தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள்......?!

2010 ஜூலையில் எழுதிய ஒரு பதிவுக்கு சுமார் ஒன்பது  ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரே ஒரு பின்னூட்டம், ஒரே வரிப் பின்னூட்டமாக வந்தால் எப்படி உணர்வீர்கள்?

முக்கியமான அவசியமான பதிவு இது.  

பதிவை யாரவது வாசித்தார்களா, என்ன நினைக்கிறார்கள் என்பதைத்    தெரிந்து கொள்கிற ஆவல் எனக்கும் இருந்தது.

வலைப்பதிவெழுத வந்த நாட்களில் இங்கே இருந்த சூழ்நிலை கோஷ்டிகள் எதிலும் பட்டுக்கொள்ளாமல், பிரபல பதிவராக ஆகவும் முடியாமல், திரட்டிகள் எதிலும் இணைத்துக் கொள்ளாமல் எழுதிக் கொண்டிருந்த நாட்கள் அவை. என் மனத் திருப்திக்காகவே இன்றைக்கும் எழுதிக் கொண்டு வருகிறேன். அப்படி எழுதிய ஒரு பதிவின் மீள்பதிவாக .....   

தலைமைப் பண்பு, தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்ற தலைப்பில், ஸ்ட்ராடெஜி அண்ட் பிசினெஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில், இன்னும் பத்தாண்டுகளுக்காவது நீடித்து  நிற்கக் கூடியதான மிகச் சிறந்த கருத்துக்கள் என்று ஒரு பத்துக் கருத்துக்களின் பட்டியலில், இந்த முதல் ஐந்தை முந்தைய பதிவில் பார்த்திருக்கிறோம்! இந்தக் கட்டுரையே 2005 இல் வெளி வந்தது தான் என்றாலும் இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதனாலேயே அதன் கருத்தை வைத்து எழுதப் பட்ட பதிவு அது. அந்த முதல் ஐந்து கருத்துக்கள் அல்லது காரணங்கள்!


1. Execution
2. The Learning Organization
3. Corporate Values
4. Customer Relationship Management.
5. Disruptive Technology

இந்த ஐந்தாவதான டிஸ்ரப்டிவ் டெக்னாலஜி --Disruptive Innovation! இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் வலைத்தளத்துக்கு லிங்க் இருந்ததைப் பார்த்து, அவர் சொன்னதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலாண்மை இயலின் குரு என்று  அழைக்கப்படும்  C K பிரஹலாத்  மறைவை ஒட்டி அஞ்சலிப்பதிவில், இங்கே கடலூரில் வெல்வெட் ஷாம்பூ அனுபவம், அதையே மேலாண்மை இயலில், பிரமிடின் அடித்தளத்தில் குவிந்து கிடக்கும் வளங்கள் என்று பிரஹலாத் சொன்னதைக் குறிப்பிட்டிருந்ததை, நினைவு படுத்திக் கொள்ள முடியுமானால், பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் சொல்வதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது.

வெல்வெட் ஷாம்பூ அனுபவம் என்ன?  என்று இந்தப் பதிவில் ஆரம்பித்தது, பின்னூட்டங்களில் கொஞ்சம் விவாதம் திசை மாறிப் போய்விடவே அப்படியே அந்தரத்தில் நிற்கிறது.எந்தப் புதுமையானாலும், ஒரு கட்டத்தில் பழசாகிப் போய் வழக்கொழிந்து விட வேண்டியது தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?!

ஒரு சின்னக் கதையைப்  பார்ப்போம்! கதைக்குப் பின்னால் உள்ள முழு செய்தி, தகவல்களைத் தெரிந்து கொள்ள இங்கே.
1904 இல் அமெரிக்காவில் மிசெளரி மாநிலத்தில் செயின்ட் லூயி என்ற இடத்தில் ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருந்த சமயம். ஒரு கடையில் ஐஸ் க்ரீம் விற்பனை நடந்து கொண்டிருந்தது. அடுத்த கடையில்,. சோளமாவினால் செய்யப் பட்ட வா ஃபர்கள் தயாரிக்கிற கடை ஒன்று.ஐஸ்க்ரீம் விற்பனை செய்கிற கடையில் ஐஸ்க்ரீம் வைத்துக் கொடுக்கிற கண்ணாடிக் கோப்பைகள் தீர்ந்துபோய்விட்டது. பக்கத்துக் கடையில் ஏதாவது செய்து தர முடியுமா என்று கேட்டதில் உருவானது தான் இன்றைக்கும் மிகப் பிரபலமாக இருக்கும் கோன் ஐஸ் க்ரீம்! இந்தக் கோன்களின் வசதி என்னவென்றால்,  அப்படியே ஐஸ்க்ரீமோடு சேர்த்து சாப்பிட்டு விடலாம்! தனியாக சுவை என்று இல்லாவிட்டாலும், ஐஸ்க்ரீமோடு சேர்த்து சாப்பிடும் போது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதல்லவா! இன்றைக்கு நமக்குப் பழகிப் போய்விட்டபடியால், இந்த யோசனையில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாகத் தோன்றலாம். ஆனால், அறிமுகம் செய்யப்பட அந்த ஆரம்ப நாட்களில் இந்த கோன்  ப்ளஸ் ஐஸ் க்ரீம் மிகப் பெரிய சக்சஸ் பார்முலாவாக இருந்தது.  இன்றைக்கும், உலகமெங்கும் ஐஸ்க்ரீம் வர்த்தகத்தில் கோன் ஐஸ்க்ரீம் செக்மென்ட் குறிப்பிடத் தகுந்த சதவீதம் இருக்கிறது.

தனித்தனி சம்பவங்கள், உதாரணங்களைப் பிடித்துக் கொண்டு விவாதத்தைத் தொடர்ந்தால் விவாதம் திசைமாறித் தான் போகும். இதை மனதில் வைத்துக் கொண்டு மீதம் உள்ள ஐந்தையும் பார்த்துவிடுவோமா?

ஆறாவதாகதலைவர்களை உருவாக்குதல்.

இதுவரை நமக்குக் கற்றுக் கொடுக்கப் பட்டதெல்லாம்தனக்கொரு பாதை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப்பான் என்ற மாதிரித் தான். இந்த மாதிரி நடந்து நடந்து நிறுவனங்களும் சரி, நாடுகளும் சரி குட்டிச் சுவராகிப் போனது தான் மிச்சம். தலைமை தாங்க என்னவோ சிலருக்கு மட்டுமே தகுதி இருப்பதுபோலவும், அந்த மாதிரி சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் அமர்த்தி வைப்பது என்பது எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை, நாம் தேர்ந்தெடுத்து சட்டசபை, நாடாளுமன்றம் என்று மட்டுமில்லை, தம்மாத்தூண்டு வார்டு கவுன்சிலர் வரை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் இல்லையா? நான் ஆளப் பிறந்தவன், ஆத்திரப் பட மாட்டேன்டைப் ஆசாமிகள் எவருமே உண்மையில் இல்லை. அப்படிச் சொல்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை. எவரை வேண்டுமானாலும், தலைமைப் பொறுப்புக்களைச் சுமப்பதற்குத் தயார் செய்ய முடியும்.

தலைமைப் பண்பு என்பது உத்தரவு போட்டு, அதை நிறைவேற்றுகிறார்களா என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதல்ல என்பதைப் புரிந்து கொண்டால் போதும். தலைமை என்பது மேல்மட்டம் என்பதாக இல்லாமல், சேர்ந்தே செயல்படும் அங்கமாக, ஒரு குழுவின் உயிரோட்டமாக இருக்குமானால் தலைமைப் பண்பு என்பது-- பொறுப்பை ஏற்றுக் கொள்வது, பொறுப்புடன் செயல் படுவது, தவறுகளுக்குக் காரணம் யார் என்பதைப் பார்த்துத் தலையைச் சீவுகிற கத்தியாக இல்லாமல், தவறை எப்படி சரி செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ளும் புத்தியாக இருப்பது என்று வரிசையாக பாசிடிவான நிறைய விஷயங்களை எல்லோரிடத்திலும் விதைக்கலாம், வளர்க்கலாம் என்பதும் விளங்கும். ஆக முதலில் பார்த்த ஐந்து காரணங்களையும் தொடர்ந்து பற்றிக் கொள்ள வேண்டுமென்றால், ஆறாவதான இந்தத் தலைமைப் பண்பை உருவாக்குதல் மிகவும் அவசியமானதாக ஆகிறது.

மேலாண்மை, தலைமை பற்றிய கண்ணோட்டங்கள் நிறையவே மாறியிருக்கின்றன. இந்த ஒரு கருத்தை மட்டும் நிறையக் கோணங்களில் இருந்து பார்க்க வேண்டியிருக்கிறது. வாசகர்களுடைய கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஏழாவதாக நிறுவனத்தின் பண்புகள், மூலக் கூறுகள் அல்லதுDNA 

ஸ்தாபனம் என்றால் என்ன 
என்ற கேள்வியை இந்தப் பதிவிலேயே முன்பொருதரம் பார்த்திருக்கிறோம். எந்தவொரு நிறுவனமும் சில அடிப்படைகளின் மீது தான் எழுப்பப்படுகிறது. அந்த அடிப்படைகள் அடிபட்டுப் போய்விடாமல், வலுவாக இருக்கின்றனவா என்ற சோதனையே பெரும்பாலான நிறுவனங்களில் நிகழ்வதில்லை. ஏன் தோற்கிறோம் என்பது புரியாமலேயே, தொடர்ந்து பழைய தவறுகளையே செய்து கொண்டு தோற்றுக் கொண்டு இருக்கிற ஒரு புள்ளி ராசா வங்கியைப் பற்றி இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால் அதன் தலைமை நிர்வாகியாக இருந்த ஒருவர், வங்கிக்குள் உள்சுற்றுக்கு வெளியிடப்படும் ஹவுஸ் மாகசினில் வெளிப்படையாகவே புலம்பினார். மற்ற வங்கிகளைக் காட்டிலும், வட்டி குறைவு, சேவைக் கட்டணங்கள் குறைவு, வாடிக்கையாளர் காலைப் பிடித்து சேவை செய்வதில் கூட முதலிடம் தான் அப்படியிருந்தும் நம்மால் ஏன் அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியவில்லை, ஏன் இருக்கிற வாடிக்கையாளர்களையுமே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று கேள்விகளை எழுப்பியிருந்தார். கேள்விகளைக் கேட்கத் தெரிந்த அளவுக்கு, விடை தேடத் தெரியவில்லை என்பதாலோ, அல்லது விடை தேடத் தயாராக இல்லை என்பதாலோ, அந்தப் பொதுத்துறை வங்கி இன்னமும் அதே திரிசங்கு சுவர்க்கத்தில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் கண் முன்னாலேயே பூதாகாரமாக இருந்தும் அவர்களுக்கு இன்றைக்கு வரை கண்ணில் படவில்லை!
Consistency! Continuity! Competency! இந்த மூன்றுC'க்களும் அந்த வங்கியில் இருந்ததே இல்லை!  இப்போது Core Banking என்று நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டி தொழில்நுட்பத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். தொழில் நுட்பம் வந்தாயிற்று! தொழில் நுட்பம் தெரிந்து வேலை செய்கிறவர்கள் இருக்க வேண்டுமே! 
ஆக அந்த நாலாவது C யும் இல்லை!

அந்த வங்கியை நம்பி, வாடிக்கையாளர் எவரும் தங்களுடைய வங்கித் தேவைகளை முடிவு செய்துவிட முடியாது. வாடிக்கையாளர் சேவை என்பது, சமாதானமான வார்த்தைகளில் பூசி மெழுகப் படுகிற செயலற்ற தன்மை மட்டுமே என்ற  நிலைமைதான் அந்த வங்கியில் இன்னமும் நீடிக்கிறது.

இந்த உதாரணத்தை மனதில் வைத்துக் கொண்டு, ஒரு நிறுவனம் ஜெயிப்பதற்குத் தேவையான மூலக் கூறுகளைக் கொண்டிருக்கிறதா  என்பது கொஞ்சமாவது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தோன்றுகிற கருத்துக்கள், அல்லது சந்தேகம்  எதுவானாலும் தயங்காமல் கேளுங்கள்!



எட்டாவதாக, காலத்தோடு ஒட்டிய மாற்றத்திற்கான செயல்திட்டம்!
மாற்றங்கள் தவிர்க்கப் பட முடியாதவைதான்.நிறுவனங்களை பொறுத்தவரை மாற்றத்திற்குத் தயாராவதற்கே ஒரு செயல் திட்டம் இருந்தாக வேண்டும்.அப்படி செயல் திட்டமில்லாமல் செய்யப் படுகிற மாற்றங்கள், தலை நகரை மாற்றிய துக்ளக் தர்பார் மாதிரி, நோக்கம் என்னவோ சிறந்தது தான் ஆனாலும் திட்டமிடாமல் செய்யப்பட்டபோது ஏராளமான மக்களைக் காவு கொண்டதாகிப் போன மாதிரி ஆகிவிடக் கூடும். இந்த மாற்றங்களுக்கான செயல்திட்டத்தை வகுக்கும்போது, உத்தேசிக்கும் மாற்றங்கள் ஸ்தாபனத்தில் பணியாற்றும் மனிதர்களைப் பாதிக்கக் கூடியவை என்பதால், அவர்களுக்குப் புரிகிற மாதிரி, அவர்களைப் புதிய சூழ்நிலைக்குத் தயார் செய்கிற மாதிரிப் பக்குவமாகக் கையாள்வது என்பதில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு முதலில் தெளிவு வேண்டும். மாற்றங்கள், தலைமையில் இருந்து ஆரம்பமாக வேண்டும். அப்படி மாற்றங்களைப் படிப்படியாக நிறுவனத்தின் ஒவ்வொரு தளத்துக்கும் விரிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தனிநபர்/ஊழியருக்கும், மாற்றங்கள் எப்படி அவசியமானவை, எந்த அளவுக்குத் தயார் செய்து கொள்ளவேண்டும், மாற்றங்களால் சாதிக்க விரும்புவது என்ன என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இப்படி மாற்றங்களை நிர்வாகம் செய்வதில், அமுல்படுத்துவதிலேயே நிறையப் பேச முடியும். Change Management என்று கூகிளில் தேடிப் பாருங்கள். உங்களுடைய கருத்துக்களையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.

ஒன்பதாவது கருத்தாக, சிக்கல்களைப் புரிந்து கொள்வது, நிர்வகிப்பது.
ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள், அதில் எதிர்பார்க்கும் விளைவுகள் என்பவை கொஞ்சம் சிக்கலானவை தான். இரண்டும் இணைந்தும் கூட்டினால் நான்கு என்று தெளிவான விடை கணிதத்தில் கிடைப்பது போல, ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்யும்போது கிடைத்துவிடுவதில்லை. தொடர்ந்து கற்றுக் கொள்ளும் நிறுவனமாக, செயல்படுத்துவதில் தெளிவான நிறுவனமாக, அப்புறம் disruptive technology என்று பார்த்தோம் இல்லையா, அப்படிக் கிடைக்கிற சின்னச் சின்ன வாய்ப்புக்களைக் கூட சமயோசிதமாகப் பயன்படுத்தத் தெரிந்த நிறுவனமாக இருந்தால், எப்படிப்பட்ட சிக்கலான தருணத்தையும் ஈடுகொடுத்து வெல்ல முடியும். 

இந்த ஒன்பதாவது கருத்தில்,காம்ப்லெக்சிடி  தியரி என்று கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கணிதம் கலந்த ஒரு முறையை வைத்து நிர்வாகம் செயல்படுவதை ஒரு முக்கியமான கருத்தாக முன்வைக்கிறார்கள். Complexity Theory  என்று சொல்லப்படுகிற  இந்த முறை உண்மையிலேயே நம்பத் தகுந்தது தானா, நீடித்து நிற்கக் கூடியதுதானா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அல்லது, இதன் பயன்பாட்டைக் காலம் தான் சரி அல்லது தவறு எனத் தீர்மானிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
பத்தாவதாக, Lean Thinking! டொயோடா கார் தயாரிப்பு முறையை முன்னுதாரணமாக வைத்து சொல்லப் படுகிற இந்த முறையை, ஒரு நிறுவனம், ஊளைச் சதையைக் குறைத்து, கட்டுமஸ்தாக உடலை வைத்திருப்பது போல, விரையங்களை முழுமையாகத் தவிர்ப்பது, தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் தவறுகள் ஆரம்ப நிலையிலேயே களையப் படுவது, ஊழியர்களின் முழுத் திறமையையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த ஒரு விஷயம் இரண்டாண்டுகளுக்கு முன்னால் வரவேற்கப்பட்டது போல இன்றைக்கு இல்லை. டொயோடா நிறுவனம், தங்களுடைய நிறுவனக் கலாச்சாரமாக வைத்திருந்த ஒரு தொழில், நிறுவனப் பண்பு நேற்று வரை ஆதர்சமாகக் கொண்டாடப் பட்டது, அதைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க முடியாமல் தோற்றுப்போன மேற்கத்திய குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள், இந்த நிறுவனப் பண்பையே இன்றைக்குக் கேலி செய்யப் படுகிற ஒன்றாக மாற்றிவிட்ட சோகத்தையும், டொயோடா பிரச்சினையைத் தொட்டு  இந்தப் பக்கங்களில் முன்னரே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
1. Execution
2. The Learning Organization
3. Corporate Values
4. Customer Relationship Management.
5. Disruptive Technology
6. Leadership Development
7. Organaisational DNA
8. Strategy based Transformation
9. Complexity Theory
10.Lean Thinking

இந்தப் பத்தும் தான் இன்னும் கொஞ்ச காலத்துக்கு நீடித்திருக்கக் கூடிய கருத்துக்களாக, சொல்லப் படுகின்றன.

உங்களுடைய பார்வையில் எப்படித் தோன்றுகிறது என்பதைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்! 

ஒரிஜினலாக இந்தக் கருத்துக்கள் சொல்லப்பட்டது 2005 இல். அடுத்த பத்துவருடங்களுக்கு என்று சொல்லப்பட்டே 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு 21 ஆம் நூற்றாண்டின் முதலிரண்டு தசாப்தங்கள் நிறையப்போகிற தருணத்தில் இவை எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!

ஜெயிக்கலாம் வாங்க!
    

என்னாது, ஆ!ராசா பிரதமரா? காமெடிக் கொடுமையே!

உச்சநீதிமன்றம் ராகுல் காண்டியை ஒரு கொட்டு வைத்து மண்டியிட வைத்திருக்கிறது. நீதிமன்றத்தை தொடர்புபடுத்தி பிரசாரக் கூட்டங்களில் சௌகிதார் சோர் ஹை என்று தொடர்ந்து பேசிய விவகாரத்தில் ராகுல் காண்டி முதலில் வருத்தம் தெரிவித்தார். அதில் திருப்தி அடையாத உச்சநீதிமன்றத்துக்கு 22 பக்க ப்ரமாணபத்திரத்தில் மறுபடியும் வருத்தம் மட்டுமே தெரிவித்ததில் நீதிமன்றக்  கொட்டுக்குப் பிறகே ராகுல் காண்டி  மன்னிப்புக் கோரியிருக்கிறார். சோனியா வாரிசுகளின் திமிரும் தலைக்கனமும் ஊரறிந்த ரகசியம்தான்!


நீதிமன்றத்தின் கருணையில் ஜாமீனில் வெளியே இருக்கிற கணவர் ராபர்ட் வாத்ராவுடன் பிரியங்கா      

The Gandhi family has been showing signs of immense frustration as the 2019 Lok Sabha election progresses. With out-on-bail Rahul Gandhi being forced to apologise by the Supreme Court for attributing the ‘chowkidaar chor hai’ slogan to the SC and its judgement on Rafale, the Congress campaign has just as well come to a halt.
Even with the Supreme Court bringing Congress down to its knees, the arrogance of the Congress party has not been diminished. A video surfaced on Social Media where Priyanka Gandhi Vadra, who chickened out of battling PM Modi in Varanasi, was seen watching in amusement as little kids, coached by Congress workers, were abusing Prime Minister Modi.
5:30 PM - Apr 30, 2019  என்று மோடிக்கெதிராக சிறுவர்களைக் கோஷமிட வைத்து மகிழும் பிரியங்காவின் சின்னத்தனத்தைக் காட்டுகிறது என்று சொல்கிறது OpIndia தளச் செய்தி  200 ரூபாய்க்காக களப்பணியாற்ற உபிக்கள் இருப்பதுபோல, சிறுவர்களை ரெடிசெய்கிறார்கள் போல   


எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அதிகமாக அரசியல் பேசி நான் பார்த்ததில்லை. அவரையும் 200 ரூ இணையதள உபிக்கள் அளவுக்கு மீறிச் சீண்டி இப்படி கணிப்பு,ஆரூடம் சொல்ல வைத்துவிட்டார்கள் போல!

புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாசா நீதி வென்றது எனப் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருப்பது இவருக்குப் பொறுக்கவில்லையா என்ன?

Banu Gomes 
''அன்றாட நிர்வாக பணிகளில் . பாண்டிச்சேரி லெஃப்ட்டினன்ட் கவர்னர் தலையிடக் கூடாது. அரசு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசு பணியாளர்களுடையது.
கவர்னருக்கும், முதல்வருக்கும் நிர்வாகம் குறித்து முடிவெடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்படின்...அது ...ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்டு..தீர்க்கப் படவேண்டும்'' - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு.
இதில் நாராயணசாமியும், கெஜ்ரியும் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை.
சற்றே கூர்ந்து கவனித்தால்..யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக வரையறுக்கப் பட்டுள்ள கவர்னருக்கான நிர்வாக அதிகாரம் தொடர்கிறது. நீதிமன்றத்தால் எல்லாம் அதை மாற்ற இயலாது.
அன்றாட நிர்வாக பணிகளில் தலையிட கூடாது என்பதிலும் அதே நிலை தான். முரண் ஏற்பட்டால்..ஜனாதிபதியிடம் போக வேண்டுமே தவிர ..மாற்றமில்லை.
கூடுதலாக ..
பாண்டிச்சேரி கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து ...முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்நாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான இந்திரா பானர்ஜீ '' Unlike the President of India or the Governor of a State, the Administrator of a Union Territory has powers to act independently ..irrespective of the advice given by the Council of Ministers headed by the Chief minister''
என்று அளித்த தீர்ப்பிலும் இது தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.
மதுரை கிளையின் தீர்ப்பு chocolate coated version.அவ்வளவு தான். மற்றபடி ..பாண்டிச்சேரி லெஃப்ட்டினன்ட் கவர்னருக்கான அதிகாரம் மாறவில்லை. மாற்றவும் இயலாது.
அடிப்படை மாறாத நிலையில்..மாற்ற முடியாத நிலையில்.. அதன் மேலாக கொடுக்கப் படும் தீர்ப்புகளில் வார்த்தை ஜாலங்கள் இருக்கலாமே தவிர பொருள் என்னவோ ஒன்று தான்.
tug-of-war நிற்கப் போவதில்லை .
இந்த இணையதளத்தைப் பற்றி

இன்றைக்கு உச்சகட்ட உச்சகட்ட காமெடி இதுதான்! 


     

படங்களோடு வரும் பதிவு! அரசியல் செய்திகள் இன்று!

இன்றைய தலைப்புச்செய்தி இது! சுப்ரமணியன் சுவாமியின் கலகமும்  நன்மையில் முடியட்டுமென்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்! நம்மூர் விசாரணை நடைமுறைகளில் ஒரு தெளிவான முடிவு எடுப்பதென்பது குதிரைக்கொம்புபோல என்பதால்!  

பிரிட்டன் குடியுரிமை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அந்த நோட்டீசில் கூறப் பட்டுள்ளதாவது : இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட பேக்காப்ஸ் லிமிடெட் என்ற கம்பெனி உள்ளதாகவும், அதன் இயக்குனராக நீங்கள் இருப்பதாகவும் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 10.10.2005 மற்றும் 31.10.2006 ல் பதிவு செய்யப் பட்ட கம்பெனியின் வரவு செலவு அறிக்கையில், உஙகளின் பிறந்த தேதி 19.06.1970 எனக் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் எனக்கூறப்பட்டுள்ளது. 17.02.2009 ல் அந்த நிறுவனத்தை கலைக்க அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பத்திலும், உங்களது குடிரிமை பிரிட்டன் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த நோட்டீஸ் கிடைத்த பின் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் . இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. 




என் அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவின் கிண்டல் கேலி நிரம்பிய கார்டூன் இல்லாமல் பதிவு சோபிக்க மாட்டேன் என்கிறதோ? பிரியங்கா வாத்ரா வாராணசியில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது பற்றி என்ன சொல்கிறாராம்?
   


பாட்டி மூக்கு அச்சு அசலாக இருக்கிறதென்று தானே முதலில் சொன்னார்கள்? இப்போது என்ன ஆயிற்றாம்? பாட்டி மூக்கைப்போல  டிங்கரிங் செய்ய வேண்டியிருக்கிறதோ? 


ரிபப்லிக்  டிவியில் மூன்று நாட்களுக்கு முன்னால் நடந்த விவாதம் இது. கொஞ்சம் சுவாரசியமான கூச்சல்! சுமந்த் சி ராமன் காங்கிரசுக்கு ஆதரவாகக் கூவுகிறார். வாங்கியும் கட்டிக்  கொள்கிறார். 

தமிழக அரசியல் நிலவரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிற நக்கல்டூன் இது!



நக்கல்டூனில் இசுடாலின் மட்டுமல்ல, ரஜனி, கமல், சீமான் என்று ஒருத்தரையும் விட்டுவைக்கவில்லை. யாராவது விடுபட்டிருக்கிறார்களா? கொஞ்சம் பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்! இதற்கு என்ன அவசியம் என்கிறீர்களா? 

     
சூலூர் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ரெண்டு முருகன் திடீரென கிங் மேக்கர் ரேஞ்சுக்குப் பேசியதன் பின்னணி இன்றைய முக்கிய செய்தியாக அம்பலத்துக்கு வந்திருக்கிறது.


கேரளாவிலும் மேற்குவங்கத்திலும் ஆடாத ஆட்டம் ஆடித் தான் மார்க்சிஸ்ட்டுகள் மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். அவர்களைக் குறைசொல்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த மம்தா பானெர்ஜி, மார்க்சிஸ்டுகளை விட ஓவராக ஆட்டம்போட்டுக் கொண்டிருக்கிறார்.
     


ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க  மண்ணுக்குள்ளே போன கதை ஒனக்குத் தெரியுமா? என்று பாட்டுப் பாடுகிற நேரமல்ல, மண்ணில் இருக்கும்போதே மண்ணைக் கவ்வ வைக்க வேண்டிய நேரம் இது. 

  

பதிவர்வட்டம்! பானு கோம்ஸ்! மாரிதாஸ்! என்ன சொல்கிறார்கள்?

நம்மூர்ச் சூழலுக்கு  தலைமைப்பண்பு, மேலாண்மை என்பதெல்லாம் முந்தையபதிவில் சொன்ன மாதிரி செந்தில் பாலாஜிகள் க்ளாஸ் எடுப்பது மாதிரி இருந்தால் தான் ஒத்து வருமோ? BSNL மாதிரி ஒரு பொதுத்துறை நிறுவனம் மீண்டுவருமா என்பதை ஒரு விவாதப் பொருளாகவே எடுத்துக்கொள்ள இங்கே வருகிற எவருமே தயாராக இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை. தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு அர்த்தமுள்ள உரையாடல்கள் நிகழ்வதென்பது குதிரைக் கொம்புதான் என்பதை தமிழில் எழுத வந்த இந்தப் பத்தாண்டுகளில் நான் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம். வலைப்பதிவுகளில் எதற்கும் உதவாத வெட்டி  அக்கப்போர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து, நாம் பார்க்கும், படிக்கும் விஷயங்களில் கொஞ்சம் யோசித்து ஒரு கருத்தை முன்வைக்கவோ, முன்வைக்கப்படும் கருத்துகள் மீது கருத்துகள் சொல்லவோ முனைகிற   நல்லதொரு மாற்றமும் நிகழும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இங்கே எழுதுவதில் மாற்றுக்கருத்து இருந்தால் அதையும் guest post ஆக வெளியிடத்தயார் என்று ஒரு தனிப்பதிவாகவே சொல்லியிருந்ததை நண்பர்களுக்கு நினைவூட்டி #பதிவர்வட்டம் இதையும் கவனிக்கும் என்றும் கூட நம்புகிறேன்.


எதில்தான் அரசியல் செய்வது என்ற விவஸ்தை இல்லையா என்று பதிவு எழுதியபோதே, ஒரு இளம் பெண்ணின் தடகளப்போட்டியில் தங்கம் வென்ற சாதனை இங்குள்ள சில அரசியல்கட்சிகளால் குறுகிய ஆதாயத்துக்காக அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டதையும் இங்கே எழுதியதை நினைவு படுத்திக் கொள்கிற மாதிரி ஒரு தொலைகாட்சி விவாதம். கண்டுகொள்வோம் கழகங்களை என்று நெல்லை ஜெபமணி அந்த நாட்களில் எழுதிய ஒரு தொடரும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது. கழகங்களோடு கூட்டாளிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது  அவசியம் என்பது  காலம் செய்திருக்கிற மாற்றம்!   இன்று மாறியிருக்கிற காட்சிகளைக் கண்டித்து எழுத நெல்லை ஜெபமணி இல்லையே என்ற குறை தெரியாமல் முகநூல் முதலான சமூக வலைத்தளங்களில் நிறையப்பேர் எழுதுகிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று 

Bhaskar S 

டிராஃபிக் ராமசாமியை ஒரு வழி பண்ணியாச்சு....
அம்மண ....... ஐயாகண்ணுவை தில்லிக்கு அனுப்பி பைத்தியமா மாத்தி புலம்ப விட்டாச்சு....
சிக்னல் டவர்ல ஏற்றி விட்டு தற்கொலை செய்ய தூண்டி விட்டாச்சு....

நீட் தேர்வு அனிதாவை வைத்து தற்கொலைக்கு தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடியாச்சு....
ஜல்லிக்கட்டு மெரினா கடற்கரையில் அமைதியை கெடுத்து, நக்சல்களை நுழைத்து விட்டு பிணம் கிடைக்குமான்னு முயற்சி செய்து பார்த்தாச்சு.....
தூத்துக்குடில கலவரத்தை தூண்டி விட்டு, பதிமூன்று உயிர் பறித்து அரசியல் செய்தாச்சு....
பொள்ளாச்சி சம்பவத்தை முன்னிருத்தி போராட்டம் என்று ஆரம்பித்து, அது தனது மற்றும் தனது கூட்டணி கட்சிகளின் கைவரிசை என்று தெரிந்தவுடன் எதுவுமே நடக்காத மாதிரி ஒதுங்கியாச்சு....
பஜ்ஜி கடை, பிரியாணி கடை, பியூட்டி பார்லர், டீக்கடை,...... என்று கடை கடையாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்டாச்சு.....
இப்போது என்ன பண்ணுறது....
வரும் 2 வருடத்தில் இன்னும் இரண்டு மூன்று பிணம் கிடைத்தால்தான் 2021 தேர்தல் வரை பிண அரசியல் செய்து காலத்தை ஓட்டலாம்.....
யாராவது சாதனை செய்தது பற்றி பேசினால் உடனே போய் ஒரு போட்டோ எடுத்துட்டு, பெரியார் சிலையை கையில் கொடுத்துட்டு, மத்திய அரசு தமிழினத்தை வஞ்சிக்கிறது என்று புலம்பிட்டு, மாநில அரசு தேவையான ஆதரவு தரவில்லை என்று புரளியை கிளப்பி விட்டுட்டு,
ஐயன் வள்ளுவ பெருந்தகை சொல்லி இருக்கிறார்... முயற்சி திருவினையாக்கும்-னு....
துண்டு சீட்டு எழுதி தர ஆள் இருக்கு...
முயற்சி பண்ணி பார்த்துட வேண்டியதுதான் இன்னும் இரண்டு மூன்று பிணம் கிடைக்காமலா போய் விடும்.    

இது ஒருவிதம்!  மாரிதாஸ் மாதிரி தரவுகளோடு முக்கியமான விஷயங்களை விவாதிப்பது இன்னொருவிதம்!      

வெனிசுலா நாட்டின் வீழ்ச்சி வறுமைக்குக் காரணம் விவசாயம் கைவிட்டது தான் என்று நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்கிறார்கள் மீம்ஸ் எல்லாம் பரப்புகிறார்கள், அத்துடன் நம்ம இணைய விவசாயப் போராளிகள் பிரச்சாரம் வேறு..
எதையும் முழுமையாகத் தேடிப் படிக்க வக்கு இல்லாத இந்த நாம் தமிழர் என்ற முட்டாள்களின் கூடாரம் மேற்கொள்வது முழுக்க முழுக்க Populism. வெகு ஜன மக்களைச் சாதாரண மக்களைத் தூண்டிவிட்டுப் பேசும் பேச்சு மட்டுமே இவர்களுடையதாக உள்ளது, அதே தான் எந்த விசயம் என்றாலும் செய்கிறார்கள். அனைத்து விசயத்தையும் விவசாயத்தை ஒப்பிட்டுப் பேசி தூண்டிவிட்டது போதாது என்று இப்போது இன்னொரு நாட்டின் நடக்கும் வறுமைக்கு நேரடியாக விவசாயத்தைக் கைவிட்டது தான் காரணம் என்று பரப்புகிறார்கள்.
வெனிசுலா இந்த நிலைக்குக் காரணம்
1.சுமார் 15வருடம் மேலாக கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்த அரசு முன் வைத்த  தவறான பொருளாதார திட்டங்கள்.
2.அடுத்து இன்று இருக்கும் ஆட்சியர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை.
இந்த இரண்டு காரணமாக உருவாகியுள்ள வறட்சி, வறுமை , வேலையில்லா திண்டாட்டம் , விலைவாசி உயர்வு மற்றும் இதைத் தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் உருவாகியுள்ளன. இதை முழுமையாக விளக்கி ஒரு ஆய்வுக் கட்டுரை மற்றும் ஒரு வீடியோ பதிவினை மாணவர்கள் கேட்டுக் கொண்டதால் அடுத்த வாரங்களில் வெளியிடுகிறேன்.
அதுவரை கண்ட மீம்ஸ் எதையாவது பரப்பாதீர்.
நான் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுகிறேன் உலகத்திலேயே ஒரு வடிகட்டின முட்டாள் அரசியல்வாதி ஒருவன் இருக்கிறான் என்றால் அது சீமான் என்ற செபாஸ்டீன் தான். இவன் வாயில் வந்தது எல்லாம் வசனம் அது தான் நிர்வாகம் பொருளாதாரம் என்றும் அவன் இஷ்டத்திற்குக் கதையை அடித்துவிடுகிறான் வசனமாக, கொஞ்சம் தேடிப் படிக்கும் குணம் இல்லாத இளையவர்கள் கொஞ்சம் பேர் இவன் பேச்சை ரசிக்கிறார்கள். அது ஒரு வியாதி என்று அவர்கள் புரியவேண்டும்.. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பரப்பும் மீம்ஸ் அது இன்னொரு வியாதி...
இவன் போன்ற மேடைப் பேச்சாளர்கள் பேச்சைக் கேட்டு சமூகம் அது தான் கருத்தியல் என்று நினைத்தால் அதை விடத் தவறு வேறு எதுவும் இல்லை. எனவே கொஞ்சம் தேடிப் படிக்கப் பழகுங்கள் என்கிறார் மாரிதாஸ். 


அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

மீண்டும் சந்திப்போம்.
  

தலைமைப்பண்பு! செந்தில்பாலாஜி பாடம் எடுக்கிறார்!

இங்கே, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில், கோஷ்டி, கோஷ்டிககுள் கோஷ்டி, அத்தனைக்கும் ஒரே பொது நோக்கம் என்ன என்றால், அடுத்த கோஷ்டியை சமயம் பார்த்துக் காலை வாருவது மட்டும் தான் என்ற கலாசாரக் கருமாந்திரத்தை ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்வதற்காக மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! காங்கிரஸ் கட்சியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே பாடம், ஒரு தலைமை, ஒரு பொது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறவர்கள்  எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது  ஒன்று மட்டும் தான்!  தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் என்று பேசுகிற இடத்தில் ஒரு கட்சியைப் பற்றி, அரசியலைப் பற்றிய  பேச்சு ஏன் வந்தது என்று கேட்டால்,  இங்கே இந்தியச் சூழ்நிலையில் அரசியல் என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் புகுந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதால் தான்! தவிர்த்து விட்டுப் பேசுவதே கொஞ்சம் அதீதக் கற்பனையாக மட்டுமே நிற்கும்!

இது 2009 ஏப்ரலில் இந்தப்பக்கங்களில் எழுதியது. இன்று மீள்பதிவாக சுவாசிக்கப்போறேங்க தளத்தில் கொஞ்சம் திருத்தங்களுடன் பதிவிட்டுத் திரும்பிப் பார்த்தால் நேற்றைய தந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கரூர் செந்தில் பாலாஜி, எடப்பாடியை விட இசுடாலினுக்குத் தலைமைப்பண்பு அதிகம் என்று சொல்கிற காமெடிக் கொடுமையைப் பார்க்க நேரிட்டது.


திருமங்கலம் ஃபார்முலாவைத் தூக்கிச் சாப்பிட்ட அரவக்குறிச்சி ஃபார்முலாவுக்குச் சொந்தக்காரர் செந்தில் பாலாஜி என்பதும், திமுகவின் கேசிபியை ஓரம்கட்டிவிட்டு, முதலில்  ரத்துசெய்யப்பட்டு அப்புறம் நடந்த தேர்தலில் ஜெயித்தார் என்பதும் வரலாறு. தினகரன் ஆதரவு நிலை எடுத்து, அங்கிருந்து திமுகவுக்குத்தாவி, கரூர் மாவட்ட திமு கழகத்தை அப்படியே ஓரம்கட்டி விட்டு இசுடாலினின் நம்பிக்கைக்குரியவராக அவதாரம் எடுத்திருப்பதில்...... வாசிக்கவே மூச்சு முட்டுகிறதா? செந்தில் பாலாஜியின் சாமர்த்தியம் அந்த அளவு பெரிது. இதற்குமேல் கேட்பதாயிருந்தால் கரூர் மாவட்ட திமு கழக செயலாளர் நன்னியூர் ராசேந்திரனிடம் தான் கேட்க வேண்டும்! 

காங்கிரசும் சரி கழகங்களும் சரி, ஒட்டுண்ணிகளின் கூடாரமாக மாறிவிட்டதன் சமீபத்தைய அடையாளம் செந்தில் பாலாஜி! இவரே விரும்பி ஏற்றுக்கொண்ட தலைமை இசுடாலின் என்றால் ........

என்ன சொல்வீர்கள்? என்ன செய்வீர்கள்? 
       
           

மீண்டும் BSNL! மீண்டு வருமா?

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான BSNL குறித்து சந்தோஷமான செய்தியொன்றை இன்று காலையில் பார்த்தேன். டெலிகாம் நிறுவனங்களுக்குள் விலை குறித்தான போட்டியில் வேகமாக ஜியோ முந்த, இதர நிறுவனங்கள் லாபத்தில் சரிவைச் சந்தித்தன என்றால் பொதுத்துறை நிறுவனமான BSNL, தொழிலின் அஸ்திவாரமாகிய கஸ்டமர்கள் எண்ணிக்கையிலேயே பெரும் சரிவைச் சந்தித்தது. தலைமையிலிருந்து அடிமட்ட ஊழியர் வரை இருந்த lethargic attitude இதற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.


  

BSNL’s broadband and FTTH plans have been making all the buzz in the market lately thanks to the data, speeds and other benefits which they offer என்று டெலிகாம்டாக் தளத்தில் ஆர்பிட் ஷர்மா சொல்கிறார். பிப்ரவரி மாதத்தில் மட்டும் 9 லட்சம் வாடிக்கையாளர்களை BSNL நிறுவனம் சேர்க்க முடிந்திருக்கிறது. முக்கியமான காரணமாக அதிகரிக்கப்பட்ட இணையவேகம், அதிக dataவோடு கூடுதல் ஆதாயங்களும் இருப்பதுதான் என்று சொல்கிறார்கள். கடந்த நாட்களில் BSNL ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூடப் பணம் இல்லை, இழுத்து மூடப்போகிறார்கள் என்றசெய்திகள் தான் பூதாகாரமாக ஊதிப் பெரிதாக்கப் பட்டுவந்த நிலையில்,  இந்தச் செய்தி கொஞ்சம் ஆறுதலாகக் கூட இருக்கலாம். ஆனால் பொதுத்துறையில் ஒரு புள்ளிராசா வங்கியின் அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் போது, BSNL ஒரு நிறுவனமாக எப்படித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப்போகிறது, இந்த நல்ல செய்தி one time wonder என்றாகிவிடாமல் எப்படிக்  காப்பாற்றிக் கொள்ளப் போகிறார்கள் என்கிற சந்தேகமும் கேள்வியாக   எழுகிறது. 

புள்ளிராசா வங்கிக்கு சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராக ஒருவர் வந்தார். அதிக பிசினஸ் வேண்டும் என்பதற்காக வட்டிக்குறைப்பு, சர்வீஸ் கட்டணங்கள் குறைப்பு என்று அறிவித்துப் பார்த்தார். கஸ்டமர் எவரும் அந்த அறிவிப்பை சட்டை செய்யவில்லை. கூடுதல் பிசினெஸ், அதிக வருமானம் என்று அந்த நிர்வாகி கண்ட கனவு வெறும் கனவாக மட்டுமே இருந்ததில் வெறுப்போடு house magazine இல் தன்னுடைய கசப்பை CMD              இடமிருந்து ஒரு கடிதம் பகுதியில் மிகவும் வெளிப்படையாகவே எழுதினார். "நம்முடைய வங்கியில் இண்டஸ்ட்ரியிலேயே வட்டி குறைவு, கட்டணங்கள் குறைவு, ஆனாலும் புதியவாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  கூடவில்லை, பிஸினஸும் கூடவில்லை, இதற்கு என்ன காரணமென்றும் புரியவில்லை"  

வேறுபெரியவங்கியிலிருந்து இறக்குமதியான அந்த CMD மேதாவிக்கு புள்ளிராசா வங்கியின் work culture எப்படிப் பட்டது, கூட இருந்த ஜெனெரல் மேனேஜர்கள்  உள்ளிட்ட நிர்வாகிகளுடைய நிர்வாக லட்சணம் எப்படிப்பட்டது என்பது கடைசிவரை புரியாமலேயே பதவிக்காலத்தை  ஓட்டினார் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியமும் உண்டா?

நல்லதை நினைக்கவேண்டியதுதான்! நல்லதே நினைத்து நரகத்துக்கும் கூடப்போகலாம் என்று தயிர் வடையை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டே சொல்கிற தோழர் வரதராஜன் நினைவுக்கு வந்து எச்சரிக்கைமணி அடிக்கிறாரே! என்ன செய்ய?  

         தொடர்புடைய பதிவு ஒன்று 


இட்லி பொங்கல் வடை! #23 பேசாப்பொருள் பேசுவோம்!

பிஜேபியின் தேசிய செயலாளர் H ராஜா சற்றுக்கூடத் தயங்காமல் தன்னுடைய கருத்துக்களைப் பூசி மெழுகாமல் சொல்லக் கூடியவர் என்பதே இங்குள்ள அரசியல்வாதிகள் பலருக்கும் அலெர்ஜியாக இருக்கும் விஷயம். அவர் சொல்கிற விஷயத்தில் தவறு கண்டு பிடிக்க முடியாதவர்கள், அவரை வசைச்சொற்களால் எதிர் கொள்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்!


இலங்கைத்தமிழருக்கு ஆதரவு என்பதையே ஒரு பெரிய வியாபாரமாகச் செய்து கொண்டிருக்கிற கட்சிகளோ  மதசார்பற்ற மு,போக்கு கூட்டணியில் இருக்கிற கட்சிகளோ இதுவரை வாயைத் திறந்து கண்டனக் குரலை எழுப்பவில்லை.அவர்களுடைய கள்ள மௌனத்துக்குப் பின்னாலிருக்கிற அரசியல், உள்நோக்கம் என்னவென்று புரிந்தவர்களுக்கு ஆச்சரியமான செய்தியொன்றும்  இல்லை. புரியாதவர்கள் எஸ்ரா சற்குணம் மாதிரி அரசியல் செய்யும் பாதிரிகள் பேச்சைக்கேட்டு திருப்தி அடையுங்கள்! எஸ்ரா சாபம் கொடுக்கிறார்! திருமாவுக்கு சர்டிபிகேட்டும் கொடுக்கிறார்.  


சீமாறு பேசுகிற தமிழ்த் தேசியம் கொஞ்சம் விசித்திரமான விஷயம்! குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்கிற கதை என்று ஏதோ சொல்வார்கள், அதுமாதிரித் தானா?

  
ஆளுக்கொருதிசையில் செய்வதற்குப் பெயர் அரசியலா? இதைத் தான் எதிர்க்கட்சிகள் செய்கின்றன என்றால், பிஜேபியைக் குறைசொல்லிப் பயன் என்ன?
    

சதீஷ் ஆசார்யா என்ன நினைத்து இதை வரைந்தாரோ தெரியாது! ஆனால் இந்தத் தேர்தலில் காங்கிரசும் கூட்டாளிகளும் ரொம்பவுமே தப்புக்கணக்குப் போட  ஆரம்பித்திருக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  

  
வயநாடு ராகுல் காண்டியால் அகில இந்திய கவனம் பெற்றிருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்? செய்தியை இங்கே முழுதாகப் படித்துவிட்டு அப்புறம் முடிவு செய்து கொள்ளுங்கள்!     

நரேந்திர மோடி Vs Who கேள்விக்கு பதில் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்பு மனுவை வாரணாசி தொகுதியில் தாக்கல் செய்திருக்கிறார்.  ஒரு  திருவிழாவைப் போல பிஜேபி தொண்டர்கள் நேற்றும் இன்றும் வாரணாசியில் கொண்டாடி அதை வழிமொழிந்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்திகளும் வீடியோக்களும் சொல்கின்றன



தேவையே இல்லாமல் ஏன் நான் வாரணாசியில் போட்டியிடக்கூடாதா என்ற கேள்வியை எழுப்பி பப்பி பிரியங்கா வாத்ராவும், சஸ்பென்ஸ் நீடிக்கட்டுமே என்று அந்த உளறலை நியாயப்படுத்திய ராகுல் காண்டியும் ஒருவழியாக தங்களுடைய ஜம்பம் செல்லுபடியாகாது என்று புரிந்துகொண்டு வாரணாசியில் பிரியங்காவை களம் இறக்குவதில்லை என்று முடிவுசெய்து, ஏற்கெனெவே அங்கே போட்டியிட்ட அஜய் ராய் என்பவரை மீண்டும் வேட்பாளராக்கியிருக்கிறார்கள். பப்பி பிரியங்கா பிரசாரத்துக்கு வேண்டுமானால் உதவலாம், வேட்பாளராக அல்ல என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். சோனியாG இதுமாதிரி அட்வெஞ்சர் எல்லாம் வேண்டாம் என்று எச்சரித்ததால் பிரியங்கா வாரணாசியில் போட்டியிடுகிற ஐடியா கைவிடப்பட்டதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி சொல்கிறது.இந்தத் தேர்தலின்ஆகப்பெரிய  காமெடிப் பீசாக பிரியங்கா வாத்ரா உருவெடுத்திருப்பது இன்று முதல்செய்தியாக. 

காங்கிரஸ் விரும்பினால்...வாரணாசியில்.. மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று ப்ரியங்கா பேசியது அவரின் அரசியல் அனுபவமின்மை + அரசியல் வாரிசுகளுக்கே உரிய விளைவுகளை பற்றி கவலைப்படாத வெற்று சவடால்,அலட்சியம் ஆகியவற்றின் வெளிப்பாடு.
கட்சி அரியணையில் அமர்ந்திருக்கும் ராகுல் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டிருந்தால் தான் செய்தி.
ப்ரியங்கா போட்டியிடாததெல்லாம் செய்தியல்ல.


  • Like Brother, Like Sister. runs away to a faraway constituency and sister Vadra chickens out of a contest after toying with the idea. Naamdars have already conceded big defeat to the Kaamdar Ji. Varanasi reverberating #KashiBoleNaMoNaMo
    Quote Tweet
    ANI
    @ANI
    ·
    Ajay Rai to be the Congress candidate from Varanasi #LokSabhaElections2019
    12:57 PM · Apr 25, 2019 from Varanasi, India · Twitter for Android  


    இந்து நாளிதழில் கூட என் ராமின் கணிப்புக்களையும் மீறி கேசவ் இப்படி சோனியா காங்கிரஸ் தவிப்பதை கார்டூனாக வரையமுடிகிறது என்பது ஆச்சரியமல்ல, நடுநிலை என்று காட்டிக் கொள்ள ஒரு வணிக உத்தி!  

    நம்மூர் ஊடகங்கள் வழக்கம்போலவே ஒருபக்கப் பார்வை, திருகல் வேலைகளோடு .........
     



    மீண்டும் சந்திப்போம்.