Showing posts with label தமிழக அரசியல். Show all posts
Showing posts with label தமிழக அரசியல். Show all posts

#தமிழகஅரசியல் எங்கே போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்?

வரும் ஆனா வராது என்கிற சினிமா காமெடி மாதிரி இரு நாட்களாக இழுத்துக் கொண்டே போன ஊரடங்கு நீட்டிப்பா இல்லையா என்கிற விஷயம் இன்றைக்கு  ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஜூன் 7 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறதாம்!  


ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஏன் இவ்வளவு இழுபறி / தயக்கம் என்பது புரியவே இல்லை. அனுபவமுள்ள அதிகாரிகள் சரியான ஆலோசனை தருவதற்குத்  தயங்குகிறார்களா? அல்லது புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள் தயங்குகிறார்களா? 


கோவிட்  தடுப்பூசி போட சென்னை அரசு மருத்துவ மனைகளில் நீண்ட வரிசை. 200+ நபர்கள் வரிசையில் நிற்கிறார்கள், காலை 6 மணிக்கே வந்து வரிசையில் இடம் பிடிக்கின்றனர். இவர்கள் சாப்பிடாமலேயே ஊசி போட்டுக் கொள்கிறார்களா என்று கவலை.ஆனால்  அரசு தெருவோர ஊசி முகாம்கள் பல கடைசி நேரத்தில் கான்சல் ஆகின்றன. இங்கே ஃ பேஸ்புக்கில் ஊசி போட மக்கள் வருவதே இல்லை என்று பதிவுகள். இந்த நிலையில் இன்று சில தனியார் மருத்துவமனை விளம்பரங்கள். ரூ 1250 கட்டினால் கோவாக்சின்  ஊசி செலுத்திக் கொள்ளலாம் என்று!.அரசிடம் குறைந்த ஸ்டாக், தனியாரிடம் போதுமான ஸ்டாக் எப்படி என்ற குழப்பம் தான் மக்களிடையே சந்தேகங்களை உருவாக்குகிறது என்று மேலே பார்த்த விளம்பரத்தோடு முகநூலில் விசனப் படுகிறார் ராம்ஜி யாஹூ மகாதேவன் இந்த அழகில் செங்கல்பட்டில் உள்ள தடடுப்பூசி தயாரிப்பு மையத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் அல்லது லீசுக்காவது கொடுங்கள், நாங்களே தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தயாரித்துக் கொள்கிறோம் என்றால் எத்தால் சிரிப்பது என்ற சந்தேகமும் சேர்ந்து வருமா வராதா?  


அதிமுக என்றொரு அரசியல் கட்சிஇருக்கிறதா?  செயல் படுகிறதா?  ஐயம் தீர்த்த 38 நிமிட காணொளி. கடந்த 10 ஆண்டுகளில் அப்படிப் பொறுப்பான எதிர்க்கட்சி என இருந்ததில்லை என்கிற நிலையில்  எடப்பாடி திரு K  பழனிச்சாமி ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என்கிற நம்பிக்கையும் துளிர்க்கிறது. 

ன்றைக்குப் பார்த்த செய்திகளில் கொஞ்சம் நல்ல செய்தியும் செம தமாஷாகிப் போனதுமான விஷயம் வைரமுத்தானுக்கு ONV கல்சுரல் அகாடெமி வழங்க உத்தேசித்திருந்த விருதை மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்திருப்பதுதான்! கேரளத்தில் எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக இப்படி ஒரு முடிவு. இந்த கல்சுரல் சொசைட்டியின் சேர்மன் அடூர் கோபால கிருஷ்ணன் முன்னதாக, விருது வழங்குவது எழுத்து வன்மைக்காகத்தானே தவிர நடத்தைக்காக அல்ல என்று முட்டுக் கொடுத்தும் கூட, அது செல்லுபடியாகவில்லை ரன்பது சுவாரசியத்தைக் கூட்டுகிற விஷயம்.


 #MeToo பிரச்சினையில், பாலியல் சீண்டல் புகாருக்கு ஆளான வைரமுத்துவின் போக்கில்  எந்தவொரு நல்ல மாற்றமும் இல்லை என்பதற்குச் சான்றாக, அவர் எழுதிய மேற்கண்ட பாடலே இருப்பதை, கட்டம்கட்டிக் காட்டப் பட்டிருக்கிற வரிகளே போதும். The Tamil poet-lyricist Vairamuthu, who has been accused of sexual harassment by many women had been chosen for the fifth ONV Literary Prize. The award, which is given to poets from Malayalam and other Indian languages by the ONV Cultural Academy here, comprises a cash prize of Rs 3,00,000 and citation. The award this time was decided by a jury consisting of poet Prabha Varma, Malayalam University Vice-Chancellor Anil Vallathol and writer Alankode Leelakrishnan. The academy is headed by filmmaker Adoor Gopalakrishnan. The patrons include Chief Minister Pinarayi Vijayan, MT Vasudevan Nair and KJ Yesudas, and many other distinguished  personalities like MA Baby, Prabha Varma, RS Babu, MK Muneer and Benoy Viswam are part of the Academy என்கிற செய்தி விருது வழங்கப்பட்டதன் பின்னணியில் ஒரு அரசியல் இருந்ததாலேயே அடூர் கோபாலகிருஷ்ணன் முட்டுக் கொடுத்ததும், மலையாளத்திரையுலகின் பெண் நட்சத்திரங்களிடமிருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பவே ஜகாவாங்க வேண்டிவந்ததும் நடந்திருக்கிறது. ஆனால் இங்கே பாடகி சின்மயி தொடர்ந்து புகார் கொடுத்தும் கூட தமிழ்த்திரையுலகம் கண்டுகொள்ளவே இல்லை. டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது முதல் மேலும் சில இழப்புக்களை பாடகி சின்மயி இன்றும் சந்தித்து வருவது தமிழ்தேசத்தின் அசமந்தத்தனம்,அவமானம் என்பதான கோபம் மல்லுதேசத்தைப் பார்க்கையில் எழுகிறதே, என்ன செய்யப்போகிறோம்?    

வைரமுத்துவைக் காலம் ஒதுக்கித்தள்ளிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் போதுமா என்கிற கேள்வியோடு...

மீண்டும் சந்திப்போம்.      

சண்டேன்னா மூணு! #அரசியல் #திமுகஅரசியல் #மாற்றுஅரசியல்

இன்றைய நாளிதழ்களில் திமுகவின் சாதனைகளாக ஒரு நாலைந்து பக்க விளம்பரமாக அதிமுக கொடுத்ததில், திமுக தரப்பு உறைந்து போய்விட்ட மாதிரியே தெரிகிறது  இத்தனை நாள் ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு திமுகவினர் அடுத்துவந்த தம்பட்டம் எல்லாம் கிழிந்து தொங்குகிறதாம்! போதாக்குறைக்கு ஒரு மாஜி திமுக பெண் அமைச்சருடைய தாயாரே நில அபகரிப்பு  சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார். என்னவென்று?  


பெற்ற தாயுடைய சொத்துக்களையே மோசடியாகத் தனது புருஷன் பெயருக்கு மாற்றிக்கொண்ட அந்த திமுக பெண் பிரமுகர் பூங்கோதை ஆலடி அருணா தான்! இந்த ஒரு சோற்றுப் பதம் போதாதென்றால் உங்கள் ஊரில் உள்ள திமுக பெரும்புள்ளிகளுடைய முன்கதை & பின்கதை சுருக்கத்தைத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!


திமுக ஊதி ஊதிப் பெரிதாக்கி வந்த நாங்க தான் ஆச்சியப் புடிக்கப்போறோம் பலூனை இப்படி ஒரே நாளில் உடைத்துவிட்டார்களே! திமுக சொம்புகளுக்கு துக்கம் நெஞ்சை அடைக்காதா?  நெஞ்சே வெடிக்கும்படி ஒருத்தர் பொதுவெளியில் வாந்தி எடுத்திருக்கிறார்.


யாரிந்த விவேக் என்று விசாரித்தால், மின்னம்பலம் இணைய இதழில் இருப்பவர் என்று சொல்கிறார்கள். கடைசி மூன்று வரிகளில் சொல்லியிருப்பதைத்தானே இவர்களும் திமுகவுக்கு ஆதரவாக இத்தனைநாள் செய்து வந்தார்கள் என்று நான் கேட்கப்போவதில்லை!

தட்டிக்கேட்க ஆளில்லாமலிருந்ததால் இத்தனை நாள் திராவிட கழகம், தி மு கழகம் , சுபவீ செட்டியார், திருமா உள்ளிட்டபலரும் இது பெரியார் மண் அது இதென்று முண்டா தட்டிக் கொண்டிருந்தார்கள் யாராவது சிறிது சந்தேகத்தோடு கேள்வி கேட்டால் அவரை சங்கி என்று பழித்தார்கள்! ஆகாதவர்கள் எவரைப்பார்த்தாலும்  பிஜேபியின் B டீம் என்றார்கள்  அதையும் மீறிக் கேள்வி கேட்டால், கேட்காதே! பிஜேபி உள்ளே வந்துவிடும் என்றார்கள்! கடைசிவரை தாங்கள் யார், தங்களுடைய கொள்கை என்ன, சாதித்ததென்ன இவை எதையும் சொல்லாமலேயே அடுத்தவர்களை அவதூறாகப் பேசுவதொன்றையே!  முழுநேரத் தொழிலாக வைத்து இருந்தார்கள்  கடைசியில் என்ன ஆனது? சோணமுத்தா எல்லாம் போச்சா?.       


பெங்களூரு பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தேஜஸ்வி சூர்யா கூட, இந்த 10 நிமிட வீடியோ நேர்காணலில் ஊழலில் காங்கிரசும்  திமு கழகமும் ஊறித்திளைப்பவை என்பதனால் நேச்சுரல் கூட்டாளிகள் என்று சொல்கிறார். அண்ணாமலை IPS ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவார் என்பதையும் மிகுந்த நம்பிக்கையோடு சொல்கிறார் இதையும் திமுகவினர் செய்து வரும் வெறுப்பு அரசியலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!  ஒப்பிட்டுப்பார்க்க இன்னொரு 7 நிமிட வீடியோ 



வெறும் 20 சீட்டுகளில் மட்டுமே போட்டியிடும் பிஜேபி மாற்று அரசியல் சக்தியா? மாற்றத்துக்கான சக்தியாக மிகுந்த வீரியத்துடன் பிஜேபி தமிழகத்தில் காலூன்றி விட்டது என்பது சத்தியம்! 

தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகத்தை இதுநாள் வரை ஒட்டவிடாமல் வைத்திருந்த திமுகவை நிராகரிப்போம்! திமுகவுடன் சேர்ந்து கொட்டம் அடிக்கும் உதிரிகளான விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சில்லறைகளையும்  முற்றிலும் நிராகரிப்போம்! தமிழகம் தனித்தீவல்ல! பாரதத்தின் ஒரு அங்கமே எனத் தலைநிமிர்ந்து சொல்லுவோம்!

மீண்டும் சந்திப்போம்

IT ரெயிடுகளும் பின்னே வரும் திமுக சவடால்களும்!

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போலவே திமுகவுக்குச் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு என்பதும் இந்தத் தேர்தல் களத்தில் நிரூபணமாகி வருகிறது ஆபாசராசா, கெக்கேபிக்குணி தயாநிதி மாறன், லியோனி மாதிரிப் பொறுப்பற்ற பேச்சாளர்கள் ஒருபுறம் என்றால், திமுகவின் கடந்தகால சாதனைகள்  இப்போது அவர்களுக்கே சோதனையாகத்  திரும்புகிறது என்றால் நம்புவீர்களா?   



இசுடாலின் மகள் செந்தாமரை வீடு, மற்றும் மாப்பிள்ளை சபரீசனுடைய நண்பர்கள் /கூட்டாளிகள் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதில், அதிர்ந்து போயிருந்தாலும் திமுகவினரின் வாய்ச்சவடால் கொஞ்சமும் குறையவில்லை. நான் கலைஞரின் மகன்?, மிசாவையே பார்த்தவன், பனங்காட்டுநரி, சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என்று இசுடாலின் வீரவசனம் பேசி மனதைத்தேற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காண்டி ஓடோடி வந்து கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்கிறபோது திமுகவிடமிருந்து வாங்கித்தின்று வயிறு வளர்க்கும் விசிக, கம்யூனிஸ்டுகளும் கோரஸ் பாடாமல் இருப்பார்களா?


திமுகவின் ஆஸ்தான காமெடியன் துரை முருகன் இந்த விவகாரத்தைக் குறித்து நிருபர்களுக்குப் பேட்டி கொடுப்பதன் 9 நிமிட வீடியோவைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்! துரை முருகன் சீரியசாகப் பேசுவது போலவே காமெடி செய்கிறவர். இந்த ரெயிடுக்காகக் கண்டனம் தெரிவிக்கிறாரா அல்லது  உள்ளூர சந்தோஷமும் உதட்டில் ஆதரவு வார்த்தைகளுமாகப் பேசுகிறாரா என்பதைக் கண்டுகொள்ள முடிந்தால் நீங்களும் தலை சிறந்த அரசியல் விஞ்ஞானியே! உதயநிதி வழக்கம் போல இந்தா பிடி என்னோட அட்ரசு முடிஞ்சா வந்து ரெயிடு நடத்து என்று சவால் விட்டிருக்கிறார்.

மதிப்பீட்டாளர்
 2ம. 
“பாஜக தோல்வி பயத்தில் வருமான வரி ரெய்டுகளை ஏவி விடுகிறது”! - திமுக தலைமை அறிவிப்பு. சரி ஐயா பாஜக தோல்வி பயத்தில் வருமான வரிச் சோதனையை ஏவி விடுகிறது என்றே ஒரு கணம் வைத்துக் கொள்வோம்!
நீங்கள்தான் ‘தோல்வி பயம்’ சற்றும் இல்லாத ‘வெற்றி வீரர்கள்’ ஆயிற்றே? தைரியமாக எதிர் கொள்ள வேண்டியதுதானே வருமான வரி சோதனையை?
“வந்து பார்த்துங்கடா - வீட்டை மூலை முடுக்கெல்லாம் சோதனை நடத்துங்கடா - வேண்டுமானால் வீட்டு வாசல் கேட்டையே பூட்ட வேண்டாம் - வெளியில் ‘ஜெயன்ட் சைஸ்’ பெரிய ஸ்க்ரீன் வைங்க - உள்ளே என்ன சோதனை நடக்கிறது என்று ‘லைவ்’வா போட்டுக் காட்டுங்க - பொது மக்கள் பார்க்கட்டும்- எங்களுக்கு மடியில் கனமில்லை!”- என்று தைரியமாக அறிக்கை விட்டால் நீங்கள் அசல் நேர்மையாளர்கள்! அதை விட்டு விட்டு - “தேர்தலுக்கு நான்கு நாள் இருக்கும் போது ரெய்டு ஏன் நடத்துகிறார்கள்?”- என்ன ஐயா கேள்வி இது?
தேர்தல் நெருங்கி வரும் நாள் என்றால் எந்த ஒரு சட்ட பூர்வமான நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப் பட வேண்டும் - இத்தனை நாளுக்கு முன்பாக நடத்தக் கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா என்ன? சில மாதங்கள் முன்பு உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனே பேசினாரே:
“தேர்தல் முடியும் வரை கழக உடன் பிறப்புகள் ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்... வருமான வரித் துறைக்குப் புகார் அளித்து ஒருவர் மற்றவரைப் போட்டுக் கொடுக்க கூடாது!” - நா தழுதழுக்க வேண்டிக் கொண்டாரே துரைமுருகன்!
அவர் என்ன பாஜக ஆட்களுக்கா அந்த வேண்டு கோளை வைத்தார்? அல்லது அதிமுகவுக்கு வைத்தாரா? உங்கள் கட்சி ஆட்களுக்குத்தானே அந்த வேண்டுகோளை வைத்தார்?
“யார் யார் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறீர்களோ - விருப்ப மனு கொடுங்கள் - கட்டணம் செலுத்துங்கள் -நேர்காணலுக்கு வாருங்கள்”- என்று கூப்பிட வேண்டியது! கண்துடைப்புக்கு ஓரு “நேர்காணல்”!
ஸ்டாலின் தொகுதி - கொளத்தூர் - வரும் போது அவர் ஒருவர் மட்டுமே மனு கொடுத்திருந்தாலும் அவர் எதிரே வந்து மனுதாரர் நாற்காலியில் உட்கார்ந்து கொள்வாராம்!
அவரை எதிரில் உட்கார வைத்து துரைமுருகன் ‘நேர்காணல்’ நடத்துவாராம்! சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பெயர் வரும்போது உதயநிதி மட்டும் - அல்லது அவர் சார்பில் பலர் - அந்தத் தொகுதிக்கு ஒரே பெயரில் மனு கொடுப்பாங்களாம்!
அவரும் வந்து பவ்யமாக நின்றபடியே ‘நேர்காணலில்’ பங்கேற்பாராம்! பெற்ற தகப்பனே மகனுக்கு அவர் கட்சியில் சேர்ந்த விவரங்கள், கலந்து கொண்ட கூட்டங்கள், கட்சியில் ஆற்றிய பணிகள் இவை பற்றி எல்லாம் மகனிடமே தகப்பன் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வாராம்! அப்படி ஒரு ஜனநாயகமாம் கட்சியில்! என்னமா சீன் காட்டினீர்கள்!!
கடைசியில் வேட்பாளர்கள் பலர் யார்?
காட்பாடி என்றால் 80 வயதுக்கு மேலானாலும் துரை முருகன்தான்! ஆத்தூரில் (திண்டுக்கல் மாவட்டம்) ஐ.பெரியசாமி -பழனியில் அவர் மகன் பெ.செந்தில் குமார்! ஒட்டன் சத்திரத்தில் 6 ஆவது முறையாக (1996 -2001 - 2006- 2011- 2016- 2021) சக்ர பாணிதான்!
தூத்துக்குடி என்றால் கீதா ஜீவன்தான் (தூத்துக்குடி பெரியசாமி மகள்) ஆலங்குளம் என்றால் ஆலடி அருணா மகள் டாக்டர் பூங்கோதைதான்! மதுரை மத்திய தொகுதி என்றால் PT பழனிவேல் ராஜன் மகன் பழனிவேல் தியாகராஜன்தான்!
திருவெறும்பூர் என்றால் அன்பில் பொய்யாமொழி மகன் மகேஷ் பொய்யாமொழிதான் வேட்பாளர். திருச்சி மேற்கு என்றால் நேருதான்!
வீரபாண்டி என்றால் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனின் உறவினர் தருண்தான்! திருச்சுழி என்றால் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசுதான்!
திருநெல்வேலி என்றால் முன்னாள் MLA A.L. சுப்ரமணியம் மகன் ALS லட்சுமணன்தான்! வில்லிவாக்கம் என்றால் க. அன்பழகன் பேரன் வெற்றி அழகன் என்கிறார்கள்!
தி. நகரில் ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதி.
இப்படிப் பல தொகுதிகளை வாரிசுகளுக்கும், மேலும் பல தொகுதிகளை அந்தந்த மாவட்டக் ‘குறுநில மன்னர்களுக்கும்’ - ‘முரட்டு பக்தர்களுக்கும்’- வேண்டப் பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்துவிட்டு அப்புறம் கண்துடைப்புக்கு ஒரு பிரமாதமான “நேர்காணல்”
பணம் கட்டிவிட்டு சீ்ட்டு கிடைக்காமல் ஏமாந்து போனவன் எத்தனை பேர்? அவன் என்ன கொள்கைக் கோமானா? அறவழியில் நின்று பொதுச்சேவை செய்யத் துடிப்பவனா? எனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் கட்சி நிறுத்திய வேட்பாளருக்குப் பாடுபடுவேன் - கட்சி கட்டளையிடும் பணியைச் செய்வேன் - என்று லட்சிய பூர்வமாக சித்தாந்தத்தால் பிணைக்கப் பட்டவனா?
அரசியல் சீட்டுக்கட்டு சூதாட்டத்தில் மேஜையை விட்டு வெளியேறியவன் - அவ்வளவுதானே?!! பிரியாணிப் போட்டியில் "தொடை எலும்பு" சுவைக்கக் கிடைக்காமல், குஸ்காவை சுவைக்கும் நிலைக்கு ஆளான "கொள்கைத் திருமகன்" தானே அந்த உடன்பிறப்பு?!!
ஸ்டாலின் மகள் வீட்டிலும், மருமகனிடமுமே வருமான வரித் துறை ரெய்டு வருகிறது என்றால் - துரை முருகன் சொன்னது போல - எவனோ உங்களில் ஒருவன் ஸ்ட்ராங்காகப் போட்டுக் கொடுத்து உள்ளான் என்று பொருள்!
எனவே பாஜகவை நோவதை விட, அந்தக் “கறுப்பு ஆடு” எது?- என்று உங்களிடையே தேடுங்கள்! கடைசியாக ஒன்று! நினைவிருக்கிறதா 1971 தேர்தல்?
பெருந்தலைவர் காமராஜர் - “ஆந்திரா பேங்கில் ஒரு கோடி ரூபாய் வைத்து இருக்கிறார்!”- என்று பிரசாரம் செய்தீர்கள்! அவர் உங்களைப் போலப் பதறவில்லை!
“செக் தருகிறேன் - இருந்தால் போய் எடுத்துக் கொள்!”- என்றார்! இறக்கும் போது நாலே நாலு வேட்டி சட்டையும், பையில் 130 ரூபாய் பணமும் வைத்திருந்த அந்தத் தலைவனை அப்படிப் பேசினீர்கள்!
சரித்திரம் திரும்புகிறது உடன் பிறப்பே! செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா! காமராஜ் உங்களைப் பார்த்துச் சொன்னது போல், வருமான வரி அதிகாரிகளைப் பார்த்து தைரியமாகச் சொல்ல வேண்டியதுதானே? “இருந்தால் எடுத்துகிட்டுப் போடா!”
அதை விட்டுவிட்டு ஏன் பாஜக தோல்வி பயத்தில் மிரட்டுகிறது என்ற அலறல்??


சாதாரண ஜனங்களும் மிடில் கிளாஸ் மாதவன்களும் தப்பிப் பிழைத்திருக்க வேண்டுமானால்
 திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளை முற்றிலும் நிராகரிப்பது ஒன்றே வழி! புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.

#தமிழகஅரசியல் தேர்தல்களம் எப்படி இருக்கிறதாம்?

இந்திரா சௌந்தரராஜன்! திகம் விரும்பி வாசிக்கப்படும் தமிழ் எழுத்தாளர். அதில் சந்தேகமே இல்லை! ஒரு தேர்ந்த அரசியல் விமரிசகராகவும், வருகிற தேர்தல்களத்தைப் பற்றிய கணிப்பைச் செய்கிறவராகவும் இந்த 21 நிமிட வீடியோவில் காட்சி அளிக்கிறார்.


பெரிய தலைகள் எதுவும் இல்லை. ஆதரவு அலை என்று இல்லாத தேர்தல் இது. அதனால் வெற்றி இன்னாருக்கு என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை என்று சொன்னதாலோ என்னவோ, நான் பார்க்கிற தருணம் வரை வெறும் 430 பார்வைகள் மட்டுமே காண்பித்தது.

ரங்கராஜ் பாண்டே ஒருவழியாகத் தனது தளத்தில் ஒரு கருத்துக் கணிப்பை இன்று நடத்தி முடித்துவிட்டார்! அதிமுக கூட்டணிக்கு 97 இடங்கள் திமுக கூட்டணிக்கு 111 இடங்கள் மீதம் 26 தொகுதிகளில் இழுபறி என்பதாக முடித்திருக்கிறார். ரங்கராஜ் பாண்டே மாதிரி அனுபவம் மிகுந்த ஊடகக்காரர்கள் சொல்வதைக் கவனிப்பதோடு சரி! அதற்குமேல் முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு ஒத்துவராத, உடன்பாடில்லாத விஷயம். 

புதிதாக யாராவது சொல்லும்போது அது இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது என்பதாலேயே இந்திரா சௌந்தர ராஜன் சொன்னதையும் காதில் வாங்கி கொண்டேன்! அவ்வளவுதான்!

கருத்துக் கணிப்பும் கருத்துத் திணிப்பும் என்ற தலைப்பில் இன்றைய தினமணி நாளிதழில் வ மு முரளி என்பவர் ஒரு விரிவான, விவரமான செய்திக் கட்டுரையை எழுதி இருக்கிறார். நண்பர்களுக்கு அதைப் பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.        

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தெரியாத ராகுல் காண்டி! கள நிலவரம்!

போகிற இடங்களிலெல்லாம் RSS, பிஜேபி மீது சேற்றை வாரியிறைப்பதை ஒரு வாடிக்கையாகவே ராகுல் காண்டி வைத்திருக்கிறார். 50 வயதுக்கு மேலாகிவிட்டது. 17 வருடம் எம்பியாகவும் காலம்தள்ளி விட்டார். ஆனாலும் ராகுலுக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியல் செய்யவும் தெரியவில்லை என்பது அவரைப்  பெற்றெடுத்த சோனியா வாங்கிவந்த சாபம்! 


"இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. ஒரு சித்தாந்தம், எல்லோரும் எனக்குக் கீழே என்கிறது. அதுதான் ஆர்.எஸ்.எஸ், மோடி, அமித் ஷாவின் சித்தாந்தம். இன்னொரு சித்தாந்தம் சகோதரத்துவம், பாசம், மரியாதை என்கிறது. அதைத்தான் நாங்கள் நம்புகிறோம்.என்னுடைய பிரச்சினை என்னவென்றால் இவ்வளவு தொன்மையான பண்பாட்டு, பாரம்பரியம் கொண்ட மக்களின் பிரதிநிதியான தலைவர்கள், அமித் ஷா, மோடி உள்ளிட்டோரின் காலில் விழுந்து கிடக்கிறார்களே என்கிற கோபம் எனக்கு வருகிறது". என்று நேற்றைக்கு சேலத்தில் நடந்த  திமுக கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காண்டி பேசியிருப்பதாக இந்து தமிழ்திசை செய்தி.


Congress leader Rahul Gandhi attacked Rashtriya Swayamsevak Sangh (RSS) in a tweet on 25 March claiming that it does not have the values of a family. In his column, Arun Anand talks about the cordial relationship between the Congress party and the RSS from the early 1960s and how the party's veteran leader Dau Dayal Khanna triggered the Ram Janmabhoomi movement in the early 1980s.இந்த 6 நிமிட வீடியோவில் அருண் ஆனந்த் என்கிற ஆராய்ச்சியாளர் காங்கிரசுக்கும் RSS அமைப்புக்கும் இடையில் சுமுகமான உறவே இருந்தது என்று விளக்குகிறார்.

Stanley Rajan 8ம . · தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது இல்லை ஆனால் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அடிமையாகிவிட்டார்கள் ; ராகுல்காந்தி ஒரு தேசிய தலைவனாக இல்லாமல் மதிகெட்ட நாம் தமிழர் தும்பி போல் கத்தி கொண்டிருக்கும் ராகுலை கண்டால் இப்பொழுதெல்லாம் பரிதாபம் வரவில்லை, எரிச்சலே மிஞ்சுகின்றது காங்கிரஸ் என் இப்படி நாசமானது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது திமுக, அதிமுகவின் கடந்தகால வரலாறு கூட இந்த தத்தி தலைவனுக்கு தெரியவில்லை, சரி அரசியல்தான் தெரியாது, பாட்டி தந்தை கடந்துவந்த பாதையுமா ஒருவனுக்கு தெரியாது? கருணாநிதி இந்திரவின் காலில் விழுந்து அடங்கிய வரலாறு என்ன? 1977க்கு பின் ஒரு வார்த்தை கருணாநிதி இந்திராவினை எதிர்த்திருப்பார்? மிசாவில் திமுகவினரை நொறுக்கி தள்ளி , சர்க்காரியா கமிஷனை ஏவிவிட்டு கருணாநிதியினை தன் கண் அசைவில் உருட்டி வைத்திருந்தார் இந்திரா., மறுக்க முடியுமா? அப்பக்கம் ராமசந்திரனை மிரட்டி தனிகட்சி தொடங்க வைத்தது முதல், ராமசந்திரனின் ரகசியம் அறிந்த டிஜிபி மோகன் தாஸை கொண்டும் இன்னும் ரே கமிஷன் எல்லாம் வைத்தும் அவரை கட்டுக்குள் வைத்திருந்தார் இந்திரா.ஆம், திமுக அதிமுக இரண்டுமே இந்திராவின் காலடியில் பணிந்து சுருண்டிருந்த காலங்கள் இருந்தன ‌ ராஜிவ் ராமசந்திரனை அழகாக கையாண்டார், பிரபாகரனுக்கு எதிராக அமைதிபடையினை அனுப்பிவிட்டு ராமசந்திரனோடு சென்னையில் மேடையேறும் வித்தை ராஜிவுக்கு தெரிந்திருந்தது இங்கு யார் இந்திராவினை, ராஜிவினை பகிரங்கமாக எதிர்த்தார்கள்? எல்லாம் வாய்சவுடால் விட்டுவிட்டு அவர்கள் காலடியில் கவிழ்ந்து கிடந்தார்கள் இதெல்லாம் தெரியாமல் தமிழ்நாட்டுக்கு வந்து ஜோதிமணி எழுதி கொடுப்பதை உளறும் ஒரு முட்டாள் தலைவனை தேசியவாதிகள் வன்மையாக கண்டிக்கின்றோம்.ராகுல் தமிழக அரசியல்வாதி அல்ல, அவர் அகில இந்திய அளவில் எதிர்கட்சி தலைவராக அறியபடும் பொழுது இப்படி திராவிட, தமிழ்தேசிய கும்பலை போல் பேசிதிரிவது கண்டிக்கப் பட வேண்டிய செயல். ஒன்று அவர் காங்கிரஸ் தலைவராக தேசியம் பேசட்டும், இல்லை இப்படி பேசுவதாக இருந்தால் நாம் தமிழர் கட்சியில் காங்கிரஸை இணைத்துவிட்டு பேசட்டும் எத்தனையோ முட்டாள்களை தேசிய அரசியலில் காங்கிரஸ் கண்டிருந்தாலும் ராகுல் போல மகா மோசமான ஒரு அப்பாவி முட்டாளை எங்கும் கண்டதில்லை காணவும் முடியாது இங்கு பாஜகவுக்கு சமநிலை கொடுக்க காங்கிரஸ் அவசியம், காங்கிரஸ் மீண்டெழ ராகுல் அரசியலை விட்டே அகற்றபடுதல் மகா அவசியம்

வானதி சீனிவாசனை துக்கடா அரசியல்வாதி என்று துச்சமாகப்பேசியதோடு கமல் காசரின் ம.நீ. ம நிறுத்திக் கொள்ளவில்லை. மய்யத்தின் கொக்கரிப்பு கொஞ்சமும் குறையவில்லை. 





பிஜேபி மய்யத்தின் குமரவேலுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. என்றாலும் மய்யம் அடங்குவதாக இல்லை.ஆக, கமல் காசருடைய சாயம் மெல்ல மெல்ல வெளுத்து வருகிறதே, கவனிக்கிறீர்களா?


பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கம் இதுதான் களநிலவரம் என்று இந்தப்படத்தை முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சரியாகத் தான் சொல்கிறாரா?
உங்கள் கருத்து என்னவென்பதை சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

சண்டேன்னா மூணு! #அரசியல் #ஆராசா #ஆபாசராசா

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறனையும் தூக்கி சாப்பிட்டு உலகமகாஊழல் சாதனை படைத்த ஆ.ராசா. ஆபாச ராசாவாகவும் இந்தத்தேர்தல் பரப்புரையில் சாதனை படைத்திருக்கிறார் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! ஏனென்றால் திமுகவினரின் வரலாறு அப்படி!


  Stanley Rajan 16நி  

பெண்மையினை தாய்மையினை கொச்சை படுத்துவது ஒன்றும் திமுகவுக்கு புதிதல்ல, இதை முதலில் தொடங்கி வைத்தவன் அவர்களின் பிதாமகன் ஈரோட்டு ராம்சாமி
அவனே புனிதமான சீதை, பாஞ்சாலி, கண்ணகி என விமர்சித்து தொடங்கி வைக்க அவனின் அடிப் பொடியான பெரும் மூடன் அண்ணாதுரையும் அவனின் சீட கோடியான கருணாநிதியும் காமாட்சி, மீனாட்சி என தெய்வங்களை விமர்சிக்க தொடங்கினார்கள்
அது அவர்களின் அரசியலும் தொடர்ந்தது
இலங்கை பிரதமர் ஸ்ரிமாவோ பண்டார நாயகாவில் தொடங்கி, காமராஜரின் தாய், இந்திரா, ஜெயலலிதா என யாரும் இவர்களின் மகா மட்டமான கீழான பேச்சுக்கு தப்பவில்லை
நாம் ஆட்சிக்கு வரமாட்டொம் என எதையோ பேசிய அண்ணாதுரை ஆட்சிக்கு வந்ததும் தன் இயல்பான தந்திரத்தால் பதுங்கினான்
ஆனால் கருணாநிதி பதுங்கவில்லை, சட்டசபையில் "நாடாவினை அவிழ்த்து" என மிக மட்டமாக பேசிவிட்டு எப்படி என் இலக்கிய பேச்சு என அசிங்கமாக சிரித்தவர் அவரே
காமராஜரின் தாயினை நோக்கி "அவள் கருவாடு விற்றவள்" என கடுமையாக கருணாநிதி சாட, என் தலைவனின் தாய் கருவாடு மட்டும், ஆம் கருவாடு "மட்டும்" விற்றாள் என கண்ணதாசன் அழுத்தி சொல்ல அப்படியே அமைதியானார் கருணாநிதி
ஆம் அஞ்சுகம்மாள் என்ன விற்றார் என்பது கண்ணதாசனுக்குத்தான் தெரிந்திருந்தது
அதன் பின்னும் கருணாநிதி திருந்தவில்லை, விதவைக்கு மறுவாழ்வு என்றும் , திமுகவினரால் தாக்கபட்ட இந்திராவின் தலையில் வடிந்த ரத்ததை மிக மிக கொச்சைபடுத்தி பெண்குலத்தையே கடுமையாக அவமானபடுத்தியதெல்லாம் வரலாறு
அதே தாக்குதல் ஜெயா மேலும் தொடர்ந்தது, பின்பு அது எடுபடாததால் கைவிடபட்டது
அப்படிபட்ட திமுகவினரிடம் அதுவும் வெற்றிகொண்டான் போன்ற இசட் கிரேடு ஆபாச பேச்சாளர்களையும் அவர்களை விட இசட்‍‍‍ பேச்சினை பேசிய கருணாநிதியினை தலைவனாக கொண்ட கட்சியில் ஆ.ராசா பேசுவதெல்லாம் ஆச்சரியமில்லை
ஆ.ராசா எப்பொழுதுமே சர்ச்சைகுரிய நபர், இவரை முதலில் கடுமையாக எச்சரித்தது பாமகவின் காடுவெட்டி குரு குருவின் மிரட்டலை தொடர்ந்து நீலகிரி மலையில் தஞ்சமடைந்த ராசா இன்னும் மலையில் இருந்து இறங்கவில்லை
சுருக்கமாக சொன்னால் திருமாவின் இரட்டை பிறப்பு இந்த ராசா, இவரை வளர்த்துவிட்ட பெருமகன் திருவாளர் கருணாநிதி
அப்படிபட்ட ராசா பழனிச்சாமி தாயாரை கடுமையாக விமர்சிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றாலும் இதெல்லாம் மிக மிக மோசமாக கண்டிக்கபட வேண்டிய விஷயங்கள்
தண்டிக்கபட வேண்டிய விஷயங்கள்
ஒரு பாராளுமன்ற எம்பி, ஒரு முன்னாள் அமைச்சரின் தரம் இவ்வளவுதான் என்பதுதான் அருவெருப்பின் உச்சம், திமுகவின் மிச்சம்
சிம்புவுக்கும் இன்னும் பலருக்கும் கொடி பிடித்த மாதர் சங்க அமைப்புகளை பழனிச்சாமியின் மறைந்த தாய்க்கு அவமானம் நிகழும் பொழுது காணவில்லை
இன்னும் பல பெண் உரிமை போராளிகள் சத்தமே இல்லை
கருணாநிதியின் ஆபாச பேச்சுக்கள் உலகறிந்தவை, உதயநிதியின் சசிகலா மேலான விமர்சனம் எல்லோரும் அறிந்தது
இதில் ராசாவும் தன்னை யார் என்றும் எதற்கும் காடுவெட்டி குரு தன்னை விரட்டியடித்தார் என்பதையும் நிரூபித்து கொண்டிருக்கின்றார்
நமது சந்தேகமெல்லாம் பழனிச்சாமி தாயாரே இப்படி அவமானபடும் பொழுது திமுக பிரிய காரணமான மணியம்மை எப்படி எல்லாம் திமுகவினரால் விமர்சிக்கபட்டிருப்பார் என்பதுதான்

இதை பற்றி வீரமணி பின்பு விளக்குவார் என தமிழகம் எதிர்பார்க்கின்றது 


இசுடாலின் கூட பட்டும்படாமல் இந்தவிவகாரத்தில் ஏதோ கருத்து சொல்லியிருக்கிறாராம்! 

ஸ்டேன்லி ராஜனுக்கு ஆபாசராசா பேச்சின் மீதான கோபம் இன்னும் குறையவில்லை போல!

மக்களால் தேர்ந்தெடுக்கபடாதவர்களெல்லாம் முதல்வராவது "தவறானது" என்றால் வரலாற்றில் அப்படிபட்ட முதல் பிறப்பு கருணாநிதியே
அண்ணாதுரை இறந்ததும் தேர்தலை சந்திக்காமல் குறுக்குவழியில் முதல்வராகி வழிகாட்டிய உத்தமர் அவர்தான்.அதாவது முதல் "கள்ள குழந்தை" அல்லது "குறை பிரசவ குழந்தை" அவர்தான்
அதுதான் இந்திராவுக்கு பின் ராஜிவ் அப்படியே அமர்வது வரை வழிகாட்டியது. திமுக கூட்டணியினர் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிவது நல்லதல்ல, இப்படித்தான் மொகரையெல்லாம் கிழியும் 

ஆராசா, உதயநிதி போன்றவர்களின் பொறுப்பற்ற ஆபாசமான பேச்சுக்கள் திமுகவின் தேர்தல் வாய்ப்பை எந்தவிதத்தில் பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஏற்கெனெவே கொங்குமண்டலத்தில் 34 கொங்கு வெள்ளாளர் அமைப்புக்கள் சேர்ந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது தெரியும்தானே!

மீண்டும் சந்திப்போம்.

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல்படுத்தும்பாடு

உள்ளூர் அரசியல் தான் படுத்துகிறது என்று பார்த்தால் அங்கே அமெரிக்க அரசியல் அதற்குமேல் அபத்தக் களஞ்சியமாக இருப்பதை யாரேனும் கவனிக்கிறீர்களா? பல வருடங்களுக்கு முன்னால் இர்விங் வாலஸ் எழுதிய The Man என்கிற நாவலைப் பற்றி இந்தப் பக்கங்களில் விரிவாக பகிர்ந்ததுண்டு. ஒரு அரசின்  உயர்பொறுப்பில் இருப்பவர்களைத் தகுதி நீக்கம் Impeach செய்வது பற்றி என்னுடைய மாணவப்பருவத்தில் முதன்முதலாக அறிந்து கொண்டது அந்த நாவலில் தான்! நம்முடைய அரசியல் சாசனத்திலும் அதேபோல ஷரத்துக்கள் இருப்பதைத் தெரிந்து கொண்டதெல்லாம் அப்புறம் தான்! அரசியல் என்னென்னமாதிரி பாடுபடுத்தும் என்பதை ஒரு சின்னக் காணொளியாக: 


டொனால்ட் ட்ரம்புக்கு முன்னால் இரு அதிபர்கள் ஆன்ரூ ஜான்சன், பில் க்ளின்டன் இப்படி அமெரிக்க காங்கிரசால் (நம்மூர் மக்களவை மாதிரி) தகுதி நீக்கம் செய்யப்பட சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறார்கள் ரிச்சர்ட் நிக்சன் காங்கிரஸ் impeach  செய்வதற்கு முன்னாலேயே ராஜினாமா செய்துவிட்டார் ஆனால் டொனால்ட்  ட்ரம்ப் ஒருவர் மட்டுமே அமெரிக்க சரித்திரத்திலேயே இரண்டு முறை காங்கிரசால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் என்ற பெருமையை அல்ல, டெமாக்ரட்டுகளின் சிறுமையை வெளிப்படுத்துவதாக இருப்பதை மேலே 10  நிமிட வீடியோவில் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். அமெரிக்க அரசியல் சாசனம் மிகத்தெளிவாக பதவியில் இருப்பவர்களைத் தகுதிநீக்கம் செய்வதைப் பற்றி மட்டுமே பேசுகிறது அமெரிக்க டெமாக்ரட்டுகள் ஒருபடி மேலே போய், பதவிக்காலம் முடிந்து, இப்போது முன்னாள் அதிபர் என்ற அடைமொழி மட்டுமே இருக்கிறவரையும் தகுதி நீக்கம் செய்யப் போகிறார்களாம்! நாளை 9/2/21 அன்று அமெரிக்க செனெட்டில் விசாரணை ஆரம்பம். எப்படியிருக்கும் என்பதை நேரலையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.(தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை காங்கிரசில் மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு இருந்தால் போதும். தகுதி நீக்கம் குறித்த விசாரணை செனெட்டில் தான் நடந்தாகவேண்டும்) அதிக விவரங்களுக்கு இங்கே

விதியே விதியே! என் தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்? என நொந்து கொள்ள வைத்த இரண்டு நேர்காணல்கள் ஒன்று டாக்டர் தமிழிசை 31 நிமிடம் மற்றொன்று இசுடாலின்  38 நிமிடம்  அரசியல் பார்வையாளனாக இருப்பது எத்தனை கொடுமை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அதிலுள்ள  தமாஷையும் அனுபவிக்க வேண்டுமே, அதற்காகவும் தான்!  


ஜெயலலிதா படத்துக்கு சசிகலா மாலை, கும்பிடு போட்டதாகச் செய்தி வந்ததெல்லாம் சரிதான்!  

ஜெயிலுக்குப்போவதற்கு முன்னால் செத்தாலும் விட மாட்டேன் பாணியில் மூன்று முறை ஜெ. சமாதியில் ஓங்கி அறைந்து சபதம் போட்ட மாதிரி ஏதாவது இன்றைக்கும் நடந்ததா? 

மீண்டும் சந்திப்போம்.    


#துக்ளக் ரமேஷ்! #ரஜனிகாந்த் மறுபடியும் முதல்லேருந்தா? #சினிமா என்றால் சீரழிவு!

அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து அதன்மீது நேர்மையாகத் தனது விமரிசனங்கள், கருத்தைப் பதிவு செய்வது தமிழக ஊடகச் சூழலில் அரிதிலும் அரிது ஆனால் ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பது உண்மை. துக்ளக் வார இதழின் தலைமைச் செய்தியாளராக இருக்கும் திரு.ரமேஷ், அப்படி ஒருசில விதிவிலக்குகளில் ஒருவர் என்பது என்னுடைய கருத்து சொல்லவந்ததைப் பூசி மெழுகாமல், பொய்க்கலப்பில்லாமல் ஆணித்தரமாக எடுத்து வைப்பது துக்ளக் ரமேஷுடைய பாணி! 


இந்த 26 நிமிட வீடியோவில் முதல் 3 நிமிடங்களை FF செய்துவிடலாம்! ஒரிஜினல் பேட்டி 23 நிமிடம் இதில் TTV தினகரனின் அமமுக (உண்மையில் VK சசிகலா) என்ன மாதிரியான தாக்கம், அதாவது அதிமுகவுக்கு எவ்வளவு சேதம் என்று இதர ஊடகங்கள் ஆவலோடு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிற சப்ஜெக்ட் மீது சிம்பிளாகச் சொல்லிவிடுகிறார் (சசிகலாவின் நோக்கம் என்னவாக இருந்தாலும் தீயசக்தி திமுகவை எதிர்ப்பது என்பதிலிருந்து விலகமுடியாது;விலகினால் அது  அரசியல் தற்கொலை என்பது புரிந்துகொள்ளமுடியாத ஒன்றா என்ன?) அப்படியே திமுகவின் வேல்பிடித்து போஸ் கொடுக்கிற அரசியலின் போலித்தனம், தேமுதிக கொஞ்சம் அதிக சீட் எதிர்பார்க்கிற விவகாரம், திமுக கூட்டணியில் இன்னும் தொடர்கிற குழப்பங்கள் என்று தமிழக அரசியல் களநிலவரங்களை, நேரடியாகவே சொல்லிவிடுகிறார் என்பது நான் இந்த நேர்காணலைப் பரிந்துரை செய்வதற்கான காரணம். பாருங்களேன்!


வீடியோ 3 நிமிடத்துக்கும் குறைவு, மறுபடியும் முதலில் இருந்தா? இப்படி அயர்ச்சி எல்லாம் எனக்கு இல்லவே இல்லை! நாயைஆட்டுவிக்கும் வாலாக இருப்பது யார்?சினிமா  KD brothers மட்டுமே தானா? அர்ஜுன மூர்த்தி, அப்புறம் லதா ரஜனிகாந்த், இப்போது இந்த RMM ராஜா. இன்னும் எத்தனைபேர் அந்த மனிதர்  பெயரைச் சொல்லிக்கொண்டு  யாரைக்குழப்ப அல்லது பயமுறுத்த நினைக்கிறார்கள்? ஏதாவது புரிகிறதா? 

தமிழக அரசியலில் சினிமா புகுந்து எப்படி இன்னும் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்! ஆனால் இதைக்குறித்து என்ன செய்வது என்று யாருக்குமே, (சினிமாத்துறையில் சிக்கிச் சீரழிந்தவர்களையும் சேர்த்துத்தான்) தெரியவில்லை! 


7th சேனல் மாணிக்கம் நாராயணனுடன் சித்ரா லட்சுமணன் உரையாடல் 27 நிமிடம். வெள்ளித்திரைக்கு பின்னால் இருக்கும் அவலங்கள், துயரங்களை, இந்த வீடியோவை வைத்து முகநூலில் சிவகாசிக்காரன் வலைப்பதிவர் ராம்குமார் அருமையான பகிர்வை நேற்றைக்கு எழுதியிருக்கிறார்

மீண்டும் சந்திப்போம்.

சண்டேன்னா மூணு! #பாமகஅரசியல் #ராகுல்அரசியல் #திமுகஅரசியல்

தமிழக அரசியலில் உதிரிக்கட்சியாக மட்டுமே இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வேறென்ன சாமர்த்தியங்கள் இருக்கிறதோ தெரியாது! கூட்டணி பேரம் பேசுவதில் மிக சாமர்த்தியசாலிகள்! தேர்தலில் வெற்றிபெற்று ஆதாயம் பெறுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்! கூட்டணி பேரம் ஒன்றிலேயே அதிக ஆதாயம் பார்க்கிற சாமர்த்தியம் உள்ள கட்சி இங்கே பாமக மட்டும் தான்! எல்லாப்புகழும் ஆதாயமும் மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே என்றால் நம்புவீர்களா?


நாளை முக்கியமான முடிவெடுக்கப்போவதாக அவசர நிர்வாகக்குழு கூடுவதாக அறிவித்திருந்ததை ஒரு வாரம் தள்ளிப் போட்டிருக்கிறார்களாம்! பேரம் படிந்து விட்டதா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! அதிமுகவுடன் பேரம் பேசிக்கொண்டே, திமுகவுடனும் பேசுகிறார்கள்! 2016 இல் இப்படித்தான் தேதிமுகவின் பிரேமலதாவை இரண்டுபக்கமும் ஊசலாடவிட்டு,  திமுகவின் ஆஸ்தான காமெடியன் துரைமுருகன் நன்றாக வைத்துச் செய்தது போல, இப்போது பாமகவுக்கும் நடந்தால் மிக நன்றாகத்  தான் இருக்கும்! நடந்தேற வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோமே!


தேமுதிக இந்தமுறை முந்திக்கொள்ளப் பார்க்கிறது என்பதில் சென்ற முறை பாமக முந்திக்கொண்டு தேவையானதை வாங்கிக் கொண்டது, தேமுதிக பின்தங்கி கொடுத்ததை வாங்கிக் கொண்டு அதிமுக கூட்டணியில் ஒட்டிக் கொண்டது மாதிரி ஆகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை தெரிகிறது. ஆனால் தேவையே இல்லாமல் சசிகலாவைப் பற்றி ஏன் பேசினார்?    


ராகுல் காண்டி தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் விஜயமாக வந்திருக்கிறார். தமிழகத்துக்குப் புதிய ரட்சகனாகத் தன்னை அறிவித்துக்கொண்டு தேர்தல் பரப்புரை செய்ய ஆரம்பித்திருப்பதில் மறந்துபோய்க்கூட இசுடாலின் பெயரையோ திமுக கூட்டணியைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. என்ன சோகமோ என்ன உள்குத்தோ? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? கேவி தங்கபாலு மொழிபெயர்க்க வராதது பெருங்குறை! 


திமுகவின் நிரந்தரக் காமெடியன் துரை முருகன் என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்காமல் பதிவை முடித்து விடமுடியுமா? கையில் ஊசி, வேல் என்று எதுவும் இல்லாமலேயே குத்துகிற கலை தெரிந்தவர். இசுடாலின் கையில் வேலைக் கொடுத்துவிட்டால் மட்டும் ......? என்!று கேட்கிற மாதிரியே இல்லை! *இப்போதாவது, தனித்துப் பிரசாரம் செய்வதாக முடிவெடுத்ததற்கு காங்கிரசுக்கு பாராட்டு-என்றும் சேர்த்தே சொல்லியிருப்பது துரை முருகனுடைய பிரத்தியேகமான லந்து!

மீண்டும் சந்திப்போம்.

மண்டே ன்னா ஒண்ணு! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்வலைகள்!

மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக தலீவர் இசுடாலின் பொங்குகிற அளவுக்குப் போயிருப்பது தமிழக அரசியல் களத்துக்கு மிகவும் விசித்திரமானது! அந்த அளவுக்கு சமீப நாட்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது, அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.


அக்னிப் பரீட்சை என்றால் கேள்விகளில் தீப்பொறி பறக்கவேண்டும் இல்லையா? இங்கே கார்த்திகேயன் அமைச்சர் பதில் சொல்வதில் மேற்கொண்டு என்ன கேட்பது எனத்தெரியாமல் பம்முகிறார் என்றால் இது யாருக்கு  அக்னிப் பரீட்சை? கார்த்திகேயனுக்கா? புதிய தறுதலை சேனலுக்கா? வழக்கமான குறுக்கீடுகள், விஷமத்தனமான கேள்விகள் எதுவும் எடுபடாமல் போனதொரு வேடிக்கையான விவாதம்! வீடியோ 37 நிமிடம். வேடிக்கையை ரசித்துத்தான் பாருங்களேன்!

நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!
Quote Tweet
PuthiyathalaimuraiTV
@PTTVOnlineNews
·
’அக்னிப் பரீட்சை’ இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  
#AgniParitchai #RajendraBalaji #BJP #ADMK #Rajinikanth #DMK #MKStalin  

அமைச்சருடைய அக்னிப் பரீட்சை நேர்காணலுக்கு இசுடாலின் இத்தனை கோபமாக ட்வீட்டரில் பொங்குவானேன்? ஊடக எடுபிடிகளுடைய முயற்சி தோற்றுப்போனதால் வந்த ஏமாற்றமா? கோபமா?  

 வீடியோ 9 நிமிடம் 

இப்படி இசுடாலின் பொங்கியதற்கெல்லாம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொஞ்சம்கூட அசருவதாயில்லை! அவர்பாட்டுக்குத் தன் மனதிற்கு சரி என்று படுவதை வெளிப்படையாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். இது நேற்றைக்கு முகநூல் துக்ளக் வாசகர் குழு ஒரு ட்ரஸ்ட் ஆகத் தொடங்கப்பட்ட நிகழ்வில் பங்குகொண்டு பேசியதென்ன என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்!

  
வைகுண்டராஜன் சேனல் நியூஸ் 7 மட்டும் இந்த விவகாரத்தை விட்டு விடுமா? பத்திரிகையாளர் மணி முதலில் பொங்குகிறார், அடுத்து விசிகவின் ஆளூர் ஷாநவாஸ்! இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தையை அமைச்சர் சொல்லலாமா? திராவிட அரசியலின் வழக்கமான கதைத்தல்களில் இருந்து விலகி ஒரு புதிய பாதையில் பயணிக்கிறதா அதிமுக என்ற முக்கியமான கேள்விக்கு சரியான பதிலை எவராலும் சொல்ல முடியவில்லை என்பது இந்த 55 நிமிட விவாதத்தின் சாரம்.

ஆக, தமிழக அரசியல்களத்தில் புதிய அதிர்வலைகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்படுத்திவிட்டார்! செக்கு மாடுகள் மாதிரி அய்யா புகழ் அண்ணா புகழ் கருணாநிதி புகழ்  எம்ஜியார் புகழ் அம்மா புகழ் என்றே லாவணி பயாடிக் கொண்டிருந்த திராவிட அரசியல் வேறுபாதையில் பயணிக்குமா? உள்ளது உள்ளபடியே பிரச்சினைகள், இருப்பதைத் துணிச்சலுடன் ஒப்புக்கொள்வது முதல்படி. அதிலிருந்து தீர்வுகள் காண முயற்சிப்பது அடுத்தபடி    

மீண்டும் சந்திப்போம்.