that has been built or being built is opened to destruction. Indeed even then one has a feeling of self justification in not wanting to keep anything received from the Guru or the Divine represented by the Guru. There is anger, there is accusation, there is bravado. All these, however, are steps towards self destruction which are not seen at the moment for what they are, because they are self chosen.

It is cowardice, says the Mother, to thus flee from oneself, one’s high aim. It is a defeat for the soul that has come for a lofty purpose. A soldier of God must stand up with courage and face the situation boldly with faith in the never failing help of the Divine and with a readiness to recognize the offender in one’s own nature. None who has done so is known to have failed. Those who have revolted with short sight have invariably regretted their defiant error some time or other during their life time.

But it is usually a missed bus.

Acknowledging with gratitude, Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry. Material excerpted from "Commentaries on the Mother's Ministry"
by Shri M P Pandit.