நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?  எதற்காகப் பிறந்தேன்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்விகள் அவ்வப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் வந்துபோகும். மரணபயம் அல்லது மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அடிப்படையாக இருப்பதையும்   கொஞ்சம் கூர்ந்து கவனித்துப்  பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய சிந்தனையோட்டம் மனிதகுலத்தின் ஆரம்பநாட்களில் இருந்தே  இருந்துவருவதையும் இந்தப்பக்கங்களில் அவ்வப்போது பேசி வந்திருக்கிறோம். முந்தைய பதிவில் சத்தியவான் -சாவித்திரி கதையை வைத்து ஸ்ரீ அரவிந்தர்  சாவித்ரி என்ற மகாகாவியத்தை எழுதியதையும் பார்த்திருக்கிறோம். 


மேலே மதுரை மீனாக்ஷி கோவில் தெற்கு கோபுரம் எதிரே இருக்கும் சொக்கப்ப நாயக்கன் கோவில் தெருவில் இருந்த உறவினர் வீட்டில்தான் பால ரமணனுக்கு மரண அனுபவமும் அதைத் தொடர்ந்து நான் யார்  என்ற கேள்வியும்  அதைத் தொடர்ந்த தேடலில் திருவண்ணாமலைக்குப் புறப்படுகிற நிகழ்வுமாக ......


வீட்டை விட்டு வெளியேறிய  தருணத்தில் ஸ்ரீ ரமணர் எழுதி  வைத்து விட்டுப்போன கடிதம் இன்றைக்கு ஸ்ரீ ரமண மந்திரமாக இருக்கும் அந்த வீட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது  நான் என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது  இந்தக் கடிதத்தின் முடிவில் இது என்று ஆகிப்போன முதிர்ச்சி,பக்குவத்தை பகவான் ஸ்ரீ ரமணரின் சரிதத்தில் பார்க்க முடியும்.
மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப்பக்கங்கள் உதவியாக இருக்கும் 

ரமணருடைய பாதையை, 'மலைப் பாதைஎன்றே வைத்துக் கொள்ளலாம்.  ஆனால்இந்த மலைப்பாதை,எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ?  இப்படி ஒரு பாதை இருப்பது தெரிந்தாலும்எல்லோருக்கும் அதில் ஈடுபடும் மனமும்வாய்ப்பும் வாய்த்து விடாது என்பதே

"ஒரு தரம் கபாலி சாஸ்திரியாரிடம் கேட்டேன், "உங்களை வணங்கும் போது, உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கிற அதே மாதிரி வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் மூவருடைய ஆசியும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா?!"

"ஆமாம்உனக்குக் கிடைக்கும்என்று தனக்கே உரித்தான பாணியில் சாஸ்திரியார் பதிலிறுத்தார்.

இந்தப் பகுதியில் படித்த 'சின்ன நாயனா'வின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப என்னைச்சுற்றி வந்து கொண்டே இருந்ததுஇந்தப் புண்ணிய புருஷர்கள்ஸ்தூல சரீரத்தில் இருந்த காலத்தில்நான் பிறக்கவில்லைநேரடி தரிசனம் பெறுகிற வாய்ப்பும் எனக்கு இருந்ததில்லைஎழுதியவர் எத்தனைபாக்கியம் செய்திருமுடக்கி க்க வேணும் என்கிற நினைப்பிலேயே, எழுத உத்தேசித்திருந்தது தள்ளிப் போனது.கபாலி சாஸ்திரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று மறுபடி அமரும் போதுசங்கரநாராயணன் வார்த்தைகளில் பொதிந்திருந்த திரிவேணி சங்கமத்தைக் கண்டேன். இப்படி மனம் கசிந்து எழுதியது இங்கே 

இப்போது இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா?

கடந்த இரண்டு வருடங்களாகவே உடல் உபாதைகள்  என்னை முடக்கி வைத்திருப்பதோடு மரணத்தை வலிந்து வரவேற்கிற மனநிலையைத்தூண்டி விட்டுக் கொண்டே இருப்பதை என்னதான் அசட்டை செய்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தாலும் முற்றிலும் தவிர்க்க முடியவில்லை.

अप्ना तो कोई नहीं, हम काहे को नांहि ।
पार पहूंची नाव जब, मिलि सब बिछुडे. जांहि ॥


தன்னவரென்று எவரும் ஏது, தானும் பிறர்க்கு உறவேது
முன்னம் சேர்ந்தவர் பிரிவரே, படகு கரைதொடும் போது 


மாற்று :

என்ன வரென்று எவருமில்லை, யானும் பிறர்க்கு றவில்லை
பரிசல் கரைசேர்ந்த பின்னே, பயணியர் போவார் தம் வழியே


வாழ்க்கைப் பயணம் ஏதேதோ காரணங்களால் திசை மாறிக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு இலக்கு வந்ததும் ஒரு சிலர் விட்டு போகிறார்கள் அல்லது நாம் விட்டுச் செல்கிறோம். புது உறவுகள் அல்லது நண்பர்கள் சில காலத்திற்கு சேர்கின்றனர். இவையெல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மரணம் என்கிற இலக்கை அடைந்தவுடன் எல்லாமே அர்த்தமற்ற உறவுகளாகி விடுகிறது. அதை ராமகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார்.

“கடலில் மிதக்கும் சில கட்டைகள் ஏதோ ஒரு அலையால் நெருங்கி வருகின்றன. அடுத்த ஒரு பெரும் அலை வந்து பிரிக்கும் வரை அருகருகே மிதக்கின்றன. உலகின் உறவுகள் தந்தை-தாய், கணவன் -மனைவி, மகன்-மகள் என்ற உறவுகளும் இப்படிப் பட்டவைதான். எதுவும் உண்மையானது கிடையாது. உண்மையான உறவு என்று ஒன்று உண்டானால் அது இறைவனுடைய திருவடிகள் மட்டுமே” என்று கபீரன்பன் இந்தப் பக்கங்களில்அழுத்தம்திருத்தமாகச்சொல்கிறார்.

பொதுவாக என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்துக் கொள்வதோ கொண்டாடுவதோ வழக்கமே இல்லை என்றாலும் இன்றுடன் 61 வயது நிறைந்து நாளை பிறந்தநாள் (20 மார்ச்) என்று நினைவு  வரும்போது நான் ஏன் பிறந்தேன், எதற்காகப் பிறந்தேன், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எதற்கும் விடை காணமுடியாமல், கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தவற  விட்டுவிட்டேனோ என்ற  தவிப்பு மட்டும் உருக்கிக் கொண்டிருக்கிறது.


அண்டினபேரை நழுவவிடாதவன் அச்சுதன் என்னை மட்டும் விடுவானோ?

அவன் கைவிடமாட்டான் என்கிற நம்பிக்கையோடு ......

நாளை புதிதாய்ப் பிறக்கிறேன்!

காரடையான் நோன்பு! ஒளி பொருந்திய பாதை!

இன்று காரடையான் நோன்பு!   

உருகாத வெண்ணையும்ஓரடையும் நான் தருவேன் என்று சொல்லிப் பெண்கள், இனிப்பு அடை , கொழுக்கட்டை, வெண்ணெய் முதலானவற்றைப் படையலிட்டு, தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்ப் பிரார்த்தனை செய்து கொள்ளும் நாள். ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிராமல், ஆணும் பெண்ணும் சேர்ந்தே வாழ வேண்டியது தான் வாழ்க்கைஎன்பதைக் கொஞ்சம் நினைவு படுத்துகிற நாளும் கூட!

இந்த காரடையான் நோன்பு என்பது தமிழ் நாட்டிலும்
, கர்வா சௌத் என்கிற பெயரில் வடக்கிலும்பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்க வேண்டும், கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மேற்கொள்கிற விரதம் தான் இது.  

கதையாகச் சொல்லி, அதன் உட்பொருளைப் புரிந்து கொள்வதற்காகவே அதை ஒரு சடங்காகவும், விரதமாகவும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழி வழியாகத் தொடருகிற மரபு. காலப் போக்கில், கதைகள் அங்கே அங்கே கொஞ்சம் திரிந்து, வெறும் சடங்காக மட்டுமே குறுகிப் போய் நிற்கிறது.

மாசியும் பங்குனியும் சந்திக்கும் வேளையில்அதாவது மாசி மாதம் முடிவடைகிற நேரத்திற்கும்,பங்குனி மாதம் பிறக்கும் நேரத்திற்கும் இடைப்பட்ட வேளையில்திருமணமான பெண்கள் விரதம் இருந்துகார் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு அடையும்வெண்ணையும் நிவேதனம் செய்துநோன்புச் சரட்டினைக் கட்டிக்கொள்கின்றனர்சரடைக் கட்டிக்கொள்ளும் போது பிரார்த்தனையாக'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன்ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்வது மரபு.

அப்புறம், காலப்போக்கில் அங்கே அங்கே கொஞ்சம் இடைச் செருகல்கள் , இது காமாக்ஷியை நினைத்துச் செய்யப் படுவது...அப்படி இப்படி என்று localise பண்ணுவதும், பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கிற ஒரு தரப்பு இதெல்லாம் வெறும் மூடப் பழக்கங்கள், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக, இட்டுக் கட்டிய கட்டுக் கதை என்று கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்ட் போல சொல்லிக் கொண்டிருப்பதுமாகச் சுருங்கிப் போயிருக்கிறது.


" மாசிச் சரடு பாசி படரும்என்பதற்கேற்பபுதியமாங்கல்யச் சரடை அன்றைய தினம் திருமணமான பெண்கள் அணிந்து கொள்வதும்கன்னிப் பெண்கள் தங்கள் மனதிற்கேற்ற மணவாளன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதும் நம்முடைய மரபு.

மாங்கல்ய பலம் வேண்டிப் பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்திற்குப் பின்னணியாக ,மஹாபாரதத்தில் வரும் சத்தியவான் சாவித்திரி கதை இருக்கிறதுசாவித்திரி என்றவுடனேயே எமனிடமிருந்து கணவனைப் போராடி மீட்ட பெண் என்ற அளவுக்காவது நம்மில் பலருக்கு அந்தக் கதை கொஞ்சம் தெரிந்திருக்கும்.

மத்ரா தேசத்தின் அரசன் அஸ்வபதி அவனது ஒரே மகள் சாவித்திரிதிருமண வயது நெருங்கியதும் தகுந்த மணவாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற சுதந்திரத்தை மகளுக்கு வழங்குகிறார் தந்தை.மகளும்தனக்குப் பொருத்தமான மணாளனைத் தேடி வருகையில்அழகிய வாலிபன் ஒருவனைக் காண்கிறாள்அவன்சத்தியவானுடைய பண்பினால் கவரப்படும் சாவித்ரியும்சாவித்ரியின் அன்பினால் ஈர்க்கப்பட்ட சத்தியவானும் ஒருவரை ஒருவர் யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

சால்வ தேசத்தின் அரசன் த்யுமத்சேனன் உறவினர்களுடைய சதியால் அரசிழந்துபார்வையும் இழந்துதன்னுடைய மனைவி மற்றும் ஒரே மகனான சத்தியவானுடன்கானகத்தில் வசித்து வருகிறார் என்பதை சாவித்ரி அறிந்து கொள்கிறாள்.

தந்தையிடம் திரும்பும் சாவித்திரி சத்தியவான் தான் தன் கணவனாக வரிக்கப் பட்டவன் என்பதைத் தெரிவிக்கிறாள்விசாரிக்கும் போதுசத்தியவானுடைய ஆயுள் இன்னும் ஒரு வருட காலம் தான் என்பது தெரிய வருகிறதுசாவித்ரியின் தாய் கலங்குகிறாள்மகளை முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள்ஆனால்சாவித்திரிசத்தியவானைத் தவிர வேறொருவரைக் கணவனாகக் கனவிலும் கூட ஏற்க முடியாது என்று உறுதியாக இருக்கிறாள்.

சாவித்திரி விருப்பப் படியே அவளுக்கும் சத்தியவானுக்கும் திருமணம் நடக்கிறதுகணவனோடு கானகத்தில் சந்தோஷமாக வாழ்கிறாள்அந்தக் குறிப்பிட்ட தருணமும் நெருங்குகிறதுஆம்ஒரு வருடம் நிறைகிறதுகணவனும் மனைவியுமாககானகத்தில் கனிகிழங்குகளை சேகரிக்கப் போகையில்கூற்றுவன் சத்தியவானுடைய உயிரைப் பறித்துச் செல்கிறான்.

சாவித்திரி மனம் கலங்காமல் கூற்றுவனைப் பின் தொடர்கிறாள் உனது நாள் இன்னமும் இருக்கிறது,திரும்பிப் போய் விடு என்று கூற்றுவன் நயமாகவும்பயமாகவும் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல்தன்னுடைய கணவனுடைய உயிரை விட்டுப் பிரிய மாட்டேன்தொடர்ந்தே வருவேன் என்கிறாள். 

இடையில்பல உலகங்களைக் கடந்தும் சாவித்ரி உறுதியாக இருப்பதைப் பார்க்கும் கூற்றுவன் பிடிவாதத்தை விட்டு விடுநீ வேண்டிய வரங்களைத் தருகிறேன்திரும்பப் போய் விடு என்கிறான்.என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா என்கிறாள் சாவித்திரிஎதுவானாலும் கேள்தருகிறேன் என்கிறான் கூற்றுவன்.

வரமோவாக்கோ எதுவானாலும்தருகிறேன் என்று சொன்னால் அதை நிறைவேற்றுகிற தெய்வங்களும்மனிதர்களும்ஏன் மிருகங்களும் கூட வாழ்ந்த புண்ணிய பூமி இது. என்ன சாபத்தினாலோவாக்குறுதி என்பது மீறப் படுவதற்காகவேஏமாற்றுவதற்காகவே என்று செயல்படும் அரசியல் கட்சிகள், தலைவர்கள்,  கொஞ்சம் கூடப் பொறுப்போ, அக்கறையோ இல்லாத அதிகார வர்க்கத்தையும், எங்கே என்ன நடந்தால் நமக்கென்ன என்று விட்டேற்றியாக இருந்து விட்டுப் போய்விடுகிற மக்களையும்  கொண்டதாகச் சிறுமைப் பட்டுப் போயிருக்கிறது இன்று.

தன் கணவனோடு கூடி நூறு வீரமும் கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளையே வரமாகத் தரும் படி சாவித்திரி வேண்டுகிறாள்.

' தந்தேன்' என்றான் எமன்

பாசக்கயிற்றில் சிக்குண்டிருந்த சத்தியவானுடைய உயிர் மீண்டும் அவனது உடலில் புகுந்தது .சாவித்ரிக்கு அளிக்கப்பட்ட வரம்மாமனாருடைய பார்வையை மீட்டுக் கொடுக்கிறதுஇழந்த ராஜ்ஜியம் மீண்டு வருகிறது என்று இந்தக் கதை முடிகிறது.

மஹாபாரதத்தில்போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர்இந்தக் கதைவேதங்களின் திரண்ட உட்பொருளைசிருஷ்டியின் ரகசியத்தை ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார். அதன் விளைவாக, சாவித்திரி மகாகாவியம் சற்றேறக் குறைய 24000 வரிகளில்  உருவானது. 

சாவித்திரி மகா காவியத்தை இணையத்தில் படிக்க இங்கே!

சவித்ரு என்பது சூரியனின் பன்னிரு திருநாமங்களுள் ஒன்று சாவித்திரிசூரியனின் மகளாகவே கருதப்படுகிறாள்பன்னிரண்டே மாதங்களில்கணவனது ஆயுள் முடிந்து போகும் என்பது தெரிந்திருந்தும்மனம் கலங்காது உறுதியுடன் மரணத்தை எதிர்த்து வெற்றி கொள்கிறாள்அன்பே அவளது பலமாக இருப்பதைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் காண முடியும்.

ஸ்ரீ அரவிந்தர் 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும்,யோக சாதனையாகவும் ஆனதுஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரிஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது1930 களில் "சாவித்திரிஒரு கதையும் அதன் தரிசனமும் என்று வெளியானது 
தொடர்ந்து மெருகேறிSAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

"நான் சாவித்ரியை மனதளவில் துவங்கினேன்ஒவ்வொரு முறையும் நான் மேல் நிலையை அடையும்போது அந்த நிலையிலிருந்து மறுபடியும் எழுதினேன்உண்மையில் நான் சாவித்ரியை ஒரு செய்யுள் என்ற உணர்வில் எழுதி முடிக்க விரும்பவில்லைஆனால்ஒரு செய்யுளை ஒருவரின் யோகநிலையிலிருந்து எப்படியெழுதி அதை ஒரு சிறந்த சிருஷ்டியாக்க முடியும் என்ற மனதுடன் செயல்பட்டேன்."

என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுத ஆரம்பித்த அனுவவத்தை விவரிக்கிறார்ஏறத்தாழ நாற்பது ஆண்டு கால யோக சாதனையின் வெளியீடாக, "சாவித்திரிஎன்னும் பெரும் காவியம் இருக்கிறதுஇது வெறும் காவியம் என்றோஎழுதியவரின் அனுபவக் குறிப்பு என்கிற அளவோடோகுறுகி நின்று விடாமல்அதை படிக்கிற நமக்கும் ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவத்தை அளிக்கிற மந்திர சித்தியையும் கொண்டிருக்கிறது.

ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட கவிஞர்கள் கூட, இவ்வளவு விரிவாகக் கவிதை இயற்றியதில்லை! மானுடம் சந்தித்த தத்துவார்த்தக் கேள்விகள் அத்தனையையும் ஒரு சேரத் திரட்டி விடை காண முயற்சித்த நூல் எதுவுமில்லை.  வெறும் புனைவு, ஊகம் என்பதில் இருந்து விலகி, இங்கே சாவித்ரி மகாகாவியம், ஸ்ரீ அரவிந்தரின் தவத்தில் விளைந்த அனுபவங்களின் திரட்டு என்றே சொல்லக் கூடிய அளவில் நம் முன்னால் விரிந்து கிடக்கிறது.  ஆன்மீக அனுபவத்தைப் பெற விரும்பும் எவருக்கும், உதவுகிற படிக்கட்டுக்களாக சாவித்திரி மகா காவியம் இருக்கிறது.


On Savitri 

If you are depressed, if you feel miserable, if you do not succeed in what you do or else if what happens is always the contrary of what you expect, however you try - if it has come to such a pass that you lose your temper, life becomes disgusting and you are unhappy, then immediately take Savitri and, after a moment's concentration, open it at any page and read. You will see that all your misery disappears like smoke. And you will have the strength to overcome the worst sorrows; you will no longer feel that which was tormenting you. Instead you will feel a strange happiness, a reversal of consciousness along with the energy and force to conquer everything, as though there were nothing impossible. And you will feel this inexhaustible joy that purifies all. 
  
Read just a few lines and that is enough to establish the contact with your inmost being. Such is the extraordinary power of Savitri.
Or else, after having read some lines, if you concentrate deeply, then too you will find the solution to what was tormenting you. You have only to open Savitri just at random without thinking and you will have the answer to your problems. Do this with faith and simplicity, the result is certain.”

The Mother
5-11-1967

 
சாவித்திரி காவியத்தைப் படிப்பதே ஒரு உன்னதமான அனுபவம் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை! ஸ்ரீ அரவிந்தர் அரும்பாடு பட்டு இயற்றிய தவம், யோக சாதனைகளின் அனுபவம் சாவித்திரி காவியத்தின் ஒவ்வொரு வரியிலும் முழுமையாக நிறைந்திருக்கிறது. படிக்க ஆரம்பிக்கும்போது, நம்மிடம் மூடிக் கிடக்கும் கதவுகள் திறப்பதையும், அதுவரை விடைதெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை வரிசையாகக் கிடைப்பதையும், மனச்சோர்வும் சலிப்பும் நிறைந்து நிராதரவாக நிற்கிற தருணங்களில், உற்ற துணையாகவும் பேராதரவாகவும் இருந்து வழி நடத்துவதையும், அனுபவத்தில் தான் கண்டுகொள்ள முடியும். அப்படி ஸ்ரீ அரவிந்தரது யோகத்தைத் துணைகொண்டு நடக்கும் பாதையை ஒளி பொருந்திய பாதை (Sunlit Path) என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

காரடையான் நோன்பு என்பது, வெறும் சடங்கு அல்ல! மரணமில்லாப் பெருவாழ்வு என்று திருவருட்ப்ரகாச வள்ளலார் பெருமான் சொல்கிறாரே, அந்த மரணமில்லாப் பெருவாழ்வின் திறவுகோலும் கூட! வெறும் சடங்கு என்ற அளவோடு குறுகி நின்றுவிடாமல், அதன் உள்ளே பொதிந்துகிடக்கும் நுட்பத்தை அறிந்துகொள்ளத் தயாராக இருக்கும் எவருக்கும் ஒளிபொருந்திய பாதையாக முன்னே இருக்கிறது. 

பயணம் செல்லத் தயார் தானே!


**இது ஒரு மீள்பதிவு. கொஞ்சம் மாற்றி எழுதப்பட்டது.

மண்டேன்னா ஒண்ணு! கொஞ்சம் கவிதை நிறைய யோசனை!

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 
எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை 


கண்ணதாசன் மாதிரி ஊக்கமாய்ச்சொல்ல வார்த்தைகள் இல்லைதான்! ஆனாலும் உணர்வுகள் பீறிட்டெழும்போது அழுகையும் வரும், கொஞ்சம்  கவிதையும் வரும். அப்படி வந்த ஒரு தருணத்தையும் இங்கே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்.

வலிகளை மறக்கக் கவிதையில் வடித்து எழுதிப்பார்த்ததும் ஒரு காலம்
வலிகளைக் கூட்டின கவிதை வரிகளை மறந்துமிருந்தது ஒரு காலம்!
எனக்கு மட்டுமே இப்படி ஏன் என ஏங்கித் தவித்ததும் ஒரு காலம்
தனக்கு மட்டுமே தாயின் பரிவு முழுதாய் வேண்டின சவலைப் பிள்ளையாய்
அழுதால் உன்னைப்பெறலாமே என யாரோ சொன்னதை நம்பினபோதில்
அழுதுபுரண்டு கதறின நேரம் அவள் வரவில்லைஒரு பதில் தரவில்லை!


சவலையழுததுதிவலையளவும் வினையணுகாமல் காத்திடவேண்டும்!
கேட்டது எல்லாம் தந்திட வேண்டும்என்னைத் தனியன் ஆக்கிவிடாமல்
கூடவே இருந்தென்னைப் பார்த்திட வேண்டும்கேட்டதனைத்தும் அதிகம் தான்!
விடையாய்க் கிடைத்ததோ பொருள் பொதிந்தவோர் மௌனம்தான்!
பாராமுகமாய் இருந்தாள் எனப்பெரும் கோபமும் வந்தது வீம்பு வளர்ந்தது.
தாயேநீ இல்லைநீ வெறும் பொய் தான்அழுகை வெடித்தது ஆத்திரம் வந்தது!


இப்படியெல்லாம் வார்த்தைகளில் ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்ததனால் மட்டுமே விடை கிடைத்து விடுமா? பதில் கிடைத்துக் கொண்டே தான் இருந்தது.ஆனால், அதைப் புரிந்துகொள்கிற பக்குவமும் நேரமும் தான் வாய்க்கவில்லை. 

ராஜாங்கம் தான் அப்படிக் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுக்  கேட்டது என்று நினைக்கிறேன்!

"நீங்க ரெண்டு பெரும் உண்மையிலேயே பகையாளிங்களா, இல்லே பங்காளிங்களா? இப்படி அடிச்சுக்கறீங்க, ஆனா உங்களைப் பத்தி யாராவது தப்பாப் பேசினா அவரு அவங்களோட மல்லுக் கட்ட ஆரம்பிச்சிடறாரு!"

எனக்கே அந்த சந்தேகம் அவ்வப்போது வரும்! நாங்கள் இருவரும் நண்பர்களா? அல்லது சண்டைக்காரர்களா? அவனிடமே ஒருதரம் கேட்டபோது சிலிர்த்துக் கொண்டே சொன்னான், "நாயே! இன்னும் இது கூடத் தெரியலை! நீ சண்டைக்கரானாக இருக்கவும் லாயக்கில்லை! சிநேகிதக்காரனாகவும் இருக்க லாயக்கில்லை!" 

உடனே அங்கே வார்த்தைகளில் அக்கப்போர் ஆரம்பித்து விடும்! 

இன்றைக்கு அவன் பிறந்தநாள். ஆனால் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல முடியாது பதிமூன்று வருடங்களுக்கு முன்னமே அவன் இறந்துவிட்டான். சாகிற வயது இல்லைதான்! ஆனால் தானே தேடிக்கொள்ளும் ஆசைகள், கோபதாபங்கள், ஏமாற்றங்கள் அதிலெழும் குரோதங்கள் என்று ஏதோ ஒரு வடிவத்தில் நாமே இடம் கொடுத்துவிடும் மரணத்தை யார்தான் தடுத்துவிட முடியும்?    


நான் யார்? இந்தக் கேள்விக்கு ஷ்ரத்தாலு ரானடே  மிக அழகாக பதில் சொல்கிறார். ரமண மகரிஷியின் நான் யார் விசாரம் மிகக் கடினமானது. ஆனால் அந்தக் கேள்விக்கு விடைதேடுவதில் தான் வாழ்க்கையின் சாரமே .அடங்கியிருக்கிறது.

 

ராபர்ட்  ஃப்ராஸ்ட்  ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய  Mending Wall  என்றொரு கவிதை!   ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்!

"மீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன"  என்று சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்  என்று தான் விரும்புகிறேன்."

விஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில்  ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள் சொல்கிறார்கள். நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும் இதுவாகத் தான் இருக்கும்! 



ப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும் கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதைஇன்னமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான்  இருக்கிறது!

 
Something there is that doesn't love a wall, 
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

ன்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!  


Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'

விஞருடைய  வாதம் எல்லாம் இது தான்! 
 
தோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது! கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,'Good fences make good neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது.
ற்கெனெவே இந்தக் கவிதையை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!இரண்டு எதிரெதிரான  மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பேசியிருக்கிறோம்!

அதைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில் தொக்கி நிற்கிறது.
 அதுதான் முக்கியம்!