Showing posts with label அரசியல் கூத்து. Show all posts
Showing posts with label அரசியல் கூத்து. Show all posts

தேர்தல் திருவிழா! களைகட்டும் அரசியல் காமெடி!

இங்கே கூட்டணிகள் முடிவாகின்றனவோ, இல்லையோ, அரசியல் களத்தில் நிறைய மொக்கைக் காமெடிகள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருப்பதில் ஒரு குறைவும் இல்லை! 

என் எல்லாப்படங்களையும் சர்வக்கட்சி தலைவர்களுக்கு சிறப்புக்காட்சியாக திரைபிடல் செய்யவதுண்டு , இம்முறை திரு,உதயநிதி செல்வி தமன்னா நடித்து வரும் 22ல் வெளிவரும் திரைப்படத்திற்கு அவ்வாய்ப்பில்லை. கூட்டணிகள் தீர்மானிக்கின்றன பிரிவியூ காட்சிகளையும்..

புதிய ஜனநாயகம்! மாற்றம் ஒன்றே மாறாதது! சரிதானா?

இன்று காலை செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம்! இடையிடையே சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளையும் பார்த்துக் கொண்டே வந்ததில் கண்ணில் பட்ட ஒரு குட்டிக் கதை மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. ஹிட்லர் இறந்தபிறகு இந்த வீடியோவில் உள்ளதுபோல கிண்டல் செய்வதாகப் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம்!



Führerprinzip (leader principle) என ஒற்றைப்புள்ளியில் முடிகிற அதிகாரக் கட்டமைப்பை ஹிட்லர் உருவாக்க முடிவதற்கு முன் இருந்த ஒரு சபை நம்மூர் பார்லிமென்ட் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஒரு நாள் சபைக்கு ஹிட்லர் ஒரு கோழியுடன் வந்தாராம்! எதுவுமே பேசாமல் கோழியின்  இறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போட்டுக் கொண்டே வந்ததில் கோழி வலியால் துடித்தது. சபையில் இருந்தவர்கள் என்ன சொல்வது என்று  விழித்துக் கொண்டிருந்தபோது கடைசி இறகையும் பிய்த்து எறிந்தாகிவிட்டது கோழியைத் தரையில் வீசி எறிந்தார் ஹிட்லர். தன்னுடைய கோட் பைகளில் இருந்து தானியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இறைத்துக் கொண்டே நடந்தாராம்! சிறகுகள் பிய்க்கப்பட்ட கோழி வலியையும் மறந்து தத்தித்தத்தி தானியங்களைக் கொத்தித் தின்றபடியே ஹிட்லரின் காலடியில் வந்து விழுந்து கிடந்ததாம்! அப்போது ஹிட்லர் சபையைப் பார்த்து உலகப் பிரசித்தி பெற்ற இந்த வார்த்தைகளைச் சொன்னாராம்:

"ஜனநாயகநாடுகளில் வாழுகிற மக்கள் எல்லோருமே முடமான இந்தக் கோழியைப் போலத்தான்! ஆரம்பத்தில் அங்கே தலைவர்கள் மக்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து, திருடிக்கொள்வார்கள்; அப்புறம் நிவாரணம் என்று கொஞ்சம் கொடுத்து ஜனங்களுடைய நலம் விரும்பிகள் என்றாகி விடுவார்கள்!"   

#துக்ளக் வார இதழில் இப்படியெல்லாம் அட்டைப்படம் போடுவார்கள் என்று பயந்தோ மத்தியப்பிரதேசத்திலும் சத்திஸ்கரிலும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியேற்ற கையோடு விவசாயக் கடன்தள்ளுபடி உத்தரவில் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. இது இன்னும் 5 மாதங்களில் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான தூண்டில்புழு! இன்று செய்திகளில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசும் கடன் தள்ளுபடி அறிவித்திருக்கிறதாம்! புதுவிதமான ஜனநாயகம்  உருவாக்க முனைகிற இந்தப் போக்குக்கும் மேலே ஹிட்லர் கதைக்கும் உள்ள தொடர்பை விளங்கிக் கொள்ள முடிகிறதா?      


தூண்டிலில் புழுவைத்து வீசுகிறவன் மீன்கள் மீது இரக்கம் கொண்டா வீசுகிறான்? 

#இலவசங்கள் என்ற மாயை என்ற குறிச்சொல்லில் இந்தப்பக்கங்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். இப்போது #கடன் தள்ளுபடி என்கிற மாயை வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இதிலும் கூட நம்மூர் #களவாணி காங்கிரஸ் கட்சிதான் முந்திக்கொண்டு நிற்கிறது. 


******* 
வாசகர் கருத்தாக இப்படிக்கு கேலிச்சித்திரம் போட்டிருக்கிற இன்றைய ஹிந்து தமிழ் நாளிதழில் முகப்புச் செய்தியாக மம்தா பானெர்ஜி இப்படிப் பேசியதும் ‘‘பிரதமர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பேசுவது பொருத்தமானதல்ல. பிரதமர் பதவியை பொறுத்தவரை விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். தனிநபர்கள், கட்சிகள் மட்டுமே இதனை முடிவு செய்ய முடியாது. அனைத்துக்கட்சிகளும் அமர்ந்து இதனை முடிவு செய்யும். அதற்கான தருணம் வரும்போது அனைவரும் ஒன்றாக பேசி ஒத்த கருத்துடன் முடிவெடுப்போம்’’

ஆக இசுடாலின் வாள் கொடுத்து வாளேந்தி போஸ் கொடுத்துச் செய்த ராவுல்பாபா தான் பிரதமர் என்கிற பிரகடனம், வீரமுழக்கம் எங்கேயும் போணி ஆகவில்லை என்பது தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது தெரிந்துமே ஆனந்த விகடன் வகையறா உடன்பிறப்புகள் மட்டும் இன்னும் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

*******  
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து நரேந்திர மோடியா ராகுல்காந்தியா என்பதை முடிவு செய்து விடமுடியுமா? கொஞ்சம் கேளுங்கள்!  
    

சேனலை விட்டு வெளியேவந்த  பி!ன்னாலும் கூட ஊடகங்களில் ரங்கராஜ் பாண்டேவுக்கு இருக்கும் மவுசு கொஞ்சம் கூடக் குறையவில்லை என்பது ஆச்சரியம் தருகிற செய்திதானே! 


மண்டேன்னா ஒண்ணு! வேறென்ன அரசியல்தான்!

திராவிட அரசியல்  பழையநெனப்புடா பேராண்டி என்று பேசியே கடந்தகாலத்துக்கே போய் விடலாமென்று பார்க்கிறதோ? திமுக பொருளாளர் துரைமுருகன் கருணாநிதியின் கைராசி பற்றி இப்படிப் பேசியிருக்கிறார்!


2004 இல் கருணாநிதி ஐக்கிய முன்னணிக் கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்த ராசியோ என்னவோ, அவசரமாக UPA எம்பிக்கள் ஆதரவுக் கடிதத்தை ஜனாதிபதி மாளிகைக்கு எடுத்துக் கொண்டு ஓடியதும், அம்மணி தியாகசிகரமாகி ஒதுங்கிக்கொள்ள   டம்மிப்பீஸ் மன்மோகன்சிங் பிரதமரானதும் வரலாறு! அதே ராசிதான் இப்போதும் தொடரப் போகிறதோ? 

இசுடாலின் எப்படிப் பேசினார் என்பதையும் கொஞ்சம் கவனியுங்கள்!
   
மம்தா பானெர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், ஏன் டெலிவிஷன் காமெரா என்றால் ஓடோடிவரும் கேசரிவாலு உட்பட வடக்கே உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எவருமே சொல்லாத  நிலையில் இசுடாலின் மட்டும் முந்திக்கொண்டு ராவுல்பாபா தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டிய அவசரம், அவசியம் எங்கிருந்து வந்தது? #விசிக வின் திருமாவளவன் அறிக்கை வழியாக வழிமொழிந்த செய்தி இங்கே  

ஒருவார காலத்துக்கு முன்புதான் சந்திரபாபு நாயுடு கூட்டிய  கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் பற்றிய முடிவை, தேர்தலுக்குப்பின் கூடி தீர்மானிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.இசுடாலினுக்குத் தெரியாதா?

இப்படி பல ‘டும் டும்’ -கள் தான் ஸ்டாலினின் அவசர அறிவிப்புக்கான காரணமோ என்று ஐயப்படுகிறார் காவிரிமைந்தன். கூட்டத்தைச் சேர்க்கக் காட்டிய சாமர்த்தியத்தை கூட்டணி அமைப்பதிலும்  சீட் பங்கீட்டிலும் காட்டுவார்களா?

Citing sources, an NDTV report stated that TDP’s Chandrababu Naidu who was present when Stalin made his speech, was among the parties that that were not on board with Stalin’s suggestion. The others include Akhilesh Yadav’s Samajwadi Party, Mamata Banerjee,ய Banerjee’s Trinamool Congress, Farooq Abdullah's National Conference, Lalu Yadav's Rashtriya Janata Dal and the CPI(M). என்று பலகட்சிகளும் இசுடாலின் முழங்கி சிலமணிநேரத்திலேயே தங்களுடைய அதிருப்தியைப் பதிவு செய்திருக்கின்றன.
      
கருணாநிதி எட்டிப்பிடித்ததை எல்லாம் இசுடாலினும் எட்டிப்பிடிப்பார் என்று எதிர்பார்ப்பதே அதிகம் தானோ? 
 *******
மத்தியப்பிரதேசத்தின் 18வது முதல்வராக இன்று பதவியேற்றிருக்கிறார் #கமல்நாத்  யார் இவர்?


1984 #சீக்கியர்கள்படுகொலை காங்கிரஸ் குற்றவாளி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து டில்லி உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்திருக்கிறது. கீழ்க்கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து இந்தத் தீர்ப்பு இன்று காலை அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதேபோல #சீக்கியர்கள்படுகொலை யில் சம்பந்தப்பட்ட காங்கிரசின் ம.பி முதலமைச்சர் #கமல்நாத் தண்டிக்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
     

சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #6

#இட்லிவடைபொங்கல் என்ற தலைப்பு பதிவர் உண்மைத் தமிழன் ஆரம்பித்து வைத்தது. சனிக்கிழமை! இட்லிவடைபொங்கல்! என்று தலைப்பிட்டு ஐந்து பதிவுகளே எழுத முடிந்தது.
ஐந்தாவதாக எழுதியது இங்கே     நல்லதலைப்பு என்பதால் தொடர்ந்துவரும் ஆறாவது பதிவு இது. நான் மறந்து விட்டாலுமே கூட கூகிள் தேடலில் நினைவு படுத்துகிற விதமாக இப்படி எடுத்துக் கொடுக்கிறது!
******* 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசைக் கண்டித்து  #வைகோ ஒரு மேடையில் பேசியது இது.  . #வைகோ வை சமாதானப்படுத்த  திருமாவளவன் முயற்சித்தார் என்றாலும் அதைத் தொடர்ந்த விவாதங்களும் சர்ச்சைகளும் இன்னமும்  ஓய்ந்தபாடில்லை என்பதை இந்தக் கட்டுரை சொல்கிறது    என்னுடைய நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறார் #வைகோ என ஆவேசப்படுகிறார்  திருமாவளவன் என்று  இந்தத் தொலைகாட்சி விவாதத்துக்குத் தலைப்பு!பாருங்கள்!
  
திருமாவளவன் தன்னுடைய நிலை என்ன என்பதைப்  புரிந்துகொண்டு தான் பேசுகிறார் என்றால் இயக்குனர் பா.ரஞ்சித் இன்னொரு புறத்திலிருந்து  பேசுவது வெறும் ஆர்வக்கோளாறு என்று தள்ளிவிடமுடியுமா? ரஞ்சித்  அம்பேத்கரை காரணத்தோடு தான் முன்னெடுக்கிறார். திருமாவளவனும் கூட தேர்தல், கட்சி  அரசியலுக்காகத் தான் ரஞ்சித் அழைப்பை நிராகரித்திருக்கிறார் என்பது அரசியலைக் கவனித்து வருகிறவர்களுக்குப் புரியும்.

*******

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களில் காங்கிரஸ் தலைவர் அதிகம் கையிலெடுத்தது ரஃபேல் விமான பேர ஊழல்! உச்சநீதிமன்றத்தில் மோடி எதிர்ப்பாளர்கள்  5 பேர் முறையிட்டதன் மீதான தீர்ப்பு, அரசு முடிவெடுத்ததில் எந்தத்தவறையும் காண முடியவில்லை என்று வந்திருக்கிறது. அதைக்குறித்த கேலிச்சித்திரம் ஒன்று இது.

    
காங்கிரஸ் தலைவர் எந்த அளவுக்குப் பொறுப்பானவர் என்று சொல்வதாகவும் கூட!

வலையெழுத்து பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்து என்ன என்பதைச் சொன்னால் தானே தெரியும்? சொல்வீர்களா?    

சண்டேன்னா மூணு! கேஜ்ரிவால்! முகுல் ராய்! நேரு!

எதிர்பார்த்தபடியே டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாக் கட்சிக்குக் கொஞ்சம் கசப்பு மருந்தைப் புகட்டியிருக்கிறது. எதிர்பாராத தகவல் என்னவென்றால் கேஜ்ரிவால் முதல்வராக இருப்பார், ஆனால் எந்த இலாகாப் பொறுப்புமில்லாதவராக இருப்பார் என்பது மட்டும் தான்! மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இல் ஆம்ஆத்மிகட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதும் பதிவான வாக்குகளில் சுமார் 54% ஆம் ஆத்மி கட்சிக்கே கிடைத்திருக்கிறது என்பதும் மேலோட்டமாக கேஜ்ரிவால் ஆதரவாளர்களுக்கு இனிப்பான சேதியாக இருக்கலாம்.ஆனால்,டில்லி மக்களுடைய எதிர்பார்ப்புகளை வரு எந்த சாக்கும் சொல்லி திசைதிருப்பிப் பழைய மாதிரி, தப்பித்துக் கொண்டு ஓட முடியாது என்பது இந்தத்தேர்தல் முடிவுகள் கேஜ்ரிவால் அண்ட் கம்பனிக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கை! 



படத்தில் போஸ், ஸ்டன்ட் நன்றாக இருக்கிறது, இல்லையா? ஆனால் ப்ராக்டிகலாக முடியாது என்பது புரிகிறதா? இதே மாதிரித்தான் #கேஜ்ரிவால் அடிக்கிற கூத்துகள், ஸ்டன்ட் எல்லாமே! நடைமுறைக்கு உதவாது என்பது டில்லி வாசிகளுக்குப் புரியாமல் போனதேனோ?



  1. Delhi 2015 Election Results: Has BJP strategized its own defeat ?

    Tehelka-14-Feb-2015
    ... BJP strategized its own defeat ? | Tehelka.com ... TehelkaEditorial · IT and Systems · Tehelka.com · Home · Current Affairs · Investigations ...
நேற்றைக்கு தெஹெல்கா தளத்தில் பிஜேபி  டில்லியில் திட்டமிட்டே தோற்றது என்ற ரீதியில் ஒரு புலனாய்வுக் கட்டுரையை வாசித்தேன். தற்சமயம்  அந்தத் தளம் இயங்கவில்லை. தளம் இயங்க ஆரம்பிக்கும்போது மேலே உள்ள லிங்கில் புலனாய்வு லட்சணத்தைப் படித்துக் கொள்ளலாம் 


கிட்டத்தட்ட அதே பல்லவியை காங்கிரசின் உளறுவாயர் திக்விஜய் சிங் பாடியிருக்கிறார். Kejriwal Part of RSS Plan for Congress-Free India: Digvijay என்ற தலைப்பிட்டு வந்திருக்கிற இந்தச்செய்தியில்  காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குகிற ஆர்எஸ்எஸ் திட்டத்தின் ஒரு அங்கமே கேஜ்ரிவால் என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை டிக்கிசிங் கண்டு சொல்லியிருக்கிறார். போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்திருக்கிறது என்பதும் கூட  ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் டில்லி வாக்காளர்களும் சேர்ந்தே செய்த சதியாக இருக்கலாம் என்பதை டிக்கி சிங்குக்கு யார் புரிய வைப்பது? இதை வாசிக்கிற நீங்கள் கூட முயற்சிக்கலாம்! 

******
டில்லித் தேர்தல் முடிவுகள் ஒருசிலருக்குக் கொஞ்சம் இதமாக,ஆறுதலாக இருந்திருக்கக் கூடுமோ?

சாரதா சிட்  ஃபண்ட் ஊழல் விவகாரம் திரிணமுல்   காங்கிரஸ்  கட்சியை விடாது கருப்பு என்று துரத்திக் கொண்டு வருவதில் கட்சியே கலகலத்துப் போய்க் கிடக்கிறது. 

The relationship between Mamata and Mukul had gone from bad to worse ever since he had publicly distanced himself from a railway-linked deal with a Saradha company but today's snub was the most resounding yet. "The party chief has appointed another all-India general secretary for the party.... Subrata Bakshi will have the additional responsibility as all-India general secretary," Chatterjee announced after a 75-minute meeting at Mamata's Kalighat residence.

எந்த நேரத்தில், எவர்  காலைவாருவார், யார் மாட்டிக்கொள்வார் என்பது தெளிவில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் மம்தா பானெர்ஜி துணிந்து ஒரு அதிரடி ஆட்டத்தைக் கட்சிக்குள் ஆரம்பித்து வைத்திருக்கிறார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளராகவும் தீதியின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்த முகுல் ராய்க்கும் சமயம் பார்த்து வேலி  தாண்டக்  காத்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்கிற மாதிரி கட்சிப் பொறுப்புக்களை தன்னுடைய விசுவாசிகளுக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார். பலன் தருமா என்பதிக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் பிஜேபி காலை ஊன்றிக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சமும் தவறவிடவில்லை,

******


நேரு என்றால் வழிசல் என்பதைத்  தனியாகச் சொல்லவே வேண்டாம்!

கொஞ்சம் பழைய கதைதான்! மேலே கடைசிப் பாராவைப் படித்து விடுங்கள்! உலக உத்தமர்களுடைய வரலாற்றைவேறு  எப்படித் தெரிந்து கொள்வதாம்?

******

என்னை அறிந்தால் திரைப்படம் பார்க்கப்போய்க் கசப்பான அனுபவம் தான்!முதல்குறை தன்னுடைய சொந்தப்படங்களில்  இருந்தே ரீமிக்ஸ் மசாலா தயாரிக்கும் இயக்குனருடைய obsession அடுத்துப் படத்தின் நீளம். மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கிற அலுப்பு இந்த ஒருபடத்தைக் கொஞ்சம் பார்ப்பதற்குள்ளாகவே வந்து விடுகிறது. சென்ற வாரம் மகன் வீட்டுக்கு வந்திருந்தபோது அவனுடன் மீண்டும் பார்த்த படம் Dead Poets Society அதில் வித்தியாசமான ஆசிரியராக நடித்திருந்த ராபின் வில்லியம்ஸ் பேசுகிற வசனம் ஒன்று தான் மேலே நீங்கள்  பார்த்தது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கொஞ்சம் சொல்லுங்களேன்!  





சண்டேன்னா மூணு! கொஞ்சம் அரசியல்! கொஞ்சம் கொதிக்க! ச்சும்மா டமாஷு!

சண்டேன்னா மூணுதானா கொஞ்சம் எக்ஸ்ட்ராவெல்லாம் கிடையாதா என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரியும்! இந்த சண்டே அப்படி சாதாரணமாக விட்டுப் போய்விடக் கூடியதா என்ன?!


ஒளியை நோக்கி உயர்வது உயிரின் இயற்கை. இதை இந்தப்படம் எவ்வளவு அழகாக, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது! மாற்றங்களுக்குத் தயாராகும் ஒவ்வொரு மனிதனும்   இதே மாதிரிக் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே இப்படி உயர்வை, மாற்றத்தை அடைய முடிகிறது. இது தொடர்பாக இந்தப் பக்கங்களில் Creature of habits    என்ற தலைப்பிலும்  Change Management  என்று இன்னொரு வலைப்பூவிலும் கொஞ்சம் விரிவாகவே பேசியிருக்கிறோம். சண்டேன்னா  மூணு என்பது வெற்று அரட்டை என்றாகி விடாமல் நண்பர்கள் தங்களுடைய கருத்தையும் பகிர்ந்து கொண்டால்  ஒரு பயனுள்ள விவாதக்களமாக இந்த வலைப்பக்கங்களும் நல்லதொரு மாற்றத்திற்கு உயரும். என்னுடைய விருப்பமும் அதுவே.  இது முன்னோட்டம்  


1977 இல் இந்திரா காந்தியைத் தோற்கடித்த காங்கிரசுக்கு ஒரு நல்ல மாற்றாக உருவாகும் என்று நம்பப்பட்ட ஜனதாதளம் பரிசோதனை அளவிலேயே தோற்றுப்போனதேன் என்பதைக் குறித்து நிறைய ஆய்வுகள், கருத்துகள்,புத்தகங்கள் வெளிவந்து அந்த மட்டோடு ஓய்ந்தும் போன பழைய கதைகளை, சுவடுகளைத் தேடிக் கொண்டிருந்த சமயம், இணையத்திலேயே நிறையத் தரவுகள் கிடைப்பதைத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைய தலைமுறைக்கு பழைய வரலாற்றைத் தேடித் படிப்பதில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை என்றாலும் கூட, வரலாற்றிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளாத வரை வரலாறு  நம்மை விடாது . என்பதையாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!

2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தந்தன. வாஜ்பாய் அல்லது வேறெந்தக் காங்கிரஸ் அல்லாத கட்சிக்கும் கிடைக்காத அளவுக்கு லோக்சபாவில் தனிப்பெரும்பான்மையை அளித்து நரேந்திர மோடி என்ற மனிதர் மீதான தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவே 2014 தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் ஆனாலும் இந்தத்தேசத்துக்கு காங்கிரசிடம் இருந்து ழுமையாக விமோசனம் கிடைத்தது என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிற அளவுக்கு பிஜேபியின் செயல்பாடுகள் இருக்கிறதா?

டில்லி சட்டசபைத் தேர்தல்களை ஒட்டி வெளியான இந்த இரண்டு செய்திகளைக் கொஞ்சம் பாருங்களேன்! ஒன்று ஆம் ஆத்மி கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்று கூவும் செய்தி. காங்கிரஸ் கட்சி சளைத்து விழுந்தாலும் அவர்கள் இத்தனை நாள் தூக்கிப் பிடித்த சிக்குலர்வியாதியை விட்மாட்டோமென்று தி இந்து தமிழ் நாளிதழில் வந்திருக்கும் கூவல்.

நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் என்ன மோடியைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை மிக அக்கறையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிருக்கும் விந்தை.காங்கிரசுக்கு மாற்று என்றுமார்தட்டிக் கொண்டு கிளம்பிய பிஜேபிக்கு நாங்கள் தான் மாற்று என்று மழைக்காலக் கொசு மாதிரி அரசியலில் புதிதாகக்  கிளம்பியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய புஜபல பராக்கிரமத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் கூத்து, மோடி அலைஓய்ந்துவிட்டது இனி எடுபடாது என்று தெரிந்தே கிரண் பேடியை பலிகடாவாகக் களத்தில்  பிஜேபி இறக்கியிருக்கிறது என்று இப்போது சில ஊடகங்கள் பரபரப்புச்செய்தியாக்கிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

டில்லித்  தேர்தல் முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தாலும் கூட பதவியேற்ற நாட்களில் இருந்து இன்று வரை பிஜேபி என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்குமே கூடக் கொஞ்சம் குழப்பமான விடைதான் கிடைக்கிறது. ஒருசரியான அரசியல் மாற்றாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் கூட பிஜேபி இதுவரை ஜெயித்திருக்கிற மாதிரித் தெரியவில்லை. இதுவரை வெறும் சவுண்டு விடுகிற கட்சியாகவே தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதான தோற்றத்தை சரி செய்ய எந்த முயற்சிகளையும் பிஜேபி மற்றும் சங்க பரிவார் மேற்கொள்ளவில்லை. ஒரு முழுமையான சித்திரம் கிடைக்க இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.   

******
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல்  முன்பு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 திருநங்கைகளை அழைத்துவந்து  நடனமாட வைத்துள்ளனர். இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர், 33 லட்ச ரூபாய் வரிபாக்கியை ஒரே செக்கில் அளித்துள்ளனர்.


வரிபாக்கியை அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே..? - கொந்தளிக்கும் ரோஸ்  இன்னும் கொஞ்சம் விரிவாக 
******
நண்பனாக இரு அல்லது காதலனாக இரு! ரெண்டு ரோலும் ஓர் ஆள் செய்ய முடியாது என்று ஒரு விசித்திரமான சர்வே முடிவு  இங்கே!

 

சர்வே சொல்வதற்கும் இந்த வால்போஸ்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை! ச்சும்மா  டமாஷு!


.. 

கொசுத்தொல்லை! கேஜ்ரிவால்! டில்லித் தேர்தல்கள்!








இந்தக் கொசுத்தொல்லை தாங்கலையே நாராயணா!


டில்லி சட்ட சபைத் தேர்தல்களிலும் கூட இந்தக் கொசு மாதிரித்தான் கேஜ்ரிவால் பிஜேபிக்கு  குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.முன்னெச்சரிக்கையாக டில்லித் தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடி மீதான மக்களின் தீர்ப்பல்ல என்று வெங்கையா நாயுடு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.போதாக்குறைக்கு ஊடகங்களில் இதுவரை வெளியான சர்வே முடிவுகள் கேஜ்ரிவால் அண்ட் கம்பனிக்குச் சாதகமாகவே இருப்பதில் கொசு அடிக்க பீரங்கியைத் தூக்கி வந்த கதையாக பிஜேபியின் தேர்தல் பிரசாரங்கள் மாறிக் கொண்டிருக்கிறதாக  பரிதாபக் காட்சி இருக்கிறது..எனக்கும் சர்வே எடுக்கத் தெரியுமே என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒரு கூத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இது ஒனறே  நடப்பு நிலவரம் பிஜேபியைப் பொறுத்தவரை எவ்வளவு கலவரமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாகத் தான் தோன்றுகிறது. முன்னாள்  உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய  கட்ஜு வேறு கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படியானால் கேஜ்ரிவால் நிஜமாகவே ஜெயித்து விடுவார் என்று கேட்கிறீர்களா? அவருக்கு நப்பாசை இருக்கிற அளவுக்கு நம்பிக்கை இருக்கிற மாதிரித்தெரியவில்லை ஓட்டுப்  போடும் இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து வைத்திருப்பதாக ஒரு டெம்ப்ளேட் சால்ஜாப்பை ஏற்கெனெவே தயார் செய்து வைத்துவிட்டார்

ஓட்டுப்போடற மெஷின் மேல சந்தேகமா? தேர்தல்ல நிக்காம ஒத்திக்கோ! ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அறிவுரை!   


மேலே தி ஹிந்து நாளிதழின் சர்வே முடிவு என்பதை விட அவர்களது ஆசை என்பது மிகப்பொருத்தமாக இருக்கும்.

என்ன தான் விரலை நீட்டி மடக்கிக் கணக்குப் போட்டாலும், திருவிழாவில் தொலைந்துபோன பிள்ளை கதையாகத்தான் காங்கிரஸ் கட்சியின் தொடர் சோகம், தோல்வி பயம்,யார் யார்  கட்சியில் இருந்து வெளியேறி என்னென்ன பிரச்சினைகளைக்  கொண்டு வருவார்களோ என்ற பயம் எல்லாமாகச்  சேர்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா  சர்வேக்களும் ஒன்றுபடுவது காங்கிரஸ் கட்சி டில்லியிலும் சர்வநாசம் என்பதைத்தான்!  

பிஜேபியைப் பொறுத்தவரை, நரேந்திர மோடி என்ற தனிநபர் எழுப்பிய அதிர்வலைகளில் சவாரி செய்தே ஆட்சியைப் பிடித்திருக்கிறதே தவிர டில்லியில் திறமையற்ற  கட்சி ஸ்தாபன அமைப்பு, உட்கட்சிப் பூசல்கள்,நேற்று வந்த கிரண் பேடியை முதலவராக ஏற்றுக் கொள்வதா என்ற கிளர்ச்சி தவிர இதைப் பயன்படுத்தி, நரேந்திர மோடிக்கு தர்மசங்கடம் விளைவிக்கிற மாதிரி கட்சிக்குள் ஓரம் கட்டப்பட்ட பழம் பெருச்சாளிகளின் திருவிளையாடல்களும் சேர்ந்திருக்கிறதோ என்ற சந்தேகமும் வலுக்கிறது  டில்லியில் ஜெயிப்பது அல்லது தோற்பது என்பது அல்ல உண்மையான சவால். பிஜேபி வாக்களித்த ஜனங்களுடைய நம்பிக்கையைப் பாழாக்காமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட தங்களைக் கடுமையான சுயபரிசோதனைக்கு தயார் செய்துகொள்ள வேண்டிய தருணமிது. ஒரு கட்டுக் கோப்பான ஸ்தாபனமாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தருணமிது.   

காங்கிரசுக்கு மாற்று என்பது காங்கிரசைப் போலவே கோஷ்டி கானம், ஊழல், யாரோ ஒரு தனிநபருடைய செல்வாக்கில் மட்டுமே ஜெயிக்க முடிகிற கூட்டம் என்றிருப்பது அல்ல. அப்படி ஆனதினாலேயே இதற்கு முந்தைய பரிசோதனைகள் எல்லாம் மிகப் பரிதாபமாகத் தோற்று,மறுபடியும் களவாணி காங்கிரசே ஆட்சியைப்  பிடித்த சமீபகால வரலாறும் இருக்கிறது.

அப்படி ஆகுமானால் பிஜேபியை இந்த நாடும் வரலாறும் மன்னிக்காது என்பது மட்டும் நிச்சயம்.
******

காத்திருந்து....காத்திருந்து...கலங்கும் வாரிசுகள்! இது திமுக டைம்!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!
காத்திருக்கும் வாரிசுகள்!!

கனிமொழிக்குக் கட்சியில் வேண்டுமானால்முக்கியப் பொறுப்பு, பதவி கொடுத்துக் கொள்ளுங்கள், மந்திரி பதவியெல்லாம் தர முடியாது என்று காங்கிரஸ்காரர்கள்; திட்டவட்டமாக சொல்லி விட்டார்களோ?

கே என் நேரு நேற்று திருச்சி திமுகவினரிடையே பேசும் போது கொஞ்சம் வீராப்பாகப் பேசியதை மேலோட்டமாகப்  பார்த்தால் கூட,திமுக காங்கிரசுக்கு வேறு வழி இல்லாமல் டாட்டா  சொல்ல தயாராகி வருவது போலத்தான் இருக்கிறது.திமுகவில் தலீவரின் கண்ணசைப்பு இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என்பது தமிழக அரசியல் தெரிந்த எல்லோருக்குமே தெரிந்ததுதான்! பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிற கலையில் தேர்ந்தவர் கலீஞர் என்பதும் தெரிந்ததுதான்! பிப்ரவரி மூன்றாம் தேதி திமுக பொதுக்குழு செயற்குழு கூட்டுவது எதற்காக என்பதும், அதற்கு முன்னாலேயே ராசாத்தி தரப்பு சில உள்ளடி வேலைகளை வெளிப் படையாகவே செய்து வருவதும் கூடத் தெரிந்தது தான்.நேரு அப்படி என்னதான் பேசினார், அதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்பதையும் பார்த்து விடலாமே!

இப்படி அவசரப்பட்டு ஊதி ஊதியே மந்திரியாக வேண்டியவரை முதல் குடும்பத்தின் ஆதாயத்துக்காக
திஹார் சிறைக்கு அனுப்பி வைத்தது தான் மிச்சம்!!


திருச்சி மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாஜி அமைச்சர் நேரு பங்கேற்று பேசியதாவது: "தி.மு.க.,வினர்,தைத்திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக கொண்டாட வேண்டும். தங்களின் வீடுகளில் கோலமிடும் போது தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதியும், முடிந்தால் புத்தாடை அணிந்தும், வீடுகளில் கட்சிக் கொடியேற்றியும் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லி மம்தா அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் சிறிது இறங்கி வந்தபோதும், மம்தா அதெல்லாம் முடியாது என்றுகூறி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக களம்காண தயாராகி விட்டார். அதுபோல், இங்கும் வெகுவிரைவில் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.

விஜயகாந்த் மீது தாக்கு: "நம்முடைய போதாத காலம் அ.தி. மு.க.,வுடன் விஜயகாந்த் கூட்டு சேர்ந்தார். அவருடைய தயவில் ஜெயித்த அ.தி.மு.க., அக்கட்சியை எட்டி உதைத்து விட்டது. தே.மு. தி.க.,வின் மேட்டூர் எம்.எல்.ஏ., மேல் வழக்கு போட்டு, அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல, அனைத்தையும் மூடிக்கொண்டுள்ளார்,''

தி.மு.க., தோல்விக்கு காரணம்: கடந்த எம்.பி., தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டசபையில் மட்டும் தோற்று, திருச்சி எம்.பி., தொகுதியை இழந்தோம். அதுமட்டும் நடக்காமல் போயிருந்தால், ஜெயலலிதா இங்கு வந்திருக்கமாட்டார். அ.தி.மு.க., வும் ஆட்சிக்கு வந்திருக்காது. தமிழகத்தில் புதிதாக ஓட்டுரிமை பெற்ற, 30 லட்சம் இளம் வாக்காளர்களிடம் நம்மைப்பற்றி அவதூறு பரப்பப்பட்டது. அதற்கு உரிய பதில் கூற நாம் தவறிவிட்டோம். ஆகையால், மாற்றத்தை எதிர்பார்த்த, அந்த இளம் வாக்காளர்கள் மாற்றி ஓட்டு போட்டு விட்டனர்."

இப்படி நேரு பேசியதை வைத்துப் பார்த்தால்,ஆஹா! திமுகவுக்கு வீரம், சொரணைவந்து விட்டது!மம்தா மாதிரி, காங்கிரசே! கூட்டணியை விட்டு வெளியே போ என்று சொல்லி விடப் போகிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு உடனே திமுக அமைச்சர்கள் மத்திய அரசில் இருந்து விலகி, ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் என்றும் கனவு காண ஆரம்பித்தீர்களானால் உங்களுக்கு தமிழக அரசியல், குறிப்பாகக் கழக அரசியல் கொஞ்சம் கூடப் பிடிபடவில்லை என்று மட்டுமே அர்த்தம்.

இப்படி வெறும் மலர் மகுடம் வைத்தே இத்தனை நாள் ஒட்டி விட்டார்களே! இனிமேலாவது தலைமை மகுடம் தலைக்கு வருமா?

அதே செய்திகளில் இன்னொரு பக்கம் திமுக இளைஞரணி குறித்த சில செய்திகளில், வரலாற்றில் முதல் தடவையாக, நாற்பது வயதுக்கு மேற் பட்டோரெல்லாம் இளைஞர்கள் அல்ல என்பதைத் திமுகவினர் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இளைஞர் அணிப் பொறுப்பில் இருக்க முடியும் என்று தீர்மானம் கொண்டு வந்து அதை அமல்படுத்த  ஆரம்பித்திருக்கிறார்கள். அமல் படுத்தியது தலையில் இருந்தல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்! 

மாற்றங்கள் வந்து சேர்வது தலையைப் பொறுத்தவரை எப்போதுமே கடைசியில் தான்! அதுவும் வேறு வழி இல்லை என்றால் தான் என்பது அரசியல் கட்சிகளில், குறிப்பாக வாரிசு அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் கட்சிகளில் காணப்படும் விசித்திரங்களில் ஒன்று.

விழுப்புரத்தில் நடந்த, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் தேர்வை துவக்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது: "தி.மு.க., இளைஞரணி தற்போது மந்தமான சூழலில் உள்ளது, இதில் மாற்றத்தை ஏற்படுத்தி முனைப்புடன் செயல்படுத்திட தலைவர், பொதுச்செயலர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். நகர, ஒன்றிய, பேரூர் பகுதி இளைஞரணி நிர்வாகிகளுக்கு படிவங்கள் வழங்கி தேர்தலுக்கு அழைத்துள்ளோம். ஒவ்வொரு பதவிக்கும், 10 முதல் 20 பேர் வரை பெயர் கொடுத்துள்ளனர். இளைஞரணி பொறுப்பாளர்கள், 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்சிப் பொறுப்பிற்கு செல்லுங்கள். மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதே போல் மாநில அளவிலும் வயது நிர்ணயிக்கப்பட உள்ளது. நானே கூட பொறுப்பிலிருந்து விலக வேண்டி வரும்"

அப்புறம் நடந்த தமாஷையும் பாருங்கள்!

விழுப்புரத்தில், தி.மு.க., மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். நகர, ஒன்றிய வாரியாக இளைஞர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேர்காணலின் போது வயது சான்றுகளை வாங்கி பார்த்த ஸ்டாலின், சில கேள்விகளை கேட்டார். 30 வயதை கடந்து ஒரு மாதமான நபரை கூட ஏற்க முடியாதென வெளியே அனுப்பினர். நேர்காணலின் போது, இளைஞரணி அமைப்பாளர் (ஸ்டாலின்) பெயர் தெரியாமல் விழித்தவரை, "நீங்கள் வெளியே போகலாம்" என, ஸ்டாலின் கூறினார்

இளைஞர் அணி அமைப்பாளரிடமே , யார் என்று தெரியாது என்று சொல்கிற அளவுக்குத் தான் அந்தக் கட்சியின் செயல்பாடு இருந்து வந்திருக்கிறது என்பது ஒரு புறம்! ஸ்டாலினிடம் இருந்து, ராசாத்தி வகையறா குறிப்பிட்டுப் பறிமுதல் செய்யக் கண் வைத்திருக்கும் இடமேஇளைஞர் அணி என்பதும், அதைக் காபந்து செய்து கொள்வதற்காகத்தான் இப்போது அவசர அவசரமாக  இந்த வயது உச்சவரம்பு சீர்திருத்தம் எல்லாம் என்று சொன்னால் மிகையில்லை, தவறுமில்லை.

ஆக நேரு சொன்னதை வைத்து காங்கிரஸ் திமுக உறவு முடிந்து விட்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டீர்களானால் அது சரியாக இருக்காது!

இங்கே அரசியல் வெளிப்படையாகத் தெரிகிற விஷயங்களில் இல்லை! திரைமறைவு நாடகங்களிலேயே நடந்து முடிந்து விடுகிறது!


ஒரு புதன் கிழமை: புள்ளிராசா!கர்நாடக பல்டி! ராகுல் டிராமா!

நேற்றைக்கு, நாம் தமிழர் இயக்கத்தை ஆதரிக்கும் வழக்கறிஞர் ஒருவரிடம் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்!

"திமுக தோற்றது எதிர்பார்த்தது தான்! ஆனாலும், அவங்க (காங்கிரஸ்) அஞ்சு சீட் ஜெயிச்சது தான் ரொம்பக் கொடுமை!" என்றார்!  
உண்மையைச் சொல்லப்போனால்,சென்ற சட்ட மன்றத் தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை விட காங்கிரஸ், இந்தத்தேர்தலில் அதிக வாக்கு வாங்கியிருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும்! கண்முன்னால் இருக்கும் விவரங்களைக் கூடப் பார்க்க நம்மால் முடிவதில்லை. புள்ளி  விவரங்களை  எடுத்துக் காட்டினாலும் பயனிருக்காது என்பதால்,விவாதத்தைத் தொடரவில்லை.

நடந்து முடிந்த தமிழக சட்ட மன்றத்  தேர்தல் இதற்கு முந்தைய தேர்தல்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும் என்பது ஆரம்பத்தில் இருந்தே  எல்லோருக்கும் தெரிகிற மாதிரித்தான் இருந்தது.அந்த வகையில் இந்தத் தேர்தல்களில், சில கற்பிதங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன!

முதலில், காங்கிரசோடு கூட்டணி வைக்கிற கட்சி ஜெயிக்கும் என்பது! அதெல்லாம், கனவாய்ப் பழங்கதையாய்ப் போய் நீண்ட நாட்களாகிறது. திராவிடக் கட்சிகள் 28, 26 சதவீதம் வாக்கு வங்கிகளை வைத்திருந்த காலங்களில், காங்கிரசுக்கென்று 17-19 சதவீதம் வாக்கு வங்கி இருந்த காலம் ஒன்று  இருந்தது.அப்போதிருந்த கற்பிதம் இப்போதும் சரியாக இருக்குமா என்று எவரும் யோசிக்கவில்லை, அதை அப்படியே நம்பிக் கொண்டிருந்தார்கள். 

ஏனென்றால், இதுவரை ஜெயிக்கிற தரப்போடு காங்கிரஸ் இருந்தது, முதல் தடவையாக இன்றைக்குத் தலைகீழாக மாறியிருக்கிறது!

அப்படியானால், காங்கிரஸ் வாக்குவங்கி குறையவில்லையா?  

நிச்சயமாகக் குறைந்திருக்கிறது. சுமார் இருபது சதவீதத்தைக் ஒட்டி, தனித்து வாக்குவங்கியை வைத்திருந்த ஒரு தேசீயக் கட்சி, மாநிலக் கட்சிகளோடு  மாறிமாறிக் கூட்டு வைத்துக் கொண்டே வந்ததில் படிப் படியாகத் தன்னுடைய சொந்த வலுவை இழந்து, நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்த விஜயகாந்தை விடக் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது என்பது பெருமைதரக் கூடிய விஷயமா? 

சென்ற 2006 தேர்தலில் காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகளின் சதவீதம் 8.38, இப்போது 9.30 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இதே மாதிரித்தான், பாட்டாளி மக்கள் கட்சி! மருத்துவர், பாமகவுடன் கூட்டணி வைக்கிற கட்சிதான் ஜெயிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்! போன தேர்தலிலேயே இந்தக் கற்பிதம் பொய்யாக்கப் பட்டது, ஏதோ தற்செயலானதல்ல,இப்போதும் அப்படித்தான் என்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. ஆனாலும், வாக்குசதவீதம் என்று பார்த்தால், சென்ற சட்ட மன்றத்தேர்தலில் 5.65% வாங்கிய கட்சி இந்தத் தேர்தலில் 5.23% தான் வாங்கியிருக்கிறது. வித்தியாசம் அதிகமில்லை. 
சென்ற சட்டமன்றத் தேர்தல்களிலேயே, வன்னியர் ஒட்டு அன்னியருக்கு ல்லை என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு, தேதிமுக ஆப்பு வைத்து, அதை இந்தத்  தேர்தலிலும் தக்க வைத்துக் கொண்டது என்பதுதான் உண்மை.

அப்படியானால் இந்தத்தேர்தலில் என்ன தான் நடந்தது?

உதயசூரியனாகத் தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் அஸ்தமன சூரியனாகிப் போனதைப் போனதேர்தலில் இருந்தே காண முடிந்ததைத் தான், இந்தத்தேர்தல் இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. 
சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகள் 26.46% தான், அப்போதே அதிமுக திமுகவை விட   ஆறு சதவீத வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தோடு மட்டுமே தன்னை பயில்வான் மாதிரிக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் முதல் முதலாகத் திமுகவுக்கு, சென்ற சட்டமன்றத் தேர்தல்களில் தான் எழுந்தது.

இந்தத்  தேர்தல்களில் இன்னும் நான்கு சதவீதத்தை இழந்து திமுக வெறும் 22.38% என்று சுருங்கியதில், திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் பரிதாபமாகத் தோற்க வேண்டியதாகிப் போய்விட்டது  என்று கூட, ந்தப் புள்ளிவிவரங்களை வைத்து சொல்ல முடியும்!

 
காகித ஓடம் கடல் அலை மீது ...........
போவது போலே மூவரும் போவோம்!

பாட்டு ரெடியாக இருக்கிறது!
மானம் கெட்ட தமிழன், சுரணை கெட்ட தமிழன் என்று தான் தோற்ற போதெல்லாம் தூற்றி வாரிய வார்த்தைகள் இருக்கின்றன! 
புள்ளிவிவரங்களைத்  திரித்து, தோற்றதற்கு சப்பைக்கட்டு சொல்வதற்கு ஏற்கெனெவே அனுபவம் நிறைய இருக்கிறது!


அப்புறம் என்ன, காங்கிரஸ் திமுக கூட்டணிக்குக் கம்பல்சரி ஓய்வு கொடுத்து விட வேண்டியதுதானே! என்று ஏப்ரல் முதல் தேதியன்று இந்தப்பதிவில் எழுதியது கூடக் கொஞ்சம் மாறிப் போய்விட்டது!

இரண்டு கூட்டணிகளிலும் மற்றக் கட்சிகளுடைய வாக்குவங்கியும் கிட்டத்தட்ட அப்படியே இருக்க, திமுகவின் வாக்குவங்கி மட்டும் 16.70% குறைந்து, இது உதயசூரியனில்லை, அஸ்தமித்து விட்ட சூரியன் தான் என்பதை சொல்வதாக இருக்கிறது.

அதைப் புரிந்துகொண்டதால் தான் முந்தைய காலங்களில், புள்ளி விவரங்களைக் காட்டி திமுகவின் தோல்விக்கு சப்பைக்கட்டுக் கட்ட முடிந்த கருணாநிதி, மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்து விட்டார்கள் மக்களுக்கு நன்றி என்றி குத்தலாகச் சொன்னதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதாகிவிட்டது போல!!


ooOoo 
 

கர்நாடக அரசியலில், பாச்சா பலிக்கவில்லை என்றவுடன் பரத்வாஜ் இறங்கி வந்திருக்கிறார்! ஆக இந்த ரவுண்டில், எடியூரப்பா ஜெயித்திருக்கிறார்! சரி!

இன்னும் எத்தனை நாளைக்கு, எடியூரப்பாவுடன் தழைந்து போய்ச் சமாதானம் செய்து கொண்ட பரத்வாஜ் சும்மா இருப்பார்?

சரியாக ஊகிக்க முடிகிறவர்களுக்கு ஒரு அட்வான்ஸ் சபாஷ்!
ooOoo 
 
காங்கிரஸ் இளவரசர், உத்தர பிரதேச விவசாயிகளோடு சேர்ந்து கொண்டு தர்ணா செய்தது, கைதானது மிகப் பரபரப்பாக செய்திகளில் அடிபட்டதும், பிரதமரிடம் விவசாயிகளுக்காக ராகுல் உருகியதும்  அரசியல் டிராமாவில் நேற்றைய சீன்கள்! 

இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி அரசியலில் அனுபவமே இல்லாதவர் என்ற அளவுக்கு ராகுல் நடத்திய கூத்து ஆண்டி கிளைமாக்ஸாக இன்றைய செய்தியாகத் தொலைக் காட்சி செய்திகளில் ஆகிப் போனதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

கழகங்களிடம் மாறி மாறிக் கூட்டணி வைத்தும் கூட, ஒரு தப்பை எப்படி சூப்பராக செய்வது, அசடு  வழிவதைக் கூடப் பெரும் சாதனையாகக் காட்டிக் கொள்வது என்பதைக் கூடக் கற்றுக் கொள்ளவில்லையே!என்ன காங்கிரஸ், என்ன கூட்டணி தர்மம்!

சூனா பானா வடிவேலுவிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்ளச் சொல்லலாமோ?!


திஸ்கி ஒன்று:

இந்தப் புள்ளிவிவரங்கள்  வெளிப்படையாக சொல்லாத இன்னொரு விஷயமும் இருக்கிறது.

பிஜேபிக்கு, சென்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளைவிட இந்தத் தேர்தலில் கொஞ்சம் கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதைவிட, காங்கிரஸ் வென்ற ஐந்து தொகுதிகளில், அவர்கள் வென்ற வாக்கு வித்தியாசம், அங்கே பிஜேபி வாங்கிய வாக்குகளைவிடக் குறைவு என்பதுதான்.ஆக, சில இடங்களில் காங்கிரஸ் வென்றது கூட, பிஜேபி கூட நினைத்துப் பார்க்காத, வாக்குகளைப் பிரித்ததனால் வந்ததுதான்!




 

வாக்களிக்காத பெருமக்களே! உம்மால் வாக்களித்த மக்களும் கெட்டார்கள்....!



வாக்களிக்காத பெருமக்களே.......! தினமணியில் வெளியான  ஒரு கட்டுரை! 

திரு ஆர்.ராமலிங்கம் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்று இன்றைய தினமணி நாளிதழின் வலைப்பக்கங்களில் படிக்கக் கிடைத்தது. மேலோட்டமாக அரசியலை ஆராய்ச்சி செய்தால் எப்படி இருக்கும் என்பதற்கு, இந்தக் கட்டுரையே ஒரு உதாரணம். கட்டுரையாளர் எந்தெந்த இடங்களில் இந்திய அரசியலைத்தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்,பரிகாரம் சொல்வது கூட எப்படி ஏனோதானோ என்று இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், தினமணியில் வெளியான இந்தக் கட்டுரையைப் பார்த்துவிடலாம்!
"ன்னும் சில நாள்களில் வீதிகளில் "வாக்காளப் பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை, முத்தான வாக்குகளை எங்கள் சின்னத்துக்குச் சிந்தாமல், சிதறாமல் வாக்களியுங்கள்' எனக் கட்சிகள் பலவும் போட்டி போட்டுப் பிரசாரம் செய்யவுள்ளன.என்னதான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்தாலும், கண்காணித்தாலும், அவற்றையெல்லாம் மீறி, வறுமையில் வாடுவோரையும், அத்தனைக்கும் ஆசைப்படுவோரையும் நாடிப் பரிசுப் பொருள்கள், ரூபாய் நோட்டுகள் வந்துசேரும் காலமிது.கனவிலும் கண்டிராத வாக்குறுதிகளோடு, முன்பின் தெரியாதவர்கள், அண்ணன், தம்பி, அக்கா, அம்மா, அண்ணி, மாமா என உறவுமுறைகளைக் கூறி ஓட்டு வேட்டை நடத்தும் நேரமிது.

ன்றைக்கு அரசியல் பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளதை மறுக்க முடியாது.தேநீர் கடையானாலும், முடிதிருத்தும் நிலையம் ஆனாலும், 4 பேர் உட்கார்ந்து பேசுகிறார்கள் என்றால் அது நிச்சயம் இன்றைய அரசியல்தான் என்று ஆணித்தரமாகக் கூறலாம். அரசியலைப் பற்றி அலசும் இன்றைய நடுத்தர, ஏழை சமுதாயத்தினர் பெரும்பாலோர், அந்த அரசியலால் லாபம் அடையாதவர்கள்தான். குறிப்பிட்ட கட்சியின் மீதான அபிமானம் அல்லது வெறுப்பு, அரசு, அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளால் சந்திக்கும் இடர்ப்பாடுகள் இன்றைக்கு எல்லோரையும் அரசியல் பேச வைத்து விட்டது.


தற்கெல்லாம் அசராதவர்கள் ஒருதரப்பு உண்டு. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று வேதாந்தம் பேசும் வகையைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.அத்தகையோரில் பெரும்பாலோர் படித்தவர்களாகவும், நேர்மையை விரும்பக் கூடியவர்களாகவும் இருப்பதுதான் வேடிக்கை. அரசியல் விவகாரங்களை அக்கு வேறு, ஆணி வேறாகப் பேசும் இவர்கள், நாம ஓட்டு போட்டுத்தானா அவர் (அவர் நினைக்கும் நல்லவர்) ஜெயிக்கப் போகிறார்? என்ற போக்கில் பேசாமல் இருந்துவிடுவது வாடிக்கை. தேர்தல் முடிவுகள் இவரது எண்ணம்போல் அமையாவிட்டாலோ, "இந்த நாடு உருப்படாது. மீண்டும் வெள்ளைக்காரன் வந்தால்தான் உருப்படும்' என்று பேசத் தொடங்கி விடுவார்கள்.

ன்றைக்கு அரசியலில் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவோரும், கோடிக்கணக்கில் சொத்துக் குவிப்பதற்காக அரசியலில் தஞ்சம் அடைவோரும் மக்கள் பிரதிநிதிகளாகஉலா வருவதற்கு, வேதாந்தம் பேசிவிட்டு வாக்களிக்காமல் இருப்பவர்களும் காரணமாகி விடுகின்றனர்.1951-ல் தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் வாக்களிக்காதவர்களின் சதவீதம் 45.25. அடுத்த தேர்தலில் அது 53.44 சதவீதமாக உயர்ந்தது.


பிறகு ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு வாக்களிக்காதவர்களின் சதவீதத்தைக் குறைத்து வந்தாலும், அது போதுமானதாக இல்லை. இதனால் 2006 தேர்தலில்கூட வாக்காளிக்காதவர் சதவீதம் 29.18-ஆக இருந்தது.


டப்பெயர்ச்சி, உடல் நலக்குறைவு, தவிர்க்க முடியாத சூழல் போன்றவற்றால் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கையில் மிகச்சொற்ப அளவே இருப்பர். மற்றவர்கள் பெரும்பாலும் பேச்சுடன் நிறுத்திக்கொண்டு, செயலில் இறங்காதவர்களாகவே இருப்பர்.

வ்வொரு வேட்பாளரின் வெற்றியும், வாக்கு அளிக்காதவர்களின் எண்ணிக்கையைவிட, குறைந்த வாக்கு எண்ணிக்கையில்தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பதை வாக்களிக்கத் தவறுவோர் ஏனோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.இவர்களுக்கு, நம்முடைய ஒரு வாக்குக்கூட, நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உதவும் என்ற மனப்போக்கு என்றைக்கு உதிக்கிறதோ, அப்போதுதான், ஓரளவு நேர்மையாளர்களை மக்கள் பிரதிநிதிகளாக சட்டப் பேரவைக்கோ, மக்களவைக்கோ அனுப்ப முடியும்.

துவரை பணம், பரிசுப்பொருள், லாபக் கணக்கு போடும் கூட்டணிகள், இனம், ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர், கவர்ச்சி அரசியல் நடத்துவோர் கையில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கும்."

-------------------------------------------

 இந்தக் கட்டுரையாளர் எனக்கு அறிமுகமில்லாதவர், அதாவது இதற்கு முன்னால் இவர் எழுதிய அரசியல், செய்தி விமரிசனக் கட்டுரை எதையுமே நான் படித்ததில்லை! மிக மேம்போக்காக, தேர்தல்களைப் பற்றி, வேதாந்தம் பேசிவிட்டுப் போய்விடுகிறவர்களாக சிலரை (யாரை அப்படி சொல்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்) கையைக் காட்டிவிட்டு, தப்பும் தவறுமாக சில புள்ளி விவரங்களைக் கொடுத்துத்தான் சொல்ல வருவதுதான் சரி என்ற மாதிரிக் கட்டுரையை முடித்திருக்கிறார்.

சில வெளிச்சக் கீற்றுக்கள் தெரிந்தபோதிலும் கூட, அவர் அதன் வழியாக எதையும் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.

வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் பட்டியலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விடுபட்டுப் போனவர்கள்,வாக்களிக்கும் உரிமையை எப்படிப்பயன்படுத்துவது என்பதே தெரியாத மக்களும் இருக்கிறார்கள்.

அறுபத்துமூன்று ஆண்டுகளைக் கடந்து வந்த பிறகும், இந்திய ஜன நாயகம், வாக்காளர் பட்டியலைக்கூடத்தவறுகள் இல்லாமல், விடுதல் இல்லாமல், திருத்தங்கள் தேவைப்படாமல் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளவில்லை.தலைவர்கள், ஓட்டுப் பெட்டியின் வழியாக ஜனநாயகம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கவுமில்லை!ஜனங்களும், தலைவர்களுடைய யோக்கியதை என்ன என்பதை அவப்போது உரசிப்பார்த்து, சோதனை செய்து பார்ப்பதுமில்லை. ஓட்டுப் போடுகிற ஒரு  சுகத்தைத் தவிர, ஒரு  தேசத்தின் குடிமகன் என்ற உணர்வு, கடமைகள் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

வாக்குச் சீட்டு என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வருகிற லாட்டரி மாதிரித்தானா? அந்த ஒருநாளைத் தவிர, அரசியலில் பங்கு கொள்கிற வாய்ப்பு, அபிப்பிராயங்களை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிற வாய்ப்பே இல்லையா?

கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!