Showing posts with label சோனி(யா) காங்கிரஸ். Show all posts
Showing posts with label சோனி(யா) காங்கிரஸ். Show all posts

#அரசியல்இன்று இன்னும் எத்தனை காமெடிகளைப் பார்க்கப்போகிறோமோ?

சேகர் ரெட்டியும் நாற்பது திருடர்களும்! ஒரு தனிமனித அரசாங்கத்தை நடத்திய சேகர் ரெட்டி என்று சவுக்கு சங்கர் ஒரு நீளமான பதிவை அந்தநாட்களில் எழுதியது நிறையப்பேருக்கு மறந்து போயிருக்கலாம்! அந்தப் பதிவில் இருந்த முக்கியமான விஷயமே ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமே இல்லாமல் இரண்டு கழகங்களைச் சேர்ந்த புள்ளிகள் சேகர் ரெட்டியிடம் எவ்வளவு வாங்கினார்கள் என்ற பட்டியல்தான்! அதற்கு என்ன வந்தது இப்போது என்று கேட்கிறீர்களா?


அதே மணற்கொள்ளை புகழ் சேகர் ரெட்டி முதல்வர் இசுடாலினைச் சந்தித்து கொரோனா நிவாரணநிதியாக   ஒருகோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உதயநிதி இசுடாலினும் உடனிருந்தார் என்கிறது DIPR செய்திக்குறிப்பு. சேகர் ரெட்டி தொழிலதிபர் ஜெ. சேகர் என்றாகியிருப்பது வெறும் காமெடிதானா? உதயநிதி உடனிருந்தது தற்செயலானதுதானா? அல்லது இந்தச் செய்தியில் சொல்லப்படுகிற மாதிரி சைதை துரைசாமி முன்னர் சொல்லியிருந்தாற்போல உதயநிதியின் ரெட் ஜயண்ட்ஸ் நிறுவனத்துக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருந்ததன் பின்தொடர்ச்சியா? அதிமுக ஆட்சியில் கட்டு கட்டாக பணத்துடன் சிக்கிய சேகர் ரெட்டி, திமுக ஆட்சியில் ஜெ. சேகர் ஆக உருமாறினார் திமுக எப்படி சாதியை ஒழி(ளி)ச்சுடுச்சு பார்த்தீங்களா என்று கார்டூனிஸ்ட் பாலா முகநூலில் கேட்கிறார் என்பதும் ஒரு சீரியசான காமெடியே!


புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு சோனியா காங்கிரசும் மார்க்சிஸ்ட் சேக்காளிகளும் எதற்காக லபோதிபோவென்று அடித்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம்? சோனியா காங்கிரஸ் காரன் குதித்தால் ஐயோ காசுபார்க்கிற வாய்ப்பு போச்சே என்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்!


காங்கிரஸ் பெருச்சாளிகள் வடை போச்சே என்று பொருமுவதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒட்டுண்ணிகளாக மட்டுமே அரசியலில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற மார்க்சிஸ்டுகள் ஏன் காங்கிரஸ் காரனுக்கு மேலேயே கூவுகிறார்கள்? விவரித்துச் சொன்னால் ஒரு முழுநீள காமெடிப்படமே எடுக்கலாம்!  

 


மேலே படத்தில் இருக்கிற பெண்மணி ஷைலஜா டீச்சர்! பினரயி விஜயனுடைய முந்தைய அமைச்சரவையில் மிக முக்கியமானவராக இருந்தவர். கேரளா மாடல் என்று மார்க்சிஸ்டுகளால் தம்பட்டமடித்துக்கொண்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னணியாக இருந்தவர், இந்தமுறை மந்திரிசபையில்  சேர்த்துக்  கொள்ளப்படவில்லையாம்! பழைய முகங்களுக்கு மறுவாய்ப்புக் கொடுப்பதில்லையன்று மாநிலக்குழு இன்று கூடி முடிவிடுத்ததில் டீச்சருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் பினரயி கூடப் பழைய முகம்தான்! The announcement has led to much anger and disappointment. Though Pinarayi Vijayan was the face of the LDF’s campaign, much of their focus was on how Kerala performed when Nipah and COVID-19 outbreaks happened. That KK Shailaja won with a landslide margin is a testament to her popularity. The party’s explanation that old faces will not be repeated has not cut much ice with many who are asking why can’t a minister be repeated if the Chief Minister remains the same. என்கிறது TNM செய்தி அதே வேளையில் புதுமுக MLA வான முகமது ரியாசுக்கு மந்திரிப் பதவி கிடைத்திருக்கிறது. அதற்கான காரணம் அவர் பினரயி விஜயனுடைய மாப்பிள்ளை என்பதாகக் கூட இருக்கலாம்! (வெளியே சொல்வார்களா என்ன!!)


Kerala going the way of the rest of the country.
Quote Tweet
Sreedhar Pillai
@sri50
·
One of the new ministers in #PinarayiVijayan’s ministry is his son-in-law #MohammedRiyas!!

2:01 PM · May 18, 2021Twitter for Android

சுமந்த் சி ராமன் பொதிகையில் Sports Quiz மட்டுமே நடத்திக் கொண்டிருந்த நாட்களில் எல்லோராலும் விரும்பப்பட்டவராக இருந்தார் என்பது பழைய கதை. அரசியல் விமரிசகராக ஜோதியில் ஐக்கியமானபின் அவரும் காமெடிப்பீசாகிப்போனார் என்பது  இன்னொரு விதமான காமெடி! மார்க்சிஸ்டுகள் மட்டும் விதிவிலக்கா என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.      

சாண் ஏறி முழம் வழுக்கும் கதை!ஊழலும் இந்திய அரசியலும்!



ஓரடி முன்னால், ஈரடி பின்னால்!

லெனினுடைய வார்த்தைகள் இவை!இங்கே நம் பக்கத்தில் சாண்  ஏறி முழம் சறுக்குவது என்போமே அது மாதிரி!

லோக்பால், ஜன லோக்பால் என்று மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டே கடைசியில் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, ஒரு உப்புக்குச் சப்பாணி மசோதாவைக் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு அரசியல் சாசன அந்தஸ்து தரும் வடிவம் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்கள் அவையில் இன்றைக்கு மதியம் தாக்கல் செய்யப் படுவதாக இருந்த இந்த லோக்பால் மசோதா, நாளை மாநிலங்கள் அவையின் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. மாநிலங்களின் அவையில் போதிய உறுப்பினர்கள் பலம் இல்லாத மத்தியில் ஆளும் கூட்டணி அரசு,கேள்விக்குரிய எல்லாவிதமான வழிமுறைகளையும் கையாளத் தீர்மானித்திருப்பதாகவே தகவல்கள் சொல்கின்றன.இந்த மசோதா மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப் பட்டால், கடைசிக் கட்டமாக, மக்களவை, மாநிலங்கள்அவை இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதில் சிம்பிள் மெஜாரிட்டி கிடைக்கிறதா  இல்லையா என்ற கட்டத்தை நோக்கி மசோதா போய்க் கொண்டிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அண்ணா ஹசாரே குறைப்பட்டுக் கொள்கிற மாதிரி ஒரு வலுவான ஜன லோக்பால் அமைப்பை காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியுமே ஏற்கத்தயாராக இல்லை என்பது மிக வெளிப் படையாகவே தெரிகிறது. அதை மறைப்பதற்கு எந்த அரசியல் வாதியுமே பிரயாசைப் படவில்லை! மாறாக, உன்னாலே உன்னாலே என்று மற்றத் தரப்பைக் கைகாட்டித் தாங்கள் தப்பித்துக் கொள்ளப்பார்ப்பதாகவே, திருத்தங்கள், ஏற்கப்பட்டதும் நிராகரித்ததும் குரல் வாக்கெடுப்பிலேயே அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்ட காட்சியை மக்களவையில் பார்க்கமுடிந்தது. 

இந்த லோக்பால் மசோதாவின் கதி எப்படி இருந்தாலும், ஆளும் ஐ மு கூட்டணிக் குழப்பம் இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நாடாளுமன்றத்துக்கு இன்னொரு இடைத்தேர்தலை விரும்பாத கட்சிகள் அத்தனையும் இப்போதே ஒரு இடைத்தேர்தலை சந்தித்தால்தான் தப்பிப் பிழைக்க முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டனவோ என்றொரு சந்தேகமும் வலுவாக எழ ஆரம்பித்திருக்கிறது.

சென்ற ஆகஸ்ட் நிலவரப்படி, இந்தப்பக்கங்களிலேயே ஏற்கெனெவே பேசியிருந்ததைப் போல, உடனடியாகத் தேர்தல் என்று வந்தால், பிஜேபிக்குத் தான் சாதகமாக இருக்கும் என்றிருந்தது. இப்போது, பாரதீய ஜனதா கட்சியைக் கொஞ்சம் ஓரம் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை அல்லது அசட்டுத் துணிச்சல் காங்கிரசுக்கும் வந்திருப்பதாகவே செய்திகள் சொல்கின்றன. தவிர, அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சோனியா போயிருந்த தருணங்களில்  அண்ணா ஹசாரே இயக்கத்துக்கு எக்கச்சக்கமாகப் பணிந்து போய் விட்டதாகவும், இப்போதாவது நிமிர்ந்து நின்று தேர்தல்களில் அண்ணாவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று இத்தாலிய மம்மி தைரியமாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றம் தான் எதையும் முடிவு செய்யும்! நாங்கள் அண்ணா ஹசாரே போராட்டத்தைக் கண்டு ஒன்றும் பயப் படவில்லை என்று காக்க காக்க கனகவேல் காக்க என்று அரண்டவன் கந்தர் ஷஷ்டி கவசத்தைக் குளறித் தடுமாறி ஒப்பிப்பது போல மத்திய அமைச்சர்கள் குழற ஆரம்பித்திருப்பதே அவர்கள் எவ்வளவு பயந்து போயிருக்கிறார்கள் என்று காட்டிக் கொண்டிருக்கிறது. 


போதாக்குறைக்கு, ஊடகங்கள் தொடர்ந்து அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆளே சேரவில்லை, ஜனங்களுடைய ஆதரவு குறைந்து போய் விட்டது என்று ஊதிக் கொண்டிருந்தாலும், சிறை நிரப்பும் போராட்டத்துக்குக் கிட்டத் தட்ட ஒரு லட்சம் தன்னார்வலர்கள் முன்வந்திருப்பதாக வெளி வந்திருக்கும் செய்திகள்  ஜனங்களுடைய மனதில் ஊழலுக்கு எதிரான நெருப்பு கனன்று கொண்டிருப்பதைக் கவனிப்பார் எவருமில்லை. 

இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்று சேர்ந்து திரட்டினாலும் கூட ஒருலட்சம் தன்னார்வலர்களை சிறை நிரப்பும் போராட்டத்துக்குத் தயார் செய்ய முடியாது என்பதை ஏனோ வசதியாக மறந்தும் மறைத்தும் விடுகிறார்கள்.

வருகிற மே மாதத்திற்குள் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் காங்கிரசின் அசட்டுத் துணிச்சலை சோதிப்பது மாதிரி நடக்க இருக்கின்றன. அந்த ஐந்திலும் மிக முக்கியமாக, உத்தரப் பிரதேசத்தில் மே மாதம் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் தான் இருக்கும். அந்த முடிவுகளை வைத்துக் கொண்டு அதன் பின் யோசிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைத்திருக்குமேயானால்,உணவுப்பாதுகாப்புச் சட்டம், இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு, பெயரளவுக்கான லோக்பால் மசோதா இப்படி எல்லாவற்றிலும் அவசரப்பட்டிருக்க வேண்டியதே இல்லை.

கூடா நட்பு என்று திமுக தலைவர் கருணாநிதி காங்கிரசைச் சொன்ன மாதிரி, காங்கிரசும், கூட்டணிக் கட்சிகளின் அதிகரித்து வரும் நிர்பந்தங்களை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. முக்கியமான அமைச்சர்கள் மீது எழுந்திருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்கள், எதிர்க்கட்சிகள் வாயை அடைக்க முடியாமலும், நாடாளு மன்றத்தை நடத்த முடியாமலும் நித்யகண்டம் பூர்ணாயுசு என்று ஐந்து ஆண்டுகளை ஓட்டுவது இனி முடியாது என்று காங்கிரஸ் தத்தளிக்கிறது.

தவிர, ராவுலுக்குப் பட்டம் சூட்ட வேண்டிய வேளை வந்து விட்டது என்று தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இத்தாலிய மம்மி முடிவுக்கு வந்திருக்கலாம்! எது எப்படியானாலும்,பல விசித்திரமான பிராணிகள், திசைக்கொன்றாக ஓடும் ஜந்துக்களை வைத்து வண்டி ஓட்டுவது போல இனிமேலும் கூட்டணி அரசை நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தார்களானால், அது இயற்கையானது தான்! 

உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதா என்றால், அப்படி ஒரு அறிகுறியும் தெரியவில்லை. இன்றைக்கோ, மே மாதமோ தேர்தல் எப்போது வந்தாலும் மாயாவதியின் பி எஸ் பி கட்சிதான் முன்னால் இருக்கிறது. முலாயம் சிங் யாதவ் அடுத்த இடத்தைப் பிடிக்கலாம்! சரண்சிங்கின் மகன் அஜித் சிங்கை கூட்டணிக்குள் சேர்த்து, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கியதில். முலாயம் சிங் யாதவுக்கு விழும் வாக்குகளைப் பிரிக்கலாம். அதுபோக மைனாரிடிகளுக்கு இடஒதுக்கீட்டில்உள் ஒதுக்கீடு செய்திருப்பதில் முஸ்லிம் ஓட்டுவங்கியைக் கொஞ்சம் வசப்படுத்தி விடலாம் என்று காங்கிரஸ் போடும் கணக்கு முற்றிலும் தப்புக் கணக்காகவே ஆகி விடுகிற வாய்ப்புத்தான் இப்போதைக்குத் தெளிவாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியை இந்திய அரசியலில் இருந்து வெளியேற்றினால் ஒழிய இந்த தேசத்துக்கு விடிவு இல்லை! வேறெந்தக் கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் வெளிப் படையாக இருக்கிறதா, கிழடு தட்டிப் போன தலைமை இல்லாமல் இருக்கிறதா, வாரிசு, குடும்ப அரசியலுக்கு இடம் கொடுக்காததாக இயங்குகிறதா என்ற கேள்விகள், வடிகட்டும் காரணிகளாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது!

தலைவர்கள் வழிகாட்டுவதற்குத்தான்! நம் தலைமேல் ஏறி மிதிப்பதற்கு அல்ல! மக்கள் குரலை செவி மடுத்துக் கேட்கிறவர்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்! ஓட்டுப் போட்ட ஒருநாளுடன் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது முடிந்து விட்டது, வானளாவிய அதிகாரம் எங்களுக்குத்தான் என்று சவடால் பேசும் எவரையும் நிராகரிக்கும் துணிவு, உரிமை வேண்டும்!

உரிமையும் சுதந்திரமும் இலவசங்களில் கிடைக்காது, தானாகவும் வராது!

எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்? 


எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?


இன்னொரு எமெர்ஜென்சி கொண்டு வருகிற தைரியம் சோனி(யா) காங்கிரசுக்கு இருக்கிறதா?


சென்ற பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, சிபிஐ வெட்கக் கேடான ஒரு விஷயத்தை டில்லி நீதிமன்றம் ஒன்றில் பதிவு செய்தது. 

ஸ்பெக்ட்ரம் ஊழலில்,தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் அம்சங்கள் குறித்து டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்திருந்த புகார் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்பதுதான் அந்த வெட்கக்கேடான வாக்குமூலம். அந்த மாதம் ஐந்தாம் தேதிதான், சிபிஐ விசாரணையில் ஸ்வான் டெலிகாம் தனது உரிமத்தை எடிசலட் டிபி நிறுவனத்துக்குக் கைமாற்றியதில் பாதுகாப்பு அம்சங்கள் புறக்கணிக்கப் பட்டதாக  டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி புகாராகத் தெரிவித்திருந்ததும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை என்று கேட்டிருந்ததற்குத் தான் சிபிஐ இப்படிப் பொறுப்பில்லாமல், அல்லது நழுவுகிற மாதிரிப் பதில் சொல்லியிருந்தது.  

அவர்கள் சொன்ன ஒரே சாக்கு, டாக்டர் சுவாமியின் புகார் அவர்களுக்குத் தரப்படவில்லை  என்பது மட்டும் தான்.

இந்த எடிலசட் டிபி நிறுவனத்தில் மும்பை தாதா (இருப்பு கராச்சி) தாவூத் இப்ராஹீமுக்குப் பங்கு இருக்கிறது, தேசப்பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என்பது டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச் சாட்டின் சாராம்சம். எண்பதாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிஐ தயாரித்திருந்தாலும், முக்கியமான இந்த விஷயம் விசாரணையில் எடுத்துக் கொள்ளப்பட்டதா, யார் யார் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பது இன்று வரை தெளிவு படுத்தப்படாத ஒன்று. 

தாவூத் இப்ராஹீம் என்றாலும் சரி, கலைஞர் தொலைக்காட்சிக்குக் "கடன் கொடுத்த" டிபி ரியாலிடி நிறுவனமானாலும் சரி நிழல் கூட்டாளியாக ஷரத் பவார் இருப்பதாக ஊடகங்கள் திரும்பத் திரும்ப சொல்கின்றன.

ஷரத் பவார் பக்கம் விசாரணையைத் திருப்ப காங்கிரசுக்கு தைரியம் எப்போதுமே வரப்போவதில்லை!தாவூத் இப்ராஹீம், சிவசேனா பால் தாக்கரே என்று நேரெதிரான இரண்டு பிசாசுகளின் மீதுசவாரி செய்யத் தெரிந்த சாமர்த்தியம் உள்ளவரை,காங்கிரஸ் என்ன செய்து விட முடியும்?

ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்தவர்களுக்கு ஒரே ஒரு மணி நேர அவகாசத்தில் வங்கிகள் கிடைத்த லைசன்ஸ் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கடனாக வழங்கின. மொத்தம் பதினோராயிரம் கோடி ரூபாய்!பெரிய பிசினஸ் புள்ளிகள் என்பதையும் தாண்டி, மிகக் குறுகிய கால அவகாசத்தில், ஸ்டேட் வங்கி உட்பட மூன்று வங்கிகள் கடன் வழங்கிய பின்னணி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவே இல்லை.வங்கி நடைமுறைகளின் படியே கடன் வழங்கப்பட்டது என்று விசாரணையை சிபிஐ  ஒரு குட் சர்டிபிகேட் கொடுத்து முடித்துக் கொண்டது.
 
அதேமாதிரி டாட்டாக்களுக்கும் நன்னடத்தை சர்டிபிகேட், நிரா ராடியாவுக்கும் சர்டிபிகேட்!விசாரணை நடத்தத் தெரிகிறதோ, இல்லையோ, சிபிஐக்கு தன்னுடைய எஜமானர்களுக்கு வேணுங்கப் பட்டவர்களுக்கு சர்டிபிகேட் மட்டும் கொடுக்கத் தெரிகிறது!
எஜமானர்களுடைய யோக்கியதை என்ன வாழுகிறதாம்?

இங்கே மற்றும் இங்கே 


தம்பி சுனா சானா உன் மேல எப்ப வேணும்னாலும் செருப்பு விழலாம்... பத்திரமா இருந்துக்கோடா அம்பி....


சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது. அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார். நிருபர்களிடம் அவர் பேசுகையில்...... முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான...

  • 12 people like this.


    • Illamaran Alandur சுப்ரமணிய சுவாமி !
      உன் சூவ மூடு சாமி !

      about an hour ago

    • புகழ் கிருஷ் un velaiye ithuthana un thalai arichukkitte irukkum pola
      ஐ மு கூட்டணிக் குழப்பம், கூட்டணி தர்மம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சாம்பிள்! 
      காங்கிரஸ்காரரான கபில் சிபல் காரியத்துக்காக உளறுகிறவர்! உபிக்கள், அதாவது ளறுவதற்கென்றே  பிறந்தவர்கள்  எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஒரு சின்ன சாம்பிள்!

ஊர்வாயை சுத்தம் செய்ய துடிக்கும்போது, தங்கள் வாயையும் சுத்தம் செய்து கொள்ளவேண்டுமே! க'னாக்கள் தயாரா?

தொடர்புள்ள இன்னொரு செய்தி இங்கே 
 

காரணங்கள் ஜோடனையில் நியாயமாகத் தான் தோன்றும் பின்னால் உள்ள கோரமுகம்....?  
 
தினமணி நாளிதழின் நேற்றைய தலையங்கம்: 
தனியார்மயம் தரும் சீதனம்!



திரிகளை மட்டுமன்றி, நாட்டில் நிலவும் உட்பகை குறித்தும் உளவு பார்ப்பது ஏற்கக்கூடியதாகவே இருந்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு மனிதனையும் ஒற்றுப்பார்த்து, அவர்தம் அந்தரங்க விவகாரங்களையும் தெரிந்துகொள்வது சரியா?, இது ஒரு அரசின், குறிப்பாக மக்களாட்சியின் இறையாண்மைக்குப் பொருந்துமா? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வியை எழுப்பி ருப்பவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. 

ண்டனில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அங்கு வந்திருந்த மக்களிடம், "நீங்கள் பயன்படுத்தும் செல்போனும் உளவு பார்க்க உதவி செய்கிறது. மக்கள் அனைவரையும் அரசாங்கம் உளவு பார்க்கிறது" என்று கூறியிருக்கிறார். இத்தகைய உளவு பார்க்க உதவும் தகவல் தொழில்நுட்பக் கருவிகளை மேலை நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மிக அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருக்கின்றன. 

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபி உள்நாட்டு மக்களில் சிலரும் இங்கிலாந்து சென்று வாழும் லிபிய மக்களும் தனக்கு எதிராக இருப்பதை உளவுத் தகவல் தொழில்நுட்பத்தினால் அறிந்து, அவர்களைத் தீர்த்துக் கட்டியிருக்கிறார். மேலைநாட்டுத் தகவல் தொழில்நுட்பக் கருவித் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உளவுக் கருவிகளை லிபியா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு விற்றுள்ளன. இந்திய அரசின் சிபிஐ அனுப்பும் மின்கடிதங்கள் அனைத்தையும் சீனா படித்துக் கொண்டிருக்கிறது என்று அசாஞ்ச் சொல்லும் போதும்கூட, ஒரு நாடு ஒரு அண்டை நாட்டின் மீது இப்படித்தான் தன் கவனத்தைச் செலுத்தும் என்கின்ற வகையில் புரிந்துகொள்ள முடிகிறது. 

னால், மக்களாட்சி நடைபெறும் நாட்டில்கூட, அனைத்து மக்களையும் உளவு பார்க்க முடியும், செல்போனும் இணைய தளமும் அதை சாத்தியம் ஆக்குகிறது என்பதை அறியும்போது, கொஞ்சம் ஆச்சரியத்தையும் - கூடுதலாக அச்சத்தையும் உண்டாக்குகின்றது. 

தீவிரவாதத்தைக் கண்காணித்தல், நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் எப்படி உளவு பார்க்கின்றன, இவை பொருளாதார வர்த்தகப் பயன்பாட்டுக்கு எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது வளர்ச்சியால் ஏற்படும் தீமைகள் என்று ஒதுக்கிவிடக்கூடியவை அல்ல. இத்தகைய உளவு பார்க்கும் தகவல்தொழில்நுட்ப வசதியால் தனிமனித அந்தரங்கம் என்பதே இல்லாமல் ஆகிவிட்டது.இந்த உளவுத் தொழில்நுட்பம் வெறுமனே அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படுவதில்லை. இவை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் கிடைப்பதில் தடையில்லாமல் கிடைக்கின்றன. 

ங்களுக்கு இணையாகப் போட்டியில் உள்ள அல்லது வளர்ந்துவரும் மற்றொரு தொழில் நிறுவனத்தைக் கண்காணிக்க இதனைப் பயன்படுத்த முடியும். ஓர் அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை வேவு பார்க்கப் பயன்படுத்தலாம். கணினி மூலம் நடைபெறும் அனைத்து வர்த்தகப் பரிமாற்றங்கள், வணிகச் செயல்பாடுகளிலும் இத்தகைய உளவுத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்படலாம். 

க, ஒன்று மட்டும் உறுதியாக்கப் பட்டுள்ளது. மின்அஞ்சல், செல்போன் இரண்டையும் எவராலும் உட்புகுந்து கண்காணிக்க முடியும். செல்போனும் இணையதளமும் பாதுகாப்பான நடைமுறைகள் அல்ல என்பதைத்தான் இந்தத் தொழில்நுட்பம் நமக்குப் புரிய வைத்துள்ளது. ஆனால், இவை இல்லாமல் இனி எந்தவொரு தனிமனிதனாலும் செயல்படவே முடியாது என்கிற அளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தின் பொன்விலங்கை வேண்டுமென்றே மனித இனம் பூட்டிக்கொண்டாகிவிட்டது. 

சாதாரண வங்கிக் கணக்கை செயலாக்கவும், ரயில் பயணத்தை முன்பதிவு செய்யவும்கூட நமக்கு இணையதளம் அவசியமாகிவிட்டது. இனி பின்னோக்கிச் செல்லுதல் இயலாது.இணைய தளத்தில் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர் அனுப்பும் மின்அஞ்சலை ஆர்வத்தால் திறந்தாலே போதும், அதில் நமது தகவல்கள் அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ளும் சைத்தான் மென்பொருள்கள் உள்ளன என்று சொன்னாலும் அதை உள் வாங்கிக் கொள்ள ஆளில்லை. ஃபேஸ்புக் பகுதியில் யார் வேண்டுமானாலும் நுழைய முடியும் என்றாலும், அனைத்துத் தகவல்களையும் அதில் கொட்டிவிடாத ஆட்கள் மிகக் குறைவு. 

ந்தத் தொழில்நுட்பம் இல்லாமல் இருக்க முடியாது, வாழவே முடியாது என்கின்ற நிலைமை உருவாக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், இத்தகைய கண்காணிப்பு மற்றும் உளவுத் தொழில்நுட்பத்தை யார் விற்கலாம், யார் யாரெல்லாம் வாங்கிப் பயன்படுத்தலாம், பயன்படுத்தப்படுவதில் உள்ள அளவுகள், எல்லைகள் என்ன என்பனவற்றை வரையறை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இதற்கு மேலதிகமான தேவை இருக்கிறது. ஏனென்றால், இங்கே தகவல்தொழில் நுட்பத்தில் அதிகளவில் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முதலீடு செய்துள்ளன. 

ந்நிறுவனங்கள் தாங்கள் சேகரிக்கும் உளவுத் தகவல்களை இந்திய அரசுக்கு வழங்கினால் பரவாயில்லை. வேறு நாடுகளுக்கோ அல்லது தீவிரவாத அமைப்புக்கோ கிடைக்கச் செய்தால் எத்தனை மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.தீவிரவாதம் தலை விரித்து ஆடும் இன்றைய சூழ்நிலையில் இத்தகைய தொழில் நுட்பத்தை தீவிரவாதிகள் வாங்கி, அரசையும் மக்களையும் கண்காணிப்பதும் உளவு பார்ப்பதற்குமான சாத்தியங்கள் இருப்பதை மறுக்க முடியாது. 

கவல் தொழில்நுட்பத் துறை தனியார்மயமாக்கப்பட்டதன் விளைவு 2ஜி போன்ற மெகா ஊழல் மட்டுமல்ல, தேசப்பாதுகாப்புக்கும் தனிமனித சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தலும் கூட என்பதை இப்போதாவது நாம் புரிந்து கொண்டால் சரி!

அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தைந்தாவது நினைவு தினம்!.


இன்னொரு எமெர்ஜென்சி கொண்டு வருகிற தைரியம் சோனி(யா) காங்கிரசுக்கு இல்லை என்பது உண்மைதான்! 
ஆனால், வாலறுந்த நரி மாதிரியே தன்னுடைய கையாலாகாத் தனத்தை மூடி மறைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் கிறுக்கு மாய்க்கான்கள் நிறைந்த கட்சி அது என்பதை மறந்துவிட வேண்டாம்!
--------------------------------------------------------------------------------------------------------------
எது பொருளோ அதைப் புறக்கணித்தும், எதைப் புறக்கணிக்க வேண்டுமோ அதைப் பொருட் படுத்தியும் இன்னும் எத்தனைநாள் சீரழிவைப் பொறுத்திருப்போம்?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!

இன்றைய செய்திகளும் நாளைய அரசியல் போக்கும்!


 தீதிக்கு தில்  கொஞ்சம் அதிகம் தான்..!
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்துக் கொந்தளித்த மம்தா பானெர்ஜியை, ஐ மு கூட்டணிக் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, கொஞ்சம் சமாதானப்படுத்தி விட்டதாகவே இன்றைய தகவல்கள் சொல்கின்றன. தீதி, கொந்தளிப்பை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்! இன்னொருதரம் பெட்ரோல், டீசல் விலையேற்றம் செய்யப்பட்டால் ஆதரவை நிச்சயமாக விலக்கிக் கொண்டுவிடுவாராம்!

மு கூட்டணிக் குழப்பத்தின் இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பதிமூன்றுதரத்துக்கும் மேல் விலையை உயர்த்தியாயிற்று.எத்தைத்தின்றால் பித்தம் தெளியுமென்று எவர் சொன்னாலும் கேட்காமல், விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துவதற்கு வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதுதான் ஒரே வழி என்று அதையும் பலமுறை உயர்த்தியும் யிற்று! மமதாவுக்கு அப்போதெல்லாம் உறைக்கவில்லை! இப்போது உறைத்திருப்பதும் கூட வேறு உள்மாநில அரசியல் கெடுபிடிகளால்தான் என்பதை அரசியல் தெரியாத பச்சைக் குழந்தை கூட சொல்லி விடும்!தீதி, இன்னொருதரம் விலை ஏற்றும்போது இப்போது சொன்னதை நினைவில் வைத்திருப்பாரா, அல்லது ப.சிதம்பரம் மாதிரி செலக்டிவ் ஞாபக மறதி என்று கதைத்துவிட்டுப் போய்விடுவாரா என்பது இன்னும் கொஞ்ச நாட்களிலேயே தெரிந்துவிடும்! (அடுத்த விலை உயர்வு வந்துவிடும்)
அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டாலும், உன்னை விட மாட்டேன்!
 
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி திரு ஒ பி சைனி ப. சிதம்பரத்தையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு குற்ற வாளியாகச் சேர்க்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில், ப.சிதம்பரம்-ஆ.ராசா இருவருக்கும்  இடையிலான கடிதப் போக்குவரத்து நகல்களை சுப்பிரமணியன் சுவாமிக்கு விரைவில் கொடுக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து ருக்கிறார். இதன் மீது அடுத்த விசாரணை டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வருகிறது. நித்ய கண்டம் -பூர்ணாயுசு என்று சொல்வார்களே, அது மாதிரி!

ப்போது எங்கிருந்து என்ன வருமோ, என்ன செய்யுமோ என்று வாய் அகலம் ரொம்பவே ஜாஸ்தியாகத் திறந்து பேசிக் கொண்டு இருந்தவர், இப்போது வாயை அதிகம் திறக்காமலேயே பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! குச்சனூர் சனி பகவானைக் கும்பிட்டால் எல்லாம் தீர்ந்து விடுமா?

லைவிக்குத்தான் ஏதோ நோய் என்றார்கள்!ஆனால், காங்கிரஸ் கட்சியே கூடப் புற்று நோய் வந்து இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டிருக்கிற கேஸ் தான் என்று தான் நடப்பு நிகழ்வுகள் சுட்டுகின்றன. இதுவரை விசுவாசமான முகமூடியாக, டம்மிப் பீசாக இருந்த மன் மோகன்  சிங் இந்த வருடக் கடைசி வரையாவது தாக்குப் பிடிப்பாரா என்பதே கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கிறது.அடுத்த டம்மிப் பீசாக, மீரா குமார் பெயர் அடிபடுகிறது!ராவுல் விஞ்சியை அரியணை ஏற்றத் துடிக்கும் சோனியாவுக்கு வேறு ஆப்ஷன்கள் இல்லை போல! காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ராவுல் விஞ்சி நியமிக்கப்படலாம் என்றும், வதந்திகள்! கவனியுங்கள், இதெல்லாம் வதந்திகள் மட்டுமே!

ராஜீவ் காண்டி காலம் வரையிலாவது  நேரு குடும்பப் பெருங்காய வாசனையாவது இருந்தது. இப்போது அதுவும் காணாமல் போய்க் கொண்டே இருக்கிறது. வலுவான அடித்தளம் இல்லாமல், ஒரு கும்பலை மட்டும் வைத்துக் கொண்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பது எப்போது சூறைக் காற்றில் குப்பை மாதிரி அடித்துக் கொண்டு போகுமென்று எவராலும் ஊகிக்க முடியாத விசித்திரம்!

நேரு குடும்பம் அரசியலில் இத்தனை நாள் தாக்குப் பிடித்ததே ஒரு விபத்து என்று தான் சொல்ல வேண்டும்!

லைஞரிடமிருந்த உளி, கதைவசனம், உடன்பிறப்புக்குக் கடிதம், கலைத்திறமை எல்லாமே போய்விட்டதா என்ன? அவரும் கூட்டணி தர்மத்தைப் பற்றி நேற்றைக்குப் பேசி இருக்கிறார்! செய்தியைப் பாருங்கள்!

DMK Monday ruled out quitting the Congress-led UPA government on petrol price-hike issue, saying it has always followed the "coalition dharma." "We had expressed our views that the hike would cause great hardship to people... we will follow the coalition dharma as we have been doing all along," party chief M Karunanidhi told reporters here.He refused to comment on the Centre's assertion that it would not reduce the hike and BJP chief Nitin Gadkari's condemnation of the price revision.

காங்கிரசோ திமுகவை வேண்டாத சுமையாகத்தான் இன்னமும் கழற்றிவிடத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.எப்படிக் கழுத்தறுத்தாலும் போகமாட்டேன் என்று ஒட்டிக் கொண்டு இருக்கிற சுயமரியாதை மிகுந்த ஒரு கட்சியை வேறென்ன தான் செய்வது?

மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில், மிகவும் மரியாதைக்கு ரிய தலைவராகவும், கூட்டாளியாகவும் இருந்த கருணாநிதியின் இன்றைய நிலைமை, கனிமொழிக்காக ஜாமீன் கேட்பதோடு குறுகிக் கூன் விழுந்துபோய் விட்டது என்பது காலத்தின் இன்னொரு வேடிக்கையான கட்டாயம்!

வெர்ஷன் இரண்டு ஓபனாக ஆரம்பித்த தருணம் தாங்கள் கேட்ட இலாகாக்கள் தரவில்லை என்றால் வெளியே இருந்து ஆதரவு என்று அறிவித்து விட்டு சென்னை திரும்பிய வேகத்திலேயே ஓடிவந்து சமாதானம் செய்தார்களே, அதெல்லாம் ஆறிப்போன பழங்கதை மட்டும் தானா? கனிமொழிக்கு டில்லி உயர்நீதி மன்றத்திலாவது ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறார் என்று அந்த செய்தி மேலும் சொல்கிறது.

ருணாநிதி வயதில் பாதிகூட இல்லாத  மம்தா பானெர்ஜிக்கு சாமர்த்தியம், தெனாவட்டு, தில் நிறையவே இருக்கிறது என்பதை அம்மணி இந்த செய்தியில் நிரூபித்திருக்கிறார்! இந்த மாதிரி அரசியல் வியாதிகளைத் தாங்கிக் கொள்கிற தில் நம்மிடம் இருக்கிறதா? ஒரு முதலமைச்சர் செய்கிற  வேலையா இது!!

ஜெயலலிதாவின் அராஜகத்தையும் மீறி திமுகவுக்கு 30 சதவீத ஓட்டுகள் கிடைத்தது- என்று மு.க. ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்! கட்சித் தலைவரையும் மீறி, மனைவி, துணைவி குடும்பத்து வாரிசுகள், மருமகன்கள் குடும்பம் எல்லோரும் சேர்ந்து செய்தவைகளைத் தெரிந்து கொண்ட பிறகும் கூட திமுகவுக்கு இந்த அளவு ஓட்டு விழுந்திருக்கிறதே என்றல்லவா ஆச்சரியப் பட்டிருக்கவேண்டும்!

ஸ்டாலின் இப்படித் தலைகீழாகப் புரிந்து கொண்டு காமெடி செய்து கொண்டிருக்கிறார் என்றால்,நடந்து முடிந்ததேர்தல்களில் செல்லாக் காசாகி நிற்பது கூடத் தெரியாமல் பாமக, விசி, சிபிஎம்  போன்ற கட்சிகளோ, தங்களுடைய அஸ்திவாரமே கரைந்தது கூடத் தெரியாமல் சாணக்கியர்கள் மாதிரி அடுத்தவர்களுக்கு அரசியல் உபதேசத்தை அள்ளி வீசிக் கொண்டிருப்பது இன்னொரு வேடிக்கை!

நாடும் நடப்பும்! எத்தனை கூத்துக்கள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்கிறீர்களா?  

இந்தக் கூத்தாடிகளிடமிருந்து இந்த தேசத்தைக் காப்பாற்ற என்ன செய்வதாக உத்தேசம்?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!