கொஞ்சம் தெரிந்து கொள்வோமே! குடியுரிமைச் சட்டத் திருத்தம்!

இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்து இருக்கிறோம்? இங்கே அரசியல்வாதிகள் போட்டுக் குழப்புவதில், எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறோம்?


நரேந்திர மோடி அரசு என்ன செய்தாலும் அதைக் கண் மூடித்தனமாக எதிர்ப்பதையே தொழிலாக வைத்திருக்கும் NDTV கூடத் தங்களை நியாயவான்களாக காட்டிக் கொள்ள வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயிடம் ஒரு நேர்காணலை நடத்துகிறது. 19 நிமிடம் தானென்றாலும் ஹரீஷ் சால்வே நேற்றைக்கு காசுக்கார காங்கிரஸ் வக்கீல்கள் நாடாளுமன்றத்தில் இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்டப்படி செல்லுபடியாகாதது என்றெல்லாம் கொஞ்சம் மிரட்டுகிற மாதிரி விவாதம் செய்ததில் இருந்த மாயைகளை முதலிலேயே உடைத்து விடுகிறார். அரசியல் சாசனத்தின் 14 வது பிரிவுக்கு எதிரானது என்பது வெறும் கற்பனையானது. நீதிமன்றத்தில் நிற்குமா நிற்காதா என்ற வாதமும் கூட மிகவும் அசட்டுத் தனமானது. யாருக்கு குடியுரிமை அளிப்பது என்பது கொள்கை முடிவு, நீதிமன்றங்கள் பெரும்பாலும் அதில் தலையிடுவது இல்லை. இதிலும் கூட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் இந்த  மூன்று நாடுகளிலில் இருந்து வந்த persecuted minorities என்று குறிப்பிட்டு, அவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப் படுவது பற்றி மட்டுமே பேசப் படுகிறது. இதில் இஸ்லாமியர்கள் குறிப்பிடப்படவில்லையே என்பதும் இங்கே இந்தியாவில் ஏற்கெனெவே வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பதும் கற்பனையான மத அரசியல் சாயம் பூசும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. இலங்கைத்தமிழர்களுக்கு எதுவும் சொல்லப் படவில்லையே என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனெவே அதற்காக தனி சட்டம் இருக்கிறது என்பதால் அதற்கான அவசியம் இல்லை என்று பதிலளித்திருக்கிறார். ஹரீஷ் சால்வே சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்.

                    
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து அஸ்ஸாம்  திரிபுரா மாநிலங்களில் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்திருப்பதில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தின் உதவி கோரப்பட்டிருக்கிறது. இங்கே எதிர்ப்புக்கான காரணம் வேறுவிதம். சேகர் குப்தா இந்த 25 நிமிட வீடியோவில் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் சூழ்நிலையைக் கொஞ்சம் சொல்கிறார். அரசுக்கு எதிரான கருத்தை உடையவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பது அவர்கள் சொல்வதை அப்படியே  ஏற்றுக்கொள்வது என்றல்ல, மாற்றுக்கருத்தை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே.

  
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேற்றைக்கு ராஜ்யசபாவில் பேசியது இன்னும் கொஞ்சம் இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. வீடியோ 10 நிமிடம். ஆர்டிக்கிள் 14 பற்றிப் புரிந்துகொள்ளவேண்டுமானால் A R அந்துலே வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பில் விரிவாக இருக்கிறது என்று சொல்கிறார்.  

காணொளிகளைக் கவனமாகப் பாருங்கள்! மீண்டும் சந்திப்போம். 
   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!