#தமிழகஅரசியல் எங்கே போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்?

வரும் ஆனா வராது என்கிற சினிமா காமெடி மாதிரி இரு நாட்களாக இழுத்துக் கொண்டே போன ஊரடங்கு நீட்டிப்பா இல்லையா என்கிற விஷயம் இன்றைக்கு  ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஜூன் 7 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறதாம்!  


ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஏன் இவ்வளவு இழுபறி / தயக்கம் என்பது புரியவே இல்லை. அனுபவமுள்ள அதிகாரிகள் சரியான ஆலோசனை தருவதற்குத்  தயங்குகிறார்களா? அல்லது புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள் தயங்குகிறார்களா? 


கோவிட்  தடுப்பூசி போட சென்னை அரசு மருத்துவ மனைகளில் நீண்ட வரிசை. 200+ நபர்கள் வரிசையில் நிற்கிறார்கள், காலை 6 மணிக்கே வந்து வரிசையில் இடம் பிடிக்கின்றனர். இவர்கள் சாப்பிடாமலேயே ஊசி போட்டுக் கொள்கிறார்களா என்று கவலை.ஆனால்  அரசு தெருவோர ஊசி முகாம்கள் பல கடைசி நேரத்தில் கான்சல் ஆகின்றன. இங்கே ஃ பேஸ்புக்கில் ஊசி போட மக்கள் வருவதே இல்லை என்று பதிவுகள். இந்த நிலையில் இன்று சில தனியார் மருத்துவமனை விளம்பரங்கள். ரூ 1250 கட்டினால் கோவாக்சின்  ஊசி செலுத்திக் கொள்ளலாம் என்று!.அரசிடம் குறைந்த ஸ்டாக், தனியாரிடம் போதுமான ஸ்டாக் எப்படி என்ற குழப்பம் தான் மக்களிடையே சந்தேகங்களை உருவாக்குகிறது என்று மேலே பார்த்த விளம்பரத்தோடு முகநூலில் விசனப் படுகிறார் ராம்ஜி யாஹூ மகாதேவன் இந்த அழகில் செங்கல்பட்டில் உள்ள தடடுப்பூசி தயாரிப்பு மையத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் அல்லது லீசுக்காவது கொடுங்கள், நாங்களே தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தயாரித்துக் கொள்கிறோம் என்றால் எத்தால் சிரிப்பது என்ற சந்தேகமும் சேர்ந்து வருமா வராதா?  


அதிமுக என்றொரு அரசியல் கட்சிஇருக்கிறதா?  செயல் படுகிறதா?  ஐயம் தீர்த்த 38 நிமிட காணொளி. கடந்த 10 ஆண்டுகளில் அப்படிப் பொறுப்பான எதிர்க்கட்சி என இருந்ததில்லை என்கிற நிலையில்  எடப்பாடி திரு K  பழனிச்சாமி ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என்கிற நம்பிக்கையும் துளிர்க்கிறது. 

ன்றைக்குப் பார்த்த செய்திகளில் கொஞ்சம் நல்ல செய்தியும் செம தமாஷாகிப் போனதுமான விஷயம் வைரமுத்தானுக்கு ONV கல்சுரல் அகாடெமி வழங்க உத்தேசித்திருந்த விருதை மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்திருப்பதுதான்! கேரளத்தில் எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக இப்படி ஒரு முடிவு. இந்த கல்சுரல் சொசைட்டியின் சேர்மன் அடூர் கோபால கிருஷ்ணன் முன்னதாக, விருது வழங்குவது எழுத்து வன்மைக்காகத்தானே தவிர நடத்தைக்காக அல்ல என்று முட்டுக் கொடுத்தும் கூட, அது செல்லுபடியாகவில்லை ரன்பது சுவாரசியத்தைக் கூட்டுகிற விஷயம்.


 #MeToo பிரச்சினையில், பாலியல் சீண்டல் புகாருக்கு ஆளான வைரமுத்துவின் போக்கில்  எந்தவொரு நல்ல மாற்றமும் இல்லை என்பதற்குச் சான்றாக, அவர் எழுதிய மேற்கண்ட பாடலே இருப்பதை, கட்டம்கட்டிக் காட்டப் பட்டிருக்கிற வரிகளே போதும். The Tamil poet-lyricist Vairamuthu, who has been accused of sexual harassment by many women had been chosen for the fifth ONV Literary Prize. The award, which is given to poets from Malayalam and other Indian languages by the ONV Cultural Academy here, comprises a cash prize of Rs 3,00,000 and citation. The award this time was decided by a jury consisting of poet Prabha Varma, Malayalam University Vice-Chancellor Anil Vallathol and writer Alankode Leelakrishnan. The academy is headed by filmmaker Adoor Gopalakrishnan. The patrons include Chief Minister Pinarayi Vijayan, MT Vasudevan Nair and KJ Yesudas, and many other distinguished  personalities like MA Baby, Prabha Varma, RS Babu, MK Muneer and Benoy Viswam are part of the Academy என்கிற செய்தி விருது வழங்கப்பட்டதன் பின்னணியில் ஒரு அரசியல் இருந்ததாலேயே அடூர் கோபாலகிருஷ்ணன் முட்டுக் கொடுத்ததும், மலையாளத்திரையுலகின் பெண் நட்சத்திரங்களிடமிருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பவே ஜகாவாங்க வேண்டிவந்ததும் நடந்திருக்கிறது. ஆனால் இங்கே பாடகி சின்மயி தொடர்ந்து புகார் கொடுத்தும் கூட தமிழ்த்திரையுலகம் கண்டுகொள்ளவே இல்லை. டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது முதல் மேலும் சில இழப்புக்களை பாடகி சின்மயி இன்றும் சந்தித்து வருவது தமிழ்தேசத்தின் அசமந்தத்தனம்,அவமானம் என்பதான கோபம் மல்லுதேசத்தைப் பார்க்கையில் எழுகிறதே, என்ன செய்யப்போகிறோம்?    

வைரமுத்துவைக் காலம் ஒதுக்கித்தள்ளிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் போதுமா என்கிற கேள்வியோடு...

மீண்டும் சந்திப்போம்.      

#முன்களப்பிணியாளர்கள் இஷ்டப்படி மேய்க்கப்படுகிற மந்தைகளா நாம்?

"இன்றைய தேதிக்குத் தமிழில் இருக்கிற ஒரே இலக்கிய பத்திரிகை இந்து தமிழ் திசைதான். ஒரே இலக்கிய எழுத்தாளர் சமஸ்தான்!" அது சிறுபத்திரிகை இல்லையோ? "அதான் இலக்கிய பத்திரிகைனு சொல்லிட்டனே. தனியா வேற சொல்லணுமா. ஒரே வித்தியாசம் நிக்காம தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்குங்கறதுதான்!" இப்படி எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் சொன்னது கொஞ்சம் கூடப் பிசகில்லை! இந்து நாளிதழ் வெளியிடுகிற செய்தியின் தரம், சுறுசுறுப்புக்கு உதாரணமாக இந்த ஹாட்லீக்ஸ்! செய்தியில் அப்படி ஹாட்டாக ஒன்றுமே இல்லை என்பது ஒருபக்கம்! இமேஜ் பூஸ்டர் ரகம்தானே என்று கேட்டால் இதே விஷயம் ஒன் இந்தியா தளத்தில் சிலதினங்களுக்கு முன்பே வெளியானது என்பதுதான் விஷயம் தமிழ்நாடு அரசியல் விவகாரங்களில் என்னமாதிரிப் பேசுவது, என்ன கருத்தை வலியுறுத்துவது என்பதில் ஊடகங்களே தடுமாறுகிற அளவில்தான் இங்கே அரசியல் நடக்கிறது

உப்பின் ஞானத்தைக் கூட சமந்தா வந்துதான் சொல்ல வேண்டியிருக்கிற ஒரு தேசத்தில் ஜனங்களுக்கும் ஊடகங்களுக்கும் உப்பின் உபயோகத்தைப்பற்றி யார் வகுப்பெடுப்பது?  

முகநூலில் ஸ்டேன்லி ராஜன் 

கொரோனா காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளருக்கு 10 லட்சம் கொடுக்கப் படும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நடக்கும் கொடுமைகளில் மாபெரும் கொடுமை இதுதான், கொரொனாவினை விட கொடிய கொடுமை இது தமிழக பத்திரிகையாளர்கள் தனியார் ஊழியர்கள், ஒவ்வொரு மீடியாவும் தனியார் சொத்து , செய்தி ஊடகங்களின் முதலாளிகளின் பணியாளர்கள் அவர்கள்

அரசின் தூதர்ஷன் உள்ளிட்ட பணியாளர் செத்தால் அரசு கொடுக்கலாம், எவ்வளவும் கொடுக்கலாம் அது சரியானது. ஆனால் அரசியல் கட்சிகள் நடத்தும் மீடியாக்களின் அதாவது தனியார் ஊழியருக்கு எதற்கு அவ்வளவு நிதி என்பதுதான் தெரியவில்லை ஒவ்வொரு மீடியாவும் செல்வத்தில் கொழிக்கின்றன, பத்து லட்சம் என்பது அவர்கள் இருமணி நேரத்தில் சம்பாதிக்கும் பணம்.அதை அவர்கள் கொடுக்காமல் மக்கள் பணத்தில் ஏன் கொடுக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை.

உதாரணத்துக்கு பாருங்கள், சன்டிவியின் ஒரு நாள் வருமானம் கிட்டதட்ட 80 லட்சம் ஆனால் இனி சன்டிவி நிருபர் செத்தால் அரசு நிதிவழங்கும்.கலைஞர் டிவி ஒரே வருடத்தில் 200 கோடி சம்பாதித்த கட்சி என்பது ஸ்பெக்ட்ரம் வழக்கில் சொல்லபட்ட வாதம். இனி அந்த டிவிக்காரன் அதாவது ஸ்டாலினின் சொந்த டிவிக்காரன் செத்தால் முதல்வர் ஸ்டாலின் 10 லட்சம் வழங்குவார்.தன் கம்பெனி காசினை வணங்காமல் அரசு காசை எடுத்து தன் டிவியில் வேலை செய்தவனுக்கு வழங்குவார், எப்படிப் பட்ட அருமையான திட்டம்?

இப்படி ஒரு விசித்திரமான அரசியல் கொள்ளை, திட்டமிட்ட கபட நாடகம் பகிரங்கமாக நடத்தப் படுவதெல்லாம் தமிழகத்தில்தான் சாத்தியம்.

இது பத்திரிகையாளர்கள் மொக்கையாக பந்து வீச  செய்யபட்ட மேட்ச் பிக்ஸிங், பகிரங்கமான மேட்ச் பிக்ஸிங் அதாவது அவர் அவுட்டானாலும் சிக்ஸர் என கேமராவில் காட்ட வேண்டும் அதை மக்கள் நம்ப வேண்டும் என்ற ஏற்பாடு


பாசவலை திரைப்படத்துக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாட்டைப் பாடியிருப்பவர் சி எஸ் ஜெயராமன்.

"குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்…
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்…
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்…
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்..."

பாடலும் பாடியவரும் பழசுதான். பட்டுக்கோட்டை  கல்யாண சுந்தரத்தின் வரிகள் இன்றைக்கும் சுளீர் சுளீரென்று உறைக்கிறதே! பாடல் வரிகள் முழுதையும் இங்கே பார்க்கலாம்,  

இதேபடத்தில் இன்னொரு பாடலும் கூட ஆட்டை வைத்துத்தான் கேட்கலாம்  ஊடகங்களைத் திருத்த முடியாது தான்! ஆனால் அவர்கள் திரித்துச் சொல்கிற அத்தனையையும் நம்பிவிட நாம் ஆட்டுமந்தைகளா என்ன? அல்லது வாத்துமடையர்களா? 
  
.மீண்டும் சந்திப்போம்  

இட்லி வடை பொங்கல்! #82 சோனியா காங்கிரஸ்! தியாகராஜன் who? கார்த்தி சீனாதானா!

மாமியார் தேய்ந்து கழுதை கழுதை தேய்ந்து கட்டெறும்பு அதுவும் தேய்ந்து கரையான் என்று தேய்ந்து கொண்டே போன கட்சி சோனியா நடத்தும் காங்கிரஸ் என்பதை இந்தப் பக்கங்களில் நீண்ட நாட்களாகவே சொல்லி வருவது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்! அரசியல் செய்யத் தெரியாத ஒரு கும்பல் நாசகாரக் குழுவாக மாறுவதை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சிதைந்ததில் மகஇக மாதிரியான சில்லறைகள் உருவானவிதம் ஏற்கெனெவே இங்கே அரங்கேறியிருக்கிறது.


காங்கிரஸ் டூல்கிட் சர்ச்சை விஷயத்தில்   கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த 24 நிமிட வீடியோவில் சோனியா காங்கிரஸ் ஒரு அபாயகரமான நிலைக்குப் போய்  விட்டதை, விவரிக்கிறார். கொஞ்சம் கவனமாகப் பார்த்து, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இதில் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன? The Print தளத்தின் சேகர் குப்தா சோனியா காங்கிரசுக்கு முட்டுக்கொடுக்கிற விதமே அலாதி!  தேசிய அளவில் பிஜேபிக்கு சவாலாக சோனியா காங்கிரஸ் மட்டுமே இருக்க முடியுமாம்!  சோனியாவுக்கு இது தெரியுமா? 

 

அஞ்சாநெஞ்சன் அழகிரி மட்டும் பழைய கெத்தோடு இருந்திருந்தால் சில்லறை எல்லாம் சிலுப்புகிற நிலைமை வந்திருக்குமா? திரு P தியாகராஜன். மதுரை மத்திய தொகுதியின் MLA . விதி வசத்தால் இன்று தமிழக அரசின் நிதியமைச்சராகவும் ஆகி இருப்பவர். நிதியமைச்சராக வந்து என்ன செய்யப் போகிறார் என்று பார்த்தால் ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சும். இத்தனை ஆணவம் loose talk எதற்கும் உதவாது. நேற்றைக்கு இசுடாலின் மதுரை விசிட்டில் அண்ணன் மு க அழகிரியைச்  சந்திக்கப்போவதாக, கண்கள் பனித்தன இதயம் இனித்தது என்கிற கருணாநிதி வசனம் இன்னொருமுறை அரங்கேறப்போகிறது என்று ஊடகங்களை பரபரக்கவிட்டு இசுடாலின் மதுரைக்கு வந்தார் மருத்துவமனைக்குப் போனார் ஆட்சியர் அலுவலகத்தில் ராஜீவ் காண்டி படத்துக்கு மாலை போட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி வாசித்த கையோடு திருச்சிக்குப் போய்விட்டார். மு க அழகிரி இன்னமும் அமைதி காத்துவருவதில், ஆளாளுக்கு ஒரு விதமான ஊகத்தை, கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 அன்று சகோதரர்களுடைய இணைப்பு இருக்கலாம் என்று ஊதிக் கொண்டிருக்கிறார்கள். விகடன் மட்டும் கொஞ்சும் வித்தியாசமாக ஊதல்  


கொரோனா பரவலைத்தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப் பட்டிருப்பதாக, இன்றும் நாளையும் தளர்வுகள், பேருந்து இயக்கம் என்ற விதவிதமான அறிவிப்புக்களில் தமிழக அரசும் அமைச்சர்களும் குழம்பி இருப்பது தெரிகிறதோ இல்லையோ திருவாளர் பொதுஜனம் குழம்பிக் கிடப்பது மேலே உள்ளட்வீட்டர் செய்தி தெளிவாகவே சொல்கிறது. அதைவிட பெரும் அதிசயம் கார்த்தி P சிதம்பரத்துடைய ட்வீட்டர் செய்தி.


கார்த்தியோ,  பானாசீனாவோ ஒரு சரியான கருத்தை இதுநாள்வரை இவ்வளவு தெளிவாகப் பேசியதே இல்லை. நேற்றைக்குக் கூட எழுவர் விடுதலை விஷயத்தில் இசுடாலின் குரியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில் உடன்பாடு இல்லை என்று பேசிய ஒரு வீடியோவையும் பார்த்தேன்.ஒரு தெளிவான கருத்தை சொன்னதற்காக  சபாஷ் கார்த்தி!

மீண்டும் சந்திப்போம்.   

#அரசியல்இன்று இன்னும் எத்தனை காமெடிகளைப் பார்க்கப்போகிறோமோ?

சேகர் ரெட்டியும் நாற்பது திருடர்களும்! ஒரு தனிமனித அரசாங்கத்தை நடத்திய சேகர் ரெட்டி என்று சவுக்கு சங்கர் ஒரு நீளமான பதிவை அந்தநாட்களில் எழுதியது நிறையப்பேருக்கு மறந்து போயிருக்கலாம்! அந்தப் பதிவில் இருந்த முக்கியமான விஷயமே ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமே இல்லாமல் இரண்டு கழகங்களைச் சேர்ந்த புள்ளிகள் சேகர் ரெட்டியிடம் எவ்வளவு வாங்கினார்கள் என்ற பட்டியல்தான்! அதற்கு என்ன வந்தது இப்போது என்று கேட்கிறீர்களா?


அதே மணற்கொள்ளை புகழ் சேகர் ரெட்டி முதல்வர் இசுடாலினைச் சந்தித்து கொரோனா நிவாரணநிதியாக   ஒருகோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உதயநிதி இசுடாலினும் உடனிருந்தார் என்கிறது DIPR செய்திக்குறிப்பு. சேகர் ரெட்டி தொழிலதிபர் ஜெ. சேகர் என்றாகியிருப்பது வெறும் காமெடிதானா? உதயநிதி உடனிருந்தது தற்செயலானதுதானா? அல்லது இந்தச் செய்தியில் சொல்லப்படுகிற மாதிரி சைதை துரைசாமி முன்னர் சொல்லியிருந்தாற்போல உதயநிதியின் ரெட் ஜயண்ட்ஸ் நிறுவனத்துக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருந்ததன் பின்தொடர்ச்சியா? அதிமுக ஆட்சியில் கட்டு கட்டாக பணத்துடன் சிக்கிய சேகர் ரெட்டி, திமுக ஆட்சியில் ஜெ. சேகர் ஆக உருமாறினார் திமுக எப்படி சாதியை ஒழி(ளி)ச்சுடுச்சு பார்த்தீங்களா என்று கார்டூனிஸ்ட் பாலா முகநூலில் கேட்கிறார் என்பதும் ஒரு சீரியசான காமெடியே!


புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு சோனியா காங்கிரசும் மார்க்சிஸ்ட் சேக்காளிகளும் எதற்காக லபோதிபோவென்று அடித்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம்? சோனியா காங்கிரஸ் காரன் குதித்தால் ஐயோ காசுபார்க்கிற வாய்ப்பு போச்சே என்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்!


காங்கிரஸ் பெருச்சாளிகள் வடை போச்சே என்று பொருமுவதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒட்டுண்ணிகளாக மட்டுமே அரசியலில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற மார்க்சிஸ்டுகள் ஏன் காங்கிரஸ் காரனுக்கு மேலேயே கூவுகிறார்கள்? விவரித்துச் சொன்னால் ஒரு முழுநீள காமெடிப்படமே எடுக்கலாம்!  

 


மேலே படத்தில் இருக்கிற பெண்மணி ஷைலஜா டீச்சர்! பினரயி விஜயனுடைய முந்தைய அமைச்சரவையில் மிக முக்கியமானவராக இருந்தவர். கேரளா மாடல் என்று மார்க்சிஸ்டுகளால் தம்பட்டமடித்துக்கொண்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னணியாக இருந்தவர், இந்தமுறை மந்திரிசபையில்  சேர்த்துக்  கொள்ளப்படவில்லையாம்! பழைய முகங்களுக்கு மறுவாய்ப்புக் கொடுப்பதில்லையன்று மாநிலக்குழு இன்று கூடி முடிவிடுத்ததில் டீச்சருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் பினரயி கூடப் பழைய முகம்தான்! The announcement has led to much anger and disappointment. Though Pinarayi Vijayan was the face of the LDF’s campaign, much of their focus was on how Kerala performed when Nipah and COVID-19 outbreaks happened. That KK Shailaja won with a landslide margin is a testament to her popularity. The party’s explanation that old faces will not be repeated has not cut much ice with many who are asking why can’t a minister be repeated if the Chief Minister remains the same. என்கிறது TNM செய்தி அதே வேளையில் புதுமுக MLA வான முகமது ரியாசுக்கு மந்திரிப் பதவி கிடைத்திருக்கிறது. அதற்கான காரணம் அவர் பினரயி விஜயனுடைய மாப்பிள்ளை என்பதாகக் கூட இருக்கலாம்! (வெளியே சொல்வார்களா என்ன!!)


Kerala going the way of the rest of the country.
Quote Tweet
Sreedhar Pillai
@sri50
·
One of the new ministers in #PinarayiVijayan’s ministry is his son-in-law #MohammedRiyas!!

2:01 PM · May 18, 2021Twitter for Android

சுமந்த் சி ராமன் பொதிகையில் Sports Quiz மட்டுமே நடத்திக் கொண்டிருந்த நாட்களில் எல்லோராலும் விரும்பப்பட்டவராக இருந்தார் என்பது பழைய கதை. அரசியல் விமரிசகராக ஜோதியில் ஐக்கியமானபின் அவரும் காமெடிப்பீசாகிப்போனார் என்பது  இன்னொரு விதமான காமெடி! மார்க்சிஸ்டுகள் மட்டும் விதிவிலக்கா என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.      

#அரசியல்இன்று கொஞ்சம் செய்தி! கொஞ்சம் விமரிசனம்!

மக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது தமிழக அரசியலின் நிகழ்நேரக் காமெடி!தானாக நடந்ததா அல்லது திரைமறைவில் வேறு எவருடைய இயக்கத்திலோ நடக்கிறதா என்ற கேள்விக்கு விடைதேடினீர்களானால் அது இன்னமும் தமாஷாக இருக்கும்! 


தற்போது கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலக பொதுச் செயலாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகியுள்ளார். கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த சந்தோஷ்பாபு பதவி விலகியுள்ளது மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது சந்தோஷ் பாபுவைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் மதுரவாயல் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியாவும் விலகியுள்ளார் என இந்து தமிழ்திசை ஆதங்கத்தோடு செய்தி வெளியிடுகிற சாக்கில் உள்ளூர சந்தோஷப் படுகிறதோ? 
 
முகநூலில் ஹரன் பிரசன்னா தனியே அதகளம் செய்து கொண்டு இருக்கிறார்!! 

பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகியுள்ளதற்கு தனியே ஒரு களை எடுத்தல் கடிதம்‌ எழுத சோம்பலாக இருப்பதால், மகேந்திரனுக்கு எழுதிய கடிதத்தையே பத்மப்ரியா என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும்.
- மக்கள்‌ மாஜி மய்யம்

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவிப்பு. பத்து உறுப்பினர்கள் கட்சியில் இருந்து அம்பது பேர் விலகினால் எந்த ஒரு தலைவனும் ஆடிப் போக மாட்டானா? களையை எடுப்பது எளிதா கட்சியையே எடுப்பது எளிதா என்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும். - மக்கள் காலி மய்யம்.

எத்தனை பேர் விலகினாலும்‌ புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அத்தனை பேர் விலகவும்‌ சம‌ வாய்ப்பு தரப்படும்.- மக்கள் நாதியற்ற மய்யம்.

"பழ கருப்பையா இன்னும் விலகவில்லை என்றே நினைக்கிறேன். பழ கருப்பையா விலகல் என்று கூகிளில் தேடினால் 1,44,876 ரிசல்ட் வருவதால் உறுதி செய்ய முடியவில்லை' என்று மக்கள் பீதி கட்சித் தலைவர் ப்ளீஸ் ஹெல்ப் என்ற தலைப்பில் டிவிட்டரில் வெளியிட்டதைத் தொடர்ந்து பரபரப்பு கூடி உள்ளது.

நான் கட்சியில் இருந்து விலகேன் என்றுதான் போஸ்ட் செய்ய நினைத்தேன். ஆனால் எதோ நெட்‌ பிரச்சினையில் கட்சியில் இருந்து விலகுவேன் என்று போஸ்ட் ஆகிவிட்டது. அந்த ஸ்க்ரீன் ஷாட்டை வேண்டுமென்றே பரப்புகிறார்கள். கமலே‌ விலகினாலும் நான் விலகமாட்டேன். இது அவருக்கும் தெரியும்.
- கவிஞர் சி.நாகன்.


வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டு அருகிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகம்  செய்வதும் தொடக்கம். ஸ்டெர்லைட் போராளிகளைக் கண்டா வரச்சொல்லுங்க! பாடகன் கோவனை கையோடு கூட்டி வாருங்க! 


சாந்தினி தமிழரசன்! இப்படி ஒரு நடிகையை நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் துணிச்சலாக ஒரு கேள்வியை தமிழக அரசுக்கு முன்வைத்திருப்பதாக தினமணி செய்தி சொல்கிறது.


சினிமா படப்பிடிப்புகள் தவிர டிவி சீரியல் படப்பிடிப்பும் தங்குதடங்கல் இல்லாமல் நடைபெற்று வருவதில் விஜய் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்ற பிரபலங்கள் சிலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட செய்தியை நீங்களும் படித்திருக்கக்கூடும்.

கொரோனா பரவலைத் தடுக்க வேண்டியவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்! பதில் கிடைக்காது என்பது மட்டுமல்ல .....!

மீண்டும் சந்திப்போம்.   



மண்டேன்னா ஒண்ணு! #அரசியல்

அதிமுகவில் EPS - OPS இருவருக்கும் இடையில் நடந்து வரும் இழுபறி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக  யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் நீடித்ததில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டமன்றத் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.


நாளை 11 ஆம் தேதி சமஉக்கள் பதவியேற்கவிருக்கும் நிலையில் அதிமுகவில் இப்படி ஒரு இழுபறி தேவையே இல்லாதது. OPS கட்சிக்குள் தனது செல்வாக்கு என்ன என்பதை  உணராமலேயே இதுவரை இருந்திருக்கிறார் என்பது விசித்திரம் ஆனால் உண்மை. தமிழக சட்டசபை வரலாற்றில் ஒரு முதல்வரும் இரண்டு முன்னாள் முதல்வர்களும் இருப்பது இது இரண்டாவது முறை. 2006 இல் கருணாநிதி முதல்வர், எதிர்வரிசையில் ஜெயலலிதா, OPS என இரு முன்னாள் முதல்வர்கள்! 2021 இல் இசுடாலின் முதல்வர்,  EPS - OPS என இரு முன்னாள் முதல்வர்கள் என்பது வெறும் தகவல் தான்! உபயோகம், சுவாரசியம் இருக்குமா என்பது உங்கள் சாய்ஸ்!   

இன்றைய இந்து தமிழ்திசை நாளேட்டில் என்.மகேஷ் குமார் எழுதியிருக்கும் ஒரு செய்திக்கட்டுரை கொஞ்சம் வேடிக்கை,தகவல் பிழையுடன் இருக்கிறது. கருணாநிதி பூர்வீகம் ஆந்திரா என்பது எம்ஜியார் முதல்வராக இருந்த நாட்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாகவே நடந்தது என்பது வேடிக்கை. ஆந்திரா, தமிழகம் எல்லாம் ஒன்றாக இருந்த சமயத்தில் என ஆரம்பித்திருப்பது தகவல் பிழை. தமிழகத்தின் வட எல்லையாகத் திருவேங்கடம் என்றுதான் இருந்திருக்கிறதே தவிர ஆந்திராவும் தமிழகமும் ஒன்றாக இருந்ததே இல்லை.


உரையரங்கத்தை யார் நடத்துகிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்! திருக்கோவில் நடைமுறைகளுக்குத் தெளிவும் தீர்வும் சொல்ல இவர்கள் யார்? 

  
http://srirangam.org/ கோவிலின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்ட pdf வடிவ அறிவிப்பு மேலே. ஜீயர்களை நியமிக்க இவர்கள் யார்?

இப்பொழுதும் கூட மாநிலத்தில் புதிய அரசு அமைந்து நான்கே நாட்கள் தான் ஆகிறது என்பதால் விமரிசனம் செய்வதைத் தவிர்க்கிறேன். மூன்றுமாதம் அல்லது 100 நாட்கள் என விமரிசிப்பதைத் தவிர்ப்பது கூட நானாக ஏற்படுத்திக்கொண்ட, சுய கட்டுப்பாடு மட்டும்தான்!

மீண்டும் சந்திப்போம். 

இட்லி வடை பொங்கல்! #81 #அரசியல் #தேர்தல்அரசியல் #கொரோனாஅரசியல்

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிந்து வெற்றி பெற்ற கட்சிகள் பதவியேற்பும் அனேகமாக நடந்து விட்டது. தேர்தல் களச்சூடு தணிந்து, ஆட்சி செய்வதில் வென்ற கட்சிகள் கவனம் செலுத்துகிற நேரத்தில், எங்குமே போணியாகாத சோனியா காங்கிரஸ் கட்சி மட்டும் மோடி வெறுப்பு அஜெண்டாவில் செயல்பட்டு வருவதை இந்து தமிழ்திசை செய்தியில் பார்த்தபோது சிரிப்புத்தான் வருகுதையா! அதேபோல காமெடி செய்து சிவசேனாவும் சோனியா காங்கிரசுக்குச் சமமான இடத்தைப் பெற்றிருக்கிறது.  


மூன்று மாநிலங்களில் தோற்றதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்யவேண்டும் என்று அறிக்கைவிட்ட அதிமேதாவி திருமாவளவன் கூட, தனது பல்லவியை மாற்றிக் கொண்டதாக இந்து தமிழ்திசை கார்டூன் நையாண்டி செய்திருக்கிறது.

ஆனாலும் கூட சிவசேனா கட்சிப்  பத்திரிகை சாம்னா தலையங்கத்தில் இன்றைக்கு சோனியா காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிற விதமே அலாதி! நேரு -காந்தி (இந்திரா&வாரிசுகள்) ஏற்படுத்தி விட்டுப் போன அமைப்பின் மீதுதான் இன்று இந்தியாவே பிழைத்திருக்கிறதாம்! இந்தியா டுடே தளம் செய்தி  சொல்கிறது  "In clear terms, India is surviving on the system created by Nehru-Gandhi. Many poor countries are offering help to India. Earlier, countries like Pakistan, Rwanda and Congo used to get help from others. But due to the wrong policies of today's rulers, India is going through that situation now," உடனே சிவசேனாவுக்கு சோனியா காங்கிரஸ் மீது பாசம் பொங்கிவழிவதாக தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள்! தன்னுடைய கையாலாகாத்தனம், திறமையின்மை, ஊழல், கட்டுக்குள் கொண்டுவர முடியாத கொரோனா,  இப்படி வரிசையாகப் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் சிவசேனாவுக்கு, மராத்தா மக்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்திருப்பதில் விரக்தியின் விளிம்புக்கே போனவர்கள் தங்களது ஏலாமையை இப்படித்தான்  உபதேசம் செய்து வெளிப் படுத்துவார்கள்! மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியும் தேர்தல் வன்முறைகளில் உயிர்ப்பலி விவகாரத்தில் மத்திய அரசின் குழு  அனுப்பப்பட்டிருப்பதில், குழு ஆய்வு செய்ய வேண்டாம், என்னை வேலைசெய்ய விடுங்கள் என்று வசனம் பேசியதோடு கப்சிப்.

அதிமுக வெற்றிபெற்றால் மந்திரியாகிவிடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய அதிமுக எம்பிக்கள் வைத்தி லிங்கம், கே பி முனுசாமி இருவரும் எம்பி பதவியை ராஜினாமா செய்வார்களா? அல்லது சட்டசபையில் மவுசே இல்லாமல் சமஉ ஆக இருப்பதைத் தேர்ந்து எடுப்பார்களா? சரியாக ஊகித்துப் பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு  பரிசெல்லாம் கிடையாது. ஆனால் தமிழக அரசியலை நன்றாகப்புரிந்து வைத்திருக்கிற பெருமையோடு காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்! 


அதிமுகவில் எதிர்க்கட்சித்தலைவராக வரப்போகிறவர் யார்? EPS  அல்லது  OPS இந்தக்கேள்விக்கும் கூட அந்தக் கட்சியால் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை! 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துக் கலைந்து விட்டார்கள்! உங்கள் ஊகம் என்ன?


கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்கள்  முழு ஊரடங்கை அறிவித்திருக்கின்றன. சோனியா காங்கிரஸ், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே போல சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும், மாநில அரசைப்பொறுப்பாக்கக் கூடாதென்று ஆகாத கதை பேசாமல், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக முதல்வர் முழு ஊரடங்கை அறிவித்திருப்பதற்கு மனப் பூர்வமான வாழ்த்துகள்!

ஆளும்கட்சி திமுக அரசியலை விமரிசிப்பதற்கான தருணம் இதுவல்ல. திமுக அரசை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு விமரிசிப்பதான எண்ணம் இல்லை. ஆக்கபூர்வமான செயல்பாடு இருந்தால் மனப்பூர்வமான ஆதரவு நிச்சயம் உண்டு. 

மீண்டும் சந்திப்போம்.              

மக்கள், நீதி, மய்யம்! பார்ட் பார்ட்டாகக் கழன்று போன கமல் காசர் கட்சி!

கோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்த கமல் காசர் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டார் என இன்றைய நிகழ்வுகள் சொல்கின்றன.  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரன், பொன்ராஜ், சந்தோஷ்பாபு, மவுரியா, சி.கே.குமரவேல் என முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகியுள்ளனர். ` இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை' என விலகல் கடிதத்தில் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார் என்கிறது பிபிசி செய்தி. 


வீடியோ 35 நிமிடம். விஜய் டிவி மகேந்திரன் மற்றும் சுரேஷ் அய்யர் இருவரும் சேர்ந்து தொடங்கிய சங்கையா சொல்யூஷன்ஸ், கமல் காசர் கட்சிக்கு  ஆலோசனை சொல்கிற பொறுப்பை எடுத்துக் கொண்டதில் இருந்தே பிரச்சினைகள் எழுந்ததாக சிலகாலத்துக்கு முன்பே தகவல்கள் வெளியாகின. தங்களை மீறிக் கமலை வேறு எவரும் அணுக முடியாதபடி சங்கையா சொல்யூஷன்ஸ் சிறப்பாகச் செயல்பட்டதில் முதல் பலி திருமதி கமீலா  நாசர்! கமல் குடும்ப நண்பர் என்பதால் பிரச்சனைகளை வெளியே பேசாமல், அமைதியாக வெளியேறி விட்டார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த நான்கே நாட்களில் மக்கள்நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி இருப்பது கமல் காசருடைய  அரசியல் சாகசம், தலைமை  எப்படிப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.  



பொள்ளாச்சி மருத்துவர் மகேந்திரன் தனது 12 பக்க அறிக்கையில் கமல் காசருடைய தலைமையின் லட்சணத்தை மிக விரிவாகவே சொல்லியிருப்பதை ரங்கராஜ் பாண்டே மேலே வீடியோவில் தெளிவாகவே எடுத்துச் சொல்கிறார்.



முன்னதாக வந்த செய்தி க்கும் இன்றைய நிகழ்வுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? சுயேட்சைகளைத் தவிர்த்து ஐந்து முனைப்போட்டியாக நடந்து முடிந்த தேர்தலில் கமல் காசர் கட்சி+  ஐந்தாமிடத்தைத் தான் பெற்றிருக்கிறது என்பதில் பொன்ராஜ் சொன்னதுபோல தேமுதிக, சமக இருகட்சிகளுடன் கூட்டணி வைத்தது தான் என்பது உண்மையான காரணமல்ல. 


#Breaking || "களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே மகேந்திரனின் சாதனை மகேந்திரன் விலகியதில் மகிழ்ச்சி, இனி கட்சிக்கு ஏறுமுகம் தான் - கமல் #KamalHaasan | #MakkalNeedhiMaiam
Image

கமல் காசரும் அவரது மய்யமும் வெறும் பிக் பாஸ் ஷோ மட்டும்தான் என்றாகிப்போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை! அரசியல் கட்சி நடத்துவது  வெறுமனே வசனம் பேசுவது மட்டும் இல்லை, அவ்வளவுதான்!

மீண்டும் சந்திப்போம