Showing posts with label இலவசங்கள் என்ற மாயை. Show all posts
Showing posts with label இலவசங்கள் என்ற மாயை. Show all posts

அரசியல் களம் இன்று! கவனத்தில் கொள்ள செய்திகள்!

முந்தைய மூன்று பதிவுகளில் காங்கிரஸ் பற்றிப் பேசும் போது எமெர்ஜென்சியைத் தொட்டும் எழுதியதில், சில மாற்றுக்கருத்துக்கள் பின்னூட்டத்தில் ஒரு பயனுள்ள  உரையாடலைத் தொடக்கி வைத்திருக்கின்றன. (சு)வாசிக்கப்போறேங்க தளத்திலும் இந்த உரையாடல் நடந்து கொண்டிருப்பதை  நண்பர்கள் கவனித்திருக்கலாம். இந்த உரையாடலில் வேறு யாராவது பங்கு கொள்ள முன்வருகிறார்களா என்று காத்திருக்கிறேன். கொஞ்சம் நீளமாக இருக்குமே என்று தயக்கமே வேண்டாம்! Guest Post ஆக வெளியிடவும் தயாராக இருக்கிறேன்!
இது மலைவிழுங்கி மம்தா பானெர்ஜி சாரதா குழும மோசடியைச் செய்தபிறகும், என்னமா பில்டப் கொடுக்கிறார் என்று வியந்து ஹிந்துநாளிதழில் பிப்ரவரி 6 ஆம் தேதி சுரேந்திரா வரைந்திருப்பது. இந்திரா காங்கிரஸ்  இவரைமாதிரி இன்னும் எத்தனை மழைவிழுங்கிகளை உருவாக்கி வைத்திருக்கிறது என்கிற ஒரு அம்சமே இந்திரா legacy என்னவென்பதை இன்றைய இளம்தலைமுறை புரிந்துகொள்ளப் போதுமானது என்றுதான் நான் நினைக்கிறேன்.நேரு பாரம்பரியம் இந்திரா ராஜீவ் சோனியா ராகுல் என்று குறுக்கிக் கொண்டே வந்து இன்றைக்கு பிரியங்கா என்றாகியிருப்பதில், ஒருமரத்தின் தன்மை இன்னது என்பது அதுகொடுக்கும் கனிகளால் அறியப்படும் என்கிற வசனமே மெய்ப்பிப்பதாக இருக்கிறது. 
இந்த தொலைக்காட்சி விவாதம், அரசியல்களம் எப்படி இன்றைக்கு தேர்தல்களத்தில் இன்னும் ஒரு தெளிவான நிலைக்கு வரவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. 
தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி என்றில்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் கிட்டத்தட்ட இதேமாதிரித் தான் என்கிற மாதிரி சொல்கிற  ஒரு செய்தி,

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.10 ஆயிரம்; மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ஸ்மார்ட்போன்: அரசே 3 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்யும்! ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என்கிறது ஹிந்து செய்தி 


நாடு முழுவதும் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் இந்தத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கும் மாநில அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இதுபோல மாநிலத்தில் உள்ள 94 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஸ்மார்ட் போன்களுக்கு 3 ஆண்டுகள் வரை அரசே ரீ சார்ஜ் செய்யும். மேலும், மாநில விவசாய மண்டலி ஏற்பாடு செய்யப்படும்.

இப்போது நம் முன்னால் இருக்கிற முக்கியமான கேள்வி இதுதான்! இலவசங்கள் என்கிற மாயையில் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கப்போகிறோமா?

அல்லது விழித்துக் கொள்ளப்போகிறோமா?     
      

புதிய ஜனநாயகம்! மாற்றம் ஒன்றே மாறாதது! சரிதானா?

இன்று காலை செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம்! இடையிடையே சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளையும் பார்த்துக் கொண்டே வந்ததில் கண்ணில் பட்ட ஒரு குட்டிக் கதை மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. ஹிட்லர் இறந்தபிறகு இந்த வீடியோவில் உள்ளதுபோல கிண்டல் செய்வதாகப் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம்!



Führerprinzip (leader principle) என ஒற்றைப்புள்ளியில் முடிகிற அதிகாரக் கட்டமைப்பை ஹிட்லர் உருவாக்க முடிவதற்கு முன் இருந்த ஒரு சபை நம்மூர் பார்லிமென்ட் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஒரு நாள் சபைக்கு ஹிட்லர் ஒரு கோழியுடன் வந்தாராம்! எதுவுமே பேசாமல் கோழியின்  இறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போட்டுக் கொண்டே வந்ததில் கோழி வலியால் துடித்தது. சபையில் இருந்தவர்கள் என்ன சொல்வது என்று  விழித்துக் கொண்டிருந்தபோது கடைசி இறகையும் பிய்த்து எறிந்தாகிவிட்டது கோழியைத் தரையில் வீசி எறிந்தார் ஹிட்லர். தன்னுடைய கோட் பைகளில் இருந்து தானியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இறைத்துக் கொண்டே நடந்தாராம்! சிறகுகள் பிய்க்கப்பட்ட கோழி வலியையும் மறந்து தத்தித்தத்தி தானியங்களைக் கொத்தித் தின்றபடியே ஹிட்லரின் காலடியில் வந்து விழுந்து கிடந்ததாம்! அப்போது ஹிட்லர் சபையைப் பார்த்து உலகப் பிரசித்தி பெற்ற இந்த வார்த்தைகளைச் சொன்னாராம்:

"ஜனநாயகநாடுகளில் வாழுகிற மக்கள் எல்லோருமே முடமான இந்தக் கோழியைப் போலத்தான்! ஆரம்பத்தில் அங்கே தலைவர்கள் மக்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து, திருடிக்கொள்வார்கள்; அப்புறம் நிவாரணம் என்று கொஞ்சம் கொடுத்து ஜனங்களுடைய நலம் விரும்பிகள் என்றாகி விடுவார்கள்!"   

#துக்ளக் வார இதழில் இப்படியெல்லாம் அட்டைப்படம் போடுவார்கள் என்று பயந்தோ மத்தியப்பிரதேசத்திலும் சத்திஸ்கரிலும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியேற்ற கையோடு விவசாயக் கடன்தள்ளுபடி உத்தரவில் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. இது இன்னும் 5 மாதங்களில் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான தூண்டில்புழு! இன்று செய்திகளில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசும் கடன் தள்ளுபடி அறிவித்திருக்கிறதாம்! புதுவிதமான ஜனநாயகம்  உருவாக்க முனைகிற இந்தப் போக்குக்கும் மேலே ஹிட்லர் கதைக்கும் உள்ள தொடர்பை விளங்கிக் கொள்ள முடிகிறதா?      


தூண்டிலில் புழுவைத்து வீசுகிறவன் மீன்கள் மீது இரக்கம் கொண்டா வீசுகிறான்? 

#இலவசங்கள் என்ற மாயை என்ற குறிச்சொல்லில் இந்தப்பக்கங்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். இப்போது #கடன் தள்ளுபடி என்கிற மாயை வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இதிலும் கூட நம்மூர் #களவாணி காங்கிரஸ் கட்சிதான் முந்திக்கொண்டு நிற்கிறது. 


******* 
வாசகர் கருத்தாக இப்படிக்கு கேலிச்சித்திரம் போட்டிருக்கிற இன்றைய ஹிந்து தமிழ் நாளிதழில் முகப்புச் செய்தியாக மம்தா பானெர்ஜி இப்படிப் பேசியதும் ‘‘பிரதமர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பேசுவது பொருத்தமானதல்ல. பிரதமர் பதவியை பொறுத்தவரை விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். தனிநபர்கள், கட்சிகள் மட்டுமே இதனை முடிவு செய்ய முடியாது. அனைத்துக்கட்சிகளும் அமர்ந்து இதனை முடிவு செய்யும். அதற்கான தருணம் வரும்போது அனைவரும் ஒன்றாக பேசி ஒத்த கருத்துடன் முடிவெடுப்போம்’’

ஆக இசுடாலின் வாள் கொடுத்து வாளேந்தி போஸ் கொடுத்துச் செய்த ராவுல்பாபா தான் பிரதமர் என்கிற பிரகடனம், வீரமுழக்கம் எங்கேயும் போணி ஆகவில்லை என்பது தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது தெரிந்துமே ஆனந்த விகடன் வகையறா உடன்பிறப்புகள் மட்டும் இன்னும் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

*******  
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து நரேந்திர மோடியா ராகுல்காந்தியா என்பதை முடிவு செய்து விடமுடியுமா? கொஞ்சம் கேளுங்கள்!  
    

சேனலை விட்டு வெளியேவந்த  பி!ன்னாலும் கூட ஊடகங்களில் ரங்கராஜ் பாண்டேவுக்கு இருக்கும் மவுசு கொஞ்சம் கூடக் குறையவில்லை என்பது ஆச்சரியம் தருகிற செய்திதானே! 


மண்டேன்னா ஒண்ணு! இலவசங்கள் என்ற மாயை!


இந்தப்படத்தைப் போட்டு ஒரு கிரேக்கப் பழங்கதையை தி கார்டியன் நாளிதழ் நினவு படுத்துகிறதாம்! கடவுள்களால் சபிக்கப்பட்ட ஒரு அரசன் .ஒரு பெரும்பாறையைத் தோளில் சுமந்துகொண்டு  செங்குத்தான மலைமேல் ஏறவேண்டும்.அப்படி ஏறுகிற சமயம் உச்சியை நெருங்குகிற ஒவ்வொரு சமயமும் பாறை நழுவிக் கீழே விழ இந்த அரசனும் மறுபடி அந்தப்பாறையைக்  கீழே இருந்து தூக்கிச்சுமந்து மேலேறவேண்டும். இந்தக் கதை மாதிரியே கிரீஸ் நாட்டின் கடன்சுமையும் தீராத தொடகதையாக இருக்கிறது என்று கதை சொல்கிறது.  

இப்படி ஆனதற்கு யார், எது காரணம்  என்று ஆராயப்போனால் இன்னொரு கிரேக்க இதிகாசமாகிவிடக் கூடும் சுருக்கமாக கிரீஸ், மிகப்புராதானமான பேரரசாக இருந்தது எப்படிக் கீழே சரிந்து பத்தோடு பதினொன்றாக ஆகிப்போனது என்று பார்த்தால் முறையான கட்டுப்பாடு, மதிப்பீடுகள் இல்லாத பொருளாதாரம், வரவுக்கு மீறிய செலவு, ஜனங்களிடம் சேமிப்புப் பழக்கம் இல்லாதது என்று ஏகப்பட்ட சீக்குகளுடன் இருந்தது. விரிவாகத் தெரிந்துகொள்ள இங்கே 

இலவசங்கள் என்ற மாயைஎப்படி எப்படிப்பல்வேறு நாடுகள், பொருளாதாரங்களை ஆட்டிப் படைத்து, அழித்திருக்கிறது என்பதை இங்கே பல்வேறு சமயங்களில் உள்ளூர் நடப்பைத் தொட்டுப் பார்த்திருக்கிறோம். பொதுவுடைமை பேசிய சோவியத் யூனியன் சிதறிப்போனது, சோஷலிசக்கனவுகளில் சிதறுண்டு போன பல சிறு தேசங்கள், கடைசியாக சீனாவில்  கம்யூனிஸ்ட்கட்சி  தான் ஆட்சி செய்கிறது என்றாலும் கம்யூனிசத்துக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாது போன கதை  எல்லாம் சொல்கிற  பாடம் ஒன்றே  ஒன்று தான்!இலவசங்கள் என்பதே மாயை என்பது மட்டும் தான்! கிரீஸ் நாட்டில் நடந்து கொண்டிருப்பது ஒரு புதிய பாடம், படிப்பினையாக வளரக்கூடும். கிரீஸில் தொடரும் சிக்கல்



 இலவசங்கள், ஊதாரித்தனமான அரசுச்செலவினங்களால் திவாலாகிப் போகிற அளவுக்கு வந்தபிறகு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த எடுத்த சிக்கன நடவடிக்கைகளில் வெறுத்துப்போன கிரீஸ் நாட்டு மக்கள் ஒரு இடதுசாரி அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதில் மிகவும் மகிழ்ந்துபோனவர் ஒரே ஒரு பதிவர் தான். அவருடைய பதிவில் எப்படி இந்த சாதனை நிகழ்ந்தது என்பதற்கான அடிப்படை விவரங்கள் இல்லை.பதிவின் முடிவில் ஒரு பதினைந்து நிமிட வீடியோ ஒன்றை  பார்த்ததிலும் கூட ஊதாரிகளாகச்  சீரழிந்தபொருளாதாரத்தை எப்படிச் சரி செய்யப்போகிறார்கள் கடன்சுமையை எப்படிக் குறைக்கப்போகிறார்கள் என்பதற்கான விடை கிடைக்கவில்லை.ஆனால் வெற்று வாக்குறுதிகள் நிறைய!


சீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது? அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்: 

ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்க நாட்டுக்குக் கடன்கொடுத்த மற்ற நாடுகளுடன் ஒரு மோதல் போக்கையே புதிதாகத்தேர்ந்தேடுக்கப் பட்டிருக்கும் சிறிசா இடதுசாரிகள் கடைப்பிடிக்கப் போவது தெளிவாகி இருக்கும் நிலையில் ஜெர்மனி அரசு கிரேக்க நாட்டுக்குப்  புதுசலுகைகள் எதையும் தரப் போவதில்லை என்பதில் மிகுந்த கண்டிப்புடன்  அறிவித்திருக்கிறது.


When asked in a newspaper interview published yesterday whether there could be further concessions for Greece, Merkel said Athens had already been forgiven billions of euros by private creditors. “I don’t see a further debt haircut,” she said.



Her comments echoed those made the previous day by the German finance minister, Wolfgang Schäuble, who told Die Welt: “If I were a responsible Greek politician, I wouldn’t lead any debates over a debt haircut.”

கிரீஸ் அரசியல்வாதிகள் ஒரு ஆபத்தான விளையாட்டில் இறங்கியிருப்பதாகவே தோன்றுகிறது.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி அமெரிக்க அதிபர் ஒபாமா கிரீசுக்குத்தேவை வளர்ச்சிதானே ஒழிய சிக்கன நடவடிக்கைகள் அல்ல என்று சொல்லியிருக்கிறார்.தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைப் புதிய அரசு  கிடப்பில் போட்டிருக்கிறது.


ஏற்கெனெவே சீனப்பொருளாதாரம் மந்தமடைந்து வரும் செய்தியோடு சேர்த்துப் பார்த்தால்,கிரேக்கப் பொருளாதாரச்சுமையும் கடனும் கூட ஐரோப்பிய ஒன்றியத்தையும், குறிப்பாக ஜெர்மனியையும் பாதிப்பதாக  இருக்கலாம். கிரீஸ் மாதிரியே ஸ்பானிஷ் பொருளாதாரமும் கடும் நெருக்கடியில் இருக்கிறது. அங்கும் ிக்கன நடவடிக்கைகள் வேண்டாம் எனக் கண்டனக்குரல்கள் கலகக்குரல்களாக மாறி ஒலி த்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவு பேசிவிட்டு, இந்தியாவுக்கு இதில் என்ன சம்பந்தம் என்றும் சேர்த்துப் பார்க்காவிட்டால் இந்தப்பதிவு எதற்காக? 

நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்ற தருணங்களில் இந்தியா கிட்டத்தட்ட திவாலான நிலைமையில் தான் இருந்தது.அர்த்தமில்லாத சோஷலிசம் பேசிப் பேசியே பற்றாக்குறை பட்ஜெட், ஊதாரித்தனமான செலவுகளைக் கட்டுப்படுத்தாமல்,பொதுத்துறை என்றால் பொறுப்பில்லாத துறை இப்படிப் பொருளாதாரம் விவஸ்தை கெட்ட நிலையில்இருந்த தருணங்கள் அவை. கசப்பு முந்துதான், ஆனால் கொடுத்துத்தானாக வேண்டும் என்ற நிலையில் நரசிம்மராவ் துணிந்து பொருளாதரச் சீர்திருத்தங்களைக் கையிலெடுத்தார் முதலில் வந்தது வங்கித்துறை சீர்திருத்தம் அதற்கு முன்னோட்டமாக இருந்தது 1991 இல் ஏற்பட்ட  ஏற்றுமதி இறக்குமதிக்கிடையிலான வித்தியாசத்தைக் கொடுக்க முடியாமல் கையிருப்பில்லாமல் போன அவலம் தான் 
A Balance of Payments crisis in 1991 pushed the country to near bankruptcy. In return for an IMF bailout, gold was transferred to London as collateral, the rupee devalued and economic reforms were forced upon India. That low point was the catalyst required to transform the economy through badly needed reforms to unshackle the economy. Controls started to be dismantled, tariffs, duties and taxes progressively lowered, state monopolies broken, the economy was opened to trade and investment, private sector enterprise and competition were encouraged and globalisation was slowly embraced. The reforms process continues today and is accepted by all political parties, but the speed is often held hostage by coalition politics and vested interests.
— India Report, Astaire Research
நரசிம்மராவுக்கு இதில் உறுதுணையாக எந்த மன்மோஹன்சிங் இருந்தாரோ அவரே பின்னாட்களில் பிரதமராக ஆகி வெறும் டம்மிப்பீசாக மட்டுமே இருந்த பத்தாண்டுகளில் தானும்சேர்ந்து  பாடு பட்டுக் கொண்டு வந்த சீர்திருத்தங்களின் பலனை முறிக்கிற மாதிரி சீரழிக்கிற மாதிரிஅமைச்சரவை சகாக்கள்செயல்பாடுகள், மற்றும் ஓட்டுவங்கி அரசியலுக்காக இலவசங்களை வாரியிறைத்துப் பாழ்படுத்திய வரலாற்றுச்சோகம் நகைமுரண் வேறெதுவும் இருக்க முடியாது. 

கிரேக்கப் பொருளாதாரச்சிக்கல்  கடன்சுமை கலகக்குரல்கள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னால்  நாம் கற்றுக்கொண்டு மறந்துபோன விஷயத்தை மறுபடியும் நினைவு படுத்துகிற மாதிரி இருப்பது புரிகிறதா?

இலவசங்கள் என்பதே வெறும் மாயைதான்! There is  no free lunch!

******


இலவசங்கள் என்ற மாயை!பொறுப்பு நமக்கும் இருக்கிறதே!


 தினமணி தலையங்கம்: தீதும் நன்றும் பிறர் தர வாரா!


பால் விலை, பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்காக அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் நிச்சயமாக குறை சொல்லும். 
  
(சொல்கிறார்கள், கொதிப்பைத் தூண்டுகிறார்கள்!)
றுபரிசீலனை செய்து பஸ் கட்டண உயர்வை குறைக்கச் சொல்வார்கள். தமிழக அரசும் நிச்சயமாக இதில் சிறிது மாற்றங்களைச் செய்து, கட்டணங்களைக் கொஞ்சம் குறைக்கலாம். ஒட்டகத்தின் மீது சுமையை ஏற்றிவிட்டு, கொஞ்சம் சுமையை ஒட்டகத்தை ஏமாற்றக் கீழே போடும் உத்திதான் இதுவும்!

 (அந்த முட்டாள் ஒட்டகம் மாதிரியே, நாமும் ஏமாறப் போகிறோமா?)
பால் மற்றும் பஸ் கட்டணத்தின் நியாயத்தை எவரும் உணர்ந்து கொள்ள முடியும். அதேவேளையில், அடுத்த நடவடிக்கையாக தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வு தவிர்க்கப் படக்கூடியது என்பதில் சந்தேகமே இல்லை. மின்சாரத் துறையைப் பொருத்தவரையில் வழித்தட இழப்பை குறைப்பதும், வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்குவதைத் தவிர்ப்பதும் செலவுகளைக் குறைக்க உதவும். இதனால் மின்கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிக்க முடியும்.

 (என்ன செய்தாலும்,சந்தை நிலவரத்தை ஒட்டி விலை வைக்காமல் தவிர்க்க முடியாது)
லவச மின்சாரம் அளித்தாலும், அவற்றை மீட்டரில் அளந்து பதிவு செய்யவும், அந்த விவசாய நிலத்தில் மின்பயன்பாட்டுக்கு ஏற்ப விவசாயம் நடைபெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொத்தாம் பொதுவாக இலவச மின்சாரம் வழங்குவதால், அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.


 (இலவசங்கள் என்பதே வெறும் மாயைதான்!There is no free lunch!கசப்பானாலும் யதார்த்தம் இதுதான்!)
த்திய அரசுக்கு இணையாக சம்பளம், மின்வாரியத்தில் கூடுதலாக ஆட்கள் நியமனம் ஆகியவற்றால் அத்துறைக்கு ஏற்பட்டுள்ள செலவினம்தான் அத்துறைக்கு இழப்பைக் கூடுதலாக்குகிறது. அதைச் சரிசெய்யத்தான் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது. மின்துறையைப் பொருத்தவரை சரியான அணுகுமுறை, நடவடிக்கை எடுக்கப்பட்டாலே போதும் இந்த மின்கட்டண உயர்வைத் தவிர்க்க முடியும்.

 (ஊழியர் சம்பளம் காரணம் என்பதைவிட, வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்கிறார்களா என்பதும்,திறமையான நிர்வாகமும் மிக முக்கியம்!)
பால் கொள்முதல் விலை குறைவு என்றும், ஒரு லிட்டர் சுத்தி கரிக்கப்பட்ட தண்ணீர் விலை ரூ.15, அரை லிட்டர் பாலின் விலையும் ரூ.15 தானா என்றும் விவசாயி கேட்கும்போது, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய கோரிக்கை நியாயமானது என்று சொல்ல முடிகிறது. ஆனால், இதற்காக பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியே ஆக வேண்டும் என்கின்ற போது, அதன் அடுத்தகட்ட தாக்கம் விற்பனை விலையின் மீதுதான் விழும். இல்லையென்றால் இந்த விலை உயர்வை அரசு தாங்கிக் கொள்ள வேண்டும்.

ப்போதும்கூட அரசின் கொள்முதல் விலையைவிட விற்பனை விலை குறைவுதான். எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 28 ஆக உயர்த்தப் பட்டாலும் பால் ஒரு லிட்டர் ரூ.24 மட்டுமே

(பால்விலை விவகாரத்தில், கவனிக்கத் தவறுகிற விஷயம், தமிழ்நாட்டின் தினசரி பால் உற்பத்தியான 150 லட்சம் லிட்டர்களில், தனியார் பங்கு தான் அதிகம்!128 லட்சம் லிட்டர்கள்!ஆவின் கொள் முதல் செய்வது வெறும் 22 லட்சம் லிட்டர்கள்தான்!ஏழில் ஒரு பங்கை விற்பனை செய்யும் ஆவின் இப்போது தான் விலை உயர்வை அதிகரித்திருக்கிறது. ஏழில் ஆறு பங்கை  விற்கிற தனியார்கள் லிட்டருக்கு ரூ. 31 முதல் ரூ.36 வரை விலை உயர்த்தி பல மாதங்கள் ஆயிற்று.)
.
ஸ் கட்டணம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே உயர்த்தப் பட்டிருக்க வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் டீசல் விலை பல முறை உயர்த்தப் பட்ட பின்னரும்கூட பஸ் கட்டணத்தைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு உயர்த்தாமல் காலம்கடத்தினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. தனியார் பேருந்துகள் மட்டும் சில வழித் தடங்களில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் உயர்த்திக் கட்டணம் வசூலித்தன. அதை அந்த அரசு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

து குறித்துப் பத்திரிகைகள் எழுதியபோது, அரசு அளித்த விளக்கம் வினோதமானது: "பண்டிகை நாளில் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை உயர்த்துவதைக் குறித்துதான் பொதுவாக பத்திரிகைகள் எழுதியுள்ளன. அரசு கட்டணத்தை உயர்த்தவில்லை'' என்பதுதான் அன்றைய போக்கு வரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு அளித்த பதில். தனியார் பேருந்துகளில் செவிவழி உத்தரவு மூலம் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்கள் ஆசியுடன் நடந்த இந்த விவகாரத்துக்கு அமைச்சர் அளித்த விளக்கம் அது.

னியார் பேருந்துகளைப் போன்று, அப்போது பொதுவாக ஒரு ரூபாய் உயர்த்தியிருந்தாலும், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த இரு ஆண்டுகளில் சில நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். தேர்தலை மனதில் இருத்தி அன்றைய திமுக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்துவிட்டது. அன்று கொஞ்சம் உயர்த்தி இருந்தாலும் கூட, இன்று இந்த பஸ் கட்டண உயர்வுக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் காண முடியும்.

மிழக அரசின் பால் விலை, பஸ் கட்டண உயர்வின் நியாயத்தைப் புரிந்துகொண்டாலும், இந்த விலை உயர்வை அரசே, சென்ற ஆட்சிக் காலத்தில் திமுக செய்ததைப்போல, தாங்கிக்கொண்டு சமாளிக்க முடியாதா என்று கேட்கத் தோன்றுகிறது. இலவசங்களை மேலும் மேலும் கூட்டிக்கொண்டே போகிற அரசினால், இதைச் செய்ய முடியாது. மக்கள் தாங்கள் பெறும் இலவசங்களுக்குத் திருப்பித் தரும் விலைதான் இத்தகைய கட்டணங்கள் மற்றும் விலை உயர்வு. இந்த இலவச திட்டங்கள் இல்லாமல் இருக்குமேயானால், இந்த விலை உயர்வைக் கூடாது என்று கேட்கும் தார்மிக உரிமை நமக்கு இருந்திருக்கும். அரசுக்கும் விலையுயர்வைத் தவிர்க்கும் பொருளாதார வசதி இருந்திருக்கும்.

மிக்ஸி, 20 கிலோ அரிசி, லேப்டாப், ஆடு, மாடு என்று இலவசங்களை அடுக்கிக்கொண்டே போனால், இந்த அரசினால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை தானே ஏற்றுத் தாங்கிக்கொள்வது என்பது சாத்தியமில்லாதது.

தைவிடக் கசப்பான புள்ளிவிவரம்: மது விற்பனை தமிழ்நாட்டில் மாதம் தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏப்ரலில் ரூ.1555 கோடி, மே மாதம் ரூ.1736 கோடி, ஜூன் ரூ.1732 கோடி, ஜூலை ரூ.1796 கோடி, ஆகஸ்ட் ரூ.1800 கோடி, செப்டம்பர் ரூ.1824 கோடி, அக்டோபர் ரூ.1924 கோடி.

த்தனை கோடி ரூபாய்க்கு சாராயம் (ஐஎம்எப்எல் என்றும் நாகரிகமாக சொல்லலாம் தான்) குடிக்கிற தமிழன், பாலுக்கும் பஸ்சுக்கும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கட்டுமே என்று அரசு நினைத்தால், அதற்காக யாரைக் குறை சொல்வது?

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

சென்ற மார்ச் மாதப்பதிவு ஒன்றில் எழுதியிருந்தது இது.....!

இலவசங்களையும் கடன் பட்டுத்தான் வழங்குகிறார்கள் என்பதோடு, இந்தச் செலவை ஈடுகட்ட மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மதுவினால் வருவாய் கிடைக்கிறது.


இந்த மது தயாரிப்பில் லாபம் அடைவோரும் ஆளும்கட்சி அரசியல் வாதிகளே. அண்மையில் ஒரு வாரஇதழில் எந்தெந்த அமைச்சருக்கு மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, புதிதாக அனுமதி பெற்றுள்ளார்கள் என்று பட்டியலே வெளியிடப் பட்டிருந்தது.

மக்கள் பணத்தை இப்படியாக மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி? 

இந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.  நவராத்திரி கொலுவுக்கு ஆள் சேர்க்க நாள்தோறும் புதுப்புது சுண்டல் கொடுக்கப் படுவதைப் போல, அரியணையில் கொலு வீற்றிருக்க ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது இலவசங்களை அறிவித்து, மக்களைக் கவர்ந்து இழுக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பாவம், வெறும் விட்டில்பூச்சிகள் தானா மக்கள்?
மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!  
 

லிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

யேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு  திரும்புகிறான்!

தே மாதிரித் தான்!

மூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!

 

எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?
 

2G ஸ்பெக்ட்ரம்! கனிமொழி கைதாவாரா? முன் ஜாமீனா? இதுக்கு ஒரு கணிப்பும் இல்லையே!



சென்னைப்பதிவர் ஒருவரிடம், (மரா தன்னைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம், இது வேறொருவர்) அரட்டையில் தேர்தல் நிலவரம் குறித்து நேற்றைக்கு விசாரித்துக் கொண்டிருந்தேன். நேற்றைக்கு பதில் எதையும் காணோம்! இன்றைக்கு, அரட்டையில் திமுக அணிக்கு 120-230 இடங்கள் வரை கிடைக்கும் என்று  "தன்னுடைய"  நம்பிக்கையை வந்து சொன்னார். கொஞ்சம் சிரித்துக் கொண்டேன்! வேறு என்ன சொல்ல!

ஹெட்லைன்ஸ்டுடே தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி, திமுக முந்துகிற மாதிரி ஒரு கணிப்பை வெளியிட்டது. திமுகவுக்கு ஆதரவு மூன்று சதவேதமும் அதிமுகவுக்கு ஏழு சதவீதம் வரை கூடியிருப்பதாகச் சொன்ன இந்த கணிப்பு வெறும் ஆறாயிரம் வாக்காளர்களிடம் மட்டுமே எடுக்கப் பட்டதாக, அதன் மெதடாலஜியையும் சேர்த்து சொன்னதில் என்னுடையசந்தேகத்தை, அதன் நம்பகத்தன்மையைக்குறித்து இந்தப் பதிவில்,  எழுப்பி இருந்தேன்.

இதே ஹெட்லைன்ஸ்டுடே தன்னுடைய முந்தைய கணிப்பில் அதிமுக முந்துவதாக சொல்லியிருந்தது. இப்போது திமுக முறை! ஆனால் திமுக ஊடகங்கள் இந்த கணிப்பைப் பெரிதாக எடுத்து ஊதவில்லை என்பதிலேயே இன்னும் கொஞ்சம் சந்தேகம் எழுந்தது.விதிமுறைகளை மீறியதாக ஹெட்லைஸ்டுடேவுக்கு தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பி இருக்கிறது. இன்றைக்கு உடன் பிறப்புகளுக்கு  தேறுதல் சொல்கிற பொறுப்பை தினமலர் நாளிதழ் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த செய்தியைப் பாருங்கள்!

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த தருணங்களில் disinformation என்று செய்திகளைத் திரித்து வெளியிடுவது, குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிற உத்தியாக இரண்டு தரப்புமே செய்து கொண்டிருந்தன மார்கெடிங் உத்தியாக, ஒரு தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய தயாரிப்பின் குணங்களை விரிவாக சொல்வதற்கு பதிலாக, போட்டியாளரின் தயாரிப்பைப் பற்றி கொஞ்சம் சந்தேகம் ஏற்படுத்துகிற மாதிரி நாசூக்காகச் செய்வதை,  இங்கே இந்திய அரசியலில் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், தங்களுடைய தவறுகளுக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக, அவன் மட்டும் யோக்கியமோ என்று கவனத்தைத் திருப்புகிற மாதிரி, பொய்களைத்  திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் கோட்பாட்டை விட்டு விடாமல் பின்பற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. 
ஒரு அளவுக்கு மிஞ்சினால் என்ன ஆகும்?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக அணி பல குளறு படிகளைச் செய்திருக்கிறது. முதலாவதாக, நகர்ப்புறங்களில் எதிர்ப்பு அலையை சமாளிக்க முடியாதென்று கிராமப்புறத் தொகுதிகளாகப் பார்த்து வெறும் 119 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டியிட முடிவு செய்தது.  அடுத்ததாக, கொங்குப் பகுதியில் கொங்கு வேளாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக முயற்சி செய்த திமுக, அதிலும் தோல்வி அடைந்துருப்பதாகத் தான் தெரிகிறது. இன்பைய தினமலர் நாளிதழிலேயே, நக்கீரன் வார இதழில் எழுத்தாளர் சோலை எழுதும் தொடரில் இருந்து டுத்துப் போட்ட செய்திக் கட்டுரையின் ஒரு பகுதி இது:

"
விரிந்த வலிமையான கூட்டணி அமைக்க, தி.மு.க., விரும்பியது. ஆனால், விரும்பத்தகாத முறையில், கட்சிகளின் பலத்தைவிட, கூடுதலாக இடங்களை ஒதுக்கித் தந்துவிட்டது. கொங்கு சீமையில் வேளாளர் சமுதாயம் தான், தி.மு.க., நினைவுக்கு வந்தது. ஆனால், நாயுடு சமுதாயத்தினரும், ஒக்கலிகர் சமுதாயத்தினரும் கணிசமாக இருக்கின்றனர் என்பது அதன் நினைவுக்கு வரவில்லை.

தொகுதி அமைப்பு, சமூக அமைப்பைக் கருத்தில் கொள்ளாது, வேட்பாளர்களை தி.மு.க., தேர்வு செய்தது. மாவட்டச் செயலர்களோ, மாவட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஈடாக எவரும் வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். அதனால், பல தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தள்ளி விட்டனர் அல்லது தங்கள் ஆட்களை நிறுத்தினர். வெற்றிக்காக வேட்பாளர் என்பது தான், தி.மு.க.,வின் முந்தைய தாரக மந்திரம். குறிப்பிட்ட நபருக்காக சீட்டு என்ற காங்கிரஸ் வியாதி, இந்தத் தேர்தலில், தி.மு.க.,வையும் லேசாக தொற்றிக் கொண்டதைக் காண முடிந்தது."

கடுமையான தொடர் மின்வெட்டு, விலைவாசி உயர்வு2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று மட்டுமல்லாமல்,எங்கும் எதிலும் ஊழல், அரசு இயந்திரத்தின் மெத்தனம் எல்லாவற்றையும் தேர்தல் நேரங்களில் அளிக்கிற வாக்குறுதிகள், இலவசங்களில் மறக்க வைத்து விட முடியும் என்பது ஒன்றே திமுகவின் நினைப்பாக இருந்தது. போதாக்குறைக்கு திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தல்களில் வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்க்கப் பட்ட அ"னா பார்முலா வேறு! நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பது திமுக விஷயத்தில் உண்மையாகிப் போனது.

ஆனால், திமுக ஒன்றை மறந்து விட்டது மட்டும் நிச்சயமாக இந்தத் தேர்தல்களில் பிரதிபலித்தது. முந்தைய தேர்தல்களில் எந்த அளவக்கு அரசு இயந்திரத்தை துஷ்ப்ரயோகம் செய்யப்பட்டதோ, பணத்தை வீசி இறைத்து தேர்தல்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டதோ அந்த அளவுக்கு, இந்தத் தேர்தல்களில்,அதுமாதிரி நடந்து விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பாக இருக்கும் என்பது தான் அது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த அளவுக்கு ஜனங்களுடைய ஆதரவைப் பெறும் என்பதோ, மதுரை இளவரசரே முடக்கி வைக்கப் படுவார் என்பதோ திமுக எதிர்பார்க்காத விஷயங்கள். திமுக தலைவரே அறிவிக்கப் படாத எமெர்ஜென்சி என்றெல்லாம் புலம்புகிற மாதிரியாகிப் போனது!

அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் மீதான தனது அதிருப்தியை முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.அதே நியாயம் அரசியல் வாதிகளுக்கு  மட்டும் கிடையாது  போல!

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் கைமாறியதில் தயாளு அம்மாள் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் படாததற்கு அவருக்குத்  தமிழ் தெரியாது, சரத்துக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்து விட்டார் என்று காரணம் கூறும் சிபிஐ, ஒரு தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் என்ற ஒரு பொறுப்பைத் தவிர அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலோ இல்லாத சரத் பெயரைச் சேர்த்தது ஏன் என்றும் புரிய வில்லை.

இந்த மினிட்ஸே பின்னர் உருவாக்கப்பட்டது என்றும் தயாளு அம்மாளை வழக்கில் சேர்க்காமல் தப்புவிப்பதற்காக தயாரிக்கப்பட்டது என்றும் கருதப்படும் நிலையில், மே மாதம் 6 ஆம் தேதி சரத்குமாரும் கனிமொழியும் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அதுபற்றி விவாதிப்பதற்காக கூடிய தி.மு.க உயர் நிலை கூட்டத்தில் கலைஞர் பேசும்போது, "நான் எப்போதும் கட்சியைக் காட்டிக்கொடுப்பவனல்ல. என்னைக் கைது செய்தபோதெல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு சிறை சென்றவன்" என்று கூறியுள்ளது, கனிமொழியின் கைது தவிர்க்கமுடியாதது என்று கலைஞரே நம்புவதாகத்தான் கருதமுடிகிறது. அவ்வாறு கைதுசெய்யப்பட்டால், கட்சிக்கு எதிராக காட்டிக்கொடுக்காதே என தன் மகளுக்குக் கலைஞர் தெரிவித்த செய்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் மனம் விட்டு பேச நிறைய இருக்கிறது" என கனிமொழி கூறிய பூடக கருத்தும் இதையே உறுதிபடுத்துவதாக உள்ளது.

இது போக, அமலாக்கத்  துறை விசாரணைக்கு நாளை (5/5/11)  ஆஜராகும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. நாளை மறுநாள் ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதி மன்றம் முன்னால் ஆஜராகும்படி சம்மன்! கனிமொழியும் கைது செய்யப்படுவார் என்றே செய்திகள்  கசிந்து கொண்டிருக்கின்றன. நேற்றிலிருந்து திமுக அமைச்சர்கள் டில்லியில் முகாமிட்டு, கைது நடவடிக்கையைத் தவிர்க்க அல்லது ஜாமீன் பெற முயற்சித்துக் கொண்டிருப்பதும், சி ஐ டி  நகர் வீட்டில் மகள், வீரமணி உட்படப்பலருடன் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தியதும், கருத்துக் கணிப்புக்களை விட, கனிமொழி கைது என்றாகிவிடக் கூடாது என்பதில் மட்டும் தான் திமுக அதிக கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது.

திமுகவின் நினைப்பு சரியா ,கருத்துக் கணிப்புக்கள் இவைகளை எல்லாம் பிரதிபலிக்கிறதா இல்லையா என்பது இன்றைக்குப் பத்தாம் நாள் தெரிந்துவிடும்!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்!

இத்தனை கூத்துக்களைப் பார்த்த பிறகும், இப்போதுள்ள தேர்தல் முறையில் ஜனநாயகம் பிழைத்திருக்கும் என்று நம்புகிறீர்களா?

தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? ஒவ்வொரு கட்சிக்கும் அது பெறுகிற அதரவு வாக்குகளின்  அடிப்படையில் மட்டும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்கிற முறைக்கு மாறவேண்டிய அவசியம் புரிகிறதா? ஊழல் குற்றச்சாட்டு, அல்லது சரிவர செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை வேண்டுமே!

இதையெல்லாம் குறித்து உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

சொல்வதைக் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!