Showing posts with label யாருக்காக. Show all posts
Showing posts with label யாருக்காக. Show all posts

பொதுத்துறை! இங்கே யாருக்காக?



பொதுத்துறை! இங்கே யாருக்காக? செப்டெம்பர் 2009 இல் எழுதிய இந்தப்பதிவுக்கும் கூட கொஞ்சம் புரிந்து கொண்டு சில பின்னூட்டங்கள் வந்தன:
  1. சங்கர் படம் மூலமாகவோ, சுசீ கணேசன் படம் மூலமாகவோ எல்லா பொது துறையும் திருத்தி சீர் பண்ணி , ஒரு படமாக எடுத்து வேண்டுமென்றால் பார்க்கலாம் . மற்ற படி நடை முறையில் எதுவும் பண்ண இயலாது என்பதே என் கருத்து.
    ReplyDelete
  2. திரைப்படத்தில் அல்ல, நிஜமாகவே சீரழிந்த நிலையில் இருந்த ஒரு பொதுத்துறை வங்கி, அதனுடைய தலைமை நிர்வாகி எடுத்த அதிரடி நடவடிக்கைகளில், இரண்டே ஆண்டுகளில் குணமாகி வளரவும் தொடங்கிய ஒரு அதிசயத்தை நான் அறிவேன். அவரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உள்ளிருந்தே குழி பறிக்கும் வேலைகள் என்னென்ன நடந்தன என்பதும் ஒரு 'த்ரில்லர்' படம் மாதிரித்தான்!

    அவர் செய்த ஒரு அடிப்படையான மாற்றத்தைப்பார்க்கலாம். ஏதாவது கற்றுக்கொள்ள முடிகிறதா என்பதையும் எனக்குச் சொல்லுங்கள்.

    இலக்குகளை நிர்ணயிப்பதோடு நின்று விடுகிற தலைமை அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்தது அதிரடி. பொது மேலாளர்கள், சாவகாசமாகப் பதினோரு மணிக்கு மேல் தங்களுடைய சீட்டுக்கு வருவார்கள், அதிகபட்சம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணிநேரம் கூட சீட்டில் இருக்க மாட்டார்கள். அப்படியிருக்கிற நேரம் கூடத் தங்களுடைய வசூல், தனக்கு எதிரியாக இருக்கும் இன்னொரு பொது மேலாளருக்கு எதிராக எவரையாவது கொம்புசீவி விடுகிற வேலை, இதற்காகத் தான்!தங்களுடைய நிறுவனத்திற்காக எந்த வேலையும் செய்யாமல், உண்மையைச் சொல்லப்போனால், உள்ளிருந்தே குழி பறித்துக் கொண்டிருந்த பொது மேலாளர்களை அக்கௌண்டபிலிட்டி என்று சொல்வோமில்லையா, அப்படி பொறுப்பாக்கினார். முதல் ஒரு வருஷம் அப்படி த தலைகளைத் தட்டிக் கொண்டிருந்தது வெளியே தெரியவேயில்லை! அதுவரை, எது எப்படிப்போனாலென்ன என்றிருந்தவர்கள், சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தபோது தான் தலையில் குட்டியதன் விளைவு தெரியவே ஆரம்பித்தது.

    கீழ்மட்டத்தைத் தொடவே இல்லை, மேலே தட்ட ஆரம்பித்த தட்டு, கச்சிதமாகக் கீழ்வரைக்கும் தானாகவே வந்தது, வேலை நடந்தது.

    அடுத்து, வெறும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பது மட்டுமே வங்கியின் வேலை என்று நினைத்துக் கொண்டிருந்த வங்கியில், புள்ளி விவரம் என்ன சொல்கிறது, என்ன திசையில் போக வேண்டும் என்று காட்டுகிறது என்பதையும் கற்றுக்கொள்ள ஆரம்பமானது.

    இங்கே நடப்பதைப் பாருங்கள்! கீழ்மட்டத்தில் அவன் ஆயிரம் ரூபாய் வாங்கும் பொது பிடிபட்டான், இவன் லட்சம் வாங்கும்போது பிடிபட்டான் என்று ஷோ காட்டும் வேலை நடக்கிறதே தவிர, தட்ட வேண்டிய இடம் எது என்பது தெரிந்தும் தட்டாமல் இருக்கும் அவலம்!

    மாற்றம் வரும்! ஒரேயடியாக நம்பிக்கை இழந்து விட வேண்டியதுமில்லை!
    ReplyDelete
  3. //பொதுத்துறையைப் பலப்படுத்த, பொறுப்பை உணர்ந்த ஊழியர்கள், திறமைக்கு முதலிடம் கொடுக்கும் நிர்வாக மேலாண்மை, ஊழலற்ற வெளிப்படையான செயல்பாடு மூன்றும் இணைந்தால் தான் முடியும்.
    //

    இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் நிலமைகள் ஒரே நாளில் சீர் அடைவதோ கெடுவதோ கிடையாது. புரட்சி, மாற்றம் எந்த சொல்லைக் கொண்டு பார்த்தாலும் ஒரு 'இசம்' மக்கள் இடையே பரவ அந்த மக்கள் இன்னொரு 'இசத்தால்' பாதிக்கப்பட்டு இருப்பதும் காரணம். காலப் போக்கில் புதிய இசம் முழுமையாக வெற்றி அடையும் முன்னே அதன் தேவைகள் பொய்த்தும், திரிந்தும் போகும். அதன் பிறகு புதிய இசம். அது கம்யூனிசமாக இருந்தாலும் சரி முதலாளித்துவமாக இருந்தாலும் சரி. மக்கள் நெருக்கம், பொருளாதாரத் தேவை இவற்றை சார்ந்தே மக்கள் இடையே சில கொள்கைகள் பிரபலமடைகின்றன, பின்னர் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடுகின்றன.

    இது தான் சரி என்று சமூக வாழ்வில், உலகவாழ்வில் எதையுமே அறுதி இட்டு வழியுறுத்திவிட முடியாது என்பதையே இசங்களின் தோல்விகள் சொல்லும் பாடம்.

    நாம் நினைக்கும் அளவுக்கு ஒரு கையை இழந்தவர்கள் துன்பப்படமாட்டார்கள், நாளடைவில் ஒரு கையை மிகத் திறமையாகப் பயன்படுத்தி தனது குறையை முற்றிலும் நினைக்காவிட்டாலும் ஓரளவுக்கு ஈடு கொடுத்து தான் வாழ்வார்கள். இது கண்களை இழந்தவர்களுக்கும் பொருந்தும். நான் சொல்ல வந்தது மக்கள் எந்த சூழலுக்கும் வாழப் பழகிக் கொள்வார்கள், அவர்கள் வெறுக்கும் ஒன்றை அழிக்க வரும் வேறொரு கொள்கையை ஆதரிப்பார்கள். மன்னர் ஆட்சி முறையை மக்கள் ஆட்சி என்ற பெயரில் ஒழித்தோம், ஆனால் இன்று வாரிசு அரசியல் அறிவிக்கப்படாத மன்னர் ஆட்சியாக பரிணாமம் பெற்று வளர்ந்துவிட்டதே. ஆக ஒன்றை விலக்குதலின் மையம் வேறொரு மையத்தை சார்ந்திருந்தாலும் எதுவுமே பிழைப்பு வாதம் என்னும் மக்களின் வாழ்வியலால் நிலையற்றதாக தொடரும்.

    நீளமான பின்னூட்டம் பொருத்தருள்க !
    :)
    ReplyDelete
  4. வாருங்கள் கோவி.கண்ணன்!

    நீளமான பின்னூட்டங்கள், பிரச்சினை அல்ல. சொல்ல வந்த கருத்து முழுமையாகச் சொல்லப்பட்டதா என்பதையே முக்கியமாகக் கருதுகிறேன்.

    முக்கியமானதும், மையமானதுமான ஒரு விஷயத்தைத் தொட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த பிரபஞ்சத்தைப்பற்றி சொல்லும்போது, அது விரிவடைந்துகொண்டே, மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுபோலத் தான் சமுதாய விஞ்ஞானமும்! மாறிக்கொண்டே இருப்பது. அப்படி மாற்றிக்கொண்டே இருப்பது தான் சமுதாய வளர்ச்சியின், பரிணாமத்தின் அடிப்படை இயல்பும் கூட!

    ஓலைக் குடிசையே போதும் என்று இருந்திருந்தால், அங்கே வளர்ச்சி இல்லை. மாறாக, வளர்ச்சி இல்லாத இடம் அழிந்தும் போகும். அதே மாதிரி, இங்கே நாம் பார்க்கிற ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு முயற்சியும், எல்லையற்ற சாத்தியக் கூறுகளை நமக்கு அளிக்கிறது. எப்படி நமக்கு முன்னாள் இருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்பதே நமக்கு முன்னால் இருக்கும் கேள்வி.

    உள்ளூர் அக்கப்போர்களைப் பார்த்துப் படித்துச் சலித்து விட்ட நிலையில், பொருளாதாரத்தைத் தொட்டுப் பேசலாமே என்று ஒரு சின்ன ஆரம்பம்! அவ்வளவுதான்!
    ReplyDelete
  5. சுந்தர் சொல்றா மாதிரி இந்த விசயத்தை வச்சு ஷங்கரை படம் எடுக்க சொன்னா மக்களுக்கு மூணு மணி நேரம் நல்லா பொழுது போகும்!
    ReplyDelete
  6. சங்கர் எடுப்பதை விட, தெலுங்கு சினிமா எதை வேண்டுமானாலும் பாருங்கள்! இதை விட அதிகப் பந்தாடல் ரசிக்கிற மாதிரி இருக்கும்! இங்கே போத்திக் கொண்டு நடிக்கிற நடிகைகள் அங்கே கொஞ்சம் காத்தாடவும் இருப்பார்கள்!

    நிழலை ரசிப்போம், கைதட்டுவோம், போணியாகாத ஹீரோ அரசியலுக்கு வரும்போது அவனையும் தூக்கிச் சுமப்போம், அதுவரை, நிஜத்தில் என்ன நடந்தால் என்ன என்கிறீர்களா?

காலத்தோடு ஒட்டிய ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கட்டமைப்பது எப்படி என்று இங்கே ஒரு ஒன்பது வழிகளில் கொஞ்சம் சொல்வது கேட்கிறதா? 

இங்கே நம்முடைய அனுபவம் என்ன? 

எதற்கெடுத்தாலும் வழிமறிக்கிற நந்திகளாக அதிகார வர்க்கம், தொழிற்சங்கங்கள், இப்படித் தொட்டால் ஒரு அரசியல், அப்படிச் செய்தால் அதற்கொரு அரசியல் என்றே போய்க்கொண்டிருக்கிற அவலம் புரிகிறதா?


பல்வேறு கோரிக்கைகளை  முன்வைத்து BSNL ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்! காலச் சூழலை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்?

கள யதார்த்தத்தை மூன்றுநாட்களுக்குப் பிறகாவது புரிந்து கொள்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!  


  

முகமூடி சீர்திருத்தங்கள்! யாருக்காக....?

ஐ.மு.கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு 
ஒட்டு மட்டும் போட்ட மக்களுக்கு "அடி மேல் அடி" கொடுப்பதைக் கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் நடத்திக் கொண்டிருப்பதன் இன்னொரு முகமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இவைகளின் விலையை அதிகரிப்பது என்ற அரசின் முடிவு இருக்கிறது. இந்த ஒரு ஆண்டு காலத்துக்குள்ளேயே, விலை உயர்வு அறிவிக்கப் பட்டிருப்பது இது மூன்றாவது முறை. இந்த ஒரு முடிவால் மட்டுமே விலைவாசிக் குறியீடு ஒரு சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அரசே மதிப்பிட்டிருக்கிறது. உண்மை நிலவரம் அதை விடக் கூடுதலாகக் கூட இருக்கலாம்.

பொருளாதாரச் சீர்திருத்தத்தின் ஒரு அங்கமாக எரிபொருட்களின் விலையை சர்வதேச நிலவரத்துக்குத் தகுந்த மாதிரி நிர்ணயிக்கிற எரிபொருள் விலை சீர்திருத்தம் தவிர்க்க முடியாதது என்று இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்த சீர்திருத்தம் எவ்வளவு பெரிய மோசடி என்பதைக் கொஞ்சமாவது இந்தப்பக்கங்களுக்கு வருகிறவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக  இந்தப் பதிவு.

இப்போதைய விலை உயர்வால், உடனடியாகவும் அதிக லாபமும் பெறப்போவது அம்பானிகளுடைய ரிலையன்சும், எஸ்ஸார்  குழுமத்தின் எண்ணெய் நிறுவனங்களும் தான் என்பது செய்திகளைக் கொஞ்சம் கூர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்.அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குக்  கொடுப்பது போலவே மானியமும் சலுகையும் வேண்டும் என்று ரிலையன்ன்ஸ் கம்பனி முதலில் போர்க்கொடி தூக்கியது. இல்லைன்றால் இந்தியாவுக்குள் வணிகம் செய்வது கட்டுபடியாகாது, வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது மட்டும் செய்யப் போகிறோம் என்றும் கூட செய்திகள் வந்தன.

இப்போது அறிவிக்கப் பட்டிருக்கும் விலை உயர்வுக்குப் பின்னாலும் அரசுக்கு சுமார் இருபத்துமூன்றாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு இருக்கும் என்று அரசு சொல்லும் மதிப்பீடு இருக்கிறது பாருங்கள், இங்கே தான் அரசு செய்யும் மோசடி இருக்கிறது. 

2009 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி வருவாய் 56365 கோடி ரூபாய்கள்! மானியமாகத்  தந்ததோ வெறும் 14058 கோடி தான்!. ஒட்டகத்தின் மீது ஏற்ற வேண்டிய பாரத்திற்கும் அதிகமாகவே சுமையை ஏற்றி விட்டு, அதை மாற்றுவதகாகக் கொஞ்சூண்டு சுமையைத் தூக்கி எறிகிற மாதிரிப் பாவனையிலேயே முட்டாள் ஒட்டகங்கள் ஏமாந்து, சுமையைச் சுமந்து வாயில் நுரைதள்ளிக்  கொண்டு போகிற கதை மாதிரி இல்லை?! 


போதாக்குறைக்கு, விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த பெட்ரோல் பொருட்களின் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரியைக் குறைத்துக் கொண்டால், பொதுமக்களுக்கு அதிகச் சுமை இருக்காது என்று ஒரு மத்திய அமைச்சர் பேசியிருப்பதன் பின்னணியைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் இன்னும் கொஞ்சம் விவரங்கள் தெரிய வரும்.
 
Crude Oil and Commodity Prices
June, Tuesday 29 2010 - 12:04:51

Crude Oil
$75.60 ▼2.65   3.39%
12:04 PM EDT - 2010.06.29

Natural Gas
$4.58 ▼0.16   3.34%
12:04 PM EDT - 2010.06.29

 எண்ணெய் விலை சந்தை நிலவரத்தில் மாறிக் கொண்டிருப்பது இரண்டு படங்களிலும் தெளிவாக! படத்தின் மீது க்ளிக் செய்தால், நீங்கள் க்ளிக் செய்யும் நேரத்தில் எண்ணெய் விலை நிலவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஒன்பது மாத நிலவரத்தைப் பார்த்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் (சுமார் 160 லிட்டர்கள்) விலை இன்றைய நிலவரப்படி 75.60 டாலர்கள்.  எல்லா மதிப்புக்களையும் ரவுண்டாக எடுத்துக் கொண்டு பார்த்தால்  லிட்டருக்கு இருபத்திரண்டு ரூபாய் தான் அடக்கமாகிறது. பெட்ரோல் டீலருக்குக் கொடுக்கும் கமிஷன் வெறும் ஒன்றரை சதவீதம் தான். மிச்சம் எல்லாம் மத்திய அரசு பல வகைகளிலும் விதிக்கிற வரிகள் தான். அடக்க விலைக்கு மேல் நூறு முதல் நூற்று முப்பது சத வீதம் வரை பலவிதமான வரிகளை மத்திய அரசு விதிக்கிறது. இவர்கள் விதித்தது போக மாநில அரசுகள் தங்கள் பங்குக்கு விற்பனை வரியை விதிக்கின்றன,

விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் தாங்கள் விதிக்கும் வரியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று உபதேசம் செய்கிற மத்திய அமைச்சர்கள் தாங்களே அதைச் செய்தால் என்ன? எவரும் இந்தப் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை என்பது பேசுகிற புண்ணியவான்களுக்கே நன்றாகத்  தெரியும்

இங்கே பேரலுக்கு 159 அல்லது 160 லிட்டர்கள் என்று சொல்லும்போது சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயில் சரிபாதிக்கும் கொஞ்சம் குறைவாகத் தான் பெட்ரோல் இருக்கிறது. அப்படியென்றால், மிச்சமிருப்பதெல்லாம் வீண் தான் என்று நினைத்துவிடாதீர்கள்!

ஒரு பேரலில் கிடைப்பது என்ன என்ன என்று பார்க்கலாமா?

27.5 லிட்டர் பெட்ரோ கெமிகல் பொருட்கள்-- இதில் ரசாயன உரங்கள் தயாரிக்கப் பயன்படும் அம்மோனியா உட்பட பிடுமேன், தார் போன்றவைகளோடு, பெட்ரோலியம் ஜெல்லி, வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்கள், சலவை செய்யப் பயன்படும் வேதிப் பொருட்கள், பபிள் கம் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், பிளாடிக் பொருட்கள் தயாரிப்பில் என்று பட்டியல் கொஞ்சம் பெரிது.

6.5 லிட்டர் எல்பிஜி எரிவாயு.

14.5 லிட்டர் ஒயிட் கெரசின்  என்றழைக்கப்படும் விமானத்திற்கான எரிபொருள். புகை வராது. இங்கே நாம் வீடுகளில் உபயோகிக்கும் மண் எண்ணெய் தரம் மிகவும் கம்மி, புகை நிறைய வரும்.

6.6 லிட்டர் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் 

6.6 லிட்டர் ஹீட்டிங் ஆயில்

72.5 லிட்டர் பெட்ரோல்

35 லிட்டர் டீசல்

ஆகப் பெட்ரோல் சுத்திகரிப்பில், பெட்ரோலை விட லாபகரமான வேறு பல பொருட்கள் கிடைப்பதால் தான், இன்றைக்குப் பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன என்பதை விட, அரசுகளையே ஆட்டிப் படைத்து விடக் கூடிய அளவுக்குக் காசு அதில் புழங்குகிறது என்பதை புஷ் காலத்தில் ஈராக்கின் மீது யுத்தம், பிரிட்டிஷ் பெட்ரோலியக்  கம்பனியின்  ஆழ்துளைக் கிணற்றில் இருந்து கடலை மாசு படுத்திவரும் எண்ணெய்க் கசிவு போன்ற நிகழ்வுகள் அம்பலப் படுத்தின.

இப்போது இங்கேயும் அப்படித் தான்!

மக்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாக இந்த விலையேற்றம் இருக்கும் என்று தெரிந்தும் இதைச் செய்கிறார்கள் என்றால், தேர்தல் நேரத்தில் கொஞ்சம் வாக்குறுதிகள் ப்ளஸ் ஒட்டுக்குக் கொஞ்சம் காசுடன், அதைத் தள்ளுபடி செய்கிறேன், இதைத் தள்ளுபடி செய்கிறேன் என்று கடன் தள்ளுபடித் தில்லுமுல்லுக்களோடு சேர்த்து--

எவ்வளவு அடிமேல் அடிவிழுந்தாலும் பொறுத்துகிட்டு ஓட்டுப் போடறாங்களே! இந்த ஜனங்க எவ்வளவு ரொம்ப நல்ல இளிச்சவாயங்கன்னும்

சொல்வது புரிகிறதா?

புரியவில்லை என்றால், உங்களை அந்த ஆண்டவன் கூடக் காப்பாற்ற முடியாது!


வேறு பதிவுகளில், வலைக் குழுமங்களில் இந்தப் பிரச்சினையை அலசுகிறார்களோ இல்லையோ, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு இழை ஆரம்பித்து, அப்புறம் வேறுபக்கங்களில் கவனம் சிதறி விட்டது. ஜனங்களால் என்ன செய்துவிட முடியும், கொஞ்ச நாள் காக்கைகள் போலக் கூடிக் கரைவார்கள் அப்புறம் கலைந்து விடுவார்கள் என்ற அரசியல் வாதிகளுடைய பால பாடத்தில் கற்றுக் கொண்டதைத் தவறு என்று நிரூபித்துப் பாடம் புகட்டும் வரை .........!

டில்லியில் 1984 இல் நடந்த சீக்கியர்களைப் படுகொலை செய்த விவகாரத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் சப்பைக் கட்டுக் கட்டிருக்கிறார். அந்த சம்பவம் நடந்தே இருக்கக் கூடாது என்று சொல்லிருக்கிறார். சீக்கிய சமூகத்திடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்! இருபத்தாறு ஆண்டுகள் கழித்து! இதற்கு முன்னாலும் இப்படி ஒரு மன்னிப்புக் கோரும் நாடகம் இந்தியாவிலேயே அரங்கேறியது. எந்த மரியாதையும் கிடைக்கவில்லை. இப்போது கனடாவில் போய் அதே மன்னிப்புக் கேட்கும் வசனம் ஒலி பரப்பாகி இருக்கிறது.

இந்திரா காண்டி குடும்பத்து வாரிசுகள் எவரும் இந்தப் படு கொலைக்காக இது வரை வருத்தம் தெரிவிக்கவில்லை. அதற்குக் கூட மன்மோகன் சிங் மாதிரி ஒரு டம்மிப் பீஸ் தேவைப் படுகிறது!  


காங்கிரசுக்கு வேண்டுமானால் டம்மிப் பீஸ்கள், முகமூடிகள் தேவையாயிருக்கலாம்!

நமக்குமா?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!