Showing posts with label மாற்றுச் சிந்தனை. Show all posts
Showing posts with label மாற்றுச் சிந்தனை. Show all posts

மாற்றுக் கருத்துக்கும் இங்கே மரியாதை உண்டு

சமூக வலைத்தளங்களில், வலைப்பதிவுகளில் ஏன் எழுதுகிறோம்? யாருக்காக எழுதுகிறோம்? இந்தக் கேள்விகளுக்கு, எழுதுகிற அத்தனை பேருக்குமே விடை கிடைத்து விடுகிறதா?

700+ பதிவுகளை பொதுவெளியில் பகிர்ந்த பிறகும் கூட எனக்கு இன்னமும் ஒரு தெளிவான சித்திரம் கிடைத்ததே இல்லை!


எமெர்ஜென்சி நாட்களைக் குறித்து எனக்கு ஒரு அனுபவபூர்வமான கருத்து உண்டென்பதைப் இங்கே பலபதிவுகளில் சொல்லிவந்திருக்கிறேன். ஆரம்ப நாட்களில் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் (காங்கிரசில் ஒரு பொறுப்பில் இருந்தவரும் கூட) மிகக் கடுமையாக பின்னூட்டங்களில் வாதம் செய்ததுண்டு.

சொல்லப்பட்ட கருத்தில் என்ன பிழை இருந்தது, உண்மையான நிலவரம் என்ன என்றெல்லாம் எடுத்துப் பேசுவதற்குப் பதிலாக ஏசுவது, ஆளில்லாத டீக்கடைல  யாருக்காக ஆத்துறீங்க பாணியில் இருக்கும். ஆனால் அவருடைய பின்னூட்டங்களை நிராகரித்ததில்லை.

இர்விங் வாலஸ் எழுதிய The R Document நாவலைக் குறித்து இங்கே புத்தக அறிமுகமாக மீள்பதிவாக  எழுதிய பதிவில் கூட இந்திரா கொண்டுவந்த 42வது அரசியல் சாசனத் திருத்தம் பற்றிய குறிப்பு இருந்தது. இதைச் சொல்லும் போதே வாசிக்கிறவர்கள் என்னோடு உடன்பட்டே ஆகவேண்டுமென்கிற கட்டாயமில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.

மாற்றுக கருத்து இருந்தால், அதை இங்கே பகிர்ந்து கொள்ளவும் விரும்பினால் Guest Post ஆக வெளியிடத் தயாராகவும் இருக்கிறேன்!

தன்னுடைய சுய விவரத்தைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளத் தயங்காதவர்கள், கண்ணியமான வார்த்தைகளில் எழுதியனுப்பினால் இங்கே மாற்றுக் கருத்துக்கும் மரியாதையளித்து வெளியிடுகிறேன்.

சரிதானா?

      
      

மியாவ்..!மியாவ்...! இது பூனைக் குரல் அல்ல! உயிரை எடுக்கும் மருந்து.....!




Mephedrone, or 'meow meow' was legal until it was banned in April 2010


மூன்றாவது உலகப் போர் வருமானால், அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? இரண்டாவது உலகப் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது போல, என்ன ஆயுதம் பரவலாகப் பயன்படுத்தப்படும்? இந்தக் கேள்விகளை முன்வைத்து நிறைய விஷமத்தனமாகவும், நிஜமான அக்கறையுடனும் விடைகள் சொல்லப் பட்டுக் கொண்டே இருக்கின்றன.

குடிநீர்ப் பிரச்சினை, குறைந்துகொண்டே வரும் நீராதாரங்களைக் கைப்பற்றுவதற்காகத் தான் அடுத்த போர் நிகழும் என்றொரு கணிப்பு உண்டு. ரசாயன ஆயுதங்கள் தவிர செயற்கையாக நோயை உருவாக்கி பரப்புகிற பயாலஜிகல் வெபன்ஸ்..நோயைப் பரப்புவதே பெரும் ஆயுதமாக என்றொரு கருத்தும் உண்டு. இது முழுக் கற்பனையில்லை, நிஜமாகவே பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருப்பது என்பதும் அவ்வப்போது செய்திகளில் கசிந்து கொண்டு தான் இருக்கிறது.

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய கொள்ளை லாப நோக்கத்திற்காகவும், தங்களுடைய நாட்டுக்கு விசுவாசமாக இருப்பது போல, எதிரிகளை மட்டுப் படுத்தி வைக்க சிறந்த உத்தியாக, நோயை உருவாக்குவது, பரப்புவது, மாற்று மருந்தைக் கண்டுபிடிப்பது, அதை விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிப்பது என்பதைக் கையாண்டு கொண்டுதான் இருக்கின்றன. கேட்பதற்குக் காதில்பூ சுற்றுவது போலத் தோன்றினாலும், சதிகாரர்களையும் மீறி அவ்வப்போது வெளிப்படுகிற ரகசியங்கள் உண்மை நிலவரத்தை உடைத்துச் சொல்லி விடுகின்றன.

சில வருடங்களுக்கு முன்னால், சூரத் நகரில் எலியால் பரவும் பிளேக் நோய் மாதிரியே இருந்த ஒரு நோய் ஒரு நட்பு நாட்டினால் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது என்று ஒரு பலத்த சந்தேகம் உண்டு. ஸ்வைன் ப்ளூ இந்தியாவுக்கு அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் நகரில் தான் முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்டது. நோயைப் பற்றிப் பரபரப்பாகச் செய்திகள் வந்தபோது முன்னெச்சரிக்கை நடவைக்கைகள் இன்று வரையிலும் கூட போதுமானதாகவோ பொறுப்புடனோ மேற்கொள்ளத் திராணியுள்ள அரசுகள்  நமக்கு
வாய்த்ததில்லை  என்பதையும் வேதனையுடன் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

ராபார்ட் லட்லம் எழுதிய ஹேட்ஸ் பாக்டர் புதினத்தில்  இதை உறைக்கிற மாதிரி சொன்னதை, கதைச் சுருக்கமாகக் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.



இந்த செய்தியை படித்து, அதன் மையக் கருத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள்! ஊடகங்கள் முழு உண்மையைத் தான் சொல்லும் என்று இல்லை, சமயங்களில் ஒரு சின்னக் குறிப்பே சொல்ல வேண்டிய மொத்தத்தையும் சொல்லி விடுவதாக ஆகி விடும் தருணங்களும் உண்டு. 

இந்தச் செய்தி இணையத்தில் படித்தது தான்! 

இதன் முழு உண்மையை உறுதிப் படுத்த,  தனிமனிதனாக என்னிடம் எந்தவொரு சாதனமும் இல்லை. பொய்யென்று ஒதுக்கி விட்டுப் போய்விடுகிற அலட்சியம் மட்டும் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்!



An American investigative journalist has uncovered evidence suggesting the CIA peppered local food with the hallucinogenic drug LSD

1951
ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி
! பிரான்சில் உள்ள ஒரு சிறு கிராமம் போன்ட் செயின்ட் ஸ்பிரிட்! இந்த கிராம மக்களுக்கு  சபிக்கப் பட்ட ரொட்டி கிடைத்த  தினம்!  எப்போதும்போல, உணவில் சேர்த்துக் கொள்ளும் ரொட்டி (ப்ரெட்) ஒரு திகிலூட்டும் அனுபவமாக மாறிப் போகும் என்று அந்த கிராம மக்கள் எவருமே நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது தான்! ஆனாலும் அந்த திகிலூட்டும் நிகழ்வு நடந்தது.


ரொட்டியை சாப்பிட்ட மக்களுக்கு, பயமுறுத்தும் மிருகங்களும் பற்றி எரிகிற தீயாகவும் தெரிகிற உணர்வு ஏற்பட்டது. ஒரு மனிதன்  தன்னுடைய வயிற்றைப்  பாம்புகள் கடிப்பது போல பயங்கரமாகக் கூச்சலிட்டுக் கொண்டே தண்ணீரில் குதித்து முழுகிப் போனான். பதினோருவயதுச் சிறுவன் ஒருவன் தன்னுடைய பாட்டியைக் கழுத்தை நெறித்துக் கொல்ல  முயன்றான். இன்னொருவனோ , நான் ஒரு ஆகாய விமானம் என்று கூவிக் கொண்டே இரண்டாவது மாடியில் இருந்து குதித்துக் கால்களை ஒடித்துக் கொண்டான்  

இன்னொருவனுக்கோ  தன்னுடைய இதயம்  கால் வழியாகக் கழன்று போவதுபோல உணர்வு, சரி செய்யும்படி டாக்டரிடம் கெஞ்சல் இப்படி நரகமே  அந்த கிராமத்துக்கு இறங்கி வந்து விட்டது போலத் தொடர் நிகழ்வுகள்! இந்தக் கொடூரத்தை அமெரிக்க டைம் பத்திரிகை வர்ணித்து எழுதியதும்,   உள்ளூர் பேக்கரித் தயாரிப்பாளர் தெரியாத் தனமாக ரொட்டி தயாரிக்கப் பயன் படுத்தப் பட்ட  ரை (rhye) தானிய மாவில் எதையோ கலந்து விட்டதாக, இன்னொரு செய்தி ரொட்டி மாவில் பாதரச நஞ்சு கலந்து விட்டதாக இப்படி அந்த நிகழ்வுக்குப் பல காரணங்கள் அப்போது சொல்லப் பட்டன.

1951 ஆம் ஆண்டில், போன்ட் செயின்ட் ஸ்பிரிட் என்ற க்ற்றாமத்தில் ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தப் படும் மாவில் எல்எஸ்டி என்ற போதை ரசாயனத்தைக் கலந்து, மனிதர்களுடைய மனத்தைக் கட்டுப் படுத்துகிற, பரிசோதனையைத் தன கூட்டாளி நாட்டு மக்கள் மீதே அமெரிக்க சி ஐ ஏ நிறுவனம் நடத்திப் பார்த்தது என்பதை சமீபத்தில், ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர் அம்பலப் படுத்தியிருக்கிறார். 

போதை மருந்தை சப்ளை செய்தது சாண்டோஸ் பார்மசூடிகல்ஸ்  (இந்தியாவில் கால்ஷியம் சாண்டோஸ் என்று குழந்தைகளுக்குத் தேவையான கால்ஷியம் மாத்திரைகளைத் தயாரிக்கும் அதே ஸ்விட்சர்லாந்து நாட்டு  சாண்டோஸ் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தான்) என்ற செய்தியை தி டெலிகிராப் பத்திரிகை வெளிப்படுத்தி யிருக்கிறது.

பிரான்ஸ் ஒரு ஐரோப்பிய நாடுதான்! வெள்ளைத் தோல் கொண்ட மனிதர்கள் வாழும் நேச நாடுதான்!  அமெரிக்க சுதந்திரத்திற்குப் பரிசாக, சுதந்திர தேவி சிலையை வடிவமைத்துப் பரிசாகக் கொடுத்த நாடுதான்! நேடோ அமைப்பில், அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளிதான்! இத்தனை தான்களையும் தாண்டி அமெரிக்கா,  பிரான்ஸ் நாட்டு கிராமம் ஒன்றில் ஒரு விஷப் பரீட்சையை மிக ரகசியமாக நடத்திப் பார்த்தது.  


அமெரிக்கர்கள் மீது கையை வைத்தால்.... என்று சவடால், சண்டியர்த்தனம் பண்ணுகிற அமெரிக்க அரசு, தன்னுடைய சொந்த மக்கள் மீதும் இது மாதிரிப் பரிசோதனைகளை நடத்தவும்  தயங்கியிருக்காது என்பதே அப்பட்டமான உண்மை. கடும்புயல், வெள்ளத்தால் கறுப்பின மக்கள் வாழும் பகுதிகள் பாதிக்கப் பட்ட தருணத்தில் அன்றைய புஷ் நிர்வாகம் எவ்வளவு மெதுவாக, அலட்சியமாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது புதிய செய்தி ஒன்றும் அல்ல. பொய்யானதுமல்ல!



எதை எடுத்தாலும் நம்ப வேண்டாமென்று அவநம்பிக்கையை விதைப்பதற்காக இதை இப்போது சொல்லவில்லை! அமெரிக்கர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பல தருணங்களில் நிரூபிக்கப் பட்டது தான்! தெரிந்ததுதான்!

அமெரிக்காவில் உள்ள நல்லவிஷயங்களை விட, அதன் ஆணவம், அதிகார வெறி, பேராசை, சூதாடி மனோபாவம் தான் எப்போதுமே, அதை ஒரு நாடாக இயக்குவிக்கிற சக்தியாக இருந்து வந்திருக்கிறது. பேராசை கொண்ட நிறுவனங்கள், தனிமனிதர்கள், அமெரிக்க மக்களோடு, உலகையும் சீரழித்து வருகிற கதை, இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும். 


இந்த எல் எஸ் டி பின்னாட்களில் அமெரிக்க இளைஞர்களைச் சீரழிக்கிற போதை மருந்தாக ஆகிப் போன பரிதாபமும் மறந்துபோன ஒரு சமீபத்திய நிகழ்வு தான்..!

இந்தப் பழங்கதை இப்போது எதற்கு என்கிறீர்களா?

இது மாதிரியான நிகழ்வுகள் இன்னமும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. மருந்து என்ற பெயரில் ஒரு மோசமான விஷயம், அரசின் சம்மதத்துடனேயே, சட்டப் பூர்வமானதாக விற்கப்படுவதும், விஷயம் கொஞ்சம் கைமீறிப் போவதாகவோ, அல்லது வெளியே அம்பலப் படுத்தப் படும் போதோ, தடை செய்யப்படுகிற நடவடிக்கைகளுமாகத் தொடர்வதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களாக,  பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளில் கவனத்தை ஈர்ப்பதாக இந்தச் செய்தி இருந்தது.


மியாவ் மியாவ் ஒன்று!  கவலையைப் போக்கும் மருந்தா? போதையில் கலந்த விஷமா? இந்த மூன்று இணைப்புக்களில், அலோபதி  மருத்துவம் எந்த அளவுக்கு லாபம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டது, அரசுகள் எப்படி அதற்கு ஒத்து ஊதுகின்றன என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். பிரான்சில் நடந்த விஷப்பரிசோதனையை நடத்தியது, ஏதோ ஒரு சதிகாரக் கும்பல் இல்லை. சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு மருந்துத் தயாரிப்பு நிறுவனம் தான்!

ஸ்வைன் ப்ளூ தடுப்பூசி  விவகாரத்திலும் சரி,  அதற்கு முந்தைய ஆந்த்ராக்ஸ் தடுப்பூசியிலும் சரி, வியாதியைப் பரப்பி, லாபம் சம்பாதித்ததும்  ஏதோ ஒரு அல் கொய்தாவோ, வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த தீவீர வாதிகளோ இல்லை! ஆராய்ச்சி வசதிகளை இந்த மாதிரித் திரிப்பதற்காகவே பயன்படுத்துகிற மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தான்!

நேற்று வரை மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, சட்ட பூர்வமாக பரிந்துரைசெய்யப்பட மருந்தாக இருந்தது, இன்றைக்கு எமனாக மாறி உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறது  என்ற தகவல் வெளியே வந்ததும், பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப் பட்டிருக்கிறது. ஒரு மருந்து,
எப்படி வேலை செய்கிறது, என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது, பக்கவிளைவுகள் குறித்து எப்படிப்பட்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்பது எலிகள், முயல்கள், குரங்குகள் என்று முதலில்மிருகங்கள் மீது பரிசோதிக்கப்பட்டு, அதற்கு அடுத்த கட்டமாக மனிதர்கள் மீதும் பரிசோதிக்கப் பட்டு, அதற்கு அப்புறமாகத் தான் சந்தைக்கு வருகிறது என்று சொல்லப் படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் பரிசோதனை முடிவுகள், ஆவணப்படுத்தப் பட்டு, உறுதி செய்யப் பட்ட பிறகே ஏற்றுக் கொள்ளப் படுவதாக, அலோபதி முறையில்  மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்லிக் கொள்கின்றன.

உண்மைதான்! ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல், பல கட்டங்களில் பரிசோதனைக்குட்படுதல், உறுதிப்படுத்துதல் எல்லாம், மாற்று மருத்துவ முறைகளை விட, அலோபதி மருத்துவத்தில் மிக விரிவாகச் செய்யப்படுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு, மருந்துத் தயாரிப்பாளர்களால் உண்மை மூடி மறைக்கப்பட்டு, எல்லாமே ஒழுங்காக, முறையாக  இருப்பது போல ஆவணப்படுத்தப் பட்டு, மருந்துகள் என்ற பெயரில் என்னென்னமோ வெளியே வருவதும் அதே அளவுக்கு உண்மை.

இங்கே அலோபதி மருத்துவத்தைக் குறை கூறுவதாக, இதையே மற்ற மருத்துவ முறைகளைக் கேட்க மாட்டேன் என்று வருத்தப் படுகிறவர்களுக்காக ஒரே ஒரு விஷயம் தான் சொல்ல முடியும்!

விரும்பியோ,விரும்பாமலோ இன்றைக்கு அலோபதி மருத்துவம் தான் உலகெங்கும் பிரபலமாக இருக்கிறது, பரவலாகவும் இருக்கிறது. அறுவைச் சிகிச்சை முறையில் அலோபதிக்கு மாற்றாக, ஏனைய மருத்துவ முறைகளில் போதுமான தேர்ச்சியும், பயிற்சியும் இல்லை என்பதும் உண்மை.

ஏகபோகமாக வளரும் எதுவும் இங்கே அரசுத்துறை நிறுவனங்கள் மாதிரிச் சீரழிந்ததாகத் தான் மாறும். மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுடைய பேராசை, மக்களுடைய உயிரைத் துச்சமாக தூக்கி எறிகிற அளவுக்கு வளர்ந்து கொண்டிருப்பதை நிறைய நிகழ்வுகள்  காட்டிக் கொண்டிருக்கின்றன.

சிட்டுக் குருவி லேகியம் விற்பவர்களையும், காசு கொடுத்துக் கீரை வைத்தியம் செய்து கொண்டால் சிறுநீரகப் பிரச்சினைகளைக் குணப்படுத்த முடியும் என்று விளம்பரம் செய்கிற வைத்தியர்களையும், நாங்களும் அலோபதி மருந்தைப் பரிந்துரை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுக்கும் போலிகளையும் ஆதரிப்பதோ, அலோபதி வைத்தியம் தான் சிறந்தது என்று பிளாங்  செக் எழுதி உத்தரவாதம் தருகிற வேலையோ எனக்கு அவசியமில்லை.

மாற்று மருத்துவம் என்று ஒற்றை வார்த்தையில் அழைக்கப் படும் அலோபதி தவிர்த்த இதர மருத்துவ முறைகளைக் குறித்து ஒரு ஆரோக்கியமான விவாதம், மாற்றுச் சிந்தனை இப்போது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?




 

கதை கேளு..! கதை கேளு..! தடுப்பூசி கதை கேளு....!

ராபர்ட் லட்லமின் The Hades Factor கதை, மூன்று ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத, வெவ்வேறு இடங்களில் நடந்த மரணங்கள், அதைத் தொடர்ந்து எழும் கேள்விகளில் இருந்து தொடங்குகிறது.  

சவப் பரிசோதனையில், அதுவரை அடையாளம் காணப் படாத ஒரு வைரசின் தாக்குதல் இருப்பதாகத் தெரிய வரவும், பிரச்சினை என்ன என்பதை ஆராய்வதற்காக  The U.S. Medical Research  Institute for Infectious Diseases (USAMRIID) மற்றும் Center for Disease Control (CDC)  என்ற இரண்டு அமைப்புக்களுக்கும் இறந்தவர்களுடைய உடலில் இருந்து எடுக்கப் பட்ட சாம்பிள் அனுப்பிவைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவில் (USAMRIID) பணியாற்றும் லெப்டினன்ட் கர்னல்  டாக்டர் ஜோனாதன் ஸ்மித் லண்டனில் ஒரு மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, நாடு திரும்பி தன்னுடன் பணிபுரியும், தன்னுடன் காதலி சோபியா ரஸ்ஸலைச் சந்திப்பதை ஆவலோடு எதிர் நோக்கியிருக்கும் தருணத்தில், ஜோனாதன் ஸ்மித்தின் பால்ய  நண்பன் பில்லிடமிருந்து. லண்டனின்  ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் சந்திக்க வருமாறு சங்கேதச் செய்தி வருகிறது. சந்திக்கும்போது, ஸ்மித், மற்றும் சோபியாவின் உயிருக்குப் பெரும்  ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக அமெரிக்கா திரும்பி, சோபியாவையும் காப்பாற்றிக் கொள்ளுமாறு அந்த நண்பன் சொல்லிவிட்டு ஸ்மித் என்ன ஏது என்று கேட்கும் முன்னரே, தன்னுடன் அழைத்து வந்திருந்த நாயுடன் மறைந்து விடுகிறார்.

என்ன ஏது என்று புரியாமல் ஸ்மித் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்புகிற வழியில் அவரைத் தீர்த்துக் கட்ட ஒரு முயற்சி நடக்கிறது.  அவரைக் கொல்ல முயற்சி செய்தவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டு ஸ்மித் தப்பித்துவிடுகிறார், ஃபோர்ட் டெட்ரிக்கில் இருக்கும் USAMRIID ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் தனது காதலியைக் காப்பாற்ற ஸ்மித் விரைகிறார்.

இங்கே லண்டனில் ஸ்மித்தைக் கொலை செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் அதே நேரம், அங்கே ஆராய்ச்சி மையத்தில் டாக்டர் சோபியா ரஸ்ஸல், அந்த இனம் தெரியாத வைரசை அடையாளம் காணும் முயற்சியில் தீவீரமாக ஈடுபடுகிறார்  பல ஆண்டுகளுக்கு முன்னால், சோபியாவும் இன்னும் சில மருத்துவர்களும் பெரு நாட்டுக்குச் சென்றிருந்த தருணத்தில், அதே மாதிரி நோய்க் காரணிகளுடன்  பாதிக்கப் பட்ட உள்ளூர் மக்கள், ஒரு வகைக் குரங்கின் ரத்தத்தை மருந்தாக எடுத்துக் கொண்ட போது நோயில் இருந்து விடுபட்டதாகக் கேள்விப்பட்டது திடீரென நினைவுக்கு வருகிறது. அப்போது, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த டாக்டர் விக்டர் ட்ரெமான்ட்  என்ற விஞ்ஞானியைச் சந்தித்ததும், குரங்கு ரத்தத்தில் இருந்த ஒருவகை ஆண்டி பாடீஸ் தான் அதற்கு மருந்தாக இருக்க வேண்டுமென்றும் பேசியது நினைவு வரவே,அவரைத் தொடர்பு கொள்ள முயற்ச்சிக்கிறாள். அந்த முயற்சியே, அவளது உயிரைக் கொள்ளை கொண்டுபோகும் என்பதையோ, காதலன் ஜோனாதன் ஸ்மித்துடைய உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை அறியாதவளாக!

ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற புகழ் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உபதலைவராக  இருக்கும் விக்டர்  ட்ரெமான்ட், சோபியாவுடன் பேசுகையில் தனக்கு எதுவும் நினைவு இல்லை என்று மறுத்தாலும், டாக்டர் சோபியாவின் ஞாபக சக்தியைக் கண்டு கலக்கமுறுகிறார். தீர்த்துக் கட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லை! நாடல் ஹசன் என்ற தேர்ந்த கொலையாளியிடம் சோபியாவையும், ஸ்மித்தையும் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஃபோர்ட் டெட்ரிக்கின் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, சோபியாவுக்கு ஆராய்ச்சிக் கூடத்திலேயே, அந்த கொடும் வைரஸ் ஊசி வழியாகச் செலுத்தப் பட்டு ஒரு விபத்து மாதிரி செட்டப் செய்யப் படுகிறது. சோபியாவின் தொலைபேசி உரையாடல்கள், ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எல்லாமே சுத்தமாக அழிக்கப் படுகிறது.

நோயின் தாக்கத்தோடு வீடு திரும்பும் ஜோனாதன் ஸ்மித் மருத்துவ மனையில் சேர்த்தும், அந்த இனம் தெரியாத வைரஸ் அவளது உயிரைக் கொள்ளை கொள்கிறது. காதலியை  இழந்த சோகத்தில், திசை தெரியாமல் தடுமாறும் ஸ்மித்துக்கு, சவப் பரிசோதனையில், சோபியாவின் உடலில் ஊசி போடப் பட்ட தடம், தடையமாக அது கொலை தான் என்று காட்டிக் கொடுத்து விடுகிறது. 


தன்னுடைய மேலதிகாரி ஜெனரல் கீல்பர்கரிடம், தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லி, ஸ்மித் சோபியாவின் மரணத்துக்குப் பழிவாங்கியே தீரவேண்டும் என்று அனுமதி கோருகிறார். ஆனால், அனுமதி கொடுப்பதற்கு முன்னாலேயே கீல்பர்கரும், அந்த வைரசுக்குப் பலியாகிறார். அது கொலை தானென்றும், அதை செய்தது ஸ்மித் தானென்றும் வேட்டையாடப் படுகிற நிலைக்கு ஸ்மித் தள்ளப் படுகிறார்.   

பீட்டர் ஹோவெல், மார்டிஜெல்லர் பாக் என்ற இரண்டு நண்பர்களுடைய உதவியோடு ஜோனாதன் ஸ்மித், இந்த வைரஸ் கோளாறு ஈராக்கில் பரிசோதிக்கப் பட்டதென்பதை அறிகிறார். ரகசியமாக ஈராக்கிற்குப் பயணமாகிறார். சி ஐ ஏ அதிகாரியாக பணியாற்றும் சோபியாவின் சகோதரி ராண்டி ரஸ்ஸலை எதிர்பாராத விதமாக அங்கே சந்திக்க நேரிடுகிறது. சோபியாவின் மரணத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ராண்டி முதலில் கோபப்படுகிறாள். பிறகு சேர்ந்து செயல்படுகிறாள். தேவையான விவரங்களைத் தெரிந்து கொண்டு ஸ்மித் அமெரிக்காவுக்குத் திருபுவதற்குள், உலகின் பல பகுதிகளிலும் ஒரு இனம் தெரியாத வைரஸ் தாக்குதலுக்கு லட்சக் கணக்கான மக்கள் பலியாகிறார்கள்.

அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில், இதற்கான மருந்தை ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் வேறு ஒரு ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருந்தபோது தற்செயலாக இந்த வைரஸ் தாக்குதலுக்கும் நிவாரணமாக  இருப்பதைக் கண்டறிந்ததாகவும், அமெரிக்க அரசு ஆர்டர் கொடுத்தால் லட்சக் கணக்கான தடுப்பு ஊசி  மருந்தைத் தயாரிக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. 


அமெரிக்க மக்களைக் காப்பதற்காக, கோடிக்கணக்கான டாலர்களைக் கொடுத்து அமெரிக்க அரசு இந்த மருந்துகளை வாங்க ஆர்டர் கொடுக்கிறது. அத்தோடு விடாமல், இந்த மருந்தைக் கண்டு பிடித்ததற்காக, டாக்டர் விக்டர் ட்ரேமான்ட்டிற்கு, அமெரிக்க அதிபரே நேரடியாக சுதந்திரப்  பதக்கம் என்ற உயர்ந்த விருதை வழங்கி கௌரவப் படுத்துவதற்கும்  ஏற்பாடாகிறது.

கதையின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழும் தருணங்கள் மிக சுவாரசியமாகக் கையாளப் பட்டிருக்கின்றன.

பெருவில் ஏற்படும் ஒருவிதமான காய்ச்சலுக்கு, மருந்தாக ஒருவகைக் குரங்கின் ரத்தத்தில் இருக்கும் ஆண்டிபாடீஸ் பயன் படுவதைக் கண்டறியும் டாக்டர் ட்ரெமான்ட், நோயை உண்டாக்கும் காரணியையும், நோயைக் குணப்படுத்தும் ஆண்டி பாடீசையும் தயாரித்து, நோயை பரப்பி அதற்குப் பிறகு அதற்கு மருந்தையும் கண்டுபிடித்துக் கோடிக் கணக்கில் காசாக்குகிற சதியை ஹேட்ஸ் ப்ராஜக்ட் என்ற பெயரில், அமெரிக்க அரசின் மிகப் பெரிய பதவியில் இருப்பவர்களுடைய கூட்டணியோடு உருவாக்குகிறார். 


ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற பழமையான நிறுவனத்தின் உரிமையாளருக்குத் தெரியாமலேயே, மிக நவீனமான ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு எல்லாம் நடக்கின்றன.

நோயை உருவாக்கும் வைரஸ்,  குறிப்பிட்ட சிலருக்கு மருத்துவ உதவி என்ற பெயரில் செலுத்தப் படுகிறது. மாற்று மருந்து ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப் பட்டு, மருந்து சரியாக வேலை செய்கிறது என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. மற்றவர்கள், பெரும் அவஸ்தையுடன், இன்னதென்று நிர்ணயிக்கமுடியாத காரணத்தால் சாக விடப் படுகிறார்கள். 


நோயை உருவாக்குவதற்காக  ஆண்டி பயாடிக்ஸ் மருந்து என்ற போர்வையில், நோயைப் பரப்பும் மருந்துகள் ஏராளமாக சந்தையில் விடப் படுவதும், சரியான விலை கிடைத்ததும் மாற்று மருந்தும் கிடைக்கச் செய்வதுமான மருந்துத் தயாரிப்பு  நிறுவனத்தின் சதி மோசடி இப்படியாக அம்பலமேறுகிறது.

கதாநாயகன் ஜோனாதன் ஸ்மித், ஈராக்கில் இருந்து திரும்புகிற சமயம், அவரது நண்பர்களில் ஒருவரான மார்டி எதிரிகளிடம் சிக்கிவிடுகிறார். ஆரம்பத்தில் அவரை எச்சரித்த பால்ய நண்பர் பில், இந்த சதிகாரர்களுடைய கூட்டத்தில் ஒருவர் என்பதும், தன்னுடைய நண்பனைக் காப்பாற்ற முயற்சிப்பது தெரிந்த நிலையில் அவரை வைத்தே ஸ்மித்தை வலையில் சிக்க வைக்கிற முயற்சியும் நடக்கிறது. நண்பனைக் காப்பாற்றுகிற முயற்சியில் பில் தன்னுடைய உயிரைக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு, ஜோனாதன் ஸ்மித் எதிரிகளை எப்படி சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பான க்ளைமாக்சில் வந்து முடிகிறது.


துறை சார்ந்த புதினமாக ராபர்ட் லட்லம், இன்னொரு எழுத்தாளருடன் சேர்ந்து எழுதிய கவர்ட் ஒன் தொடர் புதினங்களாக எழுதியதில் இது முதலாவது! இதற்கடுத்த கதைகள் எல்லாம் 2001 இல் ராபர்ட் லட்லம் மரணமடைந்த பிறகு, அவர் எழுதி வைத்திருந்த குறிப்புக்களின் அடிப்படையில் இன்னொரு எழுத்தாளரும் சேந்து எழுதி வெளிவந்தவை என்பது கூடுதல் தகவல்.
 

 

இந்தக் கதைகளில் முக்கியமாக, ஒரு விஷயம் எப்படி நடக்கிறது என்பதை விட அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்பதில் தான் மனிதனின் கவனம் இயல்பாக இருக்கிறத் தன்மை வெளிப்படுவதைப் பார்க்கலாம். இந்த முதல் கதை அமெரிக்காவில்  கவர்ட் ஒன் என்ற ரகசிய அமைப்பு ஏற்படுத்தப் படுவதன் பின்புலமாக இருக்கிறது. 

இந்த அமைப்பு, கதாநாயகனுக்கு இதில் எதனால் ஒரு பிடிப்பு அல்லது லட்சிய வெறி ஏற்படுகிறது என்பதை, இந்தக் கதையில், கதா நாயகனுக்கு ஏற்படும் சொந்த இழப்பு வலுவான மோடிவாக  ஆரம்பித்து, தன் உயிரையே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய  சர்வைவல், அப்புறம் இப்படியெல்லாம் அலைய, அழ வைக்கிறவர்களின் மீது வருகிற கோபம் என்று நாடகத்தனமான லாஜிக்குடன் கதை நகர்கிறது.

இப்படி நாடகத் தனமான லாஜிக் இருந்தால் தான் ஜனங்களிடம் இன்றைக்கு எடுபடுகிறது என்பது தான் மிகப் பெரிய சோகம்!

ராபின் குக் எழுதிய சுரம் புதினத்தில் இருந்த பலவீனம் இது தான்!


The Fever கதையின் நாயகன்,  சார்லஸ் மார்டெல் ஒரு மருத்துவர். லுகேமியா என்ற ரத்தப் புற்றுநோய்க்குத் தனது மனைவியை பறிகொடுத்தவர். அதை அடுத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டு  பிடிக்கும் ஆராய்ச்சியில்  தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  மருத்துவருடைய மகளுக்கும்அதே மாதிரியான மிக அரிதான புற்று நோய் இருப்பதைக் கண்டறிகிறார். 

ரசாயனக் கழிவை சுத்திகரிக்கிறேன் என்ற பெயரில் அந்த சிறுமி விளையாடும் இடத்தின் அருகே இருந்த சிறு குட்டையில் பென்சைன் என்ற புற்றுநோயைத் தூண்டுகிற காரணியாக இருக்கும் நஞ்சை, ஒரு மருத்துவக் கழிவை சுத்திகரிக்கும் ரசாயனக் கம்பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டிருப்பது தான் காரணம் என்று தெரிய வருகிறது.

தன் மகளை மருத்துவமனையின் அனுமதியில்லாமல் வெளியே கொண்டு வந்து மாற்று மருத்துவ முறையில் சிகிச்சையைத் தொடருகிறார். மருந்து ஒன்றையுமே கூடக் கண்டுபிடித்து விடுகிறார்.வில்லனாக, ஒரு மருந்துக் கம்பனி வந்து குறுக்கிடுகிறது. மருத்துவர் என்ற தகுதியையும், மகளுடைய உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சிகளைச் செய்வதில்  பேராசை பிடித்த அந்த மருந்துக் கம்பனியின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார்.  

பெரும்பகுதிக் கதையில்  சார்லஸ் மார்டெல் எதன் மீதோ, எவர் மீதோ கோபத்தைக் கக்கிக் கொண்டிருப்பவராகவே சித்தரிக்கப் படுவதும், நிறைய ரசாயனக் கூட்டுப் பெயர்கள், விளைவுகள் என்று அடிக்கடி குறிப்பிடப் படுவதால், அடிப்படை ரசாயனம் அறியாதவர்களுக்குக் கொஞ்சம் கூடப் புரியாத வகையிலும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை, பக்கத்திலேயே ஒரு அகராதியை வைத்துக் கொண்டு பொருள் தெரிந்துகொண்டு படிக்க வேண்டியதாக இருந்ததும் , இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கையில் எடுத்த அந்த நாட்களில் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது.

ராபின் குக் மருத்துவராக இருந்து கொண்டே தன்னுடைய துறையில் நடக்கும் கொஞ்சம் அதீதமான அக்கிரமங்களை அம்பலப் படுத்துகிற வகையில் பல புதினங்களை எழுதியிருக்கிறார்.

 

ஆனால், ஊர்க் குளத்தில் ரசாயனக் கழிவைக் கொட்டிய நிறுவனம் வேண்டுமென்றே கான்சர் நோயைப் பரப்புவதற்காக அதைச் செய்யவில்லை என்று தானே சாதாரணமாகப் படிப்பவருக்குத் தோன்றும்! அதைப் போலத்தான் ஒரு மருத்துவராக இருந்தும் கூட, டாக்டர் ப்ருனோ தொடர்ந்து ஸ்வைன் ப்ளூ தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப் பட்டு கொஞ்ச நாட்கள் தான் ஆகிறது, அதனால் அதை விமரிசிப்பதே தவறு என்ற ஒரு விசித்திரமான வாதத்தை முன்வைத்திருக்கிறார். 

வேடிக்கை என்னவென்றால், இந்தத் தடுப்பு ஊசியைத் தயாரித்த கிளாக்சோ ஸ்மித் கிளீன் நிறுவனம், வேறு ஒரு மருந்துத் தயாரிப்பிலும் இதே மாதிரி அய்யம்பேட்டை வேலையைத் தான் செய்திருக்கிறது. வியாதியைப் பரப்பிக் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது என்று ஒரு புத்தகமே எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொன்ன போதிலும் கூட, மனிதர் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. முந்தைய பதிவுகளில் இதன் தொடுப்புக்கள் இருக்கின்றன.

இந்த வருடம் இந்தத் தடுப்பு ஊசியைக் கொள்முதல் செய்யப் போவதில்லை என்று சில மேற்கத்திய நாடுகளின் அரசுகள் முடிவெடுத்திருக்கும் நேரத்தில், அமெரிக்காவில், இந்த தடுப்பு ஊசியைக் கொள்முதல் செய்ய அனுமதி அளித்திருக்கும் செய்தியும் நேற்று அமெரிக்க Center for Disease Control(CDC) தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பன்றி காய்ச்சல் பீதி கிளப்பப் பட்டது 2009 ஆரம்பத்தில்! அதன் நோய்க்கூறுகளைப் பேடன்ட் செய்தது அதற்கும் முந்தைய ஆண்டில். 

தடுப்பு ஊசியின் ஆராய்ச்சி முடிவுகள் கேள்விக்குள்ளாகி, மேற்கத்திய நாடுகளில் எதிர்ப்பு இயக்கங்கள் நடந்து கொண்டிருப்பதையும் மீறி, பல பில்லியன் டாலர்கள் மருந்துத் தயாரிப்பாளர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர், அப்படியே புல்லுக்கும் பாய்கிற மாதிரி வேறெங்கெல்லாம் போயிருக்கும் என்பதையும் இணையத்தில் வெளிவரும் செய்திகள் அம்பலப் படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.
 


போபால் விஷவாயு வழக்கில் கூட நடந்த படுகொலையை நீதிமன்றம் திட்டமிட்ட படுகொலை அல்லது, அங்கே ஜனங்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்ததும், லட்சக் கணக்கானோர் பாதிக்கப் பட்டிருப்பது கண்கூடாக இருந்த போதிலும், சட்டத்தின் பார்வையில் அதைக் கொலையாகவோ, ஒரு பெரும் குற்றமாகவோ  பார்க்க முடியவில்லை என்பது தெரியும் தானே!

நாம் கூட இருக்கிற சட்டத்தின் அடிப்படையில் இவ்வளவு தான் தண்டிக்க முடியும் என்று வாதம் செய்த  ஒரு  நீதிபதியைப் போல, (நீதிபதி அஹமதி) இவ்வளவு பேர் மடிந்த விவகாரத்தை செய்தித் தாளின் ஒரு ஓரத்தில் நாலைந்து நாட்களுக்கு வந்து அப்புறம் மறந்து போய் விடுகிற சமாசாரமாகத் தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம், இல்லையா!


சூடு பட்டுக் கொண்டே இருந்தும் சுரணை வராத ஊமைச் சனங்களாகவே இருந்துவிடப் போகிறோமா என்ற ஆதங்கத்தைத் தான் இந்தப் பக்கங்களில் திரும்பத் திரும்பப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். 




 

மருத்துவனே! முதலில் உன்னை குணப்படுத்திக் கொள்!



ஆங்கில மருத்துவம் படிப்பவர்களுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கப் படும் பாடம்  Physician! Heal thyself!  

மருத்துவனே! முதலில் உன்னை குணப்படுத்திக் கொள் என்பது தான்!

இங்கே சென்ற திங்களன்றும், புதனன்றும் இரு பதிவுகள் மாற்று மருத்துவத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய அவசியத்தைத் தொட்டு எழுதியிருந்தேன். முதல் பதிவு, மாற்று மருத்துவத்தை, முழுக்க நிராகரிக்கிற ஒரு வலைப்பதிவு, ஹோமியோபதி மருத்துவத்தை ஒரு மோசடி மருத்துவமாகச் சித்தரிக்கும் கட்டுரை,  அதே தளத்தில் ஹோமியோபதி வைத்திய முறை பயனுள்ளதுதான் என்று சான்றிதழ் கொடுக்கும் ஒரு கட்டுரை இரண்டையும் கொடுத்து, வாசகர்கள் தாங்களே சுயமாக ஒரு கருத்து அல்லது விவாதத்தில் பங்கு கொள்ளட்டும் என்று கொடுத்திருந்தேன்.

திரு செந்தில்பாலன் மாற்று மருத்துவத்தில் உள்ள சில அபாயங்களைத் தொட்டு பின்னூட்டங்கள் எழுதியிருந்தார். மாற்று மருத்துவத்தில் பயன் படுத்தப் படும் மருந்துகளில் ஆபத்தான உலோகங்கள் பயன்படுத்துவது குறித்து முதல் பதிவில் எச்சரிக்கை செய்திருந்தார். எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அவசியத்தை ஒப்புக் கொண்டு, அலோபதி மருத்துவத்திலும் கூட
விபரீதமான உலோகக் கலவைகள் பயன்படுத்தப் படுகிறது என்பதைத் தொட்டு, பன்றிக் காய்ச்சலுக்கு கிளாக்சோ ஸ்மித் கிளீன் நிறுவனம் தயாரிக்கும் பெண்டேம்ரிக்ஸ் என்ற தடுப்பு ஊசியில் கலந்திருக்கும் பாதரசம், அலுமினியம், தெரேமால், ஸ்க்வாலீன் போன்ற அபாயமான,  கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உபவேதிப் பொருட்கள்  இருப்பதைக் குறித்த ஒரு கட்டுரையை எடுத்துச் சொல்லியிருந்தேன்.

பதிவரும் மருத்துவருமான திரு ப்ருனோ இந்த இரண்டு பதிவுகளையும் படித்துவிட்டுப் பார்த்துவிட்டு, நிறையக் கேள்விகளை எழுப்பியிருந்தார். ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கி
ருக்கிறது  என்று  இன்று மாலையில் தான் பதிவர் மயில் ராவணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது கொஞ்சம் சந்தோஷப் பட்டுச் சொல்லிக் கொண்டிருந்தேன். மருத்துவர் ப்ருனோ மாற்று மருத்துவத்தைக் குறித்து இன்று எழுதியிருக்கும் பதிவு, அந்த சந்தோஷத்தைப் போக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி மருத்துவர் கொஞ்சம் பிறழ்ந்து எழுதியிருக்கும் ஒரு பதிவுக்கு எதிர் வினையாற்றிய இந்தப் பக்கங்களில் இருந்துதான் திரு ப்ருனோ எழுதிய பதிவையே அறிந்துகொண்டேன்.

பன்றிக் காய்ச்சல்  என்று ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வந்து  கொண்டிருக்கும் இந்தக் காய்ச்சல், இயற்கையாக உண்டானது மாதிரி இல்லை, மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்று அமெரிக்க மருத்துவத் துறையில் இருப்பவர்களே சொல்கிறார்கள். பாருங்கள்!





சென்ற வருடம் ஜனவரி மாத வாக்கில் இந்தக் காய்ச்சலைப் பற்றிய செய்திகள் கசிந்து வர ஆரம்பித்தன. மிகப் பெரிய உயிர்க்கொல்லி நோய் என்ற மாதிரித் தம்பட்டம் அடிக்கப் பட்டது. அமெரிக்க அரசு, இதற்காகப்  பெருத்த செலவில் கொள்முதல் செய்த தடுப்பு ஊசிகளை சென்ற வருடம் அக்டோபரில் இருந்து  வலுக்  கட்டாயமாகப் போட முனைவதாக எழுந்த செய்திகளைத் தொடர்ந்து எதிர்ப்புக்கள் கிளம்பின. அம்மை நோய்க்கு தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் முன்னணியில் இருந்த மருத்துவ விஞ்ஞானிகளே, இந்த பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மிகவும் ஆபத்தானது, தங்களுடைய குழந்தைகளுக்கு இதைப் போட அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். இங்கே ஒரு மருத்துவர் வீடியோவில் அதை வெளிப்படையாகவே சொல்கிறார்.





வெறும் காய்ச்சலோ, பருவ காலங்களில் வரும் ப்ளூ காய்ச்சலோ, அல்லது பீதியைக் கிளப்புவதற்காகவே அனுப்பி வைத்திருக்கும் பன்றிக் காய்ச்சலோ எதுவானாலும், மனித உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை எந்த விதமான செலவுமின்றி, இயற்கையாகவே சூரிய ஒளி உடலில் படுவதன் மூலம் கிடைக்கும் வைட்டமின் டி மூன்றில் இருந்து ஐந்து மடங்கு கிடைக்கிறது என்பதை மருத்துவ ஆராய்ச்சியில் இருப்பவர்களே  சொல்கிறார்கள்.





இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகி விட்டால், மருந்து நிறுவனங்கள் பிழைப்பதெப்படி!? ஒரு பீதியை கிளப்பிவிட்டால், அரசுகள் எப்படி வாரி வழங்கும் வள்ளல்களாக மாறி, மருந்துக் கொள்முதலைப் பெருத்த செலவில் செய்து, மருந்து நிறுவனங்களுடைய கல்லாவை நிரப்பும் என்பதை இந்தப் பக்கங்களிலேயே ராபர்ட் லட்லம் எழுதிய Covert One: The Hades Factor புதினத்தைத் தொட்டு எழுதிய விமரிசனத்தில் பார்த்திருக்கிறோம்!

பிரிட்டிஷ் மெடிகல் ஜார்னல், ஐக்கியநாடுகள் சபை பன்றிக் காய்ச்சல்  விவகாரத்தைக் கையாண்ட விதம் குறித்துக் கண்டனம் தெரிவித்திருப்பதைப் படிக்க இங்கே.

பன்றிக் காய்ச்சல், தடுப்பூசி என்பதே ஒரு சதி தான் என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவரும் தளம் இது. இங்கே இந்த விவகாரம் குறித்து நிறையக் கட்டுரைகள் இருக்கின்றன. கொஞ்சம் படித்துத் தான் பாருங்களேன்!

போலி மருந்துகள் என்ற குறியீட்டுச் சொல்லில், இந்தியச் சூழ்நிலையைத் தொட்டு எழுதிய முந்தைய பதிவுகளையும் நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.

இது அலோபதி அல்லது வேறு எந்த மருத்துவ முறையை தூக்கிப் பிடிப்பதற்காகவோ, அல்லது இழிவு படுத்துவதற்காகவோ அல்ல--நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக! ஒரு விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக.


 

தேவை! மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, மாற்றுச் சிந்தனையும் கூட....!


மாற்று மருத்துவம் என்று  சென்ற பதிவில் ஒரு சிந்தனைக்காகப் பேச ஆரம்பித்தபோது--

முதலில், நோயின் தன்மையைச் சரியாகக் கண்டறிகிற மருத்துவரின் தொழில் ஞானம். இது அலோபதி மட்டுமல்ல, எல்லா மருத்துவ முறைக்கும் பொருந்தும். டயக்னைஸ் செய்ய வேண்டிய மருத்துவர், ஸ்கேன், பரிசோதனை முடிவுகளை மட்டுமே வைத்து மருந்துகளை பரிந்துரை செய்கிற அவலம் இங்கிருக்கிறதா இல்லையா?

அடுத்து, பரிந்துரைக்கும் மருந்து என்னென்ன விரும்பத்தகாத பக்க விளைவுகளைக் கொண்டு வரும் என்பதிலும் தேர்ச்சி, அதற்குத் தகுந்த மாதிரி மருந்தின் அளவு உட்கொள்ளவேண்டிய காலம் இவைகளைப் பற்றியும் மருத்துவர்களில் எத்தனை பேருக்குத் தேர்ச்சி இருக்கிறது? கொசு அடிக்க பீரங்கியைப் பயன்படுத்துகிற மாதிரி, ஓவர்டோஸ் பரிந்துரைக்காத மருத்துவர்கள் எத்தனை பேர்?

எல்லாவற்றுக்கும் மேலாக மருந்தின் விலை! கலப்படம், போலி, காலாவதியாகிப்போன மருந்தா  இல்லையா என்பது, இப்படி நிறையக், கேள்விகளுக்கு அலோபதி மருத்துவம் இந்தியச் சூழ்நிலைகளில் என்ன சொல்கிறது?

இதே கேள்விகளுக்கு மாற்று மருத்துவம் என்ன சொல்கிறது?

கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!


இப்படிக் கேள்வியை முன்வைத்து, ஒரு கருத்துப் பரிமாற்றத்தை வேண்டியிருந்தேன். மாற்று அல்லது மாற்றம் என்றாலே இங்கே நிறையப்பேருக்கு அலெர்ஜியாக இருக்கிறது. செந்தில்பாலன் என்ற வாசகர் வந்து ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறார்.


"மாற்று மருத்துவ முறைகளில் எளிதில் போலிகள் கலந்து விட வாய்ப்பு உண்டு. அவர்கள் தரும் மருந்துகளில் உள்ள கன உலோகங்களால் (heavy metals) கொடுமையான வியாதிகள் வரலாம். மருத்துவரை தேர்வு செய்வதில் எச்சரிக்கை தேவை நண்பர்களே!!!! "


எச்சரிக்கைக்கு நன்றி. ஆனால் இந்த எச்சரிக்கையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதையும் கொஞ்சம் பார்த்து விடலாம்! அவருடைய எச்சரிக்கை, மாற்று மருத்துவத்தை மட்டும்  முழுமையாக நிராகரிப்பதாக இருக்கிறது. மருத்துவரை தேர்வு செய்வதில் எச்சரிக்கை தேவை என்று சொல்கிறவர், அலோபதி மருத்துவத்தையும் உள்ளிட்டு என்று சொல்லியிருந்தால் கொஞ்சம் அர்த்தம் இருந்திருக்கும்.


கடந்த ஒன்றரை வருடங்களாகப் பன்றிக் காய்ச்சல் என்ற விஷக் காய்ச்சல் இதுவரை இந்தியாவில் ஆயிரத்து எழுநூறுக்கும் ஏற்பட்டவர்களைப் பலி கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட புள்ளி விவரம் சொல்கிறது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு காய்ச்சலே எவருக்கும் இல்லை என்று சுகாதாரச் செயலாளர் அறிக்கை விட்டார். ஆனாலும்,ஆய்வு செய்வதற்காகத் திருநெல்வேலிப்பக்கம் நேரடி விசிட் போனதாகக் கூட போன வருடம் செய்திகள் வந்தன. பத்திரிகைகளில் அரசு, முழுப்பக்க விளம்பரங்களைக் கூட வெளியிட்டதாக நினைவு! இப்போது கேரளாவிலும், மஹாராஷ்ட்ராவிலும் பன்றிக் காய்ச்சல் மறுபடி பரவிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.


மத்திய அரசு, மாநில அரசு, பொது மக்களுடைய சுகாதாரத்தில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொண்டன என்பதை இந்தப் பக்கங்களில் போலி மருந்து என்ற சொல்லை வைத்துத் தேடிப்பாருங்கள்! கொஞ்சம் கூடுதல் விவரம் கிடைக்கும்.


இப்போது திரு செந்தில்பாலன் முன்வைத்திருக்கும் ஒரு சந்தகத்திற்கு விடை சொல்கிற மாதிரி, அலோபதி மருத்துவத்தில் மட்டும் என்ன வாழ்கிறது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு செய்தியைப் பார்ப்போமா?



ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா?

"உலகை உலுக்கும் (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித் க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது.

பொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.

ஜெர்மனி அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்து ஆய்வு அமைப்பில் பணியாற்றும் டாக்டர் லுத்விக் இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பி, அதனை மருத்துவர்கள் பயன்படுத்தவேண்டாம், இதில் பிரச்சாரம்தான் அதிகமுள்ளது, பிரச்சாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் விஞ்ஞான சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாதது என்று அதிர்ச்சியூட்டியுள்ளார்.

நேச்சுரல் நியூஸ் இணையத் தள ஆசிரியர் மைக் ஆடம்ஸ் இது குறித்து 10 கேள்விகளை தன் இணையத் தளத்தில் எழுப்பி அதற்கு விமர்சன ரீதியான விடைகளையும் அளித்துள்ளார்.

அவர் அந்த கேள்விகளுக்கு முன் குறிப்பிடுகையில், எந்த ஒரு தடுப்பு மருந்தும், அதன் வினைத்திறன் பற்றிய கட்டுக்கதைகளுடன்தான் வெளிவருகிறது. அதாவது எந்த ஒரு தடுப்பு மருந்தும் சிறப்பாகவே செயல்படும், அதன் வினைத்திறன் பற்றி ஒருவரும் கேள்வி எழுப்பக்கூடாது, அப்படி கேள்வி எழுப்பினால் அந்த விஞ்ஞானியை விஞ்ஞான சமூகம் ஒதுக்கிவிடும் அல்லது அவரை பொதுச் சுகாதாரத்திற்கு எதிரி என்று முத்திரை குத்தும் என்று சாடியுள்ளார்.

அதாவது மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் எப்போதும் விடை தர மறுக்கும் ஒரு 10 கேள்விகளை அவர் எழுப்புகிறார்:

1.
ஃப்ளூவால் பாதிக்கப்படாத ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மீது நடத்தப்படும் 'ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள் எங்கே? அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செயல்திறன் மிக்கவை என்ற ஆய்வுகள் எங்கே?

விடை: இல்லை.

2.
ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான "விஞ்ஞான" ஆய்வுகள் எங்கே?

விடை: குழு அளவில் செய்யும் பரிசோதனை முறை, அதாவது 'கோஹார்ட் ஸ்டடீஸ்' தவிர வேறு இல்லை. இந்தஆய்வுகளை நம்ப முடியாது. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான நேர்மையான எந்த ஒரு சாட்சியமும் இல்லை.

3.
ஃப்ளூ தடுப்பு மருந்தில் சேர்க்கப்படும் துணைப்பொருளான திமிரோசால் மனித உடலுக்கு ஏற்றதுதானா? ஏனெனில் மெதில் மெர்குரி என்று அழைக்கப்படும் இது பாதரசமாகும். பாதரசம் என்பது தீவிரமான நச்சு கனரக உலோகம் என்று கூறப்படும்போது, அதன் பாதுகாப்பு நம்பகத் தன்மையுடையதா?

விடை: இது பாதுகாப்பானது அல்ல. மேலும் தளர்வுறச் செய்யும் நரம்பு நோய்கள் ஏன் தோன்றுகின்றன என்பதையும் இது விளக்குகிறது.

4.
தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட பின்பு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நாளடைவில் நரம்புத் தளர்ச்சியும், மூளை வீக்கமும், வலிப்பும், சில வேளைகளில் மரணமும் ஏற்படுவதாக ஏன் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன?

விடை: ஏனெனில் தடுப்பூசி மருந்துகள் அபாயகரமானவை. தடுப்பு மருந்து தொழில் துறையினர் தொடர்ந்து இது போன்று எழும் மருத்துவ எச்சரிக்கைகளை கண்டு கொள்வதில்லை. தற்செயல் விளைவு என்று இந்த அறிக்கைகள் கூறினாலும், ஏன் தற்செயல்?

5.
ஃப்ளூவை திறம்பட தடுக்கும், காலங்காலமாக இருந்து வரும் வைட்டமின் 'டி' ஏன் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுவதில்லை? வைட்டமின் "டி" அனைத்து தடுப்பு மருந்துகளை விடவும் உடலில் இயல்பான எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகிறது.

விடை: ஏனெனில் வைட்டமின் டி-யிற்கு காப்புரிமை கிடையாது. அதனை ஒரு மருந்தாக விற்கமுடியாது. ஏனெனில் நாமே அதனை நமக்கு உருவாக்கிக் கொள்ளலாம். வைட்டமின் டி தேவையா அதற்கு மருத்துவரின் உதவி கூட தேவையில்லை. சூரிய ஒளியில் ஏகப்பட்ட வைட்டமின் டி உள்ளது.

6.
ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டால்தான் மனிதர்கள் உயிர் வாழ முடியுமெனில், பூமியில் மனித குல வரலாற்றில் எப்படி ஃப்ளூ காய்ச்சலை மீறி வாழ்ந்து வந்துள்ளனர்?

விடை: வைட்டமின் டி உள்ளவரை மனித மரபணு சமிக்ஞை ஏற்கனவே வெளியிலிருந்து வரும் சக்திகளை எதிர்த்துப் போராடுமாறு அமைந்துள்ளது.

7.
ஃப்ளூ தடுப்பு மருந்து கொடுத்தால் ஃப்ளூ தாக்காது என்று கூறப்படுகிறது. இது உண்மையெனில், தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களையே ஃப்ளூ வைரஸ் ஏன் தாக்குகிறது?

விடை: சக்தி வாய்ந்த ஃப்ளூ வைரஸ்களுக்கு தடுப்பு மருந்துகள் பயன் படுவதில்லை. அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் யாருக்கு அது தேவைல்லையோ அவர்கள் உடலில் மட்டுமே வேலை செய்கிறது.

8. 2004
ஆம் ஆண்டு ஃப்ளூ தடுப்பு மருந்துகள் தேவைக்கும் குறைவாக கிடைத்தபோதும், தடுப்பு மருந்து போடப்படும் நபர்களின் எண்ணிக்கை 40% குறைந்த போதும் ஏன் ஃப்ளூ வைரஸ்களால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை?

விடை: சாவு விகிதங்களில் மாற்றமில்லை. தடுப்பு மருந்தை ஒருவருக்கும் கொடுக்காவிட்டாலும் சாவு எண்ணிக்கையில் மாற்றமில்லை. ஏனெனில் ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்வதில்லை.

9.
குளிர் காலங்களில் ஃப்ளூவினால் மரணமடைவோர் விகிதம் 10%ஆக இருக்கும் போது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் சாவு விகிதத்தை 50%ஆக குறைக்கிறது என்ற பிரச்சாரம் ஏன்?

விடை: ஏனெனில் 50 சதவீதம் மரண விகிதத்தை குறைக்கிறது என்பது ஒரு விற்பனை உத்தி மட்டுமே. என் அறையில் 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 50 ஆரோக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் சாக்லேட் கொடுக்கிறோம் என்று வையுங்கள், 50% மக்களுக்கு சாக்லேட் ஆரோக்கியமானது என்று நாம் கூற முடியுமா? இதே தர்க்கம்தான் ஃப்ளூ தடுப்பு மருந்தினால் மரண விகிதம் 50% குறைகிறது என்ற பிரச்சாரத்திலும் உள்ளது.

10.
ஃப்ளூ தடுப்பு மருந்துகள் அபாரமாக வேலை செய்கிறது என்றால் ஏன் மருத்துவ அதிகாரிகள் அதனை முறையான வெளிப்படையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கின்றனர்? அதாவது பிளாசிபோ ஆய்வுக்கு ஏன் உட்படுத்துவதில்லை?

விடை: அவர்கள் பிளாசிபோ ஆய்வு அற ரீதியானது அல்ல என்று கூறினாலும், அதைவிட அறக்கேடானது பக்க விளைவுகளை கடுமையாக ஏற்படுத்தும் தடுப்பு மருந்துகளை உலகம் முழுதும் கோடிக்கணக்கான பேருக்கு கொடுப்பது.

இது போன்ற பதில் கூற முடியாத கேள்விகளை மைக் ஆடம்ஸ் எழுப்ப காரணம் என்ன? என்பதைப் பார்ப்போம்.

தற்போது உலகை உலுக்கி வரும் ஸ்வைன் ஃப்ளூவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளும் அங்கீகரித்து, பல்வேறு கட்டங்களில் அனைவரும் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்படும் 'பேன்டம்ரிக்ஸ்' என்ற கிளாக்சோ நிறுவன மருந்தில் துணை மருந்தாக சேர்க்கப்பட்டுள்ளது 'ஸ்க்வாலீன்' என்ற மருந்தாகும்.

அமெரிக்காவை உலுக்கிய ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பு மருந்திலும் இதே ஸ்க்வாலீன் உள்ளது. முதல் வளைகுடாப்போரின் போது இந்த தடுப்பு மருந்து அமெரிக்க ராணுவத்தினருக்கு போடப்பட்டது. கல்ஃப் வார் சின்ட்ரோம் (Gulf War Syndrome) என்று அழைக்கப்படும் நோய் 6,97,000 அமெரிக்க ராணுவத்தினரில் 25% பேரை தாக்கியது. இந்த தடுப்பு மருந்தால் விளைந்த விளைவுதான் இந்த நோய்.

பேராசிரியர் ஆர்.எஃப். கேரி என்பவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், ஸ்க்வாலினுக்கும் கல்ஃப் வார் சின்ட்ரோமுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். இதனால் 2004ஆம் ஆண்டு ஃபெடரல் நீதிமன்றம் இதனை ராணுவத்தினருக்கு பயன்படுத்த தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது
.
ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தின் அபாயம் என்ன? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள டாக்டர் ஆண்டர்ஸ் ப்ரூன் லார்சென் என்பவர் பேன்டெம்ரிக்சில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்க்வாலீன் என்ற இந்த துணை மருந்துப் பொருள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு வளைகுடாப்போருக்கு முன்பும் பின்பும் போடப்பட்ட ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி மருந்தில் ஸ்க்வாலீனின் அளவு 100 கோடி மைக்ரோகிராம் நீர் அளவில் 34.2 மைக்ரோ கிராம் என்று இருந்தது
.

ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தான பேன்டெம்ரிக்சில் 0.5 மில்லிக்கு 10.68 மில்லி கிராம் ஸ்க்வாலீன் சேர்க்கப்பட்டுள்ளது. இது கல்ஃப் வார் சின்ட்ரோம் என்ற நோயை உருவாக்கிய ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தில் உள்ள ஸ்க்வாலீன் அளவைக்காட்டிலும் 10 லட்சம் மடங்கு அதிகம் என்று கூறுகிறார்
.

இந்த துணை மருந்து பொருள் அதாவது தடுப்பு மருந்திற்கு உடலின் வினையாற்றும் திறனை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுவதாகக் கூறும் இந்த ஸ்க்வாலீன், பல்வேறு நரம்பு மண்டல நோய்களையும், உடலின் நோய் தடுப்புச் சக்தி தனது திசுக்களையும், உறுப்புகளையுமே தாக்கும் லூபஸ் என்ற நோயையும், முடக்கு வாதத்தையும் உருவாக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வந்துள்ளன.

14 கினியா பன்றிகளிடத்தில் ஸ்க்வாலீனை கொடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் ஒரு பன்றிதான் உயிரோடு இருந்தது. இதே ஆய்வை மீண்டும் செய்து பார்த்தபோதும் முடிவுகளில் மாற்றம் எதுவும் இல்லை.

அப்படி என்ன இந்த ஸ்க்வாலீன் என்று பார்த்தால் அது ஒரு வகை எண்ணெய் அவ்வளவே. ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தை தயாரித்த தி சிரான் என்ற இந்த நிறுவனம் எம்.எஃப்- 59 என்ற துணை மருந்துப் பொருளை தயாரிக்கிறது. இதில் ஸ்க்வாலீனும், கிளைக்கோ புரோட்டீன் - 120, அதாவது ஜி.பி.- 120 என்ற துணைப்பொருளும் அடங்கும்.

தற்போது புழக்கத்தில் உள்ள வாக்சைன்களில் - அதாவது தடுப்பூசிகளில் - இந்த எம்.எஃப்.- 59 உள்ளது. டெடனஸ், டிஃப்தீரியா தடுப்பூசியிலும் இது உள்ளது. இதன் மோசமான பக்க விளைவுகள் பற்றி காலங்காலமாக ஆய்வாளர்கள் எழுதி வருகின்றனர்.

கிளைக்கோ புரோட்டீனை மூளையில் உள்ள மைக்ரோக்ளியா செல்கள் உள் வாங்கும் போது தீவிரமான அழற்சியை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கிளைக்கோ புரோட்டீனின் ஒரு பகுதிதான் ஹெச்..வி. வைரஸிலிருந்து தனியாக பிரிக்கப்படுகிறது. இதனால்தான் எய்ட்ஸ் நோயாளிகள் பலருக்கு மனச்சிதைவு (Dementia) நோய் ஏற்படுகிறது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட சில மாதங்களில் தெரிய வருவதல்ல. இதன் நோய்க்கூறுகள் வெளிப்பட, அதாவது வெளிப் படையாக தெரிய சில ஆண்டுகளும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
.

சில ஆண்டுகளுக்கு முன் பிரபலப்படுத்தப்பட்ட ஹெபடைடிஸ் - பி நோய் தடுப்பு மருந்திலும் நாம் முன்பு குறிப்பிட்ட திமெரசால் என்ற துணை மருந்துப் பொருள் சேர்க்கப்படுகிறது.

ஃப்ளூ காய்ச்சல், அது எந்த வகையானாலும் சரி, எச்1 என்1 ஆக இருந்தாலும் சரி, அதற்கான தடுப்பூசி மருந்துகளில், அதாவது வாக்சைன்களில் அலுமினியம், திமெரசால் அல்லது ஸ்க்வாலீன் என்ற மேற்கூறிய அபாய விளைவுகளை ஏற்படுத்தும் துணைப்பொருள் சேர்க்கப்படுகிறது
.

இந்த ஒவ்வொரு துணை மருந்து பொருளும், நரம்புச் சிதைவு அல்லது நரம்பு தளர்வு நோயையும், வளர்ச்சிக் குறைபாடுகளும், தண்டு வட அழற்சியும் (Spinal Chord Inflammation), பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் கண் நோயும், இன்னும் பிற நோய்களும் உருவாவதாக ஆய்வுகள் வந்த வண்ணம்தான் உள்ளன.

இந்த மோசமான விளைவுகள் பிரச்சாரம் மூலம் ஒன்றுமில்லாமல் அடிக்கப்படுகின்றன. எந்த ஒரு நாட்டிற்கும் தடுப்பு மருந்து கொள்கைதான் முக்கியமாகப்படுகிறதே தவிர அதன் மோசமான பின் விளைவுகள் முக்கியமாகப் படுவதில்லை.

பேன்டெம்ரிக்ஸ் என்ற கிளாக்சோ ஸ்மித்க்ளைன் நிறுவனத்தின் ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து ஜெர்மன் பத்திரிக்கையான் டை ஸ்ப்லீகல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

டாக்டர் லுத்விக் என்ற ஜெர்மன் மருத்துவ அதிகாரி இந்த மருந்தின் மீது கடுமையான விமர்சனங்களை தொடுத்துள்ளார்.

வாக்சைன்கள் மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும்தான் ஆதாயமானது, ஏனெனில் மேலும் நோயாளிகளை அது உருவாக்குகிறது என்று எங்கோ படித்ததன் அர்த்தம் இப்போது நமக்கு புரிகிறது.

ஆனால் ஃப்ளூ வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள எளிய வழி உள்ளது. அதாவது வைட்டமின் டி- 3 தான் அது என்று ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. நல்ல உணவு, தேர்ந்தெடுக்கப்பட்ட நோய் தடுப்பு மருந்துகள் அல்லது உணவு முறை போன்ற வாழ்க்கை முறையே ஃப்ளூ வைரஸிலிருந்து நம்மை காக்கும்.

வைட்டமின் - டி என்ற நோய்த்தடுப்பு சக்தி

நேச்சுரல் நியூஸ் இணையத் தளத்தில் மைக் ஆடம்ஸ் சென்ற வருடம் அக்டோபர் 13ஆம் தேதி எழுதிய கட்டுரைக்கு '6 கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி கூறுகிறது வைட்டமின் டி உங்களை ஸ்வைன் ஃப்ளூவிலிருந்து காக்கிறது என்று' என்று தலைப்பே இட்டுள்ளார்
!

இந்தக் கட்டுரையை மைக் ஆடம்ஸ் எழுதுவதற்கு 2 மாதங்கள் முன்னதாக ஆரிஜன் ஸ்டேட் பல்கலை கழக ஆய்வு ஒன்று வைட்டமின் டி-யின் நோய் தடுப்பு அரிய குணங்களை கண்டு பிடித்துள்ளனர்.

அதாவது 6 கோடி ஆண்டுகளான பரிணாம வளர்ச்சியில் இன்றும் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்களில் இந்த வைட்டமின் டி இயல்பாகவே உள்ளது. ஆனால் வைட்டமின் டி அளவை நாம் கச்சிதமாக பராமரிக்க வேண்டும். சூரிய ஒளியிலும், சில உணவுகளிலும் இந்த சத்து நிறைய உள்ளது.

வைட்டமின் டி வேலை செய்யும் விதம் நம் உடலின் இயல்பான தற்காப்பு சக்தி எந்த ஒரு புற நோய் சக்திகளுக்கும் எதிராக அளவுக்கு அதிகமான வேலையைச் செய்வதில்லை. மாறாக உள்ளிருக்கும் தடுப்பு சக்தியை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வைக்கிறது. அதிகமாக எதிர்வினை ற்றினால்தான் அழற்சி என்ற 'இன்ஃப்ளமேஷன்' ஏற்படுகிறது.

எனவே வைட்டமின் டி - குறைபாடு இருப்பவர்களுக்கு எளிதில் குளிர் காலத்தில் அல்லது மழைக் காலத்தில் சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படுகிறது. துவக்க நோய்க்கிருமியை தடுப்பதோடு, அதிகமாக எதிர் வினையாற்றி அதனால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதிலிருந்தும் தடுக்கிறது. 1918ஆம் ஆண்டு பரவிய ஃப்ளூ நோயில் இறந்தவர்கள் இந்த அதிகப்படியான எதிர்வினையால் ஏற்பட்ட பேக்டீரியல் நிமோனியா என்ற நுரையீரல் அழற்சி நோயாலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் வைட்டமின் டி சத்தை தக்கவைத்துக் கொள்ளும் உணவு முறை, அல்லது மருந்துகள் என்ன என்பதை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நல்லது." 

இந்த செய்தியைப் படித்துப்பார்த்தால்,செந்தில் பாலன் பயமுறுத்துகிற கன ரக உலோகங்கள் மட்டுமில்லை, பாதரசம் மாதிரிக் கொடுமையான நஞ்சும், அலுமினியம் மாதிரி லேசான உலோகங்களுமே தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிற செய்தியும் இருக்கிறது. பக்க விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நமக்குத் தேவைப் படுவது மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, சரியான மாற்றுச் சிந்தனையும் கூடத்தான்!

இல்லையா?!
இந்தக் கட்டுரை சென்ற வருடம் அக்டோபரில் வெளியானது.  வெப்துனியா தளத்துக்கு நன்றி

உங்கள் கருத்துக்களையும்,கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!