Showing posts with label மனமே நீ யார். Show all posts
Showing posts with label மனமே நீ யார். Show all posts

எப்படிப் பார்த்தால் என்ன தெரியும்? பொது புத்தி Vs பகுத்தறிவு !





இது நிச்சயமாக  இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை! ஆனால் சொல்ல வேண்டிய விஷயம் பொதுவாக இருக்கிறது, அவ்வளவு தான்!


இந்தக் குரங்குகளைப் பாருங்கள்! சில குரங்குகள் மேலே ஏறிய நிலையில்..........சில கீழே!



இரண்டு நிலைகளிலும் ஒரே பொருளைப் பார்க்க முடியுமா, தெரியுமா என்றால் நிச்சயமாக இல்லை!  மேலே ஏறிச் சென்ற குரங்கு பசுமை, கனிகள், சுற்றி உள்ள பரந்த உலகத்தைப் பார்க்க முடிகிறது! 

கீழ்நிலையில் உள்ளதற்கு, மேலே போன குரங்கின் இடுப்புக்குக் கீழே உள்ள  பகுதி  ஒன்று தான் தெரியும்! 

கீழ் நிலையில் நின்று விடும்போது அல்லது தேங்கிவிடும்போது, நம்பிக்கை ஜெபகோபுரங்கள் கட்டி வியாபாரமாகவும் மோசடியாகவும் உருமாற ஆரம்பிக்கிறது! இல்லை இல்லை என்று மறுத்துப் பேசிக் கொண்டே இருப்பது, பொழுதுபோக்கு நாத்திகமாகி விடுகிறது! அங்கேயும் கூட பகுத்தறிவு என்ற பிராண்டில் வியாபாரமும் விவகாரங்களும் ஆரம்பித்துவிடுகிறது.

கீழேயே தேங்கி  நின்றுவிடுவதில் நிகழ்வது இது ஒன்று மட்டும் தான்!


பொது புத்தி, நற்குடி, இப்படி வார்த்தைகள் விவரமில்லாத விவகாரங்களாகவும், ஒரு நிலையில் சகிக்க முடியாத விகாரங்களாகவும் வளர்ந்து கொண்டே போவதைத் தவிர இவற்றால் என்ன சாதிக்க முடிந்தது? என்ன சாதித்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள்?


நாத்திகனாக இருப்பதோ, கடவுளை மறுப்பதோ தவறென்று நான் சொல்லவரவில்லை! ஆத்திகனாக இருப்பதும், கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்வதும் சரி என்று கூட சொல்லவரவில்லை! இந்த இரண்டு நேரெதிரான நிலைகள், தனி நபரைப் பொறுத்தது, அவரவர்க்கு வேண்டிய அனுபவத்திற்காக, அடுத்த கட்டத்திற்கு முன்னேறிப் போவதற்காக இருக்கும் படிநிலைகள்!

இரண்டு கரைகளுக்கு நடுவில் ஓடுகிற நதியைப் போல, வாழ்க்கை நேரெதிரான இரு தன்மைகளுக்கிடையில் ஓடிக் கொண்டிருப்பது! அந்த இரண்டு முரண்படுவதாக, முரணியல் தான் இயக்கம், அதுதான்  வாழ்க்கையைத் தீர்மானிப்பது போலத் தோன்றினாலும், அதையும் கடந்த நிலையில் நதி ஓடிக் கொண்டிருப்பதைப் போல, அதன் இலக்கை நோக்கிய பயணமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால் முரண்பாடுகளைக் கண்டு எரிச்சல் கொள்ள மாட்டோம்! பயப்பட மாட்டோம்! வாக்குவாதம் செய்துகொண்டு தேங்கி நிற்க மாட்டோம்!

இதுவோ அதுவோ, எதுவாகினும் கடந்து போக வேண்டியதே! புரிந்துகொள்கிற தன்மை அங்கே வரும்போது,
ஒரு புதிய பார்வை கிடைப்பதும் தெரிய வரும்!





மனமது செம்மையாக....ஐந்து வழிகள்!






மனமென்னும் கருவியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள.....சில குறிப்புக்கள்!

எண்ணங்கள், அதாவது எண்ணுவது அல்லது நினைப்பது மிகவும் எளிது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  


உண்மையில் அப்படித்தானா?


'நினைப்புத் தானே பிழைப்பைக் கெடுக்குது' என்று அனுபவசாலிகள் பட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எதையோ காமாசோமா என்று குழப்பமாக நினைத்துக் கொண்டிருப்பது ஒரு ரகம். தெளிவாக, விவரமாக நினைக்கப் பழகுவது என்பது வேறு ரகம். நினைப்பில் ஓடுவதை ஆராய்ந்து, அதைத் தெளிவாகவும் சொல்லவேண்டும் என்றால், பரீட்சைக்குத் தயாராகிற ஒருவன் பென்சிலைக் கூர்மையாக வைத்திருப்பது போல, மனத்தையுமே கூர்மையாக வைத்திருக்கப் பழக்க வேண்டும். கொஞ்சம் கடினமானது மாதிரித் தெரிந்தாலுமே, பழகப் பழகச் சித்திரம் வரைவது கைவருவது போலவே, மனத்தைக் கூர்மையாக வைத்திருக்க உதவும் கருவி! பயிற்சி என்பது, யானையை அடக்கி வைக்க உதவுகிற அங்குசம் போலமிகவும் சிறிது! உபயோகமோ பெரிது. இப்படி மனத்தை ஆராய்கிற பயிற்சிகள், பழக்கங்கள் எல்லாம், மனத்தைப் போலவே  பரந்து விரிகிறதாகத் தான்  இருக்க வேண்டும் என்பதில்லை, சின்னச் சின்னப் பயிற்சிகள் தான்! தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்வது என்பது  இந்த சின்ன அங்குசமே. அடங்க மறுக்கும் மனத்தை அடக்கியாளும் வலிமையான கருவி 


Consistency! Continuity! Concentration!

முதலில், ஒரு விஷயத்தை உண்மை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?


முதலில், உண்மை என்பது ஆரம்ப நிலைகளில், உணர்ச்சிகளால் தேடப்படுவது. உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்பொது, திரித்துச் சொல்வதும் ஆரம்பமாகிவிடுகிறது. திரித்துத் திரித்துக் கடைசியில் உண்மையை நேரெதிரான திசையில் பார்க்க முயல்கிறோம்.என்பதைவிட உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி நமக்கு "தெரிந்த" விஷயங்களைக் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு அதில் எந்த அளவு ஆதாரத்தோடு இருக்கிறது, உணர்ச்சிகள் எந்த அளவுக்கு புகை மூட்டம் போட்டிருக்கிறது என்பதைப் பார்க்கப் பழக வேண்டும்.



அடுத்ததாக, நாம் ஏன் சில விஷயங்களை உண்மையென்று அப்படியே நம்பிவிடுகிறோம்


முதல் பாராவில் சொன்னது போல, நம்முடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அப்படியே ஸ்வீகரிக்கப்படுவது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாதது.மனத்தைக் கூர்மையானதாக்க, நம்முடைய அபிப்பிராயங்களையும், இது இப்படித்தான் என்று ஆராயாமலேயே முடிவு கட்டிவிடுகிறோமே, அதையும் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குங்கள்!


மூன்றாவதாக, எந்த ஒரு விஷயத்தையுமே, எவ்வளவு சாமர்த்தியமான வாதத்திறமையினால் சொல்லப் பட்டிருந்தபோதிலுமே கூட,அப்படியே  உண்மை என்று எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம்.வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிற காரணங்கள், உள்நோக்கம்  என்ன என்று தேட முயலுங்கள்உன்னதமான வாதத் திறமையினால், மட்டமான கருத்துக்களைக் கூட உண்மையாக்கிவிட முயற்சி நடக்கிறதா என்பதைப் பாருங்கள்


நான்காவதாக, எங்கே வித்தியாசம் நூலிழை மாதிரி ஆரம்பித்துப் பெரிதாகிறது, எப்படி உண்மையல்லாததும், பொய்களும்  உண்மை போலச் சித்தரிக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவறானசெய்திகள், பிழையான செய்திகள், பொய்யான செய்திகள் என்பதில் இந்தப் பொய்யான செய்தி இருக்கிறதே, இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லப்படுபவை. ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிரித்து வைக்கத் தெரியாவிட்டால், தடம் பிறழ்ந்து உண்மையை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.இந்த தேசத்தின் வரலாறு, இப்படித் தான் கொஞ்ச கொஞ்சமாகத் திரிக்கப்பட்டு, உண்மையல்லாததெல்லாம் உண்மைகளாகச் சொல்லப் பட்டு வருகிற பரிதாபம் போல ஆகி விடும்.


ஐந்தாவதாக, எந்த ஒரு கருத்தின் தாக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது. சில விஷயங்கள் மேலோட்டமாக சுவாரசியமாக இருக்கும், ஆனால் சிறிதுகூடப் பயன்படாது. வேறு சில விஷயங்களோ, மிகச் சாதாரணமாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய உயரத்துக்கு நம்மை இட்டுச் செல்வதாகக் கூட அமைந்துவிடும்



தலைமைப் பண்பு, சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை, பதிவுகளைத் தேடித் படிக்கிற பழக்கம் எனக்குண்டு என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர் ஒருவர் மார்க் சன்போர்ன் என்பவர் எழுதிய சுய முன்னேற்றக் குறிப்புக்கள், பதிவுகளில் இருந்து இந்தப் பகுதியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். சுவாரசியமாக இருந்தது. உபயோகமாகவும் இருந்தது என்பதால் இங்கே, கொஞ்சம் விரிவான மொழிபெயர்ப்பாக, எல்லோருக்கும் பயன் படட்டும்என்பதற்காக!

மனமது செம்மையானால்
, மந்திரம் செபிக்க வேண்டா என்று மனம் தன்னுடைய முழு ஆற்றலையும் நல்லவிதம் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நிலைக்குமுன்னோட்டமாக  இந்த ஐந்து வழிகளைக் கொஞ்சம் கடைப்பிடிக்க முடிகிறதா, உபயோகமாக இருக்கிறதா என்று சொல்லுங்களேன்


என்ன பாட்டுப் பாட-அட, என்ன தாளம் போட?


"என்ன பாட்டுப் பாட-அட, என்ன தாளம் போட"
இது, இசைஞானி இளைய ராஜா புகழின் உச்சத்தில் இருந்தபோது இசையமைத்துத் தானே பாடிய பாட்டு. இந்தக் கேள்வி, எல்லோருக்குமே ஒரு கட்டத்தில், இதே மாதிரி வேறு வடிவத்தில் வருவது தான். ஒரே மாதிரி வாழ்ந்துவிட்டுப் போவதில், மனிதனுக்கு என்றுமே நாட்டம் இருந்தது இல்லை. மனிதனுடைய பரிணாம வளர்ச்சி இதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது என்றே சொல்லலாம். மாற்றத்திற்காகத் தவிக்கிற ஒரு புறம்-மாற்றத்திற்குப் பயப்படுகிற, தயாராக இல்லாத இன்னொருபுறம்!

கடந்துபோன பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், மனிதனை மாதிரி மாற்றத்தை விரும்பியதோ, அல்லது மாற்றத்திற்குப் பயந்து இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்று பழக்கத்தின் அடிமையாகவே இருந்து விடத் துடிக்கும் சோம்பேறியாகவோ, வேறு எந்த உயிரினத்தையும் சொல்ல முடியாது.

இப்படி இரண்டுவிதமாகவும் இருக்கிற தன்மை, மனிதனுக்கு, மனம் என்ற கருவியினாலேயே ஏற்பட்டிருப்பதை முந்தைய பதிவுகளில் நிறையவே பார்த்திருக்கிறோம். இந்த இரட்டைத் தன்மையைப் பற்றி புரிந்து கொள்வது தான் சாக்ரடீஸ் முதல் இங்கே ரமணர் வரை தத்துவ ஞானிகள் "உன்னையே நீ அறிவாய்!" என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

பரிசோதனைக் கூடங்களில், கண்ணாடிக் குடுவைகளிலும், ரசாயன மாற்றங்களைக் குறித்து ஆய்வுக் குறிப்புக்கள் எழுதி நிர்ணயிப்பது போல, மனம், எண்ணங்கள், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இருக்கிற குழப்பங்கள், தேர்ந்தெடுக்கிற சுதந்திரம், அதையொட்டி நிகழ்கிற விளைவுகள், அனுபவங்கள் இவற்றை, ஆவணப்படுத்தவோ, பொதுமைப் படுத்தவோ முடியாது. அறிவியல், இன்னமும் வளர்கிற பருவத்திலேயே இருக்கிறது. ஆவணப்படுத்தத் முடிகிற விஷயங்களை மட்டுமே அறிவியல் ஏற்றுக் கொள்கிறது, ஆவணப்படுத்தப்பட்ட விதமே தவறு என்று யாராவது வந்து நிரூபிக்கும் வரை, இந்த முடிவுகள் மட்டுமே 'அறிவியல்' பூர்வமாக இருக்கும்.

இதை ஏற்றுக் கொள்ளத் தயங்காதவர்கள், இதே மாதிரி மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலோ, நம்பிக்கை அடிப்படையிலோ சில நடைமுறைகள், பழக்கங்கள், சிந்தனைகள் இருப்பதை மட்டும் தவறு, புரட்டு, பித்தலாட்டம் என்று பெரும் கூச்சலிடுவது தான் கொஞ்சம் வினோதமாக இருக்கிறது. இங்கே நிஜமாகவே நம்பிக்கை என்ற பெயரில் நிறையப் பித்தலாட்டங்கள் நடப்பதை மறுக்கவில்லை. ஒட்டுமொத்தமாகவே, நம்பிக்கையே பித்தலாட்டம் என்று முத்திரை குத்துவதை மட்டும் தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த அளவோடு, ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய கடவுள் என்றொரு மாயை புத்தகத்தை விவாதிப்பதை நிறுத்திக் கொள்வோம். இதற்கு மேலும் பேசப் போனால், கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரித் தான், பேசியதையே திரும்பத் திரும்பக் கேட்க வேண்டியிருக்கும்.

இங்கே ஒரு பதிவர் "எனக்கு வள்ளலாரும் ஒன்றுதான், பெரியாரும் ஒன்றுதான்" என்று நிரந்தரமான பன்ச் டயலாக் வைத்திருப்பார். இவைரைப் பற்றி வேறொரு பதிவில், இவர் நாத்திகரா, ஆத்திகரா என்பதே தெரியவில்லை என்ற ஒரு விமரிசனத்தையும் பார்த்திருக்கிறேன்.

எம்ஜியார் தி.மு.கவிலிருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய நேரம். தெரியாத்தனமாக, ஒரு நிருபர் அவரிடம் 'அண்ணாயிசம் என்றால் என்ன' என்று கேட்டு விட்டார். கொஞ்ச நேரம் அந்த நிருபரைக் கடுப்புடன் பார்த்து விட்டு, 'இது கூடத் தெரியாது? கம்யூனிசம் காபிடலிசம், சோஷலிசம் மூன்றும் சேர்ந்தது தான் அண்ணாயிசம்'என்று எம்ஜியார் சொன்னதாக, அந்த நாட்களில் படித்தபோது, எவ்வளவு கேலிக்குரியதாக இருந்ததோ, அதே மாதிரித் தான், வள்ளலாரும் ஒன்றுதான், பெரியாரும் ஒன்றுதான் என்று சொல்வதும் இருக்கிறது.

இதைச் சொல்வதுகூட, அந்தப் பதிவரை விமரிசனம் செய்வதற்கு அல்ல, அவர் எழுதிய சில பதிவுகளைப் படித்திருக்கிறேன்,தன்னிடம் இருக்கும் முரண்பாடுகளைக் கொஞ்சமும் அறியாமலேயே நிறைய விவாதங்களைத் தொடங்குகிறார் என்பதற்கு மேல் வேறு எந்த அபிப்பிராயமும் எனக்குக் கிடையாது. நான் சுட்டிக் காட்ட வருவதெல்லாம் எப்படி ஒரு விஷயத்தை, முழுதாக உள்வாங்கிக் கொள்வதற்கு முன்னாலேயே, ஒரு முடிவெடுத்து விடுகிறோம் பாருங்கள், அந்த விநோதத்தைப் பற்றித் தான்!

இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் இருப்பது இங்கே நிறையப் பேருக்குக் கை வந்த கலையாக இருக்கிறது. கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாக இருப்பதே பெரிய சாமர்த்தியம் என்றிருக்கும் இப்படிப்பட்டவர்களால், எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

"முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்

சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்"


என்று வள்ளல் பெருமான் சொல்கிறபடி, அறிந்து சொன்னவருடைய அனுபவம் என்பது, நமது சொந்த அனுபவமாகிற வரையில், வெறும் கனவாகவும், கதையாகவும் தான் இருக்கும். ஒரு எல்லை வரைக்கும், அடுத்தவருடைய அனுபவம் என்பது துணை வரலாமே தவிர, ஒரு ஆதர்சமாக இருக்க முடியுமே தவிர, ஒருவருடைய அனுபவம் இன்னொருவருக்குப் பொருந்தி வராது. முழுக்கப் புரிந்து கொள்ளவும் முடியாது. கொஞ்சம் இந்த இடத்தில் யோசித்துப் பார்த்தீர்களேயானால், உண்மையை உடனே புரிந்து கொள்ள முடியும்.

ஒரு மனிதன், தன சாயலில் கடவுளைக் கண்ட மாதிரி, மற்ற உயிரினங்களுமே, தங்களுடைய சாயலில் தான் கடவுளை, அல்லது தங்களை ரட்சிக்கும், வழி நடத்தும் தலைவர்களைக் கண்டு கொண்டிருக்க முடியும் என்பதும் எளிதில் ஊகிக்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிற உண்மைதான்.

ஆகக் கடவுள் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது, [நாம் கடந்து வந்த] பரிணாம நிலையின் கடந்த படி, தற்போதைய நிலை இவற்றைப் பொறுத்தே அமைகிறது. இப்படிச் சொல்லும் போதே, எந்த ஒரு இரு நபர்களுக்கும், இந்தப் புரிதல், ஒரே மாதிரி இருப்பதில்லை, இருக்க வேண்டிய அவசியம் இல்லை, என்பதும் சொல்லாமலேயே விளங்கும். இந்த விஷயத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அரவிந்த அன்னையும் எப்படி விளக்குகிறார்கள் என்பதை முன்னமே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

"Do not give too much importance to the little incidents of life.The importance of these incidents lies in the extent to which they have served you to make a progress.

And once the progress has been made, the consequences of past errors, if there are any, disappear through the intervention of the divine Grace."

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதை சரியாகப் புரிந்துகொண்டோமென்றால், மனம் என்பதன் உபயோகம் ஒரு எல்லை வரைதான் என்பதும், இறைவனது பெரும் கருணையை, அது நம்மோடு செயல்படுவதைப் புரிந்து கொள்ள, Change of Consciousness இதுதான் மிக மிக முக்கியமானது என்றாகிறது.

இன்னும் பேசுவோம்!

மனமே மனமே நீ யாரோ? உள்ளதை, உண்மையைச் சொல்வாயோ? பகுதி 2


" ஆழ்வார்கள் உபதேசித்தது ஒரு பொருள்தான் என்பதில் எந்த ஐயமுமில்லை. இருப்பினும் அவர்களே இதற்கு தெளிவு வழங்காததால், அவர்களுக்குப் பல நூற்றாண்டுகளுப் பின் வாழ்ந்த ஆச்சார்யர்கள் இதை தெளிவு படுத்த முயன்றனர். இவை ஒரு வகையான interpretations தான். ஆழ்வார்கள் நேரடியாக விளக்காத காரணத்தால், அவர்களுடைய சொற்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் கொள்ளக் கூடிய நிலை இன்று உள்ளது. அதனால், அனைத்துப் பொருள்களையும் அலசி ஆராய்ந்து, எப்பொருள் துளியும் முரணின்றி ஒரே இழையாக நாலாயிரம் பாசுரங்களிலும் ஒலிக்கிறதோ, அதையே ஆழ்வார்கள் திருவுள்ளமாக கொள்வதில் ஏதும் தட்டில்லை. இது அடியேனுடைய கருத்து.”

இப்படி ஒரு வாதம், சமீபத்தில் மின்தமிழ் கூகிள் குழுமத்தில், ஒரு விவாதக் களத்தில் முன்வைக்கப்பட்டது.

ஆழ்வார்கள், தெளிவாகச் சொல்லவில்லை, அதனால் தான் அவர்கள் சொன்னவற்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்களைக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிற மாதிரி இல்லை?!

நேரடியாகக் கேட்டால், ஐயோ, நான் அப்படி அர்த்தத்தில் சொல்ல வரவில்லை என்ற பதிலே வரும் அதனால், கேட்கவில்லை.

எல்லாம் நம் "மனம்"போன போக்கில் புரிந்து கொள்வதால் வரும் வேறுபாடுகளே தவிர, ஆழ்வார்கள் தெளிவாகச் சொல்லவில்லை என்பதெல்லாம், வெற்றுச் சமாதானங்கள்.

இந்த விசித்திரத்தைப் பார்த்த பிறகு, மனம், அதன் கூறுகள், இவை பற்றிக் கொஞ்சம் சிந்திக்க நேர்ந்ததில், முந்தைய இரண்டு பதிவுகளும் சேர்த்து, இது மூன்றாவது தொடுப்பு. இதில், அந்த விவாதக் களத்தையோ, அதில் பங்கு கொண்டவர்களைப் பற்றியோ சிந்திக்கப் போவதில்லை.

"மனம் ஒரு குரங்கு -மனித மனம் ஒரு குரங்கு" இப்படி சீர்காழி கோவிந்தராஜனின் கணீரென்ற குரலில் ஒரு திரைப் படப் பாடல் நினைவுக்கு வருகிறதா?

இந்த மனம் என்பதென்ன, இது எதற்காக நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது, இது உண்மையிலேயே நம்பத் தகுந்தது தானா இப்படியான கேள்விகள், நாம் யார் என்று தெரிந்து கொள்ள முனைகையில், அவ்வப்போது வந்து போகும். கொங்குதமிழில், "கொஞ்சம் மண்டை காஞ்சப்புறம்" மறந்தும் போகும். மனம் என்ற ஒன்று, வெளியிலேயே பார்க்கப் படைக்கப் பட்ட ஒன்று, அதையே நாம் பார்க்கும் பொருளாக ஆக்கிவிட்டோமென்றால், ஒன்று, சேட்டை எதுவும் செய்யாமல் நல்ல பிள்ளை மாதிரி அடக்கமாக இருந்துவிடும்; இல்லை, வெறி பிடித்த குரங்காக, எதுவெதிலோ தாவி, நம்முடைய கவனத்தை மாற்றி விடும்! அதுவும் சரிப்படவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது, selective ஆக மறந்து போய் விடுகிற ஒரு நல்ல பழக்கம்!

ஒரு மத்திய மந்திரி. காந்தீயவாதியாக இருந்து சாதீயத் தலைவராகப் பேசப்பட்டவர். வருமான வரிக் கணக்கை முறைப்படி சமர்ப்பிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியினர், சரமாரியாக எழுப்பிய கேள்விகளுக்குச் சொன்ன ஒரே பதில்: "மறந்து போய் விட்டது!" மந்திரி பெயர், இப்போது பல பேருக்கு மறந்து போயிருக்கும் என்பதனால், நினைவுபடுத்துவதற்காகச் சொல்கிறேன், பாபு ஜகஜீவன் ராம்! காங்கிரஸ் கட்சியின் அந்த நாளையப் பெரும் தலைவர்.

இந்த selective amnesia அரசியல் வாதிகளுக்கு மட்டும் என்றில்லை, ஒரு சமயக் குறுகலில் நின்று பேசுகிற பலருக்கும் ஏற்படுவது தான்! தெய்வ தரிசனம் பெறுவது இவர்களுக்குமுக்கியமே இல்லை, இன்னொரு சமய நம்பிக்கை சொல்வதை மறுப்பதே தலையாய சமயப் பணி!

மனிதன் என்று சொல்லும் போதே மனதினால் ஆளப் படுபவன் என்ற ஒரு பொருளும் வந்து நிற்கும். நம்மில் பெரும்பாலானோர், மனத்தினால் ஆளப் படுபவர்களாகவே இருக்கிறோம்; மனத்தை வெற்றி கொண்டவர்கள் எண்ணிக்கை ரொம்ப சொற்பம். மனம் என்பது என்ன என்பதை பலவிதமாகப் பெரியவர்கள் நமக்குச் சொல்லி வைத்துப் போயிருக்கிறார்கள். அத்தனையையும், இங்கே விவாதிக்கப் போவதில்லை.

அறிவியல் ரீதியாகவும், மனம் என்பது என்ன என்பதைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, என்ன, இன்னமும் ஒரு தெளிவான, அல்லது முடிவான கருத்து கிடைத்திருக்கிற மாதிரித் தெரியவில்லை. முந்தியெல்லாம், இந்த மாதிரி ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தேடித் தேடித் படித்துக் கொண்டிருந்தேன், இப்போது இல்லை.

பரிணாமம், பரிணாம வளர்ச்சி, டார்வினிஸம், இப்படியெல்லாம் பல விஷயங்கள், சமீப காலமாகத் தமிழ்ப் பதிவுகளில் விவாதிக்கப் படுவதைப் பார்க்கும் போது, ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிக்கான அடித்தளம், இணையத் தமிழில் மின்தமிழாக வளர்ந்து கொண்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. குறிப்பாக, தமிழ்ப் பாசுரங்களில், திருவாய்மொழியில் இந்த விஷயங்களைத் தேடும் சில குறிப்பிட்ட பதிவுகள், மிக நன்றாகவே எழுதப் பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

ஆனால், திருவிழாக் கூட்டத்தில் பார்க்கிற அனைத்திலும் மனதைத் தொலைத்து விட்டு, ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்க்கிற வகையிலேயே இந்தப் பதிவுகள் இருப்பது கொஞ்சம் அலுப்பாக இருக்கிறது. ஆழ்ந்து அனுபவித்து ஆழ்வார்கள், தங்களது அனுபவங்களைப் பாசுரங்களில் சொல்லி வைத்தார்கள். ஓராண் வழி எனப்படும் குருமுக உபதேசத்தின் வழியாகவே, "செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி, தெளியாத மறை நிலங்க்கள் தெளிகின்றோமே" என்று சுவாமி தேசிகன் அருளிச் செய்தபடியே, ஆழ்வார்களது அனுபவம் கேட்பவர்க்கும் கிடைக்கும் படி செய்து வந்தார்கள்.

"முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்

சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்"

என்று வள்ளல் பெருமான் சொல்கிறபடி, அறிந்து சொன்னவருடைய அனுபவம் என்பது, நமது சொந்த அனுபவமாகிற வரையில், வெறும் கனவாகவும், கதையாகவும் தான் இருக்கும். ஒரு எல்லை வரைக்கும், அடுத்தவருடைய அனுபவம் என்பது துணை வரலாமே தவிர, ஒரு ஆதர்சமாக இருக்க முடியுமே தவிர, ஒருவருடைய அனுபவம் இன்னொருவருக்குப் பொருந்தி வராது. முழுக்கப் புரிந்து கொள்ளவும் முடியாது.

தான் பெற்ற அநுபூதியைப் பெரும் கருணையுடன், எல்லோருக்கும் உரைக்க அருணகிரிநாதர் முயன்ற போதிலும், வார்த்தைகளில் பேரானந்த அனுபவத்தைச் சொல்ல முடியவில்லை என்பதைத் திருப்புகழிலும், கந்தர் அநுபூதியிலும் பல இடங்களில் உணர முடியும்.

என்ன காரணம் என்று கொஞ்சம் நிறுத்தி நிதானமாகப் பார்க்கும் போது தான், ஆஹா, ஓஹோ என்று எதையோ காணாததைக் கண்டுவிட்ட மாதிரிக் குதித்த மனமே ஒரு எல்லைக்கு மேல், நாம் சரியாகப் புரிந்து கொண்டதாக நினைத்த விஷயத்தை, இது நிஜம் தானா, இதை விட வேறொருத்தர் சொன்னது சரியாக இருக்கும் போல இருக்கிறதே என்று, குழப்ப ஆரம்பிக்கும் விநோதத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

மனித மனம் எத்தகையது என்பதைக் கொஞ்சம் ஆராய ஆரம்பித்திருக்கிறோம்; ஆரம்பத்தில் இந்த ஆராய்ச்சி மனத்தின் உதவியோடு தான் நடக்கும். ஸ்ரீ அரவிந்த அன்னை, மனத்தைப் பற்றிச் சொல்வதைக் கொஞ்சம் பார்ப்போமா?

The human mind is a public place open on all sides, and in this public place, things come, go, cross from all directions; and some settle there and these are not always the best. And there, to obtain control over that multitude is the most difficult of all controls.

Try to control the thought coming into your mind, you will see. Simply, you will see to what a degree you have to be watchful, like a sentinel, with the eyes of the mind wide open, and then keep an extremely clear vision of the ideas which conform to your aspirations and those which do not.

And you must police at every minute that public place where roads from all sides meet, so that all passers-by do not rush in. It is a big job. Then, don't forget that even if you make sincere efforts, it is not in a day, not in a month, not in a year that you will reach the end of all these difficulties. When one begins, one must begin with an unshakable patience.

One must say, "Even if it takes fifty years, even if it takes a hundred years, even if it takes several lives, what I want to accomplish, I shall accomplish."

-The Mother,

Col.Works centenary edition, Vol.4, pp.335-336

மனம் ஒரு கருவி தான்! இந்தக் கருவியைக் கையாளுவதற்குத் தான், எத்தனை பாடு பட வேண்டியிருக்கிறது?!

மனமே மனமே நீ யாரோ? உள்ளதை உண்மையைச் சொல்வாயோ? பகுதி - 1


வாயினானாற் பாடி மனத்தினாற் சிந்திப்பதும் ஒரு எல்லை வரை தான்!
உண்மையைக் காண மனம் எனும் தடையைக் கடந்து போக வேண்டும்.
இதை ஸ்ரீ அரவிந்தரின் வார்த்தைகளில் பார்ப்போமா?

"I would ask one simple question of those who would make the intellectual mind the standard and judge of spiritual experience.

Is the Divine something less than mind or is it something greater? Is mental consciousness with its groping enquiry, endless argument, unquenchable doubt, stiff and unplastic logic something superior or even equal to the Divine Consciousness or is it something inferior in its action and status?

If it is greater, then there is no reason to seek after the Divine.
If it is equal, then spiritual experience is quite superfluous.
But if it is inferior, how can it challenge, judge, make the Divine stand as an accused or a witness before its tribunal, summon it to appear as a candidate for admission before a Board of Examiners or pin it like an insect under its examining microscope?

Can the vital animal hold up as infallible the standard of its vital instincts, associations and impulses, and judge, interpret and fathom by it the mind of man?

It cannot, because man's mind is a greater power working in a wider, more complex way which the animal vital consciousness cannot follow. Is it so difficult to see, similarly, that the Divine Consciousness must be something infinitely wider, more complex than the human mind, filled with greater powers and lights, moving in a way which mere mind cannot judge, interpret or fathom by the standard of its fallible reason and limited half-knowledge?

The simple fact is there that Spirit and Mind are not the same thing and that it is the spiritual consciousness into which the yogin has to enter (in all this I am not in the least speaking of the supermind), if he wants to be in permanent contact or union with the Divine.

It is not then a freak of the Divine or a tyranny to insist on the mind recognising its limitations, quieting itself, giving up its demands, and opening and surrendering to a greater Light than it can find on its own obscurer level.

This doesn't mean that mind has no place at all in the spiritual life; but it means that it cannot be even the main instrument, much less the authority, to whose judgment all must submit itself, including the Divine.

Mind must learn from the greater consciousness it is approaching and not impose its own standards on it; it has to receive illumination, open to a higher Truth, admit a greater power that doesn't work according to mental canons, surrender itself and allow its half-light half-darkness to be flooded from above till where it was blind it can see, where it was deaf it can hear, where it was insensible it can feel, and where it was baffled, uncertain, questioning, disappointed it can have joy, fulfilment, certitude and peace.

This is the position on which yoga stands, a position based upon constant experience since men began to seek after the Divine."

Sri Aurobindo
Col. Works [SABCL Vol.22 pp170-171

மனம் என்ன செய்ய வேண்டும், அதன் எல்லைகள் என்ன என்பதை ஸ்ரீ அரவிந்தர் வாக்கினில் பார்த்தோம் அல்லவா! மனம், நமக்குச் செய்கிற பெரிய உதவி, அங்கே இங்கே தாவாமல், அமைதியாக இருப்பது தான். இங்கேயிருந்து வெகு தொலைவிற்கு அப்பால் தாவுகிற வலிமை மனத்திற்கு உண்டு தான். என்றாலும், அது, தன்னைவிடப் பெரியதான இறை ஒளிக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். தன்னுடைய விருப்பங்களை விட்டு விட்டு, இறை ஒளிக்காகத் திறக்க வேண்டும், சரணடைய வேண்டும்.

இல்லாவிட்டால், மனம் ஒருபோதும் தன்னுடைய சிறுமையை, நிலையற்ற தன்மையை, உண்மையை உணரவொட்டாது.

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்" என்கிற ஆண்டாள் பாசுரத்திற்கு பெரியவர்கள் நிறைய விளக்கம் சொல்லி வைத்துப் போயிருக்கிறார்கள்.
முன்னவர்கள் சொல்லிப்போன உரைகளுடன், ஸ்ரீ அரவிந்த அன்னை இப்படிச் சொல்வதையும் சேர்த்துப் பார்ப்போம்:

"Do not give too much importance to the little incidents of life.The importance of these incidents lies in the extent to which they have served you to make a progress.

And once the progress has been made, the consequences of past errors, if there are any, disappear through the intervention of the divine Grace."

அன்னை சொல்வதை சரியாகப் புரிந்துகொண்டோமென்றால், மனம் என்பதன் உபயோகம் ஒரு எல்லை வரைதான் என்பதும், இறைவனது பெரும் கருணையை, அது நம்மோடு செயல்படுவதைப் புரிந்து கொள்ள, Change of Consciousness இதுதான் மிக மிக முக்கியமானது என்றாகிறது.

வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்டுவ முழுதும் தருவோய் நீ!
என அவனையே இறைஞ்சி வணங்குவோம்.
-

பாதைகள் ஒன்றல்ல-அனுபவமும் ஒன்றல்ல!


"Upon earth, each human being has his own way of seeing and feeling things, and as no two of these ways are the same, each one is different from all the others, so everybody disagrees with the others in one way or another and no real harmony can be established.

This is why the world is such a painful chaos.

The Lord alone with His total vision can create a harmony, by putting each being and each thing in its right place if the world surrenders to Him unreservedly. For it is only by uniting with Him that we can realise a harmony in our existence and get thus protected from the surrounding disharmony.

This is the only remedy."

- The Mother
[p-76, White Roses, Sixth Edition, 1999]

சமீப நாட்களில், சில விவாதக் களங்களிலேயே நேரம் முழுக்க முழுக்க வீணாகிப் போனது என்று சொல்ல முடியாது, ஆனாலும், ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்ன வார்த்தைகள், அனுபவ சத்தியமாக ஆனதைக் கண்டேன்.

'கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்' என்று ஒரு வழக்குச் சொல் உண்டு.

ஆன்மீக அனுபவம் எதுவானாலும், அனுபவித்து தன்னுள் உணர வேண்டுமே அன்றி, அதை வேறு விதமாகப் பெற முடியாது. மேலோட்டமாகப் பார்க்கையில், பொதுவாகத் தெரிந்தாலும், ஒரே மாதிரி அனுபவம் எவருக்குமே வருவதில்லை. தன் முனைப்பாக ஒவ்வொரு உயிருக்குள் இருந்தும் செயல்படும் ஒன்று, மற்றவர் சொல்வதை பிடிவாதமாக ஏற்க மறுக்கும், ஆக எவரும் மற்றவரோடு எந்த ஒரு விஷயத்திலுமே,, ஒரே மாதிரியான பார்வை, அணுகுமுறையை பெறுவதில்லை.

அப்படி இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை.

இதே மாதிரி வலைக் குழுமங்களில், பதிவுகளில் ஏற்படுகிற சில அனுபவங்களை இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன்.

இந்தியத் தத்துவ மரபு அளித்திருக்கிற ஆன்மீகப் பெரும் கொடைகளில், 'வேற்றுமையில் கூட ஒற்றுமையைக் காண்பது' என்பது மிக முக்கியமானது. என்னுடைய கருத்தோட்டம் சரி என்பதனால், பிற கண்ணோட்டங்கள் தவறாகி விடுவதில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்ன தத்துவ மரபில் வந்தவர்கள், அதை மறந்து விட்டுப் பேசுவது கொஞ்சம் வினோதமாகத் தான் இருக்கிறது.

நாம் யார், இங்கு எதற்காக வந்திருக்கிறோம் [அல்லது எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம்], இங்கு நாம் செய்ய வேண்டியதென்ன, செய்து கொண்டிருப்பதென்ன, இதெல்லாம் தான் நாம் அறிய வேண்டியது. அதை விட்டுவிட்டு என்னென்ன எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்த்தால், நமக்கே பாதையை விட்டு எவ்வளவு விலகிப் போயிருக்கிறோம் என்ற மலைப்புத் தான் மிஞ்சும்.

உலகத்தின் குழப்பங்களுக்கு, இந்த ஒத்திசைவு இல்லாத தன்மையே காரணம் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

ஸ்ரீ அன்னை சொல்வதை, இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோமே!

"Essentially there is but one single true reason for living: it is to know oneself. We are here to learn - to learn what we are, why we are here, and what we have to do. And if we don't know that, our life is altogether empty - for ourselves and for others.

And so, generally, it is better to begin early, for there is much to learn. If one wants to learn about life as it is, the world as it is, and then really know the why and the how of life, one can begin when very young, from the time one is very, very tiny-before the age of five. And then, when one is a hundred, he will still be able to learn. So it is interesting. And all the time one can have surprises, always learn something one didn't know, meet with an experience one did not have before, find something one was ignorant of. It is surely very interesting. And the more one knows, the more aware does one become that one has everything to learn."

-The Mother,
Col.Works Vol.6 pp16