Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

பதிவு #1016 சண்டேன்னா மூணு! அரசியல்! பலவிதம்!

சீட்டுக்கிழிப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதிலே இரண்டுவிதம் உண்டு! முழுப்பலன்களுடன் கௌரவமாக சீட்டுக் கிழிப்பதற்கு  compulsory retirement என்றும் benefits  எதுவுமில்லாமல் கொஞ்சம் குரூரமாக சீட்டுக் கிழிப்பதற்கு termination என்றும் சொல்வார்கள்! வீடியோ 9 நிமிடம். 


அதுபோல இங்கே அரசியலிலும் சீட்டுக்கிழிப்பதில் கொஞ்சம் மரியாதையுடன் செய்வதில் எங்கேயோ ஆளுநர் பதவி கொடுத்து அனுப்புவதும் ஒன்று இங்கே காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலிருந்தே நடப்பதுதான்! தனக்கும் அப்படி நடக்கும் என்று தமிழிசையே எதிர்பார்த்திருக்க மாட்டார்! 


ரஜனி விரும்புகிறாரோ இல்லையோ, தமிழக பிஜேபிக்கு அவர் வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிற ஒரே குரல்  ஆடிட்டர் குருமூர்த்தியுடையது! ரஜனியைப் பற்றியும், இந்த விஷயத்தில் குருமூர்த்தியையும்  நான் பெரிதாக நினைத்ததில்லை. ஆனால் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மாதிரியே ஆடிட்டர் குருமூர்த்தியும் இந்திய அரசியலுக்கு மிகவும் அவசியமென்று நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டுபேருமே எதிர்ப்புக்கு அஞ்சாமல் தனி ஒருவன் ஆகவே நின்று காங்கிரசுக்குச் சவால் விடுவது போல இங்கே வலிமையான கட்சிகள் கூடச் செய்ததில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! வீடியோ 46 நிமிடம். இந்த நேர்காணலின் கடைசியில் நண்பர் திண்டுக்கல் தனபாலன் எங்கள்blog பதிவொன்றில் பொங்கி இருந்ததற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார். 


டாக்டர் மன்மோஹன் சிங்! பிரிட்டனின்  Oxford  பல்கலையில் பொருளாதாரம் படித்து டாக்டரேட் வாங்கியவர்தான்! ஆனால் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்து சொன்னபடி தலையாட்டிக் கொண்டு  டம்மிப்பீசாக இருந்ததில் பொருளாதாரம் மறந்து விட்டதா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. இங்கே பேசியது முழுக்க முழுக்க காங்கிரசின் ஸ்க்ரிப்ட்.  

  
இந்த 6 நிமிட வீடியோவில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்! பொருளாதாரம் பற்றிப்பேசுவதற்கான முழுத்தகுதியும் விஷயஞானமும் நிறையவே உள்ளவர் என்பதால் பரிந்துரை செய்கிறேன். இந்த இரு வீடியோக்களிலும் அரசுக்கு எதிரான கருத்தைத்தான் சொல்கிறார்கள். எது சரி என்பதை நாமாகத்தான் நன்கறிந்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய விஷயம் இது. 


பொருளாதார மந்தநிலை, வங்கிகள் இணைப்பு, மத்திய அரசு சரியாகத்தான் கையாள்கிறதா இப்படியான தலைப்புக்களில் அனேகமாக எல்லாச் சேனல் விவாதங்களையும் நேற்றிலிருந்து கேட்டுக்கொண்டே வருகிறேன். இங்கே காங்கிரஸ் ஆதரவு The Print தளத்தில் சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதையும் பார்த்து விட வேண்டாமா? வீடியோ 20 நிமிடம். 

மீண்டும் சந்திப்போம்
        

சண்டேன்னா மூணு!பொருளாதாரம்! அரசியல்! நம்மூரில் படும்பாடு!

இங்கே பதிவுகளில் சேனல் விவாதங்களையே அதிகம் எடுத்துக் கொண்டு எழுதுவதாக நண்பர்களுக்கு கொஞ்சம் சலிப்பு, சந்தேகம் எழுந்திருக்கலாம்! எங்கள்Blog ஸ்ரீராம் ஒருவர் மட்டும் தான் சின்னச்சின்ன வீடியோக்களைத் தாண்டி மற்றவற்றைப் பார்ப்பதில்லை என்று சொல்லியிருக்கிறார். இருந்தாலும் சேனல் விவாதங்களிலும் கூட சமயங்களில் பல நல்ல விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆனால் முழுமையாக அல்லது அர்த்தமுள்ள விவாதமாக நடப்பதில்லை என்கிற குறை எனக்கிருக்கிறது.


இந்த விவாதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்! சமீபத்தைய நிகழ்வுகளில் முக்கியமானதாக பொருளாதாரம் சார்ந்து, கல்விக் கொள்கை சார்ந்து சிலவிஷயங்களை விவாதிக்க எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணன் பொருளாதாரத்தில் சுணக்கநிலை பற்றி தெளிவாகவே பேச ஆரம்பிக்கிறார். ஆனால் தவறான அல்லது நடைமுறைக்கு உதவாத பல விஷயங்களைத் தீர்வாக வைக்கிறார். தினமலர் வெங்கடேஷுக்கு பொருளாதாரம், கல்விக் கொள்கை பற்றிய ஞானம் எவ்வளவு என்பது எனக்குத் தெரியவில்லை, அவர் ஒரு ட்ராக்கில் விவாதம் செய்கிறார். சேனல் நெறியாளருடைய ஞானம் படுசுத்தம், வாயைப்பிடுங்கி ஏதாவது சிக்குமா என்பதிலேயே கவனமாக இருந்து, வழக்கம்போல ஒரு தெளிவில்லாமலேயே விவாதம் முடித்து வைக்கப்படுகிறது. தமிழில் talk show /debate நடத்துவது எப்படி என்பது தெரியாமலேயே நடத்தப்படுகின்றன என்பது எனக்கிருக்கும் மனக்குறை. கொஞ்சம் முன்தயாரிப்புடன், குறைந்தபட்சத்தெளிவுடன் செய்யப்படவேண்டிய நிகழ்ச்சி, நடத்துகிறவர்களுடைய போதாமையினால் கேலிக்குரிய ஒன்றாக ஆகிவிடுகிறது.  

இந்த விவாதத்தின் துவக்கத்தில் Business Standard நாளிதழில் வெளியான ஒரு செய்தி: 42 பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதா தனியார்வசம் கொடுத்துவிடலாமா என்ற முடிவை மத்திய அரசு முதல் 100 நாட்களுக்குள் எடுக்க வேண்டிவரும் என்று நிதி ஆயோக் தரப்பிலிருந்து தகவல். பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் at what cost என்ற கேள்விக்குத் தெளிவான விடை தெரிந்தாக வேண்டுமே! மொத்தமே 10 மாணவர்கள் கூட இல்லை. ஆனால் அப்படி மாணவர்கள் இல்லாத அரசுப்பள்ளிகளை மூடக்கூடாது என்றால், அது யாருக்காக?  நண்பர்கள் இந்தக் கேள்விகள் மீதான தங்கள் கருத்தை முன்வைத்து இங்கே ஒரு பயனுள்ள விவாதமாக எடுத்துச் செல்வீர்கள் என்று நம்புகிறேன்.  
            

இங்கே அரசியல், அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொண்டு என்ன பாடு படுகிறது என்பதை வெளிப்படுத்தும் படங்கள், செய்திகள்!
   



சிறுபான்மையினர் மீதான பாசம், ஓட்டுக்காகப் போடும் வெறும் வேஷம் தான் என்பதை தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் எப்போது புரிந்துகொள்வார்களாம்? 

இங்கே மத்திய அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு பிரதிநிதிகள் இல்லை என்று மிக அபத்தமான வாதம்! வேறு உருப்படியான வேலை எதுவும் இல்லையென்றால் இதற்கு முந்தைய மந்திரிசபைகளையே எடுத்துக்கொண்டு, எந்தெந்த மாநிலம் எதனால் விடுபட்டது என்று ஒப்பிட்டுப் பார்க்கட்டுமே.
   

சதீஷ் ஆசார்யாவுக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தியாகி விட்டது! மம்தாவின் கரங்கள் கர்நாடகா வரை நீளாது என்ற தைரியமோ என்னவோ?!  

மீண்டும் சந்திப்போம்.
 

தொலைக்காட்சி விவாதங்கள்! யாருடைய முகம் தெரிகிறது?

எங்கள்Blog ஸ்ரீராமுக்கும் எனக்கும் இங்கே நடந்த பின்னூட்டத் தகவல் பரிமாற்றம்!அவருக்கு நீண்ட நேர வீடியோ இணைப்புக்கள் என்றால் ஏகத்துக்கும் அலெர்ஜி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு உரையாடலைக் கவனியுங்கள்! அதற்கு முன்னதாக அங்கே நான் சுட்டிக் காட்டியிருந்த விவாதத்தின் வீடியோ, தவிர்ப்பதில் எதையெல்லாம் இழக்கிறோம்?
முழுதாகப் பார்க்க சோம்பலாக இருந்தால் 41 வது நிமிடத்திலிருந்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் என்ன சொல்கிறார் என்பதையாவது கவனியுங்கள்!

ஒன்றரை மணிநேரமா? அடேங்கப்பா... நான் தொலைக்காட்சிகளில் மிகவும் வேகமாக தாண்டிச்செல்வது இதுபோன்ற டாக் ஷோக்கள்!!

நேற்றைய (அல்லது அதற்கு முதல் நாளோ?) ஹிந்து தமிழில் இது சம்பந்தமாக ஒரு நடுப்பக்கக் கட்டுரை வந்திருந்ததே, கவனித்தீர்களோ?
ReplyDelete
Replies
  1. தமிழில் தொலைகாட்சி விவாதங்கள் இன்னமும் சரியான பக்குவத்துக்கு வரவில்லை என்பது உண்மைதான்! அதற்காக அவைகளைக் கடந்தும் போய்விட முடியாது ஸ்ரீராம்! கழுதைகளுக்கு வெள்ளிமூக்கு முளைத்து இவை குதிரையில்லை என்று ஒவ்வொரு அரசியல்கட்சியின் யோக்கியதையையும் தோலுரிக்கிறமாதிரி, நேற்றிரவு நியூஸ் 7 கேள்விநேரம் நிகழ்ச்சி இருந்தது. அந்த தமாஷாவையும் சேர்த்தே கடந்து போய்விடுகிறீர்கள்!

    சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் எப்படி இரண்டுகழகங்களும் ஒன்று மாற்றி ஒன்று வாக்குவங்கியைக் குறிவைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களைக் கொழுக்க வைத்தன, நிதிநிலைமை எப்படி மோசமானது என்பதை நன்றாகவே தோலுரித்தார்.

    ஹிந்து நடுப்பக்கக் கட்டுரை? இல்லை, பார்க்கிறேன்.

இதுமாதிரி விவாதங்களில் வெளிப்படுவது யாருடைய முகம்? யாருடைய குரல்? எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? மேலே விவாதத்துக்குத்  தலைப்பு, அரசு ஊழியர்களை பகடைக்காயாக ஆக்குகிறார்களா அரசியல்வாதிகள்? ஆனால் கள யதார்த்தம் என்ன? அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டுக் களவாணிகளாக இருப்பதை ஏன் பேசத் தயங்குகிறார்கள்?

முதலில் ஒரு அரசின் வருமானம் என்பது பெரும்பாலும்  வரிவருவாய் மட்டுமே! அதை ஊழியர்கள் சம்பளம், பென்ஷன் இத்தியாதிகளுக்கே முழுவதும்  செலவிட வேண்டுமென்றால் அரசு என்பது ஜனங்களுக்கானதா? அரசு ஊழியர்களுக்கு அள்ளி இறைப்பதற்கு மட்டுமே ஆனதா? இந்த கேள்விக்கு பதில் சொல்ல யாராவது தயாராக இருக்கிறார்களா?

ஜனங்களுடைய பிரச்சினையை ஒதுக்கி வைத்து விட்டு, இப்படி ஏற்கெனெவே கொழுத்திருக்கும்  பெருச்சாளிகளை மேலும் மேலும் கொழுக்க விடுவது எங்கே போய் முடியும் என்று யோசிப்பதற்கு,யாராவது தயாராக இருக்கிறார்களா?

இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு பொ அகத்திய லிங்கத்தின் கண்டுபிடிப்பு! அல்லது கண்ணாடியில் பார்க்க முடிகிற கம்யூனிஸ்டுகளின் முகம்! கண்ணாடி உண்மையான முகத்தைத்தான் காட்டுகிறதா?

மார்க்சீய மெய்ஞானம் கீனீஷியன் பொருளாதாரம் சொல்கிற கடன் வாங்கி வளர்ச்சி என்பதைப் பற்றி புரிந்துகொள்ளாமல் பேசுவது இயற்கைதான்! இங்கே இப்படிப் பேசுகிறவர்கள் கடன் வாங்கியாவது அரசு ஊழியர்களுக்கு அள்ளியிறை என்று குதிப்பதில். விவாதங்களில் தெரிகிற முகம் எது? எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! எனக்கென்ன வந்தது என்று ஒதுங்கியோ, அல்லது  

#கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் ‘#தமிழ்’ #ஊடகங்கள்! #TamilTV #TVMedia

பிறந்த குழந்தைக்குக் கள்ளிப்பாலைக் கொடுத்துக் கொல்லும் செயலைத்தான் இங்கிருக்கும் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை – நீண்ட நாட்களுக்குப் பிறகு சில மணி நேரம் இன்று தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்துப் புரிந்து கொண்டேன் –
கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் ‘தமிழ்’ ஊடகங்கள்! - தினசரி

என்று அலுத்துக் கொள்ளவோ வேண்டாம்! செய்திகள், விவாதங்களில்,அவைகளின் வேர் எங்கே இருக்கிறது என்று பார்க்கத் தெரிந்துகொண்டாலே போதும்! அட! இதை முன்னாடியே ரங்கராஜ் பாண்டே சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்!      


                    

மண்டேன்னா ஒண்ணு! இலவசங்கள் என்ற மாயை!


இந்தப்படத்தைப் போட்டு ஒரு கிரேக்கப் பழங்கதையை தி கார்டியன் நாளிதழ் நினவு படுத்துகிறதாம்! கடவுள்களால் சபிக்கப்பட்ட ஒரு அரசன் .ஒரு பெரும்பாறையைத் தோளில் சுமந்துகொண்டு  செங்குத்தான மலைமேல் ஏறவேண்டும்.அப்படி ஏறுகிற சமயம் உச்சியை நெருங்குகிற ஒவ்வொரு சமயமும் பாறை நழுவிக் கீழே விழ இந்த அரசனும் மறுபடி அந்தப்பாறையைக்  கீழே இருந்து தூக்கிச்சுமந்து மேலேறவேண்டும். இந்தக் கதை மாதிரியே கிரீஸ் நாட்டின் கடன்சுமையும் தீராத தொடகதையாக இருக்கிறது என்று கதை சொல்கிறது.  

இப்படி ஆனதற்கு யார், எது காரணம்  என்று ஆராயப்போனால் இன்னொரு கிரேக்க இதிகாசமாகிவிடக் கூடும் சுருக்கமாக கிரீஸ், மிகப்புராதானமான பேரரசாக இருந்தது எப்படிக் கீழே சரிந்து பத்தோடு பதினொன்றாக ஆகிப்போனது என்று பார்த்தால் முறையான கட்டுப்பாடு, மதிப்பீடுகள் இல்லாத பொருளாதாரம், வரவுக்கு மீறிய செலவு, ஜனங்களிடம் சேமிப்புப் பழக்கம் இல்லாதது என்று ஏகப்பட்ட சீக்குகளுடன் இருந்தது. விரிவாகத் தெரிந்துகொள்ள இங்கே 

இலவசங்கள் என்ற மாயைஎப்படி எப்படிப்பல்வேறு நாடுகள், பொருளாதாரங்களை ஆட்டிப் படைத்து, அழித்திருக்கிறது என்பதை இங்கே பல்வேறு சமயங்களில் உள்ளூர் நடப்பைத் தொட்டுப் பார்த்திருக்கிறோம். பொதுவுடைமை பேசிய சோவியத் யூனியன் சிதறிப்போனது, சோஷலிசக்கனவுகளில் சிதறுண்டு போன பல சிறு தேசங்கள், கடைசியாக சீனாவில்  கம்யூனிஸ்ட்கட்சி  தான் ஆட்சி செய்கிறது என்றாலும் கம்யூனிசத்துக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாது போன கதை  எல்லாம் சொல்கிற  பாடம் ஒன்றே  ஒன்று தான்!இலவசங்கள் என்பதே மாயை என்பது மட்டும் தான்! கிரீஸ் நாட்டில் நடந்து கொண்டிருப்பது ஒரு புதிய பாடம், படிப்பினையாக வளரக்கூடும். கிரீஸில் தொடரும் சிக்கல்



 இலவசங்கள், ஊதாரித்தனமான அரசுச்செலவினங்களால் திவாலாகிப் போகிற அளவுக்கு வந்தபிறகு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த எடுத்த சிக்கன நடவடிக்கைகளில் வெறுத்துப்போன கிரீஸ் நாட்டு மக்கள் ஒரு இடதுசாரி அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதில் மிகவும் மகிழ்ந்துபோனவர் ஒரே ஒரு பதிவர் தான். அவருடைய பதிவில் எப்படி இந்த சாதனை நிகழ்ந்தது என்பதற்கான அடிப்படை விவரங்கள் இல்லை.பதிவின் முடிவில் ஒரு பதினைந்து நிமிட வீடியோ ஒன்றை  பார்த்ததிலும் கூட ஊதாரிகளாகச்  சீரழிந்தபொருளாதாரத்தை எப்படிச் சரி செய்யப்போகிறார்கள் கடன்சுமையை எப்படிக் குறைக்கப்போகிறார்கள் என்பதற்கான விடை கிடைக்கவில்லை.ஆனால் வெற்று வாக்குறுதிகள் நிறைய!


சீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது? அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்: 

ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்க நாட்டுக்குக் கடன்கொடுத்த மற்ற நாடுகளுடன் ஒரு மோதல் போக்கையே புதிதாகத்தேர்ந்தேடுக்கப் பட்டிருக்கும் சிறிசா இடதுசாரிகள் கடைப்பிடிக்கப் போவது தெளிவாகி இருக்கும் நிலையில் ஜெர்மனி அரசு கிரேக்க நாட்டுக்குப்  புதுசலுகைகள் எதையும் தரப் போவதில்லை என்பதில் மிகுந்த கண்டிப்புடன்  அறிவித்திருக்கிறது.


When asked in a newspaper interview published yesterday whether there could be further concessions for Greece, Merkel said Athens had already been forgiven billions of euros by private creditors. “I don’t see a further debt haircut,” she said.



Her comments echoed those made the previous day by the German finance minister, Wolfgang Schäuble, who told Die Welt: “If I were a responsible Greek politician, I wouldn’t lead any debates over a debt haircut.”

கிரீஸ் அரசியல்வாதிகள் ஒரு ஆபத்தான விளையாட்டில் இறங்கியிருப்பதாகவே தோன்றுகிறது.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி அமெரிக்க அதிபர் ஒபாமா கிரீசுக்குத்தேவை வளர்ச்சிதானே ஒழிய சிக்கன நடவடிக்கைகள் அல்ல என்று சொல்லியிருக்கிறார்.தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைப் புதிய அரசு  கிடப்பில் போட்டிருக்கிறது.


ஏற்கெனெவே சீனப்பொருளாதாரம் மந்தமடைந்து வரும் செய்தியோடு சேர்த்துப் பார்த்தால்,கிரேக்கப் பொருளாதாரச்சுமையும் கடனும் கூட ஐரோப்பிய ஒன்றியத்தையும், குறிப்பாக ஜெர்மனியையும் பாதிப்பதாக  இருக்கலாம். கிரீஸ் மாதிரியே ஸ்பானிஷ் பொருளாதாரமும் கடும் நெருக்கடியில் இருக்கிறது. அங்கும் ிக்கன நடவடிக்கைகள் வேண்டாம் எனக் கண்டனக்குரல்கள் கலகக்குரல்களாக மாறி ஒலி த்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவு பேசிவிட்டு, இந்தியாவுக்கு இதில் என்ன சம்பந்தம் என்றும் சேர்த்துப் பார்க்காவிட்டால் இந்தப்பதிவு எதற்காக? 

நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்ற தருணங்களில் இந்தியா கிட்டத்தட்ட திவாலான நிலைமையில் தான் இருந்தது.அர்த்தமில்லாத சோஷலிசம் பேசிப் பேசியே பற்றாக்குறை பட்ஜெட், ஊதாரித்தனமான செலவுகளைக் கட்டுப்படுத்தாமல்,பொதுத்துறை என்றால் பொறுப்பில்லாத துறை இப்படிப் பொருளாதாரம் விவஸ்தை கெட்ட நிலையில்இருந்த தருணங்கள் அவை. கசப்பு முந்துதான், ஆனால் கொடுத்துத்தானாக வேண்டும் என்ற நிலையில் நரசிம்மராவ் துணிந்து பொருளாதரச் சீர்திருத்தங்களைக் கையிலெடுத்தார் முதலில் வந்தது வங்கித்துறை சீர்திருத்தம் அதற்கு முன்னோட்டமாக இருந்தது 1991 இல் ஏற்பட்ட  ஏற்றுமதி இறக்குமதிக்கிடையிலான வித்தியாசத்தைக் கொடுக்க முடியாமல் கையிருப்பில்லாமல் போன அவலம் தான் 
A Balance of Payments crisis in 1991 pushed the country to near bankruptcy. In return for an IMF bailout, gold was transferred to London as collateral, the rupee devalued and economic reforms were forced upon India. That low point was the catalyst required to transform the economy through badly needed reforms to unshackle the economy. Controls started to be dismantled, tariffs, duties and taxes progressively lowered, state monopolies broken, the economy was opened to trade and investment, private sector enterprise and competition were encouraged and globalisation was slowly embraced. The reforms process continues today and is accepted by all political parties, but the speed is often held hostage by coalition politics and vested interests.
— India Report, Astaire Research
நரசிம்மராவுக்கு இதில் உறுதுணையாக எந்த மன்மோஹன்சிங் இருந்தாரோ அவரே பின்னாட்களில் பிரதமராக ஆகி வெறும் டம்மிப்பீசாக மட்டுமே இருந்த பத்தாண்டுகளில் தானும்சேர்ந்து  பாடு பட்டுக் கொண்டு வந்த சீர்திருத்தங்களின் பலனை முறிக்கிற மாதிரி சீரழிக்கிற மாதிரிஅமைச்சரவை சகாக்கள்செயல்பாடுகள், மற்றும் ஓட்டுவங்கி அரசியலுக்காக இலவசங்களை வாரியிறைத்துப் பாழ்படுத்திய வரலாற்றுச்சோகம் நகைமுரண் வேறெதுவும் இருக்க முடியாது. 

கிரேக்கப் பொருளாதாரச்சிக்கல்  கடன்சுமை கலகக்குரல்கள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னால்  நாம் கற்றுக்கொண்டு மறந்துபோன விஷயத்தை மறுபடியும் நினைவு படுத்துகிற மாதிரி இருப்பது புரிகிறதா?

இலவசங்கள் என்பதே வெறும் மாயைதான்! There is  no free lunch!

******


ஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக?

மெரிக்க அதிபரின் மூன்றுநாள் இந்தியவிஜயம் வெளியுறவுக் கொள்கையில் மாறிவரும் சூழ்நிலைகள்,முன்னுரிமைகள், பிராந்திய பிரச்சினைகள் இவற்றில் இதுவரை இந்திய அரசும் அரசியல்வாதிகளும் கடைப்பிடித்து வந்த தெளிவற்ற நிலைபாட்டில் இருந்து ஒரு புதிய மாற்றத்தை சுட்டுவதாக  இந்தச்செய்தி சொல்கிறது. முக்கியமாக நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் சீனாவின் அடாவடித்தனம் குறித்த, ஒரு தெளிவான பார்வயுடனான .மாற்றம். இந்திய அமெரிக்க வணிக உறவுகள்  வலுப்படுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மூன்றுமே தனித்தனிக் காரணங்களுக்காகக் கவலைப்படுகிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது 



மெரிக்கசதிக்கு வீழ்ந்துவிடாதீர்-அறிவுரை என்று தலைப்பிட்டு தி இந்து நாளிதழ் வெளியிட்டிருக்கும் இந்தச் செய்தி, அதற்கு வாசகர் ஒருவரின் கமென்ட் இது " சீன அரசு எச்சரிப்பதைப் போல தலைப்பை இட்டிருப்பது அபத்தம். உள்ளே விரிவாக சீன பத்திரிகைகள் எச்சரிக்கை செய்கின்றதாக இட்டிருக்கிறீர். இந்தியா எச்சரிக்கை செய்வதற்கும் இந்து பத்திரிகை எச்சரிக்கை செய்வதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்..." இது ஒன்றே வெளியுறவுக் கொள்கை குறித்தான பார்வையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைச் சொல்வதாக இருக்கிறது.



 ஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக?#மார்க்சிஸ்டுகள் கேட்கிறார்கள். #திஇந்துகூடச்சேர்ந்துகேட்கிறது!  
ரலாறு ,வரலாற்றைப் பேசுதல் என்றாலேயே இங்கே நிறையப்பேருக்கு அலர்ஜி! அதனால்தானோ என்னவோ வரலாற்றைத்திரித்துப் பேசுவதும், வரலாறு என்பதே புனைவுகளால் ஆனது என்றும், இன்னும் கூடக் கொச்சையாக வரலாறு என்பது ஜெயித்தவர்களால் எழுதப்படுவது என்றும் ஒதுக்கி வைக்கப்படுகிற  ஒன்றாக  வரலாறு இருக்கிறது.இந்தப் பக்கங்களில் வரலாற்றைப்பேசுதல்  என்று நாடு விடுதலையான தருணங்களில் இருந்து சில விஷயங்களைத் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். 

ந்திய வெளியுறவுக் கொள்கை எப்படி எவரால் உருவாக்கப் பட்டது  என்பதை அந்தப்பதிவில் கொஞ்சம் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். சாதாரணமாக வெளியுறவுக் கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கைகளின் நீட்சியாகவே ஒவ்வொரு நாட்டின் பொருளாதார, பிரதேச நலன்களை முன்னிட்டே இருக்கும். இங்கே நேரு என்கிற கற்பனாவாதியின் கைகளில் சிக்கிக் கொண்டு கொள்கை எப்படிப் படாதபாடு பட்டது என்பதையும்  அங்கேயே கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 


நாடு விடுதலை அடைந்த தருணம்சுதந்திர இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைத் தீர்மானித்தது நேருவும்,அவருடைய ஆல்டர் ஈகோ என்று கூட சொல்லலாம்வி கே கிருஷ்ண மேனனும் தான்ஆங்கிலேய அரசின் அடிச்சுவட்டை ஒட்டிப் பணி செய்ய மட்டுமே தெரிந்த ஐ சி எஸ் அதிகாரிகளுக்குபோக வேண்டிய திசை எது என்பதை இந்த இரண்டு அதி மேதாவிக‌ள் தான் தீர்மானித்துக் கொடுத்தார்கள். 
நேருவுக்கு உலக சரித்திரம் அத்துப்படிசிறையில் இருந்த நாட்களில் மகளுக்கு உலக சரித்திரத்தைக் கடிதங்க‌ளிலேயே எழுதி சொல்லிக் கொடுத்தவர்அந்த ஒரு தகுதி போதாதாபுத்தகங்களில் சரித்திரத்தைக் கரைத்துக் குடித்துதன்னுடைய மகளுக்கும் கடிதங்களில் சொல்லிக் கொடுக்க முனைந்தவருடைய வாரிசுகள் புத்தகம், படிப்பின் வாசனை என்றாலேயே காததூரம் ஓடுகிற அளவுக்கு இருந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் கதை  யை  முன்னமே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

சீனாவுடைய சாய்ஸ் எதுவாக இருக்கும்?இந்தியா அல்லது பாகிஸ்தான்?  
இப்படி ஒரு கட்டுரை சென்ற செப்டம்பரில் எழுதப்பட்டதை இப்போது படித்துப் பார்த்தால் கொடுமையான காமெடியாகவே படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் சீனா தன்னுடைய வஸ்தாத் உதார்களுடன் எவராலும் நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கப்படவில்லை என்பது சீனர்களுக்கும் புரிந்தே இருக்கிறது.

சீனப் பொருளாதாரம் கொஞ்சம் தேக்கநிலையை நோக்கிப்  கொண்டிருப்பதும், அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதிலும் அமெரிக்கர்கள் மிக ஊக்கத்துடன் சீனத்துப் பூனைக்கு மணிகட்டுவதில் மும்முரமாக இறங்கியிருப்பதாகவே தற்போதைய நிலவரம் இருக்கிறது. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் சுமார் 4 லட்சம் கோடி டாலர்களை சீனா முதலீடு செய்திருப்பதில் 2014 இன் கடைசியில் சுமார் 153  பில்லியன் டாலர்கள் குறைந்திருப்பது, அமெரிக்கர்களை பயமுறுத்துகிற ஆயுதமாக நாலைந்து ஆண்டுகளுக்கு முன் மிரட்டிப் பார்த்தது போல இல்லை என்கிறது இந்தச்செய்தி  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபர் தன் நாட்டு மக்களுக்கு நாட்டின் நிலையை எடுத்துச் சொல்லும் ஸ்டேட் ஆப் தி யூனியன் உரையில் கூட சீனா குறித்த அமெரிக்க நிலை மிகத் தெளிவாக இருந்தது.

ஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக என்று மார்க்சிஸ்டுகள் வேண்டுமானால் கேள்வி எழுப்பலாம். ஆனால், நேரு காலத்தில்  இருந்து தொடரும் அசமந்தத் தனத்திலிருந்து இந்த தேசம்  விடுபடுவதை, மாற்றங்களைத் தடுக்க முடியாது. இது குறித்து வரும் நாட்களில்  தொடர்ந்து பேசுவோம். நீங்கள்  தயார்தானே?



என்ன தோன்றுகிறது என்பதைப் பின்னூட்டங்களாகச் சொல்ல முடிகிற நண்பர்கள்  அவசியம் தேவை. அப்படி இருந்தால் தான் குறைகளைத் திருத்திக் கொள்ள முடியும். பயனுள்ள பதிவாக  உங்களுடைய வாசிப்புப் பட்டியலில் இடம் பெறத் தகுதி உள்ளதாக  இந்தப்பக்கங்களில் தொடர்ந்து எழுத மாற்றங்கள் செய்ய உதவியாக இருக்கும். கொஞ்சம் சொல்லுங்களேன்! 

மண்ணுமோகனுக்கு வந்த கவலை! கரிசனம்!




நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலகில்உள்ள மூன்று  குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தையாக உள்ளது என்றும், இது இந்திய தேசத்திற்கு அவமானமாக இருக்கிறது என்றும் பிரதமர் இன்று கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ள்ளாராம்! ஆச்சரியம் தான்! தன்னுடைய அமைச்சரவை சகா ஒவ்வொருவருக்கும் உத்தமர் சர்டிபிகேட் கொடுத்தது போக நேரமிருந்தால்,கொஞ்சம் அரசு வேலைகளையும் பார்க்கும் ஒருவருக்கு நாட்டைப்பற்றிக் கூட கவலைப்பட நேரம் இருந்திருக்கிறது என்றால் அது அதிசயத்திலும் பெரிய அதிசயம் தான்! 
                                                                        
தேர்தல் சமயமாயிற்றே, கவலைப்படாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்! ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் விவசாய அமைச்சராக ஒருவர் இருக்கிறார்! சரத் பவார்! விவசாயிகள், மற்ற எது எப்படி எக்கேடு கேட்டுப் போனாலும் பரவாயில்லை, கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பை மட்டும் விட மாட்டார்! ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாக்கள் வந்து உலக சாதனை செய்கிற வரை ஊழல் பெருச்சாளிகளில் அவர் தான் நம்பர் ஒன்! இந்தாலிய மம்மிகளை விடவுமே என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்!

இப்படி ஒரு விவசாய அமைச்சரபை வைத்துக் கொண்டு, பெட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிற மந்திரிகளை வைத்துக் கொண்டு மண்ணு மோஹன்சிங் தேசத்தைப் பற்றியும் கவலைப் படுகிறாராம்! 


எத்தனையோ பொய்களை நம்பிய நாம், இதை மட்டும் நம்ப மறுப்போமா என்ன!  

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இந்திய விவசாயிகளின் நிலைமை , கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளில், அதாவது அரசு ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்ற நாளில் இருந்தே, மிகவும் பரிதாபத்துக்கு ஆளாகி வருகிறது.

இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்த செய்தி கட்டுரையைப் படித்துப் பாருங்கள்! அதில் சொல்லப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களின் பின்னே லட்சக்கணக்கான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கண்ணீர் இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒரு அரசியல் கொடுமை இருக்கிறது!


மானியங்கள், கடன்கள் எல்லாமே இருப்பவர்களுக்குத் தான்! தேவைப்படுகிறவர்களுக்கு அல்ல! அரசு அறிவிக்கும் திட்டங்களில் உண்மையிலேயே பயன் அடைபவர்கள் யார்?  கேள்வியை உரக்கக் கேட்கவேண்டிய தருணம் இது!

தடம் மாறும் கிராமிய வங்கிகள்!

பி.எஸ்.எம். ராவ்,இன்றைய தினமணியில் எழுதி வெளியாகி இருக்கும் கட்டுரை

ஒரு குழாய் மூலமாக பத்து மணி நேரத்தில் ஒரு தொட்டியை நீரால் நிரப்ப முடியும் என்று வைத்துக் கொள்வோம். மற்றொரு குழாயைத் திறந்துவிட்டால் ஒரு மணி நேரத்தில் தொட்டி காலியாகிவிடும் என்றால்,  இரு குழாய்களும் திறந்திருக்கும்போது எவ்வளவு நேரத்தில் தொட்டி முழுமையாக நிரம்பும்?

 பள்ளிக்கூடத்தில் நாம் படித்த இந்தக் கணக்குக்கு விடை ஒரு காலத்திலும் முடியாது என்பதுதான்.

ஆனால், கிராமியக் கடன்கள் விஷயத்தில் அரசு இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதுதான் நமது அரசின் கவர்ச்சிகரமான கோஷம். இதைக் கூறித்தான் இப்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். அரசியல் பொதுக் கூட்டமானாலும் சரி, தேர்தல் பிரசாரமானாலும் சரி, நாடாளுமன்ற அவைகளில் நடக்கும் விவாதங்களானாலும் சரி எல்லாவற்றிலும் இந்த மயக்கும் வாக்கியத்தைக் கூறுவதற்கு நமது ஆட்சியாளர்கள் தயங்குவதேயில்லை!.

ஆனால், இதெல்லாம் வெற்றுப் பேச்சுதானே தவிர, நிஜத்தில் அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கு நேரெதிர்தான். எந்த அளவுக்கு அனைவரையும் வளர்ச்சியில் உள்ளடக்குவதற்கான முயற்சி நடக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு வேகமாக வெளியேற்றும் பணி நடப்பது தெளிவாகத் தெரிகிறது. எல்லாவிதமான திட்டங்களிலும், நடவடிக்கைகளிலும் இதே கொள்கையைத்தான் நமது அரசு கடைப் பிடித்து வருகிறது. சொல்லில் ஒன்றும் செயலில் ஒன்றுமாக அரசின் பணி இதே ரீதியில் தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது சாத்தியமாகப் போவதில்லை.

 இது அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனாலும், தங்களது கோஷங்களை அவர்கள் நிறுத்துவதாக இல்லை. மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பதை எண்ணிக்கூட வெட்கப்படாமல், ஏழைகளை முன்னேற்றுவதற்காக அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் கொல்கத்தாவில் நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாத காலத்துக்கான விவசாய வங்கிக்கடன் இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அதாவது நிதியாண்டுக்கு ரூ. 4.75 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அதில், மார்ச் முதல் செப்டம்பர் 2011 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்பது பிரணாப் தரும் புள்ளி விவரம். இதன்படி இந்த நிதியாண்டின் முழுமையான இலக்கும் எட்டப்பட்டுவிடும்.

இதற்குச் சில நாள்களுக்கு முன்பு பிரணாப் இன்னும் உற்சாகமாக இருந்தார். நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகக் கடன்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். நபார்டு வங்கியின் தலைவரும் பிரணாபை ஆமோதித்தார். அவர் சொன்ன தொகை ரூ.5.2 லட்சம் கோடி!

இவர்களது கணிப்பு சரிதான். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தக் கணிப்பு பொய்த்துப் போவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. வங்கிகள் மூலம் வழங்கப்படும் விவசாயக் கடன்களை 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் அரசு முடிவு செய்தது. ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இரண்டே ஆண்டில் இந்த இலக்கு எட்டப்பட்டது. அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் இலக்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. சொல்லிவைத்தாற்போல ஒவ்வொரு ஆண்டிலும் இலக்கைத் தாண்டி கடன்கள் வழங்கப் பட்டதுதான் சுவாரசியமான விஷயம்.

2008-09 முதல் 2010-11 வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் முறையே ரூ.2.8 லட்சம் கோடி, ரூ.3.25 லட்சம் கோடி, ரூ.3.75 லட்சம் கோடி என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், முறையே ரூ.2.87 லட்சம் கோடி, ரூ.3.85 லட்சம் கோடி, ரூ.4.47 லட்சம் கோடி இலக்குகளைக் கடந்து கடன்கள் வழங்கப்பட்டன.

 வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான இலக்குகள் நிர்ணயிக்கப் படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயத்துறைக்கு ரூ. 40 லட்சம் கோடி தேவை என்று நபார்டு வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.கே.மித்ரா கூறியிருக்கிறார்.

இந்தப் புள்ளிவிவரங்களைப் படிப்பவர்களுக்கு சில நியாயமான சந்தேகங்கள் எழக்கூடும். அரசுதான் இவ்வளவு கடன்களை வழங்குகிறதே, பிறகும் ஏன் விவசாயிகள் தனியார் நிறுவனங்களை நாடுகிறார்கள், கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏன் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள் என்று கேட்கலாம்.

தேசிய குற்றப் பதிவு அமைப்பின் ஆவணங்களின்படி 1995 முதல் 2010 வரை 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது சர்ச்சைக்குரிய எண்ணிக்கைதான். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தற்கொலைகள் குறைந்திருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்.

2011-ம் ஆண்டில் வெறும் 800 பேர்தான் தற்கொலை செய்து கொண்டதாக வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் பிரத்யேகமாக ஒரு புள்ளி விவரத்தைத் தருகிறார்.

எது எப்படியிருந்தாலும், கடன்தொல்லை காரணமாக அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அரசு என்னதான் விவசாயிகளுக்கு கடன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருந்தாலும், இலக்குகளைத் தாண்டியும் கடன்கள் வழங்கப்படுவதாகப் புள்ளிவிவரங்களை அடுக்கினாலும், தேவைப் படுவோருக்கு அந்தக் கடன்கள் சென்றடையவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அரசு கூறுவது வெறும் வாய்ஜாலம் என்பதை தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை உணர்த்திக் கொண்டிருக்கிறது. கடன் வழங்கும் முறையில் குறைபாடு இருப்பதற்கு இதுவே ஆதாரம்.

விவசாயம் செய்வோரில் 80 சதவிகிதம் பேர் சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள். இவர்களுக்குக் கடன் வழங்குவதே விவசாயத்தை பாதுகாப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்குமான வழி முறை. ஆனால், இவர்களுக்குக் கடன்கள் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை. இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சாரங்கி குழு, விளிம்பு நிலை விவசாயிகளில் வெறும் 14 சதவிகிதம் பேருக்கு மட்டும் வங்கிக் கடன் போன்ற அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைப்பதாகக் கூறியிருக்கிறது.

 இந்தியாவில் 87 சதவிகித விளிம்புநிலை விவசாயிகளுக்கும் 70 சதவிகித சிறு விவசாயிகளுக்கும் வங்கிக்கடன் கிடைப்பதில்லை என்று உலக வங்கியே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களை

இன்னும் உன்னிப்பாகக் கவனித்தால் விவசாயிகளில் 51 சதவிகிதம் பேருக்கு எந்தவிதமான கடனோ, பிற வங்கிச் சேவைகளோ கிடைப்பதில்லை என்கிற உண்மை புலனாகும்.

ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையின்படி வெறும் 27 சதவிகித விவசாயிகளுக்கே அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைக்கின்றன. இதிலும் மூன்றில் ஒரு பகுதியினர் தனியார் அமைப்புகளின் மூலம் கடன் பெறுபவர்கள். அதாவது 18 சதவிகித விவசாயிகளுக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் கிடைக்கின்றன. அந்த 18 சதவிகித அதிருஷ்டக்காரர்களில் பெரும்பகுதியினர் பணக்கார, பெரு விவசாயிகள் அல்லது அதிகாரம் படைத்தவர்கள்.
இது ஒன்றும் அறியாமலோ தெரியாமலோ நேர்ந்துவிட்டது கிடையாது. 1990-களில் அரசு கொண்டு வந்த புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுதான் இது. அரசு வங்கிகள் அனைத்தும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும், கிராமப்புற ஏழைகளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் என்பவையெல்லாம் அந்தக் கொள்கை மூலமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஒருபுறம் கிராமப்புற ஏழைகளுக்கு எளிதாகக் கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதே லட்சியம் என்று வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருக்கும் வங்கிகள், இன்னொருபுறம் கிராமங்களில் தங்களது கிளைகளைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.

ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களின்படி 1991-ம் ஆண்டில் கிராமங்களில் 35,206 வங்கிக் கிளைகள் இருந்தன. 2011-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 33,602-ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் நகரங்களில் தெருவுக்குத் தெரு வங்கிகள் திறக்கப் பட்டிருக்கின்றன.
 1991-ல் வங்கிகளின் 58.46 சதவிகித கிளைகள் கிராமப்புறங்களில் இருந்தன. இப்போது அது 36.10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

அதேபோல், கிராமப்புறக் கடன்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள் போன்றவையும் தங்களது நோக்கத்தை மறந்து வேறு வகைக் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கிவிட்டன. 1993-94-ம் நிதியாண்டில் 62 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன்கள் வழங்கிக் கொண்டிருந்த கூட்டுறவு வங்கிகள் 2009-ம் ஆண்டில் வழங்கிய விவசாயக் கடன்களின் அளவு வெறும் 12 சதவிகிதம் மட்டுமே!

பிராந்தியக் கிராமிய வங்கிகளுக்கும் இதே நிலைதான். கிராமப் புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கிகள், இப்போது வழக்கமான வர்த்தக வங்கிகளைப் போலச் செயல்பட்டு வருகின்றன. கிராமங்களையும் ஏழ்மையையும் மறந்து, பண ஆதாயம் தேடும் வழிகளை மட்டுமே அந்த வங்கிகள் கடைப்பிடித்து வருகின்றன. கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. அரசு இதைப்பற்றி வாய்திறப்பதேயில்லை.

இப்படி எல்லா வங்கிகளும் கிராமங்களையும், விவசாயத்தையும் கைவிட்டுவிட்டதால்தான் மக்கள் தனியார்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறுங்கடன் அமைப்புகள் என்கிற பெயரில் கந்து வட்டிக்காரர்கள் பெருகி, மக்களிடமிருந்து வியர்வையையும் ரத்தத்தையும் வட்டியாக உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அரசு, இன்னமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றிப் வாய்கிழியப் பேசிக் கொண்டிருக்கிறது.

பருவமழை பொய்த்துப் போவது, பிற இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, விதைத்த பணத்தைக் கூட அறுவடை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுமானால், முதலில் கிராமிய வங்கிகளை வர்த்தக மயமாக்குவதைக் கைவிட வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் கிராமப்புற மக்களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்பவையாக மீண்டும் மாற வேண்டும். இவைபற்றி அரசு அக்கறை எடுத்துக்கொள்ளாதவரை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது வெற்று வாக்குறுதியாகத்தான் இருக்கும்.
 களவாணி காங்கிரசைத் தூக்கி எறிவதே தேசத்தின் விடிவுகாலம்!