Showing posts with label Red Saree. Show all posts
Showing posts with label Red Saree. Show all posts

கொஞ்சம் கொறிக்க #அரசியல் #புத்தகம் #கார்டூன்கள்

திருப்பூர் ஜோதி ஜி இன்று  தன்னுடைய  பதிவில் சில அரசியல் #அட்டகத்தி களுக்கு, குறிப்பாக நடிகர் விஜய்க்கு ஒன்றில்லை, சும்மா  எட்டு யோசனைகளைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? 1. நெஞ்சுக்கு நீதி மொத்தப் பாகமும் வாங்கி படிக்க வேண்டும். படித்தவுடன் அப்பாவுக்கு அரசியல் குறித்து விஜய் புரிய வைக்க முயல வேண்டும். வாய்விட்டுச் சிரிக்க வைத்த பதிவு!


ஆம் ஆத்மி கட்சிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் இருக்கிறார்! எங்களுக்கு அப்படி யார் இருக்கிறார்கள் என்று தேம்புகிறார் காங்கிரசின் P C சாக்கோ! இப்படியும் ஒரு ஞானோதயமா?

    
நாராயணி பாசு! தன்னுடைய கொள்ளுத்தாத்தா V P மேனனுடைய சரிதையைப் புத்தகமாக எழுதி, அதை நேற்றைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் வெளியிட்டுப் பேசியதில் ட்வீட்டரில் வரலாறு என்றால் தான் எழுதுவது மட்டும்தான் என்று சாதிக்கும் ராமசந்திர குகா முதல், திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் முதலானவர்கள் அக்கப்போர் இன்றைக்கு ட்ரெண்டிங் அரசியல் செய்தி. 



On a sunny spring day in 1914, a young Malayali walked into the Government of India’s summer offices in Gorton Castle (in the then Simla). Nobody knew who Vappala Pangunni Menon was then. He was all of 19-years-old, and he came with nothing but a letter recommending him for a typist’s job in the home department. Over the course of the next four decades, VP — as he would come to be known — would be at the frontline of India’s progress towards Independence. He was the principal typist of the Montagu-Chelmsford Report. In 1924, he would join the Reforms Office, a branch of the government of India, which would shepherd India along the path to self-governance. He would remain with the Reforms Office until 1947. Today, VP Menon is remembered for being Sardar Vallabhbahi Patel’s right-hand man, for assisting in the integration of the princely states into the Indian Union. But, between 1914-1951, VP’s contributions to modern India were both immense and immensely understated.  

In 1951, following the death of the Sardar, Vappala Pangunni Menon slipped into political and professional obscurity, where he remained until the end of his days in 1966. Today, it is only right that we rectify this. தன்னுடைய கொள்ளுத்தாத்தாவின் பங்களிப்பை மறந்துபோன தேசத்துக்கு, நினைவூட்டும் விதத்தில் எழுதப்பட்ட புத்தகம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸில் நாராயணி பாசு எழுதியதில்  இருந்து தெரிகிறது.  அப்படியானால் சர்ச்சை எப்படி ஆரம்பித்ததாம்?


அதென்னவோ இந்திராவின் வாரிசுகளுக்கு எவர் புத்தகம் எழுதினாலும் செந்தட்டி தடவின மாதிரி அப்படி ஒரு அலர்ஜி வந்துவிடுவதை இந்தப் பக்கங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். முதல் முறையாக அப்படி உதறல் ராமசந்திர குகாவுக்கும் வந்திருக்கிறது!


உதறல் ராமசந்திர குகாவுக்கு மட்டும்தான் வருமா? கழகத் தலீவருக்கு வராதா? வேறுவிதமாக என்று துக்ளக் அட்டைப்பட நையாண்டி சொல்கிறது. ஹனுமான் சாலிசா சொல்ல அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உத்தி வகுத்த பிரசாந்த் கிஷோர் எங்கே இசுடாலினை முத்தைத் தருபத்தி என்ற வயலூர் திருப்புகழைப் பாடச் சொல்லி விடுவாரோ என்ற உதறல் எனக்கும் தான்!

மீண்டும் சந்திப்போம்.      
   

மிரளும் காங்கிரஸ்!அசட்டுத் துணிச்சலும் அயோக்கியக் கூட்டணியும்!




இந்தப்பக்கங்களுக்குத் தொடர்ந்து வருபவர்களுக்கு, குறிப்பாக அரசியல்,பொருளாதாரம்,நாட்டு நடப்பு குறித்த பதிவுகளைப் படித்து வருபவர்களுக்கு, காங்கிரஸ் என்ற விஷ விருட்சம் எல்லா ஜனநாயக நடைமுறைகளையும், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என்று எல்லாவற்றிலும் ஒரு நச்சுச் சூழலைப் பரப்பிக் கொண்டு, தானும் மரணித்துக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு எழுதிக் கொண்டிருப்பது புரியும், புரிந்து கொள்ள முடியும்!

தேச விடுதலைக்காகப் போராடிய காந்தி முதலான தலைவர்கள் இருந்த காங்கிரஸ் இல்லை இன்றிருப்பது! ஆயிரம் குறை சொல்ல முடிந்தாலும்,ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, ஆனால் அதைக் காப்பாற்றுவதற்கு எதுவுமே செய்ய முடியாமல் போன நேருவின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கூட இல்லை இப்போதிருப்பது!

சொந்த வாழ்க்கையிலேற்பட்ட அவலங்களால் சுற்றி இருப்பவர்கள் மீதிருந்த சந்தேகம், பேட்டை ரவுடியை விட மோசமாகத் தலை விரித்தாடிக் கொண்டிருந்த சஞ்சீவ் என்ற சஞ்சய் காந்தியின் மீதிருந்த குருட்டுத்தனமான பயம், அதோடு கலந்திருந்த பாசத்தினால், நாடாளு மன்ற நடைமுறைகள்,நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என்று எல்லாவற்றையுமே சீரழித்த இந்திரா என்ற  நேருவின் மகள்   தலைமையில் கீழிருந்த காங்கிரஸ் கூட இல்லை இப்போதிருப்பது.


இப்போதிருக்கும் காங்கிரஸ், ஜனங்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போன ஒரு தலைமையின் கீழ்,தேசத்துக்கு எதிராகவே தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிற தியாக சிகரத்தின் கைகளில் சிக்கியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு விவகாரமாக இருக்கட்டும்,அண்டைநாடுகளின் விஷமத்தை எதிர்கொ ள்வதிலாகட்டும் பிரச்சினைகளைத் தள்ளிப் போட்டே சாகடிக்கிற கையாலாதவர்களின் கட்சியாகக் காங்கிரஸ் இருக்கிறது. இந்த தினமணி தலையங்கத்தை ஒரு முறை கவனமாகப் படித்துப் பாருங்கள்! 


காங்கிரசைத் தூக்கி எறிவோம் என்று உறுதி கொள்ளுங்கள்!



தினமணி தலையங்கம்: பொய் சொல்வது யார்?



முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு (சர்வே) செய்வதற்காக எந்தக் கோரிக்கையையும் கேரள அரசு இதுவரை அனுப்பவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

ஏனென்றால், கேரள அரசு சர்வே நடத்தி, எந்த இடத்தில் அணை கட்ட வேண்டும்; எவ்வளவு உயரம் கட்ட வேண்டும் என்பதையெல்லாம் கணித்து விட்டது என்கிற தகவலை கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இப்படியொரு பதிலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர் இவ்வாறு கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் அளித்த பேட்டியில், புதிய அணைக்கான கருத்துரு உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்புக் குழுவிடம் செப்டம்பர் 29-ம் தேதி அளிக்கப்படும் என்று (செப்.20-ம் தேதி ) முன்பு அளித்த பேட்டியிலேயே தெரிவித்திருக்கிறார்.

தற்போது அமைச்சரின் பேட்டி குறித்து கேரள பத்திரிகைகள், கேரள நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது அவரும், "ஆய்வு குறித்து ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்று ஆய்வு நடத்திய பிறகுதானே, புதிய அணைக்கான கருத்துருவே தயாரிக்க முடிந்தது' என்று கூறியுள்ளார். புதிய அணை அமையவுள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இங்கே எந்தவொரு பணியை மேற்கொள்வதாக இருந்தாலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் நடத்த முடியாது.

"வனத்துறையின் அனுமதி பெறாமல் எப்படி ஆய்வு நடத்த முடியும்? ஆய்வு நடத்தாமல் எப்படி டிபிஆர் (டீடெய்ல்டு பிராஜக்ட் ரிபோர்ட்) தயாரிக்க முடியும்?

2010-ம் ஆண்டிலேயே புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு விண்ணப்பித்தோம். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (ஈ.ஐ.ஏ) செய்யாமல் அனுமதி அளிக்க இயலாது என்று மத்திய அரசு சொன்னது. அதன் பிறகு இந்த மதிப்பீட்டைச் செய்யும் பணியை கேரள வனஆராய்ச்சிக் கழகத்திடம் அளித்தோம். அவர்களால் செய்ய இயலவில்லை. அதனால் இதைச் செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதுபற்றி மத்திய அரசுக்கும் தகவல் கொடுத்துள்ளோம்' என்று கேரள நீர்ப்பாசனத் துறையின் தலைமைப் பொறியாளர் வெளிப்படையாகப் பேட்டியளிக்கிறார்.

என்ன நடந்து கொண்டிருக்கிறது? மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பு வகித்த காலத்தில் இதற்கான அனுமதி கிடைத்ததாக கேரள எம்.பி.க்கள் சொல்கின்றனர்.

ஜனவரி 2010-ல் வெளியான செய்திகளில், கேரள நீர்ப்பாசனத் துறை புதிய அணைக்கான சர்வே நடத்தி, தற்போதுள்ள அணைக்குக் கீழே 426 மீ, 627 மீ, 650 மீ அணைகள் கட்டும் ஆய்வுகளை நடத்தியுள்ளதாகவும், இந்த இடங்களில் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து அறிய இதன் மாதிரிகளை ஆய்வுக்காக லால்பகதூர் சாஸ்திரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது இரண்டு கேள்விகளைத்தான் நாம் மத்திய அரசிடம் கேட்க வேண்டியிருக்கிறது.

புதிய அணையைக் கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இத்தனை பணிகளும் நடந்திருக்க முடியுமா? அனுமதியின்றி நடந்திருக்குமேயானால், அதற்காக மத்திய வனத்துறை என்ன நடவடிக்கையை இந்த மாநில அரசின் மீது மேற்கொள்ளப் போகிறது?

இதைவிட முக்கியமாக இன்னொரு கேள்வி இருக்கிறது.

மத்திய வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க முடியுமா? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இத்தகைய புதிய அணையைக் கட்டுவதால் பல்லுயிர் பெருக்கத்துக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுவிடாதா?

அணையின் நீரை 142 அடிக்கு உயர்த்தினால் அதனால் தேங்கும் அணை நீர்ப் பரப்பு பல ஆயிரம் ஏக்கர் அதிகரிக்கும். அப்போது பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும். அதைக் கருத்தில்கொண்டாகிலும் அணை நீரை 136 அடிக்கு மேலாக உயர்த்த அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி முறையிட்டிருக்கும்போது, புதிய அணை கட்டுவதால் மட்டும் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படாதா? இதற்குக் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதிலளிக்கட்டும்.

புவிவெப்ப மாநாட்டு ஒப்பந்தத்தில், வெப்ப மண்டலக் காடுகளைக் காப்பதாக ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமா? அதற்கு மத்திய அரசு அனுமதிக்குமா? என்கிற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன்.

அந்த இடத்தில் புதிதாக அணை கட்டும் விவகாரத்தை கைவிடும் கோரிக்கையைத் தவிர, வேறு எதை வேண்டுமானாலும் தமிழக முதல்வருடன் பேசத் தயார் என்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. புதிய அணையை ரூ.650 கோடிசெலவில் கட்டுவதற்கும் அவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள். புதிய அணையைக் கட்டும்போது, முல்லைப் பெரியாறு அணையை எவ்வாறு, எந்தெந்த நிலைகளில் உடைப்பது என்பதை பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியாக அளிக்கிறார்கள். உடைக்கப்படும் அணையிலிருந்து எந்தெந்தப் பகுதியை புது அணைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம் என்றும் பேசுகிறார்கள்.

இவ்வளவு நடக்கிறதே, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் பதில் என்ன? அணை கட்ட அனுமதி தருவாரா, மாட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்தியாக வேண்டும்!

பொய் சொல்வது யார், ஜெயந்தி நடராஜனா? 


உம்மன் சாண்டியா?


சண்டேன்னா மூணு! சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்!அப்புறம்....!




ஐ மு கூட்டணிக் கூட்டணிக் குழப்பங்களில், சாதனையாக எது இருந்ததோ இல்லையோ, கூட்டணிக் குழப்பத்தின் மெஜாரிட்டி பார்ட்னர் காங்கிரஸ் கட்சியை எவர் விரட்டுகிறார்கள், எப்படி மிரட்டுகிறார்கள் என்பதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதை நிச்சயமாகத் தொட்டுச் சொல்லலாம்! டம்மிப் பீஸ் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய ஆட்சியின் சாதனைப் பட்டியலில் இதையும் சேர்த்துச் சொல்லாவிட்டாலும், அத்தனை பேருக்கும் தெரிந்த ரகசியமாகத் தான் இது இருக்கிறது!

காங்கிரசை இப்போது ஒரு சிவப்புச் சேலையும் சேர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது!

சிவப்புச் சேலை என்றதும் மம்தா, அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் வீரம் மிகுந்த பெண் என்று தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்! 


இந்த சிவப்புச் சேலை ஒரு புத்தகம்! சிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை ( The Red Saree: When Life is The Price of Power)!

ஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது.  ஏற்கெனெவே இந்தப் புத்தகம்  பிஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 


புத்தகத்தின் முகப்பிலேயே " dialogues, conversations and situations found therein are the product of the author's own interpretation and do not necessarily reflect authenticity." உரையாடல்கள், சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை; அப்படியே அச்சு அசலாக நடந்ததாகச் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த அறுநூறு ப்ளஸ் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், மோதிலால் நேரு, ஜவஹர், ராஜீவ், சோனியா என்று மேற்கத்திய வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக நடப்பைத் தொகுத்திருப்பதாக ஆசிரியர் சொன்னதை, காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. சோனியாவின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிருக்கிறது.

நோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி! இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல  யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட!  யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.

காங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப்  புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி
ருக்கிறாராம்?

1977 இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா,ராஜீவ் மற்றும் தன்  குழந்தைகளை  அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம்! அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு  இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.

நேருவின் வீரப்பரம்பரை  வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம்! வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத்  திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....?

அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை! ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது! அம்புட்டுத்தேன்!

ஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்! தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன்வைக்கும் கேள்வி இது தான்!

"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லியிருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லி
ருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி ருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே!"

சாதாரண  சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும்மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான்..கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா?

காங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்துக் காண்பித்திருக்கிறார்! காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்!


இன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிருக்கிறார், அதில்  மூன்று பொய்கள் என்ற பகுதியை  இங்கே பார்க்கலாம்!

******
  
கிட்டத் தட்ட இரண்டு மாதங்களாக, மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனியின் எண்ணெய்க் கிணறில் இருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச் சூழலை  நாசப் படுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை பதினொருபேர் இறந்திருப்பதாக, கடல் வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிரம்பச் சேதமாகியிருப்பதாகவும் அதை பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி ஈடு செய்தே ஆகவேண்டும் என்று ஒரு வழியாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரக்கக் குரல் கொடுத்து விட்டார்! நாற்பத்தெட்டு மணி நேரக் கெடு வேறு விதித்தாயிற்று!

அமெரிக்க அதிபர் உரக்கக் குரல் கொடுக்கவில்லை என்று முந்தின வாரம் தான் அமெரிக்காவில் மனக்குறை பெரிதாக எழுந்தது. ரக்கக் கூவுவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்து விடுமா என்று அதிபரும் கேட்டுப் பார்த்தார். எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் குரல் எழுப்பியுமாயிற்று!


சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்கும் நிகழ்வுகளுக்குப் பிறகாவது இப்போதிருக்கும் சட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்று ஒபாமா பேசியிருக்கிறார். அங்கே அமெரிக்காவுக்கு  ஒன்று என்றால் எப்படிப் பேசுகிறார்கள்? இங்கே போபால் விஷவாயு விபத்து அப்புறம் அணு உலை விபத்து நட்ட ஈடு  மசோதா என்று வரும்போது எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

இந்திய அரசின் அமைச்சர்கள் நாட்டு மக்களுக்காகச் செயல்படுவதை விட இந்த மாதிரி பன்னாட்டுக் கொலைகாரர்களுக்குப் பரிந்து பேசுவதில் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்!
****** 

அமெரிக்க  ஒபாமா இருக்கட்டும், கண்டனூர்ப் பானா சீனா கிடக்கட்டும்! எவராக இருந்தால் தான் என்ன?

ஒரு சீரழிவு, தவறு என்று வருகிற பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் அதை எப்படிக் கையாள்கின்றன என்பதைக் கொஞ்சம்
அழுத்தமாக அதே நேரம் வேடிக்கையாகச் சொல்கிற இந்த வீடியோ இரண்டரை நிமிடங்கள் தான்!


உனக்கும் பெப்பே....உங்கப்பனுக்கும் பெப்பே! கொடுக்கிற பெட்டியை வாங்கிக் கொண்டு பேசாமல் போய்ச் சேர் என்கிற மாதிரி இல்லை?!