Showing posts with label மோடி எதிர்ப்பு. Show all posts
Showing posts with label மோடி எதிர்ப்பு. Show all posts

காந்தியா காண்டியா? மோடி வெர்சஸ் WHO?

இங்கே ஊடகங்கள் தினசரி கிளப்புகிற அக்கப்போரில் யாரேனும் தவறிப்போய்  உண்மையைச் சொன்னால் கூட சர்ச்சையாகி விடுவதைக் கவனிக்க முடிகிறதா? கர்நாடகாவிலிருந்து மத்திய அமைச்சரவையில் MoS ஆக இருக்கும் அனந்தகுமார் ஹெக்டே இரண்டு நாள் முன்பு பேசியதை, சர்ச்சையாக்கியிருக்கிறார்கள்.

இந்திரா புருசன் Feroz Jehangir Ghandy 

: Union Minister Ananth Hegde says on Rahul Gandhi, "They want proof of surgical strikes even when whole world acknowledged it. This Muslim who calls himself a 'janeudhari Hindu', son of a Muslim father & a Christian mother, does he have proof that he is a Hindu"? (10.3.19)
0:51
109K views
4:46 PM - 11 Mar 2019

தன்னை காஷ்மீரி கவுல் பிராமணன் என்று ராவுல் பாபா சொல்லிக் கொள்வதற்கு யாராவது ஆதாரம் கேட்டார்களா? பாட்டி இந்திரா இஸ்லாத்துக்கு மாறி பெரோஸ் ஜஹாங்கீர் காண்டி (ghandy)  என்ற பார்சி முஸ்லிமைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதில் பிறந்த ராஜீவ் காண்டி, பிறப்பால் ஒரு முஸ்லீம், அவர் திருமணம் செய்துகொண்டதோ ஒரு இத்தாலிய கிறித்தவப் பெண்ணை என்கிறபோது, ராவுல் பாபா மட்டும் எப்படி ஓர் காஷ்மீரி கவுல் பிராமணனாக இருக்க முடியும்? காண்டி என்பதை காந்தி என்று வைத்துக் கொண்டதில் இவர்கள் டுபாக்கூர் காந்திகளே தவிர ஒரிஜினல் மகாத்மா காந்திக்கு எந்தவகையிலும், சம்பந்தம் இல்லாதவர்கள்  என்பதைச் சொன்னால் அது தவறா? சர்ச்சையா?

 

பேசாப்பொருள் பேசு! இது காவேரி நியூஸ் சேனலில் நேற்றைய விவாதம்! அனாவசியக் கூச்சல்களோ, நெறியாளர் விவாதத்தின் நடுவே அடிக்கடி புகுந்து மறிப்பதோ இல்லாத நிகழ்ச்சி! அதிசயம்தான்!ஒரு உருப்படியான விஷயத்தை விவாதிக்கிறார்கள். என்றாலும்     நாடாளுமன்றத் தேர்தல்களை ஒவ்வொரு மாநில மக்களும் அணுகும் விதமே வேறு! நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் தானென்றாலும் 29 விதமான முடிவுகளைச் சொல்வதாகவே இருக்கும் என எங்கோ படித்த ஒரு கமெண்ட் நினைவுக்கு வருகிறது.


தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கப்போகும் இளைஞர்களுக்கு மாரிதாஸ் எந்த அடிப்படையில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு சரியான முறையில் வழிகாட்டுகிறார். புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே அல்லாமல், ஏற்கெனெவே வாக்களித்து ஏமாந்தவர்களுக்குமே பயன்படக்கூடிய காணொளி. 


முகநூலில் நண்பர் சரவணகுமார் அவர்களின் பதிவு என்று ராஜசங்கர் பகிரந்திருக்கிறார் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு..
நண்பர்களே ...நேற்று இந்த பொள்ளாச்சி சம்பவம் குறித்து நக்கீரன் வலைத்தளத்தில் நிலையான வீடியோக்களை அடுத்து சமூகவலைதளங்களில் எழுந்த கடுமையான எதிர்வினைகளை எல்லோரும் எதிரொலித்துக் கொண்டிருந்த போது என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டும், நக்கீரனை நாங்கள் நம்ப தயாராக இல்லை ...இந்த விஷயம் அரசியலாக்கப் படுகிறது என்று எழுதி வந்தோம் ...
இதற்கு காரணம், இந்தப் பிரச்சனை உங்களுக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே அறிமுகமாகி விட்ட பிரச்சினை... சொல்லப்போனால் பொள்ளாச்சிக்காரர்கள் இப்போது இதைப் பற்றி பேசுவதேயில்லை...
காரணம் இந்த பிரச்சனை மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பரபரப்பாக பேசப்பட்டு , சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்பட்டு , அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன...இவ்வளவு நாள் கழித்து இப்போது ஏன் பிரச்சனை எழுகிறது என்றால் காரணம் திமுக தான் ...
இந்த பிரச்சனையில் எப்படியாவது அதிமுகவை உள்ளே இழுத்து விட்டு கொங்கு மண்டலத்தில் தற்போது அதிமுகவுக்கு இருக்கும் இமேஜை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ஏற்பாட்டோடு இந்த வேலைகள் செய்யப்படுகின்றன ....இதை முன்னின்று நடத்துபவன் ஊடக வேசி நக்கீரன் கோபால் ....இந்த மாதிரி மொள்ளமாரி வேலைகளை செய்வதில் அவனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது ....அவனுடைய யோக்கியதை உலகம் அறிந்தது ....
சுதந்திர பாரதத்தில் இதுவரை எத்தனையோ அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.. ஆனால் மேம்பால ஊழல் வழக்கில் அதிமுக ஆட்சி காலத்தின் போது கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அதை திமுக தன்னுடைய ஊடக பலத்தின் மூலம் எவ்வளவு பெரிய பிரச்சனை ஆக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்....
நித்தியானந்தா விவகாரத்தில் இதே நக்கீரன்கோபால் எப்படி நடந்து கொண்டான் என்பது உலகத்துக்கே தெரியும் ...அப்படி இருக்க அவன் ஒரு வீடியோ வெளியிடுகிறான் என்றால் , அதன் உண்மைத்தன்மையை கொஞ்சம்கூட சந்தேகிக்காமல் அதை அப்படியே நம்பி எதிரொலிப்பது எந்த வகையில் நியாயம் நண்பர்களே?
250 பெண்கள் என்கிறார்கள் 1100 வீடியோ என்கிறார்கள் இதெல்லாம் சாத்தியமா என்று கூட யோசிக்க வேண்டாமா ? பொள்ளாச்சி ஒரு சிறு நகரம் ...சொல்லப்போனால் அது ஒரு வளர்ந்த கிராமம் அவ்வளவுதான்... அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் அந்த சிறு நகரத்தில் இப்படி 1200 வீடியோவை எடுத்துக்கொண்டு 250 பெண்களை காதலித்து ஏமாற்றுவதெல்லாம் சாத்தியமே இல்லை ....
சரி அப்படியே இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தானாக முன் வந்து புகார் கொடுக்காமல் அரசு என்ன செய்ய முடியும் ? இதோ ஒரு பெண் புகார் கொடுத்திருக்கிறார் ...அதன் அடிப்படையில் போலீஸ் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்கிறது ...வழக்கு நடக்க இருக்கிறது...
இப்போது போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் யாரை எதிர்த்து போராட்டம்? அந்த பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார்களா? இல்லை யாராவது தப்பி விட்டார்களா? அப்படி இருக்க எதை நோக்கி இந்த போராட்டம் ?
இதைத்தான் பாதிக்கப்பட்ட பெண்ணும் , அவருடைய அண்ணன் கேட்கிறார்கள்... இதோ இப்போது அந்தப் பெண்ணுடைய வழக்கறிஞரும், அந்தப் பெண்ணுக்கு முதன்முதலாக உதவி செய்த மலுமிச்சம்பட்டி பழனிச்சாமியும் கேட்கிறார்கள் ...இது இப்போது ஊடகங்கள் மூலமாக உறுதியாகிவிட்டது இதைத்தான் நான் நேற்று எழுதினேன் எந்த ஒரு விஷயம் வந்தாலும் அதை சொல்பவர்கள் யார் என்பதை பாருங்கள்... அதன் பிறகு உங்கள் கருத்தை பதிவுசெய்யுங்கள்... அவசரப்படாதீர்கள்....
தேர்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுகிறது .திங்கட்கிழமை நக்கீரன் இந்த வீடியோவை வெளியிடுகிறது .உடனே ஸ்டாலின் கண்டன அறிக்கை விடுகிறார் ..இதோ இன்று கனிமொழி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ...இதற்குள் ஏதோ ஒரு சதி இருப்பது உங்களுக்கு புரியவில்லையா நண்பர்களே?
இது முழுக்க முழுக்க திமுகவால் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம்... கைது செய்யப்பட்ட அந்த நால்வரும் குற்றவாளிகள் ...அவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை உடனடியாக தூக்கில் தொங்க விட்டாலும் சரி .. அல்லது கோவையில் நடந்தது போல என்கவுண்டர் செய்யப்பட்டாலும் நான் அதை முழுமனதாக வரவேற்பேன்...
ஆனால் , இதையே காரணமாக வைத்து திமுக அரசியல் ஆதாயம் தேட முற்படுவதை ஏற்கவே முடியாது ..காரணம் திமுக கொங்கு மண்டலத்தின் மீது அந்த அளவு வெறுப்பில் இருக்கிறது .ஏதாவது செய்து மீண்டும் எங்கு காலூன்றி விட முடியாதா என்று துடிக்கிறது
திமுகவை சேர்ந்த, 200 ரூபாய்க்கு பதிவிடும் யுவகிருஷ்ணா டான் அசோக் போன்ற அல்லக்கைகள் கடந்த சில வருடங்களாகவே கொங்கு மண்டலத்தை குறித்து விஷத்தைக் கக்கி வருவதை கவனித்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும் ..அவர்களைப் பொறுத்தவரை ஒன்று இந்த விஷயத்தை ஒரு கருவியாக வைத்து அரசியல் ஆதாயம் பெற வேண்டும் அதாவது வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் . அல்லது குறைந்தபட்சம் கொங்குமண்டல மக்களை அசிங்கப்படுத்த வேண்டும் இதுதான் அவர்களுடைய திட்டம் ....
250 பெண்கள் அதுவும் கல்லூரிப் பெண்கள் என்கிறார்களே இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்? பொள்ளாச்சி போன்ற ஒரு சிறு நகரத்தில் படிக்கும் கல்லூரி பெண்களை பற்றி இப்படி அவதூறு பரப்பினால் நாளை அந்த பகுதியில் பெண் எடுக்க யாரும் யோசிப்பார்களா மாட்டார்களா? இது அவர்களுக்கு தெரியாதா ? 250 பெண்கள் , 1100 வீடியோக்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?
அப்படி அவர்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் அதை காவல் துறையிடம் கொடுக்கலாம் .அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத்திரும்ப மேற்படி குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கிறது நடவடிக்கை எடுக்க மாட்டேன் மாட்டேன் என்கிறது என்று மீடியாவில் பிரச்சாரம் செய்வது எந்த வகையில் நியாயம்?
திமுகவின் நோக்கம் இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் அடைவது தான்.. அதைப் புரிந்து கொள்ளுங்கள்.தங்களின் ஊடக பலத்தைக் கொண்டு அவர்கள் செய்யும் பொய் பிரச்சாரத்திற்கு பலியாகி விடாதீர்கள்....
    

ஊடகப்பொய்களில் ஏமாந்து திசைமாறிவிடாமல் இருக்கப் பழகுவோம்! மெய்ப்பொருள் காண்பதறிவு!  

           

இனியும் மோடி வெறுப்பு, மோடி எதிர்ப்பு எடுபடுமா?

இங்கே மதுரை வட்டார மொழியில் சொல்வதானால் இத்துப்போன திராவிட முகநூல் போராளிகள், தமிழேண்டா திருகல் டேனியல்கள் முழங்குவதை எல்லாம் அப்படியே புறந்தள்ளிவிட்டுப் போய்விடலாம்!

Make no mistake - as the Indian Air Force jets returned after destroying the biggest terror training camp of terror group Jaish-e-Mohammed (JeM) in Balakot inside Pakistan, a new strategic security doctrine has been unveiled by the Modi government. India and its security establishment have redrawn our red lines and thrown away so-called strategic restraint. The new assertion is this: Pakistan has been stripped of the sham of "non-state actors". இப்படி சுவாதி சதுர்வேதி எழுதியிருப்பது அச்சு அசலாக காங்கிரசுக்கு விலைபோய்விட்ட NDTV தளத்தில்! 

bt5mjjc8  Indian Air Force fighter jets struck the biggest camp of the Jaish-e-Mohammed, killing over 300 terrorists including Jaish chief Masood Azhar's brother-in-law
இப்படிப் படத்தின்கீழ் குறிப்போடு வெளியாகியிருக்கிற செய்திக்குத் தலைப்பு இது! 

Modi Administration Changes India Handling Of Pak Decisively!

சுவாதி சதுர்வேதி, வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே பேசியதை (இதன் வீடியோ, முழு டெக்ஸ்ட்டுக்கான சுட்டி முந்தைய பதிவில் இருக்கிறது) After using the air strike to escalate and deliver the message, Foreign Secretary Vijay Gokhale's statement was a master class in crisp and clear speak while also portraying India as a mature and responsible country determined to protect its own. Gokhale cogently said that India was careful in ensuring no civilian and military casualties. Hence the "non-military strike".என்று சிலாகித்திருப்பதில், காங்கிரசோ அல்லது இதர உதிரி கட்சிகளோ இனி  மோடி வெறுப்பு மோடிஎதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் இனி அரசியல் செய்வது மெத்தக்கடினம் என்பது புலப்படுகிறதோ? வேறு வழியே இல்லாமல், ராவுல் பாபா, அரவிந்த் கேசரிவாலு, மம்தா பானெர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு எல்லாம் விமானப்படையின் இன்றைய சாகசத்தை வரவேற்றுப் பேசவேண்டியதாகி விட்டது.

     
தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இன்று முற்பகல் பாதுகாப்புக்கான காபினெட் கமிட்டிக்கு (மந்திரிசபைக்குழு) இன்று நடத்தப்பட்ட ஆபரேஷனில் ஜெய்ஷ் ஏ மொகமது தீவீரவாதக்குழுவின் 25 தளபதிகள் கதை முடிக்கப்பட்டதாகத் தகவல் சொல்லியிருக்கிறார்.  

பாகிஸ்தான் ராணுவத்தின் சவடால் இதை போட்ட சிறிது நேரத்திலேயே சாயம் வெளுத்துப்போனது ஒரு பரிதாபம் என்றால், சிலகாலமாக மோடியைக் கிண்டல் செய்தே கார்டூன் வரைந்துகொண்டிருந்த சதீஷ் ஆசார்யா கூடத் தன் கோட்டோவியங்களில் இப்படி!
   
payback என்றவுடன் இன்னொரு கார்டூன்!
அணுகுண்டுப் பூச்சாண்டி! பாகிஸ்தான் 1965 போரிலேயே மிகநவீன சாபர் ஜெட்டுகளை வைத்துக் கொண்டு வயல்வெளிகளில் குண்டு வீசிவிட்டுப்போனதும், பேட்டன் டாங்குகளை சகதியில் சிக்கவைத்து இந்திய ராணுவம் தண்ணிகாட்டியதும் இந்தப் பக்கங்களில் லால் பகதூர் சாஸ்திரி என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து வாசிக்கலாம்! பழைய கதைதான்! என்றாலும் பாகிஸ்தான் போட்ட தப்புக்கணக்குகள் என்னென்னவென்று பார்க்கலாமே! அபுதாபியில் சுகமாக வசிக்கும் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான பர்வேஸ் முஷாரஃப், நியூக்ளியர் ஆப்ஷனெல்லாம் கதைக்கு ஆகாதென்று பகிரங்கமாகப் போட்டுடைத்திருக்கிறார்! 
சுவனத்தில் 72 கன்னிகைகள் எல்லாம் கிடைப்பார்களா? சதீஷ் ஆசார்யாவின் இன்னொரு கார்டூன் நக்கலடிக்கிறது! தத்கல் புக்கிங்காம்!

Heavy firing by Pakistan along LoC, Army strongly retaliates

என்கிறது தற்போதைய நிலவரச் செய்தி!
 
         

சண்டேன்னா மூணு!சந்திரபாபு நாயுடு! ஜெகன் மோகன் ரெட்டி! நரேந்திரமோடி

குண்டூரில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை இங்கே நேரலையில் இப்போதுதான் பார்த்து முடித்தேன். மோடி மீதான பயமே இங்கே சந்திரபாபு நாயுடு உட்பட பல உதிரிக்கட்சிகள் எல்லாம்  மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்று இப்படி  விறைத்துப் போய்க் கிடப்பதற்கான முழுக் காரணம் என்பது நாளுக்குநாள் தெளிவாகிக் கொண்டே, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களம் தயாராகி வருகிறது.

சந்திரபாபு நாயுடுவும் இங்கே திராவிடங்கள் பாணியில் கறுப்புக்கொடி, கறுப்பு பலூன். மோடியே திரும்பிப்போ பேனர்கள் என்று ஆரம்பித்துவிட்டார்.

குண்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, நம் நாட்டு சம்பிரதாயத்தில் திருஷ்டி படாமல் இருப்பதற்கு கருப்பு பொட்டு வைப்பார்கள். அதுபோல எங்கள் கட்சிக்கும் எனக்கும் எங்கள் ஆட்சிக்கும் திருஷ்டி ஏற்படாமலிருப்பதற்காக சந்திரபாபு நாயுடு கருப்பு பலூன் விட்டிருக்கிறார்! அவருக்கும் அவர் கட்சிக்கும் நான் நன்றி செலுத்துகிறேன் என்று பேசினார் என்று விரிவாகச் சொல்கிறது தினசரி 

ஆனாலும் கூட சந்திரபாபு நாயுடுவின் கலக்கம் மிக வெளிப்படையாகவே தெரிகிறது. எதிர்வரும் தேர்தல் அவரைப் பொறுத்தவரை வாழ்வா சாவா போராட்டம்! 1995 இல் மாமனார்  N T ராமாராவிடமிருந்து தெலுகு தேசம் கட்சி, ஆட்சி இரண்டையும் ஹைஜாக் செய்த சாமர்த்தியசாலி இப்போது விழிபிதுங்கி நிற்கிறார். YS ராஜசேகர ரெட்டி மகன்  ஜெகன் மோகன் ரெட்டி வேறு உள்ளூரில் கடுமையான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

ஆக, உதிரிக்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மெகா கூட்டணி கனவையே கூடத்  தனித்தனியாகத்தான் காணுகிற பரிதாபம் நன்றாகத் தெரிகிறதா?
நரியைவிடவும் தந்திரசாலியான சந்திரபாபு நாயுடுவைப் பற்றி ஆந்திராவுக்கு வெளியே அதிகம் தெரிந்திருக்காது. இவரும், ராஜசேகர ரெட்டியும் ராயலசீமாக்காரர்கள்! இருவரும் 1978 இல் காங்கிரஸ் MLA க்களாகி, எண்பதுகளின் ஆரம்பத்தில் T. அஞ்சையாவின் அமைச்சரவையில் மந்திரிகளாகவும் நெருங்கிய நண்பர்களாகவும், சஞ்சய் காந்தியின் அதிதீவிர விசுவாசிகளாகவும் இருந்தது எத்தனைபேருக்கு இங்கே தெரிந்திருக்கும்? நினைவு இருக்கும்?

காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, விமானநிலையத்தில் ஆந்திர முதல்வராக இருந்த, சொந்தக்கட்சியின் அஞ்சையாவை அவமதித்த போது NT ராமாராவ் கொதித்தெழுந்தார். மா தெலுகு ஆத்ம கௌரவம் கோசம் என்று தெலுகு தேசம் கட்சியை ஆரம்பித்தபோதுகூட, சந்திரபாபு நாயுடு,
காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். 1983 தேர்தலில் தெலுகு தேசம் கட்சி வேட்பாளரிடம் தோற்றபிறகே மாமனார் கட்சியில் வந்து ஒட்டிக் கொண்டார். அதன் பிறகே நாயுடுவும், ராஜசேகர ரெட்டியும் எதிரெதிர் துருவங்களானார்கள்!

1994 இல் மாமனார் மந்திரிசபையில் நிதியமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, NTR லட்சுமி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டபிறகு, மாமனாரை ஆட்சியிலிருந்து கவிழ்த்து 1995 இல் ஆந்திர முதல்வர் ஆனார். தேவே கவுடா, IK குஜ்ரால் பிரதமராக இருந்த தருணங்களில் கூடவே ஒட்டிக்கொண்டிருந்த நாயுடு, பிறகு வாஜ்பாயி அரசில் ஒட்டிக் கொண்டு எப்போதும் வெளிச்சத்தில், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருந்தார்.        

இப்படி ஹைடெக் அரசு,ஊழல் இரண்டிலும் நாயுடு கொடிகட்டிப் பறந்த வேளையில்,     ராஜசேகர ரெட்டி விவசாயிகள் பிரச்சினையில் அரசியல் பாதயாத்திரை நடத்தி ஆட்டையைக்கலைத்தார்! ஆட்சியைப் பிடித்தார்! 2004 தேர்தலில் அசெம்பிளி, நாடாளுமன்றம் இரண்டையும் காங்கிரஸ் கைப்பற்றியது.   

நரேந்திர மோடி குண்டூரில் பேசுகையில் சந்திரபாபு நாயுடு மாமனார் முதுகில் குத்தி கட்சி, ஆட்சி இரண்டையும் ஹைஜாக் செய்த பழைய கதையை ஞாபகப் படுத்தியிருக்கிறார்.  

பழைய நினைவுகள் மட்டுமல்ல, அரசியலில் நாயுடு அடித்த அந்தர்பல்டிகளும் சேர்ந்தே இப்போது அவரை வாழ்வா சாவா என்று வாட்டிக் கொண்டிருக்கிறது  

தேர்தல்களம் தயாராகிக் கொண்டே வருவது தெரிந்த விஷயம்தான்! கேள்வி, நாம் தயாராகிவிட்டோமா? என்பதுதான்!