Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

மண்டேன்னா ஒண்ணு! #ஸ்பெக்ட்ரம் #அரசியல் #வண்ணாரப்பேட்டை

வினை விதைத்துவிட்டுப் போனவன் ஒருத்தன்! அதை அறுவடை செய்து அனுபவிப்பவன் வேறொருவனா? என்னய்யா லாஜிக் இது? கேள்விப்பட்ட பழமொழி வேறு மாதிரி இருந்ததே என்று திகைக்கிறீர்களா? இப்படி நடப்பது நம்மூர் அரசியலில் தான் என்றால் கொஞ்சம் புரியாவிட்டால் கூட தலையை ஆட்டிவிட்டுப் போய் விடுவீர்களா? The Print தளத்தில் சேகர் குப்தா அப்படித் தான் இந்த 25 நிமிட வீடியோவில் நம்முடைய கையைப் பிடித்து இழுக்கிறார்!


ஆதிப்பாவம் என்று கிறித்தவர்கள் சொல்வார்களே அது போல 2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசா செய்ததைத் தொட்டு, இன்றைக்கு ஏர்டெல், வோடபோன்- ஐடியா கம்பெனிகள் திவாலாகிற நிலைமைக்குப் போய்விடுமோ என்ற கவலையில் வேறு சில விஷயங்களையும் சேர்த்துச் சொல்கிறார். 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்துக் கிளம்பியதில்  ஆ.ராசா, கனிமொழி இருவரை மட்டும் திஹார் சிறையில் வைத்த மன்மோகன் சிங் அரசு, 2011 இல் டெலிகாம் துறையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்துச் செய்த கோளாறால், இன்றைக்கு ஏர்டெல், வோடபோன்- ஐடியா இரு நிறுவனங்களும் தலா 50000 கோடி ரூபாய்களை அரசுக்குச் செலுத்தியே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாகச் சொன்னதுதான் சேகர் குப்தாவின் இந்த புலம்பலுக்குக் காரணம். நரேந்திர மோடி அரசு இந்தவிஷயத்தில் இன்னமும் தலையிடாமல், அந்த இரு நிறுவனங்களைக் காப்பாற்றாமல் இருக்கிறதே என்கிறார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அந்த 1, 76000 கோடி ரூபாய்களையே திரும்பத்திரும்பச் சொல்வதில் உள்குத்து ஏதாவது இருக்குமோ? அதை யோசித்துக் கொண்டே, பதிவின் ஆரம்ப வரிகள் பொருத்தமானதுதானா என்றும் சொல்லுங்கள்!

கொஞ்சம் காமெடி இடைவேளையாக இந்தப் படம் கண்ணில் பட்டது. ஒருகாலத்தில் கலிங்கப்பட்டி இருந்த இருப்பென்ன கிரேக்க வரலாறு பேசியதென்ன? #விதிவலியது

.  
இப்படி நையாண்டி நைனாவாக்கி விட்டார்களே! 


தலைப்பு சரிதானா? கொதிநிலைக்குக் கொண்டு போகிறவர்கள் யார்? அரசியல் ஆதாயம் பெறுகிறவர் யார்? எல்லோருக்குமே தெரிந்த விடைகள்தான்! இந்த 19 நிமிட வீடியோவில் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி அவருடைய பார்வையில் சென்னை வண்ணாரப்பேட்டை களேபரங்களைப் பற்றிச் சொல்கிறார். அவருடைய பார்வை ஒருபக்கம் இருக்கட்டும்! சில சிம்பிளான கேள்விகளுக்குப் பதில் தெரிகிறதா சொல்லுங்கள்!

1. CAA வினால் தமிழ்நாட்டில் யாருக்கு என்ன பாதிப்பு? (இந்தியாவில் என்றே கேட்டிருக்கலாம்)   

2. போராட்டக்காரர்களுடைய கோரிக்கைகளில் ஒன்று - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்  என்பது. கும்பலாகக் கூடிக் கலவரம் செய்தால் அதற்குப் பணிந்து தமிழ்நாடு சட்டசபையும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிவிட  வேண்டியதுதானா? அப்படியே நிறைவேற்றினாலும் சட்டசபைத் தீர்மானத்துக்கு என்ன மரியாதை என்பது தெரிந்துதான் கேட்கிறார்களாமா?

3. அரசியல் சாசனத்தை, தேசியக்கொடியை காட்டிக் கொண்டு நடத்துகிற வன்முறை, போராட்டம், சவடால் பேச்சுக்கள், இறுதியில்  கேலிக்குரியதாகவே  ஆகிப்போகும் என்பது தெரியாமல் தான் நடக்கிறதா?

மீண்டும் சந்திப்போம். 

இந்தக் கேள்விக்கென்ன பதில்?

ங்கே திராவிடங்கள் விதைத்து வைத்திருக்கிற ஊடகக் கலாசாரத்தை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? எந்த ஒரு கேள்விக்கும் நேர்மையான பதில் இருக்காது. தலையைச் சுற்றி சுற்றி வந்தும் கூட மூக்கைத் தொடமாட்டார்கள். குறை கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், இல்லாத ஒன்றை இட்டுக் கட்டி அதையே பிடித்துக் கொண்டு தொங்குவது! இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! இவர்கள் இப்படிப் பெனாத்துவதையே  அறுபது+ வருடங்களாகக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போன நமக்கு நிர்மலா சீதாராமன் மாதிரி கொஞ்சம் விஷய ஞானத்தோடு, கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்கிற விதம் கொஞ்சம் புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை தான்!

    
ந்தி டிவிதானே, அவர்கள் ஒருபக்கச் சார்பாகத்தான் எப்போதும்   இருப்பார்கள் என்று ஒதுக்கிவிடாமல், ஹரிஹரன் கேட்கிற கேள்விகளை நேரடியாகவே எதிர் கொள்கிறார், பொறுமையாக  பதில்சொல்கிறார். ஆனால் அதைப் புரிந்து கொள்வதற்கு நமக்குப் பொறுமை இருக்கிறதா? இருந்தால் இந்த 39 நிமிட வீடியோவைப் பாருங்கள்!  

'எப்ப திருப்தி அடைவீங்க? பொருளாதாரம் சிரழிஞ்சிக்கிட்டு இருக்குன்னு சொல்லிட்டா திருப்தி படுவீங்களா? அதுதான் உங்களுக்கு திருப்தியா?'
'இல்லைங்க மேடம்...'
Clear and categorical replies...
Happy that we have a good FM 👍  

  
திராவிடங்களுடைய இயல்பே எது பொருளோ எதைப் பேசவேண்டுமோ அவைகளை விட்டுவிட்டு அர்த்தமே இல்லாத விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும்,  விஷமத் தனமான பிரசாரங்களில் ஜனங்களுடைய கவனத்தை வேறெங்கோ திசை திருப்புவதும் தான்!  

  
வேலைவெட்டி இல்லாத ஒருத்தன் பூனையைப் பிடித்து ... கதையாக  வைகோ  நீதிமன்றத்தில் ஃபரூக் அப்துல்லா விவகாரத்தில் ஹேபியஸ் கார்பஸ் என்கிற ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்! இந்தச்  செய்தி மேலோட்டமாகக் காமெடியாகத் தெரிந்தாலும், அதன் பின்னே உள்ள விஷயம் என்னவாக இருக்கும்? காஷ்மீர் அரசியல் வாதிகளுக்கும் திராவிடங்களுக்கும் அப்படி என்ன லட்சிய உறவு? ஊழல் சம்பாத்தியம் இங்கேயும் அங்கேயும் இருக்கிறதோ என்ற சந்தேகங்களுக்கு விடை சொல்பவர் யார்?விசிகவின் எம்பி ரவிகுமார் கூட, இந்த காஷ்மீர் அரசியல் வாதிகளுக்கு  ஆதரவு வண்டியில் தொற்றிக் கொண்டிருப்பது ஆச்சரியமா என்ன? ஆதாயம் தராத எதையும் நம்மூர் அரசியல் புள்ளிகள் செய்யமாட்டார்கள் என்பது தெரியாதா?


ப.சிதம்பரம்.. பெயிலுக்கு அப்ளை செய்து அது நாளை விசாரணைக்கு வருகிறது..!
அவருடைய மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பது.. “தனக்கு 74 வயதாகிவிட்டது என்றும், தனக்கு டஜன் கணக்கில் வியாதிகள் ஆட்டிப் படைக்கிறது என்றும்.. அதற்கு தான் எத்தனை வருடங்களாக மருந்து சாப்பிடுகிறார்” என்கிற கணக்கும் கொடுத்துள்ளார்..!
அந்த பணத்தை... ஓவர் டைம் போட்டு.. பிள்ளையோட கம்பெனிக்கு மாற்றும் போதும்... இரண்டு துணை நடிகைகள் பார்ஸல் என்று இந்திராணியை மடியில் வைத்துக் கொண்டு ஆர்டர் செய்த போதும்.. இந்த வியாதி கணக்கு.. வயசான கணக்கையெல்லாம் மறந்து விட்டார் போலிருக்கிறது..! 😜😜😜

சீனாதானா தனக்கு ஒன்பதுவிதமான வியாதிகள் இருப்பதாக, 74 வயதாகிவிட்டதால் திஹார் சிறை வேண்டாம், ஜாமீன் வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடந்ததில், 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது என்பது செய்தியின் அப்டேட்.

நீதிமன்றங்களை வைத்தே ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சால்வை அழகருக்கே இந்த நிலைமையா என்று வைகோ ஏன் ஓடி வரவில்லை?  இந்தக் கேள்விக்கென்ன பதில்?

மீண்டும் சந்திப்போம்.      
      

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அஞ்சறைப்பெட்டி #4

தமிழ்நாட்டில் இதரஊடகங்கள்,  சேனல்களுக்கு கொஞ்சம்கூடக்  குறையாமல் வெறும் விவாத அக்கப்போர்களில் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளமும் போட்டி போட்டுக் கொண்டு விவாதங்கள் நடத்த ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான போக்கா? அல்லது இது தான் தமிழகத்தின் தலைவிதியா?



  • கர்நாடகம், குஜராத், ஒரிசா, மே.வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? கிணற்றுத் தவளை.
    Quote Tweet
    ·
    #BIGNEWS "இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல; அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்!" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ns7.tv | @mkstalin | #HindiStates | #CentralGovt | @PMOIndia
    11:25 PM · May 25, 2019 · Twitter for Android  

    இதற்கு H ராஜாவின் கமெண்ட், ஒருவிதத்தில் சரிதான்! ஆனால் ஸ்டாலின் பேச்சின் உள்ளர்த்தம் ஏதோ கொஞ்சம் ஜெயித்திருக்கிறோம்! ஆதரவு தேவை இல்லாவிட்டால் கூட, ஏதோ கொஞ்சம் பார்த்து அனுசரணையாகச் செய்யுங்கள் என்பதாக மட்டுமே இருக்கிறது. பழையபடி திமுக, அடைந்தால்  திராவிடநாடு இல்லையேல் இடுகாடு என்று முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விடவில்லை.
      
        
    தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பு என்கிற சிக்கலை எதிர்கொள்ளும் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் ஒரே தந்திரத்தையே கையாள்கின்றன.
    ராகுல், மம்தா, மாயாவதி, கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, லாலு, அகிலேஷ்,.. என்று மிக நீளமானது இந்த பட்டியல் .
    இந்தப் பக்கமிருந்து...கட்சியின் தலைமையாக .. தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா என்று பேசுவதும்...அந்தப் பக்கமிருந்து கட்சியின் உயர்மட்டக் குழுவின் தலைமையாக இருந்து ..தன் ராஜினாமாவை தானே நிராகரித்துவிடுவதுமாக ...நல்ல நகைச்சுவை.
    கூடுதல் நகைச்சுவையாக... கட்சியிலுள்ள பிற இரண்டாம் நிலை -மூன்றாம் நிலை அரசியல்வாதிகள்.. கட்சி தலைமை ராஜினாமா செய்தால்....தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று தப்பித்து கொள்கிறார்கள். சம்பிரதாயமாகக் கூட...தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்வதில்லை.
    சுருக்கமாக சொல்வதானால்..தலைமை பதவி வேறு யாருக்கும் கிடையாது. கட்சியின் இரண்டாம் நிலை அரசியல்வாதிக்கு தொண்டன் எப்படியோ..அது போல தான்..தலைமைக்கு ..இரண்டாம் நிலை அரசியல்வாதி!
    காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகளில் நடந்த ராஜினாமா நாடகங்களை இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பார்த்து இருக்கிறோம்!  
    பித்தம் தெளிய மருந்தில்லையாம்! 

    இத்தனை பார்த்துவிட்டு உள்ளூர் காமெடி ஒன்றைப்  பார்க்க வேண்டாமா? வைகோ ஆதரவாளர்கள் போஸ்டர் ஒன்றை இப்படி மதுரையில் தெறிக்க விட்டிருப்பதாக!


    வைகோவின் ராசி எப்பூடி என்று கேட்கிறார்கள்! பாவம்! அதில் கூட ராசி முக்கியமில்லை என்று தான் சொல்ல முடிகிறதே தவிர வைகோ ராசியானவர்தான் என்று சொல்ல முடியவில்லையே! 

    மீண்டும் சந்திப்போம்.
         

    விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! குறட்டை விட்டோரெல்லாம்....?



    இன்றைய ஜூனியர் விகடனில், வைகோவை ஒரு மாற்று அரசியல் சக்தியாக அடையாளம்காட்டி, தமிழருவி மணியன் நடத்திய ஒரு கூட்டத்தைப் பற்றிய செய்திக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.மாற்று அரசியல் தீர்வாக வைகோ தமிழக முதல்வராவது ஒன்று தான் வழி என்று தமிழருவி மணியன் முழங்கியிருக்கிறார். கூட்டத்தில், மதிமுக தவிர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும்  கலந்து கொண்டிருக்கிறார்கள்

    ஜெயலலிதாவிடம் கெஞ்சிப் பார்த்து கேட்ட சீட் கிடைக்கவில்லை என்றதும் விசயகாந்திடம் ஓடிப்போய்  மூன்றாவது அணி அமைக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி  தமிழருவி மணியன் எந்த தைரியத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தினார், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு ஒப்புக் கொண்டனவா என்பது கூட கட்டுரையாளருக்குத் தெரியவில்லை. ஏற்கெனெவே மதிமுகவிடம் கூட்டணி வைத்திருந்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பதும் மார்க்சிஸ்டுகளின் அரசியல் கணக்கே வேறு என்பதும் கட்டுரையாளருக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. போகட்டும்!

    வைகோ மீது ஒரு தனிமனிதராக, ஒருதிறமையான நாடாளுமன்றவாதியாக, எனக்கு மட்டுமல்ல, இங்கே நிறையப்பேருக்கு  மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால், ஒரு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்துவதில் வைகோவுக்கு சாமர்த்தியமில்லை! குறிப்பாக தனக்கு அடுத்த படியாக ஒரு நம்பிக்கையான ஆதரவாளர்களை இரண்டாவது மட்டத் தலைவர்களாக உருவாக்குவதில் கூட வெற்றி பெற முடியாதவர் அவர்.. அதுவும் கருணாநிதி விரிக்கும் வலைக்குள் சிக்குகிறவர்களாகவே அவரைச் சுற்றி ள்ளவர்கள் இருப்பது வைகோவின் தலைமை எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு அடையாளம்.

    ஆளை மாற்றினால் அரசியல் சூழலும் மாறிவிடுமா? தனி ஒரு நபரால் இத்தனை சீரழிவையும் மாற்றி விட முடியுமா?தமிழருவி மணியன் சொல்கிற தீர்வு உண்மையிலேயே, சரியான தீர்வு தானா? நடைமுறை சாத்தியம் தானா? முதலில் அந்த செய்திக் கட்டுரையைப் படித்து விடுவோம்.

    ''கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டால் வழியே இல்லையா?

    தகதகக்கும் தமிழருவி மணியன்


    மிழக அரசியல் வெளியில் தமிழருவி மணியனால் புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாகி இருக்கிறது. 'மாற்று அரசியல்’ எனும் மேடையில் வேறு பட்ட அரசியல் தலைவர்கள் சிலரை ஒருசேர நிறுத்தி நெடிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார்!

    தமிழருவி மணியனின் 'காந்திய மக்கள் இயக்கம்’ கடந்த 7-ம் தேதியன்று தனது இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம். மேடையில்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து வந்து மணியன் அமர்த்த, மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் ப்ளஸ் ஆச்சரியங்கள். '

    'இது காந்தியச் சிந்தனைகளை விளக்குவதற்கான மேடை மட்டும் அல்ல. இது ஒரு போராட்டக் களம். நம்மை ஆள வேண்டியோரைத் தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல ஜனநாயகம். அவர்கள் தவறிழைக்கும் போது அதை எதிர்த்துப் போராடுவதும்தான் ஜனநாயகம்...'' என்று ஒரு பொறியைப் பற்றவைத்து விட்டு அமர்ந்தார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் லட்சுமிகாந்தன் பாரதி.

    'இன உணர்வாளர்’ என்ற முறையில் இந்தக் கூட்டத்துக்கு  அழைக்கப்பட்டு இருந்தார் இயக்கு நர் தங்கர்பச்சான். ''தயவுசெஞ்சு என்னோட பேச்சுக்கு யாரும் கை தட்டாதீங்க. கை தட்டி, விசிலடிச்சே நாசமாப் போயிட்டிருக்கோம் நாம...'' என்று ஆவேசப்பட்டவர், ''இந்த மேடையில் அச்சப்படாமல் பேசலாம். காரணம், இங்கு அமர்ந்திருப்பவர்கள் நேர்மையானவர்களே தவிர, அரசியல் பிழைப்புவாதிகள் அல்ல. சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டு காலமாக ஒரே குடும்பம் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறது. இதை ஜனநாயகம் என்கிறோம். மக்களாட்சி என்கிறோம். கேடு கெட்ட விஷயம் இதுதான். ஓட்டுப் போடுற மக்கள் பிச்சைக்கார மனநிலையில் இருப்பதுதான் அரசியலைப் பிழைப்புக்குப் பயன்படுத்தும் பேர் வழிகளுக்கு வசதி யாகிவிட்டது. கொடுக்கின்ற இலவசத்தை வாங்கி இனி அவன் மூஞ்சியிலே விட்டெறியுங்கள். அதன் பிறகு கதை வேறு விதத்தில் பயணிக்கும்'' என்றார் குரல் உயர்த்தி.

    மைக்கைப் பற்றிய தமிழருவி மணியன் ரௌத் திரமும், ஆதங்கமும் ஒரு சேர வீசிய பேச்சு தமிழக அரசியல் மேடைகளுக்கு விதிவிலக்கு.

    ''இந்த நிகழ்ச்சியை 'மூன்றாவது அணி’ அமைப்புக்கான வேலை என்று சிலர் மிகத்தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள். இல்லை... இது, 'மாற்று அரசியல்’ அமைவுக்கான தளம். மேடையில் இருக்கும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள்தான் கருணாநிதிக்குப் பின்னும், ஜெயலலிதாவுக்குப்  பின்னும் மறைந்தே அரசியலை நடத்துவது? தேர்தல் முடியும் வரை உங்களைப் பயன் படுத்திவிட்டு, பிறகு தூக்கி எறியப்படும் நிலை எத்தனை நாளைக்கு வேண்டும்? எங்களுக்குத் தேவை ஊழலின் நிழல் படாத அரசியல். 

    நேர்மையான அரசியலைத் தேடி நான் அறிவாலயமா செல்ல முடியும்?
    போயஸ் தோட்டம்தான் செல்ல முடியுமா? 

    ஊழலைப் பொதுப்புத்தி ஆக்கிவிட்டார் கருணாநிதி. அரசு அதிகாரிகளை சசிகலா கூட்டம் ஆட்டுவித்தபோது ஆத்திரப்படாத ஜெயலலிதா, பொதுப் பணத்தை அந்த மன்னார்குடி குடும்பம் வாரிச் சுருட்டியபோது ஆத்திரப் படாத ஜெயலலிதா, எப்போது ஆத்திரப்பட்டார்? பெங்களூருவில் இருந்தபடி தனக்கு எதிராக அவர்கள் சதியாலோசனை நடத்துகிறார்கள் என்று தெரிந்ததும்தானே? இந்த ஜெயலலிதாவிடம் எப்படிப் பொது நலனை எதிர்பார்க்க முடியும்? 

    காங்கிரஸும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை. அதனால் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு பொது நலனுக்காக உருகும் நீங்கள் கைகோக்க வேண்டும். நீங்கள் மாற்று அரசியலைக் காண்பித்தால், மக்கள் உங்களை விரும்புவார்கள். அதில் எனக்குத் தெரிந்த மாற்று வழி, வைகோ முதல்வர் ஆவதுதான். அதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மாற்றத்தை உருவாக்க நாங்கள் தயார். மற்றபடி உங்கள் விருப்பம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

    எதிர்பார்ப்புகளுக்கிடையில் தன் உரையைத் துவங்கிய வைகோ, ''தமிழகம் கட்டுக்கடங்காத பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் வேளை யில் இப்படி ஒரு தளத்தில் கூடியிருக்கிறோம். தமிழருவி... நீங்கள் உங்கள் விருப்பத்தை வெளியிட் டிருக்கிறீர்கள். தியாக இயக்கமாம் ம.தி.மு.க. தேர்தல் அரசியலில் இயங்குவதுதான். நாங்கள் சில கால கட்டங்களில் சிலரோடு கூட்டணி வைத்திருந் தோம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் என்றுமே தமிழர்நலன் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்ததும் இல்லை, சுயமரியாதைக்குப் பங்கம் வரும்போது பொறுத்துக்கொண்டதும் இல்லை. அதனால் பதவி, அதிகாரம் இதை எல்லாம் நாங்கள் என்றுமே எதிர்பார்த்ததும் இல்லை. நாங்கள் அண்ணாவின் வார்ப்புகள். விஷச் சூழலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது. எரிமலை, அறிவித்துவிட்டு வெடிப்பது இல்லை, புயல் சொல்லிக்கொண்டு அடிப்பது இல்லை. அது போல் மக்கள் புரட்சி வரும்... கூடவே மாற்றமும் வரும்'' என்று ஒரு புள்ளி வைத்தார்.


    விடை தெரியாத கேள்வியோடு கூட்டம் விடை பெற்றது!

    (கட்டுரையாளர் ஒரே ஒரு உண்மையைத் தன்னையறியாமலேயே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை தான்!) 
     (அதிமுக நாடாளுமன்றத் தேர்தல்களில் மதிமுகவை அரவணைத்துக் கொள்ள தயாராகிவிட்டதாகவே இப்போதைய செய்திகள் சொல்கின்றன).


    -------------------------------------------------------------------------------------------------------------

    இங்கே அரசியல், நிர்வாகம் நீதித்துறை, ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் என்று எல்லாமே சீரழிக்கப்பட்டு விட்ட நிலையில் மாற்றம் என்பது ஒரு கட்சியை அகற்றி விட்டு இன்னொரு கட்சியைக் கொண்டுவருவதாலோ வராது.

    ஒரு நபரைக் குற்றம் சொல்லி அகற்றி விட்டு, வேறொரு நபரை மாற்றுவதால் மட்டுமே இங்கே கோளாறுகளுக்குத் தீர்வாகி விடாது.

    மூன்றாவது அணி, மாற்று அணி என்பதெல்லாம் இன்றைய நிலையில் வெறும் கற்பனை தான். தானே உச்சாணிக் கொம்பில்  தலைமை ஏற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மட்டுமே நிறைந்த சூழலில் இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

    அப்படியானால் தீர்வே இல்லையா? வேறு வழியே இல்லையா?

    நிச்சயமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமை வேண்டும். விழிப்புடன், ஒருங்கிணைந்து செயல்படும் சக்தியாக மக்களுடைய குரலை எதிரொலிக்கும் இயக்கமாக உருமாற்றம் காண்பதற்கு---

    முதலில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தவேண்டும்! இப்போதிருக்கும் வெஸ்ட்மினிஸ்டர்  முறையிலான ஜெயித்தவனே எல்லாற்றையும் சுருட்டிக் கொண்டு போக அனுமதிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் அது வாங்கும் வாக்குகளின் சதவீதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்று தேர்தல் முறை மாற்றப்படவேண்டும்.

    ஆபீஸ் பையன் உத்தியோகத்துக்குக் கூட குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசம் அரசியல் வாதிக்குத் தகுதி கேட்கக் கூடாதா? அரசியலில் இறங்குவதற்குக் குறைந்தபட்ச வயது இருக்கிற மாதிரியே, குறைந்தபட்சக் கல்வித் தகுதி தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள்  இயற்றுகிற அதிகாரம் படைத்த சட்ட மன்றம், நாடாளுமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு, நம்முடைய அரசியல் சாசன, சட்டம் இயற்றும் முறைகளைப் பற்றிய அடிப்படை ஞானம் இருக்க வேண்டும். அதில் ஒரு பட்டயப்படிப்பாவது பெற்றிருக்க வேண்டும்!

    குறைந்த பட்ச வயது இருப்பது போலவே போட்டியிட அதிகபட்ச வயது வரம்பும் வேண்டும். அறுபது வயது என்று வைத்துக் கொள்ளலாம். சரியான உடல் நலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அறுபத்தைந்து வயது வரை வேண்டுமானால் தளர்த்திக் கொள்ளலாம்.

    கேபினெட் அமைச்சர், முதல்வர், பிரதமர்  ஜனாதிபதி பதவிகளுக்கு,ஒரே நபர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கத் தடை வேண்டும்.

    மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது போலவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பரிந்துரை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.அரசியல் சாசனத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பை, மக்களுடைய பிரதிநிதிகள்  பொறுப்பேற்கத் தயாராகவும் தகுதியுள்ளவர்களாகவும் ஆகிற வரை உச்சநீதி மன்றமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இன்னும் கொம்ஞ்சம் விரிவாகவே பேசலாம்! இதெல்லாம் நடைமுறைக்கு வருகிற சாத்தியம் உண்டா என்று சந்தேகம் எழுகிறதா? தூக்கத்தில் கனவு காண்பது மட்டுமே பிழைப்பு என்றிருப்பவர்களுக்கு எதுவுமே சாத்தியமில்லை.

    மாற்றங்களை வேண்டு
    ம் மக்கள் குரல் உரத்து ஒலிக்கும் நாளில், எல்லாம் நிறைவேறும்.

    சோமவாரத்து மூணு!கேடி பிரதர்ஸ்! கேவும் மன்மோகன்! காமெடிப் பீஸ்!




     ஊழலின் தொடக்கமும்! (2G) இரண்டாம் தலைமுறையும்
    வக்கீல் நோடீஸ், கோடிகளில் நஷ்ட ஈடு கேட்டு மிரட்டுவது என்று கேடி பிரதர்ஸ்  இளவல் தயாநிதி ஆரம்பித்தது, பெரிய கேலிக்கூத்தாகி அவரையே  திருப்பித் தாக்க ஆரம்பித்திருக்கிறது!  

    தன் வினை தன்னைச் சுடும்! ஓட்டப்பம் வீட்டைச் சுடும்! ன்ற முது மொழி கேடி பிரதர்சுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பது அதுதான்! 

    கூடிய சீக்கிரமே, ஆ. ராசா, கனிமொழி, கல்மாடி,இவர்களுக்குத் திஹார் சிறையில் கம்பனி கொடுக்க வேண்டிய முகூர்த்தம் குறிக்கப் பட்டுவிட்ட மாதிரியே நிகழ்வுகள்  இருக்கின்றன. டிஷ்நெட்ஆக இருந்து ஏர் செல்லாக மாறிய நிறுவனத்தை, தயாநிதி கையைப் பிடித்து முறுக்குகிற மாதிரி நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் தான் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாக அதன் முன்னாள் அதிபர் சிவசங்கரன் இன்றைக்கு சிபிஐ முன் ஒரு வாக்குமூலத்தைத் தாக்கல் செய்து இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. வழக்கம் போல தயாநிதி மாறன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
     

    டம்மிப் பீஸ் பிரதமர் மன்மோகன் சிங் வழக்கம் போல வாய்மூடி மௌனியாக இருந்தார். வாயைத் திறந்து உளறுவதற்கு கபில் சிபல் முதல் கண்டனூர் பானா சீனா வரை நிறையப்பேர் இருப்பதால் டம்மிப் பீசுக்கு, வாயைத்திறக்க வேண்டிய அவசியம் அதிகம் இருந்ததில்லை. சோனியா காங்கிரசுக்கு முகமூடியாக இருந்த இந்த மனிதரின் உபயோகம் முடிந்து விட்டது என்றே ஊடகங்கள் சமீபகாலமாகக் கணித்து வருகின்றன. மாறன் விவகாரம், ராம்தேவ் உண்ணாவிரதக் கூட்டத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் புகுந்து டில்லிப் போலீஸ் நடத்திய அராஜகம் என்று கிளம்பியதில் மனிதர் வாயைத் திறந்தே ஆக வேண்டியதாகி விட்டது. மாறன் விவகாரத்தில் துறை சார்ந்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, அவை சுதந்திரமாகத் தம் கடமையை செய்யட்டும் என்றும், ராம்தேவ் உண்ணா விரதத்தைக் கலைத்த விவகாரம் துரதிர்ஷ்டவசமானது ஆனால் தவிர்க்க முடியாதது என்றும் சொல்லி இருக்கிறார்.

    இவ்வளவு
      கேவலப்பட்டுப் போனபிறகும் பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கக் காங்கிரஸ்காரர்களால் மட்டுமே முடியும்!!
    இன்றைய தினமணி நாளிதழின் தலையங்கம் கொஞ்சம் ஐ.மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் பரிதாபமான நிலையை எள்ளி நகையாடி இருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்ற கணக்காக,  பலவீனமான அரசை நடத்திக் கொண்டிருப்பவர்களின் கையாலாகாத் தனம் எப்படி எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகவே கோடியிட்டுக் காண்பித்திருக்கிறது.

    யோகாசனத்திலும் தியானத்திலும் ஈடுபடுகிற மேல்தட்டு மக்கள் 50,000 பேர் பாபா ராம்தேவ் நடத்திய சத்தியாகிரக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குகொண்டதை சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகக் கருதி, கண்ணீர்புகை, தடியடி எல்லாமும் நடத்துகிற அளவுக்கு மத்திய அரசு செயல்பட்டிருப்பது, அனைத்துத் தரப்பிலும் ஆச்சரியத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தி
    உள்ளது மட்டுமல்ல, ஒரு துறவியைப் பார்த்து அரசுக்கு இத்தனை அச்சமா என்கிற ஏளனத்துக்கும் வழிகோலி இருக்கிறது.

    கடந்த நான்கு தினங்களாகவே மத்திய அரசின் போக்கு இயல்புக்கு மாறு பட்டதாகவே இருந்து வந்தது. அண்ணா ஹசாரேவுக்குத் தரப் படாத முக்கியத்துவம் பாபா ராம்தேவுக்குக் கொடுக்கப்பட்டது. அவரை விமான நிலையத்துக்குச் சென்று நான்கு மத்திய அமைச்சர்கள் சந்தித்து சமரசம் பேசினார்கள். அதையும் மீறி நடை பெற்ற உண்ணா விரதத்தை நள்ளிரவில் தடியடி நடத்தியும், பெண்களைப் பலவந்தமாக தூக்கி வீசியும், அப்புறப்படுத்தியிருப்பது தில்லி போலீஸ் வரலாற்றில் மிகப் பெரும் களங்கமாகவே நீடிக்கும்.

    இந்தச் செயலை மத்திய அரசு நியாயப்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் "அவர் அளித்த வாக்குறுதிப்படி நடந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது' என்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. "இந்த நடவடிக்கையை 100 விழுக்காடு தெரிந்தே செய்தோம்' என்கிறார் மத்திய அமைச்சர் கபில் சிபல். "மாலை 5 மணி வரை மட்டும்தான் அவரது உண்ணாவிரதத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அத்துடன் முடித்துக்கொள்ளாமல் நீடித்தார், ஆகவே சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்கிறது அரசு. இவர்கள் தரும் விளக்கம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. அதுபற்றி ஏன் அவர்கள் முன்பே குறிப்பிட்டு அறிக்கை வெளியிடவில்லை?

    அங்கே கூடியிருந்தவர்கள் யாரும் எந்தவிதமான கலவரத்துக்கும் தயார் நிலையில் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஐம்பதாயிரம் பேர் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இந்தச் சம்பவத்தில், காவலர்கள் பாதிக்கப் பட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. ஆனால், ராம்தேவ் ஆதரவாளர்கள் அடிபட்டும், ஆடைகள் கிழிந்தும், மயக்கமுற்றதுமான சம்பவங்கள் நிறைய.

    காவி உடுத்திய துறவி, அதைவிடுத்து பெண்ணுக்கான வெண்ணிற சல்வார் கம்மீஸ் அணிவித்துத் தப்பிச்செல்ல வைக்கப்படுகிறார் என்றால், அங்கே நிலவிய சூழல் எத்தகையது என்பதையும், "காவல் துறையினர் துப்பட்டாவால் என் கழுத்தை நெரித்து கொல்லப் பார்த்தனர்' என்று ராம்தேவ் கூறுகிறார் என்றால், காவல்துறையின் அத்துமீறல் அளவுகடந்திருந்தது என்பதையும் கட்சி சார்புகளுக்கு அப்பாற் பட்டு அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    இந்தியா முழுவதிலும் பேசப்பட்ட, ஆளாளுக்கு ஆதாரங்களுடனும், ஆதாரம் இல்லாமலும் பேசிவருகிற விவகாரம் - 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் பங்கு இருப்பதாகச் சொல்லப்படும் விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும், அவர் தார்மிக அடிப்படையில் பதவி விலகவேண்டும், அல்லது ஊழலுக்கு எதிரானவர் என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், மாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான்.

    இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் அமைச்சரவைக் கூட்டத்தில் மாறன் பங்குகொள்கிறார். மன்மோகன் இந்த விவகாரத்தைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.

    ஒரு மிகப்பெரிய முறைகேடைப் பற்றி, அதிகார துஷ்பிரயோகத்தைப் பற்றி கவலைப்படாத மத்திய அரசு, பாபா ராம்தேவின் உண்ணா விரதத்தைப் பற்றி மட்டும் கவலைப்படுவது ஏன்?

    இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம், படித்த மேல்தட்டு வர்க்கமும் ஊடகங்களும் இந்தத் தாக்குதல் குறித்தும், இது தொடர்பாக ராம்தேவ் எடுக்கப்போகும் நடவடிக்கை, அரசின் எதிர்நடவடிக்கை என்று பரபரப்பாக இந்தியா முழுவதும் பேசப்படும் விவகாரமாக்கிவிட்டது மத்திய அரசு. ஒரு தர்மசங்கடத்தை மறைக்க, சமாளிக்க, வேண்டும் என்றே  இன்னொரு தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கி  திசை திருப்பும் கந்தலாகிப்போன ராஜதந்திரத்தை கையில் எடுத்துள்ளது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

    பாபா ராம்தேவுக்கு நாம் வக்காலத்து வாங்கவில்லை. பாபா ராம் தேவுக்குக் கறுப்புப் பணம் மீதும், ஊழலைப் பற்றியும் ஏற்பட்டு இருக்கும் திடீர் அக்கறை போலித்தனமானது என்கிற நமது கருத்தை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறோம். ஊருக்கு ஊர், ஆளுக்கு ஆள் ஊழலுக்கு எதிராகத் தனித்தனியாகப் போர்க்கொடி தூக்கும்போது, ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முனைப்பு மழுங்கிவிடும் என்கிற நமது கருத்தையும் முன்பே ஒரு தலையங்கத்தில் பதிவு செய்து இருந்தோம்.

    அதற்காக, பாபா ராம்தேவை உண்ணாவிரதம் நடத்த அனுமதித்துவிட்டு யாரும் எதிர்பார்க்காத நள்ளிரவு நேரத்தில், உண்மையிலேயே ஊழலைப் பற்றியும் கறுப்புப் பணம் பற்றியும் அக்கறையுடன் இந்த உண்ணா விரதம் பயனளிக்காதா என்கிற எதிர்பார்ப்புடன் கூடியிருந்த அப்பாவிகள் மீது நடத்தியிருக்கும் தாக்குதலை எப்படி ஏற்றுக்கொள்வது? பாபா ராம்தேவைச் சமாதானப்படுத்த விமான நிலையத்துக்கு அமைச்சர்கள் போயிருக்கக்கூடாது. அதற்குப் பதிலாக அவரைக் கைது செய்து திருப்பியனுப்ப காவல்துறையல்லவா அனுப்பப்பட்டிருக்க வேண்டும்?

    நடந்தேறியிருப்பது அரசு வன்முறை! வெளிச்சம் போடப் பட்டிருப்பது அரசின் கையாலாகாத்தனம்!!

    இன்றைய நகைச்சுவை!

    "ம.தி.மு.க.,விற்கு வயது 18. 

    நாங்கள் இப்போது தான் பூப்படைந்திருக்கிறோம். தொண்டர்களின் எழுச்சியால் துவங்கப் பட்ட, எங்கள் கட்சியில் யாரும் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. ஆனால், எங்கள் இயக்கத்தின் பிறந்த நாளை தவறாமல் கொண்டாடுகிறோம். தமிழகத்தில் பல கட்சிகள் அடையாளமின்றி அழிந்து போய்விட்டன. எங்களுக்கு பத்திரிகை பலம், ஊடகங்களின் செல்வாக்கு, சினிமா நடிகர், நடிகையர் மூலமான விளம்பரம் என்று எதுவுமில்லை. எங்களிடம் இருந்த ஒரே சினிமா தயாரிப்பாளரும் ஓடிவிட்டார்.

    போட்டியிட்டிருக்கலாம். ஆனால், வீண் பழிகள் வந்திருக்கும். அதனால் தான் நாங்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம். தமிழகத்திற்கு வைகோவின் தலைமை தேவை என்பதை மக்கள் உணரத் துவங்கிவிட்டனர். இந்நிலையில், தி.மு.க.,விற்கு மாற்றாக வைகோ தலைமையிலான ம.தி.மு.க., செயல்படும். "

    மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் செங்குன்றத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது!