மண்டேன்னா ஒண்ணு! அரசியல்!

யக்குனர் பா.ரஞ்சித்  மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார்.அவருடைய வார்த்தைகளில்  சொல்வது என்றால் தொடர்ந்து  உரையாடல்களைத் தொடங்கி வைத்து!  சிலநாட்களுக்கு முன்னால் தலித் இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று அவர் பேசியது பலப்பல விவாதங்களை இங்கே ஆரம்பித்து வைத்தது. இப்போது குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை அழைத்துவந்து இன்னொரு தொடர் விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறார். முதலில் எங்கே, எதற்காக என்று பார்த்துவிடலாம். வானம் என்ற அமைப்பின் கீழ் மூன்று நாட்கள் கலை  நிகழ்ச்சிக்கு ரஞ்சித் ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் தொடக்கமாகத் தான் இது!

     
Ganesha Moorthy பின்னூட்டத்தில் இப்படிக் கேட்கிறார். விவாதங்களை விட பார்த்துவிட்டு எழுதுகிற பின்னூட்டங்கள் நச்சென்று இருக்கும் என்பதனால் வீடியோ மட்டுமில்லை பின்னூட்டப் போக்கையும் சேர்த்தே கவனிக்கிற வழக்கம் எனக்கு!

"ஜாதிகள் ஒழிய வேண்டும்", "அதிகாரம் பரவலாக்கபடவேண்டும்" என்று வாய் கிழிய போலியாக பேசும் கம்யூனிஸ்டுகள்தான், ஒரே குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காங்கிரஸையும், திமுகவையம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த துடிக்கிறார்கள். காங்கிரஸ் தலைமை உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தாத்தாத்ரேய பிராமின் கட்டுப்பாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. திமுக - கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுக்க திராணி உண்டா?


*******

#திராவிடம் என்றால் தி மு கழகம் நினைவுக்கு வராமல் இருக்குமா? எப்படி இருக்கிறார்களாம்?

  


இப்படித் தொடர்ச்சியாக ஹிந்து தமிழ் நாளிதழிலேயே கலாய்க்கப்படுகிற அளவில் தான்
திமுக, அதன் தலைவர் செயல்பாடு இருக்கிறது.

உடன்பிறப்பே! #ரெண்டு துரைமுருகன் என்னமோ கதை சொல்கிறாராமே! ஹிந்துவில் இப்படிக் கலாய்ப்பதற்கும் ஒரு பதில் சொல்லேன்!!

*******




ங்கராஜ் பாண்டே ஊடகங்களின், உரையாடுகிற கலையின் கதாநாயகன் என்றே சொல்லிவிடலாம். கால்மணி நேரத்துக்கும் குறைவான வீடியோவில் எத்தனை விஷயங்களைக் கேட்பவர் மனதில் பதிய வைத்துவிடுகிறார் என்பதைக் கவனித்தீர்களா?

கொஞ்சம் இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!      

!


ங்கராஜ் பாண்டே வெளியேறியபிறகு தந்திடிவி நிகழ்ச்சிகள் எப்படி இருக்கின்றன? ஒரு பரபரப்புச் செய்தியின் மீதான கேள்விக்கென்ன பதில்  நிகழ்ச்சி இது! கேள்விகள் பதில்கள் எப்படி?   

தெரிந்துகொள்வதற்காகவே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடித்தேன். உங்களுடைய கருத்தென்ன?

தயக்கமென்ன? சொல்லிவிடலாமே!  


  

சண்டேன்னா மூணு! அரசியல்! சினிமா! #MeToo

சண்டேன்னா மூணு! அரசியல்! சினிமா! #MeToo இப்படித் தனித்தனியாகச் சொன்னாலும், மூன்றிலும்  மைய நீரோட்டமாக ஒருவித அரசியல் இருப்பதைக்
கவனித்திருக்கிறீர்களா?

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டார்!ரஜனிகாந்த் சொல்லிக்கொண்டே இருக்கிறார்! விஜய் படங்களில் பன்ச் டயலாக் பேசிப்பேசியே கொஞ்சம் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்! ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்பே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே அரசியல் களத்தில் இறங்கியதோடு தேர்தல்களை சந்தித்து 29 சமஉக்களோடு எதிர்க் கட்சித்தலைவராகவும் ஆன தேதிமுக தலைவர் விஜய்காந்த் மீண்டும் அரசியல் களத்தில்! இங்கே விவாதத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்!


தேதிமுக மீண்டும் புத்துயிர் பெறுமா என்பதைக் காலமும் தேர்தல்களமும் தான் சொல்லவேண்டும்!


விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் தந்தை உடல் நலம், தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து இங்கே பேசியிருப்பதையும் பாருங்கள்! குழப்பமில்லாமல் தெளிவாகப் பேசுகிற இந்த இளைஞனை அரசியல் பகுதியில் அறிமுகமாக!
   
           *******


இப்படி இளையராஜா பாடிக் கொண்டாடிய சினிமா இன்றைக்கு  நிலையில் இருக்கிறது? கூத்தாடிகள் இரண்டுபட்டால் ஊரெல்லாம் கொண்டாட்டம் என்ற மாதிரியா?

  
அப்படியெல்லாமில்லை! எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலென்ன என்று அது பாட்டுக்கு என்வழி தனிவழி என்று போய்க்கொண்டே தானிருக்கிறது! 2018 இல் வெளியான தமிழ்ப்படங்களில் வித்தியாசமான களத்தை வைத்து வந்த படங்களாக 96, சீதக்காதி இரண்டுமே இருந்தன என்பதை மறுக்க முடியாது!

******* 
#MeToo என்பதை இந்தியாவில் நானாபடேகர் மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தி முதலில் ஆரம்பித்து வைத்தவர் தனுஸ்ரீ தத்தா என்கிற நடிகைதான்! அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட இந்த நடிகை கடந்த செப்டம்பரில் Zoom TV ற்கு கொடுத்த ஒரு பேட்டியில் நானாபடேகர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆரம்பமான #MeToo இங்கே தமிழ் நாட்டில் கண்டுகொள்ளப்படாமலேயே போயிருக்கும்!

திரைப்படப்பாடகி சின்மயி தனக்கும் அது நடந்ததாக ட்வீட்டரில் ஆரம்பிக்கப்போக இங்கேயும் அது கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. எத்தனை நாளைக்கு? ராதாரவி வந்து ஆட்டையைக் கலைக்கிற வரைதான்! டப்பிங் யூனியனில் இருந்து தன்னை நீக்கி விட்டதாக, தான் ஆயுட்கால மெம்பர் என்றெல்லாம் பேசியதில் அக்கப்போர் வேறொரு திசைக்கு மாறி 
இப்போது இங்கே வந்து நிற்கிறது!

     
இந்த ஞாயிறு, இந்த மூணு போதுமா?

   

இட்லி வடை பொங்கல்! #8

ஸ்டாலின் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த ராசி ரொம்ப நல்ல ராசி தான் போல ! ஹிந்து தமிழ் நாளிதழ் இப்படிப் படம்போட்டுக் கலாய்க்கிறது!

அங்கே அப்படியென்றால் #துக்ளக் இந்த வார அட்டைப் பட நையாண்டிஇப்படி!



செய்தாலும் செய்வார்கள் என்கிறீர்களா? #கழகங்கள் எந்தக் காலத்தில் எதையும் நேர்வழியில் நேரடியாகச் செய்திருக்கிறார்கள்? இப்படி வேண்டிக் கொள்ளவும் ப்ராக்சிகள் இல்லாமலிருக்குமா?

ராகுல் காந்தி தன்னைக் காஷ்மீரி கௌல் பிராம்மணன் என்று சொல்லிக் கொள்கிறாராம்! யாராவது எப்படி என்று கேட்டிருப்பார்களோ? அப்பா வழிப் பாட்டன் ஃபெரோஸ் கான்= பெரோஸ் காந்தியாக பின்னாட்களில் அறியப்பட்டவரை, பாட்டி இந்திரா முஸ்லிமாக மதம் மாறித் திருமணம் செய்து கொண்ட கதை தெரியும் இல்லையா? அப்புறமும் எப்படி கௌல்?
சரி, அதுதான் போய்த்தொலைகிறது, அம்மாவழியில் பார்த்தாலுமே கூட இத்தாலியக் கிறித்தவர்தானே?!

அப்பன்வழி, அம்மா வழி இரண்டிலுமே வேறுவேறு மதங்கள் தான்! ஆனாலும் ராகுல் காந்தி தன்னை எந்த அடிப்படையில் தன்னைக் காஷ்மீரி கௌல் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறாராம்? உங்களுக்காவது ஏதாவது புரிகிறதா? கான் gandhe ஆகி டூப்ளிகேட் காந்தியாகவும் ஆன கதை மாதிரிக் கூட இல்லாமல் இது என்ன புதுக்கதை?

நேற்று காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேக் வெட்டி கொண்டாடினர். படம்: பிடிஐ என்று செய்தி வெளியாகி இருக்கிறதே! யார் கண்ணிலாவது பட்டதோ? 

1885 இல் ஒரு பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரி ஆரம்பித்த காங்கிரஸ் அல்ல இன்றிருப்பது! இந்தியர்கள் தலைமை ஏற்றபிறகும் கூட பிரிட்டிஷ் அரசிடம்  சலுகைகளை மட்டும் கோரிய அமைப்பாக இருந்த அந்தக் காங்கிரசும் இல்லை. 

Many Muslim community leaders, like the prominent educationalist Syed Ahmed Khan, viewed the Congress negatively, owing to its membership being dominated by Hindus. Orthodox Hindu community and religious leaders were also averse, seeing the Congress as supportive of Western cultural invasion.
The ordinary people of India were not informed of or concerned about its existence on the whole, for the Congress never attempted to address the issues of poverty, lack of health care, social oppression, and the prejudiced negligence of the people's concerns by British authorities. The perception of bodies like the Congress was that of an elitist, then educated and wealthy people's institution. இதுதான் காங்கிரசின் ஆரம்பகால நிலைமை! பால கங்காதர திலகர் வந்த பிறகுதான் காங்கிரசுக்கு தேசிய உணர்வே வந்தது. திலகரும் பிபின் சந்திரபாலும், ஸ்ரீஅரவிந்தரும் வ உ சியும் ஊட்டி  வளர்த்த தேசிய உணர்வுடன் இருந்த காங்கிரசல்ல இன்றிருப்பது!

1915 இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி  என்கிற ஒரிஜினல் காந்தி வந்த பிறகு காங்கிரஸ்  என்பது தியாகம் செய்யத் தயாராக இருந்த தொண்டர்களோடு, மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு இயக்கமாகவும் இருந்ததே, அந்தக் காங்கிரசல்ல இன்றிருப்பது!

நேரு கைகளில் ஆட்சி வந்ததுமே நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. தனக்குப் பிடிக்காத ஒருவர், புருஷோத்தம்தாஸ் டாண்டன் 1950 இல் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நாடகம் நடத்தியதும் 1959 இல் தன் மகளையே காங்கிரஸ் தலைவராக்கி, மக்கள் சிபாரிசின் பேரில் உலகில் முதல் முறையாக கேரளாவில் ஜனங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த கம்யூனிஸ்ட் கட்சி அரசை 356 வது பிரிவின் கீழ் கலைத்ததும் ஆன அந்தக் காங்கிரசும் அல்ல இன்றிருப்பது. இந்திரா தன்னுடைய சுயநலத்துக்காகக் காங்கிரசை இரண்டாக உடைத்ததும் எண்பதுகளின் தொடக்கத்தில் ஆட்சியில் இருந்தபோது தன்னுடைய பிரிவுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் என்று பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிற மாதிரி செய்து கொண்டது பழைய கணக்கு, வரலாறு! அதுகூட அல்ல இன்றிருப்பது!   

இந்திரா, ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து சோனியா தன்னுடைய வாரிசுகளுக்காகத் தயார் செய்து வைத்திருக்கிற சுயநலக்கும்பலால் மட்டுமே ஆன ஒரு உருவகம் இப்போது காங்கிரஸ் கட்சி என்ற பெயரில்!  அவ்வளவுதான்!    

Jaya produces proof on Gandhi’s intent to dissolve Congress

PTI  Updated on April 02, 2013
Tamil Nadu Chief Minister J. Jayalalithaa






Tamil Nadu Chief Minister Jayalalithaa today presented documentary evidence to Congress members in the state Assembly to validate her minister’s argument that Mahatma Gandhi wanted to dissolve the century-old political party after Independence.

    
         

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!


தந்தி டிவியை விட்டு ரங்கராஜ் பாண்டே வெளியே வந்து விட்டபிறகும் கூடத் தலைப்புச் செய்தியாகவே இருக்கிறார். திராவிடர் கழகத்தின் வீரமணி, சுப. வீரபாண்டியன் போன்றவர்களைத் தடுமாற வைத்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி இன்னமும் பசுமையாக நினைவில் வைத்துக் கொள்கிற மாதிரி!


வீரமணியைப் பேட்டி எடுத்ததில் எடிட் செய்து தில்லு முல்லு செய்து விட்டதாக அன்றைக்குப் புலம்பியதே இந்த பேட்டியிலும் ஒரு கேள்வியாக வைக்கப்பட்டதற்கு பாண்டே என்ன பதில் சொல்கிறார் என்றும் பாருங்கள்!வீரமணி என்னென்ன கேட்பார் செய்வார் என்பதை மறைந்த பதிவர் டோண்டு ராகவன் தன் அனுபவமாக  கொஞ்சம் விரிவாகவே எழுதியிருக்கிறார். பாண்டே பேட்டியின் கீழே பார்த்தவர்கள் கமென்டுகள் சில இன்றைய கேள்விகளாக! கேள்வி கேட்டாலே இங்கு எவருக்கும் பிடிப்பதில்லை என்பதற்காகக் கேள்விகள் எழாமல் இருந்து விடுமா?  

ரங்கராஜ் பாண்டே தனக்கென்று யூட்யூப் பக்கம் ஒன்று வைத்திருக்கிறார்  

*******
திருமா அவர்கள், என்றேனும் ஒருநாள் தமிழக முதல்வராக வந்தால், ஏன் துணை முதல்வராக வந்தால்கூட அது நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதை. ஒரு முறை அவரின் இந்த உரையைக் கேட்டுவிடுங்கள்! என்று இந்தச்சுட்டியை பரிந்துரை செய்கிறார் பதிவர் +கல்வெட்டு Kalvetu இது அவர் வரிவடிவாக்கி இருப்பதன் ஒலிவடிவம்.

அதன் மேல் என் கருத்தாக .....

இங்கே இருக்கிற திராவிடங்களை விட, காங்கிரசை விட, #திருமா தகுதியானவர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் #திருமா வுக்கு status quo என்கிற இப்போதிருக்கிற நிலையே போதும் என்றிருக்கிற மாதிரி #அரசியல்நிலைபாடு என்றால் கூட இருப்பவர்களே அதுமாதிரிக் கனவுகூடக் காண்பதில்லை என்பது நிகழ்காலச் சோகம்!

மைனாரிடியை வைத்து மெஜாரிடியைக் கட்டியாண்ட சாமர்த்தியம் கருணாநிதிக்கு இருந்தது #onetimewonder தான்! வேறெவர்க்கும் அமைவது கடினம்தான் என்கிற யதார்த்தம் சுள்ளென்று சுடுகிறதே! இப்படி ஒரு நான்கு நாட்களுக்கு முன்னால் கூகிள் ப்ளஸ்சில் சொல்லி இருந்தேன் அதற்கு அவர் திருமா மிகவும் கனிந்து வந்திருப்பதாக ஒரு பதிலும் சொல்லி இருந்தார்.


இந்த வீடியோ, நக்கீரனில் எவிடென்ஸ் கதிர் முதலானவர்கள் பேசியிருப்பது உணர்த்துவது திருமாவளவன் கனிந்திருக்கலாம், குட்டிகள் கனியவுமில்லை! அரசியல் முதிர்ச்சியைப் பெறவும் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறதே! என்ன செய்ய?

*******

Former Prime Minister Dr.Manmohan Singh evades question on the film
!!
0:02
20.2K views

நம்மைச் சுற்றி வரும் உலகம்! தலைப்புச் செய்திகள்!

முதலில் அமெரிக்கா என்ற முழக்கத்தோடு அமெரிக்க அதிபர் ஆனவர் டொனால்ட் ட்ரம்ப்! அதற்கேற்ற மாதிரி அமெரிக்கா இனிமேல் உலகத்தின் போலீசாக (காவல் என்று மட்டுமே கொள்க) இருக்கப்போவதில்லை என இன்றைக்கு ஈராக்கில் பிரகடனம் செய்திருக்கிறார்.


Trump told troops, adding that the US wouldn't be helping to rebuild Syria. 'We’re no longer the suckers, folks. We’re respected again as a nation' என்கிறது தி கார்டியன் செய்தி!   

உலகப்போலீஸ் என்று லட்சக் கணக்கான கோடிகளில் செலவு செய்து தோற்ற பிறகு வந்த ஞானோதயம் இது என்றும் எடுத்துக் கொள்ளலாம்! நம்பர் #1 இடத்தைப் பிடிக்கக் காத்திருக்கும் சீனாவுக்கு கதவைத் திறந்து விட்ட மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்.


CivMilAir ✈🎅🎄🐈
CivMilAir
Now, I'm not saying Trump is currently heading to the Middle East to visit troops. BUT... There's been some interesting aircraft movements the last couple of days. Some I've already tweeted... And a VC-25A has been reported over the UK earlier today. Watch this space! 😌
Twitter

இப்படி அமெரிக்கா என்ன செய்தாலும் சந்தேகப் படுகிற மாதிரியும் இருக்கலாம்! ஆனால் அமெரிக்க அதிபர் சிரியாவிலிருந்து, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வதென்ற முடிவில் தீர்மானமாக இருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. #ரட்சகர்கள் இலவசமாக எதையும் மீட்பது இல்லை, தசம பாகத்தை எதிர்பார்த்தே செய்கிறார்கள் என்பது டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிகிற விஷயம். அமெரிக்காவின் ஆசிய,  ஐரோப்பியக் கூட்டாளிகள் உறைந்துபோய் நிற்பது, அடுத்து என்னாகப்போகிறதோ என்ற தவிப்பு பிடிபட இன்னும் சிறிது காலமாகலாம்!
,

American Tianxia: Chinese Money, American Power and the End of History என்று சால்வடோர் பாபோன்ஸ் என்கிற ஆஸ்திரேலிய பேராசிரியர் எண்பத்தெட்டே பக்கங்களில் சீனா ஒருபோதும் 21ஆம் நூற்றாண்டில் #நட்டநடுநாயகம் ஆகிவிட முடியாது; அமெரிக்கப் பொருளாதாரம் இன்றும் வலிமையாகத்தான் இருக்கிறது என்று புத்தகம் எழுதிப் பரபரப்பான ராசியோ என்னவோ இரண்டேஆண்டுகளில்

டொனால்ட் ட்ரம்ப் இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்து காட்டியிருக்கிறார்.   



இந்த #Tianxia என்கிற வார்த்தையை தொடர்ந்து இந்திய வெளியுறவுக்கொள்கை, CPEC, OBOR, BRI   ராஜீய உறவுகளும் சிக்கல்களும், என்ற ஹேஷ்டாக்குகளில் கூகிள் பிளஸ்சில் எழுதி வந்ததை இந்தப்பக்கங்களில் தொடரலாம் என்று ஒரு எண்ணம்! எழுதலாமா? என்ன சொல்கிறீர்கள்?    
 ******* 
கீச்சுக்கு எதிர்க்கீச்சு!

மோடி என்ன செய்தார் என்று கேட்கும் ராகுல் காந்தி மைக் பிடித்து மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்!

மேகலாயாவில் 15 பேர் சுரங்கத்திற்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, பிரதமர் மோடியோ புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஏன் இந்த வெத்து விளம்பரம்? முன்னும் பின்னும் பிரதமரை தொடரும் உயர்ரக காமரா? : யாரும் இல்லாத கடையில் யாருக்கு ஆத்துறீங்க டீ.😄😄😄

இந்தக் கீச்சுக்கு சரியான பதிலாக வந்திருப்பதைப் படித்தார்களோ என்னவோ? கண்ணைக் கழுவிட்டுப் பார்க்கவும் என்று கீச்சியிருக்கிறார் @KTL


*******
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்த ராசியோ என்னவோ மீம்களில் ஏகத்துக்கு கலாய்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவை ஒருபக்கம் இருந்தாலும், கருணாநிதி 2014 மார்ச்சில் என்ன சொன்னார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!

  
ஸ்டாலின் மீண்டும் நமக்குநாமே நடைபயணத்தை தொடங்கவிருக்கிறாராம்! வரவேற்பு மீம்களில் களை கட்ட ஆரம்பித்து விட்டது. சாம்பிளுக்கு ஒன்று.

    
இங்கே மட்டும் திருடவில்லை என்று உறுதியாக எப்படிச் சொல்கிறார்கள்? 



அரசியல் பேசுவதென்றால் எல்லாத்தரப்பையும் தான் கவனிக்க வேண்டும்! அதில் ஜான் பாண்டியனை மட்டும் ஒதுக்கி வைக்க முடியுமா?

  


புதன்கிழமை! கொஞ்சம் கொறிக்க! நிறையச் சிரிக்க!

இன்றைய நாளிதழ்களில் தேவே கௌடா, தலைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும் கூட  பேசுபொருளாகி இருக்கிறார். இப்படி ஒருவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்பதே இங்கே எத்தனைபேருக்குத் தெரியுமோ தெரியாதோ என்பதே ??குறிதான்!

symbolises a well-connected India. I thank Atal Bihari Vajpayee avaru, Dr. Manmohan Singh avaru and avaru for their immense contribution in completing a dream project of our Government.


We have had stand by PMs , Temporary PMs… but Deve Gowda was the sleeping PM… Metaphorically as well as literally

  

தேவே கௌடா பிரதமரானதே 1996 இல் நடந்த ஒரு அரசியல் விபத்துதான்! பிரதமராக இருந்ததும் கூட பதினோரு மாதங்களுக்கு சில நாட்கள் குறைவு தான்! அதிலேயே தூங்குமூஞ்சிப் பிரதமர் என்று கேலியாக அழைக்கப்பட்டவர். அவர்தான் நேற்று பிரம்மபுத்ரா நதி மேல் கட்டப்பட்ட போகிபீல் பாலத்திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாதது குறித்துப் பேசி, பேசுபொருளாகி  இருக்கிறார்.        

நேற்றுமுன்தினம் இவர் மகன், கர்நாடக முதல்வராக இருக்கும் குமாரசாமியின் முறை! இரக்கமே இல்லாமல் கொல்லுங்கள்! என்று அலைபேசியில் உத்தரவிடுகிறார்! எப்போதுமே இப்படித்தானா? காங்கிரஸ் கூட்டணிக்குப் பிறகா?


தேவே கௌடா புலம்பல், குமாரசாமி  உத்தரவு இதற்குப் பின்னால் இருக்கிற அரசியல் இவைகளை புரிந்து கொள்ள வேண்டுமா? எதனால் தேவே கௌடா பிரதமரானதே ஒரு அரசியல்விபத்து என்றானார்? புரிந்துகொள்ள கொஞ்சம் 1996 தேர்தலில் என்ன நடந்தது என்று பார்ப்போம். 

1996 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொங்குசபை என்று தான் மக்களுடைய தீர்ப்பாக இருந்தது. பிஜேபி 161 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக, அடுத்து காங்கிரஸ் 140. சரண்சிங்குக்குப் பின் பலப்பல பிரிவுகளாக சிதறிய ஜனதாதளம் (செகுலர்) 46, இடது முன்னணி 44, இதர மாநிலக்கட்சிகள் எல்லாம் சேர்த்து 100 என்று ஒரு குழப்பமான காம்பினேஷனில் ரிசல்ட்.

தனிப்பெரும் கட்சியாக இருந்த பிஜேபியை ஆட்சி அமைக்க வாஜ்பாய் அவர்களை ஜனாதிபதி அழைத்தார். அவரால் முடியவில்லை என்றானபோது அடுத்த வாய்ப்பு காங்கிரசுக்குப் போனது. கடந்தகால அனுபவங்களில் காங்கிரஸ்  இதர கட்சிகளின் தோள் மீதேறி சவாரி செய்யவே விரும்பியதில் முதல் தேர்வாக விபி சிங்கும், அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசுவும்  இருந்தனர். ஜோதிபாசுவுக்கு  விருப்பமிருந்தாலும், கட்சிக்கட்டுப்பாடு என்கிற கட்டாயத்தில் ஒதுங்கி கொண்டார். மூன்றாவதாக கருப்பையா மூப்பனார் பெயர் அடிபட்டதும் கருணாநிதி அதைக் கழித்ததும் #பழங்கணக்கு அடுத்து நாலாவதாக காம்ப்ரமைஸ் கேண்டிடேட்டாக தேவே கௌடா பிரதமரானது, ஒரு விபத்தா இல்லையா?

காங்கிரஸ்கட்சியால் பிரதமர்பதவி ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டதில் முதலாவது சரண்சிங்! இரண்டாவது சந்திரசேகர்! அடுத்தது தேவே கவுடா! ஆரம்பத்தில் PV நரசிம்மராவ் ஆதரவாளராக இருந்த கௌடாவை காரியமானதும்,  காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரியை வைத்துக் கவிழ்த்தார்கள்! ஆம், பதவியில் இருந்தது   June 1, 1996, முதல் April 21, 1997 வரைதான்!  பிறகு சீதாராம் கேசரியைத் தள்ளி விட்டு  சோனியா காந்தி கட்சித் தலைமையைக் கைப்பற்றிக்  கொண்டதும் இருபது வருடங்களுக்குப் பிறகு மகன் ராகுல்காந்தியை  அந்த இடத்தில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதும்  நேற்றைய துரோகங்கள் மீது கட்டமைக்கப்பட்ட இன்றைய வரலாறு!         

    
அப்படியானால் சஞ்சய் பாரூ எழுதிய இந்தப்புத்தகம் மன்மோகன்சிங்கை #TheAccidentalPrimeMinister என்று சொல்லி இருப்பது தவறா? இல்லை! வேறொரு விதத்தில் அதுவும்  சரிதான் என்பதைக் கூட இந்தப்பக்கங்களில் முன்னமே பார்த்திருக்கிறோம்!

******* 
கொறிப்பதற்குகொஞ்சமல்ல நிறையவே நேற்றைய துரோகங்கள் இன்றைய வரலாறு  என்று பார்த்து விட்டோம், இல்லையா? சிரிப்பதற்கென்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? காங்கிரசின் வரலாறுதான் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிறதே!



2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறுமா? எனும் கேள்வி ஒரு புறம் இருக்க, கட்சி தேர்தலுக்கான தயாரிப்பை துவக்கி விட்டது.










இதில் சிரிப்பதற்கென்ன இருக்கிறது? கொஞ்சம் யோசித்துத்தான் சொல்லுங்களேன்!