Showing posts with label அன்னை என்னும் அற்புதப் பேரொளி. Show all posts
Showing posts with label அன்னை என்னும் அற்புதப் பேரொளி. Show all posts

இன்றைக்கு, நாள் நல்ல நாள்! தரிசன நாள்!

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்குச் சில நாட்கள் ஒவ்வொரு வருடமும் மிக விசேஷம்! திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப் படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பெப்ருவரியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருந்தால், பெப்ருவரி இருபத்தொன்பதாம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது.

அதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது. இந்த வருட ஏப்ரலுக்கு இரண்டு விதமான கூடுதல் சிறப்பு இருக்கின்றன! இந்த வருடம் ஏப்ரல் நான்காம் தேதி, ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த 110 ஆண்டுகள் நிறைவாக இருந்தது. 

அதே மாதிரி, அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக அடியவர்கள் கொண்டாடும் ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளுடைய நூறு ஆண்டுகள் நிறைவான தருணமாகவும், இன்றைய தினம் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இன்றைக்கு தரிசன நாள். அன்னையைத் தேடி வரும் அவளுடைய குழந்தைகள் ஒன்று கூடி அவளை வணங்கிப் பிரார்த்தனை செய்யும் சிறப்பான தருணமாகவும் இருக்கிறது

ஸ்ரீ அரவிந்த அன்னையைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு, சுருக்கமாக இந்த நாளின் விசேஷம் என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

இன்றைய தரிசன நாள் செய்தி 


ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, பாண்டிச்சேரிக்கு வந்து  110ஆண்டுகள்  இந்த ஏப்ரல் 4 அன்று நிறைவடைந்தது  

ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்து, சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழி பெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார். 

இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவதை ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 

பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு மறுபடி திரும்பிய நாள் ஏப்ரல் 24.

ஸ்ரீ அரவிந்தருடைய யோக சாதனையில் பங்கு பெறுவதற்காக, மிரா ரிச்சர்ட் என்று அன்று அறியப்பட்ட ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கிய நாளாக ஏப்ரல் 24 இருப்பதனால், இது ஆசிரமத்தின் தரிசன நாட்களில் ஒன்றாக ஆனது. 

மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்தபோது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.1926 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்ற அமைப்பு ஸ்ரீ அன்னையினாலேயே சாத்தியமானது.

அன்னையும் தங்களைப் போல சாதகர் தானோ  என்ற சந்தேகம் டி வி  கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனா என்றே அழைக்கப் பட்ட கபாலி சாஸ்திரியாரை பற்றி முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்! நாயனா, சின்ன நாயனா, ரமணர் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, இந்தப் பதிவுகளில் தேட, மேற்சொன்ன பதிவுகள் படிக்கக் கிடைக்கும். ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம்!

The sadhana of inner concentration consist in:
 
1. Fixing the consciousness in the heart and concentrating there on the idea, image or name of the Divine Mother, whichever comes easiest to you.

2. A gradual and progressive quieting of the mind by this concentration

3. An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action. But to quiet the mind and get the spiritual experience it is necessary first to purify and prepare the nature.

Sri Aurobindo

இந்த நல்ல நாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையே, நீ எங்கள் இதயத்திலும் நிலையாகத் தங்கியிருப்பதை உணர்ந்து, உனது பிரியத்துக்கு உகந்த குழந்தைகளாகும் தகுதியை வரமாக அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

19 வருடங்களுக்கு முன் இதே நாளுக்காக எழுதியதன் மீள்பதிவு. தேவையான இடங்களில் கொஞ்சம் திருத்தங்களுடன்   

அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!

பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய்வந்த அனுபவம் உண்டா? அப்படிப் போய் வந்தவர்களுடைய அனுபவம், இனம் புரியாத அமைதியும் பரவசமும் நிறைந்ததாகவே இருந்தது என்பதை யார் யாரோ சொல்லக் கேட்டதுண்டா?

  
இது ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் நுழைவாயில்! தெற்குப் பார்த்த வாசல்! உள்ளே நுழைந்து வலப்பக்கம் பார்த்தால் Service Tree என்றழைக்கப்படுகிற மரத்தின் நிழலில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை இருவரும் மகா சமாதியில் எழுந்தருளியிருப்பதைத் தரிசிக்க முடியும். தரிசன நாட்களில் சமாதி அருகே அமர்ந்து கூட்டு தியானம் காலைவேளையில் நடக்கும். ஸ்ரீ அரவிந்தர் மோனத்தவம் செய்த மாடி அறைக்குப்போய் தரிசனம் செய்யமுடியும்! வருடத்தில் இரண்டே நாட்கள் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அறைக்குப்போய் தரிசனம் செய்கிற வாய்ப்பும் கிடைக்கும். அவ்வளவுதானா? வெறும் பிக்னிக் போய் வருகிற மாதிரி பத்தோடு பதினொன்றாகப் போகிறவர்களுக்கு மட்டும் அப்படியிருக்குமோ, எனக்குத் தெரியாது.ஆனால் ஒரு தாயைத் தேடிப்போகிற குழந்தைமாதிரி நினைத்துக் கொண்டு போகிறவர்களுடைய அனுபவமே வேறுதான்! 

தரிசன நாள் என்பதென்ன? அன்னை புதுச்சேரிக்கு வந்தபிறகு எல்லாப் பொறுப்புக்களையும் அவரிடம் கொடுத்து விட்டு ஸ்ரீ அரவிந்தர் தனியாக மோனத்தவம் இருக்க ஆரம்பித்தார். ஆசிரமத்துக்குள்ளேயே தங்கி இருந்த சாதகர்கள் கூட அவரைச் சந்திக்க முடியாது.தங்களுக்கெழும் சந்தேகங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி அன்னையிடம் கொடுக்க, அவரும் ஸ்ரீ அரவிந்தரிடம் காட்டி, பதில்களை வாங்கித் தருவார். வருடத்தின் சிலநாட்களில் மட்டும் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் சாதகர்களுக்கு மட்டுமன்றி, வெளியூரில் இருந்து வரும் அன்பர்களை சந்திக்கிற வாய்ப்பாக உருவானதே தரிசன நாட்கள் என்றழைக்கப்படுகிறது. இன்றைய தரிசன நாள் செய்தியாக

      
இன்று பிப்ரவரி 21 ஸ்ரீ அரவிந்த அன்னை 
பிறந்தநாள் தரிசனநாள் செய்தி முகப்பு 

 தரிசனநாள் செய்தி 
படத்தைப் பெரிதாக்கி வாசிக்கலாம் 
   
இங்கே வாசிக்க சௌகரியமாக இருக்கிறதா?

ஸ்ரீ அரவிந்த அன்னை என்று கொண்டாடப்படும் Mirra Alfassa பாரிஸ் நகரில் 21 பிப்ரவரி 1878 இல் அவதரித்தார். 1914 இல் முதல்முறையாக புதுச்சேரிக்கு ஸ்ரீ அரவிந்தரை தரிசிப்பதற்காக வந்தார். 11 மாதங்கள் புதுச்சேரியில் இருந்து விட்டு, முதல் உலகப்போர் மூண்ட தருணம், பிரான்சுக்கே திரும்பினார். அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்று 4 வருடங்கள் இருந்தார். 1920 ஏப்ரல் 24 அன்று புதுச்சேரிக்குத் திரும்பிய அன்னை, இங்கேயே நிலையாகத் தங்கினார். 

மேலே ஸ்ரீ அரவிந்த அன்னையின் சின்னம் இருந்தது அல்லவா! அதில் மைய வட்டத்தைச் சுற்றி நான்கு இதழ்கள்! அதைச் சுற்றிப் பன்னிரண்டு இதழ்கள்! அவை சொல்வதென்ன? தமிழிலேயே இருப்பதைப் படிக்க முடிகிறதா?


ஆரம்ப காலங்களில், தரிசன நாள் செய்தியாக இதுமாதிரி கார்டும், மலர்ப்பிரசாதங்களும் வழங்கப் பட்டதில் அன்னையே அந்தந்த தருணத்துக்கேற்ற மாதிரி செய்தியை தன் கைப்படவே எழுதி அளித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ அரவிந்த அன்னை 1973 இல் மகாசமாதி ஆன பிறகு இப்போதுள்ள வடிவத்தில் அச்சிடப்பட்ட கார்டுடன், சமாதிமீது வைக்கப்பட்ட மலர் இதழ்களை உலரவைத்து ஒரு சிறு பாக்கெட்டாக வழங்குகிறார்கள். தரிசனநாள் செய்தி ஆங்கிலத்திலும்  பிரெஞ்சிலும் இருக்கும். இங்கே ஆங்கிலச் செய்தி மட்டும். 

அன்னை என்னும் அற்புதப் பேரொளி இன்றும் தம்முடன் இருப்பதை உணர முடிகிற அன்பர்கள் கூடி வழிபடுகிற சிறப்பான நாள் இன்று பிப்ரவரி 21 

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 

"அன்னை என்னும் அற்புதப் பேரொளி"


"அன்னை என்னும் அற்புதப் பேரொளி" இந்தத் தலைப்பில் திருமதி விஜயா சங்கர நாராயணன் எழுதிய நூலை, வெகு நாட்களுக்கு முன் வாசித்த நினைவும், பரவசமும் இந்தப் பதிவை எழுதும் போது முன் வந்து நிற்கிறது.

அம்மா, அம்மா என்று அரற்றுவதைத் தவிர ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னைப் பற்றி, என்ன எழுதிப் புரிந்து கொள்ளவோ, புரிய வைக்கவோ முடியும்? அறியாமையின் உச்ச கட்டமாக, ஆசிரம சாதகர் ஒருவரிடம் அவருக்கேற்பட்ட அனுபவங்களைப் பற்றிக் குழந்தைத்தனமாகக் கேட்ட போது, "எவ்வளவோ இருக்கிறது, அதில் எதைச் சொல்வது?" என்ற கேள்வியே பதிலாக வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


ஸ்ரீ அரவிந்த அன்னையை ஏற்றுக்கொள்கிறேன் என்று மேலோட்டமாகவே நாம் சொன்னாலும், "ஒரு கணமாவது நான் ஒருவரைப் பார்த்திருந்தாலும் போதும், அவருடைய வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று ஸ்ரீ அன்னை சொல்லும் சத்திய வாக்கு அங்கே செயல் படுவதை, என்னுடைய அனுபவமாகவே இப்போது பார்க்கிறேன்.

"Remember and Offer" இது தன்னுடைய அடியவர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் ஒரு எளிய முயற்சி. எதுவானாலும், நினைவிற்கொண்டு வந்து, ஆத்ம சமர்ப்பணமாகச் செய்து வரத் தடைகள் நீங்குவதும், காரிய்ம் கை கூடுவதும் இறையருளால் நடத்தப்படும் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


புதுவையிலிருந்து வெகு தொலைவில் இருந்த போதிலும், ஆசிரம வாழ்க்கையின் ஒரு அங்கமாக உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட்ட வெகு சிலருள் ஒருவனாக இல்லாதிருக்கும் போதிலும், ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தை பற்றி முழுமையாக அறிந்தவனாக, அனுஷ்டிப்பவனாக இல்லாத நிலையிலும் கூட, இவனது சில அனுபவங்கள், உன்னை என்னுடைய அன்னையாகவே அறிந்து கொள்ளவும், அம்மா, என்னையும் உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக ஏற்றுக் கொள்வாய் என்று உன்னிடத்தில் உரிமையோடு விண்ணப்பித்துக் கொள்ளவும் தூண்டின. ஏற்றுக்கொள்வாய், ஒருபோதும் கைவிட மாட்டாய் என்கிற நம்பிக்கை உன் வாக்கினாலேயே இவனுள் விதைக்கப் பட்டிருப்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

1965-1966 களில் அறியாச் சிறுவனாக, உன்னுடைய உரையாடல்கள் தொகுப்பு ஒன்றில் உன்னுடைய புகைப்படத்தைப் பார்த்தவுடன், என்னைப் பெற்ற தாயாகவே தோன்ற, 'அட இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே' என்று திரும்பத் திரும்ப அதே அனுபவத்தைப் பல முறை அனுபவித்ததுண்டு. அளியன், அன்னை நீ தான், இவனைப் பெற்ற தாயின் சாயலில் இவனுக்குக் காட்சி கொடுத்திருக்கிறாய் என்பது புரிந்து கொள்ளவே வெகு நாட்களாயிற்று.

இடையில், தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திகனாகத் திரிந்த காலம் ஒன்று இருந்தது. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்ட காலமாகச் சொல்வது போல இவனது வாழ்விலும் அது ஒரு இருண்ட காலம்.

1986- 1987 களில் அமுதசுரபி மாத இதழில் திரு. கர்மயோகி அவர்கள் எழுதி வந்த கட்டுரைகள், உலகாயத விளையாட்டில், அன்னையை மறந்து போனவனை மீண்டும் அன்னையிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக உதவின. Mothers Service Society என்ற அமைப்பின் கீழ் தமிழகமெங்கும் ஸ்ரீ அரவிந்த அன்னை தியான மையங்களை ஏற்படுத்தவும், ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடி தியானம் செய்வதும், மலர் வழிபாடு செய்வதும் 1980 களின் இறுதியில் பரவலாக நடந்து வந்தன.ஆர்ப்பாட்டம், ஊர்வலம், முரண்பாடுகள் என்றே கிடந்த இவன், அதற்கு நேர் எதிர் மாறான அனுபவத்தைப் பெறுவதற்காக, இந்த மாதிரி கூட்டங்களில் பங்கேற்றதும் நடந்தது.

குடும்பம் ஒரு இடத்தில், பணியில் இருந்தது மற்றோரிடத்தில் என்றிருந்த காலம்.

டாக்டர் சுந்தர வடிவேல் இவனது மகனுக்கு வைத்தியர் என்கிற முறையில் அறிமுகமாகி, நண்பரான காலம். ஸ்ரீ அரவிந்தர் அன்னையிடத்தில் ஈடுபாடு கொண்ட இவரால் தான் ஸ்ரீ அன்னையிடம் இவன் மறுபடி தஞ்சம் அடைய வேண்டும் என்கிற வேட்கையும், ஈர்ப்பும் ஏற்பட்டது. விடுமுறையில் ஊருக்கு வருகிற நாட்களில் கணிசமான நேரம் டாக்டருடன் ஆன்மீகத்தைப் பற்றி விவாதிக்கும் பழக்கமும், இதே போல் ஈடுபாடு உடைய வேறு பலருடைய தொடர்பும் உண்டானது. சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்பதற்கொப்ப, பழைய வரட்டுப் பிடிமானங்களில் இருந்து விடுபட இவை உதவின. அந்த அளவோடு ஒதுங்கியும் போயின.

நம் உடலில் பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் உண்டாகிக் கொண்டே இருப்பது போல, "பழையன கழிதல், அதன் பின் புதியன புகுதல்" என்பதற்கொப்ப ஒவ்வொரு அனுபவமும், அதற்கு முந்தைய அனுபவங்களின் எச்சங்களைத் துடைத்துவிட்டுப் புதிதாய்ப் பிறந்தது.

"வாய்ப்பு என்பது மிகப் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் தருணம். அதனால் ஒருபோதும் வாய்ப்பைத் தவற விட்டு விடாதே" என்கிறார் ஸ்ரீ அன்னை. எவ்வளவு வாய்ப்புக்களைத் தவற விட்டிருக்கிறேன் என்பது இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது.

உள்ளது உள்ளபடி சமர்ப்பணத்துடன் சொன்னால், எளிய வார்த்தைகளுக்குள்ளும் பேருபதேசம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய Commentaries in the Mother's Ministry என்ற நூலில் இருந்து இந்தப் பகுதியை பார்ப்போமா?

Incalculable Divine
“There are quite a number of stories about the Divine's help arriving at the very moment man gives up his egoistic struggle. There is, for instance, the case of a man who was falling down from the top of a high tree. He cried out to God to save him and God did respond. The falling man landed on a branch of the tree and he exclaimed to himself: “Ah, now I will take care of myself”. That very moment the branch started cracking and our friend got alarmed and called out, “God, I did not mean it!”

The point in this and similar stories is that as long as man depends upon his own strength—which is in fact so puny—or on that of other human sources, the Divine does not enter into the picture. Man is allowed to struggle and realise the limitations of human effort. The inner soul-strength comes to the fore when the external being, in its moment of truth, realises its utter failure to meet the challenges that face it and appeal to the Divine, whether within or above. In a slightly different context, Sri Aurobindo puts it graphically in SAVITRI how in moments of crisis man is forced to look to the Divine:


An hour comes when fail all Nature's means,

Forced out from the protecting Ignorance

And flung back on his naked primal need,

He at length must cast from his surface soul...


When our strength fails, when our human resources fail, when we sincerely call for the Divine's help, the Divine never fails. Only we must have the eye to perceive the Hand of God which may be cloaked in appearance that may be misleading at first sight. The help may not come in the form in which we expect. It may even come in the form of happenings that go counter to our expectations. The ways of the Divine Saviour are mysterious, as complex as the causes of our difficulties. The most unlikely elements play a helpful role. At times even enemies are moved to fraternise with us. We are baffled. We try to find explanations and at times attribute ulterior motives to the benefactors. But the fact remains that individuals are moved to act helpfully, circumstances are shaped favourably—all because the Divine has willed to save.

We may not always understand the manner in which the Will operates. It is not immediately necessary either, to know it. It is enough if we have the faith that the Divine response is certain and when we are helped out, to own gratitude to the Divine. There is often a tendency to attribute the favourable turn to our strength of intelligence and will or to external human agencies. It is well to remember at such moments that men and events are only instrumentations of the Divine Will to protect and save.”
*

அம்மா! எவ்வளவு தான் தவறுகள் இழைத்திருந்த போதிலும், அகங்காரச் செருக்கோடு நான் நான் என்று இல்லாததை எல்லாம் கற்பிதம் பண்ணிக் கொண்டு திரிந்த போதிலும்,

"நான்" என்பது அகங்காரத்தின் கூப்பாடு அல்ல; உனக்குள்ளே இருக்கிற தெய்வீகமே, உள்ளொளியே உண்மையான நான் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறாய்.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

உனது திருவடிகளையே அடைக்கலமாகப் பற்றிக் கொள்வது முழுமையாகிற வரம் அருள்வாய். கரணங்கள், மனம், ஜீவன் இவை அனைத்தையும் முழுமையாக உன்னிடத்தில் சமர்ப்பிப்பதற்குத் தகுதியும், சக்தியும் அருள்வாய்.

ஒவ்வொரு தருணத்திலும் நீ எனக்களித்திருக்கிற அருளை மறவாமல், நன்றியோடு ஏற்றுக் கொள்கிற பக்குவத்தை அருள்வாய் தாயே!

*quoted text thankfully excerpted from and acknowledged”

“Commentaries on The Mother's Ministry” by Shri M P Pandit, Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.


***2009 இல் எழுதியதன் மீள்பதிவு 

காரணத்தில் காரியம்! காரியத்தில் காரணம்! நிறைந்திருக்கும் பூரணம்!

காரண காரியத்தில் நிறைந்திருக்கும் பூரணத்தைத் தெரிந்து கொள்வது எப்போதாம்?

Our mind is a house haunted by the slain past,
Ideas soon mummified, ghosts of old truths,
God's spontaneties tied with formal strings
And packed into drawers of reason's trim bureau,

Sri Aurobindo, 
Savitri Bk. II, Canto. XIII, P. 285

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்கு ஒவ்வொரு வருடமும்சில நாட்கள்  மிக விசேஷம்! திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப்படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பிப்ரவரியில்   ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருப்பதால்  பிப்ரவரி 29 ஆம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது. ஆக இந்த வருட பிப்ரவரியில் நாளை பிப்ரவரி 21 ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும், அடுத்து 29 ஆம் தேதி Golden Day என்றும் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திலும், அடியவர்கள் ஹ்ருதயங்களிலும் ஒரு ஆனந்த பரவசம் பெருகுகிற நாட்களாக வருகின்றன. 


இதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது. கூடுதல் சிறப்பாக வருகிற ஏப்ரல் 24, புதுச்சேரியில் ஸ்ரீ அரவிந்த அன்னை நிலையாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிகழ்வாகவும் இருக்கிறது என்பது அடுத்தடுத்து வரும் தரிசன நாட்களைப் பற்றிய ஒரு சிறு முன்னோட்டம்.

ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, 1910 இல் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 பிப்ரவரி 21 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்த , மிரா அல்ஃபாஸா   சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழி பெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார்.

இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவதை ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார்.

பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு நிலையாகத் தங்குவதற்குத் திரும்பிய நாள் ஏப்ரல் 24. அதற்குப் பிறகு 1973 இல் மகாசமாதி ஆகிற வரை ஸ்ரீ அரவிந்த அன்னை பாண்டிச்ச்சேரியிலேயே இருந்தார்.

மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்த போது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.1926 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்ற அமைப்பு ஸ்ரீ அன்னையினாலேயே சாத்தியமானது.

அன்னையும் தங்களைப் போல சாதகர் தானோ  என்ற சந்தேகம் டி வி  கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனா என்றே அழைக்கப் பட்ட கபாலி சாஸ்திரியாரை பற்றி முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்! நாயனா, சின்ன நாயனா, ரமணர் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, இந்தப் பதிவுகளில் தேட, மேற்சொன்ன பதிவுகள் படிக்கக் கிடைக்கும்.


ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை கொஞ்சம்போல ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாமா?

The sadhana of inner concentration consist in:

1. Fixing the consciousness in the heart and concentrating there on the idea, image or name of the Divine Mother, whichever comes easiest to you.

2. A gradual and progressive quieting of the mind by this concentration

3. An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action. But to quiet the mind and get the spiritual experience it is necessary first to purify and prepare the nature.

Sri Aurobindo

இன்றைய நல்ல நாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையே, நீ எங்கள் இதயத்திலும் நிலையாகத் தங்கியிருப்பதை உணர்வதோடு  உனது பிரியத்துக்கு உகந்த குழந்தைகளாகும் தகுதியை வரமாக அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

எனக்கொரு தாய் இருக்கின்றாள்! என்றும் என்னைக் காக்கின்றாள்!

Consent to be ......nothing! என்று பதிவுக்கு கொஞ்சம் விசித்திரமான தலைப்பு எதற்காக என்று எப்போதாவது கேட்கத் தோன்றி இருக்கிறதா? இங்கே பதிவின் வலது பக்கத்திலேயே படிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்! ஆனால்.......! ஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து .... Consent to be nothing and none, dissolve Time's work, Cast off thy mind, step back from form and name. Annul thyself that only God may be." Savitri Book 7 Canto 6 இப்படி எடுத்துப் போட்டிருப்பதை எப்போதாவது கவனித்ததுண்டா?
1973 நவம்பர் 17 ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த  நாள்! இன்றும் கூட அவளருளை வேண்டுகிற எவருக்கும் தன்னுடைய ஒளியையும் அருளையும் தடையில்லாமல் தருவதற்கு அன்னை தராத தயங்கியதே இல்லை என்பது அடியவர்கள் ஒவ்வொருவருடைய அனுபவமாகவும் இருக்கிறது.
                                                    

நவம்பர்  17,  ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த நாள். ஆசிரமத்தின் தரிசன நாளாக அனுசரிக்கப்படும் நாள் இது., அன்னையை வணங்கச் செல்பவர்களுக்கு, அவரவர் பக்குவத்திற்குத் தகுந்தபடி அன்னை ஒரு செய்தியை அளிப்பது உண்டு! கூடவே அதற்குத் துணை செய்யும் மலர்களும்!

இன்றைக்கும் அந்த நடை முறை அனுசரிக்கப்படுகிறது. இங்கே காண்பது ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்கு, இன்று  ஸ்ரீ அன்னையின் சமாதியைத் தரிசிக்கச் செல்பவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் செய்தி. நேரில் செல்பவர்களுக்கும், கடிதம் மூலமாக வேண்டுபவர்களுக்கும் மலர்களும் (சமாதி மேல் அர்ப்பணிப்புடன் விக்கப்பட்ட மலர்களைக் காய வைத்து அன்னை அல்லது ஸ்ரீ அரவிந்தர் படம் ஒட்டிய சிறு பாக்கெட்டுக்குள் வைத்து) பிரசாதமாகக் கிடைக்கும்.

உன்னோடு நான் எப்போதும் இருக்கிறேன் என்ற அன்னையின் வார்த்தைகளை, அனுபவத்தில் மட்டுமே கண்டு உணர முடியும் 

அதிலும் தெளிவு பிறக்கவில்லையே என்று கொஞ்சம் பிரார்த்தனை செய்தால் மிகத்தெளிவான வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதையும் அனுபவத்தில் அறிந்துகொண்டதுண்டு. பதிவின் வலதுபக்கத்தில் 

அன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்  என ஸ்ரீ அன்னையின் படம் ஒன்று இருப்பதன் மீது எப்போதாவது க்ளிக் செய்து பார்த்தது உண்டா? 

திடீரென்று சூழ்ந்த வெறுமைக்கு உங்கள் பதிவு ஒரு வெளிச்சத்தை காட்டுவது போல இருக்கிறது. "நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு தருணமும், நிகழ்வும் தெய்வ சித்தத்தினாலேயே தீர்மானிக்கப் படுபவை. இன்றைய வலி, துயரம்,தோல்வி என்பதெல்லாம், உண்மையில் வெற்றிக்கான படிக்கட்டுகளே என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை." - மிகப்பெரிய தெளிவை தர வல்ல அருளாசி! பகிர்ந்ததற்கு நன்றி.
ReplyDelete
Replies
  1. வாருங்கள் பந்து!

    யாஹூ!360 இலும் அது மூடப்பட்டபிறகும் ஸ்ரீ அரவிந்தர், அன்னை இருவருடைய அருளமுதைப் பகிர்ந்து கொள்கிற பிரார்த்தனைப் பதிவுகளாகத்தான் இணையத்தில் எழுத ஆரம்பித்ததே! ஒரு சாதாரண மனிதனுடைய குழந்தைத்தனமான பகிரவுகளுக்குக் கூட ஒரு ஆன்மீகப்பதிவர் ரேஞ்சுக்கு சிலரிடமிருந்து வந்த ரெஸ்பான்சில், மிகவும் சங்கடப்பட்டுத்தான் இதரவிஷயங்களையும் தொட்டு எழுத ஆரம்பித்தேன். அதுவே அரசியல் விஷயங்களையும் தொட்டுப் பேசுகிற பதிவாக அப்படியே மாறிப்போய்விட்டது.

    ஆனாலும் இந்தப் பதிவுக்கு வைத்திருக்கிற தலைப்பே என்னைத் திசைமாறிப்போய்விட அனுமதிக்காமல் ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில் திரும்பவும் என்னைக் கொண்டு சேர்த்துவிடுகிறது.
நண்பர் பந்துவுக்கு நான் சொன்ன பதிலில் கொஞ்சமும் பொய்யில்லை. எங்கெங்கோ ஆயிரம் கவனச் சிதறல்கள் இருந்தாலும் ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில்  திரும்பவும் கொண்டுவந்து சேர்த்துவிடுகிற திருவருளை,  கருணையை, ஒருமுறை இருமுறை அல்ல, ஒவ்வொரு முறையும் அனுபவித்து வருகிறவன்.  முந்தைய பதிவுக்கு சாண் ஏறி முழம் சறுக்கிய கதை என்று தலைப்பு வைத்திருந்தேன் இல்லையா? அது தவறு என்று திரு. பந்துவுக்கு பதில் எழுதுவதற்கு முன் ஸ்ரீ அரவிந்த அன்னை எனக்கு உணர்த்தியிருக்கிறார்!


எனக்கொரு தாய் இருக்கின்றாள்! என்றும் என்னைக் காக்கின்றாள்! என்பதை நான் அறிந்துகொண்ட தருணம் ஒன்றா இரண்டா?

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!         

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசன நாள்! செய்தி!

ஸ்ரீ அரவிந்த அன்னை என்று கொண்டாடப்படும் Mirra Alfassa பாரிஸ் நகரில் 21 பிப்ரவரி 1878 இல் அவதரித்தார். 1914 இல் முதல்முறையாக புதுச்சேரிக்கு ஸ்ரீ அரவிந்தரை தரிசிப்பதற்காக வந்தார். 11 மாதங்கள் புதுச்சேரியில் இருந்து விட்டு, முதல் உலகப்போர் மூண்ட தருணம், பிரான்சுக்கே திரும்பினார். அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்று 4 வருடங்கள் இருந்தார். 1920 ஏப்ரல் 24 அன்று புதுச்சேரிக்குத் திரும்பிய அன்னை, இங்கேயே நிலையாகத் தங்கினார். அப்படி ஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரிக்குத் திரும்பிய நாளான ஏப்ரல் 24, அரவிந்தாசிரமத்தில் தரிசன நாளாக அன்பர்களால் கொண்டாடப்படுகிறது.
     

தரிசன நாள் என்பதென்ன? அன்னை புதுச்சேரிக்கு வந்தபிறகு எல்லாப்பொறுப்புக்களையும் அவரிடம் கொடுத்து விட்டு ஸ்ரீ அரவிந்தர் தனியாக மோனத்தவம் இருக்க ஆரம்பித்தார். ஆசிரமத்துக்குள்ளேயே தங்கி இருந்த சாதகர்கள் கூட அவரைச் சந்திக்க முடியாது.தங்களுக்கெழும் சந்தேகங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி அன்னையிடம் கொடுக்க, அவரும் ஸ்ரீ அரவிந்தரிடம் காட்டி, பதில்களை வாங்கித் தருவார். வருடத்தின் சிலநாட்களில் மட்டும் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் சாதகர்களுக்கு மட்டுமன்றி, வெளியூரில் இருந்து வரும் அன்பர்களை சந்திக்கிற வாய்ப்பாக உருவானதே தரிசன நாட்கள் என்றழைக்கப்படுகிறது. இன்றைய தரிசன நாள் செய்தியாக


ஆரம்ப காலங்களில், தரிசன நாள் செய்தியாக இதுமாதிரி கார்டும், மலர்ப்பிரசாதங்களும் வழங்கப் பட்டதில் அன்னையே அந்தந்த தருணத்துக்கேற்ற மாதிரி செய்தியை தன் கைப்படவே எழுதி அளித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ அரவிந்த அன்னை 1973 இல் மகாசமாதி ஆன பிறகு இப்போதுள்ள வடிவத்தில் அச்சிடப்பட்ட கார்டுடன், சமாதிமீது வைக்கப்பட்ட மலர் இதழ்களை உலரவைத்து ஒரு சிறு பாக்கெட்டாக வழங்குகிறார்கள். தரிசனநாள் செய்தி ஆங்கிலத்திலும் 
பிரெஞ்சிலும் இருக்கும். இங்கே ஆங்கிலச் செய்தி மட்டும். 

அன்னை என்னும் அற்புதப் பேரொளி இன்றும் தம்முடன் இருப்பதை உணர முடிகிற அன்பர்கள் கூடி வழிபடுகிற சிறப்பான நாள் இன்று ஏப்ரல் 24  

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே                   

அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!


ஆரோவில் மாத்ரி மந்திர் உள் அறை 


பிப்ரவரி மாதம் பிறந்தாலே, ஒரு இனம்புரியாத பரவசம் வந்து சேர்ந்து விடுகிறது!
வெளியே எத்தனையோ விஷயங்களில் மனம் அலை பாய்ந்தாலுமே கூட, மனம் ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள் பிப்ரவரி 21 ஆம் தேதி வருவதை ஒட்டி, தரிசன நாள் செய்திக்காகக் காத்துக் கிடக்கிற தவம் கூடவே தொடங்கி விடுகிறது. பல்வேறு காரணங்களால், புதுச்சேரி ஆசிரமத்திற்குச் சென்று நேரில் தரிசன நாள் சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள நேரம் கைகூடாமல் இருந்தபோதிலுமே கூட, மனம் அங்கே தான் மையம் கொள்ள விரும்புகிறது. அவளே எல்லாம் என்று இருந்துவிடத் தவிப்பு  இப்போதுதான் பற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

 
பிரபலமாக இருப்பது எப்படி இருக்கும் என்பதையும் பார்த்தாயிற்று! போலித்தனமான தலைவரே என்ற அழைப்பில், கூடியிருந்த கூட்டங்கள் எதிலுமே மயக்கம் அதிகமிருந்ததில்லை என்றாலும் அதிலேயே உழன்ற வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தாயிற்று! நண்பர்களே பகையாகி, உடல்நலமும் கெட்டு, மன நிலையும் ஒத்துழைக்காமல் இருந்த நரகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. 

 
அனுபவங்கள் ஒவ்வொன்றும், ஒரு காரணத்திற்காகவே நமக்கு அருளப் படுகின்றன. ஒவ்வொரு அனுபவமும் நம்மை உயர்த்துவதற்காகவே! நம்மைப் பக்குவப்படுத்துவதற்காகவே! 

அவரவர்க்கு வேண்டிய விதத்தில், வேண்டுகிற நேரத்தில் கிடைப்பதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்து வியந்திருக்கிறேன். வெற்றிகளாக நான் எண்ணிய எதுவும் நிலைக்கவில்லை என்பதோடு வெற்றிகளே என்னுடைய சுமையாகவும் ஆகிப்போனதாய் அறியவும் ஒரு நேரம் வந்தது. உலக அளவீடுகளின்படி நான் வெற்றி பெற்ற மனிதனில்லை! புத்திசாலியுமில்லை!

தோல்விகள், அவமானங்கள் என்னைச் சுருட்டி முடக்கி வைத்து விடவில்லை! ஒவ்வொரு தோல்விக்குப் பின்னாலும், நான் எங்கே தவறு செய்தேன் என்பதைத் தெளிவாகக் காட்டி, நான் போக வேண்டிய பாதை எது என்பதை வழிநடத்தும் வெளிச்சமாக இருப்பதையும்  அறிகிற நேரமும் வந்தது. பூஜ்யத்தைச் சின்னதாக வரைந்தால் என்ன, பெரிதாக வரைந்தால் என்ன? வட்டம் மா'வட்டமாகி விடுமா? அப்போதும் அது பூஜ்யம் தானே!

Consent to be nothing and none என்று  ஸ்ரீ  அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிற நிலையை வேண்டிக் காத்திருக்கிறேன் தாயே!


 
மேலே காண்பது  நாளை, 21 ஆம் தேதி புதுவை ஆசிரமத்திற்கு நேரில் செல்ல முடிகிறவர்களுக்கு வழங்கப்படும் தரிசன நாள் செய்தி! இதனுடன்,  பூக்களும் பிரசாதமாகக் கிடைக்கும்! சமாதியைச் சுற்றி அமர்ந்து கூட்டுத் தியானம் செய்கிற நல்ல வரமும், அன்னையின் அறைக்குச் சென்று, அன்னையின் அருளே இன்றைக்கும் சூக்குமமாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்கிற உன்னதமான அனுபவமும் கிடைக்கும். ஏதோ ஒரு முறை அப்படியொரு நல்வாய்ப்புக் கிடைத்த தருணத்தை நன்றியோடு இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஸ்ரீஅரவிந்த அன்னையின் மலர்ப்பதங்களில் சரணடைகிறேன். 

பிரச்சினைகள் சூழும்போது..!


1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்" ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்" அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.

இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.

என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
“Supreme Lord, eternal Truth, let us obey Thee alone and live according to Truth.”

இப்போது நான் சந்தித்துக் கொண்டிருக்கும் சில தனிப்பட்டபிரச்சினைகள் ஏகப்பட்ட வலி, வேதனைகளைத் தருவதாக, மறுபடியும் தனித்து விடப்பட்டதாக உணர்கிற அளவுக்கு முற்றிக்கொண்டு வருகிறது. இப்படிச் சோர்ந்து விழுகிற தருணங்களில் எல்லாம் ஸ்ரீ அரவிந்த அன்னை என்னோடு துணையாக இருப்பதை வழிநடத்திச் செல்வதை அறிந்தே இருக்கிறேன். நான் தனியன் இல்லை எனக்கொரு அன்னை இருக்கிறாள் அவளே எல்லாமுமாக இருந்து என்னை வழி நடத்துகிறாள் என்கிற நம்பிக்கையே என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.   
   

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 

தன்னையறியத் தனக்கொரு கேடில்லை! மாறாக, பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்துவிட்டால் ....?

..




வ்வொரு புத்தாண்டு தினமும் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் தரிசன நாள். ஸ்ரீ அரவிந்த அன்னை ஸ்தூல உடலில் இருந்த நாட்களில் ஆசிரமத்தில் இருந்த சாதகர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த வருட காலண்டர்மற்றும் புத்தாண்டு செய்தியுடன் வாழ்த்து அட்டைஎப்போதும் போல அவரவர் பக்குவத்துக்கேற்ப மலர்கள் என்றுஅன்னையின் திருக்கரங்களாலேயே பெறுவார்கள்.


ஸ்ரீ அன்னையை ஆராதிப்பவர்கள்தவமிருந்து அவளுடைய செய்தியைஆசியைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் பொழுது இது.

 
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உ ன் திருவடிகளை வணங்குகிறேன்.

[I+pray+to+thee+guide+copy.jpg]
தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்கம், பிறரிடம் பார்க்கும்போது கேலி, கண்டனத்துக்கு உரியதாகி விடுகிற வேடிக்கையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்.

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறதுஉதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோஏதோ ஒன்று தவறாகவோஅல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம்அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால்அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோவியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!
 
அதே கேலிக்குரிய பழக்கம்தவறுஅல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போதுமிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம்.

நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல்அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்னஇவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆகநம்மிடம் இருக்கும் அழுக்குடன்அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதுயாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கைபேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போதுகேலி செய்யத் தோன்றும்போது, "என்னஅவர் அப்படி இருக்கிறாராஅப்படி நடந்து கொண்டாராஅப்படிச் சொன்னாராஅப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போதுஉங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்!

நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயேஅப்படித் தான் செய்கிறேனோ என்னவோஅவரை விமரிசிப்பதற்கு முன்னால்என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு "அதிர்ச்சியடையும் ஒவ்வொரு தடவையும்இதே மாதிரி நல்ல விதமாகவும்புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்நமக்குள் இருக்கும் அழுக்கு,பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால்அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாகமறைவாகஅல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்நம்மிடம் இருக்கும் குறை பெரிதாகதீமை இல்லாததாகத் தெரிவதுஅடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"

1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதிஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்துஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி. அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 

அன்னை என்றொரு அற்புதப் பேரொளி

                                                                      
                                                            

நவம்பர் 17! ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த தினம்.புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திலும், அன்பர்கள் ஒவ்வொருவர் ஹ்ருதயத்திலும், அன்னை என்றொரு அற்புதப் பேரொளியை ஆத்மார்த்தமாக வணங்கி அவளுடைய அருள் திறத்திலும் தோய்ந்திருக்கும் நாளும் கூட!
                                                                               

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்திருவடிகளைச் சரணடைகிறேன்.எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.தூய்மையும் அமைதியும் அருள்வாய்!

உனது அருளுக்குப் பாத்திரமாகும் தகுதி உள்ளவனாக வரம் அருள்வாய்!ஒவ்வொரு அசைவிலும், எண்ணம் செயல் யாவற்றிலும் உனது சித்தப்படியே இயங்கும் கருவியாக என்னை ஏற்றுக் கொள்வாய்.

இந்த தேசம் தலைநிமிர்ந்து நிற்கவும்,அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும் எங்களை  விட்டு விலகவும் வரம் தருவாய்.

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி சத்யமயி பரமே!