பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா? #சேகர்குப்தா #அரசியல்களம்

அதிமுக--பிஜேபி கூட்டணி எந்த லட்சணத்தில் இருக்கிறது?   இப்படி இன்னொரு வலைப்பக்கத்தில் நேற்று எழுதிய பதிவுக்கு நண்பர் நெல்லைத்தமிழன் ஒரு காட்டமான பின்னூட்டத்தை எழுதியிருந்தார். அவருக்காக சேகர் குப்தா  பிஜேபியின் கூட்டணிக் கட்சிகள் எதற்காக பிஜேபியுடன் வந்து ஒட்டிக் கொண்டன, எதற்காகக் கழன்று கொண்டன என்பதை அவரது பார்வையில் இந்த 26 நிமிட வீடியோவில் சொல்வதைப் பரிந்துரைக்கிறேன்.


NDA கூட்டணியில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்திருந்த கட்சிகளில் 19வதாக ஒரு ராஜஸ்தான் கட்சி NDA வில் இருந்து கழன்று கொண்டதை விரிவாகச் சொல்வதற்கு முன்னால் ரஜனிகாந்த் அரசியலுக்கு முழுக்குப் போட்டதை வாய் நிறையச் சிரிப்புடன் சொல்லி ஆரம்பிக்கிறார் சேகர் குப்தா.நவம்பர் மாதத்திலேயே இங்கே சார்ட் போட்டுச் சொன்னதைத்தான் சேகர் குப்தாவும் கொஞ்சம் காரணங்களோடு சொல்கிறார். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜக உமி, அதிமுக அரிசி. ஆனால் பாஜக தமிழகத் தலைவர், ஏதோ இது தேசியக் கூட்டணி போலவும், யார் முதலமைச்சர் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை அறிவிக்கும் என்று சொல்வது டூ டூ மச் இல்லையோ? முருகன் அவர்களின் பேச்சு எனக்கே கடுப்பாகிறது எனும்போது, போனாப் போகுதுன்னு ஆட்டத்தில் சேர்த்துக்கொண்ட அதிமுகவினருக்கு எப்படி இருக்கும்? அதிமுகவுக்கு பாஜக என்பது பெரும் சுமை, 8-10 சதவிகித ஓட்டிழப்பிற்குக் காரணமாக இருக்கும் கட்சி. பாஜக கூட்டணி இல்லாவிடில் குறைந்தது ஐந்து எம்பிக்களாவது அதிமுகவிற்கு இருந்திருக்கும்.

கேபி முனுசாமி பேசியது சரிதான். முருகன் அவர்கள் அதீதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிட்டு பாஜக, 2 சதவிகித வாக்குகளுக்கும் அதிகம் இருக்கும் கட்சி என நிரூபிக்கட்டும். நெல்லைத்தமிழன் எழுதியது இது . இதற்கான பதிலை இந்தப்பதிவின் முதல்வரியிலேயே இருக்கும் இணைப்பைக் க்ளிக் செய்து வாசிக்கலாம்.

NDA கூட்டணி பற்றிப் பேசுவதற்கு முன்னால், சோனியா இன்னமும் தலைமை தாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லப் படுகிற UPA க்கிய முற்போக்குக் கூட்டணி யோக்கியதை என்னவாக இருக்கிறது என்பதையும் சேர்த்தே பார்த்து விடலாமா?


ஐமுகூ சேர்பெர்சனாக சரத் பவார் ஒன்றும் தவம் கிடைக்கவில்லை. அந்த வெற்று நாற்காலியால் அவருக்கு பைசா பிரயோசனமில்லை. ஆனால் சிவசேனா தரப்பிலிருந்து, எதிர்க்கட்சியாக இருப்பதற்கே தகுதியில்லாத நிலையில் சோனியா காங்கிரஸ் இருக்கும் நிலையில், பிஜேபிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக சரத் பவார் மட்டுமே இருக்க முடியும் என்று வலுவான வாதம் முன்னெடுக்கப்பட்டது கூட இருபது நாட்களுக்கு முன்னால் தான்! சோனியா தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சி அனேகமாக நாசமாகப்போய்விட்டது.2004 இலிருந்து சோனியா அலங்கரித்த ஐமுகூ சேர்பெர்சன் பதவியும் கூட எவரும் சீந்த விரும்பாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

காங்கிரசோடு சேர்ந்து நின்றாலே பீடை ஒட்டிக் கொள்ளும் என்று சொல்லாமல் கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் ஒதுங்கி நிற்கிற அளவுக்குக் காங்கிரசின் இன்றைய நிலைமை இருக்கிறது.

NDA ஆரம்பமானது 1998 இல். காங்கிரசுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியாக அன்று தொடங்கப்பட்டது போன்ற நிலைமை இன்றிருக்கிறதா? பிஜேபியை மதவாதக்கட்சியாக, தீண்டத்தகாத ஒன்றாகப்  பூச்சாண்டி காண்பித்த செகுலர் போலிகளின் காலம் முடிந்தே போய்விட்டது. வடவர்கள் கட்சி என்று சொல்லப்பட்ட நிலையும் மாறிவிட்டது. இந்தியா முழுதும் பரந்து விரியும் ஆலமரமாக பிஜேபி இன்று தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து நிற்பதில், துண்டு துக்காணிக் கட்சிகள் ஒட்டிக் கொடிருந்தால் என்ன? உதிர்ந்து போனால் என்ன? பிஜேபியின் இன்றைய தலைமை இதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவுமில்லை, சேகர் குப்தா போல, என்னமோ பெரிய அரசியல் ரகசியத்தை உடைத்துவிட்டதுபோல பொதுவெளியில் விவாதிப்பதுமில்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஏதோ ஒரு செயல் திட்டம், காலவரையறை என்று இருக்கக் கூடும் நான் அறிந்த வரை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதுமாதிரி ஒரு strategy, tactics என்று ஏட்டளவிலாவது இருந்ததுண்டு ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவுமே இப்போது புரட்சி, சோஷலிசம், என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனால், பிஜேபியினர் மட்டும் ஒரு இலக்கு, அதை அடைவதற்கான செயல்திட்டம் என வகுப்பதோடு அதை நடைமுறைப்படுத்த வருடம் முழுவதும் கடுமையாக உழைத்து வருவது கண்கூடாகவே தெரிகிறது.

இங்கே தமிழகத்தில் காலூன்ற பிஜேபி என்னமோ ரஜனி ஒருவரைத்தான்  மலைபோல நம்பியிருந்தது போலவும், அவர் வீட்டுக்குள் சுருண்டு படுத்துக் கொண்டதும், அது கனவாகப் போனது போலவும் இங்கே நிறையப்பேர் நமட்டுச் சிரிப்புடன் அலைவது சரிதானா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்           .  

   

யாராவது #மண்குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்குவார்களா? #ரஜனிஅரசியல்

ஒரு இரசிகனாக உங்கள் முடிவை வரவேற்கிறேன். இந்த அறிவிப்பால் உங்களுடைய 40 ஆண்டுகால குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது. மகிழ்ச்சி! என்று ரஜனிகாந்த் ட்வீட்டரில் வெளியிட்டிருக்கிற மூன்றுபக்க அறிக்கை ட்வீட்டுக்கு முதல் கமென்ட்டாக போட்டிருப்பவர் ISR செல்வகுமார்.



அந்த 40 ஆண்டுகள் என்பதில் தான் கொஞ்சம் கணக்கு இடிக்கிறது பாட்ஷா படத்தின் 100வதுநாள் விழாவில் அவர் பேசியது ஜெயலலிதாவை உரசுகிற மாதிரி இருந்தது கொஞ்சம் பழைய கதையைச் சுருக்கமாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.


1996 இல் நேரடியாகவே ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் பேசினார் ரஜனி அதன் பலனை மாநிலத்தில் திமுகவும், GK மூப்பனாரும் அடுத்து பானாசீனாவும் அறுவடை செய்து கொண்டார்கள். ஆக ரஜனிகாந்த் அரசியல் வாய்ஸ் கொடுத்தது அவருக்குப் பயன்படவே இல்லை . அதனால் தானோ என்னவோ அவர் அப்புறம் வாய்ஸ் கொடுக்கவே இல்லை. ஆனாலும் அரசியலுக்கு வரப்போவதாக, ஓவ்வொரு படரிலீஸுக்கு முன்னால் ஒரு பரபரப்பு கிளம்பும்! அப்புறம் அடங்கிவிடும். இப்போதும் கூட பெரிய வித்தியாசமில்லை.





ரஜனிகாந்த் அரசியல் ப்ரவேசத்தைப் பற்றி எனக்குப் பெரிதான அபிப்பிராயம் எப்போதுமே இருந்ததில்லை. 



சிவகங்கை சின்னத்துரும்புகள் கூட இளப்பம் செய்கிற மாதிரியாகி விட்டதே!

மீண்டும் சந்திப்போம்.  

இட்லி வடை பொங்கல்! #72 #சேகர்குப்தா #கம்யூனிஸ்ட்கட்சிகள் #ஜம்முகாஷ்மீர்

சேகர் குப்தா அனுபவமுள்ள பத்திரிகையாளர் என்பதில் எனக்கு சந்தேகமே இருந்ததில்லை. அவருடைய ஒருபக்க சார்பு கூடத் தெரிந்ததுதான் என்றாலும் 360 டிகிரியில் விஷயங்களைப் பார்ப்பதற்கு அவர் என்ன சொல்கிறார், என்ன எழுதுகிறார் என்பதைக் கவனிக்கத் தவறியதும் இல்லை பிரதமர் நரேந்திர மோடி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அமித் ஷா மேற்கு வங்கத்தில் CAA பற்றிக் கொஞ்சம் மென்மையாகப் பேசினார். அவை பற்றி சேகர் குப்தாவுக்கு எப்படித் தோன்றுகிறதாம்?


Tactics, Tactical Retreat  என்பதெல்லாம்  கொஞ்சம் ஆழமான பொருள் கொண்டவை. சேகர் குப்தா அத்தனை ஆழமாகவெல்லாம் யோசித்து இந்த 15 நிமிட வீடியோவில் பேசிய மாதிரி எனக்குத் தோன்றவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒருவாரத்தில் மட்டும்  கோபத்தில் இருக்கிற இஸ்லாமியர்கள்,  விவசாயிகள் என்று இரு முக்கியமான தரப்பினருடன் ஒரு சுமுகமான அணுகுமுறையைக் கையாளத் தொடங்கியிருக்கிறார் என்பது போல ஆரம்பிக்கிறார் எதற்கு? இதர கட்சிகள் போல வெறும் வாக்குகளுக்காகவா? பெரும்பாலான இஸ்லாமியர், பஞ்சாப் விவசாயிகள் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க விரும்புவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே போல பிஜேபி / நரேந்திர மோடி இவர்களது ஓட்டுக்காக ஏங்கித்தவிக்கவுமில்லை. சேகர் குப்தாவே இதையும் ஒப்புக்கொள்கிறார் ஆனாலும்  Tactical Retreat  என்று சொல்வானேன்? 

Everybody likes awards, honours and adulation. Yet, whatever these mean to Modi personally, more important is that this was part of his very significant reaching out to Muslim, especially Arab, countries. This was a deft outflanking of Pakistan to its West. What he tried to the East, with Xi Jinping, failed.  

Now, if the move with China failed — and at this point we have troops eyeball-to-eyeball and Pakistan has more or less ‘progressed’ to becoming a Chinese client state or protectorate — it is because Xi Jinping saw more value in that. The ploy with the Arab world, meanwhile, has worked so far. Saudi Arabia and the UAE, Pakistan’s closest friends, patrons and moneybags, have drifted far away. So far, that Saudis are demanding their loans back, China plays the white knight to rescue Pakistan, and the UAE has stopped issuing visas to Pakistani workers. சேகர் குப்தா எழுதியது முழுமையாக இங்கே.  

வெளியுறவுகளை மேம்படுத்திக் கொள்ள உள்நாட்டில் சமரசம் செய்து கொள்கிறார் அதற்காக தந்திரமாக ஜகா வாங்குகிறார் என்று சொல்வது சரிதானா?


The United Front … is an important magic weapon for strengthening the party’s ruling position … and an important magic weapon for realising the China Dream of the Great Rejuvenation of the Chinese Nation.

— Chinese President Xi Jinping, Central United Front Work Conference, 2015

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே உண்டான நடைமுறைத் தந்திரங்களில் முக்கியமானது ஐக்கிய முன்னணித் தந்திரம்  1935 ஏழாவது  கம்யூனிஸ்ட் அகிலத்தில் ஜார்ஜ் டிமிட்ரோவ்  சமர்ப்பித்த கோட்பாடு இது கம்யூனிஸ்ட் கட்சியினர்  எப்படி பிரதானமான எதிரிக்கு எதிராக  இதர எதிரிகளுள் ஊடுருவி அல்லது கூட்டணி அமைத்துப் போராடவேண்டும் என்பதை விளக்குகிற 247 பக்கப் புத்தகமாகத் தமிழிலேயே மேலே நீல நிறத்தில் ஐக்கிய முன்னணித் தந்திரம் என்ற வார்த்தையைக் க்ளிக் செய்தால் தரவிறக்கம் செய்யக் கிடைக்கும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஜார்ஜ் டிமிட்ரோவை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது என்பதை ப்ரம்ம செலானியின் இந்த ட்வீட்டர் செய்தி சொல்கிறது.

China possesses what no other country has — surveillance, censorship and propaganda systems to control or construct a narrative. China’s initial coronavirus coverup relied on these systems, resulting in a local outbreak in Wuhan turning into a still-raging global health calamity.

8:07 PM · Dec 24, 2020Twitter Web App

இதெல்லாம் ஜெயித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே சாத்தியம்! இந்தியா, நேபாளம் மாதிரியான நாடுகளில் அரசுக்கு எதிராகக் கலகம் செய்துகொண்டே இருப்பார்கள்.தப்பித்தவறி ஏதோ ஒன்றிரண்டு மாநிலங்களில் அல்லது சிறிய பிரதேசத்தில் ஜெயித்து விட்டால், தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வதோடு கட்சியையும் உடைப்பார்கள், குறுங்குழுக்களாக சிதறுண்டு போவார்கள்! 

எதனால்? கடைசி வரை கலகம் .என்றே செயல்படுவதில் ஏற்படுகிற இறுதி முடிவு அது! போராடுவோம் போராடுவோம் இறுதிவரை போராடுவோம் என்று கோஷமிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கதி என்னவாயிற்றோ அதுவே  நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இப்போது  நடந்து கொண்டிருப்பதில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை விட சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகம் வலிக்கிறதாம்! நேபாளத்துக்கான சீனதூதர் முயற்சிகள் பலிக்காமல் மேலிடத்துக்கு SOS அனுப்பியதில் நாளை ஞாயிறு அன்று சீனா 4 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அனுப்புகிறது. It is, however, not clear yet if Prime Minister KP Sharma Oli, who had earlier turned down requests from Ambassador Hou to meet her, would meet the Chinese delegation. Chances of PM Oli, who has taken a staunch Nepali nationalist role, meeting the visiting delegation are slim. He has already conveyed to Ambassador Hou that China should not interfere in internal affairs of Nepal since the legal challenge to the decision to dissolve Parliament is already before the Supreme Court. என்று இங்கே சொல்கிறார்கள்.   

China is openly interfering in the internal affairs of Nepal, its new tool against India. Concerned by a vertical split in Nepal's ruling communist party, it is sending a vice minister-led delegation tomorrow. This comes after its defense minister's visit.
Leading a four-member delegation, Guo Yezhou, vice-minister of the International Department of the Communist Party of China, is arriving on Sunday.

சீனாவுக்கு நேபாளம், பூடான் போன்ற மிகச்சிறிய நாடுகள் மீது ஏன் இத்தனை கரிசனம்? இங்கே என்ன சொன்னார்கள் என்பதையும் கொஞ்சம் பார்க்கலாமே! 

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் PDP மெஹபூபாவின் கட்சி குப்கார் கூட்டணியில் இருந்தும் கூட மிகக் குறைவான வாக்குகள், குறைவான இடங்கள் மட்டுமே பெற்றிருப்பதில், அடுத்துவரும் தேர்தல், வரையாவது தாக்குப்பிடிக்க முடியாது என உறுதியாகிவிட்டதோ?  ஒமர் அப்துல்லாவின் NC கட்சி ஜம்மு பகுதியில் 26 இடங்களில் ஜெயித்திருப்பதைக் கழித்து விட்டுப் பார்த்தால் காஷ்மீர்  பகுதியில் 41 இடங்கள் மட்டுமே ஜெயித்திருக்கிறது. சுயேட்சைகள் அதைவிடக் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது ஜம்மு காஷ்மீர் மக்கள் மனதில் ஏற்பட்டு வரும் மாறுதலுக்கான அடையாளம் என்பதை ஏனோ நம்மூர் ஊடகங்களுக்கு  உறைக்கவே மாட்டேனென்கிறதே! செய்தி இங்கே     

இந்தியாவில் ஜனநாயகமே இல்லை என்று வெறுமனே கூவிக் கொண்டிருக்கிற ராகுல் காண்டிக்கு பதிலடியாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட  உள்ளாட்சித்தேர்தல் நடத்தாமலிருக்கிற பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் அரசின் ஜனநாயகத்தை பிரதமர் நினைவுபடுத்தி இருப்பது சரிதானே!

மீண்டும் சந்திப்போம் 

மீண்டும் திருமாவளவன் சர்ச்சை! ஏன் #விசிக #பாமக #இடதுசாரிகள் போன்ற உதிரிகளை நிராகரிக்கவேண்டும்?

விசிகவின்  தலைவர் திருமாவளவன் மீண்டும் மீண்டும் ஹிந்து மதக் கோட்பாடுகளை மனம்போனபோக்கில் திரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அடிக்கடி அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்துவார். ஆனால் இஸ்லாம், கிறித்தவம் பற்றி அம்பேத்கர் என்னமாதிரி அபிப்பிராயம் கொண்டிருந்தார் என்பதைப் பேசவே மாட்டார். ஈவெரா படத்தைப் பயன்படுத்துவார். ஆனால் ஈவெராவின் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகிற    #வெங்காயநாத்திகம் கூட அவரது பேச்சில் இருக்காது. 




இந்த 43 நிமிட வீடியோவில், திருமா எத்தனை விஷயங்களை தெரிந்தே திரித்துப் பேசுகிறார் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? கிறிஸ்தவப் பெருவிழா நடத்துகிறார், கிறித்தவத்தை தூக்கிப் பிடிக்கிறார் என்பதா விஷயம்? இல்லை! ஹிந்து மதத்தின் மீது விஷத்தைக் கக்குகிறார். நிறையத் திரித்துப் பேசுகிறார்.

இவரை மாதிரி இஸ்லாமும் கிறித்தவமும்  பேசுகிற சமத்துவமும் சகோதரத்துவமும் நடைமுறையில் காணோமே, பதில் சொல்வாரா? படைக்கப்பட்ட அனைத்தும் சமமாகவா இருக்கிறது? கிருஷ்ணன் பிறந்த இந்த பாரதத்தை விடுங்கள், இவர் கொண்டாடுகிற இஸ்லாமிய நாடுகளில் எதிலாவது உயர்வு தாழ்ச்சி இல்லாத சமத்துவ சமூகம் இருக்கிறதா?

இங்கே கிறித்தவம் மனிதநேயம் உள்ளது, ஜெப ஊழியங்கள் மதம் மாற்றுவதற்காக அல்ல என்கிறாரே, ஜெப ஊழியம் என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகளில் வருமானம் ஈட்டுகிற தொழில்தான் என்பது தெரியாதா? DGS தினகரன் குடும்பம் ஜெபகோபுரம். இயேசு அழைக்கிறார் என்று கூவிக்கூவியே பலநூறு கோடிகள் ஆண்டுவருமானம் பெறுகிற கதை தெரியுமா தெரியாதா?காருண்யம் பெயரளவுக்குத்தான்! எல்லாம் காசுபார்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிற வெற்று வார்த்தைகள் தான் என்பது திருமா என்கிற தலித்தீயம் பேசுகிற வியாபாரிக்குத் தெரியாதா?

அவர் பேசுவதில் உண்மை இருந்தால் இஸ்லாமும் கிறித்தவமும் நடைமுறையில் சமத்துவம், சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்கின்றன என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தெளிவுபடுத்தி விட்டுப் போக வேண்டியது தானே! அதைச் செய்யாமல் கிருஷ்ணன் தான் மனிதர்களில் சாதிப்பாகுபாடுகளை ஏற்படுத்தினார் என்று புரளி பேசுவானேன்? சைவர்கள் கிருஷ்ணனை, ஏற்றுக் கொண்டதில்லை என்கிறாரே, அதற்கென்ன ஆதாரம் காட்ட முடிந்ததாம்?

மதன் டயரியில் நவம்பரிலேயே திருமாவைக் குருமா வைத்து விட்டார் வீடியோ 22 நிமிடம் தான்!  

ஆனால் திருமா மாதிரியான உதிரிக் கட்சிகளின் உண்மையான அஜெண்டாவே வேறு! நரேந்திர மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, மோடி மீதான வெறுப்பை விதைப்பதற்காக, சிறுபான்மை இனத்தவர் வாக்குகளைப் பெறுவதற்காக, ஹிந்து மதத்தைப் பழித்துப் பேசவேண்டும்! தலித் மக்களின் ஏகோபித்த தலைவராகத் தன்னை project செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்! தலித் மக்களில் மிகக்குறைந்த சதவீதம் மட்டுமே இவரை ஆதரிக்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்! உங்களுக்குத் தெரியாதா என்ன?!

பேச்சு வியாபாரிகளாக மட்டுமே அரசியல்களத்தில் உலாவரும் உதிரிக்கட்சிகளில், விசிக, மதிமுக, பாமக, இடதுசாரிகள் இன்னும் கமல் சீமான் ரஜனி விஜய் என்று கிளம்பியிருக்கும் புற்றீசல்களை தேர்தல்களில் முழுதாக நிராகரிப்பதிலிருந்தே நம்முடைய ஜனநாயகக் கடமை தொடங்குகிறது. 

இதில் காங்கிரசை விட்டுவிட்டேனே என்று அதிசயப்படுகிறீர்களா? காங்கிரசும் கூட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், இங்கே தமிழகத்திலும்  உதிரிதான்! ஆனால் என்ன, மேலே சொன்ன உதிரிகளை விட இன்றும் கூட 5% முதல் 6% வரை வாக்குகள் பெற முடிகிற கட்சி ( உண்மை நிலவரம் தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே தெரியும்! ஆனால் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் அந்தக் கட்சியில் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்!

ஜனநாயகம் என்பது தகுதியில்லாதவர்களைக் கழித்துக் கட்டுவதில் ஆரம்பித்து, மிஞ்சுகிறவர்களில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது!

ஜனநாயகக் கடமையைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

மீண்டும் சந்திப்போம்.   

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்! #மாற்றத்துக்கானதருணம்இது

கடந்த எழுபது ஆண்டுகளில் ஆளும் கட்சிகளாக இருந்த காங்கிரசோ, ஒமர் அப்துல்லா (NC) மெஹபூபா முப்தி (PDP) கட்சிகளோ நடத்தத் துணியாத உள்ளாட்சித் தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்து, முடிவுகளும் வெளியாகி விட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை இப்படித் தானென்று இதுவரை சொல்லப்பட்டு வந்த பொய்களை இந்தத் தேர்தல் முடிவுகள் நொறுக்கித்தள்ளி விட்டன என்று சொன்னால் மிகையல்ல. 


மெஹபூபா முக்தியுடன் பிஜேபி கூட்டணி வைத்திருந்த போது, ஹிந்துக்கள் அதிகமாக இ.ருந்த ஜம்மு பகுதியில் பிஜேபி மெஜாரிட்டியாகவும், இஸ்லாமியர்கள் அதிகம் இருந்த காஷ்மீர் பகுதியில் மெஹபூபாவின் PDP கட்சி அதிக இடங்களில் வென்ற மாதிரித்தான் இப்போது உள்ளாட்சித் தேர்தல்களிலும் நடந்திருக்கிறது என்று மேலோட்டமாகச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை மேலே 14 நிமிட வீடியோவில் பார்க்கலாம். 

இது இன்று காலை 9.30 மணி நிலவரமாக ANI செய்தி நிறுவனம் ட்வீட்டரில் வெளியிட்ட செய்தி. 

பிஜேபி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. குப்கார் கூட்டணி என்றழைக்கப்படும் ஒமர் அப்துல்லா (NC)  தலைமையிலான கூட்டணியில் தேசிய மாநாடும், மெஹபூபாவின் PDP கட்சியும் பிரதானமானவை. வேறு சில உள்ளூர் உதிரிகளும் அடக்கம். மேலே ANI செய்திப் படி ஒமர் அப்துல்லா கட்சி காஷ்மீரில் கொஞ்சம் மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.மெஹபூபாவின் PDP அடுத்த தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி! சுயேட்சைகளாகக் களமிறங்கியிருக்கும் தனிநபர்கள் வெற்றிபெற்ற இடங்களில் பாதிகூட ஜெயிக்க முடியாத மெஹபூபா முப்தி, இன்னமும் வாய்கிழியத் தம்பட்டம் அடித்துக் கொள்வதை நிறுத்திக்கொள்ளவில்லை என்பது காஷ்மீர் அரசியலின் வினோதம்! பெரும் சோகம்!

Todays DDC results have made it clear that people of J&K voted en masse for thus rejecting the unconstitutional decision to abrogate Article 370. They have overwhelmingly supported which stands for restoration of J&Ks special status.

இது இன்று கடைசியாகக் கிடைத்த நிலவரம் 


278/280 available now for DDC elections J&K - PAGD at 110 (JKNC+PDP+PC+CPIM+JKPM) BJP - 75. Congress - 26. 50 independents, and 12 seats for the JKAP Counting for Drugmulla, Kupwara and Hajin-A, Bandipora remains on hold. !

2:49 PM · Dec 23, 2020Twitter Web App        

இதற்கும், மேலே மெஹபூபா பீற்றிக் கொண்டதற்கும் பொருத்தம் இருக்கிறதா? நீங்களே சொல்லுங்களேன்!

“Independent candidates have polled more votes than the Congress and the PDP. The same Mehbooba Mufti who’d refused to unfurl the Tricolour has got a befitting reply today,”  இப்படி பிஜேபியின் அனுராக் தாக்குர் கேட்டிருப்பதில், ஜம்மு காஷ்மீரில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது மிகத்தெளிவாகவே புலப்படுகிறது

#மாற்றத்துக்கானதருணம்இது