Showing posts with label ஒரு புதன் கிழமை. Show all posts
Showing posts with label ஒரு புதன் கிழமை. Show all posts

ஒரு புதன்கிழமை! செய்திகளின் அரசியல் கொஞ்சம் சுருக்கமாக!

முதலில் இந்தியர்களாக நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள வைக்கும் ஒரு செய்தியைப் பார்த்து விடுவோம்! சீனாவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்தியர்கள்


கடந்த 12 மாதங்களில் 43% இந்தியர்கள், சீனப்  பொருட்களை புறக்கணித்துள்ளனர்! லடாக்கில் (Ladakh) உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley)  இந்திய மற்றும் சீன படையினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு தொடங்கியது. அந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பல சாமானிய மக்கள், சீன தயாரிப்புகளை புறக்கணிக்கத்  தொடங்கினர் (Ban China Products).அதே சமயத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியர்கள், தற்சார்பு பொருளாதாரத்தை (Atmanirbhar Bharat) நோக்கிய பயணத்தை, ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசு பல திட்டங்களை வகுத்தது. கூடுதலாக உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது.

இதனால் கடந்த 12 மாதங்களில், 43% இந்தியர்கள் சீன பொருட்களை (Made in China) புறக்கணித்துள்ளனர். கிட்டத்தட்ட 60% பேர் சீனாவில் தயாரித்த பொருட்களை தொடர்ந்து வாங்குகின்றனர் ஆனால், அவர்கள் கூட இந்த காலகட்டத்தில் 1-4 பொருட்களே வாங்கியுள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால், நுகர்வோரின் விழிப்புணர்வு (consumer awareness) இந்த ஓராண்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது! #GalwanValleyClashes #china #madeinchina என்கிறது - சாணக்யா செய்திக்குழு -


மருது பாண்டியர்கள் என்றழையிக்கப்பட்ட மருது சகோதரர்கள் இன்றைக்கு 220 ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலை முழக்கம் செய்தநாள் ஜூன் 16 கவிஞர் கண்ணதாசன் சொந்தமாகத் தயாரித்த சிவகங்கைச் சீமை திரைப்படம் மருது பாண்டியர்கள் வரலாற்றைச் சொன்ன காவியம். நேரம் ஒதுக்கிப்பாருங்களேன்!  


டில்லியில் 962 கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை 13500 கோடி ரூபாய் வீண் ஆடம்பரச் செலவு என்று கூவிய இடதுசாரிகள், கேரளாவில் ரூ. 56443  கோடி செலவில் காசரகோடு - திருவனந்தபுரம் ரயில்பாதை அமைக்கும் திட்டத்தைப் பற்றி எதுவுமே சொல்லாமல் மௌனமாக இருப்பதேன்? யாராவது fevicol போட்டு ஒட்டி விட்டார்களா என்ன?


நாளை மாலை பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார் என்பதைக் குறித்து ஏகப்பட்ட அலப்பறைகள் கிளம்பியதில் ஸ்டேன்லி ராஜனுடைய நச்சென்ற பகிர்வு. சந்திப்பில் முக்கியமான விஷயம் முதல்வருடன் செல்கிறவர்கள் பட்டியலில் நிதியமைச்சர் இல்லை, ஆனால் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இருக்கிறார். டாட்.


வீசுவது கறித்துண்டு பொறை பிஸ்கட் எதுவானாலும் நேரத்துக்கு வரவில்லையென்றால் இப்படித்தான்! அதனால் விகடன் திருந்திவிட்டது என்றா சொல்லிவிட முடியும்?  #முன்களப்பிணி 



கோவிலை  நிர்வகிப்பதைக்குறித்து ஆகமங்களில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆகமங்கள் தான் கோவில் நிர்வாகத்துக்கான அத்தாரிட்டி! HR &CE அல்ல. 


அயோத்தி ராமஜென்மபூமி நிலம் வாங்கியதில் மோசடி என்று உத்தரப்பிரதேச அரசியலில் கிளப்பி விடப்பட்ட வேகத்திலேயே, கிளப்பியவர்கள் முகத்தில் கரிபூசிக் கொள்ளவேண்டி வந்தது. எப்படி என்பதை கோலாகல ஸ்ரீனிவாஸ் விவரிக்கிறார். வீடியோ 18 நிமிடம்.

மீண்டும் சந்திப்போம்.     
   

ஒரு புதன் கிழமை! #பழ.கருப்பையா #தராசுஷ்யாம் #பொதுத்துறை

பழ.கருப்பையா பழைய காங்கிரஸ்காரர். அங்கிருந்து  அதிமுகவுக்குப் போனார், அங்கிருந்தும் வெளியேறி திமுகவை ஆதரிக்க ஆரம்பித்தார். அப்புறம் அதையும் மாற்றிக் கொண்டார். பல இடங்களுக்கு மாறினாலும், காமராஜர் இருந்த ஸ்தாபன காங்கிரஸ் ஞாபகம் அவ்வப்போது வந்து விடுவதைத் தவிர்க்க முடியாமல் கொஞ்சம் நியாயமாகவும் பேசி விடுகிறார் என்பது செட்டியாருடைய தனிப்பட்ட சோகம்.


இந்த 19 நிமிட வீடியோவை இன்றுதான் பார்த்தேன். ஏதோ ஒரு புதுக்கட்சியின் கூட்டத்தில் பேசுகிறார், ஆனால் எங்கே, எப்போது, பேசிய மொத்தமும் இவ்வளவு தானா என்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. காமராஜர் அந்தநாட்களில் சொன்னதுதான்! திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்! அதையே இன்றைய அரசியல் சூழலோடு பொருத்தி, திமுக, அதிமுகவை நிராகரிப்போம் என்று சொல்வதும், அதிமுக, திமுகவை நிராகரிப்போம் என்று சொல்வதும் எத்தனை போலித்தனமானது என்று பழ.கருப்பையா  எழுப்புகிற கேள்வி நம்மை யோசிக்க வைக்கிறதா? இந்தக்கேள்விக்கு  நண்பர்கள்தான் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல வேண்டும். 


தராசு ஷ்யாம்! இன்றைய தலைமுறைக்கு, அவ்வப்போது தமிழ் ஊடகங்களில் அரசியல் கருத்துக்களை சொல்கிற நபராக மட்டும் தான் தெரிந்திருக்கும்! Investigative  Journalism என்பதைத் தமிழில் மிகவும் கெட்ட வார்த்தையாக்கியவர். தராசு என்ற வார இதழின் ஆசிரியராக இருந்து, செய்திகளை வைத்தே  காசு பறிக்கும் வித்தையின் முன்னோடி. நக்கீரன் கோபால் இவருடைய தராசில் இருந்து உருவானவர்தான் என்பது நிறையப்பேருக்குத் தெரியுமோ தெரியாதோ? இந்த 6 நிமிட வீடியோவில் கேள்வியே சசிகலா வருவதால் அதிமுகவில் பிளவு, பின்னடைவு வருமா என்பதுதான். புலனாய்வுப் பத்திரிகையாளர் தெளிவாக எதையாவது சொன்னாரா என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! தேர்தல்களம் சூடாகும்போது இவர்போல இன்னும் நூறுபேர் கிளம்பி ஊடகங்களில் நம்மைக் குழப்புவதற்காகவே வருவார்கள் என்று எச்சரிக்கை செய்வதற்காகத்தான் ஒரு சின்ன சாம்பிள்.

பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்றிரண்டை தவிர மற்றவை...மக்கள் வரிப்பணத்தை ஏராளமாக விழுங்கிக் கொண்டும், ஏராளமான அசையா சொத்துகளைக் கொண்டிருந்தும்...நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது தான் கள எதார்த்தம்.
இவை ஏன் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்குகின்றன?
''நஷ்டத்தில் இயங்கும்'' பொதுத்துறை நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவையில் துரிதமாக/ வேகமாக இயங்குகின்றனவா என்றால் இல்லை.
பொதுமக்களுக்கான சேவையில் இழுத்தடிப்புகள்,தாமதங்கள் இன்றி..குறிப்பிட்ட காலவரையறைக்குள் சேவையை அளிக்கின்றனவா என்றால் இல்லை.
பணியாளர்களையும் ஓரளவிற்கு மேல் கேள்வி கேட்கவோ...பணியில் சிறப்பாக முனைப்புடன் பணியாற்றுமாறு வலியுறுத்தவோ முடியாது. யூனியன்,போராட்டம் என்று பிரச்சினைகள் திசை மாற்றப்பட்டுவிடும்.
உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளோ...இன்ன பிற நியமனங்களோ .. அரசியல் அழுத்தமின்றி நடப்பதில்லை. அரசியலுக்கான தளமாக இருக்கிறது என்பதைத்தவிர மக்கள் பெறும் பயன் என்ன ?
அனைத்திற்கும் மேலாக....பொதுத்துறை நிறுவனங்களில்.. ஊழலின் சதவிகிதம் என்ன ??????????????
மக்களுக்கும் சிறப்பாக பணியாற்றாமல், அரசுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, மக்கள் வரிப்பணத்தையும் ஏராளமாய் விழுங்கிக் கொண்டு இருக்கும் ..''நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் என்ன தவறு ? என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.
தனியார் ஏற்படுத்தும் போட்டியில்...மக்களுக்கு.. 'குறைந்த விலையில் சேவைகளை பெறுவது' என்கிற பயன் கிடைக்கிறது...என்பது களம் உணர்த்தும் எதார்த்தம். மக்கள் உணரும் எதார்த்தம்.
இன்னொரு கோணத்தில்..
பணிப்பாதுகாப்பு, நஷ்டத்தில் இயங்கினாலும் இயற்கை & செயற்கை பேரிடர் காலங்களில் ..துரிதமான , இலவசமான சேவைக்கு அரசுக்கு பயன்படுவது பொதுத்துறை என்பதும் கள எதார்த்தம்.
இருப்பினும்...மக்களிடம் ஆதரவில்லை. ஏன் ?
அடிப்படையில்...அரசியல் நுழைந்து... யூனியன், போராட்டம், அரசுக்கு நெருக்கடி தருவது, ஊழல்... போன்ற சுயநல அரசியல் செயல்பாடுகளால் வீணாகிப் போய் ....பொதுமக்கள் ஆதரவை இழந்து நிற்கின்றன பொதுத்துறை நிறுவனங்கள் என்பதே உண்மை. ஜனநாயக நாட்டு மக்களின் அடிப்படையான இக் கேள்விகளுக்கு பதிலளிக்காமல்...வெறுமனே தனியார் மயம் கூடாது என்கிற அரசியல் கோஷங்கள் ...வேடிக்கையானவை. தனியார் மயத்தை எதிர்த்து கோஷமிடுவது... ஆகப்பெரும் முதலாளிகளாக / தொழிலதிபர்களாக இருக்கும் 'அரசியல்வாதிகள்' என்பது இன்னுமொரு வேடிக்கை.      
   
பொதுத்துறை இங்கே யாருக்காக? பொதுத்துறை பற்றி இந்தப்பக்கங்களில் நிறையப்பேசி இருக்கிறோம். அதை மீண்டும் நினைவுபடுத்தி ......

மீண்டும் சந்திப்போம்.

ஒரு புதன்கிழமை! கரோனா வைரஸ்! சேகர் குப்தா! V P சிங்!

கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் ஆரம்பித்து விட்டது என்பது கவலைதரும் செய்திதான் என்றாலும் ராகுல் காண்டி மாதிரியான உளறுவாயர்கள் அலறுவது போல அச்சத்தை உண்டாக்குகிற விதத்தில் அல்ல! இங்கே பிரிட்டிஷ் அமெரிக்கரான ஜான் ஆலிவர் இந்த 20 நிமிட நிகழ்ச்சியில் கரோனா வைரஸ் குறித்தான அச்சங்களை, தனக்கேயுரித்தான பகடியுடன் சொல்வதில் பிப்ரவரி மாதம் 23 அம தேதி யூட்யூபில் வலையேற்றப்பட்டு இன்று வரை ஒரு கோடியே எழுபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து இருக்கிற ஒரு வியட்நாமியப் பாடலுக்கு ஆடுகிறார். அமெரிக்க அரசியல்வாதிகளை பகடி செய்கிறார். mask முதலான பொருட்களை பதுக்காதீர்கள் என்றெல்லாம் விவரமாகத்தான் சொல்கிறார். ஜான் ஆலிவர் பகடிக்கு மேலே சுட்டி இருக்கிறது. ஆனாலும்  நம்பிக்கையூட்டும் அந்த 3 நிமிட வியட்நாமியப் பாடலை இங்கேயும்  பார்க்கலாமா? ஆங்கிலத்தில்  subtitle  இருக்கிறது.


கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது முதல் என்ன என்ன முன்னெச்சரிக்கைகள் வேண்டியிருக்கும் என்று சொல்கிற பாடலாக இருக்கிறது. அச்சப்படத் தேவையில்லை, எச்சரிக்கையாக இருப்பதுதான் இப்போது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறது.

    
சேகர் குப்தா இந்த சப்ஜெக்டைக் கூட விடாமல் பேசி இருப்பது ஆச்சரியம் அல்ல! இந்த 19 நிமிட வீடியோவுக்கு வந்த பின்னூட்டத்தில் ஒருவர் கொஞ்சம் நக்கலாகவே சொல்கிற மாதிரி சேகர் குப்தாவுக்குக் கூடத்   தெரியாத சப்ஜெக்ட் இருக்கிறதா என்று எனக்கும் கூட என்னதான் சொல்லவருகிறார் என்பதே குழப்பமாக ஒரு ஆச்சரியம்! ஒன்றும் உருப்படியாகப் பேசத்தேரியாத சமயங்களில், பேசாமல் இருந்து விடுவது மிகவும்  உத்தமம்! ஆனால் The Print தளத்தில் வேறொரு 10 நிமிட வீடியோ கொஞ்சம் உருப்படியான தகவல்களைச் சொல்கிறது.  ஆனால் ஊடகங்களில் வரும் பொறுப்பற்ற செய்திகள் உருப்படியாகவா இருக்கும்?
A cat suspected to be infected with coronavirus is at the centre of a controversy as PETA India has demanded the release of the cat which faces deportation from the Chennai port to China, where cats are killed for meat and fur. A stowaway cat, which arrived in a container from China more than 20 days ago, has been held at the Chennai port and is now facing deportation to China -- where it is unlikely to survive -- all because of ignorance over the coronavirus.     
இப்போது படித்ததில் சுளீரென்று தெறித்தது: 

*வி.பி. சிங் செய்த மாபெறும் தவறு*
“பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட. ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையான ஒன்று. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்கிற அச்சமே அதற்குக் காரணம்.
ஆனால் முன்னாள் பிரதம மந்திரியான வி.பி. சிங் அந்த *மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்*
1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.
அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
அவர்களின் மனைவிகளும், பெண்களும் கற்பழிக்கப் பட்டார்கள். அவர்களின் கண் முன்பே அவர்களின் குழந்தைகள் வெட்டிக் கொல்லப் பட்டார்கள்.
காஷ்மீரின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவரான டீப்பாலால் டக்ரூ நடுத்தெருவில் வெட்டிச் சாய்க்கப் பட்டார். குற்றுயுராகத் துடித்துக் கொண்டிருந்த அவரது உடலைச் சுற்றி நான்கு பக்கமும் மோட்டார் பைக்குகள் சுற்றிக் கொண்டிருந்தன. “காஃபிரான” டக்ரூவுக்குத் தண்ணீர் கொடுப்பவர்களும் காஃபிர்களாகக் கருதிக் கொல்லப் படுவார்கள் என எச்சரிக்கப் பட்டார்கள்.
இந்தக் கொடுமைகளைக் கண்டு முஃப்தி முகமதுவோ அல்லது அவரது மகளோ சிறிதும் கண்ணீர் சிந்தவில்லை. ஏன், ஒரு சிறு அறிக்கை கூட வெளியிடவில்லை. இன்றுவரை காஷ்மீரி முஸ்லிம்கள் அதனைக் குறித்துப் பேசுவதும் இல்லை.
இந்தச் சம்பவங்கள் திடீரென நடந்து விடவில்லை. மிகத் துல்லியமாகத் திட்டமிட்டே இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் மேற்கொள்ளப் பட்டன என உறுதியாகத் தெரிவிக்கிறேன்.
இதே காலகட்டத்தில் திடீரெனெ இந்திய உள்துறை மந்திரியின் மகளைத் தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் செய்திகள் பரவுகின்றன.
சகோதரர்களே, இதனைக் குறித்து வெளிநாட்டுப் பத்திரிகைகள் எழுதியிருப்பதனை கூகுளில் தேடிப் படியுங்கள். ஏனென்றால் அந்தப் பெண்ணை எந்தத் தீவிரவாதியும் கடத்திச் செல்லவில்லை. அவள் முஃப்தி முகமதின் வீட்டுக்குள்ளேதான் இருந்தாள் என்பதனைத் தெரிந்து கொள்வீர்கள்.
தீவிரவாதிகளின் தீவிர ஆதரவாளரான முஃப்தியே இந்தக் கட்டுக் கதையைக் கட்டவிழ்த்துவிட்டார். அதனை உபயோகித்து இந்தியா அதுவரை பிடித்துவைத்திருந்த பல காஷ்மீரி தீவிரவாதிகளை (நான்கு) விடுதலை செய்ய உபயோகித்துக் கொண்டார் முஃப்தி. அவருக்கு இருந்த தீவிரவாதி பாசத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் மதத்தைக் குறித்து, அவர்களின் மதக் கொள்கைகளைக் குறித்து, தீவிரவாதக் கொள்கைகள் குறித்து அவர்களுக்கு இருக்கும் பிடிமானத்தைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இங்கு நான் வலியுறுத்துவது.
இது சாதாரண விஷயமில்லை. அதுபோலவே காஷ்மீரைச் சேர்ந்த “செக்குலர்” காஷ்மீரியான குலாம் நபி ஆசாத்தைக் குறித்தும் இங்கு கூற வேண்டும்.
திடீரென அவரது வீட்டிலும் ஒரு உறவுக்காரப் பெண் இதேநேரத்தில் திடீரெனெ காணாமல் போய்விட்டாள்! உடனடியாக முஃப்தி 27 காஷ்மீர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய, சாயங்காலம் அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள்! எவ்வளவு பெரிய அதிசயம்!!
இவர்களின் துல்லியமான திட்டமிடல் காரணமாக, ஒன்றின் பின் ஒன்றாக இடைவெளியில்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் காஷ்மீரில் நடந்து கொண்டே இருந்தன.
குலாம் நபிக்கு அடுத்து புரெஃபஸர் 'சைஃபுதின் சோஸ்' இன் உறவுக்காரப் பெண்ணும் “திடீரென” காணாமல் போய்விட்டாள்! அவர் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அந்த முஸ்லீம் காஷ்மீரிப் பெண்ணுக்கு பதிலாக ஏழு தீவிரவாதிகளை விடுதலை செய்தார் முஃப்தி. மந்திரம் போட்டது போல அந்தப் பெண்ணும் சாயந்தரமே வீடு வந்துவிட்டாள்!! இவை அனைத்தும் நடந்து விட்ட வரலாறு.
நண்பர்களே, மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த காஷ்மீர் தீவிரவாதத்தை மிகவும் உக்கிரமாக்கி, பல வெளிநாட்டுத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து பயங்கரவாதம் செய்வதற்கு வழிகாட்டியவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது முஸ்லிம் உள்துறை அமைச்சரான முஃப்தி முகமது சையதுதான் என நான் உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன்.
அவருக்குப் பின்னர்தான் காஷ்மீரில் தீவிரவாதம் மிக உச்ச நிலையை எட்டியது.
மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்களைக் குறித்து ஏகப்பட்ட சப்தமெழுப்பின இந்திய ஊடகங்கள். உங்களுக்குத் தெரியும்.
அவர் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு அளவில்லை. அவருக்கு அமெரிக்க விசா தரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு அவர் மீது வெறுப்பினைக் கொட்டின எதிர்க்கட்சிகள்.
அதேசமயம் இந்தியக் குடிமக்களான காஷ்மீரி பண்டிட்கள் அவர்களின் சொந்த இடத்திலிருந்து அகதிகளாக விரட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு கதறி அழுவதைக் குறித்து அதே ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், இந்த தேசமும் கவலைப் படவில்லை.
நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த காஷ்மீரி பண்டிட்கள் தங்களின் உடமைகளை இழந்து தில்லியின் பிளாட்பாரங்களில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்ததை ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. இன்றுவரை அதற்கான ஊர்வலங்கள் நடக்கவில்லை. கண்டனங்கள் தெரிவிக்கப் படவில்லை.
அதேசமயம், ஒரு விவசாயின் வாழ்வாதாரமான மாட்டைத் திருடித் தின்ற அக்லாக் என்கிற முஸ்லிமையோ அல்லது வேறொரு முஸ்லிமையோ யாரேனும் கொன்றுவிட்டால் இந்த தேசத்தில் எழுப்பப்பட்ட கூக்குரல்களை நீங்கள் கேட்டிருக்கலாம். இவையெல்லாம் இந்தியா போன்றதொரு பெரிய தேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கிற சம்பவங்கள்.
ஆனால் அந்தச் சம்பவங்கள் பெரிதுபடுத்தப் பட்டன. அதற்காக இந்த தேசத்தின் பிரதம மந்திரி மன்னிப்புக் கேட்கிறதொரு சூழலை இங்கு உருவாக்கினார்கள்.
இந்திய சுப்ரம் கோர்ட் “இந்தப் படுகொலைகளை (mob lynching) ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்திய அரசாங்கம் உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூக்குரலிட்டது.
இந்த தேசத்தில், இந்திரா காந்தி மரணத்திற்குப் பின்னர், புது தில்லியில், பிரதம மந்திரி, லுட்டியன்கள், சுப்ரீம் கோர்ட் போன்றவை இருக்கும் இதே புதுதில்லியில் 3500 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
சாலைகளில் சீக்கியர்களை ஓடவிட்டுக் கொன்றார்கள். கழுத்தில் டயர்களை மாட்டி எரித்துக் கொலை செய்தார்கள். சீக்கியக் குழந்தைகளை உயரத்தில் தூக்கி வீசிக் கொன்றார்கள். கொலை காரர்களுக்கு அஞ்சி பெட்டிக்குள் ஒளிந்த சீக்கியர்களை அந்தப் பெட்டியை எரித்துக் கொன்றார்கள்.
சகோதரர்களே, இந்த தேசத்தில் நடந்த முதலாவது mob lynching அதுதான். அதனைக் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்றுவரை ஏதேனும் சொல்லியிருக்கிறதா? இல்லை. ஏறக்குறைய ஐந்தரை இலட்சம் காஷ்மீரி பண்டிட்கள் முஸ்லிம்களால் அடித்து விரட்டப்பட்டது கூட சுப்ரீம் கோர்ட்டின் பார்வையில் ஒன்றுமேயில்லை.
ஆனால் அதே சுப்ரீம் கோர்ட் இந்திய ராணுவம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை சொல்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன், பாகிஸ்தானிய ராணுவத்துடனும் போராடிக் கொண்டிருக்கும் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து காயப்படுத்தும் காஷ்மீரிகளைத் திருப்பித் தாக்கக் கூடாது என்று அவர்களுக்கு டைரக்‌ஷன் கொடுக்கிறது இந்திய சுப்ரீம் கோர்ட்!
அதாகப்பட்டது கல்லெறிபவர்களைச் சுடக்கூடாதாம். அவர்களைச் சுடுவதென்றால் அவர்கள் மீது ப்ளாஸ்டிக் புல்லட்டுகள் உபயோகிக்க வேண்டுமாம். சுப்ரீம் கோர்ட் சொல்கிறது.
தீவிரவாதியுடன் சண்டை செய்கிற ராணுவத்தினன் அவனது துப்பாக்கிக் குண்டைக் கழற்றி வைத்துவிட்டு ப்ளாஸ்டிக் குண்டைப் போட்டு கல்லெறிபவர்கள் மீது சுடவேண்டுமாம்.
அப்படிச் செய்வது சாத்தியமில்லை என்று சொன்னால் கல்லெறிபவர்கள் மீது சுடுதண்ணீரை ஊற்றச் சொன்னது சுப்ரீம் கோர்ட்.
இந்திய ராணுவத்தினன் ஒவ்வொருவனும் துப்பாக்கியுடன் சுடுதண்ணீரையும் தூக்கிக் கொண்டு திரியவேண்டுமாம். இந்திய சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்துகிறது!
(முதல் ஏழு நிமிடங்களின் மொழிபெயர்ப்பு இது…)
வழக்கம் போல கூட்டம் கூடி முஸ்லிம்கள் நடத்தும் Citizens Amendment Act (CAA) எதிர்ப்பு என்கிற கோமாளித்தனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் ஒருத்தனுக்காவது இந்தச் சட்டம் குறித்துத் தெரியுமா என்கிற சந்தேகமே மேலிடுகிறது. அறிவுக்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தமில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். அல்லாவின் இஸ்லாமில் அறிவு இருக்கும்; முல்லாவின் இஸ்லாமில் மூடத்தனம்தானே இருக்கும்?
அதில் சில வீடியோக்கள் அச்சமூட்டுபவை. “தேரே மேரே ரிஷ்த்தா க்யா? லா இல்லாஹா இல்லல்லா” (உனக்கும் எனக்கும் என்ன உறவு. அல்லாவே பெரியவன்) போன்ற கோஷங்கள் இந்திய தேசப் பிரிவினையின்போது எழுப்பப்பட்டவை. அதே கோஷம் மீண்டும் எழுப்பபடுவது இஸ்லாமிய சமூகத்திற்குப் பெரும் சேதத்தையே விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவும், ஹிந்துக்களும் வலிகளைத் தாங்கும் மனவலிமை உடையவர்கள்.
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

யாரிவர் என்று தெரியாது. இதற்குமுன் இவர் எழுதிய எந்தப் பகிர்வையும் வாசித்ததில்லை. ஆனாலும், VP சிங் இந்திய அரசியலுக்குச் செய்த /விளைவித்த சேதாரம் மிகப்பெரிது. கிடைக்கும் பழைய தகவல்கள், நினைவுகளில் இருந்து இந்தச் செய்தியின் உண்மை என்னவென்று பார்க்க வேண்டும் என்ற தகிப்பை உண்டாக்கியிருக்கிற பகிர்வு என்பது மட்டும் இப்போதைக்கு.

மீண்டும் சந்திப்போம்.          

#1180 ஒரு புதன்கிழமை! ரஜனிகாந்த்! உதயநிதி! பின்னே அரசியல்!

துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜனிகாந்த் ஆரம்பித்து வைத்த சர்ச்சையை அப்படியே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்னும் கொஞ்சம் பரபரப்பாக்கினார். அதை மறக்கடிக்க பிரசாந்த் கிஷோருடன் திமுக என்று பரபரப்பு ஓய்வதற்கு முன்னால், மறுபடியும் ரஜனிகாந்த் கிட்டத்தட்ட தன்னுடைய அரசியல் நிலைபாடு என்ன என்பதை வெறும் மூன்றே  நிமிடம் பேசியிருப்பது அரசியல் களத்தை இன்னும் கொஞ்சம் சூடேற்றியிருக்கிறது.

   
மூன்றுநிமிடத்துக்குள் 14 தகவல்களைச் சொல்லிவிட முடியுமா? புதியதலைமுறை count எண்ணிச் சொல்லி இருப்பது கொஞ்சம் சுவாரசியம்! கொஞ்சம் முழுதாகப் பார்க்க இன்னொரு சுட்டி. லயோலா கல்லூரி வாசலில் CAAவுக்கு எதிராகக் கையெழுத்து வாங்கும் உதயநிதி கூட உடனடியாகக் கருத்து சொல்லிவிட்டார்! அது கூட ஒரு நிமிடத்துக்குள்ளாகத் தான்!


ரஜனிகாந்த் இன்னமும் நடிகராகத்தான் இருக்கிறார். அவருக்கு அரசியல் இன்னமும் புரியவில்லை.கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரட்டும் அப்புறம் பதில் சொல்லலாம் என்று அதே கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி ஒரு இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருப்பதான பேச்சு எதற்காக?


கமல் காசர் நடத்தும் மக்கள் நீதி மய்யம் கடை இன்னும் இருக்கிறது என்பதை மறந்துவிட்டோமா? ஆமாம் ஐயா நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்கிற கவிஞர் சினேகன் பேச்சு. சும்மா 24 நிமிடம் தான்! என்ன சொல்கிறார் என்று கேட்டுத்தான் பாருங்களேன்!


அதென்னவோ கோலாகல ஸ்ரீனிவாஸ், ரவீந்திரன் துரைசாமி உட்படப் பல அரசியல் விமரிசகர்களும், ரஜனிகாந்தை எதிர்கொள்வதற்காகத்தான் திமுக தலீவர் இசுடாலின் பிரசாந்த் கிஷோருடைய IPAC நிறுவனத்தோடு கைகோர்த்திருக்கிறார் என்ற ஒரு புள்ளியில் ஒன்றுசேர்கிறார்கள். வீடியோ 32 நிமிடம்.
காங்கிரசின் கே எஸ் அழகிரியும் கார்த்தி சிதம்பரமும் வெறுத்துப்போயிருப்பது நன்றாகவே தெரிகிறது. 

  
பழ. கருப்பையா அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டு இருந்த நிலையில் கூட காங்கிரஸ், கழகங்களுடைய கொள்கை,யோக்கியதை இன்னதுதான் என்று சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே  சொல்லிவிட்டார்.

அப்புறமென்ன? 😂😂  

மீண்டும் சந்திப்போம்.   

ஒரு அஞ்சலி! சில நினைவுகள்!

பொதுவாக அஞ்சலிப் பதிவுகள் எழுதுகிற வழக்கமான நடைமுறை எனக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. ஆனால் எப்போதாவது ஒருசில விதிவிலக்குகளும் இருந்தே ஆகவேண்டும் இல்லையா? Take off மலையாளத் திரைப்படம் மாதிரி ஒருதலைப்பட்சமாக மலையாளி முதலமைச்சர், மலையாளி தூதரக அதிகாரி, ஒரு மலையாளி தொழிலதிபர், ஒரு மலையாளி நர்ஸ் என்று மலையாளிகள் கூட்டு மட்டுமே சிரியாவில்  ISIS பிடியில் சிக்கிய 46 மலையாளி நர்ஸ்களை மீட்டதாகக் கதை பண்ணிவிடக் கூடாதல்லவா?  வெளியுறவுத்துறை அமைச்சராகக் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாகப்பணியாற்றிய திருமதி ஸ்வராஜ் நேற்றிரவு டில்லியில் மாரடைப்பால் காலமான செய்தியைக் கேட்டதும் நினைவுக்கு வந்த விஷயம், இதற்கு முன்னால்  இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் எவரையும் விட, வெளிநாடுகளில் சிக்கலில் மாட்டிக் கொண்ட இந்தியர்களை மீட்பதில் அவர் காட்டிய அசாத்திய வேகம், திறமை இவைகள் தான்!     


प्रधान मंत्री जी - आपका हार्दिक अभिनन्दन. मैं अपने जीवन में इस दिन को देखने की प्रतीक्षा कर रही थी. ji - Thank you Prime Minister. Thank you very much. I was waiting to see this day in my lifetime.
7:23 PM · Aug 6, 2019Twitter Web App



गृह मंत्री श्री अमित शाह जी को उत्कृष्ट भाषण के लिए बहुत बहुत बधाई. I congratulate the Home Minister Shri ji for his outstanding performance in Rajya Sabha.
7:09 PM · Aug 5, 2019Twitter Web App


பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். 
இளம் வயதிலேயே அமைச்சரான பெண் என்ற பெருமைக்குரியவர், அதுமட்டுமில்லாமல் டெல்லியில் முதலமைச்சராக  பதவி வகித்தவர். அதைபோன்று  பாஜகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து இருக்கிறார். சட்ட துறையில் பட்டம் பயின்று இருக்கிறார். சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களுடைய கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளித்ததின் காரணமாக மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றியிருந்தார். 

வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வவ்போது ட்விட்டரில் கருத்துக்களையும், செய்திகளையும் பதிவிட்டு வந்தவர். 

சுஷ்மா வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட பல்வேறு இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வந்தவர். 

குறிப்பாக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 46 இந்திய செவிலியர்களை பத்திரமாக மீட்டு வர நடவடிக்கை மேற்கொண்டார். வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாக இருந்த இந்தியர்கள் மீட்பு, நைஜீரியாவில் சிக்கிய இந்திய மாலுமிகள் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக செய்துமுடித்தார் சுஷ்மா.என்று அஞ்சலி செய்வது NDTV தமிழ் செய்திகள்! அவர்களால் கூட மறைக்க அல்லது குறைத்துச் சொல்ல முடியாத விஷயங்களாக இருந்தது. மாநிலங்களவையில் திரு வெங்கையா நாயுடு சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு இரங்கல்  செய்தியை வாசித்து விட்டு ஓம் சாந்தி சாந்தி சாந்தி: என்று மனம் மொழி மெய் என மூன்றும் அமைதிபெறப் பிரார்த்தனை செய்த மாதிரி,  நாமும் அவரது ஆன்மா சாந்திபெற பிரார்த்தனை செய்வோம்!  

  கண்ணன் கழலிணை சேர சிந்தைவைப்போம்!  

ஒரு புதன் கிழமை! வழக்கம்போல அரசியல்!

எப்போதும் போல அரசியல் தான்! ஆனால் வழக்கமான அரசியல் தானா என்ற கேள்வியை, காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கிற ராகுல் ராஜினாமா நாடகம் எல்லை மீறிப்போய் ஆன்டி கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டே வருவதை சென்ற 29ஆம் தேதி ஒரு ட்வீட்டர் செய்தியில் தெளிவாகச் சொல்லியிருந்தார்! So Congress attempting Kamraj plan 2? But don’t forget, 2019 is not 1963, Rahul Gandhi is not Nehru/Indira, Modi is the opponent not a Morarji, and ‘new’ India is not an ancien regime.. will need more than mass resignations to revive grand old Party IMHO.


ஆக, காங்கிரஸ் ராஜினாமா தமாஷா எங்கே போய்க் கொண்டு இருக்கிறதாம்? செயல்படவே முடியாத வெறும் தலையாட்டிக் பொம்மைகளை காங்கிரஸ் காரிய கமிட்டியில் வைத்துக் கொண்டு யாரிடம் எப்படி என்னவிதமான பொறுப்பை எதிர்பார்ப்பதாம்? சோனியா வாரிசுகளுக்கு ஆமாம்சாமி போடுகிற காக்கைக் கூட்டம், கட்சியை எப்படி வளர்க்க முடியும்? ஆனாலும் கூட ஒரு காங்கிரஸ்கார கபில் சிபல் நடத்துகிற ஒரு சேனலில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதிகம் அனுபவித்த பர்க்கா தத் என்ன சொல்கிறார்? எப்படி விவாதிக்கிறார் என்று பார்க்கும்போதே ராஜ்தீப் சர்தேசாய் ட்வீட்டரில் சொன்ன இன்னொரு கமெண்ட் தான் உடனடி கவனத்துக்கு வருகிறது.

  • There is no one but to lead the Cong today , the Puducherry CM tells me.. So now Cong is Rahul, Rahul is Cong and he doesn’t want to lead: bahut confusion hai! என்று சொல்லி முகநூலில் இந்த 4 நிமிட வீடியோவுக்கு லிங்க் கொடுத்திருக்கிறார்!காங்கிரஸ்காரன் சொல்கிறானோ இல்லையோ, கூடிய சீக்கிரமே ஜனங்களே பொங்கியெழுந்து ராகுலிடம் எடத்தைக் காலிபண்ணு! காத்து வரட்டும் என்று சொல்வார்களா என்கிற சுகமான கற்பனை ஒன்று தொடர்ந்து வருகிறதே!


    அதே திரங்கா டிவியில் இன்னொரு சுவாரசியமான விவாதம்! அதே பர்க்கா தத்! கூட விவாதிப்பவர்கள் வேறு. இந்த முறை காஷ்மீர் விவகாரம் மீதானது. காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் ஆர்டிகிள் 370 தற்காலிகமானதுதான் என்று நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததில் இருந்து காஷ்மீர் பிரச்சினை மீதான ஊடகக் கவனம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. அரசியல் ஆர்வம் உள்ளவர்கள், காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன். முழுப்பிரச்சினையையும் இந்த வீடியோவில் பார்த்துப் புரிந்து கொள்ளமுடியாது. என்றாலும், விவரங்களைத் தேடித்தெரிந்துகொள்ள து ஒரு தொடக்கமாக இருக்கும்.

    370 ஐ விட ஆர்டிகிள் 35A எவ்வளவு மோசடியானது,
    நீக்கப்பட வேண்டியது என்பதற்கான காரணங்களை கூகிளில் தேடினாலே, நிறைய
    தகவல்கள் கிடைக்கும்!


    காஷ்மீரில் இந்திய அரசு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டியும் கூட அங்கே இருந்த அரசியல் சக்திகள் அந்தப்பணம் ஜனங்களுக்குப் போய்விடாமல், தங்கள் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டது ஒருபுறம். இன்னொருபுறம் பிரிவினைவாதிகள், பாகிஸ்தானிய கைக் கூலிகளுடன் சேர்ந்து கொண்டு ஒரு தனித்தீவாகவே ஜம்மு காஷ்மீரை வைத்திருந்ததான பழைய காங்கிரஸ் ஆட்சிக் கால கையாலாகாத நிலைமை இனிமேலும் தொடரமுடியாது என்று அமித் ஷாவின் அறிவிப்பு தெளிவுப்படச் சொல்லியிருக்கிறது.

    இது ஒரு நல்ல தொடக்கம். ஆனாலும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. அதைச் செய்வதற்கான உறுதியும், மனோபலமும் பாரதீய ஜனதா கட்சிக்கு இருப்பதற்கு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆதரவாக இருக்க வேண்டிய நேரம் இது. குறுகிய கட்சி அரசியல் செய்கிற விஷயமில்லை இது.

    இங்கே கொடுத்திருக்கிற காணொளிகள் மூன்றையும் பார்ப்பதற்கு சுமார் 2 மணிநேரம் தேவைப்படலாம். ஆனாலும் மிக முக்கியமான சப்ஜெக்ட் என்பதால் இது நேர விரையம் இல்லை, விஷயத்தை இரு வேறு கோணத்தில் பார்த்துப் புரிந்துகொள்ள மிக நல்லதொரு தொடக்கம்.

    மீண்டும் சந்திப்போம்
    uote Tweet