Showing posts with label சுதந்திரம். Show all posts
Showing posts with label சுதந்திரம். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! மலைப்பாதை, கொஞ்சம் கடினம் தான்..!


சம்பக்லால் எனும் அடியவரை ஸ்ரீ அரவிந்தர் மார்புறத் தழுவும் ஓவியம்

நேற்றுமுன்தினம், பிரிவினையின் ஆறாத ரணங்களைத் தொட்டு ஒரு பதிவை எழுதியிருந்தேன்! ஆறாத ரணத்தில் இருந்து வடியும் குருதியும் சீழும் கலந்த மாதிரியான ஒன்றைக் காஷ்மீரில் சமீபத்தில் அதிகரித்து வரும் வன்முறை காட்டிக் கொண்டிருப்பதை, அது குறித்தான செய்திகளைப் படிக்க நேர்ந்தது. 

அரசியல் ரீதியாகத் தீர்வு காண முடியாத அல்லது தெரியாமல் இருக்கும்போது, அல்லது ராணுவரீதியான தீர்வுதான் என்று முடிவு செய்தால், அதற்குத் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடிய political will என்று சொல்வோமில்லையா, அந்த உறுதி இல்லாதபோது, ஒரே வார்த்தையில் சொல்வதானால் "ரெண்டும் கெட்டானாக" இருக்கும் போது, (தனக்காகவும் தெரியாது, பிறர் சொல்லியும் ஏறாது) இதைவிட வேறெந்த உருப்படியான விளைவுகளையும் எதிர்பார்க்க முடியாது!

போன பதிவின் தொடர்ச்சியாக, பழைய பதிவின் ஒரு பகுதி இங்கே! ஸ்ரீ அரவிந்தரது வார்த்தைகள் கொஞ்சம் ஹைலைட் செய்யப்பட்டு, கொஞ்சம் யோசித்துப்பார்ப்பதற்காக!


"ஒரு தரம் கபாலி சாஸ்திரியாரிடம் கேட்டேன், "உங்களை வணங்கும் போது, உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கிற அதே மாதிரி வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் மூவருடைய ஆசியும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா?!"

"ஆமாம், உனக்குக் கிடைக்கும்" என்று தனக்கே உரித்தான பாணியில் சாஸ்திரியார் பதிலிறுத்தார்.

இந்தப் பகுதியில் படித்த 'சின்ன நாயனா'வின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப என்னைச்சுற்றி வந்து கொண்டே இருந்தது. இந்தப் புண்ணிய புருஷர்கள், ஸ்தூல சரீரத்தில் இருந்த காலத்தில், நான் பிறக்கவில்லை. நேரடி தரிசனம் பெறுகிற வாய்ப்பும் எனக்கு இருந்ததில்லை. எழுதியவர் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேணும் என்கிற நினைப்பிலேயே, எழுத உத்தேசித்திருந்தது தள்ளிப் போனது. கபாலி சாஸ்திரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று மறுபடி அமரும் போது, சங்கரநாராயணன் வார்த்தைகளில் பொதிந்திருந்த திரிவேணி சங்கமத்தைக் கண்டேன்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், மூன்று ஆன்மீக வெள்ளப் பெருக்குகள், வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் என்று மூவருடைய தத்துவ தரிசனமும் ஒரே இடத்தில், கபாலி சாஸ்திரியாரிடத்தில் சங்கமித்ததைப் புரிந்து கொண்ட பிறகே, விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டுமென்று திருவுள்ளம் போலும்!

தந்தை விஸ்வேஸ்வர சாஸ்திரி, மகனுக்கு சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுக்கிறார். சாம வேத அத்யயனத்தையும் சொல்லி வைக்கிறார். ஸ்ரீ வித்யா உபாசனையில் ஈடுபடுத்துகிறார். இதெல்லாம் பூர்வாங்கமே. தொடர்ந்த மந்த்ர ஜப சாதனையில் தன்னுடைய குருவாக, வாசிஷ்ட கணபதியைக் கண்டு கொள்கிறார், கபாலி சாஸ்திரி. வேதம், உபநிஷத்துக்களின் நுட்பத்தை எல்லாம் கணபதி முனிவரிடமிருந்து கற்றுக்கொண்ட பிறகு, அவருக்கும் குருவான ஸ்ரீ ரமண மகரிஷியின், தரிசனமும் கையால் நெஞ்சத்தைத் தொட்டு, தகராகாசமாகிய இதயக் குகை இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஹஸ்த தீக்ஷையும் கிடைக்கிறது.

பகவான் ரமணரிடத்திலிருந்து கிடைத்த தத்துவ தரிசனமே, பின்னாளில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில் சரணடைந்து, திரிவேணி சங்கமமாக, அற்புத ஒளி வெள்ளமாக சாஸ்திரியாருடைய யோக சாதனை பரிணமிக்கிறது.

ரமணரின் "நான் யார்" என்கிற விசார மார்கத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறது. ஆனாலும் கபாலி சாஸ்திரியாரின் தாகம் தீருவதாயில்லை. ரமண வழி முடிவானதாக அவருக்குத் தெரியவில்லை"

இப்படிச் சென்ற பதிவில், எழுதியிருந்தது, சரிதானா என்கிற விசாரமே இத்தனை நாள் மேலோங்கியிருந்தது. ரமணருடைய பாதையை, 'மலைப் பாதை' என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த மலைப்பாதை, எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ?

இப்படி ஒரு பாதை இருப்பது தெரிந்தாலும், எல்லோருக்கும் அதில் ஈடுபடும் மனமும், வாய்ப்பும் வாய்த்து விடாது என்பதே அனுபவத்தில் நாம் காணும் உண்மை அல்லவோ?

சின்ன நாயனா கபாலி சாஸ்திரியார் கண்டெடுத்த வைரம், திரு மாதவ் பண்டிட், ஸ்ரீ அரவிந்தருடனான முதல் சந்திப்பைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:

பாரதி அறிமுகத்துடன், மாலை ஆறுமணிக்கு ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க ஏற்பாடாகிறது. ஒரு எலுமிச்சம் பழத்தைக் கைகளிலேந்தி ஸ்ரீ அரவிந்தரை சந்திக்கிறார். இந்த சந்திப்பு, கற்றறிந்த இரு பண்டிதர்களுக்கிடையிலான மாதிரி வடமொழியில் உரையாட ஆரம்பமாகிறது. ஆங்கிலம் தெரியுமா என்று ஸ்ரீ அரவிந்தர் கேட்க, உரையாடல், பிறகு ஆங்கிலத்திலேயே தொடருகிறது.

இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள், அதன் விடுதலை சாத்தியத்தைப் பற்றி உரையாடல் திரும்புகிறது. "சாத்தியமென்ன, அது சர்வ நிச்சயம்" என்று உறுதிபடக் கூறுகிறார் ஸ்ரீ அரவிந்தர். (இந்த சந்திப்பு)இது நடந்தது 1917 இல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 1942 இல் 'வெள்ளையனே, வெளியேறு' என்று காந்தி இயக்கம் தொடங்கிய பிறகு தான், முழுமையான சுதந்திரத்திற்கான சுதந்திரப் போராட்டம் தொடங்கின மாதிரி ஒரு மாயை, இருக்கிறது. அதற்கும் முன்னாலேயே. வங்காளத்தில், ஸ்ரீ அரவிந்தர், நேதாஜி முதலானோர், முழு சுதந்திரத்திற்கான குரல் எழுப்பி இருப்பதை நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது.

அடுத்து, ஹிந்து முஸ்லிம் பிரச்சினை பற்றிக் கேள்வி திரும்புகிறது. ஒரு பரந்த மனத்தோடு கூடிய இந்துத்வமே தீர்வாக முடியும் என்று பதில் அளிக்கிறார் ஸ்ரீ அரவிந்தர்இன்றைக்கும் கூட, இந்த பதில் எவ்வளவு சரியாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். முஸ்லிம்கள் என்றாலே, பாபரின் நேரடித் தோன்றல்களாக, அன்றைய காட்டுமிராண்டித்தனத்தை இன்றும் கைக்கொண்டிருப்பவர்களாகச் சித்தரித்து, பேதங்களை, பிரிவினையை, சச்சரவை வளர்த்துக் கொண்டிருக்கும் போக்கு, என்ன தீர்வைத் தந்திருக்கிறது?

இப்படி ஸ்ரீ அரவிந்தருடனான முதல் சந்திப்பு, பரவலாக நாடு அன்று எதிர்கொண்டிருந்த விஷயங்களைத் தொட்டுப் பேசி முடிகிறது. இன்னொன்றின் தொடக்கமாக, இந்த சந்திப்பு அச்சாரம் போட்டு வைக்கிறது!

சற்று விரிவாகவே, பார்ப்போம்!?"

எண்ணெய் மட்டுமல்ல தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது! திரு தி.சா.ராஜு அவர்களுடைய ஒரு சிறுகதையை மனித இயல்பின் காரணமில்லாத துவேஷத்தை அடிப்படையாக வைத்துச் சொல்லப் பட்ட கதையை இந்தப்பக்கங்களிலேயே கூடப் பார்த்திருக்கிறோம்! 

பாகிஸ்தான் அல்லது சீனாவைக் குறைசொல்வதற்கு முன்னால், நம்முடைய அந்தரங்க சுத்தியையும், நம்முடைய தலைவர்களுடைய யோக்கியதையையும்  ஒருமுறை சோதித்துக் கொள்வது மிகவும் நல்லது!





பிரிவினை...! அறுபத்துமூன்றாண்டுகளுக்குப் பின்னாலும் ஆறாத ரணம்....!


Yousaf Raza Gilani calls on population to rise to flooding challenge as anger grows among 20 million people left homeless.

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இரண்டு கோடிப் பேர்களுக்கும் மேல் வீடிழந்து, உடைமைகளை இழந்து உதவி, நிவாரணத்திற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கையில், பாகிஸ்தானியப் பிரதமரின் இந்த ஒப்பீடு, பாகிஸ்தான் என்ற தேசமே எப்படி இந்திய வெறுப்பு என்ற ஒரே ஒரு அடிப்படையின் மீது கட்டப்பட்டிருக்கும் ரவுடி அரசு என்பதைச் சொல்லும்!

எதற்கெடுத்தாலும் இந்தியர்களோடு ஒப்பிட்டு, நான் உன்னை விடப் பெரிய பிஸ்தா, பருப்பு என்று ரவுசு கட்டுவதைத் தவிர பாகிஸ்தானிய அரசியல்வாதிகளுக்கு வேறு ஒன்றுமே தெரியாது! தங்களுடைய மக்களின் நல்வாழ்வைப்பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை! 

இந்திய வெறுப்பை விசிறிக் கொண்டிருந்தால் போதும், எல்லாப் பிரச்சினைகளுக்கும் அது தான் காரணம் என்று மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கலாம்!

இந்திய வெறுப்பு துவேஷத்தைக் கழித்து விட்டுப் பார்த்தால், பாகிஸ்தான் என்ற தனி நாட்டுக்கான அடிப்படை நோக்கம் வேறு எதுவும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த அறுபத்துமூன்று ஆண்டுகளில், வெறுப்பு, துவேஷம் என்பது கொடும் நஞ்சாக இறுகிப் போயிருக்கிறது என்பதையும், இரண்டு பக்கத்திலும் உள்ள அரசியல் வாதிகள் சிக்கலை இன்னமும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.


இந்திரா காண்டி  நாட்களில் கேலியாக ஒரு கற்பனை உரையாடலைச் சொல்லுவார்கள். உள்ளூர் அரசியலில் எதிர்ப்பு மிகவும் கூடிப் போனால், ஒரு யுத்தத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொள்கிற மாதிரி! 

பாகிஸ்தானிய ராணுவத்தைப் பொறுத்தவரை, இந்தியப் பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே, பாகிஸ்தானிய மக்களை மூளைச் சலவை செய்து வருகிறது.என்பதும், இந்திய துவேஷத்தை வளர்ப்பதில் காட்டுகிற அக்கறையை பாகிஸ்தானிய மக்களுடைய நலன்களில் காட்டுவதில்லை என்பதுமே கூடத் தெரிந்த விஷயம் தான்!

இந்திய அரசியலின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம், எத்தனை தரம் சூடு பட்டாலும், சுரணை, ஞானம் வருவதில்லை  என்பது தான்!

ஆகஸ்ட் 14! 1947

இந்தியாவில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட, பாகிஸ்தான் என்ற தனி நாடாக வெட்டுப் பட்டுப் பிரிந்து போன  தினம்! 


பிரிடிஷ்காரர்கள் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து கொண்டார்கள். 

பிரித்தாளும் கலையில் வல்லவர்களான பிரிட்டிஷ் குள்ள நரிகள் செய்த வேலை, அதுவரை தோளோடு தோள் கொடுத்து தேச விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த  முஸ்லிம்களையும், இந்துக்களையும் ஒருவரை ஒருவர் நம்பாத அளவுக்கு விரோதிகளாக மாற்றி விட்டு ஓய்ந்தது தான்.

தேச விடுதலைக்கு முன்னால், இரண்டாகப் பிரிவதற்கு முன்னால், இடைக்கால அரசு என்று ஒன்று இருந்தபோதிலும், இணக்கமான சூழலை அதனால் ஏற்படுத்த முடியவில்லை என்பதை விட, இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான முன்னுரிமைகள் இருந்தன என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அங்கே அதற்கு சிறிது காலம் வரை சகோதரர்களாகப் பழகி வந்தவர்கள், வெட்டு குத்து தீவைப்பு என்று வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். 

பிரிடிஷ்காரர்களுக்குத் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இங்கே கலவரம் நடந்ததில் பெரும் திருப்தி என்று தான் சொல்ல வேண்டும்!      

பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னால், இந்த தேசத்தின் மீது தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கள், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.இந்தத் தொடர் தாக்குதல்களைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தவறியதும், நமக்குள்ளிருந்த பிரச்சினைகளுக்குள் அந்நியனை உள்ளே புக விட்டு மத்தியஸ்தம் செய்யச் சொன்ன முட்டாள்தனத்துக்கும் விலையாக வெறும் முப்பதாயிரம்  அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த வெள்ளையர்கள் இந்த தேசத்தை வெற்றிலையை மடித்து வாய்க்குள் போட்டு விழுங்குவதைப் போல, விழுங்க முடிந்தது.

பிரிடிஷ்காரர்கள் அவ்வளவு வலிமையானவர்களா? 

புத்திசாலிகளா? ஆயுத வலிமையில் தன்னிகரற்றவர்களா? 

இப்படியெல்லாம் சொல்லி சமாதானப் படுத்திக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுமே இல்லை! அப்புறமும் எப்படி, இந்தக் குள்ள நரிகள், இந்த தேசத்தை அடிமை கொண்டார்கள்? இந்தக் கேள்விக்கு உண்மையான விடையைத்  தேடுவாருமில்லை, கண்டு சொல்வாருமில்லை!

தாரகநாத் தாஸ் என்ற ஒருத்தருக்கு மட்டும் இந்தக் கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது. லியோ தோல்ஸ்தோய் என்ற ருஷ்ய எழுத்தாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். தோல்ஸ்தோயிடமிருந்து  மிகத் துல்லியமான காரணத்தை எடுத்துச் சொல்லி ஒரு பதிலும் வந்தது.

"What does it mean that 30,000 people, not athletes, but rather weak and ill-looking, have enslaved 200 millions of vigourous, clever, strong, freedom loving people? Do not the figures alone make it clear that not the English, but the Hindus themselves are the cause of their slavery?’ For the Hindus to complain that the English had enslaved them was like villagers addicted to drink complaining that that the winesellers who had settled in their midst were the cause of their drinking habit. ‘Is that not the case with all the people, the millions of people, who submit to thousands or even hundreds of individuals of their own nation or those of foreign nations?’ If the Hindus had been enslaved by violence, it was ‘because they themselves have lived, and continue to live by violence, and fail to recognize the eternal law of love inherent in humanity."


மஹாத்மா காந்தி  தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, இந்தப் பதிலைப் பார்த்து விட்டு,தோல்ஸ்தோய்இடமிருந்து அனுமதி பெற்று இருபதாயிரம் பிரதிகள் அச்சிட்டு, தென் ஆப்பிரிக்காவில் இருந்த இந்திய சமூகத்தினரிடம் சேர்ப்பித்தார் என்பது இன்னொரு சுவாரசியமான தகவல்.

வெறும் ஆயிரங்கள், கோடிக் கணக்கான ஜனங்களை அடிமை கொண்டதெப்படி?

பாகிஸ்தான் மாதிரி சுண்டெலிகள் தொடர்ந்து இந்த தேசத்தைப் பல வழிகளிலும் சீண்டிக் கொண்டிருப்பதெப்படி?

கையாலாகாத கோழைகளைத் தலைவர்களாக கொண்டிருக்கும் வரை சுதந்திரத்திற்குப் பங்கம் எதுவும் வராது என்று நம்பி இருக்க முடியுமா? 

காங்கிரஸ்காரர்களால், இந்த தேசத்தின் இறையாண்மையை, கௌரவத்தைப் பாதுகாக்க முடியுமா?

சுதந்திரம் என்று வெறும் பேச்சுப்  பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது! பெற்ற சுதந்திரத்தை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதும் தெரிந்திருக்க வேண்டும்!

முதலில்,உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக இருக்கும் கோழைத் தனமான தலைவர்களிடமிருந்து!

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!


The Development of the British Empire

 By Howard Robinson
நேற்று முதல்  படித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த புத்தகம் இது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருவான விதம்! கூகிள் புக்ஸில் இதை இணையத்திலேயே வாசிக்க ஆசிரியர் பெயரில் இருக்கும் லிங்கை க்ளிக் செய்யுங்கள்.