இன்றைக்கென்ன செய்தி விசேஷம்? #நெல்லை கண்ணன்

பிரதமர் நரேந்திர மோடி இந்த வருட சுதந்திர தினத்தன்று அறிவித்தபடியே, ஜெனெரல் பிபின் ராவத், முப்படைகளின் ஒருங்கிணைந்த தலைவராக (Chief of Defence Staff) ஆக இன்று பொறுப்பேற்றிருக்கிறார். ராணுவத்தளபதியாக இன்று ஓய்வு பெறுகிற நிலையில் ஜெனெரல் பிபின் ராவத் அடுத்த மூன்றேகால் வருடங்களுக்கு முப்படைகளையும் ஒருங்கிணைக்கிற தலைமைப் பொறுப்பில் இருப்பார்.


ரிபப்லிக் டிவியின் நேற்றைய விவாதத்தில் பிபின் ராவத்தின் நியமனம் பாகிஸ்தானிகளுக்கு கலக்கம் தருகிற மாதிரி இருந்ததாகச் சொல்கிறார்கள். பாக்கிகளுக்கு எப்படி இருந்ததோ தெரியாது, நம்மூர் சோனியா காங்கிரஸ்காரர்களுக்கு செந்தட்டி தடவிய மாதிரி எரிகிறதாம்! ஒரு காங்கிரஸ்காரர் ஜனாதிபதி பிபின் ராவத்தைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்கிறார். காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி வரிசையாக 4 ட்வீட்களில் காங்கிரசின் எரிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஒரு விஷயம் மட்டும் தொடர்ந்து உறுதியாகிக் கொண்டே வருகிறது! காங்கிரஸ் எதை எதிர்த்தாலும், அது இந்த நாட்டுக்கு மிக நல்லது என்பது தான் அது!  

நம் நாட்டில் இப்போது தரைப்படை விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தனித்தனியாகத் தளபதிகள் உள்ளனர். ஆனால், போர்க்காலங்கள், அவசர நேரத்தில் இந்த மூன்று தளபதிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த, வழிநடத்தத் தலைமைத் தளபதி என்று இல்லை, இதற்கான நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன. இது கார்கில் போரின்போது உணரப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வளர்ந்த நாடுகளில் இருப்பது போல முப்படைக்கும் தளபதி (Chief of Defence Staff CDS) பதவியை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் கடந்த 24 ம் தேதி நடைபெற்றது. இதில் புதிதாக முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த புதிய தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்து தமிழ்திசை செய்தி சொல்கிறது. பிபின் ராவத் தலைமைத் தளபதியாக என்ன செய்வார் என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. இப்படிக் கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்

சிவகங்கைச் சின்னப்பையன் என்று சொன்னவர் செத்துப் போய்விட்டார். ஆனாலும் அந்த சின்னப் பையன் இமேஜை இன்றும் மறக்காமல் குத்திக் காட்டுகிறார்களே! என்ன செய்ய?!  

  
சதீஷ் ஆசார்யா என்ன சொல்ல வருகிறார்? D K  சிவகுமார் செய்த பாவங்களுக்காக சிலுவை சுமக்கிறார் என்றா?

  
நெல்லை கண்ணன் என்கிற காங்கிரஸ் கிறுக்கன் என்னதான் அப்படிப் பேசிவிட்டாராம்? எனக்கும் ஆரம்பத்தில் ஆச்சரியமாகத்தான் இருந்தது.  முதல் 5 நிமிடங்களுக்குள்ளாகவே வன்மமும் விஷமமும் வெளியே கொட்டப்படுகிறது. காங்கிரஸ்காரன் என்றால் தெரிந்தே பாவங்களைச் செய்கிறவன்தானா?

இந்தமாதிரி கிறுக்கர்களை ச.ட்டமும் காவல்துறையும் என்ன செய்யப்போகிறது? அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். பேசவேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்து விடும் தவறைத் தொடர்ந்து செய்யப் போகிறோமா?

மீண்டும் சந்திப்போம்.  

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் என்றாலே பொய்தானா?

இந்திய ஜனநாயகம் என்னமோ ஒரு அரசியல் சாசனம் வகுத்துத் தந்திருக்கிற, எதுவானாலும் விவாதித்து முடிவு செய்கிற ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் என்று தவறான கற்பிதத்தில் இருக்கிறீர்களா என்ன? ஆனால் சோனியாவின் வாரிசுகள் ராகுல் காண்டியும் சரி, ப்ரியங்கா வாத்ராவும் சரி, அடுக்கடுக்காகப் பொய்களை அள்ளிவீசுவதுதான் சரியான நடைமுறை என்று நினைத்துக்கொண்டு அரசியல் செய்கிற மாதிரி இருக்கிறது! நடப்பவைகளைக் கவனிக்கிறீர்களா?


உபி போலீஸ் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். கழுத்தைப்பிடித்துத் தள்ளினார்கள் என்று என்று பப்பி ப்ரியங்கா ஒரு புளுகை அவிழ்த்து விட்டதை காங்கிரஸ்காரர்கள் ஒருசிலரே நம்பினார்கள் என்றால் என்ன சொல்ல? பப்பிக்கமைந்த Gaப்பு ராபர்ட் வாத்ரா உடனே பப்பியின் வீரத்தைப் புகழ்ந்து ட்வீட் செய்ய, இப்படி  நடந்த கேணத்தனமான காங்கிரஸ் காமெடியைப் பார்ப்பதற்கு முன்னாலேயே பிரகாஷ் ஜவடேகர் இந்தியாவின் மிகப்பெரிய பொய்யர் பட்டத்தை ராகுல் காண்டிக்கு கொடுத்து விட்.டார். ஆனால் காங்கிரசுக்குள் யார் அதிகமாகப் பொய் சொல்வது, யார் இங்கே கழகங்கள் பாணியில் எழவு வீடு தேடிப்போய் அரசியல் செய்வது என்பதில் பப்பு ராகுலுக்கும் பப்பி ப்ரியங்காவுக்கும் அறிவிக்கப்படாத போட்டி ஒன்று நடந்து கொண்டிருப்பதை, மேலே 7 நிமிட வீடியோவில் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்!        

  
இது நேற்றுமுன்தினம் காங்கிரசின் 135 வது அனிவெர்சரி கூட்டத்தில் பிரியங்காவை நோக்கிப் பாய்ந்து வருகிறார் ஒருவர். தடுக்க முயலும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தடுத்துவிட்டு, ப்ரியங்கா அந்தநபருடன் போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறார் என்பது முதல்முறையல்ல, பலமுறை அரங்கேற்றப் படும் நிகழ்ச்சிதான். ராகுல் காண்டிக்கு போட்டியாக தானும் இருப்பதை ப்ரியங்கா அவ்வப்போது இந்த மாதிரி ஸ்டண்ட் அடித்துக் காட்டுவதுதான்! சோனியா காண்டி மகனுக்கு மட்டுமே ஆதரவு கொடுக்கிற மாதிரித் தான் தற்போதைய நிலவரம். 


சோனியா வாரிசுகள், முலாயம்சிங் வாரிசு அகிலேஷ், கன்ஷிராம் வாரிசு மாயாவதி, பிஹாரில் லொள்ளு பிரசாத் யாதவ் வாரிசு இவர்களெல்லாம் என்ன மாதிரி அரசியல் செய்கிறார்கள்? சேகர் குப்தா இந்த 22 நிமிட வீடியோவில் கொஞ்சம் சுவாரசியமாக அலசுகிறார். எவரும் ஒரு அர்த்தமுள்ள அரசியலைக் களத்தில் நின்று செய்யவில்லையே என்பது அவருடைய அங்கலாய்ப்பு.


பொய்முகம் காட்டுகிறவர்களுக்குக் களத்தில் இறங்கி அரசியல் செய்யத்தெரியவில்லை என்பது ஆகப்பெரிய பரிதாபம்! தங்களைத்தவிர ஆளப்பிறந்தவர்கள் இங்கே எவருமில்லை என்கிற மிதப்பில் மட்டுமே திரிகிற கூட்டம் காங்கிரஸ் மட்டுமே அல்ல, அதே மாதிரியான மிதப்பு  தான் மாநில அளவில் மட்டுமே துள்ள முடிகிற மாநிலக்கட்சிகளுக்கும் இருக்கிறது.

    
FirstPost தளத்துக்காக மஞ்சுள் வரைந்த இந்த கார்டூன் கள யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருப்பதாக எனக்குப் படுகிறது.

இந்தப்பதிவில் பேசப்பட்ட விஷயங்கள், பகிரப்பட்ட வீடியோக்கள், கார்டூன்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சொல்ல வந்த விஷயம், குழப்பமில்லாமல் சொல்லப்பட்டதா? பதிவை எழுதியவருடன் கருத்து  உடன் படமுடிகிறதா? முடியவில்லையா?

கொஞ்சம் சொல்லுங்களேன்! காத்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.         
      

இரு வேறு விவாதங்கள்! இரண்டும் வேறு விஷயங்களில்!

ஒருவழியாக தமிழக பிஜேபிக்குள் இருந்த முரண் பாடுகள் வெளியே வெடித்ததில் பாரிவேந்தர் நடத்தும் பல்கலைக்கழகத்தில் டய மண்டுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குவதாக இருந்த நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப் பட்டிருக்கிறது. தமிழக பாஜக நிர்வாகிகளில் எவருக்கும் இல்லாத சொரணை, கீழ்மட்டத் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பாக வெளிப்பட்டதில் ராஜ் நாத்சிங் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். ஆக தனக்கான தேசிய அங்கீகாரத்துக்காக காய்களை நகர்த்திவந்த வைரமுத்து மூக்குடைபட்டு நின்றதுதான் மிச்சம்.

   
#MeToo விவகாரத்தில் வைரமுத்து மீது பாலியல்சீண்டல் புகாரை வெளிப்படையாகச் சொன்ன பாடகி சின்மயி ட்வீட்டரில், தன்னுடைய எதிர்ப்பை மறுபடி ஆரம்பித்து விட்டார் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. வைரமுத்து தனக்கிருந்த செல்வாக்கை வைத்து தன் மீது எழுப்பப்பட்ட புகாரை ஒன்றுமில்லாமல் செய்து விட்ட கோபம் இப்படி வெளிப்படுவது இயல்புதான். வீடியோ 59 நிமிடம். மதன் ரவிச்சந்திரன் கலக்குகிறார்.  


வேறொருவர் கையால் டாக்டர் பட்டம் பெறுவதில் டய மண்டுவுக்கு விருப்பமில்லை என்பதாக ஒரு செய்தி இருக்கிறது. கிஷோர் கே சுவாமி ஒரு ட்வீட்டர் செய்தியில் கேட்ட மாதிரி இந்தச் செய்தியை வைத்து எந்தவொரு சேனலும் விவாதம், நிகழ்ச்சியை நடத்த முன்வரவில்லை இப்படி ஒரு தலைகுனிவு டயமண்டுக்கு ஏற்பட்டது என்ற செய்தியைக் கண்டு கொள்ளவில்லை.


பிபின் ராவத் சொன்னதில் எந்தத்தவறுமே இல்லை. ராணுவத்தளபதியாக கருத்துச் சொல்லக்கூடாதா? இந்த மாதிரியான விவாதமே மிக மிக அனாவசியம். விஷமத்தனமான உள்நோக்கம் கொண்ட விவாதம் 50 நிமிடம். புதிய தறுதலைகளாக இத்தகைய ஊடகங்கள் சேனல்களில் உருவாகிவருகிற நபர்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருக்கவேண்டியது அவசியம்.

மீண்டும் சந்திப்போம்.      

பதிவுகள் எழுதுவதில் பிரயோசனம் ஏதாவது இருக்கிறதா?

பதிவுகள் எழுதுவதில் பிரயோசனம் ஏதாவது இருக்கிறதா? சுமார் பத்தேமுக்கால் வருடங்களுக்கு முன் எழுதிய பதிவு இது: எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?  கவியோகி சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய பதிவு இது. எழுதிய நேரத்தில் ஒவ்வொரு எழுத்திலும் பூரண விசுவாசத்தோடு எழுதிய பதிவு தான்! ஆனால் இடைப்பட்ட காலங்களில் ஏகப்பட்ட கசப்பான அனுபவங்கள் வேறுவிதமான பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இன்று காலை நானே எழுதி மறந்தும் போன் இந்தப்பதிவுக்கு ஒரு பின்னூட்டம், ஒரு சிறு உதவியைக் கேட்டு வந்திருக்கிறது என்றால் என்ன சொல்வது?  



   
1987 ஆம் ஆண்டு இரு நண்பர்களோடு சிவகங்கை சோழபுரத்தில் கவியோகியை நேரடியாகச் சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாரத சக்தி காவியம் என்னும் அவரது படைப்பை மீள்பதிப்புச் செய்ய வேண்டுமென்கிற அவாவினை என்னிடம் பகிர்ந்து கொண்ட சம்பாஷணையை இப்போதுகூட நினைவில் வைத்திருக்கிறேன். அதற்குப்பின்னால் நான் 1992 இல் மறுபடி சோழபுரத்துக்கு நான் போன சமயம் அவர் சமாதி நிலைக்கு ஏகி விட்டார். சமாதியில் சிறிதுநேரம் தியானம் செய்துவிட்டு, சோழபுரத்தில் சுத்தானந்த பாரதியார் நிறுவிய பள்ளியை நிர்வகித்துவரும் அவரது உறவினரை மரியாதை நிமித்தம் சந்தித்து வந்தேன். அதே உறவினர்/பள்ளி நிர்வாகியை மறுபடி மதுரையில் அவரது மகள் வீட்டில் சந்தித்துவிட்டு வந்த அனுபவம் மிகக் கசப்பானது. சுத்தானந்த பாரதியாருடைய படைப்புக்களை தேடிக் கண்டுபிடித்து மீள்பிரசுரம் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தை அவரிடம் சொன்னதற்குக் கிடைத்த பதில் மிக அலட்சியமானது மட்டுமல்ல. அதற்குமேல் அந்த சம்பாஷணையை இங்கே நினைவுபடுத்திக்கொள்வதே மிகவும் அவமான கரமானதும் கூட.  10% ராயல்டியை அவர்களுக்குக் கப்பம் கட்டிவிட்டு மீள்பிரசுரம் செய்துகொள் அல்லது செய்யாமலே போ என்பது மட்டும்தான் அவர்களுடைய அணுகுமுறையாக இருந்ததைக்கண்டு கசந்துபோய், அந்த விஷயத்தில் மேற்கொண்டு இறங்காமல் ஒதுங்கிக் கொண்டுவிட்டேன் என்பதில் பின்தொடர்ச்சி என்று இதுநாள்வரை ஏதுமில்லாமல் இருந்தது. இன்று காலை இப்படி ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது? 

sir,
I spent one full year to search the place and see whether he has left any MS which are not published. NO one knew about him, even in the lane adjoining IIT, chennai. At last, a makeshift shopkeeper pointed out his finger at a space and told me 'look sir, this is the place where he was staying.Now the Trustees have sold it and flats have come up .'I saw the flats. After further search I contacted a gentleman at oneof the flats opposite to Tiruvanmiyur bus stand. He didn't know much, but gave me the book in english "Experiences of a Pilgrims soul '. Then I contacted another gentleman at Sivaganga who could not give me any material but the photograph of Sri SBharathi with Swami Gnananandagiri of Thapovanam. I am interested in reading the Sivagiri Padalam of Bharatha Mahasakthi kavyam, where he has given a description of Swami Gnanananda. For your information, they were together in Kolli hills, Sendamangalam, Vadalur and other places doing tapas. Can you help me , by sending a snapshot of this portion if you have the book ? Thanks and regards, N.R.Ranganathan, Editor, Gnana Oli, Thapovanam. 605756. 9380288980. Email id nrpatanjali@yahoo.com

சோழபுரம்  ஆசாமிகளுக்கு பணம் மட்டும் வேண்டும். ஆனால் அதற்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட மாட்டார்கள். சுத்தானந்தர் புத்தகத்துக்கு ராயல்டியை அட்வான்சாகக் கப்பம் கட்டிவிட வேண்டும். ஆனால் எந்தப் புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறது, விவரம் வேண்டுவோருக்கு எடுத்துத் தரக்கூட அவர்களுக்கு விவரமும் போதாது , உதவுகிற மனமும் கிடையாதென்றால் சுத்தானந்த பாரதியாருடைய அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொள்ளாமல் வேறு என்ன செய்வது?      

பாரத சக்தி மஹாகாவியம் புத்தகம் என்னிடம் இருக்கிறது என்பதால் குறிப்பிட்ட பகுதியைத் தேடி ஸ்கேன் செய்து அவருக்கு அனுப்புவதில் பெரிய சிரமம் என்று எதுவுமில்லை. அனுப்பிவிடலாம்.

மீண்டும் சந்திப்போம்.


         

இருவேறு விவாதங்கள்! புரிந்துகொள்வதென்ன?

நேற்றைக்கு இங்கே சென்னையில் திமுக +உதிரிகள் பேரணி(போரணி?)  ஒன்றை நடத்தி முடித்து விட்டார்கள். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சிறிது கோஷங்கள் போடப்பட்டன. மேடையில் இருந்த பானாசீனா, வீரமணி, வைகோ உள்ளிட்ட பிரமுகர்கள் எவரும் வீரவுரை ஆற்ற அழைக்கப்படவில்லை. மிகக் குறுகிய நேரத்திலேயே இசுடாலின் நன்றி உரையோடு பேரணி முடித்துவைக்கப்பட்டது. மேம்போக்காகப் பார்க்கையில் திமுகவுக்கு இது அரசியல் ரீதியாக இன்னொரு பிரசாரம், அவ்வளவுதான்! 


வின் நியூஸ் சேனலில் நேற்றிரவே மதன் ரவிச்சந்திரன் திமுக பேரணி தோல்வியா? அலுங்காத சென்னை அதிராத டெல்லி என்ற தலைப்பில் ஒருமணிநேர விவாதத்தை சுறுசுறுப்பாக  நடத்தி முடித்துவிட்டார் என்பதற்கு மேல் சொல்வதற்கு வேறு ஏதாவது இருக்கிறதா?


ஒரு சட்டமசோதாவில் சொல்லப்படாத விஷயங்களைத் திரித்து ஒரு குறிப்பிட்டபகுதியினரிடையே அச்சத்தைத் தூண்டமுடியுமா? முடியும் என்பதை குடியுரிமை சட்டத் திருத்தம் மீது கிளப்பிவிடப்பட்ட புரளிகள், பொய்கள் அதைத் தொடர்ந்த கலவரங்கள் என்று நன்றாகவே நிரூபித்துக் காட்டப்பட்டிருக்கிறது. திருமதி நிர்மலா சீதாராமன் நிதானமாக இந்த 41 நிமிட நேர்காணலில் விளக்குகிறார்.

ஒரே விஷயம் தான்! இருவேறு கோணங்களில் பார்க்க உதவியாக இருவேறு விவாதங்கள்.

மீண்டும் சந்திப்போம்.            

சண்டேன்னா மூணு! H ராஜா! நடிகன்! அரசியல்!

கமல் காசர் தனியாகக் கட்சி ஆரம்பித்து ஒருவருட காலத்துக்கும் மேலானதில் எடுத்திருக்கிற அரசியல் முடிவுகளில் நாளை திமுகவும் கூட்டணி உதிரிகளும் நடத்த உத்தேசித்திருக்கிற கண்டனப்பேரணியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தது ஒன்றுதான் உருப்படியானது. கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து கொள்வதில் தன் அரசியல் எதிர்காலம் காணாமல் போய்விடும் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். இன்னொரு உதிரியாகி விடுகிற விபத்திலிருந்து கமல் காசர் தப்பித்து விட்டார். தப்பித்தது கமல் மட்டுமே அல்ல, இசுடாலினும் தான்!

  
Wanted ஆக போலீஸ் ஜீப்பில் ஏறுகிற வடிவேலு காமெடி மாதிரி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஒரு காமெடி செய்திருக்கிறார். 


குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள திமுகவின் பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார். அவர் தற்போது சென்னையில் இல்லை. கர்நாடகத்தில் படப்பிடிப்பில் உள்ளார் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். கமல் பங்கேற்காதது கூடக் கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் இசுடாலினுக்கு இது கேவலத்துக்கு மேல் கேவலப்படுகிற நேரம் போல! 


இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சென்சேஷனல் செய்தியாக அடிபட்ட ஒரு பெயர் சந்திரசேகர் ஆசாத். குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக டில்லி  ஜமா மசூதியில் நடந்த போராட்டத்தில் முகம் தெரிந்த நபர் இவர். பீம் ஆர்மி என்ற அமைப்பை நடத்திவரும் இவரை போலீசார் கைது செய்த நிலையில் தப்பிவிட்டதாக செய்திகள் வந்தன. அப்புறம் மறுபடி கைது செய்து விட்டதாகவும்! உத்தரப் பிரதேச அரசியலில்  வளர்ந்து வரும் தலித் இளைஞர். சேகர் குப்தா இவரைக் கொஞ்சம் அதிகமாகவே மதிப்பீடு செய்கிற மாதிரித் தான் எனக்குப் படுகிறது. வீடியோ 15 நிமிடம். 

    
H ராஜாவுக்குப் பதில் சொல்ல முடியாதவர்கள்தான், அவரை கொச்சையாக விமரிசிப்பார்கள், கேலி பேசுவார்கள். ஆனால் தமிழக அரசியல்வாதிகளில் விவரம் தெரிந்தவர், சொல்ல வந்த கருத்தைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே பேசக்கூடியவர். CAA குறித்து இந்த 42 நிமிட வீடியோவில் மிகத்  தெளிவாகவே சொல்கிறார். கவனித்துக் கேட்க வேண்டிய காணொளியாக இதைப் பரிந்துரைக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.   
        

இட்லி வடை பொங்கல்! #55 குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பது!

குடியுரிமைச் சட்டத்திருத்தம், NRC, NPR இந்த மூன்று விஷயங்களையும் போட்டுக் குழப்பி   எதிர்க்கட்சிகள் ஒரு கலகத்தீயை மூட்டியிருக்கிறார்கள். குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக எந்த அளவு வன்முறை, விஷமப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதற்கு திருமாவளவன் உணர்ச்சி கொப்பளிக்கப் பேசும் இந்த 23 நிமிட வீடியோவே    நல்ல உதாரணம்.


ஆனாலும் கூட அவரை அறியாமலேயே ஒரு உண்மையை சொல்வதைக் கவனிக்க முடிகிறதா? குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை விளக்கி அமித் ஷா பேசும்போது எந்தக்காரணத்தை முன்னிட்டும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களுக்கு குடியுரிமை தர முடியாது என்று வன்மத்தோடு சொன்னாராம்! அதனால் என்ன? இங்கே வாழும் முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிற மாதிரி இருக்கிறது திருமா பேச்சு. அடுத்ததாக சொல்கிற இன்னொரு புரட்டு அரசியல் சாசனத்தின் முகவுரையில் சொல்லப்பட்ட செகுலர் என்ற வார்த்தையை உயிரற்றதாகச் செய்ய முயற்சி என்பது. அரசியல் சாசனத்தின் Preamble இல் 1976 இல் எமெர்ஜென்சி தருணத்தில் இந்திரா காண்டி செய்த 42வது திருத்த        இடைச் செருகலில் தான் Secular, Socialist, Integrity என்ற மூன்று வார்த்தைகள் உள்ளே புகுந்தன. இந்தத் திருத்தத்தை மினி கான்ஸ்டிடியூஷன் என்று கிண்டலாக அழைக்கப்பட்டது என்பதை அந்த நாட்களில் நேரடியாகப் பார்த்தவன் நான். The words 'Socialist and Secular' were inserted by the 42nd amendment in 1976. The same amendment contributed to the changes of the words unity of the nation into unity and integrity of the nation. The significance of the preamble of the Indian Constitution lies in the 'We the People'.  இது சுருக்கம். அடுத்து வந்த ஜனதாக்கட்சி கொண்டுவந்த 43 வது திருத்தம், 42வது திருத்தத்தை ரத்து செய்து முகவுரையை  எமெர்ஜென்சிக்கு முன்னாலிருந்த பழைய நிலைக்கே திருப்பியது.அதன்படி பார்த்தால் இடைச்செருகல் எதுவுமில்லாத ஒரிஜினல் நிலை. ஆனால் குறிப்பிட்டு அந்த வார்த்தைகளை நீக்குகிறோம் என்று தனியாகச் சொல்லவில்லை. 


பிஜேபியின் கூட்டாளிகளும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் அவரவர் அரசியல் ஆதாயத்துக்காக எப்படிப் பிரிந்து நிற்கிறார்கள் என்பதை சேகர் குப்தா இந்த 20 நிமிட வீடியோவில் கொஞ்சம் சொல்வதைக் கேளுங்கள். பிஜேபிக்கு எப்படியாவது அணைபோட்டு விடவேண்டுமென்கிற தவிப்பு, இப்போது அங்கங்கே கலவரங்களாகப் பற்றிக் கொண்டு எரிகிறது.

  
பிரச்சினையை பிஜேபி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. வாருங்கள்! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சோனியா, மற்றும் வாரிசை நீதிமன்றப்படிகளில் ஏறவைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். ஜாமீன் கிடைத்ததே சுப்ரமணியன் சுவாமியைத் தோற்கடித்த மாதிரித்தான் என்று காங்கிரஸ் தரப்பு அற்ப சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருப்பதை விட  ராஜ்தீப் சர்தேசாய் குதிப்பது அதிகமாக இருக்கிற நிகழ்நேரக் காமெடியை அனுபவிக்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.       

      

திரும்பத் திரும்ப சுற்றி வருவது ஒரே விஷயம் தான்!

பிஜேபிக்கு எதிரான போராட்டக்களமாக குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. ஒரு ஜனநாயகப்பூர்வமான உரையாடலை நாடாளு மன்றத்திலோ வெளியிலோ நடத்தத் திராணியில்லாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இந்த விஷயம் நல்லவாய்ப்பாகக் கிடைத்துவிட்டது என்பதற்கு மேல் உப்புப்பெறாத விஷயம் இது.


கமல் காசர் திமுகவோடு கைகோர்த்திருப்பது தான் இந்த 45 நிமிட விவாதத்தின் பேசுபொருள். ஏதோ ஒன்றை புதிதாக மிக்ஸ் செய்கிற பாவனையில் தான்   சேனல்கள் தங்களுடைய அஜெண்டா, பிழைப்பை ஓட்டியாகவேண்டியிருக்கிறது. எனக்கு கமல் காசர் மாதிரி திடீர் சுயம்புகள் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லையென்றாலும் இந்த விவாதத்தைக் கவனித்ததற்கு முக்கியமான காரணம் நெறியாளர் தம்பி தமிழரசன் பங்கேற்பாளர்களிடம் கேள்வியைக் கேட்டுவிட்டு இடையே குறுக்கிடாமல் பதிலைப் பெற்ற விதம் ஒன்று! இசுடாலினுடைய போதாத காலம், கமல் காசரை எல்லாம் வலியப்போய்க் கூப்பிட்டு கைகோர்க்க வேண்டியிருக்கிறதே என்பது மற்றொன்று. இந்த மாதிரி ஏதோ ஒரு சாக்கில் ஒருவருக்கு ஒருவர் முதுகு சொறிந்துகொள்கிற தந்திரம் எல்லாம் அரதப்பழசு! வேண்டுமானால் united front tactics, George Dimitrov என்று தேடிப்பாருங்கள். கற்றுக் கொடுத்த கம்யூனிஸ்டுகள் என்ன நிலையில் இன்றைக்கு இருக்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! 

        
   
குடியுரிமை பற்றி காங்கிரசின் நிலைபாடு நேற்றைய நாட்களில் என்னவாக இருந்தது, இன்றைக்கு எதற்காக எதிர்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விசேஷமான அரசியல் ஞானம் எல்லாம் வேண்டியதே இல்லை. இந்த 10 நிமிட வீடியோவைப் பார்த்தாலே போதும். சிறுமதி படைத்தவர்களுக்கு கலகம் செய்வதற்கு ஏதோ காரணம் கிடைத்தால் போதாதா?


வரலாற்றுப் புத்தகங்கள் எழுதிக் கிடைக்காத புகழ் வெளிச்சம் ராமச்சந்திர குகாவுக்கு நேற்று 144 தடையை மீறிப் பரப்புரை செய்ய முயன்றதில் கிடைத்திருப்பது ஒரு வினோதம் என்றால் இந்த மேதாவிக்கு எங்கேயும் எதிலும் நரேந்திரமோடியும் அமித் ஷாவும் தோன்றிப் பயமுறுத்திக் கொண்டிருப்பது போலப் பீலா விட்டுக் கொண்டிருப்பது இன்னொரு வினோதம்! உசுப்பிவிடுவது ராஜ்தீப் சர்தேசாய் என்பதில் வினோதம் எதுவுமில்லை. கொல்கொத்தா டெலிகிராப் பத்திரிகையில் எழுதிக் கிழிப்பதற்கு குகாவுக்கு ஒரு விஷயம் கிடைத்து விட்டது.

   
இசுடாலின் ஒரு போராட்டத்தை சும்மாவா அறிவிப்பு செய்திருக்கிறார்? மாரிதாஸ் கொஞ்சம் விவரங்கள் சொல்கிறார். வீடியோ 18 நிமிடம்.

மீண்டும் சந்திப்போம்.      
     

தந்தி டிவி சலீம்! அப்பச்சியிடம் பேட்டி எடுக்கிறார்!

ப. சிதம்பரத்துக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் தந்தி டிவிக்கு வந்திருக்கிறது என்பதை எப்படிப் பார்ப்பது? தன்னுடைய முட்டுகொடுக்கிற வேலையில்   தந்திடிவி சலீம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்? பானாசீனா நோகாமல் நெளியாமல் வெற்றிலைசுருளை மெல்வதுபோல வாசாலகமாகப் பேசக் கூடியவர் என்பது தெரிந்துமே கூட சரியான ஹோம் ஒர்க் செய்யாமல் சலீம் பேட்டி காண்கிறார்.


வீடியோ 40 நிமிடம்.  செட்டியாரிடம் நோண்டி நோண்டிக்  கேள்வி கேட்கக்கூடாது என்று சலீமுக்கு நெருக்கடி வந்திருக்கலாம். பூப்பூவென்று அப்பச்சி ஊதித்தள்ளி விட்டு பேட்டியை முடித்து விடுகிறார்.

சலீமைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.        

கொஞ்சம் கொறிக்க! #அரசியல் இன்று!

"in a healthy democratic and political environment, dissent is a necessary component." என்று சட்டப்பல்கலைக் கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகச் சொல்லியிருப்பதை, பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்கள் அரசியல் சாசனத்தின் முகவுரையைப் படிக்க ஆரம்பித்திருக்கிற செய்தியை என்னமாதிரி எடுத்துக் கொள்வது?



சதீஷ் ஆசார்யா மாதிரிக் கார்டூனிஸ்ட் கிறுக்கர்கள் பார்வையில் வன்முறையில் இறங்கினாலும் மாணவர்களைப் போற்றிப்பாடடி பொண்ணே கதை தான் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதே இல்லை. எந்த ஒரு சமூகத்திலும்  உரிமைகளைப்  பேசுவதற்கு முன்னால், சில கடமைகள், பொறுப்பு இவைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டும். பொறுப்பற்ற போராட்டங்கள், வன்முறைகள், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பதெல்லாம் என்ன மாதிரியான dissent? மாற்றுக் கருத்து, எதிர்ப்புக் குரல்  இருக்க வேண்டியதுதான்! அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய லைசன்ஸ் கொடுக்கப் பட்டிருப்பதாக எடுத்துக் கொள்ள முடியுமா? ON the Rule of the Road என்ற கட்டுரையில் A G Gardiner சொல்லி இருப்பதை இந்தப்பக்கங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்காட்டியிருக்கிறேன்.  In "On the Rule Of the Road" by A. G. Gardiner, says liberty is not a personal affair only, but a social contract. கட்டற்ற சுதந்திரம் என்பதே கவைக்குதவாத வெறும் பேச்சு. அதுவும் போக மாற்றுக்கருத்து, எதிர்ப்புக் குரல்கள் கண்ணியமான வழிகளில் தான் வருகிறதா? இல்லை என்றால் அந்த எதிர்ப்புக்குரல், மாற்றுக்கருத்துக்கு மரியாதை ஏது?      


சேகர் குப்தா காமெடிகளைப் பார்த்து நாட்கள் ஆகி விட்டது இல்லையா? பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகளோடு கொஞ்சம் ராகுல் காண்டியை ஒப்பிட்டு, தலைவராக வெற்றியா? தோல்வியா? என்று ஆராய்ந்து பார்க்கிறார்.  காஷ்மீரில் ராணுவத்தின் மீது கல்லெறிந்து விட்டு ஓடிப்போகிற விடலைகள் மாதிரி ட்வீட்டரில் மட்டுமே பெரும்பாலான தருணங்களில் அரசியல் நடத்துகிற ஒரு விடலை ராகுல் காண்டி! அவ்வளவுதான்!    கட்சித்தலைவர் பொறுப்பைத் தட்டிக் கழித்து ஓடிப் போனவரை சோனியா வேண்டுமானால் மீண்டும் கட்சித் தலைவராக்கிப்பார்க்க ஆசைப்படலாம். ஆனால் தேசம் இந்தக் கோமாளியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறதா என்ன!? வீடியோ 15 நிமிடம். 

ஜாவேத் அக்தர்! ஹிந்தித் திரைப்படங்களில் பாட்டு எழுதுகிறவர்! ட்வீட்டரில் சட்டம் போதிக்கிறார். சும்மா விட்டுவிடுவார்களா என்ன? ஒரு ஐபிஎஸ் அதிகாரி எதிர்க் கேள்வி ஒன்றை எழுப்புகிறார்.

இதைப் பதிவிடுகிறவரை ஜாவேத் அக்தரிடமிருந்து, ஆதரவாளர்களிடமிருந்து  பதில் எதையும் காணோம்! இன்றைக்கு இதே  ரீதியில் உச்சநீதிமன்றத்தில் இந்திரா ஜெயசிங் என்ற வழக்கறிஞர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் சார்பில் வாதாடிக் கொண்டு இருக்கிறார். நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 

இன்றைக்கு இசுடாலின் காமெடி  என்னவென்பதைப் பார்க்காமல் பதிவை முடிப்பதா? Never! 


மதன் ரவிச்சந்திரன் ட்வீட்டரில் லந்து அடிக்கிறார்!

மீண்டும் சந்திப்போம்.           
  
          

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் சீர்திருத்தங்கள்!

இன்றைக்கு பிசினெஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் சில சுவாரசியமான செய்திகளைப் பார்த்தேன். நம்மூர் வங்கிகளில் நடந்துகொண்டிருப்பதென்ன என்பது தெரியாமலேயே இங்கே நிறையப்பேர் வராக்கடன் சுமை கூடிவருவது பற்றிக் கூவிக் கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் இல்லையா?


பொருளாதாரப்புளி  பானாசீனா நிதியமைச்சராக இருந்த காலத்தில் வெளிநாட்டு  முதலீடுகள் (என்ற போர்வையில் உள்ளூர்க் கறுப்புப்பணமே) குவிந்ததும் வங்கிகள் ஏகப்பட்ட கடன்களை வாரிவழங்கியதும்  இப்போதுள்ள பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருந்தது என்பதை நம்மில் பலரும் மறந்து விடுகிறோம். உதாரணமாக அப்பன் சேர்த்து வைத்த சொத்தில் ராஜபோகம் அனுபவித்ததைத் தவிர, விஜய் மல்லையா என்கிற நபருடைய தொழில் நடத்துகிற சாமர்த்தியம் என்ன? ப்ராண்ட் இமேஜ், வால்யூ என்ன என்பதைச் சரியாக கணிக்க  முடியாமல் வெறும் பெயரை மட்டும் வைத்துக் கடன் கொடுத்ததில் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் கதை என்ன ஆயிற்று? விஜய் மல்லையாவை ராஜ்யசபா எம்பியாக்கினது எதற்காக? எவர் காலத்தில்? இதையெல்லாம் கேட்கமாட்டோம் ஆனால் லண்டனுக்கு ஓடிப்போகவிட்டது மோடிதான் என்று கூசாமல் சொல்கிற காங்கிரஸ்காரன் பேச்சைக் கேட்போம் என்றால் என்ன அர்த்தம்? அதே நரேந்திர மோடி காலத்தில் தான் வராக்கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்பதை அறிந்திருக்கிறோமா? அந்த நடவடிக்கைகளினால் குறுகிய காலத்திலேயே நல்ல பலனும் கிடைத்து வருவதை அறிந்திருக்கிறோமா?

 என்று 2016 இல் அறிமுகப் படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் இதுவரை 21136 தாவாக்கள் எழுப்பப்பட்டதில் சுமார் 9653 தாவாக்கள் அறிமுக நிலையிலேயே டிஸ்போஸ் செய்யப் பட்டிருக்கிறது, இவை  சுமார்  3, 74,931 கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இவற்றில் 2838 தாவாக்கள் கார்பரேட் நிறுவனங்கள் மீதானவை. இவற்றில் 306 தாவாக்கள் அப்பீல்/மறுபரிசீலனை/திரும்பப்பெறப்பட்டவை என்ற வகையில் அடங்கும். அதுபோக தீர்வு எட்டப்பட்ட 156 தாவாக்களில் கிடைக்கக் கூடிய தொகை 1,56,814  கோடி ரூபாய்கள் என்று அரசு தகவல் தெரிவித்திருப்பதாக  இந்தச்செய்தி சொல்கிறது. சரியாக  உள்வாங்கிக் கொள்கிறோமா? சென்ற வாரம் IBC சட்டத்தில் சில கூடுதல் திருத்தங்களை செய்வதற்கான திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்ய முயன்றபோது காங்கிரசின் அதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக எதிர்த்ததை அறிவீர்களா?  

பெயர்க்கொள்ளை ஒரிஜினல் காந்தியின் சம்மதத்துடனே தான் நடந்தது 
என்று சொல்பவர்களும் உண்டு 

ஆனால் பெயரைத் திருடிப் பின்னிணைப்பாக வைத்துக் கொண்டிருப்பதனாலேயே ராகுல் காண்டிக்கு அஹிம்சை, சத்தியாக்கிரகம் பற்றியெல்லாம் உபதேசம் செய்கிற தகுதியோ புத்தியோ வந்துவிட்டதா?

டூப்ளிகேட்டுகள் உபதேசம் செய்யவந்தால் கிடைக்கிற பதில் என்னவாக இருக்கும்? JMI மாணவர்களோடு சேர்ந்து போராடப்போகலாமே ராகுல்! டில்லிப் போலீஸ் அவர்கள் சேவையைச் செய்யட்டும்! என்கிறார் ஒருத்தர்! தகுதியில்லாத தற்குறிகளுக்கு இப்படித்தான் பதில் கிடைக்கும்.

கொஞ்சம் அலுப்பை மாற்ற

நடனம் ஆடும்போது
நான் மூத்த எழுத்தாளரின் காலை மிதித்துவிட்டேன்.
அவர் "என்னைக் கொல்ல சதி!" என்ற பெயரில் தி ஹிந்துவுக்குத் தொடராக எழுதினார்.
அங்கே இட நெருக்கடி ஏற்பட்ட போது
முக நூலில் எழுதினார்.
அங்கே லைக்குகள் விழாதபோது
தன் வீட்டுச் சுவரில் எழுதினார்.
அவர் எழுதி எழுதி பாத் ரூம் சுவரில் ஓட்டை
விழுந்தபோது
வீட்டுக்காரர் வீட்டைக் காலி பண்ணச் சொன்னார்
அவர் 'என்னைக் கொல்ல சதி!"இரண்டாம் பாகத்தை எழுதி 
புக் பேரில் வெளியிட்டுவிட்டார். 

ஆனால் அரசியல் பிராணியான எனக்கோ  அந்த நாட்களில் குடமுருட்டி குண்டு-என்னைக் கொல்ல சதி என்று கருணாநிதி கூவியதும், இசுடாலின் மீது கத்தி வீசப்பட்டதாக ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டதும் தான் நினைவுக்கு வருகிறது. என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

மீண்டும் சந்திப்போம்.

சண்டேன்னா மூணு! #அரசியல் ராகுல் காண்டி! டாக்டர் சுவாமி! உ.நிதி!

ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பிரசாரங்களிலும் சரி, அகில இந்திய அரசியலிலும் சரி, மறுபடி ராகுல் காண்டியை  முன்னிறுத்துகிற விதமாக சோனியா முனைந்திருப்பது, தெரிகிறதா? ஆயிரம் தான் பிரியங்காவும் ஊட்டுக்கார் வாத்ராவும் காங்கிரசைக் கைப்பற்ற விரும்பினாலும், சோனியாவின் சாய்ஸ் பப்புதான் என்பது பல சந்தர்ப்பங்களிலும் நிரூபிக்கப் பட்டிருப்பது போலவே இப்போதும் கூட நடந்து வருவதை டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைத் தவிர வேறு யார் இத்தனை தெளிவாகச் சொல்லி விட முடியும்? சொல்லுங்கள் பார்க்கலாம்!


கடந்த சிலநாட்களாகவே ராகுல் காண்டியின் உளறல் அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. ராகுல் காண்டி பேசுவதற்கெல்லாம் என்ன மரியாதை கிடைக்கும்?  இந்த 9 நிமிட வீடியோவில் டாக்டர் சுவாமி நறுக்குத் தெறித்தாற்போல பதில் சொல்கிறார். மணிக் கணக்கில் காங்கிரஸ்காரர்கள் பேசுவதற்கெல்லாம் விடை இங்கேயே கிடைத்துவிடுகிறதோ? பாருங்களேன்!


காங்கிரஸ்காரர்களுடைய யோக்கியதை என்ன? திரும்பிப் பார்ப்பதற்கு உதவியாக சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் துக்ளக் ஆண்டுவிழாவில் ஆசிரியர் சோ பேசியது கிடைக்கிறதே! வீடியோ 48 நிமிடம் முதல் பத்து நிமிடங்களிலேயே சோ உங்களுக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறாரே! இது என்ன அதிசயம்!


டாக்டர் ஜாகிர்  ஹுசைன் என்று ஒரு ஜனாதிபதி இருந்தாரே, நினைவிருக்கிறதா? காங்கிரஸ் கட்சியில் இருந்த கல்வியாளர். பீகார் கவர்னர்   துணை ஜனாதிபதி அப்புறம் ஜனாதிபதி என்றானாலும் அமைதியாக, இஸ்லாமிய மக்களுடைய கல்வியில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வந்தவர். தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று 1920 இல் உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பித்து 1925 வாக்கிலேயே டில்லிக்கு இடம் பெயர்ந்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா என்ற பெயருடன் வளர்ந்த பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில் டாக்டர் ஜாகிர்  ஹுசைன் பங்கு மகத்தானது. ஆனால் அங்கேயும் அரசியல் புகுந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஆட்டுவிக்கிறது. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் ஆரம்பித்த போராட்டத்தில் வன்முறையும் இருந்தது போலவே போலீஸ் தடியடிப் பிரயோகமும் நடந்தது. 


பல்கலைக்கழக நிர்வாகம் வெகு அசாதாரணமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. சென்ற   வெள்ளிக் கிழமை நடந்த வன்முறைக்கும்                JMIயில் பயிலும்  மாணவர்களுக்கும் சம்பந்தமில்லை. சுற்று வட்டாரத்தில் இருந்து வந்த அந்நியர்கள்தான் வன்முறை  நடத்தியது என்கிறார்கள்! மத்திய அரசின் நிதியுதவியோடு நடக்கிற JMI, JNU மாதிரியான பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அரசியலுக்கு இழுத்து கலவரங்கள்உ , போராட்டங்கள் நடத்தி வருவதன் பின்னணியில் யார்யார் இருக்கிறார்கள் என்பதை இந்தப்பக்கங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். 

குறுகிய ஆதாயங்களுக்காக இங்கே அரசியல்வாதிகள் என்னென்ன செப்படி வித்தைகள் காட்டுவார்கள், கலகத்தைத் தூண்டுவார்கள் என்பது தெரிந்த விஷயம் தான்! பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுகிற வேலையை மம்தா பானெர்ஜி,ராகுல் காண்டி முதற்கொண்டு இன்றைக்கு அரசியலுக்கு வந்திருக்கிற உ''னாநிதி வரை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள், நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கத்தான் வேண்டுமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.            

இட்லி வடை பொங்கல்! #54 ஜோதிமணி! ராகுல் காண்டி! மதன் ரவிச்சந்திரன்!

நாடாளுமன்ற விவாதங்களில் பலரும் ஆவேசமாகப் பேசி கவனத்தை ஈர்ப்பார்கள். மிகப்பலர் தூங்கியே நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கெடுப்பார்கள்! அப்படித் தூங்கி, விவாதப்பொருளாக ஆகியிருப்பவர் கரூர் தொகுதியின் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மீது காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி ஆவேசமாகப் பேச ஆரம்பித்த 3வது நிமிடத்திலேயே பின்வரிசையில் ஜோதிமணி ஆனந்தமாகத் தூங்க  ஆரம்பித்து விட்டார்!  இப்போதாவது கவனியுங்களேன்! ஒரு 7நிமிடத்தூக்கம் கலைந்து முழித்துப்பார்த்துவிட்டு மறுபடி தூங்கப் போய்விடுகிறார்! பாவம் மணீஷ் திவாரி! முதுகுப் பக்கம் பார்க்கிற வசதி மட்டும் இருந்திருந்தால் நொந்தே போயிருப்பார்! 


நம்மூர் எம்பிக்களுடைய யோக்கியதை அவ்வளவு தானே! இது என்ன பிரமாதம் என்று போய்விட வேண்டியது தானே?


ஆனால் எழுத்தாளர் மாரிதாசுக்கு அப்படி ஒதுங்கிப்போக விருப்பமில்லையாம்! கரூர் எம்பி ஜோதிமணியின் நாடாளுமன்றச் செயல்பாடுகள் எப்படி என்பதை இந்த 18 நிமிட வீடியோவில் அலசிக் காயப் போடுகிறார். ஒரு சாதாரண அட்டெண்டர் வேலைக்குக் கூடக் குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசத்தில், சட்டம் இயற்றுகிற அதிகாரம் படைத்த நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினருக்கு, அரசியல் சட்டம், சட்டம் இயற்றுவதென்றால் என்ன என்பதைப் பற்றிக் கொஞ்சமும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை என்பது எத்தனை பெரிய நகைமுரண்? யோசித்துப் பாருங்களேன்!
     
     

நேருவுடைய வாரிசுகள் எவருமே படிப்பாளிகள் இல்லை! சுத்தமான தறுதலைகள், தற்குறிகள் என்பதை எழுதி எழுதி எனக்கே அலுத்து விட்டது. 


  
பன்றிகளுக்கு முத்தின் அருமை பெருமை எதுவும் புரியாது என்பதுதான் பிபிசிக்காரர்களுக்குச் சொல்ல வேண்டிய சரியான பதிலாக இருக்கும்! சரிதானே!!


இந்திரா வாரிசுகளுக்கு புத்தி அவ்வளவுதான்! இனிமேல் காங்கிரசை அந்த ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்பது மட்டும் தெளிவாகிக் கொண்டே வருகிறது. பிஜேபிக்கு சரியான அரசியல் மாற்று இடதுசாரிகளிடமிருந்து தான் வரமுடியும் என்ற நிலையில் இங்கே இடதுகள் திமுகவிடம் அண்டிப்பிழைக்கிற கும்பலாகக் குறுகிப் போய்க்கிடக்கிறதே! 


திமுகவின் தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கு IPac என்ற ஏஜென்சியை நடத்திவரும் பிரசாந்த் கிஷோர் வந்திருப்பது நிறைய சர்ச்சைகளை கட்சிக்குள்ளேயே உருவாக்கி இருக்கிறது. பிரசாந்த் கிஷோரைப் பற்றி ஒரு சுவாரசியமான செய்தி, ஜெயிக்கும் என்று தெரிகிற பக்கம் வலுவில் வந்து ஒட்டிக் கொள்கிறவர், இவரிடம் தலையைக் கொடுப்பதில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது முதல் எந்தத் திக்கைப் பார்த்து என்ன பேச வேண்டும் என்பதுவரை பிரசாந்த் கிஷோருடைய தலையீடு நிறைய இருக்கும் என்பதாக. திமுகவுக்கு இது புதிதா என்ன? இசுடாலின் முன்னணிக்கு வர ஆரம்பித்த நாட்களில் இருந்தே மாப்பிள்ளை, கிச்சன் கேபினெட் என்று பலவிதமான ஆதிக்கங்கள் இருந்து வருவது தெரிந்ததுதானே! அந்தவகை லிஸ்டில் இன்னும் ஒன்று சேர்ந்து கொள்கிறது என்று விட்டுவிடாமல் மதன் ரவிச்சந்திரன் ஒரு விவாதம் நடத்துகிறார். வந்தவர்களும் நன்றாக சவுண்டு கிளப்புகிறார்கள்! வீடியோ 56 நிமிடம். பொழுதுபோக்க ஒரு  நல்ல விவாதம்! அதற்குமேலே என்ன சொல்வது?

மீண்டும் சந்திப்போம்.  
           

#1130 பழ கருப்பையா! புலி பல்டியும் அடிக்கும்! Sit down!

இங்கே பழ கருப்பையா  மாதிரியானவர்களுக்குக் கூட திடீர் திடீரென புத்திக் கொள்முதல் செய்து கொள்கிற நேரம் வாய்த்துவிடுவதைப் பார்க்கையில்  உண்மையிலேயே சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் சீரழிந்து போன அரசியல் சிரிக்க வேண்டிய விஷயம் தானா? ஜனநாயகம் பற்றி பழ. கருப்பையா சொல்கிற சில விஷயங்களை யோசிக்க வேண்டாமா? செந்தில் பாலாஜி போன்றவர்களைப் பற்றி அவர் சொல்வதில் தவறு இருக்கிறதா?


போகிப்பண்டிகை என்று ஆகாவரிகளைக் கழித்துக் கட்டுகிற மாதிரி அரசியலிலும் ஆகாதவைகளைக் கழித்துக் கட்ட ஜனங்களாகிய நாம் உறுதி கொள்கிற போது, ஜனநாயகம் செழித்து வளர்கிற வாய்ப்பும் கூடவே உருவாகிறது. அரசியலில் களைகளின் ஆதிக்கமே மிகுந்திருக்கிறதென்றால்,குற்றம் நம்முடையதே! பழ கருப்பையாவிடம் இருக்கிற பெரிய கோளாறு என்னவென்றால் கொஞ்ச நேரம் பேசவிட்டால், எங்கெங்கேயோ இழுத்துக் கொண்டு போய் ஆளைவிட்டால் போதும் சாமி என்றாக்கி விடுவார். இதை இந்த 29 நிமிட வீடியோவிலேயே அனுபவிக்க முடியும். அனுபவித்துத் தான் உணரலாமே!


புலிகள் (என்று சொல்லிக் கொள்பவர்கள்) பசித்தால் புல்லும் தின்பார்கள்! பூசாரி உடுக்கடித்தால்  தலை கீழாக பல்டியும் அடிப்பார்கள் என்று நக்கலடிக்கிறார் சதீஷ் ஆசார்யா! சரிதானே என்கிறீர்களா? ஆனால் உடுக்கடிப்பவர் யாரென்று சொல்லவில்லையே! 


மக்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, ராஜ்யசபாவில் ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்தார்களாம்! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி வேறு, மறுபடியும் ஹிந்துத்வ சக்திகள் ஒன்றுசேரவேண்டும் என்று புதுக்கரடியை ஆரம்பிக்கிறார்.

      
R பிரசாத் வரைந்திருக்கிற இந்த கார்டூனோடு பொருத்திப் பாருங்கள்! சிவசேனா  தமாஷா மிக நன்றாகப் புரியவரலாம்! 


இந்தியா உலகின் கற்பழிப்புத் தலைநகரமாக மாறி விட்டது என்று ராகுல் காண்டி உளறியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அப்படிச் சொன்னதற்காக மன்னிப்புக் கோரவும் போவதில்லை என்று சூளுரை செய்திருக்கிறார். திமுகவின் கனிமொழி வந்து வக்காலத்து வாங்குகிற அளவுக்குப் பரிதாபமான நிலையில் இருக்கிற ஒருத்தருக்கு இத்தனை வீம்பு ஆகாதுதான்! என்ன செய்ய? அதலபாதாளத்தில் விழுந்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கிற ஆசாமிகளுக்கு என்ன புத்தி சொல்வது? அதெல்லாம் போகட்டும்! இந்த வீடியோவின் ஆரம்பத்தில் TR பாலு கனிமொழியிடம் உட்காரும்மா என்று சொல்வதும் கனிமொழி அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பேச ஆரம்பித்ததையும் கவனித்தீர்களா?


செய்தியின் முழுப்பரிமாணத்தையும் புரிந்துகொள்ள இந்த 26 நிமிட வீடியோவைப் பார்த்து விடுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

         
  

இங்கிலாந்து தேர்தலும் இளம்பருவக கோளாறும்!

பிரிட்டனில் நேற்றைக்கு ஒரு பொதுத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அங்கே 650 இடங்களில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 358 முதல் 368 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று செய்திகள் சொல்கின்றன. போரிஸ் ஜான்சன் ஜெயித்து மீண்டும் பிரதமராகிறார் என்று சொல்வதைவிட ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்று பிரிட்டன் எடுத்த முடிவுக்கு ஆதரவாகவே வெகுஜன ஆதரவு இருக்கிறது என்று மட்டுமே இதை எடுத்துக் கொள்ளமுடியும் என்று சொல்கிறார்கள்.


மெஜாரிட்டியோடு ஜெயித்ததனால் போரிஸ் ஜான்சன் இன்னுமொரு முறை பிரதமராகிறார். ஜெயித்த வேகத்தோடு கிறிஸ்துமசுக்கு முன்னாலேயே Brexit குறித்த தனது தரப்பை நாடாளுமன்றத்தில் மறுபடி முன்வைக்கிற வாய்ப்பு ஜான்சனுக்குக் கிடைத்திருக்கிறது. வெளியிலிருந்து ஆதரவை எதிர் பார்க்க வேண்டிய அவசியமில்லை. Boris Johnson may be prime minister for a long time, but he may be the last prime minister of the UK. என்று   இந்தத் தேர்தல் முடிவுகளைக் குறித்து ஜான் ரெண்டோல் சந்தேகப்படுகிறார்   

பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து நாடாளுமன்ற ஜன நாயகத்தை மட்டும் இரவல் வாங்கினோமா அல்லது அதில் இருந்த குழப்பங்களை மட்டும் சுவீகரித்துக் கொண்டோமா என்ற சந்தேகத்தில் அவ்வப்போது அங்கே நடப்பதையும் இங்கே நடப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கிற கெட்ட வழக்கம் என்னிடம் இருக்கிறது. என்ன செய்வேன்?

  
அம்ரிந்தர் சிங்  மம்தா பானெர்ஜி, பிணரயி விஜயன்  முதலான எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கடைப்பிடிக்கிற மோதல் போக்கு, ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. அதேபோல இங்கே தமிழகத்தில் திமுகவும் ஒரு பப்ளிசிட்டி அடித்துப் பார்த்திருக்கிறது.

   
இந்தமாதிரி இளம்பருவக் கோளாறுகளுக்குச் சரியான பதில் சொல்ல ஆளே இல்லையா? ஏனில்லை? நான் இருக்கிறேனே என்று விவாதக்களத்தில் இறங்குகிறார் மதன் ரவிச்சந்திரன்!

  
இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருவித பதட்ட உணர்வைத் தூண்டுவதைத் தவிர இங்கே திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுடைய நோக்கம் வேறென்ன?  விவாத நேரம் 59 நிமிடம். நேரம் ஒதுக்கிப் பாருங்களேன்! 

மீண்டும் சந்திப்போம். 


கொஞ்சம் தெரிந்து கொள்வோமே! குடியுரிமைச் சட்டத் திருத்தம்!

இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்து இருக்கிறோம்? இங்கே அரசியல்வாதிகள் போட்டுக் குழப்புவதில், எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறோம்?


நரேந்திர மோடி அரசு என்ன செய்தாலும் அதைக் கண் மூடித்தனமாக எதிர்ப்பதையே தொழிலாக வைத்திருக்கும் NDTV கூடத் தங்களை நியாயவான்களாக காட்டிக் கொள்ள வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயிடம் ஒரு நேர்காணலை நடத்துகிறது. 19 நிமிடம் தானென்றாலும் ஹரீஷ் சால்வே நேற்றைக்கு காசுக்கார காங்கிரஸ் வக்கீல்கள் நாடாளுமன்றத்தில் இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்டப்படி செல்லுபடியாகாதது என்றெல்லாம் கொஞ்சம் மிரட்டுகிற மாதிரி விவாதம் செய்ததில் இருந்த மாயைகளை முதலிலேயே உடைத்து விடுகிறார். அரசியல் சாசனத்தின் 14 வது பிரிவுக்கு எதிரானது என்பது வெறும் கற்பனையானது. நீதிமன்றத்தில் நிற்குமா நிற்காதா என்ற வாதமும் கூட மிகவும் அசட்டுத் தனமானது. யாருக்கு குடியுரிமை அளிப்பது என்பது கொள்கை முடிவு, நீதிமன்றங்கள் பெரும்பாலும் அதில் தலையிடுவது இல்லை. இதிலும் கூட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் இந்த  மூன்று நாடுகளிலில் இருந்து வந்த persecuted minorities என்று குறிப்பிட்டு, அவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப் படுவது பற்றி மட்டுமே பேசப் படுகிறது. இதில் இஸ்லாமியர்கள் குறிப்பிடப்படவில்லையே என்பதும் இங்கே இந்தியாவில் ஏற்கெனெவே வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பதும் கற்பனையான மத அரசியல் சாயம் பூசும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. இலங்கைத்தமிழர்களுக்கு எதுவும் சொல்லப் படவில்லையே என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனெவே அதற்காக தனி சட்டம் இருக்கிறது என்பதால் அதற்கான அவசியம் இல்லை என்று பதிலளித்திருக்கிறார். ஹரீஷ் சால்வே சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்.

                    
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து அஸ்ஸாம்  திரிபுரா மாநிலங்களில் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்திருப்பதில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தின் உதவி கோரப்பட்டிருக்கிறது. இங்கே எதிர்ப்புக்கான காரணம் வேறுவிதம். சேகர் குப்தா இந்த 25 நிமிட வீடியோவில் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் சூழ்நிலையைக் கொஞ்சம் சொல்கிறார். அரசுக்கு எதிரான கருத்தை உடையவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பது அவர்கள் சொல்வதை அப்படியே  ஏற்றுக்கொள்வது என்றல்ல, மாற்றுக்கருத்தை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே.

  
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேற்றைக்கு ராஜ்யசபாவில் பேசியது இன்னும் கொஞ்சம் இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. வீடியோ 10 நிமிடம். ஆர்டிக்கிள் 14 பற்றிப் புரிந்துகொள்ளவேண்டுமானால் A R அந்துலே வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பில் விரிவாக இருக்கிறது என்று சொல்கிறார்.  

காணொளிகளைக் கவனமாகப் பாருங்கள்! மீண்டும் சந்திப்போம். 
   

குடியுரிமைச் சட்டத் திருத்தமும் வாக்குவங்கி அரசியலும்!

மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துபேச ஆரம்பித்தபோது பல எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அரைகுறை மீறி நடந்து கொண்டதில்  அவைத்தலைவர் உத்தரவின் பேரில் நேரடி ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு அவை ஒழுங்குக்கு வந்தபிறகு மீண்டும் தொடங்கியது என்ற செய்தி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் எவரையும் தலைகுனியச் செய்கிற ஒன்று. உளறுவாயர் கபில் சிபல் பேச ஆரம்பித்தவுடன் ராஜ்யசபா நேரலையை நிறுத்திவிட்டு, வேறு செய்திகள், காணொளிகள் என்று பார்க்க ஆரம்பித்ததில் இந்த 38 நிமிட காணொளி கிடைத்தது.


2008 ஜனவரியில் நடந்த துக்ளக் இதழின் 38வது வருடக் கூட்ட நிகழ்வின் முதற்பகுதி இது. இதன் முதல் பத்துப் பன்னிரண்டு நிமிடங்களைக் கவனித்தீர்கள் என்றால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்! இன்றைய நடப்போடு 11 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியது எந்த அளவுக்குப் பொருந்திப் போகிறது என்பதைப் பார்க்கும் போது சோ அவர்களுக்கிருந்த தொலைநோக்குப்பார்வை தெளிவான கருத்துக்கள் என்று ஒவ்வொன்றையும் பார்த்து மிகவும் வியந்து போனேன். #GoBackModi என்ற அசிங்கத்தை 2008 இலேயே இங்கே ஆரம்பித்து விட்ட விஷயம் கூட! சோ அதைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்களேன்!  இங்கே சட்ட விரோதமாகக் குடியேறுகிறவர்கள் பற்றி  பிஜேபி, அந்த நாட்களிலேயே என்ன கருத்தை கொண்டிருந்தார்கள் என்பது ஏற்கெனெவே தெரிந்த விஷயம் என்பதால், இன்றைக்கு குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் குறித்து எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. தவிர இந்த மசோதா கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப் பட்டபோது எதிர்க்கட்சிகளின் ரகளை காரணமாகத் திரும்பப்பெறப்பட்டது. ஆக இது ஒன்றும் புதிதாகக் கொண்டு வரப்பட்ட விஷயமல்ல. எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் இறங்குவதற்கு வாக்குவங்கி அரசியலைத் தவிர வேறு உண்மையான காரணம் எதுவுமில்லை. 

மக்களை பிரிக்கும் இத்தகைய மசோதா ..இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இதற்கு எதிராக நாங்கள் அனைத்து தளங்களிலும் போராடுவோம் - எச்சூரி
கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய ரத்த வரலாறுகளில் ஒன்றான 1978 மாரீச்சபி படுகொலைகளை..இந்நாட்டின் யெச்சூரிகளுக்கு நினைவூட்ட வேண்டிய தருணம் இது !
பங்களாதேஷிலிருந்து மாற்று மத அடக்குமுறையின் காரணமாக அடைக்கலம் கேட்டு மேற்கு வங்காள மாநிலத்திற்கு தப்பித்து வந்த ஹிந்துக்களை ..தண்டகாருண்ய காட்டுப் பகுதிகளில் அடைத்து வைத்ததும், மாரீச்சபி தீவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு குடிநீர் , உணவு போவதை தடுத்து நிறுத்தி பலரை சாகடித்ததும், அதன் பின்னரும் துப்பாக்கி சூடு நடத்தி பல நூறு பேரை கொன்று குவித்ததும்..என்று கம்யுனிஸ்டுகளின் மேற்குவங்காள ஆட்சி அதிகார கொடூரங்கள் மிக மிக அதிகம்.
வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள்..ஆட்சி அதிகாரம் கிடைத்த போதெல்லாம்..கொடும் ஹிட்லர்களாக மாறி.. மக்களை சொல்லொணா துயரத்திற்கும், படுகொலைகளுக்கும், பஞ்சம்- பட்டினி சாவுகளுக்கும் ஆளாக்கியது தான் உலக வரலாறு முழுவதும் பதிந்திருக்கும் உண்மைகள்.


தானே சட்டமும் நீதிபதியாகவும் தீர்ப்பாகவும் இருப்பதான மிதப்பில் பானாசீனா என்னென்னவோ சொல்கிறார் என்கிற ஒன்றே போதாதா இந்தச் சட்டத் திருத்தம் நியாயமானதுதான் என்று முடிவு செய்ய? அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் கலவரம் தூண்டப்  படுவதில் ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபா விவாதத்துக்குப் பதிலளித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார். அடுத்து வாக்கெடுப்பு இன்றே நடந்துவிடும் என்றுதான் தெரிகிறது. 

                                                          நேரடி ஒளிபரப்பு

இந்திய ஜனநாயக நடைமுறைகளில் கோளாறுகள் குறைபாடுகள் இருக்கலாம். ஆனாலும் இன்னமும் கூட நம்பிக்கை இருக்கிறது .

மீண்டும் சந்திப்போம்.