Showing posts with label மகா கெட்ட பந்தன். Show all posts
Showing posts with label மகா கெட்ட பந்தன். Show all posts

இது புதன்கிழமை! காங்கிரசோ கூட்டாளிகளோ வேண்டாமே!

முலாயம் சிங் யாதவ் இன்று நாடாளுமன்றத்தில் மறுபடி நரேந்திர மோடியே பிரதமராக வரவேண்டும் என்று பாராட்டிப்பேசி, ஒரு புயலைக் கிளப்பி விட்டிருக்கிறார். சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவு வைத்து, மோடி அரசை வீழ்த்தத் திட்டம் தீட்டி வரும் நிலையில், அவரின் தந்தை முலாயம் சிங் யாதவ் மக்களவையில் இன்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியது பெரும் வியப்பை ஏற்படுத்தியது என்கிறது ஹிந்து! காங்கிரசோடு நட்புறவு வைத்து என்பது எல்லோருக்குமே புதிய செய்தியாகத்தான் இருக்கும் போல!

   
டில்லிக்கு நேற்று வந்த மம்தா பானெர்ஜி அத்தனை சுரத்தாக இல்லை.நாடாளுமன்றத்தில் மம்தாவும், சோனியாவும் சந்தித்துக் கொண்டார்களாம்! சோனியா சமாதானமாக இப்படிச் சொன்னதாக! "We are accusing each other but we are friends," Sonia Gandhi told Mamata Banerjee என்கிறது NDTV செய்தி.      , 
A furious Mamata Banerjee today refused to calm down when Sonia Gandhi reached out to her after a Congress leader of Bengal attacked her in parliament. "We will remember," declared the Bengal Chief Minister when she encountered Sonia Gandhi, UPA chairperson and former Congress president, later! அதிர் ரஞ்சன் சவுத்ரி என்ற மே. வங்க காங்கிரஸ் எம்பி சாரதா மோசடியைப் பற்றிப் பேசிவிட்டாராம்!  Adhir Chowdhury had piped up during a discussion on a bill to crack down on unregulated schemes and chit funds, and said Mamata Banerjee was complicit in the Saradha chit fund scam. He said lakhs of people were looted and their money should be returned. His remarks were followed by chest-thumping by delighted BJP members.  

இப்படி சந்தித்துக் கொள்கிற தருணங்களில் ஒருமாதிரியும்  அந்தப்பக்கம் திரும்பும்போது முதுகில் குத்துவதுமாக,  மகா கெட்ட பந்தன் இதுவென்று அடையாளம் காட்டினால் என்ன சொல்வீர்கள்? 
லந்தென்றால் அப்படி ஒரு சூப்பர் அரசியல் லந்து! மம்தா பானெர்ஜி தன்னைக் காட்டுராணியாக நினைத்துக் கொண்டிருப்பதை டில்லியில் பல இடங்களில் பேனர் வைத்துக் கலாய்த்திருக்கிறார்கள்.
தமிழ்நாடுஎன்னடாவென்றால் யார் யாரோடு கூட்டணி எத்தனை சீட் என்பதைத் தாண்டி வரவே வராது போல! 
இது இப்படியென்றால் காங்கிரசுக்குக் கூட திட்டம், அடுத்த திட்டமெல்லாம் இருக்கிறதென்று இங்கே ஒரு காமெடி! சிரிக்கவா? முறைக்கவா? தெரியலையே!   
        

புதிதாக என்ன சொல்லிவிடப்  போகிறேன்? தென்கச்சி சுவாமிநாதன் இங்கே இன்று ஒருதகவலாக, முடிவுகளை சரியாக எடுங்கள் என்று சொல்வதற்கு மேல் வேறென்ன புதிதாகச் சொல்ல இருக்கிறது?
                                                     

மகாகட்பந்தன் யாருக்காக? கூட்டணி என்பது ஊழலுக்கு லைசன்சா?

திரும்பத் திரும்ப மம்தா பானெர்ஜி நடத்திய குழாயடிச் சண்டை பற்றியே பேசவேண்டாமே என்றிருந்தாலும் கூட தீதி வளர்த்துக் கொண்டே போகிற அராஜகம் இங்கே பொதுவெளியில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது.

சாரதா நிதிநிறுவன மோசடியை மம்தா பானெர்ஜி அத்தனை எளிதாகக் கடந்துபோய்விட முடியாதென்று தான் நடப்பு நிகழ்வுகள் சொல்கின்றன. நேரமிருந்தால் இந்த 46 நிமிட வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள்!

    
நேரமில்லையா? சந்திரபாபு நாயுடு  கொல்கத்தா போய் என்ன வீரவுரை ஆற்றினார் என்பதை இந்த 5 நிமிட வீடியோவில் பாருங்கள்! திமுகவின் கனிமொழி என்ன பேசினார் என்பதைத் தேடி வேறு பார்க்க வேண்டுமா என்ன? சந்தடி சாக்கில் KDbrothers குழுமம் வங்காள மொழியிலும் கால் பதித்திருக்கும்  சேதி ஒன்றே போதாதா?

மம்தா பானெர்ஜி அந்த நாளைய இந்திரா மாதிரியே முதிர்ச்சியில்லாமல் அரசியல் செய்கிறார். அவரிடம் 144 தடையுத்தரவு பிறப்பிக்கிற அதிகாரம் இருக்கிறதாம்! இரண்டுபேருக்குமேல் கூட்டம் கூட அனுமதிக்க மாட்டாராம்! மேலோட்டமாக, யோகி ஆதித்ய நாத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை மாதிரித் தோன்றினாலும்  கடந்த ஞாயிறு அன்று கூட்டத்தைக் காண்பித்த இடதுசாரிகளுக்குமே விடப்பட்டதுதான் என்று தோன்றுகிறது 

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath in Purulia, West Bengal: Nothing can be more shameful for a democracy than a Chief Minister sitting on a dharna.
3:22 AM - 5 Feb 2019  

உத்தரப் பிரதேச முதல்வரை மேற்கு வங்கத்துக்குள் கால் வைக்கவிடாதபடி மம்தா பானெர்ஜி முட்டுக்கட்டை போட்டதையும் மீறி புரூலியா என்ற இடத்தில் பிஜேபி கூட்டத்தை இன்று நடத்திக் காட்டி இருக்கிறது தெருக் குழாயடிச் சண்டையாக நடத்திய தர்ணா போராட்டத்தை மம்தா பானெர்ஜி முடித்துக் கொண்டுவிட்டார்! ஆகினால் வெட்டிவீராப்பு இன்னும் தொடர்கிறது என்கிறது இந்தச் செய்தி.
West Bengal CM Mamata Banerjee: I won't take names, we had got into an agreement with a helicopter company. We had done advance booking, agreement was signed on Jan 15. It is sad that they informed us on Feb 1 that they will not provide us the helicopters, they backed out.
2:45 AM - 5 Feb 2019  
இங்கே மம்தா, சந்திரபாபு நாயுடு பேசுகிற எதுவும், உருவாக்க முனையும் மெகா கூட்டணியும் ஜனங்களுக்கானது இல்லை என்பது தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது!

மெகா சீரியல்கள் வீட்டுக்குக் கேடு! மெகா கூட்டணி நாட்டுக்குக் கேடு! புரிகிறது இல்லையா?