Showing posts with label சாரு-ஜெமோ. Show all posts
Showing posts with label சாரு-ஜெமோ. Show all posts

போதி மரம் எங்கேன்னு சொல்லுங்க! அங்கே வந்து முட்டிக்கறோம்!


இட்லி வடையில் வந்திருந்தது மாதிரி இதுவும் கூட அந்த 'வரும்' ஆனா...'வராது' ரகப் பின்விளைவுதான்! பின் விளைவுன்னா சும்மாவா?

படித்துவிட்டு, கண்ணில் தென்படுகிற எதிலாவது தலையை முட்டி மோதிக்கொள்ள விரும்புகிறவர்கள், தங்கள் சொந்தப் பொறுப்பிலேயே, செய்துகொள்ளும்படித் தாழ்மையோடு, திமிரோடு, கொழுப்போடு, அப்புறம் இதோடு அதோடு என்று ஏகப்பட்ட தோடுகளோடு உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

கல்லுளிமங்கன்னு கேள்விப்பட்டிருப்போம், ஆனா நேர்ல பாத்திருக்க மாட்டோம். அந்தக் குறையப் போக்கவும் ஒருத்தர் வந்துட்டாருய்யா...வந்துட்டாரு!
வேற யாரு? சாரு தான்!
இவருக்கு இருக்கிற தாக்குப் பிடிக்கிற சக்தி இருக்குதே, சும்மாப் போட்டுத் தாக்கு..சும்மாவே போட்டுத்தாக்கு ரகம் என்பது, தமிழ் இணைய வாசகர்களின் ஒரே சோகம்!

பாம்பும் கீரியும் சண்டை போடப்போகுது பாரு,,எல்லாரும் ஜோராக்க ஒரு தபா கையத் தட்டு! இப்படி வித்தை காட்டுகிறவன் சொல்றதைக் கேட்டு, நிறையத் தபா, கையத் தட்டியிருப்போம்! பாம்பு-கீரிப்பிள்ளை ரெண்டுமே வெளியிலேயே வராது..கையத்தட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!

இப்பல்லாம் நிறைய காமெடிச் சானல்கள் வந்திருக்கிற மாதிரியே, இணையத்திலும் காமெடி தர்பார் எதுவும் காணோமே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்காக, அந்தக் குறையைப் போக்க சாரு கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டது மாதிரியே, சமீபத்திய நிகழ்வுகள், தகவல்கள் பேஜார் படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதுக்கெல்லாம் பேஜாராவாங்கோ, இன்னா இது குயந்தப்பிள்ள கணக்கான்னு கேக்குற தைரிய சாலிகள், சாருவோட இந்த வார்த்தைகளைப் படித்துப் பார்க்கவும்......பின்விளைவுகளுக்குப் படிப்பவர்களே பொறுப்பு!

"போகட்டும். இப்போது ஏழைக் குழந்தைகளைப் பிடித்துத் தரச் சொல்லுகிறீர்கள். இன்னும் அந்த மாதிரி பிள்ளை பிடிக்கும் வேலையில் நான் இறங்கவில்லை. சென்னையில் அல்லது தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் திரும்பினாலும் ஏழைக் குழந்தைகளுக்குப் பஞ்சமில்லை. ஏதோ நான் படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளே இல்லாத ஸ்விட்சர்லாந்தில் வாழ்வது போல் ஏழைக் குழந்தைகளைத் தெரியுமா என்று என்னைக் கேட்டிருக்கிறீர்களே; கொழுப்புதானே?

நானே ஒரு ஏழை எழுத்தாளன்; அடுத்த வேளைக் கஞ்சிக்கே என் வாசகர்களை எதிர்பார்க்கும் ஒரு அன்றாடங் காய்ச்சி. நான் போய் ஏழைக் குழந்தைகளைத் தேட வேண்டுமாக்கும்? இதற்குப் பெயர் தமிழ்க் கொழுப்பா? குவைத் கொழுப்பா? "

இது என்ன மாதிரிக் கொழுப்புன்னு தெரியாம பேஜாராவுரவுங்கோ, அடுத்த கொழுப்புக்குத் தயாராவுங்கோ!
"குஜராத் கலவரத்தின் போது ஒரு முஸ்லீம் தன்னைக் கொல்ல வருபவர்களைப் பார்த்துக் கண்ணீர் மல்க தன் இரு கைகளையும் கூப்பிக் கெஞ்சுவார் இல்லையா; அதேபோல் அந்த ஓரினச் சேர்க்கை நண்பர் எழுந்து நின்று கைகளைக் கூப்பிக் கொண்டு “நான் இப்படி ஆணும் இல்லாமல், பெண்ணும் இல்லாமல் பிறந்தது என் குற்றமா, கடவுளின் குற்றமா? உங்கள் வீட்டில் உங்கள் சகோதரனோ சகோதரியோ என்னைப் போல் பிறந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ” என்றெல்லாம் என்னென்னவோ எடுத்துக் கூறிக் கெஞ்சினார்."

"இந்தக் கோபமும் வன்மமும்தான் மிகப் பெரிய படுகொலையாக மாறுகிறது. இதே மனோபாவம்தான் என்னை கக்கூஸ் சந்து என்று எழுதிய உயர்சாதிக் காரரிடமும், எனக்கும் ஜெயமோகனுக்கும் கடிதம் எழுதியவரிடமும் காணப்படுகிறது. மேலும் ஒரு தகவல், என்னை கக்கூஸ் சந்து என்று எழுதியவர் ஐ.ஐ.டி.யில் கணிதத்தில் தங்க மெடல் வாங்கியவர்; பிராமணர்."

"ஆக, தமிழின் மிக முக்கியமான மூத்த எழுத்தாளர் ஒருவரால் இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு நாவலை எழுதிய எழுத்தாளனை ஒரு ஆள் எப்படி அணுக வேண்டும்? ஒரு பணிவு வேண்டாமா? பணிவு இல்லாதது மட்டும் அல்ல; அந்த எழுத்தாளனை அவமானப்படுத்தியும் இருக்கிறார் மேற்படி நபர். அதனால்தான் இதில் நான் தலையிட வேண்டி வந்தது. இப்போது பாருங்கள்; அவருடைய உண்மையான முக விகாரம் தெரிந்து விட்டது. “நீ நட்சத்திர ஓட்டலில் ஓசியில் தண்ணி அடிக்க்கும் பாரஸைட்தானே? ” என்று என்னைப் பார்த்துக் கேட்கிறார்."

சாரு நிவேதிதா! மனுஷன் என்ன பண்ணினாலும், எத்தனை பட்டாலும் ஓய மாட்டார் போலிருக்கிறது! இணையத்தில் ஆதித்யா, சிரிப்பொலி மாதிரிக் காமெடிச் சானல்கள் இல்லையே என்ற குறை இல்லாமல், சாருவும் ஜெயமோகனும் அதிரடியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், சமீப காலமாகச் சாருவின் காமெடிக் கொடுமை கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

ஏதோ இணையத்தில் வந்தோமா, எதையாவது படித்தோமா, ஏதோ பின்னூட்டம் போட்டோமா என்று சாதுவாகவே இருந்துவிட்டுப்போய் விடலாம்தான்! அப்படியெல்லாம், பதிவுலகமும், படிக்க வருகிறவர்களும் அமைதியாக இருந்துவிட்டுபோய் விட்டால், அப்புறம் காமெடி ஷோ நடத்துவது எப்படி? கேண்டிட் காமெரா என்ற பெயரில் லூசுத்தனமாக எதையாவது செய்து, அதையே காமெடி ஷோவாக மாற்றிக் காட்டுகிற தொலைகாட்சி சானல்களெல்லாம், சாரு சமீப காலமாக அவரது வலைப் பக்கங்களில் காட்டுகிற வித்தைகளுக்கு முன்னால் பிச்சை வாங்க வேண்டும்! அப்படி ஒரு வக்கிரம்! அப்படி ஒரு கொடூரமான எழுத்து! இதையும் இலக்கியம் என்று கொண்டாடுகிற சாக்கில், சாருவை இன்னமும் உசுப்பேத்தி விட ஒரு கும்பல்!

ஒரு சாம்பிளுக்கு,

அன்புடைய சாரு ,

நாம்தான் சிறிது மென்டல்; பாவம் என் மனைவி என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். நம்மை விட பல மடங்கு வன்மமும் , குரோதமும் , மனக்குஷ்டமும் உடைய ஒரு மென்டலை அறிமுகப்படுத்தியதுக்கு மிக்க நன்றி. இந்த லூஸு படித்ததாகவும் கேட்டதாகவும் சொன்ன மேதைகள் இது எழுதியதை கேட்டால்.. பாவம்.. நல்ல வேளை யாரும் உயிரோடு இல்லை. "ஜும்ப்பாவைக் குறிப்பிட்டிருந்தேனே; நாய்ப்பாலை குறிப்பிட்டிருந்தேனே - இது கூட தெரியாதா" என்று இந்த மென்டல் கேட்கலாம். நான் சொன்னது மேதைகள். ஜும்ப்பா போன்ற லைட் வெயிட்டை ப்ளேட்டோவுடன் வைத்திருப்பதிலேயே இதன் அறிவின்மை தெரிகிறது.

ஆங்கில மொழிக் கல்வி எப்படி மற்ற பண்பாடுகளைச் சீரழிக்கிறது என்பதற்கு இந்த மென்டல் மிக முக்கியமான எடுத்தக்காட்டு. இதன் மெயில்களை அச்சிட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி அதை வைத்து ஒரு பாடத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுகிறேன்.

பி.கு - இது திரும்ப எழுத எழுத அப்படியே ஏற்றி விடுங்கள் சாரு. படு டமாஸா இருக்கு.

அன்புடன்

சிவா – ஹ்யூஸ்டன்


இத்தனைநாள், இந்தமாதிரி உசுப்பேத்தி விடுகிறவர்களால் தான் சாரு இப்படியெல்லாம் எழுதுகிறார், உண்மையில் அவர் மென்மையானவர், ஜெயமோகனைப் போல வேஷம் போடத் தெரிந்தவரல்ல என்ற சாருவின் ஆதரவாளர்கள் சொன்ன வாதத்தில் உண்மை ஓரளவுக்கேனும் இருக்கும் என்று நம்பினதுண்டு.. இந்த மாதிரி "ஆதரவாளர்கள்" சாருவை ஒருவிதமான பைத்தியக்காரத்தனத்தின் உச்ச கட்டத்திற்குத் தள்ளிவிடாமல், விட மாட்டார்கள் என்று கூட ஒரு நண்பர் என்னிடம் சொன்னதுண்டு.

சாரு பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்திற்குப் போவது ஒருபக்கம் கிடக்கட்டும், படிக்கிற அத்தனை பேரையுமே ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார் போலிருக்கிறதே? இவரது படைப்புக்களைப் படிக்காதவர்கள் கூட இணையத்திற்கு வந்தால் இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறதே,
"நான் ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பேன். அதைப் பற்றியெல்லாம் சொல்வதற்கு உங்களிடம் ஒரு வார்த்தை உண்டா? ராஸ லீலா 700 பக்கம். காம ரூப கதைகள் 350 பக்கம். இதையெல்லாம் பற்றி உங்கள் கருத்து என்ன? இதையெல்லாம் விட்டு விட்டு ஏதோ தெருச் சண்டையை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துடன் வேடிக்கை பார்த்துக் களித்து விட்டு என்னங்கடா எனக்கு அறிவுரை?"

இந்தக் கொடுமையை முந்தின பதிவொன்றில் பார்த்திருக்கிறோம்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்கே இன்னும் ரெண்டு ஜிங்குச்சான் , ஜிங்குச்சான்னு ஆடிட்டிருக்கே, என்னத்தைச் சொல்ல?

ஐயா, ப்ளீச்சிங் பௌடர் ஐயா, நீங்க கண்டுபிடிச்ச போதி மரம் எங்கேன்னு சொல்லுங்க! அங்கே வந்து முட்டிக்கறோம்!

அது மட்டும் தான் நம்மால முடியும்!

'

டீக்குடிக்கிற கப்புல, சுனாமி வருமா?! என்னமோ சொல்றாங்களே?


சாரு-ஜெமோ அக்கப்போரைப்பற்றி எழுத ஆரம்பித்தால், தமிழ் வலைப்பதிவர்கள், கைவேலை அத்தனையையும் விட்டு விட்டு, கோதாவில் [அட, பின்னூட்டங்களைத் தாங்க சொல்றேன்] இறங்கி வந்து விடுகிறார்கள் என்று முந்தைய பதிவொன்றில் சொல்லியிருந்தேன், இல்லையா? படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலின்னு சொல்லிக்கிட்டு ஒருத்தர், சாருவைப்பத்தித் தொடர்ச்சியா ஒரு நாலு பதிவைப் போட்டார், அப்புறம் எந்த போதி மரத்தடியில ஞானம் கிடைச்சுதோ, அது தெரியல ஒருக்கா, இந்த போதிமரமாக் கூட இருக்கலாம்!, இவங்களைப் பத்திப் பேசறதே வேஸ்ட் அப்படீன்னு இப்பத் தெளிஞ்ச புத்திசாலி ஆகிட்டார். அதாச்சும், இப்பல்லாம் பதிவே எழுதறதில்லே!

உண்மையும் அது தாங்க!

இவங்க ரெண்டு பேருக்கும் நாம இத்தனை நாள் ஓசியிலேயே விளம்பரம் கொடுத்து, தட்டி, பானர், எல்லாம் வச்சு, ரசிகர் மன்ற ஷோ மாதிரி நடத்தி, நமக்குள்ளாரையே அடிச்சுகிட்டு, "தல, உன்ன மாதிரி வருமா"ன்னு ரொம்பவே ஃபீலிங்க்ஸ் ஆகி, படா பேஜாரா போனப்புறம், ப்ளீசிங் பௌடருக்குக் கிடைச்ச போதி மரம் எங்கேயிருக்குன்னு தேட ஆரம்பிப்போம்னு நெனச்சீங்கன்னா, நீங்க ஒரு கனவுலகத்துல இருக்கீங்க, யதார்த்தத்துக்கும் அதுக்கும் ரொம்பதூரம்னு தெரிஞ்சுக்குவீங்க!

அது ரொம்பவே பின்-நவீனத்துவம்! எழுத்துல எழுதித் தான் பாக்கலாம்! அப்பவும் ஒண்ணும் புரியாது! உனக்கே இது ஓவராத் தெரியலைன்னுட்டு இதைத் தண்டோராப் போட்டு ஒருத்தர் சொல்லியிருக்கிறார், பாருங்க!

என்னை பார்க்கும் போதெல்லாம்

மனதிற்குள் மழையடிக்கும்

என்பீர்களே

இப்போதும் அப்படித்தானா?

எட்டாவது திருமண நாள்

முடிந்ததும் மனைவி கேட்டாள்

இல்லையென்று உண்மையை சொன்னால்

புண்படுவாள்-என்று

“ஆமாம்என்று பொய் சொன்னேன்

இதில் எதாவது முரண் இருந்தால்

அதுமுன் நவினத்துவம்

இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்

புரியவில்லையென்றால்

சர்க்காரிசம்


புள்ளி விவரம் எல்லாம் ரெடியா இருக்கு, யாராச்சும் வேணும்னு கேளுங்களேன் ப்ளீஸ் ப்ளீஸ்னு கெஞ்சியும் கூட, யாரும் கேக்கலை. வேலியில மேயுற ஓணானை மேல எடுத்து விட்டுக்குவானேன், அப்புறம் குத்துதே குடையுதேன்னு கதறுவானேன் அப்படீங்கரதுல மக்கள் எல்லாரும் தெளிவா இருந்தாங்கன்னு தெரிஞ்சது.அது தவிர, ஏகப்பட்ட பிரபல பதிவர்கள் இதைப் பத்தித் தங்களுக்குள்ளாரையே அடிச்சுகிட்டப்ப, எக்கச்சக்கமாப் பின்னூட்டங்கள் போட்டுக் களைச்சுப் போய் இருந்த நேரத்தில, மக்களை அப்படி ஒரு கேள்வியக் கேட்டு பயமுறுத்தியிருக்க வேணாம் தான்!

பத்தாததுக்கு, ஒருத்தருக்கொருத்தர் தீய வச்சுக்கிறது, ஆப்பு வச்சுக்கிறதுன்னு பதிவுலகமே இந்த மூணு வாரமா, கதி கலங்கிப்போயிருக்கும் இந்த நேரத்துல போய், நம்ம காப்டன் விஜயகாந்த் ரேஞ்சுக்குப் புள்ளி விவரம்லாம் அவுத்து விட்டாக்க, ஏற்கெனெவே நொந்து நூடுல்சாகிக் கிடக்கிற பதிவுலகம் தாங்காதுன்னும் புரிஞ்சது.

அதுக்காகத் திரட்டின புள்ளி விவரங்களையெல்லாம் என்ன செய்யுறது? கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கலாமா? இல்ல, பதிவர்கள், படிக்கிறவர்கள் எல்லாம் பிழைத்துப் போகட்டும் என்று விட்டு விடலாமா? இந்தக் கேள்வி என்னைக் குடைஞ்சுகிட்டே இருக்கு. குடைச்சல் ஓவராப் போனா, அப்ப இந்தப் புள்ளி விபரமெல்லாம் அவுத்து உடலாம்.

இப்பல்லாம் பாத்தீங்கன்னா, மக்கள் ரொம்பத் தெளிவாத்தான் இருக்காங்க! போன வருஷமெல்லாம் சாரு-ஜெமோ அப்படீன்னு சொல்ல ஆரம்பிச்சாலே, கூட்டமா வந்து குவிஞ்சுகிட்டு இருந்தவுங்க, பின்னூட்டமாக் கும்மிஎடுத்துக் கிட்டிருந்தவுங்க, ஏன் சாரு-ஜெமோவுக்கு மட்டும் தான் இலக்கியத்தரமாச் சண்டை போடத் தெரியுமா? நாங்களும் கூட இந்த அழுவாச்சி ஆட்டத்தை, அவங்களை விட ரொம்ப நல்லாவே ஆடுவோமேன்னு மூணு நாலு வாரமா தமிழ்ப் பதிவுலகில் சுனாமி ஒரு டீக் கப்புல ஒரு ஓரத்தில வந்து ஒரு கலக்குக் கலக்கிச்சு பாருங்க, என்னை மாதிரிக் கொஞ்சம் வயசாளிங்கல்லாம், பயந்தே போனோங்க! பூவுக்குள்ள பூகம்பம் பாத்தாச்சு, பூ ஒண்ணு புயலானதை, விஜயசாந்தி நடிச்சும் பாத்தாச்சு, இப்ப, ஒரு பதிவுலக டீக் கப்புல சுனாமி வந்தது தான் ரொம்ப இம்சையாப் போச்சுதுங்க!

பாத்துப்புட்டு, பதிவுலகமே அமைதியா இருக்கும் போது நாமளும் கொஞ்சம் அமைதியா இருப்போம்னு இருந்தாக்க , இவரு வேற சீரியாசாத் தமாஷ் பண்ணிக்கிட்டிருக்காரு, இப்பத்தான் கொஞ்சம் உடம்பு தேவலையாகி, மறுபடி கதை, கவிதை, பதிவுன்னு ஆரம்பிச்சிருக்காரு..இப்பப்போய் ..........இப்படியெல்லாமா?

"எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு"


கோப்பைக்கு உள்ளாரயா, இல்லையாங்கிறதை 23 ஆம் தேதியன்னிக்கிப் பாக்கலாங்களா! அதுக்கு முன்னாடி, இங்கயும் பார்த்து விடுங்கள்!

வர்ர்ட்டா:-))

சாரு-ஜெமோ இருவருக்கும் நடக்கும் இலக்கியத்தரமான சண்டை

இப்படி ஒருத்தர் சிரிச்சிக்கிட்டே நின்னாக்க.....
இன்னொருத்தருக்குக் கடுப்பு வருமா, வராதா?

சாரு-ஜெமோ இருவருக்கும் நடக்கும் இலக்கியத்தரமான சண்டை, வாக்குவாதங்களைப் பற்றியது என்றவுடன், பதிவர்கள் கைவேலை என்னவாக இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு, பின்னூட்டமிட ஆஜாராகி விடுகிறார்கள் என்று மறுபடி மறுபடி நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. புள்ளிவிவரங்களைத் தருவதற்கு நான் ரெடி, ஆனால் அது சாரு- ஜெமோ அக்கப்போரைவிட பெரிய அக்கப் போராக இருக்கும் என்பதால், இங்கே, இப்போது வேண்டாம்.

யாராச்சும் வேணும்னு கேளுங்களேன், ப்ளீஸ்! ப்ளீஸ்!

சாரு-ஜெமோ இருவருக்கும் சண்டையே, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடைய இடத்தை இவர்களில் யார் பிடிப்பார்கள் என்பதில் தான் ஆரம்பித்ததாக, எல்லாம் அறிந்த ஒரு பதிவர் சொல்லியிருந்ததைப் படித்த நினைவிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா மறைந்த போது, அவரை நேசித்தவர்கள் பக்கம் பக்கமாக எழுதினார்கள். இன்னொரு தரப்போ, இறந்தவர் மீது சேற்றை வாரி வீசும் திருப்பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது, இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக இப்படிச் சேற்றை வீசும் பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

சாரு-ஜெமோ சண்டையைப் பற்றியே எத்தனை நாள் தான் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பது? எத்தனை தடவை தான் 'ரிப்பீட்டேய் .... தல.. சூப்பரு.... கலக்கிட்டீங்க...'ன்னே பின்னூட்டம் எழுதிக் கொண்டிருப்பது? நாங்களும் சாரு-ஜெமோ லெவெலுக்கு எப்போ உசர்றது? பிரபல பதிவர் ஆக வோணாமா.....?!

அதுக்காகவே, பிரபல பதிவர்கள் Vs பிரபலமாகத் துடிக்கிற பதிவர்கள் இப்போது ஒரு புதிய விளையாட்டை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இந்த தொடர் விளையாட்டு, சாரு-ஜெமோ சண்டையை விட இன்னும் கொஞ்ச நாளில் சூடு பிடித்து, தீப்பற்றி எரியப்போகிறது! பார்த்துக் கொண்டே இருங்கள்!

இவங்க ஒரு பதிவு போடுவாங்களாம்- அதுக்கு அவங்க ஒரு எதிர்ப்பதிவு போடுவாங்களாம், இந்த இரண்டு பேர் பதிவுகளிலுமே, பின்னூட்டப் புயல்கள் நுழைந்து ,கலக்கு கலக்குன்னு கலக்கின பிறகு ரெண்டு பதிவர்களுமே தனியாப் பேசி சமாதானமாப் போயிடுவாங்களாம்! போட்ட பதிவுகளும் காணாமப் போயிடுமாம். இது ஒரு விளையாட்டு! ஒருத்தருக்கொருத்தர் பத்த வச்சுக்கிறதும் ஒரு விளையாட்டு!

வடிவேலு நக்கலாச் சொல்கிற மாதிரி...........என்ன இது? .........சின்னப்புள்ளத் தனமால்ல இருக்குது!!

இவங்க சமாதானமாப் போனாலும், சண்டையிட்டே ஒழிஞ்சாலும் பின்னூட்டப் புயல்களுக்குக் கவலை இல்லை! அவர்கள் போட்ட பின்னூட்டங்களுமே கூடக் காணாமல் போவது தான் இவங்களுக்குப் பெரிய கவலையே! அதெப்படி, நீங்களா சமாதானம் பண்ணிக்கிடலாம்னு ஒரே போர்க்கொடி! இப்படி போர்க்கொடி உயர்த்துகிற பதிவுகளாக இருப்பது, விளையாட்டுக்குள்ளார ஒரு விளையாட்டு!

இவர் இன்னொரு விளையாட்டை ஆரம்பித்து வைத்திருக்கிறார். ஒரு பதிவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கண்டனப் பதிவாக [உளாக்காட்டிக்குத்தான்!] ஒன்னு எழுதுவாராம்! சம்பந்தப்பட்ட பதிவர், தன்னுடைய பதிவை, நீக்கிவிட்டால், இவரும் இந்தப் பதிவை நீக்கி விடுவாராம்! ஐயாமார்களே, அம்மாமார்களே, நடத்துங்க! நடத்துங்க! யாராவது அடிபட்டு, அழுவதைப் பார்த்தால் தானே, நமக்கு நல்ல காமெடி கிடைக்கும்!

இப்படிக் கொஞ்சநாளா, தமிழ் வலைப்பதிவுலகமே கொந்தளிச்சிட்டிருக்கும் போது, நாமளும் அந்த ஜோதில ஐக்கியமாகாட்டா...... அப்புறம் எப்புடி? நம்மளைப் பிரபலப் பதிவரா ஒத்துக்க வேண்டாம்.. ....சரி, சரி, போனாப் போகட்டுங்க!

ஒரு சாதாப் பதிவர்னோ, இல்லை வெறும் சோதாப் பதிவர்னோ கூட ஒத்துக்காமப் போயிட்டீங்கன்னா....? எனக்கு அழுவாச்சி, அழுவாச்சியா வந்திடுங்க!

அதுக்குத்தான் இப்பிடி!!ஹி. ஹி. ஹி. ....இஃகி இஃகி இஃகி...... !

தீராத பக்கங்களில் படிச்சது..ரசிச்சது.... இந்தப் பதிவும் எத்தனை மணி, எத்தனை நிமிடம் நீக்கப்படாமல் இருக்கும் என்று தெரியாததால், அங்கேயிருந்து சுட்டது:

அது
அதுவாய்க் கிழிய
இது
இதுவாய்க் கிழிய
அதை
அவர் வாய் கிழிய
இதை
இவர் வாய் கிழிய
அப்படியே
அவரவர் வாய் கிழிய
எது எதுவோ
எப்படி எப்படியோ
எங்கெல்லாமோ கிழிய
கிழிந்தது
கிருஷ்ணகிரி!

நன்றி, இந்தப்பக்கத்தில் இருந்து சுட்டது.

இந்த அக்கப்போரில், கிழிஞ்சது கிருஷ்ணகிரி மட்டும் தானா? இன்னும் வேறு ஏதாவது உண்டா?

அப்படியே இந்தப்பக்கத்தையும் வந்து படிச்சதுக்கும் ரொம்ப நன்றிங்கோ!


பேச்சுப் பேச்சாத் தான் இருக்கணும் மக்களே! மேல விழுந்து பிராண்டக்கூடாது!


Quo Vadis? எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?


ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாச் சொன்னாரே!

இன்னுமா முழுசா நொறுங்கலை? ஏன்னு பார்க்கிறாரோ?

டிஸ்கி: இது இந்தப் பதிவோட பின் விளைவு தான்! படிச்சப்புறம் தண்ணியடிக்காமலேயே,ரெண்டு புல் அடிச்ச மாதிரி இருந்த போது, உசுப்பேத்தி விட இந்தப் பதிவும் சேர்ந்துகொண்டது ! போதாதா? மாப்பு, மச்சி, அண்ணே, தம்பீ, எல்லாரும் திருப்பாச்சியத் தீட்டித் தயாராகுங்க! தீவட்டியும் மறக்காம எடுத்துக்கங்க!

தலைப்பு, விஷயதானம் இரண்டுமே நம்ம வால்பையன் என்கிற திரு அருண் தான்! டோண்டு ராகவனுக்கு மட்டுமல்ல, என்னையும் கவர்ந்த பதிவர்! சரவெடி வெடிக்கிற மாதிரி, தொடர் பின்னூட்டங்களாகக் கலக்கி வெடிப்பவர். தெருவில், அல்லது கனவில் யாராவது சரவெடி கொளுத்திப் போடுகிறமாதிரி வந்தால் கூட, அட நம்ம வால்ஸ் தான் என்று நினைக்கிற விதத்தில், கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு துளைப்பவர்! எதுக்கு இவ்வளவு பில்டப்புங்கறீங்களா?

ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாச் சொன்னாரே, பட்ஸ்[Buds] இருந்தாலும் காது குடையலாம். ஹிட்சை[Hits] வச்சி என்ன பண்றது?

திருவாசகமாச் சொன்னவருக்கு, பாராட்டும் சொல்லணுமா இல்லையா? அதுக்குத் தான் இந்தப் பதிவு! அக்கப்போரில் கலக்கும் இன்னொரு வைக்கப் போர்னு யாராச்சும் நெனச்சா , நான் அதுக்குப் பொறுப்பல்ல! இத மனசுல நல்லா வச்சுகிட்டு, பதிவைப் படிக்க வேணுமாய்க் கேட்டுக்கிறேன்!

சீரியசான விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதில் இருந்து கொஞ்சம் விலகி, பதிவுலகைக் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்றால், இங்கே தமிழ் வலைப் பதிவர்கள் ஒரு கொலைவெறியோடு, எரிந்த கட்சி, எரியாத கட்சி என இருகூறாகப் பிரிந்து, சாரு நிவேதிதா-ஜெயமோகன் இருவரிடையே நடக்கும் வார்த்தைப் போரை, இன்னும் கொஞ்சம் பேஜாரான அக்கப் போராக மாற்றியே தீருவது கங்கணம் கட்டிக் கொண்டது போல, தினசரி புதுப்புதுப் பதிவுகளாக எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்!

இரண்டு நல்ல எழுத்தாளர்கள், கொஞ்சம் சரக்கு உள்ள எழுத்தாளர்களுமே கூட! இவர்களுக்குள்ளே அவ்வப்போது நடக்கும் நான் பெரிய ஆளா, நீ பெரிய ஆளா என்ற ஈகோ வளர்ந்து, ஒருத்தருக்குக் கொஞ்சம் பேர் கூடக் கிடைத்து விடுகிற மாதிரித் தெரிந்தால், இன்னொருத்தருக்குப் புகை வரும் என்ற அளவுக்கு மாறி, இவர்கள் எழுத்துக்களைப் படிக்கும் பதிவர்களுக்கும் தொற்றி, ரொம்பவுமே முத்தி போச்சு! ரீடரைத் திறக்கவே பயமாய் இருக்கிறது! இன்றைக்கு எத்தனை பேர் வாந்தி எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியாமலேயே "படா பேஜாராக்கீது!"

இது இன்றைக்கு நேற்றைக்கு ஆரம்பித்ததல்ல. வழிவழியாக, நம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்து வருகிற மரபு. மணிமேகலையை எடுத்துக் கொண்டாலும் சரி, அனல் வாதம், புனல் வாதம் என்றெல்லாம் கதை சொல்லும் சைவ இலக்கியங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, இப்படிப் பாம்பும் கீரியுமாக இருவர் சண்டைபோடுவதைக் கூட்டமாகக் கூடி நின்று வேடிக்கை பார்ப்பதும், அதில் எவர் ஜெயிப்பார் எனப் பட்டி மன்றங்கள் நடத்துவதும் நமக்குப் புதிதா என்ன! அந்தக் காலத்தில், எழுத்துப்பிழை, கருத்துப் பிழை இருந்தால் சீத்தலைச் சாத்தனார், எழுத்தாணியால் தன் தலையிலேயே குத்திக் கொள்வாராம்! இங்கே பதிவுலகச் சாத்தனார்கள், கண்ணில் தென்படும் அத்தனைபேர்களையுமே குத்திக் குதறிக் கொண்டிருக்கிறார்கள்! சாரு-ஜெயமோகன் பிரச்சினை தீர்ந்து போனாலும், வேறு ஏதாவது இதே மாதிரிக் கிடைத்து விடாதா என்ன!!

சமீப காலத்தில் பொன்னியின் செல்வன் புதினத்தில் அமரர் கல்கி ஆழ்வார்க்கடியான் என்ற பாத்திரத்தை வைத்து, இந்த கலாசாரத்தைக் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி எழுதியிருந்தால், நாமும் அப்படியே செய்ய வேண்டுமா என்ன?

ஐயா, அப்படியே, ஏதோ ஒரு தரப்பு ஜெயித்து, இன்னொன்று தோற்றுப்போன பின்பும் நம்முடைய கொலைவெறி ஓய்ந்து விடுவதில்லை. உசுப்பேத்தி உசுப்பேத்தியே, இன்னும் கொஞ்சம் ரத்தக் களரியைப் பார்க்காவிட்டால், அப்புறம் நமது பண்பாடு, தொன்மை எல்லாம் என்ன ஆவது? நம்மைப் போலப் பண்பாட்டுக் காவலர்கள் உலகத்தில் எவரேனும் இருக்க முடியுமா? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே 'வாலொடு' முன்தோன்றிய மூத்தகுடி அல்லவா நாம்!

இப்படி என்னை மாதிரியே, இந்த விஷயத்தில் பேஜாராகிக் கிடந்த வால்பையன் என்ற திரு. அருணுடன் ஒரு அரட்டை, அல்லது மப்பில் குறட்டை, எப்படி வேண்டுமானாலும், வைத்துக் கொள்ளுங்கள்!

நான்: இன்னுமா போதை இறங்கலே. ..??!! பதிவுலதான்:-))

வால்பையன்: :) அது எதிர் பதிவு சார்! சாரு சும்மா சும்மா தன்னை பாராட்டி வரும் கடிதங்களை போட்டு சுய விளம்பரம் தேடி கொள்கிறார்
வருத்தம் என்னவென்றால் நல்லாயிருந்த சில ப்ளாக்கர்ஸும் அப்படி செய்வது தான். சமீபத்திய உதாரணம் xyz.
(டிஸ்கி 2: பதிவர் பெயரைக் குறிப்பிடாமல் இருப்பது, அலட்சியம் செய்வதற்காக அல்ல. சாரு-ஜெமோ பிரச்சினையைப் பற்றி எழுதுவதற்கு முன்னால், நன்றாகவே இருந்த மனிதர், நல்ல பதிவர், இவங்க அக்கப்போரைப் பத்தி எழுதினதும் ஒருமாதிரியாய் ஆயிட்டார்னு நம்ம வாலு ரொம்பவுமே ஃபீல் பண்ணிச் சொன்னதாலே, வேண்டாம்னு தான்! அதுக்கப்புறம் நிலைமை ரொம்ப மோசமாகவே ஆயிடுச்சி போல!)

நான்: ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களுக்குத் தமிழ் வலைப்பதிவர்கள் இன்னமும் மாற மாட்டேன் என்கிற மாதிரியே இருக்கிறது. இப்படி எரிகிற தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவானேன்?

வால்பையன்: அதே தான் என் வருத்தமும். சிலருக்கு பொழுது போகலையாம்

நான்: பொழுது போக்க வேறு "நல்ல" விஷயங்கள் இருக்கிறதே? பிரபுதேவா- நயன்தாரா கிசுகிசு இப்படி!

வால்பையன்: ஹாஹாஹா! இன்னும் நிறைய இருக்கு. ஆனால் நேரடியா சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்குற மாதிரி வருமா!? :)

நான்: எனக்கு வருத்தம் என்னவென்றால், காலை எழுந்தவுடன் பதிவுகளைப் பார்க்கும் போது, சாரு-ஜெமோ பற்றி யாராவது தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பதைப் பார்ப்பது தான். அவர்கள் இருவரும், தங்கள் பிழைப்பை நன்றாக ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! ஆன்னால், இதை எழுதும், படிக்கும் பதிவர்கள்..?

வால்பையன்: அதுவும் தான்! ரெண்டு கோஷ்டிகள்! போஸ்டர் அடிச்சி தான் ஒட்டல!

நான்: அதைத்தான், வினை, எதிர்வினைப் பதிவுகளில் நிறையப்பேர் செய்து கொண்டிருக்கிறார்களே!

வால்பையன்: ஆரோக்கியமான விவாதம் கிடையாது. நீ பெருசா நான் பெருசா தான் மேட்டரே இருக்கும்

நான்: ஒரு பதிவில் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டேன் "சாருவைத் திட்டிப் பதிவு போட்டா முன்னூறு பின்னூட்டம் வரும்' நான் அவரிடம் கேட்டேன் , உங்களுக்கும் அப்படி வரவேண்டுமென்கிற நப்பாசையா என்று..

ஒரிஜினலா, கொஞ்சம் யோசித்து எழுதுகிற பதிவுகள் குறைந்து போய்விட்டதோ என்று வருத்தமாக இருக்கிறது.

இவர்களைக் கொஞ்சம் கவனிக்காமல் இருந்தாலே தொண்ணூறு சதம் வெட்டி விவாதங்கள் குறைந்து போய் விடும் என்றே தோன்றுகிறது.

வால்பையன்: பட்ஸ்[Buds] இருந்தாலும் காது குடையலாம். ஹிட்சை[Hits] வச்சி என்ன பண்றது?

வடிவேலு அடிக்கடி உதிர்க்கிற வசனம் இது: "நம்மளை வச்சுக் காமடி கீமடி ஒண்ணும் பண்ணலையே?"

இது தொடரும் காமெடி!! சாருவின் கடிதத்திலிருந்து........சாரி, கடிச்சதிலிருந்து!

"
ஒரு அன்பர் எனக்கும், ...வுக்கும் பொதுவாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். “ஏம்பா நீங்க ரெண்டு பேரும் இப்டி அடிச்சிக்கிறீங்க?” ...வை விட இந்த மாதிரி ஆசாமிகள்தான் ஆபத்தானவர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது போன்றவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. அதனால் இப்படி எங்களை விலக்கி விடுவதன் மூலம் இவர்கள் எங்களை விட மேலானவர்களாகக் காண்பித்துக் கொள்ள விழைகிறார்கள்.

இவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். நான் ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பேன். அதைப் பற்றியெல்லாம் சொல்வதற்கு உங்களிடம் ஒரு வார்த்தை உண்டா? ராஸ லீலா 700 பக்கம். காம ரூப கதைகள் 350 பக்கம். இதையெல்லாம் பற்றி உங்கள் கருத்து என்ன? இதையெல்லாம் விட்டு விட்டு ஏதோ தெருச் சண்டையை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துடன் வேடிக்கை பார்த்துக் களித்து விட்டு என்னங்கடா எனக்கு அறிவுரை?"

சாருவும், ஜெயமோகனும், நம்மை வைத்துக் காமெடி பண்ணுகிறார்களோ இல்லையோ, சக வலைப்பதிவர்கள் தங்களை அறியாமலேயே, இந்த அக்கப் போரில் சிக்கிக் கொண்டு, நல்ல காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!

பார்ப்போமே, இது இன்னும் எத்தனை காலம் தான்..............!?!?

ஜூன் முப்பதன்று, புதுமைப்பித்தனின் நினைவுதினம் இன்று-- எவருக்கேனும் நினைவிருக்கிறதா என்று நண்பர் வால்பையன் அங்கே எழுப்பியிருந்த கேள்வி, பின்னூட்டச் சூறாவளியில் எவர் கண்ணுக்குமே படாமல் போனது, எனக்கு ஆச்சரியமாயில்லை!!

தமிழ் வலைப் பதிவுகள், சமீப காலங்களில் தனிநபர் தாக்குதல்களாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் இது தான் சாக்கு என்று, கூட்டத்தோடு கூட்டமாகக் கல்லை வீசிக் கொண்டிருக்கிறார்கள்!

இங்கே ஒருத்தர் இதைப்பத்தி ரொம்ப சீரியஸாக ஒரு பதிவு போட்டிருக்கார், படிச்சுப் பாருங்க! பொழுது போகணுமில்ல?!

பேச்சுப் பேச்சாத் தான் இருக்கணும் மக்களே! மேல விழுந்து பிராண்டக்கூடாது!

அதெல்லாமில்ல, வேலியில போற ஓணானை எடுத்துள்ளார விட்டுக்கிட்டு, குத்துதே குடையுதேன்னுதான் இருப்பேன் என்பவர்களுக்காக மட்டும் இங்கே வேலியில போற ஓணான் மீது க்ளிக்கிப்பாருங்க!.