அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!


ஆரோவில் மாத்ரி மந்திர் உள் அறை 


பிப்ரவரி மாதம் பிறந்தாலே, ஒரு இனம்புரியாத பரவசம் வந்து சேர்ந்து விடுகிறது!
வெளியே எத்தனையோ விஷயங்களில் மனம் அலை பாய்ந்தாலுமே கூட, மனம் ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள் பிப்ரவரி 21 ஆம் தேதி வருவதை ஒட்டி, தரிசன நாள் செய்திக்காகக் காத்துக் கிடக்கிற தவம் கூடவே தொடங்கி விடுகிறது. பல்வேறு காரணங்களால், புதுச்சேரி ஆசிரமத்திற்குச் சென்று நேரில் தரிசன நாள் சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள நேரம் கைகூடாமல் இருந்தபோதிலுமே கூட, மனம் அங்கே தான் மையம் கொள்ள விரும்புகிறது. அவளே எல்லாம் என்று இருந்துவிடத் தவிப்பு  இப்போதுதான் பற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

 
பிரபலமாக இருப்பது எப்படி இருக்கும் என்பதையும் பார்த்தாயிற்று! போலித்தனமான தலைவரே என்ற அழைப்பில், கூடியிருந்த கூட்டங்கள் எதிலுமே மயக்கம் அதிகமிருந்ததில்லை என்றாலும் அதிலேயே உழன்ற வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தாயிற்று! நண்பர்களே பகையாகி, உடல்நலமும் கெட்டு, மன நிலையும் ஒத்துழைக்காமல் இருந்த நரகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. 

 
அனுபவங்கள் ஒவ்வொன்றும், ஒரு காரணத்திற்காகவே நமக்கு அருளப் படுகின்றன. ஒவ்வொரு அனுபவமும் நம்மை உயர்த்துவதற்காகவே! நம்மைப் பக்குவப்படுத்துவதற்காகவே! 

அவரவர்க்கு வேண்டிய விதத்தில், வேண்டுகிற நேரத்தில் கிடைப்பதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்து வியந்திருக்கிறேன். வெற்றிகளாக நான் எண்ணிய எதுவும் நிலைக்கவில்லை என்பதோடு வெற்றிகளே என்னுடைய சுமையாகவும் ஆகிப்போனதாய் அறியவும் ஒரு நேரம் வந்தது. உலக அளவீடுகளின்படி நான் வெற்றி பெற்ற மனிதனில்லை! புத்திசாலியுமில்லை!

தோல்விகள், அவமானங்கள் என்னைச் சுருட்டி முடக்கி வைத்து விடவில்லை! ஒவ்வொரு தோல்விக்குப் பின்னாலும், நான் எங்கே தவறு செய்தேன் என்பதைத் தெளிவாகக் காட்டி, நான் போக வேண்டிய பாதை எது என்பதை வழிநடத்தும் வெளிச்சமாக இருப்பதையும்  அறிகிற நேரமும் வந்தது. பூஜ்யத்தைச் சின்னதாக வரைந்தால் என்ன, பெரிதாக வரைந்தால் என்ன? வட்டம் மா'வட்டமாகி விடுமா? அப்போதும் அது பூஜ்யம் தானே!

Consent to be nothing and none என்று  ஸ்ரீ  அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிற நிலையை வேண்டிக் காத்திருக்கிறேன் தாயே!


 
மேலே காண்பது  நாளை, 21 ஆம் தேதி புதுவை ஆசிரமத்திற்கு நேரில் செல்ல முடிகிறவர்களுக்கு வழங்கப்படும் தரிசன நாள் செய்தி! இதனுடன்,  பூக்களும் பிரசாதமாகக் கிடைக்கும்! சமாதியைச் சுற்றி அமர்ந்து கூட்டுத் தியானம் செய்கிற நல்ல வரமும், அன்னையின் அறைக்குச் சென்று, அன்னையின் அருளே இன்றைக்கும் சூக்குமமாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்கிற உன்னதமான அனுபவமும் கிடைக்கும். ஏதோ ஒரு முறை அப்படியொரு நல்வாய்ப்புக் கிடைத்த தருணத்தை நன்றியோடு இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஸ்ரீஅரவிந்த அன்னையின் மலர்ப்பதங்களில் சரணடைகிறேன். 

பிரச்சினைகள் சூழும்போது..!


1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்" ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்" அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.

இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.

என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
“Supreme Lord, eternal Truth, let us obey Thee alone and live according to Truth.”

இப்போது நான் சந்தித்துக் கொண்டிருக்கும் சில தனிப்பட்டபிரச்சினைகள் ஏகப்பட்ட வலி, வேதனைகளைத் தருவதாக, மறுபடியும் தனித்து விடப்பட்டதாக உணர்கிற அளவுக்கு முற்றிக்கொண்டு வருகிறது. இப்படிச் சோர்ந்து விழுகிற தருணங்களில் எல்லாம் ஸ்ரீ அரவிந்த அன்னை என்னோடு துணையாக இருப்பதை வழிநடத்திச் செல்வதை அறிந்தே இருக்கிறேன். நான் தனியன் இல்லை எனக்கொரு அன்னை இருக்கிறாள் அவளே எல்லாமுமாக இருந்து என்னை வழி நடத்துகிறாள் என்கிற நம்பிக்கையே என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.   
   

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 

செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! ஊர்வம்பு, அக்கப்போர், நேரு பிரதாபம்!

ஊர்வம்பு, அக்கப்போர், கவர்ச்சிப்படம்  சதக்சதக் என்று வெட்டுகிற மாதிரிச் செய்திகள்  கிடைக்காத நேரத்தில் மொழிப்பெருமை பேசியே சலூன் டீக்கடைகள் தயவில் வளர்ந்த நாளிதழ் அது. கொஞ்சம் பிரபலமான ஒருத்தர், அவர் உயிரோடிருக்கும்போதே இறந்து விட்டதாகச் செய்தி வெளியிட்டு விட்டது. ந்தப்பிரபலம் அலறியடித்துக் கொண்டு செய்திகளை முந்தித் தருகிற  நாளிதழ் ஆசிரியரைச் சந்தித்து என்ன இந்தமாதிரிச் செய்தி வெளியிட்டு விட்டீர்களே என்று புலம்பினார். நாளிதழ் ஆசிரியர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் இதற்கேன் பதறுகிறீர்கள், இன்னார் இன்னும் சாகவில்லை என்று செய்தி போட்டு விட்டால் போகிறது என்றாராம்.  


செய்திகளை முந்தித்தருகிறேனென்று இப்படித்தான் உண்மையில் இறந்துபோன ஒரு ஹிந்தித்திரைப்பட நடிகை மனோரமாவை  நம்மூர் மனோரமாவுடன் குழப்பிக் கொண்டு நேற்று ஒரே களேபரம். ஆச்சியே வீடியோவில்  நேரில் வந்து ஐயா, நான் நல்லாத்தான் இருக்கிறேன் ஐயா என்று சொல்ல வைத்து  விட்டார்கள். அவரே சொல்கிற மாதிரி ஏதோ கண்ணேறு பட்டுக் கழிந்து போனதாகத்தான் நினைக்க வேண்டும் போல. 


.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். . அண்ணாதுரை,மு கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா  மற்றும் எம்ஜியார் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும்என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார். 1000 திரைப் படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனை வேறு.

****** 

வேறெந்தப் பதிவரும் துக்ளக் இதழின் ஆசிரியரும், அரசியல் விமரிசகருமான சோ எஸ்  ராமசாமியைக் குறித்து இந்த அளவுக்குப் பதிவுகள் அதுவும் இத்தனை விரிவாக எழுதியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். மொத்தம் 145 பதிவுகள் என்று அவருடைய வலைப்பக்கம் காட்டுகிறது. இந்த வீடியோவைப் பார்த்தபோது துக்ளக் ஆண்டுவிழாவைக் குறித்து உடல் நலம் சரியில்லாத நிலையிலும் 2013 ஜனவரியில் பதிவர் டோண்டு ராகவன்  எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சென்னைப்பதிவர்கள் நடத்திய Good Touch Bad  Touch பற்றிய விரிவான நிகழ்ச்சித் தொகுப்பை வீட்டுக்குத் திரும்பியவுடனேயே எழுதி வலையேற்றம் செய்த சுறுசுறுப்பு இன்னமும் மனதில் நிற்கிறது. இத்தனைக்கும் அவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. எழுத்தின் வழியாகவே அறிமுகமான ஒரு நல்ல வலைப்பதிவர். அவர் பதிவுகளை வாசித்திருக்கிறீர்களா?

******   
'காவியத்தலைவன்' படப்பிடிப்பில் இயக்குநர் வசந்தபாலன் மற்றும் நடிகர் சித்தார்த்

ஒரு சினிமா இயக்குநராக தான் செய்த அபத்தங்கள் என்னவென்று இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'காவியத்தலைவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தற்போது தனது அடுத்த படங்கள் குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு சினிமா இயக்குநராக தான் செய்த அபத்தங்கள் என்னவெல்லாம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பது ஒரு 20 + காரணங்கள் என்று தி இந்து தமிழ் நாளிதழ் எடுத்துப் போட்டிருக்கிறது  

சொன்னதெல்லாம் இருக்கட்டும்! சொல்லாமல் விட்ட முக்கியமான ஒன்று இருக்கிறதே! இவர் இயக்குனர் ஆனதே முதல் பெரிய அபத்தம் என்று யார் அவருக்கு எடுத்துச் சொல்லப்போவதாம்?

nehru_cover 

அபத்தம் என்று சொல்லும்போது இந்திய அரசியலில் அபத்தங்களின் உச்சமாக இருந்த நேருவை மறந்து விட முடியுமோ?

எஜமானருக்கு விசுவாசமான நாய் படம் போட்டு அந்த நாட்களில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்  HMV என்று கிராமபோன் ரிக்கார்டுகள் இருந்தது நினைவிருக்கிறதா? எஜமானவிசுவாசம் மிகுந்த ஐசிஎஸ் அதிகாரிகளால் நேருவின் பெண்பித்து, அரசியல் பலவீனங்கள் குறித்த செய்திகள் மிகுந்த கவனத்துடன் மூடி மறைக்கப்பட்டாலும் வெளியே கசிவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

மேலே நேருவின் அந்தரங்க உதவியாளராக இருந்தவர் எழுதிய நினைவுகள் முதலில் 1977 இல் வெளியானது பின்பு வெளிப்படையாகத் தடை செய்யப்படாவிட்டாலும், கிடைக்காமல் செய்யப்பட்டது, ஸ்க்ரிப்ட் தளத்தில் இரண்டு பகுதிகளாகவும் அல்லது இங்கே பிடிஎப் ஆகவும் கிடைக்கிறது 

******   

சண்டேன்னா மூணு! கேஜ்ரிவால்! முகுல் ராய்! நேரு!

எதிர்பார்த்தபடியே டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாக் கட்சிக்குக் கொஞ்சம் கசப்பு மருந்தைப் புகட்டியிருக்கிறது. எதிர்பாராத தகவல் என்னவென்றால் கேஜ்ரிவால் முதல்வராக இருப்பார், ஆனால் எந்த இலாகாப் பொறுப்புமில்லாதவராக இருப்பார் என்பது மட்டும் தான்! மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இல் ஆம்ஆத்மிகட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதும் பதிவான வாக்குகளில் சுமார் 54% ஆம் ஆத்மி கட்சிக்கே கிடைத்திருக்கிறது என்பதும் மேலோட்டமாக கேஜ்ரிவால் ஆதரவாளர்களுக்கு இனிப்பான சேதியாக இருக்கலாம்.ஆனால்,டில்லி மக்களுடைய எதிர்பார்ப்புகளை வரு எந்த சாக்கும் சொல்லி திசைதிருப்பிப் பழைய மாதிரி, தப்பித்துக் கொண்டு ஓட முடியாது என்பது இந்தத்தேர்தல் முடிவுகள் கேஜ்ரிவால் அண்ட் கம்பனிக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கை! 



படத்தில் போஸ், ஸ்டன்ட் நன்றாக இருக்கிறது, இல்லையா? ஆனால் ப்ராக்டிகலாக முடியாது என்பது புரிகிறதா? இதே மாதிரித்தான் #கேஜ்ரிவால் அடிக்கிற கூத்துகள், ஸ்டன்ட் எல்லாமே! நடைமுறைக்கு உதவாது என்பது டில்லி வாசிகளுக்குப் புரியாமல் போனதேனோ?



  1. Delhi 2015 Election Results: Has BJP strategized its own defeat ?

    Tehelka-14-Feb-2015
    ... BJP strategized its own defeat ? | Tehelka.com ... TehelkaEditorial · IT and Systems · Tehelka.com · Home · Current Affairs · Investigations ...
நேற்றைக்கு தெஹெல்கா தளத்தில் பிஜேபி  டில்லியில் திட்டமிட்டே தோற்றது என்ற ரீதியில் ஒரு புலனாய்வுக் கட்டுரையை வாசித்தேன். தற்சமயம்  அந்தத் தளம் இயங்கவில்லை. தளம் இயங்க ஆரம்பிக்கும்போது மேலே உள்ள லிங்கில் புலனாய்வு லட்சணத்தைப் படித்துக் கொள்ளலாம் 


கிட்டத்தட்ட அதே பல்லவியை காங்கிரசின் உளறுவாயர் திக்விஜய் சிங் பாடியிருக்கிறார். Kejriwal Part of RSS Plan for Congress-Free India: Digvijay என்ற தலைப்பிட்டு வந்திருக்கிற இந்தச்செய்தியில்  காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குகிற ஆர்எஸ்எஸ் திட்டத்தின் ஒரு அங்கமே கேஜ்ரிவால் என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை டிக்கிசிங் கண்டு சொல்லியிருக்கிறார். போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்திருக்கிறது என்பதும் கூட  ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் டில்லி வாக்காளர்களும் சேர்ந்தே செய்த சதியாக இருக்கலாம் என்பதை டிக்கி சிங்குக்கு யார் புரிய வைப்பது? இதை வாசிக்கிற நீங்கள் கூட முயற்சிக்கலாம்! 

******
டில்லித் தேர்தல் முடிவுகள் ஒருசிலருக்குக் கொஞ்சம் இதமாக,ஆறுதலாக இருந்திருக்கக் கூடுமோ?

சாரதா சிட்  ஃபண்ட் ஊழல் விவகாரம் திரிணமுல்   காங்கிரஸ்  கட்சியை விடாது கருப்பு என்று துரத்திக் கொண்டு வருவதில் கட்சியே கலகலத்துப் போய்க் கிடக்கிறது. 

The relationship between Mamata and Mukul had gone from bad to worse ever since he had publicly distanced himself from a railway-linked deal with a Saradha company but today's snub was the most resounding yet. "The party chief has appointed another all-India general secretary for the party.... Subrata Bakshi will have the additional responsibility as all-India general secretary," Chatterjee announced after a 75-minute meeting at Mamata's Kalighat residence.

எந்த நேரத்தில், எவர்  காலைவாருவார், யார் மாட்டிக்கொள்வார் என்பது தெளிவில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் மம்தா பானெர்ஜி துணிந்து ஒரு அதிரடி ஆட்டத்தைக் கட்சிக்குள் ஆரம்பித்து வைத்திருக்கிறார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளராகவும் தீதியின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்த முகுல் ராய்க்கும் சமயம் பார்த்து வேலி  தாண்டக்  காத்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்கிற மாதிரி கட்சிப் பொறுப்புக்களை தன்னுடைய விசுவாசிகளுக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார். பலன் தருமா என்பதிக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் பிஜேபி காலை ஊன்றிக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சமும் தவறவிடவில்லை,

******


நேரு என்றால் வழிசல் என்பதைத்  தனியாகச் சொல்லவே வேண்டாம்!

கொஞ்சம் பழைய கதைதான்! மேலே கடைசிப் பாராவைப் படித்து விடுங்கள்! உலக உத்தமர்களுடைய வரலாற்றைவேறு  எப்படித் தெரிந்து கொள்வதாம்?

******

என்னை அறிந்தால் திரைப்படம் பார்க்கப்போய்க் கசப்பான அனுபவம் தான்!முதல்குறை தன்னுடைய சொந்தப்படங்களில்  இருந்தே ரீமிக்ஸ் மசாலா தயாரிக்கும் இயக்குனருடைய obsession அடுத்துப் படத்தின் நீளம். மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கிற அலுப்பு இந்த ஒருபடத்தைக் கொஞ்சம் பார்ப்பதற்குள்ளாகவே வந்து விடுகிறது. சென்ற வாரம் மகன் வீட்டுக்கு வந்திருந்தபோது அவனுடன் மீண்டும் பார்த்த படம் Dead Poets Society அதில் வித்தியாசமான ஆசிரியராக நடித்திருந்த ராபின் வில்லியம்ஸ் பேசுகிற வசனம் ஒன்று தான் மேலே நீங்கள்  பார்த்தது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கொஞ்சம் சொல்லுங்களேன்!  





செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! டில்லித்தேர்தல் முடிவுகள்! ஏமாறப்போவது யாரோ?

டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளை முற்றிலும் எதிர்பாராதது என்று சொல்லி விட முடியாது. ஆனாலும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகரித்திருக்கிற வாக்குசதவீதம் கொஞ்சம் ஆச்சரியப் படுத்தத்தான் செய்கிறது.  


வெஸ்ட்மினிஸ்டர் தேர்தல் முறையில்  கட்சிகள் வாங்குகிற  வாக்கு சதவீதத்துக்கும்  கெலிக்கிற சீட்டுகளுக்கும் சம்பந்தமே இருக்காது என்பதைப் புரிந்து கொண்டால் கிடைத்திருக்கிற சீட்டுக்கள் மயக்கத்தைத் தராது. தவிர இதற்கு முன்னால் ராஜீவ் காந்தி காலத்தில் இப்படிக் கிடைத்த அதிக சீட்டுக்கள் காங்கிரசுக்கு ஜன்னியை உண்டுபண்ணியதும்   கட்சித்தாவல் தடை சட்டம் கொண்டு வந்த கூத்தும்   நினைவுக்கு வருகிறதா? 


The AAP landslide is driven by the same junoon that propelled Modi into power. That exaggerated hope leads inevitably to exaggerated disillusionment. The BJP rout will undoubtedly hearten Modi critics but it should offer little comfort to Kejriwal who is likely to feel the brunt of all that impatience very soon.

ஊடகங்கள் கணிப்பதில் ஐந்து தவறுகளைச் செய்ததாகச் சொல்கிற இந்த செய்திக் கட்டுரை தான் இப்படி முத்தாய்ப்பாகவும் சொல்கிறது. இதே தளத்தில் டில்லியின் அர்பன் வாக்காளர்கள் பொறுமையற்றவர்கள்  என்றும் சொல்லி  ஒரு ஆறு விஷயங்களை டில்லித் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும்  சொல்லியிருப்பது அதிகபட்ச ஊடக அபத்தக் காமெடி.  


பிஜேபி இந்தத் தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறது? இந்த முடிவுகளை எல்லோரையும்போல எதிர்பாராதது, இமாலயத்தவறு நடந்துவிட்டது என்று சொல்லப் போகிறார்கள் என நினைத்தால் அது தவறு. டில்லியில்  ஜனங்களுடைய மனநிலைமை  எதிராக இருப்பதை, டில்லி யூனியன் பிரதேசத்தில் பிஜேபியின் கட்சி அமைப்பு பலவீனமாக இருப்பதை, ஒரு நல்ல உள்ளூர்முகத்தைக் காட்டமுடியாமல், உட்கட்சிப் பூசல்களுடன் இருந்ததை நன்றாகவே உணர்ந்திருந்தார்கள் என்றே விஷயம் தெரிந்த அரசியல்பார்வையாளர்கள் சொல்கிறார்கள். யதார்த்தா பென்னேஸ்வரன்   போன்ற டில்லிவாசிகளின் கணக்குக் கூடக் கொஞ்சம் பொய்த்துப்போன அதிசயம், நடந்தது  உண்மையிலேயே அதிசயம்தானா என்ற கேள்விதான் இப்போது முன்னுக்கு வந்து நிற்கிறது.
 

இது எழுத்தாளர் மாலனுடைய முகநூல் பகிர்வு. இதில் சொல்லியிருப்பதில் ஒரு பகுதி உண்மை. நாடாளுமன்றத் தேர்தல்களில் கருத்துக் கணிப்பு, எதிர்பார்ப்புக்கள் எல்லாம் காங்கிரஸ், பிஜேபி அல்லாத மூன்றாவது அணி தான்  முன்னிலை வகிக்கும், அதிலும் மம்தா பானெர்ஜி, மாயாவதி, ஜெலலிதா ஆகிய மூவர்தான் அடுத்த அரசியல் திருப்பத்துக்கு முன்னிலை வகிப்பார்கள் என்று தேர்தகள் பண்டிதர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்ன படியே  மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும்  தேர்தல் முடிவுகள் இருந்தன. தேர்தல் பண்டிதர்கள்  கணக்கைப் பொய்யாக்கி பிஜேபி  தனித்தே 283 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த வேகத்திலேயே கடந்த  எட்டு மாதங்களில்  காஷ்மீர்  கொல்கத்தா என்று வரிசையாக அடித்து  ஆடிக் கொண்டிருந்ததில் நிறைய சலசலப்புகள், எதிர்ப்புக்களை மோடிக்கு எதிராகத் திரட்டுவதில் அத்தனை கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கிற மாதிரி ஒரு சித்திரம் உருவானது. ஆனால் முற்றுப் பெறாத  சித்திரமாக, சரியான தலை(மை)யில்லாமல் இன்னமும் இருப்பதிலிருந்தே மாலன் சொல்ல விட்டுப்  போனதாக, மாநிலக்கட்சிகள் தங்கள் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிற விஷயம் இருக்கிறது.  அதே நேரம், காங்கிரஸ் விட்டுப்போன வெற்றிடத்தை இந்தியா முழுமைக்குமாக பிஜேபியால் நிரப்ப முடியவில்லை, அதற்கு இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தில்லி தேர்தல் முடிவு திருப்பு முனையானது. ஜனநாயகத்தில் அரசியல் பழிவாங்கும் போக்குக்கு இடமில்லை என்பதை காட்டியுள்ளது. இந்த மாற்றம் இப்போதைக்கு அவசியமான ஒன்று என மம்தா பானெர்ஜி  கூறியுள்ளார். ஆனால் என்ன புலம்பினாலும் சாரதா சிட் ஃ பண்ட் ஊழல் விவகாரம் மம்தா பானர்ஜியின் அரசியல் சகாப்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிற அபாயம் நீடிக்கவே செய்கிறது.

இந்தப் பேட்டியில் சுதிப்தோ சென் கூறியிருப்பது என்னவெனில், ""சாரதா நிதி நிறுவனம் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவு உடனடியாக இந்த வழக்கில் இணைக்காவிட்டால், "கொள்ளைக்கார கட்சி' எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டுவிடும்'' என்று கூறியுள்ளார். கட்சியின் பெயரை அவர் குறிப்பிடாவிட்டாலும், அது மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் என்று பேசப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், அமைச்சர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இனியும் மத்திய அரசு பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.என்கிறது தினமணி தலையங்கம்   

இந்த எட்டு  மாதங்களில் மத்தியில் பிஜேபி ஆட்சி மிகப்பெரிய சாதனைகளைச் செய்து முடிக்காவிட்டாலும் . ஜீபூம்பா கூட, கெட்ட பெயரைச் சம்பாதிக்கவில்லை என்ற சூழ்நிலையில் டில்ல்லி வாக்காளர்கள் இப்படி ஒரு தேர்தல் முடிவைத் தர வேண்டிய காரணம் என்ன? 

முக்கியமாக பெருநகரங்களில் குறிப்பாக டில்லியில் வாக்காளர்களுடைய எதிர்பார்ப்பு, பொறுமையின்மை இரண்டுமே  அதிகரித்துக் கொண்டே வந்த விதம். ஏன்  எப்படி என்ற சால்ஜாப்புக்கெல்லாம் காது கொடுத்துக் டில்லி ஜனங்கள் கேட்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தார்கள்  ஜீபூம்பா என்பாயோ திறந்திடு செசேம் என்பாயோ எங்களுக்கு வேண்டியது எல்லாம் குறைந்த விலையில் மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து இப்படி அடிப்படை வசதிகள், அவ்வளவுதான்! ஜனங்களைக் கிளர்ந்தெழச்செய்வது மிக எளிது. ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதானது அல்ல. இப்படி ஒரு இடியாப்பச்சிக்கலில் தலையைக் கொடுத்துவிட்டு, பதில் சொல்ல முடியாமல்  49 நாட்களிலேயே ராஜினாமா செய்துவிட்டு ஓடிய ஒருவரை மறுபடி மொத்த சீட்டுக்களையும் கொடுத்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆட்டை ரெடி செய்து விட்டார்கள் என்பது மட்டும் தெளிவு. இப்படி ஒரு நிலைமை தங்களுக்கும்  வரலாம், அதைவிட டில்லி கைவிட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற தெளிவோடுதான்  பிஜேபியினர் இருந்தார்கள் என்று தான் படுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவால் அனுபவமில்லாத ஒரு அவசரக்குடுக்கை . குருட்டுப் பூனை எங்கே எப்படித் தாவும்  என்றெல்லாம் இப்போதே சொல்ல முடியாது.

அர்பன் வாக்காளர்கள் ஓர் புதிய போக்கைக் காட்டியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஏமாறப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய ஜனநாயகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அது.

..

சண்டேன்னா மூணு! கொஞ்சம் அரசியல்! கொஞ்சம் கொதிக்க! ச்சும்மா டமாஷு!

சண்டேன்னா மூணுதானா கொஞ்சம் எக்ஸ்ட்ராவெல்லாம் கிடையாதா என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரியும்! இந்த சண்டே அப்படி சாதாரணமாக விட்டுப் போய்விடக் கூடியதா என்ன?!


ஒளியை நோக்கி உயர்வது உயிரின் இயற்கை. இதை இந்தப்படம் எவ்வளவு அழகாக, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது! மாற்றங்களுக்குத் தயாராகும் ஒவ்வொரு மனிதனும்   இதே மாதிரிக் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே இப்படி உயர்வை, மாற்றத்தை அடைய முடிகிறது. இது தொடர்பாக இந்தப் பக்கங்களில் Creature of habits    என்ற தலைப்பிலும்  Change Management  என்று இன்னொரு வலைப்பூவிலும் கொஞ்சம் விரிவாகவே பேசியிருக்கிறோம். சண்டேன்னா  மூணு என்பது வெற்று அரட்டை என்றாகி விடாமல் நண்பர்கள் தங்களுடைய கருத்தையும் பகிர்ந்து கொண்டால்  ஒரு பயனுள்ள விவாதக்களமாக இந்த வலைப்பக்கங்களும் நல்லதொரு மாற்றத்திற்கு உயரும். என்னுடைய விருப்பமும் அதுவே.  இது முன்னோட்டம்  


1977 இல் இந்திரா காந்தியைத் தோற்கடித்த காங்கிரசுக்கு ஒரு நல்ல மாற்றாக உருவாகும் என்று நம்பப்பட்ட ஜனதாதளம் பரிசோதனை அளவிலேயே தோற்றுப்போனதேன் என்பதைக் குறித்து நிறைய ஆய்வுகள், கருத்துகள்,புத்தகங்கள் வெளிவந்து அந்த மட்டோடு ஓய்ந்தும் போன பழைய கதைகளை, சுவடுகளைத் தேடிக் கொண்டிருந்த சமயம், இணையத்திலேயே நிறையத் தரவுகள் கிடைப்பதைத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைய தலைமுறைக்கு பழைய வரலாற்றைத் தேடித் படிப்பதில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை என்றாலும் கூட, வரலாற்றிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளாத வரை வரலாறு  நம்மை விடாது . என்பதையாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!

2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தந்தன. வாஜ்பாய் அல்லது வேறெந்தக் காங்கிரஸ் அல்லாத கட்சிக்கும் கிடைக்காத அளவுக்கு லோக்சபாவில் தனிப்பெரும்பான்மையை அளித்து நரேந்திர மோடி என்ற மனிதர் மீதான தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவே 2014 தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் ஆனாலும் இந்தத்தேசத்துக்கு காங்கிரசிடம் இருந்து ழுமையாக விமோசனம் கிடைத்தது என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிற அளவுக்கு பிஜேபியின் செயல்பாடுகள் இருக்கிறதா?

டில்லி சட்டசபைத் தேர்தல்களை ஒட்டி வெளியான இந்த இரண்டு செய்திகளைக் கொஞ்சம் பாருங்களேன்! ஒன்று ஆம் ஆத்மி கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்று கூவும் செய்தி. காங்கிரஸ் கட்சி சளைத்து விழுந்தாலும் அவர்கள் இத்தனை நாள் தூக்கிப் பிடித்த சிக்குலர்வியாதியை விட்மாட்டோமென்று தி இந்து தமிழ் நாளிதழில் வந்திருக்கும் கூவல்.

நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் என்ன மோடியைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை மிக அக்கறையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிருக்கும் விந்தை.காங்கிரசுக்கு மாற்று என்றுமார்தட்டிக் கொண்டு கிளம்பிய பிஜேபிக்கு நாங்கள் தான் மாற்று என்று மழைக்காலக் கொசு மாதிரி அரசியலில் புதிதாகக்  கிளம்பியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய புஜபல பராக்கிரமத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் கூத்து, மோடி அலைஓய்ந்துவிட்டது இனி எடுபடாது என்று தெரிந்தே கிரண் பேடியை பலிகடாவாகக் களத்தில்  பிஜேபி இறக்கியிருக்கிறது என்று இப்போது சில ஊடகங்கள் பரபரப்புச்செய்தியாக்கிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

டில்லித்  தேர்தல் முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தாலும் கூட பதவியேற்ற நாட்களில் இருந்து இன்று வரை பிஜேபி என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்குமே கூடக் கொஞ்சம் குழப்பமான விடைதான் கிடைக்கிறது. ஒருசரியான அரசியல் மாற்றாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் கூட பிஜேபி இதுவரை ஜெயித்திருக்கிற மாதிரித் தெரியவில்லை. இதுவரை வெறும் சவுண்டு விடுகிற கட்சியாகவே தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதான தோற்றத்தை சரி செய்ய எந்த முயற்சிகளையும் பிஜேபி மற்றும் சங்க பரிவார் மேற்கொள்ளவில்லை. ஒரு முழுமையான சித்திரம் கிடைக்க இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.   

******
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல்  முன்பு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 திருநங்கைகளை அழைத்துவந்து  நடனமாட வைத்துள்ளனர். இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர், 33 லட்ச ரூபாய் வரிபாக்கியை ஒரே செக்கில் அளித்துள்ளனர்.


வரிபாக்கியை அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே..? - கொந்தளிக்கும் ரோஸ்  இன்னும் கொஞ்சம் விரிவாக 
******
நண்பனாக இரு அல்லது காதலனாக இரு! ரெண்டு ரோலும் ஓர் ஆள் செய்ய முடியாது என்று ஒரு விசித்திரமான சர்வே முடிவு  இங்கே!

 

சர்வே சொல்வதற்கும் இந்த வால்போஸ்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை! ச்சும்மா  டமாஷு!


.. 

சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #5

 முந்தின பதிவில் சொல்லியிருந்த மாதிரி டில்லி சட்டசபைத் தேர்தல்களில்  கொசுவை விரட்ட பீரங்கியைத் தூக்கின கதையாக பிஜேபி ஒரு கசப்பான தேர்தல் முடிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்றே கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. பிஜேபிபாடம்  கற்றுக்கொள்ளப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அந்த இடைப்பட்ட நேரத்தில் 

சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! 


#stalinfor2016 என்று கோஷமெழுப்பி ஸ்டாலின் தரப்பு ஓய்ந்துபோய்க் கிடந்தாலும் அழகிரி தரப்பு விடுவதாயில்லை. சென்ற ஜனவரி 30 அழகிரி பிறந்த நாளுக்கு மதுரை அடிப்பொடிகள் வைத்த கட்அவுட், போஸ்டர்களில் அடித்தே சொல்லிவிட்டார்கள். எப்படி என்கிறீர்களா?


  

மதுரைக்கூத்து இப்படியென்றால் அறிவாலயக்கூத்து அதைவிடக் கொஞ்சம் மேலே தி இந்து நாளிதழ் வாசகர் கருத்து, இப்படிப் படமாக!  #ஆராசா #கனிமொழி #தயாநிதிமாறன் இவர்களை வைத்து சம்பாதித்து வைத்த நல்ல பெயரை #ஓபிஎஸ்கெடுத்து விட்டாராம்! நக்கல் கொஞ்சம் தூக்கல்தான்!  ஆனால் உண்மை ஏகத்துக்கும் சுடுகிறதே!

#KDbrothers ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன் செல்லாது, ரத்து செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெஞ்ச் முதலில் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், `2ஜி அலைக்கற்றை தொடர்பாக எழும் அனைத்து வழக்குகளும் நேரடியாக உச்ச நீதிமன்ற விசாரணைக்கே வர வேண்டும். வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கக் கூடாது’ என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இதையடுத்து, மாறன் சகோதரர் களின் மனுவை ஏற்க முடியாது என்ற தங்களது முந்தைய உத்தரவை நீதிபதிகள் திரும்பப் பெற்றனர். அம்மனு, தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவித்தனர். ஆக, உலை தயாராகிவிட்டது பொங்கல் வைக்கும் நேரம் மட்டுமே தள்ளிப்போயிருக்கிறது. நன்றாகப் பொங்கட்டுமே!

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் | படம்: கே.பிச்சுமணி  
சட்டம் என் கையில்! போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு: சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் என்கிறது இந்தச்செய்தி 

மாலன் புதியதலைமுறை ஆசிரியராக வந்தபிறகு  அவர் எழுதுவதைப் படிப்பதில் இடைவெளி விழுந்தது. தற்செயலாக அவர் முகநூலில் சென்னை சட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பாக எழுதியிருந்தது கண்ணில் பட்டது.. சில அடிப்படையான சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். நீங்களும் வாசிக்கலாமே    

சில அடிப்படையான கேள்விகள்

1.சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின் பின்னணி என்ன?

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களில் இருபிரிவினர் ஆயுதங்களோடு கல்லூரியில் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அதையடுத்து அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது. 2009ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி கமிஷன் தனது அறிக்கையை அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் அளித்தது. அந்த அறிக்கை ஜூலை 21ஆம் தேதி சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. (திரு.ரவிகுமார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் இது குறித்து மேலும் தகவல் தரலாம்) அந்த அறிக்கை,வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க சென்னையில் 3 மருத்துவ கல்லூரி இருப்பது போல சட்டக் கல்லூரியை பிரித்து தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூந்தமல்லி ஆகிய இடங்களில் சட்டக்கல்லூரியை உருவாக்க வேண்டும் என்ப் பரிந்துரைத்தது

இதையடுத்து 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி மாநில அரசின் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “Government has accepted the recommendation made in the report of Justice P Shanmugam Commission of Inquiry to shift TN Dr Ambedkar Government Law College, Chennai to a location within the city and open three new Law Colleges in and around the city of Chennai. The estimated outlay for this relocation and construction would be Rs 75 crore (Rs 25 crore per college),” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. 2013ல் வெளியான அறிக்கைக்குத்தான் இரண்டாண்டுகள் கழித்து இப்போது மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

தமிழ்நாட்டு நிலவரத்தில் ஆறிப்போன பொங்கலே இப்படி இருக்கிறதே என்று அலுத்துக் கொள்கிறீர்களா? அதுவும் சரிதான்!

******
பட்டி மன்றங்கள் என்றாலே வெறும் வெட்டி மன்றங்கள், வெட்டி விவாதங்கள் என்றாகிப் போன காலம் இது.பட்டிமன்றங்களுக்குக் கொஞ்சம் மவுசு இருந்த நாட்களில் அடிக்கடி பழகிப்போன தலைப்பு:

கற்பில் சிறந்தவள்   
கண்ணகியா ? மாதவியா ?


இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு இன்னுமொரு பட்டிமன்றத்தை ஆரம்பித்து விட வேண்டாம்! காலம் நிறைய விஷயங்களில் புதுப்புது மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு மேல்  பெரிதாக அலட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இதில் கருத்துச் சொன்னவர்களில் எவருமே பொய் சொல்லவில்லை, வெறும் ஊடக வெளிச்சத்துக்காக மாற்றிச் சொல்லவில்லை, மனதில் பட்டதை, தங்களுக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள் என்றே எனக்குப் படுகிறது.    

தற்செயலாக எழுத்தாளர் ஜெயமோகன் தனது தளத்தில் இதுபற்றிப் பேசியிருந்தது கண்ணில் பட்டது. அவர் முடிவாகச் சொல்வதிது:

நம் மரபே நமக்குக் கற்பு என்பதற்கு இரு வரையறையை அளிக்கிறது. ’கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என்பது ஒன்று. ‘கற்பென்பது ஒருவனைப்பற்றி ஓர் அகத்திருத்தல்’ என்பது இரண்டாவது. நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது முதல் வரையறையைத்தான். ஓரகத்தில் இருக்கவேண்டுமா ஒருவனைப்பற்றிக் கொள்ளவேண்டுமா என்பதெல்லாம் பெண்கள் அவர்களே முடிவுசெய்யட்டும்.


என் பார்வையில் ‘நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி’ கொண்டு தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரமான பெண்ணே கற்புள்ளவள். கற்பு என்பது அந்த நெறியைக் கற்றுக்கொள்வதுமட்டும்தான் 

ஜெயமோகன் சொல்வது நியாயமாகத்தான் படுகிறது.

..

கொசுத்தொல்லை! கேஜ்ரிவால்! டில்லித் தேர்தல்கள்!








இந்தக் கொசுத்தொல்லை தாங்கலையே நாராயணா!


டில்லி சட்ட சபைத் தேர்தல்களிலும் கூட இந்தக் கொசு மாதிரித்தான் கேஜ்ரிவால் பிஜேபிக்கு  குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.முன்னெச்சரிக்கையாக டில்லித் தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடி மீதான மக்களின் தீர்ப்பல்ல என்று வெங்கையா நாயுடு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.போதாக்குறைக்கு ஊடகங்களில் இதுவரை வெளியான சர்வே முடிவுகள் கேஜ்ரிவால் அண்ட் கம்பனிக்குச் சாதகமாகவே இருப்பதில் கொசு அடிக்க பீரங்கியைத் தூக்கி வந்த கதையாக பிஜேபியின் தேர்தல் பிரசாரங்கள் மாறிக் கொண்டிருக்கிறதாக  பரிதாபக் காட்சி இருக்கிறது..எனக்கும் சர்வே எடுக்கத் தெரியுமே என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒரு கூத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இது ஒனறே  நடப்பு நிலவரம் பிஜேபியைப் பொறுத்தவரை எவ்வளவு கலவரமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாகத் தான் தோன்றுகிறது. முன்னாள்  உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய  கட்ஜு வேறு கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படியானால் கேஜ்ரிவால் நிஜமாகவே ஜெயித்து விடுவார் என்று கேட்கிறீர்களா? அவருக்கு நப்பாசை இருக்கிற அளவுக்கு நம்பிக்கை இருக்கிற மாதிரித்தெரியவில்லை ஓட்டுப்  போடும் இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து வைத்திருப்பதாக ஒரு டெம்ப்ளேட் சால்ஜாப்பை ஏற்கெனெவே தயார் செய்து வைத்துவிட்டார்

ஓட்டுப்போடற மெஷின் மேல சந்தேகமா? தேர்தல்ல நிக்காம ஒத்திக்கோ! ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அறிவுரை!   


மேலே தி ஹிந்து நாளிதழின் சர்வே முடிவு என்பதை விட அவர்களது ஆசை என்பது மிகப்பொருத்தமாக இருக்கும்.

என்ன தான் விரலை நீட்டி மடக்கிக் கணக்குப் போட்டாலும், திருவிழாவில் தொலைந்துபோன பிள்ளை கதையாகத்தான் காங்கிரஸ் கட்சியின் தொடர் சோகம், தோல்வி பயம்,யார் யார்  கட்சியில் இருந்து வெளியேறி என்னென்ன பிரச்சினைகளைக்  கொண்டு வருவார்களோ என்ற பயம் எல்லாமாகச்  சேர்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா  சர்வேக்களும் ஒன்றுபடுவது காங்கிரஸ் கட்சி டில்லியிலும் சர்வநாசம் என்பதைத்தான்!  

பிஜேபியைப் பொறுத்தவரை, நரேந்திர மோடி என்ற தனிநபர் எழுப்பிய அதிர்வலைகளில் சவாரி செய்தே ஆட்சியைப் பிடித்திருக்கிறதே தவிர டில்லியில் திறமையற்ற  கட்சி ஸ்தாபன அமைப்பு, உட்கட்சிப் பூசல்கள்,நேற்று வந்த கிரண் பேடியை முதலவராக ஏற்றுக் கொள்வதா என்ற கிளர்ச்சி தவிர இதைப் பயன்படுத்தி, நரேந்திர மோடிக்கு தர்மசங்கடம் விளைவிக்கிற மாதிரி கட்சிக்குள் ஓரம் கட்டப்பட்ட பழம் பெருச்சாளிகளின் திருவிளையாடல்களும் சேர்ந்திருக்கிறதோ என்ற சந்தேகமும் வலுக்கிறது  டில்லியில் ஜெயிப்பது அல்லது தோற்பது என்பது அல்ல உண்மையான சவால். பிஜேபி வாக்களித்த ஜனங்களுடைய நம்பிக்கையைப் பாழாக்காமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட தங்களைக் கடுமையான சுயபரிசோதனைக்கு தயார் செய்துகொள்ள வேண்டிய தருணமிது. ஒரு கட்டுக் கோப்பான ஸ்தாபனமாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தருணமிது.   

காங்கிரசுக்கு மாற்று என்பது காங்கிரசைப் போலவே கோஷ்டி கானம், ஊழல், யாரோ ஒரு தனிநபருடைய செல்வாக்கில் மட்டுமே ஜெயிக்க முடிகிற கூட்டம் என்றிருப்பது அல்ல. அப்படி ஆனதினாலேயே இதற்கு முந்தைய பரிசோதனைகள் எல்லாம் மிகப் பரிதாபமாகத் தோற்று,மறுபடியும் களவாணி காங்கிரசே ஆட்சியைப்  பிடித்த சமீபகால வரலாறும் இருக்கிறது.

அப்படி ஆகுமானால் பிஜேபியை இந்த நாடும் வரலாறும் மன்னிக்காது என்பது மட்டும் நிச்சயம்.
******

மண்டேன்னா ஒண்ணு! இலவசங்கள் என்ற மாயை!


இந்தப்படத்தைப் போட்டு ஒரு கிரேக்கப் பழங்கதையை தி கார்டியன் நாளிதழ் நினவு படுத்துகிறதாம்! கடவுள்களால் சபிக்கப்பட்ட ஒரு அரசன் .ஒரு பெரும்பாறையைத் தோளில் சுமந்துகொண்டு  செங்குத்தான மலைமேல் ஏறவேண்டும்.அப்படி ஏறுகிற சமயம் உச்சியை நெருங்குகிற ஒவ்வொரு சமயமும் பாறை நழுவிக் கீழே விழ இந்த அரசனும் மறுபடி அந்தப்பாறையைக்  கீழே இருந்து தூக்கிச்சுமந்து மேலேறவேண்டும். இந்தக் கதை மாதிரியே கிரீஸ் நாட்டின் கடன்சுமையும் தீராத தொடகதையாக இருக்கிறது என்று கதை சொல்கிறது.  

இப்படி ஆனதற்கு யார், எது காரணம்  என்று ஆராயப்போனால் இன்னொரு கிரேக்க இதிகாசமாகிவிடக் கூடும் சுருக்கமாக கிரீஸ், மிகப்புராதானமான பேரரசாக இருந்தது எப்படிக் கீழே சரிந்து பத்தோடு பதினொன்றாக ஆகிப்போனது என்று பார்த்தால் முறையான கட்டுப்பாடு, மதிப்பீடுகள் இல்லாத பொருளாதாரம், வரவுக்கு மீறிய செலவு, ஜனங்களிடம் சேமிப்புப் பழக்கம் இல்லாதது என்று ஏகப்பட்ட சீக்குகளுடன் இருந்தது. விரிவாகத் தெரிந்துகொள்ள இங்கே 

இலவசங்கள் என்ற மாயைஎப்படி எப்படிப்பல்வேறு நாடுகள், பொருளாதாரங்களை ஆட்டிப் படைத்து, அழித்திருக்கிறது என்பதை இங்கே பல்வேறு சமயங்களில் உள்ளூர் நடப்பைத் தொட்டுப் பார்த்திருக்கிறோம். பொதுவுடைமை பேசிய சோவியத் யூனியன் சிதறிப்போனது, சோஷலிசக்கனவுகளில் சிதறுண்டு போன பல சிறு தேசங்கள், கடைசியாக சீனாவில்  கம்யூனிஸ்ட்கட்சி  தான் ஆட்சி செய்கிறது என்றாலும் கம்யூனிசத்துக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாது போன கதை  எல்லாம் சொல்கிற  பாடம் ஒன்றே  ஒன்று தான்!இலவசங்கள் என்பதே மாயை என்பது மட்டும் தான்! கிரீஸ் நாட்டில் நடந்து கொண்டிருப்பது ஒரு புதிய பாடம், படிப்பினையாக வளரக்கூடும். கிரீஸில் தொடரும் சிக்கல்



 இலவசங்கள், ஊதாரித்தனமான அரசுச்செலவினங்களால் திவாலாகிப் போகிற அளவுக்கு வந்தபிறகு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த எடுத்த சிக்கன நடவடிக்கைகளில் வெறுத்துப்போன கிரீஸ் நாட்டு மக்கள் ஒரு இடதுசாரி அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதில் மிகவும் மகிழ்ந்துபோனவர் ஒரே ஒரு பதிவர் தான். அவருடைய பதிவில் எப்படி இந்த சாதனை நிகழ்ந்தது என்பதற்கான அடிப்படை விவரங்கள் இல்லை.பதிவின் முடிவில் ஒரு பதினைந்து நிமிட வீடியோ ஒன்றை  பார்த்ததிலும் கூட ஊதாரிகளாகச்  சீரழிந்தபொருளாதாரத்தை எப்படிச் சரி செய்யப்போகிறார்கள் கடன்சுமையை எப்படிக் குறைக்கப்போகிறார்கள் என்பதற்கான விடை கிடைக்கவில்லை.ஆனால் வெற்று வாக்குறுதிகள் நிறைய!


சீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது? அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்: 

ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்க நாட்டுக்குக் கடன்கொடுத்த மற்ற நாடுகளுடன் ஒரு மோதல் போக்கையே புதிதாகத்தேர்ந்தேடுக்கப் பட்டிருக்கும் சிறிசா இடதுசாரிகள் கடைப்பிடிக்கப் போவது தெளிவாகி இருக்கும் நிலையில் ஜெர்மனி அரசு கிரேக்க நாட்டுக்குப்  புதுசலுகைகள் எதையும் தரப் போவதில்லை என்பதில் மிகுந்த கண்டிப்புடன்  அறிவித்திருக்கிறது.


When asked in a newspaper interview published yesterday whether there could be further concessions for Greece, Merkel said Athens had already been forgiven billions of euros by private creditors. “I don’t see a further debt haircut,” she said.



Her comments echoed those made the previous day by the German finance minister, Wolfgang Schäuble, who told Die Welt: “If I were a responsible Greek politician, I wouldn’t lead any debates over a debt haircut.”

கிரீஸ் அரசியல்வாதிகள் ஒரு ஆபத்தான விளையாட்டில் இறங்கியிருப்பதாகவே தோன்றுகிறது.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி அமெரிக்க அதிபர் ஒபாமா கிரீசுக்குத்தேவை வளர்ச்சிதானே ஒழிய சிக்கன நடவடிக்கைகள் அல்ல என்று சொல்லியிருக்கிறார்.தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைப் புதிய அரசு  கிடப்பில் போட்டிருக்கிறது.


ஏற்கெனெவே சீனப்பொருளாதாரம் மந்தமடைந்து வரும் செய்தியோடு சேர்த்துப் பார்த்தால்,கிரேக்கப் பொருளாதாரச்சுமையும் கடனும் கூட ஐரோப்பிய ஒன்றியத்தையும், குறிப்பாக ஜெர்மனியையும் பாதிப்பதாக  இருக்கலாம். கிரீஸ் மாதிரியே ஸ்பானிஷ் பொருளாதாரமும் கடும் நெருக்கடியில் இருக்கிறது. அங்கும் ிக்கன நடவடிக்கைகள் வேண்டாம் எனக் கண்டனக்குரல்கள் கலகக்குரல்களாக மாறி ஒலி த்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவு பேசிவிட்டு, இந்தியாவுக்கு இதில் என்ன சம்பந்தம் என்றும் சேர்த்துப் பார்க்காவிட்டால் இந்தப்பதிவு எதற்காக? 

நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்ற தருணங்களில் இந்தியா கிட்டத்தட்ட திவாலான நிலைமையில் தான் இருந்தது.அர்த்தமில்லாத சோஷலிசம் பேசிப் பேசியே பற்றாக்குறை பட்ஜெட், ஊதாரித்தனமான செலவுகளைக் கட்டுப்படுத்தாமல்,பொதுத்துறை என்றால் பொறுப்பில்லாத துறை இப்படிப் பொருளாதாரம் விவஸ்தை கெட்ட நிலையில்இருந்த தருணங்கள் அவை. கசப்பு முந்துதான், ஆனால் கொடுத்துத்தானாக வேண்டும் என்ற நிலையில் நரசிம்மராவ் துணிந்து பொருளாதரச் சீர்திருத்தங்களைக் கையிலெடுத்தார் முதலில் வந்தது வங்கித்துறை சீர்திருத்தம் அதற்கு முன்னோட்டமாக இருந்தது 1991 இல் ஏற்பட்ட  ஏற்றுமதி இறக்குமதிக்கிடையிலான வித்தியாசத்தைக் கொடுக்க முடியாமல் கையிருப்பில்லாமல் போன அவலம் தான் 
A Balance of Payments crisis in 1991 pushed the country to near bankruptcy. In return for an IMF bailout, gold was transferred to London as collateral, the rupee devalued and economic reforms were forced upon India. That low point was the catalyst required to transform the economy through badly needed reforms to unshackle the economy. Controls started to be dismantled, tariffs, duties and taxes progressively lowered, state monopolies broken, the economy was opened to trade and investment, private sector enterprise and competition were encouraged and globalisation was slowly embraced. The reforms process continues today and is accepted by all political parties, but the speed is often held hostage by coalition politics and vested interests.
— India Report, Astaire Research
நரசிம்மராவுக்கு இதில் உறுதுணையாக எந்த மன்மோஹன்சிங் இருந்தாரோ அவரே பின்னாட்களில் பிரதமராக ஆகி வெறும் டம்மிப்பீசாக மட்டுமே இருந்த பத்தாண்டுகளில் தானும்சேர்ந்து  பாடு பட்டுக் கொண்டு வந்த சீர்திருத்தங்களின் பலனை முறிக்கிற மாதிரி சீரழிக்கிற மாதிரிஅமைச்சரவை சகாக்கள்செயல்பாடுகள், மற்றும் ஓட்டுவங்கி அரசியலுக்காக இலவசங்களை வாரியிறைத்துப் பாழ்படுத்திய வரலாற்றுச்சோகம் நகைமுரண் வேறெதுவும் இருக்க முடியாது. 

கிரேக்கப் பொருளாதாரச்சிக்கல்  கடன்சுமை கலகக்குரல்கள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னால்  நாம் கற்றுக்கொண்டு மறந்துபோன விஷயத்தை மறுபடியும் நினைவு படுத்துகிற மாதிரி இருப்பது புரிகிறதா?

இலவசங்கள் என்பதே வெறும் மாயைதான்! There is  no free lunch!

******