Showing posts with label தீர்ப்புக்கள் திருத்தப்படலாம். Show all posts
Showing posts with label தீர்ப்புக்கள் திருத்தப்படலாம். Show all posts

ஜாமீன்! கொடுத்தவனே(ரே) பறித்துக் கொண்டாண்டி! மானே, கிடைத்ததையும் பறித்துக் கொண்டாண்டி!


என்ன சொல்வது என்றே புரியவில்லை. சட்டம் எப்படி சில விஷயங்களைப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் எழும் குழப்பம் தான் இந்தப்பதிவின் மையமே தவிர, தீர்ப்பு, அல்லது அதன் உள்ளே உள்ள விஷயங்களைப் பற்றி அலசுவது, விமரிசிப்பது இல்லை.

கடந்த பிப்ரவரி மா
ம் ஆ.ராசா கைது செய்யப்பட்டதில் இருந்து, வரிசையாகக் கனிமொழி வரை பதினான்கு தனிநபர்களும், மூன்று நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டதில், ஜாமீன் அனுமதிக்கப்படாமலேயே இருந்த நிலை மாறி, கடந்த சில நாட்களுக்கு முன்தான், மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் ஒவ்வொருவராக ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள்.

மிஞ்சி இருந்தது, ஆ.ராசா, செயலாளர் சித்தார்த் பெஹுரா, தனிச் செயலாளர் ஆர் கே சந்தோலியா இந்த மூவரும் தான்! இந்த மூவர் தான்
ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டில் அச்சாணியாக இருந்தவர்கள் என்று இவர்களது ஜாமீன் மனுவை சிபி ஐ கடுமையாக எதிர்த்து வந்தது.  கனிமொழி உள்ளிட்ட மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தன்னை மட்டும்ஜாமீனில் வெளியே விட  மறுப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றுஆர் கே சந்தோலியா தாக்கல் செய்திருந்த மனு சிபிஐ சிறப்பு நீதி மன்றத்திலும், சித்தார்த் பெஹுராவின் மனு டில்லி உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்தன.

நேற்றைக்கு, ஆர் கே சந்தோலியாவை,
அவர் ராசாவின் தனிச் செயலாராக மட்டுமே இருந்தவர், இந்த விவகாரத்தில் எந்த விதமான ஆதாயத்தையும் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படாத நிலையில் மற்ற இருவருடன்(ராசா, பெஹுரா) ஒப்பிட முடியாது என்று கருதுவதால், அவருக்கு ஜாமீன் அளித்து சிபி ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு ஒ பி சைனி உத்தரவிட்டிருந்தார். 

ஒரேமாதிரிக் குற்றம் சாட்டப் பட்டிருந்தவர்களில் ஏற்கெனெவே பதினோரு பேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டதையும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். . அதன்படி நேற்று மாலையே சந்தோலியா ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால், சந்தோஷம் நேற்று (வெள்ளி) ஒருநாள் வரை கூட நீடிக்கவில்லை!

காரணம் அங்கே டில்லி உயர்நீதிமன்றத்தில் பெஹுராவின் ஜாமீன் மனு மீது, நீதிபதி திரு ஷாலி தன்னுடைய  தீர்ப்பை ரிசர்வ் செய்து வைத்திருந்த  நிலையில், இன்று டில்லி உயர்நீதிமன்றம் ஒரு விசித்திரமான தடை உத்தரவை அளித்திருக்கிறார். ஆர் கே சந்தோலியாவுக்கு அளிக்கப் பட்ட ஜாமீன், பெஹுராவின் வழக்கையும் பாதிக்கும் என்பதால், அவர் ஜாமீனில் வெளியே விடப் படாமல் இருந்தால், அந்த ஜாமீன் மீது தடை பிறப்பிப்பதாகத் தீர்ப்பு. அளிக்கப்பட்டிருப்பது தான் மிக ஆச்சரியமாக இருக்கிறது.

சந்தோலியாவின் ஜாமீன் மனு, சிபிஐ தரப்பில் சொல்லப்பட்ட ஆட்சேபங்கள் மற்றும் ஆவணங்கள்,அதுபோக ஜாமீன் அளிக்கப் படுவதற்கான காரணங்களாக விசாரணை நீதிபதி கருதிய காரணங்களை, நீதிமன்றப் பதிவாளர் வழியாக, உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி திரு. ஷாலி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நீதிபதி முன்தான் கனிமொழி, சரத்குமார் முதலானவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்ற வியாழனன்று விசாரிக்கப்பட்டு, நான்கு  நாட்களுக்குப் பின் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.


கனிமொழி முதலானவர்கள் ஜாமீன் மனு மீது சென்ற திங்களன்று, உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுக்காமல் மறுப்பதைக் கண்டித்திருந்த தீர்ப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், உச்சநீதிமன்றம், கனிமொழி உள்ளிட்டு குற்றம்சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீதான கடுமையான குற்றச் சாட்டுக்களைக் குறித்து ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருப்பதாக நீதிபதி திரு ஷாலி குறிப்பிட்டிருந்ததையும் நினைவு படுத்திக் கொண்டால், என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் என்ன, இந்தப்பதிவு எதற்காக என்பதும் புரியும். குறிப்பிட்ட அந்தப் பகுதி மட்டும் கீழே, முழுமையான செய்தி இங்கே.

“But that is not the case. Section 409 and Section 120B (criminal conspiracy), when read together, carries the maximum punishment of life imprisonment. Criminal breach of trust is also a substantive charge. However, Section 409 does not find mention in the Supreme Court order. Either the court was not made aware of this charge or if we take this is a substantive charge, the maximum punishment is life term and not seven years, as was noted by the Supreme Court,” observed Justice Shali. 


சந்தோலியாவின் தரப்பில், இந்த உத்தரவை எதிர்த்து, வருகிற திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் படலாம் என்று சொல்லப்படுகிறது.
 
உச்சநீதிமன்றமும் இதே மாதிரி நிலையை எடுத்தால்..........

பதிவின் தலைப்பை மறுபடி படித்துக் கொள்ளுங்கள்! 

தகவல் அறிவது நமது உரிமை!மு.க.வுக்கும் நீதிமன்றம் குட்டு!


தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தினமணி நாளிதழில் வெளியாகி இருந்த இரண்டு தலையங்கங்களைத் தொட்டு எழுதியிருந்த பதிவுகள் இவை. ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றின், உருப்படியான சாதனை என்று ஒன்றிரண்டைச் சொல்ல முடியுமானால், அதில் இந்தத்தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்று. ஆனால், வெளிப்படையான நிர்வாகம், சரியான விவரங்கள் ஊழல் செய்யும் புள்ளிகளுக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும் என்பது புரிய வந்ததுமே, இந்தச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளைக் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்துவிட்டது.
 


தமிழ்நாட்டில் அன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருந்த கருணாநிதி சட்டத்தை வளைப்பதிலும், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் , எப்படிப்பட்ட கில்லாடி என்பது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் வெளியாகி இருக்கிறது.ஜெயலலிதா தொடர்ந்து நீதிமன்றங்களில் குட்டு வாங்கிக் கொண்டிருப்பதைப் பறைசாற்ற ஆயிரம் ஊடகங்கள், பதிவுகள் இருக்கின்றன. தாத்தா செய்திருக்கும் சாதனையை அவை கண்டு கொள்வதில்லை என்பதில் எனக்கு ஏகத்துக்குமே வருத்தமுண்டு.எமெர்ஜென்சி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் எச் ஆர் கண்ணா ஒருவர் தவிர, நீதிபதிகளாக இருந்தவர்களே பயந்து, வளைந்து கொடுத்தார்கள் என்பது பதிவு செய்யப்பட்டிருப்பது போல, தலீவர் கலைஞர் செய்தது பதிவு செய்யப்படவில்லை!

நேர்மையான நீதிபதி என்று வெகுஜன ஊடகங்களால் சித்தரிக்கப் பட்டவர்களுமே கூட, கலைஞர் ஒதுக்கீடு செய்த வீட்டுமனை, வீடுகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் (அதிக விவரங்கள் வேண்டுவோர் http://savukku.net  தளத்தில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்), மாநிலத்தில் இருந்த நீதி மன்றங்கள் அந்த கால கட்டத்தில் அரசுக்கு எதிராக ஒரு சிறு முணுமுணுப்பைக் கூட  எழுப்ப முனையவில்லை என்பதும் வெளியே தெரிந்தாலும் அதிகம் கவனிக்கப்படாத அல்லது கண்டுகொள்ளப் படாமல் விடப்பட்ட விஷயம் தான்!

ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட நீதிபதி பி டி தினகரன், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் தலைமை நீதிபதி கே ஜி பாலக்ருஷ்ணன்  முதலானோர் அன்றைய அரசின் கனிவான பார்வையைப் பெற்றவர்கள் என்பதும், இந்தநேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது. 

மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஜெய லலிதா உச்ச நீதிமன்றத்தின் குட்டை நேற்றைக்கு வலுவில் வாங்கி இருக்கிறார். சென்னை நீதிமன்றம் தொடர்ந்து குட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னமும் குட்டும்!அது தம்பட்டம் அடிக்கப் படுகிற அளவுக்குக் கருணாநிதி வாங்கிய குட்டுக்களையும் பார்க்க வேண்டாமோ?

இப்போது கருணாநிதி அல்லது ஜெயலலிதா வாங்கிய குட்டு அல்ல விஷயம்!

இந்த தேசத்தில் ஊழல் செய்கிற அரசியல்வாதிகள், அவர்களுக்குத் துணைபோகிற நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என்று ஜன நாயகத்தின் தூண்களாகச் சொல்லப் படுகிற ஒவ்வொன்றுமே எப்படி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும்!

ஜூனியர் விகடனில் இன்றைக்கு வெளியாகி இருக்குமொரு  செய்திக் கட்டுரை, ஜூவிக்கு நன்றியுடன்!

 
தீர்ப்பில் தள்ளாடும் தகவல் ஆணையம்!

ஆணையத்தின் மீது அடுக்கடுக்காய் வழக்குகள்!

'தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மூன்று தகவல் ஆணையர்கள் நியமனம் செல்லாது’ என்று அதிர்ச்சித் தீர்ப்பு அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். 

அரசு அலுவலங்களில் ஒளிவுமறைவு இல்லாத செயல்பாடும், லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டுக் கிடைக்காமல் போனால், தகவல் ஆணையங்களில் மேல்முறையீடு செய்ய லாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநிலத் தகவல் ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன.

தகவல் தரவில்லை என்றால் அதிகபட்சமாக Rs. 25,000 அபராதம் விதிக்கப்படும். இத்தகைய அதிகாரம் கொண்டது தகவல் ஆணையங்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் தகவல் ஆணையத்துக்கு, ஏ.ராமையா, சி.மனோகரன், ஏ.ஆறுமுக நயினார் ஆகிய மூவர் நியமிக்கப்பட்டனர். சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வந்த அன்றுதான் இதற்கான உத்தரவு வெளியானது. இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இந்த நியமனம் செல்லாது’ என்றது.
''தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாளில், இந்த நியமனம் நடந்துள்ளது. மாநில முதல்வர், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவர் அடங்கிய குழுதான், மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும். இந்த நியமனத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் கருத்தைக் கேட்காமலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றாமலும் நியமனம் செய்யப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


தகவல் அறியும் உரிமை ஆர்வலரான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''தகவல் ஆணையங்கள், தேர்தல் கமிஷனைப் போலவே தன்னாட்சி அதிகாரம்கொண்ட ஓர் அமைப்பு. அறிவியல், சட்டம், இதழியல், சமூக சேவை, நிர்வாகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், இங்கே அரசியல் புகுந்து விளை யாடுகிறது. வெளிப்படையான ஊழல் அற்ற அமைப்பு உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் சட்டமே கொண்டுவரப் பட்டது. ஆனால், இதன் ஆணையர்கள் நியமனம்கூட வெளிப்படையாக நடைபெறவில்லை. ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 

கருணாநிதியின் செயலாளராக இருந்த டி.ஆர்.ராமசாமி, தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதி போன்றவர்கள் தகவல் ஆணையர்களாக இருக்கிறார்கள். 

2008-ல் தகவல் ஆணையர்களாக சாரதா நம்பி ஆரூரான், டி.சீனிவாசன், டி.ஆர்.ராமசாமி மற்றும் பெருமாள்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கான கூட்டம் 11.4.2008-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டம் நடப்பதற்கு 10 நாட்களுக்குள்தான் டி.ஆர்.ராமசாமியும் பெருமாள்சாமியும் விண்ணப்பிக்கிறார்கள். டி.சீனிவாசன், சாரதாநம்பி ஆரூரான் ஆகியோர் முதல் நாள்தான் விண்ணப்பித்தார்கள். அவர்களுக்குப் பதவி தர வேண்டும் என்பதற்காகவே, அவசர அவசரமாக விண்ணப்பங்களை அரசு வாங்கியது. ஒரு வழக்கு தொடர்பாக சீனிவாசன் என்னிடம் பேசிய போது, 'தகவல் ஆணையர் பதவிக்காக நான் விண்ணப்பிக்கவே இல்லை. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்குத்தான் விண்ணப்பித்தேன். அந்த பயோ-டேட்டாவை வைத்து என்னைத் தேர்வு செய்துவிட்டார்கள். பெருமாள் சாமியும், சாரதாநம்பி ஆரூரானும் வேறு பதவிகளுக்குத்தான் விண்ணப்பம் கொடுத்தார்கள்’ என்றும் சொன்னார்.

இப்படிப்பட்டவர்களை தகவல் ஆணையத்தில் நியமித்தால், அங்கே வரும் மேல்முறையீட்டு மனுக்களை எப்படி விசாரிப்பார்கள். இனி மேலாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிந்தவர்களையும், சமூக ஆர்வலர்களையும் நியமிக்க வேண்டும்'' என்றார்.  

இந்த வழக்கை, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். 'தகவல் ஆணையர் தேர்வு நடவடிக்கைகள் தொடர்பான கோப்பு ஒரு நாளிலேயே பிரிவு அலுவலர் தொடங்கி முதல்வர் வரை சென்றிருக்கிறது. ஆணையர்கள் தேர்வுக்கான கூட்டம் 1.3.11 அன்று நடந்தது. எதிர்க் கட்சித் தலைவரின் (ஜெயலலிதா) ஆலோசனையைப் பெறவில்லை. கூட்டத்தை வேறு தேதிக்குத் தள்ளிவைக்கும்படி எதிர்க் கட்சித் தலைவர் கருத்துத் தெரிவித்து இருந்தார். ஆனாலும் ஆணையர்கள் நியமனம் செய்து அன்றே அதற்கான ஆணையை வெளியிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைக் கருத்தில்கொள்ளாமல் அன்றே கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். இந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்யும்போது, ராமையா அரசுப் பதவியில் இருந்தார் என்றும் தேர்வுக் கூட்டம் நடந்த அன்றுதான் அவருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கூறினார். இப்படி நடந்திருப்பது சட்டப்படி குற்றம். இதனை எல்லாம் பார்க்கும்போது, மூன்று பேர் நியமனத்திலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை எனவே, மூன்று பேரின் நியமன உத்தரவு சட்ட விரோதமாகவும், நடைமுறைக்கு முரணாகவும் உள்ளது’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

''தகவல் அறியும் சட்டத்தில் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உள்ள விதி முறைகள்தான் இந்த மூன்று பேர் நியமனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. நியமனத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, மாறிவிட்ட அரசுகளின் நிலைப்பாட்டைப் பார்க்கக் கூடாது'' என்கிறார்கள் இந்த மூன்று பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் தகவல்களைப் பெறுவதைவிட... நல்ல ஆணையர்களைப் பெறுவது கஷ்டமாகி விட்டது!

- எம்.பரக்கத் அலி

ஸ்ரீபதிக்கு சிக்கல் இல்லை!

தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக கடந்த 2010-ல் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'அவருடைய நியமனம் செல்லும்’ என்றது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், 'ஸ்ரீபதி தேர்வுக்காக நடந்த கூட்டத்திற்கு எதிர்க் கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களைக் கூறி அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே, அவர் இல்லாமல் எடுத்த முடிவை சட்ட விரோதம் என்று குற்றம் சாட்ட முடியாது’ என்றும் சொன்னது.

சரி, முகவுக்கு எங்கே நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது? 

குறைந்தபட்சம், முக பெயராவது இந்தத் தீர்ப்பில் இருக்கிறதா என்று கேட்டாவது பின்னூட்டம் வரும் என்று காத்திருந்தேன்! எவரும் அந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டதாகத் தெரியவில்லை! போகட்டும், இந்தக் கேள்விக்கு விடை வழக்கைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் எஸ் விஜயலட்சுமியின் மனுவில் இருக்கிறது. மனுவின் முழுவிவரம் இந்த செய்திக் கட்டுரையில் சொல்லப்படாவிட்டாலும், அதன் சாராம்சத்தை RTI activist கோபாலக்ருஷ்ணன் விளக்கியிருக்கும் பகுதியிலேயே இருக்கிறது.

இதே மாதிரித்தான், TNPSC குழுத்தலைவர் உறுப்பினர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள், அவர்கள் செய்த முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் நடத்தப்பட்ட சோதனைகளும் காட்டின. ஆனால்,அது வழக்கு நடந்து தீர்ப்பு வரும் வரை, தீர்மானமான முடிவாகச் சொல்ல முடியாது என்பது தான் வித்தியாசம்.

பதிவிடுகிறவர் தான் சொல்ல வந்ததைத் தெளிவாக சொல்லியிருக்கிறாரா என்பதும்,சொன்ன விஷயம் சரிதானா என்பதும் ஒரு ஆரோக்கியமான உரையாடலில் மட்டுமே சாத்தியம்!ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறேன்.பின்னூட்டப்பெட்டி மேல் இருப்பதையும் படித்து விட்டு அதன் பிறகு பின்னூட்டங்களில் உங்கள் மனதில் படுவதை சொல்லுங்கள்!

ஆ.ராசா ஜாமீனில் வெளிவராமல் இருக்கும் காரணம்....!


 
சென்ற பதிவின் தலைப்பாக சிதம்பரத்தில் ஒரு மல்லிகா! திகார் சிறையில் கனிமொழி! என்ன பெரிய வித்தியாசம்? என்ற கேள்வியை எழுப்பி இருந்ததை நண்பர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றே நினைத்திருந்தேன். என்டிடிவி முதற்கொண்டு ஊடகங்களில் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது தவறான முன்னுதாரணம் என்றெல்லாம் விவாதங்கள் அனல்பறக்க நடந்து கொண்டிருந்தன.ராம்ஜெத்மலானி, நீதிமன்றம் ஜாமீனை மறுத்தது தவறானது என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.

அதைக் கொஞ்சம் கருத்தில் கொண்டு யோசிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே நேற்றைக்கு தினமணியில் ஒரே அடிப்படையில் வெளியாகி இருந்த இருவேறு செய்திகளைக் கொடுத்திருந்தது.பின்னூட்டங்கள், பார்வையாளர்களுடைய எண்ணிக்கை இரண்டுமே, நண்பர்கள் புரிந்து கொண்டது என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை என்றே தோன்றியது. நேற்றைய செய்திகள் முழுவதும் கனிமொழி-- ராசாத்தி இருவரும் 'உன்னைக் கண்டு நான் அழ, என்னைக் கண்டு நீ அழு' பாணியில் நமக்கு நாம் மட்டும் தான் -வேறு யாரும் இல்லை என்ற ரீதியில் செய்திகள் வந்துகொண்டிருந்தன.

கனிமொழி பத்திரிகையாளர்களிடம் கோபம் கொண்டு "நீங்கள் எல்லாம் மனிதர்கள்தானா? இங்கிருந்து போங்கள்" என்று கொந்தளித்ததாக சிஎன்என் ஐபிஎன் செய்தியாளர் அறிவித்தது, டிவிட்டரில் காலை பதினோரு மணி வாக்கிலேயே வந்து விட்டது. ஆனாலும், ஒரு இமேஜ் பில்டப் கொடுப்பதற்காகவோ, அல்லது தியாக சிகரமாக்கி அனுதாபம் தேடுவதற்காகவோ இப்படி ஒரு மாறுபட்ட செய்தியை வெளியிடவும் இங்கே ஆட்கள் வலிய உதவுகிறார்கள். இன்று வெளியான ஜூவி கட்டுரை, கனிமொழியை, இரக்கமற்ற பாவிகள் சிலர் திஹார் சிறையிலேயே வைத்திருக்க முடிவு செய்துவிட்டதாகவும், வாழ்க்கையின் ஓரத்துக்கே போய் 'என் வாழ்க்கை திஹார் சிறையிலேயே முடியட்டும்' என்று சொன்னதாகவும் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

செய்திகளை எப்படி எப்படியெல்லாம் திரிக்கலாம், பூசி மெழுகலாம், இல்லாத சிக்ஸ் பேக் அப் பில்டப் இருப்பது மாதிரிக் கொடுக்கலாம் என்பதற்கு இந்த ஒரு செய்தியே போதும்! கொஞ்சம் பாருங்களேன்!



னிமொழி மட்டுமல்ல தி.மு.க-வினரே பெரிதும் நம்பி இருந்தது நவம்பர் 3-ம் தேதியைத்தான்!

கருணாநிதி டெல்லி வந்து சோனியா காந்தியை சந்தித்துப் பேசியதும், 'கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர்களின் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் எண்ணம் இல்லைஎன சி.பி.ஐ. அறிவித்ததும் கனிமொழிக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. 

தி.மு.க-வின் சட்ட ஆலோசகர்களும் 'ஜாமீன் உறுதிஎன்றே, கனி மொழிக்கு நம்பிக்கை கொடுத்தார்கள்.அதனால், வழக்கத்திற்கு மீறி புன்னகையுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார், கனிமொழி. 

திரண்​டிருந்த கட்சிக்காரர்களைப் பார்த்து வணக்​கம் சொன்னபடியே வந்தார். அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி ஷைனியும்  அறைக்குள் நுழைந்தார். அடுத்த இரண்டாவது நிமிடம்...  'ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்என்று  நீதிபதி ஷைனி அறிவிக்க, அந்த அறையே கண்ணீர் மயமானது.

இதைச் சற்றும் எதிர்பார்த்திராத கனிமொழி, தனது வழக்கறிஞர்களிடம் ஷைனியின் உத்தரவு குறித்து தெளிவாகக் கேட்டார். அடுத்த சில நிமிடங்​களிலேயே தன்னை சகஜமாக்கிக் கொண்டார். மகளிரணி நிர்வாகி ஒருவர் கனிமொழியின் கைகளைப் பற்றியபடி கதற, ''இது கோர்ட். இங்கே அழக் கூடாது'' என்றார் கனிமொழி. அப்போது தாங்கமாட்டாத கண்ணீருடன் ராஜாத்தி அம்மாள் அவரது அருகில் வர, கனிமொழிக்கே ஒரு மாதிரியாகி விட்டது.

''நீங்க அழுவுறதால என்னம்மா நடக்கப்​போகுது... தைரியம் சொல்ல வேண்டிய இடத்துல இருந்துகிட்டு நீங்களே அழலாமா?'' என கனி மொழி  தேற்றினாலும் ராஜாத்தியின் கண்ணீர் குறையவில்லை. ஒரு கட்டத்தில் சிறுபிள்ளை போல் தேம்பத் தொடங்கிவிட்ட ராஜாத்தியை  தோளோடு சாய்த்து கனிமொழி தேற்ற... அங்கே இருந்த கட்சிக்காரர்கள் அனைவரும் கலங்கிப் போனார்கள்.

அந்த துயரச் சூழலிலும் டெல்லி நிருபர்கள் சிலர் கனிமொழியிடம் சில கேள்விகளைக் கேட்க, ''நான் எதுவும் பேசக்கூடாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க!'' என்றார் கனிமொழி.

அதை சட்டை செய்து கொள்ளாமல் சில பெண் நிருபர்கள் கனிமொழியை சூழ்ந்து கொள்ள, ''குடும்ப ரீதியாக நான் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. இங்கே வந்தும் தொந்தரவு பண்றீங்களே...'' என கனிமொழி டென்ஷனாக, அடுத்த கணமே நிருபர்களை அப்புறப்படுத்தும் படலம் அரங்கேறியது.

குடும்ப உறவுகளும் முக்கிய கட்சிக்காரர்களும் மட்டுமே இருந்த அந்த அறையில் கனிமொழி பேசிய விஷயங்கள் ரொம்பவே உருக்கமானவை. முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ், ''இப்படி ஆயிடிச்சேம்மா...'' எனக் கண்ணீரோடு சொல்ல ''ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தானே ஆகுது. எல்லா கஷ்டமும் எனக்குப் பழகிப் போயிடுச்சு. நீங்க கவலைப்படாதீங்க!'' என்றார் கனிமொழி.

''ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் என் பெயர் அடிபட ஆரம்பிச்சப்போ எனக்கு ஆச்சர்யமா இருந்தது. காரணம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தப்போ நான் தீவிர அரசியலுக்கே வரலை. எம்.பி-யாகவும் ஆகலை. எதுக்கு இதில நம்ம பேரை இழுக்கிறாங்கன்னு கோபப்பட்டேன். அதிகாரி​களுக்கும் இதுபற்றி புரியும்னு நினைச்சேன். ஆனா, சாதாரண சர்ச்சையில் தொடங்கிய விஷயம் கைது, விசாரணை, ஜெயில்னு நீண்டுக்கிட்டே இருக்குது. சி.பி.ஐ. ஆட்சேபனை தெரிவிக்காத நிலையிலும் ஜாமீன் மறுக்கப்படுது. இதுக்காக யார் மேல நான் வருத்தப்பட முடியும்? என் வாழ்க்கையில நல்லது ஏதும் நடந்தாத்தான் ஆச்சர்யம். கெட்டதுதான் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கே!'' எனச் சொல்லி கனிமொழி வழக்கம் போல் சிரிக்க, அங்கிருந்த பலருக்கு கண்ணில் நீர் கோத்துக் கொண்டது.

உளைச்சலும் உருக்கமுமாக நகர்ந்த அந்த நிமிடங்களில் நாமும் கலந்திருந்தோம். நம்மை அடையாளம் கண்டு வணக்கம் தெரிவித்தவரிடம் '''ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி உயர் நீதிமன்றத்தை அணுகச் சொல்லி இருக்கிறார். ஆனால், அது சாத்தியப்படாத விஷயம் என வழக்கறிஞர்கள் சிலர் சொல்கிறார்களே?'' என நாம் வருத்தம் காட்ட, ''வழக்கு சம்பந்தமா நான் எதும் பேசக் கூடாது. அதெல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும். நான் ஜெயிலுக்கு போக வேண்டிய நிலை வரும்னு கற்பனை கூட பண்ணிப் பார்த்தது இல்லை. ஆனா, இன்னிக்கு அந்த ஜெயிலே உலகமாயிடுச்சு. எனக்குச் சாதகமாவோ பாதகமாவோ  என்ன நடந்தாலும் நான் அதைச் சட்டை பண்ற நிலையில் இல்லை. இன்னிக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதற்காக நான் கவலைப்படவில்லை. இப்படி எல்லாம் ஆகலாம்னு மனசை அதுக்குத் தயாராத்தான் வைச்சிருந்தேன். ஆனால், எனக்கு ஜாமீன் கிடைக்கும்னு இத்தனைபேர் தமிழ்நாட்டுல இருந்து இங்க வந்திருக்காங்க. அவங்களோட எதிர்பார்ப்பு பொய்யாப் போனதை நினைச்சுதான் வருத்தமா இருக்கு. ஜாமீனுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் என் மொத்த வாழ்க்கையும் திகாரிலேயே முடிஞ்சாலும், அதை இன் முகத்தோட ஏத்துக்க நான் தயாரா இருக்கேன். இத்தனை வருஷ வாழ்க்கையில இந்தக் கடைசி அஞ்சாறு மாதங்களை என்னால மறக்கவே முடியாது."

"படவேண்டிய அடி எல்லாத்தையும் பட்டாச்சு. இனி எந்தக் கஷ்டத்தாலும் என்னை வருத்தப்படுத்த முடியாது. பரபரப்பு, குற்றச்சாட்டு, கைது, விமர்சனம், அவமானம், துரோகம், துயரம், எதிர்ப்பு, ஏமாற்றம்னு எல்லாத்தையும் கடந்தாச்சு. சாவைத் தவிர சகலத்தையும் பார்த்தாச்சு. எதையும் எதிர்கொள்கிற பக்குவத்தை ரொம்ப சீக்கிரமே கத்துக்கிட்டேன். ஆனா, அதுக்கு நான் கொடுத்த விலைதான் ரொம்பப் பெருசு!'' - விரக்தியாய் சிரிக்கிறார் கனிமொழி.


அம்மாவை ஆறுதல் படுத்தி, மகனுக்கு தைரியம் சொல்லி, கட்சிக் காரர்களை நம்பிக்கையூட்டி, வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி நிமிர்கிற கனிமொழியை ஆச்சரியமாகப் பார்க்கிறோம். வாட்சைக் காட்டி போலீஸ் அதிகாரிகள் ஏதோ சொல்ல, ''ஓ... தாராளமாகக் கிளம்பலாமே...'' என்றபடி கோர்ட்டுக்கு அருகே நிற்கும் வேனில் ஏறச் சென்றார். குழுமி இருந்த கட்சிக்காரர்களை வணங்கியபடி, மாறாத புன்னகையோடு திகாருக்கு கிளம்பினார் நாளைய தி.மு.க-வின் தவிர்க்க முடியாத, அந்த சக்தி!

- டெல்லியில் இருந்து இரா.சரவணன்

 ஜூவி வாசகர்கள் வேறெந்த செய்தி ஊடகங்களையும் பார்க்க மாட்டார்கள் என்று அசட்டுத் துணிச்சலா? ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அதுவே உண்மை போலாகிவிடும் என்ற கோயபல்ஸ் காலத்து நம்பிக்கையா? அல்லது அதையும் தாண்டி யாருக்கோ எச்சரிக்கை, சங்கேதமா?

இருபதை மாட்டிவிட்டு அறுபது தப்பித்துக் கொண்டது என்ற புகைச்சல் ஏற்கெனெவே இருக்கிறது.அறுபது கூட எண்பது + உம் சேர்ந்தே உள்ளே போக வேண்டியிருக்குமோ என்ற கலக்கம் கூட முன்னர் இருந்தது.இருபதை உள்ளே வைத்தால் அறுபதை சும்மா விடுவேனா என்ற மிரட்டல் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது! கேடிகளில் பெரும் கேடிகளான பேரன்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கலாகி ஒன்றரை மாதங்களாகிறது. பேரன்கள் இருக்குமிடமே தெரியாமல், அவ்வளவு அமைதி!பேரன்களுக்கு உதவி செய்கிற மேலிடத்துப் புள்ளி யார் என்பதை ஊகிக்க சிரமப்படவே வேண்டாம்! அஹமதான படேல் இருக்கக் கவலை எதற்கு?

******

கனிமொழிக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்ட பிறகுதான், இங்கே நிறையப்பேருக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்ற வாளிகளாகக் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் இதுவரை ஆ.ராசா ஒருவர்தான் ஜாமீனுக்கு விண்ணப்பிக்காதவர் என்ற தகவலே கொஞ்சம் விநோதமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது!

மூன்று நான்கு விளக்கங்களைக் கண்டு பிடித்துச் சொல்லி
ருக்கிறார்கள்!  

முதலாவதாக, திமுக தலைமையிடமிருந்து கனிமொழி  வெளியே வருவதற்கு முன்னால் முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக! 

அடுத்து, நான் குற்றமற்றவன் என்று நிரூபித்துவிட்டுத் தான் வெளியே வருவேன் என்று ஆ.ராசா சூளுரைத்திருப்பதாக!

அப்புறம், திஹார் சிறைக்குள் இருப்பதுதான் தனக்கும் தனது உயிருக்கும் பாதுகாப்பு என்று ஆ.ராசாவே கருதுவதாக!

இதில் எது உண்மையாக இருக்கும்? கண்டுபிடிக்க முடிந்தால், அதை உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்! பின்னூட்டத்தில் யுரேகா என்று கண்டுபிடிப்பைச் சொல்ல வேண்டாம்!!



ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிகைகள், ஊடகங்கள் பற்றி நீதிபதி மார்கண்டேய கட்ஜு என்ன சொல்கிறார் என்பதை இந்த லிங்கில் பார்க்கலாம்!