முகத்தில் முகம் பார்க்கலாம்! (முக நூலில்?) படித்தது! பிடித்தது!

முகநூல் தமிழில் ரத்தபூமியாக ஆபாச வசவுகளின் தனிப் பெருந்திரட்டாக இருந்தாலும் அங்கங்கே வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற, படித்து மறந்து போன தகவல்களை மறுபடி நினைவு படுத்துகிற   பகிர்வுகளும் நிறைய இருக்கின்றன என்பதையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்! பார்த்ததும் சிரிக்க வைக்கிற மீம்களும் நிறைய உண்டு. முதலில் சிரித்து விடலாம்!
ஏக் மார்...தோ துக்கடா...
இதத் தவிற எனிக்கி ஒன்னும் தெரியாதுய்யா!


இப்படி ஒரு கேப்ஷனோடு இசுடாலின் முழிக்கிற படத்தைப் பார்த்தால் சிரிக்காமல் என்ன செய்வதாம்?

சேட்டைக்காரன் பதிவர் முகநூலில் கொஞ்சம் மறந்து போன பழைய தகவல்களை எடுத்துக் கொடுக்கிறார்

படித்ததும் பிடித்தது:




பால்சாஹேப் தாக்கரே எமர்ஜென்ஸியை ஆதரித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மும்பை மாநகராட்சி தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சட்டவிரோதமான கட்டிடங்களை இடித்தபோது, அப்போதைய ஆணையருக்கு போன் செய்து நிறுத்தச் சொன்னவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மராட்டியர் என்ற ஒரே காரணத்தால் பிரதீபா பாட்டீலை குடியரசுத்தலைவர் பதவிக்கு ஆதரித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சஞ்சய் தத்துக்கு ஆதரவாகப் பேசினார், எழுதினார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மராட்டியர் என்ற ஒரே காரணத்துக்காக ஷரத் பவார் பிரதமராக வேண்டுமென்று சொன்னது எத்தனை பேருக்குத் தெரியும்?
பாப்ரீ மஸ்ஜிதை நாங்கள்தான் இடித்தோமென்று சொல்லிவிட்டு, வழக்கு பாய்ந்ததும் பல்டி அடித்தது எத்தனை பேருக்குத் தெரியும்?
மண்ணின் மைந்தர் என்ற கோஷத்தையும், தென்னிந்தியர் மீதான துவேஷத்தையும் அவர் கைவிடக் காரணம், மும்பை நிழலுலக தாதாக்களிடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஹாஜி மஸ்தான் தொடங்கி, வரதராஜ முதலியார் வரை பால் தாக்கரேயின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர்களால்தான், ‘இனி மராட்டி பப்பு வேகாது,’ என்று ’ஹிந்துத்வா’வைப் பிடித்துக் கொண்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மகாராஷ்ட்ராவில் கொங்கண் பகுதி தவிர்த்து பிற பகுதிகளில் சிவசேனாவை மக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை; பாஜக இல்லாவிட்டால் சிவசேனா மும்பையைத் தாண்டி ஒரு கவுன்சிலர் கூட பெற முடியாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மனிதர் இறந்துபோய் விட்டார்; இனி என்ன வேண்டுமானாலும் பேசலாம்; எழுதலாம் என்று அவரை என்னமோ கடவுளுக்கு நிகராக வர்ணிப்பவர்களின் அறியாமையை என்னென்று சொல்ல?
அவரும் ஒரு சந்தர்ப்பவாதிதான்! ஆனால், பின்னாளில் மும்பை நிழலுலக தாதாக்களுக்கு சிம்மசொப்பனம் ஆனார் என்ற ஒரே காரணத்துக்காக அவரைப் பாராட்டலாம். அவ்வளவுதான்.
அப்பாவைப் போல பிள்ளை இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
ஒரு வாசகநண்பர் பின்னூட்டத்தில் வந்து கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை ஒழித்துக்கட்டுவதில் அன்றைய காங்கிரசின் முன்னெடுப்பில் உருவானது தான் சிவசேனா என்று இந்த லிங்க்கை எடுத்துக் கொடுத்து இருக்கிறார். 

The SS was formed in 1966 with the help of Congress and Bombay industrialists to combat Commie unions in Bombay. BT added another ingredient to it called “Aamchi Mumbai” and non-Marathis to get out. Therefore, the first assault by SS was on Commie union leaders and the non-Marathis (South Indians, Bengalis etc). Many non-Marathi families were violently attacked and driven out of Mumbai.என்று சிவசேனாவின் கதை ஆரம்பம் ஆகியிருக்கிறது 


பரத்வாஜ் ரங்கன் விமரிசனமெல்லாம் ச்சும்மா! 
ஆமா ENPT மூணு நாலு வருசம் தான லேட்டா வந்துருக்கு? அப்புராணி இளம் ஹீரோயின காமக்காசுவெறி புடிச்ச கார்டியன் ப்ரொடியூசர் கொடும படுத்துற ப்ளாட்லாம் 80ஸ்லயே காலாவதி ஆகிருச்சே... இது அதுக்கு முன்ன எழுதின கதையா?! இன்னிக்கி தேதிக்கு காண்டம்பரரியா எடுக்கணும்னா ப்ரொடியூசர் ஜல்சா வீடியோவ ஹீரோயினே எடுத்து வெச்சுட்டு லீக் பண்ணவானு மெரட்டியே நடிக்க சான்ஸ் புடிக்கற மாதிரிதான் பண்ணனும். டைட்டில் கூட என்னை நோக்கி பாயும் அனகோண்டானு வெச்சா மேட்சிங்கா இருக்கும்.😫 
இத்தனை ஷார்ப்பா ஷார்ட்டா விமரிசனம் பார்த்து எத்தனை நாளாயிற்று! 
மீண்டும் சந்திப்போம்.

மகா இழுபறி! ஆட்சி அமைப்பதற்கு முன்னும்! அமைத்த பின்னும்!

மகா இழுபறி முடிந்துவிட்டதென்று தானே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எதற்கும் இங்கே ஒருமுறை வாசித்துப் பார்த்து விடுங்கள்! ஆர்னாப் கோஸ்வாமி வெளியேறிய பிறகு TimesNow சேனலைப் பார்ப்பது அறவே குறைந்துவிட்டதென்று தான் சொல்ல வேண்டும்! அதனால் Republic TVயை தினசரி பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்று அர்த்தமல்ல. செய்திகளை பல இடங்களிலிருந்தும் சேகரிக்கிறேன், புரிந்துகொள்ள இன்னும் பல இடங்களில் போய்ப் பார்க்கிறேன். அதன்பிறகே என் விமரிசனக்கருத்தாக இந்தப்பக்கங்களில் எழுதுகிறேன் என்பதை நண்பர்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்பது என் நம்பிக்கை.


இது நேற்று முன்தினம் இரவு  9 மணிக்கு Times Now TVயில் நடந்த The News  Hour விவாதம். வீடியோ 43 நிமிடம்.  சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதியது போல மகா இழுபறி இப்போதுதான் நிஜமாக ஆரம்பித்திருக்கிறது. ஒரே சிந்தனையோ ஒத்துப் போகும் இயல்போ இல்லாத மூன்று கட்சிகள் பதவிக்காகவும் பணத்துக்காகவும் கூட்டு சேர்ந்திருக்கும் போது அவர்களுடைய CMP காமன் மினிமம் ப்ரோக்ராம் என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமானது அல்ல. புலிகள் (சிவசேனா) புல்லும் தின்பார்கள் என்பதற்கேற்ப செகுலர் வேஷம் போடவும்  சோனியாவின் தலைமையை ஏற்கவும் தயாராகிவிட்டது நன்றாகவே தெரிகிறது. தலைவர்கள் மட்டத்தில் வேஷத்தை எளிதாக மாற்றிக் கொண்டுவிடலாம்! ஆனால் தொண்டர்கள்? The common minimum programme (CMP) worked out between the Shiv Sena, NCP and Congress talks about immediate loan waiver to Maharashtra’s farmers; a new law to ensure 80 per cent reservation in jobs for locals; Re 1 heath clinics in all talukas; and a Rs 10 thali to provide affordable food to people என்றெல்லாம் செய்தி வந்திருக்கிறதே! அதெல்லாம் ஜனங்களை நம்ப வைப்பதற்கான லுலுலாயி!


கோட்ஸேவை தேசபக்தர் என்று உளறியதற்காக பிஜேபியின் பிரக்யா தாக்குர் தலையைச் சீவவேண்டும் என்கிற ரேஞ்சுக்கு காங்கிரஸ்காரர்கள் நாடாளுமன்றத்தில் கூவிக் கொண்டிருக்கையில் அதைவிட மோசமாகப் பலமுறை பேசியிருக்கிற    சிவசேனாவின் செகுலர் வேஷத்தை ட்வீட்டரில் கிழிகிழியென்று கிழித்துக் கொண்டிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. At a time when BJP MP Pragya Thakur has come under fire for her controversial remarks glorifying Mahatma Gandhi’s assassin Nathuram Godse in Parliament, a Congress MLA in Madhya Pradesh kicked up a row. Congress’ Govardhan Dangi courted controversy during a protest in Rajgarh by saying he would "burn not only Pragya Thakur’s effigy, but her too" if she sets foot in Madhya Pradesh. டூப்ளிகேட் காந்திகளுக்கு ஒரிஜினல் காந்திமீது பாசம் வந்து விட்டதோ என்றெல்லாம் அனாவசியமாகச் சந்தேகப்படாதீர்கள்! 


ஆனால் சரத் பவாரின் NCP  ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வருகிற ஷைலக் பாத்திரம் மாதிரி சிவசேனாவிடம் தனக்குச் சேர வேண்டிய நெஞ்சுக்கறியை எதிர் பார்த்துக் கத்தியுடன் காத்துக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர், நிதி, உள்துறை இவைகளைக் குறி வைத்திருக்கிறது. காங்கிரஸ் தனது பங்குக்கு சபாநாயகர் பதவியோடு கொஞ்சம் வசதி வாய்ப்பை  கொள்கிற துறைகளை எதிர்பார்க்கிறது. இவ்விரு கட்சிகளும் கேட்பதைக் கொடுத்துவிட்டு சிவசேனா என்ன செய்யப்போகிறது? இந்த வேடிக்கையைக் காண டிசம்பர் 3 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறவரை காத்திருந்தாக வேண்டும்!

அரசியல் விளையாட்டுக்கள் மிக விபரீதமான சர்க்கஸ் என்பதைப் புரிந்துகொண்டால், நடந்து கொண்டிருப்பவை குறித்து ஆச்சரியப்பட மாட்டீர்கள் தானே!

மீண்டும் சந்திப்போம்.                
  

சிவசேனா அலப்பறைகள்! ஜெயிக்கப் போவது யாராம்?

இங்கே ஓசிச்சோறு வீரமணிகள் மாதிரியே ஆளும் கட்சியோடு இணக்கமாக இருந்தே தண்டல் வசூல் செய்துகொண்டிருந்ததைத் தவிர சிவசேனா தாக்கரேக்கள் நேரடி அரசியலில் குதித்ததில்லை என்ற கதை இன்று மாலையுடன் பழங்கதையாகிறது. இன்று மாலை 6.40  மணிக்கு உத்தவ் தாக்கரே சிவாஜி பார்க்கில் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொள்கிறார். சிவசேனா NCP சோனியா காங்கிரஸ் மூன்று கட்சிகளில் இருந்தும் தலா 2 பேர் கூடவே மந்திரிகளாகப் பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார்களாம்!  ஆதித்ய தாக்கரே மந்திரி சபையில் இடம் பெறப்போவதில்லை என்றாலும் நிழல் முதலமைச்சராகச் செயல்படுவார் என்றும் செய்திகள் கசிகின்றன.


அந்த நாட்களில் சி என் அண்ணாதுரை தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த நாட்களில் சட்டசபையிலேயே நான் முற்றும் துறந்த முனிவருமல்ல XXXX படிதாண்டாப் பத்தினியுமல்ல என்று கொள்கை முழக்கம் செய்த மாதிரி இந்த 7 நிமிட வீடியோவில் சிவசேனாவின் சஞ்சய் ராவத் என்ன சொல்கிறார் என்றும் பார்த்துவிடுங்களேன்! லோக்சபா தேர்தல் சமயத்தில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானெர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளெல்லாம் பிஜேபிக்கு எதிராக ஒரு மகா கெட்ட பந்தன் அமைக்க முயற்சி செய்தது போலவே இப்போதும் செய்யலாம் என்று சோனியா காங்கிரஸ் நப்பாசையுடன் காத்திருக்கிறது. அப்போதும் காங்கிரஸ் கட்சிதான் போய்ப்போய் ஒட்டிக் கொண்டதே தவிர மாநிலக்கட்சிகள் எதுவும் காங்கிரசுக்கு முதல்மரியாதை கொடுக்கவில்லை என்பதும் கூட ஆறுமாதத்துக்கு முன் நடந்த சமீபகால வரலாறுதான்!  

இதுவரை மம்தா பானெர்ஜி உள்ளிட்ட மாநிலக்கட்சித் தலைவர்கள் சாதிக்க முடியாததை மகாராஷ்டிராவில் NCPயின் சரத் பவார் இப்போது சாதித்திருக்கிறார் என்ற ஒற்றை விஷயத்தை வைத்துக் கொண்டு, டில்லியிலும் ஆட்சியைப் பிடிப்போம் என்று சிவசேனா சஞ்சய் ராவத் கூவுவதும்,மகாராஷ்டிரா மாதிரியே எதிர்வரும் நாட்களில் லட்சியக்கூட்டணி அமைத்து பிஜேபியைத் தோற்கடிப்போம் என்று சோனியா காங்கிரசும் கனவு காண்பது எங்கே போய் முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? #முட்டுச்சந்துகள் ஏராளமாக இங்கே இந்திய  அரசியல் களத்தில் உண்டு என்பது தெரியும் தானே!  
    
ட்வீட்டர் தமாஷ்!

சீனாதானா திகார் சிறையில் இருந்துகொண்டே குடும்பத்தார் மூலமாக ட்வீட்டரில் உபதேச அக்கப்போர் செய்து கொண்டிருக்கிறார்.
     

I have asked my family to tweet the following: What will remain in memory of Constitution Day 2019 is the most egregious violation of the Constitution in Maharashtra between November 23 and November 26, 2019.
83
678
3K
It was an assault on the office of Rasthrapathi to wake him up at 4.00 am to sign an order revoking President's Rule. Why could it not have waited until 9.00 am in the morning?
33
204
528
People who observe the evolution of Parliamentary democracy will agree that complex, diverse, plural societies are best governed by coalitions that learn to compromise and agree on a Common Minimum Programme.
13
224
809
Warm greetings to the Shiv Sena-NCP-Congress Coalition government. Please subordinate your individual party interests and work together to implement the common interests of the three parties - farmers' welfare, investment, employment, social justice and women and child welfare.
9:43 AM · Nov 27, 2019   
 
சீனாதானா  உபதேச மழையை யாராவது சட்டை செய்கிறார்களா என்ன?

பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட நிறையப்பேருக்கு அழைப்பு கொடுத்திருப்பதில் இலவு காத்த கிளி இசுடாலின் கலந்து கொள்கிறாராம். மம்தா பானெர்ஜி தனக்கு வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாக சாக்கு சொல்லி வரமுடியாத நிலையைத் தெரிவித்து விட்டாராம்! இன்றைக்கு சிவசேனாவுடன் ஒரே மேடையில் நின்றால் 2021 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல்களில் முஸ்லிம் வாக்குவங்கியில் பெரும் ஓட்டைவிழும் என்ற பயம் தான் காரணம் என்கிறது TOI செய்தி.

சிவசேனாவை அதன் கடந்தகாலம் வேகமாகத் துரத்திக் கொண்டிருக்கிறது. தப்பிப் பிழைப்பார்களா என்பது 99 ரூபாய் நோட்டு மாதிரி, இப்போது விடை தெரியாத ஆனால் ஊகிக்க முடிவதுதான்!

மீண்டும் சந்திப்போம்.