Showing posts with label பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும். Show all posts
Showing posts with label பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும். Show all posts

இட்லி வடை பொங்கல்! #72 #சேகர்குப்தா #கம்யூனிஸ்ட்கட்சிகள் #ஜம்முகாஷ்மீர்

சேகர் குப்தா அனுபவமுள்ள பத்திரிகையாளர் என்பதில் எனக்கு சந்தேகமே இருந்ததில்லை. அவருடைய ஒருபக்க சார்பு கூடத் தெரிந்ததுதான் என்றாலும் 360 டிகிரியில் விஷயங்களைப் பார்ப்பதற்கு அவர் என்ன சொல்கிறார், என்ன எழுதுகிறார் என்பதைக் கவனிக்கத் தவறியதும் இல்லை பிரதமர் நரேந்திர மோடி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அமித் ஷா மேற்கு வங்கத்தில் CAA பற்றிக் கொஞ்சம் மென்மையாகப் பேசினார். அவை பற்றி சேகர் குப்தாவுக்கு எப்படித் தோன்றுகிறதாம்?


Tactics, Tactical Retreat  என்பதெல்லாம்  கொஞ்சம் ஆழமான பொருள் கொண்டவை. சேகர் குப்தா அத்தனை ஆழமாகவெல்லாம் யோசித்து இந்த 15 நிமிட வீடியோவில் பேசிய மாதிரி எனக்குத் தோன்றவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒருவாரத்தில் மட்டும்  கோபத்தில் இருக்கிற இஸ்லாமியர்கள்,  விவசாயிகள் என்று இரு முக்கியமான தரப்பினருடன் ஒரு சுமுகமான அணுகுமுறையைக் கையாளத் தொடங்கியிருக்கிறார் என்பது போல ஆரம்பிக்கிறார் எதற்கு? இதர கட்சிகள் போல வெறும் வாக்குகளுக்காகவா? பெரும்பாலான இஸ்லாமியர், பஞ்சாப் விவசாயிகள் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க விரும்புவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே போல பிஜேபி / நரேந்திர மோடி இவர்களது ஓட்டுக்காக ஏங்கித்தவிக்கவுமில்லை. சேகர் குப்தாவே இதையும் ஒப்புக்கொள்கிறார் ஆனாலும்  Tactical Retreat  என்று சொல்வானேன்? 

Everybody likes awards, honours and adulation. Yet, whatever these mean to Modi personally, more important is that this was part of his very significant reaching out to Muslim, especially Arab, countries. This was a deft outflanking of Pakistan to its West. What he tried to the East, with Xi Jinping, failed.  

Now, if the move with China failed — and at this point we have troops eyeball-to-eyeball and Pakistan has more or less ‘progressed’ to becoming a Chinese client state or protectorate — it is because Xi Jinping saw more value in that. The ploy with the Arab world, meanwhile, has worked so far. Saudi Arabia and the UAE, Pakistan’s closest friends, patrons and moneybags, have drifted far away. So far, that Saudis are demanding their loans back, China plays the white knight to rescue Pakistan, and the UAE has stopped issuing visas to Pakistani workers. சேகர் குப்தா எழுதியது முழுமையாக இங்கே.  

வெளியுறவுகளை மேம்படுத்திக் கொள்ள உள்நாட்டில் சமரசம் செய்து கொள்கிறார் அதற்காக தந்திரமாக ஜகா வாங்குகிறார் என்று சொல்வது சரிதானா?


The United Front … is an important magic weapon for strengthening the party’s ruling position … and an important magic weapon for realising the China Dream of the Great Rejuvenation of the Chinese Nation.

— Chinese President Xi Jinping, Central United Front Work Conference, 2015

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே உண்டான நடைமுறைத் தந்திரங்களில் முக்கியமானது ஐக்கிய முன்னணித் தந்திரம்  1935 ஏழாவது  கம்யூனிஸ்ட் அகிலத்தில் ஜார்ஜ் டிமிட்ரோவ்  சமர்ப்பித்த கோட்பாடு இது கம்யூனிஸ்ட் கட்சியினர்  எப்படி பிரதானமான எதிரிக்கு எதிராக  இதர எதிரிகளுள் ஊடுருவி அல்லது கூட்டணி அமைத்துப் போராடவேண்டும் என்பதை விளக்குகிற 247 பக்கப் புத்தகமாகத் தமிழிலேயே மேலே நீல நிறத்தில் ஐக்கிய முன்னணித் தந்திரம் என்ற வார்த்தையைக் க்ளிக் செய்தால் தரவிறக்கம் செய்யக் கிடைக்கும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஜார்ஜ் டிமிட்ரோவை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது என்பதை ப்ரம்ம செலானியின் இந்த ட்வீட்டர் செய்தி சொல்கிறது.

China possesses what no other country has — surveillance, censorship and propaganda systems to control or construct a narrative. China’s initial coronavirus coverup relied on these systems, resulting in a local outbreak in Wuhan turning into a still-raging global health calamity.

8:07 PM · Dec 24, 2020Twitter Web App

இதெல்லாம் ஜெயித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே சாத்தியம்! இந்தியா, நேபாளம் மாதிரியான நாடுகளில் அரசுக்கு எதிராகக் கலகம் செய்துகொண்டே இருப்பார்கள்.தப்பித்தவறி ஏதோ ஒன்றிரண்டு மாநிலங்களில் அல்லது சிறிய பிரதேசத்தில் ஜெயித்து விட்டால், தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வதோடு கட்சியையும் உடைப்பார்கள், குறுங்குழுக்களாக சிதறுண்டு போவார்கள்! 

எதனால்? கடைசி வரை கலகம் .என்றே செயல்படுவதில் ஏற்படுகிற இறுதி முடிவு அது! போராடுவோம் போராடுவோம் இறுதிவரை போராடுவோம் என்று கோஷமிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கதி என்னவாயிற்றோ அதுவே  நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இப்போது  நடந்து கொண்டிருப்பதில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை விட சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகம் வலிக்கிறதாம்! நேபாளத்துக்கான சீனதூதர் முயற்சிகள் பலிக்காமல் மேலிடத்துக்கு SOS அனுப்பியதில் நாளை ஞாயிறு அன்று சீனா 4 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அனுப்புகிறது. It is, however, not clear yet if Prime Minister KP Sharma Oli, who had earlier turned down requests from Ambassador Hou to meet her, would meet the Chinese delegation. Chances of PM Oli, who has taken a staunch Nepali nationalist role, meeting the visiting delegation are slim. He has already conveyed to Ambassador Hou that China should not interfere in internal affairs of Nepal since the legal challenge to the decision to dissolve Parliament is already before the Supreme Court. என்று இங்கே சொல்கிறார்கள்.   

China is openly interfering in the internal affairs of Nepal, its new tool against India. Concerned by a vertical split in Nepal's ruling communist party, it is sending a vice minister-led delegation tomorrow. This comes after its defense minister's visit.
Leading a four-member delegation, Guo Yezhou, vice-minister of the International Department of the Communist Party of China, is arriving on Sunday.

சீனாவுக்கு நேபாளம், பூடான் போன்ற மிகச்சிறிய நாடுகள் மீது ஏன் இத்தனை கரிசனம்? இங்கே என்ன சொன்னார்கள் என்பதையும் கொஞ்சம் பார்க்கலாமே! 

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் PDP மெஹபூபாவின் கட்சி குப்கார் கூட்டணியில் இருந்தும் கூட மிகக் குறைவான வாக்குகள், குறைவான இடங்கள் மட்டுமே பெற்றிருப்பதில், அடுத்துவரும் தேர்தல், வரையாவது தாக்குப்பிடிக்க முடியாது என உறுதியாகிவிட்டதோ?  ஒமர் அப்துல்லாவின் NC கட்சி ஜம்மு பகுதியில் 26 இடங்களில் ஜெயித்திருப்பதைக் கழித்து விட்டுப் பார்த்தால் காஷ்மீர்  பகுதியில் 41 இடங்கள் மட்டுமே ஜெயித்திருக்கிறது. சுயேட்சைகள் அதைவிடக் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது ஜம்மு காஷ்மீர் மக்கள் மனதில் ஏற்பட்டு வரும் மாறுதலுக்கான அடையாளம் என்பதை ஏனோ நம்மூர் ஊடகங்களுக்கு  உறைக்கவே மாட்டேனென்கிறதே! செய்தி இங்கே     

இந்தியாவில் ஜனநாயகமே இல்லை என்று வெறுமனே கூவிக் கொண்டிருக்கிற ராகுல் காண்டிக்கு பதிலடியாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட  உள்ளாட்சித்தேர்தல் நடத்தாமலிருக்கிற பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் அரசின் ஜனநாயகத்தை பிரதமர் நினைவுபடுத்தி இருப்பது சரிதானே!

மீண்டும் சந்திப்போம் 

நமக்கும் கொஞ்சம் பொறுப்பு இருக்கிறது.........!



சிலகாலத்துக்கு முன்னால், இணையப்பயன்பாட்டின் மேல் இந்திய அரசு விதிக்க உத்தேசித்திருக்கும் கட்டுப்பாடுகளைக் குறித்து, ஒரு எச்சரிக்கைக் குரல் சில வலைக்குழுமங்களில் ஒலித்தது. வழக்கம் போலவே, எவராலும் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாமலேயே, பத்தோடு பதினொன்றாகக் காணாமலும் போய்விட்டது.

குழும விவாதங்கள், இணையம் ஆரம்பித்தகாலத்தில் இருந்த வெற்று அரட்டை, நான் இங்கிட்டு யார் அங்கிட்டு என்று கேட்டு வாங்கும் சுய சொறிதல்கள்,மண்ணெண்ணைய் விட்டு ஓட்டும் ஆட்டோ எழுப்புகிற டர்ர்..க்ர்ர்ரர்ர்ர்ரர்ர்ர்ர் சத்தம் மாதிரிக் கொஞ்சம் ஓவராகவே எழுப்புவது,அடைப்பான்களுக்குள் ஏகப்பட்ட கேள்விக் குறி அல்லது ஆச்சரியக் குறிகளைப் போட்டு வெற்றுப் பின்னூட்டங்களாகவே நிரப்புவது,ஏகப்பட்ட ஸ்மைலி அல்லது அன் ஸ்மைலி ஐகான்களை மட்டும் வைத்து நிரப்புகிற ஆதிகாலத்து  இணையப் பயன்பாட்டுக் கலாச்சாரங்களில் இருந்து விடுபட்டு, ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம், அல்லது விவாதம் நிகழ்கிற களமாக, எழுதுகிறவருக்கும் வாசிக்கிறவருக்கும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் நிகழ்கிற களமாக உயரவேண்டாமா?

தை எழுதுவதே "நான் அப்படித்தான் இருப்பேன்' என்று இருப்பவர்களுக்காக இல்லை மாற்றத்தின் விதையாக இருக்க சம்மதிக்கும் சில தனிநபர்களே, மாற்றத்தை சாதிக்கிறார்கள்.அப்படிக் கொஞ்சம் பேர் கிடைத்தாலும் போதும்! குழுமங்கள், வலைப்பதிவுகள்  ஒரு ஆரோக்கியமான சிந்தனை, மாற்றுச் சிந்தனைகளுக்கான  களமாக உருவாகும் நேரமும் வரும்!

ந்தவகையில், இன்றைய தினமணி இதழில் வெளியாகியிருக்கும் இந்தத் தலையங்கம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறது. முதலாவது, ஆரம்ப வரிகளில் சொன்ன இணையப் பயன்பாட்டின் மீது அரசு உத்தேசித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தானது. அடுத்தது, நம்மிடம் வளர்த்துக் கொள்ளவேண்டிய பண்பு-  தேசீய உணர்வு (நேஷனாலிடி, நேஷன்ஹூட் ) குடிமைப்பண்பு (சிடிசன்ஷிப்). ஜனநாயகம் என்பது இந்த இரண்டு அடிப்படைகளின் மீது கட்டப்படுவதாக இருந்தால், நீடித்து நிலைக்கும்.

தினமணி தலையங்கம்: நமக்கும் தேவை அக்கறை!

First Published : 25 May 2011 02:09:59 AM IST

ணையதளப் பயன்பாடு தொடர்பாக அரசு விதித்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது எதிர் பார்த்ததே. ஆனால், இந்த விஷயத்தில் தவறு முழுக்க முழுக்க அரசின் தரப்பில் மட்டும் அல்ல என்பது தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர்.சந்திரசேகரின் விளக்கத்திலிருந்து தெரிகிறது. மக்களாகிய நாம் உரிய  காலத்தில் அரசின் உத்தேச யோசனைகளைப் படித்துப் பார்த்து கருத்துத் தெரிவிக்கத் தவறிவிட்டோம் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

ணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்திரிகை வாசகர்கள் எண்ணிக்கைக்கு நிகராக உயர்ந்து வருவதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளைக் கண்காணிப்பதும், பொது நலனுக்கும் சில வேளைகளில் தனிநபர்களுக்கும் எதிராக ஒருதலைப்பட்சமாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளைப்படித்துப் பார்த்து உடனுக்குடன் அகற்ற வேண்டியதும் சமுதாயக் கடமையாகும்.

பாசமான, அருவருக்கத்தக்க வர்ணனைகள், உரையாடல்கள், கருத்துகள் போன்றவற்றையும் அழிக்க வேண்டியது அவசியம்.

எனவே இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டும் இந்த விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்துவிட்டதாக அரசைக் குற்றம் சாட்டுவது ஒருதலைப்பட்சமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதே வேளையில் அரசின் சில கட்டுப்பாடுகள் தேவைக்கு அதிகமாகவோ, அதன் உள் நோக்கத்தைச் சந்தேகிப்பதாகவோ இருப்பதை மறுக்க முடியாது. ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு எப்படிக் கையாள்கிறது என்று பார்த்து எதிர்காலத்தில் அவற்றைத் திருத்துவதும் மேம்படுத்துவதும் சாத்தியமே.

னவே, ஒரேயடியாக இதை எதிர்ப்பதும் கண்டிப்பதும் இப்போதைக்கு அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.

தற்கும் முன்னதாக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ள சில கருத்துகள் அனைவரும் கவனிக்கத் தக்கவை.

ணையதளப் பயன்பாட்டாளர்களைக் கண்காணிக்கவும், சட்ட விரோதமான செயல்களுக்கு அதைப் பயன்படுத்துகிறவர்களை அடையாளம் காணவும், அவர்கள் மீது நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் அவசியமானவை என்பதால் இதைச் சட்டத்தின் மூலமாகவே அமல் படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ரசின் ஒப்புதலுடனோ அல்லது நீதிமன்றங்களிடம் தெரிவித்து அவற்றின் ஆணைப்படியோதான் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ணையதளத்தைத் தவறான செயல்களுக்கு அல்லது தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவோர் யார், அவர்களுடைய பாஸ்வேர்டு, பாலினம், கல்வி, வயது,தொழில், முகவரி போன்ற தகவல்களைத் திரட்டவும் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவும், அவர்களுடைய செய்கை தேச விரோதமாகவோ சமூகத்தில் பதற்றத்தையும் பகைமையையும் ஏற்படுத்தும் விதத்திலோ இருந்தால் உரிய போலீஸ் அமைப்புகள் மூலம் விசாரிக்கவும் இந்த விதிகளும் வழிகாட்டு நெறிகளும் உருவாக்கப் பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

புதிய விதிகளை அமல் செய்வதற்கு முன்னால் நாடு முழுவதும் உள்ள மக்கள் அறியவும், அதைப்பற்றி விவாதிக்கவும், உரிய திருத்தங்களைக் கூறவும், ஆட்சேபங்கள் இருந்தால் உரிய வகையில் தெரிவிக்கவும் வரைவு வாசகங்களை வெளியிட்டிருந்ததாகவும், 2 மாதங்கள் கால அவகாசம் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கிறார் சந்திரசேகர்.

ங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் நம் நாட்டில் படித்தவர்களும் அமைப்பு ரீதியாகத் திரண்டவர்களும் பொது விஷயத்தில் அக்கறையோடு செயல்படுவது இல்லை என்பதில் உண்மை இருக்கிறது என்பதுதான். எல்லோருமே சுயநலவாதிகளாக இல்லை என்றாலும் பொதுநலன் பேசுகிறவர்களும் செயல்பாடு என்று வரும்போது சோம்பல் மிகுந்தவர்களாகவோ, அதிகாரிகளிடம் பேச அச்சமோ, கூச்சமோ உள்ளவர்களாகவோ இருந்து விடுகிறார்கள். இப்படி "திண்ணைப் பேச்சு வீரர்களாகவே'' பெரும்பாலானவர்கள் இருப்பதால் மக்களைப் பாதிக்கும் பல சட்டங்கள் போதுமான விவாதம் இல்லாமல் மாற்றுக்கருத்துகள் கூறப்படாமல் அரசின் நோக்கத்துக்கேற்பவே தயாராகின்றன.

ட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள ஆய்வுக்குழுக்கள் அல்லது ஆலோசனைக் குழுக்கள் இந்தச் சட்டங்களை உரிய வகையில் ஆய்வு செய்கின்றனவா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் நடைபெறும் விவாதங்களைக் கவனிக்கும்போது முக்கியமான அம்சங்கள் குறித்து ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும் ஆழ்ந்த கவனத்துடன் விவாதிப்பது இல்லை என்பதை நேரிலேயே பார்க்கிறோம். இன்னும் பல சந்தர்ப்பங்களில் விவாதமே இல்லாமல் "கில்லட்டின்'' என்ற முறையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 40 அல்லது 50 மசோதாக்களை மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதையும் பார்க்கிறோம்.

வ்வளவு ஏன், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜயந்தி போன்ற நாள்களில் எல்லா ஊர்களிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அரசியல் கட்சி அதிலும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்பதையும், அதிகாரிகள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் தீர்மானங்களை வாசித்து, உரிய விவாதம் இன்றி ஏற்பதையும் பெரும்பாலான ஊர்களில் பார்க்கிறோம்.


தெல்லாம் அரசியல்வாதிகளின் வேலை என்று விட்டுவிடாமல் நமக்குள் ஓர்  அமைப்பை உருவாக்கி விவாதித்து, அரசுக்கு ஆலோசனை கூறி, கண் காணிப்பதையும் ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். தவறான சட்டங்கள் அமலுக்கு வராமல் தடுப்பதில் நமக்கல்லவோ அக்கறை தேவை?

அதற்குப் பெயர்தானே மக்களாட்சி?

--------------------------------------------

தினமணி நாளிதழுக்கு நன்றியுடன்