சண்டேன்னா மூணு! எல்லாமே அரசியல்தான்!

மய்யம் கமல் காசர் குறைந்தது மூன்று இடங்களில் பிரசாரம் செய்யவந்து கூட்டமில்லாததால் ரத்துசெய்து விட்டுப்போன கூத்தும் நடந்திருக்கிறது. அரசியலில் இது மிகவும்  சாதாரணமான விஷயம் என்பதால், கமல் காசரோ மய்யமோ அதிகம் பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டிய விஷயமில்லைதான்!

சிவகங்கை தொகுதியில் சினேகனுக்கு கொலைமிரட்டல் வந்ததாவது  நம்புகிற மாதிரி  இருக்கிறது! ஆனால்  கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் 24 மணிநேர ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டிருப்பது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது! 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காண்டிக்குமே அமேதி தொகுதி கைகழுவிவிடுமோ என்றபயம்! சிறுபான்மை வாக்குகள் அதிகமாக இருக்கும் கேரளா வயநாடு தொகுதியிலும் போட்டி என்ற செய்தி இடதுசாரிகளை உசுப்பி விட்டிருக்கிறது.   
வயநாடு தொகுதியில் CPI வேட்பாளரை எதிர்த்து ராகுல் காண்டி களமிறங்கினால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சிதைந்துவிடும் என்று CPI கட்சியின் டேனியல் ராஜா குரல் கொடுத்திருக்கிறார். இத்தனைக்கும் இடதுசாரிகள் தொடர்ந்து பலவீனப் பட்டுவருவதையும் இந்தப்பேட்டியில் D ராஜா ஒப்புக் கொண்டிருக்கிறார்! அவரவர் கவலை அவரவருக்கு!

காங்கிரசிடமிருந்து நழுவுகிறதா அமேதி? ராகுலுக்கு வேறு பாதுகாப்பான தொகுதி வயநாடுதானா? இந்த ஆசாமியைத் தானா அடுத்த பிரதமர் என்று இசுடாலின் முன்மொழிந்தார்? முன்மொழிந்த ராசிதான் படுத்துகிறதோ?   


அப்பாவும் மகனும் இமேஜை பூஸ்ட் செய்துகொள்கிறார்களாம்! பார்க்கும் போதே செட்டப் செய்து எடுக்கப்பட்டவை என்று சின்னக் குழந்தைக்குமே புரிகிறபோது எதற்காக இத்தனை முக்கல்?   

இட்லி வடை பொங்கல்! #19 சனிக்கிழமை ஸ்பெஷல்

எது சரியான அரசியல்? மூன்றே வார்த்தைகளினால் ஆன இந்தக்கேள்விக்கு சரியான விடையை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியுமா? அதுவும் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் கல்லூரி மாணவிகளிடையே இந்தக்கேள்வி உண்மையிலேயே இருந்ததா? எனக்குத் தெரியாது, ஆனால் இந்த விவாதம் கொஞ்சம் கவனிக்க வைத்தது என்பதென்னவோ உண்மை!

தொலைக்காட்சி விவாதங்களில் உண்மையைத் தேடுகிற தவறை நான் செய்ததில்லை! அதேநேரம், இவைகளைத் தவிர்க்கவும் முடியவில்லை. 40 நிமிடங்கள்    நேரமிருந்தால் கேட்டுப்பாருங்கள்! 


இந்த தேர்தலில் நாம் தோற்றால் அவ்வளவு தான்...: சாத்தூர் ராமச்சந்திரன் எச்சரிக்கை இதையே கொஞ்சம் உல்டாவாக ஆ! ராசா மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: ஆ.ராசா எச்சரிக்கை! இதேமாதிரி கனிமொழியும் பேசி இருந்தார். தோற்றால் தங்கள் கதி அதோகதிதான் என்று புரிந்து கொண்டு முதலில் இந்தமாதிரி இனிமேல் தேர்தலே இருக்காது என்று பயத்தில் கூக்குரல் எழுப்பியது காங்கிரசின் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தான்!  மோடி மீதான பயமே இவர்களை மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்று பெனாத்த வைத்திருப்பது தெளிவாகவே வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது!    


முகநூல் பகிர்வுகளில் சில, படிக்கும்போதே அப்படி நெஞ்சை அள்ளும்! கிறித்தவம் எப்படி ஒரு தேர்ந்த வியாபாரமாக, மார்க்கெட்டிங் உத்திகளோடு தன்னை புதுப்பித்துக் கொண்டே  வருகிறது என்பதை வெங்கடராமன் சீதாராமன் என்பவர் சுருக்கமாக இப்படி சொல்கிறார் ஒரு பிசினஸ் மேனேஜ்மென்ட் க்ளாஸ்ல பாடம் படிக்கிற மாதிரியே! 

யேசு பத்து கட்டளைகள் கூறியதாக சொல்வார்கள். எனக்கு தெரிந்தவரை யேசுவை வைத்து வியாபாரம் செய்யும் நம் உள்ளூர் பெந்தகோஸ்டு கம்பெனிக‌ள் உளவியல் ரீதியாக மூளையில் பத்து கட்டளைகளை தங்கள் விற்பனையாளரிடம் விதைத்து விடுவதாக தோன்றுகிறது. இந்த விற்பனையாளர்களும் அதை திறம்பட செய்வார்கள்.
அந்த பத்து கட்டளைகளையும் அதன் உள்ளார்ந்த காரணத்தையும், அதன் மார்கெட்டிங் நுட்பங்களையும் (Marketing Strategy) பார்ப்போம்.
கட்டளை 1) உங்கள் பெயரை இந்து பெயராகவே வைத்துக் கொண்டு, கூடவே கிறிஸ்துவ பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரனத்திற்கு ‘ராபர்ட் வரதராஜன்’, ‘அந்தோனி கருப்புசாமி’ போன்றவை. (Product Branding)
உள்ளார்ந்த காரணம். ஆங்கில/கிறிஸ்துவ பெயர்கள் ஒரு அந்நிய தன்மையை உருவாக்கும். அதனால் அப்பெயர்களை ஏற்றுக் கொள்ள பலர் தயங்குவார்கள். அதை இந்து பெயர்களோடு பினைப்பதால், கிறிஸ்துவமும் பாரதத்தை சேர்ந்ததுதான் என்பதுபோல் ஒரு மாயையை உருவாக்கும். பெயரை கேட்கும் ஒவ்வொருவரும் இவர் நம்மவர்தான், ஏதோ காரணத்திற்காக மதம் மாறி விட்டார் என்பதை உணரச் செய்யும்.
10% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
2) மிக சிறப்பாக உடை உடத்திக் கொள்ளுங்கள். “டக் இன்” செய்யப்பட்டு, ஷூ அனிந்துக் கொண்டு, ஒரு பெரிய கம்பெனியின் மேலாளர் போல் மேற்கத்திய பாணியில் உடை உடுத்திச் செல்லுங்கள். (Product positioning)
உள்ளார்ந்த காரணம் : இதனால் பலியாடுகள் வீட்டுக்குள் அனுமதிப்பார்கள். இவர் ஏதோ பெரிய மனிதர் என்கிற எண்ணத்தை இது உருவாக்கும். மேலும் இறக்குமதி செய்யப்பட்டது என்றால் நம் நாட்டில் அதற்கு கிராக்கி உண்டு.
இப்போது
20% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
3) முடிந்தவரை ஆங்கிலம், அல்லது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுங்கள். (Value addition)
இது மேலும் மதவியாபாரிகள் இமேஜை உயர்த்தும். இவர்கள் மிகவும் படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என்று பலியாடுகளை உணர வைக்கும்.
இப்போது
30% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
4) ஒருவரை மதமாற்ற முயற்சியை தொடங்கும் போது (அதாவது ஊழியம் செய்யத் தொடங்கும் போது) உங்களை கிறிஸ்துவர்கள் என்று காட்டிக் கொள்ளாதீர்கள், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளுங்கள். (Innovative product)
உள்ளார்ந்த காரணம். இது பலியடுகளுக்கு மதவியாபாரிகள் ஏதோ பொதுவாதிகள், எந்த மதத்தையும் சாராதவர்கள் என்பது போல் ஒரு எண்ணத்தை உருவாக்கும்
இப்போது
40% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
5) கிறிஸ்துவர்களை குறித்து யாரேனும் குறை கூறினால், ஆமாம் நீங்கள் சொல்வது சரி அவர்கள் ஆண்டவனால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுங்கள். அவர்கள் பாபிகள், வேடதாரிகள் என்று கூறுங்கள். எங்களுடைய சித்தாந்தம் வேறு என்று கூறுங்கள். (Product differentiation)
இதன் மூலம் கேட்பவர் ஏதோ புதியதாக தாங்கள் ஒன்றை அறிந்துக் கொள்வதாக நினைப்பார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கேட்பதற்கு ஆர்வம் ஏற்படும்
இப்போது
50% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
6) நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள். ஏன் இப்படி வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் என்று கேளுங்கள். (Problem Identification)
உள்ளார்ந்த காரணம். உலகில் பிரச்னை இல்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். ஏதேனும் ஒரு பிரச்னையில் தீவிரமாக இருக்கும் ஒருவரிடம் அதற்கு தீர்வு இருப்பதாக குறிப்பிட்டால் அவரை எளிதில் ஆட்கொண்டு விடலாம்.
இப்போது
60% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
7) நாங்களும் இந்துக்களாகதான் இருந்தோம். சமீபத்தில் தான் யேசுவை ஏற்றுக் கொண்டோம் என்று கூறுங்கள்.
(மதம் மாறினோம் என்று சொல்ல மாட்டார்கள்) (Direct Advertising)
உள்ளார்ந்த காரணம். அதாவது நாங்களும் உங்களில் ஒருவர்தான். உங்களை போலதான் முட்டாள்தனமாக இருந்தோம். ஆனால் இப்போது மாற்றத்தை அடைந்து விட்டோம். (உஜாலாவுக்கு மாறிவிட்டேன் என்பது போல்)
இப்போது
70% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
8) அவர்களின் நம்பிக்கைகளை மென்மையாக உடைக்க தொடங்குங்கள்.
உதாரணத்திற்கு நான் நடந்துக் கொண்டிருக்கும் போது என் கால்களால் ஒரு விநாயகர் படத்தை மிதித்தேன் அல்லது ஒரு நாய் ஒரு தேருவோர சிலையின் மேல் சிறுநீர் கழிப்பதை பார்த்தேன். தன்னையே காத்துக் கொள்ளாதது எப்படி கடவுளாகும் என்று கேளுங்கள். (Combating Competition)
உள்ளார்ந்த காரணம். இப்படி சொல்வதால் மதவியாபாரிகளுக்கு தங்கள் மேல் ஒரு பரிதாபம் இருப்பது போல் பலியாடுகள் உணர்வார்கள். மேலும் இது அவர்களை திடுக்கிட வைக்கும். நாம் ஏதோ தவறு செய்கிறோமோ என்று நினைக்க வைக்கும்.
இப்போது
80% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
9) தொடர்ந்து செல்லுங்கள். அவர்களை தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள்.
உள்ளார்ந்த காரணம். ஆரம்பத்தில் விருப்பம் இல்லாதவர்கள் கூட, திரும்ப திரும்ப அதற்கு உட்படுத்தப்படுவத‌ன் மூலமாக மாற வாய்ப்பு உள்ளது. (Repetitive implanting and Product demonstrating)
இப்போது
90% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
10) அவர்களை ஜெபத்திற்கு அழையுங்கள். அவர்களை ஜெபம் செய்ய வைத்து “ஆஹா நீங்கள் ஜெபித்தது மற்றவர்களை விட சிறப்பாக இருந்தது” என்று கூறுங்கள். (Product experimentation and Motivating)
தங்கள் மேல் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்று பலியாடுகளை உணர வைக்கும். தாங்கள் ஏதோ வித்த்தியாசமான ஒன்றை செய்து விட்டதாக உணர வைக்கும
இப்போது முழுவதும் முட்டாள் ஆக்கப்பட்டீர்கள்.
இவ்வளவு தாங்க கிருஸ்தவம்.  

மீண்டும் சந்திப்போம்!   

தேர்தல் செய்திகள்! கதம்பம் கதம்பமாக காதுல பூ!

இந்தத் தேர்தல் பிரசாரங்களில் சில வித்தியாசமான காட்சிகள் கண்ணில் பட்டன. முதலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தென்சென்னை வேட்பாளர் ரங்க ராஜனை ஆதரித்து கமல்காசர் பிரசாரம் செய்தது. வித்தியாசம் என்னவென்றால் பிரபலம் பிரசாரம் செய்தது அல்ல ஆச்சரியம்! கட்சியின் வேட்பாளர் ரங்கராஜனையும் பேசவிட்டதுதான் உண்மையிலேயே அதிசயம்! வித்தியாசம்! 

ஆனால் பொருள் புதிது நிகழ்ச்சியில் இகுக வேட்பாளர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் விவாதிக்க, மய்யத்தின் ரங்கராஜனை அழைத்ததில் என்ன உள்குத்தோ? ஏன் திமுக அதிமுக வேட்பாளர்களையும் கூப்பிடவில்லை என்றெல்லாம் ஊடகங்களைக் கேள்விகேட்க முடியாது.  


மதுரையில் அழகிரி படம்போட்டடீஷர்ட்டுடன் Selfie எடுத்துக்கொண்டார் இசுடாலின் என்றால் அதேபாணியில் இரட்டை இலை சின்னத்துடனான புடவை கட்டிய மூதாட்டி உதயநிதியைக் கொஞ்சுகிற மாதிரி ஒருபடம்! முந்தைய பதிவில் நெல்லைத்தமிழன் சந்தேகப்பட்ட மாதிரி இதெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு செய்த செட்டப் மாதிரித்தான் இருக்கிறது.
படத்துக்கு நன்றி : குமுதம் தளம் 

பிஜேபி வேட்பாளர் தமிழிசை சொல்கிற மாதிரி , திமுக வேட்பாளர் கனிமொழி சொல்ல முடியுமா?

இசுடாலின், ராகுல் காண்டி மேடைப்பேச்சில் தடுமாறுகிற மாதிரியே நாஞ்சில் சம்பத்தும் தடுமாறி இருக்கிறார்! கிரண் பேடி ஆணா பெண்ணா என்பதே தெரியாதாம்! தெரியாததைத் தெரிந்தமாதிரி அலம்பல் செய்வதுதானே திராவிடப் பம்மாத்து!!

அதென்ன தகுதியின் அடிப்படையிலேயே? ஊழல் ஒன்று தானே காங்கிரசையும் திமுகவையும் கூட்டணி தர்மம் அடிப்படையில் இன்றைக்கும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது?! அதுவும்   எப்படிப்பட்ட தகுதி வாய்ந்தவராம் சின்ன ஜாமீன்  கார்த்தி?
  

சிவகங்கை பிஜேபி வேட்பாளர் H ராஜா பெயர் சொன்னாலேயே திராவிடங்களுக்கு அப்படி எரிகிறது! ஏன், எப்படி என்று கேட்டுப் பாருங்கள்! 

1998 மார்ச் 28 நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வாஜ்பாய் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது இரவு 8.45 க்கு. அதை சகித்துக்கொள்ள முடியாத  ஜிகாதிகளால் இரவு 9.00 மணிக்கு பேராசிரியர் கே.ஆர்.பரமசிவன் அவரது இல்லத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது அவரது வீட்டிற்கு மிக அருகிலேயே (ஷெனாய் நகர் 2ஆம் தெரு, மதுரை) படுகொலை செய்யப்பட்டார்.  ஏழைமாணவர்களுக்கு இலவசக் கல்வி அளித்துவந்தவரை அவரிடம் படித்தவனையே வைத்து நடந்த கொலை. எழுத்தாளர் கடலோடி நரசையாவின் சகோதரர் இவர்.  நேற்று  அவரது நினைவு தினம்.

இது மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசலில்! அந்த அமைச்சர்  செல்லூர் ராஜு, எம்எல்ஏ  ராஜன் செல்லப்பா! எம்எல்ஏ மகன் ராஜ் சத்யன் தான் அதிமுகவின் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்.

தோசானாமிக்ஸ் ரகுராம் ராஜனே சொல்லிட்டாராம்! அந்த L போர்டை நல்லாக்  கவனிச்சுட்டு, கருத்து சொல்லுங்க!
            

தேர்தல் என்றால் காமெடி டைம்! அப்புறம் ...?

இங்கே பொதுத் தேர்தல் என்றால் ஏதோ திருவிழா மாதிரி ஜனங்கள் வேடிக்கை மட்டும் பார்க்கிற சாங்கியமாக இருப்பதை, நையாண்டி செய்து எழுதுவதுபோல மேலோட்டமாகத் தெரிந்தாலும், தங்களுக்குக் கிடைக்கிற சின்னவாய்ப்பைக் கூட ஜனங்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்களே என்கிற கோபமும் ஆதங்கமும்தான் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது இங்கே தொடர்ந்து வரும் நண்பர்களுக்குப் புரியும் என்றே நம்புகிறேன்!


அடுத்த வாரிசுகளின் அரசியல் ஸ்டன்ட்  என்று இங்கே கொஞ்சம் குத்தலாகச் சொல்கிறார்களே, சரிதானா?அல்லது நீட்டிமுழக்காமல் நேரடியாகவே அடடே! மதி இந்த கார்டூனில் சொல்கிற மாதிரியா?


ஒருவழியாக அமமுக தினகரனுக்குத் தேர்தல் ஆணையம் ஒரு பொதுச்சின்னத்தை வழங்கிவிட்டது.
பரிசுப் பெட்டியாம்! தேர்தலில் எடுபடுமா என்பது சற்றே பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம். தினகரனுக்கு கையைவிட்டுப்போன அதிமுகவின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கவேண்டும், சட்டசபை இடைத்தேர்தல்களில் கொஞ்சமாவது ஜெயித்தாகவேண்டும் என்கிற குறைந்தபட்ச அஜெண்டா மட்டுமே பிரதானமாக இருப்பதால், சின்னம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை! ரங்கராஜ் பாண்டேவின் பகிர்வும் அதைத்தான் சொல்கிறதோ? 
தினகரனின் அமமுகவுக்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கியது தான் தாமதம், அவர்களுடைய IT Wing, வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது...




இசுடாலின் இப்படி selfie எடுத்துக்கொண்டது நேற்று மதுரையிலாம்! 
என்ன விசேஷமென்றால், selfie எடுத்துக்கொள்ள விருப்பப் பட்டவர்கள் அத்தனைபேரோடும் இசுடாலின் கன்னத்தில் அறையாமல் முகம் சுளிக்காமல் selfie எடுத்துக் கொண்ட வரலாற்றுச்சிறப்புமிக்கவிஷயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, எடுத்துக்கொண்டவர் டீஷர்ட்டில் முக அழகிரி படமிருந்தும் கூட இசுடாலின் சிரித்தமுகத்துடன் போஸ் கொடுத்ததுதான்!அண்ணாவைப் பின்னுக்குத்தள்ளி கலீஞரை மட்டுமே முன்னிலைப் படுத்தியமாதிரி இசுடாலினால் இந்த அண்ணனை அத்தனை எளிதாகப் புறக்கணித்துவிட முடியவில்லையோ என்னவோ? 

முந்தைய இரண்டு பதிவுகளின் தொடர்ச்சியாக, சமூக வலைத்தளங்களால் விழிப்புணர்வே! சீரழிவே! என்று இரண்டு அணிகளாக விவாதித்ததன் தொடர்ச்சியாக, டாக்டர் அப்துல் கலாமிடம் உதவியாளராக இருந்தவரும், பின்னால் தனிக்கட்சி ஆரம்பித்தவருமான  பொன்ராஜ் பேச்சு.

கமல் கட்சிக்கு வந்த சோதனை: 4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்

வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான மார்ச் 26-ல் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார் தாமதமாக வந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை.வேட்பு மனு பரிசீலனையின் போது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியான இந்தியக் குடியரசுக் கட்சி வேட்பாளர் தங்கராஜ் வேட்பு மனு உரிய ஆவணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. மானாமதுரை சட்டப் பேரவை தொகுதியில் முன்மொழிவோர் கையெழுத்து இல்லாததால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராம கிருஷ்ணனின் மனு நிராகரிக்கப்பட்டது. அரூர் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குப்புச்சாமியின் மனு நிராகரிக்கப்பட்டது  

தேர்தல் நேரத்தில் இன்னும் நிறைய கோமாளித்தனங்களை செய்தியாகப் பார்க்கமுடியும்என்கிற ஒரே காரணத்துக்காக தேர்தலே காமெடியாகிவிடாது! தேர்தல் நேரம் காமெடி டைம் அல்ல! இதை மனதில் வைத்துக்கொள்வது நல்லது.
தேர்தல்கள் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடுகிற திருவிழாவும் அல்ல! வேட்பாளர்களாக நிற்பவர்கள் யார், கட்சி என்ன என்பதோடு அவர்கள் இதற்குமுன்னால் ஆட்சியில் இருந்திருந்தால் சாதித்ததென்ன, சம்பாதித்தது என்ன என்பதை கொஞ்சம் மதிப்பீடு செய்யவேண்டும். எதிர்த்து நிற்பவர் யார், அவருடைய கட்சி இவைகளைப் பற்றியும் மதிப்பீடு செய்யவேண்டும். 
ஒருவிரல் புரட்சி என்பது ஒருநாள் கூத்துடன் முடிவடைகிற கூத்து அல்ல! தவறானவர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு  நம்முடைய தலையை அவர்களிடம் ஒப்புக் கொடுத்துவிடுவதற்குச் சமம்.
             

ரங்கராஜ் பாண்டே! தொடரும் விவாதங்கள்!

முந்தைய பதிவில் ரங்கராஜ் பாண்டே நடுவராக இருந்து சென்ற சனிக்கிழமை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடத்திய விவாதம் குறித்து ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தேன். சாணக்யா தளத்தில் இன்று மூன்று பகுதிகளாக அந்த நிகழ்ச்சி வெளியாகி இருக்கிறது. இதன் முதல் பகுதி நேற்றே வெளியாகி விட்டது என்பதையும் சேர்த்தால் மொத்தம் 4 பகுதியாக இங்கே.



இதில் என்னைக் கொஞ்சம் அதிர வைத்த விஷயமாக, இங்கே தொலைக்காட்சி பார்ப்பவர்களில்  90% செய்தி சேனல்களைப் பார்ப்பதில்லை என்று பாண்டே சொன்னதுதான்! டிவி சீரியல்கள், பழைய சினிமா தாண்டி நம்முடைய ரசனை வளர்ந்துவிடாதபடி அத்தனை ஊடகங்களும் ரொம்பவே கவனமாக இருக்கின்றனவோ?


ப்ரைம் பாயிண்ட் ஸ்ரீநிவாசன்! இணையம் இங்கே வந்த நாளிலிருந்தே அதில் புழங்கிக்  கொண்டிருப்பவர்! Blogger, Wordpress  என்று எழுத ஊக்குவித்த தளங்கள் என்று ஆரம்பித்து, எப்படி விகாரப்பட்டும் நிற்கின்றன என்பதைப்பற்றிக் கொஞ்சம் சொல்கிறார். வாரம் ஒரு     நாளாவது  நெட், சமூக ஊடகங்கள் பக்கம் தலைவைத்துப் படுக்காமல் கட்டுப்படுத்திக்கொள்ளலாமே என்கிறார். நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது!  


ஜாக்கி சேகரும் கொஞ்சம் relevant ஆகப்பேசுகிறார். அடுத்துப் பேச வந்த பொன்ராஜ் பேச்சைக்காணோம்!  நாலாவது பகுதியாக மய்யத்தில் இருந்து விலகி வந்த CK குமரவேல் பேச்சு இருக்கிறது. என்ன சொல்கிறார், வாருங்கள், பார்க்கலாம்!

    
என்னமோ பெரிதாகப் பேசப் போகிறார் என்று எதிர் பார்த்தீர்களா? எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் பார்த்த எனக்கே கொஞ்சம் ஏமாற்றம்தான்!


ஆக, அரங்கத்தைக் கலகலப்பாக்கியது கஸ்தூரி ஒருவர் தான் போல! 

மீண்டும் சந்திப்போம்!
     

தேர்தல் நேரம்! நம்மைச் சுற்றிவரும் செய்திகள்!

விண்வெளியில் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா இன்று வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது. இதுகுறித்து நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, `விண்ணில் செயற்கைக்கோள்களைச் சுட்டுவீழ்த்தும் `மிஷன் சக்தி’ சோதனையை வெற்றிகரமாக இந்தியா நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தச் சோதனை, இந்தியாவின் செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. இதன்மூலம், செயற்கைக்கோளை துல்லியமாகத் தாக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது’ என்று பெருமிதப்பட்டதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடகம் என்று குறை சொல்லியிருக்கின்றன. 




காங்கிரஸ் ஒருபடி மேலேயே போய் அவர்கள் ஆண்டகாலத்திலேயே இதற்கான வலிமை இருந்ததாக சந்தடிசாக்கில் இந்தப் பெருமிதத்தில் பங்குபோட்டுக்கொள்ள முயற்சியும் செய்தது. ஆனால் ISRO வின் முன்னாள் தலைவர் மாதவன் நாயரும் DRDO வின் சரஸ்வத்தும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெறுமனே காகிதத்தில் புலி என்று எழுதி வைத்திருந்த மாதிரி, அரசியல் முதுகெலும்பு இல்லாமலிருந்ததைப் போட்டுடைத்து விட்டார்கள்! 


“எதிர்கட்சியினருக்கு பிரதமர் மோடி பற்றி எந்த செய்தி வந்தாலும் பயம்!” - கே.டி.ராகவன், (பாஜக) என்று தலைப்பிட்டு வைகுண்டராஜன் சேனலின் இன்றைய செய்தி விவாதம் சொல்கிறது. ஒரு முக்கியமான செய்தியைக் குறித்து பிரதமர் பேசவிருக்கிறார் என்ற ஒரு அறிவிப்பே எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. பதுங்குகுழிக்குப்போவேனா பேங்குக்குப் போவேனா என்ற பயம்! அக்ஷய் சந்தருடைய கார்டூன் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறது!
    

K T ராகவன் சொன்னதில் என்ன தவறு? எதையெல்லாம் கேள்வி கேட்பது என்கிற வரையறையே இல்லாமல் ஊடகங்கள் குதிப்பது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய காணொளி! 


சென்ற சனிக்கிழமை வடபழனி சிம்ஸ் ஆடிட்டோரியத்தில் ரங்கராஜ் பாண்டே நடுவராக இருந்து நடத்திய விவாதத்தின் காணொளி வேந்தர் டிவியில் ஒளிபரப்பப் பட்டதாகச் சொன்னார்கள். அதில் ஒரு சிறுபகுதி இன்று behindwoods தளத்தில் கிடைத்தது. 


எந்தநாட்களிலோ வலைப்பதிவராக மட்டும் தெரிந்த ஜாக்கி சேகர்  மய்யம் புகழ் CK குமரவேல் உட்பட  நிறையப்பேர் இரு அணிகளாகப் பிரிந்து விவாதித்ததன் முழுத்தொகுப்பையும் பார்க்க ஆவலை இந்த வீடியோ தூண்டியிருக்கிறது.  


நையாண்டி சற்றே தூக்கலாக!      

மீண்டும் சந்திப்போம்!

ஒரு புதன்கிழமை! நினைத்தேன் எழுதுகிறேன்!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தேர்வு பற்றி டாக்டர் ஷாலினி சொன்ன கருத்து இணையப்போராளிகளால் கடுமையாக விமரிசனம் செய்யப்பட்டது தெரியும் இல்லையா? மருத்துவர் ஷாலினி இதைக்குறித்து இங்கே விளக்குவது ஏற்றுக்கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது. 


தேர்தல் நெருங்க நெருங்க சேனல்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிற மாதிரி ஒருவித வெறியும் வந்துவிடும்.பிரதமர் மோடி இன்று முற்பகல் நாட்டுமக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லப் போவதாக அறிவித்ததில் ஏகக் களேபரம்! ஊகங்கள்! பிரதமர் A Sat என்று விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கிற ஏவுகணைப் பரிசோதனை மூன்றே நிமிடங்களில் வெற்றி கரமாக நடத்தப்பட்டதைப் பற்றி நாட்டுமக்களுடன் பெருமிதமாகப் பகிர்ந்து கொண்டதைக்கூட தராசு ஷ்யாமை வைத்துக் கொச்சைப் படுத்திய வைகுண்டராஜன் புதியதலைமுறை  சேனல்களை  என்னவென்று சொல்வது? அடடே! மதி இந்தக் கார்டூனில் சொல்கிற மாதிரியா?
    
கல்வித்தந்தை பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து பற்றி மூன்று வருடங்களுக்கு முன்னால் விகடன் வெளியிட்ட வீடியோ இது. மாணவர்களிடம் வசூலித்த 85 கோடி ரூபாயை கோர்ட்டில் டெபாசிட் செய்த பிறகே ஐயா வெளியே வந்து கல்வி வியாபாரத்தை அமோகமாக நடத்திக் கொண்டு இன்று திமுக கூட்டணி வேட்பாளர்!


ராதாரவி மேடையில் வாந்தியெடுத்ததற்குப் பல முனைகளிலிருந்தும் கண்டனங்கள் குவிகின்றன. அதில் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி ஒரு நையாண்டி!          
Sighhh Mr.Radha Ravi the struggle to stay relevant . You’re a sad man and we all feel sorry for you . May your soul or whatever is left of it find peace ✌️. We ll send you tickets for Nayanthara’s next superhit film .. have some popcorn and take a chill pill.

புத்தி கெட்டுப்போவதற்கு முன்னால் பழ.கருப்பையா கூட துக்ளக் ஆண்டு விழாமேடையில் சோ முன்பாகவே பேசிய விஷயம்தான் இது நான் கூட இந்தப்பக்கங்களில் அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருக்கிற விஷயமும்கூட! தியாகிகள் இருந்த ஒரிஜினல் காந்தி இருந்த காங்கிரஸ் இல்லை இன்றைக்கிருப்பது. அப்பன் நேரு பிரதமர் மகள் இந்திரா கட்சித்தலைவர், பிரதமர் இல்ல oficial hostess  என்றிருந்த அந்தக் காங்கிரசுமில்லை. பிரதமரானவுடன் கட்சியை உடைத்து இண்டிகேட் சிண்டிகேட் என்று இரண்டாகப் பிரித்த காங்கிரசுமில்லை. மகன் ராஜீவ் பிரதமராகி, கட்சியை சாம் பிட்ரோடாக்களை வைத்து நவீனமாக்கமுயன்ற காங்கிரசுமில்லை இது.


ராஜீவ் உயிரோடிருக்கும்போதே சோனியா உருவாக்கின கிச்சன் கேபினெட், இத்தாலிய உறவுகள் bofors கமிஷன் என்று உருவான வடிவமே இன்றைக்கிருக்கிற சோனியா காங்கிரஸ். 2004 முதல் பத்தாண்டுகள் ஆண்டதில்  தியாகசிகரம் சோனியா என்னமோ அடுத்தநாளே உலகம் அழிந்துவிடப்போகிற மாதிரி, அவசர அவசரமாக,  வரிசையாக ஊழல் மாற்றி ஊழல் என்று கொள்ளையடித்த CONகிரஸ் தான் இன்றிருக்கிற  சோனியாG CONகிரஸ் என்பது புரிந்தால் இவர்களுக்கும் கூட்டுக்களவாணி திமுகவுக்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் உதிரிகளுக்கும் வாக்களிப்போமா?

சொல்லுங்கள்!
                

தேர்தல் திருவிழாவா? ஊழல், திருட்டுக்கு அச்சாரமா?

பொதுத் தேர்தல் வந்தால் கூடவே புறக்கணிப்பு செய்யப் போவதாக சிலபல இடங்களில் போராட்ட  அறிவிப்புக்களும் வருவது நம்மூர் ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு, வாடிக்கை! இப்போது தங்களுடைய அபிமான வேட்பாளரை நிறுத்தாததால் தீக்குளிப்பு அறிவிப்பு வரைபோனது  சோனியா காங்கிரசில் என்பது இன்னொரு புதுவித வேடிக்கை!

9 வங்கிக் கணக்கு; ஆனால் வைத்திருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல் என்று திமுகவின் அழகான வேட்பாளரின் பின்னணி பற்றி தினமணி செய்தி சொல்கிறது  ப்ப்பூ! இதெல்லாம் ஒரு மேட்டரா?

பானாசீனா விவசாயியாம்! கோடிக்கணக்கில் விவசாய வருமானம் வருகிறதாம்! வருமானவரித்துறையும் ஆமாம்! பண்ணையாரே களத்தில் இறங்கி விவசாயம் செய்து சம்பாதித்ததாக ஒத்துக் கொண்ட கூத்தை விடவா தமிழச்சி மேட்டர் பெரிது? 



இன்னொரு கூத்தையும் பார்த்துவிடலாம்!  



கார்த்தி சிதம்பரம் குழம்புகிறாராம்! அவ்வப்போது மேடைகளில் நாத்திகம் பேசும்  செட்டிகளுக்கு வேண்டுமானால் குழப்பமாக இருக்கலாம்! ஆனால் நம்பிக்கையுள்ள இந்துவுக்கு அது கர்மா, கர்மவினை என்பது நன்றாகவே தெரியும். அப்பச்சிகள் ஆரம்பநாட்களில் வாக்குறுதி அளித்த கிராபைட் தொழிற்சாலை முதற்கொண்டு எந்த தேர்தல் வாக்குறுதியைத்தான் நிறைவேற்றியிருக்கிறார்கள்? வேட்பு மனுதாக்கல் செய்யும்போதே அராஜகத்தில் இறங்கிய கார்த்தி சுயேட்சை வேட்பாளரை வெளியே தள்ளிவிட்டு நல்லநேரம் முடிவதற்குள் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் என்கிறது செய்தி. 


    


மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆரம்பநிலையிலேயே  கழித்துக் கட்ட இங்குள்ள அதிகாரிகள் முனைகிறார்களா என்ன? இங்கே பெரம்பலூரில் வேட்புமனுவை ஏற்க மறுப்பு! திருப்பூரில் டார்ச்லைட் சின்னத்தோடு இருந்த சட்டையைக் கழற்றிவிட்டு வரச்சொல்லிக் குடைச்சல்! வேட்புமனு பரிசீலனை முடிவில் இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்குமோ? உங்களால் ஊகிக்க முடிகிறதா? TTV தினகரன் விஷயத்திலாவது அதிமுக தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டினால் இருக்கலாமோ என்று நம்ப  முடிகிறது. ஆனால் கமல் காசர் கட்சி விவகாரத்தில் சிலபல அதிகாரிகளே ஓவராகப் போகிற மாதிரித்தான் தெரிகிறது.   

   


யாருக்காவது விடை தெரியுமா? 

       

ராதா ரவி! வெற்றிகொண்டான்! தீப்பொறி ஆறுமுகம்!

எத்தனையோ பிரச்சினைகள் இருக்க நேற்று முழுதும் திமுகவின் பெண்ணுரிமை முன்னிறுத்தலில் ராதாரவி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ஒரே விஷயம் தான் தீப்பற்றி எரிந்த பரபரப்புச் செய்தியாக இருந்ததோ? என்ன மாதிரியான ஊடகங்களுடன், என்னமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் என்று எவரும் கவலைப்பட்ட மாதிரித் தெரியவில்லை. முகநூலில் இன்று காலை பார்த்த ஓர் பகிர்வு தொடர் கேள்விகளாக சிந்தனையில் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.


பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவாம்! இது எப்போதிலிருந்து என்று யாருக்காவது தெரியுமா? 

பாத்திமாபாபுவுக்கு கிடைக்காத…

சொந்த கட்சி பெண்ணின் இடுப்பை கிள்ளிய பொழுது கிடைக்காத……

பியூட்டிபார்லர் பெண்களுக்கு கிடைக்காத………

பெரியகருப்பன் ஐஸ் புரூட் பெண்ணுக்கு கிடைக்காத…… 

அன்பழகன் மகளின் தோழிக்கு கிடைக்காத……
செந்தாமரை மனைவிக்கு கிடைக்காத……

(SSR) ராஜேந்திரன் மனைவிக்கு கிடைக்காத………

முன்னாள் பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ வன்மம் செய்த பெண்ணுக்கு கிடைக்காத…

சாதிக் பாட்ஷா மனைவிக்கு கிடைக்காத…

வைரமுத்துவால் சீரழிக்கபட்டவர்களுக்கு கிடைக்காத…

சட்டப்பேரவையில் துரைமுருகனால் நிகழ்த்தப்பட்ட மானபங்கத்தில் கிடைக்காத……

கருணாநிதியின்  பாவாடை நாடா  பேச்சால் கிடைக்காத……

அண்ணாதுரை முற்றும் துறந்த பேச்சில் கிடைக்காத……

#பெண்ணியம் நியாயம்  தற்பொழுது நயன்தாராவுக்கு மட்டும் கிடைக்கிறதே என்று முகநூலில் ஆச்சரியம் கொள்கிறார் ஒரத்தி அன்பரசு! இதில்  ஆச்சரியம் ஒன்றுமில்லை! தங்கள் மீது திரும்பும் கேள்விகளை திசைதிருப்ப, தங்கள்பக்க ஓட்டைகளை மறைக்கக் கிடைத்த வாய்ப்பைத் திமுகழகம் சரியாகவே பயன் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை சமூகம் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி!

தொடர்புடைய முந்தைய பதிவு ராதாரவி நீக்கம்! திமுக தூய்மையாகிவிட்டதா என்ன?

நடிகவேள் எம் ஆர் ராதா அந்தநாட்களில் எழுப்பிய கலகக்குரல் இன்றைக்கும் கொண்டாடப்படுவதற்கு  தனித்த காரணங்கள் சில உண்டு. சினிமாவில் இருந்து கொண்டே சினிமாக்காரனை நம்பி மயங்காதே என்று சொல்கிற துணிச்சல் அவருக்கு இருந்தது. நடப்பு நிலவரங்களை,  அரசியல் விஷயங்களைப் போகிறபோக்கில் ஒரு கோடிகாட்டிவிட்டு பகடி செய்வதில் அவருக்கிருந்த திறமையில், வக்கீலுக்குப் படித்த மகன் (ராதா)ரவியிடத்தில் நூற்றில் ஒரு பங்குகூட இல்லை. ஆனாலும் ஏட்டிக்குப் போட்டியாக, இரட்டை அர்த்தம் தொனிக்கிற சங்கதிகளாகப் பொதுவெளியில் தொடர்ந்து பேசியே தன்னை லைம் லைட்டில் தக்கவைத்துக் கொண்டார் என்பதில் அவர் சாமர்த்தியம் ஒன்றுமில்லை. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியே அப்படி  அப்பட்டமான ஆபாசப்பேச்சில் தான் இருந்தது என்பதும் அதற்கிடம் கொடுத்து ஆரவாரம் செய்து ஆதரிக்கவும் ஜனங்களில் ஒருபகுதியினர் தயாராக இருந்ததும்தான் காரணம்! இதை இப்போதாவது புரிந்துகொள்ள முடிந்தால், சமூகத்துக்கு இனி விடிவுகாலம்தான்! ராதாரவியைக் கழற்றி விட்டதும் கூட நயன்தாராவுக்காக மட்டுமே இல்லை, வேறு சில அரசியல் காரணங்களும் இருக்கின்றன என்ற தகவலும் உண்டு.  

வலையெழுத்து, பத்தி எழுத்து இவைகளில் என்னை மிகவும்  கவர்ந்தவர் திரு R P ராஜநாயஹம். முகநூலில் தான் முன்பு ஆபாசப்பேச்சின் வெற்றிகொண்டான் குறித்து  எழுதிய வலைப்பதிவு ஒன்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரிடம்  அனுமதி பெறவில்லை என்றாலும், சொன்னால் ஏற்றுக்கொள்வார் என்கிற நம்பிக்கையில், அவருக்கு நன்றி தெரிவித்து இங்கே பகிர்கிறேன். இது அவருடைய வலைப்பதிவில் 2009 டிசம்பரில் எழுதியது.

வெற்றி கொண்டான்

“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS


திருநாவுக்கரசரின் குற்ற உணர்வு இன்னும் தீர்ந்து தெளிந்த பாடில்லை . தவிக்கிறார்...
தத்தளிக்கிறார் ..தக்காளி விக்கிறார்... அவருடைய குலதெய்வம் எம்ஜியார் ஆதியில் இருந்த 
கட்சி காங்கிரஸ் என்று கண்டுபிடித்து,அதில் இணைந்ததில் மிகவும் சந்தோசப் படுவதாக,
பெருமைப்படுவதாக சொல்லிவிட்டார்.

1940களில்எம்ஜியார் கதர் உடுத்தி காங்கிரஸ்காரராக, ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருமண் 
என்று இருந்தவர் தான் .ஆனால் அவருக்கு பெரிதாய் அரசியல் ஆர்வம் ,ஈடுபாடு,நோக்கம் ஏதும் 
கிடையாது என எம் .ஆர் .ராதா சொல்வார் . அவருக்கு சினிமாவில் எப்படியாவது முன்னுக்கு வர 
ஆர்வம் இருந்தது .உடம்பை மிகவும் கவனமாக பேணுவதில் அக்கறை இருந்தது . மது,சிகரட் 
கிடையாது .அப்போது மராட்டிய சிவாஜியாக எம்ஜியாரை நாடகத்தில் நடிக்க வைக்க வேண்டி 
பெரியார் விரும்பி சொல்லி விட்டாராம் . எம்ஜியாருக்கு அரசியல் சாயம் பூசிக்கொள்ள 
விருப்பமில்லாததால் மறுத்து விட்டார் . பின்னர் ஈ.வி . கே சம்பத் தான் சிவாஜியாக 
நாடகத்தில் நடித்தாராம்.அதன் பின்னர் வி .சி .கணேசன் அந்த நாடகத்தில் சிவாஜியாக நடித்து 
பெரியார் வாயால் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டு பிரபலமாகி திரையுலகிலும் சிவாஜி 
கணேசன் ஆனார். 

எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆனபோது நடந்த விஷயம் நினைவிற்கு வந்தது. 
எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி ' அன்றைய 
தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள் 
உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' என என்னத்தையோ 
உளறினார். உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்
கொண்டது இப்படி ! " குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான்! காந்தியும் 
நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா! இவன் 
பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே! நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே 
" ஏலே ! நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு 
கேட்கிறேன் .அவன் பதறிப் போய் " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான் . 
குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான் !"


(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது 
உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)

குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து 
வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும் .

எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார் .கருணாநிதி தன் பதிலாக " ஆம் . 
டெல்லியில் மன்றாடிய பரம்பரை !"என்றார் .
அப்போது திமுக மேடைகளில் வெற்றி கொண்டான் செய்த கலாட்டா -" நான் பக்தவத்சலத்தை 
பார்க்கப் போயிருந்தேன். அவர் அழுது கொண்டே சொன்னார் .
" இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா சாக விடமாட்டான் போல இருக்குப்பா.''
" ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள் ?" என்று நான் கேட்டேன் .
பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் " திடீர்னு குல்லாக்காரன் 'நான் 
முதலியார் . பக்தவத்சலம் தான் எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா என்ன செய்யறது ?"
தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை 
குரங்கு போலவே வரைவார்கள் .ஜெயந்தி நடராஜனின் தாத்தா.


மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த 
திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :
கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார் " மோகன்! நீ கலைஞரை ரொம்ப திட்டுற .
மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே . அது தான என் வேலை . திமுக வை எம்ஜியாரை 
வைத்து உடைத்ததே என் வேலை தான் . இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே 
என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே !
கடவுள் : மோகன் !நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து . கலைஞரை திட்டாதே .
மோகன் : முடியாது கடவுளே !
கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே ?
மோகன் : ஆமா கடவுளே !
கடவுள் : திட்டுவ நீ ?
மோகன் : ஆமா திட்டுவேன் .
கடவுள் : சரி நீ ஏறு ப்ளேன்னுலே !!

எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி 
வெற்றி கொண்டான் : மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய 
உத்தரவிடுகிறேன் '. அப்படி சொன்னது தான் தாமதம் . அந்த கோர்ட்டுக்கு எதிரே
 ஒரு ஓட்டல் .நல்ல பெரிய ஓட்டல் . நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க . இன்னைக்குப் 
போயி கேளுங்களேன் . அவன் சொல்வான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி " 
ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான் .
" இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "

( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே ,உடனே 
உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான்.
ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம் !)

நாவலர் நெடுஞ்செழியன் பற்றி வெற்றி கொண்டான் : அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே . 
நல்லா நெடு ,நெடுன்னு , கொழு ,கொழுன்னு .. அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது 
பேர் சாப்பிட்டிருக்கலாம்.விட்டுப்புட்டோம்.
திருச்சி திமுக கூட்டமொன்றில் சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவின் வீடு பற்றி வெற்றி கொண்டான் : டே! உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா. வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன். அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான். அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான்  உன் தலைவியோட ' வேதா நிலையம் '!


எழுத்தில் கொண்டுவர முடிந்த ஆபாசப்பேச்சு கொஞ்சம் தான்! மேடையில் வெற்றிகொண்டானும் தீப்பொறி ஆறுமுகமும் செய்கிற கொனஷ்டைகளோடு சேர்த்துக் கேட்டால் ஆபாசம் உச்சத்தைத் தொடும். 

எஸ் எஸ் சந்திரன் என்ற  நகைச்சுவை நடிகனை நினைவிருக்கிறதா?
வெற்றிகொண்டான் தீப்பொறி ஆறுமுகங்களின் கொஞ்சம் மென்மையான சினிமா வெர்ஷன் (சென்சார் இருந்ததால்!)

திராவிடமாயையில்  கொள்கை கோட்பாடெல்லாம் வெறும் சொல் அலங்காரம் மட்டும் தான்! ஆபாசப் பேச்சு முழக்கத்திலேயே முன்னுக்கு வந்தவை  திராவிட கழகம், திமு கழகம் எல்லாம்!