சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #4

நண்பர் ஒருவர் கூகிள் ப்ளஸ்ஸில் எழுதிய மாதிரி, ஜெயந்தி நடராஜன் காங்கிரசை  விட்டு வெளியேறுகிறேன் என்று பேட்டி கொடுத்து அதுவும்  பரபரப்புச்செய்தியான பிறகுதான் காங்கிரஸ்கட்சி இன்னமும் இருக்கிறது என்ற நினைப்பே இங்கே நிறையப்பேருக்கு வந்ததாம்! 

 



சொல்லி வைத்த மாதிரி எல்லாப்பழியும் ராவுல்பாபா மீதே சுமத்தப் படுவதுதான் ஒரு தனிநபர் மீதே கட்டமைக்கப்படும் வாரிசு அரசியலின் ஆகப்பெரிய பரிதாபமாக இருக்கிறது.


சோனியா அல்லது வாரிசுகள் தவறே செய்யாதவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. அவர்கள் தலையிலேயே  எல்லாப் பழிகளையும் சுமத்திவிட்டு ஆ.ராசா, தயாநிதிமாறன், அல்லது இப்போது இந்தப் பழிசுமத்தும் பட்டியலில்  புதிதாகச்சேர்ந்திருக்கும் ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தப்பித்துக்கொண்டுவிட முடியாது என்று தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.


2014 ஜனவரி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி எழுப்பிய   #ஜெயந்திடாக்ஸ் குற்றச்சாட்டுகள்  உண்மைதான் என்று காங்கிரஸ்கட்சி இப்போது சொல்கிறது. குற்றம் செய்தது உண்மையானால் தூக்கில் போடுங்கள் என்று #தூக்குமேடை வசனம் பேசுகிறார் முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலத்தின் பேத்தி. இந்த மாதிரி ஊழல் பேர்வழிகளை சீனாவில்செய்தது மாதிரி  #தூக்கில்போடப்போவதுயார்  என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. நிலக்கரி சுரங்க அனுமதிகளில் நடந்த ஊழல் எப்படி 2G ஸ்பெக்ட்ரம் திமுகவை விடாது கருப்பு என்று துரத்திக் கொண்டிருக்கிறதோ அதே மாதிரிக் காங்கிரஸ் கட்சியையும் விடாமல் துரத்த ஆரம்ப முகூர்த்தம் மன்மோகன் சிங்கை சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்ததில் ஏற்கெனெவே நடந்தேறியாகிவிட்டது. சிபிஐ விசாரணை வளையத்துக்குள் சிக்குவோம் என்ற பயமே ஜெயந்தி நடராஜன் இப்படிப்பேசுவதாக காங்கிரஸ் கட்சி சொல்கிறது. இதற்குமேலும் எழுத ஆரம்பித்தால்  இட்லி அம்மிணி சைசுக்குப் பெரிதாகிவிடும் என்பதால்ஒரு சின்ன ப்ரேக்.

****** 

நல்ல நாளிலேயே நாயகம்! இவரது நாக்கும் நக்கலும் அத்தனை கூர்மை! அதனாலேயே  காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதித்துக் கொண்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.  கட்சியில் மிகப்பெரிய இடத்துக்கு வரமுடியாமல் போனாலும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கிடைத்த இடங்களில் கத்திபோடுவதை வாடிக்கையாக  வைத்துக் கொண்டிருக்கிறார். பொங்கல் அதுவும் ஈரோட்டுப்  பொங்கல் என்றால் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கும் என்பதை சமீப காலங்களில்  ஈவிகேஎஸ் இளங்கோவன்.நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

1960களில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் முதல்வராக இருந்த பக்தவத்சலத்தின் பேத்தி ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த உடனேயே உங்கள் தாத்தா அரிசி பதுக்கிய கதை தெரியாதா என்று பதிலடி கொடுத்ததில் ஆகட்டும், அப்பனும் மகனுமாக  இன்னுமிரண்டு பேர் கூடவே வெளியேறினால் காங்கிரஸ்கட்சி இன்னும் கொஞ்சம் தூய்மை அடையுமென்று ப.சிதம்பரத்தையும் வாரிசு கார்த்தி சிதம்பரத்தையும் தொட்டு  வாரின விதம் ஆகட்டும், ஈரோடு என்றால் பகுத்தறிவு வெங்காயம் என்று தானே  அறிந்திருப்பீர்கள், அதையும் மிஞ்சுகிற விதமாக! ஆனால் பிரச்சினை காலைச்சுற்றின பாம்பாகக் கடிக்காமல் விடாதென்று சோனியா நினைத்தாரோ என்னவோ, இளங்கோவன் அப்படிப்  பேசியதில் அதிருப்தியைத் தெரிவித்தாராம்! இதைவிட சூப்பர்  பொங்கல்  வேறெவரும் வைத்துவிடமுடியுமா என்ன? !! 
******




















என்ன இது? முன்னாள் நீதிபதியாக இருந்தவர், எந்த ஒரு விஷயமானாலும் விவரத்தோடு பேசுகிறவர் மார்க்கண்டேய கட்ஜுவா இப்படிப் பேசியது என்று கேட்கிறீர்களா? கட்ஜு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாசியா இல்மியின் அழகை வர்ணித்து எழுதியுள்ளார். அதில், கிரண் பேடியை விட ஷாசியா இல்மி அழகு என்றும், அவரை முதல்வராக நிறுத்தியிருந்தால் பா.ஜ.க வுக்கு அழகால் வெற்றி உறுதி என்றும் ட்வீட் செய்துள்ளார். #வடபோச்சே அப்படியா, நான் பாக்கலியே என்று மறுகுகிறவர்களுக்காக 



எல்லாம் வயதான தோஷம்தான்! கல்கியின் பார்த்திபன் கனவு கதையில் வரும் வரி, அத்தியாயத்தலைப்பு இது!  



==


வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! ஓவ்வொன்றும் ஒருவிதமாக!

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்!  தலைப்பிட்டுக் கொஞ்சம் பதிவுகளை இங்கே எழுதிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா? கொஞ்சம் கதைகள், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பிடித்த வாசிப்பு என்று பல்வேறு விஷயங்களின் கலவையாக எழுதிக் கொண்டிருந்தவை அவை. 

நாயைக் கூட்டிக் கொண்டு போனால் செய்தியல்ல! நாயைத் தூக்கிக் கொண்டு போனால்..!? தினத்தந்தி படித்தே தமிழறிவை வளர்த்துக் கொண்டதாக ஒரு இணைய உரையாடலில் என்னிடம் ஒருவர் சொன்னபோது நான் அதிக ஆச்சரியப்படவில்லை.காரணம் எதையும் ஆழமாகக் கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நமக்கு மிகவும் சிரமமானதாகத் தானிருக்கிறது. வெளிப்படையாக இடைஞ்சல் தெரியாதவரை எதையும் கேள்விகள் கேட்டு, மண்டையைக் குழப்பிக் கொள்வது அனாவசியம் என்றே ஒதுக்கித் தள்ளி விட்டுப் போய்க்கொண்டே  இருப்பதில் அப்படி ஒரு சோம்பேறித்தனம், சுகம்!  அதனால் தானோ என்னவோ மொண்ணையாக மொக்கையாக எழுதுவது இணையத்தில் பொழுதுபோக்கத்தானே தவிர சீரியசாகப் பேசுவது எல்லாம் உதவாது என்றே கடந்துபோய்விடுகிறோம்.  முந்தைய பதிவில் வெளியுறவுக் கொள்கையைப் பற்றிக் கொஞ்சம் பேச ஆரம்பித்ததில் எழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம் என்று தனது பூ வனம் 
பதிவில் எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் ஜீவி எழுப்பிய கேள்வி அதற்கு அங்கே எழுதிய பதில் இன்னமும் முக்கியமான விஷயத்தைத் தொட்டே பேச ஆரம்பிக்கவில்லை என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கிறது 

செய்திகளில் பரபரப்பாக வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் மாற்றப்பட்ட விவகாரம், முதலில் கண்ணியமாக வெளியேறப் பலமுறை வாய்ப்புக் கொடுக்கப்பட்டும், கடைசிநிமிடம் வரை ஒட்டிக் இருக்கிறது கொண்டிருந்த விவகாரம், காங்கிரஸ் ஆட்சேபணை இவைகளை ஒதுக்கி வைத்து விட்டு பத்துநாட்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் பதிவில் At home, Modi has shaken up the diffident foreign-policy establishment with his proactive approach and readiness to break with conventional methods and shibboleths. By taking bold new tacks, Modi is charting a course to boost India’s strategic influence both in its neighborhood and the wider world.

Indeed, Modi has put his stamp on foreign policy faster than any predecessor, other than the country’s first post-independence prime minister, Jawaharlal Nehru. Yet Modi appears to have no intent of enunciating a Modi doctrine in foreign policy. He wants his actions to define his policy trademarks.என்று சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். இங்கே நாம் எது முக்கியமோ அதைக் கோட்டை விட்டுவிட்டு வேறெதையோ பேசிக் கொண்டிருக்கிறோமே என்ற ஆதங்கம். எழுத வேண்டியது நிறைய இருக்கிறது, எழுதுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.


முன்னாள் மத்திய அமைச்சரும், பக்தவத்சலத்தின் பேத்தியுமான ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். வழக்கமாக வெளியேறுகிறவர்கள் செய்கிற மாதிரித்தான்-குப்புறத் தள்ளின  குதிரை குழியும் பறித்ததாம் என்கிற மாதிரி,தான் எந்தத்தவறுமே  செய்யவில்லை. செய்ய வைத்தது ராகுல் காந்திதான் என்று சொல்லியிருக்கிறார்.

அப்படிப் போனதுதான் போனாங்களே! கூடவே  பானாசீனா, கார்த்தி  ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போயிருந்தா காங்கிரஸ் கட்சி இன்னும் கொஞ்சம் கூடுதலா தூய்மையடைஞ்சிருக்குமேன்னு ஈவிகேஎஸ் இளங்கோவன் சொல்லியிருக்கார்! #குஷ்பூ கட்சிகுள்ளார வந்ததும் மனுசனுக்கு தெகிரியம் எக்குத்தப்பா கூடிப்போச்சு போல! காங்கிரஸ் காரனுக்கு எதையும் சுயமாகச்  செய்யத்தெரியாது.இன்னொருவர் வந்துதான் செய்துகொடுத்தாகவேண்டும் என்ற உண்மையும் வெளிப்பட்டிருக்கிறது.  

#எங்கூர்லபெண்ணியம் #பெமு வுக்கு முட்டுக்  கொடுப்பதிலும் கொச்சையான கவுஜ எயுதி சர்ச்சை உண்டாக்குவதோடு முடிந்துவிடும். பிராண்டட் (மார்க்சிஸ்ட் என்றறிக) பெண்ணியம் #ஜெயகாந்தன் முன்பொருசமயத்தில் சொன்ன மாதிரி #சுதந்திரமானஅடிமைகள் ஆகவே இருந்துவிடுகின்றன.  

Angelina Jolie detailed the heartbreak of Iraqi and Syrian refugees in a revealing op-ed for the New York Times on Tuesday.

“For many years I have visited camps, and every time, I sit in a tent and hear stories,” wrote the 39-year-old mother of six. “I try my best to give support. To say something that will show solidarity and give some kind of thoughtful guidance. On this trip I was speechless.”  


#மகாத்மாகாந்தி யை கோட்சேயின் துப்பாக்கி குண்டுஒருமுறைதான் சாகடித்தது. உண்மையில் அதற்கு  முன்னாலேயே  காந்தியைக் கொன்றது இந்தியப் பிரிவினையும் அதை ஒட்டி எழுந்த கலவரங்களில் நடந்த உயிர்க்கொலைகளும் தான்! #நேரு கிரீடம் சூட்டிக் கொண்டு #mytrystwithdestiniy  உரைநிகழ்த்த ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த தருணங்களில்  கலவரப் பகுதிகளுக்குத் தன்னந்தனியாக, கண்ணீருடன்   சந்திக்கச்சென்ற ஒரே தலைவர் காந்திதான். சுதந்திரத்துக்குப் பின்னால் காந்திக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு குடும்பம் அவர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு செய்த அக்கிரமங்களோடு ஒப்பிடுகையில் கோட்சேயின் குண்டு சாகடிப்பதற்கு முன்னாலேயே #காங்கிரஸ்கட்சி காந்தியைக் கொன்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 


Last moments of Mahatma Gandhi
மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்று கல்கி எழுதியது நினைவிருக்கிறதா ?

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! ஓவ்வொன்றும் ஒருவிதமாக!  

******

ஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக?

மெரிக்க அதிபரின் மூன்றுநாள் இந்தியவிஜயம் வெளியுறவுக் கொள்கையில் மாறிவரும் சூழ்நிலைகள்,முன்னுரிமைகள், பிராந்திய பிரச்சினைகள் இவற்றில் இதுவரை இந்திய அரசும் அரசியல்வாதிகளும் கடைப்பிடித்து வந்த தெளிவற்ற நிலைபாட்டில் இருந்து ஒரு புதிய மாற்றத்தை சுட்டுவதாக  இந்தச்செய்தி சொல்கிறது. முக்கியமாக நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் சீனாவின் அடாவடித்தனம் குறித்த, ஒரு தெளிவான பார்வயுடனான .மாற்றம். இந்திய அமெரிக்க வணிக உறவுகள்  வலுப்படுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மூன்றுமே தனித்தனிக் காரணங்களுக்காகக் கவலைப்படுகிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது 



மெரிக்கசதிக்கு வீழ்ந்துவிடாதீர்-அறிவுரை என்று தலைப்பிட்டு தி இந்து நாளிதழ் வெளியிட்டிருக்கும் இந்தச் செய்தி, அதற்கு வாசகர் ஒருவரின் கமென்ட் இது " சீன அரசு எச்சரிப்பதைப் போல தலைப்பை இட்டிருப்பது அபத்தம். உள்ளே விரிவாக சீன பத்திரிகைகள் எச்சரிக்கை செய்கின்றதாக இட்டிருக்கிறீர். இந்தியா எச்சரிக்கை செய்வதற்கும் இந்து பத்திரிகை எச்சரிக்கை செய்வதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்..." இது ஒன்றே வெளியுறவுக் கொள்கை குறித்தான பார்வையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைச் சொல்வதாக இருக்கிறது.



 ஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக?#மார்க்சிஸ்டுகள் கேட்கிறார்கள். #திஇந்துகூடச்சேர்ந்துகேட்கிறது!  
ரலாறு ,வரலாற்றைப் பேசுதல் என்றாலேயே இங்கே நிறையப்பேருக்கு அலர்ஜி! அதனால்தானோ என்னவோ வரலாற்றைத்திரித்துப் பேசுவதும், வரலாறு என்பதே புனைவுகளால் ஆனது என்றும், இன்னும் கூடக் கொச்சையாக வரலாறு என்பது ஜெயித்தவர்களால் எழுதப்படுவது என்றும் ஒதுக்கி வைக்கப்படுகிற  ஒன்றாக  வரலாறு இருக்கிறது.இந்தப் பக்கங்களில் வரலாற்றைப்பேசுதல்  என்று நாடு விடுதலையான தருணங்களில் இருந்து சில விஷயங்களைத் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். 

ந்திய வெளியுறவுக் கொள்கை எப்படி எவரால் உருவாக்கப் பட்டது  என்பதை அந்தப்பதிவில் கொஞ்சம் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். சாதாரணமாக வெளியுறவுக் கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கைகளின் நீட்சியாகவே ஒவ்வொரு நாட்டின் பொருளாதார, பிரதேச நலன்களை முன்னிட்டே இருக்கும். இங்கே நேரு என்கிற கற்பனாவாதியின் கைகளில் சிக்கிக் கொண்டு கொள்கை எப்படிப் படாதபாடு பட்டது என்பதையும்  அங்கேயே கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 


நாடு விடுதலை அடைந்த தருணம்சுதந்திர இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைத் தீர்மானித்தது நேருவும்,அவருடைய ஆல்டர் ஈகோ என்று கூட சொல்லலாம்வி கே கிருஷ்ண மேனனும் தான்ஆங்கிலேய அரசின் அடிச்சுவட்டை ஒட்டிப் பணி செய்ய மட்டுமே தெரிந்த ஐ சி எஸ் அதிகாரிகளுக்குபோக வேண்டிய திசை எது என்பதை இந்த இரண்டு அதி மேதாவிக‌ள் தான் தீர்மானித்துக் கொடுத்தார்கள். 
நேருவுக்கு உலக சரித்திரம் அத்துப்படிசிறையில் இருந்த நாட்களில் மகளுக்கு உலக சரித்திரத்தைக் கடிதங்க‌ளிலேயே எழுதி சொல்லிக் கொடுத்தவர்அந்த ஒரு தகுதி போதாதாபுத்தகங்களில் சரித்திரத்தைக் கரைத்துக் குடித்துதன்னுடைய மகளுக்கும் கடிதங்களில் சொல்லிக் கொடுக்க முனைந்தவருடைய வாரிசுகள் புத்தகம், படிப்பின் வாசனை என்றாலேயே காததூரம் ஓடுகிற அளவுக்கு இருந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் கதை  யை  முன்னமே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

சீனாவுடைய சாய்ஸ் எதுவாக இருக்கும்?இந்தியா அல்லது பாகிஸ்தான்?  
இப்படி ஒரு கட்டுரை சென்ற செப்டம்பரில் எழுதப்பட்டதை இப்போது படித்துப் பார்த்தால் கொடுமையான காமெடியாகவே படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் சீனா தன்னுடைய வஸ்தாத் உதார்களுடன் எவராலும் நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கப்படவில்லை என்பது சீனர்களுக்கும் புரிந்தே இருக்கிறது.

சீனப் பொருளாதாரம் கொஞ்சம் தேக்கநிலையை நோக்கிப்  கொண்டிருப்பதும், அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதிலும் அமெரிக்கர்கள் மிக ஊக்கத்துடன் சீனத்துப் பூனைக்கு மணிகட்டுவதில் மும்முரமாக இறங்கியிருப்பதாகவே தற்போதைய நிலவரம் இருக்கிறது. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் சுமார் 4 லட்சம் கோடி டாலர்களை சீனா முதலீடு செய்திருப்பதில் 2014 இன் கடைசியில் சுமார் 153  பில்லியன் டாலர்கள் குறைந்திருப்பது, அமெரிக்கர்களை பயமுறுத்துகிற ஆயுதமாக நாலைந்து ஆண்டுகளுக்கு முன் மிரட்டிப் பார்த்தது போல இல்லை என்கிறது இந்தச்செய்தி  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபர் தன் நாட்டு மக்களுக்கு நாட்டின் நிலையை எடுத்துச் சொல்லும் ஸ்டேட் ஆப் தி யூனியன் உரையில் கூட சீனா குறித்த அமெரிக்க நிலை மிகத் தெளிவாக இருந்தது.

ஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக என்று மார்க்சிஸ்டுகள் வேண்டுமானால் கேள்வி எழுப்பலாம். ஆனால், நேரு காலத்தில்  இருந்து தொடரும் அசமந்தத் தனத்திலிருந்து இந்த தேசம்  விடுபடுவதை, மாற்றங்களைத் தடுக்க முடியாது. இது குறித்து வரும் நாட்களில்  தொடர்ந்து பேசுவோம். நீங்கள்  தயார்தானே?



என்ன தோன்றுகிறது என்பதைப் பின்னூட்டங்களாகச் சொல்ல முடிகிற நண்பர்கள்  அவசியம் தேவை. அப்படி இருந்தால் தான் குறைகளைத் திருத்திக் கொள்ள முடியும். பயனுள்ள பதிவாக  உங்களுடைய வாசிப்புப் பட்டியலில் இடம் பெறத் தகுதி உள்ளதாக  இந்தப்பக்கங்களில் தொடர்ந்து எழுத மாற்றங்கள் செய்ய உதவியாக இருக்கும். கொஞ்சம் சொல்லுங்களேன்! 

சண்டேன்னா மூணு! மொழிப்போர்! கொஞ்சம்அக்கப்போர்! இரவல்போர்!

1965, ஜனவரி 25. இன்றோடு எட்டாம் வகுப்பு மாணவனாக கையில் தார் டின் குச்சியுடன் பிரசாரம் தெருவில் ஹிந்தி ஒழிக என்று எழுதிக் கோஷம் போட ஆரம்பித்து ஐம்பது வருஷங்கள் ஓடிவிட்டன. மாணவர்கள் கொந்தளிப்பை #திமுக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. என்னை ஒரு #அரசியல்பிராணி யாக மாற்றிய தருணங்கள் அவை. சலூன்  கடையில் காத்துக்கிடந்த நேரங்களில் கடைக்காரர் பைண்ட்  செய்துவைத்திருந்த கன்னித்தீவு படிக்க ஆரம்பித்ததும் அப்படியே சலூன்காரர் அண்ணா, கலைஞர் நாவலர் என்று செய்த பிரசாரம் அல்லது மூளைச் சலவையில் மயங்கி அரசியலில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்ததும் இந்தப்பருவத்தில் தான். ஆனால் மாணவர் போராட்டம், அதைத்தவறாகக் கையாண்ட பக்தவத்சலத்தின் முட்டாள்தனம், ரேஷன் கடை விவகாரங்களால்   1967 இல் ஆட்சியைப் பிடித்த திமுக, ஆட்சியைப் பிடித்த வேகத்திலேயே  அடித்தளத்தை இழக்க ஆரம்பித்தது  அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுக்கிற கட்சியாகக் காட்டிக் கொண்ட திமுக விரைவிலேயே அரிசி கடத்துகிறவர்கள், வியாபாரிகளுடைய கட்சியாக மாறி, மாணவர்களுடைய எதிர்ப்பையும் மூன்றே வருடங்களில்  சம்பாதித்துக் கொண்டது. என்னுடைய அரசியல் ஈடுபாடு சலூனில் கிடைத்த பிரசாரத்தில் தொடங்கியிருக்கலாம்! ஆனால் மந்திரித்து விட்ட கோழி போல எப்போதும் இருந்ததில்லை! 

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆரம்பித்து வைத்த சுய லாபங்களுக்காக பாராட்டு விழா எடுத்து கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியது, அதை மாணவர்கள் எதிர்த்த போது உதயகுமார் மரணம் அப்புறம் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் மாணவனை அடித்துக் கொன்று தெப்பக்குளத்தில் மிதக்கவிட்டது என்று வரிசையாக திமுகவின் சுயரூபம், அந்தக் காலத்திலேயே கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்த கதையாகவும் ஆகிப் போனது. பதின்ம வயதின் முடிவில் மாணவனாகவும் திமுக எதிர்ப்பாளனாகவும், ஸ்தாபன காங்கிரஸ் கட்சியிலும்  இருந்தேன்.இந்திரா கொண்டு வந்த எமெர்ஜென்சி காலத்து அனுபவங்கள் தொடர்புகள் ஒரு இடதுசாரியாக மாறவும் பிறகு அதிலிருந்து  மீளவும் வைத்தன இதைக் கொஞ்சம் இங்கேயே பார்த்திருக்கிறோம். 


2
கண்ணில் பட்ட செய்தி 
2012 இல் மொழிப்போரைக் கொச்சைப்படுத்துவதாக ஆர்கேலக்ஷ்மண் வரைந்த கார்ட்டூன் ஒன்று NCERT பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டதை எதிர்த்து திமுக நடத்திய அக்கப்போர். கொஞ்சம் பழைய வரலாறு   
****** 

முறைகேடான தொலைபேசி இணைப்பு புகார்: ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் - தயாநிதி மாறன் அறிவிப்பு அக்கப்போர் என்றவுடனேயே கண்ணில்பட்ட செய்தி 

COMMENT (26)   ·   PRINT   ·   T+  
தயாநிதி மாறன் | கோப்பு படம்
இப்படி எல்லோருக்கும் கேஜ்ரிவால் மாதிரியே  விவாதம் செய்கிற ஆசை வந்துவிட்டால் இந்த நாடு தாங்குமா?

******
இரவல் தந்தவன் கேட்கின்றான்-அதை இல்லையென்றால் விடுவானா?
கண்ணதாசனின் இந்த வரிகள் கேட்க இதமாகத்தான் இருக்கின்றன. ஆனால், நிஜ வாழ்க்கையில் புத்தகங்களைக் கேட்கிறார்களே என்று இரவல் கொடுத்து விட்டு, அப்புறமாக அதைக் கேட்டுப் பாருங்கள்! உண்மை நிலவரம் புரியும்! 
 

விஜய் டிவியில் கோட் கோபி நீயா நானா நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனும் விவாதத்தில்! அவர் எழுதிய புலிநகக்கொன்றை  புத்தகத்தை வாங்கிப் படிப்பதற்கு முன்னாலேயே நண்பர் இரவல் கேட்கக் கூட இல்லை, எடுத்துக் கொண்டுபோய்விட்டார். திருப்பிக் கேட்டபோது புத்தகம் திரும்பி வரவில்லை. விரோதம்தான் வந்தது. அந்தப் புத்தகம் என்னுடைய வாசிக்க நினைத்த புத்தகங்களில் இன்னமும் வாசிக்கப்படாமலேயே இருக்கிறது.என்பது நினைவுக்கு வரவே சோகத்தில் டிவியை அணைத்து விட்டு இங்கே வந்தாயிற்று! 

     

குடியரசு தினம் கொண்டாடுகிறோம்!  குடிமைப்பண்பு, பொறுப்பு இவைகளை அறிந்திருக்கிறோமா? வளர்த்துக் கொண்டிருக்கிறோமா?   

குடியரசுதின வாழ்த்துகள்!

 

வெள்ளிக்கிழமை சந்தேகங்கள்! KDbrothers! மௌன்சிங்! சால்வை அழகர்!

வெள்ளிக்கிழமை சந்தேகங்கள்! முதலில் KDbrothers விவகாரம்! 


==

இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த #KDbrothers விவகாரம் செல்ஃப் எடுக்க ஆரம்பித்திருப்பதில் நேற்றுமுன்தினம் தயாநிதிமாறனின் முன்னாள் அந்தரங்கச் செயலாளர் மற்றும் இரண்டு சன் டிவி ஊழியர்களை சிபிஐ கைது செய்திருக்கிறது. 
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படும் தயாநிதி மாறனின் முன்னாள் தனி உதவியாளர் மற்றும் சன் டி.வி ஊழியர்கள் இருவர். படம்: ம.பிரபு
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படும் தயாநிதி மாறனின் முன்னாள் தனி உதவியாளர் மற்றும் சன் டி.வி ஊழியர்கள் இருவர். படம்: ம.பிரபு  நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் 

இன்று போலீஸ் காவலை எதிர்த்து, அவர்கள் தரப்பில் செய்யப்பட்ட மனுமீது சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 27 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது.


ஏற்கெனெவே 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திமுகவை விடுவேனா என்று துரத்திக் கொண்டிருப்பதன் தொடர்ச்சியாகவே தயாநிதி மாறன் சுற்றி வளைக்கப்படும் விவகாரமும் இருக்கிறது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நேற்றைக்கு தயாநிதிமாறன் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டியிருப்பதோடு ஸ்டாலின்,ஜிகே வாசன், தொல்.திருமா, என்று வரிசையாக ஆதரவுக்குரல்களைத் திரட்டி வருவதில் இன்றைய சேர்க்கை காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன்! 
சிலபல தொலைக்காட்சி ஊடகங்கள் சொந்தமாக இருக்கிற தெம்பில்  தயாநிதி நேற்று முழுதும்  அவரை சிக்க வைக்க ஒரு ஆர்எஸ்எஸ் அறிவுஜீவி தொடர்ந்து  முயற்ச்சித்து வருவதாகவும் அவரை திருப்தி செய்யவே சிபிஐ ஒன்றுமறியாத, தனக்குச்சம்பந்தமில்லாத சன்டிவி ஊழியர்களைக்  கைது செய்து அடித்து உதைத்து எதிரான வாக்குமூலம் வாங்க முயல்வதாகவும் சவுண்டு விட்டுக் கொண்டே இருந்தார்.  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பில்லை என்று தயாநிதி மாறனுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி பதில் சொல்லியிருப்பது இங்கே  அவருடைய  இந்த வீடியோ பேட்டியில்  மாறன் எப்படித் திரித்துச் சொல்கிறார்  என்பது சுத்தமாகப் பல்லிளித்து வெளிச்சம் போட்டுத்தெரிகிறது.

எதற்கெடுத்தாலும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மானநஷ்ட வழக்குப் போடுவேனென்று மிரட்டிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களைப் பார்த்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கடைசியாக ஒரு கேள்வி கேட்கிறார் பாருங்கள் !

மானமிருந்தால்தானே மானநஷ்ட ஈடு கேட்க முடியும் என்று!  வெளியில் தான்  இப்படி என்றால் திமுகவுக்குள் எப்படியாம்? ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தும் கூட ஒரு பிரயோசனமுமில்லை போல!
   
குமுதம் ரிப்போர்டர் அட்டைப்படம் இப்படி நக்கலாக! 

புயலுக்கு முன்னே அமைதி என்ற பாடல் வரிகளைப் போல திஹாருக்கு முன் புழல் தானா? 
******
cbi cartoon,coalgate cartoon, coal scam cartoon,

நிலக்கரி சுரங்க ஊழலில் விசாரிக்கப்பட்ட மௌன்சிங் என்ன சொல்லி இருப்பார் விசாரணை அதிகாரிகள் எப்படி வேர்த்து விறுவிறுத்துப் போயிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே கொஞ்சம் பயமாக இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது கற்பனை அல்லது பயம் வருகிறதா?
******
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம்
கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.என்று இந்தச்செய்தி சொல்கிறது 

குஷ்பூகட்சியில் சேர்ந்த பிறகு காங்கிரஸகாரனுக்குக் கூட தைரியம் வந்துவிட்டது என்று சொல்வதா? சால்வை அழகர் பானாசீனாவுக்கு நேரம் சரியில்லை என்று சொல்வதா?    
  

ஒரு புதன்கிழமை! ஆனால் அந்தப் புதன்கிழமை அல்ல!

ஒரு புதன்கிழமை! 
The scene of the stabbing attack in Tel Aviv, January 21, 2015.
இஸ்ரேல் டெல்அவிவ் நகரத்தில்  இன்று ஒரு 23 வயது பாலஸ்தீனிய இளைஞன் நடத்திய கொலைவெறித்தாக்குதலில் 12 பேர் குத்தப்பட்டனர். ஹமாஸ் இயக்கம் இந்த இளைஞனுடைய கிறுக்குத்தனத்தை வீரச் செயலாகப் பாராட்டியிருக்கிறது மேலும் செய்திகள் இங்கே 

இது இங்கே வீடியோ செய்திகளாக  
 

Peaceful Co existence அமைதியாக ஒருவரை ஒருவர் அங்கீகரித்து வாழும் பக்குவம் வருகிற வரை பாலஸ்தீனியர்களுக்கும் சரி வெறுப்பில் எரியும் வஹாபியர்களுக்கும் சரி விடிவுகாலம் இல்லை என்பது ஏனோ இங்கே பலருக்குப் புரிய மாட்டேன் என்கிறது.
******

கொலைவெறி பிடித்தலையும் மனிதர்களையே பேசிக்கொண்டிருந்தால் எப்படி?

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில்அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்கள் அன்புடன் ‘பிரியாணி பாபா’ என்றழைக்கின்றனர். இவரது குருவான காதர் பாபா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறதுஇவரது சிஷ்யரான பிரியாணி பாபா, குருவின் நினைவாக தினந்தோறும் அவரது தர்காவின் அருகே ஏழை பக்தர்களுக்கு பாசுமதி அரிசி, கோழி, ஆடு இறைச்சிகளால், நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இவரது பக்தர்கள் வழங்கும் நன்கொடையிலிருந்து ஏழைகளுக்கு பிரியாணி வழங்கப் படுகிறது என்று உயிர்க்கருணையுடன் சேவை செய்து வரும் ஒரு மகத்தான மனிதரைப் பற்றிய செய்தி இங்கே 

****** 

ஒரு புதன்கிழமை என்று தேடினால் இப்போதும் கூட 2008 இல் வெளியான A Wednesday திரைப்படம் தான் முன்னுக்கு வந்து நிற்கிறது. உன்னைப்போல்  ஒருவன் என்று தமிழில் கமல்ஹாசன் ரீமேக் செய்த போது ஏகத்துக்கும் சர்ச்சைகள் ரகளைகள் இணையத்தில் நடந்த பழைய கதை இப்போதும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது போல!


இப்படி ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை சிங்கைப்பதிவர் பிரபு இணையத்தில் பகிர்ந்து
கொண்டிருப்பதை இன்று புதன்கிழமை கண்ணில் பட்டது. கமல்ஹாசன் மீதான பழையபாசம் இன்னும் விட்டுப்போகவில்லை தொட்டுத் தொடருகிறது என்பதைப் புலப்படுத்துவதாக.

அது போக நடப்பு நிலவரத்தில் என்னமோ  பெருமாள் முருகன் என்கிற ஒற்றைப்புள்ளியில் தான் தமிழ்நாடே கூடிக் கொந்தளிக்கிற மாதிரி ஊடகங்களில் வருகிற செய்திகள், குறிப்பாக இன்று வந்திருக்கும் இந்தச்செய்தி Tamil Nadu Rallies in Support of Novelist
புதன்கிழமை காமெடியாக!

போதுமா? :-))))

மண்டேன்னா ஒண்ணு! சொதப்பல்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

மண்டேன்னா ஒண்ணு! சொதப்பல்கள் பலவிதம்! இப்படி சொதப்புகிற விதமாக சிலவிஷயங்களை இங்கே சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? நினைவில் இல்லை என்றாலும் பரவாயில்லை சொதப்புவதையே தங்கள் முழுநேரத்தொழிலாக வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் இருக்கும் வரை நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது கொஞ்சம் கேலிக்கூத்தாக மட்டுமே இருக்கும். தி ஹிந்து நாளிதழில் வந்திருக்கும் இந்தச் செய்தி அதை உறுதிப்படுத்துகிற மாதிரி!  பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைகளை அப்படியே இன்னமும் பின்பற்றுவதில், எழுந்திருக்கும் சொதப்பல் இது.

ஜெயிக்கிறவனே தோற்றவனுடைய பங்கையும் சேர்த்து எடுத்துக் கொள்வான் என்கிற வெஸ்ட்மினிஸ்டர் தேர்தல் முறைகளில் இருந்து விடுபட்டு தகுந்த தேர்தல் சீர்திர்த்தங்களைச் செய்தே ஆகவேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.  
******

சொதப்புவது மனித சுபாவம்!ஆனால் சொதப்பிக் கொண்டே இருப்பது மனித பலவீனம்!  இதற்கு அழகான உதாரணம் இந்த வீடியோ! அம்மா! தம்பி என்விரலைக் கடிச்சுட்டான் என்று புலம்பிக்கொண்டே விரலைக் கடிக்க மறுபடி மறுபடி தருகிற மாதிரி! ஐந்து வருடப் பழசானாலும் கூட இந்த வீடியோவை இதுவரை 809,031,229 தரம் பார்க்கப்பட்டிருப்பதில் இருந்தே சொதப்புவது எப்படி என்பது தான்  மனிதனுடைய மிகப்பெரிய சாதனையாகத் தெரிகிறதோ?
 

இதுவே இப்படியென்றால் காதலில் சொதப்புவது எப்படி என்று கேட்கவா வேண்டும்?

  .... ஆனா இந்தப் பொண்ணுங்க மனசை சைனாக்காரன் தயார் செஞ்சுருக்கான்  -இது சிம்பு.

மாட்டினாண்டா சிலம்பரசன்  -இது சூரி டயலாக்! எங்கே எப்படி என்று கேட்கிறீர்களா? இந்த ட்ரைலரில்தான்! காதல் சொதப்பல் என்றால் சிம்பு இல்லாமலா? 
   


இதெல்லாம் இப்படி இருக்க அமீர்கான் அனுஷ்கா ஷர்மா நடித்து சமீபத்தில் வெளியான PK  திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்து யூட்யூப் தளத்தில் பார்த்த ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்ட தருணங்களில் ஐயா நீங்கள் காதலில் தோல்வியடைந்தவரோ என்றொரு கேள்வி வந்தது.


#loveiswasteoftime  என்பதை நூறுவருஷ சினிமா எத்தனையோ விதங்களில் சொல்லியாகிவிட்டது என்று இந்த வீடியோவில் சொல்வது நிஜம் தான்!  #யார்சார்கேக்கறாங்க  என்று கடைசியில் கருத்துக்கள் வேறு! இப்படிப் பகிர்ந்திருந்ததில் தான் அப்படி ஒரு கேள்வி காதலில் ஜெயித்தவர்கள் கூட இப்படித் தங்களுடைய அனுபவத்தை உள்ளது உள்ளபடி உடைத்துச் சொல்லியிருக்கலாமே  என்று சொல்லியும் பார்த்தேன்.காதில் வாங்கிக் கொண்டார்களா என்பதே இன்னும்ம் சொதப்புகிற விஷயம் தான்! 

மண்டேன்னா ஒண்ணு! ஒரு புது வாரத்தின் தொடக்கம். ஆரம்பத்தில் கொஞ்சம் சோம்பல், சோகத்துடன் ஆரம்பித்தாலும் ,,அதாச்சும் காங்கிரசில் ஆரம்பிச்சு   #loveiswasteoftime வரை ஜாலியாக வந்தாச்சு இல்லியா?

வர்ட்டா? :-)))))