Showing posts with label சுதந்திரமான அடிமை. Show all posts
Showing posts with label சுதந்திரமான அடிமை. Show all posts

சண்டேன்னா மூணு! செய்திகள்! கருத்து! விமரிசனம்!



சமீப காலமாக மத்தியில் காங்கிரஸ் அமைச்சர்கள் கொஞ்சம் நல்ல கலகலப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்! சசிதரூர் டிவிட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்! கபில் சிபல் இன்னொரு விதத்தில்........!

தினமணி செய்தி இங்கே! ஜெயராம் ரமேஷ் எதையாவது சொல்லி, மீடியாக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்! மக்களும் ஏன் எதற்கு என்று யோசிப்பதேயில்லை! இதற்கும்,வழக்கம் போல, கொஞ்சம் கைதட்டலும், கொஞ்சம் கண்டனங்களும் கிளம்பியிருக்கின்றன.

போபால் ஏப். 2: பட்டமளிப்பு விழாவின் போது அதற்குரிய ஆடையை அணியும் பழக்கம் ஆங்கில காலனி ஆட்சி விட்டுச் சென்ற எச்சம் என்று கூறிய மத்திய அமைச்சர் ரமேஷ், விழா மேடையிலேயே பட்டமளிப்பு விழாவுக்கான மேலங்கியை கழற்றி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தினார்..

போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனத்தின் 7-வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்துகொண்டார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பட்டமளிப்பு விழா அங்கியை அணிவது வழக்கம். பட்டம் பெறும் மாணவர்களும் இதுபோன்ற அங்கி அணிவது வழக்கம்.

ஆனால் இந்த வழக்கத்துக்கு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

"சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட நாம் காலனி ஆட்சியின் அடிமைதளைகளை விடுவிக்கவில்லை. இதுபோன்று அங்கி அணிவதை அநாகரிகமான செயலாகவே நான் கருதுகிறேன்" என்று கூறிய அமைச்சர் தான் அணிந்திருந்த அங்கியை கழற்றினார். அவர் அவ்வாறு செய்தவுடன் அதிர்ச்சி கலந்து வியப்பில் விழாவில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் கைதட்டி வரவேற்றனர்.

சாதாரணமாக ஆடை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டால் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


அடிமை நாடாக ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கத்தில் இந்தியா  இருந்தபோது, கல்வி என்பதும் மதத்தைப் பரப்பும் ஒரு கருவியாக, கிறித்தவ மதபோதகர்களாலேயே நடத்தப்பட்ட தருணங்களில், பட்டம் அளிப்பவர்கள் பாதிரியார்களாகஇருந்து,  பாதிரிமாருக்குரிய பாவாடை போன்ற உடையணிந்து வர, பட்டம் பெறுபவரும் அதே மாதிரி உடை அணிந்து வரவேண்டும் என்பது ஒரு மரபாக இருந்ததை நினைவில் வைத்துக் கொண்டு பார்த்தால் அமைச்சர் சொன்னதில் தவறேதுமில்லை என்பது தெரியும்! ஆனால், இது நம் நாட்டு  மாண்புமிகுக்களுக்குத்  தெரிவதற்கே அறுபத்துமூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறது!

சபாஷ் அமைச்சரே! சபாஷ்!

சுதந்திரம் அடைந்து அறுபத்துமூன்று ஆண்டுகளுக்குப் பின்னல் கூட, காலனி ஆட்சியின் அடிமைச் சங்கிலியில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்பது, காலம் கடந்த ஞானோதயமாக, இப்போதாவது உங்களுக்குப் புரிய ஆரம்பித்திருப்பதற்காக இன்னொரு தரம் சபாஷ்! காலனி ஆட்சி, அடிமைத்தனத்தின் சின்னமாக, பட்டமளிப்பு விழா கவுன் மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறதா? வேறு ஒன்றுமே கண்ணுக்கு, அறிவுக்குப் புலப்படவில்லையா?

அமைச்சர்கள் பாட்டுக்கு  ஏதோ இப்படி ஏடாகூடமாக, மறந்துபோய் உண்மையைச்  சொல்லிவிட்டுப் போய் விட்டால் எப்படி? எதிர்ப்பதற்கு ஆள் வேண்டாமா? அதுவும் வந்தாயிற்று!

பழங்காலத்து விகார்கள்,போப்கள் மாதிரி ஆடையணிந்து தான் வரவேண்டுமா என்று அமைச்சர் சொன்னது, தங்களுடைய மத நம்பிக்கையைக் காயப் படுத்திவிட்டதாக, போப்பை அவமதிப்பது போல இருக்கிறது. அதனால் அமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெங்களூரில்  இருக்கும் குளோபல் கவுன்சில் ஆப் இந்தியன் கிறிஸ்டியன்ஸ் என்ற அமைப்பின் தலைவர் சாஜன் ஜார்ஜ் அறிக்கை விடுத்திருக்கிறார்!

விவரமறியாத சிறுவர்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த பாதிரிகளைக் காப்பாற்றுகிறார் தற்போதைய போப் என்று வாடிகனிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஜனங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்! போப் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷங்களும் வலுவாக எழுந்து கொண்டிருக்கும் நேரத்தில், அமைச்சர் போப்பை அவமதித்து விட்டார், மத நம்பிக்கையைக் காயப் படுத்திவிட்டார் என்று சொல்வது இன்றைய ஜோக்! வேறு என்ன மாதிரி எடுத்துக் கொள்ள முடியும்! சிரிக்கத் தான் முடியும்!

இந்த விவகாரத்தில் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள இங்கே! சொல்லியிருப்பதில் ஒரு சின்ன சாம்பிள்.

 

"This would radically change under the authoritarian John Paul II and his German enforcer, Josef Ratzinger, now Pope Benedict XVI. More than 100 theologians were silenced, embarrassed and cast out of Catholic institutions in a vain attempt to stop the development of a more democratic church.

We now see the results – a mass exodus from the church. The Pew Forum on Religion and Public Life reported that 10.1 per cent of the adult population in the United States now consists of people who have left the Catholic Church for another religion or for no religion. To put it another way, one out of every 10 people in the United States is an ex-Catholic. Ireland, the most Catholic country of all, has seen similar dramatic losses."

oooOooo


சசிதரூர் ! மத்திய அமைச்சரவையில், வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சர்! மிக மிக சுவாரசியமான, விவரம் தெரிந்த மனிதர்! எதைச் சொன்னாலும் அவரது கட்சிக்காரர்களே விவகாரமாக்கி விடுவார்கள்! டிவிட்டரில் சசி தரூர் என்ன சொன்னாலும் அதை ஊதிப் பெரிதாக்குவது சில காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு! முழுநேரத் தொழிலும் கூட !

சமீபத்தில் டிவிட்டரில் காந்தியைப் பற்றி ஜார்ஜ் ஆர்வெல் சொன்ன ஒரு அரிதான லிங்கை டிவிட்டியிருக்கிறார்! ஒரிஜினல் காந்தியை பற்றி நினைக்கக் கூட, ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதே கொஞ்சம் ஆச்சரியம் தான்!அகில்ரானா என்பவருக்கு ரீட்வீட் செய்த ஒரு குறுஞ்செய்தியில் அரசியல்வாதிகள் மக்களுடைய நண்பர்களாக இருக்க முடியாது என்று  சொல்கிற அளவுக்கு மனிதர் தொடர்ந்து ஆச்சரியப் படுத்திக் கொண்டு இருக்கும் அதே நேரம் காங்கிரசின் காலை வாரும் கலாசாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டு, மனிதர் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை சொல்வதாக இன்னொரு டிவிட்டிய செய்தி இருந்தது!

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருந்த செய்தியில் சசி தரூர்  சொன்னதாக இப்படி இருந்தது. "இந்திய அரசியல் கலாசாரத்தை மாற்றவே விரும்பினேன். ஆனால் என்னைக் கீழே தள்ளி விட்டார்கள்!"

ஒன்று, ஏற்கெனெவே கிடைத்த அனுபவங்களில் இருந்து மனிதர் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்  அதே நேரம் "நான் அப்படிச் சொல்லவே இல்லை, பத்திரிகைகள்தான் திரித்துப் போட்டு விட்டன" என்கிற மாதிரி அரசியல்வாதிகள் அடிக்கடி அடிக்கிற பல்டி மாதிரியும் இல்லாமல், எவ்வளவு நாசூக்காக நழுவியிருக்கிறார் பாருங்கள்! டிவிட்டரில் பார்த்தது, ரசித்தது!


Times of India falsely claims I said I tried to change Ind's pol culture.Am not that foolish!

 

Despite TOI's misleading lead,I am not grandiose enough to claim I can change India's political culture. Just trying to be myself&do my work


மனிகண்ட்ரோல்டாட்காமில், சசி தரூர் கொடுத்த பேட்டியை  வைத்துத் தான் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திய வெளியிட்டது. அதை மூன்று பகுதிகளாக இங்கே பார்க்கலாம்!  மூன்றில், இரண்டாவது பகுதி, டிவிட்டரில் அவரது குறுஞ்செய்திகள் எழுப்பிய அதிர்வலைகளைப் பற்றிச் சொல்வதை இங்கேயே பார்க்கலாம்!



தொடர்ந்து அவரைப் பற்றி மேலிடத்தில் போட்டுக் கொடுப்பதற்கே முழுநேரமாக வேலை செய்யும் காங்கிரஸ்காரர்களை மனிதர் சீக்கிரமாகவே புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்! அவர்கள் கத்திக் குரல் கொடுப்பதற்கு முன்னாலேயே சமாதானம் சொல்லியாயிற்று! விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், காங்கிரசின் ஒரு பகுதி தவிக்கிறது! காங்கிரசில் இந்த மனிதரை எனக்கு ஏனோ மிகவும் பிடித்திருக்கிறது! டிவிட்டரில்  

இப்ப என்ன செய்வீங்க?! இப்ப என்ன செய்வீங்க?!


oooOooo
 


"என்னுடைய மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் உன்னுடைய சுதந்திரம் முடிந்து விடுகிறது." 

இப்படி சுதந்திரத்தைப் பற்றிச் சொல்வதுண்டு. சுதந்திரம் என்றால், என்ன வேண்டுமானாலும் என்று அர்த்தமில்லை. ஒரு எல்லைக்குட்பட்டது தான் என்பதை ஏனோ  மறந்து விடுகிறோம்!

சானியா மிர்சா திருமணத்தைப் பற்றி சிவசேனா முதலில் முட்டாள்தனமாகத் திருவாய் மலர்ந்து எதையோ சொல்ல  ஆரம்பித்து, அப்புறமாக மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்து. இங்கே  பெயர் தெரியாத ஹிந்து அமைப்புக்கள் ஒரு தனி நபரின் திருமணத்தைப் பற்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிற முட்டாள்தனங்களை கொஞ்சம் எரிச்சலோடு  பார்த்துக் கொண்டிருந்த போது அவுட்லுக்  வார இதழில் அஜித் பிள்ளை எழுதிய இந்தப் பகடி கண்ணில் பட்டது. கொஞ்ச நாளைக்கு முன்னாள் லவ் ஜிஹாதி ஒரு வார்த்தை செய்திகளில்  என்று அடிபட்டது நினைவிருக்கிறதா? அந்த வார்த்தையை வைத்துக் கொண்டே, இதை கற்பனை செய்ததாக முடித்திருக்கிறார். முட்டாள்தனத்துக்கு இன்னொரு முட்டாள்தனம் தான் பதிலாக இருக்க முடியும் என்று நினைக்கிற கலாசாரத்தில் இருந்து என்று விடுபடப் போகிறோமோ தெரியவில்லை!

நகைச் சுவை, கிண்டல், பகடி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை!

 





மகளிர் தினப் பரிசு! செய்தியும் சிந்தனையும்!

இன்று சர்வதேச மகளிர் தினம். உழைக்கும் மகளிர்  தினம் என்று நூறு வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் ஆரம்பித்தது, உழைக்கும் மகளிர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்று அமெரிக்கா பிடிவாதமாக இருந்ததால், பொத்தாம் பொதுவாக சர்வதேச மகளிர் தினமாக, ஐ.நா சபை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

மகளிர் தினத்தன்று பொதுவாகவே பெண்ணீயம், பெண்ணீயச் சிந்தனைகள், அப்புறம் கொஞ்சம் வாழ்த்துக்கள் என்று கொஞ்சம் சம்பிரதாயக் கூத்துக்கள்  அதிகம் இருக்கும்! இதில் தனியாக என்ன போய் எழுதுவது என்று  கொஞ்சம் தயங்கியே, அமைதியாக இருந்தேன்.

மாநிலங்கள் அவையில், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் மசோதாவை எதிர்த்து, முலாயம் சிங் யாதவ், லொள்ளு பிரசாத் யாதவ் இரண்டு பேருடைய கட்சிக் காரர்களும் சேர்ந்து துணை ஜனாதிபதி அன்சாரி மேஜையில் இருந்த காகிதங்களை எடுத்துக் கிழித்து, ஏக ரகளை செய்து, மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கிறார்கள்! தொலைக் காட்சிச் செய்தியாகப் பார்த்தபோது, பாராளுமன்ற ஜனநாயகம் என்பது இந்தியாவில் எவ்வளவு கேலிக் கூத்தாகப் போய்க் கொண்டிருக்கிறது  என்பதைக் குறித்து, நாட்டு நடப்பில் அக்கறை கொண்ட எவரும் கவலைப் படாமல் இருக்க முடியாது.

மகளிர் தினத்தன்று தான் நிறைவேற்ற வேண்டும் என்ற பப்ளிசிட்டி ஸ்டன்ட் இல்லாமல்,  உரிய முறையில் விவாதம் நடத்தி, அனைத்துத் தரப்பினருடைய ஆதரவையும் பெறுவதற்கு காங்கிரஸ் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.1996 இலிருந்தே இந்த சட்ட மசோதா, பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. இரண்டு யாதவ்களும், தேவே கவுடாவும்  எதிர்க்கும் கோஷ்டியில் இருப்பதும் ஏற்கெனெவே தெரிந்ததுதான்.காங்கிரஸ் கட்சி  அரசியல் முதிர்ச்சி மட்டுமல்ல, பிரச்சினைகளைச் சமாளிக்கவும் தெரியாத இரண்டும்  கெட்டான் என்பது மறுபடி ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்பதாகவே இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

oooOooo
நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் பெண்கள் முன்னேற்றத்திற்கான மூன்று உறுதியான வழிகளை ஒரு பதிவாக நிகோலஸ் கிறிஸ்டோஃப் என்பவர் எழுதியிருக்கிறார்! தெரியாத புதிய விஷயங்கள் ஒன்றுமில்லை என்றாலுமே கூட  எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோமா என்பதை நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளும் உருப்படியான பதிவாக, அவசியம் தேவைப் படுகிற விஷயமாக இந்த மூன்று விஷயங்கள் இருக்கிறது!

முதலாவதாக, பெண்கள் கல்வியில் முக்கியத்துவம் கொடுப்பது! ஒரு ஆண் படித்தால், அது அவனுடனேயே நின்று விடுகிறது, ஆனால் ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால், ஒரு குடும்பமே படிப்பது போலாகி விடுகிறது. பெண்ணுரிமையின் முக்கியமான அம்சம் கல்விதான்!

இரண்டாவதாக, பெண்களுக்கான  உடல்நல சோதனைகளும், மருத்துவ உதவிகளும்! ஊட்டச் சத்து இல்லாமை, வயிற்றுப் பூச்சி போன்ற சாதாரணமான விஷயங்களில் கொஞ்சம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டாலேயே,   உடல்நலம், ரத்தச் சோகையில் இருந்து விடுபடுதல், பிரசவ கால சிக்கல்களில்  இருந்து விடுபடுதல் போன்ற நல்ல விஷயங்களை சாதிக்க முடியும்.  பெண்கள் என்று மட்டுமில்லை, சிருவர்களுக்குமே கூட இந்தப் பூச்சி, புழுத் தொல்லையில் இருந்து விடுபட விழிப்புணர்வும், மருத்துவ உதவியும் வேண்டும். மேலும் தகவல்களுக்கு!


மூன்றாவதாக, பெண்கள் தொழில் முனைவோராக வளரத் தேவையான உதவிகள்! இன்றைக்கு மைக்ரோ கிரெடிட், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்று இங்கேயே சில நல்ல விஷயங்கள் வளர்ந்து கொண்டிருந்தாலுமே கூட, இன்னம் அதிக கவனம் எடுத்து அவர்கள் சொந்தக் காலிலேயே நிற்கத் தயாராக்குகிற பொருளாதார விடுதலையை  ஊக்குவிக்க வேண்டும்!

ஒரு கூடுதல் சுவாரசியமான செய்தி! இந்தியாவில் கணிசமான சுயதொழில் செய்கிற பெண்கள், கார்பரேட் நிறுவனங்களிலும், இயக்குனர் குழுவிலும் பெண்களைப் பார்க்க முடியும். ஆனால், நமக்கு நாகரீகத்தையும், தொழிலையும் கற்றுக் கொடுத்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்தில், நிறுவன இயக்குநர்களாகப் பெண்கள் இது வரை இருந்ததில்லை! இது பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கை தரும் செய்தி!

oooOooo

இது ஒரு பிரெஞ்சு பத்திரிகையில் வந்திருந்த கார்டூன்! 
மகளிர் தினத்தை முன்னிட்டுப் பெண்களைக் கல்லால் அடிப்பது, கழியால் அடிப்பது நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக.....! பெண்களைப் பத்திரப் படுத்துகிறோம், நற்குடிப் படுத்துகிறோம் என்று மிக இழிவான நிலையில் வைத்திருக்கும் ஒரு சமூகம் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பதற்கு உதவினால் சரி!

நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல வருகிற செய்தி தெரியாத செய்யதுகளுக்காக,  இங்கே சவூதி அரேபியாவில் பெண்களின் நிலை என்ன என்ற செய்தி ஒன்று! செய்தி இரண்டு! 



'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற பாரதி வாக்கின்படி, பெண்களை இழிவு செய்யும் கொடுமை எங்கு நடந்தாலும், ஒரு மகனாக, சகோதரனாக, சக மனிதனாக நிச்சயமாகத் தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். சந்தேகமே இல்லை!

ஆனால், சமீப காலமாக பெண்ணுரிமை
இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுடைய நடவடிக்கைகளில், உள்ளூரில் சின்னஞ் சிறுமிகளைப் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கி , நீலப் படமாகவும் எடுத்து விற்பனை செய்த டேனிஷ் குடிமகனிடம் பாய்ந்ததாகத் தெரியவில்லை! பள்ளிமாணவிகளிடம்  சில்மிஷம் செய்யும் கிறித்துவ ஆசிரியர்களைப் பற்றி அவர்கள் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை!

இன்னும் இது மாதிரி செய்திகளை, இங்கே இந்தப் பக்கங்களில் வரிசையாகப் பார்க்கலாம்!

ஆனால் தோழர் வரதராஜன் மீது மட்டும் வஞ்சம் கலந்த பாய்ச்சலாக இருந்ததாக ஊடகச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது! தோழருடைய கடிதமே நிறையக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.



ஒரு நல்ல தோழனைக் காவு வாங்கியுமாயிற்று! சம்பந்தப் பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைத்து விட்டதா? பெண்ணுரிமை, பெண்விடுதலை என்பது இப்படித்தான் இருக்குமா?


 

சுதந்திரமான அடிமைகள்! Vs ஜெயகாந்தன்


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் திருமதி சீதாலட்சுமி அமெரிக்காவில் இருந்து கொண்டு  ஜெயகாந்தனைப் பற்றிய தனது நினைவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறார். 

 திருமதி சீதாலட்சுமி  மின் தமிழில் தன்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகமாக, தான் இந்த நினைவுகளை எழுதிக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் முகமாக எழுதியதைப் படிக்க!

நேற்றைய தினம் சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன் - 11 என்ற தலைப்பில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். ஒன்றும் புதிதில்லை. ஜெயகாந்தன் சமீபத்தில் இன்னொரு சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார், அல்லது சர்ச்சைக்குள் அவரைச் சிக்க வைத்து விட்டதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஜெயகாந்தனை வைத்து சர்ச்சைகள் கிளம்புவதில் பெரிய ஆச்சரியமில்லை. அவரும் இதற்கெல்லாம் அசருகிற மாதிரியும் தெரியவில்லை!

ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர்!


சமீபத்தில் சங்கர நேத்ராலயா ஆய்வு  நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவு ஒன்றை ஜெயகாந்தன் நிகழ்த்தியிருக்கிறார். அங்கே அவர் பேசியதில், “பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “என்ற பகுதி மாதர் சங்கங்கள், பெண் உரிமை இயக்கங்களின் கோபத்தைக் கிளறியிருப்பதாக இந்த இழையைப் படித்த பிறகுதான், தமிழ்நாட்டிலேயே இருக்கும் எனக்குத் தெரிய வந்தது.

ஜெயகாந்தன் பேசியது ஒன்றும் புதியதுமில்லை! அவருடைய கங்கை எங்கே போகிறாள், கோகிலா என்ன செய்து விட்டாள் கதைகளைப் படித்தவர்களுக்கு,  அவருடைய இந்த கருத்து புதிதாகவோ, அல்லது சர்ச்சைக்குரியதாகவோ தெரிவதில்லை என்பது தான் ஒரு வாசகனாக எனக்குப் படுகிறது.

” சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “ என்ற ஜெயகாந்தனின் சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. மனம்விட்டுப் பேசுவோம்" என்று திருமதி சீதாலட்சுமி அந்த விவாத இழையை முடித்திருக்கிறார்.

எனக்குள்  சில பழைய நினைவுகள் நிழலாடின! சுதந்திரம், சுதந்திரமான அடிமை என்ற வார்த்தைகள் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை  நினைவு படுத்தின. 

பொதுவுடைமை அரசியலில் கைகோர்த்த தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தது அந்தப் பெண் செய்த முதல் பாவம். அம்மா ராஜ்ஜியம் தான்! பெண்ணை, தங்களுடைய இயக்கத்தில் இருந்த ஒரு இளைஞனுடன் பழக அனுமதித்துக் காதல், திருமணத்தில் முடிந்தது. ஒரு பெண் குழந்தை கூட இருந்தது. கணவன் மனைவி இருவருமே மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அரசியலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

திடீரென்று, மாப்பிள்ளைப் பையனின் நடத்தையில் புகார்கள்! தினமும் குடிக்கிறானாம்! பெண்ணிடம் விசாரித்தால், பெண் கணவனுடைய சார்பாகத் தான் பேசினாள். அழுத்தி அழுத்திக் கேட்டதற்கு, எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்தாள். உச்சத்தில் இருந்த அப்பனையே ஆட்டிப் படைத்தவள் அம்மாக்காரி!

விவாகரத்து ஒன்று தான் வழி! அம்மாக்காரி முடிவு செய்தாகிவிட்டது. அப்பாவும் தலையாட்டியாகிவிட்டது. பெண்ணோ வேறு வழியில்லாமல், விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர, விவாகரத்தும் கிடைத்தாயிற்று! அம்மாவின் அடியை ஒற்றி மகளும் அரசியலில்! இப்போது. இன்னொரு திருமணமும் ஆகிவிட்டது.

என்னதான் முற்போக்கு, பெண் விடுதலை, சம உரிமை என்று மேடைகளில் பேசினாலும், அந்தப் பெண்ணின் அடிமனதில் இருந்த சோகத்தைப் பார்த்த
போது  புரிந்து கொள்ள முடிந்தது. 

இப்போதோ காலம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது! முழுநேரமும், ஏதோ ஒரு சங்கம், எங்கேயோ ஒரு கூட்டம், வழக்கம் போலவே பெண்ணுரிமை குறித்துப் புள்ளிவிவரங்களுடன் உரை நிகழ்த்துவது என்பதே அன்றாடம்நடக்கிறநிகழ்வுகளாகிவிட்டது. ஒரு இயந்திரத்தைப் போல!

அந்தப் பெண்ணைக் கேட்டால், நான் சுதந்திரமானவள் என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளக் கூடும்! ஏராளமான புள்ளிவிவரங்களோடு கூட பேசக் கூடும்! புள்ளிவிவரங்கள் எல்லாம் ஒரு அளவுக்குத் தான், வாழ்க்கையை வழிநடத்துகிற அளவுக்கு வலிமையானதும், அவசியமானதும் அல்ல!


ஜெயகாந்தன் சொன்ன மாதிரி 'சுதந்திரமான அடிமை' என்ற வார்த்தை தான் அந்தப் பெண்ணுக்குப் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றுகிறது!

ஏதோ பழக்கங்களுக்கு அடிமையாகவே இருந்து விடுகிற சுதந்திரம்!